ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
———–
அதிகாரம் 7—–முமுக்ஷுத்வ அதிகாரம்-முமுக்ஷுவுக்கு ,மோக்ஷத்தில் விருப்பம் உண்டாவதைச் சொல்கிறது
அதிகாரத்திலிருந்து
கால ஆவர்த்தாந் ப்ரக்ருதி விக்ருதீ : காம போகேஷு தோஷாந்
ஜ்வாலா கர்த்த ப்ரதிம துரித உதர்க்க துக்க அநு பூதிம்
யாதா தத்யம் ஸ்வ பரி நியதம் யச்ச திவ்யம் பதம் தத்
காராகல்பம் வபுரபி விதந் கஸ்திதிக்ஷேத பந்தம்
வ்யாக்யானம்
சுழலைப் போல மறுபடியும் மறுபடியும் வருகின்ற காலங்கள் , ப்ரக்ருதி , மற்றும் அதன்
மாற்றமான மஹத் போன்ற தத்வங்கள் , இவ்வுலகம் மற்றும் அவ்வுலகம் ஆகியவற்றில்
உள்ள சுகங்களில் மறைந்து இருக்கிற தோஷங்கள், நெருப்பு ஜ்வாலையால்
குழியில் நிரம்ப உள்ள பாவங்களின் பலனாக தொடர்ந்து வருகிற துன்பங்கள் ,
தன்னிடமும் பகவானிடமும் எப்போதும் சேர்ந்து இருக்கும் உண்மையான ஸ்வபாவங்கள்,
ப்ரஸித்தமான பரம பதம்,சிறைபோல் இருக்கிற சரீரம் –இவையெல்லாம் அறிந்த /அறிகிற
யார் ஒருவன் * /எவன்தான் , இந்த ஸம்ஸார பந்தத்தைப் பொறுத்துக் கொள்வான் ?
( ஒருவரும் பொறுத்துக்கொள்ள மாட்டான்—)
புத்தியால் அறிவது—-
இந்தப் புத்திக்கு எட்டு வகையான சிறப்பு –இவற்றால் அறிதல்
1.கேட்க ஆவல் , 2. கேட்டல், 3.கேட்டதை புத்தியில் நன்கு வாங்கிக் கொள்ளுதல்
4.அப்படி வாங்கிக் கொண்டதைத் தரித்தல் , 5.சேர்க்க வேண்டியதை ஊகித்துச்
சேர்த்தல், 6.தள்ள வேண்டியதை விலக்குதல், 7.ஒவ்வொரு வஸ்துவிலும் உள்ள
விசேஷங்களை அறிதல், 8.உண்மையான அறிவைப் பெறுதல்
புத்தி என்கிறோமே , இது எட்டு வகை
1.சீக்ரத்தில் க்ரஹிப்பது , 2. மறக்காமல் தரிப்பது , 3.சமயத்தில் நினைவு படுத்திக் கொள்வது
4.பிறருக்குச் சொல்லிக் கொடுப்பது , 5.ஊகித்துத் தானாகவே சரியாகத் தெரிந்து கொள்வது
6.ஸமயோசிதமாய் மாற்றுவது, 7.பகுத்து அறிவது , 8.தத்வ ஜ்ஞானம்
மேற்கண்டவற்றையெல்லாம் இப்படிப் புத்தியால் அறிகிறோம்.
முக்யமாக எதை அறிகிறோம் ?
இப்படிச் சுழலில் சிக்கி, காலம் காலமாகச் ”ஸுகத்”தில் மறைந்துள்ள தோஷங்கள்–
குற்றங்களைச் செய்து, அதன்மூலம், நெருப்பு போன்ற ”பாவம் ” என்கிற பலனைப் பெறுகிறோம்.
———————————————————-
அதிகாரத்திலிருந்து
——————————–
இப்படி, இவ்வர்த்தங்களை அத்யாத்ம சாஸ்த்ரங்களாலே தெளிந்து,ஸ்வயம் ப்ரகாசத்வ,
ஜ்ஞாத்ருத்வ , கர்த்ருத்வ ,போக்த்ருத்வ, சரீரித்வ , அணுத்வ, நித்யத்வ, நிரவயத்வ ,
ச்சேதந , தஹந , க்லேதந , சோஷணாத்யநர்ஹத்வ , வ்ருத்திஹ்ரஸா ரஹித ,
ஸ்வரூபத்வாதிகளாலே , ஆத்மாவுக்கு விசேஷண பூத தேஹேந்த்ரியாதி
வைலக்ஷண்யத்தைக் கண்டு இவனுடைய பர லோக கமந தேஹாந்தரப்ராப்தி
யோக்யத்வ நிச்சயத்தாலே , ஸாமாந்யேந ,லோகோத்தீர்ண புருஷார்த்த யோக்யராய்,
நரக பதநாதி ஜந்மாந்தர க்லேசங்களுக்கு அஞ்சி ,அவற்றின் காரணங்களான
கர்மங்களினின்றும் நிவ்ருத்தராய் , ஆதேயத்வ ,விதேயத்வ , சேஷத்வ, அல்ப சக்தித்வ ,
அணுத்வ, அஜ்ஞான , ஸம்சய , விபர்யய , துக்காதி யோக்யத்வ , அசுபாச்ரயத் வாதிகளாலே
உண்டான விசேஷ்ய பூத, ஈச்வர, வ்யாவ்ருத்தி நிச்சயத்தாலே , பகவத் கைங்கர்ய ரூபமான
ஸ்வரூப ப்ராப்த வைபவத்தை அபேக்ஷிக்கைக்கு யோக்யராய் ——
வ்யாக்யானம்
இப்படி, இவ்வர்த்தங்களை அத்யாத்ம சாஸ்த்ரங்களாலே தெளிந்து—
அத்யாத்ம சாஸ்த்ரங்கள் =ஆத்மாவைப்பற்றி விளக்கிச் சொல்கிற சாஸ்த்ரங்கள் —
இவற்றை நன்கு படித்து ,அல்லது படித்தவர்கள் மூலமாக நன்கு அறிந்து ,தெளிவு பெற்று —
ஸ்வயம் ப்ரகாசத்வ, =ஆத்மா தானாகவே ப்ரகாஸிக்கும்
ஜ்ஞாத்ருத்வ = ஜ்ஞானம் உள்ள ஆத்மா
கர்த்ருத்வ =கர்மாக்களைச் செய்யும்
போக்த்ருத்வ = அனுபவிக்கும்
சரீரித்வ =இந்த சரீரத்தால் இவற்றைச் செய்யும் ( ஆத்மா )
அணுத்வ = அணு அளவானது ,
நித்யத்வ ==எப்போதும் இருப்பது அழிவில்லாதது
நிரவயத்வ =உடலுறுப்புகளற்ற
ச்சேதந , தஹந , க்லேதந , = அறுக்க ,எரிக்க, காயப்படுத்த இயலாத
சோஷணாத்யநர்ஹத்வ =உணர வைக்க இயலாத ,
வ்ருத்திஹ்ரஸா ரஹித =எந்த வகையிலும் மாற்ற இயலாத ( ஆத்மா விரிவதோ,
சுருங்குவதோ இல்லை )
ஸ்வரூபத்வாதிகளாலே , ஆத்மாவுக்கு விசேஷண பூத தேஹேந்த்ரியாதி
வைலக்ஷண்யத்தைக் கண்டு = ஸ்வரூபம் முதலியவற்றாலே இப்படியாக
ஆத்மாவுக்கும், தேகம் இந்த்ரியங்களுக்கும் விசேஷமாக சொல்லப்படும்
விவரங்களால் ,
ஆத்மாவானது, வேறு உடலையோ, அல்லது வேறு உலகத்துக்குச் சென்று
அங்கு வேறு சரீரத்தையோ எடுக்கும் என்கிற நிச்சயத்தாலே,இப்படியான
ஜன்மங்களில் ஏற்படும் துக்கம், கஷ்டம் இவற்றுக்குப் பயப்பட்டு ,
இவ்வுலகில் பெரும் பலன்களைக் காட்டிலும், உயர்ந்த பலன்கள் இருக்கின்றன
என்பதை உணர்ந்து,நரகவாதனைக்குப் பயப்பட்டு,துக்கம் துன்பம் கஷ்டம்
இவற்றை உண்டாக்கும் பாவச் செயல்களைத் தவிர்க்கிறான்.
–
ஆதேயத்வ ,விதேயத்வ , சேஷத்வ, அல்ப சக்தித்வ ,
அணுத்வ, அஜ்ஞான , ஸம்சய , விபர்யய , துக்காதியோக்யத்வ , அசுபாச்ரயத் வாதிகளாலே
உண்டான =
தான் , பகவானால் நியமிக்கப்பட்டு இருந்தாலும்,
மிக அற்பமானவன் , அறியாமையில் இருப்பவன், சந்தேகம் நிரம்பியவன் ,
குற்றங்கள் செய்பவன், துன்பம் மற்றும் துக்கத்தில் இருப்பவன், அசுத்தங்கள் இருப்பிடம்
என்பதை நன்கு உணர்கிறான்.
இதனால், தான், ஈச்வரனை விட வேறுபட்டவன் என்றுத் தெளிவாக அறிகிறான்.
இந்த ஜ்ஞானத்தால், மேன் மேலும் கைங்கர்யங்கள் செய்து, பகவானை அடையும்படியான
அபேக்ஷைக்கு —விருப்பத்துக்குத் தகுதி பெற்று ———
———–
அதிகாரத்திலிருந்து
திருமந்த்ரார்த்த அனுஸந்தானத்தால் அஹங்காரம் முதலியன அழிவது–
ஸர்வாபேக்ஷித ஸங்க்ரஹமான திருமந்த்ரத்தைக் கொண்டு
ஸாரதமார்த்தங்களை அநுஸந்திக்கும்போது
1.ப்ரதம பதத்தில் த்ருதீயாக்ஷரத்திலே ப்ரதிபந்நமான ஞானத்வாத்யநுஸந்தானத்தாலே
தேஹ ததநுபந்திகளில் வரும் அஹங்கார மமகாரங்களையும்
2. ப்ரதமாக்ஷரத்தில் லுப்த சதுர்த்தியாலே ப்ரதிபந்நமான தாதர்த்யத்தாலே தேஹாதிரிக்த
ஆத்மஸ்வரூப ததுகுணங்களில் த்வம் மே அஹம் மே என்கிற ச்லோகத்தின் படியே
தனக்குரிமை யுண்டாக நினைக்கிற
அஹங்கார மமகாரங்களையும்
3.மத்யமாக்ஷரத்தில் அவதாரணார்த்தத்தாலே அந்ய சேஷ பூதோ அஹம் என்றும்
மமாந்ய : சேஷி என்றும் வரும் அஹங்கார மமகாரங்களையும்
4. மத்யம பதத்தில் ப்ரதிபந்நமான நிஷேத விசேஷத்தாலே ஸ்வ ரக்ஷண வ்யாபாரத்தைப் பற்ற
வரும் நிரபேக்ஷ ஸ்வாதந்த்ர்ய நிரூபாதிக சேஷித்வாபிமானரூபங்களான
அஹங்கார மமகாரங்களையும்
5. இந் நிஷேத ஸாமர்த்யந் தன்னாலே த்ருதீய பதத்தில் சதுர்த்தியாலே அபிப்ரேதமாய்
பாவியான கைங்கர்ய பர்யந்தாநுபவமாகிற பலத்தைப் பற்ற இப்போது
பலாந்தராநுபவ ந்யாயத்தாலே வரும் ஸ்வாதீந கர்த்ருவ போக்த்ருவ ஸ்வார்த்த கர்த்ருத்வ
போக்த்ருத்வ ப்ரமரூபங்களான அஹங்கார மமகாரங்களையும் யதா யோக்யம்
ஆர்த்தமாகவும் சப்தமாகவும் அடி யறுத்து இப்படி ஸ்திர ப்ரதிஷ்ட ஞானராய் —
இதன் அர்த்தச் சுருக்கம்
நம்பெருமாள் = நீ எனக்கு சேஷன்
ஜீவாத்மா =நான் எனக்கே சேஷன்
நம்பெருமாள் =நீ இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்ன
ஜீவாத்மா = தேவரீர் ,சொல்வதற்கு என்ன காரணம்
நம்பெருமாள் =நான் சொன்னது வேதத்தை மூலமாகக் கொண்ட ப்ரமாணத்தால்
ஜீவாத்மா =நான் சொன்னது ,அனாதையாக ஏற்பட்ட அநுபவத்தின் பெருமையால்
நம்பெருமாள் =உன் அநுபவம் ஆக்ஷேபிக்கப்பட்டிருக்கிறது
ஜீவாத்மா =எங்கே எவரால் ஆக்ஷேபிக்கப்பட்டது
நம்பெருமாள் =கீதை முதலிய நூல்களில் ஆக்ஷேபிக்கப் பட்டிருக்கிறது
ஜீவாத்மா =இவ்விஷயத்தில் யார் சாக்ஷி
நம்பெருமாள் =மஹாஜ்ஞானிகளான வ்யாஸர் ,பராசரர் போன்றோர்
ஜீவாத்மா = ஆனால்,அவர்கள் உன்னிடம் பக்ஷபாதம் உள்ளவர்கள்
இவ்வாறு , ஜீவாத்மாவுக்கும் ஸம்வாதம் ஏற்பட்டபோது, நீர் எங்கு தேடியும்
இரண்டு கக்ஷிக்கும் பொதுவான ஒருவர் கிடைக்காததால் ,
ஸத்யப்ரமாணம் செய்ய முயற்சிப்பவரைப்போல ,ஸேவை ஸாதிக்கிறீர்
என்பதாக இந்த ச்லோகத்தை ஸ்ரீ பட்டர் அருளினார் என்பர்
————–
1-கிற்பன் கில்லே னென்றிலன் முனநாளால் அற்ப சாரங்க ளவை சுவைத்தகன்றொழிந்தேன்
2-கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
3-தஸ்மிந் ப்ரஸந்நே கிமிஹாஸ்த்யலப்யம்
தர்மார்த்தகாமைரலமல்பகாஸ்தே ,
4-அந்தவஸ்து பலம் தத்பவத்யல்ப மேதஸாம் ,
5-அநித்யமஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் ,
6-மஹா பலாந் மஹாவீர்யான் அநந்ததந ஸத்ஜயாந் கதாந் காலேந மஹதா
கதாசேஷாந்நராதிபாந் ச்ருத்வா ந புத்ரதாராதௌ க்ருஹக்ஷேத்ராதிகே
அபி வா த்ரவ்யாதௌ வா க்ருதப்ரஜ்ஜோ மமத்வம் குருதே நர :,
7-ஸர்வம் துக்கமயம் ஜகத் ,
8-ஸ்வர்க்கே அபி பாதபீதஸ்ய க்ஷயிஷ்ணோர்நாஸ்தி நிர்வ்ருத்தி :
9-ராஜ்யே க்ருத்நந்த்யவித்வாம்ஸோ மமத்வாஹ்ருத சேதஸ : அஹம்மாந
மஹாபாந மதமத்தா ந மாத்ருசா : ,
10-ஆப்ரஹ்மபவநாதேதே தோஷா : ஸத்தி
மஹா புநே அத ஏவ ஹி நேச்சந்தி ஸ்வர்க்கப்ராப்திம் மநீஷிணா : ,
11-ப்ரஹ்மணா : ஸதநாதூர்த்வம் தத்விஷ்ணோ :பரமம் பதம் சுத்தம் ஸநாதநம்
ஜ்யோதி :பரம் ப்ரஹ்மேதி ந தத்ர பூதா கச்சந்தி புருஷா விஷயாத்மகா :
டம்ப லோப மத க்ரோத த்ரோஹ மோஹைரபி த்ருதா : நிர்மமா
நிரஹங்காரா நிர்த்வந்த்வா : ஸம்யதேந்த்ரியா : த்யாநயோகரதாச்சைவ
தத்ர கச்சந்தி ஸாதவ : ,
12-ரம்யாணி காமசாராணி விமாநாநி ஸமாஸ்ததா
ஆக்ரீடா விவிதா ராஜாந் பத்மிந்யச்ராமலோதகா : ,
13-ஏதே வை நிரயாஸ்தாத
ஸ்தாநஸ்ய பரமாத்மந :, இத்யாதி ப்ரமாணங்களாலே அல்பத்வ ,
அஸ்திரத்வ ,துக்கமூலத்வ , துக்கமிச்ரத்வ , துக்கோதர்க்கத்வ ,
விபரீதாபிமாநமூலத்வ , ஸ்வாபாவிகாநந்த விருத்தத்வங்களாகிற
அசித் விஷயானுபவ தோஷ ஸப்தகத்தையும் இவற்றில் யதாஸம்பவம்
உண்டான சேதநமாத்ராநுபவ தோஷங்களையும்
இவ்வநுபவங்களுக்கு
எதிர்த்தட்டான பகவதநுபவத்தின் வைலக்ஷணத்தையும் விசதமாக
அநுஸந்தித்து ,
பரமாத்மநி யோ ரக்தோ விரக்த : அபரமாத்மநி
என்கிற அவஸ்தையையுடையராய் .
ப்ரவ்ருத்தி லக்ஷணம் தர்மம் ப்ரஜாபதிரதாப்ரவீத் என்கிற ப்ரவ்ருத்தி
தர்மங்களில் நின்றும் நிவ்ருத்தராய்
நிவ்ருத்த லக்ஷணம் தர்மம்
ருஷிர்நாராயணோ அப்ரவீத் என்கிற நிவ்ருத்தி தர்மங்களிலே
ப்ரவ்ருத்தரானவர்கள் முமுக்ஷுக்களான அதிகாரிகள்
—————
வ்யாக்யானம்
ஸ்வாமி தேசிகன் இங்கு பதின்மூன்று ப்ரமாணங்களைச் சொல்கிறார்
1.திருவாய்மொழி ( 3–2–6 )
கிற்பன் கில்லே னென்றிலன் முனநாளால்
அற்ப சாரங்க ளவை சுவைத்தகன்றொழிந்தேன்
பற் பல்லாயிரமுயிர் செய்த பரமா !—நின்
நற் பொற் சோதித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே ?
இதற்கு முன் எல்லா நாட்களிலும் ,எதைச் செய்யவேண்டுமோ அதில்,
செய்யவல்லேன் என்று அதில் கவனம் செலுத்தவில்லை.எனக்குக்
கூடாதவற்றில், என்னால் செய்யவல்லேன் என்று, செய்யாமலிருக்கவில்லை.
ஸ்வல்ப ஸாரமே இருக்கிற அந்த செய்யக்கூடாத விஷயங்களைச் செய்து
அநுபவித்து ,உன்னை விட்டே ஒழிந்தேன்.அவற்றின் தோஷங்களை அறிந்து
அவற்றைக் கைவிட்டேன்.
எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட ஆயிரக்கணக்கான ஜீவன்களை ஸ்ருஷ்டித்த
ஸர்வேச்வரனே —மிகச் சிறந்த, மிக அழகிய ,மிகவும் ஒளி பொருந்திய
உனது திருவடிகளை, அடியேன் என்றைக்கு அடைவது ?அதை அருள்வாயாக !
2.திருவாய்மொழி ( 4–9–10 )–(பார்க்க–அதிகாரம் 1—உபோத் காத அதிகாரம் )
கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
—————————————————————————-
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே
————–திருவாய்மொழி (4-9-10)
பஞ்சேந்த்ரியங்களால் பெறும் இன்பம் மற்றும் ஆத்மாநுப இன்பம்
இவற்றைக் கைவிட்டேன்;அழகிய வளையல்களை அணிந்த பிராட்டியும் , நீயும் ,
உங்களைத் தவிர வேறு ஈச்வரர்களில்லை என்னும்படியாக ஸேவை சாதிக்க
நித்ய ஸூரிகளைப்போல எல்லா ஆத்மாக்களும் உன்னை அநுபவித்துக்
கைங்கர்யம் செய்யும்படியான –இப்படி உன்னால் ஏற்பட்ட புருஷார்த்தத்தை
நான் ஸாக்ஷாத்கரித்தேன்
ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி, தன்னுடைய பிரபந்த ரக்ஷையில் கூறுகிறார்—
பொருள் அழிவு, ஆயுள் முடிவு, பேராசை பரஹிம்ஸை பலநரக பாதையான
ஸம்ஸாரத்திலே , ஐங்கருவி( ரூபம்,சப்தம், ஸ்பர்சம் ,வாஸனை , ரஸம் ) இன்பத்தை
அநுபவித்து அதன் வாசனையால் மேன்மேல் திரிகின்ற பஞ்சேந்த்ரியங்களால்
மறுபடியும் மறுபடியும் சிற்றின்பத்தை நுகர்ந்து, அவை அற்பமாய் துயரமாகவே
இருப்பதையும் , ஆத்ம அனுபவமென்கிற ”கைவல்யம் ”எம்பெருமானைப்
பற்றிய அறிவு சிறிதும் அப்போது இல்லாததால் மிகக் கேவலமே என்றும்,
அவற்றில் இழிந்தாரோடு ஸ்நேஹம் அனர்த்தம் விளைவிக்கும் என்றும்
இவைகளை விட்டொழித்து,நேராக உன் திருவடிகளை ஆச்ரயித்தேன்
3.விஷ்ணு புராணம்
தஸ்மிந் ப்ரஸந்நே கிமிஹாஸ்த்யலப்யம் தர்மார்த்தகாமைரலமல்பகாஸ்தே =
தஸ்மிந் =அந்த பகவான்
ப்ரஸந்நே =அநுக்ரஹிக்கும்போது
இஹ அலப்யம் = இங்கு அடைய முடியாதது
கிம் அஸ்தி = என்ன இருக்கிறது !
தர்மார்த்தகாமைரலமல்பகா =தர்மம், அர்த்தம், காமம் மூன்றும் வேண்டாம்,
அவை அல்ப புருஷார்த்தங்கள்;அவற்றால் ஆவது ஏதுமில்லை
4. ஸ்ரீமத் பகவத் கீதை ( 7–23 )
அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்ப மேதஸாம்
தேவாந்தே வயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி
தேவதாந்தரர்களின் பக்தர்கள்,சிற்றறிவு உடையவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் பூஜிக்கும் தேவதாந்தரங்கள் அல்ப பலனையே கொடுக்கின்றன .
இது அழியக்கூடியது
5.ஸ்ரீமத் பகவத் கீதை ( 9–33 )
கிம் புநர் ப்ராஹ்மணா : புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா |
அநித்ய ஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வமாம் ||
ஸ்ரீ க்ருஷ்ணன் , அர்ஜுனனிடம் சொல்கிறார் —
புண்யம் செய்து ப்ராம்மணப் பிறவி எடுத்த ப்ராம்மணர்களும்,பக்தர்களான ராஜரிஷிகளும் ,
இந்த உலகம் அநித்யம் ,இங்கு ஸுகம் இல்லை, என்பதைத் தெளிந்து உணர்ந்து ,நித்யலோகப்
ப்ராப்திக்காக என்னை ஆச்ரயிப்பதைப்போல, நீயும் , என்னைப் பூஜிப்பாயாக .
6. விஷ்ணு புராணம்
மஹா பலாந் மஹாவீர்யான் அநந்ததந ஸத்ஜயாந் கதாந் காலேந மஹதா
கதாசேஷாந்நராதிபாந் ச்ருத்வா ந புத்ரதாராதௌ க்ருஹக்ஷேத்ராதிகே
அபி வா த்ரவ்யாதௌ வா க்ருதப்ரஜ்ஜோ மமத்வம் குருதே நர :
மிக்க மனோபலம், வீர்யம் ,அளவற்ற தானம் , உடையவர்களாக இருந்தும்,
நராதிபாந் =உலகங்களை ஆண்ட அரசர்கள் , கதாந் = மாண்டவர்களாய்
மஹதா காலோ =அவர்கள் காலம் ஜீவிதம் அதிகமாக இருந்தாலும்
கதாஸேஷாந் ச்ருத்வா =அவர்களின் கதைகளைமட்டில் கேட்டு ,
எல்லாம் அல்பம், அநித்யம் என்று தெளிவு உடையவன்
ந புத்ரதாராதௌ க்ருஹக்ஷேத்ராதிகே அபி வா = மக்கள், மனைவி,
வீடு,வயல், பணம் போகம் இவற்றில் அபிமானமின்றி
எல்லாம் என்னுடையது என்கிற மமதை கொள்ளமாட்டான்.
7.விஷ்ணு புராணம்
ஸர்வம் துக்கமயம் ஜகத்
இந்த உலகம் முழுதும் துக்கமயமானது
8.விஷ்ணு புராணம்
ஸ்வர்க்கே அபி பாதபீதஸ்ய க்ஷயிஷ்ணோர்நாஸ்தி நிர்வ்ருத்தி :
புண்யம் செய்து ஸ்வர்க்கத்தில் உள்ளவன் , ஸுகத்தை அனுபவித்தாலும் அந்தப் புண்யபலன் குறைந்து, தீர்ந்துவிட்டால், தான் கீழே விழுந்து
பூமியில் துன்பம் அனுபவிக்க நேரிடுமே என்கிற பயம் காரணமாக முழுமையான ஸுகம் அநுபவிக்க முடிவதில்லை
9.விஷ்ணு புராணம்
ராஜ்யே க்ருத்நந்த்யவித்வாம்ஸோ மமத்வாஹ்ருத சேதஸ : அஹம்மாந
மஹாபாந மதமத்தா ந மாத்ருசா : =
அஹங்காரம் கொண்டவர்கள் மட்டுமே ,அந்த அஹங்காரத்தால் ,ராஜ்யம் ,
ப்ரதேசம் இவைகளில் ஆசையுடன் இருப்பர்.என் போன்றவர்கள்
அவைகளுக்காக ஏங்குவதில்லை
10. இதிஹாச சமுச்சயம்
ஆப்ரஹ்மபவநாதேதே தோஷா : ஸத்தி
மஹா புநே அத ஏவ ஹி நேச்சந்தி ஸ்வர்க்கப்ராப்திம் மநீஷிணா : =
ஹே –ரிஷியே ! ப்ரம்மலோகம் முதலாக எல்லா உலகங்களிலும் மிக அல்பமான தோஷங்களே பரவி இருக்கின்றன.
ஆதலால்,அறிவாளிகள், ஸ்வர்க்கத்துக்கு ஆசைப்படுவதில்லை
11. மஹாபாரதம்
ப்ரஹ்மணா : ஸதநாதூர்த்வம் தத்விஷ்ணோ :பரமம் பதம் சுத்தம் ஸநாதநம்
ஜ்யோதி :பரம் ப்ரஹ்மேதி ந தத்ர பூதா கச்சந்தி புருஷா விஷயாத்மகா :
டம்ப லோப மத க்ரோத த்ரோஹ மோஹைரபி த்ருதா : நிர்மமா
நிரஹங்காரா நிர்த்வந்த்வா : ஸம்யதேந்த்ரியா : த்யாநயோகரதாச்சைவ
தத்ர கச்சந்தி ஸாதவ : =
ப்ரம்மலோகத்தின் மேலே விஷ்ணுவின் பரமபதம் இருக்கிறது.தூய்மையாகவும் , நித்யமாயும் , ஜ்யோதிஸ்ஸாகவும் இருக்கிறது.
பரம்பொருளை அனுபவிக்கத் தகுந்ததாக ”பதம் ”
இங்கு, டம்பம் , லோபம் , ஆணவம் , கோபம் , த்ரோகம் , ஆசை இவற்றுக்கு
ஆளான அறிவு இல்லாதவர்கள் இங்கு செல்வதில்லை;செல்ல இயலாது.
அஹங்கார ,மமகாரம் அற்றவர்கள் , இன்பதுன்பங்களில் சமநிலையில்
இருப்பவர்கள், புலன்களை அடக்கியவர்கள், பகவானைத் த்யானித்தபடி
இருப்பவர்கள் –இவர்கள்தான்–இப்படிப்பட்ட சாதுக்கள்தான் -அவர்கள்
மட்டுமே அங்கு செல்கிறார்கள்.
12. மஹாபாரதம்
ரம்யாணி காமசாராணி விமாநாநி ஸமாஸ்ததா
ஆக்ரீடா விவிதா ராஜாந் பத்மிந்யச்ராமலோதகா : =
பரமபதத்தில் இஷ்டப்படி செல்லக்கூடிய அழகிய விமானங்கள், அழகான மண்டபங்கள்,பற்பலவகையான தோட்டங்கள்,
தெளிந்த நீருள்ள தடாகங்கள் ஆகியவை இருக்கின்றன
13. மஹாபாரதம்
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந : =
பகவானின் பரமபதத்துக்கு முன்பாக, மற்ற எல்லா உலகங்களும் நரகம் போன்றவையே
மேற்சொல்லப்பட்ட, பல ப்ரமாணங்கள் மூலமாக,அசித் பொருள்களால் —
அசேதனத்தால் ,வருகிற இன்பம் யாவும் , ஏழு தோஷங்கள்–குற்றங்கள்
உடையவை
இவை —-
1கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டியதாக இருப்பது
2.துக்கத்துடன் கலந்திருப்பது
3.துக்கத்துக்கு மேலும் காரணமாக இருப்பது
4.. அல்பமானவை,
5 நிலையற்றவை,அதாவது–அழியக் கூடியது.
6.ஆத்ம ஸ்வரூபத்தை அதற்கு மாறுபட்டதாக எண்ணுவது
7.மோக்ஷ ஆனந்தத்துக்கு வேறாக இருப்பது
இதே தோஷங்கள் , ஒருவன் தன்னுடைய ஆத்ம அனுபவத்தில் திளைக்கும்போதும் உண்டாகும் என்றும் அறிய வேண்டும்.
இவற்றுக்கு எதிராக உள்ளது யாதெனில்,
பகவத் அநுபவத்தின் மூலம் ஏற்படும் ஆனந்தம் . இவற்றின் நன்மைகளை அறிந்து, அதில் இழிய வேண்டும்.
பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி
பரமாத்மநி யோ ரக்தோ விரக்த : அபரமாத்மநி =
இப்படி இழிந்தால்,பகவானிடம் மட்டுமே ப்ரேமை;மற்றவற்றில் வெறுப்பு என்கிற
நிலைக்கு முமுக்ஷு வந்து விடுவான்
மஹாபாரதம்
ப்ரவ்ருத்தி லக்ஷணம் தர்மம் ப்ரஜாபதிரதாப்ரவீத்
நிவ்ருத்தலக்ஷணம் தர்மம் ருஷிர்நாராயணோ அப்ரவீத்
ப்ரவ்ருத்தி தர்மங்களை ப்ரம்மன் சொன்னான் என்று உள்ள ப்ரவ்ருத்தி தர்மங்களைக் கைவிட்டும் ( ப்ரவ்ருத்தி தர்மம் =பயனை வேண்டிச் செய்யும்
தர்மங்கள் ), நாராயண ரிஷி என்பவர்,நிவ்ருத்தி தர்மங்களை உரைத்தார் என்னும்படியான தர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்
நிவ்ருத்தி தர்மம் =மோக்ஷத்தை விரும்பிச் செய்யப்படும் தர்மங்கள் ) இவை,
மோக்ஷத்தை விரும்புபவர்கள் –முமுக்ஷுக்கள்—இவர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள்
————
அதிகாரத்திலிருந்து
கீழ்ச் சொன்னபடியிலே பராவரங்களான தத்வங்களும் புருஷார்த்தங்களும்
தெளிந்தாலும் , இப்படி வைராக்யபூர்வமாக பரம புருஷார்த்தோபாய
அநுஷ்டானத்தில் ப்ரவர்த்தியானாகில் சீல வ்ருத்த பலம் ச்ருதம் , சமார்த்தம்
ஸர்வசாஸ்த்ராணி விஹிதாநி மநீஷிபி : தஸ்மாத் ஸ ஸர்வசாஸ்த்ரஜ்ஜோ
யஸ்ய சாந்தம் மந : ஸதா
என்கிற ச்ருத பலத்தையும் இழந்து ,நாச்சாதயதி கௌபீநம் ந தம்ச மசகாபஹம்
சுந : புச்சாமிவாநர்த்தம் பாண்டித்யம் தர்மி வர்ஜிதம்
என்கிறபடியே ஹாஸ்யனாம் .
ஆகையால் வயஸ : கர்மணோ அர்த்தஸ்ய ச்ருதஸ்யாபிஜநஸ்ய ச வேஷவாக்வ்ருத்தி
ஸாருப்யமாசரந் விசரேஹித
என்கிறபடியே ச்ருதாநுரூபமாக ஸ்வோசிதமான பரம புருஷார்த்தோபாயநுஷ்டானத்திலே
த்வரிக்குமவர்கள் ”தன் கருமஞ்செய்யப் பிறருகந்தார் ” என்கிறபடியே , தம் தேவா
ப்ரஹ்மாணம் விது : ப்ரணமந்தி தேவதா :
இத்யாதிகளிற் சொல்லும் ஏற்றம் பெறுவர்கள்
வ்யாக்யானம்
ஒருவன், எது உயர்ந்த தத்வம் ,எது தாழ்ந்தது ; எது உயர்ந்த புருஷார்த்தம் ,எது தாழ்ந்தது என்று அறிய இயலும்.
ஆனாலும், உயர்ந்த புருஷார்த்தத்தைத் தெரிந்துகொண்டு, அதனை அனுசரிக்கவேண்டும்;இல்லையெனில்
மஹாபாரதம்
சீல வ்ருத்த பலம் ச்ருதம் =சாஸ்த்ர அறிவால் ஏற்படும் ஞான பலன்களான ஆத்மகுணம் நல்லொழுக்கம் இவற்றை இழக்க நேரிடும்.
இதிஹாச ஸமுச்சயம்
, சமார்த்தம் ஸர்வசாஸ்த்ராணி விஹிதாநி மநீஷிபி : தஸ்மாத் ஸ ஸர்வசாஸ்த்ரஜ்ஜோ
யஸ்ய சாந்தம் மந : ஸதா =மனஸ்ஸைக் கட்டுப்படுத்த பல சாஸ்த்ரங்கள்
ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், எவ்வளவு சாஸ்த்ரங்களைத்
தெரிந்து வைத்திருந்தாலும், மனஸ்ஸை அடக்காதவன் சாஸ்த்ரஜ்ஞன்
என்கிற பெயரையும் இழக்கிறான் .
நாச்சாதயதி கௌபீநம் ந தம்ச மசகாபஹம்
சுந : புச்சாமிவாநர்த்தம் பாண்டித்யம் தர்மி வர்ஜிதம்
நாயின் வால் மறைக்கப்பட வேண்டிய இடத்தை மறைக்கவேண்டும்.ஈ ,கொசு இவற்றையும் விரட்ட வேண்டும்;
அதைப்போல, தர்மானுஷ்டானமில்லாத அறிவு இருந்தும் ப்ரயோஜனமில்லை
மநு ஸ்ம்ருதி
வயஸ : கர்மணோ அர்த்தஸ்ய ச்ருதஸ்யாபிஜநஸ்ய ச வேஷவாக்வ்ருத்தி
ஸாருப்யமாசரந் விசரேஹித
வயது, கர்மம் , அதன் பிரயோஜனம் , சாஸ்த்ரஜ்ஞாநம் நற்குடியில் பிறப்பு
இவைகளுக்கு ஏற்றபடி,வயதுக்கேற்ற வேஷமும் வயதுக்கேற்ற பேச்சும்
வயதுக்கேற்ற செயலும் இருக்கவேண்டும்.
இப்படியாக உயர்ந்த புருஷார்த்தத்தைக் கொடுக்கிற உபாயத்தைக்
கடைப்பிடிப்பவர்கள் ஏற்றம் என்னவெனில் —–
–
”தன் கருமஞ்செய்யப் பிறருகந்தார் ” =
தனது கடமைகளை ஒருவன் செய்தானென்றால் எல்லோராலும் புகழப்படுவான்
மஹாபாரதம்
தம் தேவா ப்ரஹ்மாணம் விது : =
ஒரு சண்டாளன் நல்ல ஒழுக்கத்துடன் இருந்தால் அவன் தேவர்களால் பிராம்மணன் என்றே கொள்ளப்படுவான்
விஷ்ணு தர்மம்
ப்ரணமந்தி தேவதா : =
அப்படிப்பட்டவனை தேவர்கள் துதிக்கின்றனர்
———–
விஷமது பஹிஷ்குர்வந் தீரோ பஹிர்விஷயாத்மகம்
பரிமிதரஸ ஸ்வாத்ம ப்ராப்தி ப்ரயாஸ பராங்முக :
நிரவதி மஹாநந்த ப்ரஹ்மாநுபூதி குதூஹலீ
ஜகதி பவிதா தைவாத் கச்சித் ஜிஹாஸித ஸம்ஸ்ருதி :
வ்யாக்யானம்
மோக்ஷமாகிய உயர்ந்த புருஷார்த்தம் , பகவானின் திருவடிகளைத் தன்னுடைய ஸிரஸ்ஸில் தரித்து அவனுக்கு கைங்கர்யம் செய்தல்
வளர்ந்துகொண்டே இருப்பதும், அழிவதை இயல்பாக உடையது—–ஸம்ஸாரம் .
இவ்விரண்டில் மோக்ஷம் நன்மை; ஸம்ஸாரம் என்பது தீமை.
இப்படி ஒருவன் அறிவது,ஆசார்யன் மூலமாகவேயாகும் . ஆசார்யர்களின்
கருணையால்,இந்த்ரிய நிக்ரஹம் செய்து மிக உயர்ந்த புருஷார்த்தமான
மோக்ஷத்தை விரும்பியிருப்பவன் –முமுக்ஷு
கலக்கமில்லா மனதுடையவன்;விஷம் கலந்த தேன் போன்றுள்ளஉலக விஷயங்களை ஒதுக்குபவன்;
அல்ப சுகத்தை அளிக்கும் ஆத்மானுபவத்தை வெறுப்பவன்;ஸர்வேச்வர அனுபவம் எல்லையில்லா ஆனந்தம் அளிக்கும்
என்பதில் ஆவல் கொண்டு பகவானின் அநுக்ரஹத்துடன் ஸம்ஸாரத்திலிருந்து
விடுபட ஆசையுள்ளவன்
——————————–
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply