ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 81–(உமாவ்ரதகதநஸமாப்தி꞉)-அதிதி, சாவித்ரி, கங்கா, யாம விரதங்கள் |–

உமை சொன்ன விரத விளக்கம் முடிவு; தேவதைகள் செய்த சாவித்ரி, அதிதி, கங்கா, யாம விரதங்கள்; கிருஷ்ணனின் மனைவிமாரான ருக்மிணி, ஜாம்பவதி, சத்யபாமா ஆகியோர் செய்த விரதங்கள்-

உமோவாச
பா³ந்த⁴வாந்ஸகு³ணாநிச்சே²தே³கப⁴க்தேந நித்யதா³ |
ஸப்தமீம் ஸப்தமீம் நித்யம் க்ஷ²பேத்ஸ்த்ரீ பதிதே³வதா ||2-81-1

உமை {அருந்ததியிடம்}, “திறன்மிக்க நண்பர்களையும், உறவினர்களையும் பெற விரும்பும் கற்புள்ள ஒரு பெண், ஓராண்டு காலத்திற்கு ஒவ்வொரு சப்தமியிலும் {வளர்பிறை ஏழாம் நாள், தேய்பிறை ஏழாம் நாள் ஆகியவற்றில்} உண்ணா நோன்பிருக்க வேண்டும்.

தத꞉ ஸம்வத்ஸரே பூர்ணே வ்ருக்ஷம் த³த்³யாத்³தி⁴ரண்மயம் |
ஸத³க்ஷிணம் ப்³ராஹ்மணாய ஷு²ப⁴ப³ந்து⁴மதீ ப⁴வேத் ||2-81-2

ஓராண்டு நிறைவடைந்ததும், பணக்கொடையுடன் சேர்த்து தங்கத்தாலான ஒரு மரத்தையும் ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும். அப்போது அவள் அறம்சார்ந்த நண்பர்களையும், உறவினர்களையும் பெறுவாள்

கரஞ்ஜே தீ³பகம் த³த்³யாத்ஸதா³ யா ப்ரமதா³ வரே |
பூர்ணே ஸம்வத்ஸரே த³த்³யாத்ஸௌவர்ணம் தீ³பகம் தத꞉ ||2-81-3

ஓ! அறம் சார்ந்தவளே, பெண்களில் முதன்மையானவளே, புங்க மரத்தின் அடியில் ஓராண்டு காலம் விளக்கேற்றி, ஓராண்டு நிறைவடையும் நாளில் பொன்னாலான விளக்கைக் கொடையளிப்பவள்,

ருச்யா ஸா ஸ்த்ரீ ப⁴வேத்³ப⁴ர்துரிஷ்டா புத்ரவ்தீ ததா² |
ஸபத்நீநாமதி⁴ ததா² தீ³பவஜ்ஜ்வலதே ஷு²பே⁴ ||2-81-4

மகன்களைப் பெற்ற அன்னையாகவும், தன் அழகால் கணவனுக்குப் பிடித்தவளுமாகித் தன் தலைவனின் மனைவியருக்கு மத்தியில் விளக்கைப் போல ஒளிர்வாள்.

யா ஷே²ஷபோ⁴ஜிநீ நித்யம் நைவ ச ஸ்யாத³ருந்துதா³ |
ந ச ஸ்யாத்³வ்யஷ²நா ஸௌம்யே நித்யம் ச பதிதே³வதா ||2-81-5

ஓ! மங்கலப் பெண்ணே, கடுஞ்சொற்களால் பிறரைக் காயப்படுத்தாதவளும், புதன்கிழமைகளில் உணவு உண்ணாதவளும், கடுஞ்சொல் பயன்படுத்தாதவளும், அனைவருக்கும் பிறகு எப்போதும் இறுதியாக உணவு உண்பவளும்,

ஷௌ²சாந்விதா ச ஸததம் ந ச ரூக்ஷாபி⁴பா⁴ஷிணீ |
ஷ்²வஷ்²ரூஷ்²வஷு²ரயோர்நித்யம் ஷு²ஷ்²ரூஷாபி⁴ரதா ஸதீ ||2-81-6

பழக்க வழக்கங்களில் தூய்மையுள்ளவளும், மாமனார், மாமியாருக்குத் தொண்டாற்றுபவளும், கணவனையே தெய்வமாகக் கருதுபவளும்

கிம் தஸ்யா வ்ரதகை꞉ கார்யம் கிம் வா ஸ்யாது³பவாஸகை꞉ |
யா ப⁴ர்த்ருதே³வதா நித்யம் ஸத்யத⁴ர்மகு³ணாந்விதா ||2-81-7

வாய்மை நிறைந்தவளுமான கற்புள்ள ஒரு பெண் விரதமோ, உண்ணா நோன்போ இருக்க வேண்டிய அவசியமே இல்லை

வித⁴வா ஸ்த்ரீ து யா ஹி ஸ்யாத்³தை³வயோகா³த்ஸதீ ஸதி |
தஸ்யா வக்ஷ்யாமி யோ த⁴ர்ம꞉ புராணோக்த꞉ ஸுமத்⁴யமே ||2-81-8

ஓ! இளமை நிறைந்த கற்புள்ள பெண்ணே, கற்புள்ள எந்தப் பெண்ணாவது தற்செயலாக விதவையாகும் நிலை நேர்ந்தால், அவள் புராணங்களில் விதிக்கப்பட்டுள்ள சில சடங்குகளைப் பின்பற்ற வேண்டும். நான் அவற்றைச் சொல்கிறேன் கேட்பாயாக

பதிம் ஸங்கல்பயித்வாஸா சித்ரஸ்த²ம் வாத²ம்ருந்மயம் |
தஸ்ய பூஜாம் ஸதா³ குர்யாத்ஸதாம் த⁴ர்மமநுஸ்மரேத் ||2-81-9

ஒரு விதவை, அறம்சார்ந்தோரின் நல்லொழுக்கத்தை நினைவில் கொண்டு தன் கணவனின் வடிவை மண்ணால் செய்தோ, அவனைப் போன்ற ஓவியத்தை வரைந்தோ அதை {அந்த வடிவத்தை} வழிபட வேண்டும்.

தத ஏவாப்⁴யநுஜ்ஞாம் ஸா நித்யம் யாசேத ஸுவ்ரதா |
வ்ரதகே சோபவாஸே ச போ⁴ஜநே ச விஷே²ஷத꞉ ||2-81-10

ஒரு விரதத்தையோ, உண்ணாநோன்பையோ செய்யும் போது, குறிப்பாக உணவை உண்ணும் நேரத்தில், கற்புள்ள ஒரு பெண் அந்த வடிவத்திடம் {சிலையிடமோ, ஓவியத்திடமோ} அனுமதி பெற வேண்டும்

ப⁴ர்த்ருலோகாந்வ்ரஜத்யேவ ந சேத்³வ்யுச்சரதே பதிம் |
ஷா²ண்டி³லீ ஸூர்யவத்³பா⁴தி ஸததம் பதிதே³வதா ||2-81-11

தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து வந்தவளான அந்த விதவையானவள், {பெண்முனியான} சாண்டிலியைப்[மஹாபாரதம் உத்யோக பர்வம் பகுதி 113லும், அநுசாஸன பர்வம் பகுதி 123லும் சாண்டிலி பற்றிய செய்திகள் இருக்கின்றன.] போலத் தன் கணவன் சென்ற உலகுக்கே சென்று அங்கே சூரியனைப் போல ஒளிர்வாள்.

அத்³யப்ரப்⁴ருதி ஸர்வேஷாம் தே³வாநாம் சைவ யோஷித꞉ |
த்³ரக்ஷ்யந்தி புண்யகவிதி⁴ம் பௌராணோ ய꞉ ஸநாதந꞉ ||2-81-12

புராணங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்தியமான அறச்சடங்குகளை {புண்யக விரத விதிமுறைகளை} இன்று முதல் தெய்வீகக் காரிகையர் {தேவ ஸ்திரீகள்} அறிவார்கள்.

முநிஷ்²ச நாரத³꞉ க்ருத்ஸ்நம் பௌராணம் ஜ்ஞாஸ்யதே விதி⁴ம் |
உபவாஸஸ்ய த⁴ர்மாத்மா வ்ரதகாநாம் ததை²வ ச ||2-81-13

அற ஆன்மா கொண்ட நாரத முனிவர், புராணங்களில் விளக்கப்பட்டுள்ளபடியே உண்ணாநோன்பு, விரதங்கள் தொடர்பான மொத்த விதிமுறைகளையும் அறிவார்

அதி³திஸ்தபஸேந்த்³ராணீ த்வம் ச ஸோமஸுதே வரே |
ப்ரவர்தநே புண்யகாநாம் வ்ரதகாநாம் ச ஸர்வதா³ ||2-81-14

கீர்தநீயா꞉ ஸதீநாம் ஹி ப⁴விஷ்யத² கு³ணாந்விதா꞉ |
உபவாஸவ்ரதவிதி⁴ம் யதா²வதி³ஹ க்ருத்ஸ்நஷ²꞉ ||2-81-15

ஓ! சோமனின் மிகச் சிறந்த மகளே {அருந்ததி}, ஏற்கனவே சொல்லப்பட்ட உண்ணா நோன்புகள், விரதங்களுடைய விதிகளின் நீட்சியாகச் செய்யப்படும் அறச்சடங்குகளின் காரியத்தில் அறம்சார்ந்த அதிதியும், இந்திராணியும் {சசிதேவியும்}, {அருந்ததியான} நீயும் கற்புள்ள பெண்களின் கூட்டத்தில் முதன்மையானவர்களாகக் கொண்டாடப்படுவீர்கள்.(14,15)

ப்ராது³ர்பா⁴வேஷு ஸர்வேஷு பா⁴ர்யா விஷ்ணோர்மஹாத்மந꞉ |
ஜ்ஞாஸ்யந்தி புண்யகவிதி⁴ம் நித்யமேவ ஸநாதநம் ||2-81-16

உயரான்ம விஷ்ணுவின் அவதாரங்கள் அனைத்திலும், அவனது மனைவிகள் நித்தியமான இந்தப் புண்யகச் சடங்கின் விதிகளை அறியவருவார்கள்.

ஸவிஷே²ஷம் ச த⁴ர்மாணாம் ஸ்த்ரீத⁴ர்மேஷு ப்ரஷ²ஸ்யதே |
பதிப⁴க்திரது³ஷ்டத்வமவாக்³து³ஷ்டத்வமேவ ச ||2-81-17

ஓ! கற்புள்ள பெண்ணே, மேலும் நான் என்ன சொல்லப் போகிறேன்; கணவனிடம் அர்ப்பணிப்பு, தீமை இல்லாமை, சொல்லாலும் பாவம் செய்யப்படாமை ஆகியவையே அறங்கள் அனைத்திலும், அதிலும் குறிப்பாகப் பெண்களின் கடமைகளில் முதன்மையானவையாகும்” என்றாள் {உமாதேவி}”

நாரத³ உவாச
ஏவமுக்தாஸ்து தா꞉ ஸாத்⁴வ்யோ மஹாதே³வ்யா தபோத⁴நா꞉ |
ஜக்³முர்ஹ்ருஷ்டா மஹாதே³வீம் ப்ரணிபத்ய ஹரப்ரியாம் ||2-81-18

நாரதர் {ருக்மிணியிடம்}, “ஹரனின் அன்புக்குரியவளான அந்தப் பெருந்தேவியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தவத்தையே செல்வமாகக் கொண்ட அந்தத் தவச்செல்விகள் அவளை வணங்கி விடைபெற்றுச் சென்றனர்.

அதி³திர்வ்ரதகம் சக்ரே ஷ்²ருணுயாத்³த⁴ர்மசாரிணீ |
உமாவ்ரதவிதி⁴꞉ ஸர்வ꞉ பூர்வோத்³தி³ஷ்டஸ்தயா க்ருத꞉ ||2-81-19

அறச்சடங்குகளை எப்போதும் நோற்பவளான அதிதி, ஏற்கனவே சொல்லப்பட்ட விதிமுறைகளின்படி உமா விரதத்தைச் செய்தாள்.

பாரிஜாதே நிப³த்⁴யாத² மம த³த்தஸ்து கஷ்²யப꞉ |
அதி³திவ்ரதகம் நாம தத்³த³த்தம் ஸத்யபா⁴மயா ||2-81-20

கசியபரைப் பாரிஜாத மரத்துடன் கட்டி எனக்குக் கொடையளித்த அவளுடைய அந்த விரதம் அதிதி விரதம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அந்த விரத விதிகளின் படியே சத்யபாமா கொடைகளை அளித்தாள்

ததே³வ வ்ரதகம் த³த்தம் ஸாவித்ர்யா த⁴ர்மநித்யயா |
தைரேவ யுக்தை꞉ ஸம்யுக்தமித³ம் த்வப்⁴யதி⁴கம் க்ருதம் ||2-81-21

அறத்தில் எப்போதும் நிலைக்கும் சாவித்ரியும் அந்த நோன்பைச் செய்தாள். தற்போது சத்யபாமா முறையாக அந்த விரதத்தையே செய்தாள். இது மற்ற அனைத்தையும் விடச் சிறந்ததாக இருக்கிறது.

ஸம்த்⁴யாகாலே து ஸம்ப்ராப்தே ஸ்தா²நே ஸ்தா²நே ததை²வ ச |
பூஜநம் வா நமஸ்காரோ ஜபஷ்²ச த்³விகு³ண꞉ ஸ்ம்ருத꞉ ||2-81-22

இந்த விரதம் நோற்கும் போது, மாலை வேலையில் சரியான இடத்தில், பெயர்களை உரைத்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவது இரு மடங்கு பலனை அளிக்கும்.

ஸாவித்ரீவ்ரதகம் க்ருத்வா ததா²தி³த்யா வ்ரதம் ஸதீ |
ப⁴ர்து꞉ குலம் பித்ரூகுலமாத்மாநம் சைவ தாரயேத் ||2-81-23

சாவித்ரி விரதத்தையும், அதிதி விரதத்தையும் செய்யும் கற்புள்ள பெண்ணால், தன் கணவனின் குடும்பத்தையும், தன் தந்தையின் குடும்பத்தையும், தன்னையும் காத்துக் கொள்ள முடியும்.

இந்த்³ராணீ வ்ரதகம் சக்ரே ததே³வௌமம் யதா²விதி⁴ |
ரக்தமப்⁴யதி⁴கம் வாஸோ போ⁴ஜநம் சைவஸாமிஷம் ||2-81-24

இந்திரனின் ராணி {இந்திராணியான சசிதேவி}, உமாவிரத விதிகளின் படி சடங்கைச் செய்து எண்ணற்ற செவ்வாடைகளையும், மீனும், இறைச்சியும் கலந்த உணவையும் கொடையளித்தாள்.

சதுர்தே² தி³வஸே வாபி புண்யகார்த²ம் விதி⁴꞉ புந꞉ |
அஹோராத்ரோபவாஸஷ்²ச தே³யம் கும்ப⁴ஷ²தம் ததா² ||2-81-25

நான்காம் நாளில் {வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தித் திதிகளில்} கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு விதி இந்த விரதத்தில் இருக்கிறது. அதன்படி ஒருத்தி பகலும், இரவும் உண்ண நோன்பிருந்து நூறு குடங்களைக் கொடையளிக்க வேண்டும்.

க³ங்க³யா வ்ரதகம் த³த்தம் ததே³வௌமம் யஷ²ஸ்கரி |
ஸ்நாநமப்⁴யதி⁴கம் த்வத்ர ப்ரத்யூஷஸ்யாத்மநோ ஜலே ||2-81-26

ஓ! சிறப்புமிக்கப் பெண்ணே, கங்கா தேவி அந்த உமாவிரதத்தை நிறைவேற்றி அதிகாலையில் தன் நீரிலேயே நீராடினாள்.

அந்யஸ்மிந்வா ஜலே மாக⁴ஷு²க்லபக்ஷே ஹரிப்ரியே |
ஏதத்³க³ங்கா³வ்ரதம் நாம ஸர்வகாமப்ரத³ம் ஸ்ம்ருதம் ||2-81-27

ஓ! ஹரியின் அன்புக்குரிய ராணியே {ஹரிப்ரியே / ருக்மிணி}, ஒருத்தி மாசி மாதத்தின் வளர்பிறையில் இந்தக் கங்கா விரதத்தைச் செய்து, வேறு எந்த நீரில் {கங்கையிலோ, வேறு எந்த நீரிலோ} நீராடினாலும் விரும்பிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்று {வேதத்தில்} சொல்லப்படுகிறது

ஸப்த ஸப்த ச ஸப்தாத² குலாநி ஹரிவல்லபே⁴ |
ஸ்த்ரீ தாரயதி த⁴ர்மஜ்ஞா க³ங்கா³வ்ரதகசாரிணீ ||2-81-28

ஓ! ஹரியின் அன்புக்குரிய அவனது மனைவியே, அறச்சடங்குகள் அனைத்தையும் அறிந்த ஒரு பெண், கங்கா விரதம் செய்தால், {கணவனின் குலம், தந்தையின் குலம், தாயின் குலம் ஆகிய} மூன்று குலங்களின் ஏழு தலைமுறைகளை அவளால் காக்க முடியும்
கங்கா வ்ரதம் நடத்தும் தர்மமறிந்த ஸ்த்ரீ, பதியின் குலம், பிதா குலம், மாதாமஹ குலம் ஆகிய மூவேழு குலங்களைக் கரையேற்றுகிறாள்”

தே³யம் கும்ப⁴ஸஹஸ்ரம் து க³ங்கா³யா வ்ரதகே ஷு²பே⁴ |
தாரணம் பாரணம் சைவ தத்³வ்ரதம் ஸார்வகாமிகம் ||2-81-29

ஓ! மங்கலப் பெண்ணே, கவலைகளை அகற்றுவதும், விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் கொடுப்பதுமான இந்தக் கங்கா விரதத்தை ஒருத்தி செய்யும்போது, அவள் ஆயிரம் குடங்களைக் கொடையளிக்க வேண்டும்

யமபா⁴ர்யா சகாராத² வ்ரதம் யாமரத²ம் ஷு²ப⁴ம் |
ஹேமந்தே தத்து கர்தவ்யமாகாஷே² ஹரிவல்லபே⁴ ||2-81-30

ஓ! ஹரியின் அன்புக்குரிய ராணியே, யமனின் மனைவியால் கொண்டாடப்பட்ட யாம விரதம் என்ற பெயரைக் கொண்ட விரதத்தை ஒருத்தி பனிக்காலம் நிலவும் இடத்தில் {கூதிர் காலத்தில் திறந்த வெளியில்} செய்யலாம்.

இமாநி சைவ வாக்யாநி ப்³ரூயாதா³காஷ²மாஸ்தி²தா |
ஸ்நாத்வா ஷு²சிஸமாசாரா நமஸ்க்ருத்ய பதிம் ஷு²பே⁴ ||2-81-31

ஓ மங்கலப் பெண்ணே, இந்த விரதத்தைச் செய்யும் தூய ஒழுக்கம் கொண்ட பெண் ஒருத்தி, நீராடிய பிறகு கணவனை வணங்கிவிட்டு வானத்தை நோக்கிப் பின் வரும் சொற்களைச் சொல்ல வேண்டும்.

சராம்யஹம் யாமரத²ம் ஹிமம் ப்ருஷ்டே²ந தா⁴ரயே |
பதிவ்ரதா ஜீவபுத்ரா ப⁴வேயம் ச புரோ(அ)தி⁴கா||2-81-32

{அவள்}, “நான் பனியை முதுகில் தாங்கி யாமரத விரதத்தைச் செய்வதால், பிழைத்திருக்கும் மகன்களைக் கொண்டவர்களும், கணவர்களிடம் அர்ப்பணிப்புள்ளவர்களுமான பெண்களில் முதன்மையானவளாகத் திகழ்வேனாக.

ஸபத்நீரதி⁴திஷ்டே²யம்பஷ்²யேயம் சைவ மா யமம் |
ஸப⁴ர்த்ருபுத்ரா ஜீவேயம் சிரம் ச ஸுக²மேவ ச ||2-81-33

என் கணவரின் மற்ற மனைவியரை நான் ஆள்வேனாக, நான் யமனைக் காணாதிருப்பேனாக, நான் என் கணவருடனும், மகன்களுடனும் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பேனாக.

பதிலோகம் ச க³ச்சே²யம் ப⁴வேயம் நந்தி³நீ ததா² |
ஸுசைலா ம்ருஷ்டஹஸ்தா ச ஸ்வஜநேஷ்டா கு³ணாந்விதா ||2-81-34

இந்த விரதத்தின் சக்தியால் நான் என் கணவருடன் ஒரே உலகத்திற்கு {அவர் செல்லும் உலகத்திற்கே} செல்வேனாக. செல்வச் செழிப்புள்ளவளாகவும், நல்ல ஆடைகளைக் கொண்டவளாகவும், திறந்த கைகளை உடையவளாகவும், சொந்தங்களால் விரும்பப்படுபவளாகவும், சாதித்தவளாகவும் ஆவேனாக” {என்று வானத்திடம் சொல்ல வேண்டும்}

ஏவம் க்ருத்வா ததோ விப்ரம் மது⁴நா ஸ்வஸ்தி வாசயேத் |
திலைரபி ததா² க்ருஷ்ணை꞉ பாயஸேந து போ⁴ஜயேத் ||2-81-35

இவ்வாறு சொல்லிவிட்டு அவள் ஒரு பிராமணனுக்குத் தேனைக் காணிக்கையாக அளித்து, அவனை நலந்தரும் மந்திரங்களை உரைக்கச் செய்து, எள் பாயசத்துடன் அவனுக்கு உணவளிக்க வேண்டும்.

ஏவம் வ்ரதாநி தே³வீபி⁴꞉ க்ருதாந்யமரவர்ணிநி |
மஹாதே³வ்யா புரோக்தாநி ருத்³ரபத்ந்யா ஹரிப்ரியே ||2-81-36

ஓ! தேவர்களின் நிறத்தைக் கொண்டவளும், ஹரியின் அன்புக்குரியவளுமான ஹரியின் மனைவியே {ருக்மிணியே}, இவ்வாறே ருத்ரனின் மனைவியான அந்தப் பெருந்தேவியால் {உமையால்} விளக்கப்பட்ட பல்வேறு விரதங்களைத் தேவிகள் {தேவ மங்கையர்} நோற்றனர்.

அஹம் ப்³ரவீமி தபஸா மதீ³யேந ஸமந்விதா |
ஸர்வா த்³ரக்ஷ்யத² கு³ண்யாநி வ்ரதகாநி ததை²வ ச ||2-81-37

பௌராணாந்யுமயா தே³வ்யா யாநி த்³ருஷ்டாநி வை புரா |
கல்யாணகு³ணயுக்தாநி பாவநாநி ஷு²பா⁴நி ச ||2-81-38

நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்; புராணங்களில் சொல்லப்பட்டதும், முன்பே உமாதேவியால் அடையப்பட்டதுமான மங்கலமான அந்தப் புனிதச் சடங்குகளின் பலன்களை என் தவச் சக்தியின் மூலம் நீ அறுவடை செய்வாயாக {காண்பாயாக}” என்றார் {நாரதர்}”.(37,38)

வைஷ²ம்பாயந உவாச
ருக்மிணீ வ்ரதகம் சக்ரே த்³ருஷ்ட்வா வ்ரதகவிஸ்தரம் |
உமாயா வரதா³நேந த்³ருஷ்ட்வா தி³வ்யேந சக்ஷுஷா ||2-81-39

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “உமையால் அளிக்கப்பட்ட வரத்தின் மூலம் தெய்வீகப் பார்வையைப் பெற்ற ருக்மிணி, விரத விதிகள் அனைத்தையும் கண்டு அதை {விரதத்தைச்} செய்தாள்.

உமாவ்ரதேஷு ஸர்வேஷு வ்ருஷதா³நம் ததா²தி⁴கம் |
ரத்நமாலாப்ரதா³நம் சயதா²ந்நம் ஸார்வகாமிகம் ||2-81-40

காளைகளையும், ரத்தினங்களையும், உணவையும் கொடையளிப்பது உமாவிரதத்தின் அனைத்து வடிவங்களிலும் பெரும் பலன்களையும், விரும்பிய பொருட்கள் அனைத்தையும் கொடுக்கும் என்ற காரணத்தால் அவள் அவற்றைக் கொடையளித்தாள்.

ததா² ஜாம்ப³வதீ சக்ரே புரோமாவ்ரதகம் யதா² |
த³தா³வப்⁴யதி⁴கம் ஸா து ரத்நவ்ருக்ஷம் மநோஹரம் |2-81-41

ஓ! ஜனமேஜயா, ஜாம்பவதியும் இந்த விரதத்தைச் செய்த பிறகு ரத்தினங்களாலான அழகிய மரத்தைக் கொடையளித்தாள்.

ஸத்யா த³தௌ³ ததை²வாத² புரோமாவ்ரதகம் ததா² |
பீதமப்⁴யதி⁴கம் வாஸஸ்தயா த³த்தமுமாவ்ரதே ||2-81-42

சத்யா {சத்யபாமா}, இந்த உமாவிரதத்தைச் செய்து எண்ணற்ற மஞ்சள் ஆடைகளைக் கொடுத்தாள்

ரோஹிண்யாத² ச பா²ல்கு³ந்யா மக⁴யா ச புராதநே |
வ்ரதாநி க²லு த³த்தநி ப³ஹூநி குலவர்த⁴நே ||2-81-43

{ரோஹிணி, பூரம், உத்திரம், மகம் ஆகியோரும் {அகிய நட்சத்திரங்களும்} தங்கள் குலங்களின் புகழுக்கு வழிவகுக்கும்படி பல வகையான நோன்புகளை முன்னர் நோற்றனர்}

த³தௌ³ ஷ²தபி⁴ஷா சைவ வ்ரதகம் புண்யலக்ஷணம் |
யேந நக்ஷத்ரமுக்²யத்வம் ஜகா³ம குருநந்த³ந ||2-81-44

ஓ! குருவின் வழித்தோன்றலே, சதபிஷக் தேவியும் {சதயம் நட்சத்திரமும்}, இந்தப் புனிதச் சடங்கைச் செய்து நட்சத்திரங்களின் மத்தியில் மிக உயர்ந்த நிலையை அடைந்தாள்” என்றார் {வைசம்பாயனர்}.

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே உமாவ்ரதகத²நஸமாப்தௌ
பாரிஜாதஹரணகத²நஸமாப்தௌ சைகாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉ ||

ஸமாப்தம் சேத³ம் ஹரிவம்ஷ²ஸ்ய பூர்வார்த⁴ம்

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading