ஸ்ரீ சங்ஷேப ராமாயணம் —

ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்

ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்

கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8

ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது

தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:

ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ

ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:

————

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

————

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது

———

ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்

—————-

தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம்
நாரதம் பரிப்ரக்ஷூச்சா வால்மீகி முனி புங்கவம் –1-

தபோ நிரதம்’, ‘ஸ்வாத்யாய நிரதம்’, ‘வாக் விதாம்வரம்’ ‘முனிபுங்கவம்’, என்று
ஸ்ரீ நாரத மகரிஷிக்கு நாலு அடைமொழி கொடுத்து, இந்த ஸ்ரீ நாரத மகரிஷியிடம்,
ஸ்ரீ வால்மீகி பகவான் ஒரு விஷயத்தை கேட்கிறார் என்று ஆரம்பிக்கிறது.

தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
‘வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

த‌ப‌:ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம் த‌ப‌ஸ்வீ வாக்விதாம் வ‌ர‌ம்|
நார‌த‌ம் ப‌ரிபப்ர‌ச்ச‌ வால்மீகி முநிபுங்க‌வ‌ம்||” (வா.ரா. பா.கா. ச‌ரு 1 சுலோ 1)

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

இது இராமாய‌ண‌த்தின் முத‌ல் சுலோக‌ம். இத‌னால் குரு சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனிபுங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாதுஸேவீ ஸ‌முசித‌ச‌ரித‌ஸ் தத்வ‌போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ்த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணிப‌த‌ந‌ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌கால‌ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோதாந்தோ ந‌ஸூயுஸ்ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வித‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாதுஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌திய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த்த‌க்க‌து.

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளிவ‌ந்ததினால்
வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

——–

கோனு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் வீர்யவான் |
தர்மக்ஞ்ச: க்ரிதஞ்ச: சத்யவாக்ய: த்ரிடவிரத: ||–2-

அஸ்மின் லோகே – இந்த உலகத்தில்
சாம்ப்ரதம் லோகே – தற்காலத்தில்
தர்மக்ஞஸ்ச’ – தர்மங்களை அறிந்தவர்.
‘க்ருதக்ஞஸ்ச’ – செய்த நன்றியைப் பாராட்டுபவர்.
ஸத்யவாக்ய:’ – பொய்யே பேசாதவர். எப்பொழுதும் மனோ, வாக், காயத்துனால உண்மையே பேசுபவர்.

———

சாரித்ரேண ச கோ யுக்த: சர்வ புதேஷு கோ ஹித: |
வித்வான் க: க: சமர்தஸ்ச: ஏக பிரிய தர்சன: ||–3-

——–

ஆத்மவான் ஜிதக்ரோத: த்துதிமானு அன் அசூயக: |
கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே ||–4-

கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே–யுத்தத்தில் எவர் கோபம் கொண்டால் தேவர்கள் கூட
பயப்படுவாளோ அப்பேற்பட்ட பராக்கிரமம் – சமுத்திர ராஜனே பயந்தான் அன்றோ !

———–

ச்ருத்வா சைதத் த்ரிலோகக்ஞோ வால்மீகேர் நாரதோ வச: |
ச்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் ||–6-

‘ச்ருத்வா ஏதத் வால்மீகேர் வச:’ – இந்த வால்மீகியுடைய வார்தையைக் கேட்டு,
‘த்ரிலோகக்ஞ: நாரத:’ – மூவுலகையும் அறிந்த, எல்லாம் அறிந்த நாரத பகவான் சொல்ல
ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத்’ – அவரும் ரொம்ப சந்தோஷமா சொல்ல ஆரம்பிக்கிறார்.

———-

பஹவோ துர்லபாஸ்சைவ யே த்வயா கீர்திதா குணா: |
முநே லக்ஷ்யாம்யஹம் புத்தவா தைர்யுக்த: ச்ரூயதாம் நர: ||–7-

————

இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவோ ராமோ நாம ஜநை: ச்ருத: |
நியதாத்மா மஹாவீர்யோ த்யுதிமான் த்ருதிமாந்வசீ ||–8-

இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவ:’ – இக்ஷ்வாகு வம்சத்தில ஒளியோடு விளங்குபவன்
த்யுதிமான்’ – ஒளி மிகுந்தவன்–தேஜஸோட இருப்பான்.
‘த்ருதிமாந்’ – தைர்யசாலி.
‘வசீ’ – இந்திரியங்களைத் தன் வசத்தில் வைத்திருப்பவன்.

—————

புத்திமாந் நீதிமாந் வாக்மீ ஸ்ரீமாஞ்சத்ருநிபர்ஹண: |
விபுலாம்ஸோ மஹாபாஹு: கம்புக்ரீவோ மஹாஹநு: ||–9-

வாக்மீ’ – நல்ல வாக்கு. பேச்சு ‘மதுராபாஷி
விபுலாம்ஸ:’ – பரந்த தோள்கள்.
கம்புக்ரீவ:’ – கழுத்து சங்கு போல இருக்கும்.
‘மஹாஹநு:’ – ‘ஹநுமான்’னு கூட சொல்லுவோம் இல்லையா ‘ஹநு’ன்னா தாடை. பெரிய தாடை.

——–

மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூடஜத்ருரரிந்தம: |
ஆஜாநுபாஹு: ஸு சிரா: ஸுலலாட: ஸுவிக்ரம: ||–10-

‘மஹோரஸ்க:’ – ‘விபுலாம்ஸ:’ன்னா பரந்த தோள்கள். ‘மஹோரஸ்க:’ பெரிய மார்பு.
‘மஹேஷ்வாஸ:’ – பெரிய வில்லை வெச்சிண்டிருக்கறவன்
கூடஜத்ரு:’ – நல்ல சதைப்பற்றுள்ள collar bones தோள்களெல்லாம் இருக்கிறவர்
அரிந்தம:’ – எதிரிகளை தபிக்கப் பண்ணுபவர்.
ஆஜாநுபாஹு:’ – ‘ஜாநு’ன்னா முட்டி. முட்டி வரைக்கும் நீண்ட கைகள்.
‘ஸு சிரா:’ – அழகான தலை.
‘ஸுலலாட:’ – பெரிய பரந்த நெற்றி.
‘ஸுவிக்ரம:’ – மிகுந்த பராக்ரமம் கொண்டவர்.

———

ஸமஸ் ஸமவிப4க்தாங்க3: ஸ்நிக்3த4வர்ண: பிரதாபவாந் |
பீந வக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஶுப4லக்ஷண: || 11 ||

ஸம:’ரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப உயரமும் கிடையாது, சமமான உயரம்!
‘ஸமவிப4க்தாங்க3:’ – ! சமமா ‘விப4க்தம்’ – சமமா பிரிக்கப்பட்ட அங்கங்கள்.
‘ஸ்நிக்3த4வர்ண:’ – ரொம்ப குளுமையான ஒரு வர்ணம். கருப்பு அப்படீன்னாக் கூட, ஒரு attractiveவான ஒரு கருப்பு!
‘பிரதாபவாந்’ – ரொம்ப powerful, ரொம்ப சக்திமான்!
‘பீநவக்ஷா:’ – அழகான மார்பு. நல்ல பரந்து விரிந்த, நன்னா அமைந்த ஒரு மார்பு ‘வக்ஷஸ்’.
‘விஶாலாக்ஷ:’ – விசாலமான கண்கள், தாமரை போன்ற கண்கள். பெரிய கண்.
‘லக்ஷ்மீவாந்’ – அவருடைய உறுப்புகள் எல்லாமே மங்களகரமா இருந்தது! .
‘ஶுப4லக்ஷண:’ – லக்ஷ்மீகரமா இருந்ததோட, இந்த ஸாமுத்ரிகா லக்ஷண -சக்கரவர்த்திக்குரிய எல்லா லக்ஷணங்களும் இருந்தது!

———–

த4ர்மஜ்ஞஸ் ஸத்ய ஸந்த4ஶ்ச ப்ரஜாநாம் ச ஹிதே ரத: |
யஶஸ்வீ ஜ்ஞான ஸம்பந்ந: ஶுசிர் வஶ்யஸ் ஸமாதி4மாந் || 12 ||

‘த4ர்மஜ்ஞ:’ – எல்லா தர்மங்களும் அறிந்தவர்!
‘ஸத்ய ஸந்த4ஶ்ச’ – சத்தியத்தை காப்பாற்றுபவர்!
‘ப்ரஜாநாம் ச ஹிதே ரத:’ – ‘ரஞ்சயதே இதி ராஜ’ –
யஶஸ்வீ ‘ – ரொம்ப புகழ் படைத்தவர்
ஜ்ஞான ஸம்பந்ந:’ – ஞானம் படைத்தவன்.
‘ஶுசி:’ – தூய்மையானவன்.
‘வஶ்ய:’-குணத்துனால வசியம் பண்ணி-அவன் எல்லாருக்கும் வசப்பட்டு-
‘ஸமாதி4மாந்’-தீர்க்க யோஜனை பண்றது

கௌசல்யா தேவியும் காட்டுக்கு கிளம்பும்போது,
யம் பாலயஸி தர்மம் த்வம் த்ருத்யா ச நியமேன ச |
ஸவை ராகவ ஸார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

————–

ப்ரஜாபதி ஸமஶ் ஸ்ரீமாந் தா4தா ரிபுநிஷூத3ந: |
ரக்ஷிதா ஜீவலோகஸ்ய த4ர்மஸ்ய பரிரக்ஷிதா ৷৷ 13 ৷৷

‘ப்ரஜாபதி ஸம: ஸ்ரீமாந்’ – மங்களங்களை கொண்டவர்களுக்குள் பிரஜாபதியைப் போல இருப்பவர்!
‘தா4தா’ – எல்லா உலகத்தையும் எல்லாருக்கும் கொடுப்பவர், எல்லாரையும் காப்பாற்றுபவர்.
‘ரிபுநிஷூத3ந:’ – எதிரிகளை கண்டிப்பவர், தண்டிப்பவர்.
‘ரக்ஷிதா ஜீவலோகஸ்ய’ – உயிர்குலங்களை எல்லாம் காப்பாற்றுபவர்.
‘த4ர்மஸ்ய பரிரக்ஷிதா

———-

ரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா |
வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞோ த4நுர்வேதே3 ச நிஷ்டித: ৷৷ 14 ||

‘ரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய’ – தன்னுடைய தர்மங்களை எல்லாம் காப்பாத்தறார்.
‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’ – தன்னுடைய ஜனங்களையும் காப்பாற்றுபவர்.
“அபராத3 சஹஸ்ர பா4ஜனம் பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே
அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு”
‘அபராத3 சஹஸ்ர பா4ஜனம்’ – நூத்துக் கணக்கான, ஆயிரக் கணக்கான தப்புகள் பண்ணி,
‘பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே’ – இந்த பயங்கரமான பவக் கடல்ல விழுந்திருக்கேன்!
‘அக3திம்‘ – எனக்கு வேற கதி தெரியலை!
‘சரணாக3தம்’ – உன்னை வந்து சரணாகதி பண்றேன்!
‘அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு’ – கிருபையினால உன்னை சேர்ந்தவனா என்னை நினைச்சுக்கோன்னு சொல்றவாளை,
‘ஸ்வஜந:’ – தன் ஜனங்களா நினைச்சு எல்லா விதத்திலேயும் காப்பாற்றுபவர்! – ‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’
‘வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தங்கள் -அதன் உட்பொருளையும் உணர்ந்தவர்!
‘த4நுர்வேதே3 ச நிஷ்டித:’ – ‘தான் க்ஷத்ரியன்’ங்கிறதுனால அந்த தனுர் வேதத்துல ரொம்ப உறுதியோட இருக்கார்.

———–

ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ: ஸ்ம்ருதிமாந் பிரதிபா4நவாந் |
ஸர்வலோகப்ரியஸ்ஸாது4: அதீ3நாத்மா விசக்ஷண: ৷৷ 15 ৷৷

‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ – சாஸ்திரங்களுடைய உண்மை பொருளை, தர்ம சூக்ஷ்மங்களை அறிந்தவர்!
‘ஸ்ம்ருதிமாந்’ – நல்ல ஞாபக சக்தி!
‘பிரதிபா4நவாந்’-சரியான நேரத்துல சரியான விஷயம் ஞாபகம்
‘ஸர்வலோகப்ரிய:’ – எல்லா உலகத்துக்கும் பிரியமானவர்!
ஸாது4-ஸாது குணங்கள் நிறைந்தவர்!

———–

ஸர்வதா3பி4க3தஸ்ஸத்3பி4ஸ்ஸமுத்3ர இவ ஸிந்து4பி4: |
ஆர்யஸ் ஸர்வஸமஶ்சைவ ஸதை3கப்ரியத3ர்ஶந: ৷৷ 16 ৷৷

‘ஸர்வதா3பி4 க3த: ஸத்3பி4: ஸமுத்3ர இவ ஸிந்து4பி4:’ – சமுத்திரத்தை நோக்கி எப்படி நதிகள் போகுமோ
அந்த மாதிரி சாதுக்கள் எப்பவும் ராமர் கிட்ட வருவர்
ஆர்ய:-பிறப்புலேயும் அவரோட நடத்தைலேயும் எல்லாத்துலயுமே ராமர் noble
ஸர்வஸமஶ்சைவ’ – எல்லார் கிட்டயும் சமமா இருப்பார்
ஸதை3கப்ரியத3ர்ஶந:’ – எப்பவும் பார்க்கறத்துக்கு ப்ரியமா இருப்பார்.

வாலி – ‘ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’‘ரஞ்சனீயஸ்ய விக்ரமை:’ ‘ராம கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோகர:’.

———

ஸ ச ஸர்வகு3ணோபேத: கௌஸல்யாநந்த3வர்த4ந: !
ஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்யே தை4ர்யேண ஹிமவானிவ ৷৷ 17 ৷৷

‘ஸ ச ஸர்வகு3ணோபேத:’ – எல்லா குணங்களையும் பொருந்திய அந்த ராமன்,
‘கௌஸல்யா நந்த3வர்த4ந:’ – கௌசல்யையுடைய ஆனந்தத்தை மேலும் மேலும் வளர்ப்பவன்.
‘ஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்ய’ – கம்பீரத்துல சமுத்திரம் போன்றவன்-சுகதுக்கத்துனால மாற்றம் அடையாம இருக்கறதுக்கு கம்பீரம்னு பேர்.
‘தை4ர்யேண ஹிமவானிவ’ – ஹிமவானைப் போல தைர்யம்!

—————-

விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே ஸோமவத்ப்ரிய த3ர்ஶந: |
காலாக்3நிஸத்3ருஶ: க்ரோதே4 க்ஷமயா ப்ருதி2வீஸம: ৷৷ 18 ৷৷

‘விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’ – வீரத்துல விஷ்ணுவைப் போன்றவர்.
‘ஸோமவத்ப்ரிய த3ர்ஶந:’ – பாக்கறதுக்கு சந்திரனைப் போல குளுமையானவன்!
‘காலாக்3நி ஸத்3ருஶ: க்ரோதே4‘-ஆனா கோபம் வந்தா காலாக்னிப் போல கோபம்!
‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’ – பொறுமையில பூமியைப் போன்றவன்-

————

த4நதே3ந ஸமஸ்த்யாகே3 ஸத்யே த4ர்ம இவாபர: |
தமேவம் குணஸம்பந்நம் ராமம் ஸத்யபராக்ரமம் ৷৷ 19 ৷৷

‘த4நதே3ந ஸமஸ்த்யாகே3 ‘ – த்யாகத்துல குபேரனைப் போல.
‘ஸத்யே த4ர்ம இவாபர:’ – ஸத்யத்ல அவன் தர்ம ராஜாவைப் போல இருக்கான்.
‘தம் ஏவம் குண ஸம்பந்ந:’ – இப்பேற்பட்ட எல்லா குணங்களும் நிரம்பினவனான தர்ம ஜ்யேஷ்டனான ராமனை,
‘ஸத்ய பராக்ரமம்’ –வீண் போகாத பராக்கிரமம் கொண்டவன்.

———–

ஜ்யேஷ்ட2ம் ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம் ப்ரியம் த3ஶரத2ஸ்ஸுதம் |
ப்ரக்ருதீநாம் ஹிதைர்யுக்தம் ப்ரக்ருதி ப்ரிய காம்யயா ৷৷ 20 ৷৷

‘ஜ்யேஷ்ட2ம்’ – மூத்த பிள்ளை
‘ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம்’ – எல்லா ஶ்ரேஷ்ட குணங்களும் நிரம்பின ,
‘ப்ரியம்’ – தனக்கு ரொம்ப ப்ரியமான,
‘ஸுதம்’ – பிள்ளையை,
‘த3ஶரத2:’ – தசரத மஹாராஜா ,
‘ப்ரக்ருதீநாம் ஹிதைர் யுக்தம்’ – ஜனங்களுடைய ஹிதத்தில் எப்பவும் நாட்டமாக இருப்பவனுமான அந்த ராமனை ,
‘ப்ரக்ருதி ப்ரிய காம்யயா’ – அந்த ஜனங்களும் இவன் ராஜா ஆகணும்னு ரொம்ப காத்துண்டு இருக்கா! அப்பேற்பட்ட ராமனை,

——————–

ஸ்ரீ ஸங்க்ஷேப ஸுந்தரகாண்டம்

ததோ ராவணநீதாயா: ஸீதாயா: சத்ரு கர்சன:
இயேஷ பதமன் வேஷ்டும் சாரணாசரிதே பதி –1.1 / 19

யதா ராகவ நிர்முக்த: சர: ச்வஸனவிக்ரம
கச்சேத்தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவணபாலிதாம் –1.39 / 20

ப்ரவிச்ய நகரீம் லங்காம் கபிராஜ ஹிதங்கர:
சக்ரே(அ)த பாதம் ஸவ்யஞ்ச சத்ரூணாம் ஸ து மூர்த்தனி – 4.3 / 21

ப்ரவிசந் நிஷ்பதம்ச்சாபி ப்ரபதந்நுத் பதந்நபி
ஸர்வமப்யவகாசம் ஸ விச்சார மஹாகபி: — 12.1 / 22

த்ருஷ்டமந்த: புரம் ஸர்வம் த்ருஷ்டா ராவண யோஷித:
ந ஸீதா த்ருச்யதே ஸாத்த்வீ வ்ருதா ஜாதோ மம ச்ரம: –12.6 / 23

அசோகவநிகா சேயம் த்ருச்யதே யா மஹாத்ருமா
இமாமகமிஷ்யாமி ந ஹீயம் விசிதா மயா — 13.55 / 24

அசோகவநிகாயாம் து தஸ்யாம் வானரபுங்கவ:
ததோ மலினஸம்வீதாம் ராக்ஷஸீபி: ஸமாவ்ருதாம் — 15.18 / 25

உபவாஸக்ருசாம் தீனாம் நி:ச்வஸந்தீம் புன: புன:
ததர்ச சுக்லபக்ஷாதௌ சந்த்ரரேகாமிவாமலாம் — 15.19 / 26

தாம் ஸமீக்ஷ்ய விசாலாக்ஷீ மதிகம் க்ருசாம்
தர்க்கயாமாஸ ஸீதேதி காரணை ருபபாதிபி: –15.26 / 27

அஸ்யா தேவ்யா மனஸ்தஸ்மிம் ஸ்தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்ட்டிதம்
தேநேயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி– 15.51 / 28

ஏவம் ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட: பவனஸம்பவ:
ஜகாம மனஸா ராமம் ப்ரசசம்ஸ ச தம் ப்ரபும் — 15.54 / 29

ராஜா தசரதோ நாம ரத்குஞ்ஜர வாஜிமான்
தஸ்ய புத்ர: ப்ரியோ ஜ்யேஷ்ட ஸ்தாராதிப நிபானன — 31.2-6 / 30

ராமோ நாம விசேஷஜ்ஞ: ச்ரேஷ்ட: ஸர்வ தனுஷ்மதாம்
தஸ்ய ஸத்யாபிஸந்தஸ்ய வ்ருத்தஸ்ய வசனாத் பிது:
ஸபார்ய: ஸஹ ச ப்ராத்ரா வீர: ப்ரவ்ராஜிதோ வனம் –31.6-8 / 31

ததஸ்த்வமர்ஷாபஹ்ருதா ஜானகீ ராவணேன து
ஸ மார்க்கமாணஸ் தாம் தேவீம் ராம: ஸீதா மநிந்திதாம்
ஆஸஸாத வனே மித்ரம் ஸுக்ரீவம் நாம வாரணம் — 31.10-11 / 32

ஸுக்ரீவேணாபி ஸந்திஷ்டா ஹரய: காமரூபிண:
திக்ஷு ஸர்வாஸு தாம் தேவீம் விசின்வந்தி ஸஹஸ்ரச:– 31.13 / 33

அஸ்யா ஹேதோர் விசாலாக்ஷ்யா: ஸாகரம் வேகவான் ப்லுத:
யதா ரூபாம் யதா வர்ணாம் யதா லக்ஷ்மீஞ்ச நிச்சிதாம்
அச்ரௌஷம் ராகவஸ்யாஹம் ஸேயமாஸாதிதா மயா — 31.14-15 / 34

ஜானகீ சாபி தச்ச்ருத்வா விஸ்மயம் பரமம் கதா –31.16
ஸா ததர்ச கபிம் தத்ர ப்ரச்ரயம் ப்ரியவாதினம் –32.2 / 35

தாமப்ரவீன் மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ: — 33.2
அஹம் ராமஸ்ய ஸந்தேசாத் தேவி தூதஸ்தவாகத: — 34.2 / 36

வைதேஹி குசலீ ராமஸ்த்வாம் ச கௌசலமப்ரவீத்
லக்ஷ்மணச்ச மஹாதேஜா பர்த்துஸ்தே(அ)னுசர: ப்ரிய: — 34.4 / 37

ஸா தபோ குசலம் தேவீ நிசம்ய நரஸிஹ்மயோ
ப்ரீதி ஸம்ருஷ்ட ஸர்வாங்கீ ஹனுமந்த மதாப்ரவீத் — 34.5 / 38

கல்யாணீ பத காதேயம் லௌகிகீ ப்ரதிபாதி மா
ஏதி ஜீவந்த மானந்தோ நரம் வைஷ சதாதபி — 34.6 / 39

பூய ஏவ மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ:
அப்ரவீத் ப்ரச்ரிதம் வாக்யம் ஸீதாப்ரத்யய காரணாத்
ராம நாமாங்கிதஞ்சேதம் பச்ய தேவ்யங்குலீயகம்
ப்ரத்ய யார்த்தம் தவாநீதம் தேந தத்தம் மஹாத்மனா — 36.1-3 / 40

க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர்த்து: கரவிபூஷணம்
பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜானகீ முதிதா (அ)பவத் –36.4 / 41

ததோ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம்
ப்ரதேயோ ராகவாயேதி ஸீதா ஹனுமதே ததௌ –38.6-7 / 42

ததஸ்து ஹனுமான் வீரோ பபஞ்ஜ ப்ரமதாவனம்
தாஸோ(அ)ஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண:
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
அர்த்தயித்வா புரீம் லங்கா மபிவாத்ய ச மைதிலீம்
ஸம்ருத்தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் — 43.9-11 / 43

வேஷ்டயந்தி ஸ்ம லாங்கூலம் ஜீர்ணை: கார்ப்பாஸகை: படை:
தைலேன சாபிஷிச்யாத தே(அ)க்னிம் தத்ராப்யபாதயத் — 53.7 / 44

தீப்யமானே ததஸ்தஸ்ய லாங்கூலாக்ரே ஹனூமத:
ராக்ஷஸ்யஸ்தா விரூபாக்ஷ்ய: சம்ஸுர் தேவ்யாஸ்ததப்ரியம் — 53.23 / 45

மங்கலாபிமுகீ தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே:
உபதஸ்தே விசாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம்
யத்யஸ்தி பதி சுச்ரூஷா யத்யஸ்தி சரிதம் தப:
யதி வாப்யேகபத்னீத்வம் சீதோ பவ ஹனூமத: — 53.26-27 / 46

ஹனூமதா வேகவதா வானரேண மஹாத்மனா
லங்காபுரம் ப்ரதக்தம் தத் ருத்ரேண த்ரிபுரம் யதா– 54.32 / 47

ஏவமாச்வாஸ்ய வைதேஹீம் ஹனுமான் மாருதாத்மஜ:
கமனாய மதிம் க்ருத்வா வைதேஹீமப்ப்யவாதயத்
தத: ஸ கபிசார்த்தூல: ஸ்வாமி ஸந்தர்சனோத்ஸுக:
ஆருரோஹ கிரிச்ரேஷ்ட மரிஷ்ட மரிமர்த்தன –56.25 / 48

நிபபாத மஹேந்த்ரஸ்ய சிகரே பாதபாகுலே –57.29
த்ருஷ்டா ஸீதேதி விக்ராந்த: ஸம்க்ஷேபேண ந்யவேதயத் — 57.35 / 49

ப்ரீதிமந்தஸ்ததஸ்ஸர்வே வாயு புத்ர புரஸ்ஸரா:
மஹேந்த்ராத்ரிம் பரித்யஜ்ய புப்லுவு: ப்லவகர்ஷபா: — 61.2 / 50

நிபேதுர் ஹரிராஜஸ்ய ஸமீபே ராகவஸ்ய ச — 64.38

ஹனுமாம்ச்ச மஹாபாஹு: ப்ரணம்ய சிரஸா தத:
நியதா மக்ஷதாம் தேவீம் ராகவாய ந்யவேதயத் — 64.39 / 51

தௌ ஜாதாச்வாஸௌ ராஜபுத்ரௌ விதித்வா தச்சாபிஜ்ஞானம் ராகவாய ப்ரதாய
தேவ்யா சாக்க்யாதம் ஸர்வ மேவானுபூர்வ்யாத் வாசா ஸம்பூர்ணம் வாயுபுத்ர: சசம்ச:–65.26 / 52

———-

ஸ்ரீ ராமபட்டாபிஷேகம்

வஸிஷ்டோ வாமதேவச்ச ஜாபாலிரத காச்யப:
காத்யாயனோ கௌதமச்ச ஸுயஜ்ஞோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்க்ரம் ப்ரஸன்னேன ஸுகந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராக்ஷம் வஸவோ வாஸவம் யதா –53

ஆயுஷ்ய மாரோக்யகரம் யசஸ்யம் ஸௌப்ராத்ருகம் புத்திகரம் சுபம் ச
ச்ரோதவ்ய மேதந்நியமேன ஸத்பிராக்க்யான மோஜஸ்கரம் ருத்திகாமை:54

பாராயண ஸமர்ப்பணம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ப்ய: பரிபாலயந்தாம் ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா:
கோப்ராஹ்மணேப்ப்ய: சுபமஸ்து நித்யம் லோகா: சமஸ்தா: ஸுகினோ பவந்து –55

ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: –56

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி –57

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ –58-

———–

ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ருணாதி என்பதைக் காட்டும்.
இங்கே ஹிம்ஸை என்ற சொல் போக்குதல் அல்லது அழித்தல் என்ற அர்த்தத்தில் வந்துள்ளது.
அதனால், ஶ்ருணாதி என்பது அழிக்கிறாள் – அதாவது எல்லா குற்றங்களையும் போக்குகிறாள் என்பதைக் காட்டுகிறது.
ஶ்ரூ-விஸ்தாரே என்பது மிகுதிப்படுத்துகிறாள் என்பதைச் சொல்லுகிறது.
இதிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ரூணாதி என்பதைக் காட்டும்.
ஶ்ரூணாதி என்பது விஸ்தரிக்கிறாள் – அதாவது நல்ல குணங்களை அதிகரிக்கச் செய்கிறாள் என்பதை காட்டுகிறது.

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஶ்ச தே ||

——–

மார்க்கா லதா கண்டக ஸம்பூர்ணா: – அதாவது,
காடென்பது செடிகளும் முட்களும் நிறைந்த பாதையைக் கொண்டது.
அங்கிருப்பது துக்கமுடைத்து (அத: வநம் துக்கம்), என்று சொல்லி அவளைத் தடை செய்யும் போது,
பிராட்டியின் வார்த்தை:
“ஓ! இராமனே! நான் வனத்தில் உன் முன்னே நடந்து செல்வேன் – தே கமிஷ்யாமி அக்ரத:.”
அது மட்டுமல்ல. அப்படிச் செல்லும் போது அந்தப் பாதைகளில் உள்ள புற்களையும் முட்களையும்
தலைமிதி யுண்ணும்படி செய்து (குஶ கண்டகாந் ம்ருதந்தி) உன் திருவடிகளுக்கு நான் வழி வகுப்பேன் என்றாள்.

அவள் சொன்ன பாதையும் சாதாரண காட்டு வழியன்று.
அவள் பாதையென்று கூறியது தர்மத்தின் வழி.
அதில் இராமனுக்கு அவள் என்றும் துணையாய் இருப்பாள் என்பதை ஸஹ தர்மசரீ தவ என்றானிறே ஜனகனும்.
இராமாயணத்தில் தொட்டவிடமெங்கும் எம்பெருமான் காட்டும் தர்மம் சரணாகதி தர்மம் என்று
ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆக பிராட்டி அவனுடன் காட்டுக்குச் சென்றது அந்தச் சரணாகதி தர்மத்தைக் காப்பாற்றவே.

அதைக் கொண்டு நோக்கும் போது, முன்னே சென்று அதைக் கடைப்பிடிப்பேன் என்றதையே
செய்திருக்கிறாள் என்பது தெளிபு.
தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள் என்றார் ஆழ்வார்.
சிறை இருந்தவள் என்றார் பிள்ளை உலகாரியனும்.
அதற்காக, இராமனுக்கும் முன்னாக இலங்கைக்குச் சென்றதையே அவள் உமக்கு முன் நான் நடப்பேன் என்றது.
அப்படி அவள் எம்பெருமானுடைய தர்ம மார்க்கத்தில் போகும் போது, இடையில் இருக்கும்
முள்ளும், புல்லும் அவன் திருவடிக்கு – அதாவது அவன் திருவடியில் செய்யும் சரணாகதிக்கு
தடையாம்படி இருக்கும் என்றும், அதை தலை மடியச் செய்வதே தன் கார்யம் என்றும் சொன்னாள்.

இங்கே புல்லும், முள்ளுமாய் இருப்பது என்று அவள் சொன்னது அந்த ராவணப் பயலையன்றோ.
ராவணன் இவ்வுலகிற்கு ஒரு முள்ளாய் இருந்தான் என்று வேண்டித் தேவர் இரக்கவும், அவனும் விரும்பிப் பிறந்ததுவும்.
அவன் புல்லாயும் இருக்கிறான் என்பதாலேயே பிராட்டி த்ருணம் அந்தரத: என்று அவனுக்கும் தனக்கும் இடையே ஒரு புல்லை இட்டுப் பேசியது.
த்ருணமந்தர: க்ருத்வா என்று அஜ்ஞனாயிருக்கிற உன்னை, த்ருணமிவ லகு மேநே என்று
இத்ருணத்தோ பாதியாக நினைத்திருப்பது என்று பொகட்டாளாகவுமாம் என்றார் பெரியவாச்சான் பிள்ளை.

இப்படி புல்லாயும், முள்ளாயும் இருக்கும் அவனையும் அவன் அஹங்காரத்தையும் தலை மடியச் செய்து
அவனை இராமனின் திருவடியில் சேர்ப்பித்து, அத்திருவடிகளுக்கு ஒரு நோவும் வாராதபடி,
அதாவது நிறம் பெறச் செய்வேன் என்று பிராட்டி எம்பெருமானுக்கு உரைத்தாள்.
அப்படியே சிறை இருந்தும், மித்ரம் ஔபயிகம் கர்த்தும் என்றும்
தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி என்றும் உபதேசித்தும் தலைக்கட்டினாள்.
ஆனால் அவன் திருந்தாதொழிந்தது அவனுடைய பாபப்ராசுர்யமிறே என்றார் பிள்ளை லோகாசார்யர்.

இப்படி இலங்கைக்கு முன்னே நடந்து சென்றது மட்டுமன்று.
பெருமாள் “நாம் அதிகரித்த கார்யத்துக்கு ஸஹகாரியாக வேணுமே” என்ன,
அதிலும் அநுஷ்டானத்திலும் முற்பாடை என்கிறான் (ஜனகன்) என்றார் பெரியவாச்சான் பிள்ளை.
அவனுடைய தர்மத்துக்கு அவள் ஸஹகரிக்கையாவது, சரணாகத ரக்ஷணத்வத்தில்
அவனைக் காட்டிலும் முன்னிற்பவளாய் இருப்பாள் என்றது.

மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந என்றவனைக் காட்டிலும்,
முன்னின்று
பாபாநாம் வா ஶுபாநாம் வா என்று சரணம் அடையாத ராக்ஷஸிகளையும் ரக்ஷித்தவள் பிராட்டி.
இதை ஸ்ரீகுணரத்நகோசத்தில், பட்டரும்
மாதர் மைதிலி என்ற ஶ்லோகத்தில் அபராதம் செய்த கை உலராமலிருந்த ராக்ஷஸிகளை ரக்ஷித்த
உன்னால் சரணம் என்று சொன்ன பின் ரக்ஷித்த ராம கோஶ்டி சிறிதாக்கப்பட்டது என்றார்.

இதுவே அவள் காட்டிலே எம்பெருமானுக்கு முன்னே நடந்த நடையும், நடந்து கொண்டமையுமாம்.

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading