திருக்குறள் வேத கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நூல்.
அவரது நூலைப் படிக்கும்போது, அவர் நிச்சயமாக வேத தர்மத்தைப் பின்பற்றியவர் என்பதை அறியலாம். வேதங்களின்படி மனித வாழ்வின் பக்குவநிலையானது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்காக எடுத்துரைக்கப்படுகிறது. அதனை அடிப்படையாக வைத்தே திருவள்ளுவர் தனது திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்றாகப் பிரித்துள்ளார். வீடுபேறு குறித்து திருக்குறளில் தனிப்பட்ட பகுதி இல்லை என்றாலும், அறத்துப்பாலில் இருக்கும் ஒரு பகுதி வீடுபேற்றினை எடுத்துரைக்கின்றது. எனவே, திருக்குறள் வேத நெறியான புருஷார்தத்தை (அறம், பொருள், இன்பம், வீடு) எடுத்துரைக்கும் நூல் என்பதில் ஐயமில்லை.
திருக்குறளில் கூறப்பட்டுள்ள மறுபிறவி, வீடுபேறு அடைதல் முதலிய தத்துவங்கள்
முதல் குறளானது ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகமான ஜன்மாத்யஸ்ய யத: என்பதைத் தழுவி இயற்றப்பட்டுள்ளது
ஒவ்வொரு குறளிற்கும், அதற்கு சமமான ஸ்லோகத்தினை மஹாபாரதம், உபநிஷதங்கள், மனு ஸ்மிருதி
ஆகியவற்றிலிருந்து எடுத்துரைத்து திருக்குறளிற்கும் அதற்குமுள்ள சிறந்த ஒற்றுமைகளை பறைசாற்றியுள்ளார்.
முதல் பகுதி (அறத்துப்பால்) ரிக் வேதம், இராமாயணம், மஹாபாரதம், பராசர சம்ஹிதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலிருந்தும்,
இரண்டாம் பகுதி (பொருட்பால்) கமந்தக நீதி, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், சுக்ர நீதி, போத்யாயன ஸ்மிருதி ஆகியவற்றிலிருந்தும்,
மூன்றாம் பகுதி (காமத்துப்பால்) காம சூத்திரத்திலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது.
திருவாய்மொழியையும் திருக்குறளையும் ஒப்பிட்டு பல நூல்களும் கட்டுரைகளும்கூட பலரால் வடிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் ஆழ்வார்களின் பாசுரங்களை உபயோகித்துள்ளார் என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
எப்படிப் பார்த்தாலும், திருக்குறள் வேத எண்ணங்களைத் தழுவியது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்”
ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:
தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் –
கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்.
இதில் ‘தேவர் குறள்’ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திருநான்மறை, ஏனையவைகளும்
‘ஒரு வாசகம்’ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.
திருநான்மறை – நான்கு வேதங்கள்; மூவர் தமிழ் – அப்பர், சம்பந்தர், சுந்தரர் இயற்றியவை;
முனிமொழி – அகத்தியர் அருளிய அகத்தியம்; திருமூலர் அருளிய திருமந்திரம்;
இவை அனைத்தும், சமூக நலன் கருத்துக்களை உணர்த்துவன.
அன்னமாய் அரு மறையை வெளிப்படுத்திய அம்மான் -வேதம் அருளியதே பறவை தானே
ஜான ஸ்ருதி -ப்ரஹ்ம ஞானம் கொடுப்பதும் பறவை
தைத்திரிய உபநிடதம் ,நான்கு வேதங்களுள் ஸ்ரீகிருஷ்ண யஜூர்வேதத்தில்
தைத்திரீய ஆரண்யகத்தின் 7,8 மற்றும் 9வது ப்ரபாடகமாக வருவதாகும்.
தித்திரீ என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் கௌதாரி பறவை எனப் பொருள்.
முனி யாஞவல்க்யரை அவரது குருவான ஸ்ரீ வைசம்பாயணர், படித்த வேதத்தையெல்லாம் திருப்பித்தரச் சொல்ல,
யாஞவல்க்யரும் செரித்த உணவாகத் திருப்பித்தருகையில்,மற்ற சீடர்கள் திருப்பித்தரப்பட்ட செரித்த உணவை,
வேதத்தை கௌதாரி பறவைகள் வடிவங்கொண்டு விழுங்கினர் என்பதாகச் சொல்லப்படுகிறது.
வேதங்களும், அறிவும் என்றும் அழியாதது என்பதை ஸூசகமாக அறிவிப்பதே இக்கதை.
முக்கிய அறிவுரையான உண்மையைப் பேசு, அறநெறியைப் பின்பற்று எனப் பொருள்படும்
ஸத்யம் வத,தர்மம் சர எனும் வாசகமும்,
தாயை ,தந்தையை, ஆசிர்யனை, விருந்தாளியை தெய்வமாகப் போற்று எனப் பொருளுடைய,
“மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ “ எனும் வாசகங்கள் இதில் தான் உள்ளது.
ஆசார்யர்கள் பலரும் வேதாந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்ல இவ்வுபநிடதத்திலிருந்து தான்
பல மேற்கோள்களை எடுத்து விளக்கியுள்ளனர்.
இரண்டாவது அத்தியாயமான பிரம்ஹானந்தவல்லியின் முதல் செய்யுளில் வரும்
“ஸத்யம் க்ஞானம் அனந்தம் பிரம்ஹா “ என்பதையே
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் மும்மணிக் கோவையில் நந்துதலில்லா நல்விளக்கு எனவும் ,
அந்தமில் அமுதம் எனவும் மொழிந்துள்ளார்.
இனி தைத்திரிய உபநிடதத்தின் அந்த இரு சொற்றொடர்களை முதலில் அறிவோம்
அஸந்நேவ ச பவதி ; அஸத் ப்ரம்ஹேதி வேத சேத்
அஸ்தி ப்ரம்ஹேதி சேத்வேத ; ஸந்தமேனம் ததோ விது:ருதி
பரமனை இல்லை என்று அறிபவன் தன்னையே இல்லை என்பவன் ஆகிறான்.
பரமனை உண்டு என்று அறிந்தவனை கற்றுணர்ந்தவன் என அறிஞர்கள் போற்றுகின்றனர்.
இதனை குறள் 850 வுடன் ஒப்பு நோக்குவோம்.
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
உலகத்தார் – அறிஞர்கள்
உண்டென்பது- உண்டு எனச் சொல்லியதை
இல்லென்பான்- இல்லை என மறுப்பவனை
வையத்து – (அவ்வறிஞர்களைப் பின்பற்றும்) வையத்து மக்கள்
அலகையா வைக்கப் படும்- (கண்ணால் காணாத) பேய்க்கு நிகராய் கருதப்படுவான்.
எவ்வாறு கண்ணால் காணாத பேயை, தீமை எனக் கருதி விலக்குகிறோமோ., அவ்வாறே
அறிஞர்களைப் பின்பற்றும் வையத்து மக்கள், அவ்வறிஞர்கள் ( பரமன் எனும் மெய்ப்பொருள் ) உண்டு
எனச் சொல்லியதை ஏற்காதவனையும் பேய் போன்ற தீமை எனக் கருதுவார்கள்.
உண்டு“ என்ற சொல் பரமனெனும் மெய்ப்பொருள் அல்லாது வேறு எதைக் குறிக்க முடியும்?
திருவள்ளுவர் “மெய்யுணர்தல் “ என்ற தனி அதிகாரம் முழுவதிலும் மெய்ப்பொருளையே எடுத்து விளக்கியுள்ளார்.
குறள் 357ல் “உள்ளது உணரின்“ எனக் கூறியது இதைக் காட்டும்.
உபநிடதங்களிலும் பரமனை விளக்கும் மூன்று அறிகுறிச் சொற்களான
“ஸத், சித்,ஆனந்த“ என்பதில் ஸத் என்பதற்கு உண்டு என்ற பொருள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
மெய்யுணர்தல் என்பதோ இருமை கடந்து, மெய்ப்பொருள் கண்ட நிலை அல்லது
மெய்ப்பொருள் உணர்ந்த நிலையைக் குறிக்கும்.
மெய்ப்பொருளின் தன்மை,மெய்யுணர்ந்தோரிடம் மட்டுமே புலனாகும்.
மருள் எனும் மாயையை நீக்கப் புலனாவது,புலன்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மெய்யான இப் பரம்பொருளே.
மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு,இருள்நீங்கி இன்பம் பயக்கும் என்றுரைத்த முறையே,
மாசறு காட்சியவர்களுள் ஒருவராகவன்றோ வள்ளுவனார் ஒளிர்கிறார்!!
”கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி” எனவுரைத்ததனால்,
வள்ளுவனாரும் மெய்ப்பொருள் கண்டார் ஆவார் அன்றோ!
—————-
பிற பெயர்கள்
உத்தரவேதம்
பொய்யாமொழி
வாயுரை வாழ்த்து
தெய்வநூல்
பொதுமறை
முப்பால்
தமிழ் மறை
ஈரடி நூல்
வான்மறை
உலகப் பொதுமறை
———
நூற் பிரிவுகள்
திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது.
முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது.
ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
அறத்துப்பால்
திருக்குறளின் அறத்துப்பாலில் “பாயிரவியல்” 4 அதிகாரங்களும்,
பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் “இல்லறவியல்”,
அடுத்து 13 அதிகாரங்கள் கொண்ட துறவறவியல்,
இறுதியில் “ஊழ்” என்னும் ஒரே அதிகாரம் கொண்ட “ஊழியல்”, என வகைபடுத்தப்பட்டுள்ளது.
திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் “ஊழியல்” மட்டுமே.
முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.
பொருட்பால்
அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன.
அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன.
அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும்,
ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக
மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.
இன்பத்துப்பால்
கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலில்” களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள்.
களவியலில் 7 அதிகாரங்களும்,
கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன.
ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 14000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.
பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள்
கடவுள் வாழ்த்து, அறம் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழுக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும்,
வான் சிறப்பு மட்டும் மக்களின் முழுக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது.
————-
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.” (திருக்குறள் – 423)
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.” (திருக்குறள் – 392)
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.” (திருக்குறள் – 788)
—
புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான்.
தருமர் மணக்கும் தாமத்தார் நச்சர்
பரிதி பரிமே லழகர்-மல்லர்
பரிப்பெருமாள் காலிங்கர், வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தா ரிவர்.—என்கிறது பழைய வெண்பா .
———
முதலாவது அதிகாரமான ”கடவுள் வாழ்த்து”
இந்த அதிகாரத்தில் போற்றப்பட்டிருப்பவன் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான்,
வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான்,
அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்பவைகளால் விபரிக்கப்பட்டுள்ளான்
———
சுவையான தகவல்கள்
திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812.
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133.
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380.
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700.
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250.
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330.
திருக்குறள், அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களைக் கொண்டது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000.
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194.
திருக்குறளில், தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி.
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள.
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்.
திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்.
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஓரெழுத்து-னி.
திருக்குறளில், ஒரு சொல், அதிக அளவில், அதே குறளில் வருவது “பற்று” – ஆறு முறை.
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங.
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
( அகர முதல என தொடங்கும் முதல் குறள், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது;
இதில் ஆதி பகவன் – என்பது கடவுளைக் குறிக்கிறது).
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்.
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்- ஜி.யு.போப்.
திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்.
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.
திருக்குறள், நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
——————
“எழுத்துமுதல இலக்கண வகையும்
வழுத்து வேதாகம வகையதன் பயனும்
தங்கிய குறட்பா தமிழ்மனுநூல்…”
(பெருந்தொகை – 1543 )
———-
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தின் முன்னுரையிலேயே பரிமேலழகர் சொல்வது:
அஃதாவது தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதல்.
(அதாவது அவரவர் வர்ணாஸ்ரம தர்மப்படி ஒழுகுவது)
ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின்,
பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்;
பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.
மறந்தவழி இழிகுலத்தனாம் ஆதலின் மறக்கலாகாது என்னும் கருத்தான், மறப்பினும் என்றார்.
சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.
பரிதியார் உரை:
பிராமணன் வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம்.
ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அநுபவிக்க வேண்டும்.
———–
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
பரிமேலழகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது – அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும்
அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது;
மன்னவன் கோல் – அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல்.
(வேதமானது) அரசர், வணிகர் என்னும் ஏனையோர்க்கும் உரித்தாயினும், தலைமை பற்றி, அந்தணர் நூல் என்றார்.
‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்’ (மணிமேகலை 22: 208,9) அன்றித் தம் காவலான் ஆகலின்,
ஈண்டு அறம் என்பது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் (சநாதன தர்மம் என்று படிக்க)
செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு ஆதி என்றும்,
அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிது இல்லை என்பார் நின்றது என்றும் கூறினார்.
————-
தமிழ் என்ற சொல்லையே ஓரிடத்திலும் பயன்படுத்தாமல் கவனமுடன் தவிர்த்திருக்கும் வள்ளுவர்
அதே நேரத்தில் குறள் நெடுகிலும் ஏராளமான வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
எகா:அமரர், அமிழ்து, அவி, ஆசாரம், ஆசை, ஆதி, இந்திரன், இலக்கம், கணம், கருமம், காமம், காமன், காரணம்,
காலம், சலம், சூது, சூதர், தண்டம், தவம், தானம், தூது, தேவர், நாகரிகம், நாமம், பகவன், பண்டம், பாக்கியம்,
பாகம், பாவம், பாவி, பூசனை, பூதம், மங்கலம், மந்திரி, மாயம், மனம், மானம், வரன், வாணிகம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதிலே பலவற்றிற்கும் இணையான தமிழ்ச்சொற்கள் இருந்தும் வலிந்து வடமொழியைப் பயன்படுத்தியிருப்பது
வள்ளுவரின் வடமொழிப்பற்றைத் தெள்ளென விளக்கும்.
————-
வள்ளுவர் குறளினூடே அடுக்கிப்போகும் ஆரியவழித் தெய்வங்களின் தொகுப்பு:
விஷ்ணுவும் ஸ்ரீதேவியும்: 84, 167, 179, 519, 617, 920, 1103
பூதேவி: 1040
ஸ்ரீதேவிக்கு மூத்தவள்: 167, 617, 936
இந்திரன்: 25, 899
பிரும்மா: 1062
மக்கள் உள்ளத்தே காமத்தை ஊட்டும் மன்மதன்: 1197
கூற்றுவன்: 269, 326, 765, 894, 1050, 1083, 1085
மேலும் லஜ்ஜா, தரா என்று வடமொழியார் பாணியில்
நாணெணும் நல்லாள் (924) என்பதும் நிலமெனும் நல்லாள் (1040) என்பதும் குறிப்பிடத்தக்கன.
———–
வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்
ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந் திதனின்இது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து– வண்ணக்கஞ் சாத்தனார்
——————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply