ஸ்ரீ திருமழிசைப்பிரான் தனிப்பாடல்கள் -ஸ்ரீ சிவ வாக்யர் பாடல்கள் —

சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் அச்சங்கரனார்
ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம் – பாக்கியத்தால்
செங்கட் கரியானை சேர்ந்துயாம் தீதிலோம்
எங்கட்கு அரியதொன்றும் இல்

கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா-துணிவுடைய
செந் நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந் நாகப் பாய்சூருட்டிக் கொள்

கணி கண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணி வண்ணா கிடக்க வேண்டும்-துணிவுடைய
செந் நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயும் உன்றன்
பைந் தாகப் பாய்படுத்துக் கொள்.

திருமழிசையாழ்வார், அவர்களுக்கு புத்தி புகட்ட எண்ணி, திருமகள் நாதனை நோக்கி,
“சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலே, இக் குறும்பை நீக்கி, என்னையும் உன் போல் ஓர் ஈஸ்வரனாக்க முடிந்தால்,
இவ்வேள்விச் சடங்கர் வாய் அடங்கிட என் உள்ளத்தினுள்ளே நீ கிடக்கும்வண்ணமே என் உடம்புக்கு வெளியேயும்
உன் உருவப் பொலிவை காட்டிவிடு” என்று வேண்டி பின்வரும் பாடலைப் பாடினார்:

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது தம்கொலோ?
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லயேல்
சக்கரம்கொள் கையனே, சடங்கர் வாயடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே!

இப்படிப் பாடியவுடனேயே, பாற்கடலில் பாம்பணையில் தன் திருவடிகளைத் திருமகளும் பூமகளும் வருடிட,
தான் பள்ளி கொண்ட காட்சியை அனைவரும் காணும் வண்ணம் திருமழிசையாரின் உடல் மீது காட்டியருளினார்.
அந்த அற்புதத்தைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். தங்கள் குற்றத்தை உணர்ந்து அவரைப் பணிந்தார்கள்.
பிறகு திருமழிசையார் அவர்களிடமும் பெரும்புலியூர் அடிகளிடமும் நன்மொழிகளைக் கூறி
விடைபெற்று திருக்குடந்தை புறப்பட்டுச் சென்றார்.

———-

அந்தி மாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே. -சிவ வாக்கியர்

கதாவு பஞ்ச பாதகங்களைத் துறந்த மந்திரம்
இதாம் இதாம் அதல்ல என்று வைத்துழலும் ஏழைகள்
சதா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் ராம ராம ராம என்னும் நாமமே.-சிவ வாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில் நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராம ராம ராம என்ற நாமமே!-சிவவாக்கியர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சு மூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராம ராம ராம வென்னும் நாமமே -சிவவாக்கியர்

ஒழியத்தான காசி மீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதி மேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராம விந்த நாமமே!!! -சிவவாக்கியர்

கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் எழும் எய்த ஸ்ரீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே!! -சிவ வாக்கியர்

நீடு பாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடு பேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராம ராம ராம என்னும் நாமமே !!! -சிவ வாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே! -சிவவாக்கியர்

ஒன்பதான வாசல் தான் ஒழியு நாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!-சிவ வாக்கியர்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading