ஸ்ரீ திருக்குருகூர் என்ற திருத்தலத்தில் ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்தார்.
அத்தலத்திற்கு அருகில் உள்ள-கூப்பிடு தூரம்-ஒரு நாள் கூவுதல் வருதல் பாசுர படி–
ஸ்ரீ திருக்கோளூரில் ஸ்ரீ மதுரகவியாழ்வார் தோன்றினார்.
சைவத்தில், வேளாளர் குலத்தில் தோன்றிய ஸ்ரீ திருநாவுக்கரசரை, வேதியர் குலத்தில் பிறந்த
ஸ்ரீ அப்பூதியடிகள் குருநாதராகக் கொண்டார்.
அது போல், வைணவத்தில், வேதியர் குலத்தவராகிய ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்,
வேளாளர் குலத்தில் தோன்றிய ஸ்ரீநம்மாழ்வாரை, குருநாதராகக் கொண்டார்.
ஸ்ரீ திருக்கோளூரில் வைத்தமாநிதிப் பெருமாள் என்ற பெயருடன் ஸ்ரீ திருமால் எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீ உடையவராகிய ஸ்ரீ இராமானுஜர் ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாளை, சேவிக்க ஸ்ரீ திருக்கோளூருக்கு எழுந்தருளினார்.
ஸ்ரீ இராமானுஜர் ஊருக்குள் நுழைந்த நேரத்தில், ஒரு பெண்மணி ஸ்ரீ திருக்கோளூரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்ட ஸ்ரீ இராமானுஜர், “தாயே! அடியேன் ஊருக்குள் வரும் பொழுது, தாங்கள் ஏன் வெளியேறுகிறீர்கள்?” என்றார்.
“சுவாமி! தங்களைப் புறக்கணிக்கும் நோக்கம் எதுவும் எனக்கில்லை” என்றாள் அப்பெண்மணி.
காலந்தோறும் தோன்றிய திருமாலடியார்கள் போல், தான் எதனையும் சாதித்து விடவில்லை என்றும்,
அவர்கள் செய்தவை மகத்தானவை என்றும் கூறினாள்.
அத்துடன், அவர்களுடைய செயற்கரிய செயல்களைப் பட்டியலிட்டுக் கூறினாள்.
ஸ்ரீ இராமாயணம், ஸ்ரீ மகாபாரதம், ஸ்ரீ பாகவதம், ஸ்ரீ ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும்
சான்றோர்கள் செய்த எண்பத்தோரு அருஞ்செயல்களைக் கவிதை வடிவில் கூறினாள்.
அத்தகைய சான்றோர்கள் செய்தது போன்ற செயல்கள் எதனையும் தான் செய்யவில்லையே என்ற ஏக்கத்தை
அக்கவிதை அடிகளில் வெளிப்படுத்தினாள். மிகச் சிறந்த திருத்தலமாகிய ஸ்ரீ திருக்கோளூரில்,
தான் தொடர்ந்து வசிக்கத் தகுதியற்றவள் என்று குறிப்பிட்ட அப்பெண்மணி,
அதனால்தான் அவ்வூரை விட்டு வெளியேறுவதாகக் கூறினாள்.
வயலில் கிடக்கும் முயல் புழுக்கையைப் போல், தான் ஸ்ரீ திருக்கோளூரில் பயனற்றவளாக இருப்பதாகக் கூறினாள்.
ஸ்ரீ இராமானுஜரும் ஸ்ரீ திருக்கோளூர்ச் சான்றோர்களும் அப்பெண்மணியின் ஞானத்தையும், பணிவையும் கண்டு வியந்தனர்.
அப்பெண்மணியை ஸ்ரீ இராமானுஜர் தன்னுடன் அழைத்துச் சென்று, ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாளைச் சேவிக்கச் செய்தார்.
அப்பெண்மணியின் இல்லத்திற்கும் இராமானுஜர் எழுந்தருளித் திருவமுது செய்தார்.
ஸ்ரீ கிடாம்பி ஆசான் கையால் அமுது செய்த ஸ்ரீ எம்பெருமானார் இவளது கை பட அமுது செய்தார்
ஒருவருக்கு ஒருவர் பேசி அனுபவிக்கணும்
எல்லாருக்கும் புகும் வூர் வுனக்கு புறப் படும் ஊர் ஆயிற்று-ஸ்ரீ எம்பெருமானார்
மோஷம் தரும் வார்த்தைகள்–81 வார்த்தைகள் பொறுமையாக கேட்டார்
அப் பெண்மணியை, ‘ஸ்ரீ திருக்கோளூர், பெண்பிள்ளை’ என்று குறிப்பிடுவர்.
அவள் இயற்றிய நூலை, ‘ஸ்ரீ திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்று போற்றுகின்றனர்.
திருமாலடியார்களின் செயற்கரிய செய்லகளை இரண்டிரண்டு அடிகளில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
அவற்றுள் இதிகாச புராண வரலாறுகள் அடங்கியுள்ளன.
————————-
1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே
பிருந்தாவனம் ஒரு வழி பாதை
அனுகூலரும் பிரதி கூலரும் புகுந்து திரும்ப மாட்டார்கள்
பாரிப்புடன் வந்தார் அக்ரூரர்
அர்ச்சிராதி கதி /திரு வேங்கட யாத்திரை /அகரூர்/
போவான் போகின்றாரை 0போவதற்கு என்று போவார் பயன் கருதி இல்லை-அவனது முக மலர்ச்சிக்கு என்று
——————-
2. அஹமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே
அகம் =வீடு /அகங்காரம்– அடியேனுடைய குடிசை என்று கூட சொல்ல வில்லை
சுவாமி திரு மாளிகை/ தேவரீர் திரு மாளிகை என்று சொன்னவன்
அடியேன் உடைய ஹிருதயமே -நெஞ்சமே நீள் நகரமாக கொண்ட தஞ்சன்-
அரவந்த. . அகம் படி வந்து புகுந்து விஷ்ணு சித்தன்
இளம் கோவில் கை விடேல் என்றும்
புல் என்று ஒழிந்தன கொல்
நீர் நுமது என்பவை வேர் முதல் விட வேணும்
——————–
3. தேஹத்தை விட்டேனோ ருஷி பத்நியைப் போலே
அமுது உண்ட சரித்ரம்- கண்ணன் கைங்கர்யமே பிரயோஜனம் என்று தெரியாத ரிஷிகள்-
வமான மூர்த்தியாக இரந்த சரித்ரம்–ரிஷி பத்னி
வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது— நெடு நோக்கு கொள்ளும்
பக்த விலோசனனுக்கு உய்த்திடுமின்-
போகும் போது ஒருத்தி தன்னை சமர்ப்பித்து – பாவ சுத்தி-
கேசவ சோமயாஜி யாஹ்த்தால் -கண்ணனே எம்பெருமானார் –
——————
4. தச முகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
சொல்லினால் சுடுவேன் -கம்பர் -சீதையின் கற்பு தான் ராவணனை செற்றது –
திடமாக அவன் காப்பான் என்ற எண்ணம் வேணும்–
நம சப்தத்தின் அர்த்தம்- எனக்கு நான் அல்லேன்- பர தந்த்ரராக இருக்கணும்- பழம் போல அவன் இட்ட வழக்கு
அசித் போல- கேள்வி கேட்க்க கூடாது- விலக்காமை தான் வேணும்-
உயர் பிறப்பு சாமை கற்பு மூன்றும் சேர்ந்த சீதை
சக்தி இருந்தாலும் சுவ சக்தி விட்டாள்–உன்னால் அல்லால் யாவராலும் பாசுரம்–
பிராட்டி யின் சக்தி விசேஷம் தெரியாத சூதரர் ராவணம் சிறை பிடித்தான் என்பர்
கிணற்றில் விழுந்து காத்தாள்-கருடனை சேர்த்து அவன் தூக்கி திரிவது போல–
———————-
5. பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
திரு அரங்க பதிகத்தில்-திரு மங்கை ஆழ்வார் -தொண்டைமான் சக்கரவர்த்தி கதை சொல்கிறார்
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே– கூர்மர் பிராமணர் காசி செல்ல ஆசை –
கிருஷ்ண சர்மா புதல்வர் ராஜா இடம் விட்டு விட்டு போக-பத்தினி பிள்ளைகள் -சேஷா சலம் போனார்கள் என்று சொல்ல
பிணத்தை எடுத்து கொண்டு வர சொல்ல -நம்பிக்கை- கண்ணார் வேங்கடம் வெர்ப்பே-
தனி மாதெய்வம்-பிணத்தை கூட எழுப்ப முடியும் என்கிற மகா விசுவாசம்
வேதம் உண்மையாய் இருக்குமானால் என்று சொல்ல அடி பட்டது–ஆல் என்ற சங்கை யால்
——————
6. பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
கண்டா கர்ணன் சிவ- பக்தன்-விஷ்ணு நாமம் கேட்காமல் இருக்க மண்ணி கட்டி கொண்டு இருந்தான்-
ஜனார்த்தனன் மோட்ஷம் தருவான்- ஜனங்களை ஹிம்சிகிறவன்-பிறப்பை அறுத்து- சமர்பிக்க
பிராமண பிணம் உபகாரமாக கொடுக்க-அதையும் அங்கீ கரித்து முக்தி தந்தான் –
பதினெட்டு நாடார் பெரும் வீடு ஆச்சார்ய ஹ்ருதயம் பட்சி – சராசரம் இதிலும் இவனை சேர்த்தார்
————-
7. தாய்க்கோலஞ் செய்தேனோ அநஸூயைப் போலே
அத்ரி முனிவர்-அனுசூயை-பொறாமை அற்று இருத்தல்
வாத்சல்யம் தீய குணத்தை நன்றாக கொள்வது–அசூயை குணத்தை குற்றமாக கொள்வது-
குற்றம் இன்றி குணத்தை பெருக வேணும்- அவளை பார்த்து ஒருவரும் பொறாமை பட முடியாது-
சிறந்த குண சாலி- ராமன் போக வழி கேட்டது முனிவர் இடம் தான்
முதல் ஸ்தானம் சித்ர கூடத்தில் இருந்து போனது இங்கே
அனுசூயைக்கு சீதை கல்யாணம் நடந்த விஷயம் கேட்க்க ஆசை-அலங்காரம் பண்ணி விட்டாள்-
காட்டில் கிடைத்த பொருள்களை கொண்டு-வேடர்கள் விற்கும் பொருள்களை இன்றும் அங்கு பார்க்கலாம்-
பத்து மாசம் குளிக்காமலும் இருக்கலாம்-கொடுத்த வஸ்து கெட்டு போகாது
தாய் போல –வைத்த மா நிதி/நடாதூர் அம்மாள் வாத்சல்ய வரதாசார்யர்-நீர் நமக்கு அம்மாவோ-
பெரிய ஆழ்வாரும் தாய் பாசுரங்கள் பல அருளி இருக்கிறார்.
———————
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
பரம புருஷன் மடி கிடைக்க தபம் இருந்தான்-துவாதாச மந்த்ரம் சொல்லி துருவ பதவி அடைந்தான்-
உலகத்துக்கு தந்தை அவன் -தேவ தேவோ ஹரி பிதா- பிதா நாராயண-6 மாதத்திலே அடைந்தான்-அகலில் அகலும்-
———————
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ர பந்துவைப் போலே
மொய்த்த வல்-திரு மாலை பாசுரம். . மூன்று வார்த்தை ஷத்ரியர்களில் தாழ்ந்தவன்
அர்த்தம் சொல்ல வில்லை–கோவிந்தா–மூன்றெழுத்து பேரால் பராம் கதி பெற்றான்
ஏன் வாயால் சொல்ல வில்லையே –புள் கவ்வ கிடகின்றோம் -உண்ணத் தகாத உடல் திரு நாமம் சொல்லா விடில்-
———————-
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
முதல் அடி-மிதிலா தேசம் நுழையும் முன் முதல் அடி அகல்யை -கௌதம முனிவர்
அம்மி மிதிக்க கனா கண்டேன்-கண்ணன் கை பட்டு போட்டிக்கு பெண்ண வருவாள் என்று வியாக்யானம்-
சாப விமோசனம்- சம்சாரத்தில் இருந்து விடு பட- முதல்வன் சர்வேஸ்வரன்
பாற் கடலில் பையத் துயின்ற பரமன் அடி-கடைசியிலும் அடி பாசுரம் பாடி- அடி விடாத சம்ப்ரதாயம்-
திரு அடிகளில் சரணா கதி–மாம் அஹம் சரணம் என்றான்
காலில் விழு என்று சொல்லும் அதம புருஷன் இல்லை-புருஷோத்தமன் -கை குலுக்கி போகாமல்- மித்ர பாவம்-
—————–
11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் விஞ்சி நிற்கும் 10 ஆழ்வார்களுக்கு ஒரே குழந்தை
ஆடிப் பூரம் -வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-வயசாகாமல் பழுத்து-
—————
12. எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே
பெண்ணை சொல்லி தந்தையை சொல்கிறாள் -வல்லப தேவ பாண்டியன்-வேதம் எடுத்து உரைத்து
பட்டார்-வித்வான் -பெருமான் இவன் என்று காட்டி கொடுத்தார்
பூ தொடுப்பதும் -கர்த்தாவும் அவன் தான் -கிரியைகள் யானே என்னும்-
——————-
13. ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே
அது போல இருக்க ஆசை வேண்டாம்–4700வருஷம் இருந்தவர்–விடுவது தான் முக்கியம்-
உள்ளி இரு பசை அறுத்து-விடுகை பற்றுதலுக்கு முதல் படி-உறையில் இடாதவர் திரு மழிசை பிரான் –
கடை தேற வழி பார்க்கணும் –
————————
14. நான் (அவன்) சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே
புவியும் இரு விசும்பும் நின் அகத்தே-யான் பெரியன் -நீ பெரியன் என்பதை யார் அறிவர் சித்தாந்தம் யான் பெரியன்-
பஞ்சாயுத ஆழ்வார்களும் ஆழ்வார் கோஷ்ட்டி கேட்டு ஆனந்த பட்டான்
பிரணய கலகத்தின் போது பெரியவர் சொல் படி பிராட்டி கேட்ப்பாள்
அவளே ஒத்து கொண்டு அருளிய வார்த்தை நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய்
இருப்பிடம் வேங்கடம் -ராமானுஜரை விட அமுதனார் பெரியவர் என்பதை போல-
நாமும் அவரை உள்ளத்தில் வைத்தால் நாமும் மிக பெரியவர் ஆவோம்-
மனசில் இருக்கிறான் என்று ஏற்றுக் கொள்ளணும்-
பிரகலாதன் நெஞ்சை பிடித்து கொண்டான் மலையில் இருந்து உருளும் பொழுது-
—————–
15. ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே
ராஜா கூட்டத்தார் உடன் இருக்க ஆசை -பாகவதராக இருக்க ஆசை-எளிமை உடன் இருக்க-
உடல் பிறவி வேண்டாம்-அணைய ஊர புணைய– ஆச்சார்ய ஹ்ருதயம்–
பகவத் சம்பந்தத்தில் வூற்று–தயிர் சாத கட்டில் எறும்பு கதை–நிச்சய புத்தி
—————-
16. யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே
பரிஷித் கற் கட்டை-திரௌபதி-ஹிமாசலம் பொடி ஆனாலும் கடல் வற்றினாலும்-தான் பேசுவது சத்யம் என்றான்
பச்சை பசும் பொய் -ஏலா பொய் பேசுபவன்-திரு வடி கட்டை விரலால் தீண்டி உயிர் பெற்று எழ வைத்தான்
ஆத்ம ராமன் -சரீர சம்பந்தம் இல்லை -ப்ரமசாரி உண்மை யாய் இருக்குமானால்-சத்யம் ஆனால் என்றவன்-
கிருஷ்ண அவதாரம் சுருக்க கேட்டு பத்தாவது அத்யாயத்தில் விரித்து சுகரை சொல்ல வைத்தான்-
சித்திர தேர் வலவன்-கண்ணன் பொய்யே சொல்லி சத்யம் ஆக்கினவன் -அவன் சத்ய சங்கல்பன்.
———————-
17. அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே
விராதன் முதலில் எதிர்த்தான் – விராத குண்டம் காட்டுக்குள் இருக்கு – புலியும் சிங்கமும் உண்டு –
அதற்க்கு அப்புறம் எதிர் பட்டவன் கபந்தன் – தலை இல்லாத உடல் – சாப விமோசனம் ஏற்பட்டதும் வழி சொல்லி –
பம்பா சரஸ் சுக்ரீவன தோழமை கொள்ள சொன்னான் – சீதையை தேட அடையாளம் சொன்னான்-
————
18. அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே
நல்ல எண்ணம் படைத்தவள் விபீஷணன் போல – ஜனஹன் போல
அரக்கன் மாயா சிரஸ் காட்டும் போதும் – மூன்றாம் முறை கனவு – ஆண்டாள் தானே கண்டாள்-
ச்வபனத்தில் லக்ஷ்மணன் ராமனை சந்தித்தானா என்று தெரிந்தால் போதும் –
அவன் இருந்தால் ராமனுக்கு உயிர் போல் – மீன் தண்ணீர் விட்டு உயிர் வாழாது போல –
ராவணனுக்கு தலை மொட்டை – யம பட்டர்கள் இழுத்து போவதையும் பட்டாபிஷேகதையும் கண் கொண்டு சொன்னாள்
வெட்க புன்னகை பூத்து நான் உங்களை ரஷிப்பேன் என்கிறாள் பிராட்டி –
அது போல நடந்தது சிறிய திருவடி கேட்டதும் பாபானாம் ச்லோஹம்- தாய் போல பரிவுடன் திரிசடை சொன்னாள் –
————————
19. அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே
இந்தரியங்களுக்க்கு தோற்றாய்– 8அடி உயரம் ராமன் – நான்கு ச்லோஹம் –
வ்யக்தம் மகா யோகி பரமாத்மா – தெரிந்து கொண்டாள் –
வசவு பாட வந்தவள் சேவித்த உடன் அவனே தெய்வம் என்று வெளி இட்டாள்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அறிவன் -திரு மங்கை கட்டுவிச்சி – மகா பூதம் அவன்
ஊரார் உமக்கு அறிய கூறுவேன் சிறிய திரு மடல்
————————
20. அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்ரரைப் போலே
அஹம் வேத்மி மகாத்மானாம் ராமம் சத்ய பராக்கிரமம் ச்லோஹம்
கல்யாணம் பண்ண பிரகஸ்பதி வந்தார் – என்ன வேணுமோ கொடுக்கிறேன்
தசரதன் வாக்கு- சந்தோஷத்தில் வாக்கு தராமல் யோசித்து சொல்லணும்
நடு நிலையில் யோசித்து செயல் படனும். ரிஷியை பார்த்ததும் சந்தோசம்
கரிய செம்மல் ஒருவனை தந்திடுதீ சாபம் இட்டு கொல்ல முடியாது தீஷை எடுத்து கொண்டு இருந்ததால்
ஆதலால் – உசர கருப்பு பிள்ளை – சிறுவர் நால்வரிலும் . . இடி இடித்தால் போல திகைத்து போனான்
வூன சோடச வருஷ -12 வயசு – சிறு பிள்ளை – நீ அறிய மாட்டாய் என்று தருவித்து கொள்ளனும்-
ஆசனத்தில் மேல் இருந்து கிரீடம் தரித்த முடியுடன் ராமனை பார்க்க ஆசை பட்ட உனக்கு
அர்த்தத்தில் உனக்கு ஆசை வில் பிடித்து இருகிறாய் புல் பிடித்து இருகிறேன் – கர்பத்தில் அனைத்தும் என்று தெரிந்து –
வசிச்டோபி –அவருக்கும் தெரியும் ஏற்று கொள்வார் . உண்டு என்றால் இல்லை என்று சொல்பவர்
இதை மட்டும் மாற்றி சொல்ல முடியாது -அபி -என்பதால் குறிக்கிறார் –
மனுஷ்ய தேஹதில் இருந்தாலும் மயங்க வில்லை
————————
21. தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியைப் போலே
திரு கோளூர் . சித்திரை சித்திரை அனந்த் ஆழ்வானுக்கும். அடியேன் மதுர கவி தாசன்
ஸ்ரீனிவாச தாசன் -தொட்டாச்சர்யர் சிஷ்யர் -ஸ்ரீ வைஷ்ணவ தாசன் பிரதி வாத பயங்கர சிஷ்யர்
நாதனுக்கு நால் ஆயிரம் சொன்னவரே தேவு – ஆச்சர்ய நிஷ்டை தெரியாது என்கிறாள்
ஆச்சார்யர் திருவடி பற்றனும்- தானே வைகுந்தம் தரும்- இது இல்லா விடில் மோஷம் கிட்டாது-
நேராக போனால் எப்போதாவது தான் கிட்டும்– அருள் பெறுவார் அடியார் தம் அடியவராக இருக்கணும்-
பகவத் சேஷ பூதர் ஜீவாத்மா – ஒரே ஜாதி- ஆத்மா எல்லாரும் சமம்- பரமாத்மா வேற ஜாதி- நமது கஷ்டம் தெரியாது-
எஜமானன்- தொழிலாளி வர்க்கம்- குருகூர் நம்பி — திரு குறுங்குடி நம்பி இல்லை என்பதால்-
வடுக நம்பி சத்ருக்னன் போல- பால் காய்ச்ச அரங்கன் எழுந்து அருள –
இரு கரையர் என்பர் ஆழ்வானையும் முதலி ஆண்டானையும்…அந்த நிஷ்டை இல்லை என்கிறாள் –
———————
22. தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியார் போலே
தெய்வம் இல்லை-மதுரகவி- இப்போ தேவகி பிறவாத எம்பெருமானை தன கர்பத்தில் வைத்தாளே-
மூன்று தடவை. பிரிச்னி சுடபா முதலில்-அதிதி-காச்யபர் வாமன மூர்த்தி -இப்போ தேவகி -வசுதேவர்
இருட்டுக்குள் விளக்கு போல -ஆயர் குலம் இருட்டு- இருட்டையும் போக்கினான் தம் பிறப்பால்
வேண்டி தேவர் இரங்கி பிறந்ததும்- தெய்வ தேவகி தனி சிறப்பு– பாவ சுத்தி இல்லை என்கிறாள் தனக்கு–
————————–
23. ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே
ஆழியை மறைத்து கொள் என்கிறார்–அற்புதம் பாலகம்-ஆயுதம் ஆபரணங்கள் உடன் கண்டார்
லோக குழந்தை போல் இருக்க சொன்னார்– பட்டர் ராமன் பக்கம் பஷ பாதம்- தந்தை சொல் கேட்டது பிறந்த குழந்தை
அதே இரவில் – ஒருத்தி மகன் இருவருக்கும்- மகன் என்றால் தகப்பன் சொல் கேட்பவன் தானே –
வளர்ப்பது -வளர்த்த இதத் தாய் ராமாநுஜர்0 தெய்வ நங்கை யசோதை பெற்றாளே0 பால் குடித்த இடம் இங்கே தான்
தேவகிக்கு மகன் சொல்லலாமா -பட்டர்- ஜீவதோ வாக்ய -புத்திரன்- சக்ர ஆயுதம் மறைக்க சொன்னார் கம்சனால் தொல்லை என்பதால்-
————————–
24. ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே
மூவரையும் சொன்னாள் இத்தால். . தாயினால் கடைசி என்கிறாள். . நந்தன் பெற்றான் வாசு தேவன் பெற்றிலன் . .
செம் விரலால் காட்டினான் . . நந்த-ஆனந்தன். . வாசுதேவன்-செல்வம் உடையவன். . இது இருந்தால் அது இருக்காது. .
நிதி எடுத்தால் போல் நந்தன் எடுத்தான் …. மிச்சம் எடுத்து சாப்பிட்டால். . அனைத்தையும் சிறை சாலையில் காட்டினான்.
தேவகிக்கும் பால் சுரக்க கண்ணனும் சாப்பிட்டான். . வைதிக காமம். . தெய்வ த்ருஷ்டியால் பார்க்கணும். .
ஒழித்து வளர்த்தது மிக ஆச்சர்யம். . பேர்த்து முலை கொடுத்தாள் அஞ்சாதே . . கொழு மோர் காய்ச்சி கொடுத்தாள். .
பராத் பரத்தை காக்க இது ! . . ஆனை முடி புலி நகம் ஆமை நகம் தாயத்து. . வடக்கே குபரன் . . தேவ தாந்த்ரம்
பசு மாட்டு வால் வீசி ரஷிக்க வைத்தாள்
—————————
25. அனுயாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே
அணில்கள் . தொடர்ந்து போனவை. . சலமிலா அணில்கள். . கட்டட கலை தெரிய வில்லை.
வேகமாக வேலை பண்ண தெரிய வில்லை. சாந்து பூசின. . குளித்து தாம் புரண்டிட்டு ஓடி. .
கல் வைகிறவர் சிற்றாள் . . பூசுபவர் கொத்தனார். . ஓடி வரும் வேகத்தில் மணல் உதிர்ந்தது. .
அந்த அணில் பாணின கைங்கர்யம் -ஓடி -அனு யாத்ரை. . நூறு யோசனை தூரம் போக முடிய வில்லை
———————-
26. அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே
இருவரும் சாந்தீபன் இடம் சிஷ்யர். . இருவரும் கைங்கர்யம். . நன்றாக இருக்க ஆசீர்வாதம் . .
சேவிக்கிற பாக்யதுக்கு வந்தார். . இரண்டு பிடி அவல். . மூடி கொண்டு. குசேல- கிழிந்த துணி . .
திருவடி வருடினான். . ருக்மிணியை விசிற சொன்னான். . உள்ள பரிசோதனை. . மறைத்தால் சுருக்கு பை இழுத்து. .
முஷ்டி சாப்பிட்டார். இரண்டாம் பிடி சாப்பிட்டால் நானும் அடிமை ஆவேன் கூடாது என்றால் ருக்மிணி தேவியார். .
பக்தி கேட்டால் செல்வம் கிட்டும். . நெல் குத்தினால் வேர்வை வருவது போல. .
வெண்ணெய் சாபிட்டது விட இது போக்கியம் கண்ணனுக்கு. .
சாம பேத தானம் தண்டம் செய்து தாயார் குழந்தைக்கு ஊட்டுவது போல அவன் ரஷிகிறான். .
—————
27. ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே
சரபங்க நதி. . ஆஸ்ரமம். . அகஸ்தியர் ஆஸ்ரமம். . ரம்யமான இடம். . ஜோதிஸ் வடிவுடன் போக . .
சுதீக்ஷ்ணர் ஆஸ்ரமம். . மண்டலம் பல . . பாத்து வருஷம் இருந்தான். . அகஸ்தியர் பிராதா . .
மாமான் மகள் இது போல. . உறவை சொல்லி பெயர். . திரு ஆபரணங்களையும் ஆயதங்களையும் கொடுத்தார்
——————
28. அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே
சஞ்சயன்-வேத வியாசர் அனுக்ரகதால் கீதை கேட்டார். . யுத்த பூமி நிகழ்வை கண் முன் கண்டார். .
அந்தரங்கமாக சொன்னதை கேட்டார். . நல்லது எடுத்து சொன்னார். . த்ருதராஷ்டனுக்கு வஞ்சனை தெரியாது
கிருஷ்ணனை தெரிந்து கொண்டேன். . கௌரவர் தூதனாக வர. .
இருவரும்-அர்ஜுனனும் கண்ணனும் – மனைவிகள் உடன் இருக்கும் போது-உள்ளே வந்தார். பொறாமை கிடையாது. .
பேச்சு சாமர்த்தியம். . நன்றாக சொல்வான். . அந்தரங்கத்தில் போய் பார்த்தவர். . இரண்டையும் சொல்கிறாள். .
———————-
29. கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே
கர்ம யோகத்தால் ஜனகரும் -ஜான யோகத்தால் ஜடபரதர்-பிரகலாதன் -பக்தி-யோகத்தால் சாஷாத் கரிதார்கள். .
யாகச வர்கர். . எரிவது போல காட்ட-இருந்த இடத்தில அசையாமல் இருந்தார். ஆத்மா நசிக்காது. .சொத்து அவன் இது. .
ரஷிப்பான். . கீதையில் மனுஷ்யர் பெயர் குறைவு. விவஸ்வான்-இஷ்வாகு பரம்பரை சொன்னார். .
மாமனாரை கொண்டாட காத்து இருந்து சொன்னான். .
————————-
30. கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையார் போலே
கடித்து -திரு மங்கை நான்கு பேர் உடன்…நீர் மேல் நடப்பான்-நிழலில் ஒதுங்குவான். தாள் ஊதுவான்/தோலா வழககன்.
பர காலன். . பரனுகே காலன் போல வந்து . . வாள் வழியால் மந்த்ரம் பெற்றார். .
மந்திர அரசு பெற்றார் அரச மரத்தின் அடியில். . நானும் சொன்னேன் நமரும் உரைமின் என்று உபதேசித்தார். .
பகல் கண்டேன் நாரணனை கண்டேன். .
——————–
31. குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே
ஆதி சேஷன் போல-சென்றால் குடையாம்-இருந்தால் சிங்கா சனமாம். . சர்வ தேச சர்வ கால கைங்கர்யம்
லக்ஷ்மணன்/பல ராமன்/ ராமானுஜர் போல. . குடை முதலானது. .
பட்டர். . குடம்-பாம்பு திரு அரங்கேசர் வெண் கொற்ற குடை இருக்கும். .
குடையும் ஆடும். ஆரியரும் தாளத்துடன் ஆடுவார். . முத்து குடை சுவர்ண கோடி பல. .
—————————-
32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே
முதுகில் ஆரோகணம் பண்ணி /தாச சக/வேதாத்மா /பெரிய திருவடி நாயனார்/ஆனந்தத்தால் சிறகு அடித்து கொண்டு இருக்கிறார். .
கழுத்து திரும்பி மேல் பக்கம் பார்த்து நியமனம் அடுத்து என்ன என்று கேட்பது போல. . ஏவி பண்ணி கொள்ள வேணும். .
யுத்தம் போது ராமன் லக்ஷ்மணனை தோள்களில் கொண்டார். .
ஒரு குரங்கின் மேல் கொண்டு காற்று நெருப்பு போல வந்தார்கள்-கம்பன்
————————
33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே
திரு குறுங்குடி/கைசிக ஏகாதசி/பாணர் குலம்/திரு பாண் ஆழ்வார் போல/
சத்யம் பண்ணி விட்டு பாடி பின்பு வந்தார்/சோம சர்மா சாபத்தால். . பாசுர பலன் கொடுத்து-பலத்துக்கு பாட வில்லை. .
கைசிக பண் பலன் கேட்க/ இலைப்பு-பசி தாகம் பிறப்பு போல்வன தீர்த்தான் /
வராக பெருமான் அபிமானத்தால் நம் பாடுவான் என்ற பெயர்
——————–
34. இடை கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே
ஒரு இரவில் நடந்தது ஒரு இடை . ஒருவர் படுக்கலாம். . நெரிசல் /
விளக்கு ஏற்ற/இடர் நீங்க/ஜான தமிழ்/திரு கண்டேன் /பகல் கண்டேன் நாரணனை கண்டேன். .
பக்தி இல்லை தனக்கு என்கிறாள். புலவர் நெருக்கு உகந்த பெருமான். . கண் வளரும். .
கரும்பு போல . . மூன்று சகரம். . கரும்பு ஆலை. . சக்கை கண்ணன். . கரும்பு ரசம் போல மூன்று திரு அந்தாதிகள். .
——————-
35. இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே
லவன் குசன் இரு மன்னர்கள்/தர்ப்பம் கீழ் பாகம் இலவம் பெயர்/ மேல் பாகம் குசம் . .
ரஷை இட்டார் இத்தால் /முதலில் பரதன் பார்க்க/32 நாள்களில் மிதிலை செல்வி உலகு உய்ய . தன சரிதை கேட்டான். .
———————-
36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப் பொடியார் போலே
இரு இரண்டு/பெருமை . . புஷ்ப மாலையும் திரு மாலையும் -இளைய புண் கவிதை என்று இவரே அருளுகிறார் –
ஆண்டாளும் பெரிய ஆழ்வாரும் இவரும் பூ மாலையும் பா மாலையும். -திரு மாலை அறியாதவர் திரு மாலை அறியார்
அர்ச்சையில் இவர் எழுப்புகிறார் -துளசி கொண்டே கைங்கர்யம். -தோஷம் வராத கைங்கர்யம்-மாலா காரர் போல்
தர்ம வர்மா திரு சுற்று-திரு மங்கை மதில் ரஷை அல்ல -பட்டர்-வீர சுந்தர பிரம ராயர் -கேட்க வில்லை
——————-
37. அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே
திரு கச்சி நம்பி-வைசிய குலத்தில் திரு அவதாரம். . திரு ஆல வட்டம் /தேவ பெருமாளுக்கு தேவை. .
அரங்கனுக்கு இரண்டு பக்கமும் காவேரி/ குளிர் அருவி வேங்கடம்/கச்சிக்கு வாய்த்தான் மண்டபம் –
உத்சவர் நித்ய படி எழுந்து இருப்பார் இங்கே /புஷ்ப/த்யாக போக மண்டபம். . அந்தரங்கர்கள் மூவரும்
பிராமணர் அல்லர் /குலம் முக்கியம் இல்லை/ஸ்ரீ வைகுண்டத்துக்கு சொத்து . . விதை இங்கு பலம் அங்கே. .
மண்ணை எடுத்து தலையில் ஒத்துக்க–பேசுவதால் /முக்தி எப்படி கேட்டு சொல்லும் /ஸ்ரீ பாத தூளியால் பதில்/
தனக்கும் –சரம கைங்கர்யத்துக்கு . . தேவரீர் எப்போ எழுந்து அருள போகிறீர்/நம்மை பற்றி இருக்கிறீர் தெரியாது என்ற பதில். .
பெரிய நம்பி மாட்டுகளை ஒட்டி -வேஷம் கண்டு . ஆளவந்தார் சிஷ்யர் இருவரும். . திரு முடி சம்பந்தத்தால் மோஷம். .
வீசினீர் பேசினோம். . நமட்டு சிரிப்புடன் /ஆறு வார்த்தை . . பாகவத வைபவம் . . அர்ச்சா சமாதி குலைத்து மூவர் உடன் –
திரு கச்சி நம்பி திரு விளக்கு பிச்சன் தொண்டைமான் சக்கரவர்த்தி -பிராமணர்கள் இல்லை பேசினார்கள். .
அஹமேவ பரம் தத்வம்–தானே பரன்–ஆதி ராஜ்ஜியம் . . உதய கிரி மேல் சூர்யன் உதிப்பது போல-
திரு அபிஷேகம் அவன் மேல் – தரிசனம் பேத ஏவச -உபாயம் பிரபத்தி-அந்திம ஸ்மிர்த்தி வர்ஜனம்-
சரீரத்திலே முக்தி-மரணமானால் வைகுந்தம் தரும் பெருமான்-பூர்ணா சாராரை சரணம் புகணும்
———————
38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணார் போலே
திருவடி தொடக்கம் அனுபவித்தார் . . நம் பாடுவான் போல பாணர் குலத்தில் அவதாரம். .
கண்ணனையே கண்டு உரைத்த காதல் பாசுரம்/முனி வாகனத்வம் இவருக்கு மட்டும் /அவன் மேனியுடன் கலந்தார் /
திரு பிரம்பு உண்டு முன்பு /கணை வாங்கி சேவை /விஷமி -கம்பியில் தடுப்பு /இக் கரை லீலா விபூதி/உள்ளே நித்ய விபூதி /
கொண்டல் வண்ணனை . . காணா என்று முடித்தார் –
——————-
39. அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே
அஹம் வேத்மி- முன்பு பார்த்தோம் . . வசிச்டோபி . . அவர் கூட என்றார்
அவர் கண் சாடை கண்டதும் தாம்பாளத்தில் வைத்து கடுத்தார் தசரதன்
எல்லாம் சீதா பிராட்டி திரு கல்யாணத்துக்கு
——————-
40. அடி வாங்கினேனோ கொங்கிற்பிராட்டியைப் போலே
அடி-திருவடி. . ராம பாதிகை போல ராமானுஜர் பாதுகை–சுமதி என்ற பெயர் இந்த பெண்ணுக்கு –
உஞ்ச விருத்தி வரும் பொழுது – ஏழு வீட்டில் பெற்று காவேரி ஜலத்தில் அலசி உப்பு காரம் போக்கி –
பின்பு கிடம்பி ஆச்சான் கைங்கர்யம் -மடப் பள்ளி மணம் இருக்கும் தேசிகன் தம் ஸ்ரீ சுக்தியில் -அந்தரங்க கிங்கரர் –
தயிர் உண்ட பொன் வயிறு -உலகம் உண்ட பெரும் வாயனுக்கு -அலங்கார தளிகை எப்போது தான் –
சுமதி மச்சில் வீட்டில் இருந்து பார்த்து சுவாமி இடம் நேராக மறித்து போய் கேட்டாள்-
வாழ்க்கைக்கு நல்லது சொல்வதாக நினைத்து சேவிகிறார்கள்-த்வயம் உபதேசம்-கொங்கு பிராட்டி நாமம்-
சொல்லிண்டு போகும் பொது மறந்து மீண்டும் கேட்டாள் -சுலபர் சுவாமி-மறக்காமல் இருக்க ஸ்ரீ பாதுகையும் தந்தார்-
திரு ஆராதன தெய்வம் அதை கொண்டாள்-வடுக நம்பி பெருமாள் பொட்டியும் பாதுகை பொட்டியும் சேர்த்து வைக்க-
மேல் வைத்து இருக்கணும்- நிஷ்டை -கூரத் ஆழ்வான்-வெள்ளை சாதத்துடன் ராமானுஜர் வர -சம்பந்தம் உண்டு
கருப்பு பார்த்து சிஷ்யர்கள் வர -திருவடி நிலை -சுவாமி திருவடி பார்த்து இதை பெற்றேன் என்றாள்-
வெள்ளை சாத்தி இருந்ததால் அடையாளம் தெரிய வில்லை-
—————-
41. மண் பூவை இட்டேனோ குரவ நம்பியைப் போலே
குருவ நம்பி /குறும்பு அறுத்த நம்பி /குயவன் -மண் புஷ்பம் சமர்பித்தான் /தொண்டை மன்னன் சமர்ப்பித்த ஸ்வர்ணம் கீழே /
இந்த மண் புஷ்பம் தலை மேல் /வெளி இட்டால் மோஷம் வேணும்/ அகங்காரம் கூடாது என்று பேசி வைத்து இருந்தான் /
புஷ்ப த்யாக போக -பணி பூ கையுமான அந்தரங்கரை /முடி மன்னவன் /ஆல வட்டமான கை திரு கச்சி நம்பி –
வைதிகோதமர்/வீணையும் கையும் – மகா முனி /முக் குறும்பு-தனம் படிப்பு குலம்/வஞ்ச முக் குறும்பாம் –
—————-
42. மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே
ஆதி மூலமே/ஆனையின் துயரம் தீர /திரி கூட மலை கீழ் பொற்றாமரை குளம்–
கூகு கந்தர்வன் -முதலை /நிலம் ஜலம்/கைமா -யானை/ஆயிரம் காலம் யுத்தம் /காரணமே கிடையாதவன் ஆதி மூலம் /
கூப்பிட உடன் போனது அகில காரண அத் புத்த காரண நிஷ் காரணம் /கஜம் -க அங்கெ ஜம் இங்கே /
வேகத்துக்கு வணக்கம் -பட்டார் /வாரணம் காரணம் நாரணம் /நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்/
வெள்கி நிரப்ப /மூல பேர் இட்டளித்த – கேட்டதும் -நீல மேகத்துடன் வந்தான் /
நின்று தன கழல் ஏத்த /சரீரம் ரஷிக்க இல்லை -புஷ்பத்தை சமர்ப்பிக்க /
தானே வந்து தன் திருவடியில் சேர்த்து கொண்டான் /ஆதரம்-
————–
43. பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே
மாலகாரர் முதலில் அடுத்து /கூனி/சுகந்த சந்தானம்-அழகிய முகம் கொண்டவளே என்று கேட்டதும் தன்னையே கொடுத்தாள் /
பூசும் சாந்தும் . . பாசுரமே புஷ்பம் போல /மடி தடவாத சோறு-விதுரர் போல/பிரத் உபகாரம் எதிர் பார்க்காத /
சுருள் நாறாத பூ / சுண்ணாம்பு கலவாத சந்தனம்-அகங்காரம் இல்லாத கைங்கர்யம் /நைக வக்ரா -ஒரு கூன் இல்லை பல கூன்
———————
44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே
திகைப்பு பெரியவர் வந்ததும் /வண்ணான் இடம் முதலில் வஸ்த்ரம் -கேட்டு தராமல் அபசாரம் பட்டான். .
ராமானுஜர் பெருமாள் திரு முகத்தில் புன் சிரிப்பு கண்டதும் – பாட்டனாரை ஷமிக்கணும் /கார் ஏர் கருணை இராமனுசன்-
——————-
45. வைத்து இடத்து இருந்தேனோ பரதனைப் போலே
ராமன் வைத்த இடத்தில் -அசித் பதார்த்தம் போல/கேள்வி கேட்க்காமல்/கட்டிலே வைத்தாலும் காட்டிலே வைத்தாலும் –
ராஜா போலவும் சேவகன் போலவும்/தர்ம உபதேசம் லக்ஷ்மணன்-சீதை பிராட்டி உடன்/வன வாசம் இருக்கும் என்று ஜாதகம்
மூட்டை தயார் ஒரு வயசிலே தெரியும். . கச்ச ராம மா சகா –முன் போகிறேன்-நீ பின் வரணுமா முடிவு பண்ணிக்கோ
பகு வசனம் ஆசீர்வாதம் கேட்க்கும் பொது மூன்று பெயர் இருக்கணும் பாம்பு செவி-
சீதை இடம் பரதனை தம்பி போலவும் சத்ருக்னனை பிள்ளை போலவும் என்று சொல்லி என் பெயரை சொல்ல வில்லை -லக்ஷ்மணன்
பாரதந்த்ரத்தில் இருந்தவன் பரதன்–தம்பிக்கு லக்ஷணம் சொல்லும் போது பரதனை சொன்னான்-
நந்தி கிராமத்திலே இருந்தான். . இள அரசு பட்டமும் வேண்டாம் என்றான் லக்ஷ்மணன்
பரதன் சரி என்று ஒத்து கொண்டு பட்டம் பெற்றான்
———————-
46. வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே
சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே . . கூட்டமே சென்று செய்யும் அனைத்து கைங்கர்யம்/
பிராப்யதுக்கு இளைய பெருமாள்/ஜடாயு/ பிள்ளை திரு நறையூர் அரையர்/ சிந்தயந்தி . .
அஹம் சர்வம் கரிஷ்யாமி/சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை கைங்கர்யம்/
பரண சாலை கட்டும் பொழுதும் தனி அறை கட்டி தகப்பன் போன்று இருந்தார் /நினைத்ததை செய்தான் /தண்ணீர் பந்தல் போல. .
——————–
47. அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே
உயர்ந்தது தேன் தேன் தாழ்ந்தது மீன். . ஏழை எதலன் . . திரு மங்கை ஆழ்வார். .
குகன் பிரிய மனம் இல்லை தேன் உள தினை மாவு உளது . . நாய் அடிமையோம் உளோம். .
பிரிவு உளது எனில் அன்றோ சுகம் உளது . . பரிசில் கட்டும் கைங்கர்யம் . . பத்தி உடை குகன் கடக்க . .
சுமந்த்ரன் இக் கரையில் காத்து இருக்கிறார். . ஆசையாக ராமன் கூப்பிடுவார் என்று . .
இக் கரை -சம்சாரம். அக் கரை மோஷம் பகவான் செலுத்த இருக்க . பகவானையே அக் கரைக்கு கொண்டு போனவன் . .
வைகுந்தன் என்பதோர் தோணி . . பெறாது உழல்கிறேன் . . சோதித்து ஏக குலம் ஆன பெருமை. .
—————-
48. அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே
பெரிய உடையார் ஜடாயு /கச்சா லோகம் அனுப்பி வைத்தார். . சந்திர காசம் வாளால்-சிவன் கொடுத்தது சிறகு அறுக்க பட்டார் . .
தாகேத்-ஏகாந்தமான இடம். . ஜடாயு தீர்த்தம் இருக்கு . . பெரிய தகப்பனார் சிறகு வின் கீழ் வசிக்க ஆசை பட்டார். .
ஆயுஷ்மான் என்று பல்லாண்டு பாடினார் . . தேவாதிக செயல் குட்டு வெளி பட்டது -ஆழ்வான். .
நால்வரில் முற் பட்டவன். . தர்ம புத்திரன் -விதுரன். . மூவரில் முற்பட்டவர் மரநேர் நம்பிக்கு . .
——————-
49. இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே
ராவண கால சோதிகா. . நால்வருடன் புறப்பட்டான். . ஆஜகாம முகூர்த்தம். நிவேதா. . சர்வ லோகைய சரணம். .
இக் கரைக்கு வந்தேனோ இல்லை/அக் கரைக்கு சென்றேனோ இல்லை/ ஆபாச சம்பந்தம் விட்டான்-சென்றான்.
ராமன் இருக்கிற இடம் -இக் கரை. . தள்ளி இருப்பது. . அக் கரை சம்சாரம்/வைகுண்டம் -இக் கரை. .
நெருக்கமான இடம் அவர் திரு உள்ளத்தில் . . திரு கோளூர் கிளம்பற இடம் ஆனது எனக்கு என்கிறாள்
——————
50. இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே
ஹம்பி பக்கம் . . கிஷ்கிந்தை . . பம்பா நதி கரை. . மதங்கர் . . வேடுவச்சி . . கண் பார்வை பட்டு மோஷம்.
நாவுக்கு இனிமையான பழம் எடுத்து வைத்தால். . வாங்கி சாப்பிடுகிறார். . ஆச்சர்யர் முகேனே கொடுத்தால் . .
சபரிக்கு ஆச்சார்யர் நியமனம் படி வைகுந்தம். . தானே வைகுந்தம் தரும். . கொடுத்து தான் ஆகணும். . சமயக் போஜனம்
——————
51. இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே
இந்தளத்தில்-குமிட்டியில் தாமரை பூத்தால் போல பிரகலாதன் . . எங்கும் உளன். . யார் தூண்டுகிறார் ?
உன்னை கேள்வி கேட்க்க தூண்டுபவன் சாஸ்தா நாராயணன் ஒருவனே . . இந்த தூணில் உளனோ ?
எங்கும் உளன் என்ற மகனை காய்ந்து . . ஓர் ஆயிரம் நாமம் சமம். . பிளந்திட்ட கைகள் சப்பாணி . .
இங்கு உண்டு இல்லை என்றாலும் மோஷம்
——————
52. இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே
இங்கு இல்லை என்றாலும் மோஷம் ததி பாண்டம். மோர் பானை வைத்து இருப்பவர் . . யசோதை கேட்க இல்லை என்றார். .
தட்டி திறந்து விட சொல்ல கூலியாக முக்தி கேட்டான். . தயிர் பானைக்கும் கேட்டு பெற்றான். .
இன்னும் மூலையில் அங்கு போய் பார்த்தல் இருக்கும். .
——————–
53. காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே
பித்ரு வாக்ய பரிபாலனம். என்னையும் என் வார்த்தையும் மெய்யாக கொண்டு. . சிற்றவை சொல் கேட்டு . .
ஸ்ரீ ராமன் தாலேலோ. இது மன்னவன் பணி நும் பணி மறுப்பனோ. . கூற்றுத்தாய். .
——————–
54. கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே
கண்டேன் சீதையை . . அனைத்து குரங்குகளும் சொன்னன . . ஆனந்தத்தால் –மது வனம். ததி முகன். . துவம்சம். .
உயிர் போல சுக்ரீவனுக்கு வாலை தூக்கி அடிக்க. . சீதை கிடைத்தாள் என்றான் சுக்ரீவன். எங்கள் ராமன் முதுகு பிழைத்தது . .
திருஷ்டா சீதா மயா. . பரிவு . . ஆரம்பித்தார் கண்டேன். . காண்கை முக்கியம் . . இது அவன் கை மோதிரமே
————————-
55. இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே
இரண்டு கையாலும் தூக்கி சரணம். புடவை சுரந்தது திரு நாமம் இறே . . நானும் நீயும் பாதி இல்லை. .
அவனே என்று இருக்கணும். . கடன் கொடுத்தவனுக்கு வட்டியும் முதலும் கொடுக்காதவன் போல வருந்தினான். .
கோவிந்தா என்றது . உத்தமன் வாக்கியம்
————————-
56. இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுக நம்பியைப் போலே
வடுக நம்பி ஆச்சார்யர் நிஷ்டை. சத்ருக்னன் மதுர கவி போல. .
அதரதுக்கு பொருந்தும் பால் என்று . . அடியார் அடியே கூடும் இது அல்லால் . .
—————-
57. இரு மிடறு பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப் போலே
செல்வ பிள்ளை எதிராஜ சம்பத் குமாரர். . ராம பிரியர் . . செல்ல பிள்ளை இங்கே போதராய் . .
மிடறு -கழுத்து. . தழுவி கொண்டு . . அணைத்து கொண்டார் . . கழுத்தை சிநேகத்தோடு பற்றினார். .
நவ ரத்னம் அதனால் தான் பிறந்தது . . நவ க்ரந்தம். .
பகவான் பண்ணின பாகவத கைங்கர்யம் தாம் பண்ண வில்லை என்கிறாள்
—————-
58. நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே
புறப்பாடு உத்சவம் விடாமல் சேவிப்பார் . . அவர் இருக்கும் இடத்துக்கு போய் சேவிக்கணும்.
வீதியார வருவானை. . பங்குனி சித்திரை வைகாசி மாதங்களில் நடக்கும் . .
கருவிலே திரு இலாதவர் கதவை மூடி கொண்டு எங்கோ செல்வார்கள். . சின்ன கைங்கர்யதுக்கும் மயங்குவான். .
ஒரு சமயம் இவர் நோவு சாத்தி கொண்டார். . ஆறாம் திரு நாள் காலையில் தூணை பிடித்து கொண்டு நிற்கிறார். .
இவர் நிற்கும் இடத்தில நம் பெருமாள் நிற்க-இதுவே கடைசியோ என்று சொல்ல சேவித்து கொண்டு இரும். .
ஸ்வ தேகத்தை விட்டு மோஷம் அடைந்தார். . நில்-என்று வார்த்தை பெற்றவர். .
——————
59. நெடுந்தூரம் போனேனோ நாத முனியைப் போலே
யோக பிரபாவம் உடையவர் நாத முனிகள். . நடுவில் நாத யாமுன முனிகள் குரு பரம்பரை. . அசமத் ஆச்சார்யர் வரை. .
கூரத் ஆள்வான் அபிப்ராயம் படி ராமானுஜர் . . சத்யா பாமா -சுருங்கி பாமா -ரெங்க நாத முனி -நாத முனி. .
பெற்று கொடுத்த தொட்டில் காட்டு மன்னார் கோவில். . நாலாயிரம் பெற்று கொடுத்தவர்….
ஈஸ்வர முனி திரு குமரர் . . அவர் திரு குமரர் ஆளவந்தார் . .
யோஹம்-த்யான மார்க்கம் . . உய்ய கொண்டார் பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ. .
சம்சாரிகள் தவிக்கும் போது யோக மார்கதால் தான் மட்டும் கல்யாணம் பண்ணிகவா ? நாம் தான் பிணம்.
குருகை காவலப்பன் கங்கை கொண்ட சோழ புரம். . வீர நாராயண பெருமாள் . . பிருந்தாவனம் வரை யோக மார்க்கத்தால் வந்தார். .
வில் பிடித்து வந்தார்கள் பெண் உடனும் வானரத்துடனும். . யோகத்தில் அனுபவித்து கொண்டு இருந்தார் ராமனை. .
போக்கு காட்டி போக்கி காட்டி அழைத்து போக . . தேடி கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டம் புக்கார். .
காள மேகம் . . ஆள் இட்டு அழைத்து போக வில்லை. நெடும் தூரம் . . அர்ச்சிராதி மார்க்கம் போனவர். .
——————-
60. அவன் போனான் என்றேனோ மாருதி யாண்டான் போலே
மாருதி சிறி ஆண்டான்-ராமானுஜர் சம காலம். குலோத்துங்க சோழன்-கிரிமி கண்ட சோழன். . பிள்ளை பரம பாகவதன்–
பேர் இட்டு சொல்ல படாதவன் அவன். . ராமாயணம் திரு வாய் மொழி இருக்கும் வரை வைஷ்ணவத்தை அழிக்க முடியாது. .
அவன் போனான்- என்றது அந்த கிரிமி கண்ட சோழன்– திரும்பி வரலாம் என்று ராமானுஜர் இடம் மேல் கோட்டை போய் சொன்னான் . .
ஆழ்வானும் கண்கள் வேணும். . வும்மையும் ஆச்சர்யரையும் தவிர வர யாரையும் பார்க்க கூடாது . .
திரு மால் இரும் சோலை பெருமாள் இடம் ஸ்ரீ ரெங்கம் ஆபத்து நீங்கி எம்பெருமானார் திரு வடி நிழலில் இருக்க கேட்டு பெற்றார் ஆழ்வானும். .
இப்போதே அனுக்ரஹிக்கிறோம் என்று சொல்ல நடந்த விஷயம். . மாறு ஓன்று இல்லா மாருதி ஆண்டான் . .
————————
61. அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே
அவன்-திரு அரங்கத்து எம்பெருமானையும் கண்ணை பிடுங்க வந்தவனையும் . . துரோணம் அஸ்தி. .
அபாகவதன் நாஸ்திகன் தொட கூடாது என்று தானே பிடிங்கி கொண்டார். .
ராமானுஜர் மேல் கோட்டையில் இருக்க அவர் சம்பந்திகளை கோவிலில் விட கூடாது. .
ஆழ்வான் வர இவர் சம்பந்தி தான் ஆத்ம குணம் உள்ளவர் சேவிக்க விடலாம். .
ஏன் ஆத்ம குணத்துக்கு சேவிக்க வேண்டாம் ஆச்சார்யர் சம்பந்தத்தால் தான் எது.
சேவை வேண்டாம் என்றார் சாமான்ய வைராக்கியம் இல்லை இது. . ஆச்சார்யர் நிஷ்டை. .
இரு கரையர் என்பார் வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் பார்த்து . .
ராமானுஜரும் அரங்கன் வேண்டாம் என்று ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போது சொன்னார்
———————
62. அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே
உம்மை போல என்று சொல்லாமல் . . எமக்கு பெருமான் என்று எம்பெருமானார் என்று சொல்கிறாள். .
மாதவனுக்கு கேசவனுக்கு இது பிடிக்கும் என்று தம்மையே சொல்வது போல. . பேதம் சித்தாந்தம் இல்லை. .
கானல் நீர் ஜகத். . சைவமும் பிரமமும் ஓன்று என்று வேதாந்தம் சொல்கிறது என்பர் அத்வைதிகள். .
தன் நெஞ்சில் தோத்தினது சொல்லி இது சுத்த உபதேசம் என்பர். . பாஷ்யம் மங்கள ஸ்லோகத்தில் –
நன்றாக பூர்வாச்சரயர்களால் –வியாசர்-சூத்ரம் /போதாயனர் -விருத்தி குறிப்பு உரை /விளக்க உரை பாஷ்யம் /மூன்றும் . .
சங்கர பாஷ்யம் இது சித்தாந்தம் இதை வேதாந்தில் எப்படி இருக்கு காட்டுகிறேன் என்று ஆரம்பித்தார். .
நீயந்தே –நான் இழுத்து கொண்டு வருகிறேன். . இதில் இருந்து வேறு பாடு தெரிந்து கொள்ளலாம். .
தங்கள் மதம் சாய் உற . . சங்கர பாஸ்கர யாதவர். . பிராபகர தங்கள்-உம மதம் சேர்த்து கண்டித்தார். . காஞ்சி ஸ்வாமிகள் . .
சங்கராதி கர்வக அடகினவர். . யாதவ பிரகாசரை தூக்கி அடித்தவர். . யது குலத்தை பிரகாசிக்க பண்ணினார் பார்த்த சாரதி பெருமாள் . .
தேசிக ஸ்லோகம் ச்லேடை. . அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரமும் சரீர சம்பந்தம். .
விட்டு பிரியாமல் சார்ந்து இருக்கும். . . அது போல சித்தும் அசித்தும் . . பிரமத்தை சார்ந்தே விட்டு பிரியாமல் இருக்கும். .
குணம் வேற குணி வர. . ஓன்று இல்லை. கோபம் பட்டு கொண்டே இருந்தாலும் நானும் கோபமும் ஓன்று இல்லை அது போல. .
பரம் திறம் அன்றி மற்று இல்லை -ஆழ்வார் . . சரீரம் பாவனையும் உண்டு. .
சரீரம் எனபது ஆத்மாவுக்கு எந்த த்ரவ்யம்-அவனால் தாங்க பட்டு நியமிக்க பட்டு அதற்கே சேஷமாக இருக்கும். .
அந்த ஆத்மாவும் பகவானுக்கு த்ரவ்யம் போல . . சரீரம் பிரகாரமாக இருக்கும். பிரகாரம் சரீரமாக இருக்க வேண்டியது இல்லை. .
யாதவ பிரகசரையும் யக்ஜா மூர்த்தி இருவரையும் வென்றார். . ஏக தண்டம் இவர். . கிரந்த சன்யாசம் . . பதினாறு நாள் விவாதம் . .
இரவில் தேவ பெருமான் உதவ வந்தார் சம்ப்ராயததை ரஷிக்க . குறிப்பு எடுத்து கொடுத்தார். . பார்த்ததும் பயந்து தெண்டம் சமர்பித்தார். .
சப்த வித அனுபபதி விளக்கி . . அவித்யை பொய்/இருட்டு சூரியனை மறைக்குமா ?. நீ அவித்யை யால் மூட பட்டு இருகிறாய். .
ஏக தண்டம் உடைத்து அருளாள பெருமாள் எம்பெருமானார் என்ற திரு நாமம் கொடுத்தார் . .
தன் திரு ஆராதன -அந்தரங்க -கைங்கர்யம் கொடுத்தார்
—————–
63. அருளாழி கண்டேனோ நல்லானைப் போலே
நல்லான் சக்கரவர்த்தி. . பிணம் ஓன்று ஆற்றில் இருக்க அதன் தோள்களில் திரு இலச்சினை பார்த்து -சம்ஸ்காரம் பண்ணினார். .
பொல்லான் என்று ஒதுக்க . . நமக்கு நல்லான் என்று அருளினார் எம்பெருமானார். . ஜன்ம நிரூபணம் பாகவத அபசாரம். .
அருள் ஆழம் -கண்டார். . ஆழ்ந்த நிலை -எச் சாதியில் பிறந்தாலும் மோஷம் தரும் அருள். . அந்த ஆழத்தை கண்டவர் நல்லான்
———————
64. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே
10-2-அரையர் தாளத்துடன்-கெடும் இடர் ஆயின எல்லாம் பதிகம் . . அனந்த புர நகர் புகுதும் . .
கடை தலை சீயக்க பெற்றால் கடு வினை களையலாமே . . ஆழ்வார் நம்மை விதிக்கிறார் என்று பிரயாணம். .
நமக்கு இட பட்ட பணி. . நாறு நறும் -ஆண்டாள் பாசுரம் கேட்டு அக்கார அடிசில் சமர்ப்பித்தது போல. .
விளாஞ்சோலை பிள்ளை நிறைய கைங்கர்யம் பண்ணி இருக்கிறார் அனந்த புரத்துக்கு
குருகை காவல் அப்பனை சேவிக்க போகும் பொழுது. . சொட்டை குலத்தில் உதித்தார் யாரேனும் வந்தார் உண்டோ ?. .
நாச்சியார் அணைக்கும் போதும் என்னையே அனுபவித்து கொண்டு இருக்கும் பொழுது இப்போ முதுகை அழுத்தி கொண்டு
எட்டி எட்டி பார்த்தான். . வைபவம்–நாதமுனியால். . தேதி குறித்து கொடுத்தார். . பெரியோரின் கருது அறிந்து வாழ்வதே சிறந்தது
—————-
65. ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வாரியாண்டான் போலே
தெய்வ வாரி ஆண்டான் மட கைங்கர்யம்–நோவு சாத்தி கொள்ள/ தாய் மாட்டை பிரிந்த கன்று குட்டி போல. .
இரு -பரதன் கேட்டான். . லக்ஷ்மணன் போல வந்தீரே–சேவிக்கும் பொழுது . . ஸ்வதந்த்ரன் ஆக்கினால் தான் –
எழுத்து இரு என்று சொலும் வரை சேவிக்க- அடியேன் திரு அனந்த புரம் எதிரில் இருக்கும் போது. . ஆரியன்-ஆளவந்தார். .
————————–
66. அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே
பெரிய கோவில் நம்பி-அமுதனார் . . மூங்கில் குடி. . ப்ரோகிதர் கைங்கர்யமும் இருந்தது . .
சாவி வாங்க -திரு தாயார் ஏகாகம் கைங்கர்யம்-பிரேதம் போல . . ஆண்டு முழுவதுக்கும் போதும் படி சம்பாவனை பண்ணனும். .
அப்போது சிந்தனை செய்து–கண் பார்வை ஆழ்வான் இடம் வர. . காதில் சொல்லி அனுப்பினார். .
திருப்தோசீ–சாவி பெற்றார். . நாச்சியார் எம் பரிகிரங்களை தொட கூடாது -சீதை கை விட மாட்டாள். .
பெரிய பிராட்டியார் மடியில் ஒதுங்கணும். . ஆழ்வானை காட்டி கொடுத்தார் . .
புகழ் பாடி -கிழித்து போட்டார். . ஆழ்வார்/ஆச்சார்யர்கள் வைபவம் சொலி அவர் திரு வடி சம்பந்தம் ராமானுஜர்–
தூக்கி போட முடியாத பிரபந்தம்…. சாத்விக அபிமானம். பிரபன்ன சாவித்திரி/காயத்ரி . . மூன்று சாத்துமுறை பாசுரங்கள்.
காட்டு அழகிய சிங்கர் சன்னதி. பிர பன்னனுக்கு . இன்றியமையாதது . .
நம் பெருமாளுக்கும் திரு வேங்கடதானுக்கும் இதை கேட்க ஆசை. . சப்த ஆவரண கோஷ்டி-இதை வீதி ஆற சேவிப்பார்கள். .
ஒலி ஒன்றும் இல்லை வாத்தியம் கிடையாது. . சந்தியில் நின்று வாத்தியம்– அப்போ சேவை கிடையாது. .
அனந்தாழ்வான் வரம் கேட்டு 21 நாள்கள் அத்யயன உத்சவம். . சுவாமி சந்நிதி ஏற்படுத்தி. .
தனித்து ஒரு நாள் 23 . . இயற்பா உடன் சேர்ந்து சாதிக்காமல் தனித்து -22 தண்ணீர் அமுது உத்சவம். .
—————-
67. அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே
மால்யவான் அபசாரம் படாதே –காலில் விழ வேண்டாம் கையை பிடி என்று தாயார். முன்பே சொன்னாள்.
நண்பன் இடித்து உரிக்கணும். . கொடியவனையும் திருத்தணும். . அநாதி கால உறவு பெருமாள் நமக்கு என்ற எண்ணம் வேணும். .
இதர தெய்வம் போல என்ன பண்ணுமோ என்ற பயம் . . தாய் போல. . நீளமான கயிறு கொடுப்பான். .
திருத்தும் பொழுது அவமானம் என்ற நினைவு கூடாது-
———————-
68. கள்வன் இவன் என்றேனோ லோக குருவைப் போலே
லோக குரு-சுக்ராச்சர்யாராய் சொல்கிறாள் . . ஆத்ம அபகாரம்-பெரிய கள்ள தனம். . குறள் மாணியாய். .
கொள்வன் நான் முதலில் . கொண்டாடாமல் . பழக்கம் இல்லை. . மாவலி-அடுத்து–சுருக்கி சொன்னான்.
மூவடி–அடுத்த சொல். . கமண்டல தண்ணீர் விடும் போது இவன் கள்வன் என்றார். .
பூச்சி வடிவம்– சுவாமி வரம் கொடுத்தாலும் சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன் அச்சோ அச்சோ. .
ஆச்சார்யர் வாக்கியம் மீறினது அவனுக்கு குற்றம். . லோக குரு-நம் ஆழ்வார்-கள்வா -என்று வெள்ளேறன் -சிவன் -கூப்பிடுகிறார். .
தாத்தா பேரன் இடம் பிள்ளை பேரு கேட்ப்பாரா ?
———————
69. கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே
மாறேநேர் நம்பி-தேவருக்கு பிரோடசம் நாய் கொள்ள கூடாது. . ராமன்/தர்ம புத்திரன் விட நான் உயர்ந்தவன் இல்லை. .
ஜடாயு/விதுரன் விட தாழ்ந்தவர் இவர் இல்லை. . கண் சோர . . நெடுமாற்கு அடிமை பயிலும் சுடர்ஒளி-கடல் ஓசையோ என்றார். .
திரு இலச்சினை பெற்றவர். . இருவருக்கும் பசி. . சேற்றை சாப்பிட மண் சுவருக்கு மண் இட்டேன். . என்றார். . நிஷ்டை
——————–
70. சுற்றி கடந்தேனோ திரு மாலை ஆண்டானை போல
——————–
71. சூளுறவு கொண்டேனோ கோட்டியூரைப் போலே
துரோணர் ஏகலைவன் –ராமானுஜர் ஆளவந்தார் …போல தேசிகன்-எம்பெருமானார் இடம். .
பெரிய நம்பி த்வய அர்த்தம் பெற்றார். . பாரா முகம் கொண்டு நம்பி சொன்னார் . . யாருக்கு என் சொல்கிறேன். .
பெரிய பெருமாள் சொல்லி உபதேசம் பண்ணினார். . கைங்கர்யம் பண்ணி தான் பேரனும் அன்று நியமனம் . .
பதி னெட்டு முறை . . சூழ் -ஒருவரும் வராமல் அந்தரங்கமாக பெற்றார். . திரு மந்தரம் சரம ச்லோஹம் பெற்றார். .
ராமாயணம் திரு மலை நம்பி இடமும் -திரு மாலை ஆண்டான் இடம் திரு வாய் மொழி சாரம் –
பெரிய அரையர் இடம் மற்றைய பிரபந்த சாரம்
—————-
72. உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே
வூமை . . உயிர் . . இன்றியமையாதது ராமானுஜர் திரு வடி பெற்றான் . .
தன் சரண் தந்திலன் தான் அது தந்து . . இதை பெற்றால் தான் மோஷம் . .
ஏதும் இல்லை ஊமை இடம் . . இல்லை எனக்கு எதிர் எம்பார் சாதித்தார் இதை பெற்றதால்
——————
73. உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே
தொட்டியம் திரு நாராயண பெருமாளை அணைத்து ரஷித்தார். . பற்றின பத்தினி பிள்ளைகளுக்கும் உடம் மோஷம் . .
ஆத்ம ஹத்தி தெரிந்து பண்ணினால் குற்றம். . அவனுக்கு பண்ணினதால் பாபம் இல்லை-
————————-
74. என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே
வசு நிஜ பெயர் ஆகாசத்தில் போவதால் இந்த பெயர். . தேவர் ரிஷிகளுக்கும் சண்டை . .
தேவர்களுக்கு பஷ பதாத்தால் பொய் சொல்ல நரகம் போய் அங்கு –
என்னை போல அபாகவதர்களையும் மாற்றி விடுவேன் என்றான்
——————-
75. யான் சிறியேன் என்றேனோ திருமலை நம்பியைப் போலே
பூர்ண கும்பம் கொடுத்து இவர் வர வேற்க -என்னை விட சிறியவர் இல்லை. .
தாத -அப்பா என்கிறான் வேங்கடத்தானே இவரை
————————-
76. நீரில் குதித்தேனோ கண புரத்தாளைப் போலே
ராமானுஜர் காலத்தில் முன் உள்ளவர். . திரு வெள்ளறை போய. . நீர் நூறு வயசு புகுவீர் . . ஆச்சர்ய நிஷ்டியால். .
மணல் திட்டாக தேவரீர் இருந்து ரட்ஷிதீர் என்கிறாள். .
இது போல நஞ்சீயர் சிஷ்யை ஒருத்தி பின்பு சொன்னாள் என்ற இதிகமும் உண்டு
—————-
77. நீரோருகம் கொண்டேனோ காசி சிங்கனைப் போலே
காசி தேசத்தில் -சிங்கம் ஒருவன் இருந்தான். . அகங்காரத்தில் குதித்து சிக்கி கொண்டான். .
கஜேந்திரனுக்கு உதவினால் போல வந்து ரஷிக்க காற்று தூக்கி . .
ஊகம்-யுக்தி நீர் ஊகம்-தாமரை பறித்தான் சமர்பிக்க . யானை போல . .
ஆபத்தில் சிக்கும் பொழுதாவது அவனை நிக்க வேணும்
—————–
78. வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே
ஸர்வஞ்ஞ பட்டர் -சின்ன குழந்தை பட்டர். . காவேரி மணல் கை எடுத்து எவ் வளவு. .
பிடி மணல் சொல்ல தெரிய வில்லை. . திருஷ்டி சுத்தி போட்டார்கள். .
மாத வச்சர்யர்-தந்தி யாக -யானை போல செருக்குடன்-ஜெயித்து . திரு நெடும் தாண்டக சாஸ்திரம் தெரியும் சொல்லி அனுப்ப-
இலை முன் நின்று இருக்க தர்க்க பிச்சை வேணுமோ கேட்க
நீர் தான் திரு நெடும் தாண்டக சாஸ்திர வல்லீரோ என்று சொல்லி சன்யாசி ஆச்ரமதுடன் நஞ்சீயர் ஆனார்
—————
79. வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே
ஒரு வருஷம் ராமாயணம் கேட்டார். . கோவிந்த பெருமாள் -எம்பார் பத சாயை . .
பாம்பு வாயில் முள் இருக்க கை விட்டு எடுத்து தீர்த்தம் ஆடி விட்டு வந்தார். .
பல்லில் விஷம் இருப்பது பாம்பின் செயல் இல்லை. திருஷ்டிதது அவன் தானே -ரஷிக்க பண்ணினேன். .
80. தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே
ஸ்ரீ பாதம் தாங்குபவர்கள் . . ஒருவன் பஞ்ச சம்ஸ்காரம் பண்ண வில்லை. .
அந்தரங்கன் ஒருவன் இடம் இடம் சொல்ல யம தூதர் பயம். .
திமில் கண்ட இடம் சக்கரம் சங்கு பதில் என்று சொல்ல சொன்னார் கைங்கர்ய பல நாள் மோஷம் பெற்றான்
——————–
81. துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே
வில்லி புதூர் பகவர் இருந்தார். . திரு வகீந்த்ர புரத்தில்–வரண தர்மம் –தாச விருத்திகள் –வேற இடம் குளிக்க. .
துறை வேறு . . சரீர தர்மம் ஆத்ம தர்மம் என்ற இரண்டு துறை காட்டினவர்
இவற்றில் ஒன்றுமே இல்லை தனக்கு . . அவள் கையால் அமுது செய்து. தீர்த்தம் பிரசாதம் அவளுக்கு அருளினார் . .
ஒருவரின் ஒரு அம்சம் கூட இல்லை . . உத்சவம் குறை இன்றி நடக்கும் நீர் புகுந்தால். .
திரு வாய் மொழி பிள்ளை அருளிச் செய்ததாக வான மா மலை ஜீயர் அருளி செய்தார்
————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply