ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–ஸ்லோகங்கள்-1-50-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -தத்வார்த்த சிந்தாமணி —

ஸ்ரீ பராசர பட்டர் திருக் கோஷ்ட்டியூரில் இருந்து ஸ்ரீ ரெங்கம் திரும்பி வரும் போது திருக் காவேரி தொடக்கமாக
ஸ்ரீ ரெங்கத்தை வருணித்த படி எழுந்து அருளினார்
பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள்
உத்தர சதகம் -105-ஸ்லோகங்கள்

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே-

பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய பூர்வ வாக்ய விவரணம்
உத்தர சதகம் –105-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய உத்தர வாக்ய விவரணம் –

———-

பூர்வ சதகத்தாலே -பூர்வ கண்டார்த்தத்தை -பூர்வாச்சார்ய பரம்பரா அநு சந்தான பூர்வகமாக
அனுசந்தித்து அருளினார் கீழே –
மேல் உத்தர சதகத்தாலே உத்தர கண்டார்த்தமான ப்ராப்யத்தை அனுசந்திக்கைக்காக
அது சர்வ ஸ்மாத் பரனுக்கே உள்ளது ஓன்று ஆகையால் அத்தை பரக்க வ்யவஸ்தாபிக்கக் கோலி-

ஸ்ரீ த்வய உத்தர கண்ட -ப்ராப்யத்வம் -ஸ்ரீமந் நாராயணனே சர்வ சேஷி என்று நிரூபித்து
அது பிரமாணம் அதீனம் ஆகையால் அத்தை ஸ்ரீ பெரிய பெருமாள் நிர்ஹேதுக கிருபையால்
ஸ்வரூப நிரூபக திருக் கல்யாண குணங்களையும்
நிரூபித்த ஸ்வரூப விசேஷண திருக் கல்யாண குணங்களையும்
அவதார சேஷ்டிதங்களையும்
அனுபவித்து இனியராகிறார் –

——–

பெரு விளைக்கைப் போலே பிரகாசிக்க
அத்தாலே பாக்யாதிகர் சத் அசத் விபாகம் பண்ணி அனுபவிக்க –
அது இல்லாதார் விட்டில்கள் போலே விருத்த பிரதிபத்தி பண்ணி நசிக்கிறார்கள்
என்கிறார் முதல் அடியில்

காருணிகனான பெரிய பெருமாள் அஞ்ஞானம் இருளைப் போக்கவும்
த்யாஜ்ய உபாதேயங்களை விவேகிக்கவும்
சாஸ்திரமான விளைக்கை அளித்தான் –
புண்யம் செய்தவர்கள் அந்த விளக்கை கொண்டு அவனை அறிந்து கொள்ள
விவேகம் அற்றவர்கள் வீட்டில் பூச்சி போலே அந்த விளக்கில் மடிகின்றனர் —
முரணாக அர்த்தம் செய்து வீண் வாதம் செய்கிறார்

ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–1-

காருணிகா-தயாளுவான
ஈச மாநம்-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள்

ஹர்த்தும் தமஸ்-அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்

சத் அஸதீ விவேக்தும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்

ப்ரதீபம் இவ ததாதி-பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் –

தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே–பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து
ததீய பர்யந்தமாக அனுபவிக்கின்றார்கள்

தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி-சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில்
வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் –

காருணிகா ஈச-பேர் அருளாளனான எம் பெருமான் -கிருபா விஸிஷ்ட ஸ்வ தந்த்ரன் –
கிருபாவாளனாகிலும் ஸ்வ தந்த்ரன் இல்லாத அன்று நினைத்தபடி கார்யம் செய்யப் போகாது –
கேவலம் ஸ்வ தந்த்ரனாக இருந்தாலும்-சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாக இருப்பதால்
சேதன உஜ்ஜீவன அர்த்தமான கிருஷிக்கு உறுப்பாக்காதே –
ஆனபின்பு
கிருபையும்
ஸ்வ தந்த்ரமுமான வேஷமே கிருஷிக்கு ஹேதுவாகும் –

அன்றிக்கே
ஈசன் -என்று ஸ்வாமியைச் சொல்லி பிராப்தம் -நம்முடையவன் என்று அபிமானதுடன் கூடி
பர துக்க அஸஹிஷ்ணுத்வ கிருபையும் சேர்ந்தே கிருஷிக்கு ஹேதுவாகும் –

ஹர்த்தும் தமஸ் -அஞ்ஞானம் ஆகிற இருளை நீக்கிக் கொள்ளவும்

சத் அஸதீ விவேக்தும் ச -உள்ளது இல்லது என்னும்படியான நன்மை தீமைகளை ஆராய்ந்து உணர்வதற்கும்

மாநம் ப்ரதீபம் இவ ததாதி-திரு விளக்கு போன்ற ஸாஸ்த்ர பிரமாணத்தை கொடுத்து அருளுகின்றார் –

மாநம் -பிரமாணம் -வேதம் என்றபடி –

மறையாய் விரிந்த விளக்கு -துளக்கமில் விளக்கு -அகாரம் வாசக வாஸ்ய சம்பந்தத்தால் எம்பெருமானைச் சொல்லும்
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பகமும் சொல் பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவருக்கும்
பிறருக்கும் நீர்மையினால் அருள் செய்து அருளினான்

தேந அவ லோக்ய க்ருதிநஸ் -பாக்கியசாலிகள் அந்த திரு விளக்கைக் கொண்டு அந்த எம்பெருமானை கண்டு அறிந்து
நாத யமுனா யதிவராதிகள்

பரி புஞ்ஜதே -அனுபவிக்கப் பெறுகிறார்கள்

தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–கருவிலே திருவில்லாத சில அவிவிகேகிகளோ என்றால்
அந்தத் திரு விளக்கில் வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து சாகிறார்கள் –

காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்––ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-சூர்ணிகை 1-

நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் என்னால்
அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவன் என்னால் செயல் பாலது என் -பெரிய திருவந்தாதி -3- என்கிறபடியே
சத் அசத் விவேகம் பண்ணுகைக்கு சத் அசதீச விவேக்தும்-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர -1- -என்றார் இறே
நல்லதும் தீயதும் விவேக்கிகைக்கு -என்கிற இது ஸாமான்யேன விலஷண அவிலஷண விவேகத்தை காட்டுமே ஆகிலும்
இவ் இடத்தில் பகவத் விஷயம் நன்று சம்சாரம் தீது என்று விவேகிக்கையைக் காட்டக் கடவது-

நந்தா வேத விளக்கை கண்டு நல்லதும் தீயதும் விவேக்கிகைக்கு -என்கையாலும்
விவேக பலமான த்யாக ஸ்வீகார விஷயங்கள் சம்சார மோஷங்கள் ஆகவே மேல் சொல்லுகையாலும் ..
(விவேக பலம் வீடு பற்று மேலே வரும் )
பகவத் விஷயத்தை கண்ட பின்பு சத் அசத் விவேகம் பண்ணுகை யாவது என் என்னில் ?
பிரதி கோடி கண்டால் ஒழிய அதின் தோஷம் – யதாவாக -ஹேயதாக தோன்றாமை யாலும்
இத்தை பற்ற இது நன்று இது தீது என்னும் போது உபய கோடியும் கண்டு கொள்ள வேண்டுகையாலும் சொல்லிற்று –

—————–

வேத பாஹ்யர்–ஜைனாதிகள் குத்ருஷ்டிகள் –கபிலாதிகள்–துர்வாதங்கள் –
உன்னை அடையும் மார்க்கத்துக்கு தடைகள் என்று மனு ஸ்ம்ருதி சொல்லுமே-

யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய அர்ஹத் ஆதே வேதேஷு யா காச்ச குத்ருஷ்டய தா
ஆகஸ் க்ருதாம் ரங்க நிதே த்வத் அத்வனி அந்தம் கரண்ய ஸ்ம்ருதவான் மநு தத் –2-

ஹே ரங்க நிதே–வாரீர் திருவரங்கச் செல்வனாரே –

அர்ஹத் ஆதே வேத பாஹ்யா-ஜைனாதிகளுடைய வேதங்களுக்கு புறம்பான

யா ஸ்ம்ருதவான்– யாவை சில ஸ்ம்ருதிகள் இருக்கின்றனவே

வேதேஷு-வேதங்களுக்கு உள்ளே

யா காச்ச குத்ருஷ்டய தா ஸ்ம்ருதய-குத்ஸிதமான த்ருஷ்ட்டியை உடைய யாவை சில ஸ்ம்ருதிகள் இருக்கின்றனவோ

ஆகஸ் க்ருதாம்–பாபிகளான அந்த வேத பாஹ்யர் வேத குத்ருஷ்டிகளினுடைய

தா -அப்படிப்பட்ட ஸ்ம்ருதிகள் எல்லாம்

த்வத் அத்வனி–தன்னைப் பெறும் வழியாகிய வைதிக மார்க்கத்தில்

அந்தம் கரண்ய–மோகத்தை விளைவிப்பவனாம்

மநு தத் ஸ்ம்ருதவாந்-என்னும் விஷயத்தை மனு மஹரிஷியானவர் தம்முடைய ஸ்ம்ருதியில் சொல்லி வைத்தார் –
மனு மகரிஷி யாது ஓன்று சொன்னாரோ அதுவே பேஷஜம் -மருந்து

யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய அர்ஹத் -ஜைனாதிகளுடைய யாவை சில

ஆதே வேதேஷு -வேத விருத்தங்களான

யா காச்ச குத்ருஷ்டய தா-வேதங்களுக்கும் யவை விபரீத போதகங்களான

ஆகஸ் க்ருதாம் ரங்க நிதே த்வத் அத்வனி–அந்த ஸ்ம்ருதிகள் அபராதிகளுக்கு தேவரீருடைய வழி
விஷயத்தில் தெரியாமையைப் பண்ண சாதனங்கள் ஆகின்றன

அந்தம் கரண்ய ஸ்ம்ருதவான் மநு தத் –-அந்த அர்த்தத்தை மனு ஸ்ம்ருதியில் காணலாம்

—————–

மேலே எட்டு ஸ்லோகங்களால் இவை அங்கயேதங்கள் என்று அருளிச் செய்கிறார்
பாஹ்யர்கள் பிரத்யக்ஷமானவற்றையே இல்லை என்பர் –
துர்வாதிகள் -வேதத்துக்கு புறம்பான கருத்தை துர்வாதத்தால் சாதிப்பார் –
வைதிகர்கள் இவர்களை புறக்கணிப்பர்-

ப்ரத்யக்ஷ ப்ரமதன பஸ்யதோ ஹரத்வாத் நிர்த்தோஷ ஸ்ருதி விமதேச்ச பாஹ்ய வர்த்ம
துஸ்தர்க்க ப்ரபவதயா ச வக்த்ரு தோஷ ஸ்ப்ருஷ்ட்யாச ப்ரஜஹதி ரங்க விந்த வ்ருத்தா –3-

ஹே ரங்க விந்த -கோயிலிலே நித்ய வாசம் செய்து அருளும் பெருமானே

வ்ருத்தா-வைதிக வ்ருத்தர்கள்

பாஹ்ய வர்த்ம-வேத பாஹ்யரின் வழியை

ப்ரஜஹதி-விட்டு ஒழிகின்றனர்

ஏன் என்றால்
ப்ரத்யக்ஷ ப்ரமதன -கண்ணால் கண்ட விஷயத்தை இல்லை செய்வதாகிற

பஸ்யதோ ஹரத்வாத் -ப்ரத்யக்ஷ ஸுவ்ர்யத்தாலும்
முன்பு எந்த வஸ்துவை நான் அனுபவித்தேனோ அதுவே இது என்கிற ப்ரத்யாபிஞ்ஞான ரூபமான ப்ரத்யக்ஷ
பிரமாணத்தை இல்லை செய்தார்கள் என்பது உணரத் தக்கது

நிர்த்தோஷ ஸ்ருதி விமதேச்ச -குற்றம் அற்ற பிரமாணங்களை மாறு பட்டு இருப்பதாலும்

துஸ் தர்க்க ப்ரபவதயா ச–குதர்க்க சித்தமாகையாலும் –
தர்க்கம் -நியாயம் -நியாயங்களைக் கொண்டே அர்த்த சிஷை பண்ணுவது –

வக்த்ரு தோஷ ஸ்ப்ருஷ்ட்யாச–வக்தாக்களின் பிரமாதம் முதலிய தோஷ சம்பந்தத்தாலும்

பிரமம் -இரண்டு வகை -ஒன்றை மற்று ஒன்றாகவும் -விபரீத ஞானம் —
ஒன்றில் உள்ள குணங்களை மாறாடி நினைக்கையும் -அன்யதா ஞானம்

பிரமாதம் -பிசகிப் போகை –கவனக் குறைவு

விப்ரலிப்ஸை -பிறரை வஞ்சிப்பதே நோக்கம்

இப்படிப்பட்ட தோஷங்கள் நிரம்பி இருக்கும் பாஹ்ய நூல்கள் வைதீகர்களால் வெறுக்கப் படுமே –

ரங்க விந்த வ்ருத்தா –ஞான விருத்தங்கள்

ப்ரத்யக்ஷ ப்ரமதன பஸ்யதோ ஹரத்வாத் -வேத பாஹ்யனுடைய மார்க்கத்தை பிரத்யக்ஷ சித்தத்தை இல்லை
செய்கையாலே வந்த ப்ரத்யக்ஷ ஸுவ்ர்யத்தாலும்

நிர்த்தோஷ ஸ்ருதி விமதேச்ச பாஹ்ய வர்த்ம-துஸ்தர்க்க ப்ரபவதயா-பவ்ருஷேயத்வாதி தோஷ ரஹிதமான
ஸ்ருதி விரோதத்தாலும் குதர்க்க சித்தம் ஆகையாலும்

ச வக்த்ரு தோஷ ஸ்ப்ருஷ்ட்யாச –வக்த்தாக்களுடைய ப்ரமாதி தோஷ சம்பந்தத்தாலும்

ப்ரஜஹதி -நன்றாக த்யஜிக்கிறார்கள் –

————————-

உடல் -இது -காட்டும் படி -அவயவங்களுடன் உள்ளது –
ஜீவாத்மா -அஹம் சப்தம் -இந்த்ரியங்களால் அறிய முடியாதே
அவிவேகிகள்–சாருவாகர் போல்வார் தேகமே ஆத்மா என்பர் –
சாஸ்திரம் மூலமே உண்மையை அறியலாம்-

அவயவிதயா இதம் குர்வாணை பஹி கரணை வபு நிரவயவக அஹங்கார அர்ஹ புமாந் கரண அதிக
ஸ்புரதி ஹி ஜனா ப்ரத்யாசத்தே இமவ் ந விவிஞ்சதே தத் அதிகுருதாம் சாஸ்திரம் ரெங்கேச தே பரலோகினி -4-

ஹே ரெங்கேச

வபு -தேகமானது

அவயவிதயா -அவயவங்களுடன் கூடியதாகையாலே

இதம் குர்வாணை -இதம் என்று விஷயீ கரிக்கின்ற

பஹி கரணை –பாஹ்ய இந்த்ரியங்களால்

ஸ்புரதி–ஜீவாத்மாவுக்கு ஆதேயமாயும் பிரகாரமாயும் நியாம்யமாயும் தார்யமாய் தோற்றுகின்றது

நிரவயவக புமாந் -அவயவம் அற்ற ஜீவாத்மாவானவன்

கரண அதிக-பாஹ்ய இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாதவனாய்க் கொண்டு

அஹங்கார அர்ஹ -அஹம் என்கிற ப்ரதீதிக்கு அர்ஹனாய்

ஸ்புரதி-விளங்குகிறான்

இமவ்-இந்த தேஹத்தையும் ஆத்மாவையும்

ப்ரத்யாசத்தே -பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி இருக்கை யாகிற சேர்க்கையின் உறுதியினால்

ஜனா–அவிவிவேகிகளான ஜனங்கள்
சார்வாகன் போல்வார் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருப்பார் போல்வார் –

ந விவிஞ்சதே–பகுத்து அறிவது இல்லை –

தத் தே சாஸ்திரம்–ஆகையினால் தேவருடைய ஆஜ்ஞா ரூபமான வேத சாஸ்திரமானது –

பரலோகினி -தேகம் போலே இந்த லோகத்தோடு உரு மாய்ந்து போவது அன்றிக்கே பர லோக பிராப்தி
யோக்யனான ஜீவாத்மாவின் இடத்தில்

அதிகுருதாம் -பிரமாணம் ஆயிடுக –

ஆத்ம ஸத்பாவம் இல்லை என்றால் ஸ்வர்க்காதி லோகங்களின் பிராப்தியும் அதற்கு சாதனங்களாக சொல்லும்
ஸ்ருதி வாக்யங்களுக்கும் அர்த்தம் இல்லாமல் போகுமே -பாதித அர்த்தங்களாகவே ஒழியுமே –

அவயவிதயா இதம் குர்வாணை பஹி கரணை வபு–தேகமானது ச அவயவம் ஆகையால் இதம் என்று
விஷயீ கரியா நிற்கிற பாஹ்ய இந்த்ரியங்களாலே ஆதேயமாயும் பிரகாரமாயும் விளங்குகிறது

நிரவயவக அஹங்கார அர்ஹ புமாந் கரண அதிக ஸ்புரதி ஹி -நிரவயவனான ஆத்மாவானவன்
பாஹ்ய கரணங்களுக்கு அ விஷயனாய்க் கொண்டு அஹம் என்று வியவகார அர்ஹனாய் விளங்குகின்றான்

ஜனா ப்ரத்யாசத்தே இமவ் ந விவிஞ்சதே -தேக ஆத்மாக்களை பிண்ட அக்னிகளுக்கு உண்டான
சம்சரக்க விசேஷத்தால் அவிவிவேகிகள் வேறாக அறிகின்றிலர் –

தத் அதிகுருதாம் சாஸ்திரம் ரெங்கேச தே பரலோகினி -ஆகையால் தேவரீருடைய ஸ்ருதி
பரலோக யோக்யனான ஆத்மாவின் இடத்தில் அதிகரிக்கலாம் –

———

வேதங்கள் காதுகளுக்கு பிரத்யக்ஷம் –
அர்த்தங்கள் அந்தக்கரணம் –
சித்தம் புத்தி மனம் அஹங்காரம் -இவற்றுக்கு ப்ரத்யக்ஷம்
வேதங்களால் கூறப்படும் தர்மம் அதர்மம் ஈஸ்வரன் தேவதைகள் -இவை ப்ரத்யக்ஷத்தால் பாதிப்பு அடைவது இல்லை
சாருவாகனுக்கும் ஸ்ருதிகளே ப்ரத்யக்ஷ பிரமாணம்
யோகத்தால் தெளிந்த புத்தி கொண்டு வேதார்த்தங்களை அறியலாம்-

ப்ரத்யஷா ஸ்ருதி அர்த்த தீ ச ந ததா தோஷாஸ் தத் அர்த்த புந
தர்ம அதர்ம பர அவர ஈஸ்வர முகா ப்ரத்யக்ஷ பாத்ய ந ச
தத் சார்வாக மதே அபி ரங்க ரமண ப்ரத்யக்ஷ வத் சா ப்ரமா
யோக உந்மிலீ ததீ தத் அர்த்தம் அதவா ப்ரத்யக்ஷம் ஈஷேத ச –5-

ப்ரத்யஷா ஸ்ருதி அர்த்த தீ ச-வேதமானது செவிக்கு ப்ரத்யக்ஷமாயும் அந்த வேதங்களின் அர்த்த ஞானமும்
அந்தக் கரணத்துக்கு ப்ரத்யக்ஷமாயும் இரா நின்றன –
கண்ணைப் போலவே காதும் இந்திரியம் அன்றோ –

ந ததா தோஷாஸ் -மனிதரால் செய்யப்படுவதால் வந்த தோஷமும் -பிரமம் விப்ரலம்பம் -பிரமாதம் –
போன்றவை -இல்லாதவை வேதங்கள்

தத் அர்த்த புந–தர்ம அதர்ம பர அவர ஈஸ்வர முகா –அந்த வேதத்தின் பொருளான -தர்மங்கள் என்ன
அதர்மங்கள் என்ன -சர்வேஸ்வரேஸ்வரன் என்ன -அவர ஈஸ்வரர்கள்-ப்ரஹ்மாதிகள் என்ன இவை முதனாவையும்

ப்ரத்யக்ஷ பாத்ய ந ச-ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கப் படுவது இல்லை

ஹே ரங்க ரமண

தத் சார்வாக மதே அபி -ஆகையினால் சாருவாக மதத்திலும்

ப்ரத்யக்ஷ வத் சா ப்ரமா–ப்ரத்யக்ஷ பிரமாணத்தோடே ஒப்ப பிரமாணம் ஆகும்

அதவா–அன்றிக்கே
ச -அந்த சாருவாகன்

யோக உந்மிலீ ததீ சந் -யோகத்தினால் விகசித்த புத்தி உடையவனாய்க் கொண்டு -அகக் கண் மலரப் பெற்றால்

தத் அர்த்தம்–கீழ்ச் சொன்ன அந்த வேதார்த்தங்களை

ப்ரத்யக்ஷம் ஈஷேத –ப்ரத்யக்ஷமாகவே காணக் கடவன் –

ப்ரத்யஷா ஸ்ருதி அர்த்த தீ ச ந ததா தோஷா தத் அர்த்த புந-வேதமானது ப்ரத்யக்ஷம் -அதனுடைய அர்த்த ஞானமும்

ப்ரத்யக்ஷ என்ற அநு ஷங்கம் -ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கப் படாதவை –

தர்ம அதர்ம பர அவா ஈஸ்வர முகா ப்ரத்யக்ஷ பாத்ய ந ச-அவ்வாறு வேத அர்த்தமான தர்மமும் அதர்மம் என்ன
பரமேஸ்வரன் என்ன அவர ஈஸ்வரனான ப்ரஹ்மாதிகள் என்ன இது முதலானதும் ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கப் படாதவை –

தத் சார்வாக மதே அபி ரங்க ரமண ப்ரத்யக்ஷ வத் சா ப்ரமா–ஆகையால் சாருவாக மதத்திலும் அந்த சுருதியானது
ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தோடே சத்ருசமான பிரமாணம்

யோக உந்மிலீ ததீ தத் அர்த்தம் அதவா ப்ரத்யக்ஷம் ஈஷேத ச –அன்றிக்கே ப்ரத்யக்ஷமே பிரமாணம் என்கிற நிர்பந்தத்தில்

யோக அப்யாஸத்தால் விகசித்த புத்தி யுடையவ சேதனன் வேதத்தின் அர்த்தத்தை ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பான்

——————-

சர்வ சூன்யவாதி நிரசனம் –
அனைத்தும் இல்லை
இப்போதும் இல்லை
எப்போதும் இல்லை -என்பர்-

ந சத் அசத் உபயம் வா ந உபயஸ்மாத் பஹிர் வா
ஜகத் இதி ந கிலைகாம் கோடிம் ஆடீ கதே தத்
இதி ந்ருபதி சர்வம் சர்விகாத நிஷேதந்
வரத ஸூக தபாஸ சோரலாவம் விவால்ய–6-

ஹே வரத

ஜகத்-காண்கின்ற இந்த ஜகத்தானது

ந சத் அசத்–சத்தும் இல்லை -அசத்தும் இல்லை –
உத்பத்தி விநாசங்கள் காண்பதால் சத் இல்லை –
கண்ணால் காண்பதால் முயல் கொம்பு மலடி மகன் போல அசத்தும் இல்லையே

உபயம் வா ந–இரு படிப்பட்டதும் அல்ல –
ஒரே வஸ்து இரண்டு விருத்த தன்மைகளை கொள்ள முடியாதே

உபயஸ்மாத் பஹிர் வா-இரு படிப் பட்டதின் புறம்பானதும் அல்ல –

இதி ந கிலைகாம் கோடிம்–இவ்விதமாக -நான்கு கோடிகளில் ஒரு வகையான கோடியையும்-

ஆடீ கதே தத்- அந்த ஜகத்தானது அடைகின்றது இல்லை

இதி–என்று இங்கனே

ந்ருபதி யதா ததா -ஒரு அதிஷ்டானமும் இன்றிக்கே

சர்வம் சர்விகாத நிஷேதந்-சர்வம் நாஸ்தி -சர்வம் நாஸ்தி என்றே சொல்லிக் கொண்டே சர்வ சூன்ய வாதம் பண்ணுகிற

சா திஷ்டா நிஷேதம் -என்பது அது இங்கே இப்பொழுது இல்லை -கால தேசங்களை முன்னிட்டு நிஷேப்பித்து–
அப்படி இல்லாமல் இப்படி நிஷேபிப்பது சர்வ சூன்ய வாதம் –

ஸூக தபாஸ -குத்ஸிதனான புத்தன்–பரம நீசனான ஸூகதன் –

சோரலாவம் விவால்ய-திருடன் வெட்ட தக்கவைத்து போலே வெட்டத் தக்கவன் –

ந சத் அசத் உபயம் வா ந உபயஸ்மாத் பஹிர் வா ஜகத் இதி –ஜகத்தானது சத்தாகவும் அன்று -அசத்தாகவும் அன்று –
உபய ஆகாரமாயும் உபய ரூபிக்கும் வேறுபட்டதும் ஆகையால்

ந கிலைகாம் கோடிம் ஆடீ கதே தத் இதி ந்ருபதி சர்வம் சர்விகாத நிஷேதந்–அந்த ஜகத்தானது
நான்கு ஆகாரங்களில் ஒன்றும் அடைகின்றது அல்ல அன்றோ –

வரத ஸூக தபாஸ சோரலாவம் விவால்ய–இப்படி அதிகரணாதி ரூபமான உபாதி இல்லாமையால் குத்ஸினனான
புத்தன் சோரனைப் போல் என்ற படி -நன்றாக சேதிக்கப்படுபவன் –

———————

அனைத்தும் சூன்யம் என்றால் இப்படி சொன்ன வார்த்தையும் சூன்யம் ஆகுமே
நாஸ்தி என்று சொல்லும் சூன்ய வாதம் பொருந்தாதே –
வேதங்களே பிரமாணம் ஆகும் என்றவாறு

ப்ரதீதி சேத் இஷ்டா ந நிகில நிஷேத யதி ந க
நிஷேத்தாதோ ந இஷ்டா நிருபதி நிஷேத சதுபதவ்
நிஷேத அந்யத் ஸித்த்யேத் வரத கட பங்கே சகலவத்
ப்ரமா ஸூந்யே பக்ஷே ஸ்ருதி அபி மதே அஸ்மின் விஜயதாம் -7-

ஹே வரத

ப்ரதீதி–சர்வம் நாஸ்தி என்னும் ப்ரதீதியானது

சேத் இஷ்டா-உண்மை என்று கொள்ளப் பட்டால்

ந நிகில நிஷேத-சர்வ வஸ்துக்களும் நாஸ்தி என்று கொள்ளப் பட மாட்டாது

யதி ந -அப்படி அந்த ஒரே தீதி உண்மை என்று கொள்ளப் படா விடில்

நிஷேத்தாதோ க -ஜகத்தை இல்லை செய்பவர் யார் -ஒருவனும் இல்லை –

அத நிருபதி நிஷேத–ஆகையால் வெறுமனே நாஸ்தி என்கிற நிஷேதமானது –

ந இஷ்டா–கொள்ளத் தக்கது அன்று –

சதுபதவ் நிஷேத–ஒரு உபாதியை முன்னிட்டு நிஷேதிக்கும் அளவில்

அந்யத் ஸித்த்யேத்–வேறு ஒரு பொருள் சித்திக்கப் படும்
எப்படிப் போலே என்றால்

கட பங்கே சகலவத்–குடம் உடைந்து போனாலும் அதன் கண்டங்கள் சித்திக்குமா போலே

அபி மதே அஸ்மிந் -இந்த புத்த மதத்திலும்

ப்ரமா ஸூந்யே பக்ஷே–சர்வ சூன்யத்வ பிரமையையும் கொள்ளாத பக்ஷத்தில்

ஸ்ருதி விஜயதாம்-வேத ப்ரமாணமே சிறப்புற்று ஓங்குக –

சர்வம் சூன்யம் என்கிற பக்ஷத்தில் இப்படி சொல்வதும் சர்வத்துக்குள்ளே அடங்கும் –
ஏதேனும் ஒன்றை உண்மை என்று கொள்ளில் சர்வம் சூன்யம் என்னக் கூடாதே
இப்படி சர்வ சூன்ய வாதம் வேர் அறுக்கப் பட்டது –

ப்ரதீதி–சர்வம் நாஸ்தீதி என்கிற ப்ரதீதி யானது

சேத் இஷ்டா ந நிகில நிஷேத யதி ந க நிஷேத்தாதோ–அங்கீ கரிக்கப் பட்டதாகில் ஸமஸ்த வஸ்துவுக்கும் இல்லாமை சித்தியாது –
பிரத்யதி அங்கீ கரிக்கப் படா விடில் நிஷேதிப்பவர் எவர் -ஒருவரும் இல்லை என்றபடி

ந இஷ்டா நிருபதி நிஷேத சதுபதவ் நிஷேத அந்யத் ஸித்த்யேத்-ஆகையால் உபாதி ரஹிதமான நிஷேதம்
வெறும் நாஸ்தி அங்கீ கரிக்கப் படுமது அன்று –
உபாதி உடைத்தான அத்ரி நிஷேதத்தில் கடத்தவம் நாஸ்தி போலே சகலத்வமும் சித்திக்கும் –

வரத கட பங்கே சகலவத் ப்ரமா ஸூந்யே பக்ஷே ஸ்ருதி அபி மதே அஸ்மின் விஜயதாம் -புத்த சம்பந்தியான நான்கிலும்
மாத்யாத்மீக சர்வ ஸூந்ய பஷத்திலும் வேதமே உத்க்ருஷ்ட பிரமாணமாகக் கடவது –

ஞான விருத்தராலே அங்கீ க்ருதமான அர்த்தத்தில் வேதமே பிராமண தமமாகக் கடவது –

——————

யோகாசாரம் ஒன்றுமே இல்லை என்கிறான் –
ஸுவ்த்ராந்திகன் அநு மான ஹேது என்பான் –
வைபாஷிகன் க்ஷணம் தோறும் அழியக் கூடியது என்பான் –
மூவரையும் நிரசிக்கிறார்

யோகாசார ஜகத் அபலபதி அத்ர ஸுவ்த்ராந்திக தத்
தீ வைசித்ர்யாத் அநு மிதி பதம் வக்தி வைபாஷிகஸ்து
ப்ரத்யக்ஷம் தத் க்ஷணி கயதிதே ரெங்க நாத த்ரய அபி
ஞான ஆத்மத்வ க்ஷண பிதுரத சஷதே தாந் ஷிபாமே –8-

ஹே ரெங்க நாத

அத்ர–இந்த ஸுகத சமயத்தில்

யோகாசார–யோகாசாரன் என்கிற புத்த வகுப்பினன்

ஜகத் அபலபதி–ஜகத்தை இல்லை செய்கிறான் –

ஸுவ்த்ராந்திக–ஸுவ்ராந்திகன் என்னும் வகுப்பினன்

தத்-அந்த ஜகத்தை

தீ வைசித்ர்யாத்–பலவகைப்பட்ட ப்ரதிதிகள் உண்டாவது காரணமாக

அநு மிதி பதம் வக்தி-அநு மான கோசாரம் என்கிறான் –

வைபாஷிகஸ்து-வை பாஷிக வகுப்பினானோ என்னில்

ப்ரத்யக்ஷம் தத் க்ஷணி கயதி -ப்ரத்யக்ஷமான அந்த ஜகத்தை க்ஷணிகம் என்கிறான் –

தே த்ரய அபி-ஆக கீழே சொன்ன மூன்று வகுப்பினரும்

ஞான ஆத்மத்வ க்ஷண பிதுரத -ஞானமே ஆத்மா என்றும் க்ஷண பங்குரம் என்றும்
வேறு பட்ட ஞாதா இல்லை என்பர்

சஷதே -சொல்லுகிறார்கள்

தாந் ஷிபாமே-மேல் ஸ்லோகத்தில் அவர்களை நிரசிக்கிறோம் –

யோகாசார ஜகத் அபலபதி-யோகாசார்யன் ஜகத்தே இல்லை என்பான்

அத்ர ஸுவ்த்ராந்திக தத் தீ வைசித்ர்யாத் அநு மிதி பதம் வக்தி–ஸூவ்ராந்திகன் அநு மான க்ராஹ்யமாக
அந்த ஜகத்தைச் சொல்கிறான்

வைபாஷிகஸ்து ப்ரத்யக்ஷம் தத் க்ஷணி கயதி தே-வைபாஷிகன் ப்ரத்யக்ஷமான ஜகத்தை க்ஷணிகம் என்பான்

ரெங்க நாத த்ரய அபி ஞான ஆத்மத்வ க்ஷண பிதுரத சஷதே தாந் ஷிபாமே –மூவரையும் நிரசிக்கிறோம்

——————-

க்ஷணம் தோறும் அழியும் என்னும் வாதிகள் நிரசனம்
இதில் ஜகத்து ஷணிகம்–
தத் விஷய ஞானமும் க்ஷணிகம் –
அதே ஆத்மா என்கிற பக்ஷமும் நிரசனம்-

ஒரு காலத்தில் கடாதி அனுபவ ஞானம் உண்டாகில் அது அப்போதே நசிக்கையாலும்-
தஜ்ஜன்ய ஸம்ஸ்காரமும் ஷணத்வ அம்சமாகையாலும்
காலாந்தரத்தில் ஹேது இல்லாமையால் ச கடம் என்கிற ஸ்மரணமும்
ஏக காலத்தில் இருக்கிறதை காலாந்தரத்தில் இருக்கிறதாக அவகாஹிக்கிற சாயம் என்கிற ப்ரத்யபிஜ்ஜையும்
உண்டாகக் கூடாமையாலே -இதுவும் நிரசனம் என்கிறார்

ஜகத் பங்குரம் பங்குரா புத்தி ஆத்மா இதி
அசத் வேத்ரு அபாவே ததா வேத்ய வித்த்யோ
க்ஷண த்வம்ஸதச் ஸ்ம்ருதி ப்ரத்யபிஞ்ஞா
தரித்திரம் ஜகத் ஸ்யாத் இதம் ரெங்க சந்த்ர –9-

ஹே ரெங்க சந்த்ர

ஜகத் பங்குரம்-ஜகத்தானது க்ஷணிகமானது

பங்குரா புத்தி ஆத்மா–க்ஷணிகமான ஞானமே ஆத்மா

இதி அசத்–என்கிற இது பிசகு

ஏன் என்றால் –

வேத்ரு அபாவே–ஞானத்தில் காட்டில் வேறுபட்ட ஞாதா இல்லையானால்

ததா–அப்படியே

வேத்ய வித்த்யோ க்ஷண த்வம்ஸதச்–அறியப் படும் பொருள்கள் என்ன -அறிவு என்ன -இவை க்ஷணிகம் என்னில்

இதம் ஜகத் -இந்த ஜகத்தானது –

ஸ்ம்ருதி ப்ரத்யபிஞ்ஞா தரித்திரம் ஸ்யாத் –ஸ்ம்ருதியும் ப்ரத்யபிஜ்ஜையும் அற்றதாகும்–

ஜகத் பங்குரம் பங்குரா புத்தி ஆத்மா இதி–பிரபஞ்சமானது க்ஷணிகம் -க்ஷணிகமான ஞானமே
ஆத்ம சப்தார்த்தம் என்று சொல்லுகை நல்லது அன்று –

யாதொரு ஹேதுவால்
அசத் வேத்ரு அபாவே ததா வேத்ய வித்த்யோ-ஞான வியதிரிக்த ஞாதா இல்லா விட்டால்

அப்படி ஞான ஜேயங்களுக்கு
க்ஷண த்வம்ஸதச் ஸ்ம்ருதி ப்ரத்யபிஞ்ஞா தரித்திரம் ஜகத் ஸ்யாத் இதம் ரெங்க சந்த்ர –க்ஷணிகத்வம் ஆனாலும்
அதுகளாலே சூன்யமாக வேண்டி வரும்-

—————-

அஹம் இதம் அபி வேத்மி இதி ஆத்ம வித்த்யோ விபேதே
ஸ்புரதி யதி தத் ஐக்யம் பாஹ்யம் அபி ஏகம் அஸ்து
பிரமிதி அபி ம்ருஷா ஸ்யாத் மேய மித்யாத்வ வாதே
யதி ததபி சஹேரந் தீர்க்கம் அஸ்மாத் மத ஆயுஸ்–10-

அஹம் இதம் அபி வேத்மி இதி -நான் இதை அறிகிறேன் என்று

ஆத்ம வித்த்யோ –ஆத்மாவுக்கும் ஞானத்துக்கும்

விபேதே ஸ்புரதி–வேற்றுமை தோற்றா நிற்க

யதி தத் ஐக்யம் -அவற்றுக்கு ஒற்றுமை சொல்வதானால்

பாஹ்யம் அபி -அவ்விரண்டிலும் வேறு பட்டதாய் ஞான விஷயம் ஆகின்ற
கட படாதிகள் ஆகிற பஹிர் விஷயமும்

ஏகம் அஸ்து–ஞானத்தில் காட்டில் வேறு படாது இருக்கட்டும்

மேய மித்யாத்வ வாதே–ப்ரமேயம் எல்லாம் பொய் என்னும் பக்ஷத்தில்

பிரமிதி அபி –ப்ரமேயம் எல்லாம் பொய் என்கிற அந்த ப்ரதீதியும்

ம்ருஷா ஸ்யாத்–பொய்யாகும்

யதி ததபி -அத்தனையும்

சஹேரந் அபி -அங்கீ கரிப்பர்கள் ஆகில்

தீர்க்கம் அஸ்மாத் மத ஆயுஸ்–நமது மதத்தின் ஆயுஸ்ஸூ நீண்டதாகும் -ஜீவித்திடுக –

ஞானமே ஆத்மா வேறே ஞாதா இல்லை என்கிற வாதத்தை நன்கு நிராகரித்து அருளுகிறார் –

நான் இதை அறிகிறேன் -என்பதில் மூன்றுமே உண்டே –
ஞானம்
ஞாதா
ஜேயம்-

நான் இதை அறிகிறேன் -ஆத்மா வேறே அறிவு வேறே தெளிவு –
ஒன்றே என்றால் அறியப்படும் விஷயத்தை மட்டும் எதற்கு விலக்க வேண்டும் –
அனைத்தும் பொய் என்றால் அறியப்படும் வஸ்துவும் பொய் என்றதாகும்
அறியப்படும் வஸ்து உண்மை என்றால் அனைத்தும் பொய் என்ற வாதம் தள்ளுபடி ஆகும் —
ஆகவே நமது மதம் தீர்க்கமான ஆயுஸ் கொண்டதாகும்-

நான் இத்தை அறிகிறேன் என்று நான் என்கிற அஹம் அர்த்தத்துக்கும் -அறிகிறேன் என்கிற அறிவுக்கும் பேதம் —
ஆதார ஆதேய பாவ பேதம் -நன்றாக பிரகாசிக்க அதுகளுக்கு அபேதம் சொன்னால்
இத்தை என்று இதம் சப்தார்த்தமான ஜேயத்தோடும் அபேதம் பிரசங்கிக்கும் –

யோகாசர மதத்தில் ஜேயம் மித்யை யாகையாலே அது வராதே என்னில் ஞானம் ஸ்வ ஜேயமாகவும்
பர ஜேயமாகவும் இருக்கையாலே அதுவும் மித்யை யாக வேண்டி வரும் –

மாத்யாத்மீக மத அவலம்பனம் பண்ணி ஞானத்துக்கும் மித்யாத்வத்தை ஸஹிக்கில்
பாதக பிராமண அபாவத்தால் நம்முடைய சித்தாந்தம் தீர்க்க ஜீவியாகக் குறையில்லை என்கிறார் –

———————–

ஏதத் ராமாஸ்திரம் தளயது கலி ப்ரஹ்ம மீமாம்சகாந் ச
ஞாப்த்தி ப்ரஹ்ம ஏதத் ஜ்வலத் அபி நிஜ அவித்யயா பம்ப்ரமீதீ
தஸ்ய ப்ராந்தீம் தாம் ஸ்லத்யதி ஜித அத்வைத வித்ய து ஜீவ
யத் யத் த்ருஸ்யம் விததம் இதி யே ஞாபயாஞ்ச க்ருஸ் அஞ்ஞா –11-

ப்ரஹ்ம-பர ப்ரஹ்மமானது

ஞாப்த்தி–நிர் விசேஷ சின் மாத்ர ஸ்வரூபமானது

ஏதத் ஜ்வலத் அபி–இப்படிப்பட்ட ப்ரஹ்மமானது ஸ்வயம் பிரகாசமாய் இருந்தாலும்

நிஜ அவித்யயா–தனது அவித்யையினால்

பம்ப்ரமீதீ-பிரமிக்கின்றது

ஜீவஸ்து–ஜீவாத்மாவோ என்றால்

ஜீவ அத்வைத வித்ய து–தத் த்வமஸி இத்யாதி வாக்ய ஜனக ஞானத்தினால் அத்வைத ஞானத்தை
அப்யஸிக்கப் பெற்றவனாய்க் கொண்டு

தஸ்ய தாம் ப்ராந்தீம் ஸ்லத்யதி-அந்த பர ப்ரஹ்மத்தினுடைய அந்த பிரமத்தை நீக்குகிறான்

யத் யத் த்ருஸ்யம்–எது எது கண்ணால் காணக் கூடியதோ

தத் விததம்-அது எல்லாம் பொய்யானது

இதி யே அஞ்ஞா -என்று இவ் வண்ணமாக எந்த மூடர்கள்

ஞாபயாஞ்ச க்ருஸ்-வெளியிட்டார்களோ

தாந் -அந்த

கலி-ப்ரஹ்ம- மீமாம்சகாந் ச-கலி புருஷ பிராயராய் ப்ரஹ்ம விசாரம் பண்ணப் புகுந்த-
பிரசன்ன புத்தர் எனப்படும் – சங்கராதிகளையும்

ராமாஸ்திரம் தளயது ஏதத்–ராம அஸ்திரம் போலே தப்ப ஒண்ணாத தூஷணம் ஆகிற
கீழ்ச் சொன்ன பிரசங்கமானது தண்டிக்கத் தக்கது –

எல்லாமே பொய் என்றால் சர்வம் மித்யா என்கிற இந்த ப்ரதீதியாவது உண்மையா –

ஞான மாத்திரம் ப்ரஹ்மம்-அத்வைத ஞானம் எப்போது ஞான கோசாரமானதோ அப்போது தான் பந்த மோக்ஷம் –
கண்ணில் காண்பது சர்வமும் பொய் என்கிற வாதம் நிரசனம்

நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மம் -அத்வைத வாத கண்டனம் —
ராம பானம் போன்ற இந்த ஸ்லோகங்கள் இவர்கள் வாதங்களை முடித்தே விடும்-

சத்யம் ஞானாதி வாக்யத்தாலே -ஞான மாத்ர ஸ்வரூபமான ப்ரஹ்மம் -ஸ்வ மாத்ர பிரகாசமானாலும்-
தன்னுடைய அவித்யா பலத்தால் ஞாத்ரு ஜேயங்களையும் அனுபவிக்கிறது –

அவனுபவ ரூபமான பிராந்தியை –
தத்வமஸி இத்யாதி வாக்யங்களால் பிறந்த த்வைத அத்வைத வித்யா அப்யாஸத்தாலே ஜீவன் நசிப்பிக்கிறான் –

யாதொன்று த்ருஸ்யமோ அது எல்லாம் மித்யை என்று ப்ரத்யக்ஷத்தி பிராமண கதி அறியாதே
கலி காலத்துக்கு அடுத்த ப்ரஹ்ம மீமாம்சகரான பிரசன்ன புத்த சித்தாந்தத்திலும் துர்வாரம் என்கிறார் –

ராம சரம் போலே துர்வாரமான பராஜிதர் ஆக்கக் கடவது –

—————

அங்கீ க்ருத்ய து சப்த பங்கி குஸ்ருதம் ஸ்யாத் அஸ்தி நாஸ்தி ஆத்மிகாம்
விஸ்வம் த்வத் விபவம் ஜகத் ஜிநமதே நைகாந்தம் ஆசஷதே
பின்னா பின்னம் இதம் ததா ஜகதுஷே வந்த்யா மம அம்பா இதிவத்
நூத்ந ப்ரஹ்ம விதே ரஹ பரம் இதம் ரெங்கேந்திர தே சஷதாம் –12-

ஹே ரெங்கேந்திர

ஸ்யாத் அஸ்தி நாஸ்தி ஆத்மிகாம்-ஸ்யாத் அஸ்தி ஸ்யாந் நாஸ்தி -இத்யாதி ரூபமான

சப்த பங்கி குஸ்ருதம் அங்கீ க்ருத்ய -சப்த பங்கி என்னும் துர்மார்க்கத்தை அங்கீ கரித்து

ஸ்யாத் அஸ்தி -ஸ்யாந் நாஸ்தி-ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச -ஸ்யாத் வக்தவ்யம் -ஸ்யாத் அஸ்தி ச வக்தவ்யம் –

ஸ்யாந் நாஸ்தி ச வக்தவ்யம் -ஸ்யாத் அஸ்தி ஸ்யாந் நாஸ்தி ச வக்தவ்யம் –

த்வத் விபவம் -தேவருடைய விபூதியான

விஸ்வம் ஜகத்–சர்வ ஜகத்தையும்

ஜிநமதே–ஜைன மதத்திலே

நைகாந்தம் ஆசஷதே–அநேக அந்தமாக சொல்லுகின்றனர் –

தே ததா -அந்த ஜைனர்கள் அப்படியே

வந்த்யா மம அம்பா இதிவத்–என் தாய் மலடி என்பது போலே வ்யாஹதமாக

இதம் பின்னா பின்னம் ஜகதுஷே -இவ் வுலகத்தை ப்ரஹ்மத்தோடே பின்னமாகவும் அ பின்னமாகவும் சொன்ன

நூத்ந ப்ரஹ்ம விதே –நூதன ப்ரஹ்ம வித்தான ம்ருஷா வாதி ஏக தேசியின் பொருட்டு
அபூர்வ ப்ரஹ்ம ஞானி என்று பரிஹஸித்த படி

ரஹஸ்யா பரம் இதம் சஷதாம்-இந்த சிறந்த பரம ரஹஸ்யார்த்தத்தை உபதேசிக்கட்டும்

நம்மிடம் சொல்வதும் நாம் மறு மாற்றம் சொல்வதும் ஊமையரோடு செவிடன் வார்த்தை யாகுமே
அவர்களே பரஸ்பரம் பேசிக் கொள்ளட்டும் என்றபடி –

ஜைன வாத நிரசனம்
சப்த பங்கி வாதம் -தங்களைப் போலே -என்னுடைய மாதா வந்த்யை என்னுமா போலே
இந்த ஜகத்து ப்ரஹ்மத்தோடு பின்னமாயும் அபின்னமாயும் இருக்கும் என்று சொல்லுகிற
நூதன ப்ரஹ்ம வித்துப் பொருட்டு இந்த வசதஸ்யமான விருத்த பாஷணத்தை சொல்லக் கடவர்கள் என்கிறார் –

——————

கண சர சரணா ஷவ் பிஷமாணவ் குதர்க்கை
ஸ்ருதி சிரசி ஸூ பிக்ஷம் த்வத் ஜகத் காரணத்வம்
அணுஷு வி பரிணாம்ய வ்யோம பூர்வம்ச கார்யம்
தவ பவத் அநபேஷம் ரெங்க பர்த்த ப்ருவாதே –13-

ஹே ரெங்க பர்த்த

கண சர சரணா ஷவ் -கணாதரும் கௌதமரும் -நையாயிகர் வைசேஷிகர் போன்ற குத்ருஷ்டிகள்

கௌதமர் நியாய சாஸ்திரத்தை இயற்றினர் –
இவர் காலில் கண்ணை உடையவர் ஆகையால் சரணாஷார் எனப்படுபவர் –
அஷ பாதர் என்பதும் இவரையே –

கணாத மகரிஷி வைசேஷிக தரிசன பிரதிஷ்டாபகர் –
இருவரும் தார்க்கிகள் எனப்படுபவர்கள் –

காரண வஸ்துவின் குணமும் கார்ய வஸ்துவின் குணமும் ஒத்து இருக்க வேண்டும் –
ஒவ்வாது இருந்தால் காரணத்வம் சொல்லப் போகாது என்று குதர்க்க வாதம் பண்ணுபவர்கள் –

ஸ்ருதி ஸ்ரஸீ ஸூ-வேதாந்தத்தில்

ஸூ பிக்ஷம்-குறைவின்றி விளங்குவதான

த்வத் ஜகத் காரணத்வம்-தேவரீர் சகலத்துக்கும் உபாதான காரணம் என்னுமத்தை

பிஷமாணவ் குதர்க்கை–குத்ஸித தர்க்கங்களாலே -பிச்சை எடுத்து பறித்தவர்களாய்க் கொண்டு -துர்பாக்கிய சாலிகள் என்றவாறு

அணுஷு வி பரிணாம்ய –பரம அணுக்களில் மாறாடி ஏறிட்டு

ஆகாசாதிகளை ஈஸ்வர கார்யங்களாகக் கொள்ளாதே ஸ்வ தந்த்ரமாகவும் நித்யமாகவும் சொல்பவர்கள்

தவ கார்யம்–தேவரீருடைய காரியத்தை -உம்மிடத்தில் நின்றும் உண்டாவதாக வ்யோம பூர்வம்ச–ஆகாசாதிகளையும்

தவ பவத் அநபேஷம் — ப்ருவாதே –உம்முடைய அபேக்ஷை அற்றதாகச் சொல்லுகின்றனர்

கௌதமர் ஏற்படுத்திய -நையாயிகர்–நியாய மதம் இதுவே – —-

கணாதர் ஏற்படுத்திய வைசேஷிக மதம் –பரம அணுவே காரணம் போன்ற -வாதங்கள் நிரசனம்

பிஷமாணவ்–ஐஸ்வரம் விஞ்சி இருக்க பிக்ஷை எடுப்பது போலே உயர்ந்த உபநிஷத்துக்கள் முழங்கியபடி இருக்க
தவறான வாதங்கள் பின் செல்பவர் –

நையாயிக வைசேஷியர் -தேவருக்கே சகல கார்ய உபாதானதவம் சம்ருத்தமாய்–ஸூலபமாய் இருக்க

கார்ய காரண ச லக்ஷன்யா அந்யதா அநு பபாத்யாதி ஸ்ருதி -விருத்தம் தர்க்கங்களாலே பிச்சை புகுவாரைப் போலே

தத் தத் பூத உபாதா நத்வங்களைத் தத் தத் பரம அணுக்களில் ஸ்வீ கரித்து
தேவரீருடைய காரியமாகச் சொல்லப்பட்ட வாகாசாதியை நித்யமாகவும் சொல்லுகிறார்கள் என்கிறார் –

உஞ்ச போஜியான காணாதரும் பாதாஷியான கௌதமரும் -இந்த மதங்களுக்கு ஹேது
தோஷமும் —
ஸ்ருதி விரோதமும் –
தூஷணமும் -என்கிறார் –

—————–

வேதே கர்த்ரு ஆதி அபவாத் பலவதி ஹி நயை தவத் முகை நீயமாநே
தத் மூலத்வேந மாநம் ததிதரத் அகிலம் ஜாயதே ரங்க தாமந்
தஸ்மாத் சாங்க்யம் ச யோகம் ச பசுபதி மதம் குத்ரசித் பஞ்சராத்ரம்
ஸர்வத்ர ஏவ பிரமாணம் தத் இதம் அவகதம் பஞ்சமாத் ஏவ வேதாத் –14-

ஹே ரங்க தாமந்

வேதே கர்த்ரு ஆதி அபவாத் பலவதி–தனக்குக் கர்த்தா முதலானவை இல்லாமையினால் பிரபல பிரமாணமான வேதமானது

ஹி நயை தவத் முகை நீயமாநே–சதி– நியாயங்களாலே உன் பரமாகவே ஒருங்க விடப்படும் அளவில்

ததிதரத் அகிலம் -அந்த வாதம் ஒழிந்த மற்ற நூல்கள் எல்லாம்

தத் மூலத்வேந -அந்த வேதத்தையே மூலமாகக் கொண்டுள்ளவை என்னும் காரணத்தினால்

மாநம் ஜாயதே–பிரமாணம் ஆகிறது

தஸ்மாத் -ஆகையினால்

சாங்க்யம் ச யோகம் –ச பசுபதி மதம் –யோக சாஸ்திரத்தோடு கூடியதும் பாசுபத மதத்தோடு கூடியதுமான சாங்க்ய ஆகமமானது

கபில மகரிஷியால் பிரவர்த்திக்கப்பட்ட சாங்க்ய தர்மமும் –
ஹிரண்ய கர்ப்பரால் பிரவர்த்திக்கப் பட்ட யோக தந்த்ரமும்
பசுபதி பிரணீதரமான பாசுபத ஆகமும்

குத்ரசித் பிரமாணம்-சிறு பான்மை பிரமாணம் ஆகிறது –

பஞ்சராத்ரம் ஸர்வத்ர ஏவ பிரமாணம்–ஸ்ரீ பாஞ்ச ராத்ரமோ என்னில் முழுதும் பிரமாணம் ஆகிறது –

தத் இதம் அவகதம் பஞ்சமாத் ஏவ வேதாத்-என்னும் இவ்விஷயம் ஐந்தாம் வேதமான ஸ்ரீ மஹாபாரதம் கொண்டே அறியலாயிற்று –

மோக்ஷ தர்மத்தில் உப சரவஸூ உபாக்யானத்தில் ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ர அவதார கிரமும்-
அதில் கூறியபடியே அனுஷ்ட்டிக்க வேண்டிய ஆவஸ்யகத்வத்தையும் விவரமாக போரப் பொலிய சொல்லிற்றே-

வேதமே பரம பிரமாணம் -யோக சாஸ்திரம் பசுபதி ஆகமம் -ஓர் அளவே பிரமாணம் –
பாஞ்சராத்மம் முழு பிரமாணம்-

அபவ்ரு ஷேயம்-சர்வ பிராமண பலம் வேதம் -சாரீரிக பிரதம அத்யாய அதிகரண நியாயங்களாலே
தேவரை பிரதான ப்ரதிபாத்யரராக யுடையவராக நயப்பிக்கப் பட்டு
அப்படி ஸ்வ தந்த்ர பிரதானமான வேதம் மூலமாகவே தத் இதர ஆகமங்கள் பிரமாணமாக வேண்டிற்று –

ஆகையால் சாங்க்ய யோக பசுபதி ஆகமங்கள் அந்த வேத அவிருத்த அம்சத்தில் பிரமாணங்கள்

பாஞ்சராத்ர ஆகமத்தில் இப்படி விருத்த அம்சம் இல்லாமையால் சகலமும் பிரமாணங்கள்

இது பக்ஷ பதித்துச் சொல்லுகிறோம் அல்லோம்-
மோக்ஷ தர்மம் –
உபரி சரவஸூ வியாக்யானம் –
ஸ்ரீ பாஞ்ச ராத்ர உத்பத்தியும் –
தத் விஹித அனுஷ்டானம் அவசியம் அநுஷ்டேயம் என்றும் விஸ்தாரமாக சொல்லுமே –

—————–

சஞ்சஷ்டே ந ஈஸ்வரம் த்வாம் புருஷ பரிஷதி ந்யஸ்ய யத்வா ஆந்ய பர்யாத்
சாங்க்ய யோகீ ச காக்வா பிரதி பலனம் இவ ஐஸ்வர்யம் ஊஸே காயசித்
பிஷவ் சைவஸூ ராஜம்பவம் அபிமநுதே ரங்க ராஜ அதி ராகாத்
த்வாம் த்வாம் ஏவ அப்யதா த்வம் தநு பர விபவ வ்யூஹந ஆட்யம் பவிஷ்ணும்–15-

ஹே ரங்க ராஜ

சாங்க்ய-த்வாம் புருஷ பரிஷதி–சாங்க்யனானவன் தேவரீரை ஜீவாத்மா கோஷ்டியிலே

ந்யஸ்ய-சஞ்சஷ்டே ந ஈஸ்வரம்–வைத்து ஈஸ்வரனாக சொல்லுகின்றிலன்

யத்வா -அன்றிக்கே

ஆந்ய பர்யாத்-சஞ்சஷ்டே ந -வேறே ஒரு தாத்பர்ய விசேஷத்தால் சொல்லுகின்றிலன்
அதாவது ஈஸ்வரனைப் பற்றியே விசாரம் இல்லை இவன் பக்ஷத்தில் -என்றவாறு

யோகீ ச -யோகியே என்னில் -இவனை சேஸ்வர சாங்க்யன்-என்பர்

காயசித் காக்வா -பர்யாய விசேஷத்தாலே

இவ ஐஸ்வர்யம் பிரதி பலனம் ஊஸே–ஐஸ்வர்யத்தை ப்ரதிபாலனம் போலே உபாதி அடியாக சொல்லி வைத்தான் –
ஈஸ்வரத்வம் யோக ஜன்யம் என்பான்

சைவ–பாசுபதம்

பிஷவ் –பிக்ஷை உண்ணியான ருத்ரன் இடத்தில்

அதி ராகாத்-பக்ஷபாத மிகுதியினால்

ஸூராஜம்பவம் அபிமநுதே –ஈஸ்வரத்தை அபி மானிக்கிறான்

த்வம்-ஸ்ரீ பாஞ்ச ராத்ர வக்தாவான தேவரீர்

பர விபவ வ்யூஹந ஆட்யம் பவிஷ்ணும்-பர வ்யூஹ விபவ ரூபங்களாலே சம்பன்னரானேன்

த்வாம் -தேவரீரை

த்வாம் ஏவ–தேவரீராகவே -ஸ்வரூப ரூபாதிகளில் ஒருவித மாறுபாடும் இன்றிக்கே

அப்யதா த்வம் தநு–சொல்லி வைத்தீர் அன்றோ –

அந்தர்யாமித்வம் உப லக்ஷண சித்தம் -அர்ச்சை ஸ்ரீ பெரிய பெருமாள் இடம் அருளிச் செய்வதால் அர்த்தாத சித்தம் –

நிரீஸ்வர சாங்க்யன் பிரகிருதி புருஷ இரண்டு மாத்திரம் -நொண்டியும் குருடனும் கூடி வழி நடக்குமா போலே என்பான் –

ஈஸ்வர விஷயமான ஸ்ருதிகள் வேறே தாத்பர்யம் என்பான் –

சாங்க்யர் உன்னை சேதனன்-என்பர் –
பதஞ்சலி உனக்கு ஐஸ்வர்யம் இல்லை என்பர் –
சைவர்கள் ருத்ரனை ஈசன் என்பர் –
வ்யூஹ விபவங்களால் நீயே சர்வேஸ்வரன் என்று காட்டி அருளினாய்

சாங்க்ய பாசுபத ஆகமங்களில் எந்த அம்சம் ஸ்ருதி விரோதம் என்று காட்டி அருளுகிறார் –

சாங்க்யர் தேவரீரை சேதனர் கோஷ்ட்டியில் அந்தர்பவித்து ஈஸ்வரத்வத்தை அங்கீ கரிக்கவில்லை –

கபிலர் எங்கேயாவது சொன்னாலும் பிரகிருதி ஆத்ம விவேகத்தில் இதன் பரமாகையாலே அதில் தாத்பர்யம் இல்லை –

யோக ஸாஸ்த்ர ப்ரவர்த்தரான பதஞ்சலியும் யோக அப்யாஸத்தில் இழிகிறவனுக்கு அதிசய கதனத்தில் தாத்பர்யத்தாலே
காம விநிர்முக்த புருஷன் இடத்தில் ஐஸ்வர்யத்தை பிரதிபலனம் போலே சொல்லுகிறான்-

சைவன் அபிமானத்தாலே -பிண்டியார் இத்யாதிப்படியே- பிஷுவான ருத்ரன் இடத்தில் ஐஸ்வர்யத்தை அங்கீ கரிக்கிறான் –

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –திருக் குறும் தாண்டகம் –19–

ஸ்ருதியோ -தேவரீர் பர வ்யூஹ விபாவாதிகளாலே ஸ்வரூப ரூப குண விபூதாதிகளாலே சம்பன்னராக அருளிச் செய்தது அன்றோ

—————-

இதி மோஹந வர்த்மநா த்வயா அபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே
அதி வைதிக வர்ம வர்மிதாநாம் மனிதாஹே குத்ருஸாம் கிம் ஈஸ வர்த்ம–16-

ஹே ஈஸ

இதி -இவ் வண்ணமாக

மோஹந வர்த்மநா –பிறரை மயக்கும் வழியாலே

த்வயா -கள்ள வேடத்தைக் கொண்ட தேவரீராலேயே

அபி க்ரதிதம் –ஏற்படுத்தப் பட்டதாயினும்

பாஹ்ய மதம் -வேத பாஹ்ய மதத்தை

த்ருணாய மந்யே–த்ருணமாகவே நினைக்கிறேன்

கள்ள வேடத்தைக் கொண்டு புரம் புக்கவாறும்-என்றும்

மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பலவாகி -என்றும் உண்டே

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ள முள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-

வணங்கும் துறைகள்* பல பல ஆக்கி,* மதி விகற்பால்-
பிணங்கும் சமயம் பல பல ஆக்கி,* அவை அவை தோறு-
அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்*
இணங்கும் நின்னோரை இல்லாய்,* நின் கண் வேட்கை எழுவிப்பனே

அத-அன்றியும்

வைதிக வர்ம வர்மிதாநாம்–வைதிகர்கள் என்று வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிற

வர்ம-சொக்காய் -வர்மித -அதனால் மறைக்கப் பட்ட என்றபடி –

மனிதாஹே குத்ருஸாம் கிம் வர்த்ம–குத்ருஷ்டிகளின் வழியை நெஞ்சிலும் நினைக்கப் போகிறேனோ –

நீயே பாஹ்ய குத்ருஷ்டிகளை உண்டாக்கினாயே ஆகிலும் உள்ளத்தாலும் நினையேன் –

கள்ள வேடத்தைக் கொண்டு போய் -என்றபடி -மோஹ விக்ரஹத்தை கொண்டு –
தேவரால் -நிர்ணயிக்கப் பட்ட புத்த மதத்தை த்ருணமாக எண்ணுகிறேன்

இப்படி இருக்க வைதிகத்வ வேஷ தாரிகளான குத்ருஷ்ட்டி மார்க்கத்தை எண்ணுவேனோ -என்கிறார் –
உபேக்ஷிப்பேன் என்றபடி –

————–

சம்ஸ்காரம் பிரதி சஞ்சரேஷு நிததத் சர்க்கேஷு தத் ஸ்மாரிதம்
ரூபம் நாம ச தத்தத் அர்ஹ நிவஹே வ்யாக்ருத்ய ரங்காஸ்பத
ஸூப்த உத்புத்த விரிஞ்ச பூர்வ ஜெகதாம் அத்யாப்ய தத்தத் ஹிதம்
ஸாஸத் ந ஸ்ம்ருத கர்த்ருகாந் வஹஸி யத் வேதா பிரமாணம் தத –17-வேதங்களே பரம பிரமாணம்-

ஹே ரங்காஸ்பத

பிரதி சஞ்சரேஷு–பிரளயங்களில் வேதங்களை -பிரதி சஞ்சரம் என்று பிரளயத்தைச் சொன்னவாறு –

சம்ஸ்காரம்–ஸம்ஸ்கார ரூபமாகவே

நிததத் –தன் பக்கலிலே வைத்துக் கொண்டவனாகி

சர்க்கேஷு –ஸ்ருஷ்ட்டி காலங்களில்

தத் ஸ்மாரிதம்–அந்த ஸம்ஸ்காரத்தினால் நினைப் பூட்டப் பட்ட

ரூபம்–அந்த அந்த வஸ்துக்களின் ரூபத்தையும்

நாம ச -பெயரையும்

தத்தத் அர்ஹ நிவஹே –அவ்வவற்றுக்கு உரிய வஸ்து சமூகத்திலே

வ்யாக்ருத்ய–ஏற்படுத்தி

ஸூப்த உத்புத்த விரிஞ்ச பூர்வ ஜெகதாம்–தூங்கி எழுந்த பிரமன் முதலான ஜன சமூகத்துக்கு

அத்யாப்ய –அத்யயனம் பண்ணி வைத்து

தத்தத் ஹிதம் ஸாஸத் சந் –அவரவர்களுடைய நன்மையை நியமிப்பவராய்க் கொண்டு

ந ஸ்ம்ருத கர்த்ருகாந் வேதாந் –கர்த்தா இன்னார் என்று தெரியப் பெறாத வேதங்களை

வேதாந் பஹு வசனம் -அநந்தா வை வேதா -அன்றோ -இந்திரன் பரத்வாஜர் சம்வாதம் -மூன்று மலைகள் -காட்டி அருளிய வ்ருத்தாந்தம் –

வஹஸி யத் வேதா பிரமாணம் தத–தேவரீர் வஹிக்கிறீர் ஆகையால் அந்த வேதங்களே ஸ்வயம் பிரமாணம் ஆகின்றன –

பிரளய காலத்தில் வேதங்களை ஸம்ஸ்கார ரூபங்களாக தேவரீர் இடத்திலே வைத்துக் கொண்டு

ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே அந்த ஸம்ஸ்காரங்களாலே ஸ்ம்ருதங்களான தேவாதி சமஸ்தானங்களையும் –
அதுகளுக்கு வாசகங்களான நாமங்களையும் –

அதுகளுக்கு யோக்யங்களான மஹதாதி பிருத்வி அந்தங்களான அசேதனங்களிலும்

ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தங்களான சேதனங்களிலும்

ஸ்ருதி ஸ்ம்ருதிகள் சொல்லுகிறபடியே உண்டாக்கியும்

நித்திரை பண்ணி எழுந்தால் போலே எழுந்த ப்ரஹ்மாதிகளுக்கு ஓதுவித்தும்

விதி நிஷேதாதி ரூபமான ஹிதத்தை அநு சாசனம் பண்ணியும் -செய்து அருளுவதால்

வேதங்களை ஸ்வத பிரமாணங்களாகக் குறை இல்லை

—————————

சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –18-

ஹே ரங்க நாத

சீஷாயாம் –சீஷா என்கிற வேத அங்கத்தில்

வர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –

பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்
ப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –

சந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ
முதலான சப்த சந்தஸ்ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்

கமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –

கல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது

ஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட

நியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்

அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்

புராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்

தர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும்
இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே

தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –
விசாரிக்கின்றன -என்றவாறு

பேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே

நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-

நாடி என்-தன் உள்ளம் கொண் நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே

ஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை
வ்யாக்ரணம் -இலக்கணம்
ந்ருக்தி -அர்த்த பிரயோகம்
சந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்
ஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம்
கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்
நியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவை போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்
உன்னையே தேடியபடி இருக்கும்
வேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்
தேவரீரையே விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறது

—————-

ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதே ச இதிஹாஸை புராணை
ந்யாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதம் உபரி பரி ஷீயதே பூர்வ பாக
ஊர்த்வ பாக த்வத் ஈஹா குண விபவ பரி ஞாபநை த்வத் பத ஆப்தவ்
வேத்ய வேதை ச சர்வை அஹம் இதி பகவந் ஸ்வேந ச வ்யாஸ கர்த்த –19-

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –

வேதா -வேதங்களானவை-

பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –

ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்

ஸ இதிஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்

ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட

உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –

பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி

த்வத் அர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்

பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-

ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்

த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள்
ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –

த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்

பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –

பகவன்-எம்பெருமானே

சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

ஹே பகவந்
ஆதவ் வேதா-வேதங்கள் முதலிலே வேறு ஒரு பிரமாணத்தை அபேஷியாமல் ஸ்வயமாகவே
பிரமாணம்-பிரமாணம் ஆகின்றதே

ஸ்ம்ருதி –மந் வாதி ஸ்ம்ருதி யானது –
மனு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஜ்வல்க்யர் போன்ற மஹரிஷிகளால் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் –
ச இதிஹாஸை புராணை-இதிஹாசங்களோடு புராணங்களோடும்
ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சைகளோடே

உப குருதேத்வத்-அந்த வேதங்களுக்கு அர்த்த விவரணம் பண்ணுகை யாகிற உபகாரத்தை
பண்ணுகை யாகிற உபகாரத்தை செய்கின்றன

அந்த வேதத்தில்
பூர்வ பாக-பூர்வ பாகமான கர்ம காண்டம்
அர்ச்சா விதம் உபரி -தேவரீருடைய திருவாராதனம் பண்ணும் முறையைச் சொல்லும் வகையாலே
வாயு இந்திரன் வருணன் அக்னி இவர்கள் யாவரும் ப்ரஹ்ம சரீர பூதர்களே
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

ஊர்த்வ பாக –ப்ரஹ்ம காண்டம் ஆகிற உபநிஷத் பாகமோ என்னில்
த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை–தேவரீருடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகியவற்றைத்
தெளிய விளங்க தெரிவிப்பதனால்

த்வத் பத ஆப்தவ்-தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

வேதைஸ் ச சர்வை-கர்ம ப்ரஹ்ம காண்ட ரூபமான சகல வேதங்களும்
வேத்ய அஹம் இதி–நானே அறியக் கூடுவேன் என்று
ஸ்வேந ச வ்யாஸ கர்த்த–தேவரீர் தாமே சோதி வாய் திறந்து அருளிச் செய்ததும் உண்டுஜ் அன்றோ –

வேதங்கள் மூல பிரமாணம்–வேறு ஒன்றை அபேஷியாமல் ஸ்வத பிரமாணம் —
அதுகளுக்கு இதிஹாச புராண நியாய மீமாம்சைகளோடு கூடி ஸ்ம்ருதி உபகாரிகை ஆகிறது –

கர்ம ப்ரதிபாதிதமான பூர்வ பாகம்- ஸ்ம்ருதி விசேஷ பூர்வ மீமாம்சைகளோடே ஆராதன வீதியில் பர்யவசிக்கும்

உத்தர பாகமான உபநிஷத் இதிஹாச புராண ப்ரஹ்ம மீமாம்சைகளோடே கூடி ஸ்வரூப ரூப குண சேஷ்டிதைகளைத்
தெரியப்படுத்தி தேவரீர் திருவடிகளில் சேர்க்கையில் பக்தியில் பர்யவசிக்கிறது-

இவ்வர்த்தத்தை தேவரீரே ஸ்ரீ கீதையில் வெளியிட்டு அருளினீர்-

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–15-15-

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லா வேதங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்த க்ருத் வேத வித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-

அவதாரிகை –
சர்வேஸ்வரன் அனுமான பிரமாண சித்தன் என்று சொல்லுகிற வாதி பஷ ப்ரதி ஷேபத்தைப் பண்ணிக் கொண்டு
ச பரிகரமான க்ருத்ஸ்ந வேதமே இவ் விஷயத்தில் பிரமாணம் என்றும்
பூர்வ உத்தர பாகங்கள் இரண்டிலும் அவனே பிரதிபாத்யன் என்றும் சொல்லி
இவ் வர்த்தத்தில் ஸ்ரீ கீதோக்தமான பகவத் வசனத்தையும் மூதலிக்கிறார்–

ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை  சார்த்தம் தவ தர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
வேதா -வேதங்களானவை-
பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
ஸேதி ஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்
ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
தவதர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
பகவன்-எம்பெருமானே
சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

அதில் முற்பட வேத ப்ராமாண்யம் உண்டாகில் இறே
இவ் விஷயத்தில் பிரமாணம் ஆவது -என்னில் –
அது முற்பட முன்னம் ஸூ த்ருட பிரமாணம் -என்கிறார் –

ஆதௌ –
பகவத் ஸ்வரூப விபவாராத நாதிகளை அகல இட்டுப் பேசி
வாக்ய தர்க்கங்களாலே உப பாதிக்கக் கொண்டு
இது உபபாதித்த படி அழகிது -பிரமாணமாகப் பெற்றிலோம் -என்று இழவு பட வேண்டாதபடி
க்ருத்ஸ்ந வேதமும் முற்பட ஸூத்ருட பிரமாணம் -என்கிறார் –

பிரமாணம்-
சம்யக்கான பிரமிதிக்கு சாதனம் இறே பிரமாணம் ஆவது-
அசம்யக்த்வ ஹேது ப்ரம விப்ர லம்பாதி காரண தோஷமும்
நேதம் இத்யாதி- பாதகட்ரத்யமும் இறே  –
காரணா நபேஷமுமாய் அது தான் அபௌருஷேயமும் ஆகையாலே
காரண தோஷ பாதக பிரத்யயங்கள் இல்லை என்று இட்டு பிரமாணமாகக் கடவது –

இப்படி பிரமாணம் ஆகிறது –
இப் பிரமாணயத்துக்கு ஆலம்பன வ்யக்திகள் தான் எது -சஷூராதி கரணங்களோ -என்னில் –

வேதா  –
காச திமிராதி தோஷ சம்பாவனையும் உடைத்தாய் -அநித்யங்களுமான அவை அன்றியே
வாசா விரூப நித்யயா-என்றும்
அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்றும் சொல்லுகிறபடியே
அநாதி நித்தா விச்சின்ன சம்பிரதாயமாய் –
நித்ய நிர்த்தோஷமாய்-
ப்ரம  விபர லம்பாதி தோஷ கந்த ரஹீதமான  வேதங்கள் –

வேதா –
வேத்யதி-என்கிற வ்யுத்பத்தியாலே
ச விபூதிகனான பகவானுக்கு பிரதிபாதக தயா பிரமாணம் ஆகிறது –
வேதயதி -என்ற இது பிறரை அறிவிக்கை யாவது ஏன்
யோ புத்த்யதே ஸ பரான் போதயாதி -என்று தான் அறிந்தால் பின்பு அல்லவோ பிறரை அறிவிப்பது

நேதி நேதி -என்றும்
க இத்தா வேத -என்றும்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும்
யதோ ந வேத மனஸா சஹை நம நுப்ரவிசந்தி -என்றும் சொல்லுகிறபடியே
தான் அகப்பட நெஞ்சாலும் கூட அறிய மாட்டிற்று இல்லை என்று சொல்லச் செய்தே
பிறரை அறிவிக்கும் படி என் என்னில்

ஒன்றை அறிகை யாவது -வஸ்து இருந்தபடியே அறிகை இறே -இங்கும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
ப்ருஹதி ப்ரும்ஹயதி தஸ்மா துச்யதே பரம் ப்ரஹ்ம -என்றும் –
ஸ்வரூ பேண குணைச்ச யத்ரா நவதி காதிசயம் -என்றும்
தவா நந்த குணஸ் யாபி -என்றும்
ஆநந்த்யாத் ப்ரதமோ ராசி -என்றும்
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண  குணா கண -என்றும் சொல்லுகிறபடியே
வஸ்து ஸ்வரூப குணங்களால் அபரிச்சின்னம் ஆகையாலே

அபரிச்சின்னம்  என்று அறிகை இறே
அபரிச் சின்னத்தைப்  பரிச்சின்னம் என்று அறிகை யாகிறது நீலத்தைப் பீதம்-மஞ்சள் – என்கிற மாத்ரம் இறே –
அபரிச்சின்ன வஸ்துவை அபரிச்சின்னம் என்று அறிகையால் ஸ்வ ஜ்ஞானத்துக்கும் குறை இல்லை –
வேத புருஷன் தானே -வேதாஹா மேதம் புருஷம் -என்று இவ் வஸ்துவை நான் அறிவேன் -என்றாய்
அறிந்தபடி என் -என்னில்
மஹாந்தம் -என்று அபரிச்சிண்ணன் என்று அறிந்தேன் என்றான் இறே

வைதிக அக்ரேசரும்-அஹம் வேத்மி மஹாத்மானம் -பால -19-14–என்றும்
யேஸ வேத விதோ விப்ராயே சாத்யாத்மா விதோ ஜ நா -தே வதந்தி மஹாத்மானம் -பார -ஆர -71-123- என்றார்கள் இறே

இவற்றை உப ப்ரும்ஹித்த பக்தர்களும் –
அறிந்தன வேதம் அரும் பொருள் நூல்கள் -திருவாய் -9-3-3- என்றாய் -அறிந்தபடி என் என்ன
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் -திருவாய் -9-3-3- என்றார்கள் இ றே

நிஷேத வாக்யங்கள் தன்னிலும் –
நேதி நேதி -என்றும் –
அப்ராப்ய மனஸா சஹ -என்றும்
மனுஷ்யாநந்தம் தொடங்கி-ப்ரஹ்மா நந்தத்து அளவும் ஒன்றுக்கு ஓன்று மேல் அவதியைப்
பேசிக் கொடு போந்து மேல் ஓர் அவதி காணாமையாலே
இவ்வளவு என்கிற இயத்தா ராஹித்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை போக்கி –
நேராக தத் விஜ்ஞானம் இல்லை என்றது அன்றே

இப்படித் தான் அறிந்து பிறரையும் அறிவிக்கிறது தான் ஓன்று இரண்டோ என்னில்
வேதா –
ரூசோ யஜூம்ஷி சாமா நி ததை வாதர்வணா நி ஸ -என்கிறபடியே
ருக் ய்ஜூஸ் சாம அதர்வாத்மகமான சதுர் வித கோடியிலும் அடைப்புண்டு
அநந்தா வை வேதா -என்கிறபடியே
காணவ மாத் யந்தி நாதி பேதத்தாலே அசங்க்யாதமாய் இருக்கும் –

யே சேமே தபசி ஸ்திதா -என்னுமா போலே
சாஷிகள் அத்தனையும் சொல்ல பிரமாண தார்ட்யத்துக்கும் உறுப்பு என்று இருக்கிறார் –
ஏக சந்திக்தே காரே வஸ்து நி -என்று ஒருத்தன் உபபாதகன் ஆன போது இறே –
ஜ்ஞாநாத சந்நிக்ருஷ்டே அர்த்தே விஜ்ஞானம் -என்றும்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -என்றும் சொல்லுகிறபடியே
பிரமாணாந்தர விஷயமான பகவத் விஷயத்தில் பிரமிதி ஜனகமாம் போது
கார்யார்த்தத்தோடு பரி நிஷ்பன்ன வஸ்துவோடு வாசி அற போத ஜன சக்தமான வேதமே யாகக் கடவது

வ்யாப்தியை உப ஜீவிக்கிற அனுமானத்தை இட்டு சாதிக்கும் போது
வ்யாப்தி சித்தமாய்
திருஷ்டாந்த   கதமான கமவச்யத்வாதிகள் ஈஸ்வரனுக்கு பிர சந்கிப்பதும் செய்யும்
இவனுக்கு சஜாதீயமாய் இருக்கும் திருஷ்டாந்தம் உண்டாகையில்
ந தத் சமச்சாப்யாதி கச்ச த்ருச்யதே -என்றும்
ந த்வத் சமோ அச்த்யப்யாதி க குதோ அன்யோ லோகத் த்ரயே  அப்ய பிரதிமப்ரபாவ -என்றும்
நாஸ்தி நாராயண சமோ ந பூதோ ந பவிஷ்யதி -என்றும்
சமாப்யதிக நிஷேதம் பண்ணுகிற பிரமாணங்களுக்கு நைரர் த்தத்யமும் பிரசங்கிக்கும்
ஆகையால் -இவ்விஷயத்தில் பிரமாணம் ஆம் போது வேதமே யாகக் கடவது
வேதம் தான் நிர பேஷமாக ப்ரஹ்மணி பிரமாணமாய் இருக்கிற படியால் உக்த தோஷங்கள் வாராது –

ஆனால் வேதோ அகிலோ தர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத் விதாம் -என்றும் –
சுருதி ஸ்ம்ருதி சதாசார -என்றும்
ப்ருதகுபாத்தமாய் -சஹபடிதமான ஸ்ம்ருதி யாதி   க்ருத்யம் என்ன –
வேதத்தாலே சரிதார்த்தம் ஆகில் ஸ்ம்ருதி யாதிகளுக்கு க்ருத கரத்வாதிகளாலே ஆநர்த்தச்யமும் –
இவை தான் சமுச்சித்ய பிரமாணம் ஆகிறது ஆகில்
கேவல வேதத்தின் யுடைய பிரமாண்யத்துக்கு வைகல்யமும் –
மூலமான வேதத்தின் யுடைய உப ஜீவ்யத்வ ஹானியும் வாராதோ என்னில் –

ஸ்ம்ருதி ருபகுருதே ஸேதி ஹாசை புராணை–இத்யாதி –
தர்மே ப்ரமீயமாணே து வேதேந கரணாத்மாநா -இதி கர்த்தவ்ய தாபகம் மீமாம்ஸா பூர யிஷ்யதி-என்று
பிரதிபாத்யர்த்தத்தில் பிரமிதி ஜனகமாம் போது-வேதமே கரணமாய் இருக்கச் செய்தே
பரி நிஷ்பன்னமான கரணத்துக்கு இது கர்த்த்வ்யதா ரூபேண உபகாரகம் ஆகையாலே குறை இல்லை –

இதுக்கு உபகாரமாம் இடத்தில் ஸ்ம்ருதிகள் என்ன -இதிஹாச புராணங்கள் என்ன -ந்யாயம் என்ன –
இவற்றில் அந்ய தமத்தாலே அமையாதோ -இவை எல்லாம் என் என்னில் –

இவற்றுக்குத் தனித் தனியே க்ருத்ய பேதம் யுண்டாகையாலே புநர் உக்தங்கள் அன்று –
அதில் ஸ்ம்ருதி களினால் வேதத்தில் பூர்வ பாகார்த்த விசதீகரண்மும்
இதிஹாச புராணங்களினால் உத்தர பாகார்த்த விசதீகரணமும் பண்ணப் படுகிறது –

அதில் இதிஹாசம்-சௌலப்ய ஏக பரம் –
புராணம் -பரத்வ ஏக பரம் –
நியாயை என்று சீஷா கல்ப வியாகரண நிருக்தச் சந்தஸ் ஜ்யோதிஷங்கள் ஆகிற ஷட் அங்கங்கள் என்ன
மீமாம்சைகள் என்ன இவற்றுக்கும் உப லஷண மே இருக்கிறது

இந்த ஷட் அங்கங்களும் நியாய மீமாம்சைகளும் –
வாக்யார்த்த விசாரம் என்ன –
வாக்யாங்கமான பத வர்ண ஸ்வ ராதி நிர்ணயம் என்ன –
இவற்றில் விநி யுக்தம் ஆகையாலே உபய பாகத்துக்கும் சாதாரணமாய் இருக்கிறது –

ஆக இத்தால்
புராண நியாய மீமாம்ஸா தர்ம சாஸ்திர அங்கமிச்ரிதா –வேதா ஸ்தா நாநி  வித்யா நாம் தர்மஸ்ய ச சதுர்தச -என்றும்
அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா நியாய விஸ்தர -புராணம் தர்ம சாஸ்திரம் ச வித்யா ஹ்யதாஸ் சதுர்தச -என்றும்
சீஷாயாம் வர்ண சிஷா பத சமதி கமோ வ்யாக்ரியா நிர்வ சொப்யாம் சந்தஸ் சந்தஸ் சிதௌ ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யௌதிஷம் ரங்க நாத
கல்ப அனுஷ்டானம் உக்தம் ஹ்புசிதகமிதயோர் நியாய மீமாம்சையோ ச்யாதர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷூ தத் அனுகாஸ் த்வாம் விசின்வந்தி வேதா – என்றும் சொல்லுகிறபடியே
அங்காதி சஹிதமான வேதமே பிரமாணம் என்று சொல்லுகிறது
வேதத்தின் யுடைய ப்ராதான்யத்தையும் இதரங்களினுடைய அப்ரதான்யத்தையும் பற்றி இறே-

ஸேதிஹாசை  நியாயைஸ் சார்த்தம் ஸ்ம்ருதி ருபகுருதே -என்று
பிபெத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி -இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப்ப்ரும்ஹயேத்-என்கிறபடியே
அசங்க்யாதமான க்ருத்ஸ்ந வேதத்தையும் -வேதாந்தத்தையும்  கபளீகரிக்கைக்கு ஈடான
அளவில்லாத மந்தமதிகள் நம்மை நலியில் செய்வது என் என்று
பயப்படுகிற வேதங்களுக்கு உப ப்ரும்ஹண முகத்தாலே பய நிவ்ருத்தியைப் பண்ணி உபகரிக்கிறது -என்றாகவுமாம் –

ஸ்மிருதி சப்தார்த்தம் தான் –
ஸ்மர்யதே -என்கிற வ்யுத்பத்தியாலே
ஆச்சார்ய முகத்தில் நின்றும் அதிகதமான வேதார்த்தத்தை  அந்த வாசனையாலே நினைத்து பிரபந்தீ கரிக்கை –

இதிஹாசம் ஆவது –
யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்கிறபடி
கூடஸ்தனாய் இருப்பான் ஒரு ஆச்சார்யன் ஒரு சிஷ்யனுக்கு உபதேசித்து
அவ்வளவிலே தலை சாய்ந்து போகை அன்றியிலே
இதிஹாசே ஸ்ரூயதே-என்றும்
தைச் சோக்தம் புருகுத்சாய பூபுஜே நர்ம தாதடே -சாரச்வதாய தேநாபி மம சாரச்வதேந ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-9-என்றும்
விவஸ்மான் மநவே ப்ராஹ்ம நுரிஷ்வாகவே அப்ரவீத் –ஏவம் பரம் பராப்ராப்தம்  -ஸ்ரீ கீதை -4-1/2- என்றும் சொல்லுகிறபடியே
அந்த வேதார்த்தத்தை குரு பரம்பரைகளாலே அவிச்சின்ன சம்பிரதாயமாம் படி வர்திப்பிக்கை –

புராணம் ஆவது –
புராபி நவ -என்றாய்
அநாதியான வேத சித்தார்த்தத்தை நூதனமாக பிரபந்தீ கரிக்கை –

ந்யாயம் ஆவது
பூர்வபஷ சித்தாந்த யுக்திகளாலே அபார்த்தங்களை ஆராய்ந்து நிஷ்கர்ஷித்துக் கொடுக்கை –

ஆக இப்படி
சாங்கமாயும் சசிரஸ்கமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதமும் ப்ரஹ்ம பிரதிபாதகம் ஆகையாலே
பிரமாணம் என்றே சொல்லுகிறது –

அது செய்யும்படி என் –
அக்நயே பதிக்ருதே புரோடாசம் அஷ்டாகபாலம்  நிர்வபேத்-என்றும்
வாயவ்யம் ச்வேதமாலபேத பூதிகாம -என்றும்
ஐந்தரம் சாரும் நிர்வபேத் ப ஸூகாம -என்றும் இத்யாதிகளாலே
அக்னி இந்த்ராதி தேவதாந்தரங்களையும்
தத் உபசானங்களையும் அன்றோ பிரதி பாதிக்கிறதாகத் தோற்றுகிறது-என்னில் –

த்வதர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
அவ்விடத்தில் உன்னையே பிரதிபாதிக்கிறது -என்கிறார் –

காகஸ்ய கார்ஷ்ண்யாத் சபள பிரசாத -என்று
அக்னி இந்த்ராதி தேவதா விசேஷங்களை பிரதிபாதியா நிற்க
நம்மை பிரதிபாதிக்கை யாவது-என் என்னில்

இஷ்டா பூர்த்தம்  பஹூதா ஜாதம் ஜாயமா நம் விஸ்வம் பிபர்த்தி புவநஸய நாபி -என்றும்
யத் கரோஷி யத் அஸ் நாஸி யஜ் ஜூஹோஷி ததாஸி யத் -யத் தபஸ் யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்ப்பணம் -ஸ்ரீ கீதை -9-26-என்றும்
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் சஹூதாச நான் -சர்வ பூதாந்த ராத்மானம் விஷ்ணு மேவ யஜந்தி தே -என்றும்
அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -ஸ்ரீ கீதை -9-24- என்றும்
ச ப்ரஹ்மா ச சிவ சேந்திர ஸோ அஷர பரம ஸ்வராட் -என்றும்
ஏநமேகே வதந்த்யக்நிம் மனுமந்யே பிரஜாபதிம் இந்திர மன்யே பரே பிராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் -என்றும்
பிரமாண கணங்கள் உபபாதிக்கிற படியே
சமாக்யைக்கு பாதகமான சுருதி லிங்க ப்ரகரணாதியான பிரபல பிரமாணத்தாலே-
தத் தத் பிரதேச அநுகுணமான  அவயவ சக்தியாலே யாதல்
அபர்யவசாநவ்ருத்தியாலே யாதல்
அவ்வவோ சப்தங்கள் தேவருக்கே வாசகம் ஆகையால்
அவ் வாக்யங்களும் தேவருடைய சமாராதன பிரகாரத்தைச் சொல்லிற்றாகக் கடவது –

த்வதர்ச்சாவிதிமுபரி –
உம்முடைய ஆராதன விதியிலே –
யஜ்ஞேன தா நேந தபஸா அநாசகேந -என்றும்
வர்ணாச்ரமா சாரவதா புருஷேண பர புமான் -விஷ்ணுராராத்யதே பந்தா நான்ய-என்றும் சொல்லுகிற
தேவருடைய சமாராத நத்தைச் சொல்லுகிறது
நம்முடைய அர்ச்சனமாகில் சொல்லுகிறது –

நம்முடைய ஸ்வரூப விஷயமாகச் சொல்லத் தட்டு என் -என்னில்
அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
நேராக சப்தாதி விஷயங்களிலே ப்ரவணரான சம்சாரி சேதனரை இதோ விமுகராக்கி நல் வழியே போக்குகைக்கு
தானே பண்ணுகையாலே அதிலே உப ஷீண மாயாயிற்று பூர்வ பாகம் இருப்பது
ஆகையாலே ஸ்வரூப பிரதி பாதனத்துக்கு அவசரம் இல்லை யாயிற்று –

ஏதேனுமாக சம்சாரிகளுடைய ஹித ப்ரவ்ருத்தி யாகில்
இதுக்கு க்ருத்யம்-
ப்ராப்ய ஸ்வரூபத்தையும் –
ப்ராப்தி பிராபக ஸ்வரூபத்தையும் –
ப்ராப்த்ரு ஸ்வரூபத்தையும் –
விரோதி ஸ்வரூபத்தையும்
பல ஸ்வரூபத்தையும்
முதல் தன்னிலே அறிவிக்கத் தட்டென்-என்னில் அது ஒண்ணாது –

முதல் பழுவிலே தவறி யெலாம் பழுவிலே அடி வைக்கப் போகாது இறே
ஸ்தன்ய பாநாதிகளிலே பரக்க வாசனை பண்ணிப் போருகிறவனை சடக்கென -அவை ஹேயம் இப்போதே
அனர்த்தகரமான சரீரத்தை  விட்டு மோஷத்தைப் பெறு-என்று சொன்னால்
அப சர்ப்பேத சௌகதா ப்ரஸ்தாவ கந்தத-ஸ்ரீ பாஷ்யம் -என்கிறபடியே
இவன் முகம் கெட்டுக் கழியும் ஆகையாலே

அவன் உகந்த சம்சாரி பலங்களிலே இழிந்து
அவனுக்குப் போக விரோதியான சத்ருக்களை போக்குகைக்கு ச்யேன விதியை உபதேசித்து
அது பலித்து -அந்த வாக்யத்திலே விசுவாசம் பிறந்தவாறே
போக உபகரணமான திவ்ய சம்பத்திக்கு உடலாக வ்ருஷ்டைர்த்தமாகக் காரீரியை விதித்து
அது பலித்து தத் விதாயக வாக்யத்திலே விஸ்வாசம் பிறந்தவாறே
ஐஹிக ஸூகத்தைக் காட்டிலும் ஆமுஷ்மிக ஸூகம் நன்று என்கைக்காக ஸ்வர்க்க சாதனமான
ஜ்யோதிஷ்டோமாதிகளை விதித்து -அது பலித்து
தத் உபபாத வாக்யங்களிலே விஸ்வாசம் பிறந்து -இவ்வளவும் புகுர நின்று வ்யுத்பன்னபத பதார்த்தனாய் விவேகியான அவனுக்கு

அந்தவதே வாஸ்ய தத் பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை ப்ராப்யதே -என்றும் –
ப்லவா ஹ்யேதே அத்ருடா யஜ்ஞ ரூபா -என்றும்
பரீஷ்ய லோகன் கர்மசிதான் ப்ராஹ்மாணோ நிர்வேதமாயாத் -என்றும்
ஸ்வர்க்கே அபிபாத பீ தஸ்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -என்றும்
ஆப்ரஹம புவ நாலலோகோ  புநரா வர்த்தி ந -என்றும்
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தா நஸய பரமாத்மன -என்றும் உபதேசித்து –

இந்த பிரமாண கண அனுசந்தானம் பண்ணி நிர்விண்ணன் ஆனவனுக்கு
மோஷ சாஸ்த்ரத்திலே அதிகாரம் ஆகையாலே மெல்ல இவனை இதிலே மூட்டுகைக்காக
முற்படக் கர்ம பாகமே உத்தேஸ்யமாகக் கடவது –

அழகியது -பூர்வ பாகமானது இவனுடைய சத் கர்மத்துக்கு உரிய
நித்ய நைமித்திக காம்ய ரூபமான விஹித கர்மங்களை உபதேசித்ததாகில்
உத்தர பாகத்துக்கு க்ருத்யம்   என் என்னில்

ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாப நைஸ் த்வத் பதாப்தௌ-
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமா கதி -என்றும்
கஷாயே கர்மபி பாகவே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே -என்றும்
அவித்யயா மருத்யும்
தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண  பாபாநாம் கிருஷ்ணே  பக்தி பிரஜாயதே -என்றும் சொல்லுகிறபடியே
பூர்வ பாக உதிதமான கர்ம அனுஷ்டானத்தாலே ம்ருதிதாக ஷயனானவனுக்கு
பகவத் ப்ராப்தி சாத நதயா அனந்தர பிராப்தமான
ப்ரஹ்ம ஸ்வரூப குண விபவ சேஷ்டாதி ஜ்ஞாபநம் பண்ணுவிக்கிறது

இக் கர்மம் தன்னை-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -என்றும்
வ்ருத்தாத் கர்மாதி கமாதநந்தரம் ததேவ ஹீதொர் ப்ரஹ்ம ஜ்ஞாதவ்ய மித்யுக்தம் பவதி -என்றும்
அபியுக்தர்கள் பேசினார்கள் இறே-

ஊர்த்வோ பாக –
ஸ்ருதி சிரஸி விதீப்தே -என்கிறபடியே
சத்வாரமாக பகவத் ப்ரதிபாத நம் பண்ணுகிற பூர்வ பாகத்தில் காட்டில்
அவ்யஹித பகவத் ப்ரதிபாதநம் பண்ணுகையாலே
இவ்வாசத்தியைப் பற்ற எல்லாத்துக்கும் மேலான பாகம் -என்கிறார் –

இப் பாகத்தில் பிரதிபாதிக்கிற அர்த்தம் தான் ஏது என்னில் –
த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாபநை –
ஈத்ருசமான அர்த்தங்கள் -என்கிறார் –

த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாப நை —
ஒருவனை ஒருவன் பேசுகையாவது-அவனுடைய தொழில்களையும் -குணங்களையும் -பெருமைகளையும் பேசுகை இறே
ஆகையாலே இங்கும் -திவ்ய அபதானங்களையும் -கல்யாண குணங்களையும் -உபய விபூதி யோகத்தையும் பேசுகிறது –

த்வதீஹா –
ஜகத் ரஷண உபயோகியாக
பஹூச்யாம் -என்கிற சங்கல்ப வியாபாரம் தொடக்கமான
அந்தப் ப்ரவேச நியமன வியாபாரங்களையும்
ஹிரண்ய ராவண சிசுபாலாதி வத-தௌத்ய சாரத் யாதிகளான
பரத்வ ஸூசகமாயும்
சௌலப்ய ஸூசகமாயும் இருக்கிற திவ்ய அபதானங்களையும் சொல்லுகிறது –

சேஷ்டா தஸ்யா ப்ரேமே யஸ்ய வ்யாபின் யவ்யாஹதாத்மிகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72-என்றும்
க்ரீடா ஹரேரிதம் சர்வம் ஷரமித்யுபா தார்யதாம் -பார -சாந்தி -205-58- என்றும்
க்ரீடா ஜகத் பதேஸ் தஸ்ய சந்தத சம் ப்ரவர்த்ததே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-18- என்றும்
ரிஷிகள் பேசா நின்றார்கள் இறே –

இப்படி அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிற இவன் இவ் வ்யாபார பரம்பரைகளைப் பண்ணுகைக்கு அடியென் -என்னில்
குண –
குணங்கள் -இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே என்கிறது –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -முண்டக -2-2-7-இத்யாதிகளின் படியே
ச்ருஷ்ட் யுப யோகியான சர்வஜ்ஞத் வாதிகள் என்ன
ஸ்வரூப கதமான ஜ்ஞானந்தாதிகள் என்ன
விக்ரஹ கதமான சௌந்தர்ய சௌகுமார்யாதிகள்  என்ன
பரத்வ ஸூசகமான சௌர்யாதிகள் என்ன –
சௌலப்ய ஸூ சகமான சௌசீல்யாதிகள் என்ன
ஆக இந்த நிரவதிக குணங்களைப் பேசுகிறது –

இப்படி அபரிமித சேஷ்டிதனுமாய்-
அபரிமித குண கனுமான இவனுக்குத் தனக்கு வ்யாவ்ருத்தமாய் இருப்பதொரு
இருப்பிடமாதல் –
ஒரு போகமாதல்
பரிகரமாதல் இல்லையோ -என்னில்

விபவ –
சர்வஸ்ய வசீ சர்வசஸ்யேசான-என்றும்
பதிம் விஸ்வஸ்ய -என்றும்
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச -என்றும்
ஹிரண்மயே பரெ லோகே விரசம் ப்ரஹ்ம நிஷ்கலம் -என்றும்
ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மா நாவி சதே தேவ ஏக -என்றும்
திவி திஷ்டத் ஏக-என்றும்
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய விபூதி என்ன –
லீலோபகரணமான போக பூமி என்ன
ஆக
உபய விபூதியையும் உடையன் -என்கிறது-

குண சேஷ்டாதிகளும் பகவத் கதமாகில் இவ் வேதம் செய்கிறது என் என்னில் –
பரி ஜ்ஞாபநை-நன்கு அறிவிப்பதன் மூலம் –
அவற்றை உள்ளபடி அறிவிக்கிறது –

பரி -என்று பர ரீஷா பூர்வக ஜ்ஞாப நமாய்-
யுக்தி தர்க்கங்களோடு கூட நிஸ் சந்தேஹமாக அறிவிப்பிக்கிறது -என்றாகவுமாம் –
அன்றியிலே
பரிஜ்ஞாபநம் ஆகிறது –
விடு ஏடு எடுத்துப் பார்த்தல் –
ஸ்வ புத்தியாலே அர்த்த நிரீஷணம் பண்ணுதல் செய்கை அன்றிக்கே
ஆச்சார்யார்த்தி வித்யா விதிதா சாதிஷ்டம் ப்ராபத் -என்று
ஆச்சார்ய உபதேச முகத்தாலே கஹனமான ஸ்வ அர்த்தங்களை அறிவிப்பிக்கிறது என்றாகவுமாம்

இவை அறிவிக்கிற  இத்தால் பிரயோஜனம் என் என்னில்
த்வத் பதாப்தௌ-
ஷேத்ரஜ்ஞஸ் யேஸ்வரஜ் ஞாநாத்  விசுத்தி பரமா மதா-என்றும்
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்றும் சொல்லுகிறபடியே
இந்த ஜ்ஞானம் கைம் முதலாக பரம ப்ராப்யனானவன் திருவடிகளைப் பெறுகை-

ஜ்ஞானத்தாலே பகவல் லாபம் என்கையில் பிரமாணம் என் -என்னில் –
தஸ்ய தீரா பரி ஜாநந்தி யோநிம் மரீசிநாம் பதமிச்சந்தி -என்றும் –
விஷ்ணோ கர்மாணி பஸ்யத -என்றும் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி -என்றும் –
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத-த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி – என்றும் –
பகவத் பத ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி -என்றும்
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குதச்சந-என்றும்
ஆத்மா நாம நுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச்ச சத்யான் காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காமசரோ பவதி -என்றும்
இக்குண ஜ்ஞானத்தாலே பகவத் பிராப்தி என்றும்-

யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோ அஸ்நுதே சர்வான் காமான் -என்றும்
சர்வஸ்ய   வஸிநம் தேவம் சர்வஸ் யாயதநம் ஹரிம் -ராஜா நாம் சர்வ பூதாநாம் தம் வை ஜ்ஞாத்வா விமுச்யதே -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
உபய விபூதி யோக ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தானே சொல்லுகையாலே
இந்த ஈஹா குண விபவ ஜ்ஞானத்தாலே தத் பத ப்ராப்திக்குக் குறை இல்லை –

அத்ரேஸ்யமக் ராஹ்யம் -என்றும்
ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா நான்யைர் தேவை -என்றும்
நமோ நமோ வாங் மனசாதி பூமயே -என்றும் சொல்லுகிறபடியே
சூத்ரா உபகர்ணர்களான எங்களுக்கு வாங் மனசாகோசர வைபவனாய் இருக்கிற உன்னைப் பெறும் போது-
மனசா து வி ஸூ ததே ந -என்றும்
ஹ்ருதா மநிஷா  மநசாபி க்லுப்த-என்றும் –
பக்த்யா த்வ நன்யயா சகா -என்றும்சொல்லுகிறபடியே
சவிபூதிகனான தேவருடைய ஜ்ஞானம் ஒழிய வேறு கைம்முதல் உண்டோ –

த்வதாப்தௌ -எஎன்னா தே –
த்வத் பதாப்தௌ -என்கிறது
விசேஷித்து ஸ்வரூப அநு குணமாகத் திருவடிகளே ப்ராப்யம் -என்கைக்காக –
ஆத்யாத்மிகாதி தாப த்ரயத்தாலே தப்தரானவர்களுக்கு
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று பரமபத பிராப்தியைச் சொல்லிற்றாக வுமாம் –

ஆக
இப்படியால் -ஊர்த்வ பாகமானது
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ பரிஷீயதே -என்று சொல்லிற்று ஆகிறது

ஈஹா குண விபவ பரி ஜ்ஞாபநை -என்கிற இடத்தில்
உபாசனம் கண்டிலோமே -என்னில்
உபாசனம் ஆகிறது
த்வத் ஈஹா குண விபவங்களின் உடைய அவிச்சின்ன அநு சந்தானம் ஆகையாலே
அத்தை அறிந்த போதே உபாசனமும் சொல்லிற்றே விட்டது –

ஆக -இத்தால்-
நதா ஸ்ம சர்வ வசசாம் பிரதிஷ்டா யத்ர சாஸ்வதீ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-23- -என்றும் –
வேதே ராமாயனே புணயே பாராதே பரதர்ஷப -ஆதௌ மத்யே ததாந்தே ச விஷ்ணு சர்வத்ர கீயதே -என்றும்
விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-40- என்றும்சொல்லுகிறபடியே
சகல வேத வேதாந்தங்களில் அவனே பிரதிபாத்யன் -என்று சொல்லிற்று –

இவ்வர்த்தத்தை –
வேதைஸ்ச சர்வைர் அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை-15-15-
என்று திருத் தேர் தட்டிலே சர்வ லோக சாஷிகமாகச் சொன்னவனை இட்டே இசைவிக்கிறார் –
வேத்யோ வேதைர்ச சர்வைர் அஹ மிதி பகவன் ஸ்வேந ச வ்யாசகர்த்த –

சர்வைர் வேதை –
அதீயமானமாயும் -விபர கீர்ணமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதத்துக்கும் அவனே பிரதிபாத்யன் -என்கிறார்

அஹமிதி –
சர்வ அந்தர்யாமியாய் –
சர்வ சமாராத்யனாய்
சர்வ பலப்ரதானவன் -என்கிறார்

ப்ராஹ்மணோ யஜேத-என்றும்
ஷத்ரியே யஜேத -என்றும்
ஷத்ரியாதி சப்தங்கள் தஜ்ஜாதி விசிஷ்ட  பிண்டத்வாரா ஆத்ம பர்யந்தம் ஆகிறாப் போலே
அக்னி இந்த்ராதி சப்தங்களும் தத் அதிஷ்டான ஜீவ த்வாரா அநு பிரவேசத்தாலே நம் மளவிலே பர்வசிக்கக் கடவது -என்கிறார்

வேத்ய
வாசக சப்தமானது வாச்யமான அர்த்த பர்யவசாயியாய் அல்லது நில்லாமையாலே
வசசாம் வாச்யமுத்தமம் -என்றும்
அர்த்தோ விஷ்ணு -என்றும்-சொல்லப்படுகிற
நாமே க்ருத்ஸ்ந வேத பிரதிபாத்யன் என்று பகவத் வசனம்

பகவன் –
ஜ்ஞானாதி குணங்களால் பரி பூரணன் ஆகையாலே
போக்கடி சொல்லுகையும் உனக்கே பரம் -என்கிறார்

ஸ்வேந ச  வ்யாசகர்த்த –
மத்யஸ்தரான வைதிகர் சொன்ன அளவேயோ
எதிரி முன்பே நீ தானே சொல்லிற்று இல்லையோ -என்கிறார்

——————————–

க்ரியா தத் சக்தி வா கிம் அபி தத் அபூர்வம் பித்ரு ஸூர
பிரசாத வா கர்த்து பலத இதி ரங்கேச குத்ருஸ
த்வத் அர்ச்சா இஷ்டா பூர்த்தே பலம் அபி பவத் ப்ரீதிஜம் இதி
த்ரயீ வ்ருத்தா தத்தத் விதி அபி பவத் ப்ரேரணம் –20-

ஹே ரங்கேச

க்ரியா-யாகம் முதலிய கர்மமோ
அல்லது
தத் சக்தி வா -அந்த கர்மத்தின் சக்தியோ –பாட்டர் பக்ஷம்

கிம் அபி -அநிர் வசநீயமான

தத் அபூர்வம்–அந்த கர்மத்தினால் உண்டாகும் அபூர்வமோ -ப்ரபாகரர் பக்ஷம்

அல்லது
பித்ரு ஸூர பிரசாத வா –பித்ருக்கள் ஸூரர்களுடைய அனுக்ரகமோ -நவீன மீமாம்சகர் பக்ஷம்

கர்த்து பலத இதி -அந்த கர்மங்களை அனுஷ்டிப்பவனுக்கு பயம் அளிப்பவனாக ஆகின்றன என்று

குத்ருஸ ஆஹு -குத்ருஷ்டிகள் சொல்லுகிறார்கள் –

த்ரயீ வ்ருத்தா-வைதிக முதுவர்களோ என்னில்

இஷ்டா பூர்த்தே–ஜப ஹோம தானாதிகளான இஷ்டங்கள் என்ன
குளம் வெட்டுகை கோயில் கட்டுகை ஆகிய பூர்த்தங்கள் என்ன இவை

த்வத் அர்ச்சா இதி -தேவரீருடைய திரு ஆராதனம்-பகவத் கைங்கர்யமே – என்றும்

பலம் அபி–இஷ்டா பூர்த்தங்களால் உண்டாகும் பலன்களும்

பவத் ப்ரீதி ஜம் இதி–தேவரீருடைய உகப்பினாலே உண்டாமவது என்றும்

தத்தத் விதி அபி–அந்த அந்த கர்மங்களின் விதியும்

பவத் ப்ரேரணம் இதி ஆஹு –தேவரீருடைய கட்டளை என்றும் சொல்கிறார்கள் –

குத்ருஷ்டிகள் –அபூர்வம் -கல்பித்து -அவர்களை நிரசனம் –ஆஞ்ஞா ரூப கர்மங்கள் —

இஷ்டா பூர்த்தம் –ஆராதன ரூபம் -அவன் உகப்புக்காகவே தான் –

பட்டன் இப்படிக் கொள்ளாதே -யாகாதிகளாவது அவற்றின் சக்தியாவது காலாந்தரத்திலே ஸ்வர்க்காதி பிரதங்கள் என்றும்

பிரபாகரன் யாகாதிகளால் பிறக்கும் அநிர்வசனீயமான அபூர்வமே பல பிரதம் என்றும்

நவீன மீமாம்சகர் தேவதைகள் பித்ருக்கள் பிரசாதம் பல பிரதம் என்றும்

இவர்கள் ஆராதன ஆராத்ய ஸ்வரூப அநபிஞ்சைதையாலே சொல்கிறார்கள்

பிராமண சரணரான ஞான விருத்தர் ஜ்யோதிஷ்டோமாதிகளும் தடாகாதி நிர்மாணமும் தேவரீருடைய ஆராதனமும் பலன்களும்
தேவரீருடைய பிரசாதாயத்தங்கள்-
யஜதேதாயாதி விதிகளும் தேவரீருடைய நியமனங்கள் என்று சொல்கிறார்கள்

————–

ஆஞ்ஞா தே ச நிமித்த நித்ய விதய ஸ்வர்க்காதி காம்யத் விதி
ச அநுஞ்ஞா சட சித்த சாஸ்த்ர வசதா உபாய அபிசார ஸ்ருதி
சர்வீ யஸ்ய ஸமஸ்த சாசிது அஹோ ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ தே
ரஷா ஆகூத நிவேதிநீ ஸ்ருதி அசவ் த்வத் நித்ய சாஸ்தி தத –21-

ஹே ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ

நிமித்த நித்ய விதய-நைமித்திக நித்ய கருமங்களைப் பற்றிய விதிகள்

ஆஞ்ஞா தே –தேவரீருடைய அதிக்ரமிக்க ஒண்ணாத கட்டளையாம்

ச -அப்படிப்பட்ட பிரசித்தமான ஸ்வர்க்காதி காம்யத் விதி–ஸ்வர்க்காதி காம பலன்களைக் குறித்துப் பிறந்த விதியானது

ச அநுஞ்ஞா -அபேக்ஷை உண்டாகில் அனுஷ்ட்டிக்கலாம் என்று அனுமதி பண்ணுகிற அநுஞ்ஞா யாகம் –

அபிசார கர்மங்களும் காம்ய கர்மங்களும் இந்த வகையில் சேரும் –

க்ரமேண அவர்கள் ஸாஸ்த்ர விதி
விஸ்வாசம் பிறந்து முன்னேற வைத்தவை இவை என்றவாறு –

அபிசார ஸ்ருதி–சத்ருக்களைக் கொல்வதற்கு சாதனமான கார்ய விசேஷத்தை விதிக்கிற வேத பாகமானது

சட சித்த சாஸ்த்ர வசதா உபாய–வஞ்ச நெஞ்சினரையும் ஆஸ்திகர்களாக்க உபாயம் ஆகும்

சர்வீ யஸ்ய ஸமஸ்த–சர்வ லோக ஹிதராயும்

ஸமஸ்த சாசிது -சர்வ நியாமகராயும் இருக்கிற

தே -தேவரீருடைய

ரஷா ஆகூத நிவேதிநீ அசவ்-ஸ்ருதி–ரக்ஷண பாரிப்பைத் தெரிவிக்கின்ற இந்த வேதமானது

த்வத் நித்ய சாஸ்தி–தேவரீருடைய சாஸ்வதமான கட்டளையாகும் —

வேதங்களே உனது ஆஞ்ஞா ரூபம் -உன்னுடைய ரக்ஷகத்வாதிகளை வேதங்கள் உணர்த்தும் –

விதி நித்யம் நைமித்திகம் காம்யம் மூன்று வகைகள் –

நித்யம் ராஜா ஆஜ்ஜை போலே அக்ருத்யமாம் போது பிரதி பந்தமாம் –

காம்ய விதிகள் அகரனே ப்ரத்யவாயம் இன்றிக்கே -ஸாஸ்த்ர விஸ்வாசமூட்டி பரம்பரையா மோக்ஷ ருசி பர்யந்தம் கூட்டிச் செல்லும்

சர்வருக்கும் ஹித பரராய் ஸமஸ்த அதிகாரிகளுக்கும் ருசி அநு குணமாக தேவரீருடைய ரக்ஷண ரூபமான
தாத்பர்யத்தை தெரிவிக்கும்

ஸாஸ்த்ர ப்ரவர்த்தன மூலமான நிருபாதிக கிருபையை அனுசந்தித்து -எத்திறம் என்கிறார்

————

அத்ர ஆஸ்தே நிதி இதி வத் புமர்த்த பூதே
சித்த அர்த்தா அபி குண ரூப வ்ருத்த வாதா
ரெங்கேச த்வயி சகலா சமன்வயந்தே ந
உபாஸா பல விதிபி விசேஷ ஏஷாம்–22-

ஹே ரெங்கேச

சகலா-சமஸ்தமான

குண ரூப வ்ருத்த வாதா–தேவரீருடைய திருக் கல்யாண குணங்கள் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் -திவ்ய சேஷ்டிதங்கள்
ஆகிய இவற்றைச் சொல்லும் உபநிஷத் பாகங்கள்

சித்த அர்த்தா அபி -கார்ய பரங்கள் இன்றியே சித்த பரங்கள் ஆனாலும்

புமர்த்த பூதே த்வயி–புருஷார்த்த பூதராய் இருக்கிற தேவரீர் இடத்தில்

அத்ர ஆஸ்தே நிதி இதி வத்–இங்கே நிதி இருக்கிறது என்று சொல்லுகிற சித்த பர வாக்கியம் போலே

சமன்வயந்தே –நன்கு பொருந்துகின்றன

ஏஷாம்–கீழ்ச் சொன்ன குண ரூப வ்ருத்த வாதங்களுக்கு

உபாஸா பல விதிபி-உபாசனத்தையும் பலத்தையும் ப்ரதிபாதிக்கின்ற வாக்யங்களினால்

ந விசேஷ–ஒரு அதிசயமும் இல்லை –

பூர்வ மீமாம்சகர் தான் இவற்றை பிரமாணம் என்று கொள்ளாமல் கார்ய பர ஸ்ருதி வாக்யங்களே பிரமாணம் என்பர் –

இவையும் புருஷார்த்த போதகங்களாய்க் கொண்டு உபாசன விதி வாக்கியங்களைப் போலே ஸ்வத பிரமாணங்களே –

ஜிஜ்ஞாஸ அதிகரணம் சமன்வய அதிகரணம் இரண்டாலும் இவை ஸ்தாபிக்கப் படுகின்றன

உனது கல்யாண குணங்களை விவரிக்கும் வேதங்கள் -இங்கு பெரும் புதையல் உள்ளது போன்று–
சித்த வாக்யங்களாக பன்னி உரைக்கும்

இப்படி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரயோஜனங்களான விதி வாக்யங்களுக்கு கார்ய ப்ரதயா ப்ரமண்யம் உண்டானாலும்
சித்த வஸ்து போதகங்களான சித்த வாக்யங்களுக்கு –
நிரதிசய புருஷார்த்த பூதரான தேவரீருடைய
ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டித வியாபாரங்கள் இவற்றை பிரதிபாதித்து சித்த பரங்களானாலும்
இங்கே நிதி உண்டு என்கிறது போலே
உபாசன தத் பல விதாய வாக்யங்களோடே துல்ய சீலங்களாய்
அதுகளுக்கு சேஷம் அன்றிக்கே பிரமாணம் ஆகிறதுகள் என்கிறார் –

————–

சித்த பர ஸ்ருதி வாக்கியங்கள் ஸ்வத பிரமாணம் என்றார் கீழ் –
அத்விதீய ஸ்ருதிக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் இதில் –

ந த்விதீயமே அத்விதீயம் என்பது தத் புருஷ சமாசம்
ந வித்யதே த்விதீயம் யஸ்ய -யஸ்மின் -பஹு வ்ருஹீ சமாசம் –

ப்ரஹ்மத்தோடு சம்பந்தம் இல்லாத வஸ்து இல்லை என்றவாறு

வேறானது –
ஒப்பானது –
மாறானது -மூன்று அர்த்தங்கள் –

இரண்டாவது இல்லை என்று கொள்ள முடியாதே –
அத்விதீயம் விசேஷணம்
ப்ரஹ்மமொன்றே சத்யம் மற்றவை மித்யை பொய் என்கிற வாதம் நிரசனம்

தேஹ தேஹினி காரேண விக்ருத்ய ஜாதி குணா கர்ம ச
த்ரவ்யே நிஷ்டித ரூப புத்தி வசநா தாத்ஸ்த்யாத் ததா இதம் ஜகத்
விஸ்வம் த்வயி அபி மந்யஸே ஜகதிஷே தேந அத்விதீய தத
மாயா உபாதி விகார சங்கர கதா கா நாம ரங்கேஸ்வர –23-

ஹே ரங்கேஸ்வர

தேஹ சரீரமானது

தேஹினி –ஆத்மாவின் இடத்திலும்

காரேண விக்ருத்ய–தங்கள் காரண வஸ்துவின் இடத்திலும் கார்ய ரூபமான விகாரங்களானவை

ஜாதி குண கர்ம ச–ஜாதியும் குணமும் கர்மமும்

த்ரவ்யே -த்ரவ்யத்தின் இடத்தில் இருந்தும்

தாத்ஸ்த்யாத்–ஒரு போதும் விட்டுப் பிரியாது இருக்கும்
விசேஷணம் என்கிற காரணத்தினால்

நிஷ்டித ரூப புத்தி வசநா–ரூபத்தில் அனுபவம் வியவஹாரம் என்னும் இவை நிலைத்து இருக்கப் பெற்றுள்ளன

ததா இதம் ஜகத்–அவ்விதமாகவே இந்த எல்லா உலகத்தையும்

விஸ்வம் அபி த்வயி–எல்லா உலகத்தையும் தேவரீர் இடத்தில்

அபி மந்யஸே–நிஷ்டிபுத்தி வசனமாம் படி சங்கல்பித்து உள்ளீர்

த ரூப தேந அத்விதீய ஜகதிஷே –ஆகையால் அத்விதீயாராக சொல்லப்பட்டீர்

தத-அதனால்

மாயா உபாதி விகார சங்கர கதா கா நாம –மாயை உபாதி விகாரம் என்னும் இவற்றின்
சம்பந்தப் பேச்சானது ஏது-அது பிசகு என்றபடி –

ஆகவே
தேஹத்துக்கும் தேஹிக்கும் காரியத்துக்கும் காரணத்துக்கும் ஜாதி குண கர்மங்களுக்கும் த்ரவ்யத்துக்கும்
அப்ருதக் சித்தி நிபந்தனமாக ஐக்ய நிர்தேசம் கூடுவது போலவே

ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் உண்டான ஐக்கியமும் என்றவாறு –

மாயா வாத சங்கர மதமும் -உபாதி பேதம் பாஸ்கர மதமும் –

ப்ரஹ்மமே பரிணமிக்கிறது விகார வாதம் யாதவ பிரகாச மதம் -நிரசனம்–

உடல் ஆத்மா -அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் –
மாயா வாதங்கள்
உபாதி வாதங்கள்
விகார வாதங்கள் நிலை நிற்காதே

தேவதாதி சரீரம் சரீரீ இடத்திலும் -கட படாதி விகாரங்கள் காரணத்திலும் –

கோத்வாதி ஜாதியும்–
ஸூக்லாதி குணங்களும் –
கமனாதி கிரியையும் –
த்ரவ்யத்திலும்

அப்ருதக் சித்த சம்பந்தத்தால் பர்யசிக்குமே –

அப்படியே சர்வ ஜகத்தும் அப்ருதக் சித்த விசேஷணமாய் –
பிரகாரமாய் –
தேவரீர் அத்வதீயமாய் இருக்க

சங்கர பக்ஷத்தில் ப்ரஹ்மத்துக்கு மாயா சம்பந்தமும்

பாஸ்கர பக்ஷத்தில் உபாதி சம்பந்தமும்

யாதவ பிரகாச பக்ஷத்தில் விகார சம்பந்தமும் சொல்வது எதற்க்காக என்கிறார் –
அசங்கதை அன்றோ -என்றபடி

—————

ஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரசன நியமன வ்யாபநை ஆத்மந தே
சேஷ அசேஷ பிரபஞ்ச வபு இதி பவத தஸ்ய ச அபேத வாதா
சர்வம் கலு ஜெகதாத்ம்யம் சகலம் இதம் அஹம் தத் த்வம் அஸி ஏவம் ஆத்யா
வ்யாக்யாதா ரங்க தாம ப்ரவண விஜயபி வைதிகை ஸார்வ பவ்மை –24-

ஹே ரங்க தாம ப்ரவண

ஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி -ரஷணத்தாலும் ஸ்ருஷ்டிப்பதாலும் காரியங்களில் பிரவர்த்தனம் செய்வதாலும்

க்ரசன -சமயத்தில் திரு வயிற்றினுள் வைத்து ரக்ஷிப்பதாலும்

நியமன–ஒவ்வொரு வஸ்துக்குள்ளும் உள் புகுந்து நியமிப்பதாலும்

வ்யாபநை –எங்கும் வியாபிப்பதாலும்

ஆத்மந தே–சர்வ ஆத்மாவாய் இருக்கின்ற தேவரீருக்கு

சேஷ –சேஷப்பட்டதான

அசேஷ பிரபஞ்ச–உலகம் முழுவதும்

வபு இதி –தேவரீருக்கு சரீரமாகா நின்றது என்கிற காரணத்தினால்

பவத தஸ்ய ச –தேவரீருக்கு அவ்வுலகத்துக்கும்

அபேத வாதா-அபேதத்தை சொல்லுமவையான

சர்வம் கலு -சர்வம் கலு இதம் ப்ரஹ்ம

ஜெகதாத்ம்யம் -ஜெகதாத்ம்யம் சர்வம்

சகலம் இதம் அஹம் -சகலம் இதம் அஹம் ச வாஸூ தேவா

தத் த்வம் அஸி-தத் த்வம் அஸி ஸ்வேத கேதோ

ஏவம் ஆத்யா-என்று இவை முதலான பிரமாணங்கள்

வ்யாக்யாதா விஜயபி வைதிகை ஸார்வ பவ்மை -ஜயசாலிகளான வைதிக தலைவர்களினால் பொருத்தம்
உடையனவாக வியாக்யானிக்கப் பட்டன –

சாமாநாதி கரண்ய நிர்த்தேசம் உப பன்னம்

ஸ்ரீ கோயிலில் ஆதாரம் -பள்ள மடையாகக் கொண்டு –
பேத அபேத கடக ஸ்ருதிகள் எல்லாவற்றிலும் ப்ரவணராய் –
வேதார்த்த வித்துக்களான வ்யாஸ பராசராதி மகா ரிஷிகளின் திரு உள்ளக் கருத்தை பின் சென்று
நாத யாமுன ராமானுஜ ப்ரப்ருதிகள் நிர்வாகம்

ஸமஸ்த பிரபஞ்சமும் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே தேவரீருக்கே சேஷமாய்க் கொண்டு சரீரமாய் –
சரீர வாசக சப்தம் சரீரி பர்யந்த போதகம் லோக சித்தமாகையாலே –
நியாந்தாவாய் வியாபித்து ஆத்மாவான தேவரைச் சொல்லுகிற சப்தத்தோடு
பிரபஞ்ச வாசி சப்தத்துக்கு சாமாநாதி கரண்ய நிர்த்தேசம் உப பன்னம்
என்று பூர்வர்கள் நிர்வகித்தார்கள் –

———————

ச ராஜகம் அ ராஜகம் புந அநேக ராஜம் ததா
யதாபிமத ராஜகம் ஜெகதீம் ஜஜல்பு ஜடா
ஜகவ் அவச சித்ர தராதரத மத்வ தர்க்க
அங்கிகா ஸ்ருதி சிதசிதீ த்வயா வரத நித்ய ராஜந் வதீ –25-

ஹே வரத

ஜடா–மூடர்கள்

இதம் ஜகத் -இந்த உலகத்தை

ச ராஜகம்–அனுமானத்தால் சித்திக்கிற ஈஸ்வரனோடு கூடியதாகவும் -நையாயிக பக்ஷம் இது –

அ ராஜகம் –ஈஸ்வரன் அற்றதாகவும்–பூர்வ மீமாம்சகர்கள் பக்ஷம்

புந அநேக ராஜம்–பல ஈஸ்வரர்களை உடைத்தாயும் -முதலாம் திரு உருவம் மூன்று என்பர் –

யதாபிமத ராஜகம் –அவரவர்களுடைய அபிமானத்துக்குத் தக்கபடி கல்பிக்கப்பட்ட ஈஸ்வரனை யுடையதாகவும்

ஜஜல்பு–பிதற்றினார்கள்

அவச சித்ர தராதரத மத்வ தர்க்க அங்கிகா–பர தந்த்ரர்களுக்கே உண்டாகக் கூடிய விசித்திர தன்மை என்ன –
ஏற்றத் தாழ்வு பெற்று இருக்கும் தன்மை என்ன –
இவற்றைப் பற்ற அநு கூல தர்க்கத்தைத் துணை கொண்ட

வாசம் என்றது அஸ்வ தந்த்ரன் -கர்ம-பரவசம் என்றவாறு –
இவர்களுக்கு தேவ மனுஷ்யாதி வைச்சித்ரம் உண்டே

தரா தரம் என்றது ஞான சக்த்யாதிகளில் வாசி உண்டே

ஸ்ருதி சிதசிதீ –வேதமானது சேதன அசேதனங்களை

த்வயா வரத நித்ய ராஜந் வதீ ஜகவ் –தேவரீராகிற நல்ல ஈஸ்வரனை எப்போதும் உடையவைகளாக ஓதிற்று

தர்க்கத்தாலும் ஸ்ருதியாலும் சர்வேஸ்வரவம் ஸ்தாபிதம்

நையாயிகன்-ஜகத் நிமித்த காரண மாத்ரமான ஈஸ்வரவிஷ்டம் என்றும்

பூர்வ மீமாம்சகன் நிரீஸ்வரம் என்றும்

த்ரி மூர்த்தி சாம்யவாதி ப்ரஹ்மாதி அநேக ஈஸ்வர விசிஷ்டம் என்றும்

ஹிரண்ய கர்ப்ப பாசு பத அர்த்தங்களை அபிமதரான ப்ரஹ்ம ருத்ரர்களாகிற ஈஸ்வரனோடு கூடியது என்றும் சொல்லுகிறது

ஸ்ருதி ஸ்வாரஸ்ய அநபிஜ்ஜதையாலே–
ஜகத் ஸ்வதந்த்ரமாகில் தேவ மனுஷ்யாதி வைசித்ர்யமும் –
ஞான சக்த்யாதி தாரதம்யமும் கூடாது என்கிற தர்க்கத்தோடு கூடியதாய்க் கொண்டு
சித் அசித் ரூபமான ஜகத் நித்யரான தேவரீரான நல்ல ராஜாவை யுடையது என்று
ஸ்ரோதாக்களுக்கு செவிக்கு இனியதாகச் சொல்லுகிறது -என்கிறார்

—————–

ப்ரஹ்ம ஆத்யா ஸ்ருஷ்ய வர்க்கே ப்ருகுடி படதயா உத்காடிதா ந அவதார
பிரஸ்தாவே தேந ந த்வம் ந ச தவ சத்ருஸா விஸ்வம் ஏக ஆத பத்ரம்
லஷ்மீ நேத்ரா த்வயா இதி ஸ்ருதி முனி வசனை த்வத் பரை அர்ப்பயாம
ஸ்ரீ ரெங்க அம்போதி சந்த்ர உதய ஜலம் உசிதம் வாதி கௌதஸ் குதேப்ய —26-

ஹே ஸ்ரீ ரெங்க அம்போதி சந்த்ர உதய-ஸ்ரீ ரெங்கமாகிற கடலுக்கு சந்திரன் உதித்தால் போலே
ஸம்ருத்தி அளிக்கும் பெருமானே

ப்ரஹ்ம ஆத்யா –ப்ரம்மா தொடக்கமான தேவர்கள்

ஸ்ருஷ்ய வர்க்கே ப்ருகுடி படதயா –தேவருடைய புருவ நெறிப்பிக்கு கை கட்டி காத்து இருப்பவர்கள் ஆகையால்
படைக்கப்படும் வகுப்பில்

உத்காடிதா–ஸ்பஷ்டமாக கூறப் பட்டு இருக்கிறார்கள்

அவதார பிரஸ்தாவே –ராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் சொல்லும் இடத்தில்

ந உத்காடிதா-அவர்கள் கூறப்பட்டு இருக்க வில்லை

தேந ந த்வம் –ஆகையால் அவர்கள் தேவரீர் அல்லர்

ந ச தவ சத்ருஸா –தேவரீரை ஒத்தவர்களும் அல்லர்

லஷ்மீ நேத்ரா–திரு மகள் கொழுநரான

த்வயா விஸ்வம் -தேவரீரால் இவ்வுலகம் எல்லாம்

ஏக ஆதபத்ரம் இதி-அத்விதீய நாதனை உடையது என்று

த்வத் பரை–தேவரீரையே விஷயமாக உடைய

ஸ்ருதி முனி வசனை –வேதங்களையும் மகரிஷி வசனங்களையும் கொண்டு

வாதி கௌதஸ் குதேப்ய–குதர்க்க வாதிகளின் பொருட்டு

அர்ப்பயா ஜலம் உசிதம்–அவர்களுக்குத் தகுந்த தர்ப்பண ஜலத்தைத் தருகிறோம் –
தூர்வாதி பிரேதங்களுக்கு ஜலாஞ்சலி விடா நின்றோம் –

உனது புருவ நெருப்புக்கு அடங்கியே ஸ்ருஷ்ஜமான ப்ரஹ்மாதிகள் -வேதங்களில் சர்வேஸ்வரன் –

ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் நீ ஒருவனே என்பதைக் கொண்டே தவறான வாதிகளுக்கு ஏற்ற
தர்ப்பண நீரை நாங்கள் விடுகிறோம்-

ப்ரஹ்மாதிகள் -ஸ்ருஜ்ய கோடியிலே-அவதாரங்கள் அல்லர்-
ராம கிருஷ்ணாதி வரிசையில் சொல்லப்படுபவர் அல்லர் –
தேவருடன் ஒத்தவர் அல்லர் –

ஸ்ரீயபதியான தேவரீர் ஸர்வேஸ்வரேஸ்வரர் –
ஏக சத்ரத்தைக் கொண்ட ஒரே நியாமகன் –என்று சொல்லி

ஜிதேர்களாய் பிரேத பிராயரான வாதிகளுக்கு உசிதமாக ஜல தர்ப்பணம் பண்ணுகிறோம் என்கிறார்

———–

தோஷ உபதா அவதி சம அதி சயாந சங்க்யா
நிர்லேப மங்கல குண ஓக துகா ஷட் ஏதா
ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ
த்வாம் ரங்கேச பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி –27-

ஹே ரங்கேச

தோஷ –குற்றம் என்ன

உபதா –உபாதி என்ன

அவதி -எல்லை என்ன

சம –சத்ருச வஸ்து என்ன

அதி சயாந –மேற்பட்ட வஸ்து என்ன

சங்க்யா–எண்ணிக்கை என்ன

நிர்லேப –ஆகிய இவற்றின் சம்பந்தம் இல்லாத

மங்கல குண ஓக –கல்யாண குணங்களின் சமூகத்தை

துகா ஷட் ஏதா ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ–சுரக்கின்ற இந்த ஞானம் ஐஸ்வர்யம்
சக்தி வீர்யம் பலம் தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்

த்வாம் -தேவரீரை

பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி-ரத்னத்தை ஒளிகள் பெருமைப் படுத்துவது போல் பெருமைப் படுத்துகின்றன –

கணக் கறு நலத்தனன் –
உயர்வற உயர் நலம் உடையவன் –
திருக் கல்யாண குணங்களை அனுபவிக்கக் கோலி
முந்துற அவற்றுக்கு ஊற்று வாயான இந்த ஆறு குணங்களையும் அருளிச் செய்கிறார்

ஞானம்-சர்வ காலத்திலும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத்காரம்

பலம் -உபய விபூதியையும் அநாயேசேந வஹிக்க வல்ல மிடுக்கு

ஐஸ்வர்யம் -அனைத்தையும் தன் குடைக் கீழ் அடக்கி ஆள வல்ல நியந்த்ருத்வம்

வீர்யம் -ஜகத் தாரண நியமங்களிலே சாரீரக கிலேசம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை

சக்தி -எந்த பிரதிபந்தகங்களும் முட்டுக் கட்டாதபடி எடுத்த கார்யம் தலைக் கட்ட வல்ல சாமர்த்தியம்

தேஜஸ் எதிரிகள் குடல் குழம்பும்படியான மதிப்பு –
பஹு பிரயத்தன சாத்யமானவற்றை சஹகாரி நிரபேஷனாக
அல்ப ப்ரயத்னத்தாலேயே தலைக் கட்டுகை-

இவன் சம்பந்தத்தால் குணங்களுக்குப் பெருமை என்றும்

குணங்களால் இவனுக்கு பெருமை என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ-

ஞானாதி ஷட் குணங்கள் அனைத்து கல்யாண குணங்களுக்கும் பீஜம் —
ரத்தினத்துக்கு தேஜஸ் போலவே கல்யாண குணங்களும் உன்னைக் காட்டித் தருமே —

ஆக இது வரை பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக -அநு குணமாக ச உப ப்ராஹ்மண ஸ்ருதி
பிரமாணங்களைக் காட்டி அருளி

ஸ்ரீ மானான ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே சித் அசித் ஆத்மகமான ஜகத்தைக் குறித்து
காரணத்வத்தையும் ஈஸ்வரத்தையும் சமர்ப்பித்து

ஸ்ரீ த்வய உத்தர காண்ட ஸ்ரீ மத் சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்

இதில் காரணத்வ நிர்வாஹத்தை காட்டி அருள திரு உள்ளம் பற்றி
நார சப்தார்த்தங்கள் ஆகையால்
நிர் துஷ்டங்களாய் –
நிருபாதிகங்களாய் –
நிரவதிகங்களாய் –
நிஸ் சமாப்யதிகங்களாய்-
நிஸ் சங்க்யங்களாய்-
மங்களமாய் இருக்கிற தயாதி குணங்களுக்கு மூலங்களாய்
பகவச் சப்தார்த்தங்களாய்-பிரசித்தங்களான
ஞானாதி ஷட் குணங்களும்
ரத்னத்தைக் காந்திகள் போலே தேவரை அலங்கரிக்கிறது -என்கிறார் –

——————–

ஞான குண ஸ்வரூப நிரூபணம் இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

யுகபத் அநிசம் அக்ஷைஸ் ஸ்வைஸ் ஸ்வதஸ் வாஷ கார்யே
நியமம் அநியமம் வா ப்ராப்ய ரங்காதி ராஜ
கர தலவத் அசேஷம் பஸ்யசி ஸ்வ பிரகாசம்
தத் அவரணம் அமோகம் ஞானம் ஆம்நாசி ஷு தே –28-

ஹே ரங்காதி ராஜ

த்வம் -தேவரீர்

அக்ஷைஸ் ஸ்வைஸ் -தனது இந்த்ரியங்களாலே யாதல்

ஸ்வதஸ் வா–இந்திரியங்களின் அபேக்ஷை இன்றியே ஸ்வயமாகவே யாதல்

அஷ கார்யே–கண் முதலிய இந்திரியங்களின் தொழிலாகிய பார்வை முதலியவற்றில்

நியமம் –ஒரு வியவஸ்தையோ

அநியமம் வா –அப்படி ஒரு விவஸ்தை ஒன்றும் இல்லாமையே

ப்ராப்ய-அடைந்து

அநிசம்–எப்போதும்

அசேஷம்–உபய விபூதியில் உள் அடங்கிய அனைத்தையும்

யுகபத் -ஏக காலத்தில்

கரதலவத்–உள்ளங்கையைப் பார்ப்பது போலே

பஸ்யசி–சாஷாத் கரிக்கிறீர்

ஸ்வ பிரகாசம்–ஸ்வமேவ பிரகாசிப்பதும்

அவரணம் –ஆவரணம் அற்றதும்

அமோகம்–யதார்த்தமுமான

தத் -அந்த சாஷாத் காரத்தை

ஞானம் ஆம்நாசிஷு தே–தேவரீருடைய ஞானமாக உபநிஷத்துக்கள் ஓதி வைத்தன –

அனைத்தையும் ஒரே நேரத்தில் நோக்கியபடி -உள்ளங்கை நெல்லிக்கனி இருப்பதைக் காண்பது போன்று
எளிதாக அறியும் சர்வஞ்ஞன் அன்றோ-

ஞானம் -என்பதை விளக்குகிறார் –

சஷுராதி த்வாரத்தால் ஆதல் –
தர்ம பூத ஞானத்தால் யாதல் –
இந்த்ரியங்களாளிலும் தத் அதீந்த்ரியங்களாலே தத் தத் விஷயங்களையும்
அந்ய இந்திரிய விஷயங்களையும்
இப்படி சர்வத்தையும்-
க்ராஹ்ய க்ராஹகீ நியமம் இல்லாமல்- ஒருக்காலே கரதலாமலகம் போலே நித்தியமாக
ஸமஸ்தமும் ஏக காலத்திலேயே தேவரீர் சாஷாத் கரிக்கும் சாஷாத்காரத்தை
ஸ்வ ப்ரகாசமாயும் –
ஆவரண ரஹிதமாயும் –
யதார்த்தமாயும் உள்ள ஞானம் என்று உபநிஷத்துக்கள் சொல்லுமே –

——————

நயன ஸ்ரவண த்ருஸா ஸ்ருனோஷி அத தே ரெங்க பதே மஹே சிது
கரணை அபி காம காரிண கடதே சர்வ பதீநம் ஈஷணம்–29-

ஹே ரெங்க பதே

நயன ஸ்ரவண –கண்களாகிய காதுகளை உடையவராய்

த்ருஸா ஸ்ருனோஷி –திருக் கண்களால் கேட்கின்றீர்

அத-பின்னையும்

கரணை அபி–மற்ற இந்திரியங்களைக் கொண்டும்

காம காரிண–இஷ்டப்படி செய்கின்ற

தே மஹே சிது–விலக்ஷணனான ஈஸ்வரனான தேவரீருக்கு

கடதே சர்வ பதீநம் ஈஷணம்–சர்வதோமுகமான சாஷாத்காரம் கூடா நின்றது –

கண்களால் கேட்க முடியும்
காதுகளால் பார்க்கவும் -இருப்பதை புகழ்கிறார் –

தேவரீர் திருச் செவியால் பார்க்கிறது –
திருக் கண்களால் கேட்க்கிறது-
இப்படி கரணங்களால் யதேஷ்டமான
தேவரீருக்கு லோக விலக்ஷணமான கரண ஞான சக்த்யாதிகள் ப்ரதிபாதங்கள் ஆகையால்
போனது எல்லாம் வெளியான சாஷாத்காரம் கடிக்கக் குறை என்ன என்கிறார் –

———————-

சார்வஞ்யேந அஜ்ஞ மூலம் ஜகத் அபிததத வாரிதா சாக்ஷி மாத்ராத்
சாங்க்ய யுக்தாத் காரணம் த்வாம் பரயதி பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்
அப்ரேர்ய அந்யை ஸ்வ தந்த்ர அப்ரதிஹதி சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம்
யத்ர இச்சா லேசத த்வம் யுகபத் அகணயந் விஸ்வம் ஆவிச் சகர்த்த–30-

ஹே பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்

ஜகத்–இந்த உலகத்தை

அஜ்ஞ மூலம்–அபிததத –அசேதனத்தால் படைக்கப்பட்டதாகச் சொல்கிறவர்கள்

சார்வஞ்யேந வாரிதா –தேவரீருடைய சர்வஞ்ஞத் வத்தால் நிரசிக்கப் பட்டார்கள் –

யத்ர சதி -யாதொரு ஐஸ்வர்ய குணம் இருக்கும் அளவில்

அப்ரேர்ய அந்யை–பிறரால் ஏவப்படாதவராய்

ஸ்வ தந்த்ர-த்வம் -ஸ்வ அதீனரான தேவரீர்

சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம் –புண்ய பாப ரூப கர்மங்களின் விசித்திர வகையினாலே பல வகைப்பட்ட

விஸ்வம் இச்சா லேசத-சகலத்தையும் சங்கல்ப லேசத்தினாலேயே

அகணயந்-அவலீலையாய் நினைத்தவராய்

யுகபத் –ஏக காலத்திலேயே

அப்ரதிஹதி -தடையின்றி

ஆவிச் சகர்த்த-படைத்தீரோ

சா ஐஸ்வரீ –அப்படிப்பட்ட ஐஸ்வர்யம் என்னும் குணமானது

காரணம் த்வாம்–ஜகத்துக்கு உபாதான காரணமாய் இருக்கின்ற தேவரீரை

சாங்க்ய யுக்தாத்–சாங்க்யரால் சொல்லப்பட்ட

சாக்ஷி மாத்ராத்–சாக்ஷி மாத்ர புருஷனின் காட்டில்

பரயதி–வேறு படுத்து கின்றது –

சாங்க்யர் சாக்ஷி மாத்ர புருஷன் என்பர் –

நீயோ சர்வஞ்ஞன்
ஸத்ய ஸங்கல்பன் –
சர்வ காரணன் –

இப்படி சர்வஞ்ஞரான தேவர் மூலமே ஜகத் ஸித்திக்கிறது-

சாங்க்யர் அசேதனமான பிரக்ருதியே மூலம் என்பர்

நிர்விசேஷமாகையால் அஞ்ஞான ப்ரஹ்மமே மூலம் என்பர்

இவர்கள் பக்ஷம் நிரசித்து
பிரேரிரிகர் இல்லா நிரதிசய ஸ்வ தந்தரரான ப்ரதிஹத்தி இல்லாமல்
புண்ய பாப ரூப கர்மா வைச்சித்திரத்தாலே
விசித்ரமமான சர்வ ஜகத்தையும் சங்கல்ப ஏக தேசத்தால் ஏக காலத்தில்
தேவரீர் ஸ்ருஷ்டித்து அருளுகிறது என்கையாய்
சாக்ஷி மாத்திரம் என்கிற சாங்க்ய பக்ஷம் நிரசனம்

அபரிஹத சங்கல்பத்துவம் உமக்கே அசாதாரணம்

——————–

கார்யே அனந்தே ஸ்வ தநு முகத த்வாம் உபாதானம் ஆஹு
சா தே சக்தி ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய
இச்சா யாவத் விஹரதி சதா ரங்க ராஜ அந பேஷா
ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா ஊர்னநாபவ் விபாவ்யா –31-

ஹே ரங்க ராஜ

அந பேஷா–ஸ்வதஸ் ஸித்தமான

தே இச்சா–தேவரீருடைய சங்கல்பமானது

ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய–இது செய்யக் கூடியது இது செய்யக் கூடாதது என்கிற வரம்பை மீறி

சதா -எப்போதும்

யாவத் விஹரதி–எங்கும் முழுவதும் உலாவுகின்றது

சா தே சக்தி -அப்படிப்பட்ட சங்கல்பமே தேவரீருடைய சக்தி என்கிற குணமாகும்

இப்படிப்பட்ட சக்தி தேவரீருக்கு இருக்கின்றதால்

கார்யே அனந்தே–எல்லையில்லாத கார்ய வர்க்கங்களின்

ஸ்வ தநு முகத த்வாம்–தேவரீருடைய சரீரமாகிய சேதன அசேதன த்வாரா -தேவரீரை

உபாதானம் ஆஹு–உபாதான காரணமாக வைதிகர்கள் சொல்லுகின்றனர்

ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா–அப்படிப்பட்ட சக்தி தான் பாசுபதமத பிரகிரியையில் காட்டிலும் வ்யாவ்ருத்தி

சம்பாதகம் ஆகின்றது ஈஸாநா -பசுபதி -ஐசா நாம் -பாசுபத மத ப்ரக்ரியா என்றபடி –

ஊர்னநாபவ் விபாவ்யா-அந்த சக்தி சிலந்திப் பூச்சியின் இடத்தில் காணத் தக்கது –

ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தால்
தந்து ஜாதமான கார்ய ஜாதத்துக்கு
தான் உபாதானமாம் படி உண்டான ஸ்வ பாவம் –

சர்வ சக்தன் -உபாதான குணம் இருந்தும் அதிகாரம் உண்டே –

சிலந்தி இடமே காணலாம் -பாசுபத வாத நிரசனம்

ஹேத்வந்தர நிரபேஷமான சங்கல்பம் -ஸமஸ்த காரியத்திலும் சரீர த்வார உபாதானமாக ஸ்ருதிகள் சொல்லும்

சக்யம் சக்யம் வாசி இல்லாமல் கரை அழித்து செய்யும் அவதி இல்லாத சக்தி

சங்கல்பம் கொண்டே ஜகத் நிர்வாஹணம்

சிலந்தி த்ருஷ்டாந்தம்

———————

ஸ்வ மஹிம ஸ்திதி ஈச ப்ருச க்ரிய அபி
அகலித ஸ்ரம ஏவ பிபர்ஷி யத்
வபு இவ ஸ்வம் அசேஷம் இதம் பலம்
தவ பர ஆஸ்ரித காரண வாரணம் –32-பல குண அனுபவம்-

ஹே ஈச

ஸ்வ மஹிம ஸ்திதி-த்வம் -தன்னுடையதான மஹாத்ம்யத்தில் நிலை நிற்கப் பெற்று இருக்கும் தேவரீர்

ப்ருச க்ரிய அபி-அபரிமிதமான சேஷ்டிதங்களை உடையவராய் இருந்த போதிலும்

அகலித ஸ்ரம ஏவ–ஆயாசம் உண்டாகப் பெறாதவராகவே

அசேஷம் ஜகத் -சகல லோகத்தையும்

வபு இவ ஸ்வம் -பிபர்ஷி–தனது சரீரத்தைப் போலவே வஹிக்கின்றீர்

இதி யத் தத் -என்பது யாது ஓன்று உண்டு -அது –

தவ பலம் -தேவரீருடைய பலம் என்ற குணம்

இதம் -இக் குணமானது

பர ஆஸ்ரித காரண வாரணம்–அந்யாதிஷ்டமாய்க் கொண்டு காரணமாவதை வியாவர்த்திப்பிக்கிறது

வாரணம்-வியாவர்த்தகம் என்றபடி -லோக விலக்ஷணம் என்றபடி

ஸ்வ மஹாத்ம்யத்தாலே அநேக வியாபாரங்கள் பண்ணினாலும் ஸ்ரமம் உண்டாக்காதே
சர்வ ஜகத்தையும் தேவர் சரீரம் போலே பரிக்கிறது என்கிற இது
அதுக்கு பலம் அந்யா திஷ்டிதமாய்க் கொண்டு
காரணமானத்தை வ்யாவர்த்திப்பிக்கிறது என்கிறார் –

—————–

ம்ருக நாபி கந்த இவ யத் சகல அர்த்தாந்
நிஜ சந்நிதே அவிக்ருத விக்ருனோஷி
பிரிய ரங்க வீர்யம் இதி தத் து வதந்தே
ச விகார காரணம் இத வினிவார்யம்–33-வீர்ய குண அனுபவம்-

ஹே பிரிய ரங்க–திரு உள்ளத்துக்கு உகப்பான ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலை உடையவரே

த்வம் -ம்ருக நாபி கந்த இவ–தேவரீர் கஸ்தூரியின் பரிமளம் போலே

ஸ்வயம் அவிக்ருத–தாம் விகாரப் படாதவராகவே

நிஜ சந்நிதே–தமது சந்நிதிதான மாத்திரத்தாலே

சகல அர்த்தாந்–சகல பதார்த்தங்களையும்

விக்ருனோஷி–விகாரப் படுத்துகின்றீர்

இதி யத் -என்பது யாது ஓன்று உண்டோ

தத் வீர்யம் இதி –அதனையே வீர்ய குணம் என்று

வதந்தே–வைதிகர்கள் சொல்லுகின்றனர்

ச விகார காரணம் இத வினிவார்யம்-இதனால் விகாரத்தை யுடைத்தாய்க் கொண்டு காரணமாகின்றவை
வியாவர்த்திக்க உரியது
விநிவாரயம் -வியவ

வீர்யமாவது கஸ்தூரிகா கந்தமானது -ஸ்வ சந்நிதி மாத்திரத்தாலே தான் அவிக்ருதமாய்க் கொண்டு
சன்னிஹிதருடைய மனஸ்ஸூக்களை விகரிக்குமா போலே

தேவரும் அப்படியே சகல பதார்த்தங்களையும் விகரிப்பிக்கிறது என்று சொல்லுவார்கள்

அத்தால் ச விகாரமான காரணம் வியாவ்ருத்தம் ஆகிறது என்கிறார்

—————-

ஸஹ காரி அபேக்ஷம் அபி ஹாதும் இஹ தத் அநபேஷ கர்த்ருதா
ரங்க தந ஜயதி தேஜ இதி ப்ரணத ஆர்த்திஜித் பிரதிபட அபி பாவுகம்–34- தேஜஸ் குண அனுபவம்

ஹே ரங்க தந

ஸஹ காரி அபேக்ஷம் அபி –சஹகாரி காரணங்களை அபேக்ஷித்து இருக்கின்ற காரணத்தையும்

ஹர்தும்–வியவச்சேதிக்கும் பொருட்டு

இஹ தத் அநபேஷ கர்த்ருதா-அந்த சஹகாரி காரணத்தை எதிர்பாராத
காரணத்வம் என்பது யாது ஓன்று உண்டோ அது தான்

ஜயதி தேஜ இதி –தேஜஸ் குணம் என்று விளங்குகின்றது

இக் குணமானது

ப்ரணத ஆர்த்திஜித்–ஆஸ்ரிதர்களின் ஆர்த்தியைப் போக்கக் கூடியதாகவும்

பிரதிபட அபி பாவுகம்-எதிரிகளை திரஸ்கரிக்கக் கூடியதாகவும் ஆவது –

சிஷ்ட ரக்ஷண துஷ்ட பரிபாலனம் செய்வது இந்த தேஜஸ் குண ஸ்வரூபம் என்ற பஷாந்தரமும் உண்டே –

தேஜஸ்ஸாவது சஹகாரி சா பேஷ காரண வியாவ்ருத்தமான
சஹகாரி நிரபேஷ கர்த்ருத்வ ரூபம் என்று சொல்லப்பட்டதாய்
ஆஸ்ரிதருடைய தாபத் த்ரயத்தையும் தத் விரோதிகளையும் அபிபவியா நின்று கொண்டு
இந்த குணங்களில் உத்க்ருஷ்டம் ஆகிறது என்கிறார்

————–

மர்த்ய உத்தாயம் விரிஞ்ச அவதிகம் உபரி ச உத் ப்ரேஷ்ய மீமாம்சமாநா
ரெங்கேந்திர ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம்
ந ஸ்வ அர்த்தம் ஸ்பிரஷ்டும் ஈஷ்டே ஸ்கலதி பதி பரம் மூக லாயம் நிலில்யே
ஹந்த ஏவம் த்வத் குணா நாம் அவதி கணநயோ கா கதா சித்த வாசோ –35-

ஹே ரெங்கேந்திர

ஆனந்த வல்லீ–தைத்ரிய உபநிஷத்தில் உள்ள ஆனந்த வல்லீ என்னும் பகுதி

மர்த்ய உத்தாயம்–மனுஷ்யன் முதல் கொண்டு

விரிஞ்ச அவதிகம்–பிரமன் முடிவாக

உபரி ச –மென்மேலும்

உத் ப்ரேஷ்ய –படியிட்டுச் சொல்லிக் கொண்டு போய்

தவ யவ்வன ஆனந்த பூர்வம் –தேவரீருடைய யவ்வனம் ஆனந்தம் முதலிய

குண நிவஹம் –குண சமூகத்தை

மீமாம்சமாநா சதீ -விசாரியா நின்று கொண்டு

ஸ்வ அர்த்தம் –தன்னுடைய உத்தேசத்தை

ஸ்பிரஷ்டும்–தொடுவதற்கும் -எட்டிப் பார்ப்பதற்கும்

ந ஈஷ்டே –சமர்த்தமாகிறது இல்லை

பதி பரம் ஸ்கலதி–வழியிலேயே தடுமாறி நிற்கின்றது –

மூக லாயம் நிலில்யே–ஊமை போலே வாய் மூடி நின்றது

ஏவம் சதி -இப்படி இருக்க

த்வத் குணா நாம் -தேவரீருடைய திருக் கல்யாண குணங்களின்

அவதி கணநயோ –பரிச்சேதையிலும் ஸங்க்யையிலும்

கா கதா சித்த வாசோ ஹந்த -மன மொழிகளுக்கு என்ன பிரசக்தி -அந்தோ –

ஆனந்த வல்லி சொல்லி முடிக்க முடியாமல் மூகனைப் போலே வாய் திறவாதது ஆனதே –

மனுஷ்யாதி சதுர்முக பர்யந்தத்திலே சுழன்று உழலுகிறதே

இப்படி கரை காண ஒண்ணாத
தேவரீருடைய திருக் கல்யாண குணங்களை -பரிச்சேதையிலும் ஸங்க்யையிலும் அந்யருடைய
மனோ வாக்குக்கு ப்ரஸக்தி உண்டோ –
இது என்ன ஆச்சர்யம் என்கிறார்

—————-

ந்யதாயிஷத யே குணா நிதி நிதாயம் ஆரண்ய கேஷு
அமீ ம்ரதிம சாதுரீ பிரணத சாபல ஷாந்த்ய
தயா விஜய ஸுவ்ந்தரீ பரப்ருத்ய அபி ரத்ன ஓகவத்
ஜகத் வ்யவ ஹ்ருதி ஷமா வரத ரங்க ரத்ன ஆபணே–36-

ஹே வரத

ஆரண்ய கேஷு–உபநிஷத்துக்களில் -ஆரண்யத்தில் ஓதப் பட்டதால்-உபநிஷத் -காரணப் பெயர்-
ப்ருஹதாரண்யம் போல்வன –

யே குணா–யாவை சில குணங்கள்

நிதி நிதாயம்-நிதி போலே ரஹஸ்யமாக

ந்யதாயிஷத –ப்ரதிபாதிக்கப் பட்டுள்ளனவோ

அமீ–இந்த

ம்ரதிம–ஸுவ் குமார்யம் என்ன

சாதுரீ–அகடி தகடநா சக்தி என்ன

பிரணத சாபல –ஆஸ்ரித ப்ராவண்யம் என்ன

ஷாந்த்ய–ஷாந்தி என்ன

இவைகளும்

தயா -தயை என்ன

விஜய–வெற்றி என்ன

ஸுவ்ந்தரீ–ஸுவ்ந்தர்யம் என்ன

பரப்ருத்ய அபி ரத்ன ஓகவத்–இவை முதலானவைகளை ரத்னக் குவியல் போலே

ரங்க ரத்ன ஆபணே-ஸ்ரீ ரெங்க கர்ப்ப க்ருஹம் ஆகிற ரத்னக் கடையிலே

ஜகத் வ்யவ ஹ்ருதி ஷமா -உலகோர்க்கு எல்லாம் வ்யவஹார யோக்யங்களாக உள்ளன –

தாங்களும் கண்டு பிறருக்கும் காட்டலாம் படியான ரத்னக் கடை ஸ்ரீ கோயில் என்றவாறு –

திருக் கல்யாண குணங்கள் உபநிஷத்தில் ரஹஸ்யமாக வைக்கப்பட்டு இருந்தாலும்
திருவரங்கம் கர்ப்ப க்ருஹ இரத்தினக் கடையில் குவியலாக –பெரிய பெருமாள் இடம் காணலாமே-

இப்படி வேதாந்தங்களிலும் பரிச்சேதிக்க அரியதாய்-
அதுகளில் நிதிகள் போலே பரம ரஹஸ்யங்களான
மார்த்வாதி ஆத்ம குணங்களும்
ஸுவ்ந்த்ர்யாதி திவ்ய மங்கள விக்ரஹ குணங்களும்-
ரத்ன கடையில் ரத்ன சமூகங்கள் இருக்குமா போலே –
ஸ்ரீ கோயிலிலே பண்டிதரோடு பாமரரோடு வாசி இன்றி
தாங்களும் சாஷாத் கரித்து பிறருக்கும் உபதேசிக்கும்படி பிரகாசிக்கின்றன என்கிறார் –

—————–

யம் ஆஸ்ரித்ய ஏவ ஆத்மம் பரய இவ தே சத் குண கணா
ப்ரதந்தே ச அநந்த ஸ்வ வச கந சாந்தோதித தச
த்வம் ஏவ த்வாம் வேத்த ஸ்திமித விதரங்கம் வரத போ
ஸ்வ சம் வேத்ய ஸ்வாத்மத்வயச பஹுல ஆனந்த பரிதம்–37-

ஹே வரத

தே சத் குண கணா-அப்படிப்பட்ட கல்யாண குண ராசிகள்

ஆத்மம் பரய இவ–வயிறு தாரிகள் போலே -கல்யாண குணங்கள் பகவத் ஸ்வரூபத்தைப் பற்றி நின்று
சத்தை பெறுகின்றன என்பதை அருளிச் செய்தவாறு

யம் த்வாம் -யாவர் ஒரு தேவரீரை

ஆஸ்ரித்ய ஏவ-அவலம்பித்தே

ப்ரதந்தே -ப்ரஸித்தியை அடைகின்றனவோ

ச -அப்படிப்பட்ட

அநந்த-நிரவதிகமாய்

ஸ்வ வச–தனக்கே அனுபாவ்யமாய்

கந –நிரந்தரமான

சாந்தோதித தச–சாந்தோதித தசையை உடையீரான
தைத்ரீய கடக ஸ்ருதியை அருளிச் செய்த படி

த்வம் ஏவ –தேவரீரே

த்வாம் வேத்த ஸ்திமித விதரங்கம் -நிச்சலமாய் அலை ஓய்ந்த கடல் போன்றும்

ஸ்வ சம் வேத்ய –தானே அனுபவிக்கக் கூடியதாய்

ஸ்வாத்மத்வயச –தன்னோடு ஒத்த அளவுடையதாய்

பஹுல ஆனந்த பரிதம்-எல்லையில்லாத ஆனந்தத்தினால் பூரணமுமான

த்வாம் வேத்த -ஸ்வ ஸ்வரூபத்தை அனுபவிக்கின்றீர்

குணங்கள் உன்னை ஆஸ்ரயத்தே நிறம் பெறுகின்றன –
உனது ஸ்வரூபத்தை நீயே அனுபவித்துக் கொண்டுள்ளாய்

எம்பெருமானுக்கு நித்யோதித சாந்தோதித தசைகள் இரண்டும் உண்டே –
பர வாஸூ தேவ வ்யூஹ வாஸூ தேவ –
நிரவதிக கல்யாண குண விஸிஷ்ட ஸ்வ அனுபவத்தால் வந்த ஆனந்தத்தால் நிஸ்தரங்க ஆரணவத்தோடு ஒத்து இருக்கை –

கீழ் சொன்ன ஞானாதி குணங்கள் எந்த ஸ்வரூபத்தைப் பற்றி நிறம் பெற்றனவோ
அந்த ஸ்வரூபத்தை உடைய தேவரீர் தாமே சாந்தோதித தசையைக் கொண்டு
ஸ்வ அனுபவ விஷயமாய் விபுவான
ஸ்வ ஸ்வரூபத்து அளவாய் அபரிச்சின்ன ஆனந்தத்தால் நிரம்பி நிஸ் தரங்க ஆர்ணவம் போலே இருக்கிற
ஸ்வரூபத்தை அனுபவிக்கிறது என்கிறார் –
இப்படி தேவரீருடைய ஆனந்த குணம் அதி விலக்ஷணம் என்று கருத்து-

(ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! பர வாஸுதேவனும் , நீயே ! வ்யூஹ வாஸுதேவனும் , நீயே !
ஸஞ்சிந்தயந்தி ! அகில , ஹேய , விபக்ஷ , பூதம் ;
ஶாந்த – உதிதம் , ஶமவதா , ஹ்ருதயேந , தன்யா : |
நித்யம் , பரம் , வரத ! ஸர்வ , கதம் , ஸுஸூக்ஷ்மம் ,
நிஷ்பந்த , நந்தது , மயம் , பவத: , ஸ்வரூபம் ||

பெருமானே ! பாக்ய சாலிகள் அமைதி உள்ள உள்ளத்தால் இழி குணங்கள் அனைத்துக்கும் எதிரி ஆகவும் ;
எந்நாளும் , உள்ளதாகவும் எல்லாவற்றிலும் , சிறந்ததாகவும் எங்கும் நிறைந்திருப்பதாகவும்
உட் புக வல்லதாகவும் மாறாத ஸ்வரூபனாகவும் உன்னுடைய சாந்தோதிதம் எனும்
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை நன்கு தியானிக்கின்றனர் !

* பேரருளாளப் பெருமானே !
* உன் ஆத்ம ஸ்வரூபம் , திவ்ய ஆத்ம ஸ்வரூபம் என வழங்குகின்றது .
. அதில் , இழி குணம் , சிறிதும் இல்லை .
. அது கணக்கற்ற , திருக் கல்யாண குணங்களுக்கு , உறைவிடமாக உள்ளது .
. எந்நாளும் , மாறுபாடு இல்லாமல் , விளங்குவது .
. ஸகல வஸ்துக்களை விட மேம்பட்டது.
. அது இல்லாத இடமே , இல்லை எனும்படி , எல்லாவிடத்திலும் , பரந்து , நிற்பது.
. ஸகல வஸ்துக்களிலும் , உட்புகும் , திறமை , உடையது .
. நித்யமான , ஆனந்த , ஸ்வரூபமாய்த் , திகழ்வது .
* இத்தகைய , பெருமை உள்ள , உன் திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை ; வேறொன்றிலும் , செல்லாதவாறு ;
அமைதி உற்ற , உள்ளம் படைத்த , பாக்யவான்கள், சாந்தோதிதம் என்ற நிலையை , உடையதாகத் , தியானிக்கின்றனர் .
* அதாவது , உனக்கு , நித்யோதிதம் , சாந்தோதிதம் என்ற இரண்டு நிலைகள் உண்டு .
நித்யோதிதம் என்பது , ஶ்ரீ வைகுண்டத்தில் , நித்யரும் , முக்தரும் , அனுபவிக்க உரியதாய் ,
பர வாஸுதேவனாக , நீ , எழுந்தருளி உள்ள நிலை.
சாந்தோதிதம் அந்தப் பர வாஸுதேவனிடத்திலிருந்து , தோன்றிய , ஸங்கரஷணன் , ப்ரத்யும்நன் , அநிருத்தன் என்ற
மூன்று வ்யூஹ வடிவங்களுக்கும் , காரணமாய் உள்ள , வ்யூஹ வாஸுதேவ ரூபத்துடன் , நீ , நிற்கும், நிலை.
தகுதி பெற்ற , பாக்யவான்கள் , பர வாஸுதேவனான, உன்னை , வ்யூஹ வாஸுதேவ நிலையில் வைத்துத் , தியானிக்கின்றனர்.
[ இந்த சுலோகத்தில் , குறிப்பிட்ட , இரு நிலைகளையும் , வேறு வகையிலும் , பெரியோர்கள் , விளக்கி உள்ளனர்.
அதாவது , நித்யோதித தசை என்பது பர வாஸுதேவன் , நித்ய விபூதி , லீலா விபூதி , ஆகிய இரண்டையும் , தான் , அனுபவிக்கும் நிலை .
சாந்தோதித தசை என்பது , அந்த இரு விபூதிகளையும் , விட்டுத் தன் ஸ்வரூபத்தை மட்டும் , தான் அனுபவிக்கும் நிலை என்று கூறுவது உண்டு.
மற்றோர் உரை ஆசிரியர் , நித்ய விபூதியை , நடத்த வல்ல ஸங்கல்பத்தோடு , எம்பெருமான் கூடிய நிலையை , நித்யோதித தசை என்றும் ;
லீலா விபூதியை , நடத்தவல்ல , ஸங்கல்பத்தோடு , அவன் கூடிய நிலையை , சாந்தோதித தசை என்றும் , கூறி உள்ளனர் ])

——————–

ஆக்ராய ஐஸ்வர்ய கந்தம் ஈசத்ருசம் மந்யா தவேந்த்ர ஆதய
முஹ்யந்தி த்வம் அநாவில நிரவதே பூம்ந கணே ஹத்ய யத்
சித்ரீயே மஹி ந அத்ர ரங்க ரசிக த்வம் த்வத் மஹிம் ந பர
வை புல்யாத் மஹித ஸ்வ பாவ இதி வா கிம் நாம சாத்ம்யம் ந தே –38-

ஹே ரங்க ரசிக

இந்த்ர ஆதய–இந்திரன் முதலான தேவர்கள்

ஆக்ராய ஐஸ்வர்ய கந்தம் –ஐஸ்வர்யத்தில் லவலேசத்தை அடைந்து

ஈசத்ருசம் மந்யா –ஸர்வேஸ்வரேஸ்வரான தேவரீரோடு ஒக்கவே தங்களை நினைத்தவர்களாய்

முஹ்யந்தி –மயங்குகிறார்கள் -கர்வப்படுகிறார்கள் என்றபடி

த்வம் நிரவதே பூம்ந –தேவரீர் எல்லையற்றதான பெருமையையும்

கணே ஹத்ய அநாவில அஸி –ஒரு பொருளாக நினையாமல் -மதியாமல் -கலங்காமல் இருக்கிறீர்
நிறை குடம் தளும்பாதே –

யத் அதிர -என்கிற இவ்விஷயத்தில்

வயம் ந சித்ரீயே மஹி –நாம் ஆச்சர்யப்பட கடவோம் அல்லோம்
ஏன் என்னில்

த்வம் -தேவரீருடைய ஸ்வ ரூபமானது

த்வத் மஹிம்ந -உமது பெருமையான ஸ்வபாவத்தைக் காட்டிலும்

பர இதி வா-மேம்பட்டது என்று சொல்லலாமா

அல்லது
ஸ்வ பாவ-தேவரீருடைய ஸ்வபாவமானது

வை புல்யாத்-முன் சொன்ன ஸ்வரூப வைபவத்தில் காட்டிலும்

மஹித இதி வா-மேம்பட்டது என்று சொல்லலாமா
எப்படியும் சொல்லலாமாய் இருக்கையாலே –

தே கிம் நாம சாத்ம்யம் ந –தேவரீருக்கு எது தான் தாங்க ஒண்ணாது
தேவரீர் ஸ்வரூபமும் ஸ்வபாவமும் பிருஹத் என்றபடி

ஐஸ்வர்ய லேசம் பெற்ற இந்த்ராதிகள் ஈஸ்வரோஹம் என்று அஹங்கரித்து நிற்க –
உனது ஸ்வரூபம் ஸ்வ பாவம் மேம்பட்டு
மனுஷ்யர்க்கு தேவர் போலே தேவாதி தேவனாய் இருந்து திருவரங்கத்தை ரசித்தபடி கண் வளர்ந்து உள்ளாயே

தேவருடைய ஈஸ்வர வாசனையை முகந்து –
ஈஸ்வர லேசமுடைய இந்த்ராதிகள் தங்களை ஈஸ்வரராக அபிமானித்து கலங்குகிறார்கள்-
தேவரீர் நிரவதிக அதிசயத்தையும் அநாதரித்துக் கலங்குகிறது இல்லை –
நாங்கள் ஆச்சர்யப் படுகிறோம் அல்லோம் –
தேவரும் தேவரீர் மஹாத்ம்யமும் பெருமையால் ஒன்றுக்கு ஓன்று சத்ருசமாகையாலே தேவர்க்கு
எது தகாது என்கிறார் -ஆத்ம அனுரூபம் என்றபடி –

—————————-

சாந்தோதித விசிஷ்டமான பரத்வ அனுபவம் இது வரை –
இனி வியூஹ அனுபவம் –

ஷாட் குண்யாத் வாஸூதேவ பர இதி சபவாந் முக்த போக்ய பல ஆட்யாத்
போதாத் சங்கர்ஷண த்வம் ஹரசி விதநுஷே சாஸ்திரம் ஐஸ்வர்ய வீர்யாத்
ப்ரத்யும்ன சர்க்க தர்மவ் நயசி ச பகவந் சக்தி தேஜஸ் அநிருத்த
பிப்ரண பாசி தத்வம் கமயசி ச ததா வ்யூஹ ரங்காதிராஜ–39-

ஹே பகவந் ரங்காதிராஜ

சபவாந் த்வாம் –பூஜ்யரான தேவரீர்

வ்யூஹ–வாஸூ தேவாதி வ்யூஹ ரூபேண அவதரித்து

ஷாட் குண்யாத் –ஞானாதி ஆறு குணங்களோடு கூடி

வாஸூதேவ பர இதி –பர வாஸூ தேவர் என்று வழங்கப்பட்டவராகி

முக்த போக்ய அஸி –முக்தர்களுக்கு அநு பாவ்யராகின்றீர்

பல ஆட்யாத் போதாத் -பலத்தோடு கூடின ஞானத்துடன் -ஞான பலம் இரண்டு குணங்களுடன் கூடி

சங்கர்ஷண –சங்கர்ஷண மூர்த்தியாகி -ஜீவ தத்துவத்தை அதிஷ்டித்து

த்வம் ஹரசி –சம்ஹாரத் தொழிலை நடத்துகின்றீர்

விதநுஷே சாஸ்திரம் –சாஸ்திரத்தையும் அளிக்கின்றீர்

ஐஸ்வர்ய வீர்யாத்–ஐஸ்வர்ய வீர்யங்களோடே கூடி

ப்ரத்யும்ன –ப்ரத்யும்ன மூர்த்தியாகி -மனஸ் தத்வம் அதிஷ்டானம்

சர்க்க தர்மவ் நயசி ச –ஸ்ருஷ்டியும் பண்ணி தர்மத்தையும் ப்ரவர்த்திப்பிக்கிறீர்

சக்தி தேஜஸ்–சக்தி தேஜஸ் இரண்டையும் கொண்டு

அநிருத்த-அநிருத்த மூர்த்தியாகி

பாசி-ரக்ஷணத் தொழிலை நடத்துகிறீர்

தத்வம் கமயசி ச ததா –அப்படியே தத்வ ஞான பிரதானமும் பண்ணுகிறீர்

வாஸூ தேவ ரூபியாய் பரத்வத்தோடு ஒத்த -நித்ய முக்த அநுபாவ்யராய்க் கொண்டு ஷாட் குண பரிபூர்ணராய்

சங்கர்ஷணராய் ஞான பலங்களோடு கூடி ஸாஸ்த்ர பிரதான சம்ஹாரங்களைப் பண்ணி

ப்ரத்யும்னராய் ஐஸ்வர்ய வீர்யங்களோடு கூடி ஸ்ருஷ்ட்டியையும் ஸாஸ்த்ர ப்ரவர்த்தங்களையும் பண்ணி

அனிருத்ரராய் சக்தி தேஜஸ்ஸூக்களோடு கூடி ரக்ஷணத்தையும் மோக்ஷ ஹேதுவான
சத்வ ப்ரவர்த்தனத்தையும் பண்ணுகிறது என்கிறார்

பகவானுக்கு எல்லா இடத்திலும் எல்லா குணங்களும் உண்டு என்றாலும்
இவ்வாறு விவஸ்தை பண்ணுவது தத் தத் கார்ய அநு குணத்வ ஆவிஷ்காரத்தைப் பற்ற –

——————

ஜாக்ரத் ஸ்வப்ந அத்யலச துரீய பிராய த்யாத்ரு க்ரமவத் உபாஸ்ய
ஸ்வாமிந் தத் தத் ஸஹ பரிபர்ஹ சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா -40-

ஸ்வாமிந்

ஜாக்ரத்- பிராய–விழித்துக் கொண்டு இருப்பாரும்

ஸ்வப்ந -பிராய-உறங்கிக் கொண்டு இருப்பாரும்

அத்யலச துரீய பிராய -ஸூஷூப்தீயில் இருப்பாரும்

த்யாத்ரு க்ரமவத் உபாஸ்ய–த்யானம் செய்பவர்களின் ரீதிகளையுடைய அதிகாரிகளாலே உபாஸிக்கத் தகுந்தவராய்

தத் தத் ஸஹ பரிபர்ஹ –தகுதியான பரிச்சதங்களை யுடையவராய்

சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா -நாலு வகையான வியூஹ சதுஷ்ட்யத்தை வஹிக்கின்றீர்

ஒவ் ஒரு வ்யூஹ மூர்த்தியும் உபாஸிக்கத் தக்க நான்கு வகை என்று -16-வகையாகும் –

விழிப்பு நிலைகள் புலன்கள் இயங்கும்
கனவு நிலை -புலன்கள் இயங்கா மனஸ்ஸூ விழித்து இருக்கும்
ஆழ்ந்த உறக்கம் -மனஸூம் இயங்கா மூச்சு மட்டும் –
மூர்ச்சா மயக்க நிலை -பிராணனும் சீராக இல்லாமல்
நான்கு வ்யூஹங்கள் போல்

ஜாக்ரதாதி துரிய க்ரம சதுஷ்ட்ய விஸிஷ்ட தத் உபாசன அநு குணமாக தத் தத் மூர்த்தி அநு குண பரிகரமாக
விசிஷ்டராய்க் கொண்டு ப்ரத்யேகம் நான்கு வ்யூஹம் என்கிறார் –

ஜாகரணம் போலும் -ஸ்வப்நம் போலும் -அத்யாலச பத சப்தமான ஸூ ஷுப்தி போலும் –
துரீயமான மூர்ச்சை மரணங்கள் போலும் இருக்கிற
ஞான தார தம்ய அதிகார ரூபங்களான உபாசன க்ரமங்களையும் உடையவராலே உபாஸிக்கப் படுமவராய் –
அதுக்கு அநுகுண பரிகரங்களோடு கூடி
நான்கு வ்யூஹத்தையும் நான்கு விதமாக தேவரீர் வஹிக்கிறீர்

——————

அசித் அவிசேஷாந் ப்ரளயசீ மநி சம்சரத
கரண களேபரை கடயிதும் தயமாந மநா
வரத நிஜ இச்சயா ஏவ பரவாந் அகரோ ப்ரக்ருதிம்
மஹத் அபிமான பூத கரண ஆவளி கோராகினீம் –41-

ஹே வரத

ப்ரளயசீ மநி –பிரளய காலத்தில்

அசித் அவிசேஷாந்–அசேதனங்களில் காட்டில் வாசி அற்றவர்களாய்

சம்சரத–துவள்கின்ற ஜீவ ராசிகளை

கரண களேபரை –இந்த்ரியங்களோடும் சரீரங்களோடும்

கடயிதும் தயமாந மநா–சேர்க்க திரு உள்ளம் இரங்கினவனாய்

நிஜ இச்சயா ஏவ பரவாந் –ஸ்வ சங்கல்ப பராதீனனாய்

ப்ரக்ருதிம்–ப்ரக்ருதி என்ன

மஹத் –மஹான் என்ன

அபிமான–அஹங்காரம் என்ன

பூத–பஞ்ச பூதங்கள் என்ன

கரண–இந்திரியங்கள் என்ன

ஆவளி கோராகினீம் அகரோ–இவற்றின் வரிசையாகிற அரும்புகளை யுடையதாம்படி பண்ணினாய் –

இவன் காரணமாகிறது அவித்யா கர்ம பர நியோகாதிகள் அன்றிக்கே ஸ்வ இச்சையால் –தத்வ த்ரயம்

(அசித் அவிசிஷ்டான் பிரளயே ஜந்தூன் அவலோக்ய ஜாத நிர்வேதா
கரண களேபர யோகம் விதாசி வ்ருஷ சைல நாத கருணே த்வம்தயா சதகம் -17-

சிந்திக்கவும் செயல் ஆற்றவும் கரண களேபரங்களையும் உடனே அளிக்கிறாள் –
இவளால் தூண்டப்பட்ட இவள் திருமுக மலர்சிக்காகவே ஸ்ருஷ்டிக்கிறான் –

ஸ்ரீநிவாஸனின் தயாதேவியே! ப்ரளயத்தின்போது அனைத்து உயிரினங்களும் அசேதனப் பொருள்கள் போன்று,
அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு நீ மனம் வருந்துகிறாய்.
உடனே, ப்ரளயத்தில் உனக்கு ஏற்பட்ட விருப்பத்தை நீக்கி, அவர்களுக்குப் புலன்களுடன் கூடிய உடலை அளிக்கிறாய்.)

நித்ய கைங்கர்ய ரசராய் வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும் அத்தை இழந்து
அசத் கல்பராய்க் கிடக்கிற சம்சாரி சேதனருடைய –இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த
பக்ஷி போல் கிடக்கிற -மா முனிகள் தத்வ த்ரய வ்யாக்யானம்-

கீழே ப்ரஸ்துதமான ஸ்ருஷ்ட்டி -க்ரமம் எங்கனே என்கிற அபேக்ஷையில் தேவர் பிரளய காலத்தில்
அசேதன துல்யராய் போக மோக்ஷ சூன்யரான சேதனரை -அஸிஷ்டர் என்று சம்சரிக்கிற சேதனரை சொன்னவாறு –

அனுசந்தித்து ஓ என்று இரங்கி-அவர்களுக்கு கரண களேபரங்கள் பிரதானம் பண்ணுகைக்கு
அநந்யாதீநராய் சங்கல்பித்து மூல பிரக்ருதியை மஹத் அஹங்கார தன்மாத்ர பஞ்ச பூத
ஏகாதச இந்த்ரியங்களாக மொட்டு விக்கிறது என்கிறார் –

———————

நிம்நோந்நதம் ச கருணம் ச ஜகத் விசித்திரம்
கர்ம வ்யபேஷ்ய ஸ்ருஜத தவ ரெங்க சேஷிந்
வைஷம்ய நிர்க்ருண தயா ந கலு ப்ரஸக்தி
தத் ப்ரஹ்ம ஸூத்ர ச சிவ ஸ்ருதய க்ருணந்தி –42-

ஹே ரெங்க சேஷிந்

விசித்திரம் கர்ம–சேதனர்களுடைய பலவகைப்பட்ட கர்மங்களை

வ்யபேஷ்ய–அநு சரித்து

நிம்நோந்நதம் ச கருணம் ச ஜகத் ஸ்ருஜத–உலகத்தை மேடு பள்ளமாகவும் இரங்கத் தகுந்ததாகவும் படைக்கின்ற

தவ வைஷம்ய நிர்க்ருண தயா–தேவரீருக்கு பக் ஷபாதமோ நிர் தயத்துவமோ என்ற இவற்றுக்கு

ந கலு ப்ரஸக்தி–அவகாசமே இல்லை

தத் ப்ரஹ்ம ஸூத்ர ச சிவ ஸ்ருதய க்ருணந்தி–என்னும் விஷயத்தை ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தை துணையாகக் கொண்ட
உபநிஷத்துக்கள் ஒதுகின்றன –

ச சிவ-என்று மந்திரிக்கு பெயர் -துணை என்று கருத்து –

கர்மம் அடியாகச் செய்கையாலும் –
மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப் பண்ணும்
மாதாவைப் போலே ஹித பயனாகவே செய்வதால் இவை வராதே –

கீழே தயமாந மநா -என்றார் – தயையால் ஜகத் ஸ்ருஷ்ட்டி என்றால் –

ஜகத்தை தேவ மனுஷ்ய ஜங்கம ஸ்தாவராத்மகமாக விக்ஷமமாயும்–பக்ஷபாதத்துக்கும் -மேடு பள்ளமாகவும் —
வியாதி யுபத்ரமுமாய் -இருப்பது பர துக்க அஸஹிஷ்ணுத்வத்துக்கும் போருமோ என்ன –

சேதன கர்ம அநுகுணமாக ஸ்ருஷ்டிக்கையாலே அவை இரண்டும் வாராது என்று
ஸ்ருதிகள் சொல்லுகிறது என்கிறார் –

————-

ஸ்வ அதீந ஸஹ காரி காரண கணே கர்த்து சரீரேதவா
போக்து ஸ்வ அநு விதா அபராத விதயோர் ஆஞ்ஞா யதா சாஸிது
தாதுர்வா அர்த்தி ஜநே கடாக்ஷணம் இவ ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ தே
ஸ்ரஷ்டு ஸ்ருஜ்ய தசாவ்ய பேஷணம் அபி ஸ்வா தந்தர்யம் ஏவ ஆவ ஹேத் –43-

ஹே ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ

ஸ்ரஷ்டு தே -ஸ்ருஷ்ட்டி கர்த்தாவான தேவரீருக்கு

ஸ்ருஜ்ய தசாவ்ய பேஷணம் அபி-ஸ்ருஷ்டிக்கப்படும் ஆன்மாக்களுடைய கர்ம விபாக தசையை எதிர்பார்ப்பதும்

ஸ்வா தந்தர்யம் ஏவ ஆவ ஹேத் -தேவரீருடைய ஸ்வா தந்தர்யத்தையே நிலை நிறுத்தும்

எப்படிப் போலே என்னில்

கர்த்து -பானை துணி முதலிய கார்யப் பொருள்களை நிரூமிப்பவனான குயவன் போன்ற மனிதர்களும்

ஸ்வ அதீந –தங்களுக்கு வசப்பட்ட

ஸஹ காரி காரண கணே–மண் தண்ணீர் சக்கரம் போன்ற உதவி காரணப் பொருள்கள் இடத்தில் உண்டான

கடாக்ஷணம் இவ –எதிர்பார்த்தால் போலவும்

போக்து–போகங்களை அனுபவிப்பவனான ஜீவனுக்கு

ஸ்வ அதீன சரீரே கடாக்ஷணம் இவ–தனக்கு அதீனமான சரீரத்தில் உண்டான எதிர்பார்த்தால் போலவும்

சாஸிதுர் ஆஞ்ஞா–நியாமகனான அரசனுக்கு

ஸ்வ அநு விதா அபராத விதயோ–தன்னை அநு சரித்து இருப்பதும் தன்னிடத்தில் குற்றம் செய்வதும் ஆகிய காரியங்களில் உண்டான

கடாக்ஷணம் யதா–எதிர்பார்த்தால் போலவும்

தாதுர்வா அர்த்தி ஜநே தே–உதாரனான பிரபுக்கு யாசகர்கள் இடத்தில் உண்டான எதிர்பார்த்தல் போலவும்

நான்கு த்ருஷ்டாந்தங்கள் –
கடாக்ஷணம் -என்பது வீக்ஷணம் –
இங்கே அபேக்ஷணத்தைச் சொல்லுகிறது –

ஸ்வ தந்திரனாய் இருந்தும் –
ஸஹ காரி நிபேஷனாய் இருந்தும் கர்மம் அடியாக ஸ்ருஷ்ட்டி செய்வது

தச்சன் நாற்காலி செய்ய உபகரணங்கள் கொண்டு செய்வது போலவும்

ஜீவன் தனது உடலைக் கொண்டு ஸூகம் அனுபவிப்பது போலவும்

தானம் கொடுப்பவன் தானம் பெறுவனையே ஸஹ காரியாகக் கொண்டு தானம் செய்வது போலவும்
கொள்ள வேண்டும்

இப்படி கர்ம அநு குணமாக விஷம ஸ்ருஷ்ட்டி என்று கொள்ளில்
நிரபேஷ கர்த்ருத்வம் ஜீவிக்கும் படி எங்கனே என்னில்

1-குயவனுக்கு சக்கராதிகள் சஹகாரிகளாக போலவும்
2-ஸ்வஸ்த சரீரனுக்கு விஷய போகத்தில் சரீர ஸ்வாஸ்ததியம் போலவும்
3-நியாமகனான ராஜாவுக்கு ப்ருதயாதி க்ருத அபராத சாபேஷ சிஷா விதானங்கள் போலவும்
4-உதாரனுக்கு அர்த்தி ஜன விஷயத்தில் பிரார்த்தனா சாபேஷமாகக் கடாஷிக்கிறது போலவும்

கர்ம விபாக சாபேஷமாக விஷம ஸ்ருஷ்டியும் ஸ்வா தந்த்ர பஞ்சகம் இன்றிக்கே
சேதன அநு குணமாகக் குறையில்லை-என்கிறார் –

கர்ம அநு குணமாக பலம் தருகிறேன் என்று தேவரே சங்கல்பித்து
தத் அநு குணமாக செய்வது
ஸ்வா தந்தர்ய விரோதி அன்று அன்றோ –

——————-

பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–44-

ஹே வரத

பிரளய சமய ஸூப்தம்–பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன

சித் அசித் ஆக்யம்–சேதன அசேதன ஆத்மகமான

ஸ்வம் சரீர ஏக தேசம்–தனது திருமேனியின் ஏக தேசத்தை

ஸ்வ இச்சையா –தன் சங்கல்பத்தினாலேயே

விஸ்த்ருணாந-விதித்த விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு

அநு சிகிநீ –மயில் பெடையின் எதிரே

கலாபம் சித்ரம்–நாநா விதமான தோகையை

கசிதம் இவ–ஆகாசத்தை அளாவியது போலே

சிகீ இவ விதத்ய தூந்வந்–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே

க்ரீடசி ஸ்ரீ சமஷம்–ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்

ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு

கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –

அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

பிரளயத்தில் ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -ஆண் மயில் பல நிறங்களுடன் கூடிய அழகிய தோகையை
பெண் மயிலுக்கு விரித்துக் காட்டுவது போலே
நீயும் பெரிய பிராட்டியார் இடம் காண்பித்தாய்-

ஸ்ருதிகள் படி நிமித்த காரணத்வம் மாத்திரம் அன்றிக்கே உபாதான காரணத்வமும் உண்டாகையாலே
பிரளயத்தில் நாம ரூப விபாகம் இன்றிக்கே ஸூன்யமாய் -நிர் வியாபாரமாய் இருக்க

தேவரீர் சரிர ஏக தேச சேதன அசேதனங்களை ஸ்வ இச்சையால்-ஜகத் ரூபேண பரிணமிப்பியா நின்று கொண்டு –
விஸ்தரிப்பியா நின்று கொண்டு மயில் தனது நா நா வர்ணமான தோகையை விரித்து தன் பேடைக்கு முன்
க்ரீடிக்குமா போலே
தேவரீரும் பிராட்டி முன்பு க்ரீடிக்கிறீர் -என்கிறார் –

சித்திரம் என்பதால் தார்ஷ்டாந்தித்தில் சத்வாதி குண பேதமும் ஸூஸிதம்

————-

பூயோ பூய த்வயி ஹித பர அபி உத்பத அநாத்மநீந
ஸ்ரோத மக்நாந் அபி பத நயந் த்வம் துராசா வஸேந
ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி
தத் தத் வர்ண ஆஸ்ரம விதிவச க்லிஸ்யஸே ரங்க ராஜ –45-

ஹே ரங்க ராஜ

பூயோ பூய த்வயி–தேவரீர் மேன்மேலும்

ஹித பர அபி –சேதனர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வதிலேயே நோக்கம் யுடையவராய் இருந்தாலும்

உத்பத அநாத்மநீந ஸ்ரோத மக்நாந் அபி–கங்கு கரை இல்லாததும் ஆத்மாவுக்கு துன்பம் தருவதுமான
துஷ் கர்ம பிரவாகத்தில் மூழ்கிக் கிடப்பவர்களையும்

துராசா வச நே –ஏதோ ஒரு நப்பாசையினால்

பத நயந் –நல் வழி நடத்த விரும்பினவனாய்

ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி–தன் குழந்தை நோயாளியாய் இருக்கும் போது
அது குடிக்க வேண்டிய கஷாயத்தை தாயான தானே குடிக்குமா போலே

த்வம் தத் தத் வர்ண ஆஸ்ரம விதி வச க்லிஸ்யஸே –அந்த அந்த வர்ணாஸ்ரம ஆசாரங்களை நியமிக்கும்
சாஸ்திரத்துக்கு வசப் பட்டவராய் பல பல கார்யங்களை அனுஷ்டித்துக் கொண்டு வருந்துகின்றீர்

ராமனாகவும் கிருஷ்ணனாகவும் -பிறந்து -கர்ம வசப் படாமல் இருந்தும் வர்ணாஸ்ரமம் அனுஷ்ட்டித்து —

தாய்ப் பால் பருகும் குழந்தைக்கு உண்டான நோயைத் தீர்க்கும் விதமாக தாயானவள்
கசப்பான மருந்தை குடிப்பது போன்றது-

பர துக்க அஸஹிஷ்ணுதையால் கரண களேபரங்களைக் கொடுத்து அருளியும்-

சேதனர் விஷயாந்தர ப்ரவணராய் ஸாஸ்த்ர நிஹிதங்களையே செய்து போந்து நிற்க –
அவர்கள் நல் வழி வருவார்களோ என்னும் பேராசையால் –
ஸ்தநந்த்ய பிரஜை ரோக பீடிதையாக-தான் ஒளஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே

ராம கிருஷ்ண அவதாரங்களையும் பண்ணி
அதுகளில் வர்ணாஸ்ரம விதி பரதந்த்ரராய் நாட்டில் பிறந்து மனுஷர் படாதன பட்டு கிலேசிக்கிறது என்கிறார்

——————

ஸார்வ த்வத் கம் சகல சரிதம் ரெங்க தாமந் துராசா
பாசேப்ய ஸ்யாத் ந யதி ஜெகதாம் ஜாது மூர்க்க உத்தராணாம்
நிஸ்தந்த்ராலோ தவ நியமத ந ருது லிங்க பிரவாஹா
சர்க்க ஸ்தேம ப்ரப்ருதிஷு சதா ஜாகரா ஜாகடீதி–46-

ஸார்வ ரெங்க தாமந்–அனைவருக்கும் ஹித பரரான ஸ்ரீ ரெங்க நாதரே

த்வத் கம் சகல சரிதம்–தேவரீருடைய ஸ்ருஷ்ட்டி முதலான சகல காரியங்களும்

துராசா பாசேப்ய-ஸ்யாத் ந யதி–நப்பாசையின் காரணமாகவே ஆகாமல் போனால்

ஜெகதாம் மூர்க்க உத்தராணாம்–மூர்க்கர்கள் மலிந்த உலகங்களினுடைய

சர்க்க ஸ்தேம ப்ரப்ருதிஷு–ஸ்ருஷ்ட்டி ஸ்திதி முதலான காரியங்களில்

நிஸ்தந்த்ராலோ தவ –சோம்பல் இல்லாத தேவரீருடைய

நியமத ந ருது லிங்க பிரவாஹா-சதா ஜாகரா—நியாந்தமான வசந்தாதி ருதுக்களில் புஷ்பாதி அடையாளங்களின்
பிரவாகம் போலவே பிரவாகம் உடைய தேவரீருடைய நித்ய சங்கல்பமானது

ஜாகடீதி–ஜாது-ஒரு காலும் சங்கதம் ஆக மாட்டாது
என்றேனும் நம் கிருஷி பலியாதோ என்கிற நப்பாசையினாலே தானே நித்ய சங்கல்பம் பிரவாகமாகச் செல்கிறது –

சோம்பாது ஸ்ருஷ்டித்து -என்றாவது சொத்து ஸ்வாமியை அடையும் என்னும் நப்பாசை-

அவதாரத்தில் படும் கிலேசம் இன்றிக்கே –
ஸ்ருஷ்டியாதி சகல வியாபாரமும் சேதன உஜ்ஜீவன அர்த்தமாகவே –
துராசையாலே என்னுமத்தை அறிவைக்காக –

தேவர் சர்வ ஸ்வாமி யாகையாலே தேவரீருடைய சர்வ வியாபாரமும்
எப்போதும் துராசையாலே அல்லாவாக்கில் நாஸ்திக பிரசுரியமான ஜகத்தினுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களில்
வசந்தாதிகள் ருதுக்களுக்கு அடுத்த புஷ்பாதி லிங்கங்கள் ப்ரவாஹ ரூபேண உண்டாவது போலே
சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த என்கிறபடி
சோம்பாது நின்று நியமேன ப்ரவர்த்திகைக்கு அடி யாது என்கிறார் –

தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு––ஸ்ரீ பெரிய திருவந்தாதி -18–

இப்படி ஸம்ஸாரிகள் வை முக்யம் பண்ணினார்கள் என்று சோம்பாதே
நம் கார்யம் செய்கை நமக்கு எளிவரவோ என்று
காளியனில் காட்டில் தோலாதாராய் இருக்கிற பிரஜைகளை எல்லாம் விஸ்திருதம் ஆக்கின
(காளியன் இடம் தோற்காமல் அவனிலும் நீசர்கள் அன்றோ நாம் )
காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே
பழையதான உன்னுடைய வடிவை வேறு சிலர் அறியப் போமோ
நீயே சொல்லு

——————–

ஸூஹ்ருத் இவ நிகல ஆத்யை உன்மதிஷ்ணும் ந்ருசம்சம்
த்வம் அபி நிரய பூர்வை தண்டயந் ரங்க நேத
ததிதரம் அபி பாதாத் த்ராயஸே போக மோக்ஷ
பிரதி அபி தவ தண்டா பூபி காதா ஸூஹ்ருத் த்வம் –47-

ஹி ரங்க நேத

ஸூஹ்ருத் இவ உன்மதிஷ்ணும்–பைத்தியம் பிடித்தவனை –

நிகல ஆத்யை-தண்டயந் -விலங்கிடுதல் முதலிய காரியங்களால் சிக்ஷிக்கிற

ஸூஹ்ருத் இவ த்வம் அபி-தோழன் போலே தேவரீரும்

ந்ருசம்சம் நிரய பூர்வை தண்டயன் –கொடிய ஜனங்களை நரகத்தில் இட்டு வருத்துதல் போன்ற வற்றால்
தண்டியா நின்று கொண்டு

ததிதரம் அபி –அவனையும் மற்ற ஜந்து ஜனத்தையும்

பாதாத் த்ராயஸே –நரக பாதையில் நின்றும் காத்து அருளுகின்றீர்

இப்படியான பின்பு

போக மோஷ-பிரதி அபி-போக மோக்ஷங்களைத் தந்து அருளுவதும்

தவ தண்டா பூபி காதா தவ ஸூஹ்ருத்வமே –தண்ட பூபா கைம்முதிக நியாயத்தாலே தேவரீருடைய ஸுவ்ஹார்த்த கார்யமேயாகும் –

துக்க அனுபவமே ஸுவ்ஹார்த்த கார்யம் என்னும் போது -ஆபாச ஸூக அனுபவமும் போகமும் –
பரம ஸூக அனுபவமும் -மோக்ஷ அனுபவமும் ஸுவ்ஹார்த்த காரியமே என்றவாறு

மண் தின்ற பிரஜையை நாக்கில் குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போல ஹித பரனாய்ச் செய்யும் காரியமே-என்றவாறு –

தண்டா பூப நியாயம் -நரகத்தில் இடுதல் தண்டனை இல்லை-

ஸூஹ்ருத் தானவன் உன்மத்தனை விலங்கு முதலானவற்றால் நிர்பந்தித்து அவனையும் பிறரையும் ரஷிக்குமாம் போலே
தேவரீரும் பர ஹிம்ஸை பண்ணித் திரியுமவனை நன்றாக சத்ருச சஸ்த்ராதிகளாலே தண்டித்து
அவனையும் ஹிம்ஸா ருசி இன்றிக்கே இருக்குமவனையும்
பிறராலும் காதுகனாலும் வரும் ஹிம்சையில் நின்றும் ரஷிக்கிறது
ஸூஹ்ருத் கார்யமாகா நிற்க –
போக மோக்ஷ பிரதானமும் ஸூஹ்ருத் கார்யம் என்கை –

அபூபாக சாதனமான தண்டத்தை மூஷிகை பஷித்தது என்றால்
அபூப பஷணம் போலே கைமுதிக நியாய சித்தம் என்கிறார் –

———–

த்ருதி நியமந ரஷா வீக்ஷணை சாஸ்த்ர தாந பரப்ருதிபி அசிகித்ஸ்யாந் பிராணிந ப்ரேஷ்ய பூய
ஸூர மனுஜ திரஸ்சாம் ஸர்வதா துல்ய தர்மா த்வம் அவதரசி தேவ அஜ அபி சந் அவ்யயாத்மா –48-

த்ருதி நியமந ரஷா வீக்ஷணை –எல்லாவற்றையும் தரிப்பது என்ன -உள் புகுந்து நியமிப்பது என்ன –
ரக்ஷிப்பது என்ன -ஆகிய இவை பற்றிய சங்கல்பங்களினாலும்

சாஸ்த்ர தாந பரப்ருதிபி–சாஸ்திரங்களை அளிப்பது முதலியவற்றாலும்

அசிகித்ஸ்யாந் பிராணிந ப்ரேஷ்ய–திருத்த முடியாத சம்சாரிகளை நோக்கி அருளி

தேவ அஜ அபி சந் அவ்யயாத்மா –பிறப்பும் இறப்பும் இல்லாத தெய்வமாய் இருக்கச் செய்தேயும்

ஸூர மனுஜ திரள்சாம்–தேவ மனுஷ்ய திர்யக் ஜாதிகளுக்கு

ஸர்வதா–சர்வ பிரகாரத்தாலும்

துல்ய தர்மா சந்–ஒத்தவராய்க் கொண்டு

த்வம் அவதரசி பூய–மேன்மேலும் தேவரீர் விபவ அவதாரங்களைச் செய்து அருளா நின்றீர்–

ஓலைப் புறத்தில் செல்லாத நாட்டை நேரே சென்று வெற்றி கொள்ளும் அரசரைப் போல் நேரில் வந்து
திருத்திப் பணி கொள்ள நீர்மையினால் அவதரித்து அருளுகிறார் என்றவாறு –

ஸ்ரீ கீதா ஸ்லோகம் -4-6-அடிப்படியில் அருளிச் செய்த ஸ்லோகம் –

(அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா

அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி-பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்,
பூதாநாம் ஈஸ்வர: அபி ஸந்-உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்,
ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய-யான் எனது பிரகிருதியில் நிலை பெற்று,
ஆத்ம மாயயா ஸம்பவாமி-என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்)

சாஸ்த்ர பிரதானம் -உள்ளே புகுந்து நியமித்து –இவற்றாலும் கார்ய கரம் இல்லாமல்
பல யோனிகளாய் அவதரித்ததும் அருளினாய்-

விபவ அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை பெரிய பெருமாள் இடம் அனுபவிக்கக் கருதி –
தேவர் தாரண நியமன சங்கல்பங்களாலும்-
ப்ரஹ்ம மன்வாதி முகேந ஸ்ருதி ஸ்ம்ருதி ஸாஸ்த்ர ப்ரதானாதிகளாலும்–
பராசார்ய மைத்ரேய முகேந ஆச்சார்ய சிஷ்ட நிஷ்ட ப்ரகாசாதிகளாலும் திருந்தாத சம்சாரிகளைப் பார்த்து –
கர்ம க்ருத பிறப்பும் இன்றிக்கே பிரகாசியா நிற்க
ஸ்வ இச்சையால் -சங்கல்பத்தால் -தேவ மனுஷ்யாதி சஜாதீயராக –
விஷ்ணு உபேந்திர ராம கிருஷ்ண வராஹ நரசிம்ம ஹயக்ரீவ ரூபத்துடன் அவதரித்து அருளுகிறீர் -என்கிறார்

——————

அநு ஜனு அநு ரூப சேஷ்டா ந யதி சமா கமம் இந்திரா அகர்ஷியத்
அசரசம் அதவா அப்ரியம் பவிஷ்ணு த்ருவம் அகரிஷ்யத ரங்க ராஜ நர்ம—49-

ஹே ரங்க ராஜ

இந்திரா–அநு ஜனு–பிராட்டியானவள் தேவரீர் அவதாரம் தோறும்

அநு ரூப சேஷ்டா சதீ–தேவரீருக்கு ஒத்த உருவத்தையும் லீலைகளையும் உடையவளாய்க் கொண்டு

சமா கமம் –உடன் திரு அவதாரம்

ந யதி அகர்ஷியத்–செய்து அருளாது இருந்தாள் ஆகில்

தே நர்ம அசரசம்–தேவருடைய விலாச சேஷ்டிதையை சுவை அற்றதாகவோ

அதவா அப்ரியம்–அல்லது பிரியம் அற்றதாகவோ -வெறுக்கத் தக்கதாகவோ

த்ருவம் அகரிஷ்யத–பண்ணி இருப்பாள் -இது நிச்சயம் –

அவதாரம் தோறும் அனுரூபையாய் பிராட்டி அவதரித்து சுவையும் பிரியமும் ஆகும் படி செய்தாள்-

பெரிய பெருமாள் அவதரித்து அருளும் அவதாரங்கள் தோறும் பெரிய பிராட்டியார் அந்த அந்த அவதார
அநு குணமான விக்ரஹ சேஷ்டிதங்களை உடையவளாய்க் கொண்டு ஸம்லேஷிக்கா விடில்
அந்த அவதார லீலை ரஸ்வத் இன்றிக்கே-
புருஷகாரம் இல்லாமல்
ஆஸ்ரித ரக்ஷண சித்தி ரூப அநிஷ்ட சாதிக்கையும் ஆகும் என்கிறார் —
அநிஷ்டவஹமாக நிச்சிதமாக ஆகும்

———-

கரீயஸ்த்வம் பரிஜா நந்தி தீரா பரம் பாவம் மனுஜத்வாதி பூஷ்ணும்
அஜா நந்த த்வ அவஜா நந்தி மூடா ஜநிக்நம் தே பகவந் ஜென்ம கர்ம –50-

ஹே பகவந்

தீரா–மயர்வற மதி நலம் அருள பெற்றவர்கள் தாம்

கரீயஸ்த்வம்–தேவருடைய பரத்வத்தை

பரிஜா நந்தி –நன்கு அறிகின்றார்கள்
எத்திறம் என்று மோகித்து கிடப்பார்கள்

மூடாஸ் து –மூர்க்கர்களான சம்சாரிகளோ என்னில்

பரம் பாவம் மனுஜத்வாதி பூஷ்ணும்–மனுஷ்ய யோனி போன்ற எந்த யோனியிலும் பிறப்பதற்கு உரிய பரத்வத்தை

அஜா நந்த –அறியப் பெறாதவர்களாய்

ஜநிக்நம் -ஜென்ம நிவர்த்தகமான

அவஜா நந்தி தே ஜென்ம கர்ம–பாவிகள் உங்களுக்கு ஏச்சு கொலோ என்று அருளிச் செய்யும் படி –
தேவருடைய திவ்ய சேஷ்டிதங்களையும் திவ்ய அவதாரங்களையும் இழிவாக நினைக்கிறார்கள் –

அவதார சேஷ்டிதங்களுக்கு ஸ்ருதி ஸித்தமான பெருமையில்
மதி நலம் அருள பெற்ற நம் குல கூடஸ்தர் -அக்ரேஸர் -ஈடுபடுகிறார்கள்

ஸ்வ கர்மத்தால் சங்குசித ஞான சம்சாரிகள் பரத்வ ஸ்வரூபத்தை அறியாமல் –
சம்சார நிவர்த்தகங்களான அவதார சேஷ்டிதங்களை இதர சஜாதீயர் ஆக்குகிறார் என்கிறார் –

(ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி ஸோ (அ)ர்ஜுன–ஸ்ரீ கீதை–4-9-

எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ,
அவன் இந்த உடலைவிட்ட பின், மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவு எடுப்பதில்லை.
அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகின்றான்.)

(அவஜா நந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஸ்ரிதம்
பரம் பாவ மஜா நந்த மம பூத மஹேச்வரம் –ஸ்ரீ கீதை -9-11- –

மம பரம் பாவம்-என்னுடைய மேலான இயல்பை,
அஜாநந்த: மூடா-அறியாதவர்களான மூடர்கள்,
மாநுஷீம் தநும்-மனித உடலை,
ஆஸ்ரிதம் பூதமஹேஸ்வரம்-தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு தலைவனான,
மாம் அவஜாநந்தி-என்னை புறக்கணிக்கிறார்கள்.)

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

One Response to “ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–ஸ்லோகங்கள்-1-50-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -தத்வார்த்த சிந்தாமணி —”

  1. Rajagopalan Says:

    We thoroughly enjoyed reading this blog and would like to down load this ? Kindly let us know your views.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading