ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–ஸ்லோகங்கள்–61-127-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -தத்வார்த்த சிந்தாமணி —

ஸ்ரீ பராசர பட்டர் திருக் கோஷ்ட்டியூரில் இருந்து ஸ்ரீ ரெங்கம் திரும்பி வரும் போது திருக் காவேரி தொடக்கமாக
ஸ்ரீ ரெங்கத்தை வருணிக்க படி எழுந்து அருளினார்
பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள்
உத்தர சதகம் -105-ஸ்லோகங்கள்

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே-

பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய பூர்வ வாக்ய விவரணம்
உத்தர சதகம் –105-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய உத்தர வாக்ய விவரணம் –

———-

கைங்கர்ய உபகரணங்களான -கொடி -கத்தி -பொன் வட்டில் -படிக்கம் இவற்றை ஏந்தி –
பரிசாரிகைகள் -கைங்கர்யம் செய்பவர்களை ஸ்துதிப்போம்

லீலா லதா க்ருபாணீ ப்ருங்கார பதத் க்ரஹ அர்ப்பித கர அக்ரா
ப்ரோத அவதம்சித குசா பதாப்ஜ சம வாஹினீ வயம் ஸ்து மஹே –61-

லீலா லதா க்ருபாணீ -விளையாட்டுக்கான கொடி என்ன கத்தி என்ன

ப்ருங்கார பதத் க்ரஹ-பொன் வட்டில் என்ன படிக்கம் என்ன

அர்ப்பித கர அக்ரா-இவற்றில் வைக்கப்பட்ட கை நுனியை யுடையவர்களும்

ப்ரோத அவதம்சித குசா-திரு ஒற்று ஆடையினால் அலங்காரம் பெற்ற கொங்கைகளை யுடையவர்களுமான

பதாப்ஜ சம வாஹினீ வயம் ஸ்து மஹே –திருவடி வருடும் ஸ்ரீ பிராட்டிமார்களை நாம் ஸ்துதிக்கிறோம் –

திருவடி வருடும் -உபகரணங்களை ஏந்தும் என்று பிரித்து
இரண்டு வகையினரையும் சொன்னதாகவுமாம் –

கைங்கர்யங்களைச் செய்த சிஹ்னங்களுடன் அலங்காரமாக உள்ளவரை ஸ்துதிக்கிறோம் என்றவாறு –

————-

சாமரம் வீசும் விமலை முதலான ஒன்பது பரிசாரிகைகள்–காணும் பொழுது
தாமரை மலர்கள் குவிந்தபடி உள்ள
நிலவுடன் கூடிய இரவுப் பொழுது போன்று உள்ளது-

முகுளித நளிநா சகவ் முதீகா இவ ஸூ நிசா விமலாதிகா நவாபி
சிரஸி க்ருத நமஸ்யத் ஏக ஹஸ்தா இதர கர உச்சல சாமரா ஸ்ரயேயம்-62-

சிரஸி க்ருத நமஸ்யத் ஏக ஹஸ்தா–மத்தகத்திடை கைகளைக் கூப்பி என்றபடியே –
ஒரு கையால் தங்கள் தலை மேல் கூப்பித் தொழுவார்களாய்

ஒற்றைக் கையால் நமஸ்காரம் மற்றவர்களுக்கு அபசாரம் –
நியத கைங்கர்ய நிஷ்டர்களுக்கு பாதகம் அன்று

இதர கர உச்சல சாமரா ச்ரயேயம்-மற்ற ஒரு கையால் சாமரம் பரிமாறுபவர்களாய்
இப்படி இருக்கும் நிலைமையினால்

முகுளித நளிநா–தாமரை மலர்கள் மூடிக் கொள்ளப் பெற்றதும்

சகவ் முதீகா–நிலாவோடு கூடி இருக்கப் பெற்றதுமான
இவ ஸூ நிசா ஸ்திதா–அழகிய ராத்திரி போன்று இருக்கின்ற

விமலாதிகா நவாபி ஸ்ரேயயம்–விமலை முதலான ஒன்பது சாம க்ராஹிணிகளையும் ஆஸ்ரயிக்கக் கடவேன்-

ஸ்ரீ உடையவரும் நித்ய கிரந்தத்தில் விமலாயை சாமர ஹஸ்தாய நம–உத்கர்ஷிண்யை சாமர ஹஸ்தாய நம–என்று
தொடங்கி அருளிச் செய்த ஒன்பது திரு நாமங்களை என்கை –

—————–

இப்படிப்பட்ட கர்ப்ப க்ருஹத்தில் தாமரை மலர்கள் நிறைந்த தடாகம் போன்ற நம் பெருமாளையும்
ஸ்ரீ தேவி பூ தேவிமார்களையும் ஸ்துதிப்போம்
தாமரைக் குளம் பாவனம் -அன்னப் பறவைகளும் உண்டே அதே போன்ற உபய நாச்சியார்

இது தொடங்கி -14-ஸ்லோகங்களால் நம்பெருமாள் ஸ்துதி
மேலே -77-ஸ்லோகம் தொடங்கி பெரிய பெருமாள் ஸ்துதி–

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
லஷ்மீம் விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ ஸ்திதம்–மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள

உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
தயரதன் பெற்ற மரகத மணித் தடம்

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே –

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-

தாமரைப் பொய்கையில் அன்னப் பேடை விளையாடும் -அது மேலே –
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்

விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்

ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற
ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

சர்வ காலமும் அனுபவிக்கும் படியாய் உள்ள அர்ச்சாவதார ஏற்றத்தால்-
தேங்கின மடுக்கள் போலே – தடாகமாக உருவகம் –

——————–

தாமரைப் பொய்கை போன்ற நம் பெருமாள் -அந்த நீரைப் பருகுவோம் –
அன்னப் பறவை போன்ற ஸ்ரீ தேவி –
அவளது பிரதி பிம்பம் போன்ற ஸ்ரீ நில தேவி இருவரையும் வணங்குவோம்-

பிப நயன புர தே ரங்க துர்ய அபி தாநம் ஸ்த்திதம் இஹ பரி புல்லத் புண்டரீகம் தடாகம்
ஸ்ரியம் அபி விஹரந்தீம் ராஜ ஹம்ஸீம் இவ அஸ்மிந் பிரதி பலநம் இவ அஸ்யா பஸ்ய விஸ்வம் பராம் ச –64-

ஹே நயன–வாராய் கண்ணே

இஹ-இந்த கர்ப்ப க்ருஹத்தில்

புர தே ஸ்த்திதம்–உன் எதிரிலே நிற்பதாய்

பரி புல்லத் புண்டரீகம்–மலர்ந்த தாமரைப் பூக்களை யுடையதாய்

ரங்க துர்ய அபி தாநம் தடாகம்–ஸ்ரீ ரெங்கநாதன் என்னும் திரு நாமம் யுடைய பொய்கையை

பிப -பானம் பண்ணு

அஸ்மிந் விஹரந்தீம் ராஜ ஹம்ஸீம் இவ–இப்பொய்கையில் விளையாடுகின்ற அன்னப் பேடை போன்றுள்ள

ஸ்ரியம் அபி–ஸ்ரீ மஹா லஷ்மியையும்

பிரதி பலநம் இவ அஸ்யா ஸ்திதம் -இந்தத் திரு மகளுடைய பிரதிபிம்பம் போன்றுள்ள
கீழே சாயை என்றார் -இங்கோ பிரதி பலநம்-என்கிறார் –

பஸ்ய விஸ்வம் பராம் ச –ஸ்ரீ நில மகளையும் சேவிப்பாய்

கீழே உபயாநி என்று அருகே செல்வத்தையும்
இங்கு பிப நயன புரஸ் தே -அவகாஹ நாதிகளைச் சொன்ன படி

அணி அரங்கன் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றபடி
கண்களால் ஆரப் பருகுவதைச் சொன்னபடி –

உலகில் காணும் பொய்கையை தரையில் பரந்து இருக்கும் –
இங்கேயோ -ரங்க துர்ய அபி தாநம் ஸ்த்திதம் -புருஷ ரூபியாய் நின்று கொண்டு இருக்கிறது

உலகில் பொய்கையில் தாமரை மலர்கள் மலர்வதும் மூடுவதும் வாடுவதுமாய் இருக்கும்
இங்கேயோ -பரி புல்லத் புண்டரீகம் -மலர்ந்தே அன்றோ இருக்கிறது –

—————-

ஸுவ்சீல்யத்தால் குளிர்ந்த தடாகம் -கருணை அலைகளால் உலகை நீராட்டும் –
ஸ்ரீ ரெங்க நாச்சியாரால் நறு மணம் சேர்க்கப் பட்டது –
நிம்நம் –ஆழம் என்றபடி -அபரிச்சேத்யம்–

ஸுவ்சீல்ய சீதலம் அவேல க்ருபா தரங்க சம்ப்லாவித அகிலம் அக்ருத்ரிம பூம நிம்நம்
லஷ்ம்யா ச வாசிதம் அபூம விகஹமாநா ஸ்ரீ ரெங்கராஜ மிஷ பத்ம ஸர பிரசன்னம் –65-

ஸுவ்சீல்ய சீதலம் -ஸுசீல்ய குணத்தினால் குளிர்ச்சி பெற்றதும்
பரத்வமே பொலிய நின்றால் நெருப்பு போலே அணுக ஒண்ணாதே
தாப த்ரயத்தில் அழுந்திய நாம் கூசாதே வந்து படியும்படி அன்றோ இங்கு –

அவேல க்ருபா தரங்க–கறை கடந்து பெருகுகின்ற அருளாகிய அலையினாலே

சம்ப்லாவித –நீராட்டப் பட்ட

அகிலம்–ஸமஸ்த ஜனங்களையும் யுடைத்தாய் –
கிருபா பிரவாஹத்தால் இன்னார் இணையார் என்று தரம் பாராதே போஷிக்கும்

அக்ருத்ரிம பூம–இயற்கையான பெருமையையும் யுடையதான

நிம்நம்–அளவிடமுடியாத குண விபூதியை யுடையதாய் –ஆழ்ந்ததாய்

லஷ்ம்யா ச வாசிதம்–ஸ்ரீ பெரிய பிராட்டியால் பரிமளம் பெற்றதாய்

பிரசன்னம் –தெளிந்ததான–
ஸ்ரீ பெரிய பிராட்டியின் சேர்க்கையால் அபராதிகளான ஆஸ்ரிதர் திறத்தில் கலக்கம் நீங்கி
தெளிந்து அன்றோ அழகிய மணவாளன் இருக்கிறான்

அபூம விகஹமாநா ஸ்ரீ ரெங்கராஜ மிஷ பத்ம ஸர –ஸ்ரீ ரெங்கநாதன் என்னும் தாமரைத் தடாகத்தில்
குடைந்து ஆடுமவர்களாக ஆனோம் –

——————-

பிராட்டிமார் சேர்த்தி மூலம் கிட்டப் பெற்ற
இளமை
அழகு
ஐஸ்வர்யம் கொண்டு
வீற்று இருந்து அருளும் நம்பெருமாளை எப்போதும் சேவிப்போம்–

ஸிம்ஹாஸநே கமலயா ஷமயா ச விஸ்வம் ஏக ஆத பத்ரயிதும் அஸ்மத் அஸூந் நிஷண்ணம்
லஷ்மீ ஸ்வயம் வர சநாதித யவ்வன ஸ்ரீ ஸுவ்ந்தர்ய சம்பத் அவலிப்தம் இவ ஆலிஹீய –66-

ஸிம்ஹாஸநே கமலயா ஷமயா ச –கோப்புடைய சீரிய திவ்ய சிம்ஹாசனத்திலே திரு மகளோடும் நில மகளோடும் –
திருமடந்தை மண் மடந்தை இரு பாழும் திகழ -என்றபடி

விஸ்வம் ஏக ஆத பத்ரயிதும் -ஸமஸ்த சராசரங்களையும் ஒற்றக் குடை யுடையதாகச் செய்வதற்கு
ஆதி ராஜ்ய லக்ஷணமான ஒற்றை வெண் கொற்றக் குடை —
ராஜாதி ராஜ சர்வேஸ்வரேஸ்வரன் அன்றோ

நிஷண்ணம்–எழுந்து அருளி இருக்கின்றவனும்

அஸ்மத் அஸூந் -என் உயிராய் இருப்பவனும் –
என் திரு மகள் சேர் மார்பனே என்னுடைய ஆவியே என்னும் -என்னுமா போலே
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் அழகிய மணவாளன் அன்றோ நமக்கு

லஷ்மீ ஸ்வயம் வர சநாதித –ஸ்ரீ பெரிய பிராட்டியின் ஸ்வயம் வரத்தினால் க்ருதார்த்தமாகப் பண்ணப் பட்ட

யவ்வன ஸ்ரீ –யவ்வன சோபை என்ன

ஸுவ்ந்தர்ய சம்பத்-சமுதாய அழகாகிற செல்வம் என்ன

அவலிப்தம் இவ–செருக்குக் கொண்டவன் போலே இருப்பவனான அழகிய மணவாளனை

ஆலிஹீய –போக்யமாக அனுபவிக்கக் கடவேன் –வாய் மடுத்து பருகிக் களிப்போம்
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னர் கனி அன்றோ –

—————-

திருவடிகள் தொடங்கி திருமுடி வரை -திவ்ய அவயவங்கள் இருந்து
மேன்மையும் நீர்மையும் அலை மோதியபடி உள்ளன –
அவன் மேல் உள்ள காதலை வளர்க்கின்றன –
கண்கள் இமைக்காமல் கண்டு ஸ்துதிப்போம்-

ஆபாத மூல மணி மௌலி ச முல்ல சந்த்யா ஸ்வா தந்த்ர்ய ஸுவ்ஹ்ருத தரங்கி தயா அங்க பங்க்யா
சக்க்யம் ஸமஸ்த ஜன சேதஸி சந்த தாநம் ஸ்ரீ ரெங்க ராஜம் அநிமேஷம் அநுஸ்ரியாஸ்ம –67-

ஆபாத மூல மணி மௌலி –திருவடி தொடங்கி திரு அபிஷேகம் ஈறாக

ச முல்லசந்த்யா -விளங்குகின்றதாய்
ஸ்வா தந்த்ர்ய ஸுவ்ஹ்ருத தரங்கி தயா-மேன்மையும் நீர்மையும் ஒருங்கே அலை எறியப் பெற்றதான

அங்க பங்க்யா-அவயவங்களின் சந்நிவேசத்தினால்
ஒவ் ஒரு அவயவவும் ஆகர்ஷகத்வம் பொலிந்து இருக்குமே –

கீழே செருக்கு கொண்டவர் என்று பின் வாங்காமல்
நெருங்க
ஸுவ்ஹ்ருத் அன்றோ என்கிறார் இதில் –

சக்க்யம் ஸமஸ்த ஜன சேதஸி சந்த தாநம்–சகல ஜனங்களினுடையவும் நெஞ்சில் அன்பை விளைவிக்கின்ற

ஸ்ரீ ரெங்க ராஜம் அநிமேஷம் அநுஸ்ரியாஸ்ம –ஸ்ரீ ரெங்க நாதனை இமை கொட்டாமல்
அனுபவித்து அனுவர்த்திக்கக் கடவோம் –

——————

ஸ்ரீ தேவி பூதேவி கற்பகக் கொடிகள் நம்பெருமாளை ஆலிங்கனம் செய்தபடி உள்ளன –
பாரிஜாதமாகவே இருந்து–பலன்களை அனைத்தும் அளித்து – சம்சார தாபங்களைத் தீர்க்கும்-

ஷிதி கமல நிவாஸா கல்ப வல்லி ச லீல உல்லுடந த ச திசா உத்யத் யவ்வன ஆரம்ப ஜ்ரும்ப
ஸ்ரமம் அபஹரதாம் மே ரங்க தாமா இதி தத் தத் வரமய பல நம்ர பத்ரல பாரிஜாத –68-

ஷிதி கமல நிவாஸா கல்ப வல்லி–நில மகளும் திரு மகளுமாகிற கற்பகக் கொடிகளின்

கலச ஜலதி கந்யா வல்லரீ கல்ப ஸாகீ –ஸ்ரீ தேசிகன் –

ச லீல உல்லுடந–விலாசத்தோடு கூடின ஆலிங்கனத்தினால்

தச திசா உத்யத் –பத்துத் திசைகளிலும் விளங்குகின்ற
அவன் ஸ்வரூபம் போலே கல்யாண குணங்களும் பத்துத் திக்குகளிலும் பரவி இருக்குமே –

ஸ்ரீ பிராட்டிமாருடன் லீலா ரசம் அனுபவிக்க
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் –
விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டுமே –

இவர் தாமே ஸ்ரீ குணரத்னகோசத்தில்
அநு கலத அநு காண்ட ஆலிங்கன ஆரம்ப கம்பத் பிரதி திச புஜ சாக ஸ்ரீ சகாநோக ஹர்த்தி -என்றும்

போக உபோத்காதா கேலீ சுலாகித பகவத் வைஸ்வரூப்ய அநு பாவ -என்றும்

தச சத பாணி பாத–விநிமஞ்சதி தே –என்றும் அருளிச் செய்கிறார் அன்றோ –

யவ்வன ஆரம்ப ஜ்ரும்ப–யவ்வனத் தொடக்கத்தின் வை லக்ஷண்யத்தை யுடைத்தாய்
நித்ய யுவா அன்றோ

ஸ்ரீ கூரத்தாழ்வானும் -ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் -56-
ரம்பா ஸ்தம்பா–தததி நததா யவ்வன ஆரம்ப ஜ்ரும்பா -என்று அருளிச் செய்கிறார் –

பத்ரல-இலைகள் நிரம்பியதாய்

தத் தத் வரமய பல நம்ர–அவர் அவர்கள் பெறும் வரங்கள் ஆகிற பழங்களினால் வணக்கம் உற்றதான

வ்ருக்ஷம் பழங்கள் மிக்கு கனத்தினால் தாழ வணங்கி இருக்கும் –
இவனும் சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு –அன்றோ

ரங்க தாமா இதி பாரிஜாத –ஸ்ரீ ரெங்க நாதன் என்னும் பாரிஜாத வ்ருஷமானது

ஸ்ரீ வாஸூ தேவ தரு –

நிவாஸ வ்ருஷஸ் ஸாதூநாம் –

எனக்கே தன்னைத் தந்த கற்பகம்

ஸ்ரமம் அபஹரதாம் மே –என்னுடைய விடாயை தொலைத்திடுக —

தாப ஹரத்வமான வ்ருஷ காரியத்தை அழகிய மணவாளன் நமக்கு செய்து அருளுகிறார் என்றதாயிற்று –

——————

ஸம்பாஷமாணம் இவ சர்வ வசம் வதேந மந்த ஸ்மிதேந மதுரேண ச வீக்ஷணேன
திவ்ய அஸ்த்ர புஷ்பித சதுர் புஜம் அதி உதாரம் ரங்க ஆஸ்பதம் மம சுப ஆஸ்ரயம் ஆஸ்ரயாணி –69-

சர்வ வசம் வதேந மதுரேண மந்த ஸ்மிதேந –எல்லாரையும் வசீகரிக்க வல்ல-இனிமையான புன் முறுவலாலும்
தத் புருஷ ஸமாசகத்தால் எல்லாருக்கும் எளிதான மந்தஹாசம்
பஹு வ்ருஹீ ஸமாஸகத்தால்-எல்லாரையும் வசப்படுத்திக் கொள்ளும் மந்தஹாசம்

மதுரேண ச வீக்ஷணேன-இனிமையான நோக்காலும்

ஸம்பாஷமாணம் இவ–ஸ்திதம் –பேசுகிறவர் போலே இருப்பவரும்

அபிமத ஜன தரிசன ஆனந்த வேகத்தால் அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி வருகின்ற
அவ்யக்த மதுர மந்தகாச விலாசத்தினாலும்
பரம கிருபை பொழிகின்ற கடாக்ஷ வீக்ஷணத்தாலும்
நிறைந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை நோக்கும் கால் சோதி வாய் திறந்து வார்த்தை அருளிச் செய்கிறானோ
என்று சங்கிக்கலாம் படி இருக்குமே

திவ்ய அஸ்த்ர புஷ்பித சதுர் புஜம்–திவ்ய ஆயுதங்களினால் பூத்து இருக்கின்ற நான்கு திருக் கைகளை யுடையவரும்
கற்பகத் தரு பணைத்து கணை தோறும் அரும்பினால் போலே ஆயிற்று
வடிவும்
திவ்ய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது

கீழே இலை பழ ஸம்ருத்தியை சொல்லி
இதில் புஷ்ப ஸம்ருத்தியை அருளிச் செய்கிறார்

அதி உதாரம்–மிகவும் உதாரருமான

மம சுப ஆஸ்ரயம்-அடியேனுக்கு நல்ல புகலிடமாய் இருப்பவரும்

ரங்க ஆஸ்பதம் ஆஸ்ரயாணி –ஸ்ரீ அரங்க மா நகர் அமர்ந்த பெருமானை ஆஸ்ரயிக்கக் கடவேன் –

நன்மைகளையே அருளும் ஸூப ஆஸ்ரயம் அன்றோ –

————————–

ஏதே சங்க கதா ஸூதர்சன ப்ருத ஷேமங்கரா பாஹவா
பாத த்வந்த்வம் இதம் சரண்யம் அபயம் பத்ரம் ச வ ஹே ஜனா
இதி ஊசுஷி அபயம் கரே கரதல ஸ்மரேண வக்த்ரேண
தத் வ்யாகுர்வந் இவ நிர்வஹேத் மம துரம் ஸ்ரீ ரெங்க சர்வம் ஸஹ –70-

ஹே ஜனா–ஓ ஜனங்களே

சங்க கதா ஸூதர்சன ப்ருத-ஏதே – பாஹவா–சங்கு கதை சக்கரம் ஆகிய இவற்றை ஏந்தி இருக்கின்ற இது திருக் கைகள்

வ ஷேமங்கரா–உங்களுக்கு க்ஷேமம் அளிப்பன

பாத த்வந்த்வம் இதம் சரண்யம் அபயம் –சர்வ ஸமாஸ்ரயணீயமான இத் திருவடி இணைகளும் உங்களுக்கு
புகலாயும் அபயம் அளிப்பதாயும்

பத்ரம் ச வ-நன்மை தருவதாயும் இருக்கின்றன

இதி ஊசுஷி அபயம் கரே கரதல –என்று
அபய முத்திரையோடு கூடின திருக் கையானது தெரிவிக்கும் அளவில்

ஸ்மரேண வக்த்ரேண தத்–அந்த விஷயத்தை புன் முறுவல் கொண்ட திரு முக மண்டலத்தினால்

வ்யாகுர்வந் இவ ஸ்தித-வியாக்யானம் செய்பவர் போன்றுள்ள

நிர்வஹேத் மம துரம் ஸ்ரீ ரெங்க சர்வம் ஸஹ –ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அடியேனுடைய பாரங்களை தாமே நிர்வகிக்கக் கடவர் –

யோக க்ஷேமம் வஹாம் அஹம் -என்று ஸ்ரீ கீதையில் வாயோலை செய்து கொடுத்த படியே அழகிய மணவாளன்

ஸ்ரீ ரெங்க சர்வம் சக-சர்வ லோக நிர்வாகஹர் என்றபடி

———————

அங்கைர் அஹம் ப்ரமிதிகா ஆஸரித ஆத்மதாநை ஆமோத மாந நவ யவ்வன சாவலேபை
ஸஹ பாரிஜாதம் இவ நூதன தாயமான சாகா சதம் ஹ்ருதி ததி கதமதீ மஹி ரங்க துர்யம்–71-

அங்கைர்–திவ்ய அவயவங்களினால்

அஹம் ப்ரமிதிகா ஆஸரித ஆத்மதாநை–நான் முன்னே நான் முன்னே என்று முற்பட வந்து தம்மை
ஆஸ்ரிதர்களுக்கு அனுபவிக்க கொடுப்பவைகளாயும்

ஆமோத மாந நவ யவ்வன சாவலேபை–பரிமளிக்கின்ற புதிய யவ்வனத்தால் செருக்குக் கொண்டவைகளாயும்

ஸஹ பாரிஜாதம் இவை நூதன தாயமான சாகா சதம்–புதிது புதிதாகச் செழித்து வளர்கின்ற பல கிளைகளை யுடைத்தான
பாரிஜாதம் வ்ருக்ஷம் போன்றுள்ள

ஹ்ருதி ததி கதமதீ மஹி ரங்க துர்யம்–ஸ்ரீ ரெங்க நாதனை நெஞ்சிலே தாங்கக் கடவமோ –
எப்படித் தாங்குவது-கஷ்டம் என்றவாறு

பெறும் காற்று மழையில் பல கனிகள் ஒருங்கே உதிர்ந்தால்
எத்தை எடுத்து நுகர்வது என்று தடுமாறி நிற்குமா போலே அன்றோ –

தோள் கண்டார் தோளே கண்டார் –தாள் கண்டார் தாளே கண்டார் -என்று
ஒன்றிலே தானே அழுந்தி விடலாய் இருக்கும் என்றவாறு-

————–

ஸ்ருங்கார ரஸமே வடிவு –ஸ்மிதம் கல் நெஞ்சைரையும் உருக்குமே –
அர்ச்சா சமாதியை கடந்து பேசத் துடிக்கும் திருவாயானது
தாபத் த்ரயம் தீர்க்கும் நிழல் –
யவ்வனம் மனசை குளிர வைக்கும்

ஆலோகா ஹ்ருதயாளவ ரச வசாத் ஈஸாநாம் ஈஷத் ஸ்மிதம்
பிரச் ச்சாயாநீ வஸாம்ஸி பத்ம நிலயா சேத சரவ்யம் வபுஸ்
சஷுஷ் மந்தி கதா கதானி த இமே ஸ்ரீ ரெங்க ஸ்ருங்கார தே
பாவா யவ்வன கந்திந கிம் அபரம் சிஞ்சந்தி சேதாம்சி ந –72-

ஹே ஸ்ரீ ரெங்க ஸ்ருங்கார–ஸ்ரீ கோயிலிலே ஸ்ருங்காரமே வடிவு எடுத்து நிற்பது போன்றுள்ள பெருமானே

தே ஆலோகா ஹ்ருதயாளவ–உன்னுடைய கடாக்ஷங்கள் ஆஸரித்தார்கள் இடத்தில் அன்போடு கூடியவை –

ரச வசாத் ஈஸாநாம் ஈஷத் ஸ்மிதம்–மந்த ஹாஸமானது ப்ராணயாசத்தினால் அனைவரையும் வசப் படுத்திக் கொள்ளுமது –

பிரச் ச்சாயாநீ வஸாம்ஸி -வாய் மொழிகள் தாபத் த்ரய துரர்க்கு நிழல் தருவன

பத்ம நிலயா சேத சரவ்யம் வபுஸ்–திரு மேனியானது பங்கயத்தாளான பிராட்டியின் திரு உள்ளத்துக்கு இலக்காய் இருக்குமது –

சஷுஷ் மந்தி கதா கதானி–திரு வீதிப் புறப்பாடுகளில் எழுந்து அருளுவதும் மீண்டு எழுந்து அருளுவதும் கண்ணுக்கு இனிமையானவை

கிம் அபரம்-வேறே என்ன

இமே தே–ஆக இப்படிப்பட்ட

பாவா யவ்வன கந்திந–யவ்வன ஸூசங்களான விஷயங்கள்

சிஞ்சந்தி சேதாம்சி ந –அடியோங்களுடைய நெஞ்சுக்களை குளிரச் செய்கின்றன

எம்பெருமானை சேவிக்கும் பொழுது அஸ்மதாதிகள் அனுசந்திக்க வேண்டிய ஸ்லோகங்களில் முதன்மையானது இது –

———————–

ஆயத் கிரீடம் அளிக உல்லசத் ஊர்த்வ புண்ட்ரம் ஆகர்ண லோசநம் அநங்குச கர்ண பாசம்
உத் புல்ல வக்ஷஸம் உத் ஆயுத பாஹும் அர்ஹன் நீவிம் ச ரங்கபதிம் அப்ஜபதம் பஜாம–73-

ஆயத் கிரீடம்–நீண்ட திரு அபிஷேகத்தை உடையவரும்

அளிக உல்லசத் ஊர்த்வ புண்ட்ரம் –திரு நெற்றியிலே விளங்குகின்ற ஊர்த்வ புண்ட்ரத்தை உடையவரும்

ஆகர்ண லோசநம்–திருச் செவி அளவும் நீண்ட திருக் கண்களை யுடையவரும்

அநங்குச கர்ண பாசம்–தட்டுத் தடங்கல் அற்ற சிறந்த திருச் செவிகளை யுடையவரும்

திருக்கண்களுக்கு திருக் காது மடல்கள் எல்லை போலே இவற்றுக்கு இல்லையே என்பதால் -அநங்குச-விசேஷணம் –

உத் புல்ல வக்ஷஸம்–விசாலமான திரு மார்பை யுடையவரும்

உத் ஆயுத பாஹும் –திவ்யாயுதங்களைக் கொண்ட திருக் கரங்களும்

அர்ஹன் நீவிம்–ஏற்று இருக்கின்ற வஸ்திர பந்தத்தை யுடையவரும்

அப்ஜ பதம் ச -தாமரை போன்ற திருவடிகளை யுடையவருமான

ரங்க பதிம் பஜாம–அழகிய மணவாளப் பெருமாளை சேவிக்கிறோம் –

முடிச் சோதியாய் உனது முகச் சோதி அலர்ந்ததுவோ -என்னும் படி கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியும்

திரு நெற்றியிலே விளங்கும் திரு ஊர்த்வ புண்ட்ரமும்

திருச் செவி மடல்கள் அளவும் நீண்டு புடை பரந்து விளங்குகின்ற திருக் கண்களும்

அந்த திருக் கண்கள் போலே ஒரு வரம்பில் நிற்க வேண்டாதபடி தடை இன்றி பரந்து விளங்கும் திருச் செவி மடல்களும்

திரு மார்பிலே கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் குரு மா மணிப் பூண் குலாவித் திகழ்வதைப் பார்த்தால்
ஒரு பொழில் பூத்துக் கிடக்கிறதோ என்னலாம்படியான திரு மார்பும்

அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்று மதி மயக்க வல்ல
திவ்ய ஆயுத ஆழ்வார்களைக் கொண்ட திருக்கரங்களும்

மிகப் பொருத்தமான திரு பரிவட்டச் சாத்தும்

செந்தாமரை பூ போன்ற திருவடிகளையும் –

திவ்ய அவயவாதி சோபையை அனுபவித்து அருளுகிறார்

—————————-

அப்ஜ ந்யஸ்த பதாப்ஜம் அஞ்சித கடீ ஸம்வாதி கௌசயேகம்
கிஞ்சித் தாண்டவ கந்தி சம்ஹநந அகம் நிர் வ்யாஜ மந்த ஸ்மிதம்
ஸூடா கம்பி முக அம்புஜம் நிஜ புஜா விஸ்ராந்த திவ்ய ஆயுதம்
ஸ்ரீ ரெங்கே சரதஸ் சதம் ததஸ் இத பஸ்யேம லஷ்மீ சகம் –74–

அப்ஜ ந்யஸ்த பதாப்ஜம் –ஆசன பத்மத்தில் அழுத்தின திருவடித் தாமரைகளை யுடையவரும்

அஞ்சித கடீ ஸம்வாதி கௌசயேகம்–சிறந்த திருவரைக்குப் பாங்கான பட்டுத் திரு பரியட்டத்தை யுடையவரும் –

கிஞ்சித் தாண்டவ கந்தி சம்ஹநந அகம் –அபிமத ஜன தரிசன ஆனந்த வேகத்தால் சிறிது நர்த்தனம் செய்வது போல்
விளங்குகின்ற திருமேனியை யுடையவரும்

நிர் வ்யாஜ மந்த ஸ்மிதம்–இயற்கையான புன் முறுவலை யுடையவரும்

ஸூடா கம்பி முக அம்புஜம்–திரு அபிஷேகத்தை தழுவி இருக்கின்ற திரு முக கமலத்தை யுடையவரும்

நிஜ புஜா விஸ்ராந்த திவ்ய ஆயுதம்–திருக் கைகளில் இளைப்பாறுகின்ற திவ்ய ஆயுதங்களை யுடையவருமான

ஸ்ரீ ரெங்கே சரதஸ் சதம் ததஸ் இத பஸ்யேம லஷ்மீ சகம் -ஸ்ரீ நம்பெருமாளை ஸ்ரீ திருவரங்கத்தில் இன்னும்
ஒரு நூற்று ஆண்டு அளவும் அங்கேயே சேவிக்கக் கடவோம் –

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் நித்ய அனுபவம் பண்ண மங்களா சாசனம் –

தத இத பஸ்யேமே–வ்ருஷே வ்ருஷே ச பச்யாமி சீர க்ருஷ்ண ஜிநாம்பரம் -மாரீசனைப் போலே
எங்கு பார்த்தாலும் இந்த திவ்ய சேவையேயாக வேணும் என்றதாயிற்று –

—————————-

அக்ரே தார்ஷ்யேண பச்சாத் அஹிபதி சயனேந ஆத்மநா பார்ஸ்வயோ
ஸ்ரீ பூமிப்யாம் அத்ருப்த்யா நயந சுளிகநை ஸேவ்யமாந அம்ருதவ்கம்
வக்த்ரேண ஆவி ஸ்மிதேந ஸ்ப்புரத் அபயகதா சங்க சக்ரை புஜாக்ரை
விஸ்வஸ்மை திஷட்ட மாநம் சரணம் அ சரணாஸ் ரங்கராஜம் பஜாம –75-

அக்ரே தார்ஷ்யேண –திரு முன்பே பெரிய திருவடியாலும்

பச்சாத் அஹிபதி சயனேந ஆத்மநா -பின்பே சேஷசாயியான தம்மாலும்

பார்ஸ்வயோ ஸ்ரீ பூமிப்யாம்–இரண்டு அருகும் ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமி தேவிகளாலும்

அத்ருப்த்யா–பரியாப்தி இன்றிக்கே –

நயந சுளிகநை ஸேவ்யமாந அம்ருதவ்கம்-ஸூவ்ந்தர்யமாகிற அமுத வெள்ளத்தைக் கண்ணாரப் பருகப் பெற்றவராய் –

வக்த்ரேண ஆவி ஸ்மிதேந–புன் முறுவல் தோற்றப் பெற்ற திரு முக மண்டலத்தினாலும்

ஸ்ப்புரத் அபயகதா சங்க சக்ரை புஜாக்ரை-அபய முத்திரையும் கதையும் சங்கு சக்கரமும் விளங்கப் பெற்ற புஜாக்ரமங்களிலாலும்

விஸ்வஸ்மை திஷட்ட மாநம்–எல்லாருக்கும் தம் திரு உள்ளத்தை வெளியிடுகின்றவரான

நிற்பதனாலாயே தனது திரு உள்ளக் கருத்தை சகலரும் அறியும் படி உள்ளான் –

மாஸூச-உங்களை ரக்ஷிப்பதற்கு அன்றோ
உபய காவேரீ மத்யத்திலே இந்த திருக் கோலத்தோடு வந்து படு காடு கிடக்கிறேன்

சரணம் அ சரணாஸ் ரங்கராஜம் பஜாம –ஸ்ரீ நம்பெருமாளை புகலற்ற நாம் சரண் அடைகின்றோம் –

நான்கு திசைகளிலும் நால்வரும் இருந்து கொண்டு கண்ணாரப் பருகும் அமுதம் அன்றோ
இவனுடைய ஸுவ்ந்தர்ய சாகரம் ஆகிய திவ்ய அம்ருதம்

——————

ஆர்த்த அபாஸ்ரயம் அர்த்தி கல்பகம் அஸஹ்ய ஆகஸ்கர ஷமா தலம்
ஸத்ய ஸம்ஸ்ரித காமதேனும் அபியத் சர்வஸ்வம் அஸ்மத் தனம்
ஸ்ரீ ரெங்கேஸ்வரம் ஆஸ்ரயேம கமலா சஷு மஹீ ஜீவிதம்
ஸ்ரீ ரெங்கேஸ ஸூகா கரோது ஸூ சிரம் தாஸ்யம் ச தத்தாம் மயி –76-

ஆர்த்த அபாஸ்ரயம் அர்த்தி கல்பகம் -ஆர்த்திகளுக்கு புகலிடமாயும் அர்த்திகளுக்கு கல்ப வ்ருஷமாயும் –
ஐஸ்வர்யார்த்திகள் இரு வகை உண்டே -இழந்த ஐஸ்வர்யம் வேண்டுவார் -புதிதாக வேண்டுவார் –

அஸஹ்ய ஆகஸ்கர ஷமா தலம்–அஸஹ்ய அபராதிகள் விஷயத்தில் பொறுமை உள்ளவராயும்
கைவல்யார்த்திகளைச் சொன்னபடி

ஸத்ய ஸம்ஸ்ரித காமதேனும்–அன்றே வந்து அடைந்தார்க்கு காமதேனு போலே வேண்டியவற்றைக் கொடுப்பவராயும்
ஞானிகளான முமுஷுக்களுக்கு –

அபியத் சர்வஸ்வம் –ஆழ்வார்கள் போல்வாருக்கு எல்லாம் கண்ணன் என்னும் படி சர்வ ஸ்வம்மாய் இருப்பவராயும்

முற்றவும் தான் உண்டான் முற்றப் பருகினான் –

உண்ணும் சோறு -இத்யாதி —

சேலேய் கண்ணியரும்–இத்யாதி –

வாஸூ தேவம் சர்வம் –

அஸ்மத் தனம்-எமது செல்வமாயும்-
அஸ்மத் குல தனம்

கமலா சஷு-ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு கண்ணாயும்

மஹீ ஜீவிதம் –ஸ்ரீ பூமிப் பிராட்டிமாருக்கு பிராணனனுமாயும் இருக்கிற

ஸ்ரீ ரெங்கேஸ்வரம் ஆஸ்ரயேம–ஸ்ரீ நம் பெருமாளை ஆஸ்ரயிப்போம்

ஸ்ரீ ரெங்கேஸ ஸூகா கரோது ஸூ சிரம்–அந்த ஸ்ரீ நம்பெருமாள் நெடுநாள் அளவும் ஸ்ரீ ரெங்கத்தில் அடியேனை சுகப் படுத்த வேணும் –
நித்ய கைங்கர்யம் அளித்து சுகப் படுத்த வேண்டும் என்றபடி –

தாஸ்யம் ச தத்தாம் மயி –அடியேன் இடத்தில் தாச விருத்தியையும் அருள வேணும் –

அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்ய பிரார்த்தனை

————————

கீழே -17-ஸ்லோகங்களால் ஸ்ரீ நம்பெருமாள் அனுபவம் –
இந்த ஸ்லோகம் தொடங்கி ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்துதி –
இந்த ஸ்லோகம் ஸ்ரீ ஆதிசேஷன் அனுபவம்–

ஸ்வ பண விதான தீப்ர மணிமாலி ஸூதாம ருசி
ம்ரதிம ஸூகந்தி போக ஸூக ஸாயித ரங்க தனம்
மத பர மந்த்ர உஸ்ச் வசித நிஸ்ச் வசித உத்தரளம்
பணி பதி டோலி கதாலிமம் ஆஸ்வசிம ப்ரணதா -77-

ஸ்வ பண விதான–தன்னுடைய படமாகிற மேல் கட்டில்

தீப்ர மணிமாலி –பிரகாசித்துக் கொண்டு இருக்கிற மணிகளின் வரிசையை யுடைத்தாயும்

ஸூதாம ருசி ம்ரதிம ஸூகந்தி-நல்ல பூ மாலை போன்ற அழகு ஸுவ்குமார்யம் நறு மணம் ஆகிய இவற்றை யுடைத்தாய் இருக்கிற

போக ஸூக ஸாயித ரங்க தனம்–தனது மேனியில் இனிதாக திருக் கண் வளர்த்தி அருளப்பட்ட ஸ்ரீ பெரிய பெருமாளை யுடைத்தாய் –

மத பர–எம்பெருமானை விடாது வஹிப்பதனால் உண்டான மதி அதிசயித்தினால்

மந்த்ர உஸ்ச் வசித நிஸ்ச் வசித–மந்தமாக உண்டாகின்ற மேல் மூச்சு கீழ் மூச்சுகளாலே

உத்தரளம்-அசைந்து கொண்டு இருப்பதான

பணி பதி டோலி கதாலிமம்–திரு அனந்தாழ்வான் ஆகிற ஊஞ்சல் படுக்கையை

ஆஸ்வசிம ப்ரணதா -வணங்கினோமாய் தேறுதல் அடைகின்றோம்

எம்பெருமானுக்கு பரிவர் இல்லை என்ற அச்சம் தீர்ந்து மகிழலாம்

திருவனந்த ஆழ்வானைப் போலே தம்மிடமும் சர்வ வித கைங்கர்யம் கொண்டு அருள பிரார்த்தனை –

————————

வடதள தேவகீ ஜடர வேத சிரஸ் கமலா ஸ்தந
சடகோப வாக் வபுஷி ரங்க க்ருஹே சயிதம்
வரதம் உதார தீர்க்க புஜ லோசந சம்ஹநநம்
புருஷன் உபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்தி ஹரம்–78-

வடதள–ஆலிலை என்ன

தேவகீ ஜடர–தேவகி திரு வயிறு என்ன

வேத சிரஸ்–வேதாந்தங்கள் என்ன

கமலா ஸ்தந–ஸ்ரீ பெரிய பிராட்டியின் திரு முலைத் தடம் என்ன

சடகோப வாக்–ஸ்ரீ நம்மாழ்வாருடைய திரு வாய் மொழி என்ன

வபுஷி –ஆகிய இவற்றின் ஆக்ருதியைப் போன்ற ஆக்ருதியை யுடைய

ரங்க க்ருஹே சயிதம்–ஸ்ரீ ரெங்க விமானத்தில் பள்ளி கொண்டு இருப்பவரும்

வரதம்–வரங்களை அளிப்பவரும்

உதார தீர்க்க புஜ லோசந சம்ஹநநம்–உதாரங்களான திருக் கைகளையும் நீண்ட திருக் கண்களையும்
கொண்ட திருமேனியை யுடையவரும்

ப்ரணதார்த்தி ஹரம்–வணங்குவர்களுடைய ஆர்த்திகளைப் போக்குமவரான

புருஷன் உபாஸிஷீய பரமம்–ஸ்ரீ பெரிய பெருமாளை உபாஸிக்கக் கடவேன் –

கீழ் உள்ள இடங்களைப் போலே பங்காக கண் வளரும் இடம் என்றவாறு

ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் –ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அணையான்

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் -போல
சில போக்யமான வாசஸ் ஸ்தானங்களை அடுக்கி அருளுகிறார்

வரதம் ப்ரணதார்த்தி ஹரம் -விசேஷணங்கள்
தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் இவரது ஸ்ம்ருதி சந்தானம் விளங்கும் –

——————

உததி பரம வ்யோம்நோ விஸ்ம்ருத்ய பத்ம வநாலய விநிமயமயீம் நித்ராம் ஸ்ரீ ரெங்க தாமநி தாமநி
பணி பரிப்ருட ஸ்பார ப்ரஸ்வாஸ நிஸ்ஸவசித க்ரம ஸ்கலித நயனம் தன்வந் மந்வீத ந பரம புமாந் –79-

உததி பரம வ்யோம்நோ விஸ்ம்ருத்ய –திருப் பாற் கடலையும் ஸ்ரீ வைகுந்தத்தையும் மறந்து ஒழிந்து

பத்ம வநாலய விநிமயமயீம் நித்ராம் –பிராட்டிக்கு மாற்றான யோக நித்திரையை
ஸ்ரீ பெரிய பெருமாள் சில காலம் ஸ்ரீ பெரிய பிராட்டியாருடனும் சில காலம் நித்ரா தேவியுடனும்
இதர விஷயங்களை மறக்கும் படி அன்றோ விளையாடுகிறார் –

உறங்குவான் போலே யோக நித்திரை செய்து அருளினாலும் ஒன்றும் உணராதவன் போலே அன்றோ
அபிநயம் காட்டி அருளி உறங்குவது –

ஸ்ரீ ரெங்க தாமநி தாமநி–ஸ்ரீ திருவரங்கம் என்னும் திருப்பதியில்

பணி பரிப்ருட ஸ்பார ப்ரஸ்வாஸ நிஸ்ஸவசித க்ரம–ஸ்ரீ திரு அனந்தாழ்வானுடைய அதிகமான மேல் மூச்சு கீழ் மூச்சுக்களாலே

ஸ்கலித நயனம்-கூச்சம் அடைந்த திருக் கண்களை யுடைத்தாய் இருக்கும் படி

கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல விழியாவோ -என்று பிரார்த்திக்குமவர்களை
கடாக்ஷித்துக்கொண்டே அன்றோ திருக் கண் வளர்ந்து அருளுகிறது –

தன்வந்–செய்து கொண்டு இருக்கிற -திருக் கண் வளர்ந்து அருளா நிற்கிற –

மந்வீத ந பரம புமாந் –ஸ்ரீ பெரிய பெருமாள் நம்மை திரு உள்ளம் பற்றக் கடவர் —

அடியேனைப் பற்றிய சிந்தனை அநவரதம் அநு வர்த்திக்க வேணும் என்கிறார் –

நாம் அவனை மனனம் பண்ண மாட்டோமாகிலும் அவன் நம்மை மனனம் பண்ணட்டும் என்கிறார் –

நாம் கண் விழித்து இருக்கும் போதும் அவனை ஸ்மரிக்க வல்லோம் அல்லோம் –

அவன் கண் உறங்கும் போதும் நம்மையே ஸ்மரிக்க வேணும் என்கிறார் –

—————–

அபி பணி பதி பாவாத் -45-ஸ்லோகம் -நீல நிறத்ததான ஸ்ரீ ரெங்க விமானத்தில் நீல நிறத்தரான
ஸ்ரீ பெரிய பெருமாள் விளங்கும் படிக்கு மூன்று த்ருஷ்டாந்தங்கள்
1-மேகத்தினால் பருகப்பட்ட கடல் போன்றும் –
2-கடலுள் உள்ள மலை போன்றும் —
3-மலை புதரில் உறங்கும் யானை போன்றவன்

மேகம் -ரெங்க விமானம் –
கடல் -பெரிய பெருமாள்

கடல் -ரெங்க விமானம் –
அதனுள் உள்ள மலை -பெரிய பெருமாள்

புதர்- விமானம்
யானை -பெரிய பெருமாள்

ஜலதிம் இவ நிபீதம் நீரதேந அத்ரிம் அப்தவ் நிஹிதம் இவ சயாநம் குஞ்ஜரம் வா த்ரு குஞ்ஜே
கமல பத கர அக்ஷம் மேசகம் தாம்நி நீலே பணிநம் அதிசயாநம் பூருஷம் வந்தி ஷீயே –80-

தாம்நி நீலே–கறுத்த ஸ்ரீ ரெங்க மந்திரத்தில்

பணிநம் அதிசயாநம் –திரு அனந்தாழ்வான் மேல் பள்ளி கொண்டு இருப்பவரும்

மேசகம் –கரிய திரு மேனி யுடையவரும்

கமல பத கர அக்ஷம்–தாமரை போன்ற திருவடி திருக் கை திருக் கண்கள் யுடையவரும்

ஜலதிம் இவ நிபீதம் நீரதேந ஸ்திதம் -மேகத்தினால் பருகப்பட்ட கடல் போன்று இருப்பவரும்

அத்ரிம் அப்தவ் நிஹிதம் இவ ஸ்திதம் -கடலில் வைக்கப்பட்ட மலை போன்று இருப்பவரும்

சயாநம் குஞ்ஜரம் வா த்ரு குஞ்ஜே–மலைப் புதரில் படுத்துக் கொண்டு இருக்கும் யானை போன்று இருப்பவருமான

பூருஷம் வந்தி ஷீயே –-ஸ்ரீ பெரிய பெருமாளை வணங்கக் கடவேன்

கமல பத கர அக்ஷம்
சமுத்திரத்தில் உள்ள பவளங்கள் போலே இங்கும்
மலையில் உள்ள சிவந்த கைரிகாது தாதுக்கள் போலே இங்கும்
யானையின் சிந்தூரப் பொடி அலங்காரம்-மேல் விரிப்பான -போலே இங்கும்

பணிநம் அதிசயாநம்
சமுத்திரத்தில் உள்ள முத்துத் திரள் போன்று வெண்மையான ஆதி சேஷன் போலே இங்கும்
நெடுகப் பாயும் அருவிகள் போலே இங்கும்
யானை தங்கும் இடமான வெண் மணிப் பாறை போலே இங்கும்

மலைக்கு ஸ்தைர்யமும் யானைக்கு சைதன்யமும் உண்டாகையாலே
உத்தர உத்தர த்ருஷ்டாந்த ஆதிக்யம் உண்டே

————–

சிவந்த அவயவங்கள் –
காவேரி அலைகளால் தாலாட்டு –
கம்பீர ஸ்வபாவம் –
கடலின் குட்டி போன்றவன்

ஸ்ரீ ரெங்கேசய இஹ சர்ம நிர்மிமீதாம்
ஆ தாம்ர அதர பாத பாணி வித்ரும ந
காவேரீ லஹரி கர உப லால்யமாந
கம்பீர அத்புத இவ தர்ணக அர்ணவஸ்ய-81-

ஆ தாம்ர அதர பாத பாணி-நன்கு சிவந்த திரு அதரம் என்ன -திருவடிகள் என்ன -திருக்கைகள் என்ன -இவையாகிற

வித்ரும காவேரீ லஹரி கர உப லால்யமாந–பவளங்களை யுடைத்தாய் திருக் காவேரியின் அலைகளாகிற கைகளால் சீராட்டப் படுகின்றதாய்

திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் கருமணி அன்றோ –

கம்பீர அத்புத இவ தர்ணக அர்ணவஸ்ய-கம்பீரமான ஆச்சர்யமான கடல் குட்டி போன்று இருக்கும்

கீழே கடலைச் சொல்லி திருப்தி அடையாமல்
கடல் பிரசவித்த கடல் குட்டி இங்கு –

ஸ்ரீ ரெங்கேசய -ந-இஹ சர்ம நிர்மிமீதாம்–ஸ்ரீ பெரிய பெருமாள் நமக்கு இங்கே ஸுவ்க்யத்தை செய்து அருள வேணும்

குழந்தை படுத்த வண்ணமே இருப்பதால் இங்கே ஸ்ரீ ரெங்கேசய –

————-

ஸ்ரீ ரெங்க நாச்சியார் என்னும் மின்னல் –
இரத்தின கற்கள் தேஜஸ் -இந்த்ர வில் —
க்ருபை என்னும் நீர் நிரம்பிய மழைக் கால மேகம் என்னும் பெரிய பெருமாள்
திருவரங்கம் மலை மேல் இளைப்பாறுகிறது-

சிஞ்சேத் இமம் ச ஜனம் இந்திரயா தடித்வாத்
பூஷா மணி த்யுதிபி இந்திர தனு ததாந
ஸ்ரீ ரெங்க தாமநீ தயாரச நிர்ப் பரத்வாத்
அத்ரவ் சயாளு இவ சீதள காள மேக -82-

இந்திரயா தடித்வாத்–ஸ்ரீ பிராட்டி யாகிய மின்னலை யுடைத்தாய்

பூஷா மணி த்யுதிபி -திரு ஆபரணங்களில் இழைத்த ரத்னங்களின் கிரணங்கள் ஆகிற

இந்திர தனு ததாந-இந்திரன் வில்லை வஹித்துக் கொண்டு இருப்பதாய்

தயாரச நிர்ப் பரத்வாத்–கிருபையாகிற தீர்த்தத்தின் பூர்த்தியால்

ஸ்ரீ ரெங்க தாமநீ அத்ரவ் –ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலாகிய மலையிலே

சயாளு இவ சீதள காள மேக -படுத்துக் கொண்டு இருப்பதான குளிர்ந்த காள மேகம் –
கரு முகில் போல் உள்ள ஸ்ரீ ரெங்கநாதன்

சிஞ்சேத் இமம் ச ஜனம் -அடியேனையும் அபிஷேகம் பண்ணி அருளுக –

கருணா ரசம் நிரம்பி ஸ்தாவர பிரதிஷ்டையாக ஸ்ரீ ரெங்க நாத மந்த்ரமாகிற மலையில் சயனித்து
மேட்டு நிலம் கீழ் நிலம் வாசி பாராமல் வர்ஷிக்கும் காள மேகம் அன்றோ –

—————-

ஆ மௌலி ரத்ன மகராத் புநரா ச பத்ப்யாம்
தாம க்ரம உந்நமத் உதார மநோ ஹர அங்கம்
ஸ்ரீ ரெங்க சேஷ சயனம் நயநை பிபாம
பஸ்யத் மந ப்ரவணம் ஓகம் இவ அம்ருதஸ்ய -83-

ஆ மௌலி ரத்ன மகராத்–திரு முடியில் அழுத்தின ரத்ன மயமான மகரம் முதல் கொண்டு

புநரா ச பத்ப்யாம் தாம க்ரம உந்நமத் உதார மநோ ஹர அங்கம்–திருவடி வரையில் தேஜோ விசேஷத்தாலே
உயர்ந்து உதாரமாய் ரமணீயமான அவயவங்களை யுடையரான

ஸ்ரீ ரெங்க சேஷ சயனம்–ஸ்ரீ அரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் ஸ்ரீ பெரிய பெருமாளை

நயநை பிபாம பஸ்யத் மந ப்ரவணம் ஓகம் இவ அம்ருதஸ்ய –சேவிப்பவர்களின் மனத்திலே தேங்கும்
அமுத வெள்ளத்தைப் போலே கண்களால் பருகுகிறோம்

அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே –

——————–

அரவிந்தம் அங்க்ரி பாணி வக்த்ரை அபிதாபி அஞ்சிதம் அங்க காந்த்யா
அதரேண ச பந்து ஜீவிதம் ஸ்ரீ நியதம் நந்தந யேந சந்த்ரம் –84-

அரவிந்தம் அங்க்ரி பாணி வக்த்ரை –தாமரை பூத்து இருக்கப் பெற்ற திருவடிகள் திருக் கைகள் திரு முகம் ஆகிய இவற்றால் –

அபிதாபி அஞ்சிதம் அங்க காந்த்யா-சிறந்த திருமேனி ஒளியால் பச்சிலை மரங்கள் பொருந்தப் பெற்றும்

அதரேண–திரு அதரத்தினால்

ச பந்து ஜீவிதம்–பந்து ஜீவித புஷ்பம் பூத்து இருக்கப் பெற்றுமாய் இரா நின்ற

ஸ்ரீ நியதம் நந்தந யேந சந்த்ரம் –ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸ்ரீ பெரிய பெருமாளை நந்தவனமாகக் கொண்டு
விஹரிப்பார் போலும்–

————–

அந்யோன்ய ரஞ்சக ருச அனுபமான சோபா திவ்ய சரக் அம்பர பரிஷ்கரண அங்கராக
சம் ஸ்பர்சத புலகிதா இவ சின் மயத்வாத் ரங்கேது காந்திம் அதிகம் உப பிரும்ஹயந்தி –85-

அந்யோன்ய ரஞ்சக ருச–ஒன்றுக்கு ஓன்று சோபையை விளைகின்ற காந்தியை யுடையவைகளாய்
பரஸ்பர சோபை அதிசய ஹேது-

அனுபமான சோபா -ஒப்பற்ற ஒளியை யுடையவைகளாய்

திவ்ய சரக்–ஸ்ரீ வைஜயந்தி மாலை என்ன

அம்பர–பீதாம்பரம் என்ன

பரிஷ்கரண –திரு ஆபரணங்கள் என்ன

அங்கராக–சாத்துப்படி என்ன இவைகள்

சின் மயத்வாத் -ஸ்வயம் சேதன ஸ்வரூபம் ஆகையால்

சம் ஸ்பர்சத புலகிதா இவ–திருமேனி சம்பந்தித்தினால் மயிர்க் கூச்சு எறியப் பெற்றவை போன்று

ரங்கேது காந்திம் அதிகம் உப பிரும்ஹயந்தி –அதிகமான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய சோபையை பின்னமும்
அதிகப் படுத்துகின்றன

இந்த திருமேனிக்கு இவை வேணும் –
அவற்றுக்கும் இத் திரு மேனியே அமையும் என்றபடி –

ஸ்ரக் வஸ்திர ஆபரணைர் யுக்தம் ஸ்வ அநு ரூபைர் அநுபமை சிந் மயஸ் ஸ்வ பிரகாசஸ்
ச அன்யோன்ய ருசி ரஞ்சகை –ஸ்ரீ பவ்ஷ்கர பிரமாணத்தை ஒட்டி இந்த ஸ்லோகம்

———–

த்ருத கனக ஜகிரி பரிமிலத் உததி பிரசலித லஹரிவத் அஹமஹமிகயா
ஸ்ந பயதி ஜனம் இமம் அபஹரதி தமஸ்ப் பணி சய மரகத மணி கிரண கண –86-

பணி சய மரகத மணி கிரண கண –அரவணை மேல் பள்ளி கொள்ளும் ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற
மரகத பச்சையினுடைய காந்தி சமூகமாவது

த்ருத கனக ஜகிரி பரிமிலத் உததி -காய்ந்து உருக்கிய பொன் மலையோடு கூடா நின்ற சமுத்திரத்தில் நின்றும்

பிரசலித லஹரிவத் அஹமஹமிகயா-பரம்பின அலைகள் போன்று முற்கோலி வந்து

ஸ்ந பயதி ஜனம் இமம் அபஹரதி தமஸ்–அடியேனை ஸ்நானம் செய்விக்கின்றது –
அகவிருளை அகற்றுகின்றது –
புகர் வெள்ளம் போட்டி போட்டுக் கொண்டு அடியேன் மேல் பாயப் பெற்று ஞான ஒளி பெறப் பெற்றேன் –

த்ருத கனக ஜகிரி ஸ்தானத்தில் பீதாம்பராதிகளும் –

உததி–ஸ்தானத்தில் திவ்ய மங்கள விக்ரஹமும்

லஹரி -ஸ்தானத்தில் கிரண சமூகமும்-

ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹம் கேவல சமுத்திரம் போல் அன்றிக்கே –
பொன் மலையையும் உருக்கி அந்த த்ரவத்தோடே கூடின சமுத்திரம் போலே பளபளத்து
கிட்டினவர்களை குளிரவும் பண்ணி
அஞ்ஞான அந்தகாரத்தையும் போக்குமே

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே
விளக்கு ஒளியை மரகதத்தை
பச்சை மா மலை போல் மேனி -என்று ஆழ்வார்கள் ஆழங்கால் படுவார்கள் –

———————–

போகீந்த்ர நிஸ் வசித ஸுவ்ரப வர்த்திதம் ஸ்ரீ நித்ய அனு ஷக்த பரமேஸ்வர பாவ கந்தி
ஸுவ்ரப்யம் ஆப்லுத திசா அவதி ரெங்க நேது ஆனந்த சம்பதி நிமஜ்ஜயதே மநாம்சி –87-

போகீந்த்ர நிஸ் வசித ஸுவ்ரப வர்த்திதம் -பள்ளி மெத்தையான திருவனந்த ஆழ்வானுடைய மூச்சுக் காற்றினுடைய
பரிமளத்தாலே வளர்த்தப்பட்டதாய்

ஸ்ரீ நித்ய அனு ஷக்த பரமேஸ்வர பாவ கந்தி-கந்தத்வாரம் சுருதி பிரசித்தமான -பிராட்டியின் நித்ய சம்ஸ்லேஷத்தால்
உண்டான ஸர்வேஸ்வரத்வத்தினால் பரிமளித்துக் கொண்டு இருப்பதாய் –

பிராட்டியின் நித்ய சம்ஸ்லேஷம் இல்லை என்றால் பரமேஸ்வரத்வம் இல்லையே –

ஸுவ்ரப்யம் ஆப்லுத திசா அவதி ரெங்க நேது-திசைகளின் எல்லைகளை வியாபித்ததான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய பரிமளம்

ஆனந்த சம்பதி நிமஜ்ஜயதே மநாம்சி –சேவிப்பவர்களின் உள்ளத்தை ஆனந்த செல்வத்தில் மூழ்குவிக்கின்றது

சர்வ கந்த சர்வ ரசம் அன்றோ

காந்தி சமூகத்தில் மூழ்கினத்தை கீழே அருளிச் செய்து –
ஆனந்த சாகரத்தில் மூழ்கின்றதை இதில் அருளிச் செய்கிறார்

—————

ரங்க பர்த்து அபி லோசநஸ் சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம்
புஷ்ப ஹாஸ இதி நாம துஹா நம் ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –88-

அபி லோசநஸ் சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம்-தன் மேல் கண்கள் படுவதையும் ஸாஹஸ காரியங்களின்
வரிசைகளில் எழுதும்படி செய்யா நிற்பதும்
பெரிய பெருமாள் தானே நோக்கினாலும் சஹியாத மார்த்வம்

சேடி ப்ரூசா லோகீதை ரங்க ம்லாநி–ஸ்ரீ குணரத்ன கோசம்

புஷப ஹாஸ இதி நாம துஹா நம் –புஷ்ப ஹாசம்-என்னும் திரு நாமத்தை விளைவிப்பதுமான

புஷ்ப ஹாஸ பிரஜாகா –ஸ்ரீ சஹஸ்ர நாமங்களில் ஓன்று இதனாலே தான் என்றவாறு

ரங்க பர்த்து ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –-ஸ்ரீ பெரிய பெருமாளாது ஸுவ்குமார்யமானது
நம்முடைய வாக்குக்கும் சிந்தைக்கும் விஷயம் அன்று –

——————–

ஏகை கஸ்மிந் பரம் அவயவே அநந்த ஸுவ்ந்தர்ய மக்நம் சர்வம் த்ரஷ்ட்யே கதம் இதி முதா மா மதா மந்த சஷு
த்வம் ஸுவ்பிராத்ர வ்யதிகர கரம் ரங்கராஜ அங்க காநாம் தத் லாவண்யம் பரிண மயிதா விஸ்வ பாரீண வ்ருத்தி –89-

ஹே மந்த சஷு–ஓ மூடமான கண்ணே

ஏகை கஸ்மிந் பரம் அவயவே –ஒவ் ஒரு அவயவத்திலும்

அநந்த ஸுவ்ந்தர்ய மக்நம்-எல்லையற்ற அழகிலே மூழ்கி இருக்கிற நான்

சர்வம் த்ரஷ்ட்யே கதம் இதி-எல்லா அவயவங்களையும் எவ்வாறு அனுபவிக்கப் போகிறேன் என்று

முதா மா மதா -வீணாக சங்கியாதே

ரங்கராஜ அங்க காநாம் ஸுவ்பிராத்ர வ்யதிகர கரம் -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அவயவங்களுக்கு
நட்பின் தொடர்பை விளைவிக்கின்ற

தத் லாவண்யம் -அந்த சமுதாய சோபையானது -நீரோட்டமானது –
ஒவ் ஒரு அவயவமும் என்னை விட்டு போகாதே என்று கண்ணை இழுத்து வைக்க –
இந்த லாவண்யம் தானே
அவர்கள் பிணக்கைத் தீர்த்து அன்பை வளர்ப்பதால் –
ஸுவ்பிராத்ரம்-கலந்து பரிமாற்ற பங்கு செய்ததே -என்கிறார்

த்வம் -உன்னை

பரிண மயிதா விஸ்வ பாரீண வ்ருத்தி –எல்லா அவயவங்களையும் பூர்த்தியாக அனுபவித்தத்தை நிறைவேற்றி விடும் –

லாவண்யத்தையே வழி காட்டியாகக் கொண்டு அனுபவிக்க இழிகிறார்

தோள் கண்டார் தோளே கண்டார் –யாரே வடிவினை முடியக் கண்டார் -கம்பர்

———————

வபு மந்தாரஸ்ய பிரதம குஸூம உல்லாச சமய ஷமா லஷ்மீ ப்ருங்கி சகல கரண உந் மாதந
விகாச ஸுவ்ந்தர்ய ஸ்ரஜி ரசிகதா சீது களக யுவத்வம் ரெங்கேந்தோ ஸூரபயதி நித்யம் ஸூவ்பகதாம் –90-

வபு மந்தாரஸ்ய –திருமேனியாகிற கற்பக வ்ருஷத்துக்கு

பிரதம குஸூம உல்லாச சமய–முதல் புஷ்பம் புஷ்பிக்கும் பருவமாயும்

ஷமா லஷ்மீ ப்ருங்கி -ஸ்ரீ பூமிப் பிராட்டி என்ன ஸ்ரீ திருமகள் என்ன இவர்கள் ஆகிற பேடை வண்டுகளுக்கு

சகல கரண உந் மாதந மது -எல்லாக் கரணங்களையும் உன்மத்தம் ஆக்க வல்ல தேன் போன்றதாயும்

விகாச ஸுவ்ந்தர்ய ஸ்ரஜி–அழகிய பூ மாலையில் உண்டான விகாசம் போலவும்

ரசிகதா சீது களக -ராஸிக்யம் ஆகிய மதுவை அடக்கி வைத்துக் கொண்டு இருப்பதாய் உள்ள

ஆசமணத்துக்கு பங்காக உள்ளங்கையை அமைத்து வைத்துக் கொள்வது சுலகம்

ராசிக்யத்தை வெட்ட வெளிச்சமாக்கி பரப்பி விடாமல் சுருக்கி அடக்கமாக காட்டிக் கொள்ளும் நிலையே யவ்வன ப்ராதுர் பாவம்

யுவத்வம் ரெங்கேந்தோ ஸூரபயதி நித்யம் ஸூவ்பகதாம் –ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நித்ய யவ்வனமானது ஸுவ்பாக்யத்தை பரிளமிக்கின்றது

இவ் விடத்தில்
அவயவஸ் பூர்த்தி ஹேது தயா புஷ்ப உத்பத்தி காலமாகவும்

அவயவஸ் ஸுவ்ந்தர்ய பூர்த்தி ஹேது தயா அந்த புஷ்ப விகாசமாகவும்

பிராட்டிமாருக்கு அனுபாவ்யத்தையாலே அந்த விகசித்த புஷ்ப விருத்தியான மதுவாகவும்

ரஸா ஞான ஹேது தயா அந்த மதுபான பாத்ரமாயும்
யவ்வனத்தை உருவகம் –

—————-

இனி அவயவ அனுபவங்கள்

கிரீட சூட ரத்ன ராஜி ஆதி ராஜ்ய ஜல்பிகா
முக இந்து காந்தி உந் முகம் தரங்கிதா இவ ரங்கிண–91-முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ

ரங்கிண –ஸ்ரீ பெரிய பெருமாளுடைய

கிரீட சூட ரத்ன ராஜி ஆதி ராஜ்ய ஜல்பிகா–ஸர்வேஸ்வரேஸ்வரத்தை தெரிவிக்கின்ற திரு அபிஷேகம் –
திரு முகப் பட்டை ஆகிய இவற்றில் அழுத்தின ரத்ன பங்க்தி யானது

திரு அபிஷேகத்தின் அடியில் சாத்தும் முகப்பட்டைக்கு சூடாமணி என்று பெயர் –

முக இந்து காந்தி உந் முகம் தரங்கிதா இவ -யதா ததா மேல் முகமாக பரம்பின திரு முகச் சந்திரனுடைய சோதியோ

————————

சிகராத்ந உத் ப்ர தீப்தம் திசி திசி ச மாணிக்ய மகரீ லசத் ஸ்ருங்கம் ரங்க பிரபு மணி கிரீடம் மனுமஹே
சமுத் துங்க ஸ்ப்பீதம் சித் அசித் ஆதி ராஜ ஸ்ரீய ப்ரிய ஆக்ரீடம் சூடாமணிம் அபி நிதம்பம் தம் அபிதா –92-

திசி திசி ச –திசைகள் தோறும்

சிகராத்ந உத் ப்ரதீப்தம் -சூடா மணியினால் மிகவும் விளங்கா நிற்பதாய் –

மாணிக்ய மகரீ லசத் ஸ்ருங்கம்–மகர வடிவமான மாணிக்க மணியினால் விளங்கும் நுனியை யுடையதுமான

ரங்க பிரபு மணி கிரீடம்–பெரிய பெருமாளுடைய ரத்ன கிரீடத்தை

சித் அசித் ஆதி ராஜ ஸ்ரீய-சகல சேதன அசேதனங்களுக்கும் நியாமகனாய் இருக்கிற சாம்ராஜ்ய லஷ்மிக்கு

சமுத் துங்க ஸ்ப்பீதம் -உன்னதமாயும் பருத்தும் இருந்துள்ள

ப்ரிய ஆக்ரீடம் மனுமஹே-இனிய லீலா ஸைலமாக எண்ணுகிறோம் –
ரத்ன ஒளி நிரம்பி இருக்கும் மலையே-

சூடாமணிம் அபி நிதம்பம் தம் அபிதா –அந்த கிரீடத்தை சுற்றிலும் இருக்கின்ற திரு முகப் பட்டையில் உள்ள
ரத்னத்தையும் அந்த கிரீடா பர்வதத்தின் சுற்றுப் பிரதேசமாக எண்ணுகிறோம்

—————

விஹரது மயூ ரங்கின ஸூலிகா ப்ரமரக திலக ஊர்த்வ புண்ட்ர உஜ்ஜ்வலம்
முகம் அம்ருத தடாக சந்த்ர அம்புஜ ஸ்மய ஹர கசி முக்த மந்த ஸ்மிதம் –93-

ஸூலிகா-திருக் குழல் கற்றை என்ன

ப்ரமரக–திரு நெற்றியில் தொங்கும் திருக் குழல் என்ன

திலக–திலக ஆபரணம் என்ன

ஊர்த்வ புண்ட்ர–திருமண் காப்பு என்ன

உஜ்ஜ்வலம்–இவற்றால் விளங்கா நிற்பதும்

அம்ருத தடாக–அம்ருத மயமான தடாகம் என்ன

சந்த்ர–சந்திரன் என்ன

அம்புஜ -தாமரைப் பூ என்ன

இவற்றினுடைய
ஸ்மய ஹர–செருக்கை போக்கடிக்கின்றதாய்

கசி முக்த மந்த ஸ்மிதம் –வெண்ணிறமான அழகியதான-ஆஹ்லாத ஜனகமான – மந்தஸ்மிதம் உடையதுமான

விஹரது மயூ ரங்கின முகம்-பெரிய பெருமாளுடைய திரு முக மண்டலம் என்னிடம் விஹாரம் செய்க –

இந்த அழகிய திரு முக மண்டலத்துக்கு என் உள்ளத்தில் இருப்பதே பரம போக்யம்

————–

முக புண்டரீகம் உபரி த்ரி தண்டகம் திலகா ச கேச ரசமா ச மௌக்திகா
இஹ ரெங்க பர்த்து அபியத் மது விரத பிரகர ஸ்ரியம் பிரமரகாணி பிப்ரதி–94-

ரெங்க பர்த்து-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய

த்ரி தண்டகம்–மூன்று ரேகைகளோடே கூடின

முக புண்டரீகம் உபரி -முகாரவிந்தத்தின் பேரில்

ச மௌக்திகா திலகா -முத்துக்களோடே கூடின திவ்ய ஆபரணங்கள்

ச கேச ரசமா –தாதுக்கள் போலும்

இஹ –இத் திரு முக மண்டலத்தில்

பிரமரகாணி-தொங்குகின்ற திருக் குழல்கள்

அபியத்-முக புண்டரீகத்தை நோக்கி வருகின்ற

மது விரத பிரகர ஸ்ரியம் பிப்ரதி–வண்டினங்களுடைய சோபையை வஹிக்கின்றன-

செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டு போல் பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப –

செங் கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்*
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப*
சங்கு வில் வாள் தண்டு சக்கர மேந்திய*
அங்கைகளாலே வந்து அச்சோவச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ.

———————————

ஹ்ருதயம் ப்ரஸாதயதி ரங்க பதே மதுர ஊர்த்வ புண்ட்ர திலகம் லலிதம்
அலிக அர்த்த சந்த்ர தல சம்வலிதாம் அம்ருத ஸ்ருதிம் யத் யபி சங்கயதே –95-

யத் -யாதொரு ஊர்த்வ புண்ட்ரமானது

அலிக அர்த்த சந்த்ர தல -திரு நெற்றியாகிற அர்த்த சந்த்ர கண்டத்தில் நின்றும்

சம்வலிதாம் அம்ருத ஸ்ருதிம் யத் யபி சங்கயதே –பெருகின அம்ருதப் பெருக்கை சங்கைக்கு விஷயம் ஆக்குகின்றதோ

தத் -அந்த

ரங்க பதே-பெரிய பெருமாளுடைய

லலிதம்-ருஜுவாய்

மதுர ஊர்த்வ புண்ட்ர திலகம் -போக்யமாய் இருக்கிற ஊர்த்வ புண்ட்ர திலகமானது

ஹ்ருதயம் ப்ரஸாதயதி –நெஞ்சை பிரசன்னம் ஆக்குகிறது

இது பெரிய பெருமாள் திரு நெற்றிக்கு அலங்காரம் அன்று –
எனது இருதயத்தை அலங்கரிக்கவே என்றவாறு

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் -கர்ணிகா தவ கரீச கிமேஷா –மாநஸஸ்ய மமவா பரிகர்ம -போலவே இங்கும் –

—————————-

சரசீருஹே சமவநாம்ய மதாத் உபரி பரி ந்ருத்யத் அளி பங்க்தி நிபே
ஸ்ப்புரத ப்ருவவ் உபரி லோசநயோ ச விலாச லாஸ்ய கதி ரங்க ப்ருத–96-

சரசீருஹே –இரண்டு தாமரைப் பூக்களை

மதாத்–செருக்கினால்

சமவநாம்ய–கீழ்ப் படுத்தி

உபரி பரி ந்ருத்யத் -மேலே நர்த்தனம் பண்ணா நின்ற

அளி பங்க்தி நிபே–வண்டுகளின் வரிசை போன்று இருப்பவைகளான

ரங்க ப்ருத–ப்ருவவ்-பெரிய பெருமாளின் திரு புருவங்கள்

உபரி லோசநயோ –திருக் கண்களின் மேலே

ச விலாச லாஸ்ய கதி ஸ்ப்புரத–விலாசத்துடன் கூடிய நடை அழகை யுடைத்தாய் இருக்கும் படி விளங்கா நின்றன –

விலாச சேஷ்டிதங்களுடன் இருப்பதால் கூத்தாடுகின்ற வண்டுகளை உவமையாக அருளிச் செய்கிறார் –

————————

ஸ்மரஸர நலின பிரமாத் நேத்ரயோ பரிசர நமத் இஷு சாபச்சவி
யுகம் உதயதி ரங்க பர்த்து ப்ருவோ குருகுலம் இவ சார்ங்க ந்ருத்த ஸ்ரிய –97-

ஸ்மரஸர நலின பிரமாத் –மன்மத பாணமாகிய பூக்களின் பிரமத்தினாலே

நேத்ரயோ –திருக் கண்களிலே

பரிசர–அவற்றின் சமீபத்திலே

நமத் இஷு சாபச்சவி–வளைகின்ற கரும்பு வில்லினுடைய காந்தி போன்று

யுகம் ரங்க பர்த்து ப்ருவோ -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய இணைப் புருவங்கள்

குரு குலம் இவ சார்ங்க ந்ருத்த ஸ்ரிய உதயதி–சாரங்க வில்லினுடைய நர்த்தன லஷ்மிக்கு ஆச்சார்ய குலம் போன்று விளங்குகின்றன

மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல் மதனன் தன்னுயிர்த் தாதை கண்ண பிரான் புருவம் அவையே

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண்ண பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4-

மன்மதனனின் பஞ்ச பாணங்களில் தாமரை மலரும் ஓன்று

தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவம் வட்டம் அழகிய –

சார்ங்கம் விலக்ஷண நர்த்தனத்துக்கு அப்பியாசம் இங்கு -என்னாவது ஆச்சார்ய குலம் –

——————

க்ருபயா பரயா கரிஷ்ய மானே சகல அங்கம் கில ஸர்வத அஷி நேத்ர
ப்ரதமம் ஸ்ரவஸி சமாஸ் த்ருணாதே இதி தைர்க்யேண விதந்தி ரங்க நேது –98-

க்ருபயா பரயா–சிறந்த கிருபையினால்

சகல அங்கம்–எல்லா அவயவங்களையும்

கில ஸர்வத அஷி -சகல அம்சத்தாலும் கண்ணாக

கரிஷ்ய மானே-பண்ணப் போகிறவைகளான

ரங்க நேது நேத்ர–பெரிய பெருமாளது திருக்கண்கள்

ப்ரதமம் ஸ்ரவஸி சமாஸ் த்ருணாதே–முந்துற முன்னம் திருச் செவிகளை அளாவுகின்றன

இதி தைர்க்யேண விதந்தி-என்று நீட்சியால் அறிகின்றனர்

கரியவாகிப் புடை பெயர்ந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூரிகளுக்கு முகம் கொடுக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு கண்கள் இரண்டாய்

ராம க்ருஷ்ணாத்யவதாரம் பண்ணி குஹாதிகள் விதுராதிகள் தொடக்கமானார் சிலர்க்கு அல்ப காலம்
முகம் கொடுத்து விஷயீ கரித்து வந்தாப் போலே வெறும் கையோடே போனவர்களுக்கும் கண் இரண்டாய்-

சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கோயிலிலே அர்ச்சா ரூபியாய்
அவ்வவர் நிகர்ஷங்களைப் பாராதே முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற பெரிய பெருமாளுக்கும் கண் இரண்டாய் இருக்கவோ –

இவருடைய க்ருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக வேண்டாவோ என்று பார்த்து –

எல்லா மண்டலங்களும் தங்களுக்கே ஆக வேணும் என்று இருக்கிற ராஜாக்கள் முற்படத்
தங்களுக்கு ப்ரத்யாசன்னரான வன்னியரை அழியச் செய்யுமா போலே

பெரிய பெருமாளுடைய அவயவாந்தரங்கள் அடைய நாமேயாக வேணும் என்று பார்ச்வ ஸ்தங்களாய் இருக்கிறன
திருச் செவிகள் ஆகையாலே அவற்றை வென்று அவ்வருகே போவதாக முற்பட அவற்றுடனே
அலை எறிகிறாப் போலே யாய்த்து திருக் கண்கள் செவிகள் அளவும் நீண்டு இருக்கிறபடி –
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம்-

——————

ஸ்ரவோ நாசா ரோதாத் தத் அவதிக டோலாயித கதே விசால ஸ்ப்பீதே ஆயத் ருசிர சிசிர ஆதாம்ர தவளே
மித பத்த ஸ்பர்த்த ஸ்ப் புரித சபர த்வந்த்வ லலிதே கிரியாஸ்தாம் ஸ்ரீ ரெங்க பிரணயி நயந அப்ஜே மயி தயாம் -99-

ஸ்ரவோ நாசா ரோதாத்-திருச் செவி திரு மூக்கு இவற்றின் தகைவினால்

தத் அவதிக டோலாயித கதே-இவ் விரண்டு அவயவங்கள் அளவாக சுழலம் இடா நின்றவைகளாய்

விசால -விசாலங்களாய்

ஸ்ப்பீதே -பிருஹத்துக்களாய்

ஆயத் –நீண்டவைகளாய்

ருசிர–அழகியவைகளாய்

சிசிர–குளிர்ந்தவைகளாய்

ஆதாம்ர தவளே-சிறந்து சிவந்து வெளுத்தவைகளாய்

மித பத்த ஸ்பர்த்த ஸ்ப் புரித–பரஸ்பரம் சண்டை இடுகின்ற-துடிக்கின்ற

சபர த்வந்த்வ–இரண்டு கெண்டை மீன்கள் போலவும்

லலிதே கிரியாஸ்தாம் ஸ்ரீ ரெங்க பிரணயி நயந அப்ஜே மயி தயாம் -மனோ ஹரங்களான
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருக் கண்கள் அடியேன் பால் திருவருளை செய்யக் கடவன –

————

கருணா அம்ருத கூல முத்வாஹ ஏஷா ப்ரணமத் ஸ்வாகதிகீ பிரசன்ன சீதா
மயி ரங்க தந உப கர்ணிகா அஷ்ணோ சரிதோ வீக்ஷண வீசி சந்ததி ஸ்தாத் -100-

ரங்க தந–ஹே ஸ்ரீ ரெங்கத்துக்கு செல்வம் போன்றுள்ள பெரிய பெருமாளே –

கருணா அம்ருத கூல முத்வாஹ –கருணையாகிய அம்ருதம் நிரம்பியதாய்

ப்ரணமத் ஸ்வாகதிகீ–வந்து பணிகின்றவர்களை ஆதரவோடு ஏற்றுக் கொள்ளுமதாய் –
நல் வரவா -என்று குசலம் விசாரிக்கிறதாம்

பிரசன்ன சீதா-தெளிவும் குளிர்ச்சியும் மிக்கதாய்

உப கர்ணிகா-திருச்செவி அளவும் வியாபிக்குமதாய் –
மணி கர்ணிகா காட் தீர்த்தம் போலே இதுக்கும் திரு நாமம் இடுகிறார் –

ஏஷ அஷ்ணோ–ஆக இப்படி விலக்ஷணமாய் இருக்கிற திருக் கண்களாகிற நதிகளில்

மயி சரிதோ வீக்ஷண வீசி சந்ததி ஸ்தாத் -கடாக்ஷங்களான அலை வரிசை–
அமுதப் புனல் – அடியேன் மீது ஆக வேணும் –

—————–

விலசதி நாசா கல்பக வல்லி முக்தா இவ ரங்க நிலயஸ்ய
ஸ்மிதம் அபி தத் நவ குஸூமம் கபுக கபோலம் ச பல்லவ உல்லசிதம் –101-

நாசா கல்பக வல்லி முக்தா இவ ரங்க நிலயஸ்ய–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு மூக்கானது
அழகிய கற்பகக் கொடி போன்று விளங்குகின்றது

ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்!என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு என தாவியுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-

ஸ்மிதம் அபி தத் நவ குஸூமம் –புன்முறுவலோ என்னில் அந்தக் கற்பகக் கொடியின்-
அப்போது அலர்ந்த செவ்விப் பூ – புதிய மலர் போலவும்

கபுக கபோலம் ச பல்லவ உல்லசிதம் -மோவாயும் கபோலங்களும் தளிர் வடிப்புப் போலவும்

விலசதி–விளங்குகின்றன –

கீழே -68-
ஷிதி கமல நிவாஸ -என்று கற்பக வ்ருக்ஷமாக ரூபித்து அருளி

அதில்
கொடி தளிர் மலர் இருப்பதை இங்கு அருளிச் செய்கிறார் –

——————

நயன சபர வித்தவ் கர்ண பாச அவருத்தவ் ருக்ஷ இவ லுடத அர்ச்சிர் மஞ்ஜரீ உத் க்ரந்தவ்
பரிமிலத் அலக ஆலீ சைவலாம் அம்ச வேலாம் அநு மணி மகர உத்கவ் ரங்க துர்ய அம்ருத அப்தே –102-

ரங்க துர்ய அம்ருத அப்தே –பெரிய பெருமாளாகிற அமுதக் கடலினிடைய

பரிமிலத் அலக ஆலீ சைவலாம் -சுற்றிலும் தொங்குகின்ற திருக் குழல்கள் ஆகிய வேலம் பாசியை யுடைத்தான

அம்ச வேலாம் அநு –திருத் தோள்கள் ஆகிற கரையின் அருகில்

நயன சபர வித்தவ்–திருக் கண்களாகிய மீன்களால் அடிக்கப் பட்டவையாய்-

கர்ண பாச அவருத்தவ்–திருச் செவிகளாகிய வலைக் கயிற்றினால் பிடிக்கப் பட்டவைகளாய்

ருக்ஷ–இந்த இரண்டு கார்யங்களாலும் உண்டான கோபத்தினால்

அர்ச்சிர் மஞ்ஜரீ உத் க்ரந்தவ் இவ ஸ்திதவ்–பூக் கொத்துக்கள் போலே இருக்கிற தேஜஸ்ஸூக்களை
கக்குகின்றன போலே இருப்பவைகளாய்

மணி மகர உத்கவ் லுடத -சிறந்த மகர குண்டலங்கள் தள தள என்று விளங்குகின்றன –
தேஜோ மஞ்சரியை வெளியிடுகின்றன –

களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று –
என்றால் போலே இங்கும் –

வெளியே சங்கொன்றுடையானைப் பீதக வாடை யுடையானை
அளி நன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே
களி வண் டெங்கும் கலந்தாற்போல் கழம் பூங்குழல்கள் தடந் தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே

மகர குண்டலங்கள் கர்ணாந்த விஸ்ராந்தங்களான திருக் கண்களின் அழகுக்கும் பிரகாசங்களாயும்
திருச் செவிகளில் பொலிந்து ஜ்வலிக்கின்றன –

————————

திருமுகமான ஏரியில் –
உதடுகள் தாமரை –
கண்கள் மீன் –
மூக்கு பாசிக் கொடி-
கர்ண பூஷணம் மகர மீன்கள் –
கேசங்கள் சோலைகள்

அதர மதுர அம்போஜம் தத் கர்ண பாச ம்ருணாளிகா வலயம் அபி மாம் ஆஸ்தாம் ரெங்கேந்து வக்த்ர சர சிரம்
நயன சபரம் நாசா சைவால வல்லரி கர்ணிகா மகரம் அலக ஸ்ரேநீ பர்யந்த நீல வந ஆவலி –103-

அதர மதுர அம்போஜம்–திருப் பவளம் ஆகிற போக்யமான தேன் நிறைந்த தாமரைப் பூவை யுடைத்தாயும் –

தத் கர்ண பாச ம்ருணாளிகா வலயம் -திருச் செவி மடல்கள் ஆகிற தாமரைக் கொடி வளையல்களை யுடைத்தாயும்

நயன சபரம் -திருக் கண்களாகிற மீன்களை யுடைத்தாயும் –

நாசா சைவால வல்லரி–திரு மூக்காகிற பாசிக் கொடியை யுடைத்தாயும்

கர்ணிகா மகரம்–கர்ண பூஷணங்கள் ஆகிற மகரங்களை யுடைத்தாயும்

அலக ஸ்ரேநீ பர்யந்த நீல வந ஆவலி –திருக் குழல் கற்றை யாகிற அருகில் இருக்கிற கறுத்த சோலைகளை யுடைத்தாயும்

தத் ரெங்கேந்து வக்த்ர சரஸ்-பரம விலக்ஷணமான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு முக மண்டலமாகிற தடாகமானது

அபி மாம் ஆஸ்தாம் சிரம்–எப்பொழுதும் -நெடு நாள் அளவும் என்னை நோக்கி அருள வேணும் –

பஷபாதம் கொண்டு இருக்க வேண்டும் என்றதாயிற்று

————————

திருக் கழுத்தில் உள்ள பிராட்டி திருக் கை வளையல்களால் உண்டான
ரேகைகளை அனுபவிக்கிறார்-

ரமயது ச மாம் கண்ட ஸ்ரீ ரெங்க நேது உதஞ்சித க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரலம்ப மலிம்லுச
ப்ரணய விலகத் லஷ்மீ விஸ்வம் பரா கர கந்தலீ கநக வலய கிரீடா சங்க்ராந்த ரேக இவ உல்லஸத் –104-

ஸ்ரீ ரெங்க நேது உதஞ்சித க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரலம்ப மலிம்லுச–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
செழித்து வளர்ந்து பாக்கு மரத்தினுடைய இளம் கழுத்து என்ன -சங்கு என்ன –
இவற்றின் அழகைக் கொள்ளை கொள்வதாயும்

ப்ரணய விலகத் லஷ்மீ விஸ்வம் பரா-அன்போடு ஆலிங்கனம் செய்து கொள்கிற
திரு மகள் என்ன நில மகள் என்ன இவர்களுடைய

கர கந்தலீ கநக வலய கிரீடா சங்க்ராந்த ரேக இவ உல்லஸத் –வாழைத் தண்டு போன்ற திருக் கைகளில் உள்ள
பொன் வளைகளில் நின்றும் விளையாட்டாக வந்து சேர்ந்த ரேகைகளை யுடையது போலே விளங்குகின்றதாயுமாய் இருக்கிற

ரமயது ச மாம் கண்ட -விலக்ஷணமான திருக் கழுத்து என்னை மகிழ்விக்க வேணும் —

கீழே
அமுதக் கடல் பொய்கை அனுபவம் –

இதில்
கடலில் தோன்றிய சங்கும் –
பொய்கைக் கரையில் உள்ள பாக்கு மரத்தின் அனுபவமும் –

—————

அதிஷ்டான ஸ்தம்பவ் புவந ப்ருது யந்த்ரஸ்ய கமலா கரேனா ஆலாநே அரி கரி கடா உந்மாத முசலவ்ப்
பணீந்திர ஸ்ப்பீத ஸ்ரக் வ்யதிகரித சந் நிக்த விபபவ் புஜவ் மே பூயாஸ்தம் அபயம் அபி ரங்க பிரணயிந –105-

புவந ப்ருது யந்த்ரஸ்ய-உலகமாகிய பெரிய யந்த்ரத்துக்கு

அதிஷ்டான ஸ்தம்பவ்–ஆதாரத் தூண்களாய் இருப்பதையும்

கமலா கரேனா ஆலாநே –பிராட்டி யாகிற யானைப் பேடைக்குக் கட்டுத் தறியாய் உள்ளவையும்

அரி கரி கடா உந்மாத முசலவ்-சத்ருக்கள் ஆகிற யானைக் கூட்டங்களை முடிப்பதில் உலக்கையாய் உள்ளவையும்

பணீந்திர–ஆதி சேஷனுடைய திருமேனி என்ன

ஸ்ப்பீத ஸ்ரக்–பருத்த புஷ்ப மாலை என்ன

இவற்றினுடைய
வ்யதிகரித -சேர்க்கையை யுடையவைகளும்

இவற்றில் புஜங்கள் எவை என்ற
சந் நிக்த விபபவ் -சந்தேகிக்கத் தக்க பெருமையை யுடையவைகளுமான

இன்னது திருக் கை -இன்னது திரு மாலை இன்னது ஆதிசேஷன் உடல் என்று நிச்சயித்து அறிய ஒண்ணாமல்
சம்சயிக்கும் படி அன்றோ இருப்பது –

திரண்டு உருண்டு நீண்டு மெத்து என்று இருக்கும் தன்மையைச் சொன்னபடி –

பாஹும் புஜக போகாபம் -ஸ்ரீ இராமாயண ஸ்லோகம்

(அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:” யுத். 21 : 1.

கடல் தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்கு மாயிற்று, அதற்காக,
ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தால் போலே இருக்கை;
கருணை யம் கடல் கிடந்தது கரும் கடல் நோக்கி” என்னும்படி அன்றோ.)

புஜவ் மே பூயாஸ்தம் அபயம் அபி ரங்க பிரணயிந –ஸ்ரீ பெரிய பெருமாளாது புஜங்களானவை அடியேனுக்கு
அபயம் அளிக்கக் கடவன

இப்படிப்பட்ட புஜங்களை நோக்கி அன்று அஞ்சேல் என்று கை கவியாய் என்று பிரார்த்திக்கப் பிராப்தம் –

—————-

பிரதி ஜலதித வேலா ஸய்யாம் விபீஷண கௌதுகாத் புந இவ புரஸ் கர்த்தும் ஸ்ரீ ரங்கினப் பணி புங்கவே
சமுபததத கஞ்சித் கஞ்சித் ப்ரசாரயத புஜ த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே –106-

பிரதி ஜலதித–கடலுக்கு எதிர்முகமாக

வேலா ஸய்யாம் -கடற்கரையில் பள்ளி கொண்டதை

விபீஷண கௌதுகாத் புந–ஸ்ரீ விபீஷணனுடையய குதூஹலத்தினால் மறுபடியும்

இவ புரஸ் கர்த்தும்–ஆதரித்து அங்கீ கரிப்பதற்குப் போலே
மன்னுடைய விபீடணற்காய் மதில் இலங்கை திசை நோக்கி மலர்க் கண் வைத்த என்னுடைய திருவரங்கன் -அன்றோ

பணி புங்கவே–திரு வநந்த ஆழ்வான் மீது

சமுபததத கஞ்சித் புஜ -ஒரு திருக் கையை தலையணையாக வைத்துக் கொண்டு இருப்பவரும்

கஞ்சித் ப்ரசாரயத புஜ-மற்றொரு திருக் கையை நீட்டிக் கொண்டு இருப்பவருமான

ஸ்ரீ ரங்கின த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே –-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நீண்டதும் –
அலம் புரிந்த நெடும் தடக்கை என்றபடி எப்போதும் தானம் பண்ணுவதில் கருத்துடையதுமான
இரண்டு திருக் கைகளையும் சிந்திக்கிறோம் –

அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன்
அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –திரு நெடும் தாண்டகம்–6-

————–

குஸூம பர அலசவ் ஸ்ப்படிக வேதி சயவ் விடபவ் அமரதரோ பரம் பரிஹஸன் ப்ருது ரங்க புஜ
பஹு மணி முத்ரிகா கநக கங்கண தோர்வலயை கிசலயி தோர்த்வயம் பணிநி நிர்ப்பர ஸூப்தம் –107-

பஹு மணி முத்ரிகா-அநேகங்களான ரத்ன மோதிரங்கள் என்ன

கநக கங்கண–பொன் மயமான கை வளையல்கள் என்ன

தோர்வலயை –தோள் வளைகள் என்ன
ஆகிய இவற்றால்

கிசலயி–பல்லவங்களை யுடையதாயும்

பணிநி நிர்ப்பர ஸூப்தம்- திரு அனந்தாழ்வான் மேல் நிர் விசாரமாகக் கண் வளர்ந்து அருளுவதும்
காரியப்பாடு இல்லாமையால் -நிர்ப் பரராய் கண் வளர்ந்து அருளுகிறார் –

இப்படி இருப்பதனால்
குஸூம பர அலசவ்–புஷ்பங்கள் நிறைந்து இருப்பதால் தழைந்தவைகளாய்

ஸ்ப்படிக வேதி சயவ்–ஸ்படிக்கல் மயமான திண்ணையிலே படுத்து இருப்பவைகளான

விடபவ் அமரதரோ –கல்ப வ்ருக்ஷத்தின் இரண்டு கிளைகளை

பரம் பரிஹஸன் ப்ருது ரங்க புஜதோர்த்வயம் -மிகவும் பரிகசிப்பதும் பருத்ததுமான பெரிய பெருமாளுடைய இரண்டு புஜ த்வயத்தை

இம–ஆஸ்ரயிக்கிறோம் –

சதா தாந ஸ்ரத்தாளு-என்று கீழே சொன்னதுக்கு விவரணம் இதி

பல்லவங்களும் புஷ்பங்களும் நிறைந்த கல்ப வ்ருக்ஷம்-
பாரிஜாத விட பாநபிதோ யா -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்

—————

மத் ரஷா விரத கௌதுகே ஸூ கடகே விக்ராந்தி ஐர்னே ஜபே
சார்ங்க ஜியாகின கர்க்க சிம்னி ஸூமந சரக் மோஹந மார்த்தவே
தோர்த் வந்த்வம் பஹு ச ப்ரலோப்ய கமலா லீலா உப தானம் பவத்
தத் சித்ர அலக முத்ரிதம் விஜயதே ஸ்ரீ ரெங்க சம் சங்கிந –108-

மத் ரஷா விரத கௌதுகே -என்னைக் காத்து அருளும் விரதத்துக்குக் கட்டிய கங்கண ஸூத்ரமாய் உள்ள
நம் குழந்தைகளை ரஷிக்கும் என்றதும் மகிழ்வாள் –
இவரும் ஸ்ரீ ரெங்க ராஜ கமலா பத லாலீதர் அன்றோ

ஸூ கடகே -அழகிய வளையிலும்

விக்ராந்தி ஐர்னே ஜபே-பராக்கிரம ஸூசகமான

சார்ங்க ஜியாகின கர்க்க சிம்னி–சார்ங்க வில்லின் தழும்பினாலும் உண்டான வன்மையாலும்

தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் வைதேஹி பர்த்தாராம் பரிஷஸ்வஜே

ஸூமந -சரக் மோஹந மார்த்தவே–புஷ்ப மாலையோ இது என்று மயங்குவதற்கு உறுப்பான ஸுவ்குமார்யத்தாலும்

பஹு ச ப்ரலோப்ய-பெரும்பாலும் ஆசைப்படச் செய்து

கமலா லீலா உப தானம் பவத்-ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு லீலார்த்தமான தலையணையாக ஆகின்றதும்

தத் சித்ர அலக முத்ரிதம்–அந்தப் பிராட்டியின் விசித்திரமான கூந்தல்களினால் அடையாளம் இடப்பெற்றதுமான

விஜயதே ஸ்ரீ ரெங்க சம் சங்கிந தோர்த் வந்த்வம் –ஸ்ரீ பெரிய பெருமாளாது திருக்கை இணையானது சிறந்து விளங்குகின்றது

மூன்று ஹேதுக்களால் ஸ்ரீ பெரிய பிராட்டியை உகப்பிக்கிறது

ஆ விவாஹ சமயாத் க்ருஹே வநே சைஸவே தத் அநு யவ்வனே புந ஸ்வாபஹ அநுர் அநுபாஸ்ரிதா
அந்யயா ராம பாஹுர் உபாதானம் ஏக்ஷதே–உத்தர ஸ்ரீ ராமாயணம் –

—————

பவ ஆர்த்தா நாம் வக்த்ர அம்ருத ஸரஸி மார்க்கம் திசத் இவ
ஸ்வயம் வக்த்ரேண இதம் வரதம் இதி சந்தர்சிதம் இவ
கர அம்போஜம் பங்கேருஹ வநருஷா இவ பாடலம் இவ
ஸ்ரயாமி ஸ்ரீ ரெங்கே சயிது உபதாநீ க்ருதம் அஹம் –109-

பவ ஆர்த்தா நாம்–சம்சாரத்தில் அடி கொதித்தவர்களுக்கு

வக்த்ர அம்ருத ஸரஸி–திரு முகமாகிற அமுதத் தடாகத்தில் -போய்ச் சேர்வதற்கு –

மார்க்கம் திசத் இவ-ஸ்திதம் -வழியை உபதேசிப்பது போன்று உள்ளதும் –

திரு முகத்தில் திருக் கை படிந்து இருக்கிற படிக்கு உத்ப்ரேஷித்து அருளுகிறார் –
நாட்டியத்தில் விரலாலும் முகத்தாலும் உள் கருத்தை காட்டுவார்கள் அன்றோ –

ஸ்வயம் வக்த்ரேண இதம் வரதம் இதி சந்தர்சிதம் இவ-இந்தத் திருக் கையானது வரங்களை எல்லாம் அளிக்க வல்லது
என்று திரு முகத்தால் தானே காட்டப்பட்டது போல் உள்ளதும்

கர அம்போஜம் பங்கேருஹ வநருஷா இவ பாடலம் இவ-தாமரைக் காட்டின் இடத்தில் சீற்றத்தினால் போலே சிவந்து இருப்பதும்-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா அன்றோ –

ஸ்ரயாமி ஸ்ரீ ரெங்கே சயிது உபதாநீ க்ருதம் அஹம் –தலையணையாக செய்து கொள்ளப் பட்டதுமான
ஸ்ரீ பெரிய பெருமாளது வலது தாமரைக் கையை அடியேன் பற்றுகிறேன் —

——————

கிரீடம் ஸ்ரீ ரெங்கே சயிது உபதாநீ க்ருத புஜ விதி ஈச அதீ சத்வாத் கடதே இதி ஸம்ஸ்ருஸ்ய வததி
நிஹீநாநாம் முக்க்யம் சரணம் இதி பாஹு ததிதர ஸ்ப் புடம் ப்ருதே பாத அம்புஜ யுகளம் ஆஜானு நிஹித–110-

ஸ்ரீ ரெங்கே சயிது -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய

உபதாநீ க்ருத புஜ-தலையணையாக செய்து கொள்ளப்பட்ட திருக் கையானது

கிரீடம் ஸம்ஸ்ருஸ்ய-திரு அபிஷேகத்தை தொட்டு

விதி ஈச அதீ சத்வாத் கடதே இதி வததி–ப்ரம்ம ருத்ராதிகளுக்கும் தலைவர் ஆகையால் இந்த திரு அபிஷேகம்

இவருக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது என்று சொல்லா நின்றது -வலது திருக்கை பரத்வத்தை ஸ்புடமாக்கும்

ஆஜானு நிஹித–முழந்தாள் வரையில் நீட்டி வைக்கப்பட்டுள்ள

ததிதர பாஹு -மற்ற ஒரு திருக்கையானது

பாத அம்புஜ யுகளம்-ஸம்ஸ்ருஸ்ய-திருவடியைத் தொட்டுக் காட்டி –

நிஹீநாநாம் முக்க்யம் சரணம் இதி ஸ்ப் புடம் ப்ருதே -தாழ்ந்தவர்களுக்கு இத் திருவடிகளே முக்கியமான புகல்
என்றும் சொல்லா நின்றது போலும் –

இடது திருக் கை ஸுவ்லப்யம் பறை சாற்றும்

———————

மலயஜ சசி லிப்தம் மாலதி தாம தல்பம் ஸூ மணி சர விதாநம் கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம்
தனுஜ வ்ருஷ விஷாண உல்லேக சித்ரம்ச லஷ்மீ லலித க்ருஹம் உபாஸே ரங்க சர்வம் ஸஹ உரஸ் –111-

மலயஜ சசி லிப்தம் -சந்தனத்தாலும் பச்சைக் கற்பூரத்தாலும் பூசப்பட்டதாய்

மாலதி தாம தல்பம்–முல்லை மாலையை படுக்கையாய் உடையதாய்

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் –புனைந்த தண்ணம் துழாய் யுடை அம்மான் அன்றோ

ஸூ மணி சர விதாநம்–சிறந்த ரத்னங்களாலான சரங்களை மேல் கட்டியாக உடையதாய்

கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம்-ஸ்ரீ கௌஸ்துப மணி யாகிற மங்கள தீபத்தை யுடையதாய்

குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு அன்றோ –

தனுஜ வ்ருஷ-அஸூரர்கள் ஆகிற எருதுகளினுடைய

விஷாண உல்லேக-கொம்புகளினால் உண்டான ரேகைகளை

சித்ரம்ச–சித்திரமாக யுடைத்தாய் இருக்கிற -கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் தானே அரங்கன் –

ரங்க சர்வம் ஸஹ உரஸ் ––ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு மார்பை

லஷ்மீ லலித க்ருஹம் உபாஸே -ஸ்ரீ பிராட்டியின் விலாச மந்த்ரமாகவே அனுசந்திக்கிறேன்

நாரீணாம் உத்தமாயா முக்கியம் சரணம்–சரணம் சப்தம் க்ருஹத்துக்கும் வாசகம் அன்றோ –

————————

ஹாரஸ்ப் பாரித பேநம் அம்சு லஹரீ மாலா ருத்தி முக்தாபல
ஸ்ரேநீ சீகர துர்த்திநம் தத இதோ வ்யாகீர்ண ரத்ன உத்கரம்
ஆவிர் கௌஸ்துப லஷ்மி ரங்க வஸதே நிஸ்ஸீம பூம அத்புதம்
வஷஸ் மந்த்ர மத்த்ய மாந ஜலதி ஸ்லாகம் விலோகே மஹி –112-

ஹாரஸ்ப் பாரித பேநம்–முக்தாஹாரங்களை பெருத்த நுரைகளாக உடைத்தாயும் –

கடலை கடைந்தால் நுரைகள் உண்டாகும் -வெண் முத்து வடங்களே நுரைகள்

அம்சு லஹரீ மாலா ருத்தி–காந்திகளாகிற அலை வரிசைகளில் ஸம்ருத்தியை உடைத்தாயும்

முக்தாபல ஸ்ரேநீ சீகர துர்த்திநம்–முத்து வரிசைகளாகிற ஜல பிந்துக்களாலே அடர்ந்ததாயும் –

முத்துக்கள் நீர் திவலைகள்

தத இதோ-இங்கும் அங்கும்

வ்யாகீர்ண ரத்ன உத்கரம்–சிதறி இருக்கிற ரத்ன சமூகங்களை உடைத்தாயும்

ஆவிர் கௌஸ்துப லஷ்மி -ஸ்ரீ கௌஸ்துப மணியும் ஸ்ரீ திரு மா மகளும் தோன்றப் பெற்றதாயும்

கடல் கடையும் பொழுது ஆவிர்பவித்தவை இங்கும் உண்டே

நிஸ்ஸீம பூம அத்புதம்–அளவிறந்த பெருமைகளாலே ஆச்சர்யமாக இருக்கிற
வடிவினாலும்
குணத்தினாலும் பெருமை

ரங்க வஸதே வஷஸ்–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு மார்பை

மந்த்ர மத்த்ய மாந ஜலதி ஸ்லாகம் விலோகே மஹி –மந்த்ர பர்வதத்தால் கடையைப் படுகின்ற கடலினோடு
ஒத்த பெருமையை யுடையதாக சேவிக்கக் கடவோம் –

மத்யமாந சலபே நிலா சிந்து -ஸ்ரீ வரதராஜ ஸ்த்வம் -திரு மார்பில் ஈடுபட்டு அருளியதை அடி ஒற்றி இங்கும்

————————-

வக்ஷஸ்த் ஸ்தவ்யாம் துளசி கமலா கௌஸ்துபை வைஜயந்தீ
சர்வ ஈஸ்த்வம் கதயதி தராம் ரங்க தாம்ந தத் ஆஸ்தாம்
கூர்ம வ்யாக்ரீ நக பரி மிலத் பஞ்ச ஹேதீ யசோதா
நத்தா மௌக்த்ய ஆபரணம் அதிகம் ந சமாதிம் திநோதி -113-

ரங்க தாம்ந வக்ஷஸ்த் ஸ்தவ்யாம் துளசி கமலா கௌஸ்துபை வைஜயந்தீ-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
திரு மார்பிடத்திலே திருத் துழாய் ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸ்ரீ கௌஸ்துபம் –
ஆகியவற்றோடு கூடி இருக்கும் வனமாலையானது

சர்வ ஈஸத்வம் கதயதி தராம் -இவர் சர்வ ஸ்மாத் பரர் என்னும் இடத்தை நன்கு விளக்குகிறது

தத் ஆஸ்தாம்-அது நிற்க

யசோதா நத்தா மௌக்த்ய ஆபரணம் -ஸ்ரீ யசோதைப் பிராட்டியினால் சாத்தப்பட்ட

கூர்ம வ்யாக்ரீ நக பரி மிலத் பஞ்ச ஹேதீ –கூர்ம நகம் புலி நகம் இவற்றோடு கூடிய
அச்சுத் தாலி ஆமைத் தாலி போன்ற பஞ்ச திரு ஆபரணங்கள் -பஞ்சாயுத ஹாரம் –

அதிகம் ந சமாதிம் திநோதி –நம்முடைய சித்த விருத்தியை மிகவும் மகிழ்விக்கின்றது –

மங்களாசாசனத்தில் ஊற்றம் பெற்ற நாம் அச்சம் கெட்டு இருக்கப் பற்றாசு பெற்றோமே –

அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அநந்த சயனன்–தளர் நடை நடவானோ -ஸ்ரீ பெரியாழ்வார் –

——————–

கியான் பர மம ஜகத் ஆண்ட மண்டலீ இதி அத்ருப்திதஸ் க்ருசிதம் இவ உதரம் விபோ
ரிரஷிஷா உசித ஜெகதீ பரம்பராம் பராம் இவ ப்ரதயதி நாபி பங்கஜம் –114-

உதரம் விபோ–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு உதரமானது

கியான் பர மம ஜகத் ஆண்ட மண்டலீ இதி அத்ருப்திதஸ்–பதினான்கு லோகங்கள் கொண்ட அண்ட சமூகம்
எனக்கு எவ்வளவு பாரம் என்கிற மனக் குறையினாலே

க்ருசிதம் இவ -இளைத்தது போலும் –

சாமுத்ரிகா லக்ஷண பிரகாரத்தின் படி திரு வயிறானது உள் அடங்கி இருக்க
இவர் ஹேது கல்பிக்கிறார் –

ஏழு உலகுண்டும் ஆராது இருந்தானைக் கண்டது தென் அரங்கத்தே –

ரிரஷிஷா உசித ஜெகதீ பரம்பராம் பராம் இவ ப்ரதயதி நாபி பங்கஜம் –திரு நாபிக் கமலம் வேறான
தனது ரக்ஷண பாரிப்புக்குத் தகுதியான லோக சமூகத்தை வெளியிடுகின்றது போலும்

அவனுக்குண்டான அதிருப்தியை போக்க வல்லார் யார் -நாமே போக்குவம் என்று
திரு நாபிக் கமலம் முற்படுகின்றதாம்

மேலும் மேலும் ஸ்ருஷ்ட்டி பண்ண சஜ்ஜமமாய் இருப்பது போலே இளமையும் செவ்வியும் மாறாதே

நித்ய யவ்வனம் பூண்டு அன்றோ இருக்கிறது

——————-

த்ரிவித சித் அசித் ப்ருந்தம் துந்த அவலம்பி வலி த்ரயம் விகணயத் இவ ஐஸ்வர்யம் வ்யாக்க்யாதி ரங்க மஹே சிது
ப்ரணத வசதாம் ப்ரூதே தாமோதரத்வ கர குண தத் உபய கிண ஆக்ருஷ்டம் பட்டம் கில உதர பந்தனம் –115–

ரங்க மஹே சிது-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய

துந்த அவலம்பி வலி த்ரயம்-திரு வயிற்றைப் பற்றி இருக்கிற த்ரி வலியானது

த்ரிவித சித் அசித் ப்ருந்தம் -மூ வகைப்பட்ட சேதன அசேதன சமூகத்தை

விகணயத் இவ–எண்ணா நின்றது போன்று

ஐஸ்வர்யம் -ஸமஸ்த சேதன அசேதன நியாமகத்வமாகிற ஐஸ்வர்யத்தை

வ்யாக்க்யாதி -வியாக்யானம் பண்ணுகிறது

தாமோதரத்வ கர கிண–தாமோதரன் என்னும் திரு நாமத்துக்கு அடியான தாம்புத் தழும்பானது

ப்ரணத வசதாம் ப்ரூதே–ஆஸ்ரித பராதீனன் என்பதைச் சொல்லா நின்றது –

தத் உபய குண ஆக்ருஷ்டம் பட்டம் கில உதர பந்தனம் –உதர பந்தம் என்னும் திவ்ய ஆபரணம்
மேல் சொன்ன பரத்வ ஸுவ்லபயங்கள் இரண்டுக்குமான கட்டின பட்டம் போலும் –

தத் உபய குண ஆவிஷ்டம் -பாட பேதம்

குண -கயிற்றுக்கும் சமஸ்க்ருதத்தில் -ஆக இரண்டு கயிறுகள் வேண்டிற்று இதுக்கு இழுத்துக் கட்ட – என்றவாறு

தத்ஸ ச தாமோ தரதாம் ப்ரத்யயவ் தாம பந்த நாத் இதி வா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-20–

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யத்தில் மூன்று ஹேதுக்கள் -தாமோதரத்வகா -என்பதற்கு காட்டி அருளுகிறார் –

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ

——————-

த்ரயா தேவா துல்யா த்ரிதயம் இதம் அத்வைதம் அதிகம்
த்ரிகாத் அஸ்மாத் தத்த்வம் பரம் இதி விதர்க்கான் விகடயன்
விபோ நாபீ பத்ம விதி சிவ நிதாநம் பகவத
தத் அந்யத் ப்ரூ பங்கீ பரவத் இதி சித்தாந்தயதி ந –116-

த்ரயா தேவா துல்யா –மும் மூர்த்திகளும் சம பிரதானர் என்றும்

த்ரிதயம் இதம் அத்வைதம் -இம் மூவரும் ஒருவரே என்றும்

அதிகம் த்ரிகாத் அஸ்மாத் தத்த்வம் பரம் -இம் மூர்த்தி த்ரயத்தில் காட்டிலும் மேற்பட்டதான
துரீய ப்ரஹ்மமே பரமானது என்றும்

இதி விதர்க்கான் விகடயன்-என்றும் உண்டான விப்ரதி பத்திகளைப் போக்கடிப்பதற்காக

விபோ நாபீ பத்ம விதி சிவ நிதாநம் பகவத-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு மூலக் கிழங்காய் இருக்கிற-
ஸ்ரீ பெரிய பெருமாளது திரு நாபிக் கமலமானது

தத் அந்யத்-அந்த பகவானை ஒழிந்த பொருள் எல்லாம்

ப்ரூ பங்கீ பரவத் இதி சித்தாந்தயதி ந –-அவனுடைய புருவ நெறிப்புக்கு வசப்பட்டு இருக்கின்றன
என்று நமக்கு முடிவு காட்டித் தருகின்றது –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –பெரிய திருவந்தாதி–72-

ஐக்கிய வாதம் இங்கு இல்லை -ஸாம்ய வாத நிரசனமே உள்ளது –
அத்தையும் நிரசிப்பதே ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் என்று உணர்ந்து இந்த ஸ்லோகத்தில் இரண்டுமே உள்ளது

ப்ரஹ்மாதிகளுக்கு பரத்வம் இல்லை பரவத்–பர வசப்பட்டுள்ளும் தன்மையே உள்ளது –

ஸ்ருஷ்ட்டி கர்த்தாவுக்கு பரவசப்பட்டே இருப்பார்கள் என்று ப்ரத்யக்ஷமாகவே காட்டுமே திரு நாபி கமலம் –

———————-

கர்ப்பே க்ருத்வா கோப்தும் அநந்தம் ஜகத் அந்தஸ்
மஜ்ஜத் ப்ரம்யா வாஞ்ச்சதி சாம்யம் நனு நாபி
உத்க்ஷிப்ய ஏதத் ப்ரேஷிதும் உத்யத் ப்ரமி பூயம்
நாபீ பத்ம ரம்ஹதி ரங்க ஆயதன அப்தே–117-

ரங்க ஆயதன அப்தே–கடல் போன்ற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய

நாபீ–திரு நாபீயானது

அநந்தம் ஜகத்–அளவிறந்த உலகத்தை

கர்ப்பே க்ருத்வா கோப்தும் –உள்ளடக்கி ரக்ஷிப்பதற்காக

அந்தஸ் மஜ்ஜத் ப்ரம்யா சாம்யம்-உள்ளே முழுகுகின்ற சுழியோடே ஒப்பை

வாஞ்ச்சதி நனு–விரும்புகின்றது போலும் –

நாபி பத்ம-நாபிக் கமலமோ என்னில்

உத்க்ஷிப்ய ஏதத் ப்ரேஷிதும்-உள்ளடக்கிய இந்த ஜகத்தை உயரக் கிளப்பிப் பார்ப்பதற்காக

உத்யத் ப்ரமி பூயம் ரம்ஹதி –மேல் முகமாக கிளர்கின்ற சுழியாய் இருக்கும் நிலையை அடைகின்றது போலும்

திரு நாபி மண்டலாகாரமாயும்
திரு நாபிக் கமலம் மண்டலாகாரமாய் மேல் ஓங்கி இருக்கின்றது –
இரண்டுக்கும் ஹேது அருளிச் செய்கிறார் இதில்

திரு நாபி சுழித்தும் ஆழ்ந்தும் இருக்குமே-கடலுள் அழுந்தும் பொழுது சுழித்தல் உண்டாகும் –
வெளியே விடாமல் சுழி ரக்ஷிக்குமே

மைந் நின்ற கருங்கடல் -ஸ்ரீ பெரிய திருமொழி -11-6-பதிகம் உண்டு ரக்ஷித்தமை அருளிச் செய்கிறார் –

மைந் நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந் நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந் நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந் நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே –11-6-1-

——————-

மதம் இவ மது கைடபஸ்ய ரம்பா கரப கரீந்த்ர கர ஆபி ரூப்ய தர்ப்பம்
ஸ்ப்புடம் இவ பரி பூய கர்வ குர்வோ கிம் உபமிமீ மஹி ரங்க குஞ்ஜர ஊர்வோ—118-

மதம் இவ மது கைடபஸ்ய–மது கைடபர்களின் கொழுப்பை அடக்கியது போலே

ரம்பா கரப கரீந்த்ர கர ஆபி ரூப்ய தர்ப்பம்–வாழைத் தண்டு

கரப பிரதேசம் –மணிக்கட்டு முதல் சுண்டு விரல் அளவுள்ள பிரதேசம் -யானைத் துதிக்கை ஆகிய
இவற்றின் அழகையும் செருக்கையும்

ஸ்ப்புடம் இவ பரி பூய கர்வ குர்வோ -அடக்கி அந்த மேநாணிப்பு தோற்ற பருத்து விளங்குகின்ற

கிம் உபமிமீ மஹி ரங்க குஞ்ஜர ஊர்வோ—குட பாலானாய்-என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பெருமாள்
தொடைகட்க்கு எந்த வஸ்துக்களை உபமானமாகச் சொல்லக் கடவோம் –

தென்னானாய் வடவானாய் குட பாலானாய் குண பால மத யானாய் –என்றும்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -என்றும்
சோலை மலைக் களிறே -என்றும் சொல்வார்களே –
குஞ்ஜரம் வா அத்ரி குஞ்ஜே -என்றார் ஸ்ரீ பட்டர் –

———–

கடீ காந்தி ஸம்வாதி சாதுர்ய நீவி லசத் ரத்ன காஞ்சீ கலாப அநு லோபம்
மஹாப்ரம் லிஹந் மேரு மாணிக்ய சானூ இவ ஆபதி பீதாம்பரம் ரங்க பந்தோ –119-

ரங்க பந்தோ –கடீ காந்தி ஸம்வாதி -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவரையின் காந்தியோடு பொருந்தின –

சாதுர்ய நீவி லசத்–சதிரையுடைய நீவி பந்தனத்தில் விளங்கா நின்ற

நீவியாவது மேல் உத்திரீயக் கட்டு -திருவரையின் ஒளியே கிளர்ந்து இதுவாக ஜ்வலிக்கிறதாம்

ரத்ன காஞ்சீ கலாப அநு லோபம்-ரத்ன மயமான மேகலா ஆபரணத்தின் சேர்க்கையை யுடைத்தான

பீதாம்பரம்-திருப் பீதக வாடையானது –

மஹாப்ரம் லிஹந் மேரு மாணிக்ய சானூ இவ -பெரிய மேகத்தை உட்க் கொண்டு இருக்கிற
மேரு மலையின் மாணிக்கத் தாழ் வரை போன்று

ஆபதி -விளங்குகின்றது –

படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம் பொன் கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –

அவன் திருமேனி காளமேகம் -மேரு கிரித் தாழ்வரை அத்தை சுற்றி விளங்கும் திரு பீதாம்பரம் –

——————-

பர்மஸ்தல அம்க பரிவேஷ இவ அம்பு ராஸே சந்த்யா அம்பு வாஹ நிகு ரம்பம் இவ அம்பரஸ்ய
சம்பா கதம்பகம் இவ அம்பு முச மந ந பீதாம்பரம் பிபதி ரங்க துரந்தரஸ்ய–120-

ரங்க துரந்தரஸ்ய–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய

பீதாம்பரம்-திருப் பீதக வாடையானது

அம்பு ராஸே-சமுத்ரத்துக்கு

பர்மஸ்தல அம்க பரிவேஷ இவ–ஸ்வர்ண மயமான பூமியினுடைய காந்தியின் ஊர் கோள் போலவும்

அம்பரஸ்ய-ஆகாசத்திற்கு

சந்த்யா அம்பு வாஹ நிகு ரம்பம் இவ–சந்த்யா காலத்து மேகத் திரள் போலவும்
செக்கர் மா முகில் ஒளி அடித்தால் போலவும்

அம்பு முச-மேகத்துக்கு

சம்பா கதம்பகம் இவ-மின்னல் திரள் போலவும் இருந்து கொண்டு

மந ந பிபதி -பரபாக சோபாவஹமாய்க் கொண்டு நம்முடைய நெஞ்சைக் கவர்கின்றது –

சமுத்திரம்
ஆகாசம்
காளமேகம்–ஸ்ரீ பெரிய பெருமாள் என்றும்

ஸ்வர்ண ஸ்தல காந்தி
அந்திமேகம்
மின்னல் திரள் மூன்றும் திருப் பீதாம்பரத்துக்கும் –
பொறுக்கி உவமை சொல்ல முயல்கிறார்

—————-

வை பூஷண்யாம் காந்திஸ் ஆங்கீ நிமக்நா விஸ்வத்ரீசீ க்வாபி சோந் மாத வ்ருத்தி
ஜாநே ஜானு த்வந்த்வ வார்த்தா விவர்த்த ஜாத ஸ்ரீ மத் ரங்க துங்க ஆலயஸ்ய –121-

ஸ்ரீ மத் ரங்க துங்க ஆலயஸ்ய –ஸ்ரீ திருவரங்கமாகிய பெரிய ஸ்ரீ கோயிலை யுடையரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய

வை பூஷண்யாம் காந்திஸ் –திரு ஆபரணக் காந்தியில்

நிமக்நா ஆங்கீ காந்திஸ்–மூழ்கின திரு மேனி ஒளியானது

விஸ்வத்ரீசீ-சுற்றும் வியாபித்ததாய்

க்வாபி சோந் மாத வ்ருத்தி–ஓரிடத்தில் உந்மாத வியாபாரத்தோடு கூடினதாகி

ஜாநே ஜானு த்வந்த்வ வார்த்தா விவர்த்த ஜாத-இரண்டு முழந்தாள்கள் என்கிற சப்தத்தின் பரிணாமமாக ஆயிற்றுப் போலும் –

அவயவ காந்தி வெள்ளம் ஓர் இடத்தில்

————–

ஸ்ரீ ரெங்கேசய ஜங்கே ஸ்ரீ பூமி ஆமர்ச ஹர்ஷ கண்ட கிதே
தத் கேளி நளின மாம்சல நால த்வய லலிதம் ஆசரத –122-

ஸ்ரீ பூமி ஆமர்ச ஹர்ஷ கண்ட கிதே-திரு மகளும் நில மகளும் திருவடி வருடும் போது உண்டான
ஹர்ஷத்தால் மயிர்க் கூச்சு எறியப் பெற்றுள்ள

ஸ்ரீ ரெங்கேசய ஜங்கே–ஸ்ரீ பெரிய பெருமாளது திருக் கணைக் கால்கள்

தத் கேளி நளின மாம்சல-அப்பிராட்டிமாருடைய லீலார்த்தமான இரண்டு தாமரைப் பூக்களினுடைய பெருத்த

நால த்வய லலிதம் ஆசரத –இரண்டு காம்புகளின் விலாசத்தை அடைகின்றன –
ஸ்ரீ பிராட்டிமாரின் திருக் கைகளில் அகப்பட்ட திருவடிகள் அவர்களுடைய லீலா அரவிந்தங்கள்

திருக் கணைக் கால்கள் அவற்றின் நாளங்கள் -அங்கு முள் இருக்க வேண்டுமே –

இதுவே மயிர்க் கூச்சு எறிதலால்-கண்ட கிதமாயிற்று என்றபடி –

——————–

வந்தாரு ப்ருந்தாரக மௌலி மாலா யுஞ்ஜான சேத கமலா கரேப்ய
ஸங்க்ராந்த ராகவ் இவ பாத பத்மவ் ஸ்ரீ ரெங்க பர்த்து மநவை நவை ச –123-

வந்தாரு ப்ருந்தாரக மௌலி மாலா -வணங்குகின்ற தேவர்களுடைய கிரீட சமூகம் என்ன

யுஞ்ஜான சேத–யோகிகளின் உள்ளம் என்ன

கமலா கரேப்ய–பிராட்டி திருக் கைத்தலம் என்ன
ஆகிய இவற்றின் நின்றும் வந்து படிந்த

ஸங்க்ராந்த ராகவ் இவ–சிவப்பை போன்று இருக்கிற
ராகம் -சிவப்பையும் அன்பையும் காட்டுமே –

பாத பத்மவ் ஸ்ரீ ரெங்க பர்த்து மநவை நவை ச –ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகளை
தியானிக்கவும் ஸ்துதிக்கவும் கடவேன்–

ஸ்ரீ மத் பராங்குச முனீந்திர மனோ நிவாஸாத் தஜ்ஜ அநு கார ரஸ மஜ்ஜை நமஞ்ச சாப்ய அத்யாப்யாதர
ததுத்தித ராக யோகம் ஸ்ரீ ரெங்கராஜ சரணாம்புஜம் உந்நயாம -ஸ்ரீ வரதராஜ ஸ்த்வம்

—————-

யத் பிருந்தாவன பண்டிதம் தத் ரைவ யத் தாண்டவம் சிஷிதம்
யத் லஷ்மீ கர ஸுவ்க்க்ய சாக்ஷி ஜலஜ ப்ரஸ்ப்ரத் தமானருத்தி யத்
யத் பக்தேஷு அஜல ஸ்த்தலஞ்ஜம் யத் தூத்ய பிரசங்க உத் ஸூகம்
தத் விஷ்ணோ பரமம் பதம் வஹது ந ஸ்ரீ ரெங்கினோ மங்களம் –124-

ஸ்ரீ ரெங்கினோ விஷ்ணோ யத் பதம் -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய யாதொரு திருவடியானது

பிருந்தாவன பண்டிதம்–விருந்தாவனத்தில் உலாவிற்றோ

யத் தாண்டவம்-யாதொரு திருவடியின் நர்த்தன விசேஷமானது

ததிரைவ சிஷிதம்–தயிர் கடையும் ஓசைகளினால் பயில்விக்கப் பட்டதோ

யத் லஷ்மீ கர ஸுவ்க்க்ய சாக்ஷி–யாதொரு திருவடியானது பிராட்டியின் திருக் கைகளுக்கு
உண்டாகும் ஸூகத்துக்கு சாஷியாய் இருக்கின்றதோ –

தாண்டவம் பயின்ற களைப்பு தீர பிராட்டிமார் அடி வருடுகிறார்கள் –

ஜலஜ ப்ரஸ்ப்ரத் தமானருத்தி யத்–தாமரைப் பூவோடு போராடுகின்ற அழகை உடையதோ

தாமரையில் பிறந்த தேவி பிடிக்க ஸுவ்க்யம் அடைகின்ற திருவடிகள் அந்த தாமரைப் பூவை
அன்பு பாராட்டாமல் அத்தோடு சண்டை செய்து வெல்வதே –

யத் பக்தேஷு–அடியவர் பக்கல்

அஜல ஸ்த்தலஞ்ஜம்–ஏற்றத் தாழ்வு வாசி பாராதோ

யத் தூத்ய பிரசங்க உத் ஸூகம்-யாதொரு திருவடியானது தூது செல்லும் வார்த்தை அளவிலே
பேராசை கொண்டதாயுமாய் இருக்கின்றதோ

தூது செல்லும் வார்த்தை செவிப்பட்டதும் குணாலக் கூத்து ஆடுவானாம் –
வேடன் வேடுவிச்சி –பதினெட்டு நாடன் பெரும் கூட்டு நடத்தும் ஆப்தன் அன்றோ –

தத் பரமம் பதம் வஹது ந மங்களம் –அப்படிப்பட்ட திருவடியானது –
நமக்கு க்ஷேமத்தை நிர்வஹிக்கக் கடவது

யோக க்ஷேமம் வஹாம் யஹம் -வாயோலை செய்து அருளியதை
நம் பக்கல் அனுஷ்ட்டித்து அருள வேணும் என்கிறார்–

—————–

சிஞ்ஜான ஸ்ருதி சிஞ்ஜிநீ மணிரவை வஜ்ர அரவிந்த த்விஜ ஸ்சத்ரீ கல்பக சங்க சக்ர முகுரை தை தை ச ரேகா மயை
ஐஸ்வர்யேன ஜெயம் த்ரி விக்ரம முகம் குஷ்யத்பி ஆம்ரேடிதம் ஸ்ரீ ரெங்கேசய பாத பங்கஜ யுகம் வந்தாமஹே ஸூந்தரம் –125-

ஐஸ்வர்யேன சஹ ஜெயம் த்ரி விக்ரம –சர்வேஸ்வரத்தோடே கூட மூவடி இட்டு அளந்தது
முதலான விஜய சேஷ்டிதங்களை –

ஆம்ரேடிதம்-பலகாலும்

யதா ததா

குஷ்யத்பி–பிரசித்தப் படுத்துகிற

முகம் சிஞ்ஜான ஸ்ருதி சிஞ்ஜிநீ –மணிரவை–ஒலிக்கின்ற வேத ரூபியாக திருவடிச் சதங்கை
மணிகளின் ஓசைகளாலும்

ரேகா மயை-ரேகை வடிவமான

தை தை ச -அப்படிப்பட்ட

வஜ்ர அரவிந்த த்விஜ ஸ்சத்ரீ கல்பக சங்க சக்ர முகுரை–வஜ்ரம் என்ன -தாமரை என்ன -கொடி என்ன –
குடை என்ன -கல்ப வ்ருக்ஷம் என்ன -சங்கம் என்ன -சக்கரம் என்ன -கண்ணாடி என்ன இவற்றாலும் –

ஸ்ரீ ரெங்கேசய பாத பங்கஜ யுகம் வந்தாமஹே ஸூந்தரம் –ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
திருவடித் தாமரை இணையை வணங்குகிறோம் —

கதா புன சங்க சக்ர -ஸ்ரீ ஆளவந்தார்

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த இரு காலும் -ஸ்ரீ பெரியாழ்வார்

————–

புநாநி புவனாநி அஹம் பஹு முகீ சதி சர்வ அங்குலீ
ஜலஜ் ஜலித ஜாஹ்நவீ லஹரி ப்ருந்த ஸந்தேஹதா
திவா நிசி ச ரங்கின ச சரண சாரு கல்ப த்ரும
பிரவால நவ மஞ்ஜரீ நக ருசீ விகாஹே மஹி –126–

அஹம்–கங்கையாகிய நான்

பஹு முகீ சதி–பலவாறாக பெருகா நின்று கொண்டு

புநாநி புவனாநி–புவனங்களைப் பரிசுத்தம் ஆக்கக் கடவேன்

இதி சர்வ அங்குலீ–என்று எல்லா திருவிரல்களில் நின்றும்

ஜலஜ் ஜலித ஜாஹ்நவீ–ஜல ஜல என்று பெருகின கங்கையினுடைய

லஹரி ப்ருந்த–அலை வரிசைகளோ இவை என்கிற

ஸந்தேஹதா-சந்தேகத்தை விளைவிப்பதான

ரங்கின சரண–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடிகளாகிற

சாரு கல்பத்ரும–அழகிய கல்ப வ்ருக்ஷத்தின்

பிரவால-விரல்களாகிற பல்லவங்களினுடைய

நவ மஞ்ஜரீ நக ருசீ–புதிய பூங் கொத்துக்கள் போன்ற நகங்களின் காந்திகளில்

திவா நிசி ச விகாஹே மஹி –இரவும் பகலும் அனுபவிக்கக் கடவோம்

பூர்வ சதகமாகிற யஜ்ஜம் சதாப்தி யான பின்பு அவப்ருத ஸ்நாநம் பண்ணுகிறார் –

தயரதன் பெற்ற மரகத மணித் தடாகம் இருக்க வேறே ஒரு துறை போக வேண்டுமோ

ஸ்ரீ பெரிய பெருமாள் கற்பக வ்ருக்ஷம் –
திருவடிகள் பல்லவம் –
திரு நக காந்திகள் நவ மஞ்சரி

இந்த பிரவாஹங்களில் பகலும் இரவும் குடைந்து நீராடுவோம்

————————

ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ சீதாப்பிராட்டியும் சமர்ப்பித்த பொன்னாலான தாமரை மலர்கள் நிரம்பி உள்ள திருவடிகளை
வணங்குவதாக அருளிச் செய்து பூர்வ சதகத்தை நிகமிக்கிறார்-

ஸ்ரீ ரெங்க இந்தோ பத கிசலயே நீல மஞ்ஜீர மைத்ர்யா
வந்தே வ்ருந்த பிரணயி மதுபவ்ராத ராஜீவ ஜைத்ரே
நித்ய அப்யர்ச்சா நத விதிமுக ஸ்தோம சம் சய்யா மாநை
ஹேம அம்போஜை நிபிட நிகடே ராம சீதா உப நீதை –127-

நீல மஞ்ஜீர மைத்ர்யா-நீல ரத்ன மயமான சிலம்புகள் பொருந்தி இருப்பதனால்

வந்தே வ்ருந்த பிரணயி மதுபவ்ராத ராஜீவ ஜைத்ரே-பூவடியைப் பற்றி இருக்கும் வண்டினங்களை
யுடைத்தான தாமரைப் பூவினை வென்று இருப்பனவும்

தாமரை மலர் ஸ்தானம் -திருவடிகள் –
நீல நூபுர ஸ்தானத்தில் வண்டுத் திரள்கள்

தாமரைக்கு வண்டுகள் சகாயம் –
திருவடிக்கு நீயே நூபுரம் சகாயம் –
திருவடிக்கே வெற்றி –

நித்ய அப்யர்ச்சா -நித்யப்படி திருவாராதனத்தில்

நத -வணங்கின

விதிமுக ஸ்தோம பிரமனின் முகங்களின் கூட்டமோ என்று

சம் சய்யா மாநை–சந்தேகிக்கப் படுகின்றனவாய்

ராம சீதா உப நீதை -ஸ்ரீ ராமனாலும் ஸ்ரீ சீதாப் பிராட்டியாலும் சமர்ப்பிக்க பட்டவையான

சக பதன்யா விசாலாஷ்யா நாராயணன் உபாகமத் –

ஹேம அம்போஜை நிபிட நிகடே -பொன் தாமரைப் பூக்களினால் இடைவெளி யற்ற சமீப பிரதேசத்தை
யுடையவைகளுமான

ஸ்ரீ ரெங்க இந்தோ பத கிசலயே -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய பல்லவம் போன்ற திருவடிகளை
வந்தே-வணங்குகிறேன் –

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எப்படிப் பட்ட மாட்சிமாசி உடைய ப்ராஹ்மா ஸ்தோத்ராதிகளைப் பண்ணும் தன்மை குறை வற்று இருக்கை-
ஸ்தோத்ராதிகளுக்கு பரிகரமான நாலு நாக்காலும்

எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
தன ஸ்ரத்தைக்குத் தக்கபடி எடுத்தேத்தி -நாலு வேதத்துக்கு சமைந்த நாலு முகமும் கொண்டு

எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
பின்னும் முன்னும் மட்டங்கள் ஆகிற பர்யந்தங்கள் எங்கும்
அழகை அனுபவிப்பைக்கு பல கண் படைத்த பிரயோஜனம் பெற்றான்

தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற
ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு தொழுது ஸ்தோத்ராதிகளைப் பண்ணுவது தண்டன் இடுவதாம் படி நின்ற

செம்பொன் அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
ஸ்பர்ஹணீயமாய் இவ்வருக்கு உண்டான கார்ய வர்க்கத்துக்கு எல்லாம் காரணம் என்னும் மஹத்வம் தோற்றும் படியாய்
இருக்கிற தாமரைப் பூவை உடைய தன் திரு நாபி தோன்ற

அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன்
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய

அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அவன் திருவடிகளின் கீழே புஷ்பாத் உபகரணங்களைப் பணிமாறி

அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–
அங்கு அந்தரங்க வ்ருத்தி செய்யும் அவர்களோடு சஜாதீயனான நானும் கிட்டுவது என்றோ
அடியார்கள் குழாங்கள் –இத்யாதி —

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading