ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் ப்ரபத்யே -விளக்கம் யதிராஜ விம்சதி
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -விளக்கமே ஆர்த்தி பிரபந்தம்
பிரபன்ன ஜன கூடஸ்தர் நம்மாழ்வாரும் சரம குருவான நமது பெரிய ஜீயரும் ஆழ்வார் திருநகரியிலே திரு அவதாரம்
அதே வைகாசி விசாகம் -திருவாய் மொழிப்பிள்ளை குந்திநகர் திரு அவதாரம் -திருமலை ஆழ்வார் இயல் பெயர்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
வந்த வுபதேச மார்க்கத்தைச் -சிந்தை செய்து
பின்னவரும் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து –1-மோக்ஷ உபாயம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடியே
இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் ———73-
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையே சேஷி உபாயம் பிராப்யம் என்று -அவர் உத்தாரக ஆசார்யர் –
க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யர் ஸ்ரீ உடையவர் திருவடிகளைக் காட்டிக் கொடுத்து அருள
ஸ்ரீ மத் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-ஸ்ரீ சைல நாத கருணா -பரிணாமத்தாம் -என்றும்
தேசம் திகழும் திரு வாய் மொழிப் பிள்ளை மாசில் திருமலை யாழ்வார் என்னை
நேசத்தால் இப்படி எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா -ஆர்த்திப்பிரபந்தம்-என்றும்
தாமே அருளிச் செய்த படி தஞ்சமாக காட்டிக் கொடுத்த ஸ்ரீ உடையவர் மேலே அதிக பிராபண்யம் மிக்கு
ஸ்ரீ யதிராஜ விம்சதி அருளிச் செய்தார் –
வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்து
சொல்லார வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்றளித்தோன்
புல்லார விந்தத் திருத் தாள் இரண்டையும் போற்று நெஞ்சே -என்று அங்கே இருந்த முதலிகள் அனுசந்தித்தார்கள்
ஸ்ரீரகஸ்ய த்ரயம் (திருமந்திரம் -8-த்வயம் 25 சரமஸ்லோகம் 32 )-65 அஷரங்கள் என்பதால் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் 65 ஸ்லோகங்கள் அருளிச் செய்தது போல்
அதில் உள்ள 20 பதங்கள் என்பதால் 20 ஸ்லோகங்கள் கொண்டு ஸ்ரீ மணவாள மா முனிகள் இந்த பிரபந்தம் அருளிச் செய்து அருளினார் –ஆளவந்தார் பிரதமபர்வத்தில்
இவரோ சரம பர்வத்தில்
———-
யத் உதிதா யதி பூபதி விம்சதிஸ் ஸமவதீரித ஸீது ஸூதா ரஸா
விசத யத் யகிலம் பவி நாம் ஹிதம் வர முனிஸ் ச தநோது ஸூபாநி ந –ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -81-
எவரால் அருளிச் செய்யப் பட்டதும் -இனிமையில் தேன் அம்ருதம் இவற்றைத் தோற்கடிப்பதுமான
யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரம் சம்சாரிகளுக்கு ஓன்று விடாமல் எல்லா நன்மைகளையும்
தெளிவு படுத்துகிறதோ அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை வளர்த்து அருளட்டும் –
——————-
மஹா யோகீ வக்தா அநிதர குண சாமான்ய மஹிமா
ச து ஸ்துத்ய ஸ்ரீ மான் அமித குண பூமா யதிபதி
அதோ நிஸ் துல்யா யா யதி நரபதேர் விம்சதி ரிதி
வியவஸ் யந்தஸ் சந்த கலி மிஹ ஜயந்த் யுஜ்ஜ்வலதி ய–82-
யதிராஜ விம்சதியை இயற்றி அருளிய மா முனிகள் மற்றவர்களுக்குப் பொருந்தாத மஹிமை மிக்க
குணங்களை உடையவர் ஆவார் –
ஸ்துதிக்கு விஷயமாக இருப்பவரோ பிராட்டியின் கிருபையைப் பெற்றவரும் அளவற்ற குணங்களுக்கு இருப்பிடமானவரும்
யதிகளுக்கும் ஸ்வாமியுமான -உத்தாரக ஆச்சார்யரான -எம்பெருமானார் –
ஆகையால் இந்த யதிராஜ விம்சதி ஒப்பற்றது என்று உறுதி கொண்ட ஒளி மிக்க ஸ்ரீ யை உடைய
விலக்ஷண அதிகாரிகள் இங்கு கலியை வெல்கிறார்கள் –
————-
த்ராஷாமதி ஷிபதி நிந்ததி மாகரந்த தாராம் ஸூதா ரஸ
ஜரீ மதரீ கரோதி யத் ஸம் ப்ரணீத மது லம் யதி ஸார்வ பவ்ம
ஸ்தோத்ரம் ச மே வர முனிர் வித நோ து பத்ரம் –83-
எந்த மா முனிகள் அருளிச் செய்த ஒப்பற்ற யதிராஜா விம்சதியானது த்ராக்ஷையைத் தோற்படிப்பதாய்
தேன் தாரையைப் பழிப்பதாய் அம்ருத ரஸ ப்ரவாஹத்தை தாழ்வுறச் செய்கிறதாய்
நன்கு அருளிச் செய்யப் பட்டதோ அந்த யதீந்த்ர ப்ரவணரான மா முனிகள்
அடியேனுக்கு அருளத் திரு உள்ளம் பற்ற வேண்டும் –
————-
ஸ்ரீ மத் ரெங்க ஸூதாபிதா நக ஸூத் யர்த்த அநு சந்த உஜ்ஜ்வலா
கோதா உதார வச ப்ரதர்ஸித குரு உபாயத்வ நிஷ்ட ஆஸ்ரயா
யத் ஸூக்திர் யதிராஜ விம்சதி நுதி வேதாந்த ஸிந்தோஸ் ஸூதா
ஸ்ரீ மத் ரம்ய வராய ஸம்யமவதாம் நாதாய தஸ்மை நம –84-
திருவரங்கத்து அமுதனார் என்னும் திரு நாமத்தை உடைய கவியினுடைய ராமானுஜ நூற்று அந்தாதியின்
அர்த்தத்தை அனுசந்தித்த சிறப்பை உடைத்தாய்
ஸ்ரீ கோதா தேவியின் உதார வாக்கான நாச்சியார் திரு மொழியில் காட்டி அருளப் பெற்ற
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்ற நிஷ்டையை ஏற்பதாய் -வேதாந்த பாற் கடலில் இருந்து
கடைந்து எடுத்த அமுதம் போன்றதாய் விளங்கும் யதிராஜ விம்சதி என்னும் ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்து
அருளிய இந்த்ரியங்களில் அடக்கியவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மா முனிகளுக்கு நமஸ்காரம் –
அடியேனுடைய ப்ரணாமங்களை சமர்ப்பிக்கிறேன் –
————–
திருமழிசை அண்ணா அப்பங்கார் ஸ்வாமிகளும் (ஆனி௴, அவிட்டம் 1766 – 1817)சமஸ்க்ருத வியாக்யானம் செய்துள்ளார்
———-
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய-
யதிவர தத்த்வ விதே …-ஸ்ரீ வரவரமுனி சதகம் -3-என்றும் –
கருணைக சிந்தோ –ஸ்ரீ வரவர முனி சதகம் -100-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ எம்பெருமானாருடைய அவதார விசேஷமாகவும் -அவர் தம்முடைய யாதாம்ய தர்சியாகவும் தயாம்பு ராசியாகவும்
பிரசித்தரான யாதொரு ஸ்ரீ மணவாள மா முனிகள்
யச்சப்தம் பிரசித்த பராமர்சி இறே-
(குணமணி நிதயே நமோ நமஸ்தே
குருகுல துர்ய நமோ நமோ நமஸ்தே |
வரவரமுநயே நமோ நமஸ்தே
யதிவர தத்வ விதே நமோ நமஸ்தே || 3
(சிறந்த குணங்களுக்கு நிதியாக இருப்பவரின் பொருட்டு வணக்கம். ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம்.
மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.)
யன்மூலமாஸ்வயுஜமாஸ்யவதார மூலம் |
காந்தோ பயந்த்ரு யமிந:கருணைக ஸிந்தோ: ||
ஆஸீத ஸத்ஸுகணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம் |
ததேவ ஜகதப்யுதயைக மூலம் || 101
கருணைக் கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு ஐப்பசி மாதத்தில்
எந்த மூலம் அவதாரத் திருநக்ஷத்ரம் ஆகிறதோ –
அஸத் என்பவைகளில் கணக்கிடப்பட்ட எனக்கு ஸத்தைக்கு அதுவே காரணமாக ஆயிற்று,
அதுவே ஜகத்துக்கு க்ஷேம காரணமாகவும் ஆகிறது)
யதிபதி பிரசாதிதீம்
யதிதாம் பதி -யத்பதி / யதிபதே பிரசாத அஸ்யாம்-அஸ்தீதி-யதிபதி பிரசாதிதீம் என்ற வ்யுத்பத்தியாய் –
ஜிதேந்த்ரியர்களுக்கு உத்தர உத்தர இந்த்ரிய நிக்ரஹம் வாராமல் பண்ணியும்
மென்மேலும் இந்த்ரிய நிக்ரஹம் அபிச்சின்னமாக அபிவிருத்தமாம் படி பண்ணியும்
ரஷகரான ஸ்ரீ எம்பெருமானாருடைய ப்ரீதி விஷயம் என்னுதல் –
யதிபதி பிரசாத் யதீதி -யதிபதி பிரசாதி தீ தாம் -என்று வ்யுத்பத்தியாய் தன்னை அனுசந்தித்தவர்கள் பக்கல்
ஸ்ரீ எம்பெருமானாரை அனுக்ரஹ சீலராம்படி பண்ண வற்றன என்னுதல்
இத்தால்
இவர் ஸ்ரீ எம்பெருமானாருடைய நிரபேஷ உபாயத்வத்தையும் -சம்சாரிகளுடைய சர்வ பிரகாராதிதாயித்வத்தையும் –
அத்வதாயிபி சைவ கஸ்ய சம்யந்த்யஸ்தாத் மநோஹரௌ சர்வ ஏவ ப்ரமுச்யேரந்த்ர
பூர்வே பரே ததா -பாரத்வாஜ சம்ஹித -1-1-31-என்கிறபடியே
இவர் சம்பந்தமே சர்வ உத்தாரகம் ஆகிறபடியும் திரு உள்ளம் பற்றி –
இப் பிரபந்தம் அனுசந்தானத்தால் மாத்ரமே யாகிலும் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் உண்டாக அமையும் -என்று
அவர் தமக்கு பிரசாத ஜனகமான இப் பிரபந்தத்தை அருளிச் செய்தார் என்கிறது –
இரண்டு யோஜனையிலும் இப் பிரபந்தம் ஸ்ரீ எம்பெருமானார்க்கு அத்யந்த அபிமதம் ஆகையாலும்
அத்தை அனுசந்தித்தவர் பக்கல் ஸ்ரீ எம்பெருமானார் தன்னடையே பிரசாதத்தை பண்ணி அருளுவார் என்கிறது –
பிரசாதிதீம்
தாமரையாள் ஆகிலும் சிதகுலைக்கும் (4-9)-என்னுமா போலே இச் சேதனனை தான் கடாஷிப்பது இல்லை என்று இருக்கும்
ஸ்ரீ எம்பெருமானையும் இப்பிரபந்தம் ஸ்வ ஸ்மரண மாத்ரத்தாலே அவன் தன்னிடத்தே பிரசாதத்தை பண்ணி யல்லது
நிற்க ஒண்ணாத படி பண்ணுவிக்கும் என்கிறது –
இவர் தம் ஸ்ரீ ராமானுஷ அஷ்ட சதகத்தில் பிரசித்தம் இறே –
இது தன்னை சுரக்கும் திருவும் உணர்வும் -43 என்று ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்தார் இறே
(சுரக்கும் திருவும் உணர்வும் சொலப் புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறஞ் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசனென்று சொல்லுமினே.–43-)
யதிராஜ விம்சதிம்
பிரதி ஸ்லோஹம் ஸ்ரீ யதிராஜ சப்தத்தை இட்டுச் சொல்லுகையாலே -ஸ்ரீ யதிராஜ விம்சதி -என்கிற
திரு நாமத்தை உடையது என்னுதல்
இதில் ஒரு ஸ்லோகஹத்தை அனுசந்திக்கவே அனுசந்தாத்ரு விஷயத்தில் ப்ரேமம் கரை புரண்டு ஓர் ஆயிரத்தில் படியே
இருபடி யாய்த்து ஸ்ரீ எம்பெருமானார் இவர் தனக்கு ரஷகராம் படியும் என்கிறது –
இதில் படி என்று திருமேனி
ஸ்துதிம்
ஸ்தோத்ரத்தை –ஸ்தூ யத இதி ஸ்துதி –
ஸ்ரீ எம்பெருமானாருடைய குண அனுபவ ரூபமான இப்பிரபந்தத்தை
வ்யாஜஹார-
இஸ் சப்தம் –ஜகார -ஆஜஹார -வ்யாஜஹார -என்று த்ரி பிரிகார பிரகாரமாய் இருக்கையாலே –
ஸ்ரீ எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தை –என்கிறபடியே –
பூர்வாசார்யர்களுடைய உபதேச பரம்பரராப்தமான அர்த்தத்தை
சம்சாரிகளுடைய துர்க்கதியைக் கண்டு பொறுக்க மாட்டாதே இப்பிரபந்த ரூபேண அருளிச் செய்தார் என்கிறது –
(ஜகார-எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த வுபதேச மார்க்கத்தைப்பெற்று –
ஆஜஹார-சிந்தை செய்து–புள்ளு பிள்ளைக்கு இரை தேடி -தகுந்தபடி சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே
வ்யாஜஹார-பின்னவரும் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன்)
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம்
அவ்வழியாலே உபகாரராய் -அத ஏவ -பிரபன்ன ஜன சாதகாம்புதம்-பிரபன்ன ஜனங்கள் உண்டு –பர அபிமானமே உத்தாரகம் என்று இருக்கும் அவர்களாகிற சாதகங்களுக்கு-வர்ஷூ கலாவஹரான பிரபன்ன ஜனங்களை சாதகங்கள் ஆகவும் –
இவ்விடத்தில் இவரை வர்ஷூ கலாவஹரான பிரபன்ன ஜனங்களை சாதகங்கள் ஆகவும் – இவரை அம்புதமாகவும் நிரூபிக்கையாலே
சாதகங்களுக்கு வர்ஷ பிந்து அன்றிக்கே தாரகம் இல்லாதாப் போலே யாய்த்து
பிரபன்ன ஜனங்களுக்கு பராபிமானம் அன்று உஜ்ஜீவன உபாயம் இல்லை என்கையும்
அம்புதமாவது –
சமுத்ரோதத்தை தாம் பருகி ஸ்வ சம்பாதத்தாலே அதன் லாவண்யத்தைப் போக்கி(உப்புத் தன்மையைப் போக்கி )
மாதுர்யத்தை உண்டாக்கி
அத்தை சர்வ உபாய போக்யமாம் ஆக்குமா போலே
யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரமான பகவத் காருண்ய ரசத்தை தாம் அனுபவித்து
அதில் ஸ்ரீ ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தாலே வரும் அவைரச்யத்தை மாற்றி
சாபராத சேதன ரஷண உபயோகியாக்கி
அத்தை சர்வர்க்கும் கொடுக்குமவர் –
(லஷ்மி நாதாக்ய சிந்தவ்-சடரி புஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்யஷி -சத்தநுர குபத அம்போஜா சஷூர் ஜ்ஜ்ராப்யாம் – கத்வாதாம் யமுநாக்யாம் சரிதம நு யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் சம்பூர்ய ப்ரானிசச்யே ப்ரவஹதி- நிதராம்-தேசிகேந்திர பிரமௌநை )
1-நிரபேஷ உபகாரகர் யென்கையும் –
2-பர சம்ருத்தியே ஸ்வ ச்ம்ருத்தியாய் இருக்குமவர் யென்கையும்
3-தாம் தாமாக ஓர் அர்த்தத்தை கல்ப்பித்து உபதேசிக்கை யன்றிக்கே உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்தத்தையே
உபதேசித்தார் யென்கையும் தோற்றுகிறது-
அன்றிக்கே
சம்பந்திகளான ஜனங்கள் ஆகிற சாதகங்களுக்கு வர்ஷூ கலாவஹர் என்றுமாம் –
அப்போது ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை தாம் அனுபவித்து அவைகளை தத் சம்பந்திகளுக்கு
போக்யமாக உபதேசிக்குமவர் என்கிறது –
பகவத் வந்தன கார்யம் குரு வந்தன பூர்வகம் –என்று ததீய விஷயத்தில் ஒக்கும் இறே
சௌம்ய வர யோகி புங்கவம் –
மகா உபாகரகர் ஆகையாலே -சதா தர்ச நீயராய் -மங்கள அவாஹமாய் -இவ் விரண்டு ஆகாரத்தாலே
பெரு மதிப்புத் தம் திரு உள்ளத்திலே தட்டாதவராய் -பர சம்ருதியே பிரயோஜனமாய் இருக்கிற
ஸ்ரீ அழகிய மணவாள மா முனிகளை
தௌமி-
ஸ்ரீ பெரிய ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து-அதிகத பரமார்த்தரான ஸ்ரீ எறும்பியிலப்பா-
ஸ்ரீ யதிவர பிரசாத ஜனகமான இப்பிரபந்தத்தை உபகரித்து அருளி மஹா உபகாரகத்துக்குத் தோற்று
தம்மை அத்தலைக்கு சேஷமாக்கிக் கொடுக்கிறார் –
ரேணுஸ்தௌ – இறே
இத்தால் அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
அதாவது –ஸ்வஸ்மித ஸ்வார்ஹதா நிவ்ருத்தி -சாண உல்லிடமான மணிக்கு ஒளி ஸ்வபாவகம் இறே
—————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ எறும்பியப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –
Leave a Reply