ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸ்வாமிகள் திரு அவதாரம் –கலி -4471—கி பி -1370-
தன்னுடைச் சோதி அடைந்தது –கலி -4544-கி பி -1443-
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள்
திரு அவதாரம் தினம் –
கி பி -1362-கலி -4463-பிலவ வருஷம் இல்லை என்றும் –சுபக்ருத வருஷம் தான் என்றும் —
ஆடி மாதம் -வியாழக்கிழமை -கிருஷ்ண சதுர்த்தி -பூசம் நக்ஷத்ரம்
தன்னுடைச் சோதி அடைந்த தினம் –
கிபி -1454-கலி -4555-ஸ்ரீ முக வருஷம் இல்லை என்றும் பவ வருஷம் தான் என்றும் –
பங்குனி மாதம் -புதன் கிழமை -சுக்ல நவமி பூசம் நக்ஷத்ரம் –
ஸ்ரீ மா முனிகளுக்கு பின்பு -14- வருஷங்கள் இங்கே இருந்தார்
கலி ஆரம்பம் –கி மு -3101-என்றும் -3102-என்றும் இரண்டு பக்ஷங்கள் இருப்பதால் வருஷப் பெயர்களில் குழப்பம்
ஸ்ரீ தேசிகர் ஸ்வாமிகள் திரு அவதாரம் –கி பி -1268–தன்னுடைச் சோதி -1369-
இவர் திருக் குமாரர் ஸ்ரீ நயன வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அவதாரம் –கிபி -1316-தன்னுடைச் சோதி எழுந்து அருளியது -1414-
ஸ்ரீ மணவாள மா முனிகள்
திரு அவதாரம் -ஆழ்வார் திருநகரி
தந்தையார் திரு நா வீறுடைய பிரான் தாசர் அண்ணர்
சாதாரண வருஷம் -ஐப்பசி -26 நாள் -சுக்லபஷம் -வியாழன்
சதுர்த்தி -மூலம் நஷத்ரம் திரு அவதாரம்
அப்புள்ளார் –
ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர் அவனியிலே இரு நூறு ஆண்டு இரும் நீர் என்ன
பாதியிலே உடையவராய் வந்து தோன்றி பரமபதம் நாடியவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி நிலுவை தன்னை நிறைவேற்றி வாரும் என்ன
சாதாரணம் என்னும் வருடம் தன்னில் தனித்துலா மூல நாள் தான் வந்தாரே
ஈடு –முப்பத்தாறாயிரம் -பெருக்கர் என்ற திரு நாமம் உண்டு இவருக்கு
விஸத வாக் சிகாமணி -என்றும் உண்டே
சேஷ ஸ்ரீ மான் நிகம மகுடீ யுக் ம ரஷா ப்ரவ்ருத்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் நியமனப்படி
ஸ்ரீ கூர குலோத்தம தாச நாயன் முதலிய முதலிகள் இட்டு ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளைக்கு பரம ரகச்யார்தங்களையும் உபதேசிக்க பெற்றார்
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை ஸ்ரீ தேவ பெருமாள் நியமித்த படியே ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளை இடம் ஈடு முப்பத்தாறாயிரம் கேட்பதாக தொடங்கி
சகல அர்த்தங்களையும் கேட்டு தெளிந்தார் –
ஸ்ரீ திருவாய்மொழியிலும் ஸ்ரீ ஆழ்வார் இடமும் ஈடுபாடு பெருக –
திருவிதாங்கூர் ராஜ்யத்தில் திருக்கணாம்பி படை வீட்டில் எழுந்து அருளி இருந்த படியால்
அங்கு சென்று சேவித்து க்ருத்ரரானார்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் நியமனம் படி ஸ்ரீ திருவநந்த புரம் சென்று ஸ்ரீ விளாஞ்சோலை பிள்ளை இடம்
ஸ்ரீ வசன பூஷணம் முதலாக பல க்ரந்த அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெற்றார்
அவருக்கு சரம பர்வ நிஷ்டையும் செய்தார்-
ஸ்ரீ சைல தயா பாத்ரம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் -இந்த பலனை பகவத் பிரசாதமாக -கொள்ளாமல்
யதீந்திர ப்ராவண்யமும் தீ பக்தி வைராக்ய குணார்ணத்வமும் -இவையும்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்ததாக அருளுகிறார் –
பிதரம் ரோசயாமாச ததா தசரதம் ந்ருபம் -ருசித்து ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ஆனது போலே
ஸ்ரீ அரங்கன் அர்ச்சை நிலையிலும் ரசனை வாய்ந்த சீடனாக இருந்தானே
சார தம மந்திர ரத்ன அர்த்தமான ஸ்ரீ திருவாய் மொழி ஈட்டை கேட்டு அருளினான் ஓர் -ஆண்டு
விழுமிய வேட்கை உடன் -ஸ்ரீ வட வேங்கடவன் வட மொழி மறைப் பொருளை
ஸ்ரீ பாஷ்யகாரர் இடம் சங்க்ரஹமாக கேட்டு அருளி -வேதார்த்த சங்க்ரஹம் –
இன்றும் ஞான முத்தரை உடன் திரு மலையில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீ பாஷ்ய காரர்
திருக்குறுங்குடி நம்பி வைஷ்ணவ நம்பி ஆனது போலே ஸ்ரீ அரங்கனும் ஸ்ரீ மா முனிகள் இடம் ஈடு கேட்டருளி ஆனந்தித்தான்-
-1205-1325-ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்-1323-படை எடுப்பு –
1323-1371 ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து போக
48 வருஷம் கழித்து திரும்பி ஸ்ரீ நம் பெருமாள் திரும்பி
1370 மணவாள மா முனிகள் திரு அவதாரம்
கவலை இல்லை இனி என்று வந்தானாம்-
ஸ்ரீ நம்பிள்ளை கால ஷேபம் கேட்டு திருப்தி இல்லை ஸ்ரீ மா முனிகளுக்கு நியமனம் சாதித்து
தாமாக வந்து மாறன் மறைப் பொருளை நல்க கேட்டருளி
பூர்த்தி இல்லை முன்பு உள்ள ஆசார்யர்கள்
ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஸ்ரீ பாஷ்யம் தெரியாதே
ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஈடு தெரியாதே
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் பின்பு தானே அஷ்ட தச ரஹஸ்யங்கள் அருளிச் செய்தார்
குரவர் மொழி அனைத்தும் அறிந்தவர் மா முனிகள் ஒருவரே
இவரை இட்டு
திருச்செவி சாத்தி
தனியன் அருளிச் செய்து –
திருநாமம் சாத்தி
திரு அத்யயனம் உத்சவம் செய்து அருளி –
ஜன்ம திரு நாமம் ஸ்ரீ அழகிய மணவாளன்
ஆஸ்ரம திருநாமம் ஸ்ரீ பெரிய பெருமாள் -இதுவே கொண்டு அருள -சாதித்து –
சொம்பை கொண்டு -இரண்டு திருமேனி செய்து அருளி –
நின்ற இருந்த திருமேனி ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில்
வீற்று இருந்த திருமேனி ஸ்ரீ திருவரங்கம்
மூன்று அங்குலம் உயரம் தான் –
வேதத்தின் உட் பொருள் நிற்கப் -பாடி என் நெஞ்சுள் -நிறுத்தினான் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
வேதப்பொருளே என் வேங்கடவா –
பொருள் அவன்
உள் பொருள் பாகவதர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் –
திருவடி நிலை என்பதால் எம்பெருமானார் ஆழ்வாரினும் வேறுபட்டு இல்லை
அவரது புநர் அவதாரம் என்பதால் பெரிய ஜீயரும் எம்பெருமானாரினும் வேறுபட்டு இல்லை –
ஆக மூவருமே உள் பொருள் -உத்தாரக ஆச்சார்யர்கள்
பகவான் புறப் பொருள் –
புறப்பொருள் மதிளரங்க மணவாளன்
உள் பொருள் மணவாள மா முனிகள்
அரங்கன் உடைய உலகளந்த பொன்னடி புறப்பொருளின் சாரம்
மா முனிகளின் பொன்னடியாம் செங்கமலம் உட் பொருளின் சாரம் –
எறும்பி அப்பா -வர வர முநி -சதகம் 63
ஆத்மா நாத்மப்ரமிதி விரஹாத் பத்யுரத் யந்ததூர
கோரே தாபத்ரி தய குஹரே கூர்ணமா நோஜ நோயம்
பதச்சாயாம் வர வர முனே ப்ராபிதோயத் ப்ரசாதாத்
தஸ்மை தேயம் ததி ஹகிமிவ ஸ்ரீ நி தேர் வர்த்ததே தே
பதச்சாயா -உள் பொருளின் முடிவு நிலமான மா முனிகள் திருவடியே உபாயம் -நிழல் உபேயமும் –
விஷ்ணு சேஷி ததீய ஸூப குண நிலையோ விக்ரஹ ஸ்ரீ சடாரி
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – என்றபடி
எம்பெருமான் நல்குணம் மிக திரு மேனியே ஆழ்வார்
அவர் இணைத் தாமரையே ஸ்ரீ ராமானுஜர்
அவர் திறத்து அத்யந்த பாரதந்த்ர்யம் அனுசந்தித்து நிழல் போலே யதீந்திர ப்ரவணர் திருவடி நிழலாகி உபேயமாகிரார்
இதனாலே ஸ்ரீ ரம்ய ஜாமத்ரு முனிவருக்கு தனியன் சமர்ப்பித்து முதலிலும் முடிவிலும் அனுசந்திக்க ஸ்ரீ ரெங்கராஜ திவ்யாஞ்ஞை –
அந்த கட்டளையின் பலனே நாம் இன்று முடிவுப் பொருளாய் அனுசந்திக்கும்
ஜீயர் திருவடிகளே சரணம் -என்பதாகும்
திடமான அத்யாவசாயம் நாமும் பெற வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் -என்று
ஸ்ரீ மா முனிகளை சரணம் பற்றுவோம்
சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ்வு இப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே –
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மண் உலகம் வாழ மணவாள மா முனியே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்-
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply