ஸ்ரீ குலசேகரர் -தலை சிறந்த பூஷணர்-சேகரர்–கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழியர் கோன்
ஸ்ரீ கௌஸ்துபம் அம்சம்-
குஹ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரே திநே திநே
தமஹம் சிரஸா வந்தே ராஜா நாம் குல சேகரம்-
குஹ்யதே –-ஜனங்களால் கோஷிக்கப் படுகிறதோ –
திருவரங்கன் சர்வ வித அனுபவமும் என்று கிட்டுமோ என்று தாம் பிரார்த்தித்த படி
நாட்டையும் உலகத்தையும் தம்மைப் போல் ஆக்கி –
அனைவைரையும் -ஸ்ரீ ரெங்க யாத்திரை ஸ்ரீ ரெங்க யாத்திரை என்று வாய் வெருவும் படி
செய்து அருளிய ஸ்ரீ வைஷ்ணவ சிகாமணியான ஸ்ரீ குல சேகர பெருமாளை வணங்குகிறேன் -என்றவாறு –
ஶ்ரீ முகுந்தனுக்கு சாத்த பட்ட மாலை
முகுந்தன் திரு நாமங்களையே பூ மாலையாக தொடுத்த ஸ்தோத்ர மாலை –
வேதார்த்த அர்த்தம் மட்டும் இல்லை
திரு நாம சங்கீர்த்தனமே வழி.–முகுந்த சப்தம் – மு கு தா -மோஷம் பூமியை கொடுப்பவன்.
சரணம் ஆகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்.
தனி மா தெய்வம்-ஓர் ஆல் இலை செல்வன் -மார்கண்டேயனும் கரியே-மோஷ பிரதன் இவன் ஒருவனே –
வந்தே முகுந்தம் அரவிந்தளாய தக்ஷம் ,
குந்தேந்து ஸந்கத் தசனம் சிஷு கோப வேஷம் ,
இந்திராதி தேவ கண வந்தித பாத பீடம்
விருந்தாவனாலயம் காம் வா ஸூ தேவ ஸூநம் –
——–
ஸ்ரீ வல்ல பேதி வர தேதி தயா பரேதி பக்தப் ப்ரியேதி பவலுண்ட ந கோவிதேதி
நா தேதி நாக சயநேதி ஜெகன் நிவாஸே த்யாலாபநம் பிரதிபதம் குரு மே முகுந்த –1-
ஸ்ரீ வல்ல பேதி -ஸ்ரீ யபதி என்றும்
வர தேதி -ஆஸ்ரிதர்களுக்கு அனைத்தையும் அளிப்பவன் என்றும்
தயா பரேதி -ஆஸ்ரிதர் படும் துக்கங்களை பொறுக்க மாட்டாத ஸ்வபாவனாயும்
பக்தப் ப்ரியேதி -ஆஸ்ரிதர்கள் மேல் வ்யாமோஹம் கொண்ட அன்பனே என்றும்
பவலுண்ட ந கோவிதேதி -சம்சாரத்தை தொலைக்க வல்லவனே என்றும்
நா தேதி -எனது ஸ்வாமியே என்றும் –
நாக சயநேதி -அரவணை மேல் பள்ளி கொள்பவனே என்றும் –
ஜெகன் நிவாஸே -உலகம் அனைத்தையும் தன் திரு வயிற்றிலே இடமாகக் கொண்டு அவற்றை நோக்கி ரக்ஷிப்பவனே என்றும்
த்யாலாபநம் பிரதிபதம்-அடிக்கடி சொல்லுமவனாக
குரு மே -அடியேனை செய்து அருள வேண்டும் –
முகுந்த –உபய விபூதியையும் அளிக்க வல்ல எம்பெருமானே –
லுண்டனம் -களவாடுகை -அபஹரிக்கை
கோவிந்தா -வல்லவன்
ஜெகன் நிவாஸ -சர்வ லோக வியாபகன்- பஹு வரீகி சமாகத்தால்
பிரளய காலத்தில் திரு வயிற்றிலே வைத்து ரஷிப்பவன் – தத் புருஷ சமாஹம் –
மாம் ஆலாபினம் குரு -பகவத் கிருபையே சாதனம் -என்றவாறு
ஹே முகுந்த! – உபய விபூதியை அளிக்க வல்ல எம்பெருமானே!,
ஸ்ரீ வல்லப! இதி -ஶ்ரிய:பதி என்றும், வரத! இதி – (அடியார்க்கு) அபேஷிதங்களை அளிப்பவனே! என்றும்,
தயாபர! இதி – அடியார் படும் துக்கங்களைப் பொறுக்கமாட்டாத ஸ்வபாவமுடை யவனே! என்றும்,
பக்தப்ரிய! இதி – அடியார்கட்கு அன்பனே! என்றும்,
பவலுண்டந கோவித! இதி – ஸம்ஸாரத்தைத் தொலைக்க வல்லவனே! என்றும்,
நாத! இதி – ஸர்வஸ்வாமிந்! என்றும்,
நாகசயந! இதி – அரவணைமேல் பள்ளி கொள்பவனே! என்றும்,
ஜகந் நிவாஸ! இதி – திருவயிற்றை இருப்பிடமாக்கி அவற்றை நோக்குமவனே! என்றும்,
ப்ரதிபதம் – அடிக்கடி, ஆலாபிநம் – சொல்லுமவனாக, மாம் – அடியேனை, குரு – செய்தருளாய்.
——————–
ஜெயது ஜெயது தேவோ தேவகீ நந்தநோயம்
ஜெயது ஜெயது கிருஷ்ணோ வ்ருஷ்ணீ வம்ச ப்ரதீப
ஜெயது ஜெயது மேக ஸ்யாமள கோமலாங்கோ
ஜெயது ஜெயது ப்ருத்வீ பாரா நாஸோ முகுந்த —2-
ஜெயது ஜெயது தேவோ தேவகீ நந்தநோயம்-தேவகி மைந்தனான இந்த தேவனான கண்ணபிரான் வாழ்க வாழ்க –
தேவோ -ஸ்வ இச்சையாக லீலார்த்தமாக -அஜாயமானோ பஹுதா விஜாயதே
ஜெயது ஜெயது கிருஷ்ணோ வ்ருஷ்ணீ வம்ச ப்ரதீப-வ்ருஷ்ணீ அரச குலத்துக்கு விளக்காய் தோன்றின கண்ணபிரான் வாழ்க வாழ்க
தஸ்யாபி வ்ருஷ்ணீ பிரமுகம் புத்ர சதமாஸீத் –யாதோ வ்ருஷ்ணீ ச்மஞ்ஞா மேதத் கோதரமவாப -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ஜெயது ஜெயது மேக ஸ்யாமள கோமலாங்கோ-காள மேகம் போன்ற கரிய பிரானாய்-அழகிய திருமேனியை யுடைய கண்ணபிரான் வாழ்க வாழ்க
ஜெயது ஜெயது ப்ருத்வீ பாரா நாஸோ முகுந்த -பூமிக்கு சுமையான துர்ஜனங்களை ஒழிக்குமவனான கண்ணபிரான் வாழ்க வாழ்க
அயம் – இந்த, தேவ: – தேவனான, தேவகீ நந்தந: – தேவகியின் மகனான கண்ணபிரான், – வாழ்க! வாழ்க!!,
வ்ருஷ்ணி வம்சப்ரதீப: – வ்ருஷ்ணி என்னும் அரசனுடைய குலத்துக்கு விளக்காய்த் தோன்றிய கண்ணன், ஜயது ஜயது-;
மேகச்யாமல: – காளமேகம் போற் கரியபிரானாய், கோமள அங்க: – அழகிய திருமேனியை யுடையனான் கண்ணபிரான், ஜயது ஜயது-;
ப்ருத்வீபார நாச: – பூமிக்குச் சுமையான துர்ஜநங்களை ஒழிக்குமவனான, முகுந்த: – கண்ணபிரான், ஜயது ஜயது – வாழ்க! வாழ்க!!
————
முகுந்த மூர்த்நா பிராணிபத்ய யாசே பவந்த மேகாந்த மியந்த மர்த்தம்
அவி ஸ்ம்ருதி ஸ்தவச் சரணார விந்தே பவே பவே மே அஸ்து பவத் ப்ரஸாதாத் –3-
முகுந்த-புக்தி முக்திகளைத் தர வல்ல கண்ண பிரான்
மூர்த்நா பிராணிபத்ய யாசே -தலையால் சேவித்து -யாசிக்கிறேன்
பவந்தம்-தேவரீரை
ஏகாந்தம் இயந்தம் அர்த்தம்-இவ்வளவு பொருளை மாத்திரம் யாசிக்கிறேன்
அவி ஸ்ம்ருதி ஸ்த்வச் சரணாரவிந்தே அஸ்து -தேவரீருடைய திருவடித் தாமரைகளில் மறப்பு இல்லாமை இருக்க வேணும் –
ஜென்மம் களைந்து மோக்ஷம் அருள வேணும் என்று கேட்க வில்லை –
பவே பவே மே பவத் ப்ரஸாதாத் -எனக்கு பிறவி தோறும் தேவரீருடைய அனுக்ரஹத்தினால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் மறைப்பின்மை யான் வேண்டும் மாடு -பெரிய திருவந்தாதி பாசுரம் –
நினைமின் நெடியான்-நீண்ட காலத்துக்கு நினைவில் கொள்வான்..சரண் என்று நெடியானே வேங்கடவா -பாசுரம்-
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் உன் ஆதீனம் தான் .
நினைவும் ஞானமும் மறதியும் அவன் ஆதீனம்
முகுந்த – புக்தீ முக்திகளைத் தர வல்ல கண்ண பிரானே!,
பவந்தம் – தேவரீரை, மூர்த்நா – தலையாலே, ப்ரணிபத்ய – ஸேவித்து,
இயந்தம் அர்த்தம் ஏகாந்தம் – இவ்வளவு பொருளை மாத்திரம், யாசே – யாசிக்கின்றேன்!
(அஃது என்? எனில்),
மே – எனக்கு, பவே பவே – பிறவி தோறும், பவத் ப்ரஸாதாத் – தேவரீருடைய அநுக்ரஹத்தினால்,
த்வத் சரணாரவிந்தே – தேவரீருடைய திருவடித் தாமரை விஷயத்தில்,
அவிஸ்ம்ருதி: – மறப்பு இல்லாமை, அஸ்து – இருக்க வேணும்.
————-
நாஹம் வந்தே தவ சரண யோர்த்வந்த்வ மத் வந்த்வஹேதோ –
கும்பீ பாகம் குருமபி ஹரே நாரகம் நாப நேதும் –
ரம்யா ராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும்
பாவே பாவே ஹ்ருதய பவநே பாவயேயம் பவந்தம் -4-
நாஹம் வந்தே தவ சரண யோர்த்வந்த்வ மத் வந்த்வஹேதோ –அடியேன் தேவரீருடைய திருவடி இணையை
ஸூக துக்க நிவ்ருத்தியின் பொருட்டு சேவிக்கிறேன் அல்லேன்
கும்பீ பாகம் குருமபி நாரகம் நாப நேதும் -கும்பீ பாகம் என்னும் பெயரை யுடைய பெருத்த கொடி தான்
நரகத்தை போக்கடிப்பதற்காகவும் சேவிக்கிறேன் அல்லேன்
ரம்யா ராமா ம்ருது தநு லதா நந்தநே நாபி ரந்தும்-அழகாயும்-ஸூகுமாரமான கொடி போன்ற சரீரத்தை யுடைய
அப்சரஸ் ஸூக்களை இந்திரனது நந்தவனத்தில் அனுபவிப்பதற்காகவும் சேவிக்கிறேன் அல்லேன்
ஹே ஹரே-அடியார்களின் துன்பத்தை போக்குமவனே
பாவே பாவே ஹ்ருதய பவநே பாவயேயம் பவந்தம் -பிறவி தோறும் ஹிருதயம் ஆகிற மாளிகையில் தேவரீரை
த்யானம் பண்ணைக் கடவேன் –
இப்பேறு பெறுகைக்காகத் தான் சேவிக்கிறேன் -என்று சேஷ பூர்ணம்
அஹம் – அடியேன், தவ – தேவரீருடைய, சரணயோ:த்வந்த்வம் – திருவடியிணையை,
அத்வந்த்வஹேதோ: – ஸுக துக்க நிவ்ருத்தியின் பொருட்டு, ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்.;
கும்பீபாகம் – கும்பீபாகமென்னும் பெயரையுடைய,
குரும் – பெருத்த [கொடிதான], நாரகம் – நரகத்தை, அபநேதும் அபி – போக்கடிப்பதற்காகவும்,
ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்;
ரம்யா: – அழகாயும், ம்ருது தநு லதா: – ஸுகுமாரமாய்க் கொடி போன்ற சரீரத்தை யுடையவர்களுமான,
ராமா: – பெண்களை [அப்ஸரஸ்ஸுக்களை], நந்தநே – (இந்திரனது) நந்தநவநத்தில்,
ரந்தும் அபி – அநுபவிப்பதற்காகவும், ந வந்தே – ஸேவிக்கிறேனல்லேன்;
(பின்னை எதுக்காக ஸேவிக்கிறீரென்றால்;),
ஹே ஹரே! – அடியார்களின் துயரத்தைப் போக்குமவனே!, பாவே பாவே – பிறவிதோறும்,
ஹ்ருதய பவநே – ஹ்ருதயமாகிற மாளிகையில், பவந்தம் – தேவரீரை, பாவயேயம் – த்யாநம் பண்ணக் கடவேன்.
(இப்பேறு பெறுகைக்காகத்தான் ஸேவிக்கிறேனென்று சேஷபூரணம்.)
—————-
நாஸ்தா தர்மே ந வஸூ நிசயே நைவ காமோ பபோகே –
யத்யத் பவ்யம் பவது பகவன் பூர்வ கர்மாநுரூபம்
ஏதத் பிரார்த்த்யம் மம பஹு மதம் ஜென்ம ஜன்மாந்தரே அபி
த்வத் பாதாம் போருஹ யுககதா நிஸ்ஸலா பக்தி ரஸ்து ––5-
நாஸ்தா தர்மே-ஆமுஷ்மிக சாதனமான தர்மத்தில் ஆசையில்லை
ந வஸூ நிசயே ஆஸ்தா–ஐஹிக சாதனமான பணக் குவியிலிலும் ஆசை இல்லை
நைவ காமோ பபோகே -விஷய போகத்திலும் ஆசையில்லை
தர்ம அர்த்த காமம் புருஷார்த்தங்கள் வேண்டாம் என்றவாறு
யத்யத் பவ்யம் பவது -யது யது உண்டாகக் கடவதோ அது உண்டாகட்டும்
பகவன்-ஷாட் குண்ய பூர்ணனான எம்பெருமானே
பூர்வ கர்மாநுரூபம் ஏதத் பிரார்த்த்யம்-இதுவே பிரார்த்திக்கத் தக்கதாய் இருக்கும்
மம-அடியேனுக்கு
பஹு மதம் ஜென்ம ஜன்மாந்தரே அபி-ஜென்ம ஜன்மாந்தரங்களிலும் -எனக்கு இஷ்டமாய்
த்வத் பாதாம் போருஹ யுககதா நிஸ்ஸலா பக்தி ரஸ்து -தேவரீருடைய திருவடித் தாமரை இணையில்
பதிந்து இருக்கிற பக்தியானது -அசையாமல் இருக்க வேண்டும்
என்னுடைய ஆவல் உன் திருவடியில் சேர்ந்ததாகி -ஜென்மங்கள் தோறும் நிலைத்து இருக்க வேணும் என்கை –
ஹே பகவந் – ஷாட்குண்ய பூர்ணனான எம்பெருமானே!, மம – அடியேனுக்கு,
தர்மே! – (ஆமுஷ்மிக ஸாதனமான) தர்மத்தில், ஆஸ்தா ந – ஆசையில்லை;
வஸுநிசயே – (ஐஹிகஸாதநமான) பணக்குவியலிலும், ஆஸ்தா ந – ஆசையில்லை;
காம உபபோகே – விஷயபோகத்திலும், ஆஸ்தா ந ஏவ – ஆசை இல்லவே யில்லை;
பூர்வகர்ம அநுரூபம் – ஊழ் வினைக்குத் தக்கபடி, யத் யத் பவ்யம் – எது எது உண்டாகக் கடவதோ,
(தத் – அது) பவது – உண்டாகட்டும்;
(ஆனால்) த்வத் பாத அம்போ ருஹ யுக கதா – தேவரீருடைய திருவடித் தாமரையிணையிற் பதிந்திருக்கிற,
பக்தி: – பக்தியானது, ஜந்மஜந்மாந்தரே அபி – ஜன்ம ஜன்மாந்தரங்களிலும், நிஶ்சலா – அசையாமல்,
அஸ்து – இருக்கவேண்டும்;
(இதி யத் – என்பது யாதொன்று) ஏதத் – இதுவே,
மம பஹுமதம் – எனக்கு இஷ்டமாய், ப்ரார்த்யம் -ப்ரார்த்திக்கத் தக்கதுமாயிருக்கிறது.
பிரகலாதனும் -எத்தனை ஜன்மம் எடுத்தாலும் வரம் கேட்காத வரம்
என்பிலாதா இழி பிறவி எய்தினும் நின் கண் பக்தி வேணும்
அப்படி நிலையான பக்தி இருந்தால் கர்மங்கள் தானாகவே தொலையும்
—————–
திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக பிரகாமம்
அவதீரிதா சாரதார விந்தவ் சரணவ் தே மரணே அபி சிந்தயாமி –
திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா -ஸ்வர்க்கத்திலாவது பூமியிலாவது -நரகத்திலாவது எனக்கு
நரகாந்தக பிரகாமம் -நரகா நாசனே உனது இஷ்டப்படி ஆகட்டும்
புண்ய பலனை அனுபவிக்க ஸ்வர்க்கமோ-பாப பலனை அனுபவிக்க நரகமோ –
இரண்டையும் அனுபவிக்கும் பூமியிலோ வாசம் கிடைக்கட்டும் -அதில் அடியேனுக்கு ஆனந்தமோ துக்கமோ இல்லை
அவதீரிதா சாரதார விந்தவ் -திரஸ்கரிக்கப் பட்ட சரத் கால-தாமரை யுடைய -சரத் கால தாமரையை விட மேம்பட்ட
சரணவ் தே மரணே அபி சிந்தயாமி -தேவரீருடைய திருவடிகளை -சகல கரணங்களும் ஓய்ந்து இருக்கும்
மரண அவஸ்தையிலும் சிந்திக்கக் கட வேன் –
ஹே நரக அந்தக – வாராய் நரகநாசனே!, மம – எனக்கு,
தீவி வா –ஸ்வர்க்கத்தி லாவது, புவி வா – பூமியிலாவது, நரகே வா – நரகத்திலாவது,
பரகாமம் – (உனது) இஷ்டப்படி, வாஸ: – வாஸமானது, அஸ்து – நேரட்டும்,
அவதீரிதசாரத அரவிந்தெள – திரஸ்கரிக்கப்பட்ட சரத் காலத் தாமரையை யுடைய
[சரத்காலத் தாமரையிற் காட்டிலும் மேற்பட்ட],
தே சரணெள – தேவரீருடைய திருவடிகளை,
மரணே அபி – (ஸகல கரணங்களும் ஓய்ந்திருக்கும்படியான) மரணகாலத்திலும்,
சிந்தயாமி – சிந்திக்கக் கடவேன்.
பாவி நீ என்று ஓன்று நீ சொல்லாய் பாவியேன் காண வந்தே
நரகமே ஸ்வர்கம் ஆகும் நாமங்கள் உடைய நம்பி.
———————
கிருஷ்ண த்வதீய பாத பங்கஜ பஞ்ஜ ராந்தம்
அத்யைவ மே விசது மாநச ராஜ ஹம்ஸ
பிராண பிரயாண ஸமயே கப வாத பித்தை
கண்டா வரோதநவி தவ் ஸ்மரணம் குதஸ்தே –7
கிருஷ்ண-கண்ண பிரானே
த்வதீய பாத பங்கஜ பஞ்ஜ ராந்தம்-தேவரீருடைய திருவடி தாமரை களாகிய கூட்டினுள்ளே
அத்யைவ மே விசது மாநச ராஜ ஹம்ஸ-என்னுடைய மனசான ராஜ அம்சமானது -இப்பொழுதே நுழையக் கடவது –
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் போலே
பிராண பிரயாண ஸமயே-உயிர் போகும் போது
கப வாத பித்தை -கோழை வாயு பித்தம் இவற்றால்
கண்டா வரோதநவி தவ் -கண்டமானது அடைபட்ட அளவிலே
ஸ்மரணம் குதஸ்தே ––தேவரீருடைய ஸ்மரணம் எப்படி வரும்
ஸ்திதே மனசி ஸூஸ்வஸ்தே சரீரே சதி யோ நர –தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபமஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரிய மாணாந்து காஷ்ட பாஷாணா ஸந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம்கதம்
கிருஷ்ண! – கண்ணபிரானே!, ப்ராண ப்ரயாண ஸமயே – உயிர்ப் போகும் போது,
கப வாத பித்தை: – கோழை, வாயு, பித்தம் இவற்றால்,
கண்டாவரோதந விதெள – கண்டமானது அடைபட்டவளவில், தே – தேவரீருடைய, ஸ்மரணம் – நினைவானது,
குத: – எப்படி உண்டாகும்?, (உண்டாகமாட்டாதாகையால்)
மே – என்னுடைய, மாநஸ ராஜ ஹம்ஸ: – மநஸ்ஸாகிற உயர்ந்த ஹம்ஸமானது,
த்வதீய பத பங்கஜ பஞ்சர அந்த: – தேவரீருடையதான திருவடித் தாமரைகளாகிற கூட்டினுள்ளே,
அத்ய ஏவ – இப்பொழுதே, விசது – நுழையக்கடவது.
அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன்
ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம்புக ராஜ ஹம்சம் மா முநிகளும் அருளி இருக்கிறார்
——————
சிந்தயாமி ஹரி மேவ சந்ததம் மந்த மந்த ஹசிதா நநாம் புஜம்
நந்த கோப தநயம் பராத்பரம் நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் —8-
சிந்தயாமி ஹரி மேவ சந்ததம் -பாபங்களை போக்குமவனாய் இருப்பவனை எப்பொழுதும் சிந்திக்கிறேன் –
த்யானம் செய்யக் கடவேன் -என்றவாறு
துக்க சாகரத்தில் ஆழ்ந்தவர்களும் கண்டு களிக்கும் படி
மந்த மந்த ஹசிதா நநாம் புஜம் –புன் முறுவல் செய்யும் தாமரை மலர் போன்ற திரு முகத்தை யுடையவனாய்
நந்த கோப தநயம் பராத்பரம் -நந்த கோபன் குமாரனான கண்ண பிரானையே
ஸுலப்யம் குணம் விளங்கும் படி கட்டவும் அடிக்கவும் எளியனாம் படி நின்றவனாய் –
பரத்வத்தில் வந்தால் ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயனுமாய்
நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் -நாரதர் முதலான முனிவர் கணங்களால் தொழப் பட்டவனாய்
மந்த மந்த ஹஸித ஆநந அம்புஜம் – புன் முறுவல் செய்கின்ற தாமரை மலர் போன்ற திரு முகத்தை யுடையனாய்,
நாரத ஆதி முநிப்ருந்த வந்திதம் – நாரதர் முதலிய முனிவர் கணங்களால் தொழப்பட்டவனாய்,
பராத் பரம் – உயர்ந்தவர்களிற் காட்டிலும் மேலான உயர்ந்தவனாய், ஹரிம் – பாவங்களைப் போக்குமவனாய்,
நந்தகோப தநயம் ஏவ – நந்தகோபன் குமாரனான கண்ணபிரானையே, ஸந்ததம் – எப்போதும், சிந்தயாமி – சிந்திக்கின்றேன்.
கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும் -வைத்த அஞ்சேல் என்ற கையும்–
கவித்த முடியும் -முகமும் முறுவலும் -ஆசன பத்மத்தில் அழுத்திய திரு அடிகளும்
குற்றம் கண்டு பயப் படாமல் இருக்க -காரியம் செய்ய ஸ்வாமித்வம்.
கண்டு பற்றுகைக்கு திருவடிகள்..பொன் அடியே அடைந்து –
—————
கர சரண ஸரோஜே காந்தி மந்நேத்ர மீ நே
ஸ்ரம முஷி புஜ வீசிவ்யாகுலே அகதா மார்க்கே
ஹரி ஸரஸி விகாஹ்யா பீய தேஜோ ஜெலவ்கம்
பவமரூ பரிசின்ன கேத மத்ய த்யாஜாமி–9-
கர சரண ஸரோஜே-திருக் கைகள் திருவடிகள் ஆகிற தாமரைகளை யுடையதாய் -கை வண்ணம் தாமரை அடியும் அஃதே
காந்தி மந்நேத்ர -மீ நே- அழகிய திருக் கண்கள் ஆகிற கயல்களை யுடையதாய்
ஸ்ரம முஷி -விடாயைத் தீர்க்குமதாய்
புஜ வீசிவ்யாகுலே -திருத் தோள்கள் ஆகிற அலைகளால் நிறைந்ததாய்
அகதா மார்க்கே-எம்பெருமான் ஆகிற தடாகத்தில்
விகாஹ்ய -குடைந்து நீராடி -க்ரீஷ்மே சீதமிவஹ் ரதம்–தயரதன் பெற்ற மரகத மணித் தடாகம் –
குளம் ஆழமான வழியை யுடைத்தாய் இருக்குமே -இவனும் கர்ம ஞான பக்தி பிரபத்தி கம்பீரமான உபாயமாக இருப்பான்
குளம் என்றால் தாமரை -மீன்கள் -அலைகள் உண்டே -நீர் நிரம்பி விடாய் தீர்க்கும் படி இருக்குமே
ஆபீய -பானம் பண்ணி
தேஜோ ஜெலவ்கம் -திருமேனியில் விளங்கும் தேஜஸ் ஆகிற ஜல சமூகத்தை
பவமரூ பரிசின்ன -சம்சாரம் ஆகிற பாலை வனத்தில் மிகவும் வருந்திக் கிடந்த அடியேன்
கேத மத்ய த்யாஜாமி -அந்த சம்சார துக்கத்தை இப்போது விடுகிறேன் -தாப த்ரயம் போக்கப் பெற்றேன்
கர சரண ஸரோஜே – திருக் கைகள் திருவடிகளாகிற தாமரைகளை யுடையதாய்,
காந்திமந் நேத்ரமீநே – அழகிய திருக் கண்களாகிற கயல்களை யுடையதாய்,
ச்ரமமுஷி – விடாயைத் தீர்க்குமதாய், புஜவீசிவ்யாகுலே – திருத்தோள்களாகிற அலைகளால் நிறைந்ததாய்,
அகாத மார்க்கே – மிகவும் ஆழமான, ஹரி ஸரஸி – எம்பெருமானாகிற தடாகத்தில், விகாஹ்ய – குடைந்து நீராடி,
தேஜோ ஜல ஓகம் – (திருமேனியில் விளங்குகின்ற) தேஜஸ்ஸாகிற ஜல ஸமூஹத்தை, ஆபீய – பாநம் பண்ணி,
பவ மரு பரிகிந்ந – ஸம்ஸாரமாகிற பாலை நிலத்திலே மிகவும் வருந்திக் கிடந்த அடியேன்,
கேதம் – அந்த ஸாம்ஸாரிக துக்கத்தை, அத்ய – இப்போது, த்யஜாமி – விடுகின்றேன்.
——————–
சரஸிஜ நயனே ச சங்க சக்ரே முரபிதி மா விரமஸ்வ சித்த ரந்தும்
ஸூக தரம பரம் நாஜாது ஜாநே ஹரி சரண ஸ்மரணாம் ருதேன துல்யம்–10-
சரஸிஜ நயனே-தாமரை போன்ற கண்களை யுடையவனாய்
ச சங்க சக்ரே-திரு வாழி திருச் சங்குகளை யுடையவனாய்
முரபிதி -முராசூரனைக் கொன்றவனான கண்ண பிரானிடத்து
மா விரமஸ்வ சித்த ரந்தும் -எனக்கு செல்வமான நெஞ்சே -க்ஷணமும் விட்டு ஒழியாமல் ரமிப்பதற்கு
ஸூக தரம பரம் நாஜாது ஜாநே -மிகவும் ஸூகமாய் இருப்பதான வேறு ஒன்றையும் அறிகின்றிலேன்
ஹரி சரண ஸ்மரணாம் ருதேன துல்யம் -எம்பெருமானது திருவடிகளை சிந்திக்கும் அம்ருதத்தோடு-
வலக்கை ஆழி இடக்கை சங்குடைய தாமரைக்கு கண்ணன் இடம் இடைவிடாத நெஞ்சை செலுத்துவதே
ஸ்வரூப அனுரூபமான இன்பம்
ஸ்வ சித்த – எனக்குச் செல்வமான நெஞ்சே!,
ஸரஸிஜ நயநே – தாமரை போன்ற கண்களையுடையனாய்,
ஸ சங்க சக்ரே – திருவாழி திருச்சங்குகளோடு கூடினவனாய்,
முரபிதி – முராஸுரனைக் கொன்றவனான கண்ணபிரானிடத்து,
ரந்தும் – ரமிப்பதற்கு,
மா விரம – க்ஷணமும் விட்டு ஒழியாதே;
ஹரி சரண ஸ்மரண அம்ருதேந – எம்பெருமானது திருவடிகளைச் சிந்திப்பதாகிற அம்ருதத்தோடு,
துல்யம் – ஒத்ததாய்,
ஸுகதரம் – மிகவும் ஸுக கரமாயிருப்பதான,
அபரம் – வேறொன்றையும்,
ஜாது – ஒருகாலும்,
ந ஜாநே – நான் அறிகின்றிலேன்.
அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே..
நெஞ்சே நல்லை நல்லை.. துஞ்சும் போது விடாய் கொண்டாய்..
சங்கோடு சக்கரம் பங்கய கண்ணன்/ வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி தாமரை கண்ணன்
நம்பியை -அச் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தியை-உம்பர் வானவர் ஆதி அம் ஜோதியை
எம்பிரானை–என் சொல்லி மறப்பனோ
ஐயப் பாடு அறுத்து தோன்றும் அழகன்- ஞானம் வளர்க்க திரு மேனி..
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் ஆசையும் வளர்க்கும்-
வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் லாவண்யம்-திரு குறுங்குடி சௌந்தர்யம்-
திரு நாகை அழகனார்- அச்சோ ஒருவர் அழகிய வா –
————————-
மாபீர் மந்த மநோ விசிந்த்ய பஹுதா யாமீஸ் சிரம் யாதநா-
நாமீ ந ப்ரபவந்தி பாப ரிபவஸ் ஸ்வாமீ நநு ஸ்ரீதர
ஆலஸ்யம் வ்யப நீய பக்தி ஸூலபம் த்யா யஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யாஸ நா பநோத நகரோ தாஸஸ்ய கிம் ந ஷம–11-
மாபீர் மந்த மநோ விசிந்த்ய பஹுதா யாமீஸ் சிரம் யாதநா-ஓ அற்பமான நெஞ்சே யமனுடைய தண்டனைகளை வெகு காலம்
பல சித்தமாக சிந்தித்து உனக்கு பயம் உண்டாக வேண்டா –
தே -உனக்கு / பீ -பயமானது / மா பூத் -உண்டாக வேண்டாம் -என்றவாறு
நாமீ ந ப்ரபவந்தி பாப ரிபவஸ் -இந்த பாபங்கள் ஆகிற சத்ருக்கள் நமக்கு செங்கோல் செலுத்துமவை அல்ல
ஸ்வாமீ நநு ஸ்ரீதர –பின்னையோ என்றால் திருமால் அன்றோ நமக்கு ஸ்வாமியாய் இருக்கிறார்
ஆலஸ்யம் வ்யப நீய -சோம்பலை தொலைத்து
பக்தி ஸூலபம் த்யா யஸ்வ நாராயணம் -பக்திக்கு ஸூலபனான ஸ்ரீ மன் நாராயணனை த்யானம் பண்ணு
பத்துடை அடியவர்க்கு எளியவன் அன்றோ
லோகஸ்ய வ்யாஸநா பநோத நகரோ -உலகத்துக்கு எல்லாம் துன்பத்தைப் போக்குகின்ற அவர்
தாஸஸ்ய கிம் ந ஷம-அவருக்கே அடிமைப் பட்டு இருக்கும் அடியேனுக்கு பாபத்தைப் போக்க மாட்டாதவரோ
அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் போன்றவற்றை மடி மாங்காய் இட்டு
லோகத்தார் துன்பம் போக்குபவன் அன்றோ
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று இசைந்து வந்து அடிமைப் பட்ட நம்மை ரஷியாது ஒழிவானோ
ஹே! மந்தமந:! – ஓ அற்பமான நெஞ்சே!,
யாமீ: – யமனுடையதான,
யாதநா: – தண்டனைகளை,
சிரம் – வெகுகாலம்,
பஹுத: – பலவிதமாக,
விசிந்த்ய – சிந்தித்து (உனக்கு),
பீ: மா(ஸ்து) – பயமுண்டாகவேண்டாம்;
அமீ – இந்த,
பாபரிபவ: – பாவங்களாகிற சத்ருக்கள் நமக்கு,
ந ப்ரபவந்தி – செங்கோல் செலுத்து மவையல்ல;
நநு – பின்னையோ வென்றால்,
ஸ்ரீ தர: – திருமால்,
நம்:ஸ்வாமி – நமக்கு ஸ்வாமி யாயிருக்கிறார்,
ஆலஸ்யம் – சோம்பலை,
வ்யபநீய – தொலைத்து,
பக்தி ஸுலபம் – பக்திக்கு எளியனான,
நாராயணம் – ஸ்ரீமந் நாராயணனை,
த்யாயஸ்வ -த்யாநம் பண்ணு;
லோகஸ்ய – உலகத்துக்கு எல்லாம்,
வ்யஸந அபநோதநகர: – துன்பத்தைப் போக்குகின்ற அவர்,
தாஸஸ்ய – அவர்க்கே அடிமைப்பட்டிருக்கும் எனக்கு,
ந க்ஷம: கிம் – (பாபத்தைப் போக்க) மாட்டாதவரோ?
——————
பவ ஜலதி கதா நாம் த்வந்த்வ வாத ஹதா நாம்
ஸூ தது ஹித்ரு களத்ர த்ராண பாரார்த்திதநாம்
விஷம விஷய தோ யே மஜ்ஜ தாமப் லவா நாம்
பவது சரண மேகோ விஷ்ணு போதோ நராணாம் –12-
பவ ஜலதி கதா நாம்-சம்சார சாகரத்தில் விழுந்தவர்களாயும்
த்வந்த்வ வாத ஹதா நாம் -ஸூக துக்கங்கள் ஆகிற பெரும் காற்றினால் அடி பட்டவர்களாயும்
ஸூ தது ஹித்ரு களத்ர த்ராண பாரார்த்திதநாம் -மகன் மகள் மனைவி இவர்களைக் காப்பாற்றுவதாகிற பாரத்தால் பீடிக்கப் பட்டவர்களாயும்
விஷம விஷய தோயே மஜ்ஜ தாம் -குரூரமான சப்தாதி விஷயங்கள் ஆகி-இப்படிப்பட்ட சம்சார சாகரம் கடக்க ஓடம் அற்றவர்களாயும்
பவது சரண மேகோ விஷ்ணு போதோ நராணாம் –மனிதர்களுக்கு விஷ்ணு ஆகிற ஓடம் ஒன்றே ரக்ஷகமாக ஆகக் கடவது –
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் –
பவ ஜலதி கதாநாம் – ஸம்ஸார ஸாகரத்தில் வீழ்ந்தவர்களாயும்,
த்வந்த்வ வாத ஆஹதாநாம் – ஸுக துக்கங்களாகிற பெருங்காற்றினால் அடிபட்டவர்களாயும்,
ஸுத-துஹித்ரு களத்ரத்ராண
பார-அர்த்திதாநாம் – மகன், மகள், மனைவி, இவர்களைக் காப்பாற்றுவதாகிற பாரத்தால் பீடிக்கப்பட்டவர்களாயும்,
விஷம விஷய தோயே -க்ரூரமான சப்தாதி விஷயங்களாகிற ஜலத்தில்,
மஜ்ஜதாம் – மூழ்கினவர்களாயும்,
அப்லவாநாம் – (இப்படிப்பட்ட ஸம்ஸார ஸாகரத்தைக் கடத்துதற்கு உரிய) ஓடமற்றவர்களாயுமிருக்கிற,
நாரணாம் – மனிதர்களுக்கு,
விஷ்ணு போத: ஏக: – விஷ்ணுவாகிற ஓடம் ஒன்றே,
சரணம் – ரக்ஷகமாக, பவது – ஆகக்கடவது.
———————–
பவ ஜலதிம் அகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம்
கதம் அஹம் இதி சேதோ மாஸ் மகா காதரத்வம்
ஸரஸி ஜத்ருசி தேவே தாவகீ பக்தி ரேகா
நரகபிதி நிஷண்ணா தாரவிஷ்யத் யவஸ்யம்–13-
பவ ஜலதிம் அகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம் -கதம் அஹம் இதி சேதோ–வாராய் மனமே -ஆழமானதும் ஸூய யத்னத்தால்
தாண்ட முடியாதுமான சம்சார சாகரத்தை நான் எப்படி தாண்டுவேன் –
மாஸ் மகா காதரத்வம் -என்று அஞ்சி இருக்கும் நிலையை அடையாமல் -அஞ்சாதே இருக்க -என்றபடி
ஸரஸி ஜத்ருசி தேவே தாவகீ -நிஷண்ணா–பக்தி ரேகா -தாமரை போன்ற திருக் கண்களை யுடைய எம்பெருமான்
இடத்தில் பற்றி இருக்கும் உன்னுடைய பக்தி ஒன்றே
நரகபிதி தாரவிஷ்யத் யவஸ்யம்-நரகாசூரனைக் கொன்றவன் அன்றோ -நிஸ் சம்சயமாக தாண்டி வைக்கும்-
ஹே சேத:! – வாராய் மனமே!,
அகாதம் – ஆழமானதும்,
துஸ்தரம் – தன் முயற்சியால் தாண்டக் கூடாததுமான,
பவ ஜலதிம் – ஸம்ஸார ஸாகரத்தை,
அஹம் – நான்,
கதம் – எப்படி,
நிஸ்தரேயம் – தாண்டுவேன்?,
இதி – என்று,
காதரத்வம் – அஞ்சியிருப்பதை,
மாஸ்ம கா: – அடையாதே; [அஞ்சாதே என்றபடி],
நரகபிதி – நரகாஸுரனைக் கொன்றவனும்,
ஸரஸிஜத்ருசி – தாமரை போன்ற திருக் கண்களை யுடையனுமான,
தேவே – எம்பெருமானிடத்தில்,
நிஷண்ணா – பற்றியிருக்கிற,
தாவகீ – உன்னுடையதான,
பக்தி: ஏகா – பக்தியொன்றே,
அவஶ்யம் – நிஸ் ஸம்சயமாக,
தாரயிஷ்யதி – தாண்டி வைக்கும்.
———————–
த்ருஷ்ணா தோயே மதன பவ நோத்தூத மோஹோர் மிமாலே
தாரா வர்த்தே தனய ஸஹஜ க்ராஹ சங்கா குலே ச
ஸம்சாராக்யே மஹதி ஜலதவ் மஜ்ஜதாம் நஸ்திரிதாமன்
பாதாம் போஜே வரத பவதோ பக்தி நாவம் ப்ரயச்ச–14-
த்ருஷ்ணா தோயே-ஆசை யாகிற ஜலத்தை யுடையதும்
மதன பவ நோத்தூத மோஹோர் மிமாலே-மதன பவன உத்தூத மோஹ ஊர்மி மாலே -மன்மதன் ஆகிற வாயுவினால்
கிளப்பட்ட மோஹம் ஆகிற அலைகளின் வரிசைகளை யுடையதும்
தாரா வர்த்தே –தார ஆவர்த்தே -மனைவி ஆகிற சுழிகளை யுடையதும்
தனய ஸஹஜ க்ராஹ சங்கா குலே ச -மக்கள் -உடன் பிறந்தவர்கள் -இவர்கள் ஆகிற
முதலைக் கூட்டங்களால் கலங்கியும் இருக்கிற
ஸம்சாராக்யே மஹதி ஜலதபெரிய கடலில்
மஜ்ஜதாம் நஸ்–மூழ்கிக் கிடக்கிற அடியோங்களுக்கு
த்ரி தாமன் –மூன்று இடங்களில் எழுந்து அருளி இருக்கிற
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் -அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே –
சர்வ வியாபகத்துவத்துக்கும் உப லக்ஷணம் –
வரத -ஹே வரதனே-வாராய்
பாதாம் போஜே– பவதோ பக்தி நாவம் ப்ரயச்ச -தேவரீருடைய திருவடித் தாமரையில் பக்தியாகிற ஓடத்தை தந்து அருள வேணும்
காம்பினார் திருவேங்கடப் பொருப்ப நின் காதலை அருள் எனக்கு -கலியன் –
பக்தி -பல பக்தியை சொன்னவாறு -சாதனா பக்தியை அன்று-
த்ரிதாமந் – மூன்று இடங்களில் எழுந்தருளியிருக்கிற,
ஹே வரத! – வாராய் வரதனே!,
த்ருஷ்ணா தோயே – ஆசையாகிற ஜலத்தை யுடையதும்,
மதந பவந உத்தூத மோஹ ஊர்மி மாலே – மந்மதனாகிற வாயுவினால் கிளப்பப்பட்ட மோஹமாகிற
அலைகளின் வரிசைகளை யுடையதும்,
தார ஆவர்த்தே – மனைவி யாகிற சுழிகளை யுடையதும்,
தநய ஸஹ ஜக்ராஹ ஸங்க ஆகுலே ச – மக்கள் உடன் பிறந்தவர்கள் இவர்களாகிற
முதலைக் கூட்டங்களால் கலங்கியுமிருக்கிற,
ஸம்ஸார ஆக்க்யே – ஸம்ஸார மென்கிற பெயரை யுடைய,
மஹதி – பெரிதான,
ஜலதெள – கடலில்,
மஜ்ஜதாம் ந: – மூழ்கிக் கிடக்கிற அடியோங்களுக்கு,
பவத: – தேவரீருடைய,
பாத அம்போஜே – திருவடித் தாமரையில்,
பக்திநாவம் – பக்தியாகிற ஓடத்தை,
ப்ரயச்ச – தந்தருள வேணும்.
———————-
மாத்ராக்ஷம் ஷீண புண்யான் ஷணமபி பவதோ பக்தி ஹீநாத் பதாப்ஜே
மாஸ் ரவ்ஷம் ஸ்ராவ்ய பந்தம் தவ சரிதம் அபாஸ்ய அந்யதாக்யா நஜாதம்
மாஸ் மார்ஷம் மாதவ த்வாமபி புவனபதே சேதஸா அபஹ் நுவாநான்
மா பூவம் த்வத் ச பர்யா வ்யதிகர ரஹிதோ ஜென்ம ஜன்மாந்தரேபி–15-
மாத்ராக்ஷம் -நான் கண்ணுற்று நோக்க மாட்டேன்
ஷீண புண்யான்-துர்பாக்கிய சாலிகளை
ஷணமபி பவதோ பக்தி ஹீநாத்- பதாப்ஜே-தேவரீருடைய திருவடித் தாமரைகளில் க்ஷண காலமும் பக்தி அற்றவர்களாக
மாஸ் ரவ்ஷம்-காத்து கொடுத்து கேட்க மாட்டேன்
ஸ்ராவ்ய பந்தம் -செவிக்கு இனிய சேர்க்கையை யுடைய
தவ சரிதம் அபாஸ்ய அந்யதாக்யா நஜாதம் -தேவரீருடைய சரிதங்களை விட்டு வேறான பிரபந்தங்களை –
சேதஸா மாஸ் மார்ஷம்–மனசால் -நினைக்க மாட்டேன்
மாதவ த்வாமபி -திருமாலே தேவரீரை
புவனபதே -வாராய் லோகாதிபதயே
அபஹ் நுவாநான் -திரஸ்கரிக்குமவர்களை
மா பூவம் த்வத் ச பர்யா வ்யதிகர ரஹிதோ ஜென்ம ஜன்மாந்தரேபி -ஜென்ம ஜன்மாந்தரங்களிலும் தேவரீருடைய
திருவாராதனம் இல்லாதவனாக இருக்க மாட்டேன் –
தம்முடைய திருட அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார்
குணம் இல்லை விக்ரஹம் இல்லை விபூதி இல்லை என்பார்களான பாவிகளை நெஞ்சாலும் நினைக்க மாட்டேன்
கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து எண்ணாத மானுடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே
இவ்வாறு இருக்குமாறு அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் –
ஹே புவந பதே! – வாராய் லோகாதிபதியே!,
பவத: – தேவரீருடைய,
பத அப்ஜே – திருவடித் தாமரையில்,
க்ஷணம் அபி – க்ஷண காலமும்,
பக்தி ஹீநாந் – பக்தியற்றவர் களான,
க்ஷீண புண்யாந் – தெளர்ப்பாக்யசாலிகளை,
மாத்ராக்ஷம் – நான் கண்ணுற்று நோக்க மாட்டேன்;
ச்ராவ்ய பந்தம் – செவிக்கு இனிய சேர்க்கையை யுடைய,
தவ சரிதம் – தேவரீருடைய சரித்திரத்தை,
அபாஸ்ய – விட்டு,
அந்யத் – வேறான,
ஆக்க்யாந ஜாதம் – பிரபந்தங்களை,
மாச்ரெளஷம் – காது கொடுத்துக் கேட்க மாட்டேன்;
ஹே மாதவ – திருமாலே!,
த்வாம் – தேவரீரை,
அபஹ்நுவாநாந் – திரஸ்கரிக்குமவர்களை,
சேதஸா – நெஞ்சால்,
மாஸ்மார்ஷம் – நினைக்க மாட்டேன்,
ஜன்ம ஜன்மாந்தரே அபி – ஜன்ம ஜன்மாந்தரங்களிலும்,
த்வத் ஸபர்யாவ்யதிகா ரஹித: – தேவரீருடைய திருவாராதன மில்லாதவனாக,
மாபூவம் – இருக்கமாட்டேன்.
———————–
ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் முரரிபும்-சேதோ பஜ ஸ்ரீ தரம்-
பாணித்வந்தவ ! சமர்ச்ச யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய !ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம்
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-மூர்த்தன் நமா தோஷஜம்–.16th-உயிரான ஸ்லோகம்-
ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் -வாராய் நாக்கே -கேசியைக் கொன்ற கண்ணபிரானையே ஸ்தோத்ரம் செய் –
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் ஈசன் -கேச பாசம் யுடையவன் –
முரரிபும்-சேதோ பஜ -வாராய் நெஞ்சே முராசூரனைக் கொன்ற கண்ணபிரானையே பற்று
ஸ்ரீ தரம்-பாணித்வந்தவ ! -சமர்ச்ச -இரண்டு கைகளாலும் திருமாலையே ஆராதியுங்கோள்
யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !-இரண்டு காதுகள் -அடியாரைக் கை விடாத எம்பெருமான் சரித்ரங்களையே கேளுங்கோள்
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய -இரண்டு கண்களே கண்ணபிரானையே சேவியுங்கோள்
ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம் –இரண்டு கால்களே எம்பெருமானுடைய சந்நிதியையே குறித்து போங்கோள் –
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-வாராய் மூக்கே ஸ்ரீ கிருஷ்ணன் திருவடித் தாமரைகளில் சாத்தின திருத் துழாய் கந்தத்தையே அனுபவி
மூர்த்தன் நம அதோஷஜம்-வாராய் தலையே எம்பெருமானையே வணங்கு-
ஹே ஜிஹ்வே! – வாராய் நாக்கே!,
கேசவம் – கேசியைக் கொன்ற கண்ணபிரானை,
கீர்த்தய – ஸ்தோத்ரம் செய்;
ஹே சேத: – வாராய் நெஞ்சே!,
முரரிபும் – முராஸுரனைக் கொன்ற கண்ணபிரானை,
பஜ – பற்று;
பாணித்வந்த்வ – இரண்டு கைகளே!,
ஸ்ரீதரம் – திருமாலை,
ஸமர்ச்சய – ஆராதியுங்கள்;
ச்ரோத்ரத்வய! – இரண்டு காதுகளே!,
அச்யுத கதா: – அடியாரைக் கைவிடாதவனான எம்பெருமானுடைய சரித்ரங்களை,
த்வம்ச்ருணு – கேளுங்கள்;
லோசநத்வய – இரண்டு கண்களே!,
க்ருஷ்ணம் – கண்ணபிரானை,
லோகய – ஸேவியுங்கள்;
அங்க்ரியுக்ம – இரண்டு கால்களே!,
ஹரே: – எம்பெருமானுடைய,
ஆலயம் – ஸந்நிதியைக் குறித்து,
கச்ச – போங்கள்;
ஹே க்ராண! – வாராய் மூக்கே!,
முகுந்த பாத துளஸீம் – ஸ்ரீக்ருஷ்ணனது திருவடிகளிற் சாத்திய திருத்துழாயை,
ஜிக்ர – அநுபவி;
ஹே மூர்த்தந்! – வாராய் தலையே!,
அதோக்ஷஜம் – எம்பெருமானை,
நம – வணங்கு.
கேளா செவிகள் செவி அல்ல/உள்ளாதார்உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே
வாசா யதீந்திர மனசா வபுஷா கூராதி நாதா -மா முனிகள்
சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் தேவ பிரானையே
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது -ஆண்டாள்.
———————————–
ஹே லோகாஸ் ஸ்ருணத ப்ரஸூதி மரண வ்யாதேஸ் சிகித்சாமி மாம்
யோகஜ் ஞாஸ் சமுதா ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாதய
அந்தரஜ்யோதி ரமேய மேகமம்ருதம் க்ருஷ்ணாக்ய மாபீ யதாம்
தத் பீதம் பரம ஒளஷதம் வித நுதே நிர்வாண மாத் யந்திகம் -17-
ஹே லோகாஸ் ப்ரஸூதி மரண வ்யாதேஸ் சிகித்சாமி மாம் -ஜனங்களே -பிறப்பி இறப்பு யாகிய வியாதிக்கு பரிஹாரமாக-
யோகஜ் ஞாஸ் சமுதா ஹரந்தி முநயோ யாஜ்ஞவல்க்யாதய-யோக முறையை அறிந்தவர்களான
யாஜ்ஞ வல்க்யர் முதலிய ரிஷிகள் யாதொன்றை கூறுகின்றார்களோ
இமாம் ஸ்ருணத -இந்த சிகித்சய்யை கேளுங்கோள்
அந்தரஜ்யோதி ரமேய மேகமம்ருதம் க்ருஷ்ணாக்ய மாபீ யதாம் -உள்ளே தேஜோ ராசியையும் -அளவிட முடியாததையும்
ஸ்ரீ கிருஷ்ணன் என்னும் பெயரை யுடையதாயும் உள்ள
அம்ருதம் ஏகம் ஆபீயதாம் -அம்ருதம் ஒன்றே உங்களால் பானம் பண்ணப் படட்டும்
தத் பீதம் பரம ஒளஷதம் வித நுதே நிர்வாண மாத் யந்திகம் – இந்த சிறந்த மருந்தானது பானம் பண்ணப் பட்டதாய்க் கொண்டு
சாஸ்வதமான ஸுக்யத்தை உண்டு பண்ணுகிறது –இதுவே பரம போக்யமான ஒளஷதம்
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதொரு -தேஜஸ் புஞ்சமாய் இருக்கும்
எழுமைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே -திருவாய்மொழி –
ஹே லோகா: – ஜநங்களே!,
யோகஜ்ஞா: – யோக முறையை அறிந்தவர்களான,
யாஜ்ஞவல்க்ய ஆதய: – யாஜ்ஞவல்க்யர் முதலிய,
முநய – ரிஷிகள்,
யாம் – யாதொன்றை,
ப்ரஸூதி மரண வ்யாதே: – பிறப்பு இறப்பாகிற வ்யாதிக்கு,
சிகித்ஸாம் – பரிஹாரமாக,
ஸமுதாஹரந்தி – கூறுகின்றார்களோ,
இமாம் – இந்த சிகித்ஸையை,
ச்ருணுத – கேளுங்கள்;
அந்தர்ஜ்யோதி: – உள்ளே தேஜோ ராசியாயும்,
அமேயம் – அளவிடக் கூடாததாயும்,
க்ருஷ்ண ஆக்க்யம் – ஸ்ரீக்ருஷ்ணனென்னும் பெயரை யுடையதாயுமுள்ள,
அம்ருதம் ஏகம் – அம்ருதமொன்றே,
ஆரியதாம் – (உங்களால்) பாநம் பண்ணப்படட்டும்;
தத் பரம ஒளஷதம் – அந்தச் சிறந்த மருந்தானது,
பீதம் ஸத் – பானம் பண்ணப் பட்டதாய்க் கொண்டு,
ஆத்யந்திகம் – சாச்வதமான,
நிர்வாணம் – ஸெளக்கியத்தை,
விதநுதே – உண்டு பண்ணுகிறது.
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்.
ஆரா அமுதே ..சீரார் திரு குடந்தை. தீரா வினைகள் தீர்ப்பான்..
கலியும் கெடும் கண்டு கொண்மின்..
விசாதி பகை .நின்று இவ் உலகில் கடிவான் ..
பிணி பசி மூப்பு துன்பம் ..களிப்பும் கவரும் அற்று பிணி மூப்பு இல்லா பிறப்பு அற்று
——————-
ஹே மர்த்த்யா பரமம் ஹிதம் ஸ்ருணத வோ வஹ்யாமி சங்ஷேபதே
சம்சார ஆர்ணவ மாபதூர்மி பஹூளம் சம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா
நாநாஜ்ஞான மபாஸ்ய சேதஸி நமோ நாராயணா யேத்யமும்
மந்த்ரம் ச பிரணவம் ப்ரணாம ஸஹிதம் ப்ரா வர்த்தயத்தவம் முஹு –18-
ஹே மர்த்த்யா-வாரீர் மநுஷ்யர்களே
பரமம் ஹிதம் ஸ்ருணத வோ வஹ்யாமி சங்ஷேபதே -உங்களுக்கு மேலான ஹிதத்தை சுருக்கமாக இதோ சொல்லப் போகிறேன் கேளுங்கோள்
சம்சார ஆர்ணவ மாபதூர்மி பஹூளம் -ஆபத்துக்கள் ஆகிற அலைகளால் மிகுந்த சம்சாரம் ஆகிற கடலினுள்ளே
சம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா -ஆழ அழுந்திக் கிடக்கிற
நாநாஜ்ஞான மபாஸ்ய-பல வித அஞ்ஞானங்களை விலக்கி
சேதஸி நமோ நாராயணா யேத்யமும்-மந்த்ரம் ச பிரணவம்-ஓங்காரத்தோடே கூடிய நமோ நாராயணாய என்கிற இது திரு மந்த்ரத்தை மனசிலே
ப்ரணாம ஸஹிதம் ப்ரா வர்த்தயத்தவம் முஹு –– அடிக்கடி வணக்கத்தோடு கூடிக் கொண்டு இருக்கும் படி அநுஸந்தியுங்கோள் –
அல்ப அஸ்திர விஷய போகங்களை விருப்புவதை விட்டு அஞ்ஞானத்தை தொலைத்து -எப்பொழுதும்
திரு அஷ்டாக்ஷரத்தை அனுசந்திப்பதே ஹிதம் -இத்தையே வ்ரதமாகக் கொள்ள வேணும் –
ஆபத் ஊர்மி பஹுளம் – ஆபத்துக்களாகிற அலைகளால் மிகுந்த,
ஸம்ஸார அர்ணவம் – ஸம்ஸாரமாகிற கடலினுள்ளே,
ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்திதா: – ஆழ அழுந்திக் கிடக்கிற,
ஹே மர்த்யா: – வாரீர் மனிதர்களே!,
வ: பரமம் ஹிதம் – உங்களுக்கு மேலான ஹிதத்தை,
ஸம்க்ஷேபத: – சுருக்கமாக,
வக்ஷ்யாமி – (இதோ) சொல்லப்போகிறேன்;
ச்ருணுத – கேளுங்கள்;
(என்னவென்றால்),
நாநா அஜ்ஞாநம் – பலவிதமான அஜ்ஞானங்களை,
அபாஸ்ய – விலக்கி;
ஸ ப்ரணவம் – ஓங்காரத்தோடு கூடிய,
“நமோ நாராயணாய” இதி அமும்மந்த்ரம் – ‘நமோ நாராயணாய’ என்கிற இத் திரு மந்த்ரத்தை,
சேதஸி – மனதில்,
முஹு: – அடிக்கடி,
ப்ரணாம ஸஹிதம் (யதாததா) – வணக்கத்தோடு கூடிக் கொண்டிருக்கும் படி,
ப்ராவர்த்தயத்வம் – அநுஸந்தியுங்கள்.
———————-
ப்ருத்வீ ரேணு ரணு பயாம்சி கணிகா பல்குஸ் புலிங்கோ அனல
தேஜோ நிஸ் வசனம் மருத் தநுதரம் ரந்தரம் ஸூ ஸூஷ்மம் நப
ஷூத்ரா ருத்ர பிதா மஹ ப்ரப்ருத்ய -கீடாஸ் சமஸ்தாஸ் ஸூ ரா
த்ருஷ்டே யத்ர ச தாவகோ விஜயதே பூமா வதூதாவதி–19
ப்ருத்வீ ரேணு ரணு -பூமியானது ஸூஷ்மமான துகளாகவும்
பயாம்சி கணிகா பல்குஸ் -ஜல தத்வமானது சிறிய திவலைகளாகவும்
புலிங்கோ அனல தேஜோ -தேஜஸ் தத்வமானது அதி ஷூத்தரமான நெருப்புப் பொறியாகவும்
நிஸ் வசனம் மருத் தநுதரம்-வாயு தத்வம் மிக அற்பமான மூச்சுக்கு காற்றாகவும்
ரந்தரம் ஸூ ஸூஷ்மம் நப -ஆகாச தத்வம் ஸூஷ்மமான த்வாரமாகவும்
ஷூத்ரா ருத்ர பிதா மஹ ப்ரப்ருத்ய -கீடாஸ் சமஸ்தாஸ் ஸூ ரா -சிவன் ப்ரஹ்மாதி தேவர்கள் எல்லாம் அற்பமான புழுக்களாகவும்
த்ருஷ்டே யத்ர ச தாவகோ விஜயதே பூமா வதூதாவதி -அப்படிப் பட்ட எல்லை இல்லாத யாதொரு உம்முடைய மஹிமையானது
மேன்மையுற்று விளங்குகிறது – ஆலஷ்யந்தே -தோன்றுகிறது என்ற கிரியை வருவித்து கொள்ள வேண்டும் –
யத்ர – யாதொரு மஹிமையானது,
த்ருஷ்டே ஸதி – காணப்பட்டவளவில்,
ப்ருத்வீ – பூமியானது,
அணு: -ஸ்வல்பமான,
ரேணு: – துகளாகவும்,
பயாம்ஸி – ஜல தத்வமானது,
பல்கு: கணிகா – சிறு திவலையாகவும்,
தேஜ: – தேஜஸ்த்தவமானது,
லகு: – அதிக்ஷூத்ரமான,
ஸ்புலிங்க: – நெருப்புப் பொறியாகவும்,
மருத் – வாயு தத்வமானது,
தநுதரம் – மிகவும் அற்பமான,
நிஶ்வஸநம் – மூச்சுக் காற்றாகவும்,
நப: – ஆகாச தத்துவமானது,
ஸு ஸூக்ஷ்மம் – மிகவும் ஸூக்ஷ்மமான,
ரந்த்ரம் – த்வாரகமாகவும்,
ருத்ர பீதாமஹ ப்ரப்ருதய: – சிவன், பிரமன் முதலிய,
ஸமஸ்தா: ஸுரா: – தேவர்களெல்லோரும்,
க்ஷுத்ரா: கீடா: – அற்பமான புழுக்களாகவும் (ஆலக்ஷ்யந்தே) – தோன்றுகிறார்களோ,
ஸ: – அப்படிப்பட்டதாய்,
அவதூத அவதி: – எல்லையில்லாத தாய்,
தாவக: – உம்முடையதான,
பூமா – மஹிமையானது,
விஜயதே – மேன்மையுற்று விளங்குகின்றது.
நளிர் மதி சடையனும்… யாவரும் அகப்பட ..ஓர் ஆல் இலை மாயனை ..ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் அகப்பட கரந்து
———————-
பத்தேன அஞ்சலினா நதேன சிரஸா-காத்ரைஸ் : சரோமோத்கமை :
கண்டே ந ச்வரகத் கதேந நயனே நோத் கீர்ண பாஷ்பாம்புனா!
நித்யம் தவச் சரணார விந்த யுகள த்யானாம்ருதா ச்வாதினாம்
அஸ்மாகம் சரசீருஹாஷா !சத்தம் சம்பத் யதாம் ஜீவிதம்…-20
பத்தேன அஞ்சலினா-சேர்க்கப் பட்ட அஞ்சலி முத்ரையாலும்
நதேன சிரஸா-வணங்கிய தலையினாலும்
காத்ரைஸ் : சரோமோத்கமை :-மயிர்க் கூச்சு எறிதலோடு கூடிய அவயவங்களினாலும்
கண்டே ந ச்வரகத் கதேந-தழு தழுத்த ஸ்வரத்தோடு கூடிய கண்டத்தினாலும்
நயனே நோத் கீர்ண பாஷ்பாம்புனா!-சொரிகிற கண்ணீரை யுடைய நேத்ரத்தினாலும்
நித்யம் தவச் சரணார விந்த யுகள த்யானாம்ருதா ச்வாதினாம்-எப்பொழுதும் தேவரீருடைய இரண்டு திருவடித் தாமரைகள் ஆகிற
சிந்திப்பதாகிற அமுதத்தை அருந்துகின்ற
சரசீருஹாஷா !–தாமரை போன்ற திருக் கண்களை யுடைய பெருமானே
அஸ்மாகம் சத்தம் சம்பத் யதாம் ஜீவிதம்.–அடியோங்களுக்கு ஜீவனமானது எக்காலத்திலும் குறையற்று இருக்க வேண்டும் –
உண்ணா நாள் பசி யாவது ஓன்று இல்லை -இச் சிந்தனையே அம்ருத பானம்
காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் மேலும் எழா மயிர் கூச்சம் அற என தோள்களும் வீழ் ஒழியா
தாழ்ச்சி மாற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே –என்று வேண்டினார் நம்மாழ்வாரும் –
இரும்பு போல் வலிய நெஞ்சம் உருகும் வண்ணம் அவன் நீர்மை
அனைத்தும் சோறும் நீரும் வெற்றிலையே -என்றே என்றே கண்ணில் நீர் மல்கி ..தன் ஜீவனத்தை தேடி போனால்..
என் ஜீவனத்தை எடுத்து கொண்டு போக வேண்டுமோ ..அவளை பார்த்து கொண்டு இருப்பதே இவள் ஜீவனம்..
பெருமாளே என்று இருக்கும் அடியார் உடன் இருப்பதே ஜீவனம் என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் ஏற்றம் அறிந்து
உகந்து இருக்கையே ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்
ஹே ஸரஸீருஹாக்ஷ! – தாமரை போன்ற திருக் கண்களையுடைய பெருமானே!,
பத்தோ – சேர்க்கப்பட்ட,
அஞ்சலிநா – அஞ்சலி முத்ரையாலும்,
நதேந – வணங்கிய,
சிரஸா – தலையினாலும்,
ஸரோம உத்கமை: – மயிற்கூச்செறிதலோடு கூடிய,
காத்ரை: – அவயவங்களினாலும்,
ஸ்வரகத்கதேந – தழுதழுத்த ஸ்வரத்தோடு கூடிய,
கண்டேந – கண்டத்தினாலும்,
உத்கீர்ண பாஷ்ப அம்புநா – சொரிகிற கண்ணீரையுடைய,
நயநேந – நேத்திரத்தினாலும்,
நித்யம் – எப்போதும்,
த்வத் சரண அரவிந்த யுகளத்யாந அம்ருத ஆஸ்வாதிநாம் – தேவரீருடைய இரண்டு திருவடித் தாமரைகளைச்
சிந்திப்பதாகிற அமுதத்தை அருந்துகின்ற,
அஸ்மாகம் – அடியோங்களுக்கு,
ஜீவிதம் – ஜீவநமானது,
ஸததம் – எக்காலத்திலும்,
ஸம்பத்யதாம் – குறையற்றிருக்க வேண்டும்.
———————-
ஹே கோபாலக! ஹே க்ருபா ஜலநிதே! ஹே சிந்து கன்யாபதே!
ஹே கம்சாந்தக! ஹே கஜேந்திர கருணா!பாரீண ஹே மாதவ!
ஹே ராமானுஜ! ஹே ஜகத்ரய குரோ!ஹே புண்டரீகாஷா! மாம்
ஹே கோபி ஜன நாத! பாலய பரம் ஜானாமி நத்வாம் வினா–21..
ஹே கோபாலக! -ஆ நிரை காத்து அருளினவனே -குன்று எடுத்து கோ நிரை காத்து அருளினவனே –
ஹே க்ருபா ஜலநிதே!-கருணைக் கடலே
ஹே சிந்து கன்யாபதே!-திருப் பாற் கடல் திரு மகளான பெரிய பிராட்டியாருக்கு கணவனே
ஹே கம்சாந்தக! -கொடிய கம்சனை ஒழித்தவனே
ஹே கஜேந்திர கருணா!பாரீண -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அருளை பொழிய வல்லவனே
ஹே மாதவ!-ஸ்ரீ யபதியே –ஹே சிந்து கன்யாபதே-போலே -திரு நாம சங்கீர்த்தனம் விவஷிதம் என்பதால் புனர் யுக்தி தோஷம் வாராது –
ஹே ராமானுஜா– தம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவனே
ஹே ஜகத்ரய குரோ! -மூ உலகுகட்க்கும்-அனைத்து -உலகுகட்க்கும் – தலைவனே
ஹே புண்டரீகாஷா! -தாமரைக் கண்ணனே
ஹே கோபி ஜன நாத! -இடைச்சிகளுக்கு இறைவனே
மாம்- பாலய பரம் ஜானாமி நத்வாம் வினா–அடியேனை ரஷித்து அருள வேணும் -.
உன்னைத் தவிர வேறு ஒரு புகல் அறிகிறேன் அல்லேன்
ஹே கோபாலக! – ஆநிரை காத்தவனே!,
ஹே க்ருபாஜலநிதே! – கருணைக்கடலே!,
ஹே ஸிந்து கந்யாபதே! – பாற்கடல் மகளான பிராட்டியின் கணவனே!,
ஹே கம்ஸ அந்தக! – கம்ஸனை யொழித்தவனே!,
ஹே கஜேந்த்ர கருணாபாரீண! – கஜேந்திராழ்வானுக்கு அருள் புரிய வல்லவனே!,
ஹே மாதவ! – மாதவனே!,
ஹே ராமாநுஜ – பலராமானுக்குப் பின் பிறந்தவனே!,
ஹே ஜகத்த்ரயகுரோ! – மூவுலகங்கட்கும் தலைவனே!,
ஹே புண்டரீகாக்ஷ! – தாமரைக் கண்ணனே!,
ஹே கோபீஜந நாத! – இடைச்சியர்க்கு இறைவனே!,
மாம் – அடியேனை,
பாலய – ரக்ஷித்தருள வேணும்;
த்வாம் விநா – உன்னைத் தவிர,
பரம் – வேறொரு புகலை,
ந ஜாநாமி – அறிகிறேனில்லை.
அதிகாரம் ஆசை மட்டுமே.. ஆசை உடையோர்க்கு எல்லாம்.. பேசி வரம்பு அறுத்தார்..
அதிகாரம் வேறு ஒன்றும் இல்லாதது தான் அதிகாரம்..
ஹே ராமானுஜ !ஜகதாச்சர்யாராய் சகாயமாய் கொண்டாயே -பல ராமனுக்கு தம்பி ஆதிசேஷனே சகாயம்..
அண்ணல் இராமனுசன் வந்து தோன்றிய அப் பொழுதே நாரணர்க்கு ஆனார்களே..
அநந்ய கதித்வம் வெளி இட்ட ஸ்லோகம்.. பதிகம் முழுவதும் பெருமாள் திரு மொழியில் இவரே அருளியது போல
தரு துயரம்-குழவி அது போல் இருந்தேனே ..
கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல்..
மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்.
——————–
இவனை மணி மந்த்ரம் மருந்து மூன்றும் மூன்று ஸ்லோகங்களால் அருளுகிறார்-
பக்த அபாய புஜங்க கருட மணி:-த்ரை லோக்ய ரஷா மணி:
கோபீ லோசன சாதக அம்புத மணி:சௌந்தர்யம் முத்ரா மணி:
ய: காந்தா மணி ருக்மிணீ கனகுச-துவந்த்வைக பூஷாமணி:
ஸ்ரேயோ தேவசிகா மணிர் திசதுனோ-கோபால சூடாமணி–22-
பக்த அபாய புஜங்க கருட மணி:-அடியார்களின் ஆபத்துக்கள் ஆகிற சர்ப்பத்துக்கு கருட மணியாயும்
த்ரை லோக்ய ரஷா மணி:-மூ உலகுகட்க்கும் -எல்லா உலகுகட்க்கும் ரக்ஷனார்த்த மணியாயும்
கோபீ லோசன சாதக அம்புத மணி:-ஆய்ச்சிகளின் கண்கள் ஆகிற சாதகப் பறவைகளுக்கு மேக ரத்னமாயும்
சௌந்தர்யம் முத்ரா மணி:-ஸுந்தர்யத்துக்கு முத்ரா மணியாயும் -அழகு எல்லாம் திரட்டி முத்திரை இட்ட பரம ஸூந்தரானாயும்
ய: காந்தா மணி ருக்மிணீ கனகுச-துவந்த்வைக பூஷாமணி:-மாதர்க்களுக்குள் சிறந்த ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டியின் நெருங்கிய
இரண்டு ஸ்தனங்களுக்கு முக்கியமான அலங்கார மணியாயும்
தேவசிகா மணிர்-தேவர்களுக்கு ஸீரோ பூஷணமான மணியாயும்
கோபால சூடாமணி-இடக்கை வலக்கை அறியாத -இடையர்களுக்குத் தலைவராயும் இருப்பவர்
ஸ்ரேயோ திசதுனோ-யாவர் ஒருவரோ அந்த ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு நன்மையை அருள வேணும்
பக்த அபாய புஜங்க காரூடமணி: – அடியார்களின் ஆபத்துக்களாகிற ஸர்ப்பத்துக்கு கருடமணியாயும்,
த்ரைலோக்ய ரக்ஷாமணி: மூவுலகங்கட்கும் ரக்ஷணார்த்தமான மணியாயும்,
கோபீ லோசநசாதக அம்புதமணி: – ஆய்ச்சிகளின் கண்களாகிற சாதகப் பறவைகளுக்கு மேக ரத்நமாயும்,
ஸெளந்தர்ய முத்ராமணி: – ஸெளந்தர்யத்துக்கு முத்ராமணியாயும்,
காந்தாமணி ருக்மணீ கநகுசத்வந்த்வ ஏக பூஷாமணி: – மாதர்களுக்குள் சிறந்தவளான ருக்மணிப் பிராட்டியின் நெருங்கிய
இரண்டு ஸ்தநங்களுக்கு முக்கியமான அலங்கார மணியாயும்,
தேவ சிகாமணி – தேவர்களுக்குச் சிரோபூஷணமான மணியாயும்,
கோபால சூடாமணி: – இடையர்களுக்குத் தலைவராயுமிருப்பவர்,
ய: – யாவரொருவரோ,
(ஸ:) – அந்த ஸ்ரீக்ருஷ்ணன்,
ந: – நமக்கு,
ச்ரேய: – நன்மையை,
திசது – அருளவேணும்.
முன் எனக்கு என்றார் இப் பொழுது கூட்டமாக –
கோபால சூடா மணி எங்கள் அனைவருக்கும் கொடுக்கட்டும்
எந்தாய் சிந்தா மணியே வந்து நின்றாய் மன்னி நின்றாய்
மாலே மணி வண்ணா -ஆண்டாள் இத்தால் அருளினாள்- நீரோட்டம் தெரியும் மணிக்குள் -கருணையே
விஸ் லேஷம் பொறுக்க முடியாது முந்தானையில் வைத்து ஆளலாம் படி இவன்-
————————
அடுத்த ஸ்லோகத்தால் மந்த்ரமாக அருளுகிறார்-வாக்கை அழைத்து சொல்கிறார் அடுத்து மனசுக்கு…
அமுதத்திலும் இனியன் –ஜன்ம பலனுக்கு கிருஷ்ண மந்த்ரம் ..பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம்-
சத்ருஸ் சேதைக மந்த்ரம் சகலம் உபநிஷத் வாக்ய சம் பூஜ்ய மந்த்ரம்
சம்சார உத்தார மந்த்ரம் சமுசித-தமஸ் சங்க நிர்யாண மந்த்ரம்
சர்வைஸ் ஐஸ்வர்ய ஏக மந்த்ரம் வ்யசன புஜக-சந்தஷ்ட சந்த்ராண மந்த்ரம்
ஜிக்வே ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம் ஜப ஜப-சத்தம் ஜன்ம சாபல்ய மந்த்ரம் —-23-
சத்ருஸ் சேதைக மந்த்ரம் -சத்ருக்களின் நாசத்துக்கு ஒரே மந்திரமாய்
உபநிஷத் வாக்ய சம் பூஜ்ய மந்த்ரம்-வைதிக வாக்யங்களால் மிகவும் பூஜ்யமாகச் சொல்லப் பட்ட மத்ரமுமாய்
சம்சார உத்தார மந்த்ரம்-சம்சாரத்தில் நின்றும் கரை ஏற்ற வல்ல மந்த்ரமுமாய்
சமுசித-தமஸ் சங்க நிர்யாண மந்த்ரம்-மிகவும் வளர்ந்து இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்க வல்ல மந்த்ரமுமாய்
சர்வைஸ் ஐஸ்வர்ய ஏக மந்த்ரம்-சர்வவித ஐஸ்வர்யங்களையும் கொடுக்க வல்ல முக்கிய மந்த்ரமுமாய்
வ்யசன புஜக-சந்தஷ்ட சந்த்ராண மந்த்ரம்-துன்பங்கள் ஆகிற சர்ப்பங்களால் கடிக்கப் பட்டவர்களைக் காக்கும் மந்தரமுமாய்
ஜன்ம சாபல்ய மந்த்ரம் –ஜன்மத்துக்கு பயன் தர வல்ல மந்த்ரமுமாய்
சகலம் ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம்–ஸமஸ்தமான ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தையும்
ஹே ஜிக்வே ஜப ஜப-சத்தம்–வாராய் நாக்கே எப்போதும் இடை விடாமல் ஜபம் பண்ணுவாய் -என்று தம் திரு நாவுக்கு உபதேசிக்கிறார் –
ஶத்ருச் சேத ஏக மந்த்ரம் – சத்ருக்களின் நாசத்திற்கு மந்த்ரமாய்,
உபநிஷத் வாக்ய ஸம்பூஜ்ய மந்த்ரம் – வைதிக வாக்கியங்களால் மிகவும் பூஜ்யமாகச் சொல்லப்பட்ட மந்த்ரமாய்,
ஸர்வ ஐச்வர்ய ஏக மந்த்ரம் – துன்பங்களாகிற ஸர்ப்பத்தினால் கடிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் மந்த்ரமாய்,
ஸம்ஸார உத்கார மந்த்ரம் – ஸம்ஸாரத்தில் நின்றும் கரையேற்ற வல்ல மந்த்ரமாய்,
ஸமுபசிததமஸ் ஸங்க நிர்யாண மந்த்ரம் – மிகவும் வளர்ந்திருக்கிற அஜ்ஞாந விருளைப் போக்க வல்ல மந்த்ரமாய்,
ஜந்ம ஸாபல்ய மந்த்ரம் – ஜந்மத்திற்குப் பயன் தரவல்ல மந்த்ரமாயிருக்கிற,
ஸகலம் ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரம் – ஸமஸ்தமான ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரத்தையும்,
ஹே ஜிஹ்வே – வாராய் நாக்கே,
ஸததம் – எப்போதும்,
ஜப ஜப – இடைவிடாமல் ஜபம் பண்ணு.
——————
வ்யாமோஹ பிரசம ஒளஷதம் முநிமனோ-வ்ருத்தி பிரவ்ருத்தி ஒளஷதம்
தைத்யேந்திர ஆர்த்தி கர ஒளஷதம் த்ரி ஜெகதாம் சஞ்சீவன ஏக ஒளஷதம்
பக்தாத்யந்த ஹித ஒளஷதம் பவபய பிரத்வம்சந ஏக ஒளஷதம்
ஸ்ரயே ப்ராப்தி கர ஒளஷதம் பிப மன ஸ்ரீ கிருஷ்ண திவ்ய ஒளஷதம் –24-
வ்யாமோஹ பிரசம ஒளஷதம்-விஷயாந்தரங்களில் உள்ள மோஹத்தை போக்க வல்ல மருந்தாயும்
முநிமனோ-வ்ருத்தி பிரவ்ருத்தி ஒளஷதம் -முனிவர்கள் மனசை தன்னிடத்தில் செலுத்திக் கொள்ள வல்ல மருந்தாயும்
தைத்யேந்திர ஆர்த்தி கர ஒளஷதம் -அசுரர்களில் தலைவனான கால நேமி முதலானவர்களை தீராத துன்பத்தை தரும் மருந்தாயும்
த்ரி ஜெகதாம் சஞ்சீவன ஏக ஒளஷதம் -மூ உலகோர்க்கும் -எல்லா உலகோர்க்கும் -உஜ்ஜீவனத்துக்கு உரிய முக்கிய மருந்தாயும் –
பக்தாத்யந்த ஹித ஒளஷதம்-– அடியவர்களுக்கு மிகவும் ஹிதத்தை செய்யும் மருந்தாயும் –
பவபய பிரத்வம்சந ஏக ஒளஷதம் -சம்சார பயத்தை போக்குவதில் முக்கிய மருந்தாயும்
ஸ்ரயே ப்ராப்தி கர ஒளஷதம் -நன்மையை அடைவிக்கும் மருந்தாயும் உள்ள –
அடியார் குழாங்களை உடன் கூடுவதாகிய நன்மையைப் பயக்கும் மருந்து என்றபடி
ஸ்ரீ கிருஷ்ண திவ்ய ஒளஷதம் —ஸ்ரீ கண்ணபிரான் ஆகிய அருமையான மருந்தை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு –
ஹே மன -வாராய் மனசே
பிப -உட் கொள்ளாய் -தம் திரு உள்ளத்தைக் குறித்து உபதேசிக்கிறார் –
கண்ணபிரானை சேவிக்க எல்லா வித நன்மைகளும் மல்கித் தீமைகள் எல்லாம் தொலையும் என்றபடி –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கே ..மருந்தும் விருந்தும் அவனே தான்.
ஹே மந: – வாராய் மனதே!,
வ்யாமோஹ ப்ரசம ஒளஷகம் – (விஷயாந்தரங்களிலுள்ள) மோஹத்தைப் போக்க வல்ல மருந்தாயும்,
முநி மநோ வ்ருத்தி ப்ரவ்ருத்தி ஒளஷதம் – முனிவர்களின் மனதைத் தன்னிடத்திற் செலுத்திக் கொள்ளவல்ல மருந்தாயும்,
தைத்யேந்த்ர ஆர்த்தி கர ஒளஷதம் – அஸுரர்களில் தலைவரான காலநேமி முதலியவர்களுக்குத் தீராத துன்பத்தைத் தரும் மருந்தாயும்,
த்ரி ஜகதாம் – மூவுலகத்தவர்க்கும்,
ஸஞ்சீவந ஏந ஒளஷதம் – உஜ்ஜீவனத்துக்குரிய முக்கியமான மருந்தாயும்,
பக்த அத்யந்த ஹித ஒளஷதம் – அடியவர்கட்கு மிகவும் ஹிதத்தைச் செய்கிற ஒளஷதமாயும்,
பவ பயப்ரத் வம்ஸந ஏக ஒளஷதம் – ஸம்ஸார பயத்தைப் போக்குவதில் முக்கியமான மருந்தாயும்,
ச்ரேய:ப்ராப்திகா
ஒளஷதம் – கண்ண பிரானாகிற அருமையான மருந்தை,
பிப – உட்கொள்ளாய்.
——————
ஆம்னாய அப்யாசனாநி அரண்ய ருதிதம்–வேத வ்ரதான் யன்வஹம்
மேதச் சேத பலானி பூர்த்த விதயஸ்-சர்வே ஹூதம் பஸ்மநி
தீர்த்தாநா மவகாஹனானிச-கஜஸ்நா னம் விநாயத்பத
த்வன் த்வாம் போருஹ சம்ச்ம்ருதீர்-விஜயதே தேவஸ் ஸ நாராயணா–25-
விநாயத்பத த்வன் த்வாம் போருஹ சம்ச்ம்ருதீர்–யாவனொரு ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடித் தாமரை இணைகளில் சிந்தனை இல்லாமல் போனால் –
ஆம்னாய அப்யாசனாநி -வேத அத்யயனங்கள்
அரண்ய ருதிதம்–காட்டில் அழுவது போல் வீணோ -காப்பார் இல்லாத இடத்தில் அழுவது போலே என்றவாறு
வேத வ்ரதான் யன்வஹம்-நாள் தோறும் செய்கிற வேதங்களில் சொன்ன உபவாசம் முதலிய விரதங்கள்
மேதச் சேத பலானி -மாம்ச சோஷணத்தையே பலனாக உடையனவோ
பூர்த்த விதயஸ்–சர்வே -குளம் வெட்டுதல் -சத்திரம் கட்டுதல் முதலிய தர்ம கார்யங்கள் யாவும்
ஹூதம் பஸ்மநி -சாம்பலில் செய்த ஹோமம் போல் வியர்த்தமோ
தீர்த்தாநா மவகாஹனானிச-கஜஸ்நா னம் -கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களில் நீராடுவதும் யானை முழுகுவது போல் வியர்த்தமோ
நாராயணன் ஸ்மரணம் இல்லாமல் செய்யப் பட்டால் எல்லாமே பழுதாம் –
விஜயதே தேவஸ் ஸ நாராயணா-அப்படிப்பட்ட தேவனான நாராயணன் அனைவரிலும் மேம்பட்டு விளங்குகிறார்
திரு ஆராதனம் -கர்ம பாகம் ஞான பாகம் இரண்டிலும் ஞான பாகம் உயர்ந்தது அவனுக்கு அடிமை என்ற உணர்வு.
யத்பதத்வந்த்வ அம்போருஹ ஸம்ஸ்ருதீ: விநா – யாவனொரு ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவடித் தாமரை யிணைகளின்
சிந்தனையில்லாமற் போனால்,
ஆம்நாய அப்யஸநாநி – வேதாத்யயநங்கள்,
அரண்ய ருதிதம் – காட்டில் அழுதது போல் வீணோ;
அந்வஹம் – நாள்தோறும் (செய்கிற),
வேத வ்ரதாநி – வேதத்திற் சொன்ன (உபவாஸம் முதலிய) வ்ரதங்கள்,
மேதச் சேத பலாநி – மாம்ஸ சோஷணத்தையே பலனாக உடையனவோ,
ஸர்வே பூர்த்த வீதய: – குளம் வெட்டுதல், சத்திரம் கட்டுதல் முதலிய தர்ம காரியங்கள் யாவும்,
பஸ்மநி ஹுதம் – சாம்பலில் செய்த ஹோமம் போல் வ்யர்த்தமோ,
தீர்த்தாநாம் – கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களில்,
அவகாஹநாநி ச – நீராடுவதும்,
கஜ ஸ்நாநம் – யானை முழுகுவதுபோல் வ்யர்த்தமோ,
ஸ: தேவ: நாராயண: – அப்படிப்பட்ட தேவனான நாராயணன்,
விஜயதே – அனைவரினும் மேம்பட்டு விளங்குகின்றார்.
ஓதி உரு என்னும் ஆம் பயன் என் கொல்
கங்கை உள்ளே மீன் சம்பந்தம் இருந்தாலும் இழந் தது .
மனு- ஞானம் இல்லாதவன் தீர்த்தம் ஆட வேண்டாம்.. ஞானம் உள்ளவனும் தீர்த்தம் ஆட வேண்டாம்-
————————
திரு நாம வைபவம் அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்-
ஸ்ரீ மன் நாம ப்ரோச்ய நாராயண ஆக்க்யம்
கே ந ப்ராபுர் வாஞ்சி தம் பாபி நோபி
ஹா ந பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேன ப்ராப்தம் கர்ப்ப வாஸாதி துக்கம்–26-
ஸ்ரீ மன் நாம ப்ரோச்ய நாராயண ஆக்க்யம்–ஸ்ரீ மன் நாராயணன் என்கிற திரு மாலின் திரு நாமத்தைச் சொல்லி
கே ந ப்ராபுர் வாஞ்சி தம் பாபி நோபி-எந்த பாபம் செய்தவர்களானாலும் தம் இஷ்டத்தை அடைய வில்லை
ஹா ந பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மின்-நம் வாக்கானது முன்னே அந்த நாராயண நாம உச்சாரணத்தில் செல்ல வில்லை
தேன ப்ராப்தம் கர்ப்ப வாஸாதி துக்கம் .—-அந்தோ அதனால் கர்ப்ப வாசம் முதலான துக்கம் நேர்ந்தது
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்-மாறில் போர் செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும்
வந்து உன்னை எய்தலாகும் என்பர் -திருச் சந்தவிருத்தம் –
மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால் கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் -திருமாலை –
நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
மூவாத மாக்கதிக் கட் செல்லும் வகை யுண்டே -என்னொருவர் தீக்கதி கட்ச் செல்லும் திறம் –
பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் இருக்கிறோம்-
நமனும் முத்கலனும் பேச -நரகமே ஸ்வர்கம் ஆகும்
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து ..அதற்கே கவல்கின்றேனே ..
நா வாயில் உண்டே . மா வழி செல்லும் வழி உண்டே தீ கதி கண் செல்கின்றார்
மாதவன் பேர் சொன்னால் ….தீது ஒன்றும் சாரா ..
திரு மறு மார்பன் நின்னை சிந்தையுள் திகழ வைத்து மருவிய மனத்தார் ஆகில் வினையர் யேலும் அரு வினை பயனை உய்யார் ..
கெடும் இடர் ஆயின எல்லாம் கேசவா என்ன ..
நின் நாமம் கற்ற ஆவலிப்பு உடமை கண்ட.
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கா என்று அழைப்பர் ஆகில் .பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றோ..
நாராயண ஆக்க்யம் – நாராயணென்கிற,
ஸ்ரீமந் நாம – திருமாலின் திருநாமத்தை,
ப்ரோச்ய – சொல்லி,
கே பாபிந: அபி – எந்த பாபிகளானவர்களுந்தான்,
வாஞ்சிதம் – இஷ்டத்தை,
ந ப்ராபு: – அடையவில்லை;
ந: வாக் – நம்முடைய வாக்கானது,
பூர்வம் – முன்னே,
தஸ்மிந் நப்ரவ்ருத்தா – அந்த நாராயண நாமோச்சாரணத்தில் செல்ல வில்லை;
தேந – அதனால்,
கர்ப்ப வாஸ ஆதி து:க்கம் – கர்ப்பவாஸம் முதலான துக்கமானது,
ஹா! ப்ராப்தம் – அந்தோ! நேர்ந்தது.
—————–
மஜ்ஜன்மன பலமிதம் மதுகைடபாரே
மத் ப்ரார்த்த நீய மத நுக்ரஹ ஏஷ ஏவ
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய
ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மர லோக நாத.….27
மஜ்ஜன்மன பலமிதம் மதுகைடபாரே-மது கைடபர்களை நிரசித்தவனே -அடியேனுடைய ஜன்மத்துக்கு இதுவே பலம் –
மத் ப்ரார்த்த நீய மத நுக்ரஹ ஏஷ ஏவ-என்னால் பிரார்த்திக்க தக்கதாய் என் விஷயத்தில் நீ செய்ய வேண்டியதான அனுக்ரஹம் இதுவே தான் –
ஏது என்னில் –
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய-ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மர லோக நாத…வாராய் லோக நாதனே -அடியேனை
உனக்கு சரமாவதி தாசனாக திரு உள்ளம் பற்றி அருள வேணும் –
யஸ் சப்த பர்வ வியவதான துங்காம் சேஷத்வ காஷ்டாமபஜன் முராரே -தேசிகன்
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –
இங்கனம் தேவரீர் திரு உள்ளம் பற்றினால் தான் அடியேன் ஜென்மம் சபலமாகும்
பயிலும் திரு உடையார் எவேரேலும் என்னை ஆளும் பரமரே ….
நின் திரு எட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை ..
நம் பிள்ளை நஞ்சீயர் சம்வாதம்.8-10-11- அல்லி கமல கண்ணன்.. தன் பிரபாவம் கேட்டால்
கண்ணன் அடியார் பிரபாவம் கேட்டால் அல்லி கமல கண்ணன்.
ஹே மதுகைடப அரே! – மதுகைடபர்களை அழித்தவனே!,
மத் ஜந்மந: – அடியேனுடைய ஜன்மத்திற்கு,
இதம் பலம் – இதுதான் பலன்;
மத் ப்ரார்த்தநீய மதநுக்ரஹ: ஏஷ: ஏவ – என்னால் ப்ரார்த்திக்கத் தக்கதாய் என் விஷயத்தில் நீ செய்ய வேண்டியதான
அநுக்ரஹம் இதுவே தான்; (எது? என்னில்;)
ஹே லோக நாத! – வாராய் லோக நாதனே!,
மாம் – அடியேனை,
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யஸ்ய ப்ருத்ய: இதி – உனக்குச் சரமாவதி தாஸனாக, திருவுள்ளம் பற்ற வேணும்.
———————
நாதே ந புருஷோத்தமே த்ரிஜகதா-மேகாதி பே சேதசா
சேவ்யே ஸ்வஸ்ய பதஸ்யா தாதரி ஸூரே நாராயணே-திஷ்டதி
யம் கஞ்சித் புருஷாதமம் கதிபய க்ராமேச மல்பார்த்ததம்
சேவாயை ம்ருக யாமஹே நரமஹோ-மூகா வராகா வயம்––28-
புருஷோத்தமே-புருஷோத்தமனாயும்
த்ரிஜகதா-மேகாதி -மூன்று லோகத்தார்க்கும் -எல்லா லோகத்தார்க்கும் -ஒரே கடவுளாயும்
சேதசா சேவ்யே -நெஞ்சினால் நினைக்கத் தக்கவனாயும்
ஸ்வஸ்ய பதஸ்யா தாதரி -தனது இருப்பிடமான பரம பதத்தையும் அளிப்பவனாயும் உள்ள
ஸூரே நாராயணே–ஸ்ரீ மன் நாராயணனே தேவன்
நாதே ந திஷ்டதி சதி –நமக்கு நாதனாய் இருக்கும் அளவில் -அவனைப் பற்றாமல்
யம் கஞ்சித் நரம் புருஷாதமம் -யாதொரு மனிதனை புருஷர்களின் அதமனாயும் இருக்கிற
கதிபய க்ராமேச மல்பார்த்ததம்-சில கிராமங்களுக்கு கடவனாயும் -ஸ்வல்ப தனத்தை கொடுப்பவனாயும்
சேவாயை ம்ருக யாமஹே -சேவிப்பதற்குத் தேடுகிறோம்
அஹோ-மூகா வராகா வயம்—-ஆச்சர்யம் -இப்படிப்பட்ட நாம் ஊமைகளாயும் உபயோகம் அற்றவர்களாயும் இரா நின்றோம்
வயம் ம்ருக யாமஹே -என்று உத்தம -தன்மையாக -அருளிச் செய்தாலும் நீங்கள் இப்படி ஓடித் திரிகிறீர்களே -என்று பிறரை அதி ஷேபிக்கிறார்
புருஷ உத்தமே – புருஷர்களில் தலைவனாயும்,
த்ரிஜகதாம் ஏக அதிபே – மூன்று லோகங்களுக்கும் ஒரே கடவுளாயும்,
சேதஸா ஸேவ்யே – நெஞ்சினால் நினைக்கத்தக்கவனாயும்,
ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி – தன் இருப்பிடமான பரம பதத்தை அளிப்பவனாயுமுள்ள,
நாராயணே ஸுரே – ஸ்ரீமந் நாராயணனான தேவன்,
ந: நாதே திஷ்டதி ஸதி – நமக்கு நாதனாயிருக்குமளவில் (அவனைப் பற்றாமல்),
கதிபயக்ராம ஈசம் – சில க்ராமங்களுக்குக் கடவனாயும்,
அல்ப அர்த்ததம் – ஸ்வல்ப தநத்தைக் கொடுப்பவனாயும்,
புருஷ அதமம் – புருஷர்களில் கடை கெட்டவனாயுமிருக்கிற,
யம்கஞ்சித் நரம் – யாரோவொரு மனிதனை,
ஸேவாயைம்ருகயா மஹே – ஸேவிப்பதற்குத் தேடுகிறோம்;
அஹோ! – ஆச்சரியம்!,
வயம் மூகா: வராகா: – இப்படிப்பட்ட நாம் ஊமைகளாயும் உபயோகமற்றவர்களாயுமிரா நின்றோம்.
ஆதி பிரான் நிற்க- பொலிந்து நின்ற பிரான் கருட வாகனும் நிற்க –
கபால நன் மோகத்த்தில் கண்டு கொள்மின்-
சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே
—————————-
மதன பரிஹர ஸ்திதம் மதீயே
மனசி முகுந்த பாதார விந்ததாம்னி
ஹர நயன க்ருசாநுநா க்ருசோஸி
ஸ்மரசி ந சக்ர பராக்கிரமம் முராரே-—29-
மதன -வாராய் மன்மதனே
பரிஹர ஸ்திதம் மதீயே–மனசி முகுந்த பாதார விந்ததாம்னி-ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடித் தாமரைகளுக்கு
இருப்பிடமான என் நெஞ்சில் இருப்பை விட்டிட்டு
ஹர நயன க்ருசாநுநா க்ருசோஸி-சிவனுடைய நெற்றிக் கண்ணில் நின்றும் உண்டான நெருப்பினால் முன்னமே சரீரம் அற்றவனாக இருக்கிறாய் –
ஸ்மரசி ந சக்ர பராக்கிரமம் முராரே—-ஸ்ரீ கண்ணபிரானுடைய திரு ஆழி ஆழ்வானது பராக்கிரமத்தை நீ நினைக்க வில்லையோ
எம்பெருமானை அண்டை கொண்ட பலன் என் உள்ளத்தில் உள்ளது கிடாய் –
அம்பரீஷ உபாக்யானம் முதலியவற்றில் கேட்டு அறியாயோ
ஹே மதந! – வாராய் மன்மதனே!,
முகுந்த பதாரவிந்ததாம்நி – ஸ்ரீ க்ருஷ்ணனுடைய திருவடித் தாமரைகட்கு இருப்பிடமான,
மதீயே மநஸி – எனது நெஞ்சில்,
ஸ்திதிம் பரிஹர – இருப்பை விட்டிடு;
ஹர நயநக்ருசாதுநா – சிவனின் நெற்றிக் கண்ணில் நின்றுமுண்டான நெருப்பினால்,
க்ருச: அஸி – (முன்னமே) சரீரமற்றவனாக இருக்கிறாய்;
முராரே! – கண்ணபிரானுடைய,
சக்ர பராக்ரமம் – திருவாழியாழ்வானது பராக்கிரமத்தை,
நஸ்மரஸி? – நீ நினைக்கவில்லையோ?
வந்து உன் அடியேன் மனம் புகுந்தாய் சிந்தனைக்கு இனியாய் புகுந்ததிர் பின் வணங்கும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே
உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றாய் -வெள்கி நான் விலவர சிரித்திட்டேனே
கெட்டியாய் பிடித்தானே உருளும் பொழுது பிரகலாதன்
நெஞ்சமே நீள் நகராக
விஷ்ணு சித்தன் மனத்தே கோவில் கொண்ட
மறக்கும் என்று செந்தாமரை கண்ணோடு மறப்பற என் உள்ளே மன்னினான் தன்னை..
தனி கடலே தனி உலகே தனி சுடரே -இவை எல்லாம் விட்டு வந்தான் ..
——————-
தத்தவம் ப்ருவாணாநி பரம் பரஸ்மாத்
மது ஷரந்தீவ சதாம் பலானி
ப்ராவர்த்தய ப்ராஞ்சலி ரச்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோ சராணி-–30-
தத்தவம் ப்ருவாணாநி -தத்துவத்தை சொல்லுகின்றனவாய்
பரம் பரஸ்மாத்-மேலானவற்றிலும் மிகவும் மேலான
மது ஷரந்தீவ சதாம் -சத்துக்களுக்கு மதுவை பெருக்கும்
பலானி இவ-பழங்களைப் போன்றனவாய்
ஜிஹ்வே-வாராய் நாக்கே
நாமாநி நாராயண கோ சராணி-ஸ்ரீ மன் நாராயணன் விஷயமான திரு நாமங்களை
ப்ராவர்த்தய -அடிக்கடி அனுசந்தானம் செய்
ப்ராஞ்சலி ரச்மி-அப்படி செய்வதால் உன்னை கை கூப்பி நிற்கின்றேன்
ஹே ஜிஹ்வே! – வாராய் நாக்கே!,
பரஸ்மாத் பரம் – மேலானதிற் காட்டிலும் மேலானதாகிய [மிகவுஞ் சிறந்த],
தத்வம் – தத்துவத்தை,
ப்ருவாணாநி – சொல்லுகின்றனவாய்,
ஸதாம் மது க்ஷரந்தி – ஸத்துக்களுக்கு மதுவைப் பெருக்குகிற,
பலாநி இவ – பழங்களைப் போன்றனவாய்,
நாராயண கோசராணி – ஸ்ரீமந் நாராயணன் விஷயமான,
நாமாநி – திருநாமங்களை,
ப்ராவர்த்தய – அடிக்கடி அநுஸந்தானம் செய்; [ஜபஞ்செய்.]
ப்ராஞ்ஜலி: அஸ்மி – (நீ அப்படி செய்வதற்காக உனக்குக்) கைகூப்பி நிற்கின்றேன்.
உயர்வற உயர் நலம் உடையவன்..
நாராயண பர ப்ரஹ்ம நாராயண பரஞ்சோதி நாராயண பர தத்தவம்
எண் பெரும் அந் நலத்து ஒண் புகழ் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –
—————-
இதம் சரீரம் பரிணாம பேசலம்
பதத்ய வசியம் சலத ஸந்தி ஜர்ஜரம்
கிம் ஒளஷதை க்லிச்யசி மூட துர்மதே
நிராமயம் கிருஷ்ண ரசாயனம் பிப–31-
இதம் சரீரம் பரிணாம பேசலம்–பதத்ய வசியம் சலத ஸந்தி ஜர்ஜரம்–இந்த சரீரமானது -நாளடைவில் துவண்டும் –
தளர்ந்த கட்டுக்களை யுடையதாய்க் கொண்டு சிதிலமாயும் அவசியம் நசிக்கப் போகிறது
கிம் ஒளஷதை க்லிச்யசி மூட துர்மதே-நிராமயம் கிருஷ்ண ரசாயனம் பிப-–வாராய் -அஞ்ஞானியே -கெட்ட மதி யுடையவனே –
மருந்துகளால் என் வருந்துகிறாய் -சம்சாரம் ஆகிய வியாதியைப் போக்குவதான ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிற ரசாயனத்தை பானம் பண்ணு
இதம் சரீரம் – இந்த சரீரமானது,
பரிணாம பேஷலம் – நாளடைவில் துவண்டும்,
ச்லத ஸந்தி ஜர்ஜரம் – தளர்ந்த கட்டுக்களை யுடையதாய்க்கொண்டு சிதலமாயும்,
அவச்யம் பததி – அவச்யம் நசிக்கப் போகிறது;
ஹே மூட! துர்மதே – வாராய் அஜ்ஞாநியே! கெட்ட புத்தியை யுடையவனே!,
ஒளஷதை: – மருந்துகளினால்,
கிம் க்லிஶ்யஸி – ஏன் வருந்துகிறாய்?,
நிராமயம் – (ஸம்ஸாரமாகிற) வியாதியைப் போக்குமதான,
க்ருஷ்ண ரஸாயநம் – ஸ்ரீக்ருஷ்ணனாகிற ரஸாயநத்தை,
பிப – பாநம் பண்ணு.
மரம் சுவர் மதிள் எடுத்து மருமைக்கே வெறுமை பூண்டு -புறம் சுவர் ஓட்டை மாடம்.புரளும் போது அறிய மாட்டீர் .
புள் கவ்வ
மின் நின் நிலையின மன் உயர் ஆக்கைகள்
மின் உருவாய் பின் உருவாய் பொன் உருவாய்-மூன்று தத்தவம்–
அவன் நித்யம் ஸ்வரூபம் ஸ்பாவ விகாரம் இன்றி – ஜீவாத்ம ஸ்பாவம் மாறும் – அசித் ஸ்வரூபமே மாறும்..
அவிகாராய ..சதைக ரூபா ரூபாய
———————-
தாரா வாரா கர வர ஸுதா-தே தநுஜோ விரிஞ்ச
ஸ்தோதா வேத ஸ்தவ ஸூரகணோ-ப்ருத்ய வர்க்க ப்ரசாத
முக்திர்மாயா ஜகத விகலம்-தாவகீ தேவகீதே
மாதா மித்ரம் வலரி புஸுதஸ் -த்வய்யதோக்யன் நஜானே -32-
தாரா வாரா கர வர ஸுதா-தேவரீருக்கு மனைவி திருப் பாற் கடல் மகளான பெரிய பிராட்டியார்
தே தநுஜோ விரிஞ்ச-மகனோ சதுர் முகன்
ஸ்தோதா வேத -ஸ்துதி பாடகனோ வேதம்
ஸ்தவ ஸூர கணோ-ப்ருத்ய வர்க்க -வேலைக்காரர்களோ தேவதைகள்
தவ ப்ரசாத முக்திர் -மோக்ஷம் தேவரீருடைய அனுக்ரஹம்
மாயா ஜகத விகலம்-தாவகீ -சகல லோகமும் தேவரீருடைய பிரகிருதி
தேவகீதே மாதா-தேவரீருக்குத் திருத் தாயார் தேவகிப் பிராட்டி
மித்ரம் வலரி புஸுதஸ் -தோழன் இந்திரன் மகனான அர்ஜுனன்
த்வய்யதோக்யன் ந ஜானே -அத அந்யத் த்வயி நஜானே -அதைக் காட்டிலும் வேறானவற்றை நான் அறிகிறேன் இல்லை –
தே தாரா: – தேவரீருக்கு மனைவி,
வாராகரவர ஸுதா – திருப்பாற்கடலின் மகளான பிராட்டி,
தநுஜ: விரிஞ்ச: – மகனோ சதுர்முகன்;
ஸ்தோதா வேத: துதிபாடகனோ வேதம்;
ப்ருத்யவர்க்க: ஸுரகண: – வேலைக்காரர்களோ தேவதைகள்;
முக்தி: தவப்ரஸாத: – மோக்ஷம் தேவரீருடைய அநுக்ரஹம்;
அவிகலம் ஜகத் – ஸகல லோகமும்,
தாவகீ மாயா – தேவரீருடைய ப்ரக்ருதி;
தே மாதா தேவகீ – தேவரீருக்குத் தாய் தேவகிப் பிராட்டி;
மித்ரம் வலரிபுஸுத: – தோழன் இந்திரன் மகனான அர்ஜுனன்;
அத: அந்யத் – அதைக் காட்டிலும் வேறானவற்றை,
த்வயி ந ஜாநே – உன்னிடத்தில் நான் அறிகிறேனில்லை.
——————-
கிருஷ்ணோ ரஷது நோ ஜகத் த்ரய குரு-
கிருஷ்ணம் நமச்யாம் யஹம்
கிருஷ்ணே நாமர சத்ரவோ விநிஹதா
கிருஷ்ணாய தஸ்மை நம
கிருஷ்ணா தேவ சமுத்திதம் ஜகதிதம்
கிருஷ்ணச்ய தாசோ சம்யஹம்
கிருஷ்ணே திஷ்டத சர்வ மேத்யதகிலம்
ஹே கிருஷ்ண சம்ரஷஸ்வ மாம் –-33-
கிருஷ்ணோ ரஷது நோ ஜகத் த்ரய குரு-மூன்று -எல்லா லோகத்தார்க்கும் தலைவனான ஸ்ரீ கிருஷ்ணன் நம்மைக் காக்கட்டும்
கிருஷ்ணம் நமச்யாம் யஹம்-நான் ஸ்ரீ கிருஷ்ணனை வணங்குகிறேன்
கிருஷ்ணே நாமர சத்ரவோ விநிஹதா-கிருஷ்ணாய தஸ்மை நம-யாவனொரு கிருஷ்ணனால் அசுரர்கள் கொல்லப் பட்டார்களோ அந்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்
கிருஷ்ணா தேவ சமுத்திதம் ஜகதிதம்-இந்த உலகம் கண்ணன் இடம் இருந்து உண்டா-நான் கண்ணனுக்கு அடியேனாய் இருக்கிறேன்
கிருஷ்ணே திஷ்டத சர்வ மேத்யதகிலம்-இந்த ஸமஸ்த பிரபஞ்சமும் கண்ணன் இடத்தில் நிலை பெற்று இருக்கிறது
ஹே கிருஷ்ண சம்ரஷஸ்வ மாம் –ஸ்ரீ கிருஷ்ணனே அடியேனைக் காத்து அருள வேணும் –
பிரதமை முதல் எட்டு விபக்திகளும் இந்த ஸ்லோகத்தில் அமைத்து அருளி உள்ளார்-எட்டு வேற்றுமை உருபுகளும் அமைந்த ஸ்லோகம்
ஜகத்த்ரய குரு: – மூன்று லோகங்களுக்கும் தலைவனான்,
கிருஷ்ண: ந: ரக்ஷது -கிருஷ்ணன் நம்மைக் காப்பாற்றுக;
அஹம் கிருஷ்ணம் நமஸ்யாமி – நான் கிருஷ்ணனை வணங்குகிறேன்;
யேந கிருஷ்ணேந – யாவனொரு கிருஷ்ணனால்,
அமரசத்ரவ: விநிஹ தா: – அஸுரர்கள் கொல்லப்பட்டார்களோ,
தஸ்மை கிருஷ்ணாய நம: – அந்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்;
இதம் ஜகத் – இவ்வுலகமானது,
கிருஷ்ணாத் ஏவ – கண்ணனிடமிருந்தே,
ஸமுத்திதம் – உண்டாயிற்று; (ஆகையால்)
அஹம் கிருஷ்ணஸ்ய தாஸ: அஸ்மி – நான் கண்ணனுக்கு அடியனாயிருக்கிறேன்;
ஏதத் ஸர்வம் அகிலம் – இந்த ஸமஸ்த பிரபஞ்சமும்,
கிருஷ்ணே திஷ்டதி – கண்ணனிடத்தில் நிலைபெற்றிருக்கிறது.
ஹே கிருஷ்ண! – ஸ்ரீ கிருஷ்ணனே!,
மாம் ஸம்ரக்ஷ – அடியேனைக் காத்தருள வேணும்.
ஆயர் புத்திரன் இல்லை அரும் தெய்வம்–ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து வந்த பராத் பரன்
————————-
தத் தவம் ப்ரசீத பகவன்! குரு மய்யநாதே,
விஷ்ணோ க்ருபாம் பரம காருணிக: கில த்வம்
சம்சார சாகர நிமக்ந மநந்த!தீனம்
உத்தரத்து மர்ஹசி ஹரே புருஷோத்தமோசி-—34-
தத் தவம் -வேத பிரசித்தனான நீ
ப்ரசீத -குளிர்ந்த திருமுகனாய் இருக்க வேணும்
பகவன்! -ஷாட் குண்ய பரிபூர்ணனே
க்ருபாம் குரு -அருள் புரிய வேணும் –
மய்யநாதே,—அநாதே மயி -வேறு புகலற்ற என் மீது
விஷ்ணோ -எங்கும் வியாபித்து இருப்பவனே
பரம காருணிக: கில த்வம்-நீ பேர் அருளாளன் அன்றோ
சம்சார சாகர நிமக்ந -சம்சாரக் கடலில் மூழ்கினவனாய்
தீனம்-அலைந்து கொண்டு இருக்கும் அடியேனை
அநந்த!-தேச கால வஸ்து -த்ரிவித அபரிச்சேத்யன் ஆனவனே
உத்தரத்து மர்ஹசி –கரை ஏற்றக் கடவை
ஹரே-அடியார் துயரை தீர்ப்பவனே
புருஷோத்தமோசி-—புருஷோத்தமனாய் இருக்கிறாயே –
ஹே பகவந்! – ஷாட்குண்ய பரிபூர்ணனே!,
விஷ்ணோ! – எங்கும் வ்யாபித்திருப்பவனே!,
ஸ:த்வம் – வேத ப்ரஸித்தனான நீ,
அநாதே மயி – வேறு புகலற்ற என் மீது,
க்ருபாம் குரு – அருள் புரிய வேணும்;
ப்ரஸீத – குளிர்ந்த முகமாயிருக்க வேணும்;
ஹே ஹரே! – அடியார் துயரைத் தீர்ப்பவனே!,
அநந்த! – இன்ன காலத்திலிருப்பவன், இன்ன தேசத்திலிருப் பவன், இன்ன வஸ்துவைப் போலிருப்பவன் என்று
துணிந்து சொல்லமுடியாதபடி மூன்று வித பரிச்சேதங்களுமில்லாதவனே!,
த்வம் பரம காருணிக: கில – நீ பேரருளாளனன்றோ?,
ஸம்ஸார ஸாகர நிமக்நம் – ஸம்ஸாரக் கடலில் மூழ்கினவனாய்,
தீநம் – அலைந்து கொண்டிருக்கிற அடியேனை,
உத்தர்த்தும் அர்ஹஸி – கரையேற்றக் கடவை;
புருஷோத்தம: அஸி – புருஷர்களிற் சிறந்தவனாயிருக்கிறாய்.
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு
———————–
நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண பூஜனம் சதா ,
வதாமி நாராயண நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்வ மவ்யயம்––35-
நமாமி நாராயண பாத பங்கஜம்-ஸ்ரீ மன் நாராயணனுடைய திருவடித் தாமரையை சேவிக்கின்றேன்
கரோமி நாராயண பூஜனம் சதா ,-எம்பெருமான் உடைய திருவாராதனத்தை இடை விடாமல் எப்பொழுதும் பண்ணுகிறேன்
வதாமி நாராயண நாம நிர்மலம்-குற்றம் அற்ற ஸ்ரீ மன் நாராயணன் உடைய திரு நாமங்களை சங்கீர்த்தனம் பண்ணுகிறேன்
ஸ்மராமி நாராயண தத்வ மவ்யயம்—-அழிவற்ற பர தத்துவமான ஸ்ரீ மன் நாராயணனை சிந்திக்கிறேன்
தம்முடைய மநோ வாக் காயங்கள் மூன்று கரணங்களும் ஸ்ரீ மன் நாராயணன் இடம் ஆழம் கால் பட்டமையை அருளிச் செய்கிறார்
நாராயண பாத பங்கஜம் – ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடித் தாமரையை,
நமாமி – ஸேவிக்கிறேன்;
நாராயண பூஜநம் – எம்பெருமானுடைய திருவாராதநத்தை,
ஸதா கரோமி – எப்போதும் பண்ணுகிறேன்;
நிர்மலம் – குற்றமற்ற,
நாராயண நாம – ஸ்ரீமந் நாராயண நாமத்தை,
வதாமி – உச்சரிக்கிறேன்;
அவ்யயம் நாராயண தத்வம் – அழிவற்ற பர தத்வமான நாராயணனை,
ஸ்மராமி – சிந்திக்கிறேன்.
நாலு தடவை நாராயண நாமம்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவ பிரானையே தந்தை தாய் -அரவிந்த லோசனன்.
தொலை வில்லி மங்கலம்-கேட்கையால் உற்றதுண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சரத்தை தன்னால் –
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது…
செல்வ நாரணன் சொல் கேட்டு நல்கி என்னை விடான்.
—————————————-
ஸ்ரீ நாத நாராயண வாசு தேவ
ஸ்ரீ கிருஷ்ண பக்த பிரியா சக்ர பாணே
ஸ்ரீ பத்ம நாபா அச்யுத கைடபாரே
ஸ்ரீ ராம பத்மாஷ ஹரே முராரே !—-36-
அநந்த வைகுண்ட முகுந்த கிருஷ்ண
கோவிந்த தாமோதர மாதவேதி
வக்தும் சமர்த்தோபி ந வக்தி கச்சித்
அஹோ ஜநாநாம் வயசநாபி முக்யம்-–37-
ஸ்ரீ நாத நாராயண வாசு தேவ–ஹே ஸ்ரீ லஷ்மி பதியே -நாராயணனே -வா ஸூ தேவனே –
ஸ்ரீ கிருஷ்ண பக்த பிரியா சக்ர பாணே-ஸ்ரீ கிருஷ்ணனே -பக்த வத்சலனே -திருக் -சக்கரக் கையனே
ஸ்ரீ பத்ம நாபா அச்யுத கைடபாரே-ஹே ஸ்ரீ பத்ம நாதனே -அடியாரை ஒரு காலும் நழுவ விடாதவனே –
கைடபன் என்னும் அசுரனை நிரசித்து அருளினவனே
ஸ்ரீ ராம பத்மாஷ ஹரே முராரே !—-சக்கரவர்த்தி திரு மகனே -புண்டரீ காஷனே-
பாபங்களை அபஹரித்து அருளுபவனே -முராசுரனை நிரசித்து அருளினவனே
அநந்த -முடிவில்லாதவனே –
வைகுண்ட -ஸ்ரீ வைகுண்ட நாதனே
முகுந்த -ஸ்ரீ முகுந்தனே
கிருஷ்ண-ஸ்ரீ கண்ணபிரானே
கோவிந்த -கோவிந்தனே
தாமோதர -தாமோதரனே
மாதவேதி–ஸ்ரீ மாதவன் –என்று இப்படி ஸ்ரீ பகவான் திரு நாமங்களை
வக்தும் சமர்த்தோபி ந வக்தி கச்சித்-சொல்லுவதற்கு சமர்த்தனாக இருந்தாலும் ஒருவனும் சொல்லுவது இல்லை –
அஹோ ஜநாநாம் வயசநாபி முக்யம்—இவ்வுலகோர் விஷயாந்தரங்களிலே மண்டி துன்பப பருவத்திலேயே நோக்கமாய் இருக்கும் தன்மை ஆச்சர்யம்
இது என்ன கொடுமை என்று பர அனர்த்தத்தை சிந்தனையால் பரிதபிக்கிறார்
ஸ்ரீநாத! – ஹே லக்ஷ்மீபதியே!,
நாராயண – நாராயணனே!,
வாஸுதேவ – வாஸுதேவனே!,
ஸ்ரீ கிருஷ்ண – ஸ்ரீ கிருஷ்ணனே!,
பக்த ப்ரிய – பக்த வத்ஸலனே!,
சக்ர பாணே – சக்கரக் கையனே!,
ஸ்ரீ பத்மநாப – ஹே பத்ம நாபனே!,
அச்யுத – அடியாரை ஒரு காலும் நழுவ விடாதவனே!,
கைடப அரே! – கைடபனென்னும் அசுரனைக் கொன்றவனே!,
ஸ்ரீராம – சக்ரவர்த்தி திருமகனே!,
பத்மாக்ஷ – புண்டரீகாக்ஷனே!,
ஹரே! – பாபங்களைப் போக்குமவனே!,
முராரே – முராசுரனைக் கொன்றவனே!,
அநந்த – முடிவில்லாதவனே!,
வைகுண்ட – வைகுண்டனே!,
முகுந்த – முகுந்தனே!,
கிருஷ்ண – கண்ண பிரானே!,
கோவிந்த – கோவிந்தனே!,
தாமோதர – தாமோதரனே!,
மாதவ! இதி – மாதவனே என்றிப்படி (பகவந் நாமங்களை),
வக்தும் – சொல்லுவதற்கு,
ஸமர்த்த: அபி – ஸமர்த்தனாயினும்,
கச்சித் ந வக்தி – ஒருவனும் சொல்லுகிறதில்லை,
ஜநாநாம் – இவ் வுலகத்தவர்களுக்கு,
வ்யஸந ஆபிமுக்யம் – (விஷயாந்தரங்களில் மண்டித்) துன்பப்படுவதிலேயே நோக்கமாயிருக்குந் தன்மை,
அஹோ! – ஆச்சரியம்!
இருபது திரு நாமங்களை சொல்ல சாமர்த்தியம் இருந்தாலும் சொல்ல வில்லை
போது எல்லாம் போது கொண்டு உன் திரு நாமம் செப்ப மாட்டேன் -ஆசை மட்டும் போக வில்லை
கதறுகின்றேன் -இது மட்டும் தெரியும் அளித்து அரங்க மா நகர் உள்ளானே
அதுவும் அவனது இன் அருளே-
3/4/5 சுலோகங்களால் மறவாமல் இருக்கணும்..நினைவு முக்கியம்
4 என் மனசில் நீ நீங்காமல் இருக்கணும் அசையாத பக்தி வேணும்
6 ஸ்லோகம் 27 ஸ்லோகத்தால் திரு நாம சந்கீர்தனத்தால் அடியார் அடியார் ..நினைவு மாறாமல் மதுர கவி ஆழ்வார் நிலை
விரோதிகள் சம்சாரம் கர்மா போல்வன ..12/ 13/ 14/ 34/ 35 சுலோகங்களால் அருளினார்
சரீரம் வைத்து காலம் கழிக்கணும் ஒரே மருந்து மணி மந்த்ரம் எல்லாம் அவன் தானே
17-பரம மருந்து அவன் திரு நாம சங்கீர்த்தனம் 18/ 22/ 23/ 24 /31 கண்ணன் என்னும் மருந்தை குடிப்பாய்
5- திரு வடி தாமரைகள் நினைவு இன்றி யாகம் யஜ்ஞம் வீண்/
28- அவன் காத்து இருக்க மூடர்கள் வேறு எங்கோ போனோமே சம்பந்தம் மாதா பிதா ஜகத் காரண பூதன் வெளி இடுகிறார்-..
33-ஸ்லோகத்தால் கிருஷ்ணனே ஜகத் காரணம்/8th விஷயம் இது
——————–
த்யாயந்தி யே விஷ்ணும் அநந்தம் அவ்யயம்-
ஹ்ருத் பத்ம மத்யே சததம் வ்யவஸ்திதம்
சமாஹிதாநாம் சததாப யப்ரதம்
தே யாந்தி ஸித்திம் பரமாம் ச வைஷ்ணவீம்-38-
த்யாயந்தி யே விஷ்ணும் அநந்தம் அவ்யயம்-அபரிச்சின்னமாய் உள்ள -அழியாமல் நித்தியமாய் உள்ள –
ஸ்ரீ மஹா விஷ்ணுவை எவர் த்யானம் பண்ணுகிறார்களோ
ஹ்ருத் பத்ம மத்யே சததம் வ்யவஸ்திதம்-ஹிருதய கமலத்தின் நடுவில் எப்பொழுதும் வீற்று இருந்து அருளுபவரும் –
அடியார் விலக்காமை கிடைத்ததும் சடக்கென அருள் புரிய –
சமாஹிதாநாம் சததாப யப்ரதம்–விஷயாந்தர பற்று அற்று -சமாதியில் ஊன்றி இருக்கும் யோகிகளுக்கு
சர்வ காலத்திலும் அஞ்சேல் என்று அபாய பிரதானம் பண்ணி அருளுபவரும்
தே யாந்தி ஸித்திம் பரமாம் ச வைஷ்ணவீம்-–அவர்கள் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ சித்தியை அடைகிறார்கள்-
ஹ்ருத் பத்ம மத்யே – ஹ்ருதய கமலத்தின் நடுவில்,
ஸததம் வ்யவஸ்திதம் – எப்போதும் வீற்றிருப்பவரும்,
ஸமாஹிதாநாம் – ஸமாதியிலே ஊன்றியிருக்கும் யோகிகளுக்கு,
ஸதத அபயப்ரதம் – ஸர்வ காலத்திலும் ‘அஞ்சேல்’ என்று அபய ப்ரதாநம் பண்ணுமவரும்,
அவ்யயம் – ஒருநாளும் அழியாதவரும்,
அநந்தம் – அபரிச்சிந்நராயு முள்ள,
விஷ்ணும் – ஸ்ரீமஹாவிஷ்ணுவை,
யேத்யாயந்தி – எவர் த்யானம் செய்கிறார்களோ,
தே – அவர்கள்,
பரமாம் வைஷ்ணவீம் ஸித்திம் – சிறந்த வைஷ்ணவ ஸித்தியை,
யாந்தி – அடைகின்றார்கள்.
—————————–
ஷீர ஸாகர தரங்க சீகரா
சார தாரகித சாரு மூர்த்தயே
போகி போக சய நீய சாயீநே
மாதவாய மது வித் விஷே நம—39-
ஷீர ஸாகர தரங்க சீகரா-சார தாரகித சாரு மூர்த்தயே–திருப் பாற் கடலில் நக்ஷத்திரங்கள் படிந்தால் போலே
அழகிய திரு மேனியை யுடையராய்
போகி போக சய நீய சாயீநே-மாதவாய மது வித் விஷே நம-–திரு வனந்த ஆழ்வான் உடைய திரு மேனி ஆகிற
திருப் படுக்கையிலே கண் வளர்ந்து அருளுபவராய் -மது என்ற அசுரனை நிரசித்து அருளிய திரு மாலுக்கு நமஸ்காரம் –
க்ஷீரஸாகர தரங்க சீகர ஆஸார தாரகிதசாரு மூர்த்தயே – திருப்பாற்கடலில் அலைகளின் சிறு திவலைகளின் பெருக்கினால்
நக்ஷத்திரம் படிந்தாற் போன்று அழகிய திருமேனியை யுடையராய்,
போகி போக சயநீய சாயிநே – திருவனந்தாழ்வானுடைய திருமேனியாகிற திருப் படுக்கையில் கண்வளருமவராய்,
மதுவித்விஷே – மதுவென்கிற அசுரனைக் கொன்றவரான,
மாதவாய – திருமாலுக்கு,
நம: – நமஸ்காரம்.
————————–
யஸ்ய ப்ரியவ் சுருதி தரவ் கவி லோக வீரவ்
மித்ரே த்விஜன்மவர பத்ம சரவ் பூதாம்
நேதாம் புஜாஷ சரணாம் புஜ ஷட்பதேன
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலசேகரேண–40-
யஸ்ய ப்ரியவ் சுருதி தரவ் கவி லோக வீரவ்-யாவர் ஒரு ஸ்ரீ குல சேகர பெருமாளுக்கு -வேத வித்துக்களாயும் -கவிகளுக்கும் சிறந்தவர்களாயும் –
மித்ரே த்விஜன்மவர பத்ம சரவ் பூதாம்-ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்களாயும் உள்ள -பத்மன் -சரன் -என்னும் இருவர்கள் ஆப்த மித்ரர்களாய் இருந்தார்களோ
அம்புஜாஷ சரணாம் புஜ ஷட்பதேன-தாமரைக் கண்ணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளுக்கு-வந்து -போல் அந்தரங்கரான
தேன-அந்த
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலசேகரேண–ஸ்ரீ குல சேகர மஹா ராஜராலே இந்த ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்யப் பட்டது –
த்விஜன்மவர பத்மசரவ் –த்வஜன்மவரன் -பத்ம சரன் -என்றும் சொல்வர்
ஜாதி ஏக வசனமாகக் கொண்டு ப்ராஹ்மணர்களும் ஷத்ரியர்களும் இஷ்டர்கள் -என்பாரும் உண்டு –
ப்ராஹ்மண ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பெரியாழ்வாரையும் -ஸ்ரீ நம்மாழ்வாரையும் சொன்னதாகவும் -கொள்ளலாம் –
யஸ்ய – யாவரொரு குலசேகரர்க்கு,
ச்ருதிதரெள – வேத வித்துக்களாயும்,
கவி லோக வீரெள – கவிகளுக்குள் சிறந்தவர்களயும்,
த்விஜந்மவர பத்மசரெள – ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களாயுமுள்ள ‘பத்மன்’ ‘சரண்’ என்னும் இருவர்கள்,
ப்ரியெள மித்ரே அபூதாம் – ஆப்த மித்திரர்களாக இருந்தார்களோ,
அம்புஜாக்ஷ சரணாம்புஜ ஷட்பதேந – தாமரைக் கண்ணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளுக்கு வண்டு போல் அந்தரங்கரான,
தேந – அந்த,
குலசேகரேணராஜ்ஞா – குலசேகர மஹாராஜராலே,
இயம் க்ருதி: க்ருதா – இந்த ஸ்தோத்ர க்ரந்தம் செய்யப்பட்டது.
சேர்பார்களை பஷிகள் ஆக்கி ..-ஆச்சார்யர்-ஆறு கால் அவரின் திருவடி புத்திரன் பத்னி திரு அடிகள்..
நாமும் பெரிய பெருமாளின் திரு வடிகளில் பிரவகிக்கிற மது உண்ணும் வண்டு போல ஆவோம் என்று பல சுருதி.
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குலேசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply