ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —
அவதாரிகை –
கீழில் திருவந்தாதியில் ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் -இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் -அந்த ஜ்ஞானம் தான் போய் –பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
பக்தியாலே வழிந்து புறப்பட்ட சொல்லாய் இருக்கிறது –
அவர்க்குப் பக்தி இல்லையோ என்னில் -உண்டு
கார்ய காரண ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது –
உபய விபூதியையும் அனுசந்தித்துப் பிறந்த ஜ்ஞானம் அவரது –
அது பக்வமாய் -பக்தி ரூபாபன்ன படி இவரது
கீழில் திருவந்தாதியில் அவர் விபூதி விஷயமாக அனுசந்தித்து -பரப்படங்கலும்-இவர்
தம் மனசின் யுள்ளே அனுசந்தித்து அந்த பக்தி பாரவச்யத்தாலே பிறந்த பாசுரமானது
ஒரு பிரபந்தமாய்க் கொண்டு தலைக் கட்டிற்றாய் இருக்கிறது –
கீழில் திருவந்தாதியில் ஜகத்துக்கு ஈஸ்வரன் சேஷியாய்-ஜகத்து அவனுக்கு சேஷமாய் இருக்கும் என்று பரத்வ ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அந்த பரத்வ ஜ்ஞானம் தானே ஸ்வ ப்ராப்த்யுபாயம் என்றது –
உபாயம் வேறு ஒன்றாய் உபேயமும் வேறு ஒன்றோ காண்கிறது லோகத்தில் -இப்படியாகக் கூடுமோ என்னில்
சர்வ சக்தி ஆகையினாலே -தானே உபாயமும் உபேயமும் –
நிமித்த காரணமும் சஹ காரி காரணமும் வெவ் வேறாக இருக்கக் காணா நிற்கச் செய்தே
த்ரிவித காரணமும் அவனேயாய் இரா நின்றானே -சர்வ சக்தி யாகையாலே -அப்படியே இதுவும் கூடும்
அவன் ஜகத் அந்தர்யாமியாய் -தாமும் ஜகததர்ப்பூதர் -ஆகையாலே தாமும் சேஷ பூதராய்த் தமக்கு உபாயம் அவனேயாய் இருக்கிறது-
சாமான்யத்தில் உள்ளது விசேஷத்திலும் உண்டாய் இருக்குமே
அகில ஜகத் ஸ்வாமின் -என்றால் அஸ்மின் ஸ்வாமின் -என்னக் கடவது இறே-
சாதனம் தம் தலையில் இன்றியிலே அவனே யாகையாலே இனி ஒரு பாகம் பிறக்கும் அளவும் பார்த்து இருக்க வேண்டாவோ
ஸ்ரீ குருகைக் காவலப்பன் பக்கலிலே ஸ்ரீ பரமேஸ்வர மங்கலத்து ஆண்டான் சென்று –
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கிறபடி என்-என்று கேட்க –
எஜ் ஜகத்துக்கும் எவ் வீஸ்வரனுக்கும்-என்று கேட்கத் -த்ருப்தனாய் போனான் –
அதாகிறது -ஆத்மாவையும் ஈஸ்வரன் என்று பிரமாணம் சொல்லக் கடவது –
சரீரம் ஆத்மாவுக்கு சேஷமானாப் போலே ஜகத்தும் ஈஸ்வரனைக் குறித்து சரீரமாய் இருக்கக் கடவது –
அவர் -ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -பதிம் விச்வச்ய-என்றார் -இவருக்கும் ஒக்குமே இது -அவ்வர்த்தத்தையே அனுபவிக்கிறார் –
ஏக கர்த்ருகமாக இருக்க வேண்டாவோ -பின்ன கர்த்ருகமாய் அத்திருவந்தாதி ஒருத்தரதுமாய்
இத்திருவந்தாதி ஒருத்தரதுமாய் அன்றோ இருக்கிறது
அதினுடைய அநந்தரம் பிறந்த அவஸ்தையைச் சொல்லுவான் என் என்னில்
த்ரிமுனி வ்யாகரனமும் மூவர் கூடச் செய்யச் செய்தே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே ப்ரேமேயைக்யத்தாலே –
ஸ்ரீ ஜைமினியும் -ஸ்ரீ வியாசனும் கூட மீமாம்சையைப் பன்னிரண்டு அத்யாயம் ஸ்ரீ ஜைமினியும்
ஸ்ரீ வியாசன் நாலு அத்யாயமுமாய்ச் செய்யச் செய்தே
பூர்வ மீமாம்சையும் உத்தர மீமாம்சையையும் ப்ரேமேயைக் யத்தாலே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே -அப்படியேயாய் இருக்கிறது –
அதில்–விசித்திர ஜ்ஞான சக்தி யுக்தன் -ஜகத் காரண பூதன் -அவனாகிறான் -சங்க சக்ர கதாதரன் -என்றது இறே –
இதுவும் பக்தி யாகிறது -முன்பு உண்டாய் இருந்தது ஓன்று இன்றியே இருக்கையாலே இப்போது உண்டாக்கின படியாலே சொல்லுகிறது –
அவனே உபாயமான படியாலே பக்தி உத்பாதகனும் அவனேயாய் இருக்கிறபடி சொல்லுகிறது –
ஜகத் வைசித்ரியினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னைத் திருத்தின படி என்று அனுசந்திக்கிறார் –
அவர்க்கு உள்ளது பரத்வ ஜ்ஞானமோ என்னில் -எல்லார்க்கும் எல்லாம் உண்டு –
அவர்கள் பரிக்ரஹித்த அம்சங்களைச் சொல்லுகிறது
ஸ்ரீ ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஜ்ஞராய் பரிமாறுகையாலே ஏக கண்டராய் இறே இருப்பது –
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –
————————————————————————–
ப்ராப்த விஷயத்தில் பிறந்த பிரேம பரம்பரைகளாலே பிரகாசமான தம்முடைய சேஷத்வத்தையும்-
அவனுடைய சேஷித்வத்தையும் -சொல்லுகிறது
அனுமானத்தாலே கீழ் வஸ்து நிர்த்தேசம் பண்ணினாப் போலே இருக்கிறது –
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-
அன்பே தகளியா-
வையம் தகளியா -என்று லோகப் பரப்பை அடையத் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து -பக்தியைத் தகளியாகக் கொள்ளுகிறார் –
அதாவது -வையம் தகளி -கேட்கையாலே எம்பெருமான் பக்கல் பிறந்த ஸ்நேஹமே தகளியாக –
அன்பு ஆகிறது -பக்தி -தைல வர்த்திகளுக்கு ஒரு ஆதாரம் வேணும் இறே
ஒன்றால் அழியக் கடவது அல்லாத பக்தியானது போய்-ஒரு தகளியாய்ப் புக்கது -என்றபடி ஆகிறது –
மேலிதுக்கு எல்லாம் ஆதாரமாய் இருக்கிறபடி –
கீழில் ஜ்ஞானப் பரப்பை அடைய பக்தியாய்ப் பழுத்த படி
பக்தி ரூபாபன்னமாய் இறே ஜ்ஞானம் இருப்பது –
ஆகை இறே மயர்வற மதி நலம் அருளினான் -என்றது-
ஆர்வமே நெய்யாக-
அது பாகமான படி -அந்த அன்பை அடியாக யுடைத்தாய்
பெற்று அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாத அடியான அபி நிவேசமானது அதுக்கு உட்பட்ட நெய்யாய்ப் புக்கது –
ஆர்வம் ஆகிறது -அன்பினுடைய த்விதீய பர்வம் –
அன்பாகிறது சிநேக கார்யமான அத்தலைக்குப் பரியும் பரிவு
ஆர்வம் ஆகிறது -அன்புக்கு விஷயம் ஆனவனுக்கு ஸ்மாரகமாய் அவ்விஷயத்தை விட்டுக் கால் வாங்க
ஒண்ணாத படியாகப் பிறப்பதொரு அவஸ்தை –
அன்றிக்கே
அன்பு அத்தலைக்கு பரியும் பரிவாய்
ஆர்வம் ஆகிறது அதுக்கு அடியான அபி நிவேசம் -என்றுமாம் –
ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி மேலவன் -நாச் -4-8-என்னக் கடவது இறே-
இன்புருகு சிந்தை இடு திரியா –
இவ்விரண்டையும் அடியாக யுடைத்தாய் அநுபாவ்ய விஷயத்தினுடைய ரச்யதையாலே சிதிலமாகிற மனசானது அதுக்கு இட்ட திரியாக –
ப்ராப்தியாலும் -குணாதிக விஷயம் ஆகையாலும் -த்யேய வஸ்துவை விடாதே உருகி இனிதாய் இருக்கிற
மநோ ரதம் காரணமான திரியாக –
சிந்தைக்கு அடியாக இறே மனஸ் இருப்பது –
நன்புருகி-
நன்பு என்கிறது ஆத்மாவுக்கு சஹஜமான தர்ம பூத ஜ்ஞானமாய் -அத்தாலே –
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -ப்ரஹ்ம ஸூதரம் -2-3-29-என்கிறபடியே –
ஜ்ஞாதாவை நினைக்கிறதாதல்-
அன்றிக்கே
நன்பு -என்கிறது ஆத்மாவாய்-அதுக்கு நன்மையாவது அல்ப அஸ்த்திரமான அசேதனத்தில் காட்டில் வேறுபட்டு
ஜ்ஞானனந்த லஷணமாய்-நித்தியமாய் -ஸ்ரீ ஈஸ்வர சேஷமாய் -இருக்கை –
உருகி என்கிறது –
அசேத்யமாய்-அதாஹ்யமாய் -அக்லேத்யமாய் -இருக்கக் கடவதான ஆத்மவஸ்து -த்ரவத்ரவ்யம் பட்டது பட்டது –
நித்யவஸ்து உருகுகையாவது என் என்னில் அவ்விஷயத்தில் தான் இழியும்படி அவகாஹித்த படியைச் சொல்லுகிறது –
ந விவேதாத்மநோ காத்ரம் -தத் ஸ்ம்ருத் யாஹ்லாத சம்ஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-39-என்னும் படியே
ஸ்ரீ பிரஹலாதன் பாம்புகள் கடித்ததையும் உணராமல் ஸ்ரீ எம்பெருமானை நினைந்து மகிழ்ந்து இருந்தானே –
ஆக
இவை எல்லாவற்றாலும் சொல்லிற்று ஆயத்து -விஷயா தீனமாகப் பிறந்த பக்தியிலே சில அவஸ்தா விசேஷங்கள் இருந்தபடி
பரபக்திக்கு அநந்தரம் பரஜ்ஞானம் ஆய்த்து
பின்னைப் போய்ப் பரமபக்தி பர்யந்தம் ஆய்த்து –
இங்கனே இருக்கக் கடவ தொரு க்ரமம் உண்டு இறே-
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
அவ்வளவிலே ஸ்ரீ பகவத் பிரசாத லப்தமான பரஜ்ஞானம் ஆகிற உஜ்வல தீபத்தை ஆரோபித்தேன் –
விளக்கு ஆகிறது தன்னையும் தானே காட்டிப் பிறரையும் காட்ட வற்றாய் இருப்பது
அப்படியே -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆனது தன் சேஷத்வத்தையும் காட்ட வற்றாய் –
அவன் தன் சேஷித்வத்தையும் காட்ட வற்றாய் இருக்கும் –
விளக்கேற்றினேன் –
அவ்வழியாலே அடிமை செய்கிறேன்-
நாரணற்கு-
சர்வ சேஷியான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு-
அசேவ்ய சேவையைத் தவிர்க்கிறது –
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–
ஜ்ஞான ஸ்வரூபமான தமிழைப் பண்ணின நான் –
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ -வேதார்த்த சங்க்ரஹம்-என்று பக்தி ரூபாபன்ன ஜ்ஞான பிரபந்த ப்ரவர்த்தகனான நான் –
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
ஆப்ததமனான நான் சொன்னேன் -காதல் குருகூர்ச் சடகோபன் சொன்ன –திருவாய் -2-1-1-என்னுமா போலே –
சோக ஸ்லோகத்வமாகத-பால -2-40-என்னக் கடவது இறே
என்னளவிலேயாய்ப் போகை அன்றியே -நாட்டார்க்கும் எல்லாம் பக்தி பிரகாசிக்கும் படி பண்ணினேன்
தமக்கு உண்டான சாஷாத்காரம் இப்பிரபந்தம் கற்றார்க்கும் உண்டாக்கவற்று –
இனி இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரஸ்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-
———————–
பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் கீழ் பாசுரத்தில் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-
மாலே –
சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -என்றுமாம் –
நெடியானே-
அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே -என்றுமாம் –
கண்ணனே-
கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே -என்னுதல்-
விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே –
ஐஸ்வர் யத்துக்கு எல்லை இல்லாமை –
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலை யுடையவனே –
அவர்களுக்கு தோள் மாலை இட்டு ஒப்பித்துக் காட்டினபடி –
மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே –
பண்டு கன்றாலே விளவின் காயை விழ விட்டவனே –
கன்றையும் விளாவாயும் வந்த அஸூரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே –
நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –
என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –
இன்று ஆஸ்ரயித்த அளவன்று உன் பக்கல் ஸ்நேஹம் –இத்தை அகம் சுரிப்படுத்த வேணும் -தரமி அழியப் புகா நின்றது –
ஸ்நேஹோ மே பரம -உத்தர -40-16-
அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –
அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –
அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்
அன்றிக்கே -ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இறே –
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –
————————————————————————–
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –
ஸ்ரீ திருக்கடல் மல்லையில் குருக்கத்திப் பூவில் திரு அவதாரம் -அயோநிஜர்
பூதம் -உண்மை -ஆத்மா -ஞாநீத் ஆத்மைவ மே மதம் –
சித்தார்த்தி சம்வஸ்தரம்-ஐப்பசி மாசம் -சுக்ல நவமி -புதன் கிழமை -அவிட்ட நஷத்ரம்
ஸ்ரீ கௌமோதிகியின் அம்சம்
இவர் மங்களா சாசனம் –ஸ்ரீ கோயில்–ஸ்ரீ திருமலை-ஸ்ரீ திருக்கடல்மலை -ஸ்ரீ திருக்கோவலூர்
————————————————————————–
அன்பே தகழி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே
நல்ல திருக்கடல் மலை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரி இட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கன் புகழ் உரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலதில் வாழியே
————————————————————————–
ஸ்ரீ திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –
என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம்-
என் பிறவி தீர இறைஞ்சினேன் –
என் பிறவியாவது –இவர் தாம் -இது கண்டால் நல் நெஞ்சே -இப்பிறவி யாவது -66–என்று அருளிச் செய்த படியே
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -பல் பிறவியில் படிந்து -பிறவிப் பெரும் கடலிலே -உடலாழி பிறவியிலே புக்கு ஒழிகை
ஏவம் விதமான ஜென்ம பரம்பரைகள் தீரும் படி ஜென்ம வைபவத்தை யுடைய பூதத்தார் பொன்னங்கழலை இறைஞ்சினேன் -என்கிறது
இறைஞ்சுகை -பஜிக்கை –அதாவது சேவிக்கை-என்றபடி –
பொன்னங்கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து -என்னுமா போலே
ஸ்ரீ பூதத் திருவடிகளுடைய பொன்னங்கழலுக்கு ஆன ஜென்மம் கழலும் இறே
இனி அவர் உபகாரகத்வ வைபவம் சொல்லுகிறது –
இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் – என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னும்படி உபகரிக்கை –
அன்றிக்கே கொடுக்கை –
கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே
ஸ்லாக்கியமான யசஸ் சேரும் ஊருமாய் –நன் புகழ் சேர்
நன் புகழ் ஆவது –
யசஸ் சைக பாஜனம்
சேரும் கொடை புகழ் எல்லை இலானை
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே
எண்ணிறந்த புகழினானை -என்னும்படியான
ஸ்ரீ கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-
எப்புவியும் பேசும் புகழ் ஸ்ரீ பூதத்தாரையும்-உடைத்தாகையாலும் –
சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-
சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –
இக்கரை ஏறி -என்னக் கடவது இறே
கரை கண்டார் என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்
கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மலை இறே
ஸ்ரீ மா மயிலை என்று இறே இவர் தாமும் மண்டி இருப்பது
ஸ்ரீ கச்சிக் கிடந்தவனூர் கடல் மலை தல சயனம் -என்று அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இறே பாடினார்
ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது
கடல் மலை பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப்பூதம் –
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இ றே
கடல் மலை பூதத்தார் –
ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசிஅவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இறே -அத்தை இட்டு –கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -ஸ்ரீ கடல் மலை தல சயனது உறைவார் -என்று இறே நிரூபகம்
பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி -என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி -என்னக் கடவது இறே
பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது
இத்தால் ஸ்ரீ பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று
————————————————————————–
அவதாரிகை –
கீழில் திருவந்தாதியில்
உபய விபூதி உக்தனானவன் ஜகத்துக்கு சேஷி என்றார் –
இவர் அவ் உபய விபூதியையும் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து பக்தி பரவசராய் கவி பாடுகிறார் –
அவருக்கு இந்த பக்தி இல்லையோ என்னில் -உண்டு
காரண கார்ய ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது –
உபய விபூதியையும் அனுசந்தித்து பிறந்த ஞானம் அவரது-அது பக்வமாய்
பக்தி ரூபாபன்ன மான படி இவரது-
ஸ்ரீ ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஞ்ஞராய் இறே பரிமாறுவது –
அவர் ஞான விஷயத்தை தகளியாக்கினார்
இவர் ஞான விசேஷத்தை தகளி ஆக்குகிறார்-
————————————————————————–
ஜகத் வைசித்ரி யினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னை திருத்தினபடி என்று அனுசந்திக்கிறார் -விசித்ரம் ஆக்கினான்
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-
வியாக்யானம் –
அன்பே தகளியா –
வையம் தகளியா என்று வையத்தை தம்முடைய
பக்தியிலே அனுசந்தித்து பக்தியை தகளியாக கொள்ளுகிறார் –
தைல வர்திகளுக்கு ஒரு ஆதாரம் வேணுமே –
ஆர்வமே நெய்யாக –
அதடியாக பிறந்த அபிநிவேசமே நெய்யாக –
ஆர்வம் ஆகிறது -அன்பினுடைய த்விதீய பர்வம் –
இன்புருகு சிந்தை இடு திரியா –
விஷயத்தின் உடைய ரஸ்யதையாலே சிதிலமான ஹ்ருதயம் திரியாக –
நன்புருகி –
நன்பு என்று ஞானம்
தத் குண சாரத்வாத் -என்கிறபடி ஞாதாவைக் காட்டுகிறது –
அதாஹ்ய என்கிற ஆத்மா
இந்த பக்திக்கு அனுரூபமான சம்பந்தத்தை உடையவருக்கு
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
பர பக்தி ஆகிற விளக்கு ஏற்றினேன்
நாரணற்கு-ஞானத் தமிழ் புரிந்தேன் நான் –
பரபக்தி பரவசனாய் கவி பாடுகிற நான் –
———————-
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-
மாலே
ஸ்ரீ சர்வாதிகனே
நெடியானே
அபரிச்சேத்யனானவனே
விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே-
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய்
ஐஸ்வர்ய சூசகமான திருத் துழாய் மாலையை உடையையாய்
மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே
பண்டு கன்றாலே விளங்காயை வீழ விட்டவனே
கண்ணனே
என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –
என் ஆஸ்ரயத்தின் அளவன்று
உன் பக்கல் ஸ்நேஹம்
இத்தை யகஞ்சுரிப் படுத்த வேணும்
ஆல்-ஆச்சர்யம் –
—————————————————-
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-
ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே –ஐப்பசி -அவிட்டத்தில்-
ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –
ஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –
துலாத நிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின
தீரே பு ல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம் சஜம் –
மல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-
அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே
நல்ல திருக் கடல் மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கர் புகழ் யுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே –
——————————————————————————————
ஸ்ரீ திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –
என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –
இதில் திவ்ய பிரபந்த ப்ரதாதாவுமாய் -திவ்ய தேசத்தை ஜென்ம தேசமாக யுடையாருமாய் இருக்கிற ஸ்ரீ பூதத்தாருடைய
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஜென்ம சம்பந்தம் அறும் படி பஜித்தேன் என்கிறது –
இன்னமுதாய் -அன்பே தகழி யளித்தா ருமாய் -நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை ஸ்ரீ பூதத்தார்
பொன் அம் கழல் களை -என் பிறவி தீர இறைஞ்சினேன் -என்கிறது –
இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் – என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னும்படி உபகரிக்கை –
அன்றிக்கே கொடுக்கை –
கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே
ஸ்லாக்கியமான யசஸ் சேரும் ஊருமாய் -நன் புகழ் சேர்
நன் புகழ் ஆவது –
யசஸ் சைக பாஜனம்
சேரும் கொடை புகழ் எல்லை இலானை
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே
எண்ணிறந்த புகழினானை -என்னும்படியான ஸ்ரீ கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-
எப்புவியும் பேசும் புகழ் ஸ்ரீ பூதத்தாரையும் உடைத்ததாகையாலும் –
சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-
சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –
இக்கரை ஏறி -என்னக் கடவது இறே
கரை கண்டார் என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்
கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மலை இறே
ஸ்ரீ மா மயிலை என்று இறே இவர் தாமும் மண்டி இருப்பது
ஸ்ரீ கச்சிக் கிடந்தவனூர் ஸ்ரீ கடல் மலை தல சயனம் -என்று அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இறே பாடினார்
ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது
கடல் மலை பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப்பூதம் –
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இறே-
கடல் மலை பூதத்தார் –
ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசிஅவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இறே -அத்தை இட்டு -ஸ்ரீ கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -ஸ்ரீ கடல் மலை தல சயனது உறைவார் -என்று இறே நிரூபகம்
பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி -என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி -என்னக் கடவது இறே
பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது
இத்தால் ஸ்ரீ பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று-
—————————————————————————————————-
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த அவதாரிகை –
கீழில் திருவந்தாதியில் உபய விபூதி நாதனாய் சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைத்
தன் நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷ லப்தமாய் பரபக்தி தசா பன்னமானஞான விசேஷத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
அனுபவ ஜெனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி
ப்ராப்தாவான ஆத்மாவினுடைய சேஷத்வமான ஸ்வரூபத்தையும் சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே பண்ணும் நித்ய கைங்கர்யமே
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் என்னும் இடத்தையும் அந்த ப்ராப்யத்தைக் கைப் படுத்தித் தரும் ஸ்வரூப அனுரூபமான ப்ராபகமும்
அவன் திருவடிகளே என்னும் இடத்தையும் அறுதியிட்டார் முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கையை யாழ்வார்-
அநந்தரம் ஸ்ரீ பூதத்தார் -வையம் தகளி யில் அருளிச் செய்த எம்பெருமான் படிகளைக் கூட இருந்து
உத்தரோத்தரம் அனுபவித்துக் கொண்டு போருகையாலே-
ஸ்ரீ எம்பெருமானுடைய அருளே தளமாக முளைத்துக் கிளர்ந்த தம்முடைய பரபக்தியானது பரஞான தசா பன்னமாம் படி பரிபக்குவமாய் வளர –
அந்த பரஞான தசா பன்ன ப்ரேம விசேஷத்தாலே அவன் படிகளைக் கட்டடங்க சாஷாத் கரித்து அனுசந்தித்துத் தாம் அனுபவித்த பிரகாரத்தை
நாடு அறிந்து அனுசந்தித்து வாழும் படி நடை விளங்கு தமிழ் மாலையாலே பேசித் தலைக் கட்டுகிறார் –
பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் -அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபித்துக் கொண்டு பேசினார் ஸ்ரீ பொய்கையார் –
இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ்விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக ப்ரத்யக் வஸ்துவான
ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –
பரபக்த்யாதிகள் மூன்றும் மூவர்க்கும் தனித்தனியே குறைவற உண்டாய் இருக்கச் செய்தேயும் ஓர் ஒருத்தருக்கு ஒரோ அவஸ்தை
தலையெடுத்து -அல்லாத அவஸ்தைகள் அதுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் -பரஞான பரம பக்திகள் நிழலிட்டுத் தோற்றும்படியே
பரபக்தியே விஞ்சி இருக்கும் அவருக்கு -பரபக்தி முற்றிப் பக்வமானதாய் பரமபக்தி சிரஸிகமான பர ஞானமேயாய் இருக்கும் இவருக்கு
பரம பக்தியே விஞ்சிப் பர பக்தி பர ஞானங்கள் இரண்டும் அதன் கீழே செருகிக் கிடக்கும் மற்றையவருக்கு –
பர பக்த்யாதிகளினுடைய உத் பத்தியும் வ்ருத்தியும் இன்னாருக்கு இன்ன போது இன்னது தலை எடுக்கக் கடவது
இன்னது அடங்கிக் கிடக்கக் கடவது என்னும் இவை எல்லாம் ஸ்ரீ ஈஸ்வரன் நினைவாலே உண்டாகத் தட்டில்லை –
பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரபக்தி–சாஷாத் காரம் பரஞானம் —
பின்பு உத்தரோத்தரம் அனுபவிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரமபக்தி –
சம்ஸ்லேஷத்தில் ஸூ கித்து –விஸ்லேஷத்திலே துக்கிக்கும் படி இருக்கை பரபக்தி –
அடியாரோடு இருந்தமை -என்னும் படி பூர்ண சாஷாத் காரம் பர ஞானம் –
அனுபவம் பெறா விடில் நீரைப் பிரிந்த மத்ஸ்யம் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை பரம பக்தி என்று அருளிச் செய்யும் படி –
நிரூபித்தால் தன்னில் இரண்டும் ஒக்கும் -இவை பிராமாணி கருக்கு முக்கிய அவஸ்தையில் உண்டாம் இத்தனை –
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஸ்ரீ ஆழ்வார்களுக்கு இங்கே இருக்கச் செய்தே பகவத் பிரசாதத்தாலே யுண்டாய்த்து –
இனி -பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பிராமாணிகருக்கு அவன் பக்கலிலே பிரார்த்துப் பெற வேணும் –
ஞான தர்சன ப்ராப்திகள் என்று சாஸ்திரங்களில் பர பக்த்யாதிகளைச் சொல்லும் –
ஞாதும் த்ரஷ்டுஞ்ச்ச தத்த்வேன பிரவேஷ்டுஞ்ச பரந்தப–ஸ்ரீ கீதை -11 -15-என்று இறே ஸ்ரீ கீதாச்சார்யன் வார்த்தை
சம்ஞ்ஞாயதே சந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 -5-87–என்று இறே பராசர வசனம் –
———————————–
பகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக நிரூபியா நின்று கொண்டு
சர்வ சேஷியான நாராயணனுக்குப் பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி அடிமை செய்யப் பெற்றேன்
என்று க்ருதார்த்தர் ஆகிறார் –
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-
விஷய வைக்ஷண்யம் தளமாக முளைத்துக் கிளருகிற பரபக்தி உபக்ரம ரூபமான ஸ்நேஹமானது -மேல் சொல்லுகிற
நெய் திரி முதலான வற்றுக்கு ஆதாரமான தகளி யாகவும் –
அந்த விஷய வைலக்ஷண்யத்துக்கு என் புகுகிறதோ என்று பரிந்து காப்பிடும் படி பரிபக்குவ தசாபன்னமான அபிநிவேசமானது
மேல் ஏற்றத் தேடுகிற விளக்கை வளர்க்கைக்கு உறுப்பான நெய்யாகவும் –
விஷய வைலக்ஷண்ய அனுசந்தான ஜெனிதமான ஆனந்தத்தால் த்ரவீ பூதமான அந்த
ப்ரேம அவஸ்தைகளுக்கு வாய்த்தலையான ஹிருதயமானது மேல் சொல்லுகிற பரஞானம் ஆகிற விளக்குக்கு இடப்படும் திரியாகவும் –
ஞான ஆனந்த லக்ஷணமாய் -ஞான குணகமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷம் ஆகையால் அத்யந்த விலக்ஷணமான
ஆத்ம வஸ்துவானது பகவத் குணாஸ்வாத ரசத்தாலே-த்ரவ்ய த்ரவ்யமாய் யுருகிப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை
ஸ்ரீ பகவத் தத்வ யாதாம்ய ஞான ஜனகமாய் -வேதாதிகள் போலே அதிகாரம் அநாதிகாரம் அன்றிக்கே
சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை லோக உபகாரகமாகப் பண்ணின நான்-சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனுக்கு
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்கள் உள்ள படியே பிரகாசிக்கும் படி ஏற்றினேன் –
பேசுவிக்க ஒருப்பட்ட ஸ்ரீ ஈஸ்வரன் ஸத்ய ஸங்கல்பன் ஆகையாலும் -பேசித் தலைக் கட்டி யல்லது
தரிக்க ஒண்ணாத தம் ப்ரக்ருதியாலும் -சித்தவத் கரித்து -தமிழ் புரிந்த -என்கிறார் –
அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கவா அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–என்று ஸ்ரீ ஆழ்வாரும்
பரபக்த்யாதிகள் மூன்றும் தமக்கு உண்டு என்று அருளிச் செய்கிறவர் -சூடுதற்கவா -என்று பர பக்தியை முந்துற அருளிச் செய்து
பர ஞானம் அருளிச் செய்கிற இடத்தில் -அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் -என்று பர பக்தியால்
உருகி உக்க ஆருயிர் யுண்டு -ஆத்ம வஸ்து –அதின் இடத்தில் யுண்டான ஸூஷ்மமான காதல் -என்று
பர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் என்னும் இடம் அருளிச் செய்தார் இறே –
அந்த நேரிய காதலாலே உண்டான அன்பு -என்று பரம பக்தியைச் சொல்லுகிறது –
ஆவல் அன்பு யுடையார் –நாச் 4-8–என்றும்
ஸ்ரத்தை தன்னால் வேடிக்கை மீதூர -திருக் குறுந்தாண்டகம் -4-என்றும் –
ஈர நெல் வித்தி –பேரமர் காதல் -5-3-4-என்றும்
பர பக்தி தனக்கே இரண்டும் உண்டாக அருளிச் செய்கையாலே -அன்பு -ஆர்வம் -என்று ஓர் அவஸ்தை தன்னில்
உபக்ரம சரம அவஸ்தைகளை சொல்லத் தட்டில்லை –
சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62 -என்று இறே ஸ்ரீ கீதாச்சார்யனும் அருளிச் செய்தது –
காமோ நாம சங்கஸ்ய விபாக தசா -என்று இறே அதுக்கு பாஷ்யம் –
ஸ்நேஹோ மே பரம –பக்திஸ்ஸ நியதா வீர -என்றான் இறே ஸ்ரீ திருவடியும் –
ஆகையால் பார்ப்பக்த்யங்குர ரூபமான அன்பே தகளி என்றும் –அத்தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் -நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி
விழும்படியான பரஞான அவஸ்தையை விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள் -5-3-4-என்று பக்த்யங்குரமான சங்க அவஸ்தை முதலாக
நெஞ்சு தளமாக உண்டாமதாயிருக்க பர ஞான அவஸ்தைக்கு காரணமாக நெஞ்சை சொல்லுகிறது –
உருகுமால் நெஞ்சம் –பெருகுமால் வேட்க்கை–9 -6 -1-என்று பர பக்த் யவஸ்தையில் காரணமான நெஞ்சும் உருகும்
பர ஞான அவஸ்தையில் கரணமான நெஞ்சும் -கரணியான ஆத்மாவும் உருகும் -என்கிற விசேஷம் தோற்றுகைக்காக–
——————-
பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் கீழ் பாசுரத்தில் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன –
கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் –
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-
ஸ்வரூப ரூப குணங்களால் வந்த பெருமையை உடையனாய் விபூதி யோகத்தால் வந்த வைபவத்தை யுடையனாய் –
ஸ்வ வியதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் நிர்வாஹகனாய் –
ஸ்ரீ பரமபத வாசிகளான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகு பட்ட இருக்குமவனாய் –
அவர்கள் உகக்கும்படி அத்யாச்சர்யமான திருத் துழாய் மாலையாலே அழகு பெற ஒப்பித்துக் கொண்டு இருக்குமவனாய் –
இப்படி இருந்து வைத்து ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அஸூரா விஷ்டமாய் நின்ற
விளாவின் காயை அஸூரமயமான கன்றாலே விழ விட்டவனே
உன் பக்கல் நான் உடையேனான ப்ரேமம் ஆச்சர்ய பூதனான என்னளவில் அடங்கி நிற்பது ஓன்று அன்று
தர்மி அழியாத படி அத்தை அகஞ்சுரிப் படுத்தித் தந்து அருள வேணும் –
அதவா
ஆஸ்ரித வியாமுக்தனாய் -அந்த வியாமுக்தத்துக்கு எல்லை இல்லாதபடி இருக்குமவனாய் -அந்த வியாமோஹம் ப்ரேரிக்க
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஆஸ்ரிதற்கு பவ்யாநாய இருக்குமவனாய்
இந்நிலையில் ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகான பெருமையை யுடையனாய் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
விளாவாய் நின்ற அசுரனை கன்றாய் நின்ற அசுரானாலே யறிந்து விழ விட்ட -இரண்டையும் முறித்துப் பொகட்டால் போலே
என் விரோதியைப் போக்கினவனே -எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று –
இத்தை அமைத்து அருள வேணும் -என்கிறாராகவுமாம் –
——————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply