ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் –பாரமாய பழ வினை/துண்ட வெண் பிறையன்/பரியனாகி வந்த–வியாக்யானம் –

அவதாரிகை-

மேல் இரண்டு பாட்டில் –
நாராயண சப்தார்தம் உள்ளீடாகப்
பெரிய பிராட்டியார் உடைய நிவாஸத்தால் நிகரில்லாத திரு மார்பையும்
திருக் கழுத்தையும் அனுபவிக்கிறார் –

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே ————-5-

பதவுரை
பாரம் ஆய–பொறுக்கமுடியாத சுமையாயிராநின்ற
பழ வினை–அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து–சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை-(அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான்-தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்);
வைத்தது அன்றி–இப்படி செய்து வைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான்–என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக, நான்)
கோரம் மா தவம்-உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல்–(முற்பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன்-அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான்-ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம்-பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ-அத்திருமார்பன்றோ
அடியேனை-தாஸனான என்னை
ஆள் கொண்டது-அடிமைப்படுத்திக் கொண்டது.

வியாக்யானம்-

பாரமாய பழ வினை பற்று அறுத்து –
கால தத்வம் உள்ளதனையும் ப்ராயாச் சித்தம் பண்ணினாலும் கழிக்க ஒண்ணாத படி
உபசிதமாய்க் கொண்டு-சேர்த்துக் கொண்டு-அநாதி காலம் நடக்கிற சம்சாரிக கர்மக லாபத்தை
(யத் ப்ரஹ்ம கல்ப நியுத அநு பவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ க்ஷணார்த்தே)
ச வாசனமாக என்னுடன் துவக்கு அறுத்து

என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் –
இப்படி கர்ம பரவசனாய் இந்த்ரிய கிங்கரனாய் தாத்ருசரான இந்த்ராதிகளை எடுத்துச்
சுமந்து தனிசு தீராதே ( வட்டி மட்டும் செலுத்தும் )-பொலிசை இறுத்துத் திரிகிற என்னை –
அபஹத பாப்மாவாய் ஸ்வாமி பாவத்துக்கு எல்லை நிலமாய் ஸூரி போக்யனான
தன்னுடைய அந்தபுர ஸ்திரீகளைப் போலே அன்யர்க்கு கூறு இல்லாதபடி பண்ணி
அசாதாரண கைங்கர்ய ரசத்தை -தந்து இது மேல் ஒரு காலத்திலும் மாறாதபடி வைத்தான் –

வைத்ததன்றி என்னுள் புகுந்தான் –
அநந்யனாக்கி வைத்த வளவன்றிக்கே முன்பு பிரயோஜ நாந்தர ப்ரவணனான
என்னுடைய ஹ்ருதயத்தில் அநந்ய பிரயோஜன அநுபவ விஷயமாக்கிக் கொண்டு –
தஸ்யு பரிக்ருஹீதமான தன் படை வீட்டிலே தஸ்யுக்களை ஒட்டி புகுருமா போலே புகுந்தான் –

கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் –
அநாதி காலம் இழந்த வஸ்துவைப் பெறுகைக்கு அகர்ம வச்யனான ஈஸ்வரன் தானே –
அவதார ஷேத்ரமான அயோத்யையும் விட்டு –
ஆஸ்ரதன் இருப்பிடமான லங்கையிலும் போகாதே –
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டிலே –
அதி கோரமாய் -அதி மஹத்தாய் இருப்பதொரு தபஸை பண்ணினானோ -அறிகிலேன்
இது அதிவாத கர்ப்பமாக உத்ப்ரேஷித்த படி( மிகைப்படுத்தி ஊஹித்த படி )-சர்வ சம்சார நிவர்தகமாய்-
அமோகமாய் இருப்பதொரு –
மோஷ யிஷ்யாமி -என்கிற சங்கல்ப ரூபமான தபசி பண்ணினான் என்று தாத்பர்யம் –

அங்கன் அன்றிக்கே –
இப் பெரிய பேறு பெறுகைக்கு அயோயனான நான் இதுக்கு அநு ரூபமாய் அமோகமாய்
இருப்பதொரு மகா தபசி பண்ணிப் பெற்றேன் அல்லேன் –
இதுக்கு –
ப்ரியமிதர ததாபி வா யத்யதா விதரசி வரதப்ரபோ த்வம் ஹி மே தத் அநு பவநமேவ யுக்தம் ஹி மே
த்வயி நிஹித பரோஸ்ஸ்மி சோஸ்ஹம் யத -என்றும் –
தவ பரோஹம் அகாரிஷி தார்மிகை சரணம் இத்யபி வாச முதைரிரம்- இதி ச சாக்ஷி கயந்நித மத்ய மாம் குரு
பரம் தவ ரங்க துரந்தர–ஆச்சார்யர்களால் நான் தேவரீருக்கு பரமாகச் சமர்ப்பிக்கப் பட்டேன் -என்றும் சொல்லுகிறபடியே –
இப்போது நானும் பிறரும் அறியலாவது எனக்கொரு தபஸ் காண்கிறிலேன் -என்று ஈஸ்வரன் உடைய
இரக்கத்தின் ப்ராதான்யத்திலே தாத் பர்யமாகவுமாம்-
(குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம்மீசனே —90-
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணார விந்தே )

இப்படி ஷூத்ரனான என் திறத்தில் இறங்கினவன் தான் –
தேற ஒண்ணாத -திருவில்லாத் தேவரில் ஒருவன் அல்லன் –
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பன் -என்னும் -இடத்தையும் –
சேஷபூதரான தமக்கு -ஸ்ரீ தரனே கைங்கர்ய பிரதிசம்பந்தி என்னும் இடத்தையும்
திறம்பாத-மாறாத- சிந்தைக்கு சிக்கெனக் காட்டிக் கொடுக்கிறார் –

அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே –
சர்வருக்கும் அனுபவிக்கலாம்படி -சர்வ சஹிஷ்ணுவாய்க் கொண்டு -( அனைத்தையும் பொறுப்பவன்)-
கோயில் ஆழ்வாருக்கு உள்ளே சௌலப்ய காஷ்டையோடு விரோதியாத ஸ்வாமித்வ காஷ்டையை உடையரான
பெருமாளுடைய சேஷித்வ பூர்த்திக்கு லஷணமான திருவையும்
அழகு வெள்ளத்துக்கு அணை கோலினால் போலே இருக்கிற ஹாரத்தையும் உடைத்தான
திரு மார்வன்றோ ஸ்வா பாவிக சேஷித்வ அநுபவ ரசிகனாய்
அதுக்கு மேலே குணைர் தாஸ்ய முபாகதனுமான என்னை ஸ்வரூப அநு ரூபமான
ஸ்தோத்ராதி சேஷ வ்ருத்தியிலே மூட்டி அதுக்கு இலக்காய் நின்றது –

இப்பாட்டில்-பதங்களின் அடைவே-நாராயண சப்தத்தில் விவஷிதமான
1-அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
2-இஷ்ட -ப்ராபகத்வமும் –
3/4-உள்ளும் புறமும் வியாபித்து நிற்கும் படியும்
5-நித்ய -கிருபையும்
6-உபாயத்துக்கு பிரதானமான சௌலப்யமும்
7-ப்ராப்யத்துக்கு பிரதானமான ஸ்வாமித்வமும்
8-சர்வ அநு குணமான ஸ்ரீ ய பதித்வமும்
9-பூஷண அஸ்த்ர ரூபங்களாக புவனங்களை தரிக்கிற போக்ய தமமான விக்ரஹ யோகமும்
10-நார சப்தார்த்தமான தாஸ பூதன் ஸ்வரூபமும்
11-தாஸ்ய பலமாக பிரார்த்திக்கப்படும் கைங்கர்யமும்–அனுசந்தேயம்

நாராயண சப்தார்த்தம்
1-அஷ்ட நிவர்த்தகம் –பழ வினை பற்று அறுத்து
2-இஷ்ட ப்ராபகத்வம் -வாரமாக்கி வைத்தான்
3-பஹிர் வ்யாப்தி -வாரமாக்கி வைத்தான்
4-அந்தர் வ்யாப்தி -என்னுள் புகுந்தான்
5-நித்ய கிருபை -கோர மாதவம்
6-ஸுலப்யம் -செய்தனன்
7-ஸ்வாமித்வம் -அரங்கத்தம்மான்
8-ஸ்ரீ யபதித்தவம் -திரு
9-திவ்ய மங்கள விக்ரஹ யோகம் -ஆர மார்பு
10-தாஸ பூத ஸ்வரூபம் -அடியேனை
11-தாஸ்ய பல கைங்கர்யம் -ஆட்கொண்டதே

—————————–

அவதாரிகை –

கீழ்ப் பாட்டில்
கைங்கர்ய அர்த்தியான தம்முடைய கைங்கர்ய விரோதிகளான
நிருபாதிக ஸ்வாமித்வ அபிமான மூலங்களை எல்லாம் நிராகரித்த படியை -அருளிச் செய்தார் –
இப் பாட்டில்
ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான
பிஷூ தசையை-இஹ லோக செல்வ நசையை- கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —————6-

பதவுரை

துண்டம்–ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான)
வெண்பிறையன்–வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய
துயர்-(பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை
தீர்த்தவன்–போக்கினவனும்
அம் சிறைய வண்டு–அழகிய சிறகையுடைய வண்டுகள்
வாழ்–வாழ்தற்கிடமான
பொழில் சூழ்–சோலைகள் சூழப் பெற்ற
அரங்கம் நகர்-திருவரங்கப் பெரு நகரிலே
மேய-பொருந்தி யிரா நின்ற
அப்பன்-ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய
அண்டர்-அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம்–அண்டங்களையும்
பகிரண்டம்-அண்டாவரணங்களையும்
ஒரு மா நிலம்-ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும்
எழு மால் வரை-ஏழு குல பர்வதங்களையும்
முற்றும்-சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்
உண்ட-அமுதுசெய்த
கண்டம் கண்டீர்-திருக்கழுத்துக்கிடீர்
அடியேனை-தாஸனான என்னை
உய்யக் கொண்டது-உஜ்ஜீவிப்பித்தது

வியாக்யானம் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
ஈஸ்வரன் என்று பேரைச் சுமந்த தனக்கும் பூரணத்வம் இல்லை என்கைக்கு ஜ்ஞாபகம் போலே
சகல மாத்ரமாய்க் கொண்டு பிரகாசிக்கிற சந்திர கலையை தரிக்கிற ருத்ரன் ப்ரஹ்மாவினுடைய புத்ரனாய் வைத்து –
பிதாவின் திறத்திலே அபராதம் பண்ணி -அத்தாலே மஹா பாதகா க்ராந்தனாய் -இப்பாதகத்தை தீர்க்க வல்லார் ஆர் -என்று
கரகலித கபாலனாய்க் கொண்டு திரிந்து -ஓர் அளவிலே கெடு மரக்கலம் கரை சேர்ந்தாப் போலே
காருணிகனான சர்வேஸ்வரனை வந்து கண்டு –
என்னெந்தாய் சாபம் தீர் -என்ன-இவனுடைய சாபத்தைத் தீர்க்க -வல்லவன் –

இத்தால்
ஈஸ்வரன் என்று பேருடைய ருத்ரன் கர்ம வைஷ்யன் என்னும் இடமும்
தன்னைத் தான் ரஷித்துக் கொள்ள மாட்டாத இவன் வேறு ஒருத்தருக்கு நிரபேஷை ரஷகனாக மாட்டான் என்னும் இடமும்
சர்வேஸ்வரனே சர்வ அநிஷ்ட நிவர்த்தகன் என்னும் இடமும் சொல்லிற்று ஆயிற்று-

அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் –
ஆர்த்தி வுடையார் அபேஷித்தால் அவர்களுக்கு தூத க்ருத்யம் பண்ணுகைக்கும்
(தருமன் விடத் தான் தூது போனார் வந்தார் )
மாசில் மலரடிக் கீழ் அவர்களை சேர்க்கைக்கும் ஹேதுவான கதிக்கு சாதனங்களாய் –
(எம் மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே–திரு விருத்தம் -54-)
அபி ரூபங்களான சிறகுகளை உடைத்தான வண்டுகள்
அபிமத போகத்தோடே வாழுகிற திவ்ய உத்யானங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ ரெங்க நகரத்திலே
நித்ய வாஸம் பண்ணுகிற சேவை லோக பிதாவானவன் –

இத்தால்-
காரண பூதனாய் –
கரண களேபரங்களை கொடுத்து உபகரித்தவன் கண்ணுக்கு இலக்காய் வந்து கண் வளர்ந்து –
கரணங்கள் பட்டி புகுராதபடி காக்கிற உபகார அதிசயத்தை உதாஹரிக்கிறது -ஆகிறது –
(உடையவன் உடைமையை ரஷிக்கையும் ஸமர்த்தன் அசமர்த்தனை ரஷிக்கையும்
பிராப்தம் இறே-பிரதான பிரதிதந்தர அதிகாரம் )
ந ராஜ் ஜாதாநி தத்வான் -இத்யாதிகளின் அர்த்தமும்-இங்கே அனுசந்தேயம்

காரண அவஸ்தையில் எல்லாக் கார்யங்களையும் தன் பக்கலிலே உப சம்ஹரித்து
பின்பு ஸ்ருஷ்டிக்கும் படிக்கு உதாஹரணமாக -வெற்றிப் போர்க் கடலைரையன் விழுங்காமல்
தான் விழுங்கி உய்யக் கொண்ட உபகாரத்தைக் காட்டி –
நெற்றி மேல் கண்ணானும் நான் முகனும் – முதலாக -எம்பெருமான் உண்டு உமிழ்ந்த
எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே -என்னும்
அர்த்தத்தை பேசிக் கொண்டு தம்மை இப்போது சம்சார ஆர்ணவம் விழுங்காதபடி
உய்யக் கொண்ட படியை உபாலாலிக்கிறார்-

அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே-
அண்டாந்த வர்த்திகளான தேவாதி வர்க்கங்களையும் -அண்டங்கள் தன்னையும் –
அண்ட ஆவரணங்களையும் -அண்டங்களுக்கு உள்ளே பஞ்சா சத கோடி-ஐம்பது கோடி யோஜனை பரந்த
விஸ்தீரணையான- மஹா ப்ருதிவியாலும் குல பர்வதங்களாலும் உப லஷிதங்களான சர்வ கார்யங்களையும்
எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கைக்காக விழுங்கின திருக் கழுத்து கண்டீர் –
ஸ்வரூபத்தை -உணர்த்தி என்னை ஸ்வ அனுபவத்தில் உஜ்ஜீவிப்பித்தது –
அண்டாதிகளைப் பற்ற சிறியலான குல பர்வதங்களை பிறியப் பேசுகையாலே
அவ்வளவு விழுங்குகையும் ஆச்சர்யம் என்று தோன்றுகிறது-

—————————————–

அவதாரிகை-

கீழே நாலு பாட்டாலே
ப்ரார்த்த நீயமான கைங்கர்யத்துக்கு ப்ரசாதகமான அநுபவம்
தம்மை இப்போது பரவசம் ஆக்கின படியைப் பேசுகிறார் -இதில் -கையினார் -என்கிற பாட்டில் –
ஆழ்வார்களோடு பொருந்தின திருக் கையை அவலம்பநமாகக் கொண்டு
திருமுடி யளவும் சென்று மீண்ட சிந்தையை
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானுடைய கோலம் திரள் பவளக் கொளுந்துண்டம் கொல் -7-7-3–என்னும்படியான
திருப் பவளத்தில் அழகு தன் வசம் ஆக்கிற்று என்கிறார்-

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ————7–

பதவுரை

கையின்–திருக் கைகளில்
ஆர்-பொருந்தியிருக்கிற
சுரி சங்கு-சுரியையுடைய திருச்சங்கையும்
அனல் ஆழியர்-தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்,
நீள் வரை போல்-பெரியதொரு மலை போன்ற
மெய்யனார்-திருமேனியை யுடையராய்
துளபம் விரை ஆர்-திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ்-பரிமளியா நின்றுள்ள
நீள்முடி–உயர்ந்த திருவபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார்–எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார்-அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய–திருவனந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய
மாயனார்–ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய்–சிவந்த திருப்பவளமானது
என்னை-என்னுடைய
சிந்தை-நெஞ்சை
கவர்ந்தது-கொள்ளை கொண்டது;
ஐயோ–(ஆநந்தாதிசயக் குறிப்பு.)

வியாக்யானம் –

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் –
திருக் கைக்கு ஆயுதமாகைக்கும் ஆபரணம் ஆகைக்கும் போரும் என்னும்படி ஆர்ந்த சந்நிவேசத்தை உடைத்தாய் –
அவலம்புரியான வடிவாலே ப்ரணவ் சந்நிவேசமாய்
சப்த ப்ரஹ்ம மயமாய் -நிரதிசய ஆநந்த ஹேதுவான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் –
தாநவ வநதா வக்னியாய்-அரக்கராம் காட்டுக்குத் தீ போன்ற -மனஸ் தத்வ அபிமானியான –
மனம் திகிரியாக -திருவாழி யாழ்வானையும் உடையராய் –
( ராம அக்நிம் ஸஹஸா தீப்தம் ந பிரவேஷ்டும் த்வம் அர்ஹஸி–37-15 -ராவணன் இடம் மாரீசன் வார்த்தை )
இத்தால் –
மந்தரத்தையும் மனசையும் அநுகூல சிந்தைக்கு அனுகுணம் ஆக்க வில்ல உப கரணங்களை உடையவர் என்றது ஆய்த்து –
(நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் -பெரியாழ்வார் -1-3–12-)
திவ்யாயுத ஆழ்வார்கள் பெரிய பெருமாள் உடைய திருக்கைகளில் ரேகையில் ஒதுங்கிக் கிடந்தது –
பெருமாள் திரு மேனியிலே தோன்றி நிற்பர்கள்-

நீள் வரை போல் மெய்யனார் –
ஸ்வரூபம் போலே சூஷ்ம த்ருஷ்டிகள் காணும் அளவன்றிக்கே
மாம்ச சஷூஸ்ஸூக்களும் காணலாம் படி மலை இலக்கான திருமேனியை வுடையவர்

துளப விரையார் கமழ் நீண் முடி எம் ஐயனார் –
சர்வாதிகத்வ ஸூசகமான திருத் துழாயின் பரிமளத்தைப் பரி பூர்ணம் ஆக்கும்படி கமழ்ந்து –
(வானோர் தலைமகனாம் –சீராயின தெய்வ நல் நோய் இது –
தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழையாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே –திரு விருத்தம் -53- )
விபூதி த்வய சாம்ராஜ்ய வ்யஞ்சகமான திவ்ய கிரீடத்தை வுடைய சர்வ லோக பிதாவானவர்

அணி அரங்கனார் –
பரம வ்யோம ஷீரார்ண வாதிகளைக் காட்டில் குணா திசயத்தாலே
ஆஸ்ரீதற்கு ஹ்ருத்ய தமமான படியாலே விபூதி இரண்டுக்கும் ஏக ஆபரணம் என்னலாய்
சௌலப்ய அதிசயம் உண்டாம் படியான ஸ்ரீ ரெங்க விமாநத்தை சயன ஸ்தானமாக உடையவர்
அணிமையாலே-அணு-திவ்ய மங்கள விக்ரஹத்தை சிறியதாக ஆக்கிக் கொண்டு-
அணி அரங்கனார் -என்கிறது ஆகவுமாம்

அரவின் அணை மிசை மேய மாயனார் செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே-
தம்முடைய ஜ்ஞான பலங்கள் வடிவு கொண்டால் போல
இருக்கிற திருவனந்தாழ்வான் ஆகிற ஆநுகூலதிவ்ய பர்யங்கத்தின் மேலே அளவறத்
தேங்கின அம்ருத தடாகம் போலே ஆஸ்ரீதர்கு அனுபவிக்கலாய் –
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜா ஸ்ரீ ரெங்கேசயமாஸ்ரயே சிந்தாமணி மிவோத் வாந்தம் உத் சங்கே அநந்த போகிந
என்னும்படி அத்ய ஆச்சர்ய பூதரானவருடைய
வாலியதோர் கனி கொல் -நன்கு கனிந்த ஒப்பற்ற பழம் –என்னலாம் படி வர்ண மாதர்யாதிகளை வுடைத்தாய்
(வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -பெரியாழ்வார் -1-2-6-)
வையம் ஏழும் உள்ளே காணலாம் படியான செய்ய வாய் என் சிந்தையைப் பறித்துக் கொண்டது

ஐயோ
என்று ஆச்சர்யத்தை யாதல்
அனுபவித்து ஆற்ற அரிதான படியை யாதல்
அநுபவ ரசத்தை யாதல் -காட்டுகிறது

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading