அவதாரிகை –
இவன் திருவடிகளில் சிவப்புக்கு நிகரான திருப் பீதாம்பரம் தன் சிந்தைக்கு விஷயம் ஆகிறது என்கிறார் –
உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் .காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே ———-2–
பதவுரை
உவந்த உள்ளத்தன் ஆய்–மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு
உலகம் அளந்து–மூவுலகங்களையும் அளந்து
அண்டம் உற–அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி
நிவந்த–உயர்த்தியை அடைந்த
நீள் முடியன்–பெரிய திருமுடியை யுடையவனாய்
அன்று–முற்காலத்தில்
நேர்ந்த–எதிர்த்து வந்த
நிசரசரரை–ராக்ஷஸர்களை
கவர்ந்த–உயிர் வாங்கின
வெம் கணை–கொடிய அம்புகளை யுடைய
காகுத்தன்–இராம பிரானாய்,
கடி ஆர்–மணம் மிக்க
பொழில்–சோலைகளை யுடைய
அரங்கத்து-ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான
அம்மான்-எம்பிரானுடைய
அரை-திருவரையில் (சாத்திய)
சிவந்த ஆடையின் மேல்-பீதாம்பரத்தின் மேல்
என சிந்தனை-என்னுடைய நினைவானது
சென்றது ஆம் பதிந்ததாம்
வியாக்யானம் –
உவந்த உள்ளத்தனாய் –
மஹா பலியால் அபஹ்ருதமான ராஜயத்தை மீட்டுத் தர வேண்டும் என்று இந்த்ராதிகள் இரக்க –
ஆர்த்தன்-அர்த்தார்த்தீ -ஜிஞ்ஞாஸூ -ஞானி நால்வருமே என்னை ஆஸ்ரயிப்பதால் உதாரர்கள் –
உதாரா சர்வ ஏவைதே -என்கிறபடி -இவர்கள் பக்கலிலே ப்ரீதமான திரு உள்ளத்தை உடையனாய்
அசுரனே யாகிலும் ப்ரஹ்லாதனோடு உண்டான குடல் துவக்கும் பாவித்து
ஆநுகூல்ய மிச்ரனான மஹா பலியை அழியச் செய்ய நினையாதே அவனுடைய ஔதார்யத்துக்கு
அநுகூலமாக தான் இரப்பாளானாக சென்று -அவன் கொடுக்க வாங்கு கையாலே
அவன் அளவிலும் அனுக்ரஹ உக்தனாய் அபேஷா நிரபேஷமாக எல்லார் தலையிலும்
தன் திருவடிகளை வைக்க விலக்காத அளவாலும் சர்வ விஷயத்திலும் உவந்த உள்ளத்தனாய்
(அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீ கணம் அபியாசாம வைதேஹீம் எதத்தி மம ரோஸதே -த்ரிஜடை உபதேசிக்க
ராக்ஷஸிகள் விலக்காததே பற்றாசாக அவோசத்யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வ -என்று அருளிச் செய்தாலே பிராட்டி )
இழந்த ராஜ்யத்தை வேறு எவரிடம் கேளாமல் தன்னிடம் இந்திரன் கேட்டதால் உகப்பு
காஸ்யப அதிதிக்கு பிள்ளையாய் தானே அவதரித்து கொடுத்த வரத்தை நிறைவேற்றிய உகப்பு
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய உகப்பு
குருவின் உபதேசத்தையும் உபேக்ஷித்து மஹா பலி நீர் வார்த்த உகப்பு
மன்னு நமுசியை வானில் சுழற்றிய உகப்பு
இத்தை வியாஜ்யமாக சர்வ லோகத்தையும் திருவடியால் தீண்டிய உகப்பு
உலகம் அளந்து –
அளவு பட்டுக் கொடுத்தோம் என்று இருக்கிற அசுரன் முன்னே எல்லா லோகங்களையும்
தன் திருவடிகளாலே அளவு படுத்தி –
அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
மேலே கவித்த கநக சத்ரம் போலே இருக்கிற ப்ரஹ்மாண்டத்திலே கிட்டும்படி
விஜ்ரும்பித்த பெரிய திரு அபிஷேகத்தை உடையவன் -அவன் தன்னைப் போலே
திரு அபிஷேகத்துக்கும் அவனோடு ஒக்க வளருகைக்கு ஈடான மஹிமாவும் உண்டு
கர்ம வச்யதை தோற்றும்படி பிறவி தொடக்கமாக சடையும் குண்டிகையும் சுமந்து திரிகிற
பரிச்சின்நேச்வரர் பார்த்து நிற்க இப்படி முடி சூடி நிற்கையாலே உபய விபூதி நிர்வாஹகத்வமும்
அபிவ்யக்தமாய் ஆகிறது இத்த்ரி விக்ரம அபதானம் சொன்ன இத்தாலே ஈஸ்வர சங்கா விஷயமான
இந்த்ராதிகள் இரப்பாளரான படியும் -குறை கொண்டு நான்முகன் -இத்யாதிகளில் படியே ப்ரஹ்மா
திருவடி விளக்கி ஆராதனானபடியும் -ருத்ரன் தீர்த்த பிரசாதம் பெற்றுப் பூதனான படியும்
சொல்லிற்று ஆயிற்று
இத்தால் முன் பாட்டில் சொன்ன இஷ்ட ப்ராபகத்வத்தையும் உதாஹரித்ததாய் -இனி –
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும் உதாஹரிக்கிறார் –
அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குடி இருக்க ஒண்ணாத படி த்ரைலோக்ய ஷோபம் பிறந்து –
தேவர்கள் சரணாகதராக ஆன அன்று -சக்கரவர்த்தி திருமகனாய் அவதரித்து தாடகா தாடகேய
விரோத கபந்த கர தூஷணாதிகளை நிராகரித்து இலங்கைக்கு பரிகையான லாவணார்ணவத்தை
பர்வதங்களாலே பண்பு செய்து கொம்பிலே தத்தித் திரியும் குரங்குப் படையைக் கொண்டு
இலங்கையை அடை மதிள் படுத்தின அன்றும்
பெருமாளுடைய பிரபாவம் அறியாதே விளக்கு விட்டில் போலே வந்து எதிர்ந்த பகல் போது
அறியாத கூட யோதிகளை எல்லாம் எனக்கு எனக்கு என்று இரையாக கைக் கொண்ட-
தீப்த பாவக சங்காசங்களான திருச் சரங்களை உடையவனாய்
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் நின்றவன் –
காகுத்தன் –
மாயாவிகளான ராஷசரும் கூட மோஹிக்கும்படி மனுஷ்ய பாவத்தை முன்னிட்டு நின்றவன்
(தீர்க்க பாஹு விசாலாக்ஷ சீர கிருஷ்ணாஜி நாம்பர -கந்தர்ப்ப ஸமரூபச்ச ராமோ தசாரதாத்மஜ -சூர்பணகா வார்த்தை )
(புத்ரவ் தசரதஸ் யாஸ்தே ஸிம்ஹ சம்ஹ ந நோ யுவா -ராமோ நாம மஹாஸ் கந்தோ வ்ருத்தாயத மஹா புஜ ஸ்யாம
ப்ருதுயஸா ஸ்ரீ மான் அ துல்ய பல விக்ரம ஹதஸ் தேந ஜனஸ் தாநே கரச்ச ஸஹ தூஷண -அகம்பனன் வார்த்தை )
(ந ச பித்ரா பரித்யக்த நா மர்யாதா கதஞ்சன -ந லுப்தோ ந ச துச் சீலோ ந ச ஷத்ரிய பாம்சன –
ந ச தர்ம குணைர் ஹீந கௌசல்யா ஆனந்த வர்த்தன-ந ச தீஷ்ணோ ஹி பூதா நாம் சர்வ பூத ஹிதே ரத
ராமோ விக்ரஹவான் தர்ம சாது ஸத்ய பராக்ரம -ராஜா ஸர்வஸ்ய லோகஸ்ய தேவாநாமிவ வாசவ
அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா -ந த்வம் சமர்த்தஸ்தாம் ஹர்தும் ராம சாபாஸ்ரயம் வ நே -மாரீசன் வார்த்தை )
(சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்சணீ யஸ்ய விக்ரமை பஸ்யதோ யுத்த லுப்தோஹம் க்ருத கா புருஷஸ் த்வயா -ராவணன் வார்த்தை )
காகுத்தன் –கடியார் பொழில் அரங்கத்தம்மான்
ஸூரிகள் முதலாக ஸ்தாவர ரூபங்களைக் கொண்டு நித்ய ஆமோதராய் நிற்கிற
ஆராமங்களாலே சூழப்பட்ட கோயில் ஆழ்வாருக்குள்ளே பிரஹ்மாதிகள் ஆராதிக்க
சர்வ ஸ்வாமித்வம் தோற்றக் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாளுடைய –
அரைச் சிவந்த வாடையின் மேல் –
படிச் சோதி யாடையொடும் பல்கலனாய் நின் பைம் பொற் கடிச் சோதி கலந்ததுவோ
என்னும்படி திகழா நின்ற திரு வரையிலே -மது கைடப ருதிர படலத்தாலே போலே
பாடலமாய் மரகத கிரி மேகலையில்-ஒட்டியாணத்தில் – பாலாதபம் பரந்தாப் போலே
இருக்கிற திருப் பீதாம்பர விஷயமாக
சென்றதாம் என் சிந்தனையே –
அநாதி காலம் அநு சித விஷயங்களில் ஓடி-அவர்கள் ஆடையிலே கட்டுண்ட என் சிந்தை
(கூடினேன் கூடி இளையவர் தம்மொடு அவர் தம் கலவியே கருதி—
வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வனமுலைப் பயனே பேணினேன் )
இவன் திருவடிகளைப் பற்றி என்னாலும் மீட்க ஒண்ணாதபடி திருப் பீதாம்பரத்திலே சென்று-துவக்குண்டது
என் சிந்தனை சென்றதாம் -என்கையாலே ஆச்சர்யம் தோற்றுகிறது
சென்றது –
நாம் ப்ரேரிக்க போந்த தன்று
விஷய வைலஷண்யத்தாலே ஆக்ருஷ்டமாயிற்று –
——————————————-
அவதாரிகை –
இப்படி இரண்டு பாட்டாலே பகவத் சேஷத்வ பர்யவ ஸாநத்தையும் –
அந்ய சேஷத்வ நிவ்ருதியையும் அனுசந்தித்து –
(அடியார்க்கு என்னை ஆட்படுத்த -என்று முதல் பாசுரத்தால் ததீய சேஷத்வ பர்யந்தம் ஆக்கி அருளியதையும்
இரண்டாம் பாட்டால் உலகம் அளந்து அருளி-உலகமே அவனுக்கு சேஷம் -அயோக வியவச்சேதம் –
வேறு யாருக்கும் சேஷம் இல்லை அந்நிய யோக வியவச்சேதம் -)
அநந்தரம் –
சேஷ பூதமான சேதன அசேதன வர்க்க பிரதிபாதகமான த்ருதீய அஷரம் முதலான த்ருதீய காதையாலே –
சேஷத்வ ஞான ஹீனராயும் -விச்சேதம் இல்லாத சேஷத்வ ஞானம் உடையாராயும் –
காதா சித்த சேஷத்வ ஞானம் உள்ளவர்களையும் உள்ள ஜீவர்கள் எல்லாம் தம் தாமுடைய ஞான அநுரூபமாக
பிரதிகூல (சபலர் மந்தி பாய்) அநுகூல (வானவர்கள் )உபயவித பிரவ்ருதிகளில் நிற்கிற நிலையை உதாஹரித்துக் கொண்டு
பகவத் அனுபவத்தில் தமக்கு இடையிலே பெற்றதொரு ப்ராவண்யத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே ———-3–
பதவுரை
மந்தி–குரங்குகளானவை
பாய்-(ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப்பெற்ற
வடவேங்கடம் மா மலை–வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே
வானவர்கள்-நித்ய ஸூரிகள்
சந்தி செய்ய நின்றான்–பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய்
அரங்கத்து–கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய
அந்தி போல் நிறத்து ஆடையும்–செவ்வானம் போன்ற நிறத்தையுடைய திருப்பீதாம்பரமும்
அதன்மேல்–அப்பீதாம்பரத்தின் மேலே
அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ–பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகையுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ
அடியேன் உள்ளத்து இன் உயிரே-என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்மஸ்வரூபம்.
வியாக்யானம் –
மந்திபாய் வடவேங்கட மாமலை
சபலரான சம்சாரிகளுக்கு நிதர்சனமான வானர வர்க்கம் -நாநா சாகைகளில் உள்ள
ஷூத்ர பலங்களை புஜிப்பதாக –
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி –
ஏவம் த்ரயீதர் மமநு ப்ரபந்நா கதா தம் காம காமா லபந்தே -ஸ்ரீ கீதை -9-21- -என்கிறபடியே -ஒன்றை விட்டு
ஒன்றிலே பாய்ந்து திரிகைக்கு நிலமாய் -கலி யுகத்திலே பாகவத் சம்பாவனை உடைத்ததாக
புராண சித்தம் ஆகையாலே ஆழ்வார்கள் அவதரிக்க பெற்ற –
(கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா -க்வசித் க்வசித் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிச –
தாம்ப்ரபரணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ-காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ
தாம்ரபர்ணீ -நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்
வைகை -பெரியாழ்வார் ஆண்டாள்
பாலாறு -முதல் ஆழ்வார் திரு மழிசைப் பிரான் ஸ்ரீ பாஷ்ய காரர்
காவேரி –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருப் பாண் ஆழ்வார் -திருமங்கை ஆழ்வார்
மேற்கே ஓடும் பெரியாறு -குலசேகர ஆழ்வார் )
அகஸ்ய பாஷா தேசத்துக்கு உத்தர அவதியாய் இருக்கிறது
புராண சித்தமாய் -ஈஸ்வரன் தன்னைப் போலே ஸ்வரூப ரூப குண விபூதி ப்ரபாவங்களால்
உண்டான மஹத்வத்தை உடைத்தான திருமலையிலே
(வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு -திண்ணம் இது வீடு என்னத் திகழும் வெற்பு —
புண்ணியத்தின் புகல் இது என புகழும் வெற்பு -பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு –
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு -)
வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
பரம பதத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு அதி க்ருதரான முக்தரும் நித்தியரும் தேச
உசிதமான தேஹங்களைக் கொண்டு உசிதமான கைங்கர்யத்தைப் பண்ணி இவர்கள்
ஆஸ்ரயிக்கைக்கு உத்தேச்யனாய் நின்றான் –
அரங்கத்தரவின் அணையான்
ஏற்றம் உள்ள அளவும் ஏற வேண்டும்படியான திருமலை ஆழ்வாரும் பரமபத ஸ்தாநீயம்
என்னும்படி எளிதாக கிட்டலாம்படியான கோயில் ஆழ்வாருக்கு உள்ளே –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா வடிமை செய்யும் வானவர்களுக்கு படிமாவாய்
நிச்சேஷ ஜகத் ஆதார குருவான தன்னைத் தரிக்கைக்கு ஈடான
ஞான பல ப்ரகர்ஷத்தை உடையனாய் -ஸூரபி ஸூகுமார ஸீதளமான-( மணம் மென்மை குளிர்ச்சி )-
திரு அரவு அணையிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் உடைய-
(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் –நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம்
மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு –மூன்றாம் திருவந்தாதி -53-
ச பிப்ரச் சேகரீ பூதம் அசேஷம் ஷிதி மண்டலம் –பூ மண்டலம் முழுவதையும் கொண்டை போலே சுமக்கும் சேஷன்
பணிபத சப்தேன ஸூரபி – ஸூகுமார -சீதள – விசால -உந்நதத் வாதி ரூபா பர்யங்க குணா வ்யஜ்யந்தே-
பரிமளம் -மார்த்வம் -குளுமை -அகன்று -உயர்ந்தமை )
அந்தி போல் நிறத்தாடையும்
ஆஸ்ரீதருடைய அஞ்ஞான அந்தகாரத்தை கழிக்க வல்ல சமயக் ஞான சூர்யோதததுக்கு பூர்வ சந்த்யை போலேயும்
அவர்களுடைய தாப த்ரயங்களை – ஆத்யாத்மிக-ஆதி பவ்திக -ஆதி தைவீக-கழிக்கைக்கு-
பச்சிம ஸந்த்யை -அந்திப் பொழுது -போலேயும்
புகர்த்த நிறத்தை உடைதான -செவ்வரத்த உடை யாடையும் –
இது மேலில் அனுபாவ்யத்தை அவலம்பிக்கைக்கு அனுபூதாம்சத்தை அனுவதித்த படி –
(மேலே அனுபவிக்கப் புகும் திரு உந்தியின் அழகுக்கு ஈடாய் நிற்கும் பிரகாசமுடைய -அதற்கு கரை கட்டினால் போலே
இருக்கும் ஸுந்தர்ய பிரகர்ஷத்தாலே கீழே அரைச் சிவந்த ஆடையின் மேலே சென்றதாம் என் சிந்தனையே –
என்றத்தை அனுபாஷிக்கிறார் ) மேல் அநுபாவ்யம் ஏது -என்ன –
அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி –
அநுபூதமான திருப் பீதாம்பரத்துக்கு மேலாய் -இதன் நிறத்துக்கு நிகரான சிவந்த
தாமரைப் பூவை உடைத்தாய் -அதின் மேல் வ்யஷ்டி ஸ்ருஷ்டி சமயத்தில் முற்பட
அயோநிஜனான ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்த அத்விதீயமான அழகை உடைத்தான திரு வுந்தி
ப்ரஹ்மாவுடைய ஸ்ருஜ்யத்வம் சொல்ல -கைமுதிக ந்யாயத்தாலே ருத்ர இந்த்ராதிகள்
உடைய ஸ்ருஜ்யத்வம் சொல்லிற்றாம்
இத்தால் ப்ரதிபுத்தர்க்கு-சம்யக் ஞானம் பெற்றவர்க்கு- ஸ்ரீயபதி ஒழிய சரண்யாந்தரமும் ப்ராப்யாந்தர்மும் இல்லை என்றது ஆயிற்று
இங்கு ப்ரஹ்மாவை சொன்னது முமுஷுக்களை ஸ்ருஷ்டித்த உபகாரத்துக்கு உதாஹரணமுமாகிறது
(நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் –
ப்ரஹ்மாணம் சிதிகண்டம் ச யாச்சாந்யா தைவதாஸ் ஸ்ம்ருதா-ப்ரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -)
மேலதன்றோ –
என்றது இந்த திரு வுந்தியையே அனுபாவ்யமாகக் கொண்டன்றோ இருக்கிறது என்னவுமாம்
இதனுடைய அனுபவம் இட்ட வழக்காய் இருக்கிறது என்னவுமாம்
அடியேன் உள்ளத்து இன்னுயிரே –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச சதா ச்மர -என்கிறபடியே
பரம காருணிக கடாஷத்தாலே ஸ்வபாவ தாஸ்ய ப்ரதிபோதம் உடையேனான என்னுடைய
சத்வோத்தரமான மனசிலே பிரகாசிக்கிற ஸ்வாதுதமமான என் ஆத்ம ஸ்வரூபம்
உள்ளம்-
என்று ஹிருதய பிரதேசத்தைச் சொல்லவுமாம் –
இன்னுயிர்
என்று பகவத் அனுபவத்துக்கு அநுரூபம் ஆகையாலே இனிதான ப்ராணாதிகளைச் சொல்லவுமாம் –
ஜ்ஞாநீது பரமை காந்தீ பராயத் தாத்ம ஜீவந -மச் சித்தா மத்கத ப்ராணா -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது
(ஞானீ து பரமை காந்தீ பராயத்த ஆத்ம ஜீவன -தத் சம்ச்லேஷ வியோகைக ஸூக துக்கஸ்த் தேக தீ
மச் சித்தா மத் கத பிராணா போத யந்த பரஸ்பரம் -கத யந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்த ச ரமந்தி ச -10-9–)
————————————–
அவதாரிகை –
இரண்டாம் பாட்டாலும் மூன்றாம் பாட்டாலும் ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய கர்ம அதிகாரித்வமும்
கர்ம மூல ஜந்மாதிகளும் சொல்லிற்று ஆயிற்று –
(உலகம் அளந்து -அளப்பவன் ஸ்வாமி -அளக்கப்படுபவை அவனுக்கு அடங்கி -கர்ம வஸ்யர் அர்த்தம் த்வனிக்கப்படுகிறது
அயனைப் படைத்த எழில் உந்தி -கர்மாதீனம் பிறப்பில் உழன்று இருப்பவர் என்பது சப்தார்த்தம் )
நாலாம் பாட்டாலே –
ப்ரஹ்ம ருத்ராதிகள் வரம் கொடுத்து வாழ்வித்த ராவணனை நிராகரித்த வ்ருத்தாந்தத்தாலும்
தேவதாந்தரங்கள் உடைய ஷூத்ரத்வத்தையும் –
ப்ரஹ்மா ஸ்வயம் பூச் சதுராநநோ வா
ருத்ரஸ் த்ரினேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா
இந்த்ரோ மகேந்த்ரஸ் சூர நாயகோ வா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -இத்யாதிகள் படியே
அவர்கள் உடைய அல்ப சக்தித்வதையும் அனுசந்திதுக் கொண்டு ப்ரஹ்மாதிகளை எல்லாம் அகம்படியிலே
ஏக தேசத்திலே வைத்து உய்யக் கொண்ட ஸ்ரீ மத்தையை உடைத்தான திரு வயிற்றின் உடைய
சிறுமை பெருமைகளால் உண்டான அகதி தகடநா சக்திகளுக்கு
அடையவளைந்தான் போலே யிருக்கிற உதர பந்தம் ( ஒட்டியாணம் )-தம்முடைய சிறிய திரு உள்ளத்துக்கு உள்ளே
வெளியில் போலே இடம் கொண்டு உலவா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் என்கிறார் –
கீழ் மூன்று பாட்டாலும் ப்ரதம பதார்த்தம் ப்ரதிஷ்டிதமாய் –
நாலாம் பாட்டாலே
த்விதா பஜ்யேய மப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித் ஏஷ மே சஹஜோ தோஷ ஸ்வபவோ துரதிக்ரம –
ந நமேயம் து கஸ்ய சித் -என்ற வணங்கல் இலாக்கனைத் தலை சாய்த்து –
தசேந்திரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீ சரம் விவேக சரஜாலேந சமம் நயதி யோகி நாம் –
தசேந்த்ரியா நநம் கோரம் – என்கிறபடியே
முமுஷுக்களுடைய மனசு அஹங்கார மமகார தூஷிதமாகாத படி பண்ணிக் கொடுக்கிற
சக்கரவர்த்தி திருமகனுடைய சரித்ரத்தை முன்னிட்டு –
நானும் என்னுடையது அன்று –
மற்றும் என்னுடையதாவன ஒன்றும் இல்லை -என்கிற
நமஸ்ஸில் அர்த்தத்தை மறை பொருளாக அனுசந்திகிறார் ஆகவுமாம்-
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே—————4-
பதவுரை
சதுரம்–நாற்சதுரமாய்
மா–உயர்ந்திருக்கிற
மதிள்சூழ்–மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு–லங்கா நகரத்திற்கு
இறைவன்–நாதனான இராவணனை
ஓட்டி–(முதல்நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து
(மறுநாட்போரில்)
தலைபத்து–(அவனது) தலைபத்தும்
உதிர–(பனங்காய்போல்) உதிரும்படி
ஓர்–ஒப்பற்ற
வெம் கணை–கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன்–ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன்–கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு–வண்டுகளானவை
மதுரமா–மதுரமாக
பாட–இசைபாட
(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு–சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான்–திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதரபந்தம்–திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று–என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது–உலாவுகின்றது
வியாக்யானம் –
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர-
குல பர்வதங்களை சேர்த்து இசைத்தாப் போலே -செறிவும் திண்மையும் உயர்த்தியும் உடைத்தாய்
எட்டு திக்குகளில் உள்ள திக்பலர்களுக்கும் எட்டிப் பார்க்க ஒண்ணாது இருக்கிற
மதிள்களாலே இற்ற விடம் முறிந்த விடம் இல்லாதபடி எங்கும் ஒக்க சூழப்பட்டு
ஜல துர்க்க கிரி துர்க்க வன துர்க்கங்களாலே -துர்கங்களுக்கு எல்லாம்
உபமானம் ஆம்படி பிரசித்தமான இலங்கைக்கு ஈச்வரனாய்
துர்க்க பல வர பல பு ஜ பல சைன்ய பலங்களாலே செருக்கனாய்
மால்யவான் அகம்பனன் மாரீசன் முதலான ராஷசர்களோடு
ஹனுமான் விபீஷணன் முதலான சத்வ பிரக்ருதிகளோடு வாசியற
அவகீதமாக-( வித்யாசம் இன்றி ) பேசப்பட்ட பெருமாள் பெருமையை அறிந்து வைத்தும் கண்டும்
மதி கெட்டான் படியே –
விதித ச ஹி தர்மஞ்ஞா சரணாகத வத்ஸல தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி–21-20- என்ற
தாய் வாய் சொல்லும் கேளாதே
அராஷசமிமம் லோகம் கர்த்தாச்மி நிசிதைசரை ந சேச் சரண மப்யேஷி மாமுபாதாய மைதிலீம் –41-66–என்று
பெருமாள் அருளிச் செய்து விட்ட பரம ஹிதமான பாசுரத்தையும் அநாதரித்து -அடைகோட்டைப் பட்டவளவிலும்
பூசலுக்கு புறப்பட்டு விட்ட மகா பலரான படை முதலிகள் எல்லாரையும் படக் கொடுத்து
தான் ஏறிப் பொருதவன்று ரிபூணா மபி வத்சலரான பெருமாள் சரச் செருக்கு வாட்டி -நம்முடனே பொரும்படி
இளைப்பாறி நாளை வா -என்று விட -நாணாதே போய் மண்டோதரி முதலான பெண்டுகள்
முகத்திலே விழித்து -தன்னில் பெரிய தம்பியையும் மகனையும் படக் கொடுத்து தான் சாவேறாக
வந்து ப்ரதிஹத சர்வ அஸ்தரனான -எல்லா அஸ்திரங்களை இழந்த பின்பும்
சினம் தீராதே சேவகப் பிச்சேறி நின்ற ராவணனை
இனித் தலை யறுக்குமது ஒழிய வேறு ஒரு பரிஹாரம் இல்லை என்று திரு உள்ளம் பற்றி
ஒரு தலை விழ வேறு ஒரு தலை கிளைக்க முன்பு பண்ணின சித்ர வத ப்ரகாரம் அன்றிக்கே
ஒரு காலே பத்துத் தலையும் உதிரும்படியாக
(உத்தம அமர்த்தலம் அமைத்ததோர் எழில் தனுவின் உய்த்த கணையால் அத்திர வரக்கன்
முடி பத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோன் )
ஒட்டி யோர் வெங்கணை வுய்த்தவன்
தானே போய் ராவணன் தலை பத்தும் கைக் கொள்ள வேணும் -என்று சினம் உடைத்தாய் –அத்விதீயமாய் இருப்பதொரு
திருச் சரத்தை -தகையதே ஓட விட்டு -இரை போந்த இலக்கு பெறுகையாலே அத் திருச் சரத்தை உய்யப் பண்ணினவன் –
(ச சரோ ராவணம் ஹத்வா ருதிரார்த்த க்ருதச்சவி க்ருதகர்மா நிப்ருத்வத் ச தூணீம் புநராவிசத்-108-20–)
சரத்தினுடைய ஆஸூகாரித்வத்தாலும்-வேகத் திறனாலும்- ராவணனுடைய தைர்யத்தாலும்
தலை பத்தும் உதிர்ந்த பின்னும் அவன் உடல் கட்டைப் பனை போலே சிறிது போது இருந்து நிற்கும்படியாய் -இருந்தது
தலை பத்து உதிர ஒட்டி –
என்றது முன்னில் பூசலில் ராவணனைத் தலை சாய்த்து –
கச்ச அநுஜாநாமி ரணார்த்தி தஸ்த்வம் பிரவிஸ்ய ராத்ரிம் சர ராஜ லங்காம் ஆஸ்வாஸ்ய நிர்யாஹி
ரதீ ச தன்வீ ததா பலம் த்ரஷ்யஸி மே ரதஸ்த-41-66- -என்று துரத்தி விட்ட படியாய்
ஓர் வெங்கணை வுய்த்தவன் –
என்றது பின்பு அவனுடைய வத அர்த்தமாக அத்விதீயமான அஸ்த்ரத்தை விட்டவன் என்னவுமாம்
ஓத வண்ணன் –
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வற்றாம் சமுத்ரம் போலே ஸ்யாமளமான
திருமேனியை உடையவன் –
மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்தம்மான் –
ராவண வதம் பண்ணின வீர லஷ்மியுடனே நின்ற அழகைக் கண்டு
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ் ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே –
ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் சோயம் யச்சே யதச்சாஹம் பகவாம்ஸ்த்த் ப்ரவீது மே -117-11-
என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு-மாறு வேஷத்துக்கு – அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள் காலப் பண்கள் பாட –
பாட்டுக்கு அநுகுணமாக குணாதிகங்களான நீல கண்டங்கள் ந்ருத்தம் பண்ண –
இக் கீத ந்ருத்தங்களாலே மங்களோத்தரமான கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சர்வாதிபதியான படி தோற்றக் கண் வளருகிற பெரிய பெருமாள் உடைய
திரு வயிற்று உதர பந்தம் -என் உள்ளத்துள் உலாகின்றதே –
தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே
பந்தகதருக்கு மோஷ ஹேதுவான தாமோதரத்வத்தை வெளி இடா நின்ற திரு வயிற்றில் –
திரு உதர பந்தம் -என்று
திரு நாமத்தை உடைத்தான திரு வாபரணம் அதி ஷூத்ரனான என்னுடைய அதி ராக தூஷிதமான ஹ்ருதயதினுள்ளே
அதுவே நிவாஸ பூமி என்னும்படி நின்று -அளவற்ற போக்யதா ப்ரகாசக வ்யாபாரங்களைப் பண்ணா நின்றது
இது திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்யத்திலே வரும் அனுபவம் –
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply