ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -பரியனாகி வந்த /-ஆல மா மரத்தினிலை /-கொண்டல் வண்ணனை–வியாக்யானம் –

அவதாரிகை –
தன்னை ஜிதம் தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந -நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –
இத்யாதிகளில் படியே தோற்பித்து -திருவடிகளிலே விழப் பண்ணி
மேன் மேல் அனுபவத்தை உண்டாக்கின -தாமரைக் கண்களுக்கு தாம் அற்றுத் தீர்ந்த படியை –
ஆஸ்ரீத விரோதி நிராகரண வ்ருத்தாந்த பூர்வகமாக அநுபவிக்கிறார்-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ————-8–

பதவுரை

பரியன் ஆகி–மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு
வந்த–(ப்ரஹ்லாதனை நலிய) வந்த
அவுணன்–அஸூரனான இரணியனுடைய
உடல்–சரீரத்தை
கீண்ட-கிழித்துப் பொகட்டவனும்,
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்கட்கும்
அரிய-அணுக முடியாதவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பிரான்-மஹோபகாரகனும்
அரங்கத்து-கோயிலில் எழுந்தருளியிருக்கிற
அமலன்-பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய
முகத்து–திருமுக மண்டலத்தில்
கரிய ஆகி–கறுத்த நிறமுடையவையாய்
புடை பரந்து–விசாலங்களாய்
மிளிர்ந்து–பிரகாசமுடையவையாய்
செவ்வரி ஓடி–செவ்வரி படர்ந்திருப்பனவாய்
நீண்ட–(காதுவரை) நீண்டிருப்பவனாய்
பெரிய ஆய-பெருமை பொருந்தியவையுமான
அக் கண்கள்–அந்தத் திருக்கண்களானவை
என்னை-அடியேனை
பேதைமை செய்தன–உந்மத்தனாகச் செய்துவிட்டன.

வியாக்யானம் –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –
சர்வ லோகத்தில் உள்ள தமஸ் எல்லாம் திரண்டு ஒரு வடிவு கொண்டாப் போலே அதி ஸ்தூலனாய் –
மஹா மேரு நடந்தாப் போலே எதிர்த்து வந்த திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
ஒரு வாழை மடலைக் கிழிக்குமா போலே இரண்டு கூறு செய்தவனாய்

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தன்னாலே ஸ்ருஷ்டருமாய் உபக்ருதருமான தேவர்கள் –
தான் காரண பூதனாய் -உபாகாரகனாய் நிற்கிற நிலை அறிய மாட்டாமையாலே அவர்களுக்கு
ப்ரஹ்லாதன் அனுபவித்தாப் போலே அணுகவும் அநுபவிக்கவும் அரியனாய் இருக்கிற

அரங்கத்தமலன் முகத்து –
ஹேய பிரசுரமான சம்சாரத்துக்கு உள்ளே கோயில் ஆழ்வார் உடன் எழுந்தருளி வந்து –
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -என்று இருப்பார்
தம்முடைய திருவடிகளை அடைந்து அடி சூடி உய்யும் படி அவர்களுடைய
ஐயப்பாடு முதலான ஹேயங்களை அறுத்துத் தோன்றும் அழகை வுடையரான பெரிய பெருமாள் உடைய
கோள் இழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் கோள் இழைத் தண் முத்தமும் தளிர்க்கும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா யுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் -7-7 8—இத்யாதிகளால் பேசப்பட்ட
பேர் அழகை வுடைத்தே சந்திரனும் தாமரையும் ஒன்றினால் போலே இருக்கிற திரு முகத்தில்-

கரியவாகிப் புடை படர்ந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரியவாய கண்கள் –
நிகர் இல்லாத நீல ரத்னம் போலே இருக்கிற தாரைகையின் நிறத்தாலே நீலோத்பல வர்ணங்களாய் –
ஆஸ்ரீத தர்சன ப்ரீதியாலே அன்று அலர்ந்த தாமரைப் பூ போலே அதி விகசிதங்களாய் –
ஆசன்னர் எல்லாம் பக்கலிலும் ஆதரம் தோன்றும்படியான உல்லாசத்தை வுடையவையாய் –
அனந்யர் பக்கல் அநு ராகத்துக்குக் கீற்று எடுக்கலாம் படியான சிவந்த வரிகளாலே வ்யாப்தங்களாய் –
ஸ்வபாவ சித்தங்களான ஆயாம விச்தாரங்கள வுடையவான திருக் கண்கள் –

அப் பெரிய –
என்றதுக்கு இப்போது காண்கிற வளவன்றிக்கே சாஸ்திர வேத்யமாய்
அநவச் சின்னமான போக்யதா ப்ரகர்ஷத்தையும் மஹாத்ம்யத்தையும் உடைய என்று தாத்பர்யமாக்கவுமாம்

என்னைப் பேதைமை செய்தனவே –
இவ் வநுபவ ரசத்திலே அமிழ்ந்த என்னை அல்லாததொரு
ஜ்ஞான அனுஷ்டானங்களுக்கு அநர்ஹனாம் பண்ணிற்றன –

————————————–

அவதாரிகை –

அவயவ சோபைகளிலே ஆழம் கால் பட்ட தம்முடைய நெஞ்சு வருந்தி எங்கும் வியாபித்து
சர்வ அவயவ சோபைகளோடும் கூடின சமுதாய சோபையாலே பூரணமாய் –
நித்ய அநுபவ ஸ்ரத்தையாலே முன் பெற்றதாய் நினைத்து இருந்த பூர்த்தியை இழந்தது என்கிறார்-

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே ——–9-

பதவுரை

மா-பெரிதான
ஆல மரத்தின்–ஆல மரத்தினுடைய
இலை மேல்–(சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய்-ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான்–ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்
அரங்கத்து-கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம்-அழகிய
மா–சிறந்த
மணி ஆரமும்–ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும்–முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)
முடிவு இல்லது–எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில்–ஒப்பற்ற அழகை யுடையதும்
நீலம்–கரு நெய்தல் மலர் போன்றதுமான
மேனி-திருமேனி யானது
எனது நெஞ்சினுடைய
நிறை–அடக்கத்தை
கொண்டது–கொள்ளை கொண்டு போயிற்று;
ஐயோ! இதற்கென் செய்வேன்? என்கிறார்.

வியாக்யானம் –

ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் –
ஓர் அவாந்தர பிரளயத்திலே -ஆல் அன்று வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ -என்று
அறிய அரியதாய் அநந்த சாகமாய் இருப்பதொரு வட வருஷத்திலே ஓர் இலையிலே தாயும் தந்தையும்
இல்லாத தொரு தனிக் குழவியாய்

ஞாலம் ஏழும் உண்டான் –
அடுக்குக் குலையாமல் மார்க்கண்டேயன் காணும்படி சர்வ லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்தவன் –
ய ச தேவோ மயா த்ருஷ்டா புரா பத்மய தேஷண-ச ஏஷ புருஷ வ்யாக்ர சம்பந்தீ தே ஜனார்த்தந
ஸர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -கச்சத்வ மேநம் சரணம் சரணம் புருஷர்ஷபா —
பாண்டவர்கள் இடம் மார்க்கண்டேயன் சொன்னது
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகு எல்லாம் மேல் ஒரு நாள் உண்டவனே-

அரங்கத்து அரவின் அணையான் –
பிரளய காலத்திலே பாலனாய்க் கொண்டு ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளுகிற போதோடு
சர்வ காலத்திலும் கோயில் ஆழ்வார்க்கு உள்ளே ஸூரிகளுக்கு எல்லாம் தலைவரான திருவனந்தாழ்வான் மேலே –
உலகுக்கு ஓர் தனியப்பன் -என்னும்படி தன் பிரஜைகளான ப்ரஹ்மாதிகள் ஆராதிக்க கண் வளர்ந்து அருளுகிற போதோடு
வாசியறக் காரணத்வ ரஷகத்வாதிகள் காணலாம்படியாய் இருக்கிற பெரிய பெருமாளுடைய
(பிரளய காலத்தில் இருந்தவன் என்பதால் காரணத்வமும்
உண்டவன் என்பதால் ரக்ஷகத்வமும் தேரும் )
வாசியற
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்வரூப ஸ்வபாவங்களுடனே பூ உலகிலும் பிறந்த

கோல மா மணி யாரமும் –
நாய்ச்சியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற திரு மார்வுக்கு
ஒரு ரத்ன ப்ரகாரம் போலே -அபி ரூபமாய் -அதி மஹத்தாய் -மஹார்க்க ரத்னமான திருவாரமும் –

முத்துத் தாமமும் –
சந்நவீரமாயும் ஏகவாளியாயும் -த்ரி சரமாயும் -பஞ்ச சரமாயும் உள்ள திரு முத்து வடங்களும்

முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
இவை தனக்கும் அதிசயகரமாய் -அநந்தமய –
அத்விதீயமான ஆபி ரூப்யத்தை உடைத்தாய் -காளமேகம் போலே ஸ்ரமஹரமான திருமேனியும்
ஆபரணங்களுக்கு முடி இல்லாதோர் எழிலை உண்டாக்கும் படியான நீலமேனி என்னவுமாம்
குணா ஸத்ய ஞான ப்ரப்ருத்ய யூத த்வத் கத தயா சுபீ பூயம் யாதா இதி ஹி நிரணைஷ்ம ஸ்ருதி வசாத் -ஸ்ரீ கூரத்தாழ்வான்
ஞானாதி குணங்கள் உம்மை அடைந்து மங்களைத் தன்மை அடைந்தது போலே
திரு முத்து வடங்களுக்கு மேன்மையூட்டும் படியான நீல மேனி -என்றவாறு

ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –
தனித் தனியே திவ்ய அவயவங்களை அநுபவித்த என் நெஞ்சை சமுதாய அனுபவத்தாலே
முன்புற்ற பூர்ணத்வ அபிமான கர்ப்பமான காம்பீர்யத்தை கழித்து
இப் பூர்ண அனுபவத்துக்கு விச்சேதம் வரில் செய்வது என் -என்கிற அதி சங்கையாலே
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று நித்ய சாபேஷம் ஆம்படி பண்ணிற்று

————————————————–

அவதாரிகை –

இவ் வாழ்வார் அடியேன்
என்னுமது ஒழிய இப்ப்ரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய பேருமூரும் பேச மறக்கும்படி தாம் பெற்ற அனுபவத்துக்கு பெரிய பெருமாள்
இனி ஒரு விச்சேதம் வாராதபடி பண்ணின படியைக் கண்டு –
தம்முடைய ஆத்மாவதியான அநந்ய அநுபவ ரசத்தை முக்தனுடைய சாம கானத்தின் படியிலே பாடி
அநாதி காலம் பாஹ்ய அனுபவம் பண்ணின க்லேசம் தீர்ந்து க்ருத்தராகிறார் –

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே ——-10–

பதவுரை

கொண்டல் வண்ணனை–காள மேகம்போன்ற வடிவையுடையனும்
கோவலன் ஆய் வெண்ணெய் உண்ட வாயன்–கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும்
என் உள்ளம்–என்னுடைய நெஞ்சை
கவர்ந்தானை–கொள்ளை கொண்டவனும்
அண்டர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனும்
அணி அரங்கன்–(பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும்
என் அமுதினை–எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை
கண்ட கண்கள்–ஸேவிக்கப் பெற்ற (பரமபத நாதனையும்)
காணா–காண மாட்டா.

வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
கடலில் உள்ள நீரை எல்லாம் வாங்கி காவேரீ மத்யத்திலே படிந்ததொரு காளமேகம் போலே கண்டார்க்கு
ஸ்ரமஹரமான திருமேனியை உடையவனை –
அங்கன் அன்றிக்கே –
ஜங்கம ஸ்தாவரங்களை எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி ஜல ஸ்தல விபாகமற காருண்ய ரசத்தை
வர்ஷிப்பதொரு காளமேகத்தின் ஸ்வ பாவத்தை வுடையவனை என்னவுமாம் –

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
எட்டும் இரண்டும் திரு மந்த்ரமும் -சரம ஸ்லோகங்களும் — அறியாத இடையரையும் இடைச்சிகளையும்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்ச்சியர்- ரஷிக்கையாலே தன்னுடைய சர்வ லோக ரஷகத்வம்
வெளிப்படும்படி இடையரிலே ஒரு ரூபத்தைக் கொண்டு ஆஸ்ரீதர் உகந்த த்ரவ்யம் எல்லாம்
தனக்கு உகப்பு என்னும்படி தோற்ற அவர்கள் ஈட்டிய வெண்ணெய்
சீரார் கலை அல்குல் சீரடி செந்துவர் வாய் வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய் சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை —
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து இமியேற்று வன் கூன் கோட்டிடை ஆடினை கூற்று
அடலாயர் தம் கொம்பினுக்கே –திருவிருத்தம் -21- படியே
அப்ராக்ருத போகம் போலே அனுபவித்து -அத்தாலே இப்போதும் குணுங்கு நாறும்படியான திரு முகத்தை வுடையவன்-

என் உள்ளம் கவர்ந்தானை –
இடைச்சிகள் வைத்த வெண்ணெய்-ஸஜ்ஜனஸ்ய ஹ்ருதயம் நவநீதம் -போலே
இவருடைய திரு உள்ளம் பெரிய பெருமாளுக்கு நவநீதம் ஆயிற்று –
ஜ்ஞானம் பிறந்த பின்பும் என்னது என்னும்படி அஹங்கார மமகாரங்கள் வடிம்பிடுகிற என்னுடைய மனஸை –
வடிவு அழகாலும் சௌலப்ய சௌசீல்ய வாத்சல்யாதிகளாலும் வசீகரித்து –
இனி என்னது என்ன ஒண்ணாதபடி கைக் கொண்டவனை –

அண்டர் கோன் –
இடையருக்கும் நியாம்யனாய் நின்ற எளிமை குணமாம்படி -அண்டாதிபதியான ப்ரஹ்மா
முதலாக மற்றும் அண்டாந்தர் வர்த்திகளான தேவாதிகளை எல்லாம் ஸ்வ அதீநராக்கி
வைத்து இருக்கிற ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யாதிகளை உடையவன் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் என்கிறார் ஆகவுமாம் –
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியான் இமையோர்க்கும் சாழலே–பெரிய திருமொழி -11-5-5-

அணி யரங்கன் –
ஸூரிகளும் ஸ்வ தேசத்தை விட்டு இங்கே வந்து சேவிக்கும்படி ஆகர்ஷமான அழகை
உடைத்தான ஸ்தாந விசேஷத்திலே அடியேனை அநுபவ ரச பரவசம் ஆக்கினவனை

என் அமுதினை –
பரம பதத்திலும் ஷீரார்ணவத்திலும் ஆதித்ய மண்டலாதிகளிலும் அவ்வோ நிலங்களுக்கு
நிலவரானவர் அநுபவிக்கும் படியான அம்ருதமாய் நின்றாப் போல் அன்றிக்கே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்கிற நானும் அநுபவிக்கும் படி எனக்கு அசாதாரணமாய்
ஜரா மரணாதி ப்ரவாஹத்தை நிச்சேஷமாக கழிக்க வல்ல நிரதிசய போக்யமானவனை –
அன்றிக்கே-
ப்ராக்ருத போக ப்ரவணரான தேவர்கள் அநேக பிரயாசத்தோடே பெற்று அநுபவிக்கும் அம்ருதம் போல் அன்றிக்கே –
அனன்ய பிரயோஜனான நான் அயத்நமாக பெற்று அநுபவிக்கும் படியான அம்ருதமானவனை என்னவுமாம்-

கண்ட கண்கள் –
என்கிற இதிலே- என் கண்கள் -என்னாமையாலே நிர்மமத்வம் தோற்றுகிறது –
இப்படி பாதித அநுவ்ருத்தி யில்லாதபடியான தத்வ ஜ்ஞானம் பிறந்து சர்வத்திலும் நிர்மமராய்
இருக்கிற இவர் முன்பு –
என் கண் –என்றும்
என் சிந்தனை -என்றும் –
அடியேன் உள்ளம் -என்றும்
என் உள்ளம் -என்றும்
மமகாரம் பின் துடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே
ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் -அவன் அடைத்தபடி
அறிந்து பேசுவார்க்கு நிர் மமத்தோடே சேர்ந்த இம் மமகாரம் அநபிஜ்ஞர் மமகாரம் போலே தோஷம் ஆகாது

மற்று ஒன்றினைக் காணாவே-
இதுக்கு முன்பு எல்லாம் பாஹ்ய விஷயங்களிலே ப்ரவணங்களாய் –
ராஜ போக விருத்தங்களான ஜூகுப்சித விஷயங்களிலே தனக்குப் பேறும் இழவுமாக-ஹர்ஷ சோகங்களாக –
அவற்றைக் கண்ட போது ப்ரீதியும் காணாத போது விஷாதமுமாய் சென்று இப்போது நித்ய தரித்ரனானவன்
நிதியைக் கண்டால் போலே அநந்த குண விபூதி விசிஷ்டமாக இம் மஹா விபூதியை அநுபவிக்கப் பெற்ற கண்கள்

மற்று ஒன்றினைக் காணாவே-
தவாம்ருதஸ் யந்தினி பாத பங்ஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி -ஸ்திதேரவிந்த மகரந்த
நிர்ப்பரே மதுவ்ர்தோ நே ஷுரகம் ந வீக்ஷதே

மற்று ஒன்றினைக் காணாவே –
ப்ராப்த விஷயத்திலே பிரதிஷ்டிதமான சங்கத்தை உடைத்தான படியாலே பரிசர்யார்த்தமாக
வந்து பார்சவ வர்த்திகளாய் நிற்கும் பத்ம யோநி முதலானாரையும் பாராது
புருஷாணாம் சஹஸ்ரேஷூ யேஷூவை ஸூத்த யோநிஷூ
அஸ்மான்ந கச்சின் மனஸா சஷூ ஷா வாப்ய பூஜயத் -என்கிறபடியே
ப்ரஹ்ம புத்ரர்களாய்
ஸூ தப்தம் வஸ்தபோ விப்ரா பிரஸந்நே நாந்த ராத்மநா -யூயம் ஜிஜ்ஞாசவோ பக்தா கதம்
த்ர்யஷத தம் விபும் என்னும் அளவான
ஏகதர் த்விதர் த்ரிதர் திறத்தில் ஜ்ஞாநிகளான
ஸ்வேத தீப வாசிகள் உடைய அநாதாரத்தை இங்கே அனுசந்திப்பது –

ப்ராப்ய ஸ்வேதம் மஹாத்வீபம் நாரதோ பகவான் ருஷி
ததர்ச தாநேவ நரான் ச்வேதாம்ச் சந்திர ப்ரபான் ஸூபான்
பூஜயாமாச சிரஸா மனஸா தைஸ் ஸூ பூஜித -என்று ஸ்ரீ நாரத பகவான் அளவிலும்
அவர்கள் பரிமாற்றம் சொல்லப்பட்டது

உவாச மதுரம் பூயோ கச்ச நாரத மாசிரம்
இமே ஹ்ய நிந்த்ரியா ஹாரா மத் பக்தாஸ் சந்த்ர வர்ச்சச
ஏகாக்ராச் சிந்தயே யுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி -என்று பகவான் அருளிச் செய்த
வார்த்தையையும் இங்கே அனுசந்திப்பது-

நாரத பகவான் ஸ்வேத தீபம் அடைந்து -வெள்ளை நிறத்தவர் -சந்திரன் போன்ற தேஜஸ் உள்ள அப்புருஷர்களைக் கண்டு
மனசாலே பூஜித்து தலையால் வணங்க எம்பெருமான் இனிதாக -இங்கு இருந்து விரைவிலே செல் –
இவர்கள் இந்த்ரியமும் உணவும் அற்றவர்கள் –
என் அடியார்கள் சந்திரன் போல் தேஜஸ் உள்ளவர்கள் -ஒரே நினைவுடன் த்யானிப்பவர்கள்
இவர்கள் தியானத்துக்கு இடையூறு நேரக்கூடாது -என்று அருளிச் செய்தார்

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட வின்பம் -என்கிற ஐஸ்வர்ய அனுபவத்திலும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்கிற ஆத்ம மாத்ர அநுபவ ரசத்திலும்
தமக்கு நிஸ் ப்ருஹதை பிறந்த படியிலே இங்கு தாத்பர்யம்
அங்கன் அன்றிக்கே –
பிரதானமான அனுபவத்திலே இழிந்த படியினாலே
ஸ்ரீ யபதிக்கு பிரகாரமாக வல்லது மற்று ஒன்றையும் தாம் அநுபவியாத படியிலே தாத்பர்யம் ஆகவுமாம்
பெரிய பெருமாள் திரு மேனியிலே திருமலை முதலாக் கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்
ராம க்ருஷ்ண வாமன வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர
அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான
திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப் போலே
ஸ்நேஹோ மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித –பக்திச்ச நுயதா வீர பாவோ நான்யத்ர கச்சதி -40-15–
என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம்
இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-

ஆதி மறை யென வோங்கு மரங்கத்துள்ளே
யருளாரும் கடலைக் கண்டவன் என் பாணன்
ஓதிய தோற இரு நான்கும் இரண்டுமான
வொரு பத்தும் பத்தாக வுணர்ந்து உரைத்தோம்
நீதி யறியாத நிலை யறிவார்க்கெல்லாம்
நிலை யிதுவே யென்று நிலை நாடி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம்
விதையாகும் இது வென்று விளம்பினோமே-

வேதத்தின் முதல் அக்ஷரமாகிய பிரணவம் என்னும்படி உயர்ந்து நிற்கும் ப்ரணவாகார விமானத்துக்கு உள்ளே
கருணைக் கடலாம் அரங்கனைக் கண்டு அனுபவித்த திருப் பாண் ஆழ்வாரால் அருளப்பட்டதும்
ரஹஸ்யார்த்தங்களைப் பொதிந்து கொண்டு இருப்பதால் நித்ய அனுசந்தானமாயும் உள்ள
இப்பத்து பாசுரங்களை கதியாக அனுசந்தித்தோம்
தத்வங்களின் ஸ்வரூபம் அறிந்த போதிலும் யுக்திகள் அறியாதவர்களுக்கு
இப்பிரபந்தமே உறுதி அளிக்கும் என்பதாகக் கொண்டு
பகவத் அனுபவத்தை அடைய விரும்பினோம் -வேதாந்திகள் வியாக்யானங்களுக்கு எல்லாம்
இப்பிரபந்தமே வித்தாகும் என்று கூறினோம்

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாம் பெரியோம் அல்லோம் நாம் அன்றும் தீதும்
நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே-

பார்ப்பதும் பேசுவதும் வெவ்வேறு வஸ்துவாக இல்லாமல் எம்பெருமானையே கண்டு –
அவனையே பேசியவரும் -மிகுந்த பக்தி உடையவருமான திருப் பாண் ஆழ்வார் அருளிய இவை
வேத சாரம் என்று விளக்கிக் கொண்டாடுகிறோம்
அரங்கன் வேதாந்தாசார்யர் என்று புகழும்படி ஆனோம் -இருப்பினும் அஹங்காரம் கொள்ள மாட்டோம்
நமக்கு பிரிய ஹிதம் அளிக்கும் ஆச்சார்யர்கள் கிருபை உண்டு என்று விஸ்வஸித்து நிற்போம்

இதி கவிதார்க்கி சிம்ஹ சம்யக் வ்யாநுஷ்ட சாத்விக ப்ரீத்யை
முநி மஹித ஸூக விகாதா தஸகமிதம் தேசிகோப ஜ்ஞம்–
சாத்விகர் உகப்புக்காக விரித்து வியாக்யானம் அருளிச் செய்தார்

முநி வாஹந போகோயம் முக்தைச்வர்யரசோபம
க்ருபயா ரங்க நாதச்ய க்ருதார்த்தயது நஸ் ஸதா –
இத்தை அனுபவிக்கும் போகம் ப்ரஹ்மானந்த முக்த போகம் ஒக்கும் –

—————————-

திருமந்த்ரார்த்தங்கள்
அகாரம் -லுப்த சதுர்த்தி -பகவத் சேஷத்வ பர்யவசானம் -அமலன்
உகாரம் -அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி -உவந்த
மகாரம் -சேதன அசேதன கர்ம அதிகாரத்துவம் -மந்தி பாய்
நம-அஹங்கார மமகார நிவ்ருத்தி -சதுர மதிள்
நாராயண -உபாய உபேயங்களுக்குத் தேவையான -ஸுலப்ய -ஸுசீல்யம் –
நராஜ்ஜாதாநி தத்வாநி -பாரமாய் -துண்ட வெண் பிறையன்
ஆய -கைங்கர்ய அனுபவம் -பரவசம் ஆக்கியது -கையார் -பரியனாய் -ஆல மா -கொண்டல்

திருவாய் மொழிக்கு ஸங்க்ரஹம் முதல் திருவாய் மொழி -அதுக்கு ஸங்க்ரஹம் முதல் மூன்று பாசுரங்கள் –
அதுக்கு ஸங்க்ரஹம் முதல் பாசுரம் போலே இப்பிரபந்தத்துக்கு முதல் பாசுரம் ஸங்க்ரஹம்
குருகேசன் அங்கி -மற்றைய ஆழ்வார்கள் அங்கங்கள் -திரு விருத்தம் ரிக்வேத சாரம்
விஷயாந்தர பற்று அற்று அடியேன் செய்யும் விண்ணப்பம் என்று பரபக்தி நிஷ்டையில் அருளிச் செய்தது
திருவாசிரியம் யஜுர் வேத சாரம்
ஓம் இத் அக்ரே வ்யாஹரேத்–நம இதி பச்சாத் -நாராயணாயேத் யுபரிஷ்டாத்
ஓம் இத் ஏக அக்ஷரம் -நம இதி தவே அஷரே – நாராயணாயேதி பஞ்ச அக்ஷராணி
ஏதத்வை நாராயணஸ்ய அஷ்டாக்ஷரம் பதம் -யோ ஹை வை நாராயணஸ்ய அஷ்டாக்ஷரம் பதமத்யேதி –
இதி நாராயண அதர்வ சிர உபநிஷத் என்று சிலரும்
யஜுஸ் சாகையில் அந்தர்கதம் என்றும் சிலரும் சொல்வர்
பரஞான தசையில் தர்சன சாமாந காரமான அனுபவம்
இது வேண்டுதல் ஏதும் இன்றி தனிப்பெரும் நாயக மூவுலகளந்த சேவடியோயே -என்ற
அனுபவ மாத்ரம் அருளிச் செய்வதால் தெளியும் –

இப் பிரபந்தம் யஜுர் வேத சாரமாம் திருமந்த்ரார்த்தம் -எல்லா வேதங்களும் அஷ்டாக்ஷரார்தம்-விளக்குபவையே
கண்ணா நான் முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான் உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை
ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும் இருக்க யசுச் சாம நாண் மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை தத்தறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே பெரியாழ்வார் -5-1-6-

இப் பிரபந்தமும் பரஞான தசையிலே அருளிச் செய்ததாய் உள்ளது

இப் ப்ரபந்தம் அதி விஸ்தரம் அதி சங்கோசம் அதி க்ருதாதிகாரத்வம் துர்க்ரஹத்வம் ( விஷயம் விளங்காமை )
துரவபோதார்த்த்வம் ( பொருள் விளங்காமை ) சம்சயாஸி ஜநகத்வம் விரஹ க்லேசம் தூத ப்ரேஷணம்
பரோபதேசம் பர மத நிரசனம் என்றாற் போலே
மற்றுள்ள அத்யாத்ம பிரபந்தங்களில்- ( வேதாத்மா நூல்கள்) உள்ளவை ஒன்றும் இன்றிக்கே
அநுபவ கநரசமாய் ( அனுபவத்தின் திரண்ட ரசம் ) இருக்கிறது –
அனுபவ ரசம் பிரபந்தம் தலைக்கட்டும் பொழுதும்
ஊரும் பேரும் மறக்கும்படி -திருவாசிரியத்தில் நம்மாழ்வாரைப் போலவே உண்டே

இப் பிரபந்தம் -திருவாசிரியம் ஒற்றுமை மேலும் –இங்கும் அங்கும் —
அரைச் சிவந்த ஆடை –செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ்சுடர் பரிதி சூடி / பீதக வாடை
உலகம் அளந்து -மூவுலகளந்த சேவடியோயே
கோல மணி யாரமும் முத்துத் தாமமும் -பூண் முதலா மேதகு பல் கலன் அணிந்து
செய்ய வாய் -வாயுவும்
பெரிய கண்கள் -கண்ணவும்
நீல மேனி -மரகதக் குன்றம் / பச்சை மேனி
முடி -நீள் முடியன்
சமுதாய சோபை நீல மேனி ஐயோ -பச்சை மேனி மிகைப் பயப்ப
அரவிந் அணை மிசை மேய -நச்சுவினைக் கவர் தலை அரவின் அமளி ஏறி
பரிசர்யார்த்தமாக பார்ச வர்த்திகள் -பத்ம யோனி -உந்தி மேல் நான்முகன் -சிவன் அயன் இந்திரன் —
தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடக்க
திருக் கமலபாதம் -சேவடி
ஐயோ –
முற்றும் உண்ட கண்டம் -ஞாலம் ஏழும் உண்டான் -உலகு படைத்து உண்ட எந்தை
திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன –அறை கழல் சுடர் பூந் தாமரை சூடுதற்கு அவாவு ஆருயிர்
மற்று ஒன்றினைக் காணாவே -மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும் கொள்ளுவது எண்ணுமோ
அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -மூ உலகும் விளைத்த உந்தி
மேலே கவிழ்த்த கனக சத்ரம் போலே -மா முதல் அடிப் போது ஓன்று கவிழ்த்து
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் -முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த

—————————-

பெரியாழ்வாரும் திருப்பாணாழ்வாரும்
கல்ப ஸூத்ர வ்யாக்யாதாவாக நின்ற போதிலும் ரிஷிகளை போலே கரையிலே நின்று சொல்லிப் போகை அன்றிக்கே
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்றபடி
பாவநா பிரகர்ஷத்தாலே யசோதாதிகள் சொல்லும் பாசுரத்தை தான் அவர்களாகப் பேசி அவதார குண சேஷ்டிதங்களை அனுபவித்தவர்
ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹ சோபையில் திவ்ய அவயவங்கள் தோறும் தம்மை இழந்து
பேதைக் குளவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் -1-2-1-
பத்து விரலும் -2-
கணைக் கால் -3-
முழந்தாள் -4-
குறங்குகள்-5-
முத்தம் -6-
நெருங்கு பவளமும் நேர் நானும் முத்தும் மருங்கும் -7-
அழகிய உந்தி -8-
பழந்தாம்பால் ஆர்த்த உதரம்-9-
குரு மா மணிப் பூந் குலாவித் திகழும் திரு மார்பு -10-
தோள்கள் -11-
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் -12-
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் -13 –
செந்தொண்டை -14-
வாக்கும் ஞானமும் வாயும் முறுவலும் மூக்கும் -15-
கண்கள் -16-
புருவம் -17-
மகரக்குழை -18-
நெற்றி -19-
குழல்கள் -20-
திருப் பாத கேசத்தை தென் புதுவைப் பட்டன் விருப்பால் உரைத்த -21-உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே
சாஷாத் ஸ்ரீ ரெங்க நாதஸ்ய ஸ்வ ஸூரரான விஷ்ணு சித்தர் கருட வாஹனனை அனுபவித்து
அருளிச் செய்தது போலவே
முனி வாஹனரும் இங்கே அனுபவித்து அருளிச் செய்கிறார்

————————

திரு அவதார நஷத்தால் -கார்த்திகை -ரோஹிணி -முன்னும் திரு அவதாரத்தால் பின்னும் கலியன்
இருவர் பிரபந்தங்களும் அஷ்டாக்ஷரமே கரு –
மோக்ஷ பிரதத்வம் -ஜகத் காரணத்வம் ரக்ஷகத்வம் -அமலன் -ஆதி -பிரான் போலவே
திரு ஏழு கூற்று இருக்கையில் உந்தியில் அயனைப் படைப்பதில் –ஒரு சிலை ஒன்றி வாளியில் அட்டதையும் -அருளிச் செய்கிறார்

இவற்றை ஒப்பு நோக்குவோம் -இங்கும் அங்கும் –
ஓர் எழில் உந்தி மேலது அன்றோ –ஒரு பேர் உந்தி –
அயனைப் படைத்த -ஒரு முறை அயனை ஈன்றனை
வெங்கணை காகுத்தன் –சதுர –வெங்கணை உய்த்தவன் –இலங்கை –வாளியில் அட்டனை
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற –நிவந்த நீள் முடியன் -மூவடி நானிலம் வேண்டி ஈரடி மூவுலகு அளந்தனை
அமரர்க்கு அரிய ஆதிப்பிரான் -ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
முற்றும் உண்ட கண்டம் -ஞாலம் ஏழும் உண்ட -ஏழு உலகு வயிற்றினில் கொண்டானை
கொண்டல் வண்ணனை -முந்நீர் வண்ண
கடியார் பொழில் -அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் –குன்றா மது மலர்ச் சோலை
அரவின் அணை மிசை மேய மாயனார் -ஆடு அரவம் அளியில் அறி துயில் அமர்ந்த பரம
திருக் கமல பாதம் வந்து -நின் அடியிணை பணிவன்
பாரமாய பழ வினை பற்று அறுத்து -வேங்கடவன் -வரும் இடர் அகல மாற்றோ வினையே

—————————-

திருப்பாணாழ்வார் பின்னடி நடக்கும் தூப்புல் புனிதன்
புகல் அறிவார் முன்னாடி பார்த்து முயலுதலால் அவர் சாயை எனப் பின்னடி பார்த்து வர்த்திப்பதே க்ருத்யம்
மாறன் துணை அடிக்கீழ் வாழ்வை உகப்பவர்
கலியன் உரை குடி கொண்ட கருத்துடையோன்
வானில் மால் கருட வாஹனனாயத் தோன்ற வாழ்த்தும் ஸ்ரீ விஷ்ணு சித்தரை வணங்குபவர்
பாணர் தாள் பரவி நிற்பவர்
பகவத் த்யான சோபனம் –தேவ நாயக பஞ்சாசத் -அச்சுத சதகம் -அச்சுய சயயம் இவற்றில் –
அரங்கன் -தேவ பெருமாள் -அயிந்தை நகர மேய அப்பன் இவர்களின்
திவ்ய அவயவ சமுதாய சோபைகளில் அனுபவித்து தம்மை இகழ்க்கிறார்

திருக் கமல பாதம் வந்து –பாதாம் போஜம் பிரதி பலதி மே பாவநா தீர்க்கி காயம் -பகவத் த்யான சோபனம்-2-
கமண கண ஜணிய ஸூரணஇ பசமிய தெல்லொக்க பாயயம் பது பதுமம் -அச்சுத சதகம்-43-

அரைச் சிவந்த ஆடை –மஹுக இடவ சோனிய படல பரிபாடலம்பர –அச்சுத சதகம்-40-
அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -நாலீ கேன ஸ்புரித ரஜசா வேதஸோ நிர்மிமாணா ரம்யா வர்த்தத்யுதி ஸஹ சரீ
ரெங்க நாதஸ்ய நாபி –பகவத் த்யான சோபனம்-5-/ ணாஹி ருஹம் –பம்ஹ பமரம் -அச்சுத சதகம்-39-

திரு வயிற்று -பம்ஹண்டேஹி விபரியம் –உயரம் -அச்சுத சதகம்-38-

திருவார மார்பு -ஸ்ரீ பத ந்யாச தந்யம் –சந்த்ரி கோதார ஹாரம் –மத்யம் பாஹோ -பகவத் த்யான சோபனம்-6-
ஸ்ரீ வத்ச கௌஸ்துப ரமா வனமாலிக அங்கம் பாஹு மத்யம் -தேவ நாயக பஞ்சாசத்-32-டிர வனமாலம் வச்சம் -அச்சுத சதகம்-36-

உண்ட கண்டம் –கண்டே குணீ பவதி –தேவ நாயக பஞ்சாசத்-28-

செய்ய வாய் -ஸ்மித விகசிதம் சாரு பிம்பா தரோஷ்டம்–ஆருண்ய பல்லவித பிம்பாதரம் -தேவ நாயக பஞ்சாசத்-27-

கரியவாகி –கண்கள் –ஸ்வாந்தே காடம் மம விலகதி ஸ்வாகத உதார நேத்ரம்– பகவத் த்யான சோபனம்–8-
ஸ்நிக்தா யதம் ப்ரதிமசாலி விலோசநம் -தேவ நாயக பஞ்சாசத்–24–
பதும சரிச்ச ப்பசண்ண லோயண ஜூயளம் -c–35-

எழில் நீல மேனி நெஞ்சினையே –மத்யே ரங்கம் மம ச ஹ்ருதயே வர்த்தே சாவரோத-பகவத் த்யான சோபனம்-11-
ப்ரத்யங்க பூர்ண ஸூஷமா ஸூபகம் வபுஸ்தே த்ருஷ்ட்வா த்ருசவ் ந த்ருப்யதோ மே -தேவ நாயக பஞ்சாசத்–14–
சாமம் துஜ்ஜ தணும்–ணிஹம் வ பெச்சந்தி துமம் –தேவ நாயக பஞ்சாசத்–45-

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading