நண்ணாத வாளவுணர்-பிரவேசம்-2-6-
பிரவேசம்-
அஹம் அச்ம்ய அபராதா நாம் -என்றும்
சாதே தேச்மின் பிரத்யுஜ்யதாம் –
என்று சரணாகதிக்கு லஷணம் சொல்லிற்று
அது தன்னை
வானிலா முறுவலிலும்
தாயே தந்தை யிலும் ஆக அனுசந்தித்தார் –
அது தன்னை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன் என்றும்
தொண்டனேன் கண்டு கொண்டேன் என்றும்
அது தன்னை அனுபாஷித்தார் –
ஆனுகூலச்ய சங்கல்ப
பிரதிகூலச்ய வர்ஜனம் -என்று
அவனுக்கு சம்பாவிதமாய்
அநந்தரம் வரும் ஸ்வபாவங்களை சொல்லுகிறது –
அவை தமக்கு பிறந்தபடி சொல்லிற்று ஆயிற்று இதில் -கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே-என்று
அவை தான் இரண்டும் லஷணமாக வேண்டிற்று இல்லை
பரஸ்பர விரோதத்தாலே -த்வமே-என்று உபாய
நைரபேஷ்யத்தை சொல்லுகையாலும்
இதில் அங்கங்களோடு கூடி இருப்பதாகச் சொல்லுகையாலும் –
ஆகையால் இது லஷணமாய்
இது அவனுக்கு சம்பாவித ஸ்வ பாவமாம் இத்தனை –
பசுர் மனுஷ்ய பஷீ ரே ச வைஷ்ணவ சம்ஸ்ரபா
தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –
என்று பாகவத சமாஸ்ரயணத்தை
ஞானமும் ஞான அனுரூபமான வ்ருத்தமும் ஒழியவேயும்
பகவத் பிராப்திக்கு சாதனமாக சொல்லா நின்றது இறே-
மிருக பஷி யாதிகளையும் கூட எடுக்கிறது இறே
இவை தான் பின்னை இரண்டோ –
பாகவத சமாஸ்ரயணம் ஆவது -பகவத் சமாஸ்ரயண்த்தின் உடைய காஷ்டை அன்றோ -என்னில்
அவ்யவதாநேந பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகிறோம் என்று இருப்பது ஓன்று –
பாகவத சமாஸ்ரயணத்தாலே பகவத் சமாஸ்ரயணம் பண்ணுமதும் ஓன்று உண்டு
இந்த முக பேதத்தைப் பற்றிச் சொல்லுகிறது –
பாகவத சமாஸ்ரயணம் ஒழிய பகவத் விஷயத்தில் இழியும் துறை இல்லை-
மாறாய -இத்யாதி –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் யார் –
மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் யார் –
இத்தை ஒரு உதாஹரன நிஷ்டமாகக் காட்டலாமோ வென்னில் –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் -சர்வேஸ்வரனைக் கண்ட அநந்தரம்-தம்மைப் பேணாதே
பகவத் சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணும் பெரியாழ்வார் போல்வார் –
மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் –
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று இருக்கும் ஆண்டாள் போல்வார் –
இனி இவர் தாம் பாகவதாராக நினைத்து இருப்பது
உகந்து அருளின நிலங்களிலே நீர்மையிலே ஈடுபட்டு இருக்கும் அவர்களை –
அபாகவதாராக நினைத்து இருப்பது அங்குத்தை வாசி அறியாதவர்களை –
ஆனுகூலச்ய சங்கல்ப -என்கிறது
ஓன்று செய்து தலைக் கட்டிற்றாய் ஓர் அளவில் மீளுமது அல்லாமையாலே
ப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்குமது இங்கு ஓர் அளவில் மீளாதிறே-
பராதி கூலச்ய வர்ஜனம் -ப்ராப்தி அளவும் இறே நிற்பது –
ப்ராதிகூல்ய நிவ்ருத்தி பிறந்தால் உண்டாமதாகையாலே
ஆனுகூல்யம் பிற்பட்டது இ றே –
அந்த ப்ராதி கூல்ய நிவ்ருத்தி தமக்கு உண்டான படியைச் சொல்லுகிறார் முதல் பாட்டில் –
இது தான் உண்டாகவே அமையும் இறே –
சம்பந்தம் இன்றாக உண்டாக்க வேண்டாவா –
தானே ஏறிட்டுக் கொண்டத்தை தவிரும் இத்தனை வேண்டுவது –
அநாதி காலம் சம்சரித்திப் போருதிற இச் சேதனர் விஷயமாக
சர்வேஸ்வரன் திரு உள்ளத்தாலே
ஸூக்ருதம் சர்வ பூதாநாம்-என்கிறபடியே பண்ணுவித்த தொரு
சௌஹார்த்தம் உண்டு இ றே –
இவனுடைய சத்கிரியைக்கு பல வ்யாப்தி உண்டாகா நின்றால்
அவனுடைய அனுக்ரகத்துக்கு பல வ்யாப்தி இன்றிக்கே இராது இறே –
ஆகையால் அது தான் ஒரு நாள் ஓர் அவகாசத்திலே
பலிக்கவும் கடவதாய் இருக்கும் இறே –
அத்தாலே இவனுக்கு ஈஸ்வரன் பக்கலிலே ஆபிமுக்யம்
பிறந்து அது அடியாக அவன் விசேஷ கடாஷம் பண்ண –
அநந்தரம் -இவனுக்கு அவன் பக்கலிலே
ருசி விச்வாசங்கள் பிறந்து
ப்ராபகனும் ப்ராப்யனும் அவனே என்று அத்யவசித்தால்
பின்பு அவன் இருக்க கடவ படியைச் சொல்லுகிறது-
இனி உபாயத்தில் வந்தால்
சர்வஞ்ஞனாய் –
சர்வ சக்தியாய் –
உபய விபூதி உக்தனாய் –
அவாப்த சமஸ்த காமனாய் –
இருக்கிற சர்வேஸ்வரனை இஸ் சம்சார சேதனன்
உபாயமாக வரித்தால் -பின்னை அவனுடைய சர்வ
பரங்களையும் தானே ஏறிட்டுக் கொண்டு நிர்வஹிப்பான் ஆகில்
அவன் செய்யுமதுவும் இவன் தானும் ஒரு தலைப் பற்ற வேண்டும்
படி இராமையால் பின்னை ஹித சேஷத்தில்
தனக்கு செய்ய வேண்டுவது ஓன்று இல்லை –
உபேயம் ஆகிறது -கர்ம நிபந்தனமாக பரிகிரஹித்த
இத் தேக சம்பந்தம் அற்று ஒரு கதி விசேஷத்தாலே போய்
ஒரு தேச விசேஷத்திலே புக்கால் பண்ணுவதொரு
வ்ருத்தி விசேஷம் ஆகையால் அது இதுவாகக் கூடாது
பிராபக அம்சத்தில் கர்தவ்ய அம்சம் இல்லை யாகில்
ப்ராப்ய அம்சத்தில் இது அந்வயித்த தாகில்
பின்னை இதுவாவது பழைய விஷய ப்ராவண்யமே
சித்தித்து விடுகிறதோ என்னில் கூடாது இறே –
ப்ராப்யம் இன்னது என்று நிஷ்கர்ஷித்து ப்ராப்ய ஸ்வீகாரம்
பண்ணுகையாலே –
அதாவது பிராப்ய ஆபாசங்களிலே ருசி நிவ்ருத்தி பூர்வகமாக இறே
ப்ராப்ய பிரதிபத்தி ஆகையாலே தூரதோ நிரஸ்தம் இறே அது -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற இடத்தில்
விஹித கர்மங்களும் நிஷித்த பரிஹாரார்தமாக
செய்யுமவை எல்லாம் தர்ம சப்த வாச்யம் ஆகையாலே
இவையும் த்யாக விஷயமாய் அன்வயிக்கும் என்று
அர்த்த ப்ராப்தமாய் பழைய பாபங்களையே சொல்லிற்றே வராதோ -வென்னில் -வாராது இறே
உபாய ஸ்வரூபத்தாலும்
அதிகாரி ஸ்வரூபத்தாலும்
அப்படியே இருக்கிறது இதுவும் –
சரீர சமனந்தரத்திலே ப்ராப்ய சித்தியாய் இருக்கையாலும் –
இனி சமஸ்த கல்யாண குணாத்மகனை உபாயமாக வரிக்கையாலும்
இவன் தான் விதி பர தந்த்ரனாய்
சாதனா புத்யா இங்கு அனுஷ்டிப்பது ஓன்று இல்லாமையாலும்
ஜ்ஞானம் பிறந்த பின்பு செய்யுமவை எல்லாம் தான்
ஸ்வீகரித்த பிராப்யத்தோடும் ப்ராபகத்தோடும் சேர்ந்தது அல்லாது இராது –
நினைத்தார் நினைத்தபடி மூலையடியே திரிகிற
அஞ்ஞ்ரைக் காட்டில் இவனுக்கு ஒரு வ்யாவ்ருத்தி வேணும் இறே –
இன்று நாளை நீர் வருமாறு
அங்கே இங்கே சினையாறு பட்டுக் காட்டுமா போலே
மேல் தான்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும் –
அவர்களோடு கூடி அனுபவிக்கும் அத்தை பேறாகச் சொல்லுகையாலே இவனுக்கு இது சரம சரீரம் ஆன பின்பு
இவை இங்கே பிறக்காக வேணும் இறே-
அவை ஆகிறவை தான் எவை என்னில்
அபாகவதர்களோடு பொருந்தாமையும்
பாகவதர்களை ஒழியச் செல்லாமையும்
இறே
அவை இரண்டும் தமக்கு உண்டான படியை அருளிச் செய்கிறார் –
பார்யைக்கு அறிவு பிறக்க பிறக்க
பர்த்தாவின் பக்கல் பாவ பந்தம் உண்டாம் -பர்த்த்ராந்தர பரிக்ரஹம் பண்ணுமது இறே
இவள் அவனுக்கு ஆகாது ஒழிகை ஆகிறது –
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மந்தர் -என்னா நின்றது இறே –
பிரபன்னருடைய லஷணம் சொல்லுகிற போது
இப்படி சர்வேஸ்வரன் உத்தேச்யம் என்று ஞானம் பிறக்க பிறக்க
பாகவதர் பக்கல் பாவ பந்தம் உண்டாகலாம் –
இந்த ஞான அர்த்தமாக விட வேணும் இறே அபாகவாத சம்பந்தம் –
இனி பாகவதர் ஆகிறார் –
பிரதம தசையில் ஈஸ்வரனுடைய உபாய பாவத்தை அறிவித்து –
அவ்வழி யாலே புருஷகார பூதராம் ஆவார்கள் –
இவன் தான் சேதனனாய் உபகாரம் கொண்டவன் ஆகையாலே கிருதஞ்ஞனாய் இருக்கக் கடவன் –
இனி சரம தசையில் வந்தால் ப்ராப்யத்தில் எல்லை இவர்கள் ஆகையால் அவன் தன்னோபாதியும் உத்தேச்யராய் இருக்கக் கடவர் –
இனி நடுவு பட்ட நாள் –
இவனுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு
உடலாய் இருப்பார்கள் ஆகையால்
சர்வ அவஸ்தைகளிலும் இவர்களுக்கு உத்தேச்யம் என்னும் இடம் சொல்லிற்று –
ஆனுகூலச்ய சங்கல்ப -இத்யாதிகளால் ஆறு வகையாக இருக்கும்
சரணாகதி என்று சொல்லா நின்றது –
அஹம் அஸ்ம்ய அபராதநாம் ஆலய அகிஞ்சன அகதி
த்வமே உபாய பூதோ மே பவ -என்று
தன் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டு நீயே உபாயமாக
வேணும் என்று அபேஷிக்குமத்தை சரணாகதியாக சொல்லா நின்றது –
இதில் ஒன்றை விட்டு ஒன்றை ஸ்வீகரிக்கும் அன்று
மற்றையதுக்கு அப்ராமண்யம் சித்திக்குமாய் இருந்தது –
ஆனால் இவை இரண்டும் அவிருத்தமாக அன்வயிக்கும்படி எங்கனே என்னில்
த்வமே -என்கிற இடத்தில் உபாயாந்தர நைரபேஷ்யம்
தோற்றி இருக்கையாலே சரணா கதியினுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது அந்த ஸ்லோகத்தாலே-
அச் சரணா கதி புக்க இடத்தே புகக் கடவதாய் சரணா கதன்
ஆனவனுக்கு சம்பாவித ஸ்வாபாவங்களை சொல்லுகிறது
இந்த ஸ்லோகத்தாலே –
சரணா கதியினுடைய ஸ்வரூபத்தைப் பார்த்தால் வேறு ஒன்றைப் பொறாத படியாய் இருக்கும் –
இனி ஒதுங்கின ஆஸ்ரயத்தை பார்த்தால் இஸ் ஸ்வாபாவங்களோடு கூடி அல்லாது இராது –
ஷட் சிதா சரணா கதி -என்று கொண்டு இக் குணங்களை
சரணா கதி அங்கமாக சொல்லா நிற்க
இவனுக்கு சம்பாவித ஸ்வா பாவம் என்னும்படி எங்கனே என்னில் –
பிரார்த்தனா மதி சரணா கதி -என்கிற இடத்தில் பிரார்த்தனா புத்தி இச் சேதனன் கையில் கிடக்கச் செய்தே
எங்கனே சரணா கதி லஷணம் விஷயமாய் கிடக்கிறபடி –
ஆனுகூலச்ய -என்கிற ஸ்லோகம் விதி பரதந்த்ரமாய் செய்யும் அன்று –
பல அபேஷை இல்லாத போது தவிரலுமாய் இருக்கும் –
ஸ்வரூப நிவேசியாமன்று செய்யாத போது ஸ்வரூப ஹானியே சித்திக்கும் இறே –
ஸ்வர்க்க காமனை இல்லாத போது ஜ்யோதிஷ்டோமம்
தவிரலாய் இருக்கும் -அங்கனே செய்ய ஒண்ணாதபடி யாய் இருக்கும் இறே –
இத்தலையால் ஒரு பலம் சொல்லாத நித்ய அனுஷ்டான விதிக்கும் –
இதில் முதல் பாட்டில் -அபாகவதரோடு பொருந்தாமை சொல்லுகிறது –
இவை இரண்டும் உத்தேச்யமானால் க்ரம விசேஷத்தத்துக்கு கருத்து என் என்னில் –
ஆநு கூல்யத்துக்கு அவதி இல்லாமையாலே சங்கல்பமே அமைந்தது –
இதில் முதல் அடி இட்டானாவதும் இஸ் ஸ்வா பாவம் உண்டானால் ஆகையாலே இத்தை முந்துறச் சொல்லுகிறது –
விரோதி த்யாக பூர்வகமாக இறே உபாய ச்வீகாரத்தை விதிக்கிறது –
பரித்யக்யா மயா லங்கா -என்றும் –
த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ தாராம்ச -என்றும் இறே
ராகவம் சரணம் கத -என்கிறது
தன்னைப் பேணாதே பிரயோஜனாந்த பரருக்காக உடம்பு நோவக்
கடல் கடைந்து அமுதத்தைக் கொடுத்த சர்வேஸ்வரன்
அந்த அம்ருத்தோ பாதியாகிலும் நம்மை விரும்புவார் சிலரைக் கிடைக்க வற்றோ என்று
அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு சாய்ந்து அருள
அவனை விட்டு புறம்பே போது போக்குகிற வர்களை
நான் ஒருவனாக புத்தி பண்ணி இரேன் என்கிறார்-
கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-
பிரயோஜனாந்த பரராய் -தன்னை உகவாது இருப்பாருக்கும் கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்-
நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று-அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற-இந்நீர்மையை அனுசந்தியாதே
புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை-ஒரு வஸ்துவாக நினைத்து இரோம்-என்கிறார்-
நண்ணாத-
ஸ்ரீ விதுரர் பட்டது படுகிறார் ஆயிற்று –
சம்ச்புரு சந்நாசனம் சௌரேர் மஹா மதி ருபா விசத் -என்றது இ றே-
கடல் கலங்கினால் போலே கலங்கும் போலே காணும்
மஹா மதிகள் என்று துர்யோதன க்ரஹத்தில் எழுந்து அருளின போது பொய் ஆசனமும் வஞ்சனமுமாய்ப் புகுந்த
பிரமாதத்தை நினைத்து நெஞ்சு அஞ்சினபடியால் நாமும் ஒரு குலையில் காய் அன்றோ –
நாமும் சம்சாரிகளில் ஒருவரான பின்பு நம்மைத் தான் விஸ்வசிக்க வேணுமோ என்று
தம்மை அதிசங்கை பண்ணின படியால் தாம் படுத்த படுக்கையையும் தடவிப் பார்த்தார் இறே –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் பெருமாள் எழுந்து அருளப் புக்கால் சொட்டை முட்டியில் கையை வைத்துக் கொடு சேவிப்பாராம்-
ஒருவர் இடறுதல் -பேர்தல் -செய்தது ஆகில் தம்மை முடித்துக் கொள்வாராக –
அத்தை அனுசந்தித்து நம் முதலிகள் இவரை மஹா மதிகள் என்றாம் அழைப்பது –
கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது அத்ஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர் மஹா மதிகள் என்று –
இறைப் பொழுதும் எண்ணோமே-
எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை – அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே
வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே- அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .
கடல் மல்லைத் தல சயனம் ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே–2-6-2-
கல்லிலும் செம்பிலும் வெட்டிற்று என்னுமா போலே
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -என்று இறே தம்மைச் சொல்லுகிறது –
ஜ்ஞான ஆநந்தங்கள் அன்று காணும் இவர்க்கு நிரூபகம் -பாகவத சேஷம் ஆயிற்று-
வானவரை –
கார்ய காலத்தில் பல் காட்டி
அநந்தரம்
அவனைத் தள்ளி -ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்காக வாயிற்று –
இவனை தங்களோடு சஜாதீயனாகப் புத்தி பண்ணுதல்
அன்றிக்கே –
இவன் ஒரு மூங்கில் வளைத்த போதாக நம்மில் அதிகன் என்று இருத்தல் செய்யுமவர்கள் இறே –
இதில் இன்னும் அந்த சஜாதீய புத்தி தானே நன்று இறே –
அவ் அவுணரில் இவர்களுக்கு வ்யாவிருத்தி பெரிது அல்ல வாயிற்று –
அவர்கள் இவனுடைய ரஷ்ய வர்க்கத்தை அழியச் செய்து கொடு திரியப் புக்கார்கள் –
இவர்கள் அவன் பக்கலிலே அபேஷித்தார்கள் இத்தனை யாயிற்று வாசி –
இவர்களுக்கு கார்யம் செய்தாலும் இறே தன் ஸ்வரூபம் அழியாதபடி கார்யம் செய்யப் பெற்றோம் ஆகில் –
பெண்ணாகி –
தன்னை அழிய மாறி நிற்கச் செய்தேயும்
தூது போவது
சாரத்தியம் பண்ணுவது ஆனான் இறே
அவ்வளவு அல்லவாயிற்று –
அஹமஸ்மி மஹா பாஹோ -என்றும் –
இமௌஸ்மம் முநி சார்த்தூல கிங்கரௌ சமுபஸ் த்தி தௌ-
என்றும் ருஷிகளும் விற்றுச் செய்வானாக தன்னைத் தாழ
விட்டுத் திரிந்தவன் ஆயிற்று –
புருஷோத்தமான தன்னை இறே தன் ஸ்வரூபத்துக்கு போராதபடி அழிய மாறிற்று
கிழக்கே ஐயாற்றிலே யாதவராயர் வந்து இருக்க ஜீயர் என்னை இறையிலிக் கார்யத்துக்காக அநேகம் ஸ்ரீ வைஷ்ணவர்களோடே
கூடப் போக விட்டார் -நான் அவன் கூடத்திலே வந்து அவசரம் பார்த்து இருக்கச் செய்தே
பலரும் வந்து என்னை அனுவர்திக்கக் கண்டவாறே அங்கே
மஹா மகேஸ்வரனாய் இருப்பான் ஒரு பையல் –
பிள்ளாய் நீர் பொருளுக்கு கடவீர் என்று கேட்டோம்
எங்களுடைய வற்றிலே அரியல்லால் தேவு இல்லை என்று உண்டாய் இருந்தது –
அதுக்கு பொருள் சொல்ல வேணும் -என்ன
நான் இதுக்கு அதிகரித்தேன் ஒருவன் அல்லேன் -என்ன
நீ தான் தேவர்க்கு ஒரு உத்கர்ஷத்தையும்
ஈஸ்வரனுக்கு ஒரு அபகர்ஷத்தையும்
நினைத்து கேட்கிறாய் ஆகில்
புருஷோத்தமன் என்று புராணங்களில் சொல்லா நிற்க
ஆஸ்ரித அர்த்தமாக அவன் தன்னை அழிய மாறினான் என்றால்
இது அவனுக்கு குணவாயாம் அல்லது தோஷாவாயாகாது-
இனி ஆண் பிள்ளை சோறாள்வியை ஸ்திரீ என்று துடர்ந்து
திரிவாரை போலே துடர்ந்து திரியா நின்றார் -என்று
தேவரை அஞ்ஞர் ஆக்குவதில் காட்டில் இது சொன்னவன்
அநாப்தான் அஞ்ஞன் என்று இருக்க அமையாதோ -என்று சொன்னேன் என்று அருளிச் செய்தார் –
தல சயனத்துறை கின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3-
தல சயனத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-
குல தைவதம் தத் பாதாராவிந்தம் -என்னும் அளவல்ல எங்களது-
கடல் மல்லைத் தல சயனம் நச்சித் தொழுவாரை நச்சென்றன்நன்னெஞ்சே–2-6-5-
ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை –
ஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற தேசம் –
அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை –
கர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே
ஆசையின் கார்யம் தொழ வேண்டும் என்று தோற்றும்படி இருக்கை –
திரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி
கடல் மல்லைத் தல சயனம் வலங்கொள் மனத்தாரவரை வலங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-
கடல் மல்லைத் தல சயனம் நெஞ்சில் தொழு வாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே-2-6-7-
வாய்விட ஷமர் அன்றிக்கே இருக்குமவர்களை –
அந்த திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற நாயனாரையும் தேடி இராதே- தொழுவார்கள் உத்தேச்யராய் தொழு
ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –
கடல் மல்லைத் தல சயனம் தொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே –2-6-8-
திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம் படி யான நெஞ்சை யுடையாரை –
அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் உனக்கு யாத்ரை –
பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது –
கடல் தல சயனம் வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9-
கடல் மல்லைத் தல சயனத்து அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான் வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி
யொலி வல்லார் முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-
கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி –
முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு
பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய சூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்
——————————————–
கண் சோர வெங்குருதி -பிரவேசம் -7-4-
இது திருமங்கை ஆழ்வார் உடைய நெடுமாற்கு அடிமை -பாகவத சேஷத்வத்தைச் சொல்லுகிற திரு மொழி யாய்த்து –
பெரிய நம்பி ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றார் ஒருவர் திரு நாட்டுக்கு நடந்தாராய்
அவரை அநு கமனம் பண்ணி தீர்த்த மாடாதே வந்து எழுந்து அருளி இருக்க
இத்தை எம்பெருமானார் கேட்டு அருளி
பெரிய நம்பி பாடே வந்து- மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ என்ன
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -கடலோசையோ பாதியோ
சிறிது குறைவாகிலும் ஆஸ்ரயகிக்க வேண்டாவோ என்று அருளிச் செய்தார்-
பிள்ளை அழகிய மணவாள அரையர் கரையே போகா நிற்க
உள்ளே மா மதலைப் பிரானை திருவடி தொழுது போனாலோ என்ன
ஆர் தான் திருமங்கை ஆழ்வார் உடைய
பசைந்த வளையத்திலே கால் வைக்க வல்லார் -என்று அருளிச் செய்தார் –
இத்தால் அனன்யார்ஹ சேஷத்வத்தை சொல்லிற்று ஆகிறது –
அதாகிறது
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆகை இறே- ஓன்று இரண்டு கிரயம் சென்றால் மீளாது இறே –
பயிலும் சுடர் ஒளி -ததீய சேஷத்வ அனுசந்தானம்
நெடுமாற்கு அடிமை -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
நண்ணாத வாள் அவுணர் -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
கண் சோர வெங்குருதி -ததீய சேஷத்வ அனுசந்தானம் –
தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1
திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது –
உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன இங்கு உமக்கு ஒழியாது
வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை –
எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -7-4-2
நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன் –
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -7-4-3-
புஷ்பங்களோடு கூட ஜலத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய சூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் –
அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே –
தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே -7-4-4-
தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-
தண் சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு என் ஐ யறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே -7-4-7-
ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –
அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை -அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –
தண் சேறை யம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே -7-4-8-
கைகளின் விடாய் தீரும்படி தொழுவாரை நினைக்கும் கால் உண்ணாது வெங்கூற்றம்- ஓவாத பாவங்கள் சேரா –
தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-
தேன் வெள்ளம் இட்டு-அதன் உடைய பரிமளமேயாய் இருக்கிற தண் சேறை எம்பெருமான் திருவடிகளை
என்றும் ஒக்க ஹிருதயத்தில் வைக்குமவர்களுக்கு -என்னுடைய ஹிருதயம் அழிகிற படி கண்டி கோளே –
இப் பேறு எனக்கு வந்த படி எங்கனேயோ -ஆத்ம சமர்ப்பணம் பண்ணி மெய்யான ஸ்நேஹத்தை உடையராய்
அவனை அநவரத பாவனை பண்ணிக் கொண்டு போருவார் பெரும் பேற்றை நான் பெற்ற படி எங்கனேயோ —
தண் சேறை அம்மான் தன்னை வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10-
ஹேய ப்ரத்ய நீகமாய்- தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்-
அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது இம்மாலையைச் சூட்டுங்கோள் –
————————————————-
தந்தை கால் பிரவேசம் –
கீழே பாகவத சேஷத்வத்தை அனுசந்தித்தார் -அது பகவத் விஷயத்துக்கு உத்தம்பகமாய் இருக்கும் இறே-
ஆகையால் அபேஷை பிறந்தது -பிறந்த அபேஷை தான் -வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று
ஆறி இருக்கும் அளவு அன்றிக்கே இப்போதே பெற வேணும் என்னும் அளவாய் இருந்தது -அப்போதே பெறாமையால் வந்த ஆற்றாமை
ஒரு பிராட்டி தசையைப் பிறப்பிக்க
அத்தாலே அவனோடு காதா சித்கமாக சம்ச்லேஷத்தை உடையளாய் இருப்பாள் ஒருத்தி நம்மோடு நித்ய சம்ச்லேஷத்தை பிறப்பிக்கைகாக
திரு வழுந்தூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்று அவள் பாசுரத்தாலே அங்குத்தைப் படிகளை அனுசந்திக்கிறார்
————————————————-
பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-3-மன்னிலங்கு பாரதத்து த் தேரூர்ந்து மா வலியை-
கீழ்த் திரு மொழியில் -நம் பெண்மை சிந்தித்து இராது போய்த் தூமலர் நீர் கொடு தோழீ-நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ –
என்று ஸ்வரூப விருத்தமாக அதி பிரவ்ருத்தி பண்ணி யாகிலும் காணப் பெறுவோம் என்று ஆழ்வார் கோலின அளவிலே –
இதனைப் பொறுக்க மாட்டாத எம்பெருமான் வந்து முகம் காட்டி
தன் செல்லாமை அடங்கலும் காட்டி அருள -ஆழ்வார் அதை எல்லாம் அனுசந்தித்து -தாஹித்தவன் சிறிது தண்ணீர் கிடைத்தால்
அது தாஹ சாந்திக்கு உடலாகாதே- மேலும் மேலும் விடாயை வளரச் செய்யுமா போலே விடாயைப் பிறப்பிக்க
அதனாலே மிகவும்நோவு பட்டு -அவனைக் கிட்டி நித்ய அனுபவம் பண்ணப் பெற்றிலோம் ஆகிலும்
இவ்விடாயும் பதற்றமும் இவ் விஷயத்திலே ஆகப் பெற்றோமே என்று திருப்தியுடன் பேசித் தலைக் கட்டுகிறார் –
இதுவும் நாயகி பாசுரம் -அந்தாதி தொடையில் அமைந்த பதிகம்-
———————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply