ஸ்ரீ பெரிய திருமொழி –5-1-தொடங்கி-6-10–வரை இருபது பதிக -பலஸ்ருதி பாசுர- தாத்பர்யங்கள் —

புள்ளம் பூதங்குடி தன் மேல கலிகன்றி சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-

இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது –

————————————-

கூடலூர் மேல் கோவைத் தமிழால் கலியன் சொன்ன பாவைப் பாடப் பாவம் போமே –5-2-10-

பால் குடிக்க நோவு போம் -என்பாரைப் போலே –

———————————————-

திரு வெள்ளறை அதன் மேய அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை– கலி கன்றி சொல் ஐ  இரண்டும்
எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –5-3-10-

ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை- நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு- இவர்களை ஆதரியா நிற்பர்கள் –

—————————————————-

அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக் கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன் வல்லவர்   தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-

உந்தி – வையம் -இரண்டும் உலகுண்ட வடதள சாயி விஷயம்/விளைத்த -வம்பு -ராமன் விஷயம்/கலை -கஞ்சன் -கிருஷ்ண விஷயம்
சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்– இப்படி நாலு இரண்டும்
பண்டு -திருக் குறளன் விஷயம்/ ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-
இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள் கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம்
பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள் –

————————————————-

திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே–5-5-10-

தனி முத்துக் குடைக் கீழே இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து
பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-

————————————————-

ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக் காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு  இரண்டினையும் தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே —5-6-10-

மனஸ் சஹகாரம் வேண்டாதே இத்தை ஒரு கால் நாக்கிலே இட்டால் பின்னை நா விடாதே இருக்கும் ஆய்த்து
மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக் கற்றவர்கள் மேல் இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க
துஷ் கர்மங்கள் தாமே இது நமக்கு நிலம் அல்ல -என்று விட்டு ஓடிப் போம் –

—————————————-

புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல்  பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே —-5-7-10-

லஷணங்களில் ஒன்றும் குறையாத படி விஸ்ருதமான வித்தை அப்யசிக்க வல்லார்
ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு போக்கப் பெறுவார் –

————————————————–

திரு வரங்கத் தம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை  எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே —-5-8-10-

பால் குடிக்க நோய் தீருமா போலே இவருடைய பாசுரத்தைச் சொல்ல ப்ராப்தி பிரதிபந்தகங்கள் தன்னடையே விட்டுப் போம்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி போலே- நீடு தொல் புகழ் ஆழி வல்லானை -என்று
அஹம் சப்தத்தில் சக்தியைப் பற்றச் சொல்லுகிறது –

—————————————————

திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி கொண்டு உறைகின்ற மாலைக் — கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-

இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக- இவ் வனுபவத்துக்கு மேலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்-

————————————————–

நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும் கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே—5-10-10–

இவ்விடம் நமக்கு ஆஸ்ரயநீய ஸ்தலம் என்னும் பிரதிபத்தியோடே கூட அப்யசிக்க வல்ல அடியவர்கள் உடைய
க்ரூரமாய் அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவது அன்றிக்கே இருக்கிற பாபங்கள் சவாசனமாகப் போம் –

—————————————————

பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பாமரு தமிழ் இவை பாட வல்லார் வாமனன் அடி இணை மருவுவரே—-6-1-10-

இவர் வேண்டேன் என்றதை தவிர்ந்து அருளுதியேல் -என்ற பேற்றைப் பெறுவார் –

————————————————

தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை வானாரும் மதிள் சூழ்  வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார் கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10-

அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார்  –

—————————————-

திரு விண்ணகரானைக் காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10-

ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும் இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில்
கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள் போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா
அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம் –

——————————————–

நறையூர் தொழு நெஞ்சமே என்ற– கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு  ஆவரே –6-4-10-

ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக இத்தை மறவாதே அப்யசிக்க வல்லவர்கள்
என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான நித்ய சூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் –
என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் – அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே –

————————————————

நறையூர் மேல் காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே–6-5-10-

இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே இவனுடைய ரஷணத்தை முடிய
தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்-

———————————–

திரு நறையூர் –யின்பப் பாடல்  பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே —6-6-10-

புறம்பே உண்டு உடுத்து போது போக்குகிற சம்சார விபூதியிலே வ்யாவ்ருத்தராய்க் கொண்டு அதிகரிப்பார்
யமபடருடைய குரூரமான சப்தம் கேட்டு அஞ்சாதே -மேல் பெரும் பேறு இருந்த படி சொல்லில் –
பரம பதத்திலே போய்- பதியினில் பாங்கினில் -என்கிறபடியே நித்ய சூரிகள் எதிரே வந்து தந்தாம் இருப்பிடங்களிலே
கொண்டு புக்கு உயர வைத்துத் தாங்கள் தாழ விருந்து ஸ்ரீ பாதம் விளக்கி கொண்டாடும்படியான பெருமையை உடையராய் ஆவார்கள் –

—————————————————-

நறையூர் நின்ற நம்பியை பாடுவார் பாடு சாரா பழ வினைகள் மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10-

சம்சாரத்தில் நெடுநாள் இருந்து ஐஹிக போகங்களையும் புஜித்து பின்னை பரம பதத்தே போய்
நித்ய சூரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

—————————————————–

நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்  தார்க் கன்னவிலும் தோளான் கலியன் ஒலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே–6-8-10-

பரம பதத்தில் அங்கு உள்ள நித்ய சூரிகளுக்கு தைவங்கள் ஆவார்கள்
வைகுந்தன் தமர் எமர் -என்று இறே  அவர்கள் சொல்லுவது -அவர்களுக்கு ஆஸ்ரயநீயர் ஆவார்கள் –

——————————————–

திருநறையூர் நின்றானை பாடல் இவை பத்தும் வல்லார் விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே –6-9-10-

பண்களின் உடைய அகமான பண்ணிலே சொன்ன இப்பாடல் பத்தும் வல்லார் -போக பூமிகளில் பிரதானமான பரம பதத்திலே போய்
நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாய் அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

—————————————

நறையூர் நெடுமாலை– கலியன் ஒலி மாலை மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10-

இதிலே பொருந்தி இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது – இவர்களை விட்டுப் போய்
பின்னையும் தான் நிற்கை அன்றிக்கே நசிக்கும் – த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை –

—————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading