ஸ்ரீ பாஷ்யம்— –1-1-4- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

சாஸ்தராரம்ப-நான்கும் என்பர் -பாட்ட மதம் ப்ராபகரர் -மதம் மீமாம்சர் -இருவரும் பூர்வ பஷிகள்-
சமன்வயாதிகரணம் –
சங்கதி -அத்யாயம் -பாதம் -அதிகரணம் -ஸூ த்ரம்-ஒவ் ஒன்றுக்கும் அருளுவார்
பிரபாகர மீமான்சகர் -கிரியா பதம் இல்லாதவை முக்கியம் இல்லை விதி நிஷேதங்கள் இருந்தவை தான் முக்கியம் என்பர் -அத்தை நிரசிக்க முதல் ஸூத்ரம் –
அவை ஸ்வார்த்த தாத்பர்யம் காட்டாது என்பர் -அதனால் பிர ப்ரஹ்மம் விசாரிக்க முடியாது என்பர் –சித்த வாக்யங்களும் ஞானம் கொடுப்பவை தானே -சித்தாந்தம் –
அனுமானத்தால் கொண்டால் கர்மபரவசன் ஆவான் என்பர் -முந்திய ஸூத்ரம் பார்த்தோம்
அறிந்து என்ன பிரயோஜனம் -பாட்ட மீமாம்சர் கேட்பார் –
சாசநாது சாஸ்திரம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி வாக்யமாக இருக்க வேண்டும் –
தத் து சமன்வயாத் –அந்வயம் –து பாத பூர்ணம் இல்லை -சோபாதிகம் இல்லை –
து இல்லை கிடையாது பாட்ட மீமாம்சகர் சொன்னது கிடையாது
தது -என்றது சாஸ்த்ரத்தால் தான் பர ப்ரஹ்மம் பிரபாதிக்கும் -சாஸ்த்ரத்தால் அவஸ்யம் பிரதிபாதிக்கப்படும் –
பரம புருஷார்த்த ரூபயா அந்வயம் –
அவாந்தர சங்கதி -உண்டு -பிரமாணாந்தர அகோசரம் முன்பு பார்த்தோம் -சாஸ்திர யோநித்வாத் சங்கதி பார்த்தோம் இத்தையே
அந்வயம் –அநு வயக யாரைப் பின் செல்கிறீர் -யார் ஆசார்யர் -பொதுவாக -வாக்ய பதங்கள் அந்வயம் -அர்த்தம் பண்ண -கரத்து கர்ம கிரியா –
சம் அந்வயம் ஒன்றாக அந்வயம் -பரம புருஷார்த்தயா அந்வயம் -ஐக்கியம் -எல்லா வேத வாக்யங்களும் –
சமஸ்த சாஸ்திர பிரதிபாதியம் பர ப்ரஹ்மம் ஒன்றே -இத்தை தவிர வேறு ஒன்றும் பிரதிபாதிக்கப் படவில்லை –
மற்றவை எல்லாம் இதற்கு அங்கமாகவே சொல்லப்பட்டவை -இத்தால் பாட்டர் பூர்வ பஷ நிரசனம் –
பேட்டிகா சங்கதி -well connected structured வேதாந்த அர்த்த ஞானம் அருள –
அசங்கதம் இல்லாதவை இல்லை -பிரசங்காத் ஒன்றும் இல்லை – -பூர்வ்வ உத்தர சம்பந்தம் உண்டு
எல்லாம் பர ப்ரஹ்மம் குறித்து -pyramid போலே –
முதல் இரண்டும் -ஒரு விஷயம் –உப பேடிகா இவற்றுக்குள்
அடுத்த இரண்டும் -ஒரு விஷயம் -உப பேடிகா இவற்றுக்குள்ளும்
வஸ்து வை லஷண்யம் அறிந்து -பாதுகாப்பது போலே -ஒவ் ஒன்றும் பிரமாதமான விஷயம் சொல்வதால் –
இமானி –சிருஷ்டித்து காத்து சம்ஹரித்து மோஷம் அளிப்பவன் பர ப்ரஹ்மம் –
விஷய கௌரவம் -அறிந்து பேடிகா சங்கதிகள் –
கிரியா பதங்கள் இல்லாமல் சொல்லும் வாக்யங்கள் முக்கியம் இல்லை
வேதாந்தங்கள் பர ப்ரஹ்மம் ஸ்வரூபாதிகளை சொல்லும் -முழுவதாக சொல்ல முடியாமல் திரும்பும் –
வேதாந்தம் கொண்டு கொஞ்சம் பர ப்ரஹ்மம் பற்றி அறியலாம்
அனுமானத்தாலே அறிய முடியும் பொழுது எதற்கு வேதாந்தம் வேண்டும் –
சாஸ்திரம் கொண்டே யாதாம்ய பர ப்ரஹ்ம ஞானம் அறிய முடியும்
சரி அதனால் என்ன பயன் –
பர ப்ரஹ்ம ஞானம் அறிவதே பரம புருஷார்த்தம் -அதருக்கு பின்னால் என்ன என்று கேட்க வேண்டாம் –
இதனால் ப்ரஹ்ம மீமாம்ச ஞானம் பற்றிய விசாரம் வேண்டும் -என்று சாஸ்திர ஆரம்ப விஷயம் நிரூபணம் ஆயிற்று –
இப்படி அவாந்தர பேடிகா சாதிப்பார்கள் –

சமன்வயாதிகரணம் :

தத் து ஸமன்வயாது – சூத். 1-1-4.

ஸாஸ்திர ஆரம்பண ஸமர்த்தன அதிகரண வரிசையில் கடைசீ அதிகரணம் 4/4 :
கீழ் சூத்திரத்தில் தார்கிகர்கள் பூர்வ பக்ஷம் பார்த்தோம்.
இந்த சூத்திரத்தில் மீமாம்ஸகர்கள் மதம் பூர்வ பக்ஷமாக பார்க்கப் படுகிறது. அவர்களில்
பிரபாகர குரு – மீமாம்ஸா (பிரபாகர) மதம் .(முதல் சூத்திரத்தில் பூ.ப.)
குமாரித பட்டன் மீமாம்ஸா (பாட்ட) மதம் . (இந்த சூத்திரத்தில் பூ.ப .). தவிர
பர்த்திரு பிரபஞ்சன் – நிஷ் பிரபஞ்சீகர நியோக (பரிணாம) வாதம்
மண்டல மிஸ்ரர் — தியான நியோக வாதம்.
சங்கரர் – வாக்கியார்த்த க்ஞான வாதம்
இவர்களுடைய ஸம்பிரதாய பேதங்களும் அலசப்பட்டு
வேதாந்த மதம் இன்னது என்பதை ஸ்வாமி ராமானுஜர் நிர்த்தாரணம் பண்ணுகிறார்.

ஜிக்ஞாஸா அதிகரணத்தில் – ஸித்தேர் வித்பத்தி அப்பாவாது பிரஹ்ம ஜிக்ஞாஸா ந ஸம்பவதி என்ற
ஆக்ஷேபம் பிராபாகர மத பூ.பக்ஷமாக எழுந்தது. அதாவது
அயம் கட : அயம் பட:
ஸர்வம் கல்விதம் பிரஹ்ம
அபகத பாப்மா, விஜரோ, விமிருத்யு
சத்யம் க்ஞானம் அநந்தம் பிரஹ்ம
போன்ற விதி நிஷேத – கிரியா பதம் இல்லாத- வாக்கியங்களால் எந்த பிரயோஜனமும் இல்லை.

சத்யம் வத தர்மம் சர
மா ஹிம்ஸா சர்வ பூதாநி
ந களஞ்சயம் பக்ஷயேத்
ஜோதிஷ்ட ஹோமேன ஸ்வர்க காமோ யஜேத
இத்யாதி ஆதேச ரூபமான வாக்கியங்களே பிரமாணமாகும் என்பதாக .
விதி நிஷேத – சித்த – வாக்யங்களால் பிரஹ்மத்தை தெரிந்து கொள்ள முடியாதாகையால்,
ஸாஸ்த்திர ஆரம்பணம் அனாவஸ்யம் என்று ஆக்ஷேபம்.

இயம் மாதா இயம் பிதா இயம் மாதுல: இத்யாதி சித்த வாக்யங்களால் – சுட்டிக்காட்டு மொழிகளால் –
குழந்தைக்கு ஸாப்த போதம் ஏற்படுத்துகிற சாமர்த்தியம் உண்டு. ஆகவே
யதோவா இமாநி பூதாநி
ஸர்வம் கல்விதம் பிரஹ்ம
அபகத பாப்மா, விஜர:, விமிருத்யு:
சத்யம் க்ஞானம் அநந்தம் பிரஹ்ம:
இத்யாதி வாக்கியங்களும் பரமாத்ம வஸ்துவை போதிக்கின்ற அவகாசம் உண்டு.
இதில் எந்தவித அனுப்பபத்தியும் இல்லை என்பதாக சித்தேர் வியுத்பத்தி சமர்த்தனம் பண்ணிக்க காட்டுகிறார் ஸ்வாமி ராமானுஜர்.

அந்த பரமாத்ம வஸ்துவை எப்படியாக புடித்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி வந்தபோது ,
வேதத்தில் சொல்லப் பட்ட லக்ஷ்ணங்களால் புரிந்து கொள்ள வேண்டும் என்றதாயித்து.
வேதம் எதற்கு? அனுமானத்தால் கூடுமே என்பதாகச் சொல்ல அனுமானத்தால் சித்திக்கிற பரமாத்மா
அஜ்ஞான, அசக்தி, கர்ம பார்யவஸ்யங்களாகிற தோஷங்கள் ஏற்படும்.
எனவே அவனை சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டும்,
வேறு பிரமாணங்களால் அறிய முடியாது என்பவைகளை இதுவரை பார்த்தோம்.

சாஸ்த்ரைக பிரமாணத : பரபிரஹ்ம பூத: ஸர்வேஸ்வர: புருஷோத்தம : என்பதாக ஒத்துக்க கொண்டாலும் ,
யத்யது பிரமாணாந்தர அகோச்சாரம் பிரஹ்ம – தத கிம்? அதனால் என்ன பிரயோஜனம்?
பிரவிருத்தி – நிவிருத்தி அப்பாவேன வையர்த்திகம் – பொருளற்றது. useless?
அப்படிப்பட்ட விஷ்யங்களை சாஸ்திரமும் சொல்லாது? – என்பதாக பாட்ட மீமாம்ச மத அநுவாகிகள் கேள்விகளை எழுப்பினர்.
இந்த கேள்விகளுக்கு பதில் கூறுமுகமாக எழுந்த சூத்ரம்
தத் து ஸமன்வயாத் -என்பது – முன்-பின் சூத்ரங்களுக்கான அவாந்தர சங்கதி.

தது – சாஸ்தித்திர பிரமாணகத்வம் பிரஹ்மண: சம்பவத் ஏவ – சாஸ்திரத்தாலேயே அந்த பிரஹ்ம வஸ்து தெரியவருகிறது.
து = ஆஷாங்கா நிவர்த்தி சப்தம் . பாட்ட மீமாம்ச மத அநுவாகிகள் எழுப்பிய சந்தேகங்கள் எதுவும் இங்கு வேண்டியதில்லை.
ஸமன்வயாத் =; பரம புருஷததயா அந்வயாத் – பரமபுருஷனான படியாலேயே இப்படிச் சொல்லுகை உசிதம்.

சமன்வயதிகரணம் –
சாஸ்த்ர யோநித்வாத் -தர்க்க சாஸ்திரம் -உக்தி வாதம் கொண்டு சித்தாந்தம் ஸ்தாபித்து அருளினார்
ஆத்மா ஞான ஸ்வரூபம் -ஆத்மாவே ஞானம் சாங்க்யர் அத்வைதிகள் –
ஞானம் குணம் என்பர் சிலர் -த்வைதிகள் போல்வார் -சிகப்பு ரோஜா -விசேஷணம் போலே தர்ம தரமி பாவம் -சிலர்
நாம் ஞான ஆஸ்ரய ஞான ஸ்வரூபன் இரண்டும் -ஆஸ்ரயமும் ஸ்வரூபமும் —தர்ம பூத ஞானம் -குணம் -என்றும் தரமி ஸ்வரூபம் தரமி பூத ஞானம்
உதாரணம் -தீபம் -ஸ்வரூபத்தில் தேஜஸ் -அதிலும் தேஜஸ் -குணம் உண்டு -தேஜஸ் ஸ்வரூபமும் உண்டு –
தர்க்கத்தால் இல்லை -வேத அனுகுனம் -அவிநாசிவா ஆர் -யஞ்ஞவர்க்யர் மைத்ரேயர் இடம் சம்போதித்து அயம் ஆத்மா –அனுச்தித்த தர்ம –என்பதால் –
வேதம் சொன்னதை அங்கீ கரிக்க வேண்டும் —
வியாகரண சாஸ்திரம் -லிங்கம் பிரதானம் -அஸ்மின் பாடசாலே -பாணினி நபும்சிங்க லிங்கம் -வரத ஸ்ரீ மகரிஷி 4000 வாக்கியம்
பதஞ்சலி -முநினாம் -ஆதி சேஷ அவதாரம், யோக சாஸ்திரம் ஆயுர்வேதம் -மநோ வாக் காரணங்கள் -மூன்றுக்கும் -புனர் அவதாரம் ஸ்வாமி ராமானுஜர்
இரண்டு பாஷ்யம் -ஸ்ரீ பாஷ்யம் -மகா பாஷ்யம் பதஞ்சலி –
வார்த்தைகளை சிலவற்றை தள்ளி -பாணினி -வரத பதஞ்சலி –பின்புள்ளார் சொன்னதே பிராமண்யம் என்பர்
மீமாம்சிகர் -பர்த்ரு பிரபஞ்ச வாதிகள் சாஷாத் ப்ரஹ்மமே பரிணாமம் ஜகமாக என்பர்
மண்டலமிச்ரர் மதம் பதில் சொல்லி -த்யான நியோக வாதம் -சொல்லி அத்தை நிரசிக்க
சங்கரர் வாதம் -வாக்யார்த்த ஞான வாதம் கொண்டு -அத்தை நிரசிக்க
அதற்கு பாட்ட மீமாம்சர் பதில் சொல்லி
அதற்கு மேல் சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார் –
ஸ்வாமியின் தர்க்க கௌசல்யம் முன்பு பார்த்தோம்
இதில் ஸ்வாமியின் அநேக தர்சனங்கள் ஞானம் அறிகிறோம்-

நேராக பண்ணாமல் -league போட்டி போலே –
ஏக தத்வ வாதம் –அத்வைதி -போல்வார் –ஜகத் மித்யா -தவி தத்வ வாதம் பிரகிருதி புருஷன்
த்ரய வாதம் போக்தா போக்யம் ப்ரேரிதா -தத்வ த்ரயம் -பிரமாதா பிரமேயம் பிரமாணம் ப்ரெரியி நான்கு தத்வம் –
ச விசேஷ அத்வைதம் விசிஷ்டாத்வைதம்
பேடிகா சங்கதி -சதுஸ் சூத்ரம் -முதல் நான்கும் –
உப பேடிகள் -சித்த த்வயம் சாத்திய த்வயம்
உபபோப பேடிகா நான்கும் தனித்தனியாக
ஜென்மாதி -அயமாத்மா ப்ரஹ்மா சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம சித்த வாக்யங்கள் -பாட்டா மீமாம்சிகர்
உபநிஷத் ப்ரஹ்மத்தை விளக்கும் –
அத்யந்த அலௌகிக வஸ்து -ஆஷேபம் வர -லஷணதயா ப்ரஹ்மம் -எதோ வா இமானி ஜாயந்தே -மூலம் அறிகிறோம் –
சிருஷ்டி போன்றவற்றுக்கு காரண வஸ்து ப்ரஹ்மம் -என்று காட்டி அருளி –
ப்ரஹ்ம லஷணம் புரிந்து ப்ரஹ்மம் புறிய அவகாசம் உண்டு
சாஸ்திர யோநித்வாத் -அனுமானம் போதுமே சொல்ல -முன்பு பார்த்தோம் –
யாதாம்ய ப்ரஹ்ம ஞானம் சாஸ்திரம் மூலமே அறிகிறோம் ஸ்தாபித்தார் வேதைக் சமைதிகம் –
ப்ரஹ்மம் அறிந்த பலன் என்ன-ஸ்வயம் புருஷார்த்த ரூபம் -அதுவே உத்தேச்யம் -என்று இதில் காட்டி அருள்கிறார் –
இப்படி பேடிகா பிரிவுகள் -சாஸ்த்ரார்த்த -சதுஸ் சூத்ரம் -ப்ரஹ்ம விசார சாஸ்திரம் ஆரம்ப நீயம் -என்றதாயிற்று –
ப்ரஹ்ம மீமாம்ச சாஸ்திரம் அறிந்து கொள்ள வேண்டும் –
இதை பற்றியே நிறைய உண்டு
சுத பிரகாசிகா பந்தி -சப்த அர்த்த த்வாரகம் -ப்ரஹ்ம ஞான சக்தி -பிரயோஜனத்வ ரூபம் –
அநாரம்ப நீயம் ஆஷேபம்

நான்கு காரணங்கள் -வ்யுத்பத்தி சித்த வாக்கியம்
பிரதிபத்தி துர்லபம் -ஜென்மாதி
அனஎன லப்யத்வம் -சாஸ்திர யோனித்
அத அபலத்வம் -பரம புருஷார்த்தம்
அனாரம்ப லின்காதி நிரசனம் –
ஏக தத்வ வாதம் சப்த விவரத்த வாதம் -சப்தம் மூலமாக பிரபஞ்சம் உத்பத்தி என்பர் –
நீதி சதகம் ஸ்ருங்கார சதகம் வைராக்ய சதகம் மூன்றும் அஜ்ஞ்க்ன சுகம் ஆறாத –
ஒன்றும் அறியாதவனுக்கு எளிதாக சொல்லிக் கொடுக்கலாம்
சுக தரம் ஆராதன -விசேஷஜ்ஞ்ஞனுக்கு -அனைத்தையும் அறிந்தவனுக்கு எளிதாக சொல்லலாம் –
ஞான லவ குந்துமணி போன்ற ஞானம் மட்டும் உள்ளவன் -துர்விதத்யா பாண்டித்தியம் -தெரியும் என்று
அரை குறையாக அறிந்தவனுக்கு துர்லபம் ப்ரஹ்மம் கூட சொல்லி கொடுக்க முடியாது
பிரமம் ஏற்பட்டவன் —
if you are convinced that you cannot be convinced you will not be convinced
போகே ரோக பயம் -குலே ஸ்திதி பயம் -வித்தே ராஜ பயம் –
மானே தைன்ய பயம் -பலே ரிபு பயம் -ரூபே ஜராயா பலம் -சாஸ்த்ரே வாத பயம் -குணே கல பயம் –
காயே க்ருதாந்தே பயம் -சர்வம் வஸ்து பயம் வைராக்கியம் ஏவ அபயம் –
சுபாஷிதம் இம்மூன்றும் என்பர்
குமாரில பட்டர் பூர்வ பஷி
ஸ்லோக வார்த்திகம் -பத்திய ரூபமாகவும் எழுதி உள்ளார் ஜைமினி பூர்வ மீமாம்ச ஸூத்ரங்களுக்கு
பௌத்தர்களுக்கு பதில் சொல்லி முதலில் கண்டித்து அருளினவர் -வைதிகர் மதங்களை ஸ்தாபித்து –
புத்த விஹாரங்களில் சென்று அவர்கள் வாதங்களைக் கற்று விதிக்க மதம் ஸ்தாபித்தார்
குரு துரோகம் செய்தது போலே ஆனதே என்று வருந்தி -உமி குசும்பு குவித்து -நடுவில் அமர்ந்து சுற்றி எரிக்க –
சங்கரர் வாதத்துக்கு கூப்பிட -மண்டலமிச்ரர் எனது சிஷ்யர் – அவரிடம் வாதாட -வென்று அவரும் சங்கரர் சிஷ்யர் ஆனார் –
நான்கு சிஷ்யர்கள் -சங்கர விஜயம் பல மாறுதல்கள் உடன் பல உண்டு
பாட்ட மீமாம்சர் இவர் மதம் –
நியோக வாதம் -வேதாந்தி பாதி மீமாம்சகம் பாதி
தான நியோகம் –மண்டல மிஸ்ரர் பதில் -வாக்யார்த்த ஞானம் சங்கரர் –
பிரயோஜனம் என்ன பர ப்ரஹ்மம் அறிந்து -அதனால் விசாரம் வேண்டாம் என்பர் பாட்டர் -முதலில்
பிரபாகரர் -அகரரக் சந்த்யா உபாசனம் -தினம் பண்ணு -கேள்வி எதற்கு கேட்காமல் -வேத விதியைப் பின்பற்ற வேண்டும் -ராஜா அஜ்ஞ்ஞை
பாட்டர் -மதம் -பண்ணாமல் இருந்தால் பாபம் வரும் –கேள்வி கேட்டு பதில் வந்தால் ஆஜ்ஞ்ஞை நிறைவேற்ற வேண்டும் –
அத்யயனம் பண்ணி பண்ணுவித்து -இரண்டு விதி -பாட்டர் அத்யயன விதி என்பர் பிரபாகர் அத்யாபன விதி தகப்பனாருக்கு விதிக்கும் என்பர் –
விதி வாக்யங்கள் பிரதானம் பிரபாகரர் முதலில் சொல்லி -ஜன்மாதிகரணம் சாஸ்திர யோநித்வாத் அதிகரணம் அவற்றை நிரசித்து
இதில் என்ன பிரயோஜனம் -பாட்டர் வாதம் -த்யானம் விதிக்காகா பர ப்ரஹ்மம் இல்லை விதிக்கு பிரதான்யம் இல்லை –
பர ப்ரஹ்மமத்துக்கே பிரதான்யம்

பாட்ட மீமாம்சகர் -ஸ்வரூப பரிணாம வாதி -ப்ராஜீன அத்வைதிகள் -என்றும் சொல்வார்கள் –
பிரவ்ருத்தி நிவ்ருத்தி வாக்யங்கள் முக்கியம் என்பர் –
அதற்கு பதில் -வேதாந்த வாக்கியம் பர ப்ரஹ்மத்தை பிரதிபாதிக்கின்றன -அத்விதீயம் -விதி வாக்யங்கள் -உபாசனத்துக்கு –
அத்வைதி ப்ரஹ்ம வஸ்து அவித்யை உபாதியால் -சம்சாரத்தை அனுபவித்து -வித்தையால் முக்தி அடையும் –
ப்ரஹ்மமே நான் அறிந்து தத் தவம் அஸி-ப்ரஹ்மமே நான் அறிந்து ப்ரஹ்மமாகவே ஆகிறான் –
ச பிரபஞ்ச ப்ரஹ்மம் -நிஷ் பிரபஞ்ச ப்ரஹ்மம் ஆகிறான் -நிஷ் பிரபஞ்சீகரணம்-நியோகக -நியோக்ய நியோதக பாவம் –
பிரார்த்தனை தான் நியோக்ய நியோதக பாவம் இல்லை என்பர் முன் காலத்தில் சிறியவர் பெரியவரை ஓன்று செய்யச் சொல்லி –
அவஸ்யம் செய்ய வேண்டியவை -நியோக -பாவம் -நியோக -வாக்யார்த்த வாதம் -அகரரக சந்த்யா –
தினம் தினம் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும் போலே
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் வாக்கியம் நியோக அங்கமாக ப்ரஹ்மத்தை சொல்லும் என்பர்
நான்- ப்ரஹ்மம் -அவித்யையால் சம்சாரம் -பிரபஞ்சீகரணம் பண்ணி ப்ரஹ்மம் ஆகிறேன் –
த்யானத்துக்கு முக்கியம் -பிரஹ்மத்துக்கு இல்லை இவர்கள் வாதம் –

ப்ரத்யயம் -பிரபஞ்சீகரணம் -பிரபஞ்ச கரணம் இல்லை -பாணினி ஸூ த்ரம் -அப்படி இல்லாமல் முன்னாள் இருந்து அப்படி ஆவது
நியாய சித்தாந்தா முக்தாவளி கிரந்தம்
சூடாமணி சிரோ பூஷணமாக சந்த்ரனைக் கொண்ட ஈஸ்வரன்-உதாரணம் -காட்டுவார் –
சிரோ பூஷணமாக இல்லாதவற்றைக் கொண்டான் -யாரும் அநியாத்தை கொண்டான் –என்று காட்ட —
சூடாமணீ -க்ருதக-ஆக்கிக் கொண்டான் –
வாசுகி வளையமாக அணிந்து -இதுவும் அப்படியே
அதனால் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் வாக்யத்துக்கு பிரயோஜனம் உண்டு என்பர் -அநாதியான அவித்யை நீங்கி
நிஷ்பிரபஞ்சீ கரணம் ஆக்கி ப்ரஹ்மம் ஆக்க –
பரமாத்மாவுக்கு பிரபஞ்ச சம்பந்தம் எடுத்தால் முக்தி ஆகிறான் –
நான் ப்ரஹ்மத்தை அறிகிறேன் இல்லை ஞானம் என்பதும் இல்லை -அத்வைதி வாதம்
சித் அசித் நீக்கி ப்ரஹ்மம் முக்தி -விதி -நியோகம் நிஷ் பிரபஞ்சீகரண நியோகம்
ந்யோக -அங்கம் சாதனம் -விஷ்வ பஞ்சீ கரணம் -ஸ்வர்க்கம் பலன் -ஜ்யோதிஷ்ட ஹோமம் செய்து –
சித் அசித் மிதியை -மீமாம்சகர் -ச பிரபஞ்சம் -கூடியது -நிஷ்பிரபஞ்சம் -இல்லாதது –
இது அயுக்தம்-மித்யா ரூபம் நிவர்த்தக ஞானம் –

தத்வமஸி -அஹம் ப்ரஹ்மாசி -ஜ்ஞானம் ஏற்பட்டு நைஷ் கர்மம் -வேதம் விதிப்பது ஞானம் எற்படாதவர்களுக்கு
ஜீவன் முக்தர்களுக்கு -இல்லையே –சம்சார அவஸ்தையில் உள்ளவர்களுக்கு தான் கர்மம் -எங்களுக்கு அன்வயிக்காது –
நம் சம்ப்ரதாயம் -இங்கே இருக்கும் வரையில் கர்ம அனுஷ்டானம் வேண்டும் –உலகோர் ச்ரேஷ்டர் அனுசந்தானம் பின் பற்றுவார்களே
பகவத் சாஷாத் காரம் ஏற்பட்ட ஞானிக்கும் கர்ம அநுஷ்டானம் உண்டு -120 வயசிலும் சந்தா வந்தனம் விடாமல் செய்து அருளினார் ஸ்வாமி
தேகம் -தேயும்
சரீரம் சீரியதே –
அசக்தி இருந்தாலும் -அரக்க பிரதானம் செய்து அருளி ஆசார்யர் திருவடிகளை அடைந்தார் –
ச பிரபஞ்சம் ப்ரஹ்ம -நிஷ் பிரபஞ்சம் -ப்ரஹ்ம எந்த உபநிஷத்திலும் இல்லை
உபாசீதா -த்யாதீயா -வித்யா -எல்லாம் பக்தி ஆவர்த்தி அதிகரணம் 4 அத்யாயம் -இரண்டும் ஒன்றே –4-1-1/4-1-2-
த்யாதீயா -எனபது நிஷ் பிரபஞ்சம் எனபது இல்லையே
ந்யோக வாதம் -சாதனம் வேற பலம் வேற -சாதனமும் பலமும் ஒன்றாக இருக்க முடியாதே –
அனுபத்தி -முக்கியம் -இது தான் -நிஷ்பிரபஞ்சமே சாதனம் பலம் என்பரே
means அண்ட் end -ஒன்றாக இருந்தால் யோக அங்கங்கள் இருக்க முடியாதே
ஸ்வர்க்கம் ந்யோக சாத்தியம் -மோஷம் -அப்படி என்றால் அணித்யமாகும் உண்டாகுவது அழியும் –
உத்பத்தி -ஷீணே பு ண் யே மத்திய போல்
ஸ்வ ஸ்வரூபம் -ஆவிர்பாவம் அடைந்து -நமது சித்தாந்தம் -மறைவு அடைந்து -அழுக்கு நீங்கி -புதிதாக உண்டாகுவது இல்லை –
நியோகத்தால் உன்ச்டாகுவது என்றால் அணித்யமாகும்

ஐந்து தோஷங்களை காட்டி அருளினார் ஸ்வாமி –
முதலில் -ஜகன் மித்யா சொல்ல முடியாதே –
இரண்டாவது -ச பிரபஞ்சம் நிஷ் பிரஞ்சம்
மூன்றாவது -உபாசனம் தாக விஷயம்
நான்காவது -சாதனம் பலம் ஒன்றாக
ஐந்தாவது சாத்தியம் -என்றால் அஸ்திரம்
நிஷ் பிரபஞ்ச -வாதம் நிரசனம் -இத்தால்
த்யாக நியோத வாதம் மேலே -மண்டல மிஸ்ரர் வாதம்

வாக்யார்த்த ஜ்ஞான வாதம் -சங்கரர் வாதம்
மூன்றும் அத்வைதி வாதங்கள் -முன்பு பார்த்த நிஷ்பிரபஞ்ச வாதம் –
ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா -ஜீவாத்மா தனியாக இல்லை ப்ரஹ்மம் போலே தோன்றும் –
ஜீவனுக்கு அஸ்தித்வம் இல்லை கைமுதிக நியாயம் அசித்துக்கும் இல்லை
இதே பல்லவி அநு பல்லவி போலே
ப்ரஹ்ம சப்த வாச்யமே ஆத்மவஸ்து இந்த ஞானமே மோஷம் தத்வமஸி வாக்ய ஜன்ய ஞானத்தால் மோஷம் -என்பர் –
ஆத்மாவால் த்ரஷட்வோ -ச்ரோதவ்ய மந்தவ்ய நித்த்யாசிதவ்ய -சாஷாத்காரம் -கேட்டு -சிந்தித்து –
தீர்க்க ஆழமான ஆலோசனை த்யானம் செய்து -நாம் சொல்வோம்
ஆகமேன அனுமானேயேன -த்யானாப்யேச –லபதே யோகமுத்தமம்
ஆகமங்கள் -இத்யாதி -அனுமானம் -மனனம் போல்வன
பக்தி என்றாலே த்யானம் -அஷ்ட வித அங்கங்கள் சரவணம் போலே அஷ்ட
யோகம் -அவனுடன் சேர்வதே —
பரமாத்மா என்றே ஆத்மாவால் த்ரஷ்டவ்யோ -என்பர் –
ஸ்ரவணத்தாலே மோஷம் என்றால் மனனம் போல்வன எதற்கு
ஸ்திரமாக ஆக்க மற்றவை -பிரதிஷ்டிதம் ஆக்க மனனம் நிதியாசிதவ்யம் –
ஞானம் மட்டுமே மோஷ சாதனம் என்றால் மனனம் போல்வன எதற்கு
முன்பு பார்த்த நிஷ்பிரபஞ்ச பஞ்சீகரணம் -ந்யோக வாதம் பார்த்தோம்
மண்டல மிஸ்ரர் த்யான ந்யோக வாதம்
வாக்யார்த்த -ஞான வாதம் சங்கரர்
மூன்று சாகைகள் -அத்வைதம் –

ப்ரஹ்மம் நித்யம் ஜீவம் மித்யா -ப்ரஹ்மத்தை தவிர அந்யாத்ர இல்லை -தத்வமஸி வாக்யங்களை கேள்விப் படுவதாலே
அஹம் ப்ரஹ்மாசி ஞானம் ஏற்பட்டு அதுவே மோஷம் –
ஆத்மாவாரே த்ரஷ்டவ்ய -ச்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யாச்ய -கேட்டு மனனம் பண்ணி தீர்க்க ஆலோசனை பண்ணி தியானம் செய்து தர்சன காரணம் –
ஆகமேன அனுமாநேன –ஆகமங்கள் மூலமும் -அனுமானம் -மனனம் நிதித்யாசிவ்யம் போல்வன -நிர்ணயித்து தான அப்யாசம் –
பக்தி யோகமே த்யானம் -ஆளவந்தார் -அர்ச்சனம் -நவ வித அங்கங்கள் த்யானமே பிரதானம்
த்யானாப்யே ரசம் -யோகம் -பகவத் பிராப்தி -ஆத்மாவாரே-பர ப்ரஹ்மத்தையே சொல்லும் —
கேள்வி மட்டுமே போதும் -மனனம் போல்வன ஸ்திரப் படத்த -என்பர் –
சங்கரர் பின்பு -பிரஸ்தானம் இரண்டு உண்டு – ஜீவாத்மா அஞ்ஞான பிரஸ்தானம் -விவரண -பிரஸ்தானம் -ப்ரஹ்ம அஞ்ஞான வாதம் –
மத பேதங்கள் -மதி பேதங்களால் -உண்டாகும் -இல்லை என்றால் -வராதே –பேதம் இல்லாவிடில் மதமே இல்லை –
செம்மறி யாடு போலே -கண்டுவிகா பிரகரணம் -செம்பு கதை கங்கை நீராட்டம் —
நஷ்டம் மே தாம்பர பாத்ரம்-லிங்கம் கட்டி அடையாளம் -இப்படி பண்ணினால் தான் புண்ணியம் -என்று நினைத்து பலரும் செய்ய –
கண் மூடித்தனம் -செய்கைகள் இருக்குமே —
ந்யோகம் -வாதம் –காரணம் -கடம் மண் குயவன் தண்டம் சக்கரம் –கொண்டு வரும் கழுதை -இதற்கு மட்டும் இல்லை –
அநந்ய-சித்தி -இருந்தால் தான் உண்டாகும் -ராமனுக்கு முன் தசரதன் -கார்ய நியத பூர்வ வருத்தி –
வெறும் பூர்வ வருத்தி இல்லை -லஷணம் -அனந்யகா சித்தம் –
அக்னி ஹோத்ரம் செய்து ஸ்வர்க்கம் அடைகிறான் -உடனே இறக்க வில்லை -இறந்த பின்பே அடைகிறான் –
எதத் சரீர அவசானே — எப்போல்தே செய்தது இதற்கு காரணம் ஆகுமா
கார்யம் உண்டாக முன் ஷணம் இல்லையே -காலாந்தரம் தானே அடைகிறான் –
அபூர்வம் வாதம் -சொல்லி -abstract entity -நியோகம் -கல்பித்து சொல்வார்கள் –
அதிசயம் அபூர்வம் நியோகம் சப்தம் -இது தான் ஸ்வர்க்கம் அளிக்கும் என்பர்
பாட்ட பிரபாகர் -விதி நிஷேதம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி இல்லாமல் இருந்தால் சாஸ்திரம் வ்யக்தம் –
அதற்கு ச பிரபஞ்சம் நிஷ் பிரபஞ்சம் பதில் முதல் வகை அத்வைதிகள்
த்யான ந்யோக வாதம் -மண்டல மிஸ்ரர் -வாதம்
சித்தமான ப்ரஹ்மம் ஒத்து கொள்ளாமல் -த்யானத்துக்கு அங்கமாக தான் -ஆத்மாவால் த்ரஷ்டவ்யோ வாக்கியம் இதற்கு காட்டுவார் –
அபஹத பாபமா -பரமாத்மாவை தேடித் பார்க்க வேண்டும்
ஆத்மா என்றே உபாசனம் பண்ண வேணும் -சுருதி வாக்யங்கள் காட்டி –
உபாசீதா -ஞான விஷயம் –தியானம் பண்ண விதிக்கப் பட்டு இருக்கிறது -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
இப்படிப் பட்ட ஆத்மாவை த்யானிக்க வேண்டும் –
நியோகம் -மீமாம்சகர் -த்யான -அத்வைதி –
விதி வாக்யங்கள் காட்டி -லின் லகாரம் -லோட் லகாரம் -பிரத்யங்கள் -இப்படி செய்ய வேண்டும் -விதிக்கின்றன –
ப்ரஹ்மத்தை த்யானிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சுருதி வசனங்கள் -வாக்யங்களால் ப்ரஹ்ம ஸ்வரூபம் சித்திக்கும் –

த்யானம் பண்ணி உடனே மோஷம் இல்லை -அதில் -நியோகம் உண்டாகி பின்பு -ப்ரஹ்மம் ஓன்று தான் சத்யம் ஞானம் உண்டாகி
இதனால் மோஷம் –சரீர த்யாகம்ஆன பின்பு -ஏக மேவ சத்யம் -அத்விதீயம் -மற்றவை மிதியை என்பர் –
வாக்யார்த்த ஞானம் கேட்டதும் ப்ரஹ்மம் ஆகிறான் -ஒத்து வராது என்பர் இவர் -பேத தர்சனம் -தொடர்ந்து வந்து —
நிரஸ்த சமஸ்த அவித்யை தொடர்ந்து -வரும் –
சர்ப்பம் கயிறு -வாதம் -வாக்கியம் கேட்டதும் -ஞானம் வந்து பயம் நீங்கும் -வாக்யார்த்த ஞானம் சங்கரர் –
சங்கரர் திக் விஜயம் குமார இள பட்டர் -வாதம் -குரு துரோகம் பண்ணி -நெல் மேல் பாகம் -உமி –
சுற்றிலும் பரவி நெருப்பு ஏற்றி நடுவில் அமர்ந்து -சிஷ்யர் மண்டல மிஸ்ரர் இடம் வாதம் பண்ணிக்கும் சொல்ல –
கிளி போலே கிரஹம் எங்கே கேட்டு போக -இரண்டு கூண்டு இருக்கும் -கிளிகள் இரண்டு -ச்வத பிரமாணம் –
ஓன்று சொல்லி மற்று ஓன்று பரகத பிரமாணம் -கர்ம பல பரதம் -கிளிகளும் வாதம் -கர்மங்களே கொடுக்கும் –
பரமாத்மா தான் கொடுக்கும் வேதாந்த சித்தாந்தம் -சங்கரர் வென்று -சுரேஸ்வர ஆசார்யர் ஆகிறார் –
சங்கரர் மண்டல மிஸ்ரர் நேராக வாதம் என்பதால் சிஷ்யராக இருக்க முடியாது என்பர் –
குரு -ஆட்டு மந்தை போல்வார் – -பூனை குறுக்கே போக -இடது பக்கம் கட்டி வைக்க -அவர் பரம பதம் போனதும் அடுத்த குரு பூனை இல்லையே –
தன்னையும் சிஷ்யனையும் பலனும் -மாறாடி -ஆசார்யர் நாவில் அமர்ந்து பேச வைக்கிறார் என்று கொள்ள வேண்டும் –
ஆத்மா -மாத்திர சாஷாத்காரம் -பகவத் அனுபவம் -ச கோஷ்டி -எனக்கு பிரதிவாதியாக இருப்பவர் நம்ப –நிர்குணம் சாதிக்க —
இதுவே பிரமாணம் ஆகாதே இதரர்களுக்கு — சர்ப்ப -கயிறு பிரமம் தீருவது போலே -உதாரணம் காட்டி -யதார்த்தம் —
வாக்ய ஜன்ய -நியோக வாத கண்டனம் -சங்கரர் பண்ண -அசரீர ரூப மோஷம் –
ஜகத் மித்யம் வார்த்தை கேட்டதும் பிரமம் போகும் –
பந்த நிவ்ருத்தி ஆகுமோ இதனாலே —சக்கரை பொங்கல் -பாத்ரம் அடுப்பு -உபகரணங்கள் பல உண்டே -மனனம் தியானாதிகள் எதற்கு
தத்வமஸி கேட்டதும் -அஞ்ஞானம் போக வில்லையே -மண்டல மிஸ்ரர் -பிரதி வாதம் – பிரமம் நிவ்ருத்தி உண்டாகி-
ஞானம் வந்ததும் -ஸ்திரம் பிரதிஷ்டை பண்ண – –
உத்பத்தி ஆவது அநித்யமாகும் -மோஷமும் ஸ்வர்க்கம் போலே அஸ்திரம் ஆகுமே -இதுவே சங்கரர் வாதம் –
கர்மங்களால் அநித்தியம் போலே -நச புனராவர்த்ததே -பிரதான அனுபபத்தி -பிரியம் அப்ரியம் -சுகம் துக்கம் –
சம்ச்பர்சம் -காரணம் -புலன்கள் -துக்கத்துக்கே காரணம் ஆரம்பத்தில் சுகமாக இருப்பது போலே இருந்தாலும் –
சரீரம் இல்லாமல் இருந்தால் தான் துக்க நிவ்ருத்தி உண்டாகும் -விரஜா நதி வரையில் ஸூ ஷ்ம சரீரம் உண்டு நம் சம்ப்ரதாயம் –
நாரகீ சரீரம் துக்கம் அனுபவிக்க உண்டே –
நியோகம் -நாய் மோப்பம் பாது காப்புக்காக என்றாலும் -அரசனுக்கு அது சேஷமாகும்-உபநிஷத் வாக்ய விருத்தம்
மண்டல மிஸ்ரர் சங்கரர் வாதம்பாஷ்ய காரர் -மோஷ பிரதிபந்தகம் நிவர்த்தமே வாக்யார்த்த ஞானத்தால் கிடைக்கும் –
அவித்யா நிவர்த்தகமே -உண்டாகும் -வாக்யார்த்த ஞானத்தால் -இது மட்டும் மோஷம் இல்லையே -நம் சம்ப்ரதாயம் –
சுருதி வாக்கியம் -ஞான பரம்பரை ஆசார்யனே தகப்பனார் -பூம வித்யை–நாரதர் -சனத் குமாரர் -சம்வாதம் –
ஆத்மா ஞானம் வந்தவனுக்கு துக்கம் கிடையாது -சோகம் உள்ளவனுக்கு பரமாத்மா ஞானம் வர வில்லை –
ஈச்வரோஹம் அஹம் போகி சொல்வார் பலர் உண்டே -துக்கம் இருப்பதால் -பரமாத்மா ஞானம் இல்லை எனபது தெரியும் –
பூமாதிகரணம் -மேலே வரும் -உபநிஷத் நன்றாக காட்டும் -பூமா -பரமாத்மா -குணங்களை காட்டி –
தமஸை தாண்டி வித்து தன இடம் கொண்டு சேர்த்து கொள்கிறான் -கஷாயம் -மர்த்தனம் -ஆனால் தான் ஞானம் -யதார்த்த ஞானம் –
விஷ்ணு பிராணம் மனு ஸ்மரதி கஷாயம் பத பிரயோகங்கள் உண்டு -ரகச்யார்த்தங்கள் காட்டுவார்கள் –
ஜீவன் முக்தி -சங்கரர் -நியோகம் கிடையாதே பிரம்மி பாவம் ஏற்படும் சங்கரர் வாதம் -மண்டல மிஸ்ரர் -வாதம் –
அதற்கு பாட்ட மீமாம்சர் – அதற்கு நம் சம்ப்ரதாயம் சொல்லி சமன்வயாதிகரணம் நிகமிப்பார்
சதுஷ் ஸூத்ரங்கள்-நான்கு ஸூத்ரங்கள் அப்புறம் -சாஸ்திரம் ஆரம்பம் -மங்கள ஸ்லோகம் சொல்லி நிகமிப்பார்
மோஷ அவஸ்தை -சரீரம் -முக்தாத்மா –இச்சை இருந்தால் சரீரம் ச்வீகாரம்
காரண சரீரம் -ஸூ ஷ்ம சரீரம் -ஸ்தூல சரீரம் –பிரளய அவஸ்தையில் -ஒட்டிக் கொண்டு இருக்க -சத் -ச விசேஷம் –
சேர்ந்து இருந்தால் அத்வைதம் ஆகுமே -பஞ்ச உபநிஷத் -சாரூப்யம் -சரீரம் இருக்க வேண்டுமே –இரண்டு பஷமும் உண்டு –
சரீரம் உண்டாகியும் இல்லாமலும் முக்தாத்மா இருக்கலாம் –
சு போத பரிசுத்தியர்த்தம் -தங்களுக்கு உள்ளே ஆலோசனை-நாளில் ஒரு பாதம் -ஆசார்யன் -இடம் கிரஹித்து –
சிஷ்யர் -தன்னுடைய மேதா -பிரஞ்ஞா பிரதீபா -தாரணாவதி –கிரஹணம் வேற தாரணத்வம் வேற -தரிக்க வேண்டும் அது தான் மேதா –
பிரதிபாம் -ச்புரிக்கும் -சித்தாந்தம் அனுகுணமாக -உன்மேஷம்-மூன்றாவது-பகுதி -ச பிரமசாரிகள் -இடம் கலந்து –
பூர்வ அவலோகனம் ஆசார்யனுக்கு உத்தர அவலோகனம் சிஷ்யனுக்கு வேண்டும் —
இறுதியில் -காலாந்தரத்தில் வரும் -கேட்டு தரித்து கருத்து பரிமாறி க்ரமமாக அனைத்தும் வரும் -பரிபாகம் பூரணத்வம் ஏற்படும்

குமாரிள பட்டர் -பாட்ட மீமாம்சர் -இடம் இந்த மூன்று அத்வைதிகள் —மண்டல மிஸ்ரர் -சங்கரர் -சர்ச்சை முன்பு பார்த்தோம் –
மனனம் நிதித்யாசித்வ்யம் போன்றவை பிரதி பந்தக நிவ்ருத்தி மாதரம் -வாக்யார்த்த சரவணம் ஒன்றே மோஷ காரணம் –
சங்கரர் -அவித்தை நிவ்ருத்தி -பிரச்ன உபநிஷத் -ஆச்சர்யமான கதைகள் உண்டே -கேள்வி பதில்கள் –
கேனோ உபநிஷத் -யாரால் மனசு பிரேரிக்கப் படுகிறது பிராணன் சஞ்சாரம் எதனால்
கடோ உபநிஷத் -பிரசன்னா உபநிஷத் -ஆறு பேர் சிஷ்யர்கள் பிப்பலாத மக ரிஷி சமயத் பாணியாக –
பகவத் -ஞான பூர்த்தி கை இலங்கு நெல்லி கனி போலே உள்ளவர் -ஸ்பஷ்டமாக -பராவரா தத்வம் –
ஒரு வருஷம் பிராமச்சர்யம் தபஸ் இருந்து -தெரிந்தால் தெரிய வைப்பேன் வினயத்துடன் ஆறு பிரச்னங்கள் –
இதனால் -சேர்ந்து ஸ்தோத்ரம் செய்வர் -அவித்யை போக்கி எங்கள் தகப்பனார் ஆனீர்
உபேதேஷ்யந்தி த்யானம் தத்வ தர்சி -ஞானம் -புதிதாக உண்டாக்க வில்லை -தி அஞ்ஞானம் -பிரித்து -உன்னுடைய அஞ்ஞானம் காட்டி கொடுக்கிறார்கள்
அழுக்கு நீங்கி மாணிக்கம் பிரகாசிக்கும் –
அவித்யா நிவ்ருத்தி மட்டும் மோஷம் இல்லையே நமது சித்தாந்தம்

அத்வைதம் -சித்தாந்தம் புரிவது கஷ்டம்
பந்தமே மிதியை -மோஷமும் மிதியை
சங்கரர் -போகும் பொழுது மதம் பிடித்த யானை ஓடி வர -மறைந்து போக -மிதியை சொன்னீர்களே -கேட்டதும் –
சர்வம் மித்யை -நானும் மிதியை நான் ஓடிப் போனதும் மித்யை –
மித்யா ரூப சர்ப்பம் -கயிறு உதாரணம் -சரீர சம்பந்தமும் மித்யை -ஜீவன் முக்த பொருளை – –
கடுமையாக கண்டனம் செய்து அருளுகிறார் பாஷ்யகாரர்
பாம்பு கயிறு பிரமம் -அறிவு ஏற்பட்டதும் -பிரமம் போகும் -கயிறு நாசம் ஆக வேண்டாமே –நினைத்த பாம்பும் நாசம் ஆக வேண்டாமே –
பிரம நிவ்ருத்தி தானே ஆக வேண்டும் –
சரீரம் இருக்கே இன்னும் என்றால் -ஞானம் ஏற்பட்டதும் -பாதிகா அனுவ்ருத்தி –ஒன்றையே இரண்டாக பார்க்கிறோம் –
உபாதி -அங்குலியா–உபாதியால் -கண்ணை மறைத்து -உபாதி போனதும் போகுமே
தோஷங்களை காட்டி -சாபத அபரோஷ வாதம் -பிரமாணங்கள் -எதில் எது பிரதானம் -மண்டல மிஸ்ரர் சங்கரர் வாதம் நிரசனம் பண்ணுகிறார்

சுத பிரகாசிகை விளக்கமாக காட்டும் இந்த வாதங்களை
பாதம் -ஆசார்யர் மூலம் பாதம் தன்னால் கிரஹிக்கப் படும் -பாதம் ச பிரமச்சாரி —
பூர்வ அவலோகனம் சொல்பவருக்கும் உத்தர அவலோகனம் சிஷ்யனுக்கும் -வேண்டும் -மீது கால் பாகம் தன்னடையே க்ரமேண வரும் -பரிபாகத்தால் –
மண்டல மிஸ்ரர் -சங்கரர் -வாதங்கள் -ப்ரஹ்ம வஸ்துவை த்யானிக்க -நியோகம் -ப்ரஹ்மம் ஒன்றே நித்யம் -வாக்யார்த்த ஞானமே மோஷம் நியோகத்தால்
மோஷம் உண்டாக முடியாது -சங்கரர் -பிறந்தால் நசியும் -உண்டாக முடியாதே -ஸ்வர்க்கம் போலே இல்லை மோஷம் -புண்யம் ஷீணம் ஆனதும் போகும் –
சரீரம் இருக்கும் வரை சுக துக்கம் போகாதே -நியோகம் மூலம் மோஷம் என்றால் சரீரம் கொள்ள வேண்டி இருக்குமே
தத்வமஸி வாக்யத்தாலே -அஹம் பிரம்மாஸ்மி ஞானம் வந்ததும் -மனனம் நிதித்யாசத்வ்யம் வேண்டாமே –
மனனம் நித்யாசித்வமும் எதற்கு வாக்ய ஜன்ம ஞானத்தால் மோஷம் என்றால் -பிரதிபந்தகங்கள் போக்க தான் இவை -சங்கரர் -வாதம் –
தத்வ தர்சிகள் அஜ்ஞ்ஞானம் போக்கி -ஞானம் உண்டாக்க முடியாது என்பர் சங்கரர் -ச்கல்பர் விக்ரஹம் -புதிதாக பண்ண வில்லை

மேலே உள்ளவற்றை நீக்க உருவம் வெளிப்படும் -அவித்யா நிவ்ருத்தி தான் மோஷம் –
பந்தம் அநித்தியம்–மித்யா – என்றால் -மோஷமும் அநித்தியம் -மித்யா -யானையும் மிதியை நான் ஓடிப்போனதும் மித்யா -கதை –
ஞானம் ஏற்பட்டதும் சரீரம் இருக்கும் பொழுதே மோஷம் ஜீவன் முக்தி -அடைவார் –
கயிறு -பாம்பு பிரமம் -அறிந்த உடன் பிரமம் போவது போலே -உதாரணம் காட்டுவார்கள் –
அதிஷ்டானம் -கயிறு -ப்ரஹ்மமே ஜகம் -ஜீவன் முக்தி -சரீர த்யாகம் பண்ணா விட்டாலும் -என்பர் -ஆப்த வாக்கியம் –
பிரத்யஷத்தால் உண்டான பிரமத்துக்கு பிரத்யஷமாக கயிறுதான் பாம்பு இல்லை என்று கண்ட பின்பே பிரமம் போகும்
அதனால் வாக்யார்த்த ஞானம் -மோஷம் இல்லை -பிரதான பிரமாணம் -மண்டல மிஸ்ரர் வாதம் -சாஷாத்காரம் -நேராக கண்டாலே பிரமம் போகும்
ஆப்த வாக்யமே பிரமாணம் -மேலே -பேதாபேத வாதம் -பாஸ்கரர் -வாதம் -சரிப்படாது காட்டி அருளுகிறார்
ஜீவன் முக்தி -அவித்யா நிவ்ருத்தி -சாப்த அபராத வாதம் -என் தாயார் மலடி பைல் -சரீரம் உடன் இருப்பதே பந்தம் –
சரீர சம்பந்தம் ஆத்மாவுக்கு துக்க சம்பந்தம் தானே -பாதிதா அவஸ்தை —
சம்சார பந்தம் ஆழ்வார்கள் பூர்வ ஆசார்யர்கள் -சாஷாத்காரம் பெற்ற பின்பு வைகுந்தம் ஆகுமே தம்மூர் எல்லாம் போலே -என்று ஒரு வழியாக
நாமும் ஒத்துக் கொள்கிறோம் -பூர்வாகம் உத்தராகம் கழிந்து துக்கம் வாராதே -பரிணாமம் அடையாமலே வாழ்ந்து இருப்பார்கள் –

ஆபஸ்தம்ப சூத்ரம் -போதாயன தர்ம சூத்ரம் முதலில் -அவர் சிஷ்யர் ஆபஸ்தம்பர் -ஆத்மஸ்வரூபம் அறிந்து எதிகளுக்கு நியமித்து
அபரா வித்யை பரா வித்யை-பரமாத்மா சாஷாத்காரம் -வேதங்கள் இரண்டுக்கும் – –
ஆத்மா சாஷாத்காரம் அடைந்து மோஷம் –ஸ்வர்க்காதி பரமபத மோஷங்கள்- இல்லாமல் ஆத்மா சாஷாத்காரம் –
பரமாத்மா ஞானம் வந்த பின்பு அந்த ஷணம்
அவன் திருவடி சேர்வோம் -அதனால் ஜீவன் முக்தி சரி இல்லை என்றதாயிற்று –
விசுத்தமான மனசால் அறிந்து ப்ரஹ்ம ஞானம் பெற்று -ப்ரஹ்மநோதி பவதி -யோகி ஹ்ருத் ஞான கம்யம் -த்
யானத்தாலே பிரமத்தை அறிய முடியும் –
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி வாக்யங்கள் சாஸ்திரம் -த்யானம் பண்ணத்தான் ப்ரஹ்மத்தை வர்ணிக்கும்
உபாதி வைத்து பேதாபேத பாஸ்கர மதம் –சங்கரருக்கு பின் என்பர் –
ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் பேதமும் அபத்தமும் உண்டே
இருட்டும் வெளிச்சமும் சேர்ந்து இருக்க முடியாதே –நரமும் சிம் ஹமும் சேர முடியுமோ –அபேதம் ஸ்வா பாவிகம் -உபாதி
நாமும் பேதமும் அபத்தமும் உண்டு ஆனால் பேதாபேதம் இல்லை என்போம் -அபேத அனுபவத்துக்கு விரோதம் இல்லாத பேதமும்
பேத அனுபவத்துக்கு விரோதம் இல்லாத பேதமும் உண்டு –

நிஷ் பிரபஞ்சீகரண நியோக வாதம்
தியான நியோக வாதம்
வாக்கியார்த்த க்ஞான வாதம்
இவை மூன்றும் அடிப்படியில் அத்வைத சித்தாந்தத்துக்கு சேர்ந்தவையே.

அதாவது
1. பிரஹ்ம சத்யம்.ஜகன் மித்யா. ஜீவோ பிரஹ்மைவ நபர: பிரஹ்மத்தைக் காட்டிலும் தனித்து ஆத்மா என்று கிடையாது.
கைமுகிகன் நியாயப்படி அசித் கிடையாவே கிடையாது.
2. பிரஹ்ம ஸப்த வாச்யனான ஆத்ம வஸ்துவே ”பிரஹ்மம் ” என்று தெரிந்துகொண்டால் அதுவே மோக்ஷம்.
3. அது எப்படி ஏற்படுகின்றது என்றால்,
ஆச்சாரிய முகேண ”தத்வமாஸி ” என்று உபதேசம் பெற, ”அஹம் பிரஹ்மாஸ்மி ” என்கிற தெளிவே பிறக்கையே மோக்ஷம்.
4. அதற்கு, ”ஆத்மாவா அரே ! திரஷ்டவ்ய : ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்தியாஸி தவ்ய ” என்று ஸ்ருதியில் சொல்லியிருக்கிறபடி
”ஸ்ரவணம் ” ”தியான ” ”மனனம் ” ”தர்சனம் ” இவை அவசியாபேக்ஷிதங்கள் .

ஆகமேன அநுமானேன தியானாப்யாச ராசாயச |
திரிதா கல்பயன் பிரக்ஞான் லபதே யோகமுத்தமம் .||

ஆசாரியன் சொல்லிக் கொடுத்த வேத, இதிஹாச, புராண , உபபிரஹ்ம ணங்களைக் பகவத் தத்வத்தை ,
யுக்த்திகளாலே ஆலோடனம் பண்ணி , தியானம், வந்தனம், கீர்தனம் இத்யாதி பக்தி உபஹ்ருத்தங்களால் கிட்டுகிற பகவத் பிராப்தியே யோகம்.

ஆச்சாரியாத் பாத மாதது
பாதம் சிஷ்ய: ஸ்வ மேதயா
பாதம் ஸபிரஹ்மசாரி த்யா:
பாதம் காலேன பக்வதே .

மேதா – தீ: தாரணாத்
பிரதீபா – பிரக்ஞான் நவ நவோன்மேஷ சாலினி

உபதேக்ஷந்தி தே ஞானம், ஞானிநா தத்வ தர்சிநா : — பகவத் கீதை.
தத்துவத்தை உள்ளபடி அறிந்தவர்கள் ஞானத்தை நமக்கு கொடுக்கின்றனர். இதையே வேறு விதமாக சொல்லப் போனால்
உபதேக்ஷந்தி தே அக்ஞானம் என்று நம்மிடம் உள்ள அக்ஞானத்தை தெரிவிக்கிறார் குரு –
ஞானத்துக்கு மேல் மூடி இருக்கிற – விளக்கின் மேலுள்ள ஆவரணத்தை விலக்க எப்படி தீபம் ஸ்வஸ்மை பிரகாசம் ஆகுமோ
அதுபோல அஜ் ஞானம் நீங்கி ஸ்வ ஞானம் உண்டாகும் என்றாகும்.

துவம் ஹி நப்பிதா யோ அஸ்மாகம் அவித்யா: பரம் தாரம் தாராயஸீதி —
யார் நம்முடைய அஜ் ஞானத்தை விலக்கிக் கொடுக்கிறாரோ அவரே நமக்கு பிதா என்றபடி.

எப்படி உளியால், தேவையற்ற கல்லை விளக்கினால், சிலை வெளிப்படுமோ அதுபோல
அஜ் ஞானத்தை போக்கினால், ஞானம் தானாகவே பிரகாசிக்கும்.

யானையும் குதிரையும் ஒன்றாகுமோ என்பர் -நீலோ கடம் -கருப்பான குடம் -மணம்- பிரகாரம் -பிரகாரி -பேதமும் உண்டு அபேதமும் உண்டு –
ஸ்வேத படம்- வெள்ளை துணி நீலோ கடம் -எளிதான உதாரணங்கள் காட்டி நம் சம்ப்ரதாயம் -பேதாபேதம் இல்லாமல் –
அபேதம் ஸ்வா பாவிகம் பேதம் ஔபாதிகம் -பேத அபேத ஸ்ருதிகள் -கடக ஸ்ருதிகள் -ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி –
பாட்ட மீமாம்சிகர் –ஏக வாக்யத்வம் -பின்ன வாக்கியம் -த்யான ந்யோக வாதம் -பிரச்னம் -அனுவாதம் –
வாக்ய சாஸ்திரம் –பத சாஸ்திரம் வியாகரண சாஸ்திரம்
தர்மம் -வேத பிரதிபாத்யன் -அர்த்தவத் -சம்பூர்ண ஏகார்த்தம்
ஸ்ரீ இராமாயண சாரம் –சங்கல்ப சூர்யோதயம் ஒரே ஸ்லோஹம்-சீதா ஜீவாத்மா -பெருமாள் -பரமாத்மா -திருவடி ஆசார்யர் –
தச இந்த்ரியங்கள் மனஸ்-இராவணன் –
மகா பாரதம் -பரோபாகார துல்ய
வாக்ய பேத தோஷம் சொல்லி மண்டல மிஸ்ர வாத நிரசனம் -விதி வாக்யங்கள் -அவதாரணம் -சத்யம் ப்ரூயாத் ஏவ -சாசனம் சாஸ்திரம் —
பிச்சாததனம் சென்று வரும் பொழுது பசுவைக் கூட்டி -வா -இரண்டு கார்யம் விதிக்க -பிரதானம் முதலில் சொல்லி
வாக்ய பேதம் ஆகுமே –சோம யாகம் -விதிக்க -யஞ்ஞ யாகம் பர்யாய சப்தங்கள் -சோமம் கொண்டு யாகம் செய்வது –
சாத்தியம் சாதனம் இதி கர்த்தவ்யம் -மூன்றும்
சோம யோகம் -சாத்தியம் சோம லதா சாதனம் உபய விபாகம்
நியாய சஞ்சாரம் -இது வாக்ய பேதம் ஆகும் என்பர் –
லஷணா-விசிஷ்ட விதி -சாதனா விசிஷ்டமான சாத்திய விதியாகக் கொள்ள –
அவ்ருத்தி லஷணம் விபாக லஷணம் வைரூப்ய லஷணம் -போன்ற பலவும் அலங்கார சாஸ்த்ரத்தில் வாக்ய பேதங்கள் உண்டே
வேதாந்த வாக்கியம் த்யானம் பற்றி சொல்லும் பொழுது சாத்தியமும் சாதனமும் சொல்லும் சோம யாகம் சோம லதா இது கர்த்தவ்யம் சொல்லும் –
ஆத்மாவால் த்ரஷ்டவ்யா ஸ்ரோதவ்யோ நிதித்யாசித்வா -போன்றவை த்யானத்தை விதிக்கிறதா —
ப்ரஹ்மம் த்யானம் பண்ண -கர்த்தவ்யம்
ப்ரஹ்மத்தை கொண்டு த்யானம் -சாதனா விதியா சாத்திய விதியா -இரண்டையும் சொல்வது என்றால்
வாக்ய பேத தோஷம் -உண்டாகும் என்பர்
சாத்திய ஸ்வரூபம் மட்டும் என்றால் சாதனாம் சொல்ல வில்லையே என்பர் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யதோ வா -இத்யாதி வாக்யங்கள் தத் ப்ரஹ்ம சொல்பவை
அர்த்தங்கள் இல்லை என்பர் பின்ன வாக்யத்வயம் –
த்யானம் செய்ய சொல்பவையும் ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்பவையும் -வாக்ய பேதம் -என்பர் –
பிரவ்ருத்தி நிவ்ருத்தி சொல்லா அர்த்தவாத வாக்யங்கள் என்பர் -இப்படி பாட்ட மீமாம்சர் மண்டல மிஸ்ர வாதம் நிரசிப்பர் -குமாரில பாட்டர்

ந்யோவாதம் -மீமாம்ச -மண்டல பாட்ட இருவரும் மீமாம்சகர்
நாமும் உத்தர மீமாம்சக சாஸ்திரம் என்போம் -நாமும் ப்ரஹ்ம மீம்சகர் தான்
பூர்வ மீமாம்ச வாதம் -சங்கரர் அத்வைதிகள் ஒத்துக் கொள்வது இல்லை -கபந்த மீமாம்சகர் –
ராகு மீமாம்சகர் -சாயா க்ரஹங்கள்-ராகு தலை கேது வாழ் -ஸ்ருதி சிரஸ் உபநிஷத் மட்டும் ஒத்துக் கொள்பவர் ராகு மீமாம்சர் —
ப்ருஹதாரண்யா உபநிஷத் -பிரதம இரண்டு அத்யாயங்கள் விட்டு அஸ்வமேத யாகங்கள் செய்பவன
கபந்தன் தலை இல்லை -கபந்த மீமாம்சகர் -என்பர் நாம் இரண்டையும் ஒத்துக் கொள்கிறோம் -நியாய சஞ்சாரம் -செய்து –
விதி நிஷேதன்கள் இல்லாததால் இவைற்றைக் கொண்டு ப்ரஹ்மம் அறிய முடியாது என்பர்
வசஸ் ஸூ தாம் -வ்யுத்பத்தியை நியாய சாஸ்திரம் அலங்கார சாஸ்திரம் கொண்டு விவரித்து அருளி உள்ளார்கள்

புருஷார்த்ததையா அந்வயகா -சாஸ்திர பிரமாணார்த்தம்
அவித்யா -திருத்தக்க –தேவாசூர –பிசாச -மனுஷ்ய –ஸ்திரீ பின்னானாம் ஷேத்ரஜ்ஞ்க்ன தாரக போஷாக போகய –
ஸ்வரூப குண சேஷ்டிதங்கள் -போதயதேன வாக்கியம்
ஏவம் பூத பர ப்ரஹ்மம் –வேதனா சப்தம் -ப்ரஹ்மம் பிராப்தையா –ராஜ குமாரா பால க்ரீடா –வேத சாஸ்திர சர்வ கல்யாண குண —
காம்பீர்யாதி குண சம்பன்ன -ஜீவதஸ் புத்திர -நிரதிசய -மநோ ஹர தர்சனம் அவாப்த சமஸ்த புருஷார்த்தம் பவதி –ஞான மாத்திர –தாது அசைத்து
யதார்த்தா பாவ –தாத்பர்ய -புருஷார்த்த பர்யாவசம் நிகில ஜகத் ஏக காரணம் –இதி போதயாதி இதி சித்தம் சமன்வயாதி கரணம் –
ஸ்வத புருஷார்த்தம் -என்பதால் மீமாம்ச சாஸ்திரம் படிக்க பட வேண்டும் -மீமாம்ச -விசாரணை –
சமயக் அந்வய–ஆனந்த ஸ்வரூபன் –சாஸ்திர பிரமாணகத்வம்–பிரயோஜன பர்யவவசயாத்
ஸ்வத் பிரயோஜனம் -ஸுகம் -துக்க அபவாத் -இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி –
முக்தி வாதம் -ஸ்வத பிரயோஜனம் -த்யானம் பண்ண பர ப்ரஹ்மா -விதிக்கு பிரதான்யம்–அவனை நம் இயலாமைக்காக உபாயமாக கொள்கிறோம் –

யதோ –தத் ப்ரஹ்மேதி -தபஸா ப்ரஹ்ம -தபோ ப்ரஹ்மேதி -ப்ருகு வல்லி
தபசால் அடையப் பார் தபசே ப்ரஹ்மம் -மீண்டும் மீண்டும் வரும் -ரஹச்யம் -அன்னம் ப்ரஹ்மேதி —பிராணன் —
மநோ விஜ்ஞ்ஞானம் ஆனந்தோ -ப்ரஹ்மேதி
புனர் ஏவ போக வில்லை ஆனந்த ஸ்வரூபன் புரிந்து கொண்டான் –
பக்தி எப்பொழுது ஆரம்பம் -யோகம் -ஆத்மா அவலோகனம் -அந்தரங்க பர ப்ரஹ்ம தர்சனம் ஆனபின்பே பக்தி ஆரம்பம் –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் கண்ட பின்பே பக்தி ஆரம்பம் –
சமயக் அந்வயம்–புதையல் இருந்ததை உணர்ந்த –தவ க்ருஹ நிதி அஸ்தே –திருப்தி -அடைகிறான் -ஞானமே சந்தோஷம் -ராஜ குமாரன் நியாயம் –
பர ப்ரஹ்மம் ஜ்ஞானமே ஸ்வயம் பிரயோஜனம் -வேத சாஸ்திர அத்யயனம் சகல கல்யாண குணாகரன் -பிதா சர்வ லோகாதிபதி
காம்பீர்யாதி சம்பன்னன் அறிவு வந்ததும் -தாம் ஏவ நஷ்ட புத்திர -தேடி இருக்க –அபியுக்த தமன் -வாக்கியம் கேட்டதும் -பெரும் சந்தோஷம்
மத பிதா சர்வ சம்பத் -நிரதிசய ஹர்ஷம் பெறுவானே -ராஜாவும் புத்திரன் அடைந்து அவாப்த சமஸ்த காமன் -அதி மநோ ஹர –
அநவதிக– -இதி சமன்வயாதி -ப்ரஹ்ம மீமாம்ஸா சாஸ்திரம் கொள்ள வேண்டும் என்றதாயிற்று என்று நிகமித்து அருளுகிறார் –
அதிகரண சாராவளி -சுதப்பிரகாச –விவரணம் –மேகநாத அரி சூத லஷ்மண சூரி -ஆசார்யர் சோமயாஜி ஆண்டான் சிஷ்யர் -நான்கு வேண்டாம்
ஒன்றே போதும் —யுக்திகளைக் காட்டி சதுர் ச்லோஹி -சாஸ்திர ஆரம்பம் -கொஞ்சம் அறிந்தோம்
சாஸ்திரம் கற்க ஆரம்பிக்க -வேதார்த்த சாஸ்திரம் -அறிந்து முடிக்க முடியாதே -பூரணத்வம் -அநேக ஜன்ம சம்சித்த–
பிரயாணமே ஸ்வயம் பிரயோஜனம் கைங்கர்யம் வளர வேண்டும் –

பிருஹுர் வை வாருணி பிதரம் உபஸஸார . . . . யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே , ஏனஜாதானி ஜீவந்தி , யத்பிரயம் அபிசந்தீதி , தத் பிரஹ்ம :
தபஸா பிரஹ்ம விதிக்ஞாஸஸ்வா தபோ பிரஹ்மேதி ஸதபோ தப்பியதா ஸதபஸ் தப்த்வா
அன்னம் பிரஹ்மே திய்வஜாநாத்.
பிரானோ பிரஹ்மே திய்வஜாநாத்.
மனோ பிரஹ்மே திய்வஜாநாத்.
விக்ஞானம் பிரஹ்மே திய்வஜாநாத்.
ஆனந்தம் பிரஹ்மே திய்வஜாநாத்.”-முடிவாக பிரஹ்மம் ஆனந்தமயம் என்று தெரிந்து கொள்கிறான்.

திவ்யக்ஞாநாத் என்று சொன்ன பிறகு வேறு பிரயோஜனம் எதுவும் சொல்லாத படியாலே அதுவே பிரயோஜனம்.
அதற்கு மேற்பட இன்னொரு பிரயோஜனம் கிடையாது என்று இந்த வேதாந்த வாக்கியத்திலிருந்து தெரிகிறது.

பரமார்த்த சந்தர்ஷணமாவது ”நெஞ்சென்னும் உட்கண்ணால் காணும் உணர்வு ”.
மஹநீய விஷயே பிரீதிஹி பக்தி என்று, அதன் பிறகு பகவத் விஷயத்தில் ஏற்படும் அன்பு, காதல், ஈடுபாடு எல்லாம் பக்தி எனப்படும்.
அதுவும் கிரமேண தானாக ஏற்படும் ஒன்று என்பதையே .
தது து ஸம்யகு அந்வயாத் – பரம புருஷார்த்ததையா அந்வயாத்-என்று காட்டப் படுகிறது.

1. தவ கிருஹே நிதிரஸ்தி – தன்னுடைய வீட்டின் கீழ் புதையல் இருப்பதாக ஒருவர் சொல்வாரேல் , அந்த செய்தியே எப்படி
பெருத்த சந்தோஷத்தைக் கொடுக்குமோ, அதுபோல பிரஹ்மத்தைப் பற்றிய ஞானமே , அவனை அடைந்ததாகவே சந்தோஷத்தைக் கொடுக்கும் .
பிற்பாடு தியானம் உபாசனம் இத்யாதிகளை விரும்பிச் செய்து அந்த பிரஹ்மத்தை, வீட்டு எஜமானன் புதையலை தோண்டி எடுப்பதை போலும்
இவனும் பிரஹ்ம பாவத்தை அடைவான் என்பதில் சந்தேகம் இல்லை

2. ராஜ குமாரன் நியாயம் – ராஜ குலத்திலே பிறந்த குழந்தை , சந்தர்ப்ப வசத்தால் ஏழை பிராஹ்மணன் கையில் கிடைக்க,
வறியனாக வளர்க்கப்பட்டாலும் சகல சாத்திர சம்பன்னன்னனாகி யுவாவாக வளர்ந்துவிட்டபோது , அவனுக்கு நீ ராஜகுல மாஹாத்மியன் என்று
சொன்னவாறே எப்படி நிரதிசய ஆனந்தத்தை அடைவானோ, அதுபோல
சத்யம், க்ஞானம், அநந்தம் பிரஹ்ம இத்யாதி வாக்கியங்களால் உண்டாகிற பரமாத்ம பரிச்சய ஞானமே ஆனந்தாவகம் .
அரண்மனை வாசம், யவ்வராஜ்ய பட்டாபிஷேகம் முதலான அனுபவங்கள் பிற்பாடுதான் ஆனாலும் பரிசய க்ஞானமே ஆனந்தம் போலே

ஸ்வத புருஷார்த்தமான பிரஹ்ம விஷயத்தில் , பிரவிர்த்தி/நிவிர்த்தி யுக்தமான வேத வாக்கியங்கள் தான் பிரமாணமாக முடியும் என்பதில்லை.
சித்தேர் வித்பத்தி வாக்கியங்களும் பரமாத்ம ஞானத்தைப் போதிக்கும். அவைகளுக்கு அபலத்தவம் சொல்லமுடியாது, ஸ்வதப் புருஷார்த்தமான படியாலே.
இந்த ஸாஸ்த்திர ஆரம்பணம் அவசியமாகிறது.

பரம புருஷார்த்ததையா அன்வய- சாஸ்த்கரைக பிராமண தத்வம் பிரஹ்ம: ஸமன்வய: இதி ஸமன்வயாதிகரணம் .

இத்தால் சதுஸ் ஸூத்ரி பிரகரணம் ஸம்பூர்ணம் .

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading