ஸ்ரீ யபதித்வம் – மூன்று தேவிமார் சகிதம் -அருளிச் செயல் பாசுரங்கள் –

பெரிய திருமொழி –

இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன்
தன துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோருக்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக் கேணி கண்டேனே –2-3-5-

புலமனு மலர்மிசை மலர் மகள் புணரிய
நிலமகள் என இன மகளிர்கள் இவரோடும்
வலமனு படையுடை மணி வணர் நிதி குவை
கலமனு கண புரம் அடிகள் தம் இடமே –8-7-9-

———————————————————————————————-

முதல் திருவந்தாதி –

திரு மகளும் மண் மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திரு மகட்கே தீர்ந்தவாறு என் கொல்– திரு மகள்
மேல் பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-

————————————————————————————–

திரு விருத்தம்

குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழல் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண் அம துழாய்
அழல் போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர்
தொழக் கடவும் தழல் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே –3

——————————————————————————————

திருவாய்மொழி –

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-

பின்னை கொல் நிலா மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே –6-5-10-

என் திரு மகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய யாவியே என்னும்
நின் திரு வெயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும்
அன்று உரு வேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பனே என்னும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே தெளிகிலேன் முடிவிவள் தனக்கே –7-2-9-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட செய்வார்
மேவிய யுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணனது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலைகடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் –8-1-1-

——————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
   ஆழ்வார்கள் திரு வடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading