அவதாரிகை –
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் -என்னும் படியாக வந்து ஸ்பர்சித்து –
அநந்தரம் –
எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால் -என்னும்படி
இருவரும் இரண்டு உடம்பாய் இருக்கை அன்றிக்கே
ஓர் உடம்பு என்று பிரதிபத்தி பண்ணலாம் படி சம்ஸ்லேஷம் பிரவ்ருத்தமாய் –
அப்படி வ்ருத்தமான சம்ஸ்லேஷம் தான் –
காய்ந்து பொருந்துமா போலே –பிரிந்து கூடாவிடில் இரண்டு தர்மியும் அழியும் அளவாக –
இத்தை அனுசந்தித்து -அதாவது –
பிரிந்து கூடினால் நன்றாக கூடி தரிப்பார்கள் என்று -அனுசந்தித்து
இவர்களுடைய பந்து வர்க்கமானது சிறு பெண்களை இழக்க ஒண்ணாது –
இப்படி பிறந்து நின்ற பின்பு இனி போக்கடி என் என்று
பார்த்து இவர்களைக் கொண்டு போய் நிலவறைகளிலே -(under ground cell -)அடைக்க –
அவர்களும் பிரிவாற்றாமே –உபவாச க்ருசாம் தீ நாம் -சுந்தர -15-19–என்று
சொல்லுகிறபடியே ஆற்றாமை எல்லாம் உடையராய்
இவனும் –ந மாம்சம் ராகவோ புங்க்தே -சுந்தர -36-41-என்றும்
நைவ தம்சான் நமசகான் -என்றும்
பெருமாள் கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே இருந்தால் போலே இருந்தது –
அதுக்கு அடி என் என்னில் –
த்வத்கதே நாந்தராத்மநா–சுந்தர -36-42- என்று
பரகாய பிரவேசம் பண்ணி இருப்பாருக்கும் ஓன்று தெரியுமோ -(இவன் ஆத்மா அவர்களிடமும் அவர்கள் ஆத்மா இவன் இடமும் -ஞானி து ஆதமைவ மே மதம் )
தமக்கு உணர்த்தி உண்டாகில் அன்றோ அவை அறிய வல்லராவது என்னும் படியாய் –
இவர்கள் ஒருகால் உறங்காது இருக்கில் –
அநித்ரஸ் சத்தம் –சுந்தர -36-44-என்னும் படியாய்
இத்தலை –ஊர்த்வம் மாசாந்த ஜீவேயம் சத்யே நாஹம் ப்ரவீமி தே-சுந்தர -38-67-என்னில்
ந ஜீவேயம் ஷணம் அபி -சுந்தர 66-10-என்கிறபடியே
ஒரு ஷணமும் ஜீவிக்க மாட்டாத படி இறே அவன் படி
இப்படி இரண்டு தலைக்கும் ஆற்றாமை கரை புரண்டு இருக்க –
பெண்களுடைய தசையை அனுசந்தித்த பித்ராதிகள் -இவர்களை
நாம் முடிய நிரோதிக்கில் இழக்கும் அத்தனையாய் இருந்தது –
நாமே சேர்த்து விட்டோம் ஆக ஒண்ணாது –
இனி இங்கனே ஒரு வழி இடுவோம் –
பெண்கள் வர லாபத்திற்காக- பனி நீராட -என்று ஓன்று உண்டு செய்து போருவது –
அத்தை இவர்கள் செய்வார்கள் –
தங்கள் நினைவிலே அதுவும் பலிக்கிறது –
நாம் இது தன்னை அறிந்தோம் ஆகாது ஒழிகிறோம் -என்று இவர்கள் தாங்கள் தங்களிலே சமயம் பண்ணி இருக்க –
அவனும் பிரிந்த போது தொடங்கி –இவர்கள் இடையாட்டம் ஆராயும் அதுவே இறே அவனுக்குப் பணி–
ஆகையால் தான் பிரிந்த பின்பு பிறந்தவை அடைய பஞ்ச லஷம் குடிக் காட்டில் –தனித் தனியே ஆளிட்டு ஆராய்ந்து ஊரில்
பிறந்த விசேஷங்களும் -பிறக்கிறவையும் -பிறக்க புகுகிறவையும் -அறிந்து
பிறக்கிறவை-பித்ராதிகள் -நீராடப் போகச் சொன்னவை
பிறக்கப் போகிறவை பெண்கள் நீராடப் போகிறவை –
இப்படி பனி நீராட போவதாக அத்யவசித்து இருந்தார்கள் என்று கேட்டு
தானும் ஒக்கப் போவதாக கணிசித்து இருக்க
அவர்களும் -இவனோட்டை சம்ஸ்லேஷம் தான் பொறுக்கப் போகாது
அதுக்கு மேலே விஸ்லேஷ வ்யசனம் தான் பாடாற்றப் போகாது –
சம்ஸ்லேஷமோ விஸ்லேஷந்தமாய் அல்லாது இராது
ஆன பின்பு அவனோடு சம்ஸ்லேஷித்து பின்னைப் பிரிந்து படும் வ்யசனத்தில்
முன்புற்றை விரஹ ஜ்வரத்துக்கு பரிகாரமாக நீரிலே போய் முழுகி அத்தால் வந்த ஆஸ்வாசத்தைப் பெற்று இருக்க அமையும்
அது செய்யும் இடத்தில் நாமும் அவனுமாய் முன்பு குளித்துப் போகும் பொய்கையில் போகில் அவன் அறிந்து வரும்
ஆன பின்பு அவன் அறியாத தொரு பொய்கை தேடித் போக வேணும் –
அது செய்யும் இடத்தில் திரளாகப் போகில் அவன் அறியும்
ஆன பின்பு ஒருவர் ஒருவராகப் போவோம்–
போம் இடத்திலும் வழி தெரியாத படி இட்ட அடியை அழித்துக் கொண்டு போவோம் -என்று
எல்லாரும் போனார்கள் –
அவ்வளவிலே இவனும் அவர்களைப் பெறுகைக்கு
எதிர் சூழல் புக்கு திரிவான் ஒருவன் -திருவாய்மொழி -2-7-6–இறே
இவர்கள் நினைவை அறிந்து இனித் தான் திருவயோத்யையில் உள்ளாரைப் போலே வழி மாறிப் போனால் அறிந்திலோம்
என்று மீளும் இளிம்பன் அன்று இறே –
இயேஷ பதமன்வேஷ்டும் சாரணா சரிதே பதி -சுந்தர -1-1-என்கிறபடியே அடி ஒற்றினான்
(ராவணனால் அபஹரிக்கப் பட்ட தேவர்கள் சாரணர்கள் சஞ்சரிக்கும் பாதையில் சத்ருக்களை வெல்ல வல்ல திருவடி –ஜீவாத்மாவை இந்திரியங்கள் அபகரிக்க -ஆச்சார்யர் -திருவடி-ஸ்த்ரீ லிங்கம் சீதா -அயோநி -ஜீவாத்மா -அவனுக்கே ஆட்பட்டவர்கள் பாரதந்தர்யம்-அஞ்ஞானம் போக்க வல்ல -சம்சார மண்டலத்தில் அவதரித்து -பூர்வாச்சார்யர் சதாசாரம் -ஆகாச மார்க்கம் -)
இவன் தான் இருள் அன்ன மா மேனி –பெரிய திருவந்தாதி -26-என்கிறபடியே
இருளோடு விகல்பிக்கலாய் இறே திரு மேனி இருப்பது –
ஆகையால் சாயாவானை சாயை பின் செல்லுமா போலே இவர்கள் நிழலிலே ஒதுங்கிப் போய்
முற்பட்டுக் கரையைப் பற்றினான்-
இவர்களும் இடைப் பெண்கள் ஆகையாலே பரியட்டங்களையும் ஆபரணங்களையும் அடையக்
கரையிலே இட்டு வைத்துப் போய் ஜலத்திலே அவகாஹித்தார்கள் —
அவ்வளவிலே இவற்றை அடைய வாரிக் கொண்டு பெரிய வேகத்தோடு போய் குருந்தின் மேலே ஏறித்
தன்னைத் தெரியாத படி மறைய நின்றான் –
இவர்களும் கரையிலே ஏறிப் பார்த்த இடத்திலே அவை காணாமையாலே -இருந்த படி என் –
என்று துணுக்கென்று நம்மோடு கூட வந்தார் ஒருவரும் உண்டோ –
இது ஆகாசம் கொண்டதோ -திக்குகள் கொண்டதோ
இக்குளம் கொண்டதோ -கிருஷ்ணன் கொண்டானோ -என்று இங்கனே கலங்கி
கின்னுச்யாத் சித்த மோஹோஸ்யம்–சுந்தர -34-23-என்கிறபடியே
திருவடி முன்னே இருந்து வார்த்தை சொல்லா நிற்கச் செய்தேயும்
இது இந்நிலத்தில் சம்பவிப்பது ஓன்று அல்ல -என்று இருந்த படியாலே -இது சித்தஸ்கலனம் பிறந்ததோ -என்றும்
உன்மாதஜோ விகாரோ வா ச்யாதியம் ம்ருக த்ருஷ்ணிகா –என்கிறபடியே
இது உன்மாதாமோ -பிரகிருதி விகாரம் பிறந்ததோ
இது இருந்தபடி என் -என்று சங்கித்து பின்பு தெளிந்தால் போலே
இவர்களும் அநேகத்தை சங்கித்து -இவர்களும் எங்கும் பரகு பரகு-என்னப் பார்த்துக் கொண்டு வாரா நிற்க –
இவனைக் குருந்தின் மேலே கண்டார்கள்
கண்ட அநந்தரம் –
இவன் நம்மை மடி பிடித்து வந்தான் –புடவைக்காக வந்தான் -சாடு -நாமும் இவனை
மடி பிடித்து வாங்கினோமாம் விரகு ஏதோ -என்று பார்த்து
இவனை -இரப்பார்–தொழுதோம் -3-1–
ஏத்துவார் –மதுவின் துழாய் முடி மாலே -3-2–
வாழ்த்துவார் –கூத்தாட வல்ல எங்கோவே –3-6–
தாழ்த்துவாராய்-சீறுவாராய்-குரக்கரசு –3-4 -என்றும் –
மசுமையிலீ -3-9-என்றும் சீறி
இவனை இப்படி தீம்பு செய்யப் பெற்று விட்ட தாயும் ஒருத்தியே -என்று –
அஞ்ச உரப்பாள் -3-9-என்று அவளை வெறுப்பார்
தங்கள் ஆற்றாமையை அறிவிப்பாராய்-
தடத்தவிழ் தாமரை -3-6–
இப்படி பஹூ பிரகாரங்களாலும் அனுவர்த்திக்க
அவனும் பரியட்டங்களையும் கொடுத்து சம்ஸ்லேஷித்தானாய்த் தலைக் கட்டுகிறது –
மேலில் திருமொழி விஸ்லேஷித்து கூடல் இழைக்கையாலே
இங்கே சம்ஸ்லேஷம் அர்த்தாத் -சித்தம் –
————————————————————–
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-
பதவுரை
அரவு அணை மேல்–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
பள்ளி கொண்டாய்–திருக் கண் வளர்ந்தருளுமவனே!
குடைந்து–(குளத்தில்) அவகாஹித்து
நீர் ஆடுவான்–நீராடுவதற்காக
கோழி அழைப்பதன் முன்னம்–கோழி கூவுதற்கு முன்னம்
போந்தோம்–(இவ்விடம்) வந்தோம்;’ (இப்போதோ வென்றால்,)
பொய்கைக்கு–குளத்திற்கு
வாரோம்–நாங்கள் வருவதில்லை’
தோழியும் நானும் தொழுதோம்–தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்’
செல்வன்–(ஸ்ரீ மந்நாராயணன் தன்னிடத்து நித்ய வாஸம் பண்ணப் பெறுகையாகிற) செல்வத்தை யுடையனான
ஆழியன்–ஸூர்யன்
எழுந்தான்–உதித்தான் ’(பட்ட போது எழு போது அறியாள் -அஸ்தமனம் உதயம் தூய தமிழில் )
ஆற்றவும் ஏழமை பட்டோம்’ (நாங்கள் உன்னாலே) மிகவும் இளிம்பு பட்டோம் ’
இனி–இனி மேல்
என்றும்–என்றைக்கும்
துகிலை–(எங்களுடைய) சேலைகளை
தோழியும் நானும் தொழுதோம்–தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்’
துகிலை–(எங்களுடைய) சேலைகளை
பணித்தருளாய்–தந்தருள வேணும்.
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
நாங்கள் ஒன்றை நினைத்து வர –அது ஒன்றாய் பலித்த படி கண்டாயே
கிருஷ்ணன் தான் ராத்ரி முற்கூற்று எல்லாம்
பெண்களுடைய முலைகளோடும் தோள்களோடும் பொருது உறங்குவது பிற்கூற்றிலே யாகையாலே
இக்காலத்தில் இவன் உணரான் என்று –
அது பற்றாசாக வாய்த்து -இவர்கள் போந்தது –
இவர்கள் நினைவு இதுவானாலும் கோழி கூவினவாறே உணர்வான் ஒருவன் ஆயத்து
தாங்கள் உறக்க உறங்கி கோழி உணர்த்த உணர்ந்து போரும்படியை கண்டு
அந்வய வ்யதிரேகங்கள் இரண்டும் அறிந்து யாய்த்து போந்தது –
அழைப்பதன் முன்னம்-
இவன் தன்னை துடை தட்டி எழுப்புவாரைப் போலே
கோழி கூவி எழுப்ப வேண்டும்படி யாய்த்து நித்ராபரவசனாய்க் கிடக்கும் படி-
இப்படி நம்மை மறைத்து நாம் உணருவதற்கு முன்னே நீங்கள் போந்தது என்ன காரியத்துக்குத் தான் -என்றான் –
குடைந்து நீராடுவான் போந்தோம்-
சரயூம் அவகாஹதே –ஆரண்ய -16-30-என்னுமா போலே
உன்னோட்டை விரஹ தாபம் எல்லாம் ஆறும்படி குளிக்கப் போந்தோம் –
உன் வரவை நினைந்து போந்தோம் அல்லோம் –
நீ வருவதற்கு முன்னே குளித்து மீள வேணும் என்னும் மநோ ரதத்தோடு போந்தோம்-
ஆனால் அதுக்கு வந்தது என் -செய்யலாகாதோ என்று அவனும் ஒன்றை நினைத்தான்
அதாவது தமிழர் கலவியை –சுனை நீராடல் -என்று ஒரு பேரை இட்டுப் போருவார்கள் –
அத்தைப் பற்ற தன் அபிமத சித்திக்கு உடலாக சொன்னான் அவன்
உனக்கு அது செய்ய ஒண்ணாது காண்-
உன் நினைவை எண்ணி வந்து தோற்றினான் காண் ஸ்ரீ மான் ஆதித்யன் -என்கிறார்கள்
ஆழியம் செல்வன் எழுந்தான் –
கடலிலே முழுகி எழுவாரைப் போலே தோற்றினான் -என்னுதல் –ஆழி –
கடல் என்று கொண்டு
அன்றிக்கே –
மண்டலத்தைச் சொல்லுதல் -வட்டம் -ஆதித்ய ரதத்தைச் சொல்லுதல் –
தேர் சக்கரம் ஆழி –தனி ஆழித் தேர் -சிறிய திருமடல்
செல்வன் –
ஸ்ரீ யபதியான நாராயணன்
தன் பக்கலிலே பிராட்டியிடே சந்நிதி பண்ணும் படியான சம்பத்தை உடையவன்
(ஸ ஏஷ அந்தர் ஆதித்ய ஆதித்த மத்ய வர்த்தி -ஹிரண்மய புருஷ -கரு நீல வர்ணன் -ஹிரண்ய வர்ணை இருப்பதால் -ஸ்ரீ யபதி
விபரீத லக்ஷணை -கள்ளிச்செடி மஹா வ்ருக்ஷம் -இவன் வேறே ஆடை இல்லாமல் இருக்கும் எங்களை பார்க்கும் படி வந்தானே)
அது பின்னே ஆர்க்கு அழகு –
உங்களுடைய அங்க பிரத்யங்கங்களை அழகிதாகக் கண்டு அனுபவிக்கைக்கு உடலாகிறது –
நீங்கள் தான் ஒரு கார்யத்திலே உபக்ரமிக்கும் போது அது செய்து தலைக் கட்டுகைக்கு வேண்டும்
போது அறிந்து அன்றோ புறப்படுவது
நீங்கள் ஆரை நினைத்துப் போனது கோள்-என்ன
அரவணை மேல் பள்ளி கொண்டாய்-
உன் உறக்கத்தை மெய் என்று போந்தோம்
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை -14-3–என்கிறபடியே
இவ்வவதாரம் தான் இருபுரியூட்டி இருக்கையாலே -மனுஷ்யத்வமும் பரத்வமும் சேர்ந்து –
திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின படியையும் தங்களுக்கு விசதமாகச் சொல்லிற்று ஆகவுமாம்
அங்கன் அன்றிக்கே
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியை நினைத்து சொல்லிற்று ஆகவு மாம் –
பாற் கடலில் பையத் துயின்ற பரமன் என்றபடி
அங்கு கண் வளர்ந்து அருளின படியாகில்
உன்னுடைய ரஷணத்தை விஸ்வசித்துப் போந்தோம் -என்றார்கள் ஆகிறது -(அறி துயில் -அறியும் துயில் கூப்ப்பீடு கேட்க்கும் இடம் )
இங்கே பள்ளி கொண்டு அருளின படியால் –
படுக்கை வாய்ப்பாலே நீ உணராதே உறங்குவுதி -என்னுமத்தை பற்றப் போந்தோம் என்கிறது —
அவன் உறங்கினானாகில் -அவ்வுறக்கத்தை அனுசந்திப்பார்கள் –
உணர்ந்தானாகில் அத்தை அனுசந்திப்பார்கள் –
வேறு ஓன்று அறியார்கள் இறே
நம் உறக்கத்தை விஸ்வசித்துப் போந்த உங்களுக்கு இப்போது வந்தது என் என்ன –
அழகிதாக இளிம்பு பட்டோம் -ஆகில் இனி இதுக்கு மேல் வருவது என் –
ஆற்றவும் பட்டோம் -மிகவும் பட்டோம் –
நீ நெடுநாள் எங்கள் கையில்-பிரணய ரோஷத்தாலே பட்டது எல்லாம்
ஒரு ஷணத்திலே நாங்கள் உன் கையில் பட்டோம் -என்கிறார்கள் –
ஆகில் இனி இதுக்கு பரிஹாரம் உண்டோ –
அவசியம் அனுபோக்தவ்யம் அன்றோ -அத்தைத் தப்பப் போமோ இனி –
நீங்கள் தான் இதுக்கு போக்கடியாக நினைத்து இருந்தது என் -என்றான் –
இதுக்கு போக்கடி அற்றுப் போக வேணுமோ –
இனி என்றும் பொய்கைக்கு வாரோம்-
ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே
உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது –
பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –
வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –
அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –
என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –
இனி –என்றும் பொய்கைக்கு வாரோம் –
இவர்கள் வாரோம் இனி -என்றவாறே —
தப்ப விழுந்தாகாதே -என்று அஞ்சி –நம்மையும் இவர்களையும் சேர விடுவார் யாரோ -என்று பார்த்தான் –
இரண்டு தலையையும் சேர விடுகைக்கு பரிகரம் கை கண்டு வைத்தோம் –
இனி நம்மையும் இவர்களையும் சேர விடுகைக்கு அஞ்சலி அல்லது இல்லை என்று அறியுமே –
அது பார்த்துக் கொள்ளுகிறோம் –
நீங்கள் என்னை அறியாமல் போந்ததுக்கு பரிகாரமாக கும்பிடுங்கோள் என்றான் –
என்றவாறே ஒரு கையாலே கும்பிட்டார்கள் –
அது ஒண்ணாது இரண்டு கையாலும் கும்பிடுங்கோள் என்றான் –
ஆனால் –
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே-–
அது போராது-நாலு கைகளாலும் தொழ வேணும் -என்றான்
தோழியும் நானும் தொழுதோம் —
இவர்கள் தொழச் செய்தேயும் கொடாதே –
ஆன்ரு சம்சயம் கொண்டாடி இருப்பார் பக்கல் அன்றோ இது பலிப்பது –
பிரணயிநீ விஷயத்தில் வந்தால் நம் அபிமதம் பெற்று அன்றோ கொடுப்பது –என்று
பின்னையும் ஒரு நிலை நிற்கிறான்
அந்த பிரணயித்வத்தை விடாய்-
அஞ்சலிக்கு பல சித்தி உண்டு காண்-
எங்கள் துகிலைத் தந்து அருள் –
உன் நினைவு ஒழியவும் பலிப்பது ஓன்று அன்றோ அது –
திரு நாமத்துக்கு புடவை சுரந்து அருளியதே –
அஞ்சலி பரமா முத்ரா -என்னக் கடவது இறே –
————————————————————————
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-
பதவுரை
இங்கு–இங்கே
புகுந்து இது என்–(நீ) வந்து சேர்ந்த விதற்குக் காரணமென்ன?
இப் பொய்கைக்கு–இக் குளத்திற்கு
எவ்வாறு வந்தாய்–எவ் வழியாலே வந்தாய்?
மது இன் துழாய் முடிமாலே–தேன் மாறாத இனிய திருத்துழாய் மாலை சூடிய திருவபிஷேகத்தை யுடைய பெரியோனே!
மாயனே–ஆச்சரிய சக்தி யுடையவனே!
எங்கள் அமுதே–எங்களுக்கு அம்ருதம் போல் இனியவனானவனே!
விதி இன்மையால்–விதி யில்லாமையாலே
அது மாட்டோம்–ஸம்ச்லேஷத்திற்கு இசைய மாட்டோம்’
வித்தகப் பிள்ளாய்–ஆச்சரிய சேஷ்டைகளையுடைய பிள்ளாய்!
விரையேல்–அவஸரப் பட வேண்டா’
அரவில்–குதி கொண்டு காளிய நாகத்தின் மேல்-
குதி கொண்டு–குதித்துக் கொண்டு
நடித்தாய்–நர்த்தனஞ்செய்தவனே!
குருந்திடைக் கூறை–(அக்) குருந்த மரத்தின் மேல் வைத்திருக்கிற சேலைகளை
பணியாய் – கொடுத்தருள்.
விதி இன்மையால் அது மாட்டோம்–
விதி இல்லாமையால் சம்ஸ்லேஷத்துக்கு இசைய மாட்டோம் –
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
தங்கள் அபிமதம் பெற்றுப் போக பாரா நின்றார்கள் –
நம் அபிமதம் தான் நினைக்கிறிலர்கள்-
இவர்கள் போக்கு இருந்தபடி என் –
இங்கன் அல்ல செய்வது -என்று பார்த்து -குருந்தின் நின்றும் இழிந்து
சேஷித்த பரியட்டங்களை வாரிக் கொண்டு –
சுழல் காற்றுப் போலே எங்கும் வ்யாபரித்து கடுகப் போய்-குருந்தின் மேலே ஏறி மறைய இருந்தான் –
இவர்களும் கரையிலே போந்து ஏறி ஒன்றும் காணாமையாலே ஸ்தப்தைகளாய்-
இது என் புகுந்தது இங்கு-
மின்னாதே இடி விழுந்து நிற்கக் கண்டோம் –
இனி இங்குப் புகுந்தது தான் என்
நீ ஸ்தப்தனாய் இரா நின்றாய் –
அவ்விஷய ஸ்ரவணம் உனக்கு உண்டாய்த்தோ என்று கேட்கப் பண்ணும் விஷயம்
கண்ணால் கண்டால் பேசாது இருக்குமோ
ஸ்ரவண மாத்ரத்திலே அழிக்கும் விஷயம் சாஷாத் கரித்தால் கலங்காது இருக்க ஒட்டாது இறே –
பாலாழி நீ கிடக்கும் பண்பை நாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி –
குண ஸ்ரவணத்தாலே அழிக்கும் விஷயம் தீம்புக்கு இலக்கானால் பேசாது இருக்கப் போகாது இறே –
காமன் உடல் கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டலம்பும் தாரலங்கல் நீண் முடியான்
தன் பெயரே கேட்டிருந்து அங்காரலங்கள் ஆனமையால் ஆய்ந்து -நான்முகன் -78-என்றபடி –
கேட்ட சிவனை ஈடுபடுத்திய விஷயம்
கண்ணனாய் பிறந்த பின்பு அவன் தீம்புக்கு இலக்கானவர்களால் பேசாது இருக்க முடியாது அன்றோ
அந்தோ –
நம் நினைவு அவனுக்கு உடலாவதே –
நாம் இவனுக்கு முன்பே வர வேணும் என்று போந்தோமானோம் –
இவன் நமக்கு முன்னே கோலி வந்து நிற்பதே –
நீங்கள் இழவாளராய் நோவு படுக்கைக்கு இப்போது விசேஷித்து வந்தது என்-
பண்டு தான் நான் உங்களோடு வாரேனோ -என்ன –
இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –
நீயும் நாங்களுமாய் ஜல கிரீடை பண்ணிப் போரும் பொய்கையோ இது –
இது அறிந்து நீ வந்தபடி எங்கனே –
நாங்கள் உன்னைக் கூடக் கொண்டு போந்திலோம்-
இட்ட அடியையும் அழித்து அன்றோ நாங்கள் போந்தது -நீ இங்கு வந்த வழி என் –
இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –
ஆனை நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை —
ஆர்த்த நாதம் வழி காட்ட வந்தாய் அல்லை –எவ்வாறு வந்தாய் –
இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –
காளியன் நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை –
அநு கூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை –
பிரதிகூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை
நீ வந்த வழி என் –
அது கொடு கார்யம் என் –
வந்து கொடு நின்றோமே –
பலன் கைப்பட்டால் சாதனம் நிரூபிக்கக் கடவதோ -என்றான் –
இவர்கள் தோல்வியையும் தன் ஜெயத்தையும் அநுசந்தித்து மேணானித்தமை தோற்ற
மிகைத்து வார்த்தை சொல்லத் தொடங்கினான் –
பொகடு -இவன் கையிலே அகப்பட்டோம்
இங்கன் அன்று இது வாங்குவது -ஸ்தவ ப்ரியன் –
இவனை ஏத்திக் கொள்வோம் -என்று பார்த்து ஏத்தத் தொடங்கினார்கள் –
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே-
ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈச தேபி ஸூ நயன் கில மௌலி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -25-என்றபடி
ஆதி ராஜ்ய ஸூசகமாக வைத்த வளையத்தோடு கூட –
நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து தன் மேன்மை தோற்ற
பரம பதத்திலே சர்வேஸ்வரனாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –
அவ்விருப்பை இவ்வருகு உள்ளாரும் பெற வேணும் என்னும் வாத்சல்யத்தால்
அகர்ம வச்யனான தான் கர்ம வச்யரோடு
சஜாதீயனாய் வந்து திருவவதரித்து
இடையருக்கு ஏவிக் கொள்ள லாம் படி பவ்யனாய் நின்ற
ஆச்சர்யத்தை சொல்லுகிறது -மாயனே -என்று
எங்கள் அமுதே –
அத்தனை பொதுவான நிலை அன்றிக்கே –
எங்களுக்கே ஸ்வம்மாய்-நிரவதிக போக்யதை உடையனாய் நிற்கிற நிலை –
தேவர்களுக்கு உப்புச் சாறு போல் அன்றிக்கே
எங்களுக்கு கூறான அமிர்தம் ஆயத்து
நீங்கள் தான் நம் மேன்மை அறிந்திகோளே-
உங்களுக்கே ஸ்வம்மானமை தோற்றச் சொன்னி கோளே –
தந்தாமது என்று அறிந்தால் –
தந்தாம் உடைமை மங்காமல் நோக்கி விநியோகம் கொள்ள வேண்டாவோ -என்றான் –
அது என் என்பது என்ன –
உங்கள் கண்களாலே என்னைக் கடாஷித்து –
என் சத்தையை உண்டாக்கி –
நீங்களும் நானுமாக அனுபவிக்க பார்க்க வாகாதோ -என்றான் –
விதியின்மையால் அது மாட்டோம் –
அது பொல்லாதோ -அழகியது ஓன்று அன்றோ –
ஆகிலும் எங்கள் பாக்ய ஹானியாலே அது மாட்டு கிறிலோம் -என்கிறார்கள் –
விதி இன்மையால் அது மாட்டோம்-என்று –
அது -என்றார்கள் இறே-அவன் நினைவைத் தாங்கள் அறிந்தமை தோற்ற
ஆகிலும் நானும் என்னுடைய பாக்ய ஹானியாலே பரியட்டம் தர மாட்டு கிறிலேன்-என்னா –
இவற்றையும் கொண்டு அரும் கொம்பிலே போய் ஏறினான் –
இவனுக்கு பாக்ய ஹானியாவது -அவர்களுடன் கூடாமை -இறே
வித்தகப் பிள்ளாய் விரையேல்-
எங்கள் சத்தையும் அழிக்கப் பாராதே கிடாய் –
வித்தகன் -சமர்த்தன் –
எங்கள் போகத்துக்கு விச்சேதம் பண்ணினாய் ஆகிலும்
எங்கள் சத்தையை அழிக்கப் பாராதே கொள் –
நான் விரைந்து எங்கே என்ன சாஹசம் செய்யக் கண்டிகோள்-என்றான் –
குதி கொண்டு அரவில் நடித்தாய் –
ஏக்தா து வி நா ராமம் -கிருஷ்ணோ பிருந்தாவனம் யயௌ விசசார வ்ருதோ
கோபைர் வன்ய புஷ்பஸ் ரகுஜ்ஜ்வல-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-7-என்கிறபடியே –
தமையனார் ஷணம் பேர நிற்கப் பாம்பின் வாயிலே விழக் கடவ உனக்கு
இவை சால அபூர்வமோ-அது கிடாய் -என்கிறார்கள் –
நம் கையிலே காணில் இறே இவர்கள் வேண்டுவது என்று பார்த்து
பரியட்டங்களை குருந்திலே இட்டு வைத்துக் கையைத் தட்டி
என் கையில் உண்டோ -நான் தர -என்றான்
குருந்திடைக் கூறை பணியாய்-
உன் கையில் இல்லை –
குருந்தின் மேல் கிடக்கிறவற்றைத் தா -என்கிறார்கள் –
எங்கேனும் கிடக்கிலும் இவன் திரு உள்ளம் உண்டாகில் அல்லது சித்தியாது -என்றபடி –
————————————————————————————
எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி
வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே—–3-3-
பதவுரை
வில்லால்–வில்லாலே
இலங்கை–லங்கையை
அழித்தாய்–நாசஞ் செய்தருளினவனே!
எல்லே–என்னே!
ஈது என்ன இளமை–இது என்ன பிள்ளைத்தனம்!
எம் அனைமார்–எங்களுடைய தாய்மார்கள்
காணில்–கண்டால்
ஒட்டார்–(மறுபடியும் எங்களை வீட்டின் வழி வர) ஒட்டார்கள்’
(நீயொவென்றால்)
ஈது–கண்டாரடங்கலும் ஏசும்படி எங்களை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிற இது
பொல்லாங்கு என்று–பொல்லாத காரியமென்று
கருதாய்–நினைக்கிறாயில்லை’
பூ குருந்து–புஷ்பித்திரா நின்ற குருந்த மரத்தின் மேல்
ஏறி இருத்தி–ஏறி யிரா நின்றாய்’
நீ வேண்டியது எல்லாம்–நீ அபேஷிக்கு மவற்றை யடங்கலும்
தருவோம்–கொடுக்கிறோம்’
பல்லாரும்–(ஊரிலுள்ள) பலரும்
காணோமே–காணாதபடி
போவோம்–போகிறோம்’
பட்டை–(எங்களுடைய) பட்டுச் சேலைகளை
பணித்தருளாய்–தந்தருள வேணும்
இவர்கள் நெடும் போது நீரிலே நின்று நோவு படச் செய்தே
இவர்கள் பரியட்டங்களை எல்லாம் வாரிக் கொண்டு குருந்தின் மேல் இட்டு வைத்து இருந்தான்
நாங்கள் நீரிலே நெடும் போது நின்று கிலேசப் பட நீ பேசாது இருக்கிறது என் –
பரியட்டங்களைத் தா -என்ன –
பரியட்டங்களைத் தர நீரில் நின்றும் கரையிலே போந்து ஏறுங்கோள்-என்றான் –
அத்தை மெய் என்று சிலர் கரையிலே போந்து ஏறினார்கள் –
ஏறின அவர்களுடைய அங்க பிரத் யங்கங்களை ஊன்றப் பார்த்து ஸ்மிதம் பண்ணி –
சில விலாச சேஷ்டிதங்களைப் பண்ண
எல்லே ஈது என்ன விளமை-
என்னே -இது ஒரு பாலிச பிரவ்ருத்திகள் இருக்கும் படி என் -என்கிறார்கள் –
நான் பாலனாக -நீங்களோ தான் பஞ்ச தச வார்ஷிக வயஸ்கராய் பரிமாறினிகோள் –
அதில் வந்தால் -உங்களோடு என்னோடு வாசி உண்டோ –
இரண்டு திறத்தாரும் ஒத்த பருவமான பின்பு பருவத்துக்கு ஈடாக பரிமாற நீங்கள் உடன்பட்டிலி கோள் -என்றான்
எம்மனைமார் காணில் ஒட்டார்-
நாங்கள் உடன்படாமை யுண்டோ —
எங்கள் பந்துக்கள் காணில் ஒட்டார்கள் -என்றத்தாலே காண் நாங்கள் மாட்டாது ஒழிகிறது -என்ன
எனக்கும் ஒரு தாயும் தமப்பனும் உறவுமுறை யாரும் இல்லையோ –
நான் ஏதேனும் காம்பற்று வானத்தில் நின்றும் விழுந்தேனோ
அவர்கள் உண்டாய் இருக்க அன்றோ நானும் இங்கனே இருக்கிறது –
உங்களுக்கு அது இல்லை யாய்த்தே -என்றான்
எங்களைப் போலேயோ நீ -என்றார்கள்
எனக்கு வாசி என் என்ன –
உனக்கு வாசி யுண்டு –
பொல்லாங்கு ஈது என்று கருதாய்-
நீ பழி என்னப் பணைப்புதி-
நாங்கள் பலிக்கு அஞ்சுவுதோம் –
இது காண் உனக்கும் எங்களுக்கும் வாசி –
பூங்குருந்தேறி யிருத்தி-
நான் பழிக்கு அஞ்சினேன் ஆகிலும் உங்களுக்கு இது தர வேண்டுவது இல்லை இறே –என்று
குருந்தின் மேல் இவற்றையும் கொண்டு
அதில் பூ பொருந்தினால் போலே பொருந்தி -இழியக் கணிசியாதே இருந்தான் –
வில்லால் இலங்கை யழித்தாய் –
ஒருத்திக்காக ப்ரஹ்மாதிகளுடைய அஸ்த்ரங்களுக்கும் அழியாத படி
வர பலத்தாலே பூண் கட்டின ஊரை
மனிச்சுக்கு ஏகாந்தமான வில்லாலே மூலையடியே வழி போம்படி பண்ணின உனக்கு
இப்போது ஸ்வபாவம் வேறு பட்ட படி என் –
இப்போது என் ஸ்வ பாவம் வேறுபட்டதில்லை –
உங்கள் ஸ்வ பாவமும் வேறுபட்டதில்லை –
உங்கள் ஸ்வ பாவமும் அப்படியே இருக்க வேணும் –
நீங்கள் என் நினைவுக்கு ஈடாக வரில் அன்றோ நான் உங்கள் கார்யம் செய்வது -என்ன
அதிலும் ஒரு குறையும் இல்லை
உன் அபேஷிதம் எல்லாம் செய்யக் கடவோம் என்றார்கள் –
நீ வேண்டியது எல்லாம் தருவோம்-
ஆகில் தரலாகாதோ -என்று மடியை ஏற்றான் –
மடியிலே வந்து ஏறுங்கோள்– என்றுமாம் –
பல்லாரும் காணாமே போவோம்-
இங்கன் அன்று காண் இது செய்வது –
அதில் உருவ நடக்கும் படி செய்ய வேண்டும் காண்
பல்லாரும் காணாமே போவோம் -என்றார்கள் –
பலர் காணிலும் காண்கிறார்கள் -தவிரிலும் தவிருகிறார்கள்-
நான் முந்துற முன்னம் கண்டேனே -ஆகில் போங்கோள் -என்றான்
பட்டைப் பணித்து அருளாயே—-
பிறர் முன்னே நாங்கள் நிற்கும்படி எங்களை பண்ணி அருளாயே –
—————————————————————————–
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்—-3-4-
பதவுரை
இலங்கை அழித்த பிரானே!-’
பலர் குடைந்து ஆடும் சுனையில்–பல பெண்கள் படிந்து நீராடும் இப் பொய்கையின் கரையில்
கண்ண நீர்கள்–கண்ணீர்த் தாரைகள்
அரக்க நில்லா–அடக்கினாலும் நிற்க மாட்டாதவைகளாய்
அலமருகின்ற–ஆ தளும்புகிறபடியை
எங்கும்–நாற் புறத்திலும்
பரக்க விழித்து–நன்றாக விழித்து
நோக்கி பாராய்– உற்று நோக்கு’
ஒன்றும் இரக்கம் இலாதாய்–கொஞ்சங்கூட தயவு இல்லாதவனே!
குரங்கு அரசு ஆவது அறிந்தோம்–நீ மரமேற வல்லார்க்குள் தலைவன் என்பதை அறிந்து கொண்டோம்’
(ஆன பின்பு)
குருந்திடை கூறை–குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும்.
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்-
இவர்களும் நான் சொன்னதுக்கு எல்லாம் மறுமாற்றம் சொல்லா நின்றார்கள் –
இங்கன் அன்று செய்வது –
அச்சமுறுத்திக் காரியம் கொள்ள வேணும் என்று பார்த்து –
சிலர் வருகிறார்களாகக் கொண்டு சுற்றிலே பார்த்து உடம்பை ஒடுக்குவது
திரியவும் சிலர் வருகிறார்களாகக் கொண்டு அதுக்கும் கூசினானாக அத்திக்கிலே சில தலைகளை இட்டு மறைப்பது –
தழைப் புரையே எட்டிப் பார்ப்பது -இப்படிகளைக் கொண்டு
சிலர் சிலருக்கு பயாவஹமாய் இருப்பன சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –
அவ்விடமும் தான் பலரும் வரும் இடமாய் –
இவன் செய்கிற செயலுக்கு சம்பாவனை யுள்ள விடமாய் இருந்தது –
சர்வ சாதாரணமான சுனை யாய்த்து —
இவனுடைய பயாவஹமான வ்யாபாரத்தாலும் –
சர்வ சாதாரண பிரதேசம் ஆகையாலும் துணுக் என்று கண்ண நீர் விழ விடப் புக்கது –
அது தான் நாம் இவன் முன்னே செய்தோம் ஆகிறது என் –
மறைக்க வேணும் என்று பார்த்து அமைப்பதாக கணிசித்தார்கள் –
இவர்கள் நியமிக்கப் பார்த்த இடத்திலும் நின்றது இல்லை –
அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய்
அநந்தரம்-யார் வருகிறார்களோ என்னுமத்தாலும் –
கண்ண நீர் நில்லாமையாலும் கிடந்தது துடிக்க புக்கார்கள் –
நீ பரியட்டம் தர வேண்டா –
அந்ய பரத்தை பாவிக்கிறதை தவிர்ந்து நாங்கள் படுகிற அலமாப்பைப் பாராய் -என்கிறார்கள் –
இவர்கள் இப்படிச் சொல்லச் செய்தேயும்
நிர்த்தயரைப் போலே பாராதே இருந்தான்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் -இலங்கை அழித்த பிரானே-
இப்போது இரக்கம் இன்றிக்கே இருக்கிற நீ
முன்பு ஒருத்திக்காக இலங்கையை அழியச் செய்து உபகரித்தவன் –
தனக்கே ஒருகால் ஒருபடியும் மற்று ஒரு போது ஒரு படியுமாக வேறு படுமோ ஸ்வ பாவம் –
நமக்கு உள்ளது அதையும் இல்லை என்னா நின்றி கோளாகில்
இனி இல்லையாயே விட அமையாதோ என்னா
அவற்றையும் கொண்டு ஒரு கொம்பிலே தாவினான் –
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்—–
நீ மரம் ஏற வல்லாருக்கு முதலி என்னும் இடம் நாங்கள் அறிந்தோம் காண்-
அன்றிக்கே
காபேயமாக சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் –என்கிறார்கள் ஆதல் –
கையிலே பர்யட்டங்களை குருந்திலே பொகட்டு-
நம்மை அலையாதே நீங்களே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள் -என்றான் –
குரக்கு அரசு ஆவது அறிந்தோம்
மரம் ஏறு வார்க்கு நிர்வாஹகர் ஆனாரோ தருவார்
ஏற மாட்டாதாரோ தருவார் -எங்களாலே முடியுமோ -என்றார்கள் –
எம்பெருமானே உபாயம் ஆவது ஒழிய
சேதனனுடைய முயற்சி உபாயம் அன்று -ஸ்வாபதேசார்த்தம் –
————————————————————————–
ஆந்தராளக் குடியிலே -இடைக்குலத்திலே-முக்தரும் பக்தரும் இல்லாத -குலத்திலே –
பிறந்தாள் ஒருத்தி உண்டு போலே காணும் –
ஈஸ்வர மர்மஞ்ஞையாய் இருப்பாளாய்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆபன்னனாக -தன் மேன்மை பாராதே அது இடர்பட்ட பொய்கையிலே
அரை குலையத் தலை குலைய வந்து உதவி அதின் ஆபத்தை பரிஹரித்து பின்னையும்
ஏற்கவே வந்து பரிஹரிக்கப் பெற்றிலோம் -நோவு பட்ட பின்பு வந்து பரிஹரித்தது இதுவும் ஒன்றாய்த்தோ என்று
திரு உள்ளம் புண் பட்டு இருக்கும் படியை அறிவாள் ஒருத்தி
நீ பண்டு உன்னை ஆஸ்ரயத்தித்த தொன்றை ஒரு நீர்ப் புழு நலிய –
ஒரு ஜலசர சத்வம் என்று பாராதே வந்து விழுந்த படி அறிதியே –
இன்று அவ்வளவு இன்றிக்கே இரண்டு கிடாய் எங்களை நலிகின்ற்றது -என்ன –
கயலும் வாளையும் சேர்ந்து நலிய –
பரியட்டங்களையும் கொண்டு வந்து விழும் என்று பார்த்து அத்தை முன்னிட்டுக் கொண்டு சொல்கிறாள் –
காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்—3-5-
பதவுரை
கரிய–கறுத்த
கோலம்–திருமேனியை யுடைய
பிரானே–கண்ண பிரானே!
கயலொடு–கயல் மீன்களும்
வாளை–வாளை மீன்களும்
விரவி–ஒன்றாய்க் கூடி
காலை–(எமது) கால்களை
கதுவிடுகின்ற–கடியா நின்றன’
(இப்படி நீ எங்களை வருத்தப்படுத்துவதைக் கேள்விப்பட்டு)-
என் ஐமார்கள்–எங்கள் தமையன்மார்கள்
வேலை பிடித்து–வேலைப் பிடித்துக் கொண்டு
ஓட்டில்-உன்னைத் துரத்திவிட்டால்
என்ன விளையாட்டு–அது பின்னை) என்ன விளையாட்டாய் முடியும்?
நீ–நீ
கோலம்–அழகிய
சிற்றாடை பலவும் கொண்டு–சிற்றாடைகளை யெல்லாம் வாரிக் கொண்டு
ஏறி இராது–(மரத்தின் மேல்) ஏறி யிராமல்
குருந்திடை–குருந்த மரத்தின் மேலுள்ள
கூறை–(எங்கள்) சேலைகளை
பணியாய்–தந்தருள்
காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
கயலோடு வாளையானது கலந்து -காலைக் கதுவா நின்றது கிடாய் –
ஓன்று நலிய அன்று பட்ட பாடு அறிதியே நீ -இப்போது இரண்டு கிடாய் நலிகின்றன –
அதந்த்ரித சமூபதி பரஹித ஹஸ்த மச்வீக்ருத பரணீத மணி பாதுகம் கிமிதி சாகுலாந்தபுரம்-
அவாஹன -பரிஷ்க்ரியம் பதகராஜ மாரோஹத-கரிப்ரவர ப்ரும்ஹிதே பகவதஸ் தவறாயி நாம -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-57-
ஆஸ்ரிதன் கால் நொந்து கை எடுத்துக் கூப்பிட நம் கையும் காலும் பேணவோ என்று
சேனை முதலியாரையும் கை விட்டு
திருவடி நிலைகளையும் காற்கடைக் கொண்டு நீ பட்ட பாடு அறுதியே-
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ –
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று-
ஆழி தொட்டு இ றே– ரஷித்தது-பெரிய திருமொழி -2-3-9-
இப்போது இரண்டு கிடாய் நலிகிறது
அது பிறராலே வந்த நலிவாகையாலே பரிஹரித்தோம் –
இது நீங்களே விளைத்துக் கொண்டது ஓன்று அன்றோ
அதுக்கு நான் என் என்னா மேன்மேலும் சில விலாச சேஷ்டிதங்களை பண்ணத் தொடங்கினான் –
வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ-
நாங்கள் நெடும் போது நின்று நோவு பட -நீ எங்கள் பரியட்டங்களை தாரா விட்டவாறே
பெண்கள் போய் உறவு முறையார் காலிலே விழுந்தவாறே
அவர்கள் பின்னை சாயுதராய்க் கொண்டு வந்து
உன்னை ஓடிப் பிடித்து கட்டி இட்டு வைப்பார்கள் –
அப்போது பின்னை அழகிய விளையாட்டாய் தலைக் கட்டும் இறே –
என் ஐமார் -தமையன்மார் –
இப்போது நாங்கள் உன் கையில் படுகிற பாடு அன்று கிடாய் நீ அவர்கள் கையில் படுவது –
அத்தனையே -எனக்கு பலித்தது பலிக்கிறது –
இப்போது கை புகுந்தவற்றைக் கொடுக்கிறது என் -என்று
அரையிலே ஒன்றைச் சாத்துவது –
தலையிலே ஒன்றைக் கட்டுவது –
உத்தரியமாக ஒன்றை இடுவதாக
இப்படி தன் திரு மேனிக்கு பரபாகமாம் படி நாநா வர்ணம் ஆனவற்றைக் கொண்டு அலங்கரித்து –
சேஷித்த வற்றை குருந்திலே இட்டு வைத்து –
கண்டி கோளே நமக்குத் தகுதியாய் இருந்த படி –
இத்தைக் கண்ட உங்களுக்கு வேண்ட வேண்டி இருந்ததோ -என்றான் –
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்–
அழகியதாய் இருந்தது
நாங்கள் அவற்றை –கோலச் சிற்றாடைகளை -வேண்டுகிறோம் அல்லோம் –
குருந்திலே கிடக்கிறவற்றைத் தா -என்கிறார்கள் –
——————————————————————
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-
பதவுரை
தடம்–விசாலமாயும்
அவிழ் தாமரை–மலர்ந்த தாமரைகளை யுடையவுமான
பொய்கை–தடாகத்திலே
தாள்கள்–தாமரைத் தண்டுகளானவை
எம் காலை–எங்கள் கால்களை
கதுவ–கடிக்க,
விடம் தேள் எறிந்தால் போல–விஷத்தை யுடைய தேள் கொட்டினாற்போலே
ஆற்றவும்–மிகவும்
வேதனை பட்டோம்–வருத்தப் படா நின்றோம்’
குடத்தை–குடங்களை
எடுத்து–தூக்கி
ஏற விட்டு–உயர வெறித்து
(இப்படி)-
கூத்து ஆட–குடக் கூத்தை ஆடுவதற்கு
வல்ல–ஸாமர்த்தியமுள்ள
எம் கோவே–எம்முடைய தலைவனே!
படிற்றை எல்லாம் தவிர்ந்து–(நீ செய்கிற) தீம்புகளை யெல்லாம் விட்டு
எங்கள் பட்டை பணித்தருளாய்-.-படிற்றை எல்லாம் தவிர்ந்து-தீமைகளை எல்லாம் விட்டு நீ செய்கிற
தடம் அவிழ் தாமரை -விசாலமான -மலர்ந்த தாமரை
தாள்கள் -தண்டுகள்
படிற்றை -தீம்புகளை –
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –
துணுக் என்னுமோ பாதி –
தாமரைப் பொய்கையிலே தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால்
கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-
பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன —
ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான்
கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே -திருவாய்மொழி -9-7-3-
தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே
கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா-
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -திருவாய்மொழி -8-5-1—
தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –
கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த
மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்-
விஷம் இல்லாத தேளும் உண்டு போலும் காணும் –
கரையில் உள்ள தாமரை தடம் விஷம் இல்லாத தேளாக இருந்து துன்புறுத்துகிறதே –
நாங்கள் மிகவும் கிலேசப் படா நின்றோம் –
நீங்கள் நீரிலே புக்க போது தொடங்கி நானும் மரத்திலே இருக்கிறேன் –
இம்மரத்திலே வர்த்திக்கிற பதார்த்தங்களுக்கு ஓர் எல்லை இல்லை –
நானும் இவற்றாலே படுகிற வேதனைக்கு ஓர் அவதி உண்டோ -என்றான் –
உங்கள் அளவேயோ நான் பட்டது -என்றான்
காலத்தின் நெடுமை அவனுக்கும் ஒத்து இருக்கச் செய்தே
அது தோற்றுகிறது இல்லை காணும் இவர்களுக்கு
இழந்து இருப்பார்க்கு இறே காலம் நெடுகித் தோற்றுவது-
நிரபேஷன் இறே அவன் -பரியட்டம் கைப்படுகையாலே -நிரபேஷதை–
இவர்களை ஒழியச் செல்லாத படியாய் காணும் அவனுடைய நைரபேஷ்யம் இருப்பது –
ஆஸ்ரீத விஷயத்தில் சாபேஷத்வம் நைர பேஷ்ய விரோதி யாகாது இறே
அந்தப்புரத்துக்கு தாழ நிற்கும் காட்டில் அபிஷிக்தனுக்கு குறையாகாது இறே –
வேதனை ஆற்றவும் பட்டோம் -என்கிறார்கள்
நான் அன்றோ வேதனை ஆற்றவும் பட்டேன் -என்றான்
அது ஆராலே -நாங்கள் பரியட்டங்களை வாங்கிக் கொண்டு போய் குருந்தின் மேல் போய் ஏறினோமோ-
அது உன்னாலே வந்தது அன்றோ -என்றார்கள் –
அது என்னாலே வந்தது ஆனாலும்
இத் திரளைக் கலைக்கப் பார்த்திலோம் -என்றான் –
அத்தனையே -உனக்கு இங்கனே திரட்ட வேண்டி இருந்ததோ –
கூட்ட மாட்டாயோ பெண்கள் அடையத் திரளும் படி காண –
(குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -2- 7-7-)
(குடக்கூத்துக்கும் ஆளாகாத நம் போல்வாரைத் திருத்தவே திருக்குடந்தை ஆராவமுதனானான்
குருக்கத்தி -ஸ்தல வ்ருக்ஷம் திருக்குடந்தையில்)
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே-
மன்றிலே குடக் கூத்தை யாடி நிர் லஜ்ஜனாய் –
அவ் வழியாலே பெண்களை எல்லாம் திரட்டுமவன் அன்றோ நீ
இவர்கள் தங்கள் ஈடுபாடு தோற்ற வார்த்தை சொன்னார்கள் என்னா –
அதுவே அவகாசமாக -இன்னது செய்தான் என்று
பிறருக்கு பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாத படி சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –
படிற்றை எல்லாம் தவிர்ந்து –
நீ பண்ணுகிற மிறுக்குகளை எல்லாம் தவிராய் -என்கிறார்கள் –
தவிரிகோள் ஆகில்-கொடு போங்கள் என்று
தன் பரியட்டத்தைக் கொடுக்கப் பார்த்தான் –
எங்கள் பட்டைப் பணித்து அருளாயே–
நாங்கள் இவற்றை உடுத்து கொடு போய் எங்கள் தாய்மார் முன்னே நிற்கப் புக்கால் –
இவை உங்களுக்கு வந்த வழி என் -என்று ஆராயார்களோ –
ஆன பின்பு எங்களுடைய பரியட்டத்தைத் தாராய் -என்கிறார்கள் –
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கும் வேறு ஒரு பரியட்டம் கொடுக்கைக்கு
புடவைக் கட்டணம் எடுப்பித்துக் கொண்டு போனானோ என்னில்
த்ரௌபதி அரையில் துகிலோபாதி இவனும் ஒரு பேரிட்டு கொடுக்கிறான் –
வேணுமாகில்-
கோவிந்த கோவிந்த -என்கிறாள் வேணுமாகில் –
—————————————————————————————
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்ததால் ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே யுடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே——3-7-
பதவுரை
ஊழி எல்லாம்–கற்பாந்த காலத்திலெல்லாம்
உணர்வானே–(ஜகத் ரக்ஷண சிந்தையுடன்) உணர்ந்திருப்பவனே!
நீரிலே நின்று அயர்க்கின்றோம்–ஜலத்தில் நின்று கொண்டு வருத்தப்படா நின்றோம்’
நீதி அல்லாதன – அநீதியான செயல்களை
ஆல்–ஐயோ!’
(இப்படி நீ எங்களை வருத்தத் செய்தேயும்)
உனக்கே–உன் விஷயத்திலேயே
ஆர்வம் உடையோம்–நாங்கள் அன்புள்ளவர்களா யிரா நின்றோம்’
அம்மனைமார்–எங்கள் தாய்மார்
காணில்–நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால்
செய்தாய்–செய்யா நின்றாய்’
(உன் விஷமங்களுக்குத் தப்பி ஓடிப் பிழைக்கப் பார்ப்போமென்றால்)
ஊர்–எங்கள் ஊராகிய ஆய்ப் பாடியும்
அகம்–மாளிகைகளும்
சாலவும்–மிகவும்
சேய்த்து–தூரத்தி லிரா நின்றன:
ஒட்டார்–இசைய மாட்டார்கள்’
எங்கள் பட்டை–எங்களுடைய சேலைகளை
போர விடாய்–தந்தருளாய்,
பூ குருந்து–பூத்திரா நின்ற குருத்த மரத்தின் மேல்
ஏறி இராதே–ஏறிக் கொண்டு தீமைகளைச் செய்யாதே.
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய்-
கோழி கூவுவதற்கு முன்னே -போது விடிந்து நீ உணர்வதற்கு முன்னே -வந்து
நீரிலே புகுந்து ஒருபடிப்பட நின்றத்தாலே அறிவு கலங்கிப் படுகிற க்லேசத்தைப் பாராய் –
நீங்கள் நீரிலே நின்று அறிவு கெட்டி கோளாகில்-
நான் மரத்திலே நின்று அயர்கிறது நெடும் போது இல்லையோ
நீங்கள் அன்றோ இது எல்லாம் பண்ணினி கோள் -என்னா
பரியட்டங்களையும் கொடாதே -சில விலாச சேஷ்டிதங்களைப் பண்ணினான் –
வாராய் -இங்கனே முறை கெட பரிமாறல் ஆகாது காண் -என்கிறார்கள்
இனி அது கொடு கார்யம் என் -என் செய்கை செய்தோம் இறே –
நான் ஸ்வ தந்த்ரன் அன்றோ –நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ
இனி நீங்கள் நம்மால் பட்ட இடரை ஊரிலே போய் முறைப்பட மாட்டி கோளோ-என்றான் –
அது செய்யலாய்த்து இறே –
ஊரகம் சாலவும் சேய்ததால் –
ஊர் தான் தூரிது-அவ்வளவும் வருந்திச் சென்றோமே யாகிலும் அதுக்கு மேலே
ஊரில் அகம் தான் சால தூரிது -காண் -என்கிறார்கள் –
நான் மிறுக்குப் பண்ணா நின்றேனாகில்-
ஊரகம் சாலவும் தூரிதாகில் –
இனி இதுக்கு மேல் போக்கடியாக நீங்கள் நினைத்து இருந்தது என் என்றான் –
ஊழி எல்லாம் உணர்வானே-
பிறரால் வந்த நலிவோடு -தந்தாமால் வந்த நலிவோடு வாசியற
உன்னைக் கொண்டு தீர்க்குமா போலே
உன்னால் வந்த நலிவுக்கும் நீயே போக்கடி சொல் -என்றார்கள் –
உன்னை ஒழிந்த காலோபலஷித சகல பதார்த்தங்களும் அழிந்த அன்று
அவற்றுக்கு போக்கடி தேட வல்ல நீயே போக்கடி தேடும் அத்தனை அன்றோ –
சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -6-2-1- என்னும் படியான அன்று
பஹூஸ்யாம் -என்று போக்கடி பார்க்க வல்ல நீ பார்க்கும் அத்தனை அன்றோ –உணர்வான் –
சங்கல்ப ரூப ஜ்ஞானம் உடையவன் நீ அன்றோ
நாம் போக்கடி பார்த்து நல வழி போக்க்கலாய்த்து இறே அந்த ஜகத்துக்கு அப்ரதிஷேதம் உண்டாகையாலே
உங்கள் பக்கல் இது இல்லையே -என்றான்
அப்ரதிஷேதம் மாத்ரமே அன்று –
ஆர்வம் உனக்கே யுடையோம் –
எங்கள் பக்கலிலும் அதுக்கு ஒரு குறை இல்லை காண் –
நீ அது அறிந்திலை -இத்தனை உள்ளது -என்கிறார்கள் –
நான் அறிவேனோ இந்தக் கூட்டு எழுத்தை –
இல்லையாகில் அநிஷ்ட கார்யம் பலியா நிற்க ஆர்வம் உனக்கே உடையோம் -என்கையாவது என் –
ஒரு உக்தி அமையுமோ -அதின் கார்யம் பலிக்க வேண்டாவோ -என்றான்
அது நாங்கள் வேண்டாமோ
அம்மனைமார் காணில் ஒட்டார்-
பிறரை பரிஹரிக்க வேணும் என்று இருந்தோம் இத்தனை காண் -என்றார்கள்-
நானும் நீங்கள் பட்டுகளும் உடுத்து -மன ப்ரீதியோடு போய்
உங்கள் அகங்களில் புக்கிருந்து விளையாட அன்றோ வேண்டி இருப்பது
பட்டுத் தர நெஞ்சு இசைகிறது இல்லை -அத்தை இசைவித்து தர வேணும் -என்றான் –
நீ நெஞ்சு ஒழியத் தந்தாலும் அமையும் எங்களுக்கு -என்றார்கள் –
ஆகில் பிடியுங்கோள் -என்று பரியட்டத்தை எடுத்து செண்டிலே ஏறிட்டு
இவர்களுக்கு எட்டிற்று எட்டாதாக நாற்றி முகத்தை மாறிச்
சில பூக்களிலே கண்ணை வைத்து அந்ய பரரைப் போலே இருந்தான் –
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி –
எங்களுக்கு எட்டும்படி தாராய் –
பரியட்டங்களை வாரிக் கொண்டு போய் இவர்களுக்கு எட்டாத படி இருந்ததுக்கு மேலே ஓன்று இறே இது –
படு கொலை அடிக்காதே -என்கிறார்கள் –
———————————————————————————————-
மாமியார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே
சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம்
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்–3-8-
பதவுரை
தொல்லை இரா – பழைய ராத்ரிகளில்
தூ மலர் கண்கள் வளர–பரிசுத்தமான மலர் போன்ற கண்கன் நித்ரா பரவசமாம்படி
துயில்வானே–பள்ளி கொள்பவனே!
(இப் பொய்கைக் கரையிலே நிற்குமவர்கள்)
மாமியார் மக்களே அல்லோம்–உனக்குத் தேவிமாராகும் முறையிலுள்ளார் மாத்திரமல்லோம்’
மற்றும் எல்லோரும்–மற்றுள்ள மாமிமார், அவர்கள் தாய்மார் முதலியவர்களும்
இங்கு–இவ் விடத்தில்
போந்தார்–வந்திருக்கின்றார்கள்’
இது–நீ செய்கிற இத் தீம்பானது
சால–மிகவும்
சேமம் அன்று–தகுதியானதன்று’
இது–இவ் வார்த்தையை
நாம் நாங்கள்
சிக்கன–திண்ணிதாக
சொன்னோம்–சொல்லுகின்றோம்’
ஆயர்–இடையர்களுக்கு
கோமளக் கொழுந்தே–இளங்கொழுந்து போன்றவனே!
குருந்திடை கூறை பணியாய்
இவன் ஒரு காலைக்கு ஒரு கால் மிகை செய்யப் புக்கவாறே –
ஊரில் இவை செய்யாதே இங்கே இவை செய்கிறதுக்கு கருத்து –
தனி இடத்தில் செய்ததுக்கு ஆராய்ச்சி இல்லை என்று இறே ‘
இவை அடைய ஊரிலேயும் வார்த்தையும் காண் -என்றார்கள்
ஊரில் வார்த்தை யாகிறது என் -நீங்களே யன்றோ இங்கே வந்திகோள்
நான் தான் தீம்பன் அன்றோ —
நீ தீம்பு செய்வான் என் என்றால்
மைதுனமையால் செய்தேன் என்று எனக்கு ஒரு மறுமாற்றம் உண்டு -என்ன
மாமியார் மக்களே யல்லோம் –
ஒருராக நோற்கப் போந்த இடத்தில் வெறும் மாமியார் மக்களாய் இருப்பார்களோ –
மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்-
அவர்களைப் பெற்ற வர்களும் உண்டாய் இராதோ –
நீ நினைத்தவர்கள் அல்ல காண் இங்குப் போந்தார்-
உனக்கு கூச்சு முறை உடையார் எல்லாரும் போந்தார்கள் காண் –
ஆகையால் இங்குப் பிறந்தவை ஊரிலும் வார்த்தை யாம் காண்-
நீங்கள் தான் நம்மை அறிவுதி கோள் –
நம்மை அறிந்தால் நாமும் நீங்களுமான பரிமாற்றத்துக்கு வேண்டாதாரை கொடு வரக் கடவுதி கோளோ -என்றான் –
தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே-
நன்றாக நித்தரை பண்ணுவாய் -மீமிசைச் சொல் -என்று இருந்தோம் –
நீ பண்டு போலேயே இப்போது என்று இருந்தோம் -இப்போதாக வேறு ஒரு படியாவது அறிந்தோமோ
பழைய ராத்ரிகளில் முற்கூறு எல்லாம் பெண்களோடு தீம்பு செய்து
பிற்கூறு உறங்கிப் போரக் கண்ட படியாலே இப்போதும் அப்படி என்று இருந்தோம் –
நீ எங்களுக்கு முன்னே உணர்ந்து வந்து முற்பாடனாய் வந்து நிற்பது நாங்கள் அறிந்திலோம் காண் –
இனி அது கொடு கார்யம் காண் –
முற்பாடராய் வந்து நின்றோமே -என்று அதுக்கு மேலே சில மிகைகளைச் செய்யப் புக்கான் –
சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம்-
வாராய் -நீயும் நாங்களுமான பரிமாற்றம் உருவச் செல்ல வேணும் என்று இங்கன் சொல்லிப் போருவது உண்டு –
அதுக்கு உடல் அல்ல கிடாய் நீ இப்போது செய்கிறவை –
இவை ரஷை பெற்று போருவது ஓன்று அல்ல –
இவ்வளவிலே தலைக் கட்டும் கிடாய் என்ன –
இது ஆர் தான் சொன்னார் என்றான்
நாம் இது சொன்னோம் -என்றார்கள் –
அத்தைக் கேட்டு பயந்தது போலே நடித்து –
ஆகில் இவ்வாச்சார்யா வசனம் அதி லங்கிக்கல் ஆகாது -ஒக்கும் ஒக்கும் –
உங்கள் வார்த்தை அன்றோ -என்றான் –
அப்படி அல்ல காண் –
சிக்கென சொன்னோம் –
பிரதிபத்தி பண்ணாதார்க்கு குற்றத்தாலே வந்ததாம் அத்தனை கிடாய் இனி மேல் வரும் அநர்த்தம்-என்றார்கள் –
ஓம் இந்த குருகுல வசநாதி லங்கநம் பண்ணின நான் புக்க லோகத்திலே புகுகிறேன் என்று
அவற்றில்-திருவரைக்குத் தகுதியாய் இருப்பன சில பரியட்டங்களை திருவரையிலே சாத்தி –
சேஷித்த வற்றை குருந்திலே இட்டு வைத்து
கண்டி கோளே இவை நம் சௌகுமார்யத்துக்கு சேர்ந்து இருந்த படி -என்ன
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்–
அழகியதாய் இருந்தது
நாங்கள் தான் அவற்றைத் தரச் சொன்னோமோ
மேன்மை இல்லாத மரத்திலே கிடக்கிற வற்றைத் தா -என்கிறார்கள் –
———————————————————————————–
இவனுக்கு ஆகார த்வ்யமும் உண்டு –
அதாவது ஏத்தினாருக்கும் கார்யம் செய்யும் –
வைதார்க்கும் கார்யம் செய்யும் –
அதில் ஏத்திப் பார்த்த இடத்தில் ஒன்றும் பலித்ததில்லை –
இனி வைதால் கார்யம் செய்யுமாகில் -அத்தை செய்து பார்க்கிறோம் என்று வைகிறார்கள் –
கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை
அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் –
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்--3-9-
பதவுரை
கஞ்சன்–கம்ஸனானவன்
வலை வைத்த அன்று–உன்னை அழிப்பதாக நினைத்த காலத்தில்
கார் இருள்–மிக்க இருளை யுடையத்தான
எல்லில்–இரவில்
பிழைத்து–பிழைத்து,
நின்ற–(அம்மணமாக) நிற்கின்ற
இக் கன்னிய ரோமை–இளம் பெண்களான எங்களுக்கு
நெஞ்சு துக்கம் செய்ய–மனத் துன்பத்தை உண்டாக்குவதற்காக
போந்தாய்–வந்து பிறந்தாய்’
அசோதை–யசோதைப் பிராட்டியோ வென்றால்
அஞ்ச–நீ பயப்படும்படி
உரப்பாள்–உன்னை அதட்ட மாட்டாள்’
ஆணாட விட்டிட்டிருக்கும்–தீம்பிலே கை வளரும் படி உன்னை விட்டிரா நின்றாள்’
வஞ்சகம்–வஞ்சனை யுடைய
பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப் பாலை
உண்ட–(அவளுயிரோடே கூட) உறிஞ்சி யுண்ட
மசுமை இலீ–லஜ்ஜை யில்லாதவனே!
கூறை தாராய்–சேலைகளைத் தந்தருள்.
கஞ்சன் வலை வைத்த வன்று
அவன் உபய விபூதியையும் அழிக்கக் கோலின அன்று –
சத்தாயோகி -சகல பதார்த்தங்களையும் முடிக்க கோலின அன்று –
விபூதி அழிந்தால் அவன் உளனாக உண்டாக்கிக் கொள்ளலாம்
அவனுக்கு ஒரு நலிவு பிறந்ததால் பின்னை ஒன்றும் இல்லை இறே
ஸ்தன்யம் தத் விஷ சம்மிச்ரம் ரஸ்ய மாஸீஜ் ஜகத்குரோ —
விஷம் தானே தாரகமான பின்பு யாய்த்து ஜகத்துக்கு ஒரு சேஷி உண்டாய்த்து
விஷம் பாதகமாவது அம்ருதம் தாரகமாவது என்னும் மரியாதைகள் கட்டினவன் பக்கல் அது கார்யம் செய்ய மாட்டாதே –
தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் -திருவாய் -1-5-9-
காரிருள் எல்லில் பிழைத்து –
அவன் தப்பாத படி நலியக் கோலினான் —
அற்றை அளவிலே ரஷகமாகைக்கு ஓர் இருள் உண்டாவதே –
கொடு போகிற இடத்தில் பிறர்க்கு தெரியாத படி கொடு போகலாம் படி திருமேனி யோடு ஒத்த நிறமாகையும் –
காத்துக் கிடக்கிறவர்களுக்கு நித்ரா பாரவச்யத்துக்கு உடலாகையும் இரண்டும் உண்டு இறே
வீங்கு இருள்வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய்
அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் -திருவாய் -1-5-9-என்னக் கடவது இறே –
இதுக்கு பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
இவன் தான் பருவம் நிரம்பாமையாலே தன்னை நோக்கிக் கொள்ள மாட்ட்றிற்று இலன் –
புறம்பு தான் பரிந்து நோக்குகைக்கு ஒருத்தர் இல்லை –
கம்சாதிகள் தப்பாமல் அகப்படுத்த கோலி நின்றார்கள் –
அவ்வளவிலே உதவித் தந்தது இருள் அத்தைச் சரணம் புகும் அத்தனை இறே -என்று பணிப்பாராம் –
அத்தைப் பற்ற இறே இவர்கள் தான் அந்த இருளை வெறுக்கிறது இப்போது
ஸ்ரீ வஸூ தேவரையும் ஸ்ரீ தேவகியாரையும் அவதார காலத்திலேயே விட்டுப் போருகையாலே பண்ணின நலிவே அன்றிக்கே
தேவகியாரை ஒழிந்த சேஷித்த ஸ்திரீ வர்க்கத்தை நலியா நின்றாய் –
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை-
கம்சன் வலையில் அகப்படாதே தப்பின இது –
பெண் பிறந்தாரை ரஷிக்கைக்கு உடல் என்று இருந்தோம் –
இது எங்களை நலிகைக்கு உடலாய் விட்ட அத்தனை ஆகாதே
இனி அவனால் புண்பட்ட நம்முடைய நோவுபாட்டை அறிவித்தால் தானும் பெண் பிறந்தவள் ஆகையாலே அறிந்து
இரங்கக் கூடும் என்று அவளுக்கு அறிவிக்கில்
அங்கனம் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை -பெரிய திருமொழி -10-7-11-என்கிறபடியே –
இடைப் பெண்களை
நாயந்தே -நலியலாமோ -என்று அஹ்ருதயமாக ஒரு வார்த்தை சொல்லி
கண்ணஞ்சி நியமியாதே கை வாங்கி இருக்குமே –
அத்தைக் கேட்டு பொகடு பொகடு இவளில் இன்னமும் அவன் தானே நல்லான் காண் –
அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் –
வந்த இவர்கள் எதிருக்கு ஒன்றைச் சொன்னாளாம் அத்தனை போக்கி அஞ்சும் படி பொடியாள் –
ஆணாட விட்டிட்டு இருக்கும் –
இவர்கள் முறைப்படி நம்மை நலியப் பார்த்த -அதின் எல்லையும் கண்டு விட்டோம் -என்று முன்பே
தீம்பிலே கை வளருகிறவன் சஹகரிப்பாரையும் பெற்றவாறே சதசாகமாகப் பணைக்கும் ஆயத்து –
இருக்கும் –
தான் கண்ட படி இவனைத் தீம்பு செய்ய விட்டு –
நம் மகன் இப்படி பருவம் நிரம்பி தீமை செய்யப் பெற்றோம் என்று அத்தாலே –
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-பெருமாள் திருமொழி -7-8- என்கிறபடியே
ஆனந்த நிர்பரையாய் க்ருதக்ருதையாய் இருக்கும்
பிறரை இட்டு நெருக்கியோ என்னை நீங்கள் கார்யம் கொள்ளப் பார்த்தது -என்னாச் சிவிட்கு என்றான் –
நாங்கள் அங்கண் நினைத்திலோம் காண் –
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்–
நீ தான் தாய் முலைக்கும் பேய் முலைக்கும் வாசி அறியாதான் ஒருத்தன் இறே
பிறர் நோவு கண்டால் –ஹ்ரீரேஷா ஹி–ஆரண்ய -10-9-என்கிறபடியே
முற்பாடனாய் லஜ்ஜிக்கும் போது சக்கரவர்த்தி திருமகனாக வேண்டாவோ –
உனக்கு இவை தெரியுமோ -நீ லஜ்ஜா ஸூ நயன் அன்றோ —
மசிமை -சுணை
கூறை தாராய் –
நீ ஆனாராகிராய் -எங்கள் பரியட்டத்தை முதல் முன்னம் தா-
———————————————————
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-
பதவுரை
எங்கள் நம்பி–எமக்கு ஸ்வாமியாய்
கரிய–கார் கலந்த மேனியனான
பிரான்–கண்ண பிரான்
கன்னிய ரோடு–ஆயர் சிறுமியரோடே செய்த
விளையாட்டை–திவ்ய லீலைகளைக் குறித்து
பொன் இயல்–ஸ்வர்ண மயமான
மாடங்கள் சூழ்ந்த–மாடங்களால் சூழப்பட்ட
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரி லுள்ளார்க்குத் தலைவரான
பட்டன் கோதை–பெரியாழ்வார்க்குத் திருமகளான ஆண்டாள்
இன் இசையால் இனிய இசையாலே
சொன்ன–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையாகிய
ஈர் ஐந்தும்–இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர் தாம்–கற்க வல்லவர்கள்
போய்–(அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய்
வைகுந்தம் புக்கு–பரம பதத்தை யடைந்து (அவ் விடத்திலே)
மன்னிய–நித்ய வாஸம் செய்தருளுகிற
மாதவனோடு–திருமாலோடு கூடி
இருப்பார்–நித்யா நுபவம் பண்ணிக் கொண்டு வாழ்ந்திருக்கப் பெறுவர்.
இத்தால் சொல்லிற்று யாய்த்து –
இவன் செய்யுமவற்றை அறியாதே சொன்னவற்றை மெய் என்று இருக்கைக்கும்
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும்
புதுமை மாறாதே இருக்கைக்கும் —
இவன் பண்ணும் தீம்புக்கு பாடாற்ற மாட்டாதே இருக்கைக்கும்
கன்னியர் என்கிறது
எங்கள் நம்பி –
பஞ்ச லஷம் குடியில் பெண்களை நலிகைக்கு ஈடான தீம்பாலே பூரணன் –
கரிய பிரான் விளையாட்டை-
அக வாயில்-தீம்பில்லை யாகிலும் –
மேல் விழ வேண்டும்படி யாய்த்து வடிவு அழகு இருப்பது –
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை-
இவ் விஷயத்தில் இவ்வளவான அவகாஹா நத்துக்கு அடி பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்-
பாட்யே கேயே ச மதுரம் -பால -4-8-
எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே –திருவாய் -7-9-11-
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–
நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய்
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-
——————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply