அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-
திருக்கமல பாதம் -பிராப்யம் -பிராபகம் –போக்யம் பாவனத்வம் -குல தனம்
ஏகை கஸ்மின் பரம் அவயவே அநந்த சௌந்தர்ய மக்னம் சர்வம் த்ரஷ்யதே கதம் –
லாவண்யம் அனைத்தையும் அனுபவிக்கச் செய்யும் நீ ஒன்றிலே ஆழம் கால் பட்டாலும் -பட்டர் –
சௌந்தர்ய சாகரத்தை லாவண்யம் ஆகிற மரக் காலத்தாலே எங்கும் ஒக்க அனுபவிக்கிறோம் -நாயனார்
அஸ்வ மேத யாகத்தில் ஸ்ரீ தேவாதி ராஜன் ஆவிர்பவிக்க –
கிரீட கேயூரக ரத்ன குண்டலம் —தொடங்கி
நி குஞ்சி தோத்தா நித பாத யுக்மம் -பிரம்மா அனுபவித்தார்-
இரு பரிதி இயைந்த மகுடமும் -உலகடைய நின்ற கழல்களும்
ஆதித்ய சந்நிதியிலே அலரும் தாமரைப் பூ போலே ஆஸ்ரிதர்கள் சந்நிதியிலே மலருமாய்த்து திருவடிகள்
திரு கமல பாதம் -பாவனத்வ போக்யத்வங்கள் -ஸூ பாஸ்ரயமான -திரு வுக்கு லீலா கமலம் போலே இருக்கும் திருவடிகள் –
அரக்கன் பின்னே தோன்றிய கடன்மை தீர இளையவருக்கு அவித்த மௌலி என்னையும் கவித்தி
எம்மா வீடும் வேண்டாம் செம்மா பாத பற்பு-பால் தித்தித்தாலும் வேண்டா என்பாரை திருத்தல் ஆவாதே –
வேதங்களுக்கு எல்லாம் மேல் சாத்தாய்-சர்வ ஆத்மாக்களுக்கும் சாமான்ய தைவதமான பொது நின்ற பொன்னம் கழல்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் -பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்திட்டு இருந்தவா –
அது நன்று இது தீது என்று ஐயப் படாதே மது நின்ற தண் துழாய் மார்பன் –
பொது நின்ற பொன்னம் கழலே தொழுமின் -முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து -பேயாழ்வார்
அவனுக்கும் போக்யம் –பேதைக் குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் –
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ–தேனே மலரும் திருப்பாதம் –
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடிகளால் –
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே –6-2-9-
அவனுடைய அபிமத சித்திக்கும் சாதனம் திருவடிகள் காணும் –
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் -புறம்பு அந்ய பாதைகள் உண்டானால் அவற்றைக் குலைப்பதும் திருவடிகளாலே
——–
உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2–
அரைச் சிவந்த ஆடை –
திருக் கமல பாதங்கள் தாமே வந்து ருசி உண்டாக்க -ருசி கண்ட ஆழ்வார் தாமே மேல் விழுந்து –
வந்து உனதடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் சிந்தனைக்கு இனியாய் –
ஈன்று அணித்தான நாகு தன் கன்றுக்கு வாசனை இல்லாமையாலே முதலிலே தானே தன் முலையை அதன் வாயிலே கொடுக்கும்
சுவடு ருசி அறிந்து கன்று தானே பசு காற்கடைக் கொள்ளிலும் மேல் விழும் இறே –
அது போலே அரங்கத்தம்மான் அரைச் சிவந்த ஆடை மேல் சென்றதாம் என் சிந்தனையே
கடலில் விழுந்த துரும்பு கரைக்கு வருவது ஆழம் அளந்த பின்பு அன்றே -அழகு அலைகள் தாமே தள்ள
போக்யதை அளவு பட்டதும் அன்று -ஆசை தலை மடிந்ததும் இல்லை
ஒரு திரையிலே ஒரு திரை ஏற வீசும் அத்தனை இறே
அவன் பிரிவால் நெஞ்சுகளில் பிறந்த புண் எல்லாம் தீர்ந்து இத்தோடு பணி போரும்படி யாயிற்று பீதாம்பரம் இருப்பது
உடையார்ந்த ஆடை –கௌசேய புஷ்பித தடம் -திருவரையிலே புஷ்பம் பூத்தால் போலே -செக்கர் மா முகில் உடுத்து –
மின்னுக் கொடி உடுத்து விளங்கு வில் பூண்டு –நன்னிற மேகம் நிற்பது போலே –
படிச் சோதி யாடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன் கடிச் சோதி கலந்ததுவோ -என்னும்படி திகழா நின்ற திருவரையிலே
மது கைடப ருதிர படலத்தாலே போலே பாடலமாய் மரகத கிரிமேலே பாலாதபம் பரந்தால் போலே இருக்கிற திருப் பீதாம்பரம்
சோற்றிலே எனக்கு மனம் சென்றது என்னுமா போலே
ஆருடைய கூறை யுடை கண்டு உகக்கக் கடவ நெஞ்சு இதிலே அகப்பட்டது
த்ருஷ்டத்திலே லோக கர்ஹிதமாய் அத்ருஷ்டத்திலே வெம் நரகிலே தள்ளவும் கடவதான உடைகளிலே பிரவணமான என் மனஸூ
த்ருஷ்டத்தில் ஆகர்ஷகமாய் -அத்ருஷ்டத்தில் சதா பஸ்யந்தி விஷயமான திருப் பீதாம்பரத்தில் விழுந்து நசை பண்ணா நின்றது
என்னாலும் மீட்க ஒண்ணாதபடி திருப் பீதாம்பரத்தில் துவக்குண்டதே -திரு கமல பாதம் வந்து ஆட்கொண்ட பின்பு
தீர்த்தமாடா நிற்க துறையிலே பிள்ளையைக் கெடுத்து திரு ஓலைக்கத்திலே காண்பாரைப் போலே திருப் பீதாம்பரத்தைக் கண்ட படி
பிரணய கோபம் கொண்டாரையும் ஆற்ற வல்லது திருப் பீதாம்பரம்
தன் வசப்பட்டாரை மற்றவர் அறியாத படி மறைத்துக் கொண்டு போகப் பயன்படுமே
மின்னொத்த நுண் இடையாளைக் கொண்டு வீங்கு இருள் வாய் எந்தன் வீதியோடு பொன்னொத்த வாடை குக்கூடலிட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன் -பெருமாள் திருமொழி
இதற்காகவே ஸ்ரீ கிருஷ்ணன் திருப் பீதாம்பரத்துடனே திருவவதரித்து அருளினான் என்பர் பூர்வர்
———–
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–
அயனைப் படைத்த எழில் உந்தி –
திரு நாபீ ஆழ்வாரை இழுத்துக் கொள்ள விரும்பி -எம்பெருமானே ஜகத் காரணம் என்பதை காட்டிக் கொடுத்து
இந்த முகத்தாலே மேன்மையையும் அழகையும் காட்டி மனசை இழுத்துக் கொண்டது
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் -ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் -முதல்வா –
நிகரிலகு கார் உருவா நின்னகத்தன்றே புகரிலகு தாமரையின் பூ -பெரிய திருவந்தாதி -72
அஜ நிஷ்ட ச கஸ்ய நாபே -ஆளவந்தார்-
அந்தி போல் நிறத்து ஆடை -முன்பு அரைச் சிவந்த ஆடை -கழற்ற முடியுமே -இதில் கழற்ற ஒண்ணாத –
சந்த்யா காலத்து சிகப்பு மேகத்தை விட்டு பிரியாதே
கீழே ஆபரண கோடியில் -சாத்தவும் கழற்றவுமாய் இருக்கும் -இது சஹஜம் என்கைக்கு உடலாக -அந்தி போல் நிறத்து ஆடையும் என்கிறார் –
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகம் போலே யாய்த்து திருவரையும் திருப் பீதாம்பரமும் இருக்கிற படி
திருமேனி மயில் கழுத்து சாயலாய் இறே இருப்பது -அத்தோடு சேர்ந்த திருப் பீதாம்பரம் சந்த்யா கால ரஞ்சிதமான
காள மேகம் போலே ஆகர்ஷகமாய் இறே இருப்பது -நாயனார்
பூர்வ சந்தையால் இருள் விலகும் சாயம் சந்த்யாவால் தாபம் தீரும்
அதன் மேல் அயனைப் படைத்த எழில் உந்தி –
அழகு வெள்ளத்தின் நடுவே நீர்ச் சுழல் போலே கொப்பூழ் -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பத்ம நாபனையே
அழகுக்குத் தோற்று அடியேன் -என்கிறார்
பிள்ளை அழகிய மணவாள அரையர் -திரு வேங்கட யாத்ரை தவிர்ந்தது இந்த பாசுரத்தாலே –
அங்கே திரு நாபீ கமல சேவை இல்லையே
நம் பெருமாள் சேவித்தால் நின்ற திருவேம்கட முடையான் சேவை கிட்டுமே
—————-
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-
திரு வயிறும் உதர பந்தமும் –
உலகம் முழுவதையும் தாங்கிய பெருமை திரு வயிற்றுக்கே
நாபீ கமலத்துக்கு ஆதாரமும் திரு வயிறே -மூன்று மடிப்புகள் -முவ்வகை சேதனர்-அசேதனங்கள் –
கஸ்ய இதரே ஹரே விரிஞ்சி முக பிரபஞ்ச -ஆளவந்தார்
மூன்று மடிப்புக்களினால் பரத்வமும் தாமோதர -தாம்பின் தழும்பினால் சௌலப்யமும் -திரு வயிற்றுக்கு உண்டே
பட்டம் கட்டி உள்ளதே -தனது இஷ்டப்படி –திரு உள்ளத்துள் -ச்வைர சஞ்சாரம் பண்ணிற்று –
திரு வயிற்று உதர பந்தம் உலாவுகின்றது
ஒரு பெரிய இடத்தில் மத்த கஜம் உலாவுமா போலே
பனைகளில் உடை நழுவ தழும்பைக் கண்டு தாவினவாறே இடைச்சிகள் சிரிக்க -அத் தழும்பு தோன்றாமைக்காக
நம் பெருமாள் கணையம் மேல் சாத்து சாத்துகிறது -நஞ்சீயர்
நவநீத சோர விருத்தாந்தம் அனைவரையுமே ஈர்க்கும் -எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
சம்சாரிகளுக்காக கோயிலிலே சாய்ந்து அருளி தன்னுடைய ஸ்வாமித்வத்தை உதறிப் படுத்தவனுடைய திரு வயிற்று உதர பந்தம்
திருக் குறுங்குடி நம்பி உடைய சிற்றிடையும் வடிவும் பாவியேன் முன் நிற்குமே
மாயப் பிரான் -என் வல்வினை மாய்த்து அற நேசத்தினால் நெஞ்சம் நாடு குடி கொண்டான் –
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றான்-சிருஷ்டி தொடக்கமாக மோஷ பர்யந்தமாக ரஷ்ய வர்க்கத்தின்
உடைய சர்வ வித ரஷணத்தையும் பண்ணி பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -இருக்குமவன்
அவன் கட்டுண்டதை அனுசந்திக்க நாம் சம்சார கட்டில் இருந்து விடு படுகிறோம் நம் போலே
நடுவில் உதர பந்தம் திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்திமத்தில் வரும் அனுபவம்
—————
பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-
திரு ஆர மார்பு —
பிரளயம் மட்டும் தானே திரு வயிறு உலகைக் கொண்டது -நானோ எப்பொழுதும் தாங்குகிறேன்
ஸ்ரீ வத்ஸ சம்ஸ்தானதரம் அனந்தேன சமாஸ்ரிதம்
பிரதானம் புத்திரப் யாஸ்தே கதா ரூபேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-69-
பிரகிருதி -ஸ்ரீ வத்சம் /புத்தி -மஹான்-கதையிலும் எம்பெருமான் திரு மேனியில் இடம் பெற்று இருக்கும்
ஆத்மானம் அஸ்ய ஜகதோ நிர்லேபம் அகுணாமலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி —ஆத்ம தத்வம் -ஸ்ரீ கௌஸ்துபம் – புருடன் மணி வரமாக
பொன்னா மூல பிரகிருதி மறுவாக -ஸ்ரீ தேசிகன் –
என்றோ நான் முகன் பிறந்த நாபி கமலப் பூ -இப்பொழுது சத்ய லோகத்தில் அவன் இருக்க –
அலர் மேல் மங்கை அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாசம் இங்கே அன்றோ செய்கிறாள்
பந்திருக்கும் மெல் விரலாள் பாவை பணி மலராள் வந்திருக்கும் மார்வன் எவ்வுள் கிடந்தானே
திருவில்லாத் தேவரை தேறேன் மின் தேவு -பிராட்டிக்கு கோயில் கட்டணம் -வாசஸ் ஸ்தானம் -லலித க்ருஹம் உபாசே -ஸ்ரீ பட்டர்
அனைத்து திரு திவ்ய ஆபரணங்களையும் தாங்குவதும் திரு மார்பு தானே -அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட
அநந்த சயனன் தக்க மா மணி வண்ணன் வா ஸூ தேவன் தளர் நடை நடவானோ
ஐம்படைத்தாலி ஆமைத்தாலி புலி நகம் பதித்த பதக்கம் யசோதை பிராட்டி சமர்ப்பிதவை இன்றும் திருவரங்கனுக்கு சாத்துகிறார்கள் –
ஆழ்வாரையும் பிராட்டி கடாஷித்து -அடியேனை ஆட கொண்டதே –முன்பு அவயவங்களை மட்டும் ஈர்த்தன –
திருக்கண் -சிந்தனை -உள்ளத்து இன்னுயிர் -உள்ளம் இவற்றை ஈர்த்தன –
உபய விபூதி நாதன் தனி மாலை வனமாலை சாத்தியும் உள்ளதும் திரு மார்பு தானே
விசாலமான தனக்கு சிற்றிடை தான் நிகரோ -இறுமாப்பைக் காட்டி இசித்துக் கொள்ள –
ஸ்வரூப ஜ்ஞாநாதிகளை பிறப்பித்து அடிமையும் கொண்டதே
இதற்கு அவன் தபஸ் –இந்த பேற்றுக்கு ஆற்றம் கரையைப் பற்றி கிடந்தது தபஸ் பண்ணினவனும் அவனே –
ஹிரண்ய பிரகாரம் -ஸ்ரீ லஷ்மி எழுந்து அருளி இருக்கும் இந்த திரு மார்பு திருக் கோயிலுக்கு தானே
சிறையில் இருந்து அருளும் போதே –தேன மைத்ரீ பவது தே – ந கச்சின் ந அபராதயதி என்பவள் இங்கே
சேஷத்வ ஜ்ஞானம் உண்டு பண்ணி அவனிடம் வைக்க சொல்ல வேண்டாம் இறே
சீதாம் ஆஸ்ரித தேஜஸ்வீ தன்னை ஸ்ரீ ராம தூதன் சொன்னதை மாற்றி ஸ்ரீ ராம தாசன் என்று சொல்ல வைக்கும் பண்ணினாள்
கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -அடியேனை ஆட்கொண்டதே -முன்பும் அடியேன் என்றார்
அவை எல்லாம் அழகுக்கு தோற்ற அடிமை –குண க்ருத தாச்யத்வம் – இங்கு தான் ஸ்வரூப க்ருத தாச்யத்வம் –
பாவு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியயோர்க்கு அகலலாமே –
சர்வருக்கும் அனுபவிக்கலாம் படி சர்வ சாஹிஷ்ணுவாய்க் கொண்டு கோயில் ஆழ்வாருக்கு உள்ளே சௌலப்ய காஷ்டையோடு
விரோதியாத ஸ்வாமித்வ காஷ்டையை உடையரான பெருமாளுடைய சேஷித்வ பூர்த்திக்கு லஷணமான திருவையும் –
அழகு வெள்ளத்துக்கு ஆணை கோலினால் போல இருக்கிற ஹாரத்தையும் உடைத்தான திரு மார்பு அன்றோ
ஸ்வா பாவிக சேஷத்வ அனுபவ ரசிகனாய் -அதுக்கு மேலே குணைர் தாஸ்யம் உபாகதனுமான என்னை
ஸ்வரூப அனுரூபமான சேஷ வ்ருத்தியிலே மூட்டி அதுக்கு இலக்காய் நின்றது
——————-
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-
முற்றும் உண்ட கண்டம் –
திரு ஆபரணங்களை தாங்கும் பெருமை திருக் கண்டத்துக்கு தானே -ஸ்ரீ லஷ்மி தங்கும் ஸ்ரீ தாமரை பதக்கத்தையும் தரிப்பதும் –
நீண்டு பருத்து -உருண்டு -திரண்டுள்ள -திருக் கண்டம் அன்றோ
இளம் கமுகு மரத்தின் பசுமை -சங்கு போன்று வளையங்கள் கொண்டு -ஆலிங்கனம் செய்யும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய
திருவளையல்கள் அழுந்திய தழும்பு உள்ள திருக் கண்டம்
சங்கு தங்கு முன்கையராய் இருக்கும் ஸ்ரீ பூமி நீளா தேவிமார் ஆலிங்கனம் –இந்திரியா கனக வலய முத்ராம் -கண்ட தேச -ஸ்ரீ தேசிகன்
எம்பெருமான் அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகளும் திருக் கண்டம் மூலம் தானே
வாக்கியம் அப்யாததே கிருஷ்ண ஸூதம்ஷ்ட்ரோ துந்துபிச்வன
ஜீமூத இவ கர்மாந்தே சர்வம் சம்ஸ்ராவயன் சபாம் -துந்துபி போலே என்கிறார் வியாசர்
தூது செல்ல மடக்கு ஓலை கட்டுவதும் திருக் கண்டத்திலே தானே
பிரளயத்தில் உலகு எல்லாம் வயிற்றுக்குள் சென்றதும் திருக் கண்டம் மூலமே தானே
செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருங்கிப் புக பொன் மிடறு அத்தனை போது அங்காந்தவன் காண்மின்
அண்டர் அண்ட பகிர் அண்டம் —முற்றும் உண்ட -ரஷித்த-
நெற்றி மெல் கண்ணானும் –வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான்
விழுங்கிக் கொண்ட கொற்றப் போர் ஆழியான் குணம் -பெரிய திருமொழி -11-6-3-
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே –
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரம் ச உபே பவத ஒத்தன -கட உபநிஷத் -ஜகத் ரஷணமே அவனுக்கு தாரகம்
அடியேனை உய்யக் கொண்டது -ஸ்வரூப ஞானத்தை பிறப்பித்து சம்சார ஆர்ணவத்தில் நின்றும் எடுத்து
ஏற்றி -சந்தம் ஏதம் -பண்ணிற்று –
குருஷ்வ மாம் அனுசரம் -என்று இருப்பாரை கூவிக் கொள்ளும் போது -ஸ்நிக்த கம்பீர மதுர நாதமாய்
கூவிப் பணி கொள்ள -ஆஜ்ஞ்ஞாபம்யிஷ்யதி
——————
கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–
திருப் பவளச் செவ்வாய் -என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
நுழை வாயிலே நான் தானே -திருக் கண்டத்துக்கும் திரு வயிற்றுக்கும் நீர் அருளிச் செய்த ரஷகத்வத்துக்கு
உலகம் உண்ட பெருவாயா -நம்மாழ்வார்
அச்சம் கேட்டு ஆஸ்ரயிக்க- வார்த்தை பேச்சு மெய்ம்மைப் பெரு வார்த்தை -எல்லாம் என் மூலம் தானே
கடல் கரை வார்த்தை -அபயம் சர்வ பூதேப்யோ –ததாம் ஏதத் வ்ரதம் மம
தேர் தட்டு வார்த்தை -சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
உன் சோதி வாய் திறந்து தொண்டரோருக்கு அருளி -பூ அலருமா போலே யாயிற்று வார்த்தை அருளிச் செய்வது
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ -ஸ்வாபாவிக சிகப்பு செவ்வாய்க்கு தானே –
அத்தையும் கருப்பூரம் நாறுமோ -இத்யாதி மூலம் ஆசார்யன் மூலம் அறிய விரும்பி ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வாரைக் கேட்கிறாள்
மாதவன் தன் வாயமுதம் பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே
தெப்பத்தைக் கொண்டு கடக்க உள்ளவன் தெப்பம் இழந்தது போலே சிந்தையை கவர்ந்ததே –
தூ முறுவல் தொண்டை வாய் பிரானுடைய கோலத் திரள் பவளக் கொழும் துண்டம் கொல்
வலியதோர் கனி கொல் -இடைப்பென்கள் புல்லாங்குழல் ஸ்ரீ சங்கத் ஆழ்வான் என்று சர்வரும் அனுபவிக்கும் -பெருமை உண்டே –
———————
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8
பேதைமை செய்த பெரியவாய கண்கள் –
மது சூதனனுடைய ஜாயமான கடாஷம் -கடைக்கண்ணால் நோக்கி ஆள்வீர் செய்ய வாயில் சிந்தை பறி கொடுத்தீர் –
என்னிடம் சிகப்பும் கருப்பும் வெளுப்பும் உண்டே
தூது செய் கண்கள்
வசஸா சாந்த்வயிதவை நம் லோச நாப்யாம் பிபந்நிவ–விழுங்குபவன் போலே கடாஷித்து அருளி –
அனைத்துலகம் உடைய அரவிந்த லோசனன் -சர்வேஸ்வரத்வ ஸூசகம்
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-புண்டரீக விசாலாஷா -ராம கமல பத்ராஜ -மத்ஸ்ய கமல லோசன
மஹா வராஹா ஸ்புட பத்ம லோசன -ராமோ ராஜீவலோசன -கிருஷ்ண கமல பத்ராஷ –
கோவிந்த புண்டரீகாஷ மாம் ரஷமாம் -பாஹிமாம் புண்டரீகாஷ–
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை
எம்பெருமான் நித்ய சூரிகளை கண் அழகாலே தோற்ப்பித்தான் –
இவரை கண்ணியாலே -கண் ஆகிற வலையாலே -அகப்படுத்தினான் –
வேறு அவயவத்துக்கு செல்லாத படி திருக் கண்களுக்கே அற்று தீர்ந்து -நிலைத்து நிற்கிறார்
செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்ததாயும் -சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் –
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரியில் வீற்று இருந்த நங்கள் பிரானுக்கு
என் நெஞ்சம் தோழி நாணும் நிறைவும் இழந்ததுவே —
திருப்பவளத்திலே அபஹ்ருத ஹ்ருதயர் -சிந்தை பறி கொடுத்தவர் -அகவாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
க புண்டரீக நயன -ஆளவந்தார்
திருமுகம் சந்திர மண்டலம் -அங்கு இரண்டு தாமரை மலர் பூத்தால் போலே திருக்கண்கள் –
திருமுகமே தாமரை -அதில் இரண்டு தாமரை மலர்கள் பூத்தால் போலே திருக் கண்கள்
போஜ ராஜன் -காளி தாசர் -குசூமே குசம உத்பத்தி ச்ரூயதே ந து த்ருச்யதே –
பாலே தவ முகாம் போஜே நேத்ரம் இந்தீவர த்வயம் –
விஷ்ணோ தவ முகாம் போஜ நேத்ரம் அம்போருக த்வயம்
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி –
வெண் தாமரை போல் வெளுத்து இருக்கும் திருக் கண்களில் இரண்டு கரு விழிகள்
புடை பரந்து -பக்கங்கள் எங்கும் பரவி
மிளிர்ந்து -ஆசை அலை வீசும்படி ஆழ்வாரை அடையும் த்வரை விஞ்சி
செவ்வரிவோடி -சிவந்த கோடுகள் -ஸ்ரீ யபதித்வ ஸூ சகம் -வாத்சல்யம் விஞ்சி
நீண்ட -ஆழ்வார் அளவும் நீண்டு
திருச் செவி வரை நீண்டு -இவை அணை போலே -ஸ்ரீ வைகுண்ட நாதன் போலே இரண்டு திருக் கண்கள் போதாதே திருவரங்கனுக்கு
மீனுக்கு தண்ணீர் வார்க்கிறான் அவன்
சம்சாரம் கிழங்கு எழுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கண் வளரும் இவனுக்கு
திருமேனி முழுவது வியாபிக்கத் தொடங்கிற்று திருக் கண்கள் -முதலில் திருக் காதுகளை ஆக்கிரமித்தன
நேராக பார்த்தால் கண் எச்சில் என்று அப் பெரிய வாய கண்கள் என்கிறார் -அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டே போலே
பேதைமை செய்தன -முன் சிந்தை கவரப் பட்டார் -ஞானம் பிறக்கும் வழியை இழந்தார் முன்பு இங்கு ஞானத்தையே இழந்தார்
அழகிலே ஈடுபட்டு அலமரும்படி செய்தனவே
மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -இதற்கே அற்று தீரும்படி
அவன் கண்களாலே அமலங்களாக விளிக்கும் -1-9-9-எனபது என்னளவில் பொய்யானதே -இருந்த ஞானமும் இழந்தேன்
அனந்யர் பக்கலிலே அனுராகத்துக்கு கீற்று எடுக்கலாம் படி சிவந்த வரிகள் -ஈச்வரோஹம் என்பாரைத் தோற்ப்பித்து
நமஸ்தே என்று திருவடிகளில் விழப்பண்ணும்
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் ஆழி யம் கண்ணபிரான் திருக் கண் கொலோ –
——————-
ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-
நெஞ்சினை நிறை கொண்ட நீல மேனி –
பக்தர்கள் அவனைப் பெறாமையாலே முடிவார்கள் -த்வேஷிகள் பொறாமையாலே முடிவார்கள் –
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக்கண் என்னும் சிறைக் கோலால் –நெஞ்சு ஊடுற ஏவுண்டு நிலையம் தளர்ந்து நைவேனை
சிறகுகள் கொண்ட அம்பு போலே
ராவணன் பட்ட பாடு ஸ்ரீ ஆண்டாளும் படுகிறாள்
கலம்பகன் மாலையை சூடுவது போலே திரு மேனி முழுவதையும் அனுபவிக்கிறார் –
அனைத்து அவயவங்களுக்கும் ஆஸ்ரயம் திரு மேனி -ஸ்வா பாவிகமான லாவண்யம் -இத்துடன் திவ்ய ஆபரண சேர்த்தி அழகு –
சதுரங்க பலம் கொண்டு ஆழ்வாரை இழுத்துக் கொண்ட திரு மேனி -அவயவ ஆபரண சமுதாய சோபை பலம் கொண்டு
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும்
முடிவில்லதோர் எழில் நீல மேனி –ஆபரணச்ய ஆபரணம் -ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள்
ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
பச்சை ரத்ன மலை -பச்சை மா மலை போல் மேனி -சமுத்ரத்தில் நிற்க -அதனது -ஒளிக் கற்றைகள்
அலைகள் மூலம் நம்மை நனைக்கட்டும் -ஸ்ரீ பட்டர்
ஆதிசேஷன் மேலே கண் வளரும் பெரிய பெருமாள் -பொன் மலையுடன் சேர்ந்து விளங்கும் கரும் கடல்
நீல மேனி -தேஜஸ் நீக்கி செவிப்பவர் கண் குளிரும்படி மை இட்டு எழுதினால் போலே
தனக்கு உள்ளவற்றைக் காட்டி அருளி எனக்கு உள்ளவற்றை அபஹரித்தான் -நெஞ்கை தன் பக்கல் இழுத்துக் கொண்டான்
சொத்தை பறி கொடுத்து கதறுபவர் போலே ஐயோ என்கிறார் -சமுதாய லாவண்ய சோபை நெஞ்சின் காம்பீர்யத்தை அழித்தது
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று எப்போதும் மங்களா சாசனம் பண்ணச் செய்ததே
——————
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10-
அணி யரங்கனைக் கண்ட கண்கள் –
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் -இந்த திவ்ய தேச சம்பந்தத்தாலே பாவன பூதர் ஆக்கும் –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் –
நாம் இங்கே புகுருகை மாலின்யாவஹம்-என்று பார்த்து அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -என்கிறபடி
பிறருடைய நைச்யத்தாலே அங்கும் போகவும் மாட்டாதே
தம்முடைய நைச்யத்தாலே இங்கு திருவரங்கத்தில் புக மாட்டாதே ஆந்த ராளிகராய் நடுவில் இருந்தார்
ஆதி பிரான் விண்ணவர் கோன் நீதி வானவன் -பரத்வம் அனுபவித்தார்
உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன் –வெங்கணை காகுத்தன் -விபவ அனுபவம்
விரையார் பொழில் வேங்கடவன் -அர்ச்சா அனுபவம்
மாடுகளின் குளப்படிகள் கடலிலே ஏக தேசத்தில் அடங்கி இருப்பது போலே பெரிய பெருமாள் இடத்தில்
எல்லா அவதாரங்களும் அடங்கி இருப்பதால்
அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
இதற்கு அடை மொழிகள் –
கொண்டல் வண்ணன் –ஔதார்யம் இல்லை என்று போகவோ -வடிவில் பசையில்லை என்று போகவோ –
இன்னார் இனையார் என்று இல்லாமல் அனைவருக்கும் வாரி வழங்குபவன் அன்றோ
நீருண்ட கருத்த மேகம் போலே குளிர்ந்து தாப த்ரயம் போக்கி ஆனந்தம் தருபவன் அன்றோ
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -சௌசீல்யம் -சௌலப்யம் -போக்யதை இல்லை என்று போகவோ
தூரத்தில் நின்று வர்ஷித்துப் போகாமல் -இடையர் இடைசிகளுடன் ஒரு நீராக கலந்து
வடிவு அழகை சர்வ ஸ்வதானம் பண்ணினவன் அன்றோ
என்னுள்ளம் கவர்ந்தான் -நெஞ்சுக்கு பிடிக்க வில்லை என்று போகவோ -அனுபவத்தில் குறை என்று போகவோ
வெண்ணெய் மட்டும் உண்டது போலே சரீரம் இருக்க மனசை மட்டும் கவர்ந்தான்
அண்டர் கோன் -மேன்மை இல்லை என்று போகவோ
அணி யரங்கன் -அருகிலே உள்ளான்
என் அமுதினை -பரம போக்கியம்
கண்ட கண்கள் -பூர்ண அனுபவம் பண்ணி -அரை வயிறாகில் புறம்பு போகலாம்
ஸ்ரீ அரங்கன் திவ்ய அனுபவத்திலேயே தம்மையே மறந்தார் -மற்று ஒன்றினை -மற்ற நிலைகளில் உள்ள எம்பெருமானையும் காணாவே
சமுதாய சோபையைக் கண்ட பின்பு மீண்டும் அவயவ அனுபவங்களும் வேண்டேன்
இந்த பெரிய பெருமாள் தம்மையே கேசாதி பாதாந்தமாக அனுபவிக்க வேணும் என்று பார்த்தாலும் சக்தன் அல்லேன்
அம்ருத பானம் பண்ணினார் பாலையும் சோற்றையும் தீற்றப் போமோ
தம்மை மறந்தாலும் -அடியேன் என்கிறார் -முக்தனுடைய சாம கானம் படி அநாதி காலம் பாஹ்ய அனுபவம் பண்ணின
கிலேசம் தீர்ந்து க்ருத்க்ருத்தராகிறார்
கொண்டல் வண்ணன் -மேகம் போலே வெறும் நீரை பொழிபவர் அல்லவே அருள் மாரி அன்றோ –
ஒரு காள மேகம் கடல் நீர் அத்தனையும் பருகி வயிறு பருத்து
காவேரி நடுவில் பள்ளி கொண்டால் போலே -சர்வருக்கும் ஸ்ரமஹரமான திரு மேனியைக் கொண்டு
ஜங்கம ஸ்தாவரங்கள் உஜ்ஜீவிக்கும் படி ஜல ஸ்தல விபாகம் அற காருண்ய ரசத்தை வர்ஷிக்கும் காள மேக ஸ்வ பாவன்
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்
சர்வ லோக ரஷகன் ஆஸ்ரிதர் உகந்த -ஆஸ்ரிதர் ஸ்பர்சம் பெற்ற வஸ்துவில் ஆசை கொண்டு -இடையனாகி
மத்யே விரிஞ்சி சிவயோ விஹித அவதார –
சூட்டு நன் மாலைகள் –ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து –
கர்ம வச்யரைப் போலே அழுக்கு கழல குளிக்கை அன்றிக்கே அங்கு உள்ளாருக்கு உஜ்ஜீவனமாக –
நாடு வாழ குளிக்கும் குளிப்பாயிற்று –
நம் பெருமாள் திரு மஞ்சனம் செய்து அருளுமா போலே
இப்படி நித்ய சூரிகள் அனுவர்த்தியா நிற்க -யசோதை பிராட்டி திரு மாளிகையிலே வெண்ணெய் திரண்டது என்று கேட்டவாறே
திரு உள்ளம் குடி போக –ப்ராப்த யௌவனர் ஆனால் பித்ராதி சந்நிதிகள் பொருந்தாது போலே –
கண்ணிக் குறும் கையிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியான் இமையோர்க்கும்
என் அமுதினை -அநாயாசனமாக பேரின்பத்து இறுதியை பெற்றேனே
என் கண் -என் சிந்தனை -அடியேன் உள்ளத்து இன்னுயிரை -என் உள்ளத்துள் -என்று மமகாரம் தோற்ற அருளிச் செய்தவர்
இதில் அமுதினைக் கண்ட கண்கள் –
அந்த மமகாரம் தோஷம் அன்று -ஸ்வ தந்த்ரன் ஸ்வாமி ஒன்றைக் கொடுத்தால் –
அதை நாமும் நம்முடையது என்று அபி மாநித்துக் கொள்ள வேண்டுமே
————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய சிங்கர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply