ஒது வாய்மையும் உவனியப்பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் -5-8-7-
முற்பட த்வயத்தை கேட்டு -இதிஹாச புராணங்களையும் அதிகரித்து -பரபஷ
பிரதிசேஷபத்துக்கு உடலாக நியாய மீமாம்சைகளும் அதிகரித்து போது போக்கும்
அருளிச் செயலிலேயாம் நம்பிள்ளை போலே -பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –
—————————–
தொழுது முப்போதும் –பார்க்கடல் வண்ணனுக்கே -பார் சூழ்ந்த கடல் போலே இருக்கும் வடிவு
பாற் கடலும் வேம்கடமும் –
—————————–
கழல்களுக்கு கமலம் உவமை அநேகம்
இரண்டு ஞாயிறு உவமை -கதிரவன் உவமை எங்கே
சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பதம் எல்லையில் சீர் இள
ஞாயிறு இரண்டு போலே என்னுள்ளவா -திருவாய்மொழி -8-5-5-
———————-
திருவாய்மொழி -1-10-11-தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே -ஈடு ஸ்ரீ ஸூக்தி
இதுக்கு பலமாக கைங்கர்யத்தை இது தானே தரும் –
———————————-
காரார் புரவி ஏழ் –பூண்ட தொன்று உண்டே -சிறிய திருமடல்
கோஹிதத் வேத யத்ய முஷ்மின் லோகே அஸ்தி வா ந வேதி -வேதம் கோஷிப்பதையே
ஆழ்வார் அருளிச் செய்து இருக்கிறார் –
————————————-
திருப்பணி -கைங்கர்யம்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய -நம் ஆழ்வார்
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு
நின் கோயில் சீய்த்து பல் படி கால் குடி குடி வழி வந்து ஆட் செய்யும் தொண்டர் -நம் ஆழ்வார்
எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆட்
செய்கின்றோம் -பெரியாழ்வார்
எந்தாதை தாதை அப்பால் எழுவர் பழ வடிமை வந்தார் -திருமங்கை ஆழ்வார்
தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -மதுரகவி ஆழ்வார்-
——————————–
கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை என்
நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -அமுதனார்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -வல் வினையை
கானும் மலையும் புகக் கடிவான் -தானோர் இருளன்ன மா மேனி எம் இறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து -நம் ஆழ்வார்
————————————
அப்பன் கோயில் -நம் ஆழ்வார் திருவவதார ஸ்தலம் –
வைகாசி எட்டாம் திருநாள் எழுந்து அருளுகிறார்
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த என் அப்பனே –
தமியனேன் பெரிய அப்பனே
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை
முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனி அப்பன் தன்னை
என்று எட்டு தடவை மங்களா சாசனம் செய்து அருளுகிறார்
————————————
திருவாசிரிய அனுபவம்
முதல் பாட்டில் திரு மேனி வைலஷண்யத்தில் ஈடுபடுகிறார் –
இரண்டாம் பாட்டில் – எம்பெருமான் திருவடிகளை சூட வேண்டும் -பகவத் விஷயத்தில் ஆசை
மேலிட்டு இருப்பதே ஸ்வரூபம் என்று நினைக்கிறார் –
மூன்றாம் பாட்டில் -அடியார்களுக்கு ஆட் பட்டு இருக்கும் வாய்ப்புக்கு பாரிக்கிறார்
நான்காம் பாட்டில் -இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் போலே பகவானுக்கு பல்லாண்டு
பாடுவதே பொழுது போக்காக பெற வேண்டும் என்று விரும்புகிறார் –
ஐந்தாம் பாட்டில் -உவந்த உள்ளத்தனாய் உலகளந்த வரலாற்றை நினைந்து உகக்குகிறார்
ஆறாம் பாட்டில் -இப்படிப்பட்ட பராத் பரனை விட்டு சூத்திர தேவதைகளை உலகோர்
வணங்கி பாழாகிறார்களே என்று வருந்தி கதறுகிறார்
நிகமத்தில் – அவனுக்கு என்று இருக்கும் தமது மன உறுதியை அனுசந்தித்து உகக்குகிறார் –
பகவத் ஸ்தாபனத்திலே நோக்கு இந்த பிரபந்தத்துக்கு
———————————
அவனே அவனே அவனும்
மா முனிகள் -திருக் கோலம்
திருவகிந்திர புரத்திலும்
திருவல்லிக் கேணியிலும்
18 குடை
———————-
நாத முனி -பெரியாழ்வார் -தனியன் -நாத முனிகள் சாதித்த தனியன்
கண்ணி நுண் சிறு தாம்பு –
திருப்பல்லாண்டு
திருவாய்மொழி
மூன்று திவ்ய பிரபந்தங்களுக்கும் சாதித்து அருளினார் –
உபதேச ரத்ன மாலை 5 பாசுரம் 5 சம்ப்ரதாய அர்த்தம்
திருப்பல்லாண்டு தனி பிரபந்தம் என்று காட்டி அருள –
—————————-
இடையன் –
ப்ரஹ்ம ருத்ரன் நடுவில் அவதரித்து
தேவகி வயிற்றின் இடையில்
பல ராமன் யோக மாயா நடுவில்
கோபிகள் இடையில்
இடையனாக
சம்சாரிகள் இடையில்
மாலாகாரர் அக்ரூரராதிகள் இடையில் கம்சன் சிசுபாலாதிகள் இடையில்
இரவு பகல் இடைப் பொழுதில்
—————————————–
பூமா வித்யா -சாந்தோக்ய உபநிஷத் சொல்லும் வித்யை
நாரதர் சனத் குமாரர் இடம் -இருவரும் ப்ரஹ்ம புத்ரர்கள் -ஆத்ம ஜ்ஞானம் உபதேசிக்க கேட்டுக் கொள்ள
வேத சப்தங்களையே ப்ரஹ்மமாக உபாசனம் செய்ய சொல்ல
மேலே உண்டா –
நாமம் சொல்ல வாக்கு வேண்டும்
மனஸ் உதவ வேண்டும் வாக்கு பேச உபாசனம்
மேலே மேலே பிராணன் –
பிராணன் ஜீவன் ஒன்றாக சஞ்சரிக்கும் -ஜீவாத்மா தான் பெரியவன் உபாசனம் பண்ண சொல்ல –
காரணம் து -உபாசனம்
யஸ்ய நானயத்த –சகா பூமி
அந்ய பச்யதி
அந்ய
வேறு ஒன்றை கேட்க பேச அறிய மாட்டானோ அது தான் பூமா –
அல்பம் மற்றவை
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -உண்டே
பூமா ப்ரஹ்ம ஸூதரம் -விபுல ஸூக வாசி
சம்பிரதாச அதி உபதேசாத் -மூன்று பத சேர்க்கை
சம்பிரசாதா -ஜீவாத்மா
அதி -கொத்தமல்லி போலே -அவ்யய சப்தம் -அதிகமாக சொல்லி இருப்பதால்
அடுத்த ஸூத்ரம் அழகாக -தர்ம உப பயேக
ச காரம் முந்திய ஸூத்ரம் காட்டும் –
ஸ்வாபாவிக அமிர்தத்வம்
பூமா அளவில்லா சுகமான பர ப்ரஹ்மமே உபாசிக்க தக்கது –
ஜீவாத்மாவுக்கு அப்படி இல்லை
அனந்யார ஆதாரத்வம் அவனுக்கு மட்டுமே
அனைவரையும் தாங்குவதால்
சூசூரத்வம்
பிரத்யகாத்மா -பிராணன் –
சுந்தர பாஹூ அழகனையே சொல்லும் -கூரத் ஆழ்வான்
தகர வித்யை –
தகரம் ஸ்துதி -தகரம் புண்டரீஹம் -உபாசிதவ்யம் –
பட்டணம் -சரீரம் ப்ரஹ்ம புரம்
பட்டினம் காப்பு -நோய்காள் இங்கே இடம் இல்லை
நவ த்வார -ஒன்பது வாசல் தானுடைக் குரம்பை
களேபரம் -சரீரம்
ஹிருதய தாமரை பவனம் தகராகாசம் த்யானம் மனனம் உபாசனம்
மகா பூத ஆகாசமா ஜீவாத்மாவா பரமாத்மாவா –
தகர உத்தரேப்யா-ஸூ தரம் பின்னால் வரும் உத்தர வாக்ய கத
அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப 8 குணங்கள்
எண் குணத்தான் தாளை வணங்காதவர்கள் -வள்ளுவர்
—————————
கஞ்சனை குஞ்சி பிடித்து
மேலே வைக்கைப் பொறுக்க மாட்டான் கண்ணன்
உறி மேல் உள்ள வெண்ணெய் எடுப்பது போலே
சிற்றாயன் –
பைகொள் பாம்பேறி உறை பரனே-பரத்வ லஷணம்
தழுவி நின்ற காதல்-4-7-11
கமலக் கண்ணன் என்று தொடங்கி கண்ணுள் நின்று இறுதி கண்டேன் என்ற
பத்தும் உட் கண்ணாலேயாய் -நாயனார்
அநந்த குண சாகரம் -குணக் கடல்–குணங்களுக்கு கடல் போன்றவன் என்னாமல்
குணங்களை கடலாக கொண்டு அந்த கடலை உடையவன்–பஹூ வ்ரீஹி சமானம் அர்த்தம்–
சீர்க்கடலை உள் பொதிந்த சிந்தனையேன்-பெரிய திருவந்தாதி -69
பூண்ட நாள் சீர்க் உட்கடலை உட்கொண்டு -ஆச்சார்யா ஹிருதயம் -3-6-
காதல் கடல் புரைய விளைத்த அகாத பகவத் பக்தி சிந்தவே
————————————————————————————————————————————————
மதுர கவி சொல்
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காக பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாக பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம் –இதுவே மா முனிகளுக்கு உண்ணும் சோறு
மதுர கவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
மதுர கவி சொல் =கண்ணி நுண் சிறு தாம்பு
வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமாம் பதம் போலே சீர்த்த மதுரகவி செய் கலை
மற்றோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு வெட்டு எழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-3-
ஆசார்ய அபிமானமே உத்தாரகம்
மாம் ஏகம் -சுலபனாய் தேரோட்டியாய் நிற்கும் என்னை –
சுலபனாய் ஆசார்யனாய் இந்த அத்யந்த சாஸ்த்ரத்தை -சிஷ்யனாய் பிரபன்னனாய்
கேட்கும் உனக்கு சொல்லும் என்னை –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார்
பத்து பேர் உண்டு இறே -அவர்களை சிரித்திருப்பார் ஒருவர் உண்டு இறே -அவர் பாசுரம் கொண்டு
இவ் வர்த்தம் அறுதி இடக் கடவோம் –
அதனால் இவர் சீர்த்த மதுர கவி ஆகிறார் –
திருத்திப் பணி கொள்வான் -ஆழ்வார் உடைய சேஷித்வத்தை சொல்லி –
மேவினேன் அவன் பொன்னடி -தேவு மற்று அறியேன் -அவரின் சரண்யத்வத்தையும் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –பாவின் இன்னிசை பாடித் திரிவனே –
போக்யத்வ ப்ராப்யத்வங்களையும் காட்டினார் –
பிரதம பர்வநிலை -பகவத் சேஷத்வம்
மத்யம பர்வ நிலை -ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேஷத்வம் -அவர்கள் காட்ட
சரம பர்வ நிலை -மதுர கவி ஆழ்வார் காட்டிய தத்வ ஹித புருஷார்த்தங்கள் நமக்கும் ஆக வேண்டுமே
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -போலே சொல்லை அறிந்து நம்புவார்கள் இடமே வைகுந்தமே
—————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply