65-சமர்ப்பண விரோதி
அநாதி காலமே பிடித்து தத் ததீய விஷயத்தில் ஆத்மாத்மீய சமர்ப்பணம் பண்ண வொட்டாத அஹம் மமதையும்(யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -யானே நீ உன்னுடைமையும் நீயே -மாம் மதீயஞ்ச நிகலாம் சேதன சேதநாஞ்ச)
ஆத்ம சமர்ப்பண இச்சை பிறந்த பின்பு மதியம் என்று ஓன்று உண்டாய் சமர்ப்பிக்கப் பெறாமையும்
ததீயத்தை மதியம் என்று பிரமித்து சமர்ப்பிக்கையும்
முன்புத்தை ஆத்மாத்மீய அபஹாரத்தோடு ஒக்கும் இப்போதைய ஆத்மாத்மீய சமர்ப்பணம் என்று அறியாமையும்
அவன் உடைமையை நாம் சமர்ப்பிக்கையாவது என் என்று சிஷ்டாச்சாரமான சமர்ப்பணத்தைத் தவிருகையும்
தன்னுடையமையைத் தான் கொள்ளுகிறான் என்று சமர்ப்பியாமையும்
என்னது என்னும் துரபிமான தூஷிதமானவற்றை சமர்ப்பிக்கையும்
பூர்ண விஷயம் என்று அறியாமல் சாபேஷம் என்று பிரமித்து சமர்ப்ப்க்கையும்
அங்குத்தைக்கு இல்லாத ஒன்றை சமர்ப்பிக்கிறோம் என்று இருக்கையும்(அப்ருத் ஸித்த விசேஷணமே -ஸமஸ்த சேதன அசேதனங்களும் –அந் நலனுடை ஒருவனையே நணுகினம் நானே -உள்ளத்தில் இருந்து என்றுமே விலக வில்லையே -)
நிரபேஷமாய் பூர்ண விஷயமாய் இருந்து இத் தலையை உஜ்ஜீவிப்பிக்க வேணும் என்றே இவற்றை அங்கீ கரித்து அருளுகிறான் என்று அறியாமையும்
அவன் உபகரித்ததற்கு பிரத்யுபகாரமாக சமர்ப்பிக்கிறோம் என்று பிரமிக்கையும்
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே-முயல்கின்றேன் உந்தன் மொய் கழல்க்கு அன்பையே -என்று பிரத்யுபகாரம் தேடிக் காணாமல் நெஞ்சாரல் பட்டுத் தடுமாறாமையும்-
ஆத்ம சமர்ப்பணம் பண்ணும் இடத்தில் என்னதான ஆத்ம வஸ்துவை நான் சமர்ப்பிக்கிறேன் -என்ற நினைவும் -என்கை –
வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –52-
மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–53-
நிரூபித்த விடத்து
எனதாவியும் நீ –எனதாவி யார் யானார் -2-3-4- என்கிறபடியே
உமதை நீரே ஸ்வீகரித்தீர் இத்தனை
ஆத்மா சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோ பாதி -என்று
பண்ணின ஆத்மா சமர்ப்பணத்தை அனுஸ்யிக்கிறார் –
பகவத் பர தந்த்ரமான ஆத்மாவுக்கு
அநாதி அவித்யா சித்தமான ஸ்வா தந்த்ர்யம் அடியாக
பகவத் வைமுக்யம் பிறந்து
அத்தாலே ஹதன் என்று பீதி பிறந்த அளவிலே
ததீயத்வ அனுசந்தானத்தாலே வந்த
தாதாம்யைக கரண சங்கல்பம் ஆதல் –
ராஜ ஆபரணத்தை ரஷித்து வைத்து
ப்ராப்த காலங்களிலே கொடுக்குமா போலே
ஆத்மாவை ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பிக்கை என்னுதல் –
இவை இரண்டும் அர்த்தம் அன்று என்னும்படி
பண்டே அவனைத்தான வஸ்துவை அவனதாக இசையுமது
ஒழிய -சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோடு ஒக்கும்
எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே –
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் -எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே
அறிவு இழந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து –
பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் –
கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே)
66-தர்சன விரோதி –
ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பரத்வ சங்கையும்
திருமூர்த்தி சாம்ய சங்கையும்
ப்ரஹ்ம ருத்ராதிகள் ததீயத்வ ஆகாரத்தாலே ஆஸ்ரயணீயர் ஆனாலோ என்ற சங்கையும்
பௌத்த சைவ மாயாவாதி பாஹ்ய குத்ருஷ்டிகள் உடைய குதர்க்க உக்திகளைக் கேட்டு பிரமிக்கையும்
புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
சாமான்ய சாஸ்திர தாத்பர்ய நிஷ்டன் ஆகையும்(வர்ணாஸ்ரம தர்மம் பிரதானம் -விப்ரர் -கர்ம அனுஷ்டானம் -விசேஷ தர்மம் –பிரபன்னர் -பிரபன்ன காயத்ரியையும் அறிய வேண்டுமே)
நாம ரூபங்களை உடையராய் பாகவத் நிந்தை பண்ணுகையும்
அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் அற்று இருக்கையும்(பாஹ்ய -ஆந்தர லக்ஷணங்கள் -ஆத்ம குணங்கள் -சம தமாதிகள்)
த்வய அதிகாரி அல்லாமையும்
அருளிச் செயலில் அந்வயம் இல்லாமையும்
தத்வ ரஹஸ்ய பரிஷை இல்லாமையும்(நல்ல திருந்திய ஞானம் -ததீய பர்யந்தம் -அவர்கள் உகந்த கைங்கர்யம்-சிஷிக்கப்பட்ட ஞானம் வேண்டுமே)
சிஷ்டாசார நிஷ்டை இல்லாமையும்
ஜ்ஞான பக்தி வைராக்கியம் இல்லாமையும்
ஒரு ஜ்ஞாநாதிகர் அபிமானத்தில் ஒதுங்காது ஒழிகையும்
நம் தர்சனத்துக்கு விரோதிகளான பிரதி கூலரோடு சஹவாசம் பண்ணுகையும் –என்கை-
ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-
67-ஆஸ்ரம விரோதி
குல தொல்லடியான தன்னை தத்தாஸ்ரமியாக (மட்டுமே)நினைக்கையும்(திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -குல தொல் அடியேன் -)
உத்தமாஸ்ராமி என்று கர்விக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவன் அல்லாத ஆஸ்ரமி ஸ்வ பசரில் கடை என்று அறியாமையும்
தத்தாஸ்ரமே அனுஷ்டானத்தில் தாஸ்ய அனுகுண அனுஷ்டான பிரதிபத்தி இல்லாமையும்
தத்தாஸ்ராம விபரீத உபசாரமும்
சரமார்த்தம் நெஞ்சில் பட்டும் சாமான்ய அனுஷ்டான த்யாக பீதி அனுவர்த்திக்கையும்
ஸ்வரூப அனுரூபமான ஆஸ்ரம விபரீத அனுஷ்டானமும்
அந்த ஸ்ரீ வைஷ்ணவத்வாதி ஆஸ்ரம விரோதியான கீழ் மேற் சொல்லும் விரோதங்களைப் பரிஹரித்து வர்த்தியாமையும்
ஆஸ்ரம மினுக்கம் கொண்டு ஆச்சார்ய கைங்கர்யம் பண்ணக் கூசுகையும்(பின்பு அழகு பெருமாள் ஜீயர் நம் பிள்ளைக்கும் நஞ்சீயர் பட்டருக்கும் கைங்கர்யம் செய்த விருத்தாந்தங்கள்)
ப்ரஹ்மசர்யாதி ஸ்வ ஆஸ்ரம விருத்த தர்மாசரணம் -என்கை –
68-ஜாதி விரோதி
அஜ்ஞர் ஜ்ஞாநாதிகர் பக்தி பரவசர் என்கிற ப்ரபன்ன ஜாதி தர்மமான மகா விஸ்வாச ஹானியும்
மனுஷ்யத்வ ஜாதிக்கு விருத்தமான தர்மா சரணமும்
ஸ்வ யத்ன பிரவ்ருத்தியும்
ப்ரபத்திக்கு ஸூத் யஸூத்திகள் தேடுகையும்(பெருமாள் விபீஷணன் -இருந்தபடியே அமையும் -ஸூத்தியும் அஸூத்தியும் தேட வில்லையே)
தாஸ்ய அனுகுண நித்ய கர்ம த்யாகமும்
அநித்ய கர்மிகளுடன்(நித்ய கர்மங்களைச் செய்யாதவர்கள்) சஹ வசிக்கையும்
திரு மந்த்ரத்தில் பிறக்கையே ஸ்ரேஷ்ட ஜன்மம் என்று அறியாமையும்
தத் இதர மந்த்ரத்தில் உண்டான ஜன்மம் நிகர்ஷம் என்று அறியாமையும்
கோயிலில் வாழும் ஸ்ரீ வைஷ்ணவன் என்னுமதே தனக்கு ப்ராப்தமான பிரசித்த வ்யபதேசம் என்று அறியாமையும்
க்ராம குலாதிகளால் வரும் வ்யபதேசம் அநர்த்த கரம் என்று அறியாமையும்
பிரபன்ன ஜன கூடஸ்தர் பராங்குசாதிகள் என்று இராமையும்
ஆஸாபாச பத்தரான சரகு தின்றிகளை கூடஸ்தர் என்று இருக்கையும்
விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் —சூரணை -36-
ஸ்ரீ வைஷ்ணத்வ சித்தி கரமான சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லார் ஆகாமையும்
அஹங்கார ஹேதுவாய் பாகவத அபசாரத்தை விளைக்கும் வர்ணம் த்யாஜ்யம் என்று அறியாமையும்
கான்றத்தைக் கவ்வப் பண்ணுமதாகையாலே பய ஜனகமாய் நைச்யம் பாவிக்க வேண்டும்படி அஹங்கார க்ரஸ்தமானது ஹீன ஜாதி என்று அறியாமையும்
பய ஹேதுவும் இன்றியே ஜன்ம சித்த நைச்ய முடைத்தாய்
ஹீன ஜாதி தோஷ அபஹந்த்ரி யானதுவே உத்தம ஜாதி என்று அறியாமையும்
ஹீன ஜாதியில் தோஷம் உத்தம ஜாதியான தர்சநாதிகளாலே அபஹ்ருதமாம் என்று அறியாமையும்
ஜாதிக் கொத்தை போகாமல் உத்தம ஜாதியுடன் கலந்து தூஷிக்கையும்
வேதகப் பொன்னான ஜாதி சம்பந்தத்தில் சங்கை அனுவர்த்திக்கையும்
விலஷண ஜ்ஞாநாதிகர் ஆச்சார்ய சத்ருசர் ஈஸ்வரனில் அதிகர் என்னும் பிரதிபத்தி பிறவாமையும்
ஸ்ரீ வைஷ்ணவ ஜாதிக் கொத்தையான தேவதாந்திர கந்த லேச ஸ்பர்சமும்
தர்சன ஹானியான ஜாத்யந்தர லஷண பரிக்ரஹமும் -என்கை
அத்யயன ஜ்ஞான அனுஷ்டானங்களாலே ப்ரஹ்மண்யம் ஆகிறாப் போலே சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லரானால் ஸ்ரீ வைஷ்ணவ சித்தி -ஆச்சார்ய ஹ்ருதயம் -37
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே -திருவாய் -5-5-11
நைச்சயம் ஜன்ம சித்தம் —
69-ஆப்த விரோதி
பகவத் விஷயத்திலே யாதல் -பாகவத் விஷயத்திலே யாதல்-வாசியுடையாரை அநாதரிக்கையும்
அது இல்லாதாரை ஆதரிக்கையும்
ஸ்வகீய ஸ்வீகார நிஷ்டையும்(அதுவும் அவனது இன்னருள் -உனது அனுக்ரஹத்தாலேயே சரணம் என்றும் சொல்கிறோம்)
ஸ்வ பிரயோஜன பிரவ்ருத்தியும்
பாரதந்த்ர்ய ஜ்ஞானம் அற்ற கேவல சேஷத்வ ஜ்ஞானமும்(பரதாழ்வான் சத்ருக்ந ஆழ்வான் என்கிறோம் லஷ்மண ஆழ்வான் சொல்ல வில்லையே)
போக்யத்வ பிரதிபத்தி விருத்தியான போக்த்ருத்வ பிரதிபத்தியும்
பாரதந்த்ர்ய போக்யதா தர்சனத்தில் பிறக்கும் ரசம் பரகத மாகாதே ஸ்வ கதமாகையும்
ஸ்வரூபம் பர கதம் ஆகையால் ஸ்வரூப யாதாத்ம்ய குண விசேஷங்களும் பரகதங்கள் என்று அறியாமையும்
அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணும் ஸூலப விஷயத்தில் (அறியாதன அறிவித்த அத்தா -ஆச்சார்யர் விஷயத்தில்)பரத்வ புத்தி பிறவாமையும்
சரம பர்வத்தில் சரம சாத்திய புத்தி இல்லாமையும் -என்கை(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -உபாயமும் உபேயமும் ஆச்சார்யர் தானே-அவரை அனுபவித்து கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தம் -அத்ர பரத்ர சாபி இத்யாதி -)
திருமோகூர் ஆப்தன் -ஆத்தன் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-
70-அநாப்த விரோதி
பிரபத்தி விரோதியான உபாயாந்தர நிஷ்டையும்
பிரதிகூலரோடு சஹவாஸம் பரிஹரணீயம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும் சில உபாதிகளால் (பிரதிகூலரோடு சஹவாஸம்)வரில் செய்வது என் என்கிற நினைவும்
ப்ராப்ய விரோதியான பிரயோஜனாந்தர நிஷ்டையும்
அநந்ய தைவத்வ விரோதியான தேவதாந்திர நிஷ்டையும்
(ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான)த்வயைக நிஷ்டா விரோதியான மந்த்ராந்தர நிஷ்டையும்
அநந்ய போக்யத்வ விரோதியான விஷயாந்தர ப்ராவண்யமும்
மோஷ சாஸ்திர விரோதியான பந்த சாஸ்த்ர ஆலோசநமும்
சரம கைங்கர்ய விரோதியான ஸ்வ தேக யாத்ரா பாரவஸ்யமும் -என்கை-
71-ஸித்தாந்த விரோதி(ஸித்த -அந்தம் -வேதத்தில் அருளிச் செய்தபடி இருக்கும் -இதுவே இறுதியான முடிவு -)
வைதிக ஸித்தாந்த விருத்தமான பிரமாண (நல்ல அறிவுக்கு கருவி பிரமாணம்)ஸ்வீ காரமும்
பிரத்யஷாதி (ஆதி -அனுமானம்)பிரமாண விலஷணமான வேதத்துக்கு ஸ்வத ப்ராமாண்யம் (அபாதித பிரமாணம் -சுடர் மிகு ஸ்ருதி)கொள்ளாமையும்
திரி எண்ணெய் குறைய தீபம் மாறுகிறது -பிரத்யக்ஷம் அனுமானத்தால் பாதிதமாகிறதே- ஆகாசத் தாமரை வாசனையாக இருக்கிறது – தாமரையான படியால் -அனுமானம் தப்பாகுமே
வேத உப ப்ரும்ஹணம் பண்ணும் ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களில் திருட ப்ராமாண்ய புத்தி இல்லாமையும்(ஸ்ருதி ஸ்ம்ருதி -மமை ஆஜ்ஜை)
உப ப்ரும்ஹ்யோ ப்ரும்ஹணங்களில் சாத்விக அம்சமே சாத்விக க்ராஹ்யமான பிரபல பிரமாணம் என்று அறியாமையும்
ராஜஸ தாமஸரை விஷயீ கரித்த சாத்விக அம்சம் சாத்விக அனுபாதேயம் என்று அறியாமையும்
அம்ச பேதம் இன்றி பரம சாத்விக பரிக்ருஹீதமான அருளிச் செயலே களங்கம் அற்ற பிரமாணம் என்று விஸ்வாசம் இல்லாமையும்
பூர்வாசார்ய வசனமே சாத்விகர்க்கு மிகவும் விஸ்வாச நீயம் என்று இராமையும்
ஸ்ரீ மன் நாராயண உக்தமான ஸ்ரீ பாஞ்சராத்தில் ப்ராமாண்ய பிரதிபத்தி குறைகையும்
சர்வ பிரமாண பிரமேயம் பகவத் ஸ்வரூபாதிகள் என்று இராமையும்(எல்லா வேதங்களிலாயே நான் சொல்லப் படுகிறேன்-அஹமேவ -நான் மட்டுமே சொல்லப்படுகின்றேன் -என்னை அறிவிக்காமல் நிற்காதே –)
லௌகிக வைதிக விபாகமற சர்வ சப்தமும் அசித் ஜீவ விசிஷ்ட பரமாத்ம வாசகம் என்னும் வ்யுத்பத்தி பிறவாமையும்(யானே நீ என்னுடைமையும் நீயே -சித் விஸிஷ்ட ப்ரஹ்மமும் -அசித் உடன் கூடிய சித் விஸிஷ்ட ப்ரஹ்மமும் நீயே-இதம் சரீரம் -க்ஷேத்ரம் -எனது விளைநிலம் என்று-அறிந்தவன் ஷேத்ரஞ்ஞன் சாபி அஹம் சப்த கோசாரன் ஜீவாத்மா இதம் சொன்னாலே அசித் -உணர்வது ஜீவன் பார்ப்பது சரீரம் -இருவரும் எனக்கு சரீரம் -ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம -தஜ்ஜலான் -தத்வ த்ரய ஸித்தாந்தம்)
சர்வ சரீரி அவன் என்று அறியாமையும்(இதம் சர்வம் ஐததாத்ம்யம் -இதம் -தத் சத்யம் -தத் த்வம் அஸி -ஸ்வேதகேது சொன்னாலே அந்தராத்மாவரை போகும்-அந்த ப்ரஹ்மமே இந்த ப்ரஹ்ம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மமே உன்னுள்ளும் இருக்கும் ப்ரஹ்மம்)
சாமாநாதி கரண்யத்தில் விசேஷண அம்சத்தை விட்டு வஸ்து மாத்ரம் கொள்ளுகையும்(நீலக்குடம் -உயரமான பருமனான ஸ்வேதகேது -விசேஷண அம்சம் விடக் கூடாதே -)
அது(சாமாநாதி கரண்யம்) அவன் ஏக (அநேக)விசேஷண விசிஷ்ட ஐகார்த்ய பரம் என்று அறியாமையும்(அவன் ஒருவனே -அநேக விசேஷண விஸிஷ்ட ஐகார்த்த -இவற்றுடன் கூடிய ப்ரஹ்மம் ஒருவனே)
நாநாத்வ நிஷேதம் அப்ரஹ்மாத்மக வஸ்து விஷயம் என்று அறியாமையும்(நேக நாநா அஸ்தி -இங்கு பலவாக இருப்பதாகப் பார்ப்பவன் மீண்டும் மீண்டும் சம்சரிக்கிறான் -அத்வைதி -தோற்றுகிறது -கானல் நீர் போல் -ஸாஸ்த்ர வாக்கியம் -சொல்ல வந்தது ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொள்ளாதே வஸ்துக்கள் கிடையாது சொல்ல வந்ததே –)
சம்ஹாரத்தில் சித் அசிந் நிஷேதம் தத் தத் அநு குண சூஷ்ம தசா பத்தி விஷயம் என்று அறியாமையும்(நாம ரூப அநர்ஹம் –அசேதனத்துக்கு நாமம் ரூபம் உண்டு -ஜீவாத்மாவுக்கு ஸ்தூல தசையில் நாமம் ரூபம் இல்லையே -கர்மாதீனமாக அனுபவிக்கும் தசை தானே ஸ்தூலம் -ஆகவே தத் தத் -அவற்றுக்குத் தக்க)
சோதக வாக்யத்தில் குண நிஷேதம் ஹேய குண விஷயம் என்று அறியாமையும்(நிஷ் கலம் இத்யாதி -ஹேய குணங்கள் இல்லை-முக் குண வசமில்லையே -சுத்த சத்வம் -அப்ராக்ருதம்)
குண விதாயக வாக்யங்களில் கண் செம்பளிக்கையும்(உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண ஏக குண கணன்-இல்லை உண்டு -இரண்டும் சொல்லலாம் -)
விக்ரஹ நிஷேதம் கர்ம நிபந்தன தேக விஷயம் என்று அறியாமையும்(-இச்சா க்ருஹீத அபிமத தேஹம்–இஷ்ட க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் -கர்ம நிபந்தம் இல்லையே -)
ச விக்ரஹத்வ பிரகாசக வாக்யங்களில் குருடனாகையும்
உபய லிங்க விசிஷ்டனாய் -விலஷண விக்ரஹ விசிஷ்டனாய்- ஸ்ரீ யபதியான -அகார வாஸ்யனே -சர்வ ஸ்மாத் பரன் என்று அறியாமையும்
அவனே சகல ஜகத் காரணம் என்று அறியாமையும்
பிரதான பரம அணுவாத கலுஷ் சித்தனாகையும்
நாராயண கார்ய பூதரான ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பரத்வ காரணத்வ சங்கையும்
த்ரிமூர்த்தி சாம்யமும்
சர்வ ரஷகனை ஒழிய வேறு ஒரு ரஷகர் என்று இருக்கையும்
ஸ்ரீ யபதியை ஒழிய சேஷ்யந்தரம் உண்டு என்று அறிகையும்
முமுஷூபாஸ்யமான பர ப்ரஹ்மத்தை அல்லது உபாஸ்யாந்தரம் உண்டு பதைக்கையும்
மோஷ பிரதானான புருஷோத்தமனை யல்லது ஸ்வ அபிமத பல ப்ரதன் இல்லை என்று அறியாமையும்
சூத்திர தேவதா பஜனம் பண்ணுகையும்
சூத்திர பல அபிலாஷி யாகையும்
அநந்த ஸ்திர பலமான மோஷ அபேஷை பிறவாமையும்
முமுஷூவாய் இருந்து வைத்து சம்சார ஜிஹாசை பிறவாமையும்
கர்ம சாத்திய பலம் அல்ப அஸ்தரம் என்று அறிந்து நிர் விஷண்ணனாய் ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாசை பிறவாமையும்
நாராயண அனுவாக சித்த நாராயண வாஸ்யனே பர ப்ரஹ்ம வாஸ்யன் என்று அறியாமையும்(அத அத ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –கர்மங்களைப் பண்ணி -அதனாலே அல்ப அஸ்திர பலன்களையே பெறமுடியும் என்றும் அறிந்து ப்ரஹ்மம் பற்றி அறிய ஆசை பிறந்து உத்தர மீமாம்ஸா ஆராய வருகிறான்)
கர்ம பாகம் அவனுடைய ஆஜ்ஞ்ஞா விநாயகம் என்று அறியாமையும்
ப்ரஹ்ம பாகம் அவனுடைய ஸ்வரூப ரூப குண விபவாதி ஜ்ஞாபகமாய்க் கொண்டு தத் ப்ராப்தி விஷய பிரகாசகமாய்த் தலைக் கட்டும் என்று அறியாமையும்
தத் ப்ராப்தி ரூப புருஷார்த்தம் -ப்ராப்தி பலமான கைங்கர்ய பர்யந்தம் என்று அறியாமையும்
சமாரஸ்யமே சாம்யா பத்தி என்று அறியாமையும்(கல்யாண குணங்களை சேர்ந்து அனுபவித்து -ஸஹ ஸ்ருதி -சா தர்ம்ய ஸ்ருதி -சாம்ய ஸ்ருதி -ரஸம் இருவருக்கும் -ஆனந்தத்தில் சாம்யம் -அபஹத பாப்மத்வாதிகள்)
ஸ்வரூப ஐக்ய ப்ரமம் அனுவர்த்திக்கையும்(ஆதிப் பரனுடன் ஒன்றாம் , என்னும் அல்லால் எல்லாம் ஒழித்தான் ராமானுஜன்-கூடிற்றால் நல்லுறைப்பு -அவன் ஸ்வாமி-நாம் சேஷிகள் உணர வேண்டுமே)
முக்தியில் கைங்கர்யார்த்தமான அநேக விக்ரஹ பரிக்ரகம் உண்டு என்று அறியாதே அசரீரத்வ ப்ரமம் அனுவர்த்திக்கையும்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நித்ய விபூதியை ப்ராபிக்கை முக்தி என்று அறியாதே ஜீவன் முக்தி ப்ரமம் நடக்கையும்
கர்மம் இங்கே நசித்து இருக்கவும் பகவத் சங்கல்ப சக்தியாலே தத் கார்யமான ஸூஷ்ம சரீரம் விரஜா ஜல ஸ்பர்சத்தளவும் வரும் என்று அறியாமல் சங்கிக்கையும்
சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் ப்ராப்தி சாதனம் வேண்டாத விஹித பக்தி இத்தனை என்று இருக்கையும்
தத் சாதனம் பிரபத்தியே என்று அறியாமையும்(பக்தியே ஸ்வயம் பிரயோஜனம் -அதுக்கு சாதனம் அவனே)
பிரபத்தி சப்த வாச்யன் பிரபத்தவ்யனான எம்பெருமான் தானே சிஷியாமையும்
அதிகாரி விசேஷணமான சரண வரணத்திலே உபாய புத்தி நடக்கையும்
புருஷகாரத்தை முன்னிடாமல் சரணம் புகுருகையும்
ஆச்சார்ய மாத்ரத்தில் புருஷகாரத்வ மாத்திர பிரதிபத்தியும்
ஸ்வ தந்திர உபாய பிரதிபத்தி பிறவாமையும்
உபாய உபேய த்வித்தவ பிரதிபத்தியும்
பகவானுடைய ஜகச் சரீரத் வாதிகளை இசையாத மதாந்த்ரஸ்தரை விரும்புகையும்(துவைதிகள் -சரீராத்மா பாவம் இசையாமல் ஸ்வாமி தாஸ்ய பாவமே உண்டு என்பர்) –என்கை-
72-தத்வ விரோதி
தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஶ்லோகம் 4 –
ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்-இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,–இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,-ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான-ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்
போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூப தத்வம் அல்லது வேறு தத்வம் இல்லை என்று அறியாமையும்-கோடி த்ரய அதீனனான உதாசீனன் என்றும் ஒருவன் உண்டு இருக்கையும்-
வைசேஷிகன் சொல்லுகிற த்ரவ்யாதிகள் ஆறு தத்வங்கள் என்று கலங்குகையும்
நையாயிகன் சொல்லும் பிரமாணாதிகள் பதினாறு தத்வம் என்று கலங்குகையும்
சாங்க்யன் சொல்லுகிற மூல பிரகிருதி முதலான இருபத்தஞ்சு தத்வம் என்று கலங்குகையும்
பதஞ்சலி சொல்லுகிற இருப்பத்தாறு தத்வம் என்று கலங்குகையும்(யோக மார்க்கம் -ப்ரஹ்மம் நிமித்த மாத்திரமே-உபாதானம் இல்லை என்பர்)
பாசுபதன் சொல்லுகிற முப்பத்தாறு தத்வம் என்று கலங்குகையும்(சிவ சக்தி ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சதா சம்ஹாரம் ஈஸ்வர திரோதானம் -இத்யாதி ஐந்து சுத்த தத்வம் என்பர் அசுத்த 24-சுத்த அசுத்த ஏழும் –)
சார்வாகன் சொல்லுகிற ப்ருதிவ்யாதி பூதமே தத்வம் என்று கலங்குகையும்
பௌத்தன் சொல்லுகிற பஞ்ச ஸ்கந்தாதிகள் தத்வம் என்று கலங்குகையும்-ஜைனர் சொல்லுகிற தர்ம அதர்மாதிகள் தத்வம் என்றும் கலங்குகையும்-மாயாவாதி சொல்லுகிற நிர்விசேஷ சின் மாத்திரமே தத்வம் என்று கலங்குகையும்-
பாட்டப் பிரபாகரர்கள் போலே ஆத்மாக்களை ஒழிய ஈஸ்வர சத்பாவம் இல்லை என்று கலங்குகையும்
குண த்ரய சாம்ய அவஸ்தையில் மூல பிரகிருதி என்று கலங்குகையும்
அஹங்கார கார்யமான இந்த்ரியங்களை பூத கார்யம் (நையாயிகர் போல்)என்று கலங்குகையும்
கர்மேந்த்ரியம் இல்லை என்று கலங்குகையும்(மீமாம்ஸகர் ஞான இந்திரியங்கள் இல்லை என்பர் )
மனஸ்ஸூ அனுத்பந்தம் நித்யம் என்று கலங்குகையும்-தன் மாத்திரைகள் ஒழிய பூதங்கள் இல்லை என்று கலங்குகையும்-
அவை தான் இந்த்ரிய பேதத்தாலே தூரம் என்று கலங்குகையும்
தன் மாத்ரைகள் ஐந்தும் பூதாதி ஒன்றின் (தாமஸ அஹங்காரத்தின்)நின்றும் பிறக்கும் என்று கலங்குகையும்
பூதாதியின் நின்றும் சப்த தன்மாத்ரையும் ஆகாசமும் பிறக்கும்
சப்த தன்மாத்ரையின் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரையும் வாயுவும் பிறக்கும் என்றும்
இப்படி பூர்வ பூர்வ தன் மாத்ரைகளில் நின்றும் உத்தர உத்தர தன் மாத்ரமும் தத் விசேஷமும் பிறக்கும் என்று கலங்குகையும்
பூதாதி யின் நின்றும் (சப்த தன்மாத்திரை பிறந்து சப்த தன் மாத்ரையில் இருந்து) ஆகாசம் பிறக்கும் -அவ் வாகாசத்தில் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரை பிறக்கும்
அந்த ஸ்பர்ச தன் மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
என்று இப்படி சப்த தன் மாத்ரை ஒழிந்த (எல்லா)தன் மாத்ரைகளும் -பூமி ஒழிந்த(நான்கு) பூதங்களுக்கும் பூத கார்யத்வ தன் மாத்ரா காரணத்வம் உண்டு என்று கலங்குகையும்
தன் மாத்ரா க்ரமத்தை அநாதரித்து பூதாத் பூதாந்தர உத்பத்தி உண்டு என்று கலங்குகையும்
இந்த ஸ்ரௌத மதத்திலும் பூத வாசக சப்தம் தன் மாத்ரா லஷண ஆகாசாதி பூதங்களை விவஷிக்கிறது என்கிற ஹிருதயம் அறியாமையும்
பூர்வ பூர்வ தன் மாத்ரைகளில் நின்றும் தத் விசேஷங்களும் உத்தர உத்தர தன் மாத்ரைகளும் பிறக்கும் என்கிற சிருஷ்டி க்ரமமும் பிரமாண சித்தம் சிஷ்ட பரிக்ருஹீதம் என்று அறியாமையும்
ஆவரண அபாவம் ஆகாசம் என்றும் (நையாயிகன் போல்)நித்யம் நிரவயவம் விபு என்று கலங்குகையும்
திக்கு என்று தனியே ஒரு த்ரவ்யம் என்று கலங்குகையும்
காலத்தை இல்லை என்று கலங்குகையும்
வாயு அப்ரத்யஷம் என்று கலங்குகையும்
அண்டத்துக்கு உள்ளும் புறம்பும் உண்டான பிரகிருதி பரிணாமம் ஒரு சேதன(பரமாத்மாவின்) சங்கல்பாதீனம் என்று அறியாமையும்(அண்டத்துக்கு உள்ளே -நான்முகன் -குயவன் போல்வார் -சேதனன் -மூலம் பரிணாமம் -புறம்பே -மஹத் -அகங்காரம் போல்வன -பரம சேதனனுடைய ஸங்கல்பம் அடியாகவே –)
ஜகத் பரிணாமம் அத்வாரக பகவத் சங்கல்பாதீனம் என்று அறியாமையும்(ஏஷ -ஆத்மா -பரமாத்மாவையை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்மாக்கள் -ஐததாத்மா)
சகல வஸ்துக்களையும் பகவதாத்மகம் என்று அறியாமையும்
பகவதாத்மகத்வாத் சமஸ்த பதார்த்தங்களும் அனுகூலம் என்று அறியாமையும்
பிரதி கூலங்களாகத் தோற்றுகை தேஹாத்மா ப்ரமம் என்று அறியாமையும்(அனைவரும் அவனுக்கு சரீரம் -ஆகவே அவனுக்கு அனுகூலம் -ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் அனுகூலம் -சரீர பாகம் ஓன்று மற்ற ஒன்றுக்கு அனுகூலம் தானே -நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -)
நித்ய விபூதி நித்ய ப்ரஹ்ம நித்ய இச்சையால் நித்யம் என்று அறியாமையும்
அப்ராக்ருத அசித் பரிணாமம் கேவல பகவத் இச்சா சித்தம் என்று அறியாமையும்
திவ்ய பூத பஞ்சகங்களுக்கு இல்லாத ஸூஷ்ம ஸ்தூல அவஸ்தா சங்கல்பங்களையும்
அங்கு தன் மாத்ரம் உண்டு என்கிற ப்ரமம் சாந்தத்வ கோரத்வாதி ராஹித்ய மாத்ரம் அத்தனை என்று அறியாமையும்(குணங்கள் தன் மாத்ரையில் வெளிப்படையாகத் தெரியாமல் அநுத்பூதமாக-சாந்தமாக — இருக்கும் அங்கு-இங்கு இப்படி இரண்டு நிலைகள் இல்லையே)
பஞ்சக சக்தி மயத்வமே அப்ராக்ருத பகவத் விக்ரஹ உபாதானம் (பரம சுடர் உடம்பாய் அங்கு -அழுக்கு பதிந்த உடம்பு இங்கு-பஞ்ச-சக்தி: பரமேஷ்டி, புருஷா, விஷ்வ, நிவ்ருத்தி மற்றும் சர்வ)என்று அறியாமையும்
பிரகாசகத்வ குணங்களைப் பற்ற ஷாட் குண்ய விக்ரஹம் என்கிறதுக்கு கருத்து அறியாமையும்(ஞான பல ஐஸ்வர்ய தேஜஸ் சக்தி வீர்யம் -ஸ்வரூப குணங்கள் -இவற்றை ஷாட் குண்ய -திவ்ய மங்கள விக்ரஹம் -விசேஷ க்ரஹணம் -விக்ரஹம் இங்கு -பிரகாசபடுத்த இவ்வாறு குணங்களும் வேண்டுமே –)
ஜாதி ஒன்றாகிலும் நித்ய ஸூரி விக்ரஹத்தை பற்ற தேஜஸ்ஸாலே வேறு பட்டு இருக்கும் அசாதாராண விக்ரஹம் என்று அறியாமையும்
அவதார விக்ரஹங்களும் அப்ராக்ருதங்களாய் இருக்க சைவாதி ப்ராக்ருத ஆகார தர்சனம் ஸ்வாகாரவிதானம் பண்ணுகிற பகவத் இச்சா காரியம் என்று அறியாமல் ப்ராக்ருத்வ சங்கை நடக்கையும்(சோதி வெள்ளத்து எழுவதோர் உரு–சகல மனுஷ நயன விஷயாதாங் கத-ஆகத -ஆக்கிக்கொண்டு -காட்டவே காண்கிறோம்-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய்)
சிதசித்துக்கள் அடங்க பகவச் சரீரம் என்று அறியாமையும்
அதில் பகவச் சரீரமான ஆத்மாவை தேக இந்த்ரியாதிகள் என்று பிரமிக்கையும்
ஆத்மாவை ஜ்ஞான மாத்ரம் என்று பிரமிக்கையும்
சைதன்யம் ஆகந்துகம் என்று பிரமிக்கையும்
பரதந்திர ஸ்வரூபத்தை ஸ்வ தந்த்ரம் என்று பிரமிக்கையும்
பகவச் சேஷமான ஸ்வரூபத்தை அந்ய சேஷம் என்று பிரமிக்கையும்
மிதுன சேஷம் என்று அறியாமையும்(திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -)
ததீய சேஷம் என்று உணராமையும்
சர்வ சரீரியான சர்வ சேஷி சர்வேஸ்வரன் என்று அறியாமையும்(யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மான தாரயிதும் நியந்தும்-சர்வ சரீரியாக இருப்பதால் சர்வ சேஷீ -ஸர்வேஸ்வரேஸ்வரன்)
அவனுக்கு ஸ்வா தந்த்ர்யமே ஸ்வரூபம் என்று இராமையும்
அத்தாலே பலித்தது ஆஸ்ரித பாரதந்த்ர்யம் என்று அறியாமையும்(அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -)
அது நித்யம் என்று அறியாமையும்
அதுக்கடி பிரணயித்வம் என்று அறியாமையும்
இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
அதுக்கடி கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்று இவர்களுக்கு ஜனனியான பிராட்டி பக்கல் பண்ணின ப்ரணய பரிணதி என்று அறியாமையும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப
கோல வராகமொன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!
நீலக்கடல் கடைந்தாய்! உன்னைப்பெற்று. இனிப்போக்குவனோ?”
அவள் அவனுக்கு அபிமதையாய் -அனுரூபையுமாய் -நிரூபகையுமாய் -நித்ய அனபாயிநியுமாய் -சேஷ பூதையுமான -மஹிஷியான ஜகன் மாதா என்று அறியாமையும்
(ஆத்ம)ஜாதி ஒன்றாகிலும் த்ரிவித ஆத்ம வ்யாவ்ருத்தை என்று அறியாமையும்(நித்யர்களிலும் வேறுபட்ட விசேஷ-விஷ்ணு பத்னீ)
இரண்டு ஆஸ்ரயத்தில் நில்லாத சர்வ ஈஸ்வரித்வம் இவளுக்கு உண்டு என்கையும்(ஸர்வேஸ்வரத்வம் இரண்டு இடத்தில் இருக்க முடியாதே)
ஸ்ரீ ஸ்ரீசர்களுக்கு விக்ரஹ பேதம் ஒழிய ஸ்வரூப பேதம் இல்லை என்கையும்
பகவத் ஸ்வரூபம் உபய ஆகாரமுமாய் இருக்கும் என்கையும்-பகவத் ஸ்வரூபம் ஒழிய லஷ்மீ ஸ்வரூபம் தான் இல்லை என்கையும்
ஜ்ஞான குணகையான இவளை ஜ்ஞான சக்த்யாதி குண கோடியில் என்கையும்(ஆத்மா ஞானமயம்-ஞானம் உடையதாய் இருக்கும் -இங்கு ஆத்மா த்ரவ்யம் – -குணத்துக்கு குணம் இருக்காதே -ஞானத்துக்கு ஞானம் இருக்காதே -)
இவள் நிரூபகமான அஹந்தையாய் அவன் நிரூப்யமான அஹமர்த்தமாய் இருக்கும் என்று அறியாமையும்(அஹந்தை -தானான தன்மை பிராட்டிக்கு இருக்கும் -அஹமாய் அவன் இருப்பான்)
இவள் அணு ஸ்வரூபையாய் இருந்தும் -ஒரு சக்தி விசேஷத்தாலே (யதா சர்வகதா விஷ்ணு இத்யாதி -விஷ்ணு புராணம் –பத்னியத்வத்தால் பகவத் ஸங்கல்பத்தால்)பரம மஹத் பரிமாண விபு ஸ்வரூபத்தை தழுவிக் கொண்டு இருக்கும் என்று அறியாமையும்
ரசம் திருப் பாற்கடல் எங்கும் உண்டானாப் போலே பகவத் ஸ்வரூபாதிகள் எங்கும் உடன் இருக்கும் என்று அறியாமையும்(மீனுக்கு உடம்பெல்லாம் தண்ணீரைப் போலே -உப்புக்கட்டி முழுவதும் உப்பாய் இருக்குமா போலே- இவள் அவன் உடன் எங்கும் எவ்விடத்தும் எப்பொழுதும் பிரியாமல் இருப்பவள் அன்றோ)
இப்படி எங்கும் எப்போதும் உடன் இருக்கிறது தேச கால நிரபேஷமாக சேதனருக்கு புருஷீ கரிக்கைக்கு என்று அறியாமையும்
இப்படி இருக்கிற இவளை யிட்டு ஸ்ரீ யபதி என்றே பகவத் ஸ்வரூபத்தை நிஷ்கரிக்க வேணும் என்று அறியாமையும்
பகவத் ஸ்வரூபம் உணர் முழு நல ஜ்ஞான ஆநந்தைக ஸ்வரூபமாய்
ஹேய பிரதிபடமாய்
சமஸ்த கல்யாண குணாத்மகமாய்
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்
ஸ்வரூபதோ குண தச்ச விபுவாய்
அவாப்த சமஸ்த காமத்வாத் நிரபேஷமாய் இருந்தும் அகில ஜகதுதய விபவ லய ஹேதுவாய் லீலா ரசம் அனுபவித்தும்(இன்புறும் இவ் விளையாட்டு யுடையவன் –வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்)
நித்ய விபூதியிலே திருமா மணி மண்டபத்திலே -திவ்ய சிம்ஹாசனத்திலே -திரு வனந்த ஆழ்வான் மேலே ஸ்படிக கிரி தடத்திலே மின் கொடிக்களுடன் காள மேகம் படிந்தால் போலே சியாமள கோமள விக்ரஹ பிரகாசகைகளான நாச்சிமார் உடன்
ஏழுலகும் தனிக் கோல் செல்ல வீற்று இருந்து அயர்வறும் அமரர்களுடன் அபரிமித போக ரசத்தை அனுபவித்து உபாசக அனுக்ரஹார்த்தமாக வாசுதேவாத் யாகாரேண வ்யூஹித்து
ஒரு படுக்கையிலே உறங்குகிற சம்சாரியை உணர்த்தி ஒரு நீராகக் கலந்து அனுபவித்து கட்டிலிலே வாங்க ஆசைப்பட்டு
தத் தத் சஜாதீய வேஷம் கொண்டு நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்த் விபவத்தைக் காட்டியும்
ஒருவரும் எட்டுப் படாமையால் விஷய ப்ராவண்யம் மிக்கு இனிக்களவிலே பிடித்துக் கொள்வோம் என்று
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே.
பிறர்க்கும் காண ஒண்ணாத படி கரந்த சிலிடம் தொறும்
இடம் திகழ் பொருள் தொறும் கரந்து கட்கிலியாயும் ஒரு விஷயம் லபியாமல் முசித்து
வேட்க- ஆற்றாமை மிக்கு- மூச்சு விடுதல் செய்ய மாட்டாதே- ஆராமங்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாய்
நின்றது எந்தை ஊரகத்து* இருந்தது எந்தை பாடகத்து,*
அன்று வெஃகணைக் கிடந்தது* என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்* பிறந்த பின் மறந்திலேன்,*
நின்றதும் இருந்ததும்* கிடந்ததும் என் நெஞ்சுளே.
ஆள் பார்த்து அலமாக்கும்படி விஷய சபலனாய் கிடப்பது ஒரு பரத்வம் என்று அறியாமையும்
பரத்வம் நித்ய போகமாய் இருக்கும் அத்தனை -அவதாரம் பத்த முக்த நித்ய விபாகம் அற சர்வ ஜன போக்யம் என்று அறியாமையும்
முக்ய அவதாரங்களில் தத் சஜாதீயத்வ புத்தியும்
கௌண அவதாரத்தில் பூஜ்யத்வ புத்தியும்
அர்ச்சாவதாரத்தில் அசக்தத்வ புத்தியும்
பரம குருவான ஆச்சார்ய அவதாரத்தில் அபூர்ணத்வ புத்தியும்
பரத்வத்தில் அவதாரம் அதிகம் என்று அறியாமையும்
சரம அவதாரமான ஆச்சார்ய விக்ரஹத்தில் அப்ராக்ருத்வ புத்தி நடவாமையும் –என்கை-
(ஆத்மா இயற்கையாகவே ஞான ஆனந்த மயமாக இருப்பதால் கர்ம நிபந்தனமாக விரோதிகள் அழுக்குகள் போக -தானே ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படும் -உண்மையான ஞானம் வர தானே பரிஹரிக்கும் -மேல் பரிஹரிக்க இந்த பலன்கள் கிட்டும் என்று நிகமித்து அருளுகிறார்)
73-பும்ஸ்த்வ விரோதி –
(ஸ்த்ரீத்வம் -பர தந்த்ர அர்ஹதை -மனு பகவான் -பெண் வேஷம் -இயற்கையில் ஸ்வ தந்த்ரம் இல்லாததால் ஸ்த்ரீத்வ விரோதி கிடையாது -ஆண் உடை உடுத்த பெண் -புருஷன் என்று நினைப்பது விரோதி தானே -)
பறவை ஏறும் பரம புருடனான புருஷோத்தமன் ஆனவனை ஒழிய ஸ்திரீ ப்ராயரான தன்னை புருஷன் என்று நினைக்கையும்
புருஷ சரீர பூதர் ஆகையாலே புருஷர் எனப்படும் ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் பும்ஸ்த்வ புத்தி நடக்கையும்
அவனுடைய பும்ஸ்த்வ பிரதியோகியான ஸ்த்ரீத்வமே தனக்கு ஸ்வதஸ் சித்த வேஷம் என்று அறியாமையும்
தோல் சட்டையான புருஷ வேஷ பரிகிரஹம் ஆகந்துகம் அநித்யம் என்று அறியாமையும்(மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்று-ஸ்வதஸ் ஸித்தம் -கடி மா மலர்ப் பாவையோடு உண்டான சாம்ய ஷட்கம்)
தான் அநாதி காலமே பிடித்து மாறி மாறி பரிக்ரஹித்த ஸ்திரீ புருஷ வேஷம் இரண்டும்(ஆத்மாவுக்கு) நிலை நின்ற வேஷம் இல்லை என்று அறியாமையும்
பகவத் பாரதந்த்ர்ய ரூபத்வமே நிலை நின்ற ஸ்வரூப ப்ராப்த வேஷம் என்று அறியாமையும்
இந்த பாரதந்திர ஜ்ஞானம் பிறந்து ஸ்வா தந்த்ர்ய ரூப பும்ஸ்த்வ பிராந்தி அனுவர்த்திக்கையும்
இப்படி பர ஸ்திரீயான தனக்கு ஸ்வ ஸ்திரீ தேடி உழலுகையும்
எல்லாரும் பர ஸ்திரீ என்னும் ஜ்ஞானம் பிறவாமையும்(ராஸக்ரீடை -அவன் ஒருவனே புருஷோத்தமன் -மற்ற அனைவரும் ஸ்த்ரீ பிராயர் -அவன் அவர்களுக்கு அந்தராத்மாவாக இருந்து சத்தையும் நியமனத்தையும் பண்ணி அருளுகிறான் அன்றோ -)
தானும் தத் ததீய கைங்கர்ய அர்த்தமாக பரிக்ரஹித்த அவளும் ஸ்ரீ யபதியான பரம சேஷிக்கு பெண் அடிமை என்று இராமையும்
தன்னை ஆண் அடிமை என்று இருக்கையும்
இந்த ஜ்ஞானம் பிறந்த பின் ஸ்திரீ போலே சஹ சயியாமையும் பும்ஸ்த்வ அபிமான பிரமராகம் அனுவர்த்திக்கையும்
ஆண்களாய் இருக்க பெண்களாக பாவித்து பகவத் விக்ரஹத்தை காங்ஷித்து ராகாந்தராய் துடித்த ஆழ்வார்கள்
பாசுரங்களை ஓதியும் கேட்டும் புனர் பவ பிரமம் விடாதே
இதர விஷயங்களிலே ஹேய சரீரங்களை உகந்து ராகாந்தராய்த் துடிக்கையும்(அத்தாலே இவன் அஸ்த்ரைணன் என்றும் ஸிஷ்ட கர்ஹிதனாகையும்)
ஆஸ்திக நாஸ்திகன் என்று ஆச்சார்யன் கை விடும் படியாய் விடுகையும்
சார அசார (சேஷத்வ பாரதந்தர்யமே சாரம் -ஆண் பெண் சரீரம் பார்ப்பது அசாரம்)விவேகம் பண்ண அறியாத படி சிஷ்ட கர்ஹிதனாகையும் -என்கை –
74-அந்திம தசா விரோதி
க்ருக ஷேத்திர ப்ராவண்யம் புத்திர தாரா ப்ராவண்யம் சரீர அர்த்த ப்ராவண்யம் பின்னாடி(பின் தொடர்ந்து)
இவற்றை விட்டுப் போகிறோமே என்று கண்ண நீர் கலங்குகையும்
ஷேத்ராணி மித்ராணி என்கிறபடியே அவை பிரதிகூலத்வேன திருஷ்டி விஷயமாய்த் தோற்றாமையும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-(மா கம் -பரமாகாசம்)என்கிற ப்ராப்ய பூமியில் ப்ராவண்யம் அற்று இருக்கையும்
கொடு உலகம் காட்டலே என்று த்யாஜ்ய பூமி காண வெருவாமையும்
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே என்று சரீர விஸ்லேஷ காலம் எப்போது லபிக்கும் என்று மநோ ரதம் அற்று இருக்கையும்
உன்னை எந்நாள் வந்து கூடுவன் -என்கிற பரம பதத்தில் இருப்பைக் கண்டு அல்லது தரியாத (பகவத்)பரத்வ ப்ராவண்யம் பரிபக்வம் ஆகாமையும்
மருள் ஒழி நீ -என்கிற அர்ச்சாவதார ப்ராவண்யம் அனுவர்த்திக்கையும்
தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
அந்திம தசையாய் இருந்து இப்போது எனக்குத் தஞ்சமேது என்று தளும்புகையும்
தஞ்சம் என்கிற நினைவு குலைகையே தஞ்சம் என்று அறியாமையும்
காஷ்ட பாஷாண சந்நிபம் -என்று அத் தசையில் சைதன்யம் அற்று இராமையும்
அவஸ்ய அபேஷித தாதாத்விக ஸ்ம்ருதி சித்த சாதன நிஷ்டா ஹானியைப் பிறப்பிக்கும் என்று அறியாமையும்
பகவத் உன்மிஷிதையான அவர்ஜ நீய ஸ்ம்ருதி ப்ராப்யாந்தர்கதை என்று அறியாமையும்
அப்போது ஆச்சார்ய நாம உச்சாரணம் அவசியம் வேணும் என்று இருக்கையும்
பூர்வ வாசனா கார்யமாய் வந்த ஆச்சார்ய நாம உச்சாரணம் தத் பிரயாண பாதேயமாய்க் கொண்டு தாரகமாம் இத்தனை என்று அறியாமையும்
அப்போது பூர்வ வாசனா கார்யமாய் வந்த ஆச்சார்ய பதாம் போருஹ த்யானத்தில் சாதனத்வ புத்தி நடக்கையும்
பரம ஆப்தனான அவனே மார்க்க பந்து என்று அறியாமையும்
அவித்யாதி விரோதி நிவ்ருத்தியிலும் அர்ச்சிராதி கதி ப்ராப்தியான இஷ்ட ப்ராப்தியிலும் ஸ்வ பலித்வ புத்தி நடக்கையும்
விரோதி நிவர்தகனுமாய் இஷ்ட ப்ராபகனுமான ரஷகனான சேஷிக்கே தத் பலித்வம் உள்ளது என்று அறியாமையும்(ப்ராப்தாவும் ப்ராபகனும் பேற்றுக்கு உகப்பானும் அவனே என்ற எண்ணம் வேண்டுமே-நாம் அவன் அனுபவிக்கும் போக்யமான பொருள் என்ற எண்ணம் வேண்டுமே -)
இஷ்ட அநிஷ்டங்களில் மதீயத்வ புத்தி நடக்கையும்
அது (மதீயம்)அஹம் அர்த்த அபிமானியான பரம சேஷியது (யானே நீ என்னுடைமையும் நீயே)என்று அறியாமையும்
ஜ்ஞான பிரதனான நித்ய சேஷியே மோஷ ப்ரதன் என்ற துணிவு அற்று இருக்கையும் -என்கை-
75-அவிஸ்வாச விரோதி
விஸ்வசிக்கக் கூடாததான சம்சாரிகள் இடத்திலும்
தேவதாந்த்ரங்கள் இடத்திலும்
சாமான்ய சாஸ்திரங்கள் இடத்திலும் விஸ்வசிக்கை -என்கை-
(தன்னால் வரும் நன்மை விலைப் பால் போல் -அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே -என் நான் செய்கேன் –களை கண் மற்றிலேன் -)
76-சங்கதி விரோதி –
பகவஜ் ஜ்ஞானம் பிறந்தவன் மதாந்தரஸ்தர்களான
சைவாதிகளோடு உறவு பண்ணுகை-என்கை –
77-சந்தான விரோதி –
தனக்குப் பிறந்து இருந்து
பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் தூஷகனான தன் புத்ரனைத் த்யாஜியாமல் இருக்கை
ஸ்ரீ வராஹ புராண வசனம் -மாஜ நிஷ்ட ச நோ வம்சே ஜாதோவா த்ராக் விஸ்ருஜ்யதாம்
ஆஜன்ம மரணம் யஸ்ய வாஸூ தேவோ ந தைவதம் –
78-வர்ண விரோதி
ஸ்வ ஸ்வ வர்ணங்களுக்கு அனுசிதங்களான க்ருத்யங்களைச் செய்கை -என்கை -(நமக்கு என்று விதித்த தர்மங்களைப் பற்று அற்று கைங்கர்ய ரூபமாகச் செய்வதே கர்ம யோகம்)
79- ஜப விரோதி –
மூல மந்த்ராதிகளை ஜெபிக்கும் இடத்தில்
தத்தத் மந்திர தேவதா ரூப த்யாநத்தை விட்டு
விஷயாந்தர தேவதாந்தரங்களை நினைக்கை -என்கை-
திருமந்திரம் -நாராயணன் -விஷ்ணு -வாஸூ தேவ-மூன்றும் மூன்று வியாபக மந்த்ரங்களை ஜெபிக்கும் இடத்தில் த்யானிக்க வேண்டும் அன்றோ
80-ஆராதன விரோதி
ஸ்வயம் பிரயோஜனமான பகவத் ஆராதனத்தில் பலாந்த்ர ஆகாங்ஷையும்
ஜாதி யாஸ்ரய நிமித்த துஷ்ட வஸ்து நிவேதனம் பண்ணுகையும்
சாஸ்திர நிஷித்த மத்ய (கள்)மாம்சம் முதலானதுகளை நிவேதனம் பண்ணுகையும் –என்கை-
81-பதித்வ விரோதி –
பதிம் விஸ்வஸ்ய என்று ஒதப்படுகிற பகவான் உடைய பதித்வத்துக்கு விரோதியான
பிரஜாபதி பசுபதி ப்ருஹஸ்பதி ஸூரபதி தனபதி சேனாபதி கணபதிகள் உடைய பதித்வத்தை நினைக்கையும் -என்கை -(பரன் திறமன்றி பல்லுலகில் தேவர் மற்றில்லையே-பதித்தவம் பலான ஸாமர்த்யம்)
82-வர்ஜநீய (விடத் தக்க)விரோதி
சாஸ்திரங்களிலே நிஷித்தங்களான தாமச ஆகாரங்களான மத்ய மாம்சாதி போஜனம் செய்கையும்
சாத்விக ஆகாரங்களையும் சாத்விக சாஸ்திரங்களையும் சாத்விக அனுஷ்டானங்களையும் த்யஜிக்கையும் -என்கை
83-அவர்ஜ நீய (விடக் கூடாத)விரோதி
முமுஷூ தசையில் அப்ராப்த புத்தி மறந்தும் பின்னாட்டும் அர்த்த காம த்ருஷ்ணையும்
அதடியான பாகவத அபசாரமும்
பிராக்ருத வஸ்துக்களில் போக்யத்வ பிரமமும்
முக்த தசையில் பகவத் ப்ராப்தியில் உகப்பு தன்னதாகையும்
அதுக்கடியான போக்த்ருத்வ புத்தி நடக்கையும்
அதடியாக பரைக போக்யத்வ புத்தி குலைகையும்
அத் தசையில் அத்மி என்று போக்த்ருத்வம் உண்டாய் இருக்க அது பர ப்ரேரிதமாய் பர ப்ரீதி வர்த்தகமுமான பரம போக்யமாம்படி அவன் விநியோகிக்கையாலே விரோதி அல்லவாய் விட்டது
சாப்பிடுகிறவன் -அஹம் அன்ன அஹம் அன்ன அஹம் அன்ன அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -மற்றை நம் காமங்கள் மாற்று –அவன் ஆனந்தம் உகப்பைக் கண்டு உகக்க வேண்டுமே -அப்பொழுது தான் போக்யமாய் இருந்த நாம் பரம போக்யமாவோம்-
அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் -திரு விருத்தம் -33-என்று
அத் தசையிலும் ஸ்வாதீன ஸ்வார்த்த பிரதிபத்தி ரூப விரோதி புகுராதபடி படிந்ததும் பரமனுடைய நித்ய சங்கல்பம் இறே
அன்றிக்கே
அவர்ஜ நீய விரோதியாவது
இங்கோடு அங்கோடு வாசியற ஆச்சார்ய கைங்கர்ய விரோதியான பகவத் சௌந்தர்யம் ஆகவுமாம்
அத்தை சாத்மிப்பித்து இறே அவனும் கைங்கர்யம் கொள்ளுவது
ஜன்மாந்தரீய கர்மங்களாலே உத்பன்னங்களாக நிஷித்த ஆசரணங்களும்- என்கை –
(அநக -ராம பக்தியாகிய குற்றம் இல்லாத சத்ருக்ந ஆழ்வான்-)
—————————————————————————————————————————————–
விரோதிகள் பரிஹரிக்கப் பட்டால் உண்டாகக் கூடிய பலன்களை க்ரமேண அருளிச் செய்கிறார் –
1-சம்சார சங்கம் அறவே ஸ்வர்க்கம் லபிக்கும்
2- ஐஹிக போகத்தில் நசை அறவே ஸ்வர்க்க இச்சை பிறக்கும்
3- ஸ்வர்க்க அனுபவ இச்சை அறவே ஆத்ம ப்ராப்தி உண்டாம்
4-ஸ்வர்க்கத்தில் த்யாஜ்ய ஜ்ஞானம் பிறக்கவே ஆத்ம அனுபவம் உண்டாம்
5-ஆத்ம அனுபவத்தில் த்யாஜ்ய ஜ்ஞானம் பிறக்கவே பகவத் அனுபவம் சித்திக்கும்
6-ஸ்வ அனுபவத்தில் ஆசை அறவே பர அனுபவ ப்ரேமம் விளையும்
7-திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் நெஞ்சு நீங்கவே குண அனுபவ நிஷ்டை வர்த்திக்கும்
8-பகவத் சௌந்தர்யத்தில் கண்ணை மாற வைத்தால் கைங்கர்யம் வர்த்திக்கும்
9-பகவத் கைங்கர்யத்தில் ருசி அறவே பாகவத கைங்கர்யம் வர்த்திக்கும்
10-கர்ம ஜ்ஞான பக்த்யாதிகளிலே உபாயத்வ ப்ரமம் வாங்கினால் ஈஸ்வரனே உபாயம் என்கிற அத்யாவசாயம் பிறக்கும்-
11-துஷ்கரத்வ க்ருதி சாத்யத்வ விளம்ப்ய பல ப்ரதத்வ ஹேதுக்களைத் தெரிந்து உபாயாந்தரங்கள் த்யாஜ்யம் என்று விடவே பிரபத் யுபாய நிஷ்டை சித்திக்கும்
12-அக்நி இந்த்ராதி தேவதாந்தர உத்தேச்யத்வேன செய்யும் கிரிசைகளில் நசை அறவே பகவத் விஷய கர்ம நிஷ்டை பிறக்கும்
13-தேவதாந்திர சேவா த்யாஜ்யத்வ ஜ்ஞானம் பிறக்கவே ஸ்வரூப ப்ராப்த பகவத் கைங்கர்ய நிஷ்டை ஜனிக்கும்
14-தான் பண்ணும் பிரபத்தியில் உபாய புத்தி அறவே ஈஸ்வரன் இடத்தில் உபாய புத்தி பிறக்கும்
15 -சாஸ்திர சித்தி அனுஷ்டானத்தில் ப்ரவ்ருத்தி உண்டாகவே சாதநாந்தரம் கை கூடும்
16-ஸ்வ உஜ்ஜீவன விஷயக ஸ்வ ப்ரவ்ருத்தி சாமான்யம் அறவே சித்த உபாயம் லபிக்கும்
17-உபாய விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஏக உபாயத்வம் நிலை நிற்கும்
18-உபேய விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஏக உபேயத்வம் நிலை நிற்கும்
19-உபேயத்ரி விரோதியை பரிஹரிக்கவே அநந்த ஸ்திரத்வ பரம போக்யத்வ ரூபமான உபேய ஆகார த்ரய பிரகாசம் நிலை நிற்கும்
20-முக்ய ப்ரமாண விரோதியைப் பரிஹரிக்கவே ப்ரமாணிகத்வம் நிலை நிற்கும்-
21-யாவதாத்ம விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம ஸ்வபாவம் நிலை நிற்கும்
22-நித்ய விரோதியைப் பரிஹரிக்கவே இதர விஷய விரக்தி நிலை நிற்கும்
23-அநித்ய விரோதியைப் பரிஹரிக்கவே நித்ய ஸூகம் நிலை நிற்கும்
24-ஸ்வரூப விரோதியை பரிஹரிக்கவே ஸ்வரூபத்தின் பகவத் போக அனுரூபம் நிலை நிற்கும்
25-பர ஸ்வரூப விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் பாரதந்த்ர்ய ஜ்ஞானம் பிறக்கும்
26-ஸ்வ அனுபவ விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்வ ரஸத்வ ராஹித்யம் நிலை நிற்கும்
27-பர அனுபவ விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்வ அதீன ப்ரவ்ருத்தி ராஹித்யம் நிலை நிற்கும்
28-சம்ஸ்லேஷ விரோதியைப் பரிஹரிக்கவே தத் பிராப்தி ஸூலபத்வம் நிலை நிற்கும்
29-விஸ்லேஷ விரோதியைப் பரிஹரிக்கவே தத் சம்ஸ்லேஷ விளம்பத்வம் நிலை நிற்கும்
30-விஷய விரோதியை பரிஹரிக்கவே இந்த்ரிய ஜெயம் நிலை நிற்கும்-
31-விசுவாச விரோதியைப் பரிஹரிக்கவே சாமத்யவசாயம் நிலை நிற்கும்
32-ப்ரவ்ருத்தி விரோதியைப் பரிஹரிக்கவே பர பிரயோஜன பிரவ்ருதித்வம் நிலை நிற்கும்
33-நிவ்ருத்தி விரோதியை பரிஹரிக்கவே தத் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி நிலை நிற்கும்
34-சயன விரோதியை பரிஹரிக்கவே ஸ்வரூபத்தில் உணர்ச்சி நிலை நிற்கும்
35-உத்தான விரோதியைப் பரிஹரிக்கவே தத் தத் ஜ்ஞானம் நிலை நிற்கும்
36-கதி விரோதியைப் பரிஹரிக்கவே புநராக நிவ்ருத்தி நலை நிற்கும்
37-ஸ்திதி விரோதியை பரிஹரிக்கவே அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருக்கை நிலை நிற்கும்
38-ஆவஸ்யாக விரோதியைப் பரிஹரிக்கவே நிர்மல சரம தேஹத்வம் நிலை நிற்கு
39-சரீர சுத்தி விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம சுத்தி நிலை நிற்கும்
40-ஸ்நான விரோதியைப் பரிஹரிக்கவே விரஜா ஸ்நானம் பண்ணுகை நிலை நிற்கும்-
41-அனுஷ்டான விரோதியைப் பரிஹரிக்கவே பூர்வ அனுஷ்டானம் நிலை நிற்கும்
42-லஷண விரோதியைப் பரிஹரிக்கவே விலஷணத்வம் நிலை நிற்கும்
43-ஸ்மரண விரோதியைப் பரிஹரிக்கவே தத் குண ஸூத்தி நிலை நிற்கும்
44-சங்கீர்த்தன விரோதியைப் பரிஹரிக்கவே வாக் சுத்தி நிலை நிற்கும்
45-ஸ்ரவண விரோதியைப் பரிஹரிக்கவே சத் சம்ப்ரதாய ஸூத்தி நிலை நிற்கும்
46-சேவா விரோதியைப் பரிஹரிக்கவே சேவ்யன் உகந்து சேவை கொண்டு அருளுமது நிலை நிற்கும்
47-சமாராதான விரோதியைப் பரிஹரிக்கவே சமராத்யன் உகந்து அத்தைக் கொண்டு அருளுமது நிலை நிற்கும்
48-வந்தன விரோதியைப் பரிஹரிக்கவே வந்தனத்தை உகந்து ஸ்வீகரிக்குமது நிலை நிற்கும்(அவன் ஏற்றுக் கொள்ளுவதே பிரதானம் கார்யகரம்)
49-அஞ்சலி விரோதியைப் பரிஹரிக்கவே தச் சித்த ஆகர்ஷணத்வம் நிலை நிற்கும்
50-கால ஷேப விரோதியைப் பரிஹரிக்கவே தத்கால சமீசீ நத்வ ஸ்மரண சந்தோஷம் நிலை நிற்கும்-
51-ஆர்ஜன விரோதியைப் பரிஹரிக்கவே சாத்விகத்வம் நிலை நிற்கும்
52-க்ருக விரோதியைப் பரிஹரிக்கவே சாதாகமான தத் ஸ்பர்சாதி மகா லாபம் நிலை நிற்கும்
53-ஷேத்ர விரோதியைப் பரிஹரிக்கவே தல்லாப பாரார்த்யத்வம் நிலை நிற்கும்
54-போஜன விரோதியை பரிஹரிக்கவே பிரதாத்ரு போக்த்ரு ஸ்வரூப அனுரூபத்வம் நிலை நிற்கும்
55-போஜ்ய விரோதியைப் பரிஹரிக்கவே சத்வாபிவ்ருத்தி நிலை நிற்கும்
56-தீர்த்த விரோதியைப் பரிஹரிக்கவே தத் ஸ்வரூப உஜ்ஜீவனத்வம் நிலை நிற்கும்
57-பிரசாத விரோதியைப் பரிஹரிக்கவே ஸூ பாவநத்வ பிரதிபத்தி நிலை நிற்கும்
58-உக்தி விரோதியைப் பரிஹரிக்கவே சம்சாரி வ்யாவ்ருத்தி நிலை நிற்கும்
59-சங்க விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்ரீ வைஷ்ணவத்வம் நிலை நிற்கும்
60-சம்பந்த விரோதியைப் பரிஹரிக்கவே நிருபாதிக சம்பந்த ஜ்ஞானம் நிலை நிற்கும் –
61-சிநேக விரோதியைப் பரிஹரிக்கவே தத் ப்ராப்தி விஷய லாபம் நிலை நிற்கும்
62-பக்தி விரோதியைப் பரிஹரிக்கவே கைங்கர்ய மங்களா சாசனம் நிலை நிற்கும்
63-தாஸ்ய விரோதியைப் பரிஹரிக்கவே தத் பிராப்தி நித்ய பிரதி சம்பந்தி ஜ்ஞானம் நிலை நிற்கும்
64-சக்ய விரோதியைப் பரிஹரிக்கவே சர்வ ஜன அனுகூல்ய ஜ்ஞானம் நிலை நிற்கும்
65-சமர்ப்பண விரோதியைப் பரிஹரித்தவாறே ஸ்வகீய ததீய ஜ்ஞானம் நிலை நிற்கும்
66-தர்சன விரோதியைப் பரிஹரித்தவாறே ஆச்சார்ய அங்கீகாரம் நிலை நிற்கும்
67-ஆஸ்ரம விரோதியைப் பரிஹரிக்கவே பரம ஏகாந்தித்வம் நிலை நிற்கும்
68-ஜாதி விரோதியைப் பரிஹரிக்கவே ததீய சேஷத்வ ஜ்ஞானம் நிலை நிற்கும்
69-ஆப்த விரோதியைப் பரிஹரிக்கவே சத் ப்ரமேயத்வ புத்தி நிலை நிற்கும்-70-அநாப்த விரோதியைப் பரிஹரிக்கவே தத் தர்மம் நிர்மலத்வ ப்ரவ்ருத்தி நிலை நிற்கும்-
71-சித்தாந்த விரோதியைப் பரிஹரிக்கவே ஸூ த்ருட பிரமாண நிஷ்டை நிலை நிற்கும்
72-தத்வ விரோதியைப் பரிஹரிக்கவே சத் ப்ரமேயத்வ புத்தி நிலை நிற்கும்
73–பும்ஸ்தவ விரோதியைப் பரிஹரிக்கவே பத்நீ சாம்யம் நிலை நிற்கும் –
74-அந்திம தசா விரோதியைப் பரிஹரிக்கவே பிரபன்னத்வம் நிலை நிற்கும் –
75-அவிஸ்வாச விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் பாகவத ஆச்சார்ய ஸ்ரீ ஸூ க்தியிலும் விசேஷ சாஸ்திரத்திலும் விஸ்வாசம் நிலை நிற்கும்
76-சங்கதி விரோதியை பரிஹரிக்கவே பகவத் விஷய ஜ்ஞானம் நிலை நிற்கும்
77-சந்தான விரோதியைப் பரிஹரிக்கவே ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம் நிலை நிற்கும்
78-வர்ண விரோதியைப் பரிஹரிக்கவே ஆத்ம வர்ணமான சேஷத்வம் நிலை நிற்கும்
79-ஜப விரோதியைப் பரிஹரிக்கவே த்வய அனுசந்தாநம் நிலை நிற்கும்
80- ஆராதன விரோதியைப் பரிஹரிக்கவே பகவத் ஆராதனம் நிலை நிற்கும்-
81-பதித்தவ விரோதியைப் பரிஹரிக்கவே ஈஸ்வர சேஷித்வ ஜ்ஞானம் நிலை நிற்கும்
82-வர்ஜ நீய விரோதியைப் பரிஹரிக்கவே சாத்விக ஆகார சாத்விக சாஸ்திர சாத்விக அனுஷ்டானம் நிலை நிற்கும்
83-அவர்ஜ நீய விரோதியைப் பரிஹரிக்கவே சரீர அவசான பிராப்தி நிலை நிற்கும்
இப்படி உடையராலே சாதிக்கப்பட்ட 83 விரோதிகளையும் நன்றாகத் தெரிந்து பரிஹரிக்கும் க்ரமத்திலே பரிஹரித்து பற்றுமவைகளைப் பற்ற யதாவத்தாக ஸ்வரூபத்தை நோக்கிக் கொண்டு நிர்ப்பரராய் இருந்த வங்கி புரத்து நம்பி பின்புல்லாரும் இவ்விரோதிகளை நன்றாக அறிந்து உஜ்ஜீவிக்கும்படி அவற்றுக்கு வியாக்யானம் அருளிச் செய்து ஸ்ரீ வைஷ்ணவர்களான முமுஷுக்கள் அனுஷ்டித்துப் போரும்படிக்கு ஆச்சார்ய ஆஜ்ஜை இட்டு அருளிச் செய்தார்
இவ்விரோதிகள் அடங்க ஒரு சேதனனுக்கு ஸ்வரூப சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளைப் பற்றி வரும்
பர ப்ரகார ஸ்வரூப அதீன சத்தா பிரகாசக ஸ்வரூப அதீன பிரணவ அர்த்த அனுசந்தானத்தாலே
ஸ்வரூப சத்தா விரோதிகள் கழியும்
நமஸ் சப்த சித்தமான பிரணவார்த்த அனுசந்தானத்தாலே ஸ்திதி விரோதி ச மூலமாகக் கழியும்
பர பிரேரித்த தத் பிரயோஜன ப்ரவ்ருத்தி பிரயோஜக நாராயண பதார்த்த அனுசந்தானத்தாலே ப்ரவ்ருத்தி விரோதிகள் கழியும் –
ஆகையாலே சதாச்சார்ய சேவை பண்ணி
பத த்ரய சித்தமான திரு மந்த்ரார்த்தை லபித்து
விரோதிகளை நீக்கி வாழக் கடவன் -என்றதாயிற்று –
—————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply