திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்–10-5-

முதல் பதிகத்தில் வீடுமின் முற்றவும் -பரோபதேசம் பண்ணத் தொடங்கினார்
பத்துத் தோறும் உபதேச பதிகம் அருளிச் செய்தார்
இப்பத்திகத்தோடே பரோபதேசம் தலைக்கட்டுகிறார்
பெரியோர்கள் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் சரம சமயத்திலே அந்தரங்கரானவர்களுக்கு அருமையான உபதேசம் செய்து அருளுவார்களே
அதற்கு சரம சந்தேசம் என்று பெயர்
இப்பதிகம் அதுவே இரா நின்றது
எம்பெருமா ஆழ்வாரை திரு நாட்டுக்கு கொண்டு போக விரையா நின்றான்
ஆழ்வாரும் இனி நமக்கு பிராப்தி தப்பாது என்று துணிவு கொண்டார்
இவர் தாம் சம்சாரிகள் பக்கல் பரம கருணையே வடிவு எடுத்தவர் ஆகையால்
சம்சாரிகளுக்கு இது காரும் உபதேசங்கள் பல செய்து அருளி இருந்தாலும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவண பவனத்தை விட்டு பெருமாள் திருவடி ஏறப் போவதாக கிளம்பின பின்பும்
நச்யந்தம் உபேஷயம் ப்ரதீப்தம் சரணம் யதா -என்று சொல்லி பின்னையும் உபதேசிக்க ஒருப்பட்டால் போலே
ஐவரும் சரமோபதேசம் செய்து நிகமித்து அருளுகிறார்
இவர் தாம் பெரிய திருவந்தாதியில்
ஆரானும் யாதானும் செய்க அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -என்று
சம்சாரிகளுக்கு உபதேசிப்பது கஷ்டம் நம்மால் ஆகாது என்று சொல்லி இருந்தாலும்
பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்ளவே தாம் அவதரித்ததாக திரு உள்ளம் பற்றி
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ -என்று உபதேசத்தில் ருசி குலையாமே போந்தவர்
மண்னவருக்கு தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் -மணவாள மா முனிகள்
ஆச்சார்ய ஹிருதயத்தில் -எண் பெருக்கில் என்னும் திரு நாமத்தின் சப்தார்த்தங்களை சுருக்கி
மாதவன் என்று த்வயமாக்கி
கரண த்ரய பிரயோக வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்து -சூர்ணிகை -228-

———————————————————————————————————————————————————————————————————–

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –10-5-1-

எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று முதலிலே ஆலம்பனமாக சொன்ன மந்த்ரத்தை
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே-என்று காட்டி அருளுகிறார்
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் -என்று விளிக்கையாலே ஸ்ரத்தைவ காரணம் பும்ஸாம் அஷ்டாஷர பரிக்ரஹே -என்னுமா போலே
எம்பெருமான் உடைய திருவடிகளை அடைய வேணும் என்கிற ருசிக்கு மேற்பட வேறு ஒரு அதிகாரம் இல்லை என்றும்
அந்த ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகளே -என்றும் காட்டப் பட்டது –
தோல் புரையே போமதுக்கு பழுதிலா யோக்யதை வேணும் –
மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு ஆணும் நமரும் எண்ணும் படி சர்வரும் அதிகாரிகள் -ஆச்சார்யஹிருதயம்
நிதியுடையீர் என்னுமா போலே மனமுடையீர்
இதுக்கு அதிகாரி சம்பத்து தேட வேண்டா -ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் –
ஸ்வர்க்க பலமானதுக்கு அதிகாரி நியதனமும் பிராயச்சித்தமும் வேண்டா நின்றது இ றே
அபுநாவ்ருத்தி லஷண மோஷ த்துக்கு அது வேண்டாது ஒழிகிறது-பிராப்யத்துக்கு அநு ரூபமான அதிகாரமிவனால் சம்பாதிக்க முடியாமையினாலே -ஈடு
கண்ணன் கழலிணை -சர்வ சுலபனானவனுடைய -தூது போயும் சாரத்தியம் பண்ணியும் -சர்வதாத்மா சௌலப்யத்தை காட்டி அருளினவன்
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -முமுஷூக்களுக்கு எப்பொழுதும் அனுசந்திக்கப் பட வேண்டிய திரு நாமம் நாராயண சப்தமே
எண்ணும் திரு நாமம் -என்று சொல்லி –எண்ணும் திரு மந்த்ரம் என்னாதே
அதிகாரி நியமமும் அங்க நியமமும் வேண்டா
குழந்தை தாய் பேரைச் சொல்லுமா போலே சொல்ல அமையும்
அம்மே என்கைக்கு அதிகாரி சர்வரமும் தானே
கனத்த பேற்றுக்கு இவ்வளவு தானா சங்கை தீர்க்க திண்ணம் என்கிறார்
சத்யம் சத்யம் புநஸ் சத்யம் உத்ருத்ய புஜமுச்யதே -என்னுமா போலே
பிரணவம்
நமஸ் ஸூ
சதுர்த்தி
இவை ஒழிய வும் நாராயண சப்த மாத்ரமே அமையும்
நாராயண என்று கூட இல்லாமல் நாரணம் என்பதே அமையும்
நாரணம் என்று இல்லாத மகரத்தைக் கூட்டி உள்ளவற்றைக் குறைத்து சொல்லுகையாலே
அளத்தில் பட்டது எல்லாம் உப்பாமாப் போலே இத்தோடு கூடினது எல்லாம் உத்தேச்யம் என்றும்
குறைந்தாலும் அங்கம் தப்பிற்று ஸ்வரம் தப்பிற்று ப்ரஹ்ம ரஜஸ் ஸாய்ப் போக வேண்டும் எண்ணும்
அவற்றில் காட்டில் இதுக்கு உண்டான வாசி சொல்லுகிறதாயிற்று -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள் –

————————————————————————————————————————————————————————————————————————————-

நாரணன் எம்மான் பாரணங்காளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே –10-5-2-

எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்த்தங்களை சுருக்கி -நாரணன் சப்தம் என்று கீழே கூறப் பட்டது
இப்பாட்டிலும் மேல் பாட்டிலும் அர்த்தம் சுருக்கப் படுகிறது
ஆழ்வாருக்கு திரு மந்த்ரம் ஸ்மிருதி விஷயம் ஆனால் உடனே அர்த்தத்தையும் ஒரு படியே அனுசந்தித்தே தீருவார்கள்
முன்னே அர்த்தம் சொல்லி பின்னே சப்தம் சொல்வதோ
முன்னே சப்தம் சொல்லி பின்னே அர்த்தம் சொல்வதோ நிகழ்ந்து தீரும்
இங்கு முன்னே சப்த அனுசந்தானம் ஆயிற்று
இப்போது அர்த்தம் அனுசந்தானம் ஆகிறது
அர்த்தம் உபன்யசிப்பதற்கு மீண்டும் சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார் -நாரணன் -என்று –
அர்த்தம் -எம்மான் -பாரணங்கு ஆளன்-பூமிப் பிராட்டி க்கு வல்லபன்
குரும் அணங்கும் தெய்வப் பெண்ணே -நிகண்டு
பெரிய பிராட்டியார் தூடக்கமான மகிஷி வர்க்கங்களையும் சொன்ன படியாய் -நித்ய சூரிகளையும் லஷணத்தால் சொல்லி
நித்ய விபூதி நாயகன் -என்றது ஆயிற்று
ரஷிக்கும் போது பிராட்டி சந்நிதி வேண்டுகையாலே இதிலே ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்தேயம்
லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேசா தேவ்யா காருண்ய ரூபா ரஷகஸ் சர்வ சித்தாந்தே வேதாந்தேபிச கீயதே
திருமந்த்ரத்தில் லஷ்மி சந்நிதி ஸ்ப்ஷடமாக இல்லை எனிலும் அதனால் -நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் -என்கிறார்
வாரணம் தொலைத்த -ரஷகத்வம் காட்டின படி
இஷ்டங்களைத் தலைக் கட்டியும்
அநிஷ்டங்களை தவிர்கையும் ரஷகத்வம் என்பதால் விரோதி நிரசனத்தை இங்கே காட்ட பிராப்தம் ஆகும்
அகாரம் தாது சப்தத்தால் ரஷகத்வத்தையும் காரணத்வத்தையும் காட்டுமதால் -காரணன் தானே -என்கிறார்-

——————————————————————————————————————————————————————————————————————————————

தானே யுலகெல்லாம் தானே படைத்து இடந்து
தானே யுண்டு யுமிழ்ந்து தானே யாள்வானே–10-5-3-

நாராயண சப்தார்த்தம் -ரஷகத்வம் -விவரித்து அருளுகிறார்
தானே யுலகெல்லாம் -சர்வம் கலு இதம் ப்ரஹ்மம்-என்கிறதை அனுவதிக்கிறபடி
சரீராத்மா பாவம் -ஐக்ய நிர்வாகம் -சரீரி தானே சரீரத்தை ரஷிக்க கடவன்
இதுக்கு நியாமகம் மேலே சொல்லும்
தானே படைத்து இடந்து தானே யுண்டு யுமிழ்ந்து தானே யாள்வானே-இதனால் தானே உலகம் என்னக் குறை இல்லை என்றபடி
ஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரசன நயம நவ்யாப நைராதம நஸ் தே சேஷோ ப்ரபஞ்சோ வபுரிபி பவதஸ் தஸ்ய சாபேத வாதா -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்- உத்தர சதகம் –

——————————————————————————————————————————————————————————————————————————————-

ஆள்வான் ஆழி நீர் கோள்வாய் அரவணை யான்
தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீரே –10-5-4-

நாராயண மந்த்ரத்தில் சதுர்த்தியின் அனுசந்திக்கும் பூர்வர்கள்
அஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகல ஸூ அவஸ்தா ஸூ ஆவிஸ்யர் மமசகஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி -3-
இங்கே சம்சாரிகளை நோக்கி கைங்கர்யத்தை விதித்து அருளுகிறார்
-ஆள்வான் -என்று -கீழ் சொன்ன ரஷகத்வத்தை அநு பாஷிக்கிறார்
ஆழி நீரில் கோள் வாய் அரவணை யானாய்க் கொண்டு ஆள்வான் -யோக நித்தரை செய்பவன்
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஓடி வந்து ரஷித்து அருளுமவன்
அன்னவனுடைய -தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீரே-
திருவடிவாரத்திலே கைப்பட்ட பூக்களை -பணி மாறி –இத்தால் ஆராதனைக்கு எளியவன் -என்கிறார்
நாள் வாய் நாடீர் -நாள்தோறும் ஆஸ்ரயிங்கோள்
ஒரு நாள் ஆஸ்ரயிப்பது போதும் ஆயினும் -சாதனா அனுஷ்டானம் அன்றே
ஸ்வயம் போக்யமான செயல் ஆகையாலே கால ஷேபம் இதுவேயாக இருக்கும்
அரவணை யானை நாடீரே -அவன் பெற்ற பேற்றை நமக்கும் நல்குவான்
சென்றால் குடையாம் இத்யாதி -அந்த பேற்றை நாமும் பெறுவோம் –

————————————————————————————————————————————————————————————————————–

நாடீர் நாள்தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே –10-5-5-

ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யம் செய்யவே
ஸ்வரூப அநு ரூபமான பேற்றைப் பெறுவோம்
நாடீர் நாள்தோறும் வாடா மலர் கொண்டு -மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –
ஆர்வமே பூவாக பெரியாழ்வார் அருளிச் செய்த படி வாடா மலர் -ஆர்வம்
ஆத்மபுஷ்பத்தை சொன்னதாகவுமாம்
அஹிம்சா பிரதமம் புஷ்பம் இத்யாதி யாகவுமாம்
கந்த மா மலர் எட்டும் இட்டு –
இனமலர் எட்டும் இட்டு -என்பர்
செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி போன்ற செவ்விய பூக்கள் என்றுமாம்
நாடீர் நாடோறும் -பசித்த போது எல்லாம் உண்ணுமா போலே -ஈடு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-சொல்லீர் என்னாதே பாடீர் -ஏதத் சாம காயன் ஆஸ்தே -மேலே பாடுகையாகிற
புருஷார்த்தம் இங்கே யாகக் கடவது என்றபடி
நாடீர் -மானஸ வியாபாரம்
மலர் கொண்டு -காயிக வியாபாரம்
பாடீர் -வாசிக வியாபாரம் –

——————————————————————————————————————————————————————————————————————————–

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலையுண்ட வாயான் மாதவனே –10-5-6-

நாடீர் என்றார் கீழ் -இடம் காட்டுகிறார் இதில்
சாஸ்திரங்கள் கண்ணுக்கு புலப்படான் என்னுமே
இச்சா க்ருஹீத அபிமதோருதேக-அடியார்களுக்காக சங்கல்பத்தால் கொள்பவன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனான காயா மலர் வண்ணனே வேங்கடம் மேயான்
அவ்விடத்தே நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாம் -என்கிறார்
சம்சாரிகளை திருவடி பணிவித்துக் கொள்ளவே சந்நிஹிதனாய் உள்ளான்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் பெருமான் அன்றோ
காயா மலர் வண்ணன் -துரும்பும் எழுந்தாடி அடிமையில் மூண்டு அல்லது நிற்க ஒண்ணாத படியான வடிவு படைத்தவன் -ஈடு
அசேதன வர்க்கமும் ஆசைப்படும்படி அழகு படைத்தவன்
பேயார் முலை உண்ட வாயான்-அந்த வடிவு அழகு கண்டால் நம் விரோதிகள் எலாம் பூதனை பட்டது படும்
பேய் முலை பேய்ச்சி முலை என்பதை பேயார் முலை -என்றது சீற்றத்தினால் ஆய்த்து –
மாதவனே -குற்றங்களை சிறிதும் பாராதே குற்றங்களையே நற்றங்களாக கொண்டு சேர்ப்பிக்கும் பிராட்டியாரும் அருகே உண்டே-

——————————————————————————————————————————————————————————————————————————-

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே –10-5-7-

வாடா மலர் கொண்டு நாடோறும் நாட முடியாமலும்
வேங்கடம் மேயோனை அடி பணியவும் முடியாதார்க்கு
ஒரு வழி அருளிச் செய்கிறார் இதில் –
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் -மாதவன் என்று -என்னாமல் -என்று என்று -இரட்டித்து சொன்னதால்
லஷ்மி சம்பந்தம் இரண்டு தடவை -இரண்டு கண்டம் -உள்ள த்வயம் -த்வய அனுசந்தானம் நியமித்து அருளுகிறார்
இதில் முற்கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது
பிற்கூற்றால் அச்சேர்த்தியில் அடிமையை இரக்கிறது–முமுஷூப்படி
மாதவன் என்று த்வயமாக்கி -நாயனார்
முதல் பாட்டில் சொன்ன நாராயண சப்தத்தோடு மாதவன் சப்தத்தையும் சேர்த்து ஓத வல்லீர்கள் ஆனால்
திரு அஷ்டாஷர மந்த்ரம் அனுசந்தானமும் த்வய அனுசந்தானமும் செய்ய வல்லீர் ஆகில்
ஓத வல்லீரேல் -பரப்ரேரிதராய்க் கொண்டு சொல்ல வல்லி கோள் ஆகில் -ஆறாயிரப்படி –
ஒருவர் முன்னே சொல்லி பின்னே சொல்வதே ஒதுகை
ருசி பூர்வகமாக சொல்லா விடிலும் ஒருவர் உடைய பிரேரணையால் சொல்ல நேர்ந்தால் -என்றபடி –
தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே-தீது ஏதம் -பூர்வ உத்தர பாவம் –
தததிகமே உத்தர பூர்வாகயோ ரச்லேஷ விநா சௌ தத்வ்யபதே சாத் -ப்ரஹ்ம ஸூ த்ரம் –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
கீழ்ச் சொன்ன திரு மந்த்ரமும் இப்பாட்டில் சொன்ன ஸ்ரீ மத் பதமும் தனித் தனியே பேற்றுக்குப் பர்யாப்தமான பின்பு
இரண்டையும் சேர்த்து சொன்னவர்களுக்கு பேரு சொல்ல வேண்டா வி றே -ஈடு

————————————————————————————————————————————————————————————————————————————-

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேரார் ஓதுவார் ஆரார் அமரரே –10-5-8-

நாராயண திரு நாமத்தையோ
ஸ்ரீ மத் பதத்தையோ
ஓத நாங்கள் அதிகாரிகளோ
நீசரான எங்களுக்கு அத்தனை அதிகாரம் உண்டோ – என்ன
அதிகாரி நியதி இல்லை
ஆரேனும் சொல்லலாம்
சொன்னால் நித்யர்கள் உடன் ஒக்க பலன் கிட்டும்
சாரா ஏதங்கள் -மீண்டும் இங்கே சொன்னது அநாதிகாரிகள் நாங்கள் சொன்னோம் என்ற குற்றமும் வாராது –
ஆர் ஆர் -ஜன்ம விருத்தங்களை உடையாரே ஆகிலும் அமரரே
ஆர் ஆர் -இரண்டு சொல்லாக பிரிப்பதே சிறந்தது
பன்னீராயிரம் -ஆரார் -திருப்தி பெறாத அளவாய்க் கொண்டு -என்பர்

—————————————————————————————————————————————————————————————————————————

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரர்த் தொழுவார்கட்கு அமரா வினைகளே –0-5-9-

அமர தொழுவார்க்கு -உயிரான சொல் -பிரயோஜனாந்தரம் ஒன்றையுமே கணிசியாமை –
மிக்க சீர்த் தொண்டர் -என்பர் திருமங்கை ஆழ்வார்
சூத்திர பிரயோஜனங்களை கணிப்பார் தொண்டர் –
அவற்றைத் தள்ளி பரம புருஷார்த்தமான மோஷத்தை விரும்புவர் சீர்த் தொண்டர்
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான் –என்றபடி
வைகுந்த நாட்டையும் பொருளாக மதியாது
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -என்று இருப்பார் மிக்க சீர்த் தொண்டர் –
பிரயோஜனத்துக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ -தொழுகையே பிரயோஜனமாய் இருப்பதே அமரத் தொழுகை –
அப்படி தொழத் தக்கவன் -யார் எனில் -அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை -அமரர் -தமர்கள் -இரு வகைகள்
அமரர்கட்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் –
முப்பத்து மூவர் அமரர்கட்கு முன் சென்று –
எம்பெருமான் அர்த்தி தார்த்த பரிதான தீஷிதன் –
அமரர்கள் கார்யம் வேண்டிய போது திருவடிகளில் குனிந்து நிற்பதும்
கார்யம் சித்தித்தவாறே எதிர் அம்பு கோத்து இருப்பார்களே ஒழிய
அவன் அழகிலே ஈடுபட்டவர்கள் அல்ல
பேணலமில்லா வரக்கர் முந்நீர பெரும்பதிவாய் நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் -என்ற உடனே
நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காணலும் ஆம் கொல் என்றே -என்று அருளிச் செய்தார் இ றே
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் —
ஆஸ்ரிதனான தேவாதிகளுக்கும் கூட அரியனாய் ஆஸ்ரிதற்கு எளியவனாய் இருந்தவனை -ஆறாயிரப்படி –
வி லஷணமான ஸ்ரீ ஸூ க்தி இது
ஆஸ்ரயிப்பவர்கள் எல்லாம் ஆஸ்ரிதர்கள் அல்லரே
சில வி லஷண வ்யக்திகளே ஆஸ்ரிதர் எனப்படுவார் -அவர்களே தமரர் ஆவார் -அவர்களுக்கு எளியவன் -மற்றையோர்க்கு அரியன்
அப்படி பெருமானை அமரத் தொழுவார்கட்கு -அமரா வினைகள் -பிரயோஜனாந்தரங்களை விரும்பும் பாபங்கள் போம் –

———————————————————————————————————————————————————————————————————————————-

வினை வல்லிருள் என்னும் முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே –10-5-10-

கருமங்கள் என்ன -அஞ்ஞானங்கள் என்ன -இப்படி சொல்லப் படுகிற திரள்கள் தாமே அஞ்சி அகன்று ஒழியும்
சுனைகளில் உண்டான நல்ல பூக்களைக் கொண்டு சர்வேஸ்வரனை சிந்தியுங்கோள்
இப்பதிகத்தில் முதல் பாட்டில் -திரு மந்திர பிரஸ்தாபம் செய்து அருளினார் –
ஏழாம் பாட்டில் த்வய பிரஸ்தாபம் செய்து அருளினார்
அதற்கு மேல் எல்லாம் சரம ஸ்லோகம் பிரஸ்தாப மேயாய் இருக்கிறது –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி –எனபது தானே சரம ஸ்லோக சாரம் –
அதையே -வினை வல்லிருள் என்னும் முனைகள் வெருவிப்போம் –
கருமம் -பிரபல அஞ்ஞானம் -அதுக்கடியான தேக சம்பந்தம் -இவற்றைப் பற்றி வரும் ருசி வாசனைகள் -இவற்றின் திரள்கள் –
இவை வெருவிப்போம் -நமக்கு நிலம் அன்று என்று அஞ்சி ஓடிப்போம்
முனைகள் -திரள்கள் -முனை என்று முகமாய் முகம் கெட்டுப் போம் -என்றுமாம் -ஈடு
இப்பொருளில் வினை வல்லிருள் என்னும் இவை முனைகள் வெருவிப் போம் –
இதற்கு அப்ராக்ருத த்ரவ்யம் தேடித் போக வேண்டா
பிராக்ருத த்ரவ்யங்களையும் விலை கொடுத்து வாங்க வருந்த வேண்டா
சுனைகளில் தாமாகவே தோன்றி எளியனவாய் கிடைக்கும் மலர்களை பறித்து இட அமையும்
அது கூட வேண்டாம் -நினைமின் நெடியானே -என்கிறார் அடுத்து
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ -என்று பண்டே சொன்னேன்
உங்களுக்கு பாங்கான சமயத்தில் ஒரு கால் நினையுமின் –
அப்படி ஒரு கால் நினைத்தால் போதுமோ -என்ற சங்கைக்கு அவன் படியை எடுத்துக் காட்டுகிறார் –
நெடியான் -நாம் ஒரு கால் நினைக்க பலகால் நினைதத்தாக கொண்டு என் செய்வோம் என் செய்வோம்
என்று தெகுடாடி இருப்பவன் அன்றோ
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்று இருப்பவன் அன்றோ –

——————————————————————————————————————————————————————————————————————-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடியாயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

இப்பதிகம் வல்லார் தம்மைப் போலவே நெடியான் அருள் சூடும் படி யாவார் –
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் -இதுவே ஆழ்வாருக்கு நிரூபகம்
மயர்வற மதிலம் அருளினான் -என்று தொடங்கினார்
இடையில் -திருமாலால் அருளப் பட்ட சடகோபன் -என்றார்
இப்பொழுது நெடியான் அருள் சூடும்படியான சடகோபன் -என்கிறார்
இத்தால் ஸ்ரீ ராமாயணத்திலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் காட்டிலும்
திருவாய் மொழிக்கு உண்டான ஏற்றம் -தெரிவிக்கப் பட்டதாயிற்று
ஒரு நிலை இன்றிக்கே வாய்க்கு வந்த படி பிதற்றும் நான் முகன் அருளினால் தோன்றியது ஸ்ரீ ராமாயணம்
மோஹ சாஸ்திர பிரவர்தகனாய் -ச்மசான சஞ்சாரியாய் சவ பஸ்மத்தை உடல் எல்லாம் பூசி
எலும்பு மாலையைப் பூண்டு புலித் தோல் உடுத்து அறிவு கேட்டுக்கு எல்லை நிலமான இடபத்தை ஊர்தியாகக் கொண்டு
கால கூடத்தை கழுத்திலே கூடியனான ருத்ரன் இடம் உபதேசம் கேட்ட நால்வரில் ஒருவனான புலஸ்தியன் உடைய அருளினால் தோன்றிற்று ஸ்ரீ விஷ்ணு புராணம்
அப்படி இன்றக்கே
திருவுக்கும் திருவாகிய செல்வனாய்
பரம சத்வ நிதியாய்
புண்டரீகாஷனான
புருஷோத்தமன் உடைய திருவருள் அடியாகவே தோன்றிற்று திருவாய் மொழி
அன்றிக்கே
இனி விரைவாக எம்பெருமான் திரு அருளைப் பெற இருப்பதால் அது சொல்லுவித்த சொல் ஆகவுமாம்-
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -எனதன்றோ அடுத்த பாசுரம் –
நொடி யாயிரத்து இப்பத்து –
நொடிதல் -சொல்லுதல்
அடியார்க்கு அருள் பேறே -ஆழ்வார் -தாம் நெடியான் அருள் சூடும் படியான் -என்று
சொல்லிக் கொள்ளும் படியான பேற்றை இப்பத்து பெறுவிக்கும் –

—————————————————————————————————————————————————————————————————————————————-

திருவாய்மொழி நூற்றந்தாதி –

கண்ணன் அடியிணையில் காதலுறுவார் செயலை
திண்ணம் உறவே சுருங்கச் செப்பியே மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள் –95

——————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading