திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–அருள் பெறுவார் அடியார் –10-6-

நம்பிள்ளை அவதாரிகை -பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர ஈஸ்வரனை ஆழ்வார் பின் தொடர்ந்த படி சொல்லிற்று –
இது தொடங்கி -ஆழ்வாரை சர்வேஸ்வரன் பின் தொடருகிற படி சொல்கிறது –
அதாவது இது வரை ஆழ்வார் எம்பெருமான் இடம் யாசகராய் நின்றார்
இனி -முனியே நான்முகனே -என்னும் பதிகத்து அளவும் எம்பெருமான் ஆழ்வார் பக்கல் யாசகனாய் நிற்கிறான் என்கை –
இப்பதிகத்தில் மூன்றாம் பாட்டில் -விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -ஆழ்வீர் வாரீர் என்றமை தெரிகிறது
சரம சரீரம் ஆகையால் -ஆழ்வார் திரு மேனியில் தமக்கு உண்டான வ்யாமோஹத்தால்
கொண்டு போக விரைந்ததையும் கூட மறந்து இத் திருமேனி அனுபவத்தில் மிகவும் சபலனாய்
அநேக விக்ரஹம் பண்ணி குரவை கோத்து ஆய்ச்சியர்களை அனுபவித்தால் போலேயும்
நரகனை தொலைத்து பதினாறாயிரம் தேவிமார்களை அனுபவிக்க பதினாறாயிரம் விக்ரஹங்கள் கொண்டு அனுபவித்தால் போலேயும்
ஆழ்வார் உடைய அவயவங்கள் தோறும் அநேக விக்ரஹங்கள் கொண்டு அனுபவிக்க விரும்பி
அதற்கு ஆழ்வார் அனுமதி பண்ணுமாறு வேண்டிக் கொண்டான்
அதை ஆழ்வார் வெகு சிரமப்பட்டு விடுவித்துக் கொள்ள வேண்டியது ஆயிற்று
ஆயினும் எம்பெருமான் உடைய அனுவர்த்தத்தில் குறை இல்லையே
இதனாலே நம்பிள்ளை அவதாரிகை சாதித்து அருளினார் அப்படி –
வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றும் பருகினான் –
எம்பெருமான் விடாய் சாலவும் பெரிதே
இருந்தும் தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் -விடாயை அடக்கிக் கொண்டு எதிர் பார்த்து இருந்தான்
அக்கார்யம் ஒருவாறு தலைக் கட்டும் அளவானவாறே இனி எம்பெருமான் ஆறி இருக்க மாட்டானே –
திரு வாட்டாற்றிலே தங்கு வெட்டியாக வந்து நிற்கிறான் ஆகையால் அங்கே கொண்டு போகையிலே விரைவு மிக்கது –
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ -என்றவர் ஆகையாலே -இருள் தரும் மா ஞாலத்தில் இன்று அகற்றி -அங்கே கொண்டு சென்று அனுபவிக்கப் பாரித்தான்
அது தானே கிடந்தானை கண்டு கண்டு ஏறுமா போல் அன்றிக்கே ஆழ்வார் நியமனத்தால் செய்தானாக ஆகவேணும்
என்று பாரதந்த்ர்யத்திலும் ருசி உண்டானவன் ஆனான்
ஆழ்வாரோ பார தந்த்ர்யத்தின் எல்லையில் இருப்பவர்
எம்பெருமானை நியமிக்க மாட்டாரே
அவனோ கையும் அஞ்சலியுமாய் நிற்க ஆழ்வாருக்கோ நியமிக்க வாய் எழ வில்லை
சீல குணத்தை அனுபவிக்க இழிந்தார்
அத்தை நால்வர் கூட அனுபவிக்க -சம்சாரிகள் மேலே கண் வைத்தார்
அவர்கள் உண்டியே உடையே உகந்து ஒடுபவர்களாய் இருக்க
ஈஸ்வரன் மேல் கண் வைத்தார்
அவனோ ஆழ்வாரைக் கொண்டு போக விரைந்து இருந்ததால்
அதிலே அந்ய பரனாய் இருந்து உசாத் துணையாக இல்லை
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் என்றாரே முன் அதனால் நெஞ்சை உசாத் துணையாகக் கொண்டு அனுபவிக்கிறார்
நெஞ்சே அவனுடைய மேன்மை இருந்த படி கண்டாயே
இப்படி தாழ நின்று அருளும் நிலை கண்டாயே
நாம் பெற்ற பேற்றின் கனம் கண்டாயே
என்று சொல்லி சொல்லி உள் குழைகிறார் –
சர்வேஸ்வரன் -சர்வ நியாமகன் -ஸ்வ தந்த்ரன் என்று நினைத்து இருந்தார் முன்னம்
ஆஸ்ரித பாரதந்த்ர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்ற உண்மை அறிந்து இஃது என்ன சீலம் என்று வியக்கிறார்

—————————————————————————————————————————————————————————————————————————————————–

அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே –10-6-1-

அருள் பெறுவார் அடியார்-எம்பெருமான் அருளை பெறுவதையே நிரூபகமாக உடைய அடியவர் -அவர்கள் என் ஸ்வாமிகள்
அவர்கள் அளவில் பலித்த அருள் அவர்கள் இடம் மட்டும் பர்யவசியாமல் நம் அளவிலும் வெள்ளம்கொத்ததே –
அவனையே பற்றி பார்த்து இருந்தால் இப் பேர் அருள் பெற முடியாது
அவன் அருளைப் பெற்ற அடியார்களைப் பற்றியதால் இப் பேர் அருளுக்கு இலக்கு ஆனோம்
நெடுமாற்கு அடிமை பாடிய பலன் பெற்றோம்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே-உயிரான அடியாம்
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான்-திருக்கையில் திரு ஆழி யை ஒரு கண்ணாலே பார்ப்பது -என்னை ஒரு கண்ணாலே பார்ப்பதாக நின்றான்
திரு ஆழியை விட்டால் அன்றோ உம்மை விடுவது
நித்ய சூரிகள் பக்கல் காட்டும் ப்ரேமம் எல்லாம் என் ஒருவன் இடம் காட்டி-மடை செய்து – அருளுகிறான்

அவன் அருளை வெறுமனே தருவானாய் இருந்தால் பெற்று மகிழ்வேன்
அஹம் சர்வம் கரிஷ்யாமி போலே ஆழ்வீர் ஏவும் என்கிறான் அந்தோ
அது நமது விதி வகையே -நம்முடைய விதி நிஷேதங்களுக்கு கட்டுப் பட்டவனாய் இன்னத்தை இன்னமாறு செய்ய வேணும்
என்று விதிக்க வேண்டும் என்கிறானே -என்ன அநியாயம்
மாமியாரை விதிக்கும் மாணாட்டுப் பெண்ணும் உண்டோ
எம்பெருமானாருக்கு முன்பு உள்ளார் -அது நமது விதி வகையே -பாக்ய அனுகுணமாக என்று நிர்வஹித்தார்கள்
ஆனால் அது இத் திருவாய்மொழி மேல் ஓடுகிற ரசத்தோடு பொருந்தாது
நாம் விதித்த படி செய்வானாக இருந்தான் -அது நமது சொல் வகையே என்னாமல் விதி வகையே என்றது
விதியைக் கடந்தால் பிரத்யவாயம் வரும் என்று அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்
நமது விதி வகையே -ததா அநு ஜாநந்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் ஸ்ரீ ஸூ க்தி –
இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்
சேனை முதலியார் சட்டையும் மயிர்கட்டும் கையும் பிரம்புமாய் வந்து புகுரப் புக்கவாறே
நாச்சிமாரும் தானுமாய் ச்வைரமாக இருக்கும் இருப்பு தவிர்ந்து நாச்சிமாரும் சிம்ஹாசனத்திலே ஒரு மூலைகளிலே ஒதுங்க
தானும் சவிநயமாக இருக்கும் யாய்த்து வ்ருத்த சமாந்தரைக் கண்ட ராஜாக்களை போலே இவர் தாமும்
இவ்விருப்புக்கு தண்ணீர் துரும்பாக ஒண்ணாது என்று ஜகன் நிர்வாஹத்துக்கு வேண்டுமவற்றை பாசுரப் பரப்பர விண்ணப்பம் செய்வார் ஆய்த்து-
பிராட்டிமாரோடு இருக்குமத்தில் காட்டிலும் இனிதாய் இருக்கும் இ றே அவனுக்கு இவர் தம்மைக் காண -ப்ரியேண வி றே –
இன்னானை ப்ரஹ்மா ஆக்க வேணும் -இன்னானை மாற்ற வேண்டும் என்னுமவற்றை சுருங்க விண்ணப்பம் செய்வர்
ஐயர் யாதொன்று சொல்லிற்று அது எல்லாம் அப்படியே -என்று கண்களால் மேல் எழுத்து இட்டுக் கொடுக்கும்
இவ்வார்த்தை அருளிச் செய்த போது கிடாம்பி ஆச்சானோடு அல்லாதாரோடு வாசி அற குமுழி நீர் உண்டது –
ஆச்சான் தான் பட்டருக்கு ச்நேஹித்து இருக்கும் போர-
இளையாழ்வான் ஆச்சானை -பட்டர் தம்மை ஆஸ்ரயித்தவர்களில் காட்டிலும் நீர் தாழ அனுவர்த்திப்பான் என் என்று கேட்க
நீ அன்று கண்டிலை காண்-எம்பெருமானார் பட்டர் கையிலே புஸ்தகத்தைக் கொடுத்து திரு முன்பே ஒரு ஸ்லோகத்தை விண்ணப்பம் செய்வித்து
திருப் பிரம்புக்கு புறம்பாகக் கொண்டு புறப்பட்டு சுற்றும் பார்த்து அருளி
நம்முடையார் அடங்கலும் நம்மை நினைத்து இருக்குமா போலே இவனை நினைத்து இருங்கோள் என்று அருளிச் செய்தார் –

இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் -ஆழ்வார் திரு உள்ளத்தோடு சொல்லுகிறபடி
வானுயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகம் எய்தில் என் –
அங்குப் போனால் திரு நாடு ஒன்றே
இங்கோ சீரார் திருவேங்கடமே திருக் கோவலூரே மதிட்கச்சி ஊரகமே பேரகமே
போர மருதிருத்தான் வெள்ளறையே வெக்காவே பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கண மங்கை காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர் காரார் குடந்தை கடிகை கடன்மலை
ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை -என்று இப்படி நூற்றெழு திருப்பதிகளை அனுபவிக்கலாமே
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போகவா நினைக்கிறீர் -என்ன-
இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் –நித்ய சூரிகள் என்ன நித்ய சூரிகள் நாயகனே இங்கே வந்தாலும் மயங்கப் பண்ணுமே
உபமான சேஷாணாம் ஸாதூநாம் யஸ் சதாபவத் -என்று புகழப் பட்ட ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானையும் அன்றோ மருளப் பண்ணிற்று
இனி இருக்க யான் வேண்டேன் -என்னாமல் இனிப் பிறவி யான் வேண்டேன் -என்றது
க்ருதாஷூ நரா ராஜன் கலௌ இச்சந்தி சம்பவம் -என்று ஸ்ரீ பாகவதத்தில் அருளிய படி ஆழ்வார் இச்சைப் பட்டு வந்தவர் ஆகையாலே
நான் ஆசைப் பட்டதாயினும் இப் பிறவி யான் வேண்டேன் –
கலி யுக பிறந்தார்க்கு திருவாய்மொழி கொடுக்க ஆசைப் பட்டேன்
அது நிறைவேறிய பின் இப்பிறவி யான் வேண்டேன்
இது வரையிலும் மாறி மாறி பல பிறவி பிறந்தது போதுமே-

தீவினை உள்ளத்தின் சார்வல்லவாகித் –தெளி விசும்பு பேரலுற்றால் திரு வாறன் விளை யதனை மேவி வளம் செய்து
கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே -என்றீரே
என்று நெஞ்சு கேட்க
மருள் ஒழி நீ மட நெஞ்சமே -என்கிறார் -இருள் தரும் மா ஞாலம் தன்மையை அறிய அறிய அந்நினைவு மருளே யாய்த் தோன்றிற்று
உகந்து அருளின நிலங்களில் உண்டான ஆதாரத்தில் ஒன்றும் குறை வில்லை
பிரகிருதி வச்யனாகி சப்தாதி விஷயங்களில் கொண்டு போய் மூட்டும் சம்சார ஸ்வ பாவத்தை நினைக்கும் தோறும்
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போலே -பாம்போடு ஒரு கூரையிலே பயிலப் பாராதே
வாட்டாற்றான் அடி வணங்கே -வணங்கப் பார் என்கிறார் -வைகுந்தன் அடி வணங்கே சொல்லாமல் –
திரு வாட்டாற்று எம்பெருமான் தானே வைகுந்தத்துக்கு அழைத்துச் செல்ல விரைகின்றான்
நமக்கு ஹித காமனாய் நம்மைக் கொண்டு போக வந்து இருப்பவன் -அவன் மநோ ரதத்தின் வழியே ஒழுகப் பார் என்கிறார்

————————————————————————————————————————————————————————————————————————–

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலப் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை
பாட்டாய பலபாடிப் பழ வினைகள் பற்றறுத்து
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நன்னினமே –10-6-2-

———————————————————————————————————————————————————————————————————-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவாறாகா இக்கருமங்கள் என்நெஞ்சே –10-6-3-

இன்று விண்ணுலகம் விதி வகையே தருவானாய் விரைகின்றான் –
இனிட்ட்று -இங்கனே விடியக் கண்டது -நேற்று வரை எதிர்பார்த்தது அன்று இது
விண்ணுலகில் வாழ்ச்சி தருவானாய் -என்னாமல் -விண்ணுலகம் தருவானாய் -என்கிறார்
ஆங்கே ஒரு குடி இருப்பு மாத்ரமே தருவானாய் இருக்கிறிலன் —
வானவர் நாடு –ஆண்மின்கள் வானகம் -என்கிற பொதுவாய் அறுத்து நமக்கே தருவானாக த்வரியா நின்றான் -நம்பிள்ளை
விரைகின்றான் -எம்பெருமான் தான் மூட்டை கட்டிக் கொண்டு முன்னே போவது
ஆழ்வார் பின்னே வரக் காணாமல் ஆழ்வீர் வாரும் வாரும் -என்று பதரா நின்றான்
இப்படிப் பதறுகிறவன் -தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்று கதறின அன்று
திருவாய்மொழி தலைக் கட்ட-தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் கொடுக்கும் வரை – பொறுமையாக காத்து இருந்தான்
சர்வ சக்தன் கூட்டிச் செல்வது தானே என்றால் -தன் இஷ்ட்டப்படி செய்பவன் அல்லையே
இப்படி செய் அப்படி செய் என்று ஆழ்வார் விதிக்க செய்வதிலே ஆசை கொண்டவன் அன்றோ திருவாட்டாற்று எம்பெருமான்

-அதனால் -விதி வகையே -என்கிறார் இங்கும் முதல் பாட்டில் போலே
சேதன லாபம் ஈஸ்வரனுக்கே ஆதலால் அவன் விரைவது தானே பிராப்தம் -சபலமாகக் கூடியதும் அது தானே -சாஸ்த்ரார்த்தம்
எண்ணினவாறாக -இப்படி விரைய வேண்டும் விரியப் போகிறான் என்று எண்ணினோமோ
இக்கருமங்கள் -எம்பெருமான் செயல்கள் நான் எண்ணின அளவுக்கு பதின்மடன்காக பலிக்கின்றனவே
இப்படிப் பட்ட கனத்த பேறு பெருகைக்கு நீயே காரணம் என்று நெஞ்சைக் கொண்டாடுகிறார்
என் நெஞ்சே என்று -என்னே – நெஞ்சே நீ என்றவாறு -வியந்து சொல்லுகிறார் என்னவுமாம் –

—————————————————————————————————————————————————————————————————————————–

என்நெஞ்சத்துள் இருந்து இங்கு இரும் தமிழ் நூலிவை மொழிந்து
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரததத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான்
நல் நெஞ்சே நம்பெருமான் நமக்கருள் தான் செய்வானே -10-6-4-

அடியார்க்கு விதேயன் என்று முன்னமே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் திறத்தும்
பாண்டவர்கள் திறத்தும் காட்டி அருளினான்
என்நெஞ்சத்துள் இருந்து இங்கு இரும் தமிழ் நூலிவை மொழிந்து-நெடும் காலம் சம்சாரத்தில் மண்டிக்  கிடந்த என் நெஞ்சத்துக்குள்ளும் இருந்து அருளினானே
அவன் உகப்பதால் என் நெஞ்சு என்கிறார் மமகாரம் முற்றும் நீங்கப் பெற்ற ஆழ்வார்
என் நெஞ்சு ஹேதுவாக உள்ளே புகுந்து ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து திருவாய் மொழி பாடுவித்துக் கொண்டு அருளினான்
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் என்றார்
இங்கே இரும் தமிழ் நூலிவை அவன் மொழிந்தான் என்கிறார்
அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று அநாதி நித நா சொல்லி வைத்து
ஸ்வயம்புவா உத்ஸ்ருஷ்ட வாக் -என்றால் போலே -இங்கும் கொள்க –
இப்படி திருவாய்மொழி பாடுவித்துக்கொண்டது பரத்வம் இல்லை சௌலப்யமே தானே
சிறுக்கன் நினைத்த படி செய்தவன் நான் நினைத்த படி செய்யானோ
மன் அஞ்ச -மலை புரை தோள் மன்னவரும் மாதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேலே முன் அங்கு நின்று மோழை எழு வித்தவன் —
ஆஸ்ரித பஷ பாதி அன்றோ அவன் முன்னமே –

—————————————————————————————————————————————————————————————————————————————

வானேற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேனேறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தானேறித் திரிவான தாளிணை என் தலை மேலே –10-6-5-

அர்ச்சிராதி கதி போகப் பெருகி சமீபித்து விட்டது என்று ஹர்ஷத்தால் அருளுகிறார்
வானேற வழி தந்த -இதுவே நிரூபகம் திரு வாட்டாற்று எம்பெருமானுக்கு -வானேற வழி -அர்ச்சிராதி மார்க்கம்
முக்தோர்ச்சிர் தின பூர்வபஷ ஷடுதங்மாசேத்யாதியாக நடதூர் அம்மாள் அருளிச் செய்துள்ளார்
நடைபெறவங்கிப் பகலொளி நாள் உத்தராயணம் ஆண்டு -தேசிகன்
தந்த -தரவில்லையாயினும் இறந்தகாலம் -தேற்றம் பற்றி அருளிச் செய்கிறார்
பணி வகையே நானேறப் பெறுகின்றேன் -மோஷயிஷ்யாமி மாசுச -முன்பே கீதையில் அருளிச் செய்த படியே
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரத்தை பார்த்து உன்னை அடி அறுத்தோம் என்று சிரி நெஞ்சே என்கிறார்
பிள்ளை அழகிய மணவாளப் பெருமாள் அரையர் -ஒரு வியாதி விசேஷத்தால் மிகவும் நோவு பட்டு இருந்தார்
ஸ்ரீ ரெங்க நாதன் பரம பதம் அருள திரு உள்ளம் பற்றி திரு மாலை திருப் பரி வட்டம் வரிசைகளை வரவிட்டு அருள
நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -சொல்லிச் சிரித்தாராம்
ஆழ்வாருக்கும் எம்பெருமான் தாளில் அணிந்த துளசி மாலை உடன் பெரிய திருவடிமேல் சேவை சாதிக்கின்றான்
தேனே மலரும் திருப்பாதம் -தேன் வெள்ளமிடா இருக்குமே
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -அந்த தேனும் திருத் துழாய் மேலே ஏறி தேனேறு துளவம் ஆயிற்று
செழும் பறவை தானேறி-பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -கைக் கொள்ளத் தான் செழும் பறவை தான் ஏறி அருளுகிறான்
திரிவான -திரிவானுடைய அ ஆறாம் வேற்றுமை உருபு
கலியன தமிழவை – 8-7-10-பிரயோகம் உண்டே
தாளிணை என் தலை மேலே -பெரிய திருவடியின் மேலே இருந்த திருவடிகள் என் தலை மேலே ஏறப் பெற்ற திசயம் தான் என்னே-

——————————————————————————————————————————————————————————————————————————————–

தலைமேல தாளிணைகள் தாமரைக் கண் என்னம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத் தரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பொசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

தாம் பெற்ற பேறுகளை ஓன்று இரண்டு மூன்று என்று அடுக்குகிறார்
திருவடிகளை தலை மேலே வைத்து அருளினான்
அழகிய திருக்கண்களால் குளிரக் கடாஷித்து அருளினான்
ஒரு காலும் என் நெஞ்சில் நின்றும் பேரான்
நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கி அணியாய் -பிரார்த்தபடியே -தலைமேல தாளிணைகள்-
தாமரைக் கண் என்னம்மான்-எழுவாய் போலே தோன்றினாலும் -முன்னே நின்று குளிர நோக்கினான்
நிலை பேரான் என் நெஞ்சத்து -பெறாமல் நின்று அருளுகின்றான்
சௌபரி ஐம்பது வடிவு கொண்டால் போலே எம்பெருமான் ஆழ்வாரை அனுபவிக்க அநேக விக்ரஹம் கொள்ளா நின்றான் -நம்பிள்ளை
மலை மாடத் தரவணை மேல் வாட்டாற்றான்-பர்யங்க வித்யைப் படி முக்தாத்மா திரு வநந்த ஆழ்வான் மேலே அடி இட்டு பெரும் பேறு உண்டே
அனுபவ விரோதிகள் பல உண்டே என்ன அவை குவலயா பீடம் பட்டது படும் என்கிறார்
தமது விரோதிகள் ஆகிய மத யானையை முடித்து அருளி பேறு அருளினான்-

——————————————————————————————————————————————————————————————————————————————–

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதமன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலரடிமேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே –10-6-7-

கீழே எட்டாம் பத்தில் குட்ட நாட்டுத் திருப் புலியூரில்
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் -என்று தோழிமார் நிரூபித்த அத்தையே
தம் வாயால் அருளிச் செய்கிறார் -வாட்டாற்றான் மலரடிமேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே-என்று
குரை கழல்கள் குறுகினம்-மீண்டும் சொல்லி –இது மெய்யே -கமழ்தல் மூலம் அறியலாமே -என்கிறார்
நம் கோவிந்தன் குடி கொண்டான்-என்றும்
கோவிந்தன் நம் குடி கொண்டான்-என்றும் அன்வயம்
பசுக்களோடு கலந்து கோவிந்தன் பெயர் சூடப் பெற்றான்
அரவத்தமளியினோடும் அரவிந்த பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -என்றால்போலே
பஞ்ச லஷம் குடியோடு -பரிஜன பரிவார சமேதனாய் குடி கொண்ட படி பாரீர்
என் வார்த்தையில் சங்கை கொண்டால் உடம்பை மோந்து பார்த்து தெளிந்து கொள்வீர்-

————————————————————————————————————————————————————————————————————————

மெய்ந்நின்று கமழ் துளவ விரையேறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு வுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே –10-6-8-

ஸூ க்ருதம் ஒன்றும் இன்றிக்கே இருக்க பெற்ற பேற்றின் கனத்தை பார்த்து – என்ன விஷயீ காரம் நெஞ்சு குழைகிறார் –
மெய்ந்நின்று கமழ் துளவ-விரையேறு திரு முடியன் –
இங்கு மெய் என்று ஆழ்வார் திருமேனி -எம்பெருமான் திரு மேனி இரண்டையும் சொல்லிற்றாகவுமாம்
கடலிலே நீர் சஹ்யத்திலே ஏற கொழித்தால் போலே காணும்
திருமேனியில் திருத் துழாயின் பரிமலமானது
மெய்யெல்லாம் கொண்டு தலைக்கு மேலே போனது -ஈடு
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது -எம்பெருமானுக்கு ஆஸ்ரித விரோதி நிரசன கார்யம் திரு உள்ளத்தில் நினைந்திட்ட மாத்ரத்திலே
அந்த கார்யம் செய்து தலைக் கட்டி அடுத்த ஷணம் கையிலே ஏறி நிற்கப் பெறுவான்
அஷேஷூ சக்தமதிநா ச நிராதரேண வாரணா ஸீ ஹரபுரி பவதா விதக்தா -அதி மானுஷ ஸ்தவம்
புனல் மைந்நின்ற வரை போலும் திரு வுருவன்–புனல் போலவும் -மை போலவும் -நின்ற வரை போலவும்
திருத் துழாய் பரிமளம் -கையும் திரு ஆழியுமான சேர்த்தி அழகு -பச்சை மா மலை மேனியை முற்றூட்டாக அனுபவிப்பித்து
விஷயீ காரம் பண்ணி அருளினான்
வாட்டாற்றாற்கு எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே-
செய்ந்நன்றி தேடிக் காணாதே கெடுத்தாய் தந்தாய் என்ற அத்வேஷ ஆபி முக்யங்களும் சத் கர்மத்தால் அல்ல -ஆச்சார்யஹிருதயம் -108-
நன்மை என்று பேரிடலாவது தீமை தான் செய்தேனோ
பெரிய வுடையாரைப் போலே தடையோடே முடிந்தேனோ
திருவடியைப் போலே த்ரஷ்டா சீதா என்று வந்தேனோ
அன்றிக்கே ஆஞ்ஞானுவர்த்தனம் பண்ணினேனாம் படி விஹித கர்மங்களை அனுஷ்டித்தேனோ –
என்ன நன்மை செய்தேனாக என் நெஞ்சினில் புகுந்து
பெறாப் பேறு பெற்றால் போலே விளங்கா நின்றான் -ஈடு-

————————————————————————————————————————————————————————————————————————-

திகழ்கின்ற திருமார்பில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திரு மாலார் சேர்விடம் தண் வாட்டாறு
திகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வின்றி எந்நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே –10-7-9-

இகழுகைக்கு வேண்டுவன உள்ள என்னிடத்தில் இகழ்வின்றி இருக்கிறானே -இது என்ன வ்யாமோஹம்
தனக்கு திவ்ய மகிஷியோ சர்வ லோகேச்வரியான பெரிய பிராட்டியார்
தான் உறைவிடமோ திரு நாட்டிலும் வீறு பெற்ற திருவாட்டாறு
தனக்கு திவ்ய வாகனமும் அடியார்கள் விரோதியைத் தொலைக்க வல்ல பெரிய திருவடி -வேதாத்மா விஹகேச்வரா –
இப்படி பெருமைகள் இருந்து வைத்தும் என் தாழ்வுகளைப் பாராதே –
ஒரு நொடிப் பொழுதும் என்னை விட்டு பிரிந்தால் தரிக்க மாட்டாதவனாய் உள்ளானே –
திகழ்கின்ற திருமார்பில் திரு மங்கை தன்னோடும் -திரு மார்புக்கு ஆபரணம் இட்டு அதனால் விளக்கம் பெருவிக்க வேணுமோ
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்க
அதற்கு மேலே பெரிய பிராட்டியாரும் இருக்கும் சேர்த்தி அழகு பேச்சுக்கு நிலமோ
ஸ்ரீ மான் -திருவுக்கும் திருவாகிய செல்வன்
எப்பொழுதும் பிரியானே-மாறி மாறி பல பிறப்பும் பிறந்த நித்ய சம்சாரி இவன் என்ற தண்மை ஆராயாதே
ஒரு ஷணமும் விட்டுப் பிரியாதே இருக்கும் இருப்புக்கு அடியான வ்யாமோஹம் என் கொல் –

——————————————————————————————————————————————————————————————————————————

பிரியாது ஆட்செய் என்று பிறப்பறுத்து அற ஆள் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள் வாயரவணை மேல் வாட்டாற்றான் காட்டினானே –10-6-1-

பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு காட்டினானே –
பிரியாதே இருந்து -அடிமை செய்யுமாறு சோதி வாய் திறந்து அருளிச் செய்தான்
வாய் விட்டுச் சொன்னது மட்டும் இல்லாமல் கைங்கர்யம் கொண்டும் அருளினான்
வேரோடு பிறப்பையும் அறுத்து அருளினான்
இவை யாம் நிர்ஹேதுக கிருபையால் பெற்ற பெறாத பேறு –

அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று-இதற்கு முன்பே தமக்குப் பண்ணின மற்றொரு உபகாரத்தை சொல்கிறார் -ஈடு
ஆழ்வாரை அனுபவிக்கைக்காகவே திருவவதாரங்கள் அமைந்தன
அன்று -அந்த உபகாரம் -இன்றோ இவ்வளவ்வு பெறாப் பேறு என்றபடி
ஸ்ரீ விஷ்ணு தர்மம் ஷத்ர பந்து உபாக்கியானம் –
மகாத்மானாம் சம்ச்ரயம் அப்யுபேதோ நைவ அவஸீததி துர்க்கதோபி –
அதி துர்க்கதோபி மிகவும் சிறியவனாய் இருந்தாலும்
மகாத்மானாம் சம்ச்ரயம் அப்யுபேதோ-பெரியோர்க்கு ஆட்பட்டான் ஆகில்
நைவ அவஸீததி -மேன்மை உடையவனே அல்லது கீழ்மை அடைய மாட்டான்
அதரீ க்ருதோபி மஹதா தமேவ சேவேத சாதாம் பூஷ்ணு -அலபத சமயே ராஜ்யம் பாதாக்ராந்தாபி பாதுகா சௌரே-தேசிகன்
மகா புருஷ சமாஸ்ரயணம் பண்ணினால் பின்னை அவர்கள் கொள்ளுகிறவன் சிறுமை பார்த்தல்
கொடுக்கிற பொருளின் பெருமை பார்த்தல் செய்யாதே கொடுப்பார்கள் என்று இங்கனே நாட்டில் ஒண்டு உண்டு
அத்தை என் பக்கலில் காட்டினான்
ப்ரஹ்லாதிகளைக் கொண்டு திருவாய் மொழி பாடுவித்துக் கொண்டானோ -ஈடு

———————————————————————————————————————————————————————————————————————————

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகழ் ஒழித்த
வாட்டாற்று எம்பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே –10-7-11-

கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்று பயன் சொல்லி இப்பதிகம் வல்லார் நித்ய முக்தர்களை கேட்ப்பிக்க வல்லார் ஆவார் –
இன்னம் சொல் இன்னம் சொல் கேட்பார்களாம்
நில உலகில் இருந்து வருகிறீர்களே என்ன விசேஷம் என்பார்கள்
திருக் குருகூரில் ஆழ்வார் தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்னார் -என்பர்
ஒரு பதிகம் சொல்லிக் காண்மின் என்பர்
இப்பதிகம் மேற்பட போக்யமான பதிகம் தோன்றாமல் இதைப் பாட -அப்பொழுது அவர்கள் படும் பாட்டைப் பார்க்க வேணுமே –
காட்டித் தன் கனை கழல்கள் -திருவடி -திரு மேனிக்கும் உப லஷணம்
தன் ஸ்வரூப ரூப குண விபூதி குணங்களை பிரகாசிக்கும் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி –
கடு நரகம் புகழ் ஒழித்த -பொய் நின்ற ஞானமும் –இனி யாம் உறாமை -அடியிலே அபேஷித்தத்தை தலைக் கட்டி அருளினான்
செவிக்கு இனிய செஞ்சொல்லே –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -இளைய புன் கவிதை -என்பார்
கீழே என்நாவில் இன்கவி -என்றாரே
தம்மையும் உளுக்கின படி-

—————————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

அருளால் அடியில் எடுத்த மாலன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் –96

—————————————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading