திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்-10-4-

ஆழ்வார் தாமான நிலை விட்டு பெண் தன்மை எய்தி பேசும் பரிசு முதல் பத்தில் அஞ்சிறைய மட நாராய் -தொடங்கினார்
வேய் மரு தோளிணை -கீழ்ப் பதிகத்துடன் தலைக் கட்டினார் –
தம்மைப் பிரிய நினைவு இன்றிக்கே இருக்க அதிசங்கையாலே பிரிந்தார் படும் வ்யசனத்தைப் பட்டு
அத்தாலே அவசன்னரானவரை -உம்மை ஒரு நாளும் பிரியேன் என்று அவன் ஆஸ்வசிப்பிக்க அத்தாலே தரித்து மிகவும் ப்ரீதரானார் கீழ் -நம்பிள்ளை
மணவாள மா முனி -தன்னை இன்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த மாறன் -என்றார்
இனி பரமபத பிராப்தியிலே சந்தேகம் இல்லை என்று துணிந்து
திருவாய்மொழி ஆகிற மகா சாஸ்தரத்துக்கு செய்ய வேண்டியவை எல்லாம் செய்து தலைக் கட்டத் தொடங்குகிறார் இனி
ஆச்சார்யஹிருதயம் -பிணக்கறவை சார்வாக நியமித்து -என்கிறபடியே
ஆதியிலே பிறருக்கு உபதேசித்த பக்தி -பலத்தோடு சேர்ந்த படியைச் சொல்லி நிகமிக்கிறார் இதில்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராவணனைக் குறித்து உபதேசிக்க
அவ்வுபதேசம் அவனுக்கு பலியாது ஒழிந்தாலும்-உபதேசித்தவற்கு பெருமாள் பக்கலிலே
ப்ராவண்யம் கனத்து தன் பேற்றுக்கு உறுப்பானால் போலே
இவருக்கும் பரோபதேசம் தம்முடைய பிராவண்யம் கனக்கைக்கு உடலாகி சபலமான படியைச் சொல்லி நிகமிக்கிறார்
பிள்ளான் உடைய நிர்வாகமாக ஈட்டில் ஒரு சங்கதி அருளிச் செய்யப் படுகிறது
நீ பசு மேய்க்கப் போக வேண்டாம் என்றவாறே
ஆகில் தவிர்ந்தேன் -என்றான் எம்பெருமான்
அந்த பெரும் குணத்திலே ஈடுபட்டு
இவன் பக்தி சுலபன் என்பதை நிச்சயித்து
அது தன்னை அருளிச் செய்கிறார் -இத் திருவாய் மொழியில் -என்று –

—————————————————————————————————————————————————————————————————————————–

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலை நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே –10-4-1-

உபய விபூதி நாதனாய் இருந்து வைத்து
பத்துடை அடியவர்க்கு எளியனான எம்பெருமான் திருவடிக்க
பக்தி யோக சுலபம் -என்கிறார்
வணக்குடைத் தவ நெறி -என்றார் ஆதியிலே -பத்துடை அடியவர்க்கு பதிகத்தில் –
தவ நெறி -பக்தி மார்க்கம் -அதற்கு தாமோதரன் தாள்கள் சார்வே -என்றபடி
உரலோடு கட்டுண்டான் -நினைக்கவும் சொல்லவும் -சம்சாரக் கட்டுகள் அவிழும்
பிராப்திக்கு விரோதிகள் எல்லாம் தொலையும்
கார்மேக வண்ணன்-
நீர் கொண்ட காளமேகம் போலே விடாய் தீர்க்கும் வடிவுடையவன்
பக்திக்கு இத்தலையால் க்ருஷியாக வேண்டாதபடி
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனியன்
கமல நயனத்தன்-வாத்சல்யம் போன்ற நீர்மை குணங்களையும் மேன்மையையும் காட்டிக் கொடுக்கும் கண் அழகு படைத்தவன்

ஆக இத்தால் திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யம் சொல்லிற்று -மேலே ஸ்வரூப வை லஷண்யம் சொல்லுகிறது
பஞ்ச பூதங்களைச் சொன்னது அவற்றால் ஆகும் லௌகிக பதார்த்தங்கள் சொல்லி -இத்தால்லீலா விபூதி நாதன் என்று காட்டி அருளுகிறார்
நேமியான் -திரு ஆழி ஆழ்வானைச் சொல்லி இத்தால் நித்ய விபூதி யில் இருக்கும் இருப்பைச் சொல்லிற்று
பேர் வானவர்கள் -பேர் என்றத்தை வானவர்களுக்கு விசேஷம் ஆக்கி நித்ய சூரிகளை சொல்லி
அன்றிக்கே
வானவர்கள் பேர் பிதற்றும் பெருமையன் -என்று யோஜித்து திரு நாமங்களை பிதற்றுவதை சொல்லிற்று
ஆக -கார் மேக வண்ணனாய்-கமல நயனத்தனனாய் -நீர் வானம் மண் கால் எரி காலை நின்ற நேமியனாய்
-பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே இருந்து வைத்து
தாமோதரனானவன் உடைய திருவடிகளே தவ நெறிக்கு சார்வு என்றதாயிற்று –

——————————————————————————————————————————————————————————————————-

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு
அருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே –10-4-2-

தாமோதரன் தாள்கள் தவ நெறிக்கு சார்வே -என்றவர் -அது தம்மளவில் பலித்த படியை அருளிச் செய்கிறார் இந்த பாசுரம் தொடங்கி-
பெருமையனே வானத்து இமையோர்க்கும்-
யுககோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புநஸ் த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி சுச்ரும –
ப்ரஹ்மாதிகளும் பெருமை படி
காண்டற்கு
அருமையனே ஆகத் தணையாதார்க்கு-ஆகம் -ஹிருதயம்
தங்கள் உடைய ஹிருதயத்தில் எம்பெருமானைக் கொள்ளாதார்
அன்றிக்கே
தன்னைக் காண வேணும் என்னும் ருசி இல்லாதார்க்கு காண்கைக்கு அரியன்
அன்றிக்கே
எம்பெருமான் உடைய திரு உள்ளத்தில் அணையப் பெறாதவர்க்கு-பரகத ச்வீகாரத்துக்கு இலக்காகாதவர்கள் –
தானே வந்து மேல் விழா நின்றால் விலக்காமை இன்றிக்கே இருப்பார்க்கு காண அரியனாய் இருக்கும் –
சம்பந்தம் இன்று தேட வேண்டா
பெற வேண்டும் யென்கையும் -வேண்டாம் யென்கையும் இ றே உள்ளது -நம்பிள்ளை
என்றும் திரு மெய்யுறைகின்ற-சேதனர்களோ குற்றங்களுக்கு கொள்கலமாய் இருப்பவர்கள் –
ஈஸ்வரனோ குற்றங்களுக்கு தக்கபடி தண்டனை தருமவன்-
இவ்விரண்டையும் நோக்கி -என்னாகுமோ என்று அஞ்சி –
புருஷகாரம் பண்ணிச் சேர்க்கைக்காக பிராட்டி இடைவிடாது உறையும் திரு மார்பை உடையவன்
செங்கண் மால் -அப்பிராட்டியின் நித்ய சம்ச்லேஷத்தாலே நீர் பாய்ந்த பயிர் போலே
விலஷணமான செவ்வி பெற்ற திருக் கண்களை உடையவனாய்
அடியார்கள் பக்கல் வ்யாமோஹமே வடிவு எடுத்தவன்
நாளும் இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே-இப்படிப்பட்டவன்இருமை வினை கடிந்து நாளும் இங்கே ஆள்கின்றான்
இரும்பு விலங்கு பொன் விலங்கு இரண்டையும் அறுத்து
திரு நாட்டில் கொள்ளக் கடவதான அடிமையை நாள் தோறும கொள்ளா நிற்கின்றான் –

———————————————————————————————————————————————————————————————————

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம்
மீள்கின்றது இல்லைப் பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே –10-4-3-

எம்பெருமான் திருவடிகளை சென்னிக்கு அணியாக கொண்டு அனுபவிக்கப் பெற்றேன்
இனி சம்சாரம் மறுவல் இடாது -இனி என்ன குறை
ஆள்கின்றான் ஆழியான் -எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –
ப்ரணத ரஷாயாம் விலம்பம் அசந்நிவ சதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸ்ரீ ரெங்க நாயக –
கையும் திருவாழியுமாக நின்று விரோதியைபோக்கி அடிமை கொண்டான்
ஆரால் குறைவுடையம் –உபாயாந்தரங்களாலும் உபேயாந்தரங்களாலும் அபேஷை உடையோம் அல்லோம் –
உன்னல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –
மீள்கின்றது இல்லைப் பிறவித் துயர் கடிந்தோம் -புநரபி ஜனனம் புநரபி மரணம் ஜனனீ ஜடரே சயனம் -என்னும் நிலை தவிர்ந்தோம்
இனி மறுவல் இடாத படி சம்சார துரிதம் ஓட்டினோம்
மேலே -முனியே நான் முகனே -மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூம் குழலாள் திருவாணை நின் ஆணை கண்டாய்
என்று ஆணை இடும் அளவும் சம்சாரம் வர்த்திக்கும்
அத்தை இபொழுதே கடிந்ததாக சொல்வது நெஞ்சிலே உண்டான தெளிவால்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் -இப் பேறு நப்பின்னை அடியாக பெற்றேன்
கருமங்களுக்கு தக்கபடி செயல் செய்பவன் ஆனாலும் திருக் கண் நோக்கைப் பின் செல்வானே
அபராதம் கண்டு உபேஷித்தான் ஆகில் பிராட்டி திருக் கண் நோக்கம் பெறானே
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டானே -என்று திரு மங்கை ஆழ்வார்
பிராட்டி நோக்கமே உணவு -அந்த உணவை அவன் இழப்பானோ
கண் அழகாலே துவக்க வல்லவள்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே
நப்பின்னை நாதன் திருவடிகளை தலை மேல் கொண்டு கிருத்க்ருத்யன் ஆனேன்-

———————————————————————————————————————————————————————————————————————————————-

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேனே –10-4-5-

அவன் தருவடிகளை தலை மேல் புனைந்த படி கிடக்கட்டும் –
அவன் தானே வந்து ஹிருதயத்துக்குள் புகுகைக்கு கிருஷி பண்ணின படியையும்
அந்த கிருஷி பலித்த படியையும்
அதனால் அவன் க்ருதக்ருத்யனாக இருந்த படியையும் கண்டு களித்தேனே
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம் அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் -பிரார்த்தித்துப் போகை அல்லாமல்
திருவடிகளை வைத்துக் கொள்ளப் பெற்றேன்
அமரர் சென்னிப் பூவான திருவடிகளை என் சென்னிப் பூவாக பெற்றேன்
இது பலிக்க அவன் செய்த செயல்கள் –
இமையோர் வணங்க ஆலின்இலை மேல் துயின்றான்
பிறகு மலை மேல் தான் நின்றான்
அதற்குப் பிறகு என் மனத்துள் இருந்தான்
ஆலின்இலை மேல் துயின்றான் -தன்னைக் கொண்டு கார்யம் உடையார் சிலரைக் கண்டிலன்

-எல்லாருக்கும் ஆராய்ச்சி படும்படியான கார்யம் செயலைச் செய்வோம் என்று பார்த்தான்
வேண்டாம் என்பாரைக் கண்டது இல்லை –
அது சாத்மித்தவாறே நித்ய சூரிகளும் தானுமாக திரு மலையில் நின்றான்
அதுவும் சாத்மித்தவாறே இவருடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான்
இங்கு விளக்குவார் இல்லாமையாலே ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்தான்
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து இவருடைய மனக்கடலில் வாழப் புக்கான் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்
ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை -171-அங்குத்தை வாஸம் சாதனம் இங்குத்தை சாத்யம்-
கல்லும் கனைகடலும் என்கிறபடியே இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும்
இளம் கோயில் கை விடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாய் இருக்கும்
ப்ராப்ய ப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞ்ஞதை யாலும் பின்பு அவை அபிமதங்களாய் இருக்கும் –
இங்கு –
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேனே-என்கிற இப்பாசுரம் தலையான பிரமாணம்
அவன் பேறாக கொண்டதால் நிலை பெற மாட்டான்
நம்மாலும் பிரதிகூல்யம் செய்ய முடியாமல் நெஞ்சை கொண்டான் –

—————————————————————————————————————————————————————————————————

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத் தண்ணல் கள்வம் பெரிதுடையன்
மெச்சப்படான் பிறர்க்கும் மெய் போலும் பொய் வல்லன்
நச்சப்படும் நமக்கு நாகத் தணை யானே –10-4-5-

கள்வம் பெரிதுடையன்-நாம் அறியாமல் பலவும் பாரியா நின்றானே
நெஞ்சம் கழியாமை மாத்ரம் அன்று
அர்ச்சிராதி மார்க்கத்தில் கொண்டு போக நினைப்பது
அமாநவ கர ஸ்பர்சம் சேவிக்க நினைப்பது
மதி முக மடந்தையரை வரக் காட்டி எதிர் கொள்ள அழைப்பது
இதை போன்றவகைகளே நெஞ்ச்லே இருந்து கொண்டே ஏகாந்தமாக பாரிப்பதையே கள்வம் பெரிதுடையன் என்கிறார்
ஆழ்வார் அறிந்த விதம் என்ன -முகத்திலே அறிய வல்லாரவர் அன்றோ – கைச் சக்கரத் தண்ணல்-ஆஸ்ரிதரை ஒரு போதும் கை விடாதவர் –
மெச்சப்படான் பிறர்க்கும் -நான் தான் அவன் திருக் கல்யாண குணங்களை புகழலாம் –
ஆழ்வார் விஷயத்தில் அவன் பாரிப்பது சர்வ சாதாரணம் அன்று
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அறிய வித்தகன் –
மெய் போலும் பொய் வல்லன் -இங்கே ஈடு -அர்ஜூநாதிகள் பக்கலிலே இருக்குமா போலே இ றே
துரியோத நாதிகள் பக்கலிலும் இருப்பது
கார்யத்தில் வந்தால் மெய் செய்வாரைப் போலே பொய் செய்து தலைக் கட்டும் –
அடியார்களுக்கு மெய்யே செய்வாரைப் போலே பிறருக்கு பொய்யே செய்ய வல்லவன் -பரம தாத்பர்யம்
நச்சப்படும் நமக்கு -நமக்கு நச்சப்படும் -உகவாதார் விஷயத்தில் செய்வதை நம் விஷயத்தில் செய்யான்
இதற்கு திருஷ்டாந்தம் காட்டுகிறார் –
நாகத் தணை யானே-என்று –
நம்மில் ஒருவனான திரு வநந்த ஆழ்வான் பக்கல் பரிமாற்றம் கண்டால்
அப்பரிமாற்றம் நமக்கும் ப்ராப்தம் ஆகும் என்று நம்பி இருக்கத் தட்டுண்டோ –

————————————————————————————————————————————————————————————————————

நாகத்தணையானை நாள் தோறும் ஞானத்தால்
ஆகத்தணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்திள மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன பாதம் பணிந்தேனே –10-4-6-

இன்று வந்து அடிமை செய்யப் புக்காரையும் –
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமானத் துங்கன் செல்வனைப் போலே திரு மாலே நானும் உனக்குப் பழ வடியேன் –
என்று சொல்லும்படி நித்ய ஆஸ்ரிதரைப் போலே விஷயீ கரிக்குமவன் திருவடிகளிலே விழப் பெற்றேன்-
நாகத்தணையானை -உகந்தாரைப் படுக்கையாகக் கொள்பவன்
நாள் தோறும் ஞானத்தால் ஆகத்தணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை -சேமுஷீ பக்தி ரூபா -என்றபடி -பக்தியை ஞானம் என்கிறது இங்கு
தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி தி –
நாள் தோறும் -என்பதை ஆகத்தில் அணைப்பாரில் கூட்டி
சர்வ காலமும் பக்தி செய்பவர்கள் எனபது சுவை கேடு
இவனால் எப்போதும் நினைக்கப் போகாதே -அக்குறை தீர ஏக ரூபனான தான் நாள் தோறும் அருள் செய்யுமாய்த்து -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் –
நாம் செய்யும் நலம் சக்ருத் ஆனாலும் அவன் செய்யும் அருள் அசக்ருத் தாய் இருக்கும் -என்கை
மாகத்திள மதியம் சேரும் சடையானை பாகத்து வைத்தான் தன பாதம் பணிந்தேனே-சீலம் சொல்கிறது
சந்திர மௌலீச்வரனை திருமேனியிலே பாகத்திலே இடம் கொடுத்த சீலன் –
இப்படிப் பட்ட எம்பெருமான் பாதம் பணிந்தேன் –

—————————————————————————————————————————————————————————————————————————-

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி யொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணி நின்ற சோதி மது சூதன் என்னம்மான்
அணி நின்ற செம்பொன் அடலாழியானே –10-4-7-

நெஞ்சே நல்ல வாய்ப்பாய் இருக்கிறது -பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை-
இந்த்ரன் பிரமன் மேற்பட்ட நித்ய சூரிகளுக்கு தலைவன்
பிணி யொன்றும் சாரா -சம்சாரம் கிலேசம் ஒன்றும் தட்டாது
பிறவி கெடுத்தாளும் -துக்கங்களுக்கு அடியான ஜென்மத்தை அடியோடு போக்கி நம்மை நித்ய கைங்கர்யம் கொள்ளுமவன்
மணி நின்ற சோதி -இப்படி செய்யா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு படைத்தவன்
மது சூதன் என்னம்மான் -கீழ் சொன்ன வடிவு அழகை அனுபவிக்க ஒட்டாத விரோதிகளை தள்ளிக் கொடுத்து அருளுபவன்
அணி நின்ற செம்பொன் அடலாழியானே-கையும் திரு ஆழியுமான அழகை நம்மை அனுபவிக்கக் கொடுப்பவன்-

———————————————————————————————————————————————————————————————————————————-

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் –10-4-8-

பணி நெஞ்சே நாளும் -என்றவாறே நெஞ்சு உகந்து இருந்த நெஞ்சை கொண்டாடி இடைவிடாது அனுபவி என்கிறார்
ஆழியான்-சர்வேஸ்வரத்வ ஸூசகம்
ஆழி யமரர்க்கும் அப்பாலான் -நித்ய ஸூ ரிகளுடைய ஸ்வரூபம் ஸ்திதி தன அதீனமாய் இருப்பவன் –
ஊழியான்-பிரளய காலத்தில் தான் ஒருவனே உள்ளவன் -சம்ஹார சமயத்திலும் உலனாய் இருப்பவன்
நித்ய சூரிகளும் தானுமாய் பரம பதத்தில் பேர் ஒலக்கமாய் இருப்பவன் இங்கு உண்டான கார்ய வர்க்கங்கள் அடங்கலும் அழிந்து
கால சேஷமான காலத்தில் தான் வந்து தோற்றுமவன் -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள் –
ஊழி படைத்தான்-ஊழி -காலம் -உப லஷணம் -சகல பதார்த்தங்களையும் படைத்தவன்
பஹூச்யாம் சங்கல்ப்பத்தாலே உண்டாக்கி அருளினவன்
நிரை மேய்த்தான் -தன்னைப் படிப்பாரும் சில உண்டு -என்று வசூதேவாத்மஜன் -நந்தநந்தனன் -கோபால கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
ஸ்வ ரஷணத்திலே அந்வயம் இன்றிக்கே பண்ணும் ரஷணத்தை விலக்காத பசுக்களை ரஷிப்பவன் -ஈடு
பகவத் பிரவ்ருத்தி விரோத ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி உடையவர்களை ரஷித்து அருளுபவன் -சாஸ்த்ரார்த்தம்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்
எனக்கு விதேயமாய் -துணையாய் இருக்கிற நெஞ்சே
கை புகுந்த வஸ்துவை உபேஷிக்காமல்
நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கப் பார்
இடையிலே வாழி -என்று நெஞ்சுக்கு மங்களா சாசனம் செய்கிறார் சந்தோஷ அதிசயத்தால் –

————————————————————————————————————————————————————————————————————————————–

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே யொழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வாழி யொழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே –10-4-9-

ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாபிதி நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே –
ஒன்றி ஒன்றி நல்தவம் செய்து ஊழி ஊழி தோறெலாம்
நின்று நின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவதேவர் உம்பரும்பரும்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –
அப்படிப் பட்டவனை அவன் உடைய நிர்ஹேதுக கிருபையாலே காணப் பெற்றேன்
கமல மலர்ப்பாதம் காண்டலுமே -என்றைக்கும் கேட்டே போம் விஷயத்தை கண்ணாலே சாஷாத் கரிக்கப் பெற்றேன் –
அப்படி சாஷாத் கரித்த அளவிலே
விண்டே யொழிந்த வினையாயின வெல்லாம் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-அவனுடைய பிரதிஞ்ஞை பலித்ததாயிற்று
ஒழிந்த -ஒழிந்தன -என்றபடி
ணி ச்சாலே நீயும் வேண்டா நானும் வேண்டா -அவை தன்னடையே விட்டுப் போம் -முமுஷூப்படி
பண்டே பரமன் பணித்த பணி வகையே-சரம ஸ்லோஹப்படியே
பகவான் ஞான விதி பணி வகை என்று இவர் அங்கீ காரத்தாலே அதுக்கு உத்கர்ஷம் -ஆச்சார்யஹிருதயம்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -பாபங்கள் போக்குவதை சொல்லி கைங்கர்யம் வ்ருத்தியை சொல்ல வில்லையே
தொண்டே செய்து என்றும் தொழுது வாழி யொழுக -அதுவும் கண்ணபிரானுக்கு விவஷிதமே என்று அடி அறிந்தவர் ஆகையாலே
விளங்க வைத்து அருளினார் -ஸ்வரூபம் நித்தியமான பின்பு ஸ்வரூப அனுரூபமான வருத்தியும் நித்யமாகச் செல்ல வேண்டும் அன்றோ –

——————————————————————————————————————————————————————————————————————————————

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே –10-4-10-

பிரயோஜனாந்தர பரர்களோ –
உபயாந்தர நிஷ்டர்களோ –
பிரபன்னர்களோ
யாராயினும் யாவர்க்கும் எம்பெருமானே உபாயம் என்று சொல்லி தலைக் காட்டி அருளுகிறார் –
வகையால் -சரம ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட வகையில்
உபாசன சாஸ்திரங்களிலும் பிரபத்தி சாஸ்திரங்களிலும் சொல்லப் பட்ட படியே என்றுமாம்
மனம் ஒன்றி -நெஞ்சு ஒருமைப்பட்டு -அந்த கரணத்தை நியமித்து எம்பெருமான் ஒருவன் இடத்திலே தத் பரமாக்கி
மாதவனை-புருஷாகார க்ருத்யம் பண்ணிக் கூட்டுமவளோடே கூடி இருக்கிறவனை –
சரம ஸ்லோகத்தில் ஸ்ரீ சம்பந்தம் வ்யக்தமாக இல்லை யாகிலும் -மாம் -அஹம் -என்பதில் அதுவும் அனுசந்தேயம் என்று ஆழ்வாருக்கு திரு உள்ளம் –
த்வயத்திலே வ்யக்தம் -திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அவ்யக்தம்
நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திசை தோறமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் –
கால நியமம் இல்லாமலும்
ஆராதனா உபகரணங்கள் இல்லாமலும்
தங்களுக்கு கை வந்த பூஜா பரிகரங்களைக் கொண்டு
ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பணியும்படி பெருமை உடையவன்
அவனுடைய
சரணம் தமர்கட்கோர் பற்றே-திருவடிகளைப் பற்றினார்க்கு
பின்னையும் புறம்பு போய் ஒரு பற்று தேட வேண்டாத திடமான பற்று -என்றபடி
அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையானான -மாதவன் – சரணம் தமர்கட்கோர் பற்றே-என்று அந்வயம் –

——————————————————————————————————————————————————————————————————————–

பற்று என்று பற்றிப் பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை யந்தாதி ஓராயிரத்துள் இப்பத்தும்
கற்றார்கோர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே –10-4-11-

பற்று என்று பற்றி–தமக்கு புகலாக அறுதி இட்டு
ஓர் பற்றாகும் -ஒப்பற்ற பற்றாகும்
எம்பெருமான் திருவடிகள் சுலபமாய்க் கிட்டும் –
பரம்பரன் -சர்வேஸ்வரன்
மல் திண் தோள் விரோதி நிரசன சீலன் -மிடுக்கு கொண்டவன்
மாலை -அடியார் திறத்து வ்யாமோஹம் உடையவன் –

————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94

———————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading