திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

அருளாத நீர்அருளி அவர்ஆவி துவராமுன்

அருள் ஆழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்என்று

அருள்ஆழி அம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி

யருள்ஆழி வரிவண்டே! யாமும்என் பிழைத்தோமே?

பொ-ரை : வட்டமான வரிகளையுடைய வண்டே! அருட்கடலான எம்பெருமானைக் கண்டால், ‘அருள் செய்யாத நீர் திருவருள் புரிந்து, தலைவியினுடைய உயிர் உலர்வதற்கு முன்னர், அருட்கடலான கருடப்பறவையினை அவர் வீதியில் ஒரு நாள் மட்டும் செலுத்துவீர்’ என்று இவ்வார்த்தைகளைச் சொல்லியருள்; வாராத தாமேயன்றி, யாமும் எக்குற்றத்தைச் செய்தோம்?

வி-கு : ‘அருளி’ என்பதனைக் ‘கடவீர்’ என்பதுடன் முடிக்க. கண்டக்கால்-வினையெச்சம். யாம் என்பது, தனித்தன்மைப் பன்மை. உம்மை-எச்ச உம்மை. ‘வண்டு’ தும்பியின் இனத்தைச் சார்ந்தது; நன்மணத்தேமட்டும் செல்லும் இயல்பினது என்பர் நச்சினார்க்கினியர். (சிந்தாமணி 893. செய். உரை.)

ஈடு : ஆறாம் பாட்டு. ‘எங்கள் ஆற்றாமை நீக்கிலராயினும், தம்முடைய நாராயணன் என்ற பெயர் குறைந்து போகாதபடி, நோக்கிக்கொள்ளச் சொல்லுங்கள்,’ என்றாள் முன், ‘தாம் அல்லாதாருடன் கலந்து வரும் தாழ்வினைக்காட்டிலும் நம்முடைய நாராயணன் என்ற பெயர் அழியினும் அமையும்’ என்பதனை இறைவன் திருவுள்ளமாகக் கொண்டு, மேல் செய்யத் தக்க செயலைக் கூறுகிறாள் இப்பாசுரத்தில். அதாவது, தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒருவழி உண்டு. தாம் 1அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே? அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது; நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்; இப்படி மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு, அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள். அருளாத நீர்-2‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர். 3‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேடம் என்று அறிகிலோம்; ‘அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள். இனி, ‘அருளாத நீர் அருளி’ என்பதற்கு, ‘திருவருள் செய்வதற்குப் பரிபக்குவமுள்ள உயிர்கள் கிடைக்காமை

 யாலே அருள் 1குமரியிருந்து அருள் செய்யாதிருக்கிற நீர், அருள் செய்தற்குச் சமயம் வருமிடத்தில் அருள் செய்து’ என்று உரைத்தலுமாம். ‘அருளைக்கொண்டே நிரூபிக்க வேண்டும் தன்மை உம்மது; அருள் இல்லாதவர்க்கும் ‘அய்யோ’ என்ன வேண்டும் நிலை இவளது; அங்ஙனம் இருக்க, அருளாது ஒழிவது எங்ஙனே!’ என்பாள், ‘நீர் அருளி’ என்கிறாள்.

அவர் ஆவி துவரா முன் அவளுடைய உயிர் பசை அற உலர்வதற்கு முன் அருளப் பாரும். இனி, 2‘பின்னையும் அருள் செய்தற்குத் தவிரீர் அன்றே! ஆதலால், அவள், உயிர் அற்ற பொருளுக்குச் சமம் ஆவதற்கு முன்னர் அருளப் பாரும்,’ என்று பொருள் கூறலுமாம். 3‘கீர்த்தியையுடைய இராமன் என்னைப் பிழைத்து இருப்பவளாக எப்படிக் கௌரவிப்பாரோ, அப்படி உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது,’ என்றாள் பிராட்டியும். ‘நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது? அவன் அருள் செய்யப் போகின்றானோ?’ என்ன, ‘நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப்புள்-அருட்கடலான பறவை. 4வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே ‘அருளாழிப்புள்’ என்கிறாள். கடவீர் – ‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும் தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப் போகாதே 5பிசுகிச் சுழியாநிற்கும் ஆதலின், அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள், ‘கடவீர்’ என்கிறாள். ‘எங்கே?’ என்னில், அவர்வீதி – அவள் தெருவிலே. ‘அங்ஙனம் ஒண்ணுமோ? ஒரு தெருவில் பலகால் போகப் புக்கவாறே ‘இவ்வரவு ஒரு காரணமுடைத்து என்று கூறார்களோ?’ என்னில், ஒரு நாள்-நாங்கள் பிழைத்து கிடப்பதற்கு ஒரு நாள்-போக அமையும்.

அருள் ஆழி அம்மானை – 1‘தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார்,’ என்னும்படி அருட் கடலானவன். இதனால், பெரிய திருவடியும் மிகை என்கிறாள், இனி அருளை இறைவனுக்கு அடைமொழியாக்காது, ஆழிக்கு அடைமொழியாக்கி, ஆழி என்பதற்குச் சக்கரம் என்று கொண்டு, ‘அருளை நிரூபகமாகவுடைய திருவாழியைக் கையிலேயுடையவன்’ என்று பொருள் கூறலுமாம். ‘ஆயின், ஆழி அருளை நிரூபகமாக வுடையதாய் இருக்குமோ?’ எனின், 2‘அருளார் திருச்சக்கரம்’ என்ப ஆதலின், சர்வேஸ்வரனுக்கும் 3‘கைக்குறியாப்பை வாங்குவது இங்கேயன்றோ! சர்வேஸ்வரன்பக்கல் அருள் மறுத்தாலும் அருள் 4கூடு கட்டி நிற்கும் இடமன்றோ இது? இப்பொருளால், ‘பெரிய திருவடி ஒருவனுமேயோ! அங்குக் கையாளாக உள்ளார் அடைய நம் பரிகாரம் அன்றோ?’ என்று தெரிவிக்கிறாள்.

இது சொல்லியருள்-இத்தனையும் சொல்லியருளல் வேண்டும். ‘எது?’ என்னில், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்’ என்கிற வார்த்தையைச் சொல்லியருளல் வேண்டும். ஆழி வரி வண்டே-வருத்தத்தை நீக்கக் கூடியதாய் அழகியதாய் இருக்கிற வண்டே. இனி, இதற்கு ‘வடிவு சிறுத்திருக்கவும் காமபீர்யம் பெருத்திருக்கிற வண்டே’ என்றும், ‘சுழலப் பறக்கிற வண்டே’ என்றும் பொருள் கூறலுமாம். 5இதனால், இறைவனோடு சேர்க்கின்ற

 ஆசாரியனுடைய ஆத்துமகுணத்தைப் போன்றே, உருவத்தின் குணமும் உட்கோள் என்கை, யாமும் என் பிழைத்தோம் – ‘நாங்கள் என்ன தப்புச் செய்தோம்? தாம் பிரிந்து துவளவிட்டு வைத்தது போன்று, 1நாங்களும் கிரமத்திலே பெறுகிறோம் என்று ஆறியிருந்தோமோ? 2விலங்கின் காலில் விழுவாரும், தூது விடுவாரும் தாமாக இருக்க, 3அத்தலை இத்தலையாகியும் வாராது இருக்கிற தம்மதோ, எங்களதோ குற்றம்?’ என்பாள், ‘யாமும் என் பிழைத்தோம்?’என்கிறாள்.

நாரயணத்வம்  அழியாமல் நோக்கி கொள்ள சொன்னாள் கீழ்

அதற்க்கு அவன் பேசும் மறுவார்த்தை -அத்தை அழிந்தாலும் இவள் போன்ற நீசருடன் கலக்க  மாட்டேன்
அவத்யம் வரும் -என்று சொல்வான் ஆகில்
வண்டுகளுக்கு ஒரு யுக்தி சொல்லி விடுகிறாள் இதில்
நாராயண தவமும்  அழியாமல் –தமக்கு அவத்யம் வாராமே -தானும் சத்தை பெறும்படி
வலி சொல்லி விடுகிறாள் –
இருக்கும் தெரு வழியே ஒரு தடவை போனால் போதும்
அழகு செண்டேற புறப்படுதல் -யானைக்கு அருள் செய்ய புறப்படுதல்
ஏதேனும் உண்டே
எங்கள் தெரு வழி ஜன்னல் வழியே ஜீவித்து கிடப்போம் .
இத்தை செய்ய சொல் என்று வண்டி இரக்கிறாள்
அருளா தீ அருளி -வண்டு சொல்ல வேண்டிய வார்த்தை
அவர் ஆவி -தன்னையே படர்கை
அருள் ஆழி புள் -அடையாளமாக உடைய பெரிய திருவடி
மீண்டும் அவர் வீதி கடவீர்
இது சொல்லி அருள் -எத்தனை அருள்
இப்படி செய்யாததால் என் பிழைத்தோம்
செய்யா விடில் அப்படி என்ன பெரிய பிழை செய்தோம்
ஏதத் விரதம் மம-அருள சங்கல்பித்தவன் அருள மாட்டேன்
மயர்வற மதி நலம் அருளினான் என்று நெஞ்சு உருகி சொல்ல
அரு ளாத நீர் என்ன தசை இவருக்கு
பிள்ளான் -அருளாத நீர் -தசை விஷயம்
எம்பெருமானார் நிர்வாகம் -திரு நாமம் இப்படி சாதிக்கிறார்
அபஸ்மாரம் -காக்காய் வலிப்பு போல்

சேர்ந்து யார் இடமும் பழக முடியாது
சாகவும் ஒட்டாது –
அது போல தசையில்
மதி நலம் அருளி -விட்டான்
சம்சாரிகள் உடன்சேர முடியாமல் -அவன் கூடவும் சேராமல் இழுக்க
அவனே தாரகம் போஷகம் போக்கியம் அறிந்து -கலக்க விரும்பி
தன்னை வறுத்த தான் அனுக்ரகித்தானோ -பிள்ளான் நிர்வாகம்
இரண்டும் கெட்டான்  நிலை அபஸ்மாரம் –
முன்பு போல் சம்சாரியாக சுகப்படவும் முடியாது
நஞ்சீயர் -அருளினான் பட்டம் முன்பு சாத்தி அருளாத நீர் -என்று திரு நாமம் சாத்தி அருளுகிறார்
தயா விஷயம்பெறாமல் -தயை குமிறி கொண்டு இருக்கம் –
நீசன் வந்தாலும் –
தயைக்கு விஷயம் கிட்டியதும் -பண்ண வில்லை

நிர்தயருக்கும்
எனை போல் பிழை செய்வார் உண்டோ
உன்னைப் போலே பிழை பொறுப்பார் உண்டோ
ஆர்த்தி பிரபந்தம் –
அவர் ஆவி துவரா முன்
அசத் சமம் ஆவதற்கு முன்
பிராணன் பசை அற உலருவதற்கு முன்
நாங்கள் சொல்ல வேண்டியது தான் பாக்கியா -அவன் அருள வருவானா
நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டியதே
அவரை கூப்பிட்டு வர அருள் கடல் புள் உண்டே –
வெஞ்சிறை புள் அங்கெ அருளாழி புள் இங்கே
புள் கடவீர் -அனுகூளர் வண்டு வாழ்க்கைக்கும் –
கடவீர் -நடத்துவீர்
தேரை ஓட்ட வேண்டும் அது அசேதனம்
சுகஸ்பர்சத்தாலும் போகாத மயங்கி பிசுகி சுழியும் பெரிய திருவடி –
கடவ வேண்டுமேதயா குமிறி கொண்டு ஆள் தேடி இருக்க –

அடுத்த பாசுரம் மேலும் விபரித்து அருள போகிறார் –
தயீநாயனாக  இருக்க -நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் –
அருளே அடையாளம் அவன் பாபமே வடிவு கொண்ட நான்
பசை உலர்வதற்கு முன்னம்
ஜீவநதி மாம் -ஆவி துவரா முன் –
அவன் அருள புகா நின்றானோ என்ன –
அறிவிக்கும் அத்தனை ஒன்றே போதும்
வெஞ்சிறை புள் கொண்டு போனபடியால்
வரவுக்கு உடல் என்பதால் அருளாழி புள் இங்கே
கடவீர் -நடத்துகிறான் -தேரை ஓட்டுவது போல் -செதனமாக இருந்தும்
சுக ஸ்பர்சத்தாலும் அநு கூலர் -பக்கல் சகாயம் பண்ணவும் போகாதே பிசுகி -துளியும் அவர் வீதி

ஒரு நாள் ஜீவித்து கிடக்கைக்கு
தேவ பெருமாள் இன்றும் நடாத்துகிறார்
சரவணம் தீர்த்தவாரி
மூன்றாம் இரவு கருட சேவை ஆழ்வாருக்காகா
ஆழ்வார் பிரகாரம் வழியே
வைகானசம் நான்காவது நாள் நடந்தாலும் –
அருளாழி அம்மானை
பெரிய திருவடியும் மிகை -ஏன் அடியார் அது செய்யார் -பிராட்டி விட அவனுக்கு அருள் போல்
பெரிய திருவ விட
திரு வாடி மட்டும் இல்லை
கையாளாக உள்ளார் அடைய நம் பரிகாரம் அன்றோ
அருளார் திரு சக்கரம் -திரு விருத்தம்
அருள் ஸ்தாபிக்க -சக்கரத்தாழ்வார் இடம் கை கரண்டி கை கூலி ஆப்பை கடன் வாங்குவது போல் வாங்கி கொள்வான்
ஆழி வரி வண்டே
அழகிய
வடிவு சிறுத்து கீர்த்தி பெருகி
ஆத்மா  குணம் விட ரூப குணம் உத்தேசம்
அவன் சீர் வடிவை நோக்குபவன் –
யாமும் ஏன் பிளைதொமே
பிரிந்து தாளை விட்டது போல் ஆரி இருந்தோமே
திர்யக் காலில் விழுவாரும் தூது விடுவாரும் தாமாக இருக்க
அத்தலை இத்தலையாக-
வாராது இருப்பது அவன் பிழை தானே

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading