திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில்ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்குநீர்ப் புனல்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே!
மல்குநீர்க் கண்ணேற்குஓர் வாசகங்கொண் டருளாயே.

பொ-ரை : மிக்குப் பெருந்தன்மை வாய்ந்த தண்ணீரையுடைய தோட்டங்களில் இரையாகிய மீன்களைத் தேடுகின்ற கொடையினையுடைய சிறிய குருகே! உலகங்கள் ஏழனையும் தானே விரும்பி அவற்றிற்கு விருப்பமில்லாதனவற்றை நீக்கிக் காப்பாற்றுகின்ற நாராயணனைக் கண்டால், எனக்குத் திருவருள் புரிதல்தான் தகாததோ என்று கூறி, அவர் கூறுகின்றது ஒரு வார்த்தையைக் கேட்டு வந்து, நிறைந்த நீர் பொருந்திய கண்களையுடைய எனக்குச் சொல்லியருளல் வேண்டும்.

வி-கு : நல்கி – விரும்பி; ‘நறுமலர்க் கோதாய் நல்கினைகேளாய்’ (மணிமேக. 12 : 56.) என்ற இடத்தும் இப்பொருள்படுதல் காண்க. பொழில் -உலகம்; ‘முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கும்’ (திருக்கோ. 130.) என்றார் மணிவாசகரும். வாரிவளங்குன்றிக்கால்’ (திருக்குறள்) என்புழிப்போற்று. கண்டக்கால் என்பது வினையெச்சம். படப்பை – தோட்டக்கூறு; ‘பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்தி’ என்பது சிலப்பதிகாரம். குருகு என்பது, ஒரு பறவை விசேடம்; இது நாரையின் இனத்தைச் சார்ந்தது.

ஈடு : ஐந்தாம் பாட்டு. ‘முடிவார்க்கு வேண்டா அன்றே? ஆதலால், எங்களை விடீர்; ஜீவிக்க நினையும் தமக்குதாம் வேண்டாவோ?’ என்கிறாள். அதாவது, ‘தம்முடைய நாராயணன் என்னும் பெயர் 1ஒறுவாய்ப் போகாமல் நோக்கிக்கொள்ளச் சொல்,’ என்கிறாள்.

நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-உலகங்களைக் காப்பாற்றும்போது, செய்து தீரவேண்டுமே என்ற எண்ணத்தோடு அன்றிப் பேறுதன்னதாகக் காக்கின்றானாதலின், ‘நல்கி’ என்கிறாள். அதாவது, ‘எனக்குத் தன் பக்கல் உண்டான காதல், தனக்கு உலகத்திலே உண்டாய்க் காக்கின்றான்,’ என்றபடி. விரும்புவார் இல்லாதிருக்கவும், தானே காக்கின்றானாதலின், ‘தான்’ என்கிறாள். காத்தளித்தல் என்பது-விருப்பமில்லாதனவற்றை நீக்கி விரும்புகின்ற வற்றைக் கொடுத்தல். உலகம் 2ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டிருத்தலின், ‘பொழிலேழும்’ என்கிறாள். அன்றி, இவ்வுலகம், கீழ் உலகம் என்னும் இவ்விரண்டனையும் ஒன்றாகக் கொண்டு அதனோடு 1மேலே உள்ள ஆறு உலகங்களையும் சேர்த்து ஏழாகக் கோடலும் அமையும். ஆக, தன் சரீரத்தைப் பாதுகாத்துக்கோடல் அன்பினாலே ஆதலின், ‘தான் நல்கிக்காத்து அளிக்கும் பொழிலேழும் நாரணன்’ என்கிறாள். வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ-‘தம் மக்களைப் பாதுகாத்தல் ஆகாதோ?’ நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேண்டுமோ?’ என்றபடி. 2‘கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாவத்தைப் பண்ணுவேனே?’ என்பாள், ‘வினையேன்’ என்கிறாள். இனி, ‘நல்கித் தான் காத்து அளிக்கும் பொழிலேழும்’ என்பதற்கு, ‘பெயர் வேறாகவும் உருவம் வேறாகவும் பிரிப்பதற்குத் தகுதி இன்றிக் கிடந்த அன்று, 3யார் இருந்து விரும்ப, இதனை உண்டாக்கினான்? நீறு பூத்த நெருப்புப் போன்று, தான் என்ற சொல்லுக்குள்ளேயாய், தன்னை இட்டுப் பேச வேண்டி இருந்த அன்று, தன்மேலே, ஏறிட்டுக் கொண்டு நோக்கி அளிப்பவன்’ என்றும், ‘வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ?’ என்பதற்கு, ‘இல்லாத அன்று உண்டாக்கினான்; உண்டாக்கியதற்குப் பலன் கருமத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ!’ என்று பொருள் கூறலுமாம்.

நாரணனைக் கண்டக்கால்-உயிரக்கூட்டங்களினுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் தனக்கு அதீநமாய், இவை பிரகாரமாகத் தான் பிரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தன் இழவாம்படி இருக்கையாலே நாராயணன் என்று விருது ஊதிக்கொண்டு திரிகிறவரைக் கண்டால், இங்கு, ‘இப்பெயர் 1காரண இடுகுறியோ!’ என்றிருந்தோம்; ‘கள்ளிச்செடிக்கு மஹா விருக்ஷம் என்று பெயர் இருப்பதைப் போன்றது ஒன்றோ!’ என்று கேளுங்கள் என்ற தொனிப்பொருளும் தோன்றும். மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே-பெருகாநின்றுள்ள நீரையுடைத்தான கொடித்தோட்டங்களிலே பேடையின் வாக்கு அடங்குவது தேடுகின்ற குருகே! கயல் உகளாநிற்கவும் பேடையின் வாய்க்கு அடங்குவது தேடுகின்றது ஆதலின்,’ ‘இரை தேர்’ என்கிறாள். 3‘புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம்பூதங்குடிதானே’ என்றார் திருமங்கை மன்னனும். இதனால், அதன் செயல் தனக்கு என வாழாமையாய் இருந்தது என்கிறாள். கைப்பட்ட இரையினைத் தன்மிடற்றுக்குக் கீழே இழித்தாது; ஆதலின், ‘வண்குருகே’ என்கிறாள். வண்மை-கொடுத்தல்; அழகுமாம். ‘நான் உண்ணாவிரதத்தோடு இங்கே தங்கியிருக்க, நினையாமல் இருக்கின்ற அவனைப் போல அல்லை நீ’ என்பது குறிப்பு. ‘காரிய காலத்தில் பூனையின் தன்மையினை அடைதல் வேண்டா; தூது போகையில் பயின்று இருப்பாரைப் போன்று இருக்கின்றாய்’ என்பாள், ‘சிறுகுருகே’ என்கிறாள்.

மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டு அருளாய்-‘இதுவும் ஒரு நீர் நிலம் இருக்கிறபடி பாராய்’ என்பாள்,‘மல்குநீர்க் கண்ணேன்’ என்கிறாள். ‘ஆயின், குருகு இரை தேடுவதனை விட்டு இதனைப் பார்க்குமோ!’ எனின், இங்கும்3சேலும் கயலும் உண்டாகையாலே பார்க்கும். இனி, தன்னைக் கண்ணநீரைக் கொண்டே நிரூபிக்க வேண்டியிருத்தலின் ‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள் எனினும் அமையும். ஆயின், நிரூபிப்பதற்குக் கண்ணநீர் எப்பொழுதும் இருக்குமோ?’ எனின் கலவியில் ஆனந்தக்கண்ணீரும், பிரிவில் சோகக்கண்ணீரும் மாறி மாறி இருக்கும். ‘மறுப்பரோ! என்னும் அச்சத்தால், நேரே உடம்பைத் தரவேண்டும் என்று சொல்லாளாகி, ‘வாசகங்கொண்டு’ என்கிறாள். மறுக்கும் வார்த்தையும் அமையும்; அவர் பக்கல் உள்ளது ஒன்றே வேண்டுவது  என்னும் நினைவினள் ஆதலின், ‘ஓர் வாசகம்’ என்கிறாள். ‘ஆயின், மறுக்கும் வார்த்தை இவளுக்கு உத்தேஸ்யம் ஆமோ?’ எனின், 1‘தாரான் தரும் என்ற இடத்தில் ஒன்றதனை, ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்’ என்றார் பரகால நாயகியார். 2‘செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே!’ என்றார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார். 3‘கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே’ என்றார் இவ்வாழ்வார் நாயகியும். தான் 4ஜனக குல சுந்தரியாயிருந்தும், பறவைகளைப் பார்த்து, ‘அருளாய்’ என்கிறாள்; அப்பறவைகளால் தனக்குக் கிடைப்பது பகவத் விஷயம் ஆகையாலே. ‘நம்பியேறுதிருவுடையான்தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய, பட்டர் துணுக்கு என்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீவைஷ்ணவர்களுடன் பரிமாறும் படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்று அருளிச்செய்தார் என்ற ஐதிஹ்யம் இங்கு ஓர்தல் தகும்.

எங்களை விடுவீர் –

தம்முடைய நாரயணத்வம் நிறைவு பெற –
நாரம் இல்லை என்றால் நாராயணனும் இல்லை இறே என்கிறாள்
நந் நீர்மை இனி தங்காது -சத்தை -இருக்காது

இனி சொல்ல காரணம்
நாச்சியார் திரு மொழி ஐதீகம் -அனந்தாழ்வான் -எம்பெருமானாரை பார்க்க போக
மரம் அறிந்து ஏறினவன் -கை கால் தான் போகும்
கேட்ட பின்பு பிராணன் போக வில்லை என்று அருளி –
அது போல் பெருமாள் பிராட்டி -இன்றியமையாமை -பின்பு வரும்
இனி என்று இருபது கால்
இதுவும் ஒரு இனி
இது வரை தங்கினது எப்படி -அவனுக்கு துக்கம் உண்டாக்க கூடாது என்று
பெருமாள் தேடி வர -விடாய்த்த ஒருவன் தண்ணீர் பந்தல் வர சால் பானை உருண்டது போல் –
பெருமாள் திரு உள்ளம் -அக்னி குதித்தாள் பிராட்டி
பிற்றை நாள் இருந்தேன் ஆகில்
நிராசராக கண்ட மற்றை நாள் என்று கொள்ள வேண்டும் -ஜீவித்து  நினைத்து இருக்கும் தான் -தமக்கு தான் வேண்டாவோ –

அவருக்கு அவன் வேண்டுமே
தம்முடைய நாரயணத்வம்-நிலை பெற -சத்தைக்கு-
நாராயணனே -நான் உன்னை அன்றீலேன் நீ என்னை அன்றி இலேன் -திரு மழிசை ஆழ்வார்
நல்கி தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் -அவன் தோட்டம் தான் இந்த உலகம்
வினைஎர்க்கு -பாபம் செய்த எனக்கு மட்டும் இல்லையா –
மல்கு நீர் புடை -பரப்பையில் இறை தேடும் சிறிய குருகு
வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ – சொல்லு –
நல்கி தான் –
விபூதி ரஷணம் செய்யும் பொது பேறு தன்னதாக -செய்கிறான்
கர்தவ்ய புத்தி இன்றி கடைமைகாக இல்லை –
தான் நல்கி -ரசிக்கிறான்
எனக்கு தன பக்கல் உண்டான வியாமோகம் அவனுக்கு விபூதி பக்கல் உண்டானதே
நான் துடிப்பது போல் அவன் விபூதி விஷயத்தில் துடிக்கிறான்

காக்கும் கடவுள் -பிராத்தித்து செய்ய வில்லை தானே
ஏழு பொழில்கள்-ஏழு தீபங்கள் –
பாற்கடல் வெளியில்-பூமி மலை சமுத்ரம் ஓவொன்றும் ஏழு தானே
ஏழு லோகங்கள் என்றும் கொள்ளலாம்
தான் காத்து அளிக்கும் -தானே கை தொட்டு ஆக்கின தோட்டம் இது
உகந்த நந்தவனம் போல் இவை –
நாம் உடம்பை ரஷிப்பது போல் –
அனைத்தும் அவனுக்கு சரீரம் தானே -ஜகத் சர்வம் சரீரம் தே-
நல்கி -நாம ரூப விபாக அநர்கமாய்-பிரளய சீமானி அசித் அவிசெஷைத  –
இவன் உள்ளே புகுந்து அந்தர்பகித்த பின்பு தான் நாம ரூபம் கிட்டும்
தயமான மனம் -இறகு ஒடிந்த பஷி போல் இருக்கிறதே
காரண களேபரங்கள் தானே நல்கி –
எல்லாம் தான் சொல்லில் இருக்க -அபெஷிக்காமல் உண்டாக்கி
சக்தி இருந்தால் தேஜஸ் -சுடர் -விளக்கு -பாஸ்கரென பிரபாதையா -பிராட்டி வார்த்தை –
தன மேல் ஏற் இட்டு கொண்டு நோக்கினான்
காத்து அளிக்கும் -காத்து  கொடுத்தல்- நோக்கி ரஷிக்கும் -இரண்டு அர்த்தம்
உண்டாக்கின பின்பு ரஷிகாமல் இருக்கலாமா -கேளு
இல்லாதவன்று உண்டாக்கினாய்
கர்மத்தை இட்டு கை விடலாமா
உலகம் அனைத்தும் ரஷிக்கும் அவன் பிராட்டியை கை விடலாமா
ஜீவா லோகஸ்ய சுய ஜன ரஷிக்க வேண்டாமா
கடலில் ஏற்றம் இட்டாலும் ஜலமில்லை
கிருபா சமுத்ரம் -தண்ணீர் கிட்டாத பாபம் பண்ணினேன்

நாரணனை கண்டக்கால் –
நல்கித்தான் காத்து அளிக்கும் -முன்பே சொல்லி
ஜீவ சமுகம் ஸ்வரூபம் ஸ்திதி-அனைத்துக்கும்  தாம் பிரகாரி –
ஓன்று குறையிலும் தம் இழவு விருதூதி திரிகின்றானே –
இப் பேர் யோக ரூடி யோ என்று இருந்தோம்
யோகம் ரூடி -காரண-=யோகம்/ இடுகுறி  =ரூடி போல் –
யோக ரூடி -காரணம் இருக்கும் ஒன்றே குறிக்கும் பங்கஜம் தாமரை போல்
பன்காது ஜாதையே சேற்றில் உண்டானதால்

சேற்றில் அநேகம் இருந்தாலும் இந்த ஒரு வஸ்து ஒன்றையே குறிக்கும் –
நாற்காலி -பசுவுக்கும் நான்கு கால் மேஜை வேற -யோக ரூடி இதுவும்
நாராயண சொல்லும் யோகரூடி –
அப்பைய தீஷிதர் -நாராயணா  பர ஜோதி -சூர்பணகா முறம் போன்ற நகம் –
பாணினி சூத்திரம்-
மகா வ்ருஷம் போல் கள்ளி செடி -விபரீத லஷனை-வந்த ரூடி –
அது போல் என்னை காக்காமல் இருந்தால் அவனும் இது போலேயோ
உன் செயல் பரார்தமாய் இருந்தது
குட்டிக்குஇரை தேட
வயல் உகள -புள்ளு பிள்ளைக்கு இறை தேடும்  புள்ளம் பூதம் குடி  பெரிய திரு மொழி 10 -5 -2
ஆளவாயன் -தமிழன் கேட்ட கேள்வி -தேடும் சப்தம்
இயல் அறிந்திலையே -பிள்ளைக்கு இறை தேடும் -மீன் தூண் போல் இருக்க
உரு மீன் இருக்க ஓடும் மீன்தேடுகிறது பேடை வாய்க்கு அடங்குவது தேடுகிறது
இறை தேர் -தேடுகின்றது
மல்கு நீர் -மிக்க நீரை உடைத்தான -திருவடியை போல் கடல் கண்டு தேட வேண்டாவே
குரங்கு ஜாதி ஜாலம் கண்டு பயப்படும்
குருவு நீ பயப்பட வேண்டாமே
வன் சிறு குருகு -கொய்யடி நாரை ஜாதி
வண்மை அழகு ஒவ்தார்யம்
கை கிட்டே கிடைத்த ஆகாரம் பேடிக்கு கொடுத்து -பரார்தமாக செயல் –
உன் ஆகாரம் கெடுத்து பேடிக்கு நீ தேட
அவனுக்கு எதிராக
தன இரையை வாயால் கவ்வியும்  தொண்டையில் இறக்காமல் -மிடற்றுக்கு கீழ் இழுக்காமல்
நான் உபவாச  கிரிசை இருக்க நினையாமல் அவன் இருக்க
சிறு குருகு-கார்ய காலத்தில் வடிவை சிறுக்க வேண்டியது இல்லை
திருவடி குறைத்து கொண்டது போல் வேண்டாமே
தூது போவதற்கே சரமம் செய்து சிருஷ்டித்த குருகு -வடிவின் லாகவம் -லகு –
மல்கு நீர்-கண்ணில் நீர் மல்கி இதுவுமொரு நீர் நிலை பாராய்
அத்தை விட்டு இத்தை பாரும் –
இங்கும் சேலும் கயலும் உண்டே

ரசோக்திகள்
தனக்கு நிரூபகம் கண்ணீர் உள்ளவள்
ஆனந்த கண்ணீர் சம்ச்லேஷத்தில்
பிரிவில் சோக கண்ணீர்
அவனுடைய  ஒரு வாசகம் கொண்டு
திரு மேனி தான் ஆசை
வாயால் ஒரு வார்த்தை போதும்
நேரே உடம்பை தர வேண்டும் கேட்க்காமல்
மறுக்கும் வார்த்தை யானாலும் அவன் வார்த்தையே வேண்டும்
பாவியேன் என்று நீ ஓன்று சொல்லாய்

முகம் காட்டி விடை கண்டாலும் போதுமே
அருளாயே –
உபகரிக்கரித்து பகவத் விஷயம் தென்பதால் –
தான் ஜனக குல சுந்தரி யானும் திரியக் -அருளாயே பிரார்த்திக்கிறாள்
கடக கிருத்தியம் செய்வபர்
நம்பி ஏறு திரு இடையார் -தாசர் -திரு மால் இரும் சோலை பெருமாள் திரு நாமம்
திரு நாட்டுக்கு நடந்தார் -எழுந்து அருளி
தாசர் பெரும்பாலும் சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவராக இருக்கலாம்
நீராட போதுவீர் தோழிகளை ஆண்டாள்
மாமான் மகளே துயில் அணை மேல் கண் வளரும்
பெரிய நம்பி  எம்பெருமானார் கோஷ்டியை -கீழே சேவித்து -ஸ்ரீ வைஷ்ணவர் என்பதால்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading