திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

என் நீர்மை கண்டுஇரங்கி இதுதகாது என்னாத

என்நீல முகில்வண்ணர்க்குஎன்சொல்லியான் சொல்லுகேனோ

நன்னீர்மை இனியவர்கண் தங்காதுஎன் றொருவாய்சொல்

நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?

    பொ-ரை : ‘நல்ல நீல நிறத்தினையுடைய மகன்றில் என்னும் பறவைகளே, எனது தன்மையைக் கண்டிருந்தும், இரங்கி, பிரிந்து தங்கி இருத்தல் தகாதது என்று நினையாத, என்னுடைய நீல முகில் போன்ற நிறத்தினையுடைய தலைவர்க்கு என்ன வார்த்தையினைச் சொல்லி நான் சொல்லப் போகிறேன்? நல்ல உயிரானது இனி அத்தலைவரின் பொருட்டு அவளிடத்தில் தங்கியிராது என்று ஒருவார்த்தை சொல்லுதலைச் செயவீர்களா மாட்டீர்களா?’ என்கிறாள்.

வி-கு : மூன்றாம் அடியிலுள்ள நீர்மை என்பது, ஆகுபெயராய் உயிரைக் காட்டிற்று. அவர்கண்-அவர்பொருட்டு; நான்காவதன் கண் ஏழாவது மயங்கிய உருபு மயக்கம். இனி அவரிடத்தில் எனக் கோடலுமாம். வாய்-சொல். சொல்-முதனிலைத் தொழிற்பெயர். ‘சொல்லுதலை நல்குதிரோ, நல்கீரோ?’ எனக் கூட்டுக. மகன்றில் என்பது, நீர்வாழ் பறவை: இது ஆணும் பெண்ணும் பிரிவின்றி வாழுமியல்பினது ‘பூவிடைப் படினும் யாண்டுகழிந் தென்ன, நீருறை மகன்றில் புணர்ச்சி போல’ (குறுந். 57) என்றார் பிறரும். ஈடு : நாலாம் பாட்டு. ‘அனுபவித்தாலும் மாளாதது நான் பண்ணின பாபமேயோ!’ என்றாள் மேல்; ‘இவள் அனுபவித்தாளோ பின்னை?’ எனில் ஆம்; அனுபவித்தாள்; அவன் அரைக்கணம் தாழ்ந்து முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தாள் அன்றே? இவ்வளவிலே சில மகன்றில்கள், ‘நாம் உதவி சிறிதாயினும் செய்வதற்கு நல்ல சமயம்’ என்று நினைந்து, ‘நாங்கள் இவ்விடத்திற்குச் செய்யவேண்டுவது என்ன?’ என்று வந்து முகங்காட்டினவாகக் கொண்டு, அவற்றைப் பார்த்து, ‘என் நிலையைக் கண்டும் இரங்காதே போனவருக்கு நான் எத்தைச் சொல்லுவது? என்று ஆசையற்றவளாய், பின்னரும் ஆசைப்பெருக்காலே, பலகால் சொல் மறுத்தார்க்குச் சொல்லுவாரைப் போன்று, ‘இத்தனையுஞ் சொல்லவல்லீர்களோ, மாட்டீர்களோ? என்கிறாள். என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத-என் நீர்மை கண்டு-என் மென்மைதனைக்கண்டு அருள் செய்து, நாம் பிரியுமது தகாது’ என்னாதே போகட்டுப் போனவர்க்கு. பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன, ‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார். கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன, 1‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’ 2‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற தமிழ்ப்பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச்செய்தார். என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ – இந்நிலையிலும் ‘என்னுடையவன்’ என்னும்படி கலந்த போது முகங்கொடுத்தவன் ஆதலின், ‘என் நீல முகில் வண்ணர்க்கு என்கிறாள். திருமுகம் மறுத்துப் போனவர்க்கு எத்தைச் சொல்லுவது என்னும் நினைவாலே, ‘அவர்க்கு நான் சொல்லி விடுவதுஎத்தை?’ என்கிறாள். ‘இங்ஙனம் சொல்லுவான் என்?’ என்னில் ‘கண்டு இரங்காதவரோ கேட்டு இரங்கப் போகின்றார்?’ என்னுமதனாலே. ‘ஆயின், கண்டானோ?’ என்னில், ஏன்? கண்டிலனோ? கலக்கிற சமயத்தில் கை நெகிழ்த்த இடமெல்லாம் வெளுத்தபடி கண்டிருப்பானே.இனி, ‘என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத என் நீல முகில் வண்ணா’ என்பதற்கு, ‘இவ்வளவிலே என்னை வந்து அணைந்தவராய் என் நிலையைக் கண்டு இதற்கு ஒரு போக்கடி பாராமல், உங்கள் பக்கல் கேட்டு அறிய இருக்கிறவர்க்கு’ என்று உரைத்தலுமாம். அவனை அனுபவிக்குமதிலும், அவனைப் பிரிந்து நோவுபடுகின்ற தன் தன்மையைக் கட்டிக்கொண்டு கிடத்தல் அமைந்ததாக இருத்தலின், ‘என் நீர்மை’ என்கிறான். தன் நிலை தானும் தனக்கும் பேச்சுக்கு நிலம் அல்லாமல் இருத்தலின், ‘இது’ என்கிறாள். ‘முதன்முதலில் வடிவைக் காட்டியே என்னைத் தமக்கே உரிமையாக்கினார்; அவ்வடிவிற் புகர் இப்பொழுது அகவாயிலும் சிறிது உண்டாகப் பெற்றது இல்லையே’ என்பாள், ‘என் நீல வண்ணர்க்கு’ என்கிறாள். ‘ஆயின், மனத்தில் தண்ணளி இல்லையோ?’ எனின், 1‘யாமுடை ஆயன்தன் மனங்கல்லாலோ’ என்று இவள் தானே மேல் கூறுவள். ‘என்ன பாசுரத்தை இட்டு எத்தை நான் உங்களுக்குச் சொல்லி விடுவேன்’ என்பாள், ‘என் சொல்லி யான் சொல்லுகேனோ?’ என்கிறாள். ‘ஆயினும், நாங்கள் சென்று கூறின் வாராது இரான்;’ என்ன, ‘நான் சொல்லி விட இருக்கிறவர், நீங்கள் சொல்லும் அளவையோ பார்த்திருக்கிறார்? 2‘திருமுகம் மறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப் போகின்றானோ?’ கண்டு இரங்காதவர்க்கு நான் எத்தைச் சொல்லுவது என்று ஆசை அற்றவளாய், பின்னையும் ஆசையின் மிகுதியினாலே, 3‘இக்கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஒன்று இல்லையோ!’ என்று கூறிய ஆய்ப்பெண்கள், ‘கலந்த நம்மை அன்றோ வேண்டான் அவன்? பெற்ற தாயைக் காணவாகிலும் இங்ஙனே ஒருக்கால் போதானோ?’ என்று கூறியது போன்று கூறுகின்றாள் மேல்: நல் நீர்மை-நல் உயிர். இனி-ஆன அளவும் 4கால் கட்டிப் பார்த்தாளாதலின், ‘இனி’ என்கிறாள். அவர்கண் தங்காது-சேஷியான உம்முடைய பக்கலில் தங்கில் தங்கும் அத்தனை. அதாவது, பிராட்டி,

பெருமாள் பக்கல் குறையேயாய், தன் பக்கல் குறை தோற்றாதபடி வார்த்தை அருளிச்செய்தவாறே ‘நாமோதாம் இங்கு நன்றாகச் செய்தோம், பெருமாளைப் பிரிந்த பின்னர் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே!’ என்ன1‘மாதா என்றும் பிதா என்றும் பலர் பக்கலிலும் 2பாலி பாயக் கூடியதான அன்பை, பெருமாள், என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடைசெய்து போந்தார்; அவர் இவ்வாற்றாமையாலே 3உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக்கொண்டு வர, விடாயள் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை; அவரைக் கண்ட பிற்றைதாள் இருந்தேனாகில்காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று, ‘தலைவராகிய உம்பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி ஒரு வாய்ச்சொல்-ஒரு சொல் சொல்ல அமையும்.

    நன்னீலம் மகன்றில்காள் ‘அவர் நீலமுகில் வண்ணராய் இருந்தார்; நீங்களும் நீலமகன்றில்களாய் இருந்தீர்கள்; செயலும் அவரைப் போன்று இருப்பீர்களோ?’ என்றபடி நல்குதிரோ நல்கீரோ- செய்வீர்களோ, மாட்டீர்களோ? முதல் வார்த்தையிலேயே பதினகால் சொல் மறுத்தாரைச் சொல்லுமாறு போன்று, ஆற்றாமையின் கனத்தாலே ‘நல்குதிரோ நல்கீரோ!’ என்கிறாள்.                                    

 அனுபவித்தாலும் மாளாதது என் பாவம்

அவன் அரை ஷன காலம் தாழ்ந்து முகம் மாறி வைத்த போதே -அனுபவித்தாள்
கூட இருக்கும் பொழுதே
மகன்றில்கள்
நமக்கு கிஞ்சித் கரிக்க நல்ல வாய்ப்பு என்று
நாங்கள் இங்குத்தைக்கு என்ன செய்ய வேண்டும் முகம் காட்ட-கிம் கார்யம் கர்த்தவ்யம் –
என் தசைகண்டு இரங்காமல் போனவற்றுக்கு என்ன சொல்வேன் நிராசையாக இருக்க
-துன்பபடுவதை அறிந்தும் போனானே என்று
மீண்டும் மீண்டும் சொல்பவள் போல் -சொல்லி -நல்குதிரோ நல்கீரோ என்கிறாள் –
என் நீர்மை -ஸ்வாபம் –தன்மை கண்டு -கண்ணாலே பார்த்து இருந்தும் இரங்கி –

விட்டு பிரிந்தால் முடிவாள் என்று அறிந்தும் இரக்கம் இல்லாமல் –
இது தகாது -பிரிவது தகாது -என்னாத -என் நீல  முகில் வண்ணர்
என் சொலி நான் சொல்லுகேன் –
பின்னையும் சாபலத்தால் -ஒரே வாய் சொல் வார்த்தை
அவள் இருப்பு இனி தங்காது -அவர் கண் -பராங்குச நாயகி பற்றி கௌரமாக சொல்ல வேண்டும்
நன்னீர்மை இனி அவர் கண் தங்காது என்று ஒரு வாய் சொல் -என்று சொல்லி விடுகிறாள் –
என்ன செய்ய வேண்டும் என்று காத்து இருக்க -நல்குதிரோ –
கண்டு இரங்கி -மென்மையை கண்டு இருந்தும் -பொகட்டு போனவருக்கு –
காத்தாலே தான் கேட்டு இருக்க முடியும் -பிரிவின் துன்பத்தை

கண்ணால் பார்த்தால்-கூட இருக்க வேண்டுமே -பிரிவு இல்லாமல்
என்நீர்மை கேட்டு இரங்கி -இருந்து இருக்க வேண்டுமே
பட்டர் -நிர்வாகம் –
அணைத்த கை நெகிழ்த்த அளவிலே -உடம்பு வெளுக்க படி கண்டானே
கெட்டி பிடிக்க நெகிழ்தாலும்  – புள் இத்யாதி -காதலில் தொடு -குறும் தொகை குறள் பாசுரம் காட்டி

புள்ளிக் கொடுந்தேன் புறை பெயர்ந்தேன்
அள்ளிக் கொள்வற்றே பசப்பு –
காதலர் -தொடு உழி நீங்கி ஊரும் கேணி -விடு விழி விடு விழி பரத்தலானே
பாசி அற்றேபசலை -பாசி போலே பசலை -கை இட்டதும் பாசி போகுமே
ஸ்ருன்காரமான விஷயம் -தமிழ் இலக்கியத்தில் உண்டே
கண்டு இரங்கி சொன்னதே பொருந்துமே –
இத் தசையிலும் என் நீல முகில் வண்ணர்
என்னுடையவன் என்னும் படி காணும் கலந்த போது
திரு முகம் மறுத்து போனவனுக்கு
ஓலை கடிதாசியும் திரு முகம்
என் முகம் -இவளும் திரு தானே
கண்டவன்  இரங்காமல் -கேட்டு இரன்குவானோ –
ஆள் விட்டு கேட்கவேண்டுமா -அனந்த ஆழ்வான் -திரு வேம்கடத்தான் -ஐ தேகம்
அனுப்பி உங்கள் இடம் சொல்லி கேட்க இருக்கிறானே
அவனை விட இந்த பிரிவை கட்டி கொண்டு இருக்கலாமே
எத்திறம் என்று மோகித்து இருந்தவள் விஷயத்தில்
இது -இதை காட்டி தன் தசை தானும் தனக்கு பேச்சுக்கு நிலம் இல்லை
நீல முகில் வண்ணன் அடியிலே வடிவை காட்டி கொண்டவன் –
மேலாகா தான் வெளுப்பா உள்ளும் வெளுப்பு இன்றி
வடிவில் புகர் அகவாயில் இருக்க வேண்டாமா
ஆயன் மகன் கல் போல்
நான் சொல்லி விட இருக்கும் அவன் –
நீங்கள் சொல்வதை கேட்டு பண்ணுவானா
நிராசையாய்
திரு முகம்மருதுவன் கடை நிலையவன் சொல்வதை கெடப்பானா
சாபலத்தில் சொல்லி விடுகிறான்
கோபிகள் ஆலாபனை பண்ணி என்ன லாபம் -சொல்லி
தாயாரை பார்க்க வருவானே நப்பாசை -பட்டது போல் –

ஆனவரைக்கும் கால் கட்டி பார்த்தால்
பாதத்தை பிடித்து
காற்றை எவ்வளவு  நேரம் பிடித்து வைக்க முடியும்

என்னுடைய பிராணன் போகவே போகாது –
பெருமாள் பக்கலில் குறையாய் -எனக்கு எல்லா உறவும் ஆன பெருமாள் இன்னும் உயிர் உடன் இருக்க
என் ஒருத்தி விஷயத்தில் பிரியமாக -உண்ணாது உறங்காது ஒலி கடலை -கஷ்டப் படுத்தி பிராணனை பிடித்து கொண்டு இருக்கிறேன்
விடாயன் தண்ணீர் பந்தலில் வர சால் உருண்டு கிடந்தால் ஆவது போல்
மாதா பிதா அணைத்து பேரிலும் உள்ள பிரியம் என் மேல் வைக்க
அவனை கண்ட பிற்றை நாள் ஆசை இல்லை என்று அறிந்து உயிர் உடனிருந்தால்
நீ வார்த்தை சொல்லாம்
இனி
வார்த்தையினால் ஒரு தர்மம் தண்ணீர் பந்தல் வைக்க வேண்டும்
நீங்களும் நன் நீல -செயலும் அவரைப் போலே
இத்தையும் செய்வீர்களோ செய்ய மாட்டீர்களா
ஆற்றாமை கனத்தால் கெஞ்சுகிறாள் இந்த பாசுரத்திலே

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading