ஸ்ரீ மண வாள மா முனி வைபவம் ..

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்க்கு நம் பெருமாள் பேர் இட்டு நாட்டி வைத்தார்

திரு மூலமே நமக்கு மூலம்
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ ?
பூம் கமழும் தாதர் மகிழ் மார்பன் தான் இவனோ ?
தூத்தூர வந்த நெடுமாலோ  >
மணவாள மா முனி எந்தை இம் மூவரிலும் யார் ?–ஸ்வாமி ஆய் அருளியது
அமுதினை மயக்கும் சொல்லமுது –மதுரா மதுரா லாபா
மா முனிகளின் சொல் அமுது —
திரு கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்த அஞ்சேல் என்ற திரு கையும்
கவித்த திரு முடியும் திரு முகமும் திரு முறுவலும்
ஆசன பத்மத்திலே அழுத்தின திரு அடிகளுமாய் இருக்கும்
நிற்கும் நிலையில் நமக்கு தஞ்சம் கொடுக்கும்
அரங்கத்து அமுதனையும் ஈர்ந்ததே வசிஷ்டர்-விஸ்வாமித்ரர்  சாந்தீபினி போல்

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் ஸ்ருதிகள் நான்கும் எல்லை இல்லா அறநெறி யாவும் அறிந்து
பூ பறித்தார் போல் எளிமை /இனிமை சொற்கள் கொண்டு –விசத வாக் சிகாமணி –
இப் புவியில் அரங்கர்க்கு ஈடு அளித்தான் வாழியே
வான் திகழும் சோலை மதிள் அரங்கர்  வன் புகழ் மேல் ஆன்ற தமிழ் ஆயிரம்
லவ குசர் மூலம் தன் சரிதை கேட்ட பெருமாள்-சகர வர்த்தி திரு மகன் போல்
தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை
வள்ளல் வடக்கு திரு வீதி பிள்ளை –இந்த
நாடு அறிய மாறன் மறைப் பொருளை நன்கு உரைத்தது
ஈடு முப்பத் தாறாயிரம்
காட்டினான் திரு அரங்கம் உய்பவருக்கு உய்யும் வண்ணம்
இப் புவியில் அரங்கர்க்கு ஈடு அளித்தான் வாழியே
எப் புவியும் ஸ்ரீ சைலம் ஏத்த வந்தோன் வாழியே ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்-தீ பக்த்யாதி குணார்ணவம்

யதீந்திர பிரணவம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்
ஸ்ரீ சைலேச -ரிஷ்யமுக பர்வத அரசன் சுக்ரீவன்-பெருமாள் கிருபையால்-
பெருமாளே சுக்ரீவனை சரண் அடைந்து –
ஸ்ரீ சைலேசர்- திரு வாய் மொழி பிள்ளை —ஞான பக்தி-மதி நலம் -நிறைந்தவர்-
ஸ்வாமி  ராமானுஜர் இடம் அன்பு பூண்டவர்-அவர் உடைய அனுக்ரகத்தால் —
அழகிய மண வாள மா முனிகளுக்கு
அழகிய மணவாளன் சூட்டிய திரு தனியன்
பெருமாள் அரணவம்-சமுத்திர ராஜன் -ரத்னம் பவளம் நிறைந்த -சமுத்ரம் –
சரண் அடைந்தும் -மூன்று நாள்களும் கிடந்தும் -அது போல் அன்றி
யதீந்திர பிரவணர் -ஸ்ரீ சைலேசர் -அடியார்க்கு அடியார் –
திரி தந்தாகிலும் தேவ பிரான் உடை கரிய கோலம் திரு உரு காண்பன் நான்
மத் பக்த பக்தேஷு பிரிய அப்யாதிகோ பவேத் —
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான்
யதீந்திர பிரவணர்-சுவாமி ராமானுஜரின் பிரேமையே உரு கொண்டு அவதரித்தவர் மா முனிகளே
ரம்ய ஜா மாதா =அழகிய மணவாளன்
முனிம்-மனனம் கரோதி இதி முனி
சேஷத்வம் காட்டி நம் பெருமாளையே மனனம் செய்து கொண்டு இருப்பவர்
ஆக இந்த தனியன் திரு மந்த்ரம் போல் அனைத்தையும் சொல்லி கொடுக்கும்

மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்

பிறர் மினுக்கம் பொறாமை இல்லா பெருமையும் பெற்றோம்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாம் அதனை பேசாதே
அபகத மத மானை

அந்திம உபாய நிஷ்டை
அதிகத பரமார்த்தை
ஆர்த்த காமன் அபெஷை
நிகில ஜன சுக்ருஹ்பி
நிற ஜித குரோத லோபை
வர வர முனி பிருத்தையர்
அஸ்துமே நித்ய யோக
சாதாரண நாம சம்வச்த்ரம்-1370 AD
துலா மாசம்
சதுர்த்தி
வியாழ கிழமை
மூலம்
குரோதன சம்வச்தரம்- 16 வயசில் மகர மாசம் க்ருகதாச்ரமம் –1386 AD
சன்யாச -45 -விஜய நாம சம்வச்த்ரம்  -பெரிய திரு மண்டபம் –1415 AD
ஆனந்த சம்வச்தரம் -மிதுன மாசம் பூர்ணிமா -மூலம் -ஈடு காலஷேமம் முடிந்து -65 வயசில்

அஷ்ட திக் கஜம்
வான மா மலை ஜீயர்
பரவஸ்து பிரான் பட்டர் ஜீயர்
திரு வேம்கட ஜீயர்
கோவில் கந்தாடை அண்ணன்
பிரதிவாதி பயங்கரம் அண்ணா
எறும்பி அப்பா
அப்பிள்ளை
அப்பிள்ளார்
மோஷ சம்ஸ்காரம் புளிய மரம் திரு புல்லாணி
மதுராவில் விசிஷ்டாத்வைதம் ஸ்தாபித்து அருளினார்

சாம்ய பத்தி-கும்ப -மாசி-மாசம்-
கிருஷ்ண பஷம் த்வாதசி சரவணம் சனி கிழமை
ருதிரோதடரி சம்வச்தரம் 1444 AD
க்ருபா மாத்திர பிரசன்னா ஆச்சார்யர்
பிறர் மினுக்கம் பொறாமை-பாகவத பார தந்த்ர்யம்
பரக்கத அதிசய ஆதான இச்சை –பிறருக்கு மேன்மை விரும்புவது/அளிப்பது
மற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களின் -பிறர்-
மினுக்கம்-பாகவத பார தந்த்ர்யம் கண்டு
பொறாமை இல்லா -உதா சீனமாக இன்றி உகந்து
பெருமையும் பெற்றோம் —பார தந்த்ர்யம் காட்டுகையால் பெருமை என்கிறார்
ஆச்சர்ய பிரசாதத்தால் வந்ததால் பெற்றோம் என்கிறார்
எல்லோருக்கும் விளைய வேண்டும் என்பதால் நாம் பெற்றோம் நீங்களும் பெறுவீர்கள் என்று அருளி செய்கிறார்

பல்லவராய மண்டபம்-ஸ்வாமி மண வாளமா முனிகள் சந்நிதி ஸ்ரீ ரெங்கம்
திரு பரியட்டம் திரு மாலை சாத்துபடி
பொன் அடியாம் செம் கமலம்-மா முனிகள் திரு அடி பிரசாதம்
ரகஸ்யம் விளைந்த மண் இன்றும் சேவிக்கலாம் கால ஷேப கூடத்தில்
தொட்டி பிரசாதம்-தயிர் சாதம் உப்பு இன்றி
ஆழ்வார்கள் வாழி அருளி செயல்கள் வாழி
மண வாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மண வாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading