தாம் உளரே தம் உள்ளம் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே –வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது –21
விசித்ரா தேக சம்பத் –தாம் உளரே —எல்லாம் அவன் அருள்–கொடுத்து அவனை அடைய –கண்ணால் பாகவதர்களை பார்த்து காதால் கதை கேட்டு நாவால் பாடி காலால் திவ்ய தேசம் சென்று –நரகம் செர்வதுஅரிது–நல்ல மனம் கொண்டு–உள்ளம் உளதே –பூ கொண்டு அர்ச்சிக்கலாம் -திரு அடியை சென்னியில் சேர்த்து திரு மண் ஸ்ரீ சூர்ணம் =வாமன் திரு உருவு தாள் -சாத்திக் கொண்டாலே போதும்..-புள் கவ்வ -துளசி செடியில் விழுந்து இருக்க -யம தூதர் பயந்து சென்று – திரு அடி நெற்றியில் சாத்தி இருக்க கண்டு –பத்ம புராண கதை
அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் –கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்து அன்றே
தன் கோட்டு மா மலரால் தாழ்ந்து –22
ஆஸ்ரித்தவர்களுக்கு நினைத்தது நடக்கும் –அரியது எளியதாகும்–சர்வ சக்தன் அவன்–துப்புடையாரை அடைவர் எல்லாம் –புல்லாலே காகாசுரன்- குழந்தை விரலால் கோவர்த்தனம் தூக்கி காட்டினானே -கஜேந்த்ரனை காத்து -திருஅடியை கிட்டே கொண்டு வந்து காட்டி புஷ்பம் பெற்றானே
தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் –தாழ்ந்த
விளம் கனிக்குக் கன்று எரிந்து வேற்று உருவாய் ஞாலம்
அளந்து அடி கீழ் கொண்ட வவன்–23
சத்ய லோகம் வரை எட்டியதாம் விளம் கனி எட்ட வில்லை தாழ்ந்து பழுத்த மரம்–உலகு அளந்தவன் உறி வெண்ணெய் எடுக்க உரல் தேடுகிறானாம் –எளியவர்க்கு எளியவன்–தாழ தாழ கிட்டே வருவான்–
அவன் கண்டாய் நல நெஞ்சே !ஆர் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் –அவன் கண்டாய்
காற்று தீ நீர் வான் கருவறை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று –24
எல்லாம் அவன் தான் –பஞ்ச பூதங்களும் –சர்வமும் வாசு தேவ மயம்–அருள் -ஸ்ரீ வைகுண்டமும் -கேடு -சம்சாரமும் அவன்
சென்றது இலங்கை மெல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறும் கால் –நின்றதுவும்
வேயோங்கு தன் சாரல் வேம்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25
இலங்கைக்கு ஒரு காலனாய் –பாகவத அபசாரம் -விபீஷணன் –சத கோடி ஸ்கந்தம் ஸ்ரீ ராமாயணம் -24000கிரந்த சங்கை மட்டும் நமக்கு தான் ..-வாய் ஓங்கி -நவாகம்- விரி உரை ஆற்றி -இருப்பார்கள் வந்தே ராமாயண மகார்ணவம் கடல் போல் –அஷ்ட திக் பாலர் லோகம்யானை மேல் ஸ்ரீ ராமாயணம் வைத்து ஊர்வலம்-தெரு கூத்து கம்பர் ஆழ்வார் -அனைவராலும் பாட பட்டு வேம்கட ராமன் ஸ்ரீனிவாச ராகவன்-வட்ச்தள லஷ்மி -அகலகில்லேன் இறையும் என்று -சீதை பிராட்டியே அலர் மேல் மங்கை —எவ்வளவு புகழ்ந்தாலும் மாளாத வைபவம்
வந்தித்து அவனை வழி நின்ற ஐம் பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் –உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரக்கு ஈந்த
படி யமரர் வாழும் பத்தி –26
திரு வேம்கட அனுபவம் தொடர்கிறது–தேவர்கள்/நித்ய சூரிகளும் வந்து வழி படுகிறார்கள்..தியானம் பண்ணி -தபசிகள் இருக்கும் இடம்–மனசை அடக்கி தியானம்-ஐம் பூதங்கள் நம் இடமே இருகிறதே –புலன் அடக்கம் -யமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் -உடல் பிராணன் மனம் அடக்க படி படி -வந்தித்து வழி நின்ற-அடக்கி வழி பட வேண்டும்–அவனை வழி பட்டு அடக்குவது சுலபம் -பகவத் பக்தி மேல் இட்டால் இந்த்ரியங்கள் அடக்க முடியும் –விழாம் பழம் சரகு யமுனை நீர் காற்றை புசித்து அனைத்தையும் நிறுத்தி வெற்றி கண்டான் துருவன் ..–அடக்கி ஆகாரம் குறையும்-ஆர்வம் இதில் மிக மிக -அகத்து அடக்கி ஆர்வமாக -மாற்றத்தில் குறையும்–சம்சார நசை அரும் பாகவத ஆசை ஈடுபாடு பிறந்ததும்-அவன் உடைய ரசத்தால் மற்றவை விரசமாகும்..தேவ லோக சுகம் நசை அறுத்து தேவர்களும் நிற்கும் திருமலை..உந்தி முட்டி தள்ளி வழி படுகிறார்கள் தேவர்கள்–நித்யர் அடைந்து உள்ளே இருக்க -ஷ்ராப்தி நாதன் சீட்டுவாங்கி கொண்டு வந்தவர்கள்-வாழும் பதி–பரம பதம் திரு பாற் கடல் விட்டு வந்து சேவிக்க —
பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி வுரிஞ்சி வான் முகடு நோக்கி –கதி மிகுத்து அம்
கோல் தேடியோடும் கொழுந்தே போன்றதே
மால் தேடி யோடும் மனம் –27
பக்தி கொடி போல்–அங்கோலம் போல் மரத்தை ஒட்டி கொண்டு-ஆதி சங்கரர்–அவனையே நாடி இருக்க வேண்டும்–விக்னம் இருந்து வளரும் பொழுது ஆச்சர்யம் -பிரகலாதன் போல் ..-மால் தேடி ஓடும் மனம்–ஹிரண்யன் தானே தோற்றான்—ஆறு கடல் நோக்கி ஓடுவது போல்–சதி பதி நோக்கி போவது போல்–காந்த ஊசி வடக்கே பார்த்து இருப்பது போல்–பதி -அமைந்து-திரு மலையில் உண்டான கொடி போல்–எருவும் மண்ணும் -பருத்து எழுந்து சந்தரன் வரை போகும் கொடி போல –நம் மனசும் திரு மலை நோக்கியே போக வேண்டும்
மனத்துள்ளான் வேம்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளான் –எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் –28
கேசி குதிரை-பிடரி கேசம் இருப்பதால் கேசி-அசுரன்-மா வாய் பிளந்த மகன்-பிள்ளை வீரம் -பிடரி பிடித்து இழுத்து வாயை பிளந்தான் –கேசி காட்-கை அலம்பினானாம் –மனத்தில் உள்ளான் மனமே கோகுலம்-வேம்கடத்தான் –மா கடலான் திரு பாற் கடல் -சபல புத்தி பிள்ளைக்கு 108திவ்ய தேசம் அபிமான தேசம் சுத்தி கொண்டு போகிறான்..நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் –மகன் சொன்னாலும் தேவாதி தேவன்–
மகனாக கொண்டு எடுத்தாள் மாண் பாய கொங்கை
அகனார வுன்பன் என்று உண்டு –மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென் இலங்கை
நீறாக வெய்து அழித்தாய் ! நீ–29
பூதனையும் தன் மகனாக கொண்டு எடுத்தாள்–தாய் உருவாக்கி வந்த பேய்–உண்பன் என்று உண்டு –தேறாத வண்ணம் திருத்தினாய்–அன்று பூதனை வந்தாளே–முதுகை தடவி திடுக்கிட்டு -இருந்தாளே யசோதை பிராட்டி–இலங்கை நீராக போக்கி இருந்தால் போல் இல்லாமல் அறியா பிள்ளை போல் இருந்தாய்
நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திரு மாலே !
நீ யன்று உலகு இடந்தாய் என்பரால் நீ யன்று
காரோதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனி பிரான் !–30
உலகு அளந்தாய் அன்றே–பெரிய கார்யம் லுகுவாக பண்ணினாய் அன்று–உலகு இடந்து வராக அவதாரம்..–தானே சென்று கார்யம் பண்ணினான் –கடைந்தும் -தானே கூர்மமாய் இருந்தும் –தேவர்களுக்கு அமிர்தம் கொடுக்க –நீயே கடல் போல்–ஆழம் காண முடியாது ஆஸ்ரய கரம்/ குளிர்ச்சி /அழைக்கும் அலை ஆஹ்வான ஹஸ்தம் /சக்தி பொறுத்து பக்தி/அழகும் பயமும்/பிரசன்னா கம்பீரம் /
பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நல் செழும் போது கொண்டு –வராகத்
தணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்
மணி வுருவம் காண்பார் மகிழ்ந்து –31
அவதாரங்களில் ஈடு பாடு–செய்து நீல மணி போன்ற ஸ்ரீ வைகுண்ட நாதன் காணலாம்..-கைங்கர்யம் கொள்ள தான் இங்கு சேவை–அனைவருக்கும் அனுக்ரகம் செய்ய -கைங்கர்ய பாக்கியம் அனைவருக்கும் கிட்ட –வழி பாடு முக்கியம் –புலரி=காலை –கோவில் போக ஆசை நித்யம் வேண்டும்..குரா புஷ்ப வகை மணம் வீசும் –உத்தமர் ஸ்வாமிகள்-வராக பெருமாளை சேவிப்பவர் மணி உருவம் காண்பர்-அனுபவ ரீதி- சுவாமி புஷ் கரணி ஸ்ரீ வராக பெருமாளை சேவித்து ஆனந்த விமானம் அடியில் உள்ள திரு வேம்கடத்தான் மணி உருவம் காண்பர்
மகிழ்ந்தது சிந்தை திரு மாலே ! மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி –மகிழ்ந்தது
அழல் ஆழி சங்கம் அவை பாடி யாடும்
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து –32
பக்தி பண்ணினால் இருக்கும் இடமே ஸ்ரீ வைகுண்டம் -மேனியே திரு மேனி ஆகும் நம்பூதிரி -திரு மேனி -போத்தி- நடமாடும் -அர்ச்சகரே பகவான் அர்ச்சக முகே ன பேசுவான் ..அவனை தீண்டும் கையே பகவான் ஆகும்..–தேனில் விழுந்த ஈ தேனீ ஆவது போல்–கண்ணனை பார்த்து கண் கண்ணனாக ஆகும்–உடலே நம் உடையது இல்லை-கிருஷ்ண மயம்–சிந்தையில் மகிழ்ச்சி -அவனாகவே ஆகும் –வாக்கும் அவன் வயம் ..தொழிலும் ஆகம் =தேகமும் அவன் மயம் முக் காரணங்களும் அப்படி ஆனதும் அவனாகவே ஆவோம்..கோபிமார்கள் அனுபவம் போல் ..நீங்காத உறவு
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்து பல்கால் –பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேம்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை –33
நிச்சயம்-துணிவு-சிந்தை துணிந்தது ஆள் செய்தே இருக்க –மூங்கில் புதர்கள் நிறைந்த மலை சாரல் திரு மலை எம்பெருமானுக்கே ஆள் செய்ய துணிந்தது -லஷ்மணன் பெருமாள் பின்னே போனது போல் ராமம் தசரதம் வித்தி -ஆத்மா பந்து நோக்கி சரீர பந்துவிட்டு-சாதனமும் சத்தியமும் அவனே -தாயே தந்தை என்றும்…நோயே பட்டு ஒழிந்தேன் –உதறி தளி விட்டு நித்ய பந்து என்று துணிந்தது சிந்தை
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே –மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி–34
ஆசை படவே கோடி பாக்கியம் வேண்டும் -கிடைத்தால் -ஜன்ம சகஸ்ரம் ஆனால் தான் கிருஷ்ண பக்தி பண்ண ஆசை வரும்–எறும்பு –மிருகம்-மனிதன் -ஆஸ்திகன்- தேவதாந்த்ரம் விட்டுசலித்து சலித்து முத்து கொள்ளுவது போல் நம்மை கொள்கிறான் –பிரம பட்டம் கட்டி வைத்து நந்தகோப விரஜை கோபிமார்கள் என்ன பாக்கியம் என்று எண்ணினானே –பாக்கியம் உணர வேண்டும்-கருணை விசேஷம்–தனயோகம் கிருஷ்ணா தவ நாம கீர்த்தனம்-தூப புஷ்ப கைங்கர்யம்-அடிமை பட்டு அன்பு கொண்டு—இதுவும் என் செயல் இல்லை.. உன் உடைய கிருபை -இனி என்ன –வேற என்ன வேண்டும்…சர்வமும் அவன் தானே –ஹரி தாசர் சங்கம் கிட்டியபின் எனக்குஎன் புரந்தர தாசர் சந்தேகம் இல்லை கோவிந்தன் தயை கிட்டிய பின்–
இனிது என்பர்காமம் அதனிலும் ஆற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் –இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீராகும் சிறிது –35
திரு அடி அடைவதே ஷேமம்-யோக ஷேமம் -வஹாம் யஹம் -அனன்யா சிந்தை யந்தோ –அவனே கதி என்று இருந்தால்–உலகம் மறந்து அவனையே பிடித்து -நாம தேவருக்கு எல்லாம் பண்ணினான் —ஷேமம் பக்தி தான் -அனுகூலம் பண்ண குடும்பம் ஷேமம் ஆக வைக்கிறார் சரீரம் ஷேமம் கொடுக்கிறார் பக்தனுக்கு –ஷேமமே கதி என்றால் காம்யார்த்த பக்தி–உண்டியே உடையே உகந்து இருக்காமல்–உண்ணும் சோறும் பருகும் நீரும் இனிது என்பர் எல்லாம்கண்ணன் என்பர் ஆழ்வார்–சரீரம் கோவில் வெளியில் உள்ளவை கடைபோல்–தாண்டி போனால் ஆனந்த மயன்-அந்தர்யாமி-அன்ன மயமே தாண்டாமல் இருந்தால்–இதையே தியானம் பண்ணி கொண்டு இருந்தால்–அன்னமும் பானமும் போரும் என்பர்–மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான் -பாலை வானத்திலும் பக்தனுக்கு தண்ணீர் கொடுப்பான்–நின் பெருமைக்கு ஆசை பட்டால்- அதையே குண அனுபவம் பண்ணி கொண்டு-பசி தாகம் மறந்து-ஷேமம் ஆகும் அதுவே —
சிறியார் பெருமை சிறி தின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் –அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு என் நெஞ்சே ! இரு –36
சின்ன பெருமையை பெரியதாகவும்–பிறரின் சின்ன தோஷம் பெரியதாக சொல்லி கொண்டு..-மனிசர் பெரும பேசி கொண்டு பரமனான அவனை பேசாமல்-அறியாமை–மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த -மாயன் என்று–சர்வ லோகமும் அளந்து -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்காரம் பண்ணின அவன் ஒருவனே பரன்
இரும் தன் கமலத் திரு மலரின் உள்ளே
திருந்து திசை முகனைத் தந்தாய் –பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு –37
விசாலமாககுளிர்ந்த நாபி கமலத்தில் உள்ள நான் முகனை நாராயணன் படைத்தான் –அவனை ஏத்தா தவர்கள் பிறந்துஇறந்து— உள்ள அவனை -சரண் அடைந்தால் மோஷம் இஷ்யாமி மாசுச –ஆச்ரயித்தவர்கள் மறு படி பிறக்க வேண்டாம்-
எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கு என்றும் சார்வம் அறிந்து –நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் ஒத்து –38
பெரு நிதி இருக்கிறது என்று -இறுமாந்து-திரு நாம சங்கீர்த்தனமே-நிர்த்தனம் இல்லாதவனுக்கு தனம்–கபீர் தாஸ் -நமக்கு என்று மாதவன் என்று நினைந்து அவர் பேர் ஓதுவதே நிதி
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழை காள் –ஒத்ததனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –39
ஓதுவது வேதத்தை சுருக்கு -ஹரி நாராயண திரு நாமம் சொல்வதே -ஹரி திரு நாமம் சந்கீர்தனத்தால் வேதம் அத்யயனம் பண்ணும் பலன் கிட்டும்..-ஆதி மத்யம் இறுதி-அவனையே சொல்லும் –அனந்த வேத போயின -அபங்கமும் -நிற்ப்பது எல்லாம் நெடுமால் என்று ஓதாதார் படித்தது எல்லாம் கடை-ஸ்ரீ கிருஷ்ண சங்கீர்த்தனமே -ஒத்தின் சுருக்கம் அனைத்து சாஸ்திரம் -சுருக்கமே மாதவன் பேர் சொல்வது
சுருக்காக வாங்கி சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் –திரு பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள் –40
தெரிந்தும் அல்ப சுகத்தில் ஆசை கொண்டவர் –வ்யர்த்தம்–ஐயார் =கபம்–வாத பித்தம் -வரும் முன் -சொல்லி விட வேண்டும்-மூச்சு திணறல்-அப் பொழுதைக்கு இப் பொழுதே சொன்னேன்
பொருளால் அமர் உலகம் புக்கு அயல் ஆகாது
அருளால் ஆறாம் அருளும் அன்றே ?–அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே ! நினை –41
பொருளால் தேவ லோகம் புக முடியாது தர்மம் அறம் வேண்டுமே…புதைத்த பணம் பூமிக்குள்ளே இருக்கிறது..மா மறையோர் சுகர்-வாசு தேவன் பாதத்தையே நினைந்து -கொண்டு இருக்க வேண்டும்
நினைப்பான் திரு மாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுது ஆரத் தோள் –42
சுந்தர தோளினான் பார்க்க நினைக்க வேண்டும்–ஆர்வமே பக்தி ஆசை பட்டால் காட்டுவார்- மற்ற ஆசைகளைவிட்டு-இவை தான் விக்நம்-மண்ணில் பிறந்ததால் -இவர்களுக்கு பெரிசு-பேர் இன்பம்-பேயரே யாவர்க்கு எல்லாம் நானும் பேயனே–தனி தனி பேய்-உலகோடு ஒட்டாமல்-துரந்து–அவன் திரு அடியே கதி என்று
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் –தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே ? என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு –43
தோள்கள் விழும் படி யுத்தம் செய்த கோதண்ட பாணி–முடி அனைத்தும்–பத்து இல்லை- உதிர உதிர மீண்டும் பத்தாக தோன்றியதே—அதனால் அனைத்தும் –அவன் தலையை அவனே பார்க்கும் படி ஆனதாம்-ஹிருதயம் பிளந்து முடித்தார்–கோல வில்லி ராமன் தாள்களை தொழுவார்-கையே கைகள்–சர்வ லோக சரண்யாய ராகவாயா சரண்
சிறந்தார்க்கு எழு துணையாம் செம் கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே ! என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு –44
நாக்கு -வாக்கு-நாக்கு இருப்பவை களுக்கு எல்லாம் வாக்கு இல்லை..நாராயணா சொல்ல தானே–தாரக மந்த்ரம்..ஆத்ம ஸ்துதி பர நிந்தை பண்ணி கொண்டு தன்னை புகழ்ந்து பிறரை இகழ்ந்து-துணை ஆபதாரம் அபகத்தாராம்-திரு நாம பலன் -ராமோ விக்ரவான்-தர்மம் தாங்கும் -பொறுப்பு-அவன் திரு நாமம் சொல்வதே லஷ்யம்
உளது என்று இரும் ஆவார் உண்டு இல்லை என்று
தளர்தல் அதன் அறுக்கும் சாரார் –அளவரிய
வேதத்தான் வேம்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம்பயின்று –45
வேத உச்சியில் -அளவரிய-அனந்தன்-ஹரி ஓம் -வேம்கடத்தான் –அவனை ஆஸ்ரயிக்க வேண்டும்–லாபம் நஷ்டம்/வரவு செலவு இரட்டைகள்-இயற்க்கை–வாழ்க்கை மாறலாம் மனிதன் மாற கூடாது–குசேலர்-பிரபு-ஆனாலும் மாற வில்லை-அருளையே நினைந்து கொண்டு இருந்தார்..ஸ்ரிய பதி சகா என்ற நினைவாலே சுகம் ஏழ்மையிலும்..-வைரம் வைரம் தானே குப்பையிலோ சொர்ண பொட்டியிலோ இருந்தாலும்-பாகவத பிரபாவம் இல்லை என்று தளர்தல் இல்லை–
பயின்றது அரங்கம் திருக் கோட்டி பன்னாள்
பயின்றது வேம்கடமே பன்னாள் –பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வன் தடக்கை மால்–46
திவ்ய தேசம் நினைவே கொண்டு–வாழ்ந்து–பயின்றது -நித்ய வாசம் பழகி போக வேண்டும்- சுவாதீனமாக கொண்டு–பன்னாள் -அழகிய சோலைகள் நிறைந்த திரு நீர் மலையும்–ஸ்ரீ ரெங்கமும் திரு வேம்கடமும்..நித்ய சந்நிதானம் இங்கு எல்லாம்
மாலை யரி வுருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி –ஞாலம்
அளந்தது இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து –47
அவனை நினைத்து மாளாது-லீலைகள் பல -அளந்து உண்டு உமிழ்ந்து -சேது பந்தம்-எடுத்து வராகன்-ஜீயர் ஆயர் தேவு-நாவல் பழம் வெண்ணெய் கொடு-போன்ற அனுபவம்-பக்தியில் நியமம் இல்லை- -உளம் கிடந்த வாற்றால் -பக்தியில் ஸ்வதந்த்ரம்–ரசிக்கும் படி ரசிக்க வேண்டும் தியானம் முக்கியம்
உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே ! –மணந்தாய் போய்
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ்
மா இரும் சோலை மலை –48
வேதத்தாலே சொல்ல படுபவன் -வேத பிரதி பாத்தின்–வாதத்தை தானே வெளி இட்டான்-அர்த்தம் உண்மையானது அவன் ஒருவனுக்கு தான் தெரியும்–மற்றை நான்கும் உணர்ந்தாய்- ஓதினான் வசிஷ்டர் சாந்தீபன் இடம் ஓதினான் –சீதா ராமன் ருக்மிணி கிருஷ்ணன்-திரு மணம் -பரி மள ரெங்கன் சர்வ கந்தன்-மணந்தாய் பிராட்டி -திரு மால் இரும் சோலை சுற்றி-
மலை ஏழும் மா நிலங்களும் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் –முலை சூழ்ந்த
நஞ்சு உரத்துப் பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாது என் நெஞ்சே ! அழை –49
எழு உலகமும் அதிர கடலும் பொங்க -நஞ்சை உண்டான் பூதனை- நவின்று -மழலை பேசி கொண்டே உயரை வாங்கினான் –அஞ்சாது பஜனை –செய்து–
அழைப்பன் திரு மாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி –இழைப்பு அரிய
ஆயவனே ! யாதவனே ! என்று அவனை யார் முகப்பும்
மாயவனே ! என்று மதித்து –50
திரு மால்- மோகனன் -பெரியவன்-அழைப்பன்–நித்யர் ரிஷிகள்–ஆயர் பாடிகள் -ஜகன் மோகன சுந்தரா ஆயா மாயா சொன்னால் உகப்பு அவனுக்கு –பெருமாள் =ராமன்..கண்ணன்=ஆயன்-ஏக வசனம் கண்ணா பிரான் கூட சொல்ல மாட்டார்கள்– முகம் மலரும் பிழைப்பு =குற்றம் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே ஓங்கி உலகு அளந்தான் நாராயணா -குறை ஒன்றும் இல்லா கோவிந்தா கோபால முகம் மலரும்..-பிழைப்பு இல் –குற்றம் இன்றி-கண்ணா -ஆங்கு அவர்கள்-கோபிமார்கள் ஆயவன் கோபாலா மாயவனே என்று –உகந்து -கோல கலா கோல கலா வாராய் செல்ல பிள்ளாய் கூப்பிட்டால் வந்து அமருவான் நம் பெருமாள் தக்கான் அக்கார கனி இவற்றுக்கு -ஆகாது ரிஷிகள்வைத்த ரிஷி கேசன் போன்றவை -கோயம் சப்தம்-பஜனை–குதித்து ஓடி வந்து மடியில் அமருகிறான்-
———————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம் ..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..
ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம் ..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..
Leave a Reply