கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-
பதவுரை
புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.
இந்த பிரபந்தம் நித்ய அனுசந்தானம் – –
கைங்கர்யம் பண்ணி சேஷத்வம் சித்திக்க -மகிழ்ந்து ஆசை உடன் -அவனை பள்ளி உணர்த்தி-இது காறும்-
பள்ளி உணர்த்தி கடாக்ஷம் பெற வேண்டியவர்-
இதில்- தம் பெயர்க்கு ஏற்ற -அடியார்க்கு ஆட் படுத்த
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -தரமி-தர்மம் ஓன்று அன்பே ஆழ்வார் வடிவம்–
அது போல தொண்டர் பொடியே இவர் -இவர் பிரார்த்தனை
அடுத்த பிர பந்தம்-அமலன் ஆதி பிரான்-அடுத்த ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் –அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் –
பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள்
வையம் தகளியா தொடங்கி -தொல்லை பழ வினையை முதல் அரிய வல்லார் தாமே என்று பேசினவர்கள்-
பிரார்த்தித்த ஆழ்வார் இங்கு -அங்கு பயன் பெற்றதை சொல்கிறார்
சூழ் புனல் அரங்கா -விளித்து அருளுகிறார்
உபய காவேரி மத்யத்தில்-கடி-வாசனை நன்றாக மலர்ந்தன என்கிறார் –
இங்கும்-கனை கடலில் கதிரவன் முளைத்ததை சொல்கிறார் -முதல் பாசுரம் போல-
துடி-உடுக்கை போல சிறிய மின் இடை மடவார்கள்/மின்னிடை மடவார்கள்- தீர்த்தமாடி வஸ்திரம் தரித்து ஏறினார்கள்
பலன் பேர் சொல்லாமல்- முதல் ஆழ்வார்களும் திரு மழிசை திரு பாண் ஆழ்வாரும் இந்த ஐவரையும் சேர்த்து அமுதனார் –
சீரிய நான் மறை செம்பொருள்-சொல்லி அடுத்து திரு மழிசை ஆழ்வார்-
தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்
அடையாளம்–சேஷருக்கு சூசுகம் சங்கு சக்கரம் பொலிந்து தோன்றிய தோள் சேஷிக்கு சூசுகம்
அடியேனை-தாஸ்ய ரசம் கொண்டவன்-அளியல்- நம் பையல்-
அனைவரும் படு காடு கிடக்கிறார்கள் என்று சொல்லி-இதில் தனக்கு வேண்டியதை கேட்டார்
கீழே -மக்களுக்கு பரத்வம் காட்டி அருள தேவதைகள் கூட்டம் சொல்லி –
இதில் தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –
இதுவரை ப்ரஹ்மாதிகளும் படுகாடு கிடப்பதை அருளிச் செய்து
முதலாம் திரு உருவம் மூன்று என்பர்-ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் –நாபிகமலம் -பரத்வம் காட்டி –
நான் முகனை நாராயணன் படைத்தான் சுருதி ஸ்மிர்த்தி மம ஆக்ஜை-அதை வேதம் தமிழ் செய்த ஆழ்வார்கள்
பரம சைவர்கள்-பசுபதி ஆகமம் -தமிழ் -ஓதுவார்கள் தான் 12000/ஸ்மார்த்தர்கள் வேதம் மட்டும்
சங்கரர் -பௌதர்கள் ஜைனர்கள் தலை விரித்து ஆடும் பொழுது அதை மாற்றி வேதம் வழி கொண்டு வந்தார்
உபய வேதம் -வாய் கொண்டு மானிடம் கவி சொல்ல அல்லேன்-இதில் தன்னை பற்றி பேசுகிறார் –
ஸ்ரீ நஞ்சீயர்
நிகமத்தில்
உபக்ரமத்தில் -பிரயோஜன பரர் போல அன்றிக்கே-தேவர்கள் ரிஷிகள் போல் அன்றியே
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா-அமிர்தம் வாங்கி போவார் அவர்கள்-தேஷாம் சதத யுக்தாம் –
நித்ய உக்தன் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கும் –
முக மலர்ச்சியே பிரயோஜனம்-ஈஸ்வர முகோலாசம்- ப்ரீதி அர்த்தம்-ஒன்றே குறிக்கோள் /
அடியேனுக்கு பள்ளி எழுந்து அருளாய் என்கிறார் -பிரார்த்தித்து நிகமிக்கிறார் –
தாமரை அலர்ந்து மது வெள்ளம்-கோஷிக்கும் ஸ்வ பாவம் கடலுக்கு-
பெரிய பெருமாளை எழுப்ப முன் கதை- சிவிடக்கு என்று திருப் பள்ளி உணர கூறை பறித்த வ்ருத்தாந்தம்
வெண்ணெய் உண்ட வாயன்-குருந்திடை கூறை பணியாய்–
கண்டாரை பிச்சேற்ற வல்ல இடை –
அவர்கள் தம் தம் உடைகளை தாமே அணிந்து கொண்டு ஏறி வருகிறார்கள்-சட்டு என்று உணர –
பழைய விருத்தாந்தம் நினைவு படுத்துகிறார்-
பெரிய பெருமாளே கிருஷ்ணன் நம் பெருமாள் சக்ர வர்த்தி திரு மகன் என்று பட்டரும் அருளி செய்வாரே –
ஸ்வாமி கத்யம் அருளியதும் ராமோ துர் நபிஷாயே -இரண்டாவது வார்த்தை பேச மாட்டான்-
சூழ் புனல் அரங்கா –
இங்கு முன்பு அரங்கத்தம்மா யமுனை விரஜை சரயு– மறப்பிக்கும் படி —
காவேரி-மன்னி கிடக்கிறீர்-கங்கையில் புனிதமாகிய காவேரி நடுவு பாட்டு
கீழே சொன்ன யமுனை-கண்ணன் உகந்த – பூ லோக மண்டபம் -விரஜை
சரயு -ராமன் உகந்த -இந்த மூன்றும் வேண்டாம் என்று இங்கே வந்து மன்னிக் கிடக்கிறான் -காவேரியே நிரூபகம்
கங்கையில் புனிதமான காவேரி -சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே
அழகிய மணவாளன்-அரங்கா சொந்த பேர் இருவருக்கும் இல்லை -ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் –
விப்ர நாராயணன் விட்டு தொண்டர் அடிப் பொடி ஆனது போலே
நிரூபக தர்மம் -சூழ் புனல் அரங்கன்
அங்குத்தைக்கு ஸ்பர்சம் ஆகும் படி ஒத்து -கோவில் அரங்கனுக்கு நிரூபகம் போல கணித்திர-
மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்
தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்
—————————————-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
நிகமத்தில்
உபக்கிரமம் உப சம்காரம் சேர்ந்து இருக்கிறது –முதலும் முடிவும் —
அடியேன் செய்யும் விண்ணப்பம் தொடங்கி-திரு விருத்தம்-மெய் நின்று கேட்டு அருளாய்-
திரு மேனி-மெய்/வட தள- வேத சிரஸ் கமல மலராள் தனத்துள்ளான் தேவகி திரு வயிற்றில் சடகோபர் திருமேனி வாக்கு/-
எல்லாம் உள்ளான் -பலர் இப்படி பேசுவார்-மெய்-சத்யம்-இமையோர் தலைவா கேட்டு அருளாய்-
இனி இனி இருபது கால் மூன்று தடவை இதிலும் 17 தடவை திரு வாய் மொழியிலும் கேட்டார் –
வைராக்கியம் ஞான ஆதிக்யத்தால் பெற்றார்-
மாறன் விண்ணப்பம் செய்த -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
ஈன சொல் ஆகிலும் 99 சொல்லி-அடுத்து
மாறன் விண்ணப்பம் செய்த தொடையல் நூறும் வன் சேற்று அள்ளல் சேரார் என்றார் 100 பாசுரத்தில்/
நமக்கே பறை தருவான் தொடங்கி அங்கு-திரு ஆய்பாடியில்-
அப் பறை கொண்ட வாற்றை முடித்தாள் ஆண்டாளும்-விஞ்சி நிற்கும் தன்மை
2 பாசுரத்தில் பரமன் அடி பாடி 29 பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
இது போல் 3-27-/4 -26 -இதே போலே உண்டே
மேலையார் செய்வனகள் கேட்டியேல்-ஆண்டாள் அழகில் மயங்கி இருந்தான் கோஷ்ட்டி –
பராக்கு பார்த்து இருக்க -வேண்டுவன கேட்டியேல் என்று தொடை தட்டி சொல்கிறாள்
ஆளவந்தாரும் /நாதாய முனி தொடங்கி ஆகாத -பகவத் பக்தி சிந்தவே நாதாய முநையே –
இறுதியில் பிதா மகம் நாத முனி -துவத் சரணார விந்த அக்ருத்மா
நேர்மையான பக்தி படைத்தவர்-பிரேமா பிரகர்சா அவதி எல்லை ஆத்மா வந்தம் –என்னை பார்த்து மோட்ஷம் கொடுக்காதே –
ரெங்க நாத முனி-சத்யா பாமை சுருக்கி பாமை சொல்வது போல நாத முனி
என் நடத்தை தாழ்ந்தது -உயர்ந்தது ஆக இருந்தால் நாத முனி பார்க்க வேண்டாமா -இல்லை-
குரு பரம்பரை ஆச்சர்ய சம்பந்தம் தான் சொரூப சித்தி ஞானம் பக்தி வைராக்கியம் நிரம்பி இருந்த
என்னையும் பார்க்காமல்-திரு வடி சம்பந்தம் என்பதால்
கூரத் ஆழ்வான் வரதன் இடம் மோட்ஷம் பெற்றதும் ராமானுஜர் உத்தரீயம் தூக்கி போட்டு மகிழ்ந்தாரே
கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் தனக்கும் உண்டு என்று-இவரும்-
கடி மலர்
கதிரவன் -கடி மலர்கள் -உண்டு-இருந்தாலும் ஏற்றம் உண்டு-
பாட்டுக்கு பாட்டுக்கு உண்டு உதிக்கும் அடையாளம் போது வைகின படி சொன்னார் பாட்டு தோறும்
கதிரவன் மலர் உண்டே போது வைதிகன் படி அருளி —
உதய பர்வதம் அனுகினது முதல் பாசுரத்தில்
ஆதித்யன் அணுக –ஆதித்யன் -தாமரை சேர்த்தி உண்டு இறே -கடி மலர் -மலர்ந்து –
கிட்டி வர வர விகசிக்குமா போலே -மது விரிந்து ஒழிகின -கொஞ்சம் மலர்ந்து -மொட்டித்த தசை மாறி மலர்ந்த தசை –
தேசாந்திரம் போன பிரஜை காணப் போகும் வீட்டார் நினைவால்- பிரதம கிரணம் பட போகிறது என்ற நினைவால் போலே
துவாரம் வழியே தேன் -மதுவிரிந்து ஒழிகின-கொஞ்சம் மலர ஆரம்பம் மொட்டித்த தசை மாறி —
உதய கிரியில் சேர்ந்து -த்ருஷ்டாந்தரம் தேசாந்தரம் இருந்து வரும் -கேட்டதும் முகம் கொஞ்சம் மலரும் –
வந்ததும் நன்றாக மலரும் -மொட்டித்த திசை மாறி மலர தொடங்கிற்று –நீர் பசை அருமானால் உலர்துவன் –
ஆச்சர்ய சம்பந்தம் தான் நீர் பசை-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-
ஆத்மா ஞான விகாசம் அவன் ஒருவனாலே தான்/அதுவும் ஆச்சர்ய சம்பந்தம் இருந்தால் தான்
இதில் கடி மலர் கமலங்கள் மலர்ந்தன-இங்கு ஆதித்யனும் மேலே போனதால்-
போது வைகின படி சொல்லிற்று
வாசம் செய் பூம் குழலாள் -அதன் மூலம் வந்த கந்தம் -கடி மலர்
கடி-நல்ல நாற்றம் வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை-அவள் வாசஸ்தலம் என்பதால் வாசம்
இவனோ-
இதில் இவனோ -கதிரவன்-முன்பு இல்லை – -குலச பிரஸ்தானம் -வினவி அருளுவீர் தாரகம் இதுவே அவனுக்கு
அவனை கடாஷி – வினவா விடில் உனக்கு ஸ்வரூப நாசம்-அவ ரக்ஷணம் தாது நாராயண சப்த வாக்கியம்-
நான் உன்னை அன்றி இல்லை நீ என்னை அன்றி இல்லை-இவர்கள் சத்தா தாராகம் –
இழக்கும் அளவு அல்ல அன்றி உன்னுடைய சத்தா தாரகம் இழக்க புகா நிற்றீர் அன்றோ -ரக்ஷணம் –
கடாக்ஷம் -ரக்ஷகம் -அதற்காக வினவி அருளீர் –
துடி இடை இத்யாதி
குருந்திடை கூறை பணியாய் – தோழியும் நானும் தொழுதோம் —
அங்கும் சுரி குழல் பிழிந்து உதறி நீ உடுத்தினால் தான் சத்தை பெறுவாய்-
குணுங்கு வெண்ணெய் நாற்றம் இன்றும் பெரிய பெருமாளுக்கு வீசும்–சிறையில் அகப் பட்டு இருகிறாய் –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அன்றோ
சூழ் புனல்
நீர்மை நோக்கி அருள வென்னும் -சூழ் புனல் அரங்கா -நீரை பார்க்காமல் நீர்மையை பாராய்
நீர் சிறை த்தை கொண்டு கண் வளர்ந்து அருளலாமோ
திரு குழலுக்கும் திரு முடிக்கும் திருத் தோள்களுக்கும் -அளவான மாலை-நித்ய சூரிகள் தான் மாலை-
அவன் இடம் ஜகத் ஒதுங்கி இருப்பது போலே சாத்தின மாலை பொருந்தி இருக்கும் –
வெளியில் எடுத்தால் மணியக்காரர் அளவை விஞ்சும் -மதுரகவி தோட்டம்-
சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூணல் சாத்தி கொள்ளாத தாச நம்பி வம்சம்-
பெரிய பெருமாளுக்கு புஷ்ப மாலை இல்லை–உத்சவருக்கு மட்டுமே –
திரு ஆராதனம் பொங்கல் -இரண்டு மாலை உத்சவர் -உபய நாச்சியாருக்கும் மாலை
ஒரு திரு அரங்க மாளிகையார்- 48 வருஷம் இங்கு இருந்தவர் அவருக்கும் மாலை/-இப்படி ஐந்து/
பெரிய அவசரம்- 4 மாலைகளை களைந்து – சேனை முதலியார் கம்பம் அடி ஆஞ்சேநேயர் சேனை முதலியார் ஜீயர்
திரு அரங்க மாளிகையார்-மாலை களைய மாட்டார்கள்
திரு அரங்க மாளிகையார் அதே மாலை/ஸ்ரீ அன்னம் போது நான்கு மாலையும் மணிய காரர்
உள் மாலை வெளுப்பு உபய நாச்சியார் இரண்டு சர மாலை பெரிய பெருமாளுக்கு
அரவணை போது களைந்து உள் வெள்ளை மாலை அர்ச்சகர்- யானைக்கு ஓன்று நாச்சியார் மாலை பசுவுக்கும்
நம் பெருமாள் மாலை திருவாசல் காப்பானுக்கு சந்நிதி வாசல் சரம்
நான்கு வேளை மாறும்
1000 வருஷம்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் செய்தது போல
10 கொத்து பரிவாரமும் ஏற்பாடு செய்து ஸ்வாமி கைங்கர்யம்
ஆழியும் சங்கையும் உடைய நங்கள் அடிகள்-சேஷித்வ ஸூசகம்
-53- சந்நிதிகள் கொண்ட கோயில் நிர்வாகம்
இவர் உடைய அடியார் அடியார் இருக்கிற படி-அடியேன்-ஆத்மாவின் ஆர்ப்பு-ஆரவாரம்- துடைத்தால் மிஞ்சுவது இது தானே –
நிலை நிற்கும் தர்மம்– அடியேன் -ஆத்மாவின் ஆர்ப்பு ஆரவாரம் தொலைத்தால் மிஞ்சுவது அடிமைத் தானம் தானே –
சரக் வஸ்திரம் -ஆபரணம் -அனுரூபம் -சின் மய ஸூ பிரகாச அந்யோன்ய ருசி -தகுந்ததாக இருக்கும்
சேஷ புதனுக்கு திருப்படலை ஸூ சகம்
மண் வெட்டி கூடை உடன் இளைய பெருமாள் சேஷத்வம் அடையாளம் –
ஷத்ரியம் அடையாளம் வில் உடன் -பெருமாளுக்கு வெளியில் பஹு பிராணன் லஷ்மணன் –
லஷ்மி சம்பத் -அளியன் என்று அருளி-
கிருபை பண்ணி-சிநேகமும் தயையும் இந்த ஜந்துவை கிருபை பண்ண அடுக்கும்-
எல்லாம் அற்றான் என்று திரு உள்ளம் கொண்டு-என்று தயை காட்டி அருளி –
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே –
அளியன் -ஸ் நேகம்– தயாபாத்ரம் –
மத பக்த பக்தேஷு பிரியம் அதிகம் -எல்லை நிலத்தினில் நிறுத்தினாய் -ரத்னம் பட்டது முத்து பட்டது என்னுமா போல
ஆட் படுத்தாய்-கிடைப்பது துர் லபம் -ஆட் படுத்தி விட்டாய்-
முதல் நிலையும் அன்றியே இவ்வருகே சம்சாரி நிலையும் அன்றி சேஷத்வ எல்லை நிலத்தில் நிறுத்தினாய் –
ரத்னம் முத்து பட்டது -கிடைத்தது போலே -ஆட்படுத்தாய் –பிரார்த்தனை மட்டும் இல்லை -கிடைத்த தனம்
வேண்டியது கிட்டியதே இன்னும் ஏன் தபஸ்-பாம்பின் மேல் நீர் நடுவில்
அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –
புசிக்க எழுந்து அருளாய் –உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
உமக்கு என்று கொண்டு அருள வேண்டும் யோக நித்தரை பலம் பெற்றதன் பின் பண்ண வேண்டுமா –
கோர மா தவம் செய்தனன் கொல்–சேஷித்வ சித்தி பெறவேண்டும்-
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –
மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தான் வாழியே
தெண் திரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பது ஐந்தும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளி எழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர் கலவி தன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துணைப் பதங்கள் வாழியே
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply