சுந்தர பாஹு ஸ்தவம் 45 to 50 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

45th ஸ்லோஹம்..

பிரேமாம் ருதவ்க பரிவாஹி மகாஷி ஸிந்து

மத்யே பிரபத்த சமுதஞ்சித செதுகல்பா

ருஜ்வீ சுசுந்தர புஜச்ய விபாதி நாஸா

கலபத் ருமான்குர நிபா வநசைல பர்த்து

அழகரின் திரு மூக்கின் அழகை அநுபவிகிறார்..

வநசைல பர்த்து சுசுந்தர புஜச்ய–திரு மால் இரும் சோலை தலைவர்ஆன சுந்தர தோள் உடை பெருமானது

கலபத் ருமான்குர நிபா நாஸா-நேர்மை பொருந்தியதாய் கற்பக கொடியின பல்லவம் போன்றதான நாசிகை யானது

பிரேமாம் ருதவ்க பரிவாஹி மகாஷி ஸிந்து மத்யே பிரபத்த சமுதஞ்சித செதுகல்பா–அழகரின் திரு கண்கள் ஆஸ்ரித வாட்சல்யத்தால் எப்போதும் அலை பாயா நின்று கொண்டு இருப்பதால் அலை எறிகின்ற பெருங்கடலோ இது என்னலாம் படி இருக்கும்  அத திரு கண்களின் இடையே கோல நீள் கோடி மூக்கு அமைந்து இருப்பதானது கடல் இடையே கட்டின அணை தானோ இது என்னும் படி இரா நின்றது என்கிறார்..

பிரேமாம் ருதவ்க பரிவாஹி-கடல் நீர் வெள்ளத்தை பேருக்கு வது போல திரு கண்களாகிய கடல்  பிரேமம் என்னும் அம்ருத பிரவாஹம் பெருக்கா நின்றது ..ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் -போல-கலபத் ருமான்குர நிபா-என்று அருளி செய்கிறார்

ஐயப்பாடு அறுக்கவும்  அவன் பால்  ஆதாரம் பெருகவும் அழகு / நமது இந்தரியங்கள் பட்டி மேயாமல் ஒருங்க வைப்பதும் அவன் திரு மேனி அழகு தான் ..சுபாஸ்ர்யம் அவன் திரு மேனி..மணத் தூண் பற்று கொம்பு ..கடல்.-திரு கண்கள்  உஊற்று – அநுக்ரகம் அதனால் வளர்ந்த கொடி -கற்பக கொடியின் கொழுந்து போல மூக்கு /கொடி போலவும் நீளமாகவும் பல்லவம் கொழுந்து தன்மை இளமை மாறாமல் இருக்குமா போல ..ருஜ்வி-ஆர்ஜ்வமாக  நேர்மையாக -கொடி வளைந்து இருக்கும் அதை விட ஏற்றம் /சேது கல்ப -அணை கட்டி -பிரேம அமிர்தம் வெள்ளம் -திரு கண்கள் இருந்து நீர் நிலை கடல் அலை போல வருகிறதாம் ..சிந்து மத்யே கடலின் மத்யத்தில் இரண்டு கடல்களின் நடுவில்/  சமு தின்ஜய -மிக உயர்ந்து கட்டப் பட்ட அணை..திரு வெக்கண்ணை போல/ தடுக்கும் தண்டு விக்கும் அணை ..இரண்டு பயன்கள் ..ஓன்று சூரியன் ஓன்று சந்திரன் /கதிர் மதியம் போல்  முகத்தான் ..அநுக்ரகம் நிக்ரகம் இரண்டுக்கும் ஆஸ்ரித அநாசிரிதர் நடுவில் தாபதுக்கும் குளிர்ச்சிக்கும் நடுவில் /உச்வாசம்நிச்வாசங்களாக இருக்கும் வேதம் -மூக்கை அனுபவித்தால் வுபாயம் சொல்லி கொடுத்து இக் கரை இலிருந்து  அக் கரை கொண்டு சேர்க்கும் /வல்லியோ கொழுந்தோ அறியேன் /ஈட்டிய வெண்ணெய் உண்டான் மூக்கு .ஒட்டி கொண்டு இருப்பதை சேர்த்து சொன்னார் ..ஆட்டியும் தூற்றியும் நின்று இரண்டு வகை வசவுகள் .அன்னைமீர் ..மாட்டு -அருகே -உயர் கற்பகத்தின் வல்லியோ -கொடியோ கொழுந்தோ அறியேன் போல..

பதிலே தெரியாத கேள்வி  கேட்டால் பராங்குச நாயகி காட்ட கண்ட எனக்கே புரிய வில்லை உங்களுக்கு தெரியுமா ஆஸ்ரித கர ஸ்பர்சம் என்பதால் ஈட்டிய வெண்ணெய்  உண்டான் /வல் விளக்கின் சுடாராய்  நிற்கும் வாலியதே  -கொடி விளக்கு போல/விரக தாபம் என்ற மகா அக்னி இருக்கும் போது அதை விட பெரிய அக்னி இது ..

46th ஸ்லோஹம்..

வ்யாபாஷி தாப்யதி கனந்தன பந்தநர்த்தி

மந்த ச்மிதாம்ருத பரிஸ்ரவ சம்ச்தவாட்யம்

ஆபாதி வித்ரு மசமாதர மாஸ்ய மஸ்ய

தேவஸ்ய சுந்தர புஜஸ்ய வநாத்ரி பர்த்து..

திரு பவள வாயை அநுபவிகிறார்..

வநாத்ரி பர்த்து சுந்தர புஜஸ்ய  மஸ்ய தேவஸ்ய –திரு மால் இரும் சோலை மலைத் தலைவரான சுந்தர தோள் உடைய பெருமானான அழகர் உடைய

வித்ரும சமாதர மாஸ்யஆபாதி..பவளம் போல் கனிவாய் சிவப்ப என்கிற படியே சிவந்து கனிந்த திரு பவள வாயானது–வித்ருமம் சமம் அதரம்

வ்யாபாஷி தாப்யதிகனந்தன பந்தநர்த்தி மந்த ச்மிதாம்ருத பரிஸ்ரவ சம்ச்தவாட்யம்-வாய் திறந்து பேசுவதில் காட்டிலும் இனிதான புன் முறுவல் பூத்து இருக்க பெற்றது..வ்யாபாஷிதம் ஆவது–வாய் திறந்து ஓன்று பணிக்கை அதில் காட்டிலும்-அப்யதிகனந்தன- மிகவும் ஆனந்த கரமாயும் கல்யாண வஹமான சம்ருத்தியை உடையதாய் இருக்கும் மந்த ஸ்மிதம் புன்னகை அதுவாகிற அம்ருத பரி ச்வரத்தாலே -அம்ருத பெருக்கினாலே-ஆட்யம் நிறைந்தது..வ்யாபாஷித-பேச்சை விட / அப்யதிக நந்தன பந்தன /மந்த  புன் சிரிப்பு அமுத பெருக்கு

அபிமத ஜன தர்சன ஆநந்த வேகத்தாலே அர்ச்சாவதார சமாதியை கடந்து விம்மி வெளி விழுகின்ற
அவ்யக்த மதுர மந்த ஹாச விச்லாசமானது வாய்  திறந்து வார்த்தை சொல்லுமத்தில் காட்டிலும் பரமானந்த சந்தோஹா சந்தாயகமாய் இருக்கும் ..அந்த மந்த ஸ்மிதமானது அம்ருத பிரவாஹம் என்றும் சொல்லலாம் படி இருக்கும் அது விஞ்சி இருக்க பெற்ற திரு பவள செவ்வாய் அனுபவிக்க பட்டதாயிற்று..
வித்ருமம் சமம் அதரம் வ்யாபாஷித-பேச்சை விட / அப்யதிக நந்தன-ஆனந்தம்  பந்தன மங்களம்  /மந்த  புன் சிரிப்பு அமுத பெருக்கு/வாலியதோர் கனி கொல்-தெரிய வில்லை /இரண்டு மதிள்/ வினை யாட்டியேன் வல் வினை கொல் /சிரம படுத்த வந்தவை/நித்யம் /கோலம் திரள் பவளம் கொழும் துண்டம் கொல் அறியேன் /நீல நெடு முகில் போல் திரு மேனிஅம்மான்  தொண்டை வாய் கோவை பழம் போல் சிவந்த /சிகப்பு நீலம் இரண்டும் சேர்ந்து ஆழ்வாரை படுத்துகிறதாம்/ பக்தி ராகம் சிகப்பு குளிர்ச்சி நீலம் தனி தனியாக சண்டை போட இப்பொழுது சேர்ந்து ஆழ்வாரை படுத்த..
ரகசியம் -புன் சிரிப்பு /முதல் சிரிப்பு முதலில் பிறந்த உடன் .உந்தையாவன் -ஜகத் காரணன்  வாசுதேவனா நந்த கோபனா/ கடை கண்ணிலும் காட்ட -நந்தனன் பெற்றனன் -உரிச்சு வைத்து இருக்கிறான் -சிரிப்பு இரண்டாவது மந்த ஸ்மிதம் /பேசுவதை விட ஆனந்தம் ..தந்தை காலில் விளங்கு பட்டது படும் அவதார ரகசியம் தெரிந்து கொண்டால்/ தெரியாமல் இருக்கிறோம் என்று சிரிக்கிறான் ..பால் கொடுக்கும் போது  குழகனே எந்தன் கோமள பிள்ளாய்!கோவிந்தா! எந்தன் குடங்கையில் மன்னி -ஒழுகு பேர் எழில் இளம் தளிர் போல் சிறு கையால் .. மழைலை மென்னகை இடை இடை அருள வாயில் முலை இருக்க  -பேச்சை விட சிரிப்பு சிறந்தது இங்கும்..
நாடு ஜாமத்தில்  சாமக் கோழியை மடியில் கட்டி கொண்டு போவானாம் ..கூவினால் அடுத்த கோபி இடம் போகுவான் கோழி கூவும் என்னுமால் ..அடுத்த கோபி சுகம் இவளுக்கு துக்கம்..தவழ்ந்து போய் கும்பம் தேடி -இருட்டில் போக கவ்ச்துபம் நீல நாயக கல்/ சிரிக்கும் போது வெளிச்சம் /அரவம் கேட்டால் உத்தரியம் மூடி மறைத்தான் ..இன்னும் வளர் கிரான் தளர் நடை நடவாய் சேஷ்டிதம்-கன்று குட்டி அவிழ்த்து விட்டு /சிரிப்பான் காற்றில் கடியனாகி ஓடுவான் ..கள வெண்ணெய் உரோலோடு ஆப்புண்டு -அகாரமும் ஆ காரமும் சேர்த்து கட்டி வைப்பாள் ..முற்றும் உண்ட கண்டம் -கழுத்தை -திருப்பி பார்த்து சிரித்தானாம் யசோதை வர வில்லை என்று ..உரலும்இவனும்  கருப்பு மேல் கீழ் பெரிசு நடுவில் சிறிசு அழுவது  தான் வித்யாசம் ..
ஆமை தாலி -ரட்சிக்க சொல்ல — ஐந்து தேவதை காக்க கொழு மோர் காட்டி  இவன் சிரிக்க– மந்த சிமிதம்..காண்டீபம் விழ புன் சிரிப்போடு பேச ஆரம்பித்தான் .கை பொம்மை போல அகப்பட்டாயே ..சிறந்த சாஸ்திரம் சொல்ல போதும் பொழுது சிரிக்கணுமே/பல சிரிப்பு/ பேசி பார்த்தார்.. சகஸ்ர  நாமம் கேட்க்க சிரித்து உட்கார்ந்தார் –ராமன் பண்ணிய ஒரே சேஷ்டிதம் -சிக்கி கொண்டான் -கொண்டை-உண்டை வில் செரித்தாய் கோவிந்தா ..சிரிப்பு கூனியை அவமாநிதார் என்று பலி வாங்கினாள்.. செம் பவள திரள் வாய் தன சரிதை கேட்டான்-சிரித்தான் -சிரித்தது செங்கட் சீயம் -இரணிய வதை படலம் கம்பர்..மேட்டு அழகிய சிங்கர்-திரு கோபுரத்து நாயனார் பெயர் உடன் இருந்தார் ..இன்றும் முதலி ஆண்டான் வம்சத்தில் இதே பெயர் உடன் உண்டு..சிரித்ததால் அங்கீகாரம் கிடைத்தது .. ரென்கேந்திர சிங்கமும் சிரித்தது உண்டு ..ஆசன பத்மத்தில் அழுத்திய திரு வடிகள்..நாட்டியம் போல மந்த ஸ்மிதம் ..முகமும் முறுவலும்..வைகுண்ட நாதனே இவன் ..முக்தன் ஜீவன் வந்த பின்பு கோட்டுக்கால் கட்டில் மிதித்து ஆரோகித்து அவன் -இவ் வளவு நாள் எங்கே போனாய்  கேட்க்க பதில் தெரியாமல் சிரிப்பான்..சிவந்து கனிந்து  வெண் பல் இலகு சுடர் இலகு மகர குண்டலத்தன்

47th ஸ்லோஹம்

யசோத அன்குல்யக்ரோன் நமித சுபு காக்ராண முதிதெவ்

கபோலா வத்யாபி ஹ்யநுபரத தத்தர்ஷா கமகவ்

விராஜேத விஷ்வக் விதத சஹாகாராச வரச-

பிரமாத்யத் ப்ருன்காட்ய தரும வனகிரேஸ் சுந்தர ஹரே:

அழகருடைய திவ்ய கபோலங்களை அனுபவிகிறார் இதில்..

விஷ்வக் விதத சஹாகாராச வரச- பிரமாத்யத் ப்ருன்காட்ய தரும வனகிரேஸ் சுந்தர ஹரே:விராஜேத கபோலா–எங்கும் பரந்த தேன் மா மரங்களின் மதுவை பருகி களித்து இரா நின்ற வண்டுகள் நிரம்பிய சோலைகள் உடைய திரு மலையை உறை விடமாக உடைய அழகர் உடைய திரு கபோலங்கள்  மிக விளங்கு கின்றன எங்கனே என்னில்..

யசோத அன்குல்யக்ரோன் நமித சுபு காக்ராண முதிதெவ் வத்யாபி ஹ்யநுபரத தத்தர்ஷா கமகவ்–..பண்டு கிருஷ்ண அவதாரத்திலே யசோதை பிராட்டி தன உடைய விரல் நுனியாலே மோவாயை தூக்கி முத்தம் இட்டதனாலே ரோமாஞ்சிதங்கலாய் இன்னமும் அந்நிலை மாறாதே இருப்பனவாம் ..முத்தம் இடுவது கபோலத்தில் அன்றாகிலும் ஹர்ஷம் தோற்றுவது கபோலத்திலே ..அழகர் உடைய திவ்ய மங்கள விக்கிரகத்தில் ஸ்ரீ கிருஷ்ண தாத்தாம்ய பாவனை முற்றி அருளி செய்ததாம் இது கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கொண் அணி அரங்கன் போல..

காதை தொட்டால் இடுப்பு அசைகிறாள்  போல முக வாயை தொட்டு யசோதை தூக்க கபோலம் பருத்து ஒளி விடுகின்றன –தேன் மா மரத்தில் இருந்து அம்ரித ரசம் பெருக .–சுந்தர ஹரி –திரு கன்னங்கள் ..தேன்  வண்டுகளால் நிறைந்து இருக்கும் …விஷ்வக் வித்த- அனைத்து திசைகளிலும் பரவி இருக்கும் -தேன் வண்டுகள் தேன் குடிக்க இவர் கன்னம் எப்படி பருக்கும் ?.யசோதை .கை விரல் நுனியால் தூக்க  பட்டதால் முத்தம் கொடுக்க –முக வாய் பருத்தால் நன்றாக இருக்காது…அதனால் முக வாயில் கொடுத்த முத்துக்கு அவற்றின்  நெருங்கியவர்-கன்னங்கள்  ஆனந்தம் போல .அன்று ஏற்ப்பட்ட .சந்தோஷ பெருக்கு இன்னும் முடிய வில்லை..இன்றும் தெரிகிறது ..பெரிய பெருமாளின் திரு முகத்தில்  குணுங்கு நாற்றம் வீசும்-பட்டர்..போல ..மணி வாயின் இடை முத்தம் தருதலும் -தைவா  தேவகி புலம்பல்.. வெகுளியாய் நின்று அவ் வுரையும்-இன்னும் பசிக்கிறது என்று மீண்டும் ஸ்மிதம்

48th ஸ்லோஹம்

வ்யாலம்பி குண்டலம் உதகர ஸுவர்ண புஷ்ப

நிஷ்பந்த கல்பல திகாயுகளாநுகாரம்,

யத் கர்ண பாச யுகலம் நிகலம் தியாம் ந;

சோயம் சு சுந்தர புஜோ வனசைல பூஷா

அழகர் உடைய திரு செவி மடல்களை அனுபவிகிறார்..

வ்யாலம்பி குண்டலம்–மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட  என்கிற படியே தல தல என்று தொங்கு கின்ற காண மகரக் குழைகளை வுடையதாய்..

உதகர ஸுவர்ண புஷ்ப  நிஷ்பந்த கல்பல திகாயுகளாநுகாரம —மிக சிறந்த ஸ்வர்ண புஷ்பங்களோடு விளங்கப் பெற்ற இரண்டு கல்பதைகள் போன்றதாய்

திரு செவி மடல்கள் -கல்பதை/காண மகரக் குலைகள் -ஸ்வர்ண புஷ்பம்..

யத் கர்ண பாச   யுகலம்   ந:  தியாம் நிகலம் –அழகர் உடைய திரு செவி மடல்கள் இரண்டும் நம் உடைய புத்திக்கு விலங்கு போல ஆகின்றது .விலங்கு இடப் பட்டவன் இடம் பெயர்ந்து வேறு ஓர் இடம் செல்ல முடியாமல் திகைப்பது போல் தம் உடைய திரு உள்ளம் கர்ண பாசத்தை விட்டு மற்று ஓர் அவயவத்தில் ஈடு பட முடியாமல் திகைத்து இருக்கின்றது என்று காட்டுகிறார்  .

சோயம் சு சுந்தர புஜோ வனசைல பூஷா–இத்தகைய கர்ண பாச சௌந்தர்யம் வாய்ந்த சுந்தரதோள் உடையான் திருமலைக்கு திவ்ய அலங்காரமாக விளங்குகிறான்..

தோளுக்கு அவதாரணம் இந்த ச்லோஹம் ..திரு மால் இரும் சோலைக்கு இவர் ஆபரணம் ..காது கற்பக கொடி/ அதில் ஸ்வர்ண புஷ்பம் போல குண்டலங்கள்../யுகளம் =ரெட்டை /நிகளம் =விலங்கு..புத்தி எங்கும் போகாது ..தோல் வரை தொங்கும் குண்டலம். பொசிந்து காட்டுகிறது தோளின் அழகு/ தோளுக்கு இட்ட ஆபரணமா ?-காதுக்கா ? குழலுக்கா ?/உய்விடம் ஏழை யர்க்கும் அசுரர்க்கும் அரக்கருக்கும் எவ்விடம் என்று இலங்கி ..திரு குண்டல காதுகளே/ மின்னு மா மகர குண்டலங்கள்/ மீன் போல மத்ஸ்ய அவதாரம் என்பதால் பால் கடலில் மீன் இருப்பதால் ../மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி ஆட -சீல குதம்பை ஒரு காது -துணி திரி போட்டு அனுப்புவாள் ..இந்த கண்ணன் பரகால நாயகியை கவர யவன கண்ணன்/ ராஜன் செந் நிற மேல் தோன்றி பூ/ செவி பூ இது தான் //பராங்குச நாயகி– செவ்வாய் முறுவலும் ..அழி தற்கே  நோற்றோம்/ துணி திரி உடன் போனால் நாயகிக்கு பிடிக்காது என்று தேடி கண்டு பிடித்து அசைத்து -இரு பாடு இலங்கி ஆட/முன்னை காட்டுவது பின்னை கட்டுவது பெண்ணை கவர /பர கால நாயகி காதில் கடிப்பிட்டு -எதுக்கு இது என்..செண்டு சிலுப்பி -கதவின் பின் நின்றீர் ..அக் குண்டலதுக்கு கடைசியில் தோற்பார்கள்..

49th ஸ்லோஹம்..

சதம்ச சம்சஞ்சித குந்தலாந்திகா

வதீர்ண கர்ணா பரண் ஆட்யகந்தர;

சுபந்து ரச்கந்த நிபந்தனோ யுவா

சுசுந்தராஸ் சுந்தரதோர் விஜ்ரும்பதே

களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ பூங்குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று விளையாட என்றும் மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி ஆட என்றும் தனி தனியே அனுபவித்த அழகு சேர பிடித்து அனுபவிகிறதாய் செல்லுகிறது இந்த ஸ்லோஹம்
 சதம்ச சம்சஞ்சித குந்தலாந்திகா வதீர்ண கர்ணா பரண் ஆட்யகந்தர; அழகிய திரு தோள்களிலே வந்து அலையும் திரு குழல்களின் அருகே தொங்குகின்ற கன மகரக் குழை களாலே  விளங்கும் திரு கழுத்தை உடையவராய்

சுபந்துரச் கந்த நிபந்தனோ-ஸ்கந்த நிபந்தனம் -திரு தோள் பட்டைகளின் அமைப்பு திரு கழுத்து பின் புறத்தின் சந்தி பந்தம் .. அது சுபந்தம் -மிக அழகியதாய் இருக்கின்றது..

யுவா சுசுந்தராஸ் –இளகி பத்தித்த திரு மேனியை உடையவர் ஆகையாலே நித்ய யவன சாலயாய் அழகர் என்ற திரு நாமம் உடையவர்..

சுந்தரதோர் விஜ்ரும்பதே–சுந்தர தோள் உடைய பெருமாள் ஓங்கி விளங்குகின்றார்.

அழகை கொண்டே திரு நாமம் /சௌரி ராஜ பெருமாள்/ அனந்த பத்ம நாபன்-எழு கமல பூ அழகர் /அவயவ சோபை/ சுந்தர ராஜ பெருமாள் திரு நாகை அச்சோ ஒருவர் அழகியவா பொன் நிற மேனி -சௌந்தர்யா சோபை லாவண்யம் இரண்டும் சேர்ந்து/சுந்தர தோள் உடையான் -சௌந்தர்யம் கள் அழகர் லாவண்யம் /கேச பாசம் குண்டலம் தங்கிய இடம்-களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ பூண் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று விளையாட -அலை எரிகிறது போல /மை வண்ண நறும் குஞ்சி  பின் தாள மகரம் சேர் /சேர்த்து அனுபவம் சு சுந்தர -அதித அழகு யுவா -என்பதால்/ ஸ்கந்த தோள் /சுபந்த நிபந்தனம் /திரு தோள் பட்டைகளின் அமைப்பு அனுபவம்../நால் தோள் அமுது /அதற்க்கு தக்க தோள் பட்டை /கழுத்து ஒன்றே /இடம் கொடுத்து கொண்டு இருக்கும் அமைப்பு …பின் புர சந்தி பந்தி -காட்ட கண்டவர் சேவிகிறார் ஆழ்வான்/குந்தளம் -திரு குழல் /காது  ஆபரணமும் குழல் ஆபரணமும்  தோள்களுக்கு ஒளி கூட்டுகிறதாம் ../விசாலமான தோள்கள் ஜகன் மோகனமோ முன்னிலும் பின் அழகு பெருமாள் /பல்லாண்டு அருளியவர் சுத்தி சுத்தி வந்தவர் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு ..சூழ்ந்து  இருந்து ஏத்துவர் சுற்றி சுற்றி வந்து மீண்டும் மீண்டும் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல சுருதி/  மகர நெடும் குழை காதர்-குழை காத நாச்சியார் ../குருகா புரி நாச்சியார்/ திரு கண்ண புர நாயகி தாயார் /தருணவ் ரூப சம்பனவ் /யுவா ஆழ்வான் அவனின் காலை பருவத்தில்  ஈடு பட்டு  அனுபவ்கிறார் /அழகு பரத்வம் சவ்லப்யதுக்கும்  மூன்றுக்கும் தருணவ்-ஒரு நாள் முகத்தில் விழித்தாரை வடி வழகு படுத்தும் பாடு..வா போக்கு என்று சொல்லி  வந்து ஒரு கால் கண்டு போ என்றதும் இளமையானான் தசரதன்/சைசவம் பால்யம் கவ்மாரம் யுவா பருவம் /இவனோ யுவா குமாரன்  எப்போதும்..குமாரனை பெண் காதலிக்க மாட்டாள் அதனால் யுவா /யவனத்தை வளர விட கூடாது/ அரும்பினை அலரை போல..

50th ஸ்லோஹம்..

வ்யூட கூட புஜ ஜத்று முல்ல சத்

கம்பு கந்தரதரம் தரா தரம்,

வருஷ ஷண்ட மய பூப்ருதஸ் தடே

சுந்தராயாத புஜம் பஜா மஹே ..

திரு தோள் பட்டையின் அழகையும் திரு கழுத்தின் அழகையும் அனுபவித்து பேசுகிறார்..

வருஷ ஷண்ட மய பூப்ருதஸ் தடே — திரு மால் இரும் சோலை மலை தாழ் வரையின் அடியிலே
சுந்தராயாத புஜம் பஜா மஹே ..சுந்தரத் தோள் உடைய பெருமாளை பஜிக்கிறோம் அவர் தாம் எப்படி பட்டவர் என்னில்..ஆய்த =நீண்டு பருத்து

வ்யூட கூட புஜ ஜத்றும்–ச்கந்தத்திற்க்கும் கஜத்திற்க்கும் சந்தியான இடம் ஜத்று -அதன் மேல் பாகம் புஜ ஜத்று அது பருத்தும் அவ்யக்தமாயும் இருக்கிறது  மாம்ச்லத்வாதிசயத்தாலே அவ்யக்தமாய் இருக்கிறபடி ..வ்யூட = எதையும் தாங்கும் திண்மை /கூட = மறைந்து அவ்யக்தம் பருத்து இருக்கும் /பூஜா ஜத்று-கழுத்தையும் தோல் பட்டையும் சேர்க்கும் collar bone மேல் பக்கம் /..ஒட்டகை சிவங்கிக்கு இரண்டு ஹ்ருதயம் இரத்தம் தலைக்கு போக..தலை சுத்துவது நமக்கு இதால் தான் உட்கார்ந்தால் சரியாக போகும் கழுத்துக்கு பயிற்சி வேணும் ஆரோக்யதுக்கு  ..

கம்பு கந்தரதரம் -சங்கு போன்ற திரு கழுத்தை உடையவர் ரேகைகள் மூன்று விபக்த அங்கமாக இருப்பதால் சங்குக்கு உவமை கூறுதல் கவி மரபு ….பூமியை  யும்  கம்பு =சங்கு கழுத்தையும் தரித்து கொண்டு இருக்கிறார்..அத்தா =அனைத்தையும் விழுங்குபவன் /அன்னம் =சாப்பிட படுகிறது /சாப்பிடும் அளவோடு சாப்பிடனும்../பத்மாலயா வளையல் அழுந்தி கொடுக்க பட்ட மூன்று ரேகைகள் /திரு கையே தலை /பிராட்டிக்கு வசப் பட்டவன் அவன் ..சங்கமும் சத்தம் போடும் ஒலியும்  கழுத்தில் இருந்து வரும் சாஸ்திரம் தரும் /நடமாடும் பாணினி கூரத் ஆழ்வான்..

கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading