ஸ்ரீ ரெங்க மந்த்ரம் —

ஸ்ரீ ரெங்க மந்த்ரம்–

ஸப்த ப்ராகார மத்யே ஸரஸிஜ முகுளோத்பா ஸமானே விமானே

காவேரீ மத்ய தேசே ம்ருது தர பணீராட் போக  பர்யங்க பாகே |

நித்ரா முத்ராபி ராமம் கடி நிகட சிரஸ்:பார்ஸ்வ விந்யஸ்த ஹஸ்தம்

பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் ||-ஸ்ரீரங்கநாத ஸ்தோத்ரம்–01

ஏழு ப்ராகாரங்களின் (மதிள்கள்) நடுவில் தாமரை மொட்டுப் போல

விளங்குகின்ற விமானத்தில், திருக் காவிரியின் நடுவில், மிக மென்மை படைத்த திருவநந்தாழ்வானாகிற கட்டிலிலே (அரவணையில்) உறங்குவது போன்ற குறிப்பினால் அழகானவரும் இடுப்பிலும் சிரஸ்ஸின் அருகிலும் கைகளை வைத்திருப்பவரும் மலர் மகளாலும், நிலமகளாலும் கைகளால் அடி வருடப் படுகின்றவருமான ஸ்ரீரங்கநானைத் தியானிப்போம்..!

திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்த அஞ்சல் என்ற கையும், கவித்த முடியும்,

முகமும் முறுவலும், ஆஸநபத்மத்திலே யழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” (முமுஷுப்படி-142).

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading