பெருமாள் திருமொழி– 3-5-1-வந்து உனது அடியேன்மனம் புகுந்தாய் சிந்தனைக்கு இனியாய் ..வந்ததால் அடியேன் ஆனார்–பாட்டினால் உன்னை நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கிராம பிராப்தி இல்லை ஆழ்வாருக்கு பெருமாளே காட்டி கொடுத்தால்..அரை சிவந்த ஆடை மேல் இவர் சிந்தை இப்போ சென்றது..ஏற்ற கலங்கள் எதிர் கொண்டு -சிஷ்யர் இரண்டு மடங்கு மீண்டும் ஆச்சர்யருக்கு சமர்ப்பித்தது போல ..திரு வடி அளவு அன்றி அதன் உடன் சேர்ந்த பீதாம்பரம் வரை போனது -ஈன்று அன்னிதான நாகு -கன்றுக்கு வாசனை இல்லாமையாலே முதலில் தானே வாயில் வைக்கும் பின்பு சுவடு அறிந்தால் கன்று தானே முட்டி குடிப்பது போல..
..வன் மா வையம் அளந்த என் வாமனா -ஒக்க அனைவர் தலையிலும் திருவடி வைத்தால் போல..பிரார்திகாத நன்றி சொல்லாத உலகம்..உவந்த உள்ளம்-கடமைக்கு அளக்க வில்லை ..வுவகையுடன் அளந்தான்..அடியார் சண்டாளர் வாசி இன்றி அனைவர் தலையிலும் தீண்டும் படி ..கேட்காமலே ..ஆழ்வார் கிடைத்தால் வந்த உகப்பும்..
அன்று -ரட்ஷக வர்க்கம் தேடி வந்தான் –ஆள் இருக்கும் இடம்.-ஜனஸ்தானம் வந்தான் -நிசாசரர் இரவில் சஞ்சரிப்பவர்..வெளியிலும் வுள்ளும் இருட்டு –நேர்ந்தவர்கள்..பரஹிம்சைக்கி ஏகாந்த காலம் இரவு .வெளியில் முகம் காட்டாத பையல்கள்–.விபீஷணனும் அரக்கனாக இருந்தும் நேர்ந்தவன் இல்லை -செல்வ விபீஷணன் பொல்லா அரக்கன் ராவணன் -அன்று வெறுத்து சொல்கிறார் ஆழ்வார் ..
கிரியா பதம் இல்லை பல்லாண்டில் ..அதுவே போதும்..ரூப அவதார குணங்களை வென்ற வடிவழகு..கூட்டமாக போவது ..கள்ளம் தவிர்ந்து இருக்கணும்..அனைத்தும் அடியார்களுக்கு..ராமா ராமா என்று பிரஜைகள அனைவரும் இருப்பது போல..எய்தத் ஆத்மா -ராம அத்வைதம் !..பிரம அத்வைதம் இல்லை..
சௌசீல்யம் ராமனுக்கு விசேஷ குணம்..ஆஸ்ரித வியாமோகம் கிருஷ்ணனுக்கு விசேஷ குணம்..வெங்கணை -விடும் போது அம்பாய் படும் போது எரிகிற கால அக்னி ..பெருமாள் கண் பார்க்கிலும் முடிக்கும் வெம்மை –காகுத்தன் -குடி பிறப்பு -தரம் பார்க்காமல் விஷயீகரிப்பவன் ..செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் அவன் போல அம்பு..சரங்களால் ஆண்ட தண் தாமரைக் கண்ணன் அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாத பாவம் வரணும் .படை பொருதானுக்கு பல்லாண்டு பாட விபீஷணன் சொல்கிறான். சொல்லி இருந்தால் இலங்கை பாழ் ஆகி இருக்காது ..ஏவரும் வெஞ்சிலை –வெஞ்சிலை யுடன் இருவர் வந்தார் ..சௌசீல்யம் ராமனுக்கு ஆஸ்ரித வியாமோகம் கிருஷ்ணனுக்கு விசேஷ குணம் .மாம் அகம் இரண்டுன் அர்த்தம் -கவர்ந்த .வெங் கணை காகுத்தன் ..திரு விக்ரமன் சௌசீல்யம் பெரியது ராமனை விட .
விக்கிரமம் பராக்கிரமம்/தாளின் அழகும் தோளின் அழகும் –தாடாள பெருமாள்..
திரு அரங்கத்தில் சயனித்த பின்பு ஈச்வரத்வம் நிலை நின்றது வந்தார் ஆவி சேர் அம்மான் ராமானுஜர் நிர்வாகம்..திருவடிகளையும் திரு தோள்களையும் நீட்டி பள்ளி கொண்டு இருக்கிறார் அடியார் அல்லல் தவிர்த்த அசைவு தீர பரிவரார் இருப்பார் ..நம் ஆழ்வார் ..போல்வார் அருளியது போல ..பணியாய் வாய் திறந்து சொல். வாய் பேச்சு கேட்டு நம் சிரமம் போகணும்..கொடியார் மாட கோளூர் அகத்தும்புளிம் குடியும் -ராவண சந்ததிகள் –பரிவு மிக்கு அருளியது போல ..கடியார் பொழில் அரங்கத்து -தூரச்தனரையும் அழைக்கும் வாசனை கடியார் பொழில் வாசனையால் அபக்தனையும் பக்தனாக மாற்றும்..சர்வ கந்தன் அவன்..
சௌசீல்யம் -திருவிக்ரமன்
வீரம் -ராமன்
போக்யத்வம் -அரங்கத்து அம்மான்
மூன்றும் சொல்லிற்று..
என் சிந்தனை திருவடி சுவடு அறிந்த நெஞ்சு ..அரை சிவந்த ஆடையில் புறம்பு போக மாட்டாத நெஞ்சு .தொலைத்த நெஞ்சை இதில் கண்டார்
மனசு என்று சொல்லாமல் சிந்தனை என்றது திருவடி வந்ததால் சிந்தித்து போன நெஞ்சு ..ஏற்று கொள்வதே அதிகாரி சொரூபம் நீள் மதில் அரங்கம் ரட்ஷகம் கடியார் பொழில்போக்யத்வம்
பிரக லாதனுக்கு குடல் துவக்கு காரணம் /கொடையாளி ஆக்கினவர் நால்வரும் /அவன் கொடுத்தும் நாமும் கொடையாளி ஆகிறோம்/இனி உன் குலத்து உதிதொரை கொல்லேன் என்று முன்னம் அருளியதால் /பேர் போனவர் -இல்லை எடுத்தவர் /பகவானுக்கே கொடுத்தால் பேர் எடுக்கலாம் /இரண்டு காரணம் இந்திரன் ராஜ்யம் கொடுத்து அவனை கொடையாளி ஆக்கி கொள்ளாமல் தான் குறைத்து கொண்டான் /அலம் புரிந்த நெடும் தடக் கையன் /சத்யசங்கல்பன் /குறையாதவன் வளராதவன் எதையும் பண்ணும் ச்வாதந்த்ரன் /உவப்பு -ஆறு காரணங்கள் -வந்த திருவடியை -விலக்காமை -பேர் ஆனந்தம் தட்டி விடாதது ..தலைக்கு அணியாக ஆழ்வார் ஆளவந்தார் போல்வர் தான் ..ஆழ்வார் விஷயத்தில் முதல் இன்பம் ..திரு கமல பாதம்பிரார்த்திக்காமல் வந்தது -செய்த இடம் இது /இந்த்ராதி தேவதைகளின் ஆனந்தம்/மகா பலிக்கும் ஆனந்தம் பெருமாளுக்கே கொடுத்தால்/ ஜகத்துக்கும் ஆனந்தம் திருவடி கிட்டியதால் ஏதாவது கிட்டும் என்ற ஆனந்தம்/ ஆஸ்ரித பர தந்த்ரன் வியாமோகம் தன விஷயத்தில் ஆனந்தம்
அளவு பட்டு மூன்று உலகம் கொடுத்தாலும் அனைத்தையும் அளந்து மகா பலி வருத்தம் தீர்த்தான் ..கனக சத்திரம் -தங்க குடை கவிதால் போல திரு முடி..சிலிர்த்து வளர்ந்தது ..அவரை போல திரு அபிஷேகமும் வளர்ந்தது .ஓங்கு பெரும் செந்நெல் திரு வடி பட்டதால் வளர்ந்தது போல – சோசொஜித–அவாப்த்த சம்ச காமன்இவன் ஒருவனே –பரிச்சின்ன ஈஸ்வரர்கள் மற்றவர்கள் -உபய விபூதி நிர்வாகத்வம் வெளி i படும் திரு விக்கிரம சரிதத்தில் ..இந்திரன் இரக்க..பிரமன் குறை கொண்டு நான் முகன் குண்டிகை நீர் பெய்து –தர்ம தேவதை ஜாலமாக வந்தார் மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி –கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற கழுவினான் –ருத்ரன் பூதன் ஆன்னார் -பாவனம் அடைந்தார் ..சிவன் சிவனாக ஆனார் இத்தால் ..இஷ்ட பிராபகத்வம் -திரு கமல பாதம் வந்தது பாசுரத்தால் ..அநிஷ்ட நிவ்ருத்தி அன்று நேர்ந்த நிசாசரை..தரை லோகயமும் சோபம் அடைய /தேவர்கள் சரண் அடைய /தனியே நால்வராக ஆக்கி கொண்டு .சக்கரவர்த்தி திரு மகனாய் /தாடகை/மாரிசன் சுபாகு-நடிவில் யாரும் எதிர்த்து வர வில்லை / விராதன் -சீதை இருக்கும் பொழுது /கபந்தன்/கர தூஷணன் /இலங்கைக்கு பரிகை -லாவணார்ந்வம்- உப்பு கடல் /கொல்ல
விலங்கு பனி செய்ய -பர்வதங்களால் பண்பு செய்து
முசு ஒரு குரங்கு ஜாதி ..பரவதன் களாலே பண்ணி செய்து ..குரங்குளால் செய்தது தேவாதி தேவன் செயல்..கவர்ந்த வெங்கணை -அம்பே ஜெயித்தது ..விளக்கு விட்டில் பூச்சி போல ..வெண் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் ..சூரிய குலமான தாமரையை உலர்த்த வல்ல சூரியன் ..பகல் போர் தெரியாதவர் நிசாசரர் ..சரங்கள் எனக்கு எனக்கு என்று போட்டி போட்டுண்டு இரையாக கொண்டன -விடும் பொது அம்பாய் படும் பொது கொள்ளி கட்டை போல ..காகுத்தன் -மனிச ரூபத்தில் வந்தான்.. கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத்து அம்மான் ..இருவரையும் சேவிக்காத இழவு தீர பெரிய பெருமாளை -அரங்கத்து அம்மான் -கடி =பரிமளம் ஆர் =நெருக்கமாய் ..நித்ய சூரிகள் ஸ்தாவர ரூபத்துடன் கைங்கர்யம் பண்ண நித்ய ஆமோதராய்-ஆனந்தத்துடன் ஆராமம் சூழ் அரங்கம் ..காயத்ரி மண்டபம் கோவில் ஆழ்வார் பெரிய பெருமாளுக்கு ..பெரிய திருவடி பெரிய ரூபத்துடன் ..சர்வ ஸ்வாமித்வம் தோற்ற ..அரை -கரு நீல நிறம்/ ஆடை -சிவப்பு ..செவ்வரத்த ..உடையாளை ..கச்சு என்கின்றாளை..சமுத்ரம் ஆடை நுரை கரை முத்து மாணிக்கம் வேலைப்பாடு -படி சோதி ஆடையோடும் ..கடி சோதி கலந்ததுவோ ..மது கைடப -ருதிர படலத்தாலே –மரகத கிரி மேகலை -ஆபரணம் -இளம் சூரியன் முகைப்பில் வைத்து -என் சிந்தனை சென்றது –கண்ட பெண்கள் ஆடையில் துவக்கு உண்ட சிந்தைஇப்போ இதில் சென்றது -நான் ஆழம் கண்டது திருகமல பாதம்.. மனசு பிரிந்து ஆடை மேல் சென்றது..
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி -தசரதன் சொன்னது போல .நெஞ்சு பீதாம்பரத்தில்சென்றது … சென்றதாம் -ஆச்சர்யம் தோற்ற ..எங்கோ சென்ற சிந்தை இங்கே சென்றதே ..ஆசைப் பட்டு சென்றது ..தூண்டி போக வில்லை ..விஷயத்தால் ஈர்க்கபட்டது
திருபாண் ஆழ்வார் திரு வடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply