ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-எட்டாம் பகுதி-(226) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

எட்டாம் பத்தால்–கீழ்ச் சொன்ன சர்வ சக்தி யோகத்தாலே நித்யமாக கல்பிதமான – போக்ய போக உபகரண -போக ஸ்தானங்களை உடையவன் ஆகையாலே – சத்ய காமனான சர்வேஸ்வரன் -கீழ்
தமக்கு உண்டான வாசிகமான அடிமையையும் விஸ்வமரித்து -தன் அனுபவ அலாபத்தாலே
கலங்கி -தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி – சம்சார தோஷ அனுசந்தானத்தாலே -அஞ்சின இவரைத் தரிப்பிக்கைக்காக –பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
அத்தாலே க்ருதஜ்ஞராய் -அதுக்கு பலமாக –-இவர் ஆத்ம சமர்ப்பணம் பண்ண – அத்தாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்- இவருக்கு உண்டான ஆத்ம குணங்களாலே அதி ப்ரீதனாய் –
இவர் திரு உள்ளத்திலே இருந்து நிரதிசயமாக அனுபவிப்பித்து -இனி அயோக்யர் என்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைப் பிரகாசிப்பிக்க
–-அதனுடைய யாதாத்ம்யத்தை அனுசந்தித்தவர்
கீழ் தம்முடைய பிராப்ய பிராபகங்களை கேட்டு உகந்தவர்கள் – பிராப்யம் ஒன்றும் -பிராபகம் ஒன்றுமாய் -இரு கரையர் ஆகாதபடி – பிராப்யமாக சொன்ன விஷயம் ஒன்றிலுமே அவர்களை தத் பரர் ஆக்குகிறார் என்கிறார்

இப்படிப்பட்ட ஸக்தி தன்னாலே நித்யமாக கல்பிதமான போக்ய போகோபகரண போக ஸ்தாநங்களை உடையனாகையாலே ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன்‌ கீழ்‌ தம்மைக்‌ கொண்ட வாசிகமான அடிமையையும்‌ விஸ்மரித்து பகவத லாபத்தாலே கலங்கி அவனுடைய குணங்களிலும்‌ ஸ்வரூபத்திலும்‌ அதிஸங்கை பண்ணி ஸம்ஸார தோஷாநுஸந்தாநத்தாலே அஞ்சின இவரை தரிப்பிக்கைக்காக பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க அத்தாலே க்ருதஜ்ஞராய்‌ அதுக்குப்‌ பலமாக அவர்‌ ஆத்ம ஸமர்ப்பணம்‌ பண்ண அத்தாலே பெறாப் பேறு பெற்றானாய்‌ இவர்க்குண்டான ஆத்ம குணங்களாலே ப்ரீதனாய்‌ இவர்‌ திருவுள்ளத்திலே யிருந்து நிரதிஸயமாக அநுபவிப்பித்து இவர்‌ இனி அயோக்‌யரென்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை ப்ரகாஸிப்பிக்க அதனுடைய யாதாத்ம்யத்தை அநுஸந்தித்த இவர்‌ கீழ்‌ தம்முடைய ப்ராப்ய ப்ராபகங்களைக்‌ கேட்டு உகந்தவர்களுக்கு ப்ராப்ய மொன்றும்‌ ப்ராபக மொன்றுமாகாதபடி ப்ராப்ய மொன்றிலுமே தத்பரராக்குகிறார்‌.

1-தேவிமார்‌ பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்‌னும் படி சக்தியாலே நித்யமாகக்‌ கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்ய காமன்‌ கொண்ட வாக்‌ வ்ருத்தியையும்‌ மறப்பிக்கும்‌ கலக்கமும்‌ ஸங்கையும்‌ அச்சமும் தீர, –2-தலைச்‌ சிறப்பத்‌ தந்தவதில்‌ க்ருதஜ்ஞதா பல ப்ரத் யுபகாரமாக வேந்தர்‌ தலைவன்‌ கந்யகாதநம்‌ போலே ஆரத் தழுவி அற விலை செய்த ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கிப்‌ பணைத்து –3-ஜந்ம பாஸம் விட்டு ஆத்‌வாரம்‌ ஆளுமாளாரென்று பரிந்து அநுருபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து -4-தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து அமாநுஷ போகமாக்கினவன்‌ –5-மூன்று தத்துக்குப்‌ பிழைத்த அரு வினை நோய்‌ மறுவலிடாமல்‌ சிறியேனென்றதின்‌ பெருமையைக்‌ காட்ட –6–தேஹாதிகளில்‌ பரமாய்‌ கன்று நினைக்கில்‌ லக்ஷ்மீ துல்யமாய்‌ அவர்க்கே குடிகளாம்‌ பரதந்த்ர ஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர்‌ –7-ஸ்வ ஸாதந ஸாத்‌யஸ்தர்‌ இரு கரையராகாமல்‌ மண்ணவரும்‌ வானவரும்‌ நண்ணுமத்தையே குறிக் கொண்மின்‌ உள்ளத்தென்று ப்ராப்ய ஏக பரராக்குகிறார்‌ எட்டாம் பத்திலே –

சத்யகாமன் -ஆத்மலாபத்தாலே அதீவ விளங்கி -பணைத்து -ப்ரீதி வர்த்தித்து -உறைந்து -கண்டு கொண்டு இருந்து – அமானுஷ போகம் ஆக்கினான் -அங்கனம் ஆக்கினவனாகி நோய் மறுவலிடாமல் சிறியேன் என்றதன் பெருமையைக் காட்டினேன் – காட்டக் கண்டு அனுசந்தித்த ஆழ்வார் ஸ்வ சாதன சாத்யஸ்தர் -இருகரையராகாமல் -அவர்களை ப்ராப்ய ஏக பரராக்குகிறார் -என்றபடி-
வேந்தர் தலைவன் -ஜனக மகாராஜன் -ஜென்ம பாசம் விட்டு-முதல் – சீதா குணங்களால் -வரை
ப்ரீதி வர்த்திக்க காரணங்கள் -சீதா பிராட்டி -ஆழ்வார் சாம்யம் சொல்லிற்று இத்தால் )

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்-
-அதாவது–தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி-8-1-1- -என்றும் – பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே யாம்–8-3-6-என்றும் – நேர்பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன்–8-9-11-என்றும் – நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த-8-10-11 -என்றும் லஷ்மீ பிரப்ருதி திவ்ய மகிஷிகளுக்கு வல்லபனாய் -நித்ய ஸூரிகள் ஏவிற்றுச் செய்ய – அவர்கள் சேஷ வ்ருத்திக்கும் -ஜ்ஞானாதிகளுக்கும் தானே விஷயமாய் – தன்னோடு பொருந்தி பூர்ணமாய் கட்டளைப் பட்டு இருக்கிற லோக த்ரயத்துக்கும் நிர்வாஹனாய் இருக்கும் என்னும் படி — கீழ்ச் சொன்ன சக்தி தன்னாலே நித்யமாக கல்பிக்க பட்ட -பத்னி பரிஜன ஸ்தான – போக்ய போக உபகரணங்களை உடையவன் ஆகையாலே-சத்ய காமனாய் இருக்கிறவன்-

(தேவிமார்‌ பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடென்னும்படி ஸக்தியாலே நித்யமாகக்‌ கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்யகாமன்‌) “தேவிமாராவார்‌ திருமகள்‌ பூமி ஏவ மற்றமரர்‌ ஆட்செய்வார்‌” (திருவாய்மொழி 8-1-1 “பணியாவமரர்‌ பணிவும்‌ பண்பும்‌ தாமேயாம்‌ அணியாராழியும்‌ சங்கமுமேந்துமவர்‌ (திருவாய்மொழி 8-3-6) “நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்‌ நாயகன்‌” (திருவாய்மொழி 8-9-111) “நல்லகோட்பாட்டுலகங்கள்‌ மூன்றினுள்ளும்‌ தான் நிறைந்த அல்லிக்கமலக்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 8-10-11) என்று லக்ஷ்மீ ப்‌ரப்‌ருதி திவ்ய மஹிஷிகளுக்கு வல்லபனாய்‌, நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளுமவனுமாய்‌, அவர்களுடைய ஸ்தோத்ராதிகளுக்கு விஷய பூ,தனுமாய்‌, போக்யாதிகளால்‌ குறைவற்றுக்‌ கட்டளைப்‌ பட்ட லோக த்ரயத்துக்கும்‌ நிர்வாஹகனுமாய்‌ இருக்குமென்கையாலே கீழ்ச் சொன்ன ஸக்தி தன்னாலே நித்யமாகக்‌ கல்பிக்கப்பட்ட பத்நீ பரிஜந ஸ்தாந போக்‌ய போகோபகரணங்களை உடைய ப்ரக்ருதியாலே தனக்கென்று தேட வேண்டாத படி நித்யமான போகத்தை உடையனாகையாலே ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன்‌. 

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-அவர்கள்புருவம் நெளிந்த இடத்தே உனக்கு கார்யம் செய்ய வேண்டும் படி வல்லபைகளாய் இருக்கிறார் பிராட்டியாரும் ஆண்டாளும் -நகச்சின் நபாராத்யதி -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி -பொறுப்பது எத்தை குற்றம் தான் உண்டோ -என்று அப் பொறை தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் ஒருத்தி -ஒருத்தி சம்பத்தாய் இருக்கும் -ஒருத்தி சம்பத்துக்கு விளை பூமியாய் இருக்கும் -அவர்கள் இருவரும் அருகே இருக்க நான் இழக்க வேண்டுகிறது என் என்ன-ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-அவனும் அவளுமான சேர்த்தியிலே எடுத்துக் கை நீட்டுவார் நித்ய ஸூரிகள்-ஏவ -கைங்கர்யம் உத்தேச்யமானவோ பாதி ஏவிக் கொள்ளுகையும் உத்தேச்யம் என்கை –க்ரியதாம் இதி மாம் வத –
மற்று -என்று துல்ய விகல்பத்தை யாயிற்று -திரு முலைத் தடத்தில் அணைந்தால் பிராட்டிமார்க்கு உள்ள இனிமை -அச் சேர்த்தியில் கைங்கர்யம் பண்ணப் பெறுகையாலே இவர்களுக்கு உண்டாம் –ரமமாணா வநேத்ர்ய -ஸ்வரூப அனுரூபமாய் இறே-ஸூகங்கள் இருப்பது –வேதம் வல்லார்களைக் கொண்டு என்கிறபடியே அவர்களும் புருஷகார பூதராய் இறே இருப்பது

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6–பணியாவமரர் -வேறே சிலரை பணிய சம்பாவனை இல்லாத நித்ய ஸூரிகள் -முன்பு அஸேவ்யர் காலிலே குனிந்து ஒரு நாளிலே அனுகூலித்து-அழுக்கு உடம்பு எச்சில் வாய் என்று அனுதபித்து -பின்பு அவன் காலிலே குனிந்தவர்கள் அல்லர் –பணிவும் பண்பும் தாமேயாம்-அவர்கள் பணிவுக்கும் ஞானாதி குணங்களுக்கும் தாமே விஷயமாய் இருக்குமவர்

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-குறைவற்ற மூவுலகுக்கும் நேர்பட்ட நாயகன் -த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யான் நாத வத்தரம்-என்று ரஷ்யத்தின் அளவன்றிக்கே இருக்கிற ரக்ஷகத்வ துடிப்பு -இத்தால் நாயகன் படி சொல்லிற்று -மேல் இவர் தம் படி சொல்லுகிறது –
தன்னடிமை-நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்-தொண்டன் சடகோபன்-அவன் சேஷித்வத்துக்கு எல்லை யானால் போலே இவர் சேஷத்வத்துக்கு எல்லை யான படியும்

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-நல்ல கோட்பாட்டுலகங்கள்-பாகவத சேஷத்வமே புருஷார்த்தம் என்று உபபாதித்தவாறே சகல லோகங்களும் அப்படியே கட்டளை பட்டது-மூன்றின் உள்ளும் தான் நிறைந்த-வ்யாப்தியும் தேவையாகி யன்றிக்கே புதுக் கணித்தது

கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்-அதாவது
உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ள வைத்தோம் -என்று தான் இவரைக் கொண்டு வாசிகமான அடிமையும் விஸ்மரிக்கும் படி ஆக்கின – காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி -8-1-2–என்று தன்னைக் கண்டால் கண்டு அனுபவிக்கப் பெறாமையால் வந்த கலக்கமும் –
அவ்வளவு இன்றிக்கே – உமர் உகந்து உகந்து -6-1-4–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்-என்று தன்னுடைய ஆஸ்ரித பாரதந்த்ரமாகிய குணத்திலும் – இறந்ததும் நீயே -8-1-7–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்-என்று தன்னுடைய சர்வ பிரகாரித்வம் ஆகிய ஸ்வரூபத்திலும் -பண்ணிய சங்கையும் –நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்-8-1-9–என்று சம்சார தோஷ அனுசந்தானத்தால் வந்த அச்சமும் நிவ்ருதம் ஆகும் படியாக

(கொண்ட வாக்‌ வ்ருத்தியை மறப்பிக்கும்‌) கீமும்‌ கைக்‌ கொண்டு கவி பாடுவித்துக்‌ கொள்ள வைத்தோம்‌ என்று அவன்‌ கொண்ட வாசிகமான அடிமையையும்‌ விஸ்மரிப்பிக்க வற்றான (கலக்கமும்‌ ஸங்கையும்‌ அச்சமும்‌ தீர) “காணுமாறருளாய்‌ என்றென்றே கலங்கி” (திருவாய்மொழி 8-1-2 “அறிவொன்றும் சங்கிப்பன்‌‘ (திருவாய்மொழி 8-1-7) நரகம் நானடைதல் அன்றும் அஞ்சுவன் (திருவாய்மொழி 8-1-9) என்று பகவதலாபத்தாலே கலங்கி பகவத் குணங்களிலும் ஸ்வரூபத்திலும்‌ அதி ஸங்கை பண்ணி ஸம்ஸார தோஷாநுஸந்தானத்தாலே அஞ்சின இவர்க்கு அவையும்‌ நிவ்ருத்தமாம்படி.

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2–காணுமாறு அருளாய் -அலை கடல் கடைந்த அப்பனே -காணுமாறு அருளாய் என்னைச் செய்தே காணப் பெறாதே இருக்க பின்னையும் காணுமாறு அருளாய் என்கிறார் இறே -காண்கைக்கு ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுமவர் அல்லரே-வர்ஷ தாரையால் அல்லாது தரியாத சாதகம் போலே அருள் அல்லது அறியாதவர் ப்ரவர்த்திகைக்கு தாம் சக்தர் ஆனாலும் பிராப்தி இல்லை என்று இருக்குமவர் –
என்று என்றே -அநவரதம் இத்தையே சொல்லா நிற்பார் -ஒரு கால் சொன்னால் வர காணாது ஒழிந்தால் வேறு ஒரு புகில் யுண்டாகில் இ றே அத்தை பற்றலாவது –கலங்கிக்-இப்படி கூப்பிட்டு ஒரு படி செல்லா நின்ற வந்த தாருண த்வனி வழியே ஹ்ருதயத்தில் பிறந்த கலக்கம் ஒருகாலைக்கு ஒரு கால் ஏறி வரா நின்றது –ஜடிலம் சீர வசனம் –

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன்
வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4—உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி-உனக்கு அசாதாரணமாய் இருப்பார் எப்போதும் உகந்த ரூபமே உனக்குத் திரு மேனியாக நினைத்து இருப்புதி என்னுதல் -உனக்கு அசாதாரணராய் இருப்பார் உகந்தத்வத்தாலே நீ உகந்து இருக்கும் வடிவு இறே உனக்கு வடிவாய் விட்டது என்னுதல் –தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் -தாம்ஸ் ததைவ பஜாம் யஹம்உன் தனக்கு அன்பரான-இவர் -உன் பக்கலிலே பிரேம பரவசராய் இருக்குமவர்கள்-உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை-அத்யாதரத்தை பண்ணி -பிரயோஜன நிரபேஷமாக கிட்ட வேண்டும் செயல்கள் –உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்கள் –
அறிவொன்றும் சங்கிப்பன்-தன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காகும் அறிவே யாயிற்று இவர் உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் சங்கை பண்ணா நின்றேன்-வினையேன்-நான் கண்ணான் சுழலை இட்டு அதி சங்கை பண்ணின போதாக ஸ்வரூப அனுபந்தியான குணங்கள் இல்லை யாகாது இறே -அதிலே அதி சங்கை வர்த்திகைக்கு அடி என் பாபம் இறே

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்

கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-தூரஸ்தமாயும் சந்நிஹிதமாயும் அதூர விபக்ருஷ்டமாயும் உள்ள பதார்த்தங்கள் உனக்கு பிரகாரமாயற்றால் காலத்ரய வர்த்தி சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு ஆகையால் சகல பதார்த்தங்களும் உனக்கு பிரகாரம் என்னுதல் – அறிவொன்றும் சங்கிப்பன்-சரீரகதமான துக்கம் ஆத்மாவுக்கு ஆனால் போலே எல்லாருடைய துக்கங்களும் பிரகாரியான உன்னது என்றும் -சம்பந்த ஞானம் ஒன்றுமே யாயிற்று எனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் –
வினையேன்-கலக்கத்தாலே அதி சங்கை பண்ணும் காட்டில் அவன் ஸ்வரூபம் இல்லை யாகாது இறே -எனக்கு இப்புத்தி பிறக்கைக்கு அடி என் பாபம் இறே -கீழில் அதி சங்கைக்கும் இதுக்கும் நெடு வாசி உண்டு -ஆஸ்ரித பரதந்த்ரன் என்கிற ஸ்வ பாவத்தில் அதி சங்கை பண்ணினால் ஆச்ரயணத்தில் குறையால் அங்கீ கரித்திலன் என்று நினைத்து இருக்கலாம் -இதில் அவனுடைய ஸத்பாவத்திலே அதி சங்கை பண்ணுகிறது இறே -சர்வபிரகாரியாய் கொண்டு இறே அவனுடைய சத்தை — ஸ்வ வ்யதிரிக்தங்கள் பிரகாரமாய் கொண்டு இறே உண்டாவது

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9–சேஷத்வ ஞானத்துக்கு விருத்தமான சம்சாரத்தில் இருக்கில் அகப்பட்ட இந்த ஞானத்தையும் இழப்பன் என்று நான் அஞ்சா நின்றேன் -உம்மோடு மற்றும் உள்ள பதார்த்தங்களோடு வாசி அற நம்மைக் குறித்து அத்யந்த பரதந்ந்திரமான பின்பு பரமபதத்தில் இருப்போடு சம்சாரத்தில் இருப்போடு வாசி என் என்று நீ கை வாங்கி இருக்கப் புகுகிறாயோ -என்று சம்சாரத்தில் இருப்பை நான் மிகவும் அஞ்சா நின்றேன் 

2-தலை சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல பிரத்யு உபகாரமாக– அதாவது- தாள்களை எனக்கே தலை தலை சிறப்பத் தந்த-8-1-10- -என்னும்படி- மலரடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன் அருளிய –7-10-5- என்று பராசராதிகள் -முதல் ஆழ்வார்கள்- உண்டாய் இருக்க -தம்மைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட பூர்வோ உபகாரத்தை ஸ்மரிப்பிக்க -அப்படி மிக சிறக்கும்படி உபகரித்ததில் தமக்கு உண்டான க்ருதஜ்ஞ்தைக்கு பலம் சத்ருச பிரதுபகாரம் ஆக-

(தலைச் சிறப்பத்‌ தந்தவதில்‌ க்ருதஜ்ஞதா பல ப்ரத்யுபகாரமாக) “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்து (திருவாய்மொழி 5-7-10) “தந்தனன்‌ தன தாள்‌ நிழலே” (திருவாய்மொழி 6-3-9) என்று உபாயமாக முன்னிவர்க்கு உபகரித்த தன்‌ திருவடிகளை “தாள்களை எனக்கே தலைத் தலைச்‌ சிறப்பத்‌ தந்த” (திருவாய்மொழி 8-1-10) என்று விஸத ஸ்ம்ருதி விஷயமாக்க அத்தை அநுஸந்தித்து அத்தால்‌ வந்த க்ருதஜ்ஞதைக்குப்‌ பலம்‌ ஸத்‌ருஸ ப்ரத்யுபகாரம்‌ பண்ணுகையாலே

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் -நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம்

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-தன் தாள் நிழல் தந்தான் -தன் பாதாச்சாயைத் தந்தான் -அழித்தாய் உன் திருவடியால் -என்கிறபடியே என் மநோ ரத்தத்தை திருவடிகளாலே அழித்து தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டான் –

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10–தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத்-உன் திருவடிகளை பற்றினாரில்-நான் பெற்ற பேறு பெற்றார் இல்லை என்னும் படி அடிமை கொண்ட -இன்கவி பாடும் பரமகவிகளால்-என்று பராசராதிகள் முதல் ஆழ்வார்கள் உண்டாய் இருக்க என்னைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட-தலைத் தலைச் சிறப்பத் தந்த-மிகச் சிறக்கும் படி தந்த -பூர்ணமாம் படி தந்த என்கை –பேருதவிக் -கொள்கின்ற என் தரத்தில் அன்றிக்கே தன் திறத்தில் தருகை–கைம்மாறா-பிரதியுபகாரமாக

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது
என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10–உதவிக் கைம்மாறு-பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரமாக-என் உயிர் -நித்தியமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஞான குணகனான ஆத்மாவை கொடுத்தாலோ என்னில் -அது செய்யலாம் இறே முன்பே மயர்வற மதி நலம் அருளிக் கொடுத்து இலனாகில் –-என்ன உற்று எண்ணில்அதுவும் மற்று ஆங்கவன் தன்னது -ஆராயாதே கொடுக்கில் கொடுக்கும் அது ஒழிய ஆராய்ந்து பார்க்கில் அதுவும் அவனதாய் இருக்கும்

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5–பலரடியார் முன்பு அருளிய -அயர்வறும் அமரர்கள் இருக்க என்னுதல் -சுருதி பிரசித்தரான பராசராதிகள் இருக்க என்னுதல் -இன்கவிபாடும் பரம கவிகளான முதல் ஆழ்வார்கள் இருக்க என்னுதல் -என் பக்கலிலே விசேஷ கடாக்ஷத்தை பண்ணுவதே -முதலிகள் எல்லாம் இருக்க திருவடி பக்கலிலே விசேஷ கடாக்ஷத்தை பண்ணினால் போலே -அதாகிறது தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட யுபகாரம்-பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்-பரியங்க வித்யையில் போலே திருவனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற யுபகாரகன் -அப்படுக்கையில் காட்டில் விரும்பி வர்த்திக்கிற தேசம் -சபரிகரனாய் -அநந்ய பிரயோஜனனாய் வர்த்திக்கிற தேசம் என்றுமாம் –

வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே-அதாவது உதவிக் கைம்மாறு என் ஆர் உயிர் என்ன -உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது –7-9-10–என்று கீழ் பிரதுபகாரமாக ஆத்மாவை சமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத் அனுசந்தானத்தாலே நிவ்ருத்தர் ஆனபடியும் அறியாதபடி -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தால் கலங்கி –வேந்தர் தலைவன் சனகராசன்-என்கிறபடி ஷத்ரிய அக்ரேசனராய் -ஜ்ஞானாதிகனான ஜனக ராஜன் -மகோஸ்வரமான தனுர் பங்கம் பண்ணின பெருமாள் ஆண் பிள்ளைத் தனைத்தை கண்ட ஹர்ஷத்தால் கலங்கி –விஷ்ணோஸ் ஸ்ரீரீர அனபாயிநீ – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17–என்கிறபடியே -தத் அப்ருதக் சித்தையாய் –ராகவத்வே பவத் சீதா – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-9-144–என்று தத் அவதார அனுகூலமாக அவதரித்த பிராட்டியை –இயம் சீதா மம ஸூதா சஹா தர்ம சரீதவ -பிரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்னீஷ்வ பாணிநா-பால–73-26 -என்று சமர்ப்பித்தாப் போலே –பேர் உதவிக் கைம்மாறத் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10–என்று அமூர்தமாய் இருக்க செய்தே -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே –தாளும் தோளுமாய் பணைத்துத் தோற்ற -பாவன பிரகர்ஷத்தாலே அணைத்துக் கொண்டு அத்ர ஆதரத்தோடு அனந்யார்ஹமாக சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவைப் பெருகையாலே அதீவ விளங்கிப் பணைத்து அதீவ ராமச் சுசுபே -என்றும் அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகத்மஜா –ஆரண்ய-37-18–என்றும் அவளைப் பெற்று விளங்கினாப் போலே –சோதி-8-1-10- -என்று இவர் பேசும் படி இவர் தம்மது அல்லாத ஒன்றைத் தம்மதாகப் பிரமித்து கொடுத்தாப் போலே -அவனும் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றாப் போலே பிரமித்து அத்யுஜ்வல்லனாய் –தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்-8-1-10- -என்னும்படி சதசாகமாகப் பணைத்து-

உதவிக் கைமாறு என்னுயிர்‌ என்ன வுற்றெண்ணில்‌ அதுவுமற்றாங்கவன்றன்னது’ (திருவாய்மொழி 7-9-10) என்று கீழ்‌ ப்ரத்புபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத்‌ தேடி பகவதீயத் வாகார அநுஸந்தானத்தாலே நிவ்ருத்தரானவர்‌ இங்கு உபகார ஸ்ம்ருதியாலே வந்த கலக்கத்தாலே (வேந்தர்‌ தலைவன்‌ கந்யகா தாநம்‌ போலே ஆரத் தழுவி யறவிலை செய்த) “வேந்தர்‌ தலைவன்‌ சனகராசன் தன்‌ வேள்வியில்‌ கண்டாருளர்‌ ‘ (பெரியாழ்வார்‌ திருமொழி 4-1-2) என்கிறபடியே க்ஷத்ரியாக்‌ரேஸராய்‌ ஜ்ஞாநாதிகனான ஜநக சக்ரவர்த்தி மாஹேஸ்வரமான தநுர்பங்கம்‌ பண்ணின பெருமாளுடைய ஆண் பிள்ளைத் தனத்தைக்‌ கண்டு கலங்கி “விஷ்ணோஞஸ்ரீரநபாயிநீ”’ ஸ்ரீவிஷ்ணு புராணம்‌ 1-17) “அநந்யா ராகவேணாஹம்‌ பாஸ்கரேண ப்ரபா யதா,” (ரா) என்கிறபடியே ப்ருதக் ஸித்‌தி அநர்ஹையாய்‌ ததர்த்தமாக “ராக வத்வே அபவத்‌ ஸீதா” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-9-144) என்றவனுடைய அவதாராநுகூலமாக அவதரித்து நாச்சியாரை “இயம்‌ ஸீதா மம ஸுதா ஸஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைநாம்‌ பத்‌ரம்‌ தே பாணிம்‌ க்‌ரஹ்ணீஷ்வ பாணிநா” (ரா.பா. 73-26) என்று கந்யகா தாநமாக ஸமர்ப்பித்தாப் போலே ‘பேருதவிக்‌ கைம்மாறா தோள்களை ஆரத்‌ தழுவி என்னுயிரை அற விலை செய்தனன்‌” (திருவாய்மொழி 8-1-10) என்று ஸமர்ப்பணோந்முகரான வளவிலே தாளும்‌ தோளுமாகப்‌ பணைத்த வந்த ஆத்ம வஸ்துவை அவனுக்கு ப்ரத்யுபகாரமாக ஸமர்ப்பிக்க ஆ த்ம லாபத்தாலே தன்னதல்லாததொன்றை அதீவ விளங்கிப்‌ பணைத்து அவனும்‌ “அப்ரமேயம்‌ ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஐநகாத்மஜா” (ரா.ஆ. 37-18) என்று அவளைப்‌ பெற்று விளங்கினாப் போலே “சோதீ” (திருவாய்மொழி 8-1-10) என்றிவர்‌ பேசும்படி இவருடைய ஆத்ம லாபத்தாலே தன்னதல்லாத தொன்றைப்‌ பெற்றாப்‌ போலே அதீவ உஜ்ஜ்வலனாய்‌ “தோள்களாயிரத்தாய்‌ முடிகளாயிரத்தாய்‌ துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌ தாள்களாயிரத்தாய்‌ பேர்களாயிரத்தாய்‌” (திருவாய்மொழி 8-1-10) என்னும்படி அந்த ப்ரீதியாலே ஸதஸாகமாகப்‌ பணைத்து-

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது
என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10–உதவிக் கைம்மாறு-பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரமாக-என் உயிர் -நித்தியமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஞான குணகனான ஆத்மாவை கொடுத்தாலோ என்னில் -அது செய்யலாம் இறே முன்பே மயர்வற மதி நலம் அருளிக் கொடுத்து இலனாகில் –-என்ன உற்று எண்ணில்அதுவும் மற்று ஆங்கவன் தன்னது -ஆராயாதே கொடுக்கில் கொடுக்கும் அது ஒழிய ஆராய்ந்து பார்க்கில் அதுவும் அவனதாய் இருக்கும்

நாந்தகம் சங்கு தண்டு நாண்  ஒலி சார்ங்கம்  திருச் சக்கரம் 
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4- 1-2 –-வேந்தர் -இத்யாதி 
ராஜ தர்மத்தோடு தத்வ ஞான அனுஷ்டானங்களையும் உடையவன் ஆகையாலே (ராஜ ரிஷி அன்றோ )
ராஜக்களுக்கு எல்லாம் தலைவனான ஸ்ரீ ஜனக ராஜன் உடைய யாகத்திலே கண்டார் உளர் 

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ

தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே
!–8-1-10—தோள்களை யாரைத் தழுவி-உனக்குத் தரப் புகுகிற வஸ்து என்று மிகவும் கொண்டாடி -உபகார ஸ்ம்ருதியில் உண்டான ஹர்ஷத்தாலே அமூர்த்தமான ஆத்மவஸ்து சாவயம் போலே அணைக்கலாம் படி தடித்தது –
என்னுயிரை -விலக்ஷணமான ஆத்ம வஸ்துவை –அறவிலை செய்தனன்-இஷ்ட விநியோக அர்ஹமாம் படி அற விலை செய்து தந்தேன் –தாம் முன்பு மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே -என்று சொன்ன வார்த்தையை மறந்து உபகார ஸ்ம்ருதியாலே வந்த ஹர்ஷத்தாலே பிரமித்து சொல்கிறார்
சோதீ-இவர் பண்ணின ஆத்ம சமர்ப்பணத்தாலே அவனுக்கு பிறந்த உஜ்ஜ்வல்யம் –இவர் தம்மது அல்லாத ஒன்றை ஹர்ஷத்தாலே கலங்கி கொடுத்தார் -அவன் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றானாய் அத்தாலே உஜ்ஜவலன் ஆகா நின்றான் -மயர்வற மதிநலம் அருள பெற்ற இவர் கலங்க சொல்ல வேணுமோ -மயர்வற மதிநலம் அருளினான் தானே கலங்கா நின்றான்-தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !-தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! – முன்பு இழவாலே கூப்பிட்டவர் -தரித்து பிரதியுபகாரத்திலே இழிந்த படியைக் கண்டு அத்தாலே அவனுக்கு பிறந்த புஷ்கல்யத்தை பேசுகிறார் -உபகார ஸ்ம்ருதியால் உண்டான ஹர்ஷத்தாலே அமூர்த்தமான ஆத்மவஸ்து அணைக்கலாம் படி தடித்தது போலே சதைகரூபமான வடிவும் சதசாகமாயிற்று -அவாப்த ஸமஸ்த காமனானவன் ஒரு சம்சாரியை லபித்து ஹ்ருஷ்டானானான் என்கிற இதுவும் கூடுமோ என்னில் -ஸார்வ பவ்மனான ஷத்ரியனுக்கு உயர்த்தி உண்டு என்னா அபிமதையான மஹிஷி பக்கலிலே சாபலம் இன்றிக்கே ஒழியுமோ -அவாப்த ஸமஸ்த காமத்வமும் பிராமண ஸித்தமாய் ஆஸ்ரித வாத்சல்யமும் பிராமண ஸித்தமாய் ஆனால் அப்படியே கொள்ளும் அத்தனை அன்றோ -எனக்கு ஹர்ஷத்தை தானே பிறப்பித்து -அந்த ஹர்ஷத்தைக் கண்டு அத்தாலே தான் இப்படி விஸ்திருதன் ஆவதே என்று கொண்டாடுகிறார்-தமியனேன்-அவன் ஸ்வரூபத்திலும் ஆஸ்ரித பாரதந்தர்யத்தாலும் அதி சங்கை பண்ணின போதை வெறுமையை நினைத்து சொல்கிறார்-பெரிய வப்பனே !–அவ்வதி சங்கைகளையும் போக்கி இவ்வளவு புகுர நிறுத்தின மஹா உபகாரகனே-

3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார் என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து-அதாவது –ஸ்ரீ ஜனக மகா ராஜன் திருமகள் பெருமாளைக் கைப் பிடித்த பின்பு அவர் அளவில் பிரேமத்தால் ஜன்ம பூமியான ஸ்ரீ மிதிலையை நினையாதாப் போலே –இவரும் –பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -8-2-11-என்று திருவடிகளைக் கிட்டுகையில் சங்கத்தாலே -புறம்புண்டான வழிய சங்கங்களை நிச் சேஷமாக விட்டு –ஆத்வாரம் அனுவவ்ராஜ மங்களான்யா பிதத்யுஷீ –அயோத்யா-16-21-(ஆத்வாரம் -வாசல் அளவும் )-என்று அவள் பெருமாள் உடைய வடிவழகைக் கண்டு மங்களா சாசனம் பண்ணினாப் போலே -இவரும் –ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-8-3-3-என்று தமக்கு பரிகைக்கு ஒரு ஆளும் ஆளுகிறிலீர்–மலை சுமந்தார் போலே திரு ஆழியையும் திரு பாஞ்ச சந்யத்தையும் தரிப்பார் தாமாய் இரா நின்றது என்று -அவன் சௌ குமார்யத்தைக் கண்டு பரிந்து –அவள் பெருமாளுடைய சௌர்யாதிகளை நினைத்து பயம் கெட்டு –துல்ய சீல-ஸூந்தர-16-5 -இத்யாதிப் படியே தனக்கு அனுரூபரான இவரோடு பொருந்து அனுபவித்தாப் போலே -இவரும் –வார் கடா வருவி–8-4-1-என்று தொடங்கி -அவன் சௌர்யாதிகளை அனுசந்தித்து –நிர்பரராய் –அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான் முகனை யமர்ந்தேனே -என்று அவனோடு பொருந்தி அனுபவித்து -விஸ்லேஷ தசையிலே -அவள் –ஹி மகத நலிநீவ நஷ்ட சோபா வயசன பரம்பர யாதி பீட்ய மானா சஹ சர ரஹீதேவ சக்ர வாகிஜனக சுதா க்ருபாணாம் தசாம் பிரபன்னா -ஸூந்தர-16-30-என்று நிர்க்க்ருணரும் இரங்க வேண்டும்படியான தசையைப் பிராப்தையானாப் போலே -இவரும் –காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -8-5-2–என்று அவனைக் காண ஆசைப்பட்டு -திக்குகள் தோறும் பார்ப்பது -கூப்பிடுவது ஆகையாலே –கண்ணும் வாயும் நீர் பசை அறும்படி ஆகையால் –ஜனக குல சுந்தரியின் குணங்கள் எல்லாம் இவர் பக்கலிலே காண்கையாலே –ப்ரியாது சீதா ராமஸ்ய தாரா பித்ரு க்ருதா இதி குணாத் ரூப குணச் சாபி ப்ரீதிர்ப் பூயோப் ப்யவர்த்தத–பால -77-25-என்று குண தர்சனத்தாலே அவள் பக்கல் ப்ரீதி வர்த்தித்தால் போலே இவர் அளவில் ப்ரீதி வர்தித்தது —

(ஜந்ம பாசம்‌ விட்டு ஆத்‌,வாரம்‌ ஆளுமாளார்‌ என்று பரிந்து அநுரூபனோடே யமர்ந்து பிரிவில்‌ க்ருபண தசையாகத்‌ துவரும்‌ ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து) அந்த நாச்சியார்‌ பெருமாளைக்‌ கைப் பிடித்த பின்பு ஐந்ம பூமியான மிதிலையை நினையாதாப் போலே ‘பாதமடைவதன்‌ பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் விட்டு (திருவாய்மொழி 8-2-11) என்கிறபடியே இவரும்‌ திருவடிகளைக்‌ கிட்டுகையிலுண்டான ஸங்கத்தாலே புறம்புண்டான வலிய ஸங்கங்களை நிஸ் ஸேஷமாக விட்டு, “ஆத்‌வாரமநுவவ்ராஜ மங்களாந்யபி தத்‌,யுஷீ’ (ரா.௮. 14-21 என்று அவள்‌ பெருமாளுடைய அழகுக்குப்‌ பரிந்து மங்க,ளாசாஸனம்‌ பண்ணினாப் போலே “ஆளுமாளார்‌ஆழியும்‌ சங்கும்‌ சுமப்பார் தாம்‌” (திருவாய்மொழி 8-3-3) என்று இவரும்‌ ரக்ஷண பரிகரமாய்‌ அஸாதாரணமான திவ்யாயுத ங்களும்‌ சுமையாம்படியான அவனுடைய ஸெளகுமார்யத்தைக்‌ கண்டு பரிந்து பெருமாளுடைய சவ்ர்யாதிகளைக்‌ கண்டு துல்ய ஸீலேத்யாதிப் படியே ஸ்ரீலாதி களால்‌ “அநுரூபஸ்வைநாத:”  என்கிறபடியே அவள் தனக்கு அநுரூபமான பெருமாளோடே பொருந்தினாப் போலே இவரும்‌ “திருச்சிற்றாற்றங்கரை செல் சார்வே” (திருவாய்மொழி 8-4-1) என்று தொடங்கி “அமர்ந்த மாயோனை முக்கணம்மானை நான்முகனை யமர்ந்தேனே” (திருவாய்மொழி 8-4-4) என்று அவனுடைய சவ்ர்யாதிகளை யநுசந்தி த்து நிர்ப்பயராய்ப்‌ பொருந்தி யநுபவித்து விஸ்லேஷ தஸையில்‌ அவள்‌ “ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா, வ்யஸந பரம்பரயாதி பீட்‌ யமாநா ஸஹ சரரஹிதேவ சக்ரவாகீ ஜநக ஸுதா க்ருபணாம்‌ தமாம்‌ ப்ரபந்நா” (ரா.ஸு.16-30) என்று நிர்க்‌ருணரு மிரங்கும்படியான தஸையை ப்ராப்தையானாப்‌ போலே இவரும்‌ “காண வாரா யென்றென்று கண்ணும்‌ வாயும்‌ துவர்ந்து” (திருவாய்மொழி 8-5-2 அவனைக்‌ காண ஆசைப்பட்டு எங்கும்‌ பார்த்துக்‌ கூப்பிடுகையாலே நீர்ப்பசை யறும்படியாக உலர்ந்து இப்படிப்பட்ட ஜநக குல ஸுந்தரியான நாச்சியாருடைய குணங்களை இவர் பக்கலிலே காண்கையாலே நிரதிசய ப்ரீதி யுக்தனாய்‌

பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11–திருவடிகளில் கிட்டுகையில் உண்டான சங்கத்தால் புறம்பு உண்டான வலிய சங்கங்களை நிச்சேஷமாக விட்டார் -இதுவாயிற்று இத்திருவாய் மொழியிலே சொல்லிற்று யாயிற்று -புறம்புள்ள பற்று அற்று திருவடிகளிலே ஆசைப்பட்டவர் அல்லர் –மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே திருவடிகளிலே சங்கத்தால் உபாதிகமான பாஹ்ய சங்கத்தை தவிர்ந்தவர்

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3—ஆளுமாளார் -உபய விபூதியிலும் பரிகைக்கு ஓர் ஆளில்லை -தனியே ஒருத்தரை ஆள வேணும் என்று இருக்கிறார் -நித்ய ஸூ ரிகள் பகவத் அனுபவத்தில் அந்நிய பரர் -சம்சாரிகள் சப்தாதி விஷய பரர்-ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்–ஆபரணமான திவ்யாயுதங்கள் -அவன் ஸுகுமார்யத்தாலே மலை எடுத்தால் போலே சுமையாய் தோற்றுகிறது இவர்க்கு -எதிரிகளுக்கு அஸ்திரமாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறதை -ஸுகுமார்யத்தை அனுசந்தித்த இவருக்கு மலையாய் இருக்கிறது-தாம் -தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ -எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ 

வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-சீர்கொள் சிற்றாயன்— பருவம் நிரம்பாது இருக்கஹ் செய்தே-வீர ஸ்ரீ யாலே குறைவற்று இருக்கிறவன்
திருச் செங்குன்றூரில்-திருச் சிற்றாறு — புலி நின்ற தூறு போலே பிரதிகூலருக்கு அஞ்ச வேண்டும் வூர்
எங்கள் செல் சார்வே–மஹா ராஜர் -பெரியாழ்வார் -ஸ்ரீ விதுரர் -தாம் -இங்கனம் ஒத்த பரிவர்களுக்கு -நிர்ப்பய ஸ்தானம் என்று புகும் புகல்–கீழ் இவருக்கு ஓடின பயம் நீங்கிற்று என்னுமது இயல் தழைப்பிலே தெரிந்து இருக்கிற படி கண்டதே –

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-இத்தேசத்தில் பொருந்தி வர்த்திக்கிற ஆச்சர்யமான அழகை யுடையவனை -ப்ரஹ்மாதிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை -ப்ரஹ்ம ருத்ராதிகளை பலகாலும் சொல்லுகிறது -இவனுடைய சர்வ நிர்வாஹகத்வம் தோற்றுகைக்காகவும்-நிர்வாஹயங்களில் ஒன்றால் நலிவு யுண்டாக்க கூடாது என்கைக்காகவும்
யமர்ந்தேனே-ஸர்வேச்வரத்வத்தை அனுசந்தித்து -கீழ் ஓடின பயம் தீர்ந்து -அவனைக் கிட்டப் பெற்றேன் -என்கிறார் –

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர் – கண்ணும் வாயும் துவர்ந்து -எங்கனே வரும் என்று அறியாமையால் திக்குகள் தோறும் பார்த்து கண் பசை அற யுணர்ந்து -கண்ண நீர் கைகளால் இறைக்கும்-என்கிற தசையும் கழிந்தது -கூப்பிட்டு நாவும் பசை அற யுலர்ந்தது- அடியேன்நாணி-அத்தலையிலே அவத்யம் நம்மதாம் படியான சம்பந்தத்தை யுடைய நான் லஜ்ஜித்து -இவனை நாட்டார் என் சொல்லுகிறார் என்று லஜ்ஜித்து என்னுதல் -பிரயோஜனார்த்தியாய் கூப்பிடுகை அன்றிக்கே -முறை அறிந்து காண்கைக்கு கூப்பிட்ட நமக்கு உதவின படி அழகிதாய் இருந்தது என்று லஜ்ஜித்து என்னுதல் –

4-தித்திக்க உள்ளே உறைந்தது-அதாவது –மனஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித -பால -77-25 -என்று எப்பொழுதும் அவள் நெஞ்சுக்கு இனிதாம்படி -இருந்தாப் போலே – உள்ளும் தோறும் தித்திப்பான்–8-6-3–என்றும் , ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -8-6-2–என்று அனுசந்திக்கும் தோறும் நிரதிசய போக்யனாய்க் கொண்டு இவர் திரு உள்ளத்தில் நித்ய வாசம் பண்ணி –

(தித்திக்க உள்ளே உறைந்து) “உள்ளுந் தோறும்‌ தித்திப்பான்‌ ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான்‌” (திருவாய்மொழி 8-6-3) என்று அநுஸந்தாந தசைகள்‌ தோறும்‌ நிரதிசய போக்‌யனாய்க்‌ கொண்டு இவர்‌ திருவுள்ளத்திலே நித்ய வாஸம்‌ பண்ணி

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3—அனுசந்திக்க அனுசந்திக்க புதியனாய்க் கொண்டு ரசியா நின்றான்-

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2—ஒருங்கவடுத்து -அதாவது ஓக்க நினைக்கை -திருப்பதியையும் என் ஹிருதயத்தையும் ஓக்க ஆதரித்து –உள்ளே உறையும்-என் மனசிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான் -விரோதி செய்தது என் என்ன -அது ராக்ஷசர் பட்டது பட்டது

கண்டு கொண்டு இருந்து அமானுஷ போகம் ஆக்கினவன்-அதாவது – இருந்தான் கண்டு கொண்டு -8-7-2-என்று தரித்திரன் தன லாபம் உண்டானால் பார்த்துக் கொண்டே இருக்குமா போலே இவரைப் பெற்ற ப்ரீதியாலே -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருந்து – சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசன புஞ்சானா அமானுஷான் போகான் சர்வ காம சம்ருத்திநீ –ஸூ ந்தர-33-17-(திரு அயோத்தியில் -12-வர்ஷங்கள் பெருமாளுடன் அமானுஷ போகம் அனுபவித்து அவாப்த ஸமஸ்த காமாளக இருந்தேன் )-என்று விஸ்லேஷ தசையிலும் வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிக்கலாம் படி -அவளை –மானுஷம் அன்றிக்கே -திவ்யமாய் இருந்துள்ள போகங்களைப் புஜிப்பித்தாப் போலே -இவரையும் – தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன்-8-7-2–என்றும் – செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி நான் அறியேன் மற்று அருளே –8-7-7- என்று வித்தராய்ப் பேசும்படி –அப்ராக்ருத போகங்களைப் புஜிப்பித்தவன்-

(கண்டு கொண்டிருந்து அமாநுஷபோக மாக்கினவன்‌) “இருந்தான்‌ கண்டு கொண்டு” என்று தரித்‌ரனானவனுக்கு நிதி லாப முண்டானாப் போலே இவரைப்‌ பெற்ற ப்ரீதியாலே பார்த்துக்‌ கொண்டிருந்து “ஸமா த்‌வாதஸ தத்ராஹம்‌ ராகவஸ்ய நிவேயநே, பு ஞ்ஜாநாமாநுஷாந்‌ போகாந்‌ ஸர்வகாம ஸம்ருத்‌திநீ” (ரா.ஸு.33-17 என்று அவன்‌ விஸ்லேஷித்த தஸையிலும்‌ விருத்த கீர்த்தநம்‌ பண்ணித் தரிக்கலாம்படி அவளை அநுபவிப்பித்தாப் போலே இவரையும்‌ ‘தருந்தானருள்தானினி யானறியேன்‌” (திருவாய்மொழி 8-7-2) என்றும்‌, “மூவுலகும்‌ பொருளல்ல” (திருவாய்மொழி 8-7-3) என்றும்‌ “செவ்வாய்‌ முறுவலோடு எனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன்‌ மற்றருளே” (திருவாய்மொழி 8-7-7 என்றும்‌ இவர் தாமே பேசும்படி இவரை அப்ராக்ருத போகங்களை புஜிப்பித்தவன்‌–

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2—தரித்ரன் நிதி கண்டால் கண்டு கொண்டே இருக்குமா போலே -பார்த்த படியே இரா நின்றான் -அந்யோன்யம் அபிவிஷந்த்வ நதிருப்திம் உபஜக்மது -என்கைக்கு எதிர்தலையான தம்மை காண்கிறீலர்-இத்தை நினைத்து இறே அர்த்தித்தவம் என்னும் இதுவும் மிகை என்றார் முதல் பாட்டிலே ––தான் தரும் -அருள் -தான் –தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இறே இவர் நினைத்து இருப்பது –-இனி யானறியேனே-–எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் /அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் -முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே /முதலை ஐந்து –இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3—நாட்டார் ஐஸ்வர்யங்களிலே தலையாக நினைத்து இருப்பது -த்ரை லோக்ய ஐஸ்வர்யத்தை ஆயிற்று -இவன் என் ஹிருதயத்திலே பிறந்த பின்பு அத்தையும் ஒரு பொருளாக நினைத்து இரேன் -என்று ஆளவந்தார் நிர்வாஹமாக-திருமாலை ஆண்டான் பணிக்கும் –என் ஹிருதயத்தில் வீற்று இருந்த இது ஒழிய வீற்று இருந்து ஏழு உலகம் தனிக் கோல் செல்ல இருக்கிற ஐஸ்வர்யத்தையும் ஒரு புருஷார்த்தமாக நினைத்து இருக்குமோ -என்று பார்த்தால் அதுவும் அவனுக்கு ஒரு சரக்கு அல்ல -என்று எம்பெருமானார் நிர்வாஹம் -இதுவே பிரகரணத்துக்கு சேருவது

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே
–8-7-7–சிவந்த திருப் பவளத்தில் முறுவலோடே என்னுடைய ஹிருதயத்தில் இருந்த -அவாக்ய அநாதரா-என்று இருக்குமவன் -இவரைப் பெற்ற இது தன் பேறு என்று தோற்ற ஹ்ருஷ்டானாய் முறுவல் செய்து இருந்த படி -பூ வலரும் போது எங்கும் ஓக்க ஒரு செவ்வி பிறக்குமா போலே -திவ்ய அவயவங்கள் தோறும் ஒரு விக்ருதி பிறக்கும் படி யாயிற்று ஸ்மிதம் பண்ணிற்று –அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–அவ்விடம் அன்றி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு இருந்த இருப்பு அல்லது –காந்த ஸ்மிதா-என்று ஸ்வரூபத்தை சொல்லி ஜாத ஹாஸா-என்றது இறே -அப்போதைய ஹர்ஷத்தால் உண்டான விக்ருதி என்னும் இடம் தோற்ற -மற்று உண்டான அருளை நான் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா என்கை –

5-மூன்று தத்துக்கு பிழைத்த -அருவினை நோய் மறுவலிடாமல் – சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட-அதாவது – அருவினை நோய் மறுவலிடாமல்- மருள் தானீதோ—8-7-1-என்றும் பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் -என்றும் அருள் தான் இனி யான் அறியேன் -என்றும்- உகப்பு செல்லா நிற்கச் செய்தே –

(மூன்று தத்துக்குப்‌ பிழைத்த அருவினை நோய்‌ மறுவலிடாமல்‌ சிறியேன்‌ என்றதின்‌ பெருமையைக்‌ காட்ட) “மருள் தானீதோ” (திருவாய்மொழி 8-7-3) “பின்னை யார்க்கவன்தன்றைக்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 8-7-6) “அருள்தானினி யானறியேன்‌‘ (திருவாய்மொழி 8-7-3) என்கிற உகப்புச்‌ செல்லா நிற்கச்‌ செய்தே

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3—-அருள் தான் இனி யான் அறியேன்-என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் ஒன்றாக நினைத்து இருக்கிறிலேன் –எத்தைப் பற்ற -என்னில்-அவன் என்னுள்-இருள் தானற வீற்றிருந்தான்--அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி -தன் குறைவு தீர்ந்தானாய் -அத்தாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்தான் –மருள் தானீதோ ––சர்வேஸ்வரன் ஒரு சம்சாரியைப் பெற்று ஹ்ருஷ்டனானான் என்கிற இது கூடுவது ஓன்று அன்று -நான் பிரமித்தேனோ –-மாய மயக்கு மயக்கே-தன் ஆச்சர்யமான ப்ரம சாதனங்களால் ப்ரமிப்பித்தானோ -அநாதி காலம் பிரக்ருதியைக் காட்டி அறிவு கெடுத்தான் -இப்போது தன் வ்யாமோஹத்தை காட்டி அறிவு கெடா நின்றான் –

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6—பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்-அவன் பின்னை யாருக்கு தன்னைக் கொடுக்கும் -இப் பொகடு சரக்கை கொள்வார் இல்லை என்று ஷேபம் -கொள்வார் இல்லாத வஸ்து இருக்கிற படியை மேலே அருளிச் செய்கிறார்-கரு மாணிக்கக் குன்றத்துத் -ஆச்சர்யத்துக்கு திருஷ்டாந்தம் –-தாமரை போல்-அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம் –
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி இருக்கிற திரு மார்வு-கால் -அச்சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்-கண் -திருவடிகளிலே விழுந்தாரை குளிர நோக்கும் திருக் கண்கள்-கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை-செவ்வாய் -இந்த சொல்லுச் சொல்லும் திருவதரம்-யுந்தியானே–அவர்களுக்கு அனுபாவ்யமான திரு உந்தி -உந்தி மேலதன்றோ-என்னக் கடவது இறே-

மூன்று தத்துக்கு பிழைத்த — சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட-அதாவது-சிறியேனுடை சிந்தையுள் நின்று ஒழிந்தார் -என்று தம் சிறுமையை அனுசந்தித்தவாறே –1-வள வேழ் உலகிலே -1-5-
களவேழ் வெண்ணெய் தொட உண்ட கள்வா என்பேன் -அரு வினையேன் -என்றும் – வணங்கினால் உன் பெருமை மாசுணாதோ-என்றும் – அடியேன் காண்பான் அலற்றுவன் இதினால் மிக்கு ஓர் அயர்ப்பு உண்டே -என்றும்–2-பொரு மா நீள் படையிலே –1-10- சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் -என்றும் –-3-அம் தாமத்து அன்பிலே –2-5- அல்லாவி உள் கலந்த -என்றும் – என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை -என்றும் –இப்படி மூன்று இடத்தில் வந்து பரிஹ்ருதம் ஆகையாலே
-மூன்று தத்துக்கு இவர் பிழைத்த அயோக்யதா அனுசந்தான வியாதி -மறுவலிட்டு இன்னும் இவர் அகலில் செய்வது என் என்று அஞ்சி – இனி இவர் தாம் அகலுகிறது –வந்தேறியான அசித் சம்பந்தத்தை இட்டு -இது நமக்கு அனர்ஹம் என்று இறே – இதனிடைய யதாவஸ்தித வேஷத்தைக் கண்டால் அகல ஒண்ணாதே என்று பார்த்து –

சிறியேன்‌” (திருவாய்-8-7-8)என்று தம்முடைய சிறுமையை அநுஸந்தி க்க அவ்வளவில்‌ வளவேழுலகில்‌ “களவேழ்‌ வெண்ணெய்‌ தொடுவுண்ட கள்வா என்பன்‌ அருவினையேன்‌’ (திருவாய்மொழி 1-5-1), “வணங்கினால்‌ உன்‌ பெருமை மாசூணாதோ மாயோனே (திருவாய்மொழி 1-5-2 என்றும்‌, “அடியேன்‌ காண்பானலற்றுவன்‌ இதனில்‌ மிக்கோர்‌ அயர்வுண்டே” (திருவாய்மொழி 1-5-7) என்றும்‌, “சிந்தையுள்‌ வைப்பன்‌ சொல்லுவன்‌ பாவியேன்‌” (திருவாய்மொழி 1-7-1) என்றும்‌ இப்படி மும்மறுவலிட்ட அயோக்‌யதாநுஸந்தாந வ்யாதிக்குத்‌ தப்பின இவர்‌ மீண்டும்‌ மறுவலிட்டு “சிறியேன்‌” (திருவாய்மொழி 8-7-8) என்று இவர்‌ அகலில்‌ செய்வதென்‌ என்று கலங்கி,-இவர்‌ இப்படி அகலுகிறது வந்தேறியான அசித் ஸம்பந்தத்தை யிட்டு இது நமக்கநர்ஹமென்றிறே இதினுடைய யதா,வஸ்தித வேஷத்தைக்‌ கண்டால்‌ அகல வொண்ணாதே என்று

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8––அத்யல்பனான என்னுடைய ஹ்ருதயத்திலே-சம்சாரிகள் நித்ய சித்தர் கோடியிலே யாம் படி இறே தம்மை நினைத்து இருப்பது –

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-இவர் இப்போது அருவினையேன் என்கிறது -பகவத் ப்ராவண்யத்தை-இப்போது பகவத் விஷயத்தை கிட்டுகை அநிஷ்டம் ஆகையாலே கடவது இறே-அநிஷ்டாவஹம் இறே பாவம் –முதல் திருவாய் மொழியில் நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யமான மேன்மையை தூஷித்தேன்-பத்துடை அடியவரில் யசோதைப் பிராட்டிக்கு அனுபாவ்யமான நீர்மையை தூஷித்தேன்-அஞ்சிறைய மட நாரையில் பிராட்டிமார் பாசுரத்தைச் சொன்னேன்-நினைந்து -மானசம் -நைந்து – காயிகம் -என்பன் -வாசிகம் –

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
 –1-5-2-மாசூணாதோ-தங்களோடு -உப கரணங்களோடு வாசியற உனக்கு போக உபகரணமாம் படி இருக்கும் நித்ய ஸூ ரிகளுடைய அனுகூல பிரவ்ருத்திகளை-கர்மம் -அத்தால் வந்த அசித் சம்சர்க்கம் -அத்தால் வந்த அஹங்காராதிகள்-இவற்றை யுடைய ப்ரஹ்மாதிகள் பண்ணப் புக்கால் உன் பெருமை மழுங்காதோ-மாயோனே-ப்ரஹ்மாதிகளையும் சூத்ர மனுஷ்யர்களுடைய ஸ்தானத்திலே யாக்க வல்ல உன்னுடைய ஆச்சர்யமான வை லஷண்யம் இருந்த படி என்-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-சேஷ பூதனாய் வைத்து காண வேணும் என்று அத்தலைக்கு அவித்யகரமாம் படி நான்-அலற்றா நின்றேன் -இதில் விஞ்சிற்று ஒரு அறிவு கேடு உண்டோ –

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7—சிந்தையுள் வைப்பன்–விஷயாந்தர ப்ரவணமான நெஞ்சிலே வைப்பன்-நெஞ்சிலே நினைத்து ரகஸ்ய பிராயச் சித்தம் பண்ணி விடும் அளவன்றிக்கே-சொல்லுவன்–இவன் பேசும் அளவேயோஇவ்விஷயம் என்று கை விடும் படி பிறர் கேட்க்கச் சொல்லா நின்றேன்-பாவியேன்--விலக்ஷண போக்யமான இவ் விஷயத்தை அழிக்கைக்கு நான் ஒரு பாப கர்மா உண்டாவதே-தமோ அபி பூதியாலே அகத்திலே அக்னி ப்ரஷே பத்தைப் பண்ணி சத்வம் தலை எடுத்த வாறே அநுதபிக்குமா போலே பாவியேன் என்கிறார் –-நீர் இங்கனே சொல்லுவான் என் -பகவத் விஷயத்தை நினைக்கையும் சொல்லுகையும் பாப பலமோ என்னில் –-புரோடாசத்தை நாய் தீண்டினால் போலே வி லக்ஷணருடைய பாக்யத்தை அளிக்கை பாப பலம் அன்றோ

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–ஆராவமுதமாய்- நிரதிசய போக்யனாய் வைத்து -அசன்னேவ -என்கிற ஆத்மாவோடு வந்து கலந்தான் –-தன்னையும் அறிந்திலேன் -என்னையும் அறிந்திலேன் –-யல்லாவி – அசித்தில் காட்டில் தம்மைக் குறைய நினைத்த படி -அசித்துக்கு இழவு இல்லை –சேதனனாய் இருந்து வைத்து ஞான பலம் இல்லாமையால் அசித்துக்கு அவ்வருகாக நினைத்து இருக்கிறார்-யுள் கலந்த-பெரு மக்கள் உள்ளவர் -என்கிற ஸூ ரிகள் அளவில் கலக்குமா போலே தான் கலந்தானோ –-என்னை ஆராவமுதமாக நினைத்து என் அளவாக தன்னை நினைத்துக் கிடீர் கலந்தது-

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8–தன்னுடைய உத்கர்ஷத்துக்கு முடிவு இல்லாதோபாதி உஎன்னுடைய நிகர்ஷத்துக்கும் முடிவு இன்றிக்கே இருக்க அத்தைப் பாராதே அவ்விஞ்ஞாதவாய் என்னோடே கலந்தவனை–வாங்மனசங்களுக்கு அவிஷயமான வைலக்ஷண்யத்தை உடையனாய் வைத்து என்னோடே கலந்த இம் மஹா குணம் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார் –

அது மறுவல் இடாதபடியாக – அதாவது – நமக்கு கௌஸ்துபம் போலவும் ஸ்ரீ ஸ்தனம் போலவும்
தேஜஸ் கரமுமாய் போக்யமுமாய் இருக்கும் – அப்ருக்து ஸித்த விசேஷணமாய்க் காணும் உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருப்பது என்று – சிறிதாக இவர் அனுசந்தித்த ஆத்ம வஸ்துவின் வைலஷண்யத்தை –யானும் தானாய் ஒழிந்தான்-
8-8-4 -என்றும் –தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக தித்தித்து -என்று தனக்கு அப்ருதக் ஸித்த பிரகாரமாகவும் நிரதிசய போக்யமுமாகவும் அனுசந்திக்கும் படி காட்டிக் கொடுக்க

மக்கு ஸ்ரீகெளஸ்துபத்தோபாதி, தேஜஸ்கரமாய்‌ ஸ்ரீஸ்தநம்‌ போலே போ க்‌,யமாய்‌ அப்ராக்ருதாதிகளைப் போலே(?) அப்ருதக் ஸித்‌தமாய்‌ அநந்யார்ஹ ஸேஷமாய்க்‌ காணும்‌ உம்முடைய ஆத்ம வஸ்து இருப்பது என்று ஸ்வரூப வைலக்ஷண்யத்தைக்‌ காட்டிக்‌ கொடுக்க ( தேஹாதிகளில்‌ பரமாய்‌) அவ்வாத்ம வஸ்துவை “யானும்‌ தானாய்‌ ஒழிந்தானை” (திருவாய்மொழி 8-8-4 என்கிறபடியே அவனுடைய அபிமாநாந்தர்பூ தமாம்படி அப்ருதக் ஸித்‌த,விஸேஷணமாய்‌ “தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ அமுதுமாகித்‌ தித்தித்து” (திருவாய்மொழி 8-8-4) என்னும்படி ஆநந்த ரூபமாகையாலே

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம் படி தனக்கு பிரகார தயா சேஷம் என்னும் இடத்தைக் காட்டித் தந்தான் -அஹம் புத்தியும் அஹம் சப்தமும் தன்னளவும் செல்லும் படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியைக் காட்டித் தந்தான் -தச்சப்தம் குண விசிஷ்ட வாசியானாவோ பாதி -த்வம் -சப்தமும் -அசித் விசிஷ்ட ஜீவ அந்தர்யாமி யாம் அளவும் காட்டக் கடவது இறே –

யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-
யானும் தானாய் ஒழிந்தானை-கீழ் சொன்ன அநந்யார்ஹ சேஷத்வத்தில் ப்ரீதியாலே அனுபாஷிக்கிறார்-தேனும் பாலும் கன்னலும்-அமுதுமாகித் தித்தித்து -சர்வ ரஸ-என்று சேதனுக்கு அவன் இனிதாய் இருக்குமா போலே அவனுக்கும் இவன் போக்யனாய் இருக்கை –அவனுக்கு போக்யம் என்னும் ஆகாரத்தாலே இ றே ஸ்வ ஸ்வரூபம் இவனுக்கு இனிதாவது-என்-ஊனில் உயிரில் உணர்வினில்-நின்ற வொன்றை யுணர்ந்தேனே-என் சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வ்யாப்தமான வி லக்ஷணமான ஆத்மாவை தனக்கு சரீரமாக யுடையவனை அறியப் பெற்றேன் –நின்ற ஓன்று -என்கிற ஆத்ம ஸ்வரூப வாசியான சப்தம் -ஆஸ்ரயமான பிரகாரி பர்யந்த அபிதானம் பண்ணுகிறது -ஸ்வ நிஷ்டம் அல்லாமையாலே பகவத் பர்யந்தமாய் இறே இருப்பது -ஆத்மாவினுடைய போக்யத்தை யாகில் சொல்லுகிறது -காரணத்வம் சொல்லுகிறது என் என்னில் –விமுகரான அவர்களை கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டித்து விட்டான் –
ஐஸ்வர்ய காமரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஐஸ்வர்யங்களைக் கொடுத்து அதிகாரங்களை நடத்திக் கொடுத்தான் -என்னளவில் இவ்வாத்மா தனக்கு அநந்யார்ஹமாய் போக்யமாய் இருக்கிறபடியை காட்டித் தந்தான் என்கிறார் 

6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யமாய் –-அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்-சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே தேக இந்திரியங்களில் வ்யாவிருத்தமாய் -ஞான ஆனந்த மயமாய் – நினையும் நீர்மை யதன்றி வட்கிது நின்று நினைக்கப் புக்கால் -என்றும் – அருமாயன் பேச்சின்றி பேச்சு இலள் -என்றும் – அன்று மற்றோர் உபாயம் என் -என்றும் – யதா நிரூபணம் பண்ணில் பிராட்டியோபாதி -அனந்யார்ஹமாய் –
அவ்வளவும் அன்றிக்கே – மாகாயம் பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கமிலா அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட் பாடே —ஊழி தொரு ஊழி வாய்க்க தமியேற்கு
– என்று விலஷண விக்ரக யுக்தனான சர்வேஸ்வரனை விஸ்லேஷிக்க ஷமர் அல்லாத பாகவதர்களுடைய சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்கள் எனக்கு சேஷிகள்–இரு கரையர் -அன்றிக்கே அவர்களுக்கே சபரிகரமாக அனந்யார்ஹனாய்ச் செல்லும் நல்ல கோட் பாடு கால தத்துவமுள்ள அனையும் எனக்கு சித்திக்க வேண்டும் என்று – இப்படி ததீய சேஷத்வ காஷ்டை அளவும் செல்ல நிற்கும் படி பரதந்த்ரமான
ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்-

அவனுக்கு நிரதிசய போ க்‌.யமாய்‌ “சென்று சென்று பரம்பரமாய்‌” (திருவாய்மொழி 8-8-5) என்கிறபடியே தேஹ இந்த்‌,ரியாதி, விலக்ஷணமாய்‌ (நின்று நினைக்கில்‌ லஷ்மீ துல்யமாய்‌) “நினையும்‌ நீர்மையதன்று இவட்கது நின்று நினைக்கப்‌ புக்கால்‌” (திருவாய்மொழி 8-9-5) “அருமாயன் பேரன்றிப்‌ பேச்சிலள்‌” (திருவாய்மொழி 8-9-1) “அன்றி மற்றோருபாயமென்‌” (திருவாய்மொழி 8-9-10) என்று யதா, நிரூபணம்‌ பண்ணில்‌ பிராட்டிமாரோபாதி அநந்யார்ஹமாய்‌ அவ்வளவில்‌ பர்யவஸியாதே (அவர்க்கே குடிகளாய்‌ பரதந்த்ர ஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர்‌) “மாகாயாம்‌ பூக்கொள்‌ மேனி நான்கு தோள்‌ பொன்னாழிக்கை யென்னம்மான்‌ நீக்கமில்லா அடியார் தம்‌ அடியாரடியாரடியார்‌ எங்கோக்கள்‌ அவர்க்கே குடிகளாய்ச்‌ செல்லும்‌ நல்லகோட்பாடே ஊழிதோறாழி வாய்க்க தமியேற்கு”  (திருவாய்மொழி 8-10-10) என்று விலக்ஷண விக்‌ரஹ யுக்தனான ஸர்வேஸ்வரனுக்குப்‌ பிரியாவடிமை செய்கிற பா கவதர்களுடைய ஸேஷத்வத்தின்‌ எல்லையிலே நிற்கிறவர்களே எனக்கு ஸேஷிகள்‌, என்னோடு ஸம்பந்தமுடையாரும்‌ நானும்‌ அவர்களுக்கு க்ரய விக்ரஹார்ஹமாம்படியான பாரதந்த்ர்யம்‌ கால தத்த்வம்‌ உள்ளதனையும்‌ எனக்கொருவனுக்குமே ஸித்‌திக்க வேணுமென்று இப் பாரதந்த்ர்ய காஷ்டை யான ததீய பாரதந்த்ர்யமே ஸ்வரூபம்‌ என்றநுஸந்தித்தவர்‌

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5—பகவத் பிரசாதத்தாலே நான் அறிந்த இவ்வாத்ம வஸ்து ஒருவருக்கும் அறியப் போகிறது அன்று -அது அறிந்தாலும் சாஷாத் கரிக்கப் போகிறது அன்று -என்கிறார் –

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-நின்று நினைக்கப் புக்கால்—-நினையும் நீர்மையதன்றுஇவட்கிது-உபக்ரமித்து விடுகை அன்றிக்கே காலம் எல்லாம் ஆராயப் புக்காலும் இவளுக்கு பிறந்த அழகுகள் நினைக்கப் போகாது –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை பரிச்சேதிக்கிலும் இவள் படி பரிச்சேதிக்க நிலம் அன்று -இவை எல்லா வற்றாலும் நீ பரிச்சேதித்த அம்சம் ஏது என்ன -அப்பன் திருவருள் மூழ்கினளே-கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-பர வ்யூஹ விபவங்களிலே திரு நாமங்களை சொல்லுகிறிலள்–அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–அவர்களோடு ஓக்க தானும் அறியாதாளாய் -தன் வார்த்தையை விசுவசிக்கைக்காக சாதித்து -இதுக்கு என் செய்வேன் -என்கிறாள் -உள்வாய் ப்ரீதிக்கு போக்கு விட்டுச் சொல்கிறாள் –

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-வேறு மற்று உபாயம் உண்டோ -இவள் அழகியதாய் குளிர்ந்து இருக்கிற திருத் துழாய் நாறுகைக்கு -ராஜ புத்ரனை அணையாதார்க்கு மாளிகைச் சாந்து நாறுமோ -என்னுடம்பு திருத் துழாய் நாறா நின்றதோ -ஸ்வாபதேசத்தில் –அம் தண் துழாய் கமழ்தல்-என்கிறது அங்கீ கார ஸூசகமாய் இருக்கிறது –

வாய்க்க  தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார்தம் அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே-8-10-10-அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அடிமையில் முடிந்த நிலம் ஆக வேணும் என்கிறார் –-சதிரே வாய்க்க -இந்த நிரதிசய புருஷார்த்தம் -என்றும் ஓக்க வாய்க்க வேணும் –-தமியேற்கே–பூத காலத்திலும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானை தேடித் பிடிக்க வேண்டும்படி யாகையாலே வர்த்தமான காலத்திலே தமக்கு உபமானம் இன்றிக்கே இருக்கை –கீழே நங்கட்கே-என்றார் -கேசவன் தமரர்க்கு பின்பு தனியர் அல்லாமையாலே தம்மைப் பற்றினாரை கூட்டிக் கொண்டு –இங்கு –தமியேற்கே-என்கிறது தமக்கு சம்சாரிகளில் உபமானவர் இல்லாமையால் –

7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல் மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே குறிக் கொண்மின் உள்ளத்து என்று பிராப்யை ஏக பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில்–அதாவது தம்முடைய சாதன சாத்தியங்களே தங்களுக்கு என்று இருக்கிறவர்கள்-தத் விஷயம் பிராபகமும் ததீய விஷயம் பிராப்யமுமாய் –இரு கரையர் -ஆகாதபடி-(அவன் உபாயம் -திவ்ய தேசம் உபேயம் -என்று உபாய உபேயங்களை வெவ்வேறாகக் கொள்ளாமல் -என்றபடி-வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷணம் -411-) திருக் கடித் தானத்தை ஏத்த நில்லா குறிக் கொள் மினிடரே -8-6-6–என்றும்-கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழ -வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே இடர் கெட உள்ளத்து கொள்மின்-8-6-7–என்றும்-திருக் கடித் தானத்தை ஸ்தோத்ரம் பண்ணின அளவில் -துக்கங்கள் எல்லாம் நிலை குலைந்து போம் -இத்தை குறிக் கொள்ளுங்கோள் –சர்வேஸ்வரனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை உபய விபூதியில் உள்ளார் எல்லாரும் அனுபவிக்கும் படியான திருக் கடித்தான நகரை உங்கள் சமஸ்த துக்கங்களும் போம்படி நெஞ்சில் கொண்டு அனுசந்தியுங்கோள் என்று கீழில் பத்தில்- பிராப்யமாக உபதேசித்த அர்ச்சாவதார பூமியே -துக்க நிவர்தகம் என்கையாலே –பிராப்யமான விஷயமே பிராபகம் என்று தர்சிப்பித்து -பிராப்ய விஷயம் ஒன்றிலுமே –தத் பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில் என்கை —

(ஸ்வ ஸாத ந ஸாத்‌ யஸ்தர்‌ இருகரையராகாமல்‌) தம்முடைய ஸாதந ஸாத்‌யங்களே தங்களுக்கும்‌ என்றிருக்கிறவர்கள்‌ தத்‌ விஷயத்திலும்‌ ததீயவிஷயத்திலுமாய்‌ ப்ராப்ய மொன்றும்‌ ப்ராபக மொன்றுமாய்‌ இருகரையராகாதபடி (மண்ணவரும்‌ வானவரும்‌ நண்ணுமத்தையே குறிக்கொண்மின்‌ உள்ளத்தென்று) “கோவிந்தன்‌ மண்ணும்‌ விண்ணும்‌ அளந்த வொண்டாமரையை மண்ணவர்தாம்‌ தொழ வானவர்தாம்‌ வந்து நண்ணு திருக்கடித்தான நகரை உள்ளத்துக்‌ கொண்மின்‌ இடர்கெட” (திருவாய்மொழி 8-6-7) என்று ஸர்வேஸ்வரனுடைய ஸர்வ ஸுலப மான திருவடிகளை உபய விபூதியிலுள்ளாரும்‌ வந்தனுபவிக்கும்படியான திருக்கடித்தான நகரை உங்கள்‌ ஸமஸ்த துக்கங்களும்‌ போம்படி நெஞ்சாலே நினையுங்கோளென்று கீழ்ப்பத்திலே ப்ராப்யமாக உபதேஸித்த அர்ச்சாவதார பூமியே துக்க,நிவர்த்தகமுமென்கையாலே ப்ராப்யமே ப்ராபகமென்று ப்ராப்யமொன்றிலுமே அவர்களை தத் பரராக்குகிறார்‌ எட்டாம்‌ பத்தில் -என்கிறார் –

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே
-8-6-7—உங்கள் ஸமஸ்த துக்கங்களும் போம்படியாகத் திருக் கடித் தானத்தை நெஞ்சால் நினையுங்கோள்-கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த -சர்வ ஸூலபனானவனுடைய -சகல லோகங்களையும் அளந்த –-ஒண் தாமரை-ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று அளந்தது-மண்ணவர் தாம் தொழ -ஸுலபயத்தையும் போக்யதையும் அறிய மாட்டாத அஞ்ஞர் தொழ-தாம் வந்து-பரமபதம் நித்ய ஸூ ரிகளுக்கே யாய் இருக்குமா போலே -உகந்து அருளின தேசம் சம்சாரிகளுக்கேயாய் இருக்கை -அந்தர்க்கு வைத்த இறையிலியில் கண்ணுடையார்க்குப் பிராப்தி இல்லை இறே-வானவர் நண்ணு திருக் கடித் தான நகரே— அசங்குசித ஞானராய் நித்ய அனுபவம் பண்ணுமவர்கள் தாம் வந்து நண்ணுகிற தேசம் -நமக்கு அவ்வருகானவன் தாழ்வுக்கு எல்லையான சம்சாரிகள் தொழும் படி நிற்கிற சீலம் இருந்த படி என்-என்று இத்தை அனுபவிக்கைக்கு இங்கே வந்து ஆஸ்ரயிக்கும் திருக் கடித்தான நகரை –கொண்மின் இடர் கெட உள்ளத்து -இங்குள்ளார் அங்கே போவது மேன்மையை அனுபவிக்க -அங்குள்ளார் இங்கே வருவது சீல குணம் அனுபவிக்க –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading