ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-13 –உபதேஸ பாதம் -(208 –213) -18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —(208–210)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

13 –உபதேஸ பாதம் -208 –213—மொத்தம் –6– ஸூரணைகள் –மூன்று அதிகரணங்கள் —
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—மொத்தம்–3-ஸூரணைகள்
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212-மொத்தம்—2-ஸூரணைகள்
20-மங்கலா சரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–ஒரே ஸூரணை

இப்படி இவ் ஆழ்வார் உடைய அனுபவ உபதேச ரூபமான பிரபந்த சதுஷ்டயமும் – ரஹஸ்யர்த்தயார்த்த பிரதி பாதகமாய் இருக்கும் படி பிரகாசிப்பதாக நினைத்து உபக்ரமிக்கிறார் மேல்-ஆனால்‌ இந்நாலு ப்ரபந்தத்தாலும்‌ இவருபதேஸிக்கும் வர்த்தம்‌ ஏதென்னில்‌-

இவற்றுக்கு மந்த்ர வித்‌ யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி.–சூரணை-208–

(மந்த்ர ரஹஸ்யம் -திருமந்திரம் -விதி ரஹஸ்யம் -சரம ஸ்லோகம் -அனுசந்தான ரஹஸ்யம் -த்வயம் )

அதாவது-மெய் நின்று மங்க ஓட்டுக்கு நடுவு –என்று கீழ் பிரஸ்துதமான இப் பிரபந்தங்கள் நாலுக்கும்
சகல சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தையும் –சம்சய விபர்யம் அற-பிரதிபாதிக்கு மவையாய் –
சர்வம் அஷ்டாஷர அந்தஸ்தம் –ஸ்ரீ பாஞ்சராத்ரம் – என்னும் படி சகல சாஸ்திர ஸங்க்ரஹமான திரு மந்த்ரமும்சித்தோ உபாய வர்ணத்தை சாங்கமாக விதிக்கும் சரம ஸ்லோஹமும் – உபாய உபேய வர்ண பிரார்த்தனைகளை -ச க்ரமமாக-பிரகாசிப்பியா நின்று கொண்டு – கால ஷேபத்துக்கும் –
போகத்துக்குமாக – சாரஜ்ஞ்ஞராலே சதா அநுசந்தானம் பண்ணப் படும் த்வயமும் ஆகிய ரஹஸ்யதோடே சேர்த்தி என்கை 

ஸகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹமாய்‌ இவ்வாத்மாவுக்கு தத்வ ஹித புருஷார்த்த ப்ரகாஸகமுமாய்‌ ஸரண்யாபிமதமுமாய்‌ ஸிஷ்ட பரிக்ருஹீதமுமாய்‌ மந்த்ர விதி அநுஸந்தாந ரூபமான ரஹஸ்ய த்ரயத்தாலும்‌ ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த, பஞ்சகத்தையும்‌ இவற்றிலே ப்ரதிபாதிக்கையாலே இப்ரபந்தங்கள்‌ நாலுக்கும்‌ ரஹஸ்ய த்ரயத்தோடு சேர்த்தி என்கிறார் –

அதில் எந்த பிரபந்தத்துக்கு எந்த ரஹஸ்யத்தோடே சேர்த்தி என்னும் ஆ காங்க்ஷையில் அத்தை இட்டு அருளிச் செய்கிறார் மேல் —அவற்றில்‌ ப்ரதிபாதிக்கிற அர்த்த பஞ்சகம்‌ இவற்றிலே ப்ரதிபாதித மாகிறபடி எங்ஙனே என்னில்‌-

அளிப்பான் அடியேன் அடைக்கலம் சூடிய-பொய் யாதானும் அழுந்தார் என்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் – தாமரை உந்திப் பெரு மா மாயன் ஆளாகவே வாழிய என்று -பிராப்ய பலங்களையும் – நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனால் அடித்துக் கண்டிலமால் யாதாகில் என்று உபாயத்தையும் சொன்னவை மந்த்ர ஸ்லோஹங்களோடே சேரும்–சூரணை-209-

(மந்த்ர ஸ்லோகங்கள் என்றது திருமந்த்ரத்தையும் சரம ஸ்லோகத்தையும் )

அளிப்பான்-அதாவது-உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -திருவிருத்தம்-1-– என்று
பிரணவத்தில் பிரதம அஷரத்தில் தாத்வர்தமான பகவத் ரஷகத்வையும் —-அடியேன்-அதாவது
மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் –திருவிருத்தம் -1–என்று தத் ரஷ்ய பூதமாய் -சதுர்த்தி -உகாரங்களில் -சொல்லுகிற படியே தத் அநந்யார்ஹ சேஷமாய் -பிரக்ருதே பரமாய் –ஞான ஆனந்த லஷணமாய்- த்ருதீய அஷரத்தில் சொல்லப் படுகிற ஆத்ம ஸ்வரூபத்தையும் —
அடைக்கலம்-அதாவது பிரதம அஷரத்தில் சதுர்த்தி சம் பிரதானத்திலேயாய் – ப்ரஹ்மணே த்வாமஹச ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத-தைத்ரியம் -என்ற படி – பிரணவத்துக்கு ஆத்ம சமர்பணமும் அர்த்தம் ஆகையாலே –விரோதி பயத்தாலே கலங்கின தசையிலே –அடியேனடி யாவி யடைக்கலம்-திருவிருத்தம்-85- -என்று அந்த ஆத்ம சமர்ப்பணைத்தையும் –-சூடிய-அதாவது திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்–திருவிருத்தம்-100–என்று பிரணவோக்தமான பகவத் அனந்யார்ஹ சேஷத்வம் ததீய சேஷத்வத்தையும்-

இதில்‌ ப்ரதம ப்ரபந்தமான திருவிருத்தத்திலே உயிரளிப்பான்‌ (திருவிருத்தம்‌ -1)என்று திருமந்த்ரத்திலே ப்ரதமாக்ஷரத்தில்‌ அவ ரக்ஷணே யென்கிற தாத்வர்த்தத்தாலே சொல்லப்பட்ட ரக்ஷகத்வத்தையும்‌ “அடியேன்‌” (திருவிருத்தம்‌ 1) என்று அவ்வகாரத்தில்‌ லுப்த சதுர்த்தியாலும்‌ உகாரத்தாலும்‌ அந்த ஸர்வ ரக்ஷகனானவனுக்கு இவ்வாத்மா அநந்யார்ஹ ஸேஷமாயிருக்கும்‌ என்னுமிடத்தையும்‌ அந்த ஸேஷத்வாஸ்ரயமான ஸ்வரூபம்‌ ஜ்ஞாநாநந்த மயமாயும்‌ ஜ்ஞாந குணகமாயுமிருக்கிற மகாரார்த்தத்தையும்‌, “அடியேனடியாவி அடைக்கலமே” (திருவிருத்தம்‌ 85) என்று அந்த சதுர்த்தி, ‘ஸம் ப்ரதாநே சதுர்த்தி என்னுமிடத்தில்‌ ஆத்ம ஸமர்ப்பணத்தையும்‌ “திருமால்‌ திருப்பேர்‌ வல்லார்‌ அடிக் கண்ணி சூடிய மாறன்‌” (திருவிருத்தம்‌ 100) என்று அந்த ப்ரணவத்தில்‌ சொன்ன அநந்யார்ஹ ஸேஷத்வம்‌ ததீய ஸேஷத்வ பர்யந்தமா யிருக்கும்‌ என்று நமஸ்ஸில்‌ ஆர்த்தமாகச்‌ சொல்லப்படுகிற ததீய ஸேஷத்வத்தையும்‌,

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 
–1––உயிர் அளிப்பான் –உயிர்-பிராட்டிமார் திருவடி திரு வநந்த ஆழ்வான்  -என்று வ்யாவர்த்தித்ததோ-யோக்யதை அயோக்யதை பாராதே- சகல ஆத்மாக்களையும் சம்ரஷணம் பண்ணும் அதே பிரயோஜனமாகை –சால பல நாள் உகந்து உயிர்கள் காப்பான் அன்றோ கோலத் திரு மகளுடன் பிறந்தாய்–உலகத்தோர் -யோக்யதை யோக்யதை பாராமல் ஸம் ரக்ஷணமே பிரயோஜனமாக-உனக்கு அநந்யார்ஹ சேஷமாய் வைத்து –அசத் கல்பமாய்க் கிடந்த ஆத்ம ஸ்வரூபத்தை – தாச பூதோஹம் -என்கிறபடியை நித்தியமாக அனுபவிக்கப பண்ணுவான்

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  
– – -85-அடியேன்-போக்யதையிலே தோற்று அடியேன் என்கிறார்அடி யாவி-தலை மகள் வார்த்தை யானபோது உனக்கு சேஷமான என்னுடைய ஆத்ம வஸ்துவானது என்கை-ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணும் போதும் வஸ்து நிர்தேசம் பண்ணும் போதும் சேஷத்வத்தை இட்டு அல்லது நிரூபிக்க ஒண்ணாத படியாய் இருக்கை–திருத்தாயார் வார்த்தையான போது –அடியேன் அடி-நாய்க்குட்டி என்னுமா போலே–யடைக்கலமே- இருளுக்கு அஞ்சின படியால் சொல்லுகிறாள்-அல்லது ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே இவனுக்கு அத்யந்தம் சேஷமாய் இருக்கும் படி–பிரமித்தபோது இறே ஸமர்ப்பிக்கலாவது-ஸமர்ப்பித்த அனந்தர க்ஷணம் என்னதை அவனுக்கு கொடுத்தேன் என்று நினைக்க ஒண்ணாத படி தன்னோடு தனக்குத் தொற்று அற்றபடி இறே இருப்பது-உன் யடைக்கலமே-த்வத் ஏக ரக்ஷயை யானவளே நான்
இப்போது உன்னைப்பிரிந்து இந்த மாலையால் நலிவு படவோ –

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
 – – 100-திரு மால் திருப்பேர்-வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்-பாகவத பக்தி நிஷ்டை – பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை திருவாய் மொழிகளில் வெளியிட்டு அருளியது போலதிரு மால் திருப் பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்-ஸ்ரீ யபதிக்கு வாசகமான மூல மந்த்ர த்வயங்களில் அர்த்த அபி யுக்தரான பரம பாகவதருடைய திருவடிகள் ஆகிற பூம் கொத்தை சிரஸா வஹித்துப் போருகிற ஆழ்வார்

பொய் யாதானும்-அதாவது-பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -திருவிருத்தம்-1–என்றும் , யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டு ஆப்பு அவிழ்ந்தும் -திருவிருத்தம்-95–என்றும் ஷஷட் யந்தமான ம காரத்தில் சொல்லப் பட்ட -அஹங்கார மமகாரங்களாகிற – அனாத்ம அன்யாத்ம புத்யாதி ரூப அவித்யையும்- தத் கார்யமான அக்ருத்ய கரணாதிகளையும்-
தத் காரயமாக வரும் தேவ மனுஷ்யாதி ரூபமான பிரகிருதி சம்பந்தத்தையும் –
அழுந்தார்-என்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் –-அதாவது–இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே –திருவிருத்தம் என்று
தத் நிஷேத வாசியான நஞ்சாலே சொல்லப் பட்ட -அவித்யை முதலாக சம்சார கர்தமம் ஈறாக –
உள்ள விரோதி நிவ்ருத்தியையும் சொல்லுகையாலே – சர்வ ரஷகனான சர்வேஸ்வரனுக்கு அனந்யார்ஹ சேஷமாய் — ஞான ஆனந்த லஷணமாக ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தையும் சம்சார ஹேது பூத அவித்யாதிகளான விரோதிகளின் நிவ்ருத்தியையும்
பிரதிபாதிக்கிற –திரு விருத்தம் -பிரதம மத்யம-பதங்கள் இரண்டோடும் சேர்ந்து இருக்கையாலும் –

” பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லா வொழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” (திருவிருத்தம்‌ 1) என்றும்‌ “யாதானுமோராக்கையில்‌ புக்கு அங்காப்புண்டும்‌ ஆப்பவிழ்ந்தும்‌” (திருவிருத்தம்‌ 95) என்றும்‌ அந்த நமஸ்ஸில்‌ ‘ம:’ என்கிற ஷஷ்டியாலே சொல்லப்பட்ட அவித்‌யை அவித்‌யாகாரிதமான அஹங்கார மமகாரங்கள்‌ அவற்றாலே உண்டான அக்ருத்யகரணாதிகள்‌ தத் கார்யமாய்‌ தேவ மநுஷ்யாதி ரூபமான ப்ரக்ருதி ஸம்பந்தத்தையும்‌ சொல்லி “வன்சேற்றள்ளல்‌ பொய்ந்நிலத்தில்‌ அழுந்தார்‌‘ (திருவிருத்தம்‌ 100) என்று அந்த நமஸ்ஸில்‌ நிஷேத வாசியான நஞ்ஞாலே கீழ்ச் சொன்ன அவித்‌யாதிகளாய்‌ ஸம்ஸார கர்தமம்‌ எல்லையான விரோதிகளினுடைய நிவ்ருத்தியையும்‌ சொல்லி ஆக இப்படி ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ ஸேஷமாய்‌ ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய்‌ ததீய ஸேஷத்வ பர்யந்தமான ஸ்வரூபத்தையும்‌, தத் விரோதியான அஹங்கார மமகாரமாகிற விரோதி ஸ்வரூபத்தையும்‌ தந் நிவ்ருத்தியையும்‌ சொல்லுகையாலே திருவிருத்தம்‌ ப்ரணவ நமஸ்ஸுக்கள்‌ இரண்டினுடைய அர்த்தமாயிருக்கிறது.

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – 
-95 —அங்கு ஆப்புண்டும் –-கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –சாஸ்திர வாசனையாலும் – பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –ஆப்புண்டும் –சிநேகத்தைப் பண்ணியும் –ஆப்பு அவிழ்ந்தும் –கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –கர்ம ஷயம்   வந்தவாறே=அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே –மூதாவியில் –இத்தால் பழைமையை நினைக்கிறது-ஆவி -என்று பிராணனாய் –அசித் விசேஷமாய் பிராணனாய் இருக்கையாலே-இப்போது ஸூஷ்ம சரீரத்தை ஆவி என்கிறது –இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு –பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு –இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது —சேதனனுடைய கமந ஆகமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –தடுமாறும் –பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு – வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து –அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து –சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து – இப்படி தடுமாற்றமாய் இருப்பது –இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது –அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –உயிர் –ஜ்ஞான ஆனந்த லஷணமாய்- நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது 

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
 – – 100-பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே ––நிலத்து – அழுந்தார் பிறப்பாலே உண்டாகக் கடவதாய் துக்க ஹேதுவாய் இருக்கிற கடக்க அரிய கர்மத்தை யுடைத்தாய் அறிந்தாலும் கால் வாங்க ஒண்ணாத படியான ஆச்சர்யத்தை யுடைத்தான புத்ர தாராதி சங்கம் ஆகிற சிக்கென்ற சேற்றையும் கொண்டு முழுக்கும்படியான நரகம் ஆகிற அள்ளலை யுடைத்தாய் அஸத்ய ஸப்த வாஸ்யமான ப்ரக்ருதி மண்டலத்தில் அழுந்தார்கள்–

தாமரை உந்திப் பெரு மா மாயன்--அதாவது-தாமரை உந்தி தனிப் பெரும் நாயக –திருவாசிரியம் -1-என்று தொடங்கி எம் பெரு மா மாயன்–திருவாசிரியம் -5- -என்று தலைக் கட்டுகையாலே –
நாராயண -பதத்தில் சொல்லப் படுகிற -உபய விபூதி யுக்தமான பிராப்ய வஸ்துவையும் – ஆளாகவே வாழிய என்று-என்று -பிராப்ய பலங்களையும்-அதாவது- தனி மா தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல் –திருவாசிரியம் -3 என்றும் –-ஊழி தோறு ஊழி ஓவாது வாழிய என்று யாம் தொழ இசையும் கொல் -திருவாசிரியம்-4–என்றும் – அந்த பதத்தில் சதுர்த்திய அர்த்தமான பல ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே – பிராப்ய -பலன்கள்- இரண்டையும் சொல்லும் திரு வாசிரியம் பிரகிருதி பிரத்யய அம்சங்களாலே –தத் உபய பிரதி பாதகமான த்ருதீய பதத்தோடு
சேர்ந்து இருக்கையாலும் –இரண்டு பிரபந்தமும் -திரு மந்த்ரத்தோடு சேரும் —

(தாமரை யுந்திப்‌ பெரு மா மாயன்‌ ஆளாகவே வாழிய வென்று ப்ராப்ய பலங்களையும்‌) “தெய்வக் குழாங்கள்‌ கை தொழக்‌ கிடந்த தாமரை யுந்தித்‌ தனிப் பெரு நாயக” (திருவாசிரியம்‌ 1 என்றும்‌, “ஓராலிலைச்‌ சேர்ந்த எம்பெரு மா மாயனை யல்லது ஒருமா தெய்வம்‌ மற்றுடையமோ யாமே” (திருவாசிரியம்‌ 7) என்றும்‌ காரணத்வ ரக்ஷகத்வங்களைச்‌ சொல்லுகையாலே காரணமுமாய்‌ ரக்ஷகனுமாயிருக்கிறவனே பரம ப்ராப்யன்‌’ என்கிற நாராயண ஸப்தார்த்தமான ப்ராப்தி ஸ்வரூபத்தையும் “தனிமாத் தெய்வத்தடி யவர்க்கு ஆளாகவே இசையுங்கொல் (திருவாசிரியம் -3)என்றும்‌ “ஊழி தோறூழி ஓவாது வாழிய வென்று யாம தொழ இசையுங்கொல் (திருவாசிரியம்‌ 4) என்றும்‌ அந்த நாராயண பதத்தில் பிரார்த்தநா ரூபமான சதுர்த் யர்த்தமான பல ஸ்வரூபத்தையும்‌ சதுர்த் யந்தமான ப்ராப்தி ஸ்வரூபத்தையும்‌ சொல்லுகையாலே அந்தத்‌ திருவாசிரியம்‌ சதுர்த் யந்தமான நாராயண பத்தின் அர்த்தமாய் யிருக்கிறது.

நெறி காட்டி--அதாவது–நெறி காட்டி நீக்குதியோ –பெரிய திருவந்தாதி -6–என்று உபாயாந்தரங்களைக் காட்டி என்னை அகற்றப் பார்க்கிறாயோ என்கையாலே –சர்வ தர்மான் பரித் யஜ்ய–ஸ்ரீ கீதை-18-66 -என்ற உபாயாந்தரங்களின் பரி த்யாஜ்யத்தையும் —மனத்துக் கொண்டு–அதாவது-வெம் கோட்டு ஏறு ஏழுடனே கொன்றானையே மனத்துக் கொண்டு -பெரிய திருவந்தாதி-48-– என்று மாம் ஏகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை-18-66–என்கிற மானஸ அத்யாவச்ய ரூபமான -உபாய ஸ்வீகாரத்தையும்- கண்ணனால் அடித்து- அதாவது–சீரார் மனத் தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான் -பெரிய திருவந்தாதி-25-என்றும் – எம் இறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து வல் வினையை கானும் மலையும் புகக் கடிவான் பெரிய திருவந்தாதி-26-என்றும்
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று உபாய பூதன் பண்ணும் சர்வ பாப விமோசனத்தையும் —

(நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனால்‌ அடித்துக்‌ கண்டிலமால்‌ யாதாகில்‌ என்று உபாயத்தையும்‌ சொன்னவிது) பெரிய திருவந்தாதியிலே “நெறி காட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி 6 )என்று உபாயாந்தரங்களைக்‌ காட்டி என்னை அகற்றப்‌ பார்த்தாயோ என்கையாலே “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ (கீதை 18-66) என்கிற உபாயாந்தரங்களினுடைய த்யாஜ்யதையையும்‌ ‘வெங்கோட்டேறுழுடனே கொன்றானையே மனத்துக்‌ கொண்டு” (பெரிய திருவந்தாதி 48) என்று “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ (கீதை 18-66) என்கிற மாநஸாத்‌யவஸாய ரூபமான உபாய ஸ்வீகாரத்தையும்‌ “சீரார்‌ மனத்தலை வன்‌ துன்பத்தை மாற்றினேன்‌ வானோரினத் தலைவன்‌ கண்ணனால்‌ யான்‌” (பெரிய திருவந்தாதி 25) என்றும்‌ “எம்மிறையார்‌ தந்த அருளென்னும்‌ தண்டாலடித்து” (பெரிய திருவந்தாதி 26) என்றும்‌ சொல்லுகையாலே “அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌யோ மோக்ஷயிஷ்யாமி” கீதை 18-66) என்று உபாய பூதன்‌ பண்ணும்‌ ஸர்வபாப விமோசனத்தையும்‌-

கண்டிலமால்--அதாவது-வானோ மறி கடலோ பெரிய திருவந்தாதி-54-என்று தொடங்கி –வன் துயரை -மருங்கு -கண்டிலமால்–என்று விரோதிகள் ஆனவை போன இடம் தெரியாத படி தன்னடையே விட்டு போய்த்து என்கையாலே – நானும் வேண்டா நீயும் வேண்டா – அவை தன்னடையே விட்டு போம் -என்கிற நிஜர்தத்தையும் — யாதாகில் என்று-உபாயத்தையும் சொன்னவை--அதாவது- அடர் பொன் முடியானை–பெரிய திருவந்தாதி-70 -என்று தொடங்கி – யாதாகில் யாதே இனி -என்று – இனி கர்மம் இருந்து என் -நசித்து என் -எதனால் நமக்கு என் வரும் -என்று மா ஸூ ச –என்கிற பதத்தால் பலிதமான
நிர் பரத்வ அனுசந்தானத்தையும் – சொல்லுகையாலே உபாய பிரதி பாதகமாய் இருக்கிற பெரிய திரு அந்தாதி –சரம ஸ்லோகத்தோடே சேரும் என்கை .. உபாயத்தையும் சொன்னவை-என்று சொன்ன பிரபந்தங்கள் என்ற படி 

வானோ மறிகடலோ இத்யாதி மருங்கு வன்துயரை கண்டிலமால்‌” (பெரிய திருவந்தாதி 54) என்று அந்த விரோதிகள்‌ போனவிடம்‌ தெரியாதபடி தன்னடையே விட்டுப்‌ போய்த்ததென்கையாலே “இஷ்யாமி’ என்கிற ணிச்சாலே சொல்லுகிற அர்த்தத்தையும்‌ “அடர்பொன்‌ முடியான்‌” இத்யாதி, யாதாகில்‌ யாதே இனி’ (பெரிய திருவந்தாதி 70) என்று “மாஸூச:” (கீதை 18-66 என்கிற பதத்தாலே பலிதமான நிர்ப ரத்வாநுஸந்தானத்தையும்‌ சொல்லுகையாலே திருவந்தாதியாலே ஸ்லோகார்த்தமான உபாய ஸ்வரூபத்தைச்‌ சொல்லிற்று. ஆகையாலே இவை மந்த்ர ஸ்லோகங்களோடு சேரும்‌. ஆகத்‌ திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தையும்‌ ப்ரதிபாதிக்கையாலே அவை மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தை ப்ரதிபாதி,க்கிற திருமந்த்ரத்தினுடையவும்‌ சரம ஸ்லோகத்தினுடையவும்‌ அர்த்த மாயிருக்கிறது 

சரம பிரபந்தமான திரு வாய் மொழியின் த்வயார்த்த பிரதிபாதகத்வம் விஸ்த்ரேண உபபாதிக்க வேண்டுகையாலும்-தத் விஷயமாக தம்முடைய திருத் தமையனார் பிள்ளை ஒரு பிரபந்தம் முன்பே இட்டு அருளுகையாலும் – அதிலே தர்சிப்பித்து விடக் கடவோம் என்று மேலே அருளுகிறார் .-திருவாய்மொழி த்‌வயத்தில்‌ அர்த்தத்தை ப்ரதிபாதிக்கையாலே தீர்க்க ஸரணாகதி என்கிறார்‌.-

த்வயார்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்கரஹத்திலே-சூரணை -210-

அதாவது-திருவாய்மொழி பத்து பத்தாலும்-ஸ்ரீயபதித்வம் முதலாக — கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக த்வயத்தில் பிரதிபாதிதமான பத்து அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே , த்வய அர்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாய் இருக்கும் என்று சொல்லப் பட்டது – பிள்ளை அருளி செய்த சார சங்கரகமாகிற பிரபந்தத்தில் என்கை-

அந்த பிரபந்தம் ஆவது தான் என் என்னில்- அகில ஜதத்தி தானுசாசன பரமான வேதத்திலும் –
வேத உப ப்ரும்ஹமான அர்த்தமாக – பிரவ்ருத்தங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் – சர்வேஸ்வர- சர்வ ஸ்வமாய் –நம் ஆச்சர்யர்களுக்கு ஆபத் தனமாய் -இருந்துள்ள அர்த்த த்வ்யத்தை – பிரதி பாதிக்கையாலே -த்வயம் -என்று திரு நாமத்தை உடைத்தாய் உள்ள வாக்ய த்வயம் – பத்து அர்த்தத்தை பிரதி பாதிக்கிறது –அதாகிறது –

1-ஸ்ரீ யபதித்வம்
2-நாராயணத்வம்
3-நாராயண னுடைய சர்வ லோக சரண்யமான -சரணார விந்த யுகளம்
4-அதினுடைய ப்ராபகத்வம்
5-தத் கோசரமாய் -சேதனகதமாய் இருந்துள்ள -பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம்
6-லஷ்மி தத் வல்லபர் உடைய -நிகில ஆத்ம கைங்கர்ய -பிரதான அர்த்தமான நித்ய சம்பந்தம்
7-கைங்கர்ய பிரதி சம்பந்தியான -ஈஸ்வரனுடைய -நிரதிசய போக்யதை
8-சர்வ ஸ்வாமித்வம்
9-நித்ய கைங்கர்யம்
10-கைங்கர்ய பிரதி பந்தக நிச்சேஷ நிபர்ஹணம்
-ஆகிய அர்த்த விசேஷங்கள் .. ஈத்ரு சார்த்த விசேஷ பிரகாசமான மந்த்ர விசேஷத்தின் உடைய விவரண ரூபமாய் – பௌருஷேய உபநிஷத்தாய் இருந்துள்ள –திரு வாய் மொழியில் -பத்து பத்தாலும் – இப் பத்து அர்த்தத்தையும் நம் பூர்வ ஆச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்து போருவர்கள்

அதில் முதல் பத்தால்-
மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்-1-3-1 -என்றும் ,
மலராள் மைந்தன் -1-5-9–என்றும் ,
திரு மகளார் தனிக் கேள்வன்-1-6-9- -என்றும் ,
திருவின் மணாளன் -1-9-1–என்றும் ,
பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3–என்றும் ,
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4–என்றும் ஸ்ரீ யபதித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7–என்றும் ,
எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1–என்றும் ,
நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன் -2-7-2-– என்றும் நாராயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து-

மூன்றாம் பத்தால் –
நாண் மலராம் அடித் தாமரை -3-3-9–என்றும் ,
அம் கதிர் அடியன் -3-4-3–என்றும் ,
அவன் பாத பங்கயம்-3-6-4- -என்றும் ,
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10–என்றும் ,
மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியான் -3-8-1–என்றும் ,
நாராயண னுடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதம் ஆய்த்து 

நாலாம் பத்தாலே –
இலங்கை நகரம் பெரி உய்த்தவர் -4-2-8–என்றும் ,
வல் வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11–என்றும் ,
தொல் வினை தீர-4-4-11 -என்றும் ,
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே-4-5-2- -என்றும் ,
மேவி நின்று தொழுவார் வினை போக-4-5-4- -என்றும் ,
பிறந்தும் செற்றும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்-4-7-7- -என்றும் ,
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணி யே என்று இவை ஒழிய-4-9-7- -என்றும் ,
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திரு வடி கண் கூட்டினை -4-9-9–என்றும் ,
அக்தே உய்யப் புகும் ஆறு -4-1-11–என்றும் ,
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-என்றும்
அநிஷ்ட நிவ்ருத்த இஷ்ட ப்ராப்தி கரத்தவ லஷணமான ப்ராபகத்வம் பிரதிபாத்யம் ஆய்த்து-

அஞ்சாம் பத்தில் –
தமியேனுக்கு அருளாய் -5-7-2–என்றும்
ஆர் எனக்கு நின் பாதமே சரணாக -5-7-10–என்றும் ,
உன்னால் அல்லால்-5-8-3- -என்றும் ,
கழல் களையே சரணாக கொண்ட-5-8-11- -என்றும் ,
நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென்குருகூர் சடகோபன்-5-9-11 -என்றும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய்-5-10-11- -என்றும்
தத் கோசரமாய் சேதனகதமாய் இருந்துள்ள பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாத்யம் ஆய்த்து

ஆறாம் பத்தில் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்து-6-5-8- -என்றும் ,
அடிமை செய்வார் திரு மாலுக்கே -6-5-11–என்றும் ,
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன்-6-7-8- -என்றும் ,
என் திரு மார்வற்கு -6-8-10-என்றும் ,
கோலத் திரு மா மகளோடு உன்னை -6-9-3-என்றும்
கைங்கர்ய பிரதான அர்த்தமான லஷ்மி தத் வல்லபர்களுடைய நித்ய சம்பந்தம் பிரதி பாத்யம் ஆய்த்து –

ஏழாம் பத்தால் –
கன்னலே அமுதே-7-1-2- -என்றும்
கொடியேன் பருகு இன் அமுதே -7-1-7–என்றும் ,
அலை கடல் கடைந்த ஆர் அமுதே-7-2-5- -என்றும் ,
திரு மாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ-7-9-9- -என்றும் ,
இவ் எழ உலகை இன்பம் பயக்க-7-10-1–என்றும் – கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதை பிரதி பாத்யம் ஆய்த்து

எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய அம்மானே -8-1-3- -என்றும் ,
விண்ணவர் கோன் தங்கள் கோனை-8-2-2- -என்றும் ,
அமர்ந்த நாதனை -8-4-10–என்றும் ,
மூ உலகாளி-8-9-5–என்றும் ,
நேர் பட்ட நிறை மூ உலகுக்கும் நாயகன்-8-9-11- -என்றும் சர்வ ஸ்வாமித்வம் பிரதி பாத்யம் ஆய்த்து-

ஒன்பதாம் பத்தால்
பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து -9-2-1–என்றும் ,
நின் தீர்த்த அடிமைக் குற்றேவல்–9-2-2–என்றும் ,
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3–என்றும் ,
கொடி வினையேனும் பிடிக்க-9-2-10- -என்றும் ,
உறுவது இது என்று உனக்கு ஆட் பட்டு-9-4-4- -என்றும் ,
ஆட் கொள்வான் ஒத்து-9-6-7- -என்றும் ,
நானும் மீளா அடிமை பணி செய்யப் புகுந்தேன்-9-8-4- -என்று நித்ய கைங்கர்யம் பிரதி பாத்யம் ஆய்த்து

பத்தாம் பத்தால் –
துயர் கெடும் கடிது -10-1-8–என்றும் ,
கெடும் இடராய -10-2-1–என்றும் ,
எழுமையும் ஏதமும் சாரா -10-2-2–என்றும் ,
தீரும் நோய் வினைகள் எல்லாம்-10-2-3- -என்றும் –
இப் பிறப்பு அறுக்கும் -10-2-5–என்றும் ,
உன் தன திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்-10-3-9- – என்றும் ,
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் -10-4-7–என்றும் ,
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3–என்றும் ,
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-4-9–என்றும் ,
அமரா வினைகளே -10-5-9–என்றும் ,
கடு நரகம் புகல் ஒழித்த -10-6-11–என்றும் ,
பிறவி கெடுத்தேன்-10-8-3- -என்றும் ,
தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -10-8-5–என்றும் ,
அந்தி தொழும் சொல்லு-10-8-7- -என்றும் ,
அவா வற்று வீடு பெற்ற-10-10-11- -என்றும் கைங்கர்ய பிரதிபத்திய நிசேஷ்ய நிபர்ஹணம் பிரதிபாத்யம் ஆய்த்து 

இப்படி ஸ்ரீ யபதித்ய பிரமுகங்களாய் –கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்கண பர்யந்தங்களாய் இருந்துள்ள–உபாதேயார்தங்களை பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள – வாக்ய த்வயமும் –திரு வாய் மொழியும் – பகவத் சரணார்த்தி களாய் – அநந்ய உபாயராய் இருக்கும் அதிகாரிகளுக்கு –
கால ஷேப ஹேதுவாகவும்- போக ஹேதுவாகவும் — ஈஸ்வர ப்ரீதி ஹேதுவாகவும் – யாவச் சரீர பாவம் அனுசந்தேயம் -என்று அருளிச் செய்த இப் பிரபந்தம் என்கை –இப்படி திருவாய்மொழியின் த்வய அர்த்த பிரதிபாதாக த்வத்தை விசதமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து வைக்கையாலே – ஸ்வ பிரபந்தத்தில் வக்தவ்ய அம்சத்தை தத் பிர பந்தத்தில் தர்சிப்பித்தார் ஆய்த்து

த்‌வயத்திலே ப்ரதிபாதி க்கப்பட்ட ஸ்ரிய:பதித்வம்‌, நாராயணத்வம்‌, விலக்ஷண விக்‌ரஹ யோக,ம்‌, அவனுடைய உபாயத்வம்‌, உபாய பரிக்‌ரஹம்‌, கைங்கர்ய ப்ரதாநார்த்தமான லக்ஷ்மீ தத் வல்லபனுடைய நித்ய ஸம்பந்த ம்‌, ஸர்வ ஸ்வாமித்வம்‌, நிரதிஸய போக்‌யத்வம்‌, கைங்கர்ய ப்ரார்த்தனை, கைங்கர்ய விரோத நிவ்ருத்தி ஆக இப்பத்து அர்த்தத்தையும்‌ திருவாய்மொழி பத்து பத்தாலும்‌ ப்ரதிபாதிக்கையாலே இத் திருவாய்மொழி தீர்க்க ஸரணாகதி என்று ஸார ஸங்க்‌ரஹத்திலே பிள்ளை அருளிச்‌ செய்தார்‌

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading