ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -12 –ப்ரயோஜந பாதம்-17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம்-(195–207–)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

12 –ப்ரயோஜந பாதம் –195–207–மொத்தம் 13–ஸூரணைகள்-
17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–மொத்தம் 13–ஸூரணைகள்-

இப்படி ஈஸ்வர உபதேசத்தில் இவர் உபதேசத்துக்கு ஏற்றம் சொன்ன பிரசங்கத்திலே , பிரமேய பூதனான அவனோடே-பிரமாண பிரமாதக்களையும் கூட்டி – அவர்கள் எல்லார் உபதேசமும் சங்குசித விஷயம் – இவர் உபதேசம் சர்வ விஷயம்-என்று இவ் வழியாலே உபதேஷ்டாவான ஆழ்வாருக்கு ஓர் ஆதிக்யம் அருளி செய்கிறார் மேல் —இனி மேல்‌ அவனுடைய ௨பதேஸம்‌ ஸங்குசித விஷயம்‌; இவருடைய உபதேஸம்‌ அஸங்குசித விஷயமென்கிறார்‌-

வேத வேத்ய வைதிக உபதேசம்–ஆவித்யர் அளவிலே ..அஜ்ஞர் ஜ்ஞானிகள் ஜ்ஞான விசேஷ யுக்தர் சர்வஜ்ஞன் என்னாமல் இவர் திருத்துவர்-சூரணை -195-

(வேத உபதேசம் -வேத்ய உபதேசம் -வைதிகர் உபதேசம் -ஆவித்யர்-அறிவில்லா உலகோர்-)

அதாவது-வேத உபதேசம் –-ஹித அநுசான பரமான வேதத்தினுடையவும் வேத வேத்யே பரே பும்சி -ஸ்காந்தம் ( வேதங்களால் அறியப்படும் பரம் புருஷன் ) -என்று வேதைக சமதி கம்யனான ஈஸ்வரனுடையவும்- வைதிக உபதேசம் –யேச வேத விதோ விப்ராயே சாத்யாத்ம விதோ ஜனா
( எந்த அந்தணர்கள் வேதத்தின் பூர்வ பாகத்தை அறிந்தவர்களோ -எவர்கள் வேதாந்தம் அறிந்தவர்களோ )-என்கிற படியே வேதத்தில் பூர்வ உத்தர பாகார்த்த ஜ்ஞராய் –வைதிகர் என்று -நிரூபகமாக இருக்கும் மகரிஷிகள் உடைய உபதேசம்-–ஆவித்யர் அளவிலே-ஆவித்யா ப்ராக்ருத ப்ரோக்த -(தத்வம் ஹிதம் புருஷார்த்தம் என்னும் அவற்றின் ஞானம் இல்லாமையாகிற
அறியாமையோடு கூடிய இவ்வுலகோர் ஆவித்யர் என்று சொல்லப்படுவர் ) என்கிறபடியே
தத்வ ஹித புருஷார்த்த -ஜ்ஞான பாவ ரூப -அவித்யா யுக்தரான சம்சாரிகள் மாத்ரத்தில்..

(வேத வேத்‌ய வைதிகோபதேஸம்‌ ஆவித்‌யரளவிலே) வேதமும்‌ வேத வேத்‌யனும்‌ வைதிகரான ருஷிகளுமுபதேஸிப்பது ‘ஆவித்‌ய: ப்ராக்ருத: ப்ரோக்த:” என்று அவித்‌யா ஸம்பந்திகளாய்‌ அத ஏவ தத்த்வ ஹித புருஷார்த்த, ஜ்ஞானமின்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளுக்கே.-

இவர் –ஆழ்வார் –அஞ்ஞர்-தத்வ ஹிதாதிகளில் அஜ்ஞரான சம்சாரிகளோடு-ஞானிகள்
பகவத் உபாயத்வ நிஷ்டராய் இருக்கும் ஜ்ஞானிகள் ஆனவர்களோடு —ஞான விசேஷ யுக்தர்
தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை சாஷாத் கரித்து –உபேய பரராய்-தத் அனுபவமே யாத்ரையாய் இருக்கும் -ஜ்ஞான விசேஷ யுக்தரோடு —சர்வஞ்ஞன் என்னாமல்-நைவ கிஞ்சித் பரோஷம்தே ( உனக்கு காணப்படாத பொருள் ஒன்றும் இல்லை )-என்றும் ,-யோ வேத்தி யுகபத் சர்வம்) யாவன் ஒரு பொழுதில் எல்லாவற்றையும் அறிகிறானோ ) -என்கிறபடியே சர்வஜ்ஞனான ஈஸ்வரனோடு வாசி அற சர்வர்க்கும் வேண்டும் அம்சங்களை உபதேசித்து இவர் திருத்துவர் என்கை ..

அவ்வளவன்றிக்கே இவர்‌ அஜ்ஞர்‌ ஜ்ஞாநிகள்‌ ஜ்ஞாந விஸேஷ யுக்தர்‌ ஸர்வஜ்ஞனென்னாமல்‌ திருத்துவர்‌. அஜ்ஞரான ஸம்ஸாரிகளோடு தத்வ ஹித புருஷார்த்தங்களில்‌ விஸத ஸிக்ஷை பிறந்த முமுஷுக்களோடு பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை விஸத தமமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கும்படி ஸாத்‌யதஸையிலே நிற்கிற ஜ்ஞாந விஸேஷ யுக்கரோடு “நைவ கிஞ்சித்‌ பரோக்ஷம்‌ தே” (ஜிதந்தே ஸ்தோத்ரம்‌) என்றும்‌, யோ வேத்தி யுகபத்‌ ஸர்வம்‌ ப்ரத்யக்ஷேணே ஸதா ஸ்வத:” என்றும்‌ சொல்லுகிறபடியே ஸர்வத்தையும்‌ ஸர்வகாலமும்‌ ப்ரத்யக்ஷமாக யுகபதேவ ஸ்வத: ஸாக்ஷாத்கரிக்கும்‌ ஸர்வஜ்ஞனோடு வாசியற ஸர்வர்க்கும்‌ இவர்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லித்‌ திருத்துவர்‌ என்கிறார் –

எல்லார்க்கும் இவர் இப்படி அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண வேணுமோ என்னும் அபேஷையிலே-கீழ் சொன்ன நாலு விஷயத்துக்கும் இவர் அறிவிக்க வேண்டும் அர்த்த விசேஷங்களை தர்சிப்பிகிறார் இதில் –திருத்துகையாவது அஜ்ஞாதஜ்ஞாபநம்‌ பண்ணுகையிறே. அதில்‌ இவ்வதிகாரிகளுக்கு உபதேஸிக்கும்‌ அர்த்த விஸேஷங்கள்‌ எவை யென்னில்‌,-

அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும்-இக் கரை ஏறினார்க்கு இன்ப வெள்ளமும்-நிலை அறியாதார்க்கு ஆழங் காலும்-கரை ஏற்றும் அவனுக்கு நாலும் ஆறும் அறிவிக்க வேணும் —சூரணை -196-

அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும்-அதாவது–செம் கண் அடியாரைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் -பெரிய திருமொழி -11-7-8–என்று முதலிலே பகவத் ஞானம் இல்லாத சம்சாரிகளுக்கு –
அக்தே உய்யப் புகும் ஆறு –திருவாய் -4-1-11–என்று ,-திரு நாரணன் தாள்-4-1-1- -என்கிற இதுவே உஜ்ஜீவிகைக்கு உபாயம் என்று –சம்சார நிஸ்தரண உபாயமும் –

(அறியாதார்க்கு உய்யப் புகுமாறும்‌) “அறியாதார்‌ என்றுமறியாதார்‌ கண்டாமே” (பெரிய திருமொழி 1-7-8) என்று முதலிலே பகவஜ் ஜ்ஞாநமில்லாத ஸம்ஸாரிகளுக்கு அஃதே வுய்யப் புகுமாறு’  (திருவாய்மொழி 4-1-11) என்று “திருநாரணன்‌ தாள்‌” (திருவாய்மொழி 4-1-1 என்கிற விதுவே உஜ்ஜீவநோபாயம்‌ என்று ஸம்ஸாரோத்தீர்ண உபாயத்தையும்‌,–

வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானைச்   செங்கண் நெடியானைச் சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார்  கண்டாமோ  —
-11-7-8—இவர்களைக் கொண்டு போய் வைக்கும் இடத்தில் இதுக்கு மேல் இல்லை என்னும் படி உயரப் பரம பதத்திலே வைக்க வல்லவனை – ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் – மேன்மையால் குறையற்று சிவந்த கண்களை உடைய
சர்வேஸ்வரனை –நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும்
இரண்டையும் அறியாதவர்கள் –

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11–நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று அது ஏது என்னில் கண்ணன் கழல்கள் மேல்-நினைமினோ என்கிறது –
ஸூ லபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1—திரு நாரணன்-இடர் கெடுத்த திருவாளன் இணை அடி-தத்ர நாராயண ஸ்ரீ மான்-ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்-ஒரு மிதுனம் இறே ஆசிரயணீயமும் ப்ராப்யமும் -ஒரு மிதுனத்துக்கு இறே சேஷம் இறே இது–தாள் சேஷ பூதம் பற்றுவது திருவடிகளை இறே-காலம் பெறச் –ஜீவிதும் மரணாந்தம் ஹி ஜராந்தே ரூபா யவ்வனே சம்பதச்ச வி நா சாந்தா ஜானன் கோ த்ருதிமாப் நுயாத்– நாளை செய்கிறோம் என்னுமது அன்று-யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வா ஸூ தேவோ ந சிந்தயந்தே வா ஸூ தேவ தருச்சாய சாகி மர்த்தம் ந ஸேவ்யதே
சிந்தித் துய்ம்மினோ-
-ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார்-நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது-அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார் –

இக் கரை ஏறினார்க்கு இன்ப வெள்ளமும்-அதாவது-அக்கரை என்னும் அனர்த்த கடலுள் அழுந்தி -உன் பேர் அருளால் -இக்கரை ஏறி இளைத்து-இருந்தேனை–பெரியாழ்வார் -5-3-7- -என்று சம்சார சாகரத்தில் அழுந்துகிறவர்களுக்கு பகவத் ஏக உபாயத்வ ஞானம் பிறந்தால் – இங்கே இருக்கச் செய்தே -அக்கரை இக்கரை -என்னும் படி -சம்சாரம் தூரமாய் – பரம பதம் அசந்னமாம்படி இருக்கையாலே –பகவத் ஏக உபாயத்தில் வ்யவசிதராய் – ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருதராய் இருக்கிறவர்களுக்கு வ்யாவசாயம் குலைந்து த்வரிக்கும் படி – முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேர் இன்பத்தே–திருவாய்–7-2-11- -என்று பிராப்ய வைலஷண்யமும்

(இக்கரை ஏறினார்க்கு இன்ப வெள்ளமும்‌) “அக்கரை யென்னும் அனர்த்தக்கடலுளழுந்தி உன்‌ பேரருளால்‌ இக்கரை யேறி இளைத்திருந்தேன்‌” (பெரியாழ்வார்‌ திருமொழி 5-3-7 என்று ஸம்ஸார ஸமுத்‌ரத்திலே அழுந்துகிறவர்களுக்கு பகவதேகோபாய ஜ்ஞாநம்‌ பிறக்கையாவது இங்கே யிருக்கச்‌ செய்தே அக்கரை இக்கரை என்னலாம்படி இருக்குமிறே. ஆகையாலந்த பகவதேகோபாய ஸங்கத்திலே வ்யவஸிதராகையாலே ஸ்வ ப்ரவிருத்தி நிவ்ருத்தரா யிருக்கிறவர்களுக்கு “முகில்வண்ண வானத் திமையவர்‌ சூழ விருப்பர்‌ பேரின்ப வெள்ளத்தே (திருவாய்மொழி 7-2-11 என்று அவர்கள்‌ அந்த வ்யவஸாயம்‌ குலைந்து த்வரிக்கும்படியான ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும்‌,

அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை
அஞ்சேல்  என்று கை கவியாய்
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும்
செக்கர் நிறத்து சிவப்புடையாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 7—அக்கரை–சம்சாரத்தில் இருக்கச் செய்தே ஞானம் பிறந்த பின்பு அது தூரம் ஆன படி – விபீஷணனுக்கு அக்கரை இக்கரை ஆய்த்து இறே –சம்சாரம்  என்னும் அனர்த்த கடலுள் அனர்த்தமே என்னும் பிரசித்தி –விஷயாக்ரரந்த சேதஸாம்-அழுந்தி – தறைப்பட்டு-பீம பவார்ண வோதரே -பதிதம்உன் பேர் அருளால் –விஷ்ணு போதம் இறே-இரண்டு கரையும் ஒத்து இருக்கும் –இக்கரை –தமக்கு அணித்தான படி–ஏறி இளைத்து இருந்தேனை – மாசோபவாசி சோற்றை விரும்புமா போலே –ப்ராப்தி கிடையாத இளைப்பு-சேஷத்வ ஞானம் பிறந்தால் சேஷி செய்த படி கண்டு இருக்க ஒட்டாதே பதறப் பண்ணுகிறது –-தானடியாக பகவத் ஞானம் பிறந்தால் இறே ஆறி இருக்கல் ஆவது-ஞான பலத்தைப் பண்ணித் தந்தால் போலே
பிராப்தியும் பண்ணித் தர வேணும் -என்கிறார் –

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-முகில் வண்ணன் உடைய வானம் என்னுதல் -அவனுடைய நிழல் ஈடான வானம் என்னுதல் -தாம் மோஹித்து திருத் தாயார் தனியே கூப்பிட இருந்த இவருடைய கிலேசமும் இன்றிக்கே -நித்ய ஸூரிகள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கப் பெறுவர்கள்

நிலை அறியாதார்க்கு ஆழங் காலும்-அதாவது-ஆற்றிலே இழிந்து போகா நிற்க செய்தே -நிலைக்கும் இடமும் நிலையாத இடமும் அறியாதாரைப் போலே – பிராப்ய பரராய் அனுபவியா நிற்கச் செய்தே -அதில் நிலை கொள்ளலாம் இடமும் – ஆழம்கால் படுத்தும் இடமும் அறியாதவர்களுக்கு – செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின் -திருவாய் –10-7-1-என்று – சீல குணமான ஆழம் காலும்

(நிலையறியாதார்க்கு ஆழங்காலும்‌) ஸீல குணத்தில்‌ இழியாமையாலே அதில்‌ நிலையறியாதவர்களுமாய்‌ ப்ராப்ய தஸையிலே நிற்கிறவர்களுக்கு “செஞ்சொற் கவிகாள்‌ உயிர்‌ காத்து ஆட் செய்ம்மின்‌” (திருவாய்மொழி 10-7-1 என்று பகவத் குணாநுபவம்‌ பண்ணுகிற நீங்கள்‌ ஸீலகுணமாகிற ஆழங்காலில்‌ இழியாதே கொள்ளுங்கோள்‌ என்கிற ஆழங்காலையும்‌,-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-செவ்விய சொல்லை யுடைய கவிகாள் -கவிக்குச் செவ்வை யாகிறது -அநந்ய பிரயோஜனமாய் இருக்கை -பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் –என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர்
உயிர் காத்து ஆட்செய்மின் -உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள் -கவி பாட்டு வாசிகமான அடிமை யாகையாலே -ஆட் செய்ம்மின் -என்கிறார் –ஆட் கொள்வான் ஒத்து என்னாருயிர் யுண்ட மாயன் -என்கிறபடி அடிமை கொள்ளுவரைப் போலே புகுந்து இத்தலையை அழிக்குமவனாய்த்து–பரிஹரித்துக் கொள்ளுங்கோள் -ஆழங்காலிலே இழிந்து அமிழுமவர்கள் அவ்விடத்திலே கொண்டைக் கால் நாட்டுமாப் போலே –வம்மின் புலவர் -என்று முதலிலே ருசி இல்லாதாரையும் அழைக்கிற இவர் சீலாதி குணங்களில் அழுந்தி -இழிகிறவர்களையும் வேண்டா என்கிறார் இ றே ப்ரீதி பிரகரஷத்தாலே –

கரை ஏற்றும் அவனுக்கு நாலும் ஆறும்-அதாவது-சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜனம் த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிணா-என்கிற படியே சம்சார சமுத்ரத்தை கடத்தி -அக்கரைபடுத்தும் அவனுக்கு – பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் இத்யாதி –திருவாய் -10-7-10–
இத்யாதியாலே –சதுர் விம்சதி தத்வமும் அறிவிக்க வேணும் என்கை

(கரையேற்றுமவனுக்கு நாலாறும்‌ அறிவிக்க வேணும்‌) “ஸம்ஸார ஸாகரம்‌ கோரமநந்த க்லேஸ பாஐநம்‌ த்வாமேவ ஸரணம்‌ ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:” (ஜிதந்தே ஸ்தோத்ரம்‌ என்று ஸம்ஸார ஸாகரத்தைக்‌ கடத்தி அக்கரைப்‌ படுத்துமவனுக்கு “பொங்கைம்புலன்‌‘ (திருவாய்மொழி 10-7-10) இத்யாதியாலே சதுர்விம்ஸதி தத்த்வங்களையும்‌ இப்படி அறிவிக்க வேணும்‌-என்கிறார்‌-

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே
யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-தாம் அர்த்திக்கச் செய்தேயும் தம்முடைய பிரக்ருதியால் உண்டான தேகத்தில் சங்கத்தால் எம்பெருமான் தம் வார்த்தையை ஆதரியா விட்டவாறே -சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –

ஆக அறிவு கேடரை உபாயத்தில் மூட்டுவர் .-உபாயத்தில் ஊன்றுவாரை பிராப்ய பரர் ஆக்குவார் .
ப்ராப்யத்தில் அவஹாகிக்கும் அவர்களுக்கு ஆழம் கால் அறிவிப்பார்–பிராப்தியை உண்டாக்கும் அவனுக்கு த்யாஜ்யத்தை அறிவிப்பார் என்றது ஆய்த்து —

இவர்களுக்கு இவ் அர்த்தங்களை உறுப்பான ஹேதுக்களோடே இவை தன்னை இன்னும் ஒரு பிரகாரேண வ்யக்தமாய் அருளிச் செய்கிறார் இதில்–இனி அவர்களுக்கு இவ்வர்த்தங்கள்‌ ஜ்ஞாதமாகைக்கு ஹேதுவையும்‌, இவர்களுக்கு இவ்வர்த்த விஸேஷங்களை உபதேஸிக்கைக்கு ஹேதுவையும்‌ அவ்வர்த்த விஸேஷங்கள்‌ தன்னையும்‌ அருளிச் செய்கிறார்‌–

அவன் முனிந்தார்க்கு தாம் கண்டது – தம்மை முனிவார்க்குத் தம் கண் – காணாதது
காண்பார்க்குக் கண் மாறும் இடமும் – ராகாந்தனுக்கு மாயா தோஷம் இவர் காட்டுமவை -சூரணை -197-

(அவன் முனிந்தார்க்கு இவர் காட்டுமது தாம் கண்டது – தம்மை முனிவார்க்கு இவர் காட்டுமது தம் கண் –
காணாதது காண்பார்க்கு இவர் காட்டுமது கண் மாறும் இடம் – ராகாந்தனுக்கு இவர் காட்டுமது மாயா தோஷம்-என்றவாறு )

அதாவது-ஷிபாமி (தள்ளுகிறேன் ) -என்றும்-ந ஷமாமி ( பொறுக்க மாட்டேன் )-என்கிறவன்
முனிவுக்கு விஷயமாய் அஜ்ஞான சம்சாரிகளுக்கு தாம் கண்டது –-அதாவது –
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லது–திரு விருத்தம் -99- -என்று –
நிமக்த்த உத்தாரண கதனாய் -ஞான உபகாரனானவனை ஒழிய சர்வருக்கும் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தாம் அறுதி இட்ட விலஷணமான அர்த்தமும் —

(அவன்‌ முனிந்தார்க்குத்‌ தாம்‌ கண்டது) “ந க்ஷமாமி கதாசந” என்றும்‌ ‘க்ஷிபாம்யஜஸ்ரம ஸூபாந்‌ ஆஸுரீஷ்வேவ யோநிஷ**‘ என்று அவன்‌ நிக்ரஹத்துக்கு விஷயமாகையாலே அஜ்ஞராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு ஞானப் பிரானை யல்லாலில்லை நான்‌ கண்ட நல்லது” என்றும்‌ “பெருங்கேழலார் தம்‌ பெருங்கண்‌ மலர்ப்‌ புண்டரீகம்‌ நம்மேல்‌ ஒருங்கே பிறழவைத்தார்‌‘ (திருவிருத்தம்‌ 45) என்கிற பாட்டாலே மஹா வராஹமான ஸர்வேஸ்வரன்‌ கடாக்ஷிக்கையாலே எனக்கு ஸத்‌ருஸ மில்லை; ஸம்ஸார ஸம்பந்த மும்‌ என்னுடைய ஸம்பந்திகளுக்கும்‌ கிட்டா தென்னும்படி தமக்கு பலித்தபடியாலே ஸர்வர்க்கும்‌ உஜ்ஜீவநோபாயம்‌ அந்த ஜ்ஞாந வராஹமல்லது இல்லை; இது நானறுதியிட்ட விலக்ஷணமான அர்த்தமென்றும்‌;-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
 – 99-நமது ஞானத்துக்கு -அவனே மோக்ஷ உபாயம் -என்று அறிய வேண்டுமே —அப்ரதிஷேதத்துக்கு-விலக்காமை -அத்வேஷமே வேண்டும்-அவன் ஞானத்துக்கு மட்டுமே மோக்ஷ உபாதத்வம்-ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலை த்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்–பேற்றுக்கு அடியான ஜ்ஞானம் அவன் பக்கலிலே உண்டு என்கிறார் –ஞானப் பிரானை –தன்னை சூழ்த்திக்  கொள்ளுக்கைக்கு ஈடான-அறிவு இறே இவன் பக்கலிலே உள்ளது –தனக்குத் தான் தேடும் நன்மை கழுத்துக்கட்டியாகுமே–பர ரஷண உபாயம் உள்ளது அவனுக்கே யாயிற்று —அல்லால் இல்லை –ப்ரஹ்லாதன் போல் )அவன் உளன் என்கை யல்ல –ஈஸ்வரன் இல்லை என்று சாஸ்திரம் எழுதுகிறவனும்-அந்திம சமயத்தில் வந்தவாறே -சஹ ஸ்ருதி நலியா நின்றது -என்றான் இறே –அல்லால் இல்லை என்பது இதுவேஈஸ்வரனை ஒழிந்த தன்  ஸ்வீகாரமும் உபாயம்-இல்லைநான் கண்ட நல்லதுவே –நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

தம்மை முனிவர்க்கு-அதாவது-எங்கனயோ அன்னைமீர்கள் என்னை முனிவது நீர்–திருவாய் -5-5-1- -என்னும் படி உபாயத்வ அத்யாவச்ய தசையில் நின்று ஸ்வ யத்ன பீருக்களாய் , பிராப்ய வைலஷண்யம் அறியாதே இத்தனை அதி பிராவண்யம் ஆகாது என்று ஹிதம் சொல்லுபவர்களுக்கு —
தம் கண்-அதாவது என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் -திருவாய் -5-5-2-என்று பிராப்ய வை லக்ஷண்ய அவஹாகியான என் நெஞ்சினால் பார்க்க மாட்டீர்களோ என்று –தம்முடைய உள் கண்ணானான -பிராப்ய வைலக்ஷண்ய ஜ்ஞானமும் —

(தம்மை முனிவார்க்குத்‌ தம்‌ கண்‌) “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது” (திருவாய்மொழி 5-5-1) என்று உபாய அத்யாவசாய தசையில் நின்று துறும்பு நறுக்கில் ஸ்வரூப ஹாநியாம் என்னும் செங்கிடு குட்டைகளாய் இருக்கையாலே -ப்ராப்ய வைலக்ஷண்யம் அறியாதே ப்ராப்ய விஷயத்திலே இத்தனை அதி ப்ராவண்யமாகாதென்று தம்மைப்‌ பொடியுமவர்களுக்கு “என்னெஞ்சினால்‌ நோக்கிக்‌ காணீர்‌ என்னை முனியாதே’ (திருவாய்மொழி 5-5-2) என்று ப்ராப்ய வைலக்ஷ்ண்யத்தை அவகாஹித்த என்‌ நெஞ்சாலே பார்க்க மாட்டிகோளோ என்று தம்முடைய உட் கண்ணான ப்ராப்ய வைலஷண்ய ஜ்ஞாநத்தையும்‌, 

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1—இஸ் ஸுந்தர்யத்திலே மூட்டின நீங்களே மீட்கப் பார்க்கிற படி எங்கனேயோ –நீங்கள் கற்பித்தது பலிக்கப் பூக்கவாறே பொடியும் இத்தனையோ –-நீர் -என் பிரகிருதி அறியும் நீங்கள் –என்னை முனிவது-என்னுடைய பிராவண்யத்துக்கு அடியான நம்பியுடைய வடிவு அழகை அன்றோ இன்னாதாவது -உங்களையும் மறந்து -என் ப்ரக்ருதியையும் மறந்தால் விஷயத்தையும் மறக்க வேணுமோ-முனிவது–எங்ஙனேயோ-கொண்டாட வேண்டும் தசையில் போடுவது எங்கனேயோ

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-நாங்களும் நம்பியை அனுபவித்தே ஸ்த்ரீத்வம் கெடாமல் இருக்கிறி லோமோ -எங்களுடைய ஹித வசனம் கேளாதே மறு மாற்றம் சொல்லுகை போராது காண் என்ன -என் நெஞ்சு போலே அதி பிரவணமான நெஞ்சை யுடையீராய் அனுபவித்து அறியுங்கோள்–என்னை பொடியாதே -என் நெஞ்சை யுடையீராய் காணப் பெறுமன்று-பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே-என்று உங்களை நீங்களே பொடிவுதி கோள்-என் நெஞ்சை இரவலாக வாங்கிக் காண மாட்டி கோளோ-என்னை பொடியாதே –மாயாம் ந சேவே

காணாதது காண்பாருக்கு-அதாவது-செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின்–திருவாய் -10-7-1- -என்று கவிகளாய் -கூர்க்கக் காணும்-அவர்கள் ஆகையாலே புறம்பு ஒருவர் காணாததும் காண வல்லவர்களுக்கு –-கண் மாறும் இடம்,-அதாவது அவன் சீல குணத்திலே கண் வையாதே கொள்ளும் கோள் என்று -கண் மாறும் இடமும் —

(காணாதது காண்பார்க்குக்‌ கண்மாறுமிடம்‌) “ஸர்வம்‌ ஹ பஸ்ய: பஸ்யதி” என்று ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரிக்குமவர்களாகையாலே ஸீலகுணம்‌ பாதகம்‌ என்றறியாதே இதிலே இழியில்‌ செய்வதென்னென்றஞ்சி தாம்‌ அதிலே ஈடுபட்டவராகையாலே அந்த ஸீல குணத்திலே கண் வையாதே கொள்ளுங்கோள்‌ என்று கண்‌ மாறுமிடத்தையும்‌-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1–செவ்விய சொல்லை யுடைய கவிகாள் -கவிக்குச் செவ்வை யாகிறது -அநந்ய பிரயோஜனமாய் இருக்கை -பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர் –
உயிர் காத்து ஆட்செய்மின் -உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள் -கவி பாட்டு வாசிகமான அடிமை யாகையாலே –ஆட் செய்ம்மின் -என்கிறார் –ஆட் கொள்வான் ஒத்து என்னாருயிர் யுண்ட மாயன் -என்கிறபடி அடிமை கொள்ளுவரைப் போலே புகுந்து இத்தலையை அழிக்குமவனாய்த்து–பரிஹரித்துக் கொள்ளுங்கோள் -ஆழங்காலிலே இழிந்து அமிழுமவர்கள் அவ்விடத்திலே கொண்டைக் கால் நாட்டுமாப் போலே –வம்மின் புலவர் -என்று முதலிலே ருசி இல்லாதாரையும் அழைக்கிற இவர் சீலாதி குணங்களில் அழுந்தி -இழிகிறவர்களையும் வேண்டா என்கிறார் இறே ப்ரீதி பிரகரஷத்தாலே –

ராகாந்தகனுக்கு ( ஆசையால் கண் மூடப்பட்டவனுக்கு )-அதாவது-தம் பக்கத்தில் ராகத்தால் முன்னடி தோற்றாமையாலே த்யாஜ்ய தேக தோஷம் காண மாட்டாதவனுக்கு-மங்க ஒட்டு உன் மா மாயை–திருவாய் -10-7-10- -என்று பிரகிருதி தோஷம் இவர் தர்சிப்பிக்குமவை என்கை .

(ராகாந்தனுக்கு மாயா தோஷம்‌) இவர் பக்கல்‌ உண்டான வ்யாமோஹத்தாலே முன்னடி தோற்றாதே இவர்க்கு த்யாஜ்யமான தேஹ தோஷத்தில்‌ கண் வைக்க அறியாதவனுக்கு “மங்கவொட்டுன்‌ மா மாயை (திருவாய்மொழி 10-7-10) என்று ப்ரக்ருதிதோஷத்தையும்‌ (இவர்‌ காட்டுமவை) இவர்களுக்கு இவர்‌ தர்ஸிப்பிக்குமவை இவ் வர்த்த விஸேஷங்கள் என்கிறார் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10—தாம் அர்த்திக்கச் செய்தேயும் தம்முடைய பிரக்ருதியால் உண்டான தேகத்தில் சங்கத்தால் எம்பெருமான் தம் வார்த்தையை ஆதரியா விட்டவாறே –சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –

ஆனால் அஜ்ஞருக்கு உபதேசிக்குமா போலே இவர்கள் எல்லாருக்கும் பலகாலம் உபதேசிப்பாரோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் —ஆனால்‌ அஜ்ஞர்களுக்கு உபதேஸிக்குமா போலே இவர்களெல்லார்க்கும்‌ எப்போதுமொக்கவும்‌ உபதேஸிப்பரோ என்னில்‌, 

சாதன சாத்யஸ்த மத்யஸ்தரை விட்டு அவற்றில் கலங்கும் ஜீவேஸ்வரர்க்கு-வீடுமின்
நினைமின் பிடித்தேன் விடுவேனோ வைத்தெழ ஊதுவாடி நிற்க கன்மமன்று ஆன்பின் கை கழியேல்
உழி தராய் என் சொற் கொள் என்று இவர் பல காலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர் -சூரணை -198–

(சாதன சாத்யஸ்தர்களாகிய மத்யஸ்தரை விட்டு அவற்றில் கலங்கும் ஜீவ-ஈஸ்வரர்களுக்கு -இவர் பல காலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர்)

சாதன சாத்யஸ்த மத்யஸ்தரை விட்டு-அதாவது-சாதன சாத்தியங்கள் கைபட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டியது அல்பம் ஆகையாலே – சாதனஸ்தராகவும் சாத்யஸ்தராகவும் , நடுவு சொன்ன ஞானிகளும் -ஞான விசேஷ யுக்தருமாகிய -அவர்கள் இருவரையும் விட்டு–அவற்றில் கலங்கும் ஜீவர்கட்க்கு
அதாவது-கர்ம பரவசராய் -சாதன சாத்தியங்கள் இன்னது என்று அறியாதே -கலங்கி நிற்கிற சம்சார சேதனருக்கு –-வீடு முன் முற்றவும்–1-2–என்று தொடங்கி –சுனை நன் மலர் இட்டு நினைமின் நெடியானே -10-5–என்னும் அளவும் – த்யாஜ்ய உபாதேயங்களை -பல படியாலும் உபதேசிக்கையாலும் –

(ஸாதந ஸாத்‌ய மத்‌யஸ்த்தரைவிட்டு] ஸாதந தஸையிலும்‌ ஸாத்‌ய தஸையிலும்‌ நிற்கிறவர்களாய்‌ அஜ்ஞருக்கும்‌ ஸர்வஜ்ஞனுக்கும்‌ நடுவே சொல்லப்பட்ட முமுஷுக்களுக்கும்‌ நித்ய முக்தர்க்கும்‌ காதாசித்கமாக உபதேஸித்துவிட்டு, (அவற்றில்‌ கலங்கும்‌ ஜீவேஸ்வரர்களுக்கு) அந்த ஸாதந ஸாத்‌யங்கள்‌ இன்னதென்று அறியாதே கலங்குகிற ஸம்ஸாரி சேதநர்க்கு (வீடுமின்‌ நினைமின்‌) “வீடுமின்‌ முற்றவும்‌“(திருவாய்மொழி 1-2-1 என்று பகவத் வ்யதிரிக்த ஸமஸ்தங்களையும்‌ விடுங்கோள்‌ என்று உபக்ரமித்து ‘சுனை நன்மலரிட்டு நினைமின்‌ நெடியானே (திருவாய்மொழி 10-5-10) என்று புஷ்பாத்‌ யுபகரணங்களைக்‌ கொண்டு அபரிச்சேத்‌ய ஸ்வரூபனான ஸர்வேஸ்வரனை த்ரிவித கரணங்களாலும்‌ ஆஸ்ரயியுங்கோள்‌ என்கிறது முடிவாகவும்‌ ஸம்ஸாரிகளுக்குப்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்களைச்‌ சொல்லுவர்‌.

வீடு முன் முற்றவும்–1-2–எல்லாரையும் திருத்தி யாகிலும் அவர்களோடு எம்பெருமானை அனுபவிப்போம் என்று நினைத்து – அவர்களைத் திருத்தும் விரகு எங்கனே என்று பார்த்து அருளி சேதனர் ஆகிறார் -பொல்லாது கண்டால் கை விடவும் -நல்லது கண்டால் கைக் கொள்ளவும் கடவராய் இருப்பர்-ஆன பின்பு சம்சாரத்தின் தன்மையைக் காட்டியும் பகவத் விஷயத்தின் நன்மையைக் காட்டியும் திருத்துவோம் என்று பார்த்து அருளி இவர்களுக்கு சம்சாரத்தின் உடைய அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும் சர்வராலும் ஸ்ப்ருஹணீயனான எம்பெருமான் படியையும் உபதேசித்து அருளி அவனை பஜியுங்கோள்-என்று பக்தி யோகத்தை அருளிச் செய்கிறார் –

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10—திரு மந்த்ரத்தைச் சொல்லி அழகிய மலர்களைக் கொண்டு அவன் திருவடிகளில் பரிமாறி அவனை ஸ்நேஹ யுக்தமாக நினையுங்கோள் என்று கொண்டு பக்தி யோகத்தை முடிக்கிறார் –ஸ்ரீ யபதி யாகையாலே ஸ்வாராதன் -நீங்கள் இதிலே இழியவே விரோதி வர்க்கம் தானாகவே போம் –-இப்படி தன்னோடு பரிமாறுவார்க்கு ஸூலபனாம் -அதில் இழி யும் இடத்து அதிகாரம் சம்பாதிக்க வேண்டா –-ருசியே அமையும் -என்றுஉபதேசிக்கையிலே ஒருப்பட்டு-ஈஸ்வரன் தம்மை பரம பதத்தில் கொடு போகையில் முடுகுகிற படியாலும் உபதேசிக்கிற இவர்களுக்கு பிரதிபத்தி விஷயமாகவும் பாசுரம் சுருக்கக் கொண்டு உபதேசித்து இத்தோடே பரோபதேசத்தைத் தலைக் கட்டுகிறர் 

அவற்றில் கலங்கும் ஈஸ்வரனுக்கு-அதாவது-பிரேம பரவசனாய் -சாதன சாத்தியங்கள் இன்னது என்று அறியாதே -கலங்கும் ஈஸ்வரனுக்கு – அயோக்யதா அனுசந்தானத்தாலே இவர் நம்மை விடின் என் செய்வது -என்று அதிசங்கை பண்ணி அலமருகிற அளவிலே –-உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே -2-6-1–என்றும் ,-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -2-6-10–என்று –-மாஸூ ச- என்பது
வைத்து எழ ஊது-அதாவது தோகை மா மயிலார்கள் –செவி ஓசை வைத்து எழ ஆகள் போக விட்டு குழலூது -6-2-2–என்று சாதன சாத்தியங்களை அறிவிப்பது 

(பிடித்தேன்‌ விடுவேனோ இத்யாதி ) (ஈஸ்வரனுக்கும்‌) பல காலும்‌ ஹிதாஹிதங்‌களைச்‌ சொல்லுவர்‌. இவர்‌ இவ்வளவிலே அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி யகலப்புகில்‌ செய்வதென்‌ என்று அதிஸங்கை பண்ணுகிற ஈஸ்வரனை “உன்னை நான்‌ பிடித்தேன்‌ கொள்‌ சிக்கனவே” (திருவாய்மொழி 2-6-1), “உன்னை நான்‌ அடைந்தேன்‌ விடுவேனோ” (திருவாய்மொழி 2-6-10 என்று அவனை மாஸூச:” (கீதை 18-66) என்றும்‌, ‘தோகை மா மயிலார்கள்‌ செவியோசை வைத்தெழ ஆகள்‌ போக விட்டுக்‌ குழலூது’ (திருவாய்மொழி 6-2-2) என்று ஸாதந ஸாத்‌ யங்கள்‌இன்னதென்றும்‌–

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-திருவடிகளை பிடித்தேனாக திரு உள்ளத்தில் கொள்ள அமையும்–மதிப்பன் அல்லன் என்று விடவோ –வடிவில் பசை இல்லை என்று விடவோ-ஸூ லபன் அன்று என்று விடவோ-தேவர் நெகிழ்க்கிலும் நெகிழாத படி பற்றினேன் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10—ச பித்ராச பரித்யக்த –என்று அவர்கள் விடும் அளவிலும் தான் தனக்குப் பார்க்கும் நன்மைகளையும் செய்யுமவனே-இச் சேதனர் அநாதி காலம் தன வி நாசத்தையே சூழ்த்துக் கொள்ள –முகம் தோற்றாத படி நின்று சத்தையை நோக்கி போந்தவன் அல்லையோ –-உன்னை – இப்படி உபகாரகனான உன்னை-நான் அடைந்தேன் விடுவேனோ-உபகார ஸ்ம்ருதியை உடையேனான நான் கிட்டப் பெற்ற இனி விடுவேனோ –

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2—பசுக்களை கை கழிய விட்டு குழல் ஊது-கண்டாருக்கு பசு மறிக்க குழல் ஊதுகிறாய் -அதுக்கு ஸ்வாபதேசம் -பெண்களை அழைக்கை யாக குழலூது -செவியோசை வைத்து எழுகை பலமாய் குழலூதுகை உபாயமாய் இருந்தது -அதுதான் அபிமத விஷயத்தை பற்றவன்றோ செய்வது -இங்கே இருந்து ஊதுகிறேன் -என்று குழலை வாங்கி ஊதினான் –போயிருந்தே குழலூது -ஒன்றைச் சொல்ல ஒன்றைச் செய்கிறது என் -உனக்கு அபிமதைகள் திரளுகைக்கு நீர் வாய்ப்பான நிலங்களில் போயிருந்து ஊதாய்-

வாடி நிற்க-அதாவது-மழறு தேன் மொழியாளர்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் குழறு பூவையோடும் கிளியோடும் குழ கேல் -6–2-5- என்றும் –கன்மம் அன்று-கன்ம மன்று எங்கள் கையில் பாவை பறிப்பது -6-2-8–என்றும் –-ஆன் பின் கை கழியேல்-அதாவது-ஆன் பின் போகல் -10-3-8–என்றும் –
என் கை கழி யேல் –10-3-8–என்றும் அக்ருதங்களை செய்யாதே கொள் என்பது –-உழி தராய்-அதாவது
நீ உகக்கும் நல்லவரோடும் உழி தராய் -10-3-8–என்றும்-அவத்தங்கள் விளையும் என் சொற் கொள் -10-3-10–என்றும்-கிருத்யங்கள் ஆனவற்றை செய் என்பதாய் —

 மழறுதேன்‌ மொழியார்கள்‌ நின்னருள்‌ சூடுவார்‌ மனம்வாடி நிற்க என்‌ குழறு பூவையொடும்‌ கிளியோடும்‌ குழகேலே (திருவாய்மொழி -6-2-5) என்றும்‌ “கன்மமன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது” (திருவாய்மொழி 6-2-8) என்றும்‌ ஆன் பின்‌ போகேல்‌” (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ “என்‌ கை கழியேல்‌ (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ (இப்படி அக்ருத்யங்களைச்‌ செய்யாதே கொள்ளென்றும்‌, நீயுகக்கு நல்லவரொடும்‌ உழி தராயே” (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ அவத்தங்கள் விளையும்‌ என்‌ சொற் கொளந்தோ” (திருவாய்மொழி 10-3-10) என்றும்‌ ஈஸ்வரனுக்குப்‌ பல காலும்‌ ஹிதா ஹிதங்களைச்‌ சொல்லுவர் —

கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.
–6-2-5-மழறு தேன்-மழலைத் தேன் -கலங்கின தேன் போலே இருந்துள்ள பேச்சு அழகை யுடையவர்கள் -ஆரோ என்றவாறே நீங்களே என்றோ எங்கள் தங்கள் தலையிலே ஏறிடப் புகுகிறானோ என்று நின்னருள் சூடுவார் -என்கிறார் –உன் உகப்புக்கு இலக்கானவர்கள் ஆஸ்ரயம் அழிந்த தளிர் போலே நெஞ்சு வாடி நிற்க –அதாவது -மாசறு சோதி தொடங்கி-நெடுக்கப் பிரிவாலே நோவு பட்டு முடியவும் பெறாதே -சம்ச்லேஷிக்கவும் பெறாதே இருக்கிற என்னைப் போல் அன்றியே அனிச்சம் பூ போலே இருக்கிறவர்கள் –நெஞ்சு உலர்ந்து நிற்க இங்கு இராதே போ என்று பேசாது இருந்தாள்-உன் பேச்சிலும் இவைகள் பேச்சு அன்றோ எனக்கு தாரகம் -என்று இவளுடைய பூவையையும் கிளியையும் கொண்டாடத் தொடங்கினான் -சிலரை ஆதரிக்கை யாவது -அவர்கள் உடைமையை ஆதரிக்கை இறே-எம்-குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–
பாவி எங்களது காண் இவை நீ நினைக்கிற வவர்களவை அல்ல -குழறு பூவை-அ ந ஷர சரசமாகப் பேசுகையாலே -கலங்கின உனக்கு தெளிய வார்த்தை சொல்ல வல்லவையும் அன்று -அவற்றோடு
குழகேலே.–செறியாதே கொள்-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7—எங்கள் கையில் பாவையை பறிப்பது கார்யம் அன்று -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை –எங்கள் அனுமதி இல்லாமையால் பறிக்கப் போகாது –தன்னுடைய சக்தி கொண்டு அழிக்கலாவது எதிரிகள் ஆகில் இ றே-அபலைகள் கையில் அத்தை பறிக்க சக்தன் அல்லனே -ஒரு கலத்தில் உண்பாரை போலே அவர்கள் கையிலும் தன் கையிலும் இருக்குமாகில் இறே பிரயோஜனம் உள்ளது -பிரயோஜனம் இல்லாமையே அன்று -உனக்கு குண ஹானியாய் வரும்-

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8—என் கை கழியேல்--நான் அணைத்த கைக்கு உள்ளே இருக்கப் பார் -இவர்கள் சொல்லுவது கேட்க்கைக்காக ஏக தார விரதனோ நான் -என்ன – உனக்கு அபிமதைகள் ஆனாரோடு கலக்க வேண்டா என்கிறேன் அல்லேன்–அவர்களோடே என் முன்னே சஞ்சரியாய் -என்ன – அவர்களை அழைத்து தருவார் வேண்டாவோ என்ன -உனக்கு குறை யுண்டோ -தூது செய் கண்கள் இருக்க -என்கிறாள் –நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-வடிவு அழகும் பருவமும் ஒழியவே நீ உகந்த நன்மையை யுடையவர்கள் -அவர்களோடு கூட என் கண் வட்டத்தில் சஞ்சரிக்க அமையும்-

இப்படி பல இடங்களிலும் உபதேசிக்கையாலும் – பிரதம சரம யுக்தரான -அஜ்ஞா சர்வஜ்ஞர்களுக்கு- பலகாலங்கள் ஹிதாஹிதங்கள் சொல்லுவார் என்ற படி —

சாதன சாத்தியங்களில் கலங்கும் ஈஸ்வரனுக்கு என்று உபக்ரமித்து ,-பிடித்தேன் விடுவேனோ வாடி நிற்க -இத்யாதிகளை எல்லாம் அருளிச் செய்வான் என் என்னில் – சாதன சாத்யஸ்தரை சொன்னதுக்கு பிரதி கோடியாக அவற்றில் கலக்கம் ஜீவ ஈஸ்வரர்களுக்கு – இருவருக்கும் ஒரோ வழிகளால் உண்டு என்று தர்சிப்பதைக்கு சொன்னது இத்தனை ஒழிய , மேல் சொல்லுகிற ஹிதாஹிதங்கள் எல்லாம் அவ் இரண்டு விஷயமாகவே இருக்க வேணும் என்கிற நிர்பந்தம் இல்லாமையால் விரோதம் இல்லை-

ஜீவ விஷயமான உபதேசம் தன்னிலும் அர்த்த பஞ்சகமும் உபதேசிக்கையாலே -அவை இரண்டுமே இருக்க வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை இறே -அங்கன் இன்றிக்கே – ஜீவ விஷயமான உபதேசத்திலும் –வீடு முன் முற்றவும் பக்தி ரூப சாதன உபதேச பரமாகையாலும் –-கண்ணன் கழலினை -பக்தி மான்கள் பரிமாற்றம் இருக்கும் படி உபதேசத்திதது ஆகையாலும் ,-நடுவு உள்ள உபதேசத்தை ஆராய்ந்தாலும் –பக்தி பிரபத்தி ரூப சாதன உபதேசமும் , பகவத் அனுபவ கைங்கர்ய ரூப சாத்திய உபதேசமும் -பிரசுரமாய் பிராப்யமான பர ஸ்வரூபத்தையும் – ப்ராப்தாவான பிரத்யக் ஆத்மா ஸ்வரூபத்தையும் – பிராப்தி விரோதி யுமையுமே உபதேசித்தவை ..-இந்த சாதன சாத்தியங்களுக்கு ஊன்றவைக்கு உடலாகையாலே ..ஏதஸ் சேஷமாய் அறுகையாலும் , சாதன சாத்தியங்களில் கலக்கம் தீர்க்கையே உபதேசதங்களுக்கு பிரதானம் என்று ஒருங்க விட்டு-

ஈஸ்வர விஷயமான உபதேசமும் – சாதன சாத்திய விஷயங்களில் கலக்கம் தீர்க்கையைப் பற்ற என்றே கொள்ள வேணும் ஆகில் – பிடித்தேன் –விடுவேனோ -என்றிரண்டும் -தனக்கு சாத்திய பூதரான இவரோடு வந்து சம்ஸ்லேஷித்து பெறாப் பேறு பெற்றானாய் இரா நிற்கச் செய்தே – இவர் அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலில் செய்வது என் -என்று அதிசங்கை பண்ணை அலமாக்கிறத்தை நிவர்திப்பிக்கைகாக சொன்னவை ஆகையாலே – சாத்திய விஷயமான கலக்கத்தை தெளிவிக்கைக்கு சொன்னவை ஆகலாம் .. சாத்தியத்தில் கலக்கம் ஆவது -சாத்தியம் இன்னது என்று கலங்குகை ஆனாலும் – சாத்திய வஸ்து விஷயமான கலக்கம் என்கிற மாத்ரத்தைக் கொண்டு -இப்படி யோஜித்தால் வரும் விரோதம் இல்லை

வைத்து எழ ஊது –என்கிற இது -தனக்கு அபிமத விஷயங்களை பிரிந்து -கண்ணாம் சுழலை இட்டு-
அதஸ் மிம்ஸ் தத் புத்தி பண்ணி தங்கள் குழலை கொண்டாடினாக கருதி-நாங்கள் அவர்கள் அல்லோம் காண் -அவர்கள் பக்கல் போ -என்கிற நினைவாலே-தோகை மா மயிலார்கள் செவி ஓசை வைத்து எழ -என்று சாத்தியத்தையும் — ஆகள் போக விட்டு குழலூது -என்று சாதனத்தையும் அவனுக்கு அறிவிக்கையாலே – உபயத்திலும் கலங்கின அவனுக்கு சொல்லுகிறது என்னும் இடம் சம்பிரதிபன்னம்-வாடி நிற்க -என்கிற இது மழறு தேன் மொழியார்கள்-என்று தொடங்கி -உனக்கு அபிமதைகள் ஆனவர்கள் – உன்னைப் பிரிந்து உறாவிக் கிடக்க -உனக்கு உபேஷா விஷயமான –
எங்கள் பூவை கிளிகளோடே கலந்து பேச்சு கொள்ளாதே கொள் -என்கிறது ஆகையாலே –
சாதயத்தில் கலக்கம் கண்டு சொன்னதாம் இது –கன்ம மன்ற
-என்ற இது -தங்களோடு இட்டீடு கொண்டு ,தங்கள் அபிசந்தையைக் குலைத்து – தங்களை வசீகரிக்கைக்கு சாதனமாக நினைத்து -தங்களுக்கு நிஷ்டம் என்று அறியாமல் – கையில் பாவையைப் பறிக்கும் அவனை குறித்து -உனக்கு இது கார்யம் அன்று இது -என்கையாலே – சாதனத்தில் கலக்கம் கண்டு சொன்னது ஆகலாம்ஆன் பின் போகல் கை கழி யேல் -என்ற இது பசு மேய்க்க போன இடத்தே -தனக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும் பிரிவாற்றாமலும் இத் தலை படுகிற கிலேசம் அறிந்தால் பிரியாதே –இத்தலையோடு கூடி இருக்கை புருஷார்தமாய் இருக்க –ஜாதி உசித தர்மம் என்கிற மாத்ரமே கொண்டு -பசு மேய்க்க போக ஒருப்படுகிறவனைக் குறித்து – ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகல் -என்றும் – கலவியும் நலியும் என் கை கழி யேல் –என்றவை ஆகையாலே – சாத்தியத்தில் கலங்கினவனுக்கு சொல்கின்றவை ஆகலாம் —உழி தரு –என்கிற இது –வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி –என்று வசிகர சாதனத்தையும் –உகக்கும் நல்லவரோடு உழி தரு -என்று அபிமத விஷய சம்ஸ்லேஷமாகிற சாத்தியத்தையும் – அவை அறியாமல் நிற்கிற இவனுக்கு அறிவித்த தாகவே இருக்கிறதுஎன் சொற் கொள் –என்கிற இது —பசு மேய்க்க போக வேண்டா என்று விலக்குகிறது .. நமக்கு ஒரு தீமை வாராமைக்காகா என்று அறியாதே – பரிவையான தன் வார்த்தையை அநாதிக்கிறவனைக் குறித்து – அவத்தங்கள் விளையும் என் சொற் கொள் -என்றது ஆகையாலே
இதுவும் சாத்தியத்தில் கலங்கினவனுக்கு சொன்னதாக கொள்ளலாம்
—ஆன பின்பு -இவற்றில் கலங்கும் ஈஸ்வரனுக்கு பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர் – என்றதுக்கு அனுகுணமாக இச் சந்தைகளுக்கு எல்லாம் இப்படி யோசித்தாலும் குறை இல்லை

இப்படி இவர்கள் இருவருக்கும் பலகாலம் உபதேசிகைக்கு ஹேது ஏது என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் .-ஆனால்‌ இருவர்க்கும்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லுகைக்கு ஹேது என்னென்னில்‌, இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ என்கிறார்‌.-

கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது பிரேமத்தாலே — தமஸ் மூடுவாருக்கு வேட்கை எழுவிப்பது ஞானத்தாலே-சூரணை -199-

கதிர் ஞான மூர்த்திக்கு-உணர்த்துவது பிரேமத்தாலே-அதாவது-பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய்–திருவாய்-6-2-8–என்று சம்ஹ்ருதி சமயத்தில் சகல சேதன அசேதனங்களையும் ஒக்கக் கலசி —
சிருஷ்டி சமயத்தில் ஒருவர் கர்மம் ஒருவர் இடம் கலசாத படி – பிரித்த இடத்திலும் தன் ஸ்வரூபத்துக்கு ஒரு பேதம் இன்றிக்கே – அத்வீதியமாய் -அபரிசேத்யமான கீர்த்தி சமுத்ரத்தை உடைத்தாய் இருக்கிற
பிரபா ரூபமான ஜ்ஞானத்தை வடிவாக உடையவன் ஆகையால் சர்வஜ்ஞ்ஞனாய் இருக்கிறவனுக்கு –
உனக்கு ஓன்று உணர்த்துவன்–திருவாய்-6-2-5- -என்று உபதேசிகிறது —தத் விஷய பிரேமத்தாலே .-

(கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே) ‘பிணக்கி யாவரும்‌ யாவையும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர்‌ கணக்கில்‌ கீர்த்தி வெள்ளக்‌ கதிர்ஞான மூர்த்தியினாய்‌’ (திருவாய்மொழி 6-2-8) என்று ஸம்ஹார காலத்திலே ஸர்வத்தையு மொக்கக்‌ கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம்‌ ஒருவர்க்குத்‌ தட்டாதபடி பிரித்து யுகபதேவ ஸாக்ஷாத்கார ஸமமாய்‌ விஸத தமமான ஜ்ஞானத்தை உடையவனாகையாலே ஸர்வஜ்ஞனாயிருக்கிறவனுக்கு “உனக்கொன்று உணர்த்துவன்‌” (திருவாய்மொழி 6-2-5) என்று ஹிதாஹிதங்களைச்‌ சொல்லுகைக்கடி அவன்‌ பக்கலிலே ப்ரேமத்தாலே.

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!

இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8—சேதன அசேதனங்களை தேவாதி விபாகம் அற்று-தம ஏகி பவதி-என்று தன்னோடே அவி பக்தமாம் படி கலசி -ஸ்ருஷ்ட்டி காலத்தில் ஒருத்தன் கர்மம் வேறு ஒருத்தன் அனுபவியாத படி -பேதித்தும் -ஸ்ருஷ்ட்டித்தும் என்றபடி-சம்ஹார காலத்தில் அசித்கதமான சூஷ்ம பரிணாகம் – சேதனகதமான அஞ்ஞானம் –ஸ்ருஷ்ட்டி காலத்தில் அசித் கதமான ஸ்வரூப அந்யதா பாவம் -சேதனகதமான ஸ்வ பாவ அந்யதா பாவம் -ஆக இப்பேதங்கள் ஒன்றும் இன்றிக்கே ஏக ரூபமாய் ஏக ரூபமாய் அத்விதீயமாய் அனவதியான ஏக ரூபத்வம் ஆகிற கீர்த்தி சமுத்திரத்தை யுடையையாய் பிரபா ரூபமான சங்கல்ப ஞானத்துக்கு ஆஸ்ரயமானவனே-இத்தால் விஸ்லேஷ தசையில் கலக்கமும் சம்ச்லேஷ தசையில் போக ரூப விக்ருதியும் இன்றிக்கே ஏக ரூபன் என்கை-

கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5—வார்த்தை மூட்டி நிருத்தரனாய் நின்றான் -இவனை உண்டாக்கி கார்யம் கொள்ள வேணும் என்று பார்த்து உனக்கு ஒரு ஹிதம் சொல்லக் கேள் –கலங்கின உன்னைத் தெளியும் படி வார்த்தை சொல்லக் கேள் என்ன -அவனும் -இது ஒரு பேச்சில் இனிமை இருந்த படி என் -என்றான் -இவள் சொல்லும் அர்த்தத்தில் தாத்பர்யம் இல்லையே அவனுக்கு

தமஸ் மூடுவாருக்கு-வேட்கை எழுவிப்பது ஞானத்தாலே-அதாவது-கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக கொள் என்று தம மூடும்-திருவாய்-4-9-4- -என்று ஐஸ் வர்யம் விநாச ஹேதுவாக காணா நிற்கச் செய்தே பின்னையும் அத்தை ஸ்வீகரிக்கும் படி தமோ அபிபூதராக நிற்கும் சம்சாரிகளுக்கு –-நின் கண் வேட்கை எழுவிப்பன்–திருவிருத்தம்-76–என்று தம் உபதேசத்தாலே பகவத் பக்தியை ஜனிப்பிக்கிறது .. தத் சம்பந்தம் அடியாக அவர்களை விடமாட்டாதே திருத்தி தம்மோபாதி பகவத் அனுபவ பரராக்க வேணும் என்கிற ஞானத்தாலே என்கை-

(தமமூடுவார்க்கு வேட்கை யெழுவிப்பது ஜ்ஞானத்தாலே) “கொள்ளென்று தமமூடும்‌” (திருவாய்மொழி 4-9-4) என்று தமோபி பூதராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு “நின் கண்‌ வேட்கை எழுவிப்பனே ‘ (திருவிருத்தம்‌ 96) என்று பகவத் பக்தியை உபதேஸிக்கிறது பகவத் விமுகரான இவர்களும்‌ நம்மைப் போலே பகவதநுபவம்‌ பண்ண வேணுமென்கிற ஜ்ஞானத்தாலே என்கிறார் –

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்
; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4–இவன் அர்த்தியாது இருக்க தானே -என்னைக் கொள் என்னைக் கொள் என்று மேல் மேல் எனக் கிளர்ந்து வருகிற நிரவதிக சம்பத்தானது –
நெருப்பாகக் நிச்சேஷமாக நசிக்க -என்னுதல் -தனக்கு விநாச ஹேதுவாக -என்னுதல்-கொள் என்று தமம் மூடும்;-இவை விநாச ஹேது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் பிறர் கொள் என்று பிரேரித்த வாறே தம அபிபூதனாய் துராசையாலே முன்பு விநாச ஹேது வானத்தை விரும்பும் கொள் என்று பிரேரிக்கிறது மனஸ் ஆகவுமாம்

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே
 – -96 –வணங்குந் துறைகள் பலபல ஆக்கியிருந்தாலும் ப்ரபத்தி மார்க்மொன்றையே பரவச் செய்வேன்;-மதிவிகற்பாற் பிணங்குஞ்சமயம் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீவைஷ்ணவ சமயமொன்றையே பரவச் செய்வேன்;-அணங்கும் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீமந்நாராயண ரூபியான நின் வடிவத்திலேயே பக்தியை நிகழ்த்துவேன் -ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து – அவர்கள் தங்கள் அறிவு கெட்டு-இன்பம் அனுபவியாதபடி -பண்ணி – எல்லாரும் என்னைப் போலே உன் பக்கலிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் –இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –நீ கை விட்டாலும் நான் கை விடவோ – அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –

இப்படி ஞான பிரேமங்கள் இரண்டும் காரணமாக சொல்லுவான் என் –-பர துக்க அசஹிஷ்ணுத்வம் அன்றோ பர உபதேசத்துக்கு பிரதான காரணம் என்ன அருளிச் செய்கிறார் மேல் .-இவர்களளவில்‌ இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ இரண்டாலும்‌ பர துக்கம்‌ ஸஹியார்‌ என்னுமிடம்‌ சொல்லுகிறது மேல்‌.

உயிர் மாய்தல் ஆழும் என் ஆர் உயிர் என்னும் பர துக்கம் சஹியாமை இரண்டிலும் உண்டு-சூரணை -200-

(உயிர் மாய்தல்-என்னும் பர துக்கம் சஹியாமை-ஞானத்திலும் உண்டு –ஆழும் என் ஆர் உயிர் என்னும் பர துக்கம் சஹியாமை பிரேமத்திலும் உண்டு )

உயிர் மாய்தல்-என்னும் பர துக்கம் சஹியாமை-அதாவது- கொண்டாடும் குலம் புனைவும் -என்று தொடங்கி- தமர் உற்றார் விழு நிதியும் வண்டார் பூங்குழலாலும் மனை ஒழிய உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன் -என்று சம்சாரிகள் பாரிக்கிற பாரிப்பும் -முடிந்து போகிற படியும் -கண்டு ஆற்ற மாட்டுகிறிலேன் என்கையாலே பரருடைய துக்கம் சஹியாமையும் –ஆழும் என் ஆர் உயிர் என்னும் பர துக்கம் சஹியாமை--அதாவது-அசுரர்கள் தலைப் பெய்யில் எவம் கொல் ஆங்கு ஆழும் என் ஆர் உயிர்-திருவாய் -10-3-8- -என்று அசுரர்கள் வந்து கிட்டினால் -அங்கு என்னாய் விளையுமோ என்று -என் ஆத்மாவானது தரைப் படா நின்றது என்கையாலே – பரனான -ஈஸ்வரனுடைய துக்கம் சஹியாமையும் –இருவருக்கும் உபதேசிகைக்கு ஹேதுவான சொன்ன ஞான பிரேமங்கள் இரண்டிலும் என்கை ..
இத்தால் ஞான பிரேமங்கள் இரண்டும் பர துக்க அசஹிஷ்ணுவத்தை ஒழிந்து இராது என்றது ஆய்த்து .

உயிர்மாய்தல்‌ கண்டாற்றேன்‌” (திருவாய்மொழி 4-9-3) என்று ஸம்ஸாரிகள்‌ துக்கம்‌ ஸஹியாமையும்‌, “அசுரர்கள்‌ தலைப்பெய்யில்‌ எவன் கொலாங்கு என்றாமுமென்னாருயிர்‌’ (திருவாய்மொழி 10-3-8) என்று அசுரர்கள்‌ ஒன்றாக வந்து கிட்டினார்களாகில்‌ அங்கென்னாய்‌ விளைகிறதோ என்று என்‌ ஜீவனானது தரைப்படா நின்றதென்கையாலே பரனான ஈஸ்வரனுடைய துக்கம்‌ ஸஹியாமையும்‌ அந்த ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ இரண்டிலுமுண்டு. ஆகையாலே இவையடியாக இருவர்க்கும்‌ உபதேஸிப்பர்‌ என்கிறார் –

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை!
கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3—-சம்சாரிகள் பாரிப்பும் -இவர்கள் முடிந்து கிடக்கும் படியையும் கண்டு என்னால் பொறுக்கப் போகிறது இல்லை –-தாம் பகவத் விஷயத்தில் இருக்கிறாப் போலே சப்தாதி விஷயங்களுடைய லாப அலாபங்களே ஸூ க துக்கங்களாக கொண்டு இருக்கிற ஜந்துக்கள் படுகிற துக்கத்தை அனுசந்தித்து மிகவும் நோவு பட்டு
-தமக்கு எம்பெருமானோடு உள்ள விஸ்லேஷ வியசனத்தை மறந்து இஜ் ஜந்துக்களுடைய துக்கத்தை போக்கும் விரகு ஏது-என்று அதிலே தத் பரராய் சர்வஞ்ஞனாய் சர்வசக்தியாய் -பரம உதாரனாய்-என்றும் எல்லாருடைய ரக்ஷணத்திலே தீஷிதனாய் -சர்வ அபராத ஸஹனாய்- நினைத்தது முடிக்கைக்கு ஈடான சாமர்த்தியத்தை உடைய சர்வேஸ்வரனான நீ உளனாய் இருக்க ஸமஸ்த ஜந்துக்களும் எண்ணிறந்த துக்கங்களாலே மிகவும் நலிவு படும்படியாக -இது ஒரு லோக ஸ்வ பாவத்தை பண்ணும் படியே -விஷண்ணராய்-இவற்றை இங்கனே படுத்தி அருள ஒண்ணாது -இவர்களை நிர் துக்காராம் படி பண்ணி அருளுதல்

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8—யதா சங்கல்பம் நீ வெற்றியோடு மீண்டாலும் -அதுக்கு முன்னே நான் தறைப் படுவன் -நான் உனக்கு வேண்டாவோ -என்கிறாள் –ஆழும் என்னார் உயிர் -அழுந்தும் -அதுக்கு நம்மால் செய்யலாவது என் -என்ன –ஆன் பின் போகல்-பசுக்கள் பின்னே போகாதே கொள்–

இப்படி பிரேம மாத்ரத்தால் அன்றிக்கே – ஈஸ்வரன் நினைவாலே -அவனுக்கு தாம் ஆத்மா பூதர் ஆகையாலும் –அவனுக்கு தீங்கு வரப் பொறுக்க மாட்டார் என்னும் அத்தை தர்சிப்பிகிறார் மேல் -இன்னும்‌ இவ்வளவன்றிக்கே ஸ்வ ஸரீரத்திலே ஸர்வர்க்கும்‌ பரிவு நடக்கையாலே அவனுக்கு ஆத்ம பூதரான இவர்‌ அவனுக்குப்‌ பரியக் கடவர்‌ என்னுமிடமும்‌ தோன்றும்‌ என்கிறார்‌ மேல்‌.

என்னது உன்னதாவியிலே அறிவார் ஆத்மா என்று அவன் மதம் தோன்றும்–சூரணை -201-

என்னது உன்னதாவியிலே-அதாவது-என்னது உன்னதாவியும் -திருவாய் -4-9-3–என்று உன்னுடைய திவ்ய ஆத்மா ஸ்வரூபம் நான் இட்ட வழக்கு என்ற இடத்தில் –-அறிவார் ஆத்மா என்று–அதாவது-
அறிவார் உயிர் ஆனாய் –என்று-அறிவாரை உயிராக உடையவன் என்னும் படி –-ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் –ஸ்ரீ கீதை -7-18–என்று , ஜ்ஞானி யானவன் எனக்குத் தாரகனாகவே என்னுடைய மதம் என்று அருளிச் செய்த படியே இவரை அவன் தனக்கு ஆத்மாவாகவே நினைத்து இருக்கிற ஆகாரம் தோன்றும் என்ற படி-ஆகையால் அவனுக்கு ஒரு துக்கம் வரப் பொறுக்க மாட்டார் என்று கருத்து .-

“உன்னதென்னதாவி” (திருவாய்மொழி 4-3-8) என்கிற இடத்திலே“ அறிவாருயிரானாய்‌”  (திருவாய்மொழி 6-9-8) என்றும்‌ “ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்‌” (கீதை 7-18) என்று ஜ்ஞாநியானவன்‌ தனக்கு தாரகன்‌; மே மதம்‌, இது க்ருஷ்ண ஸித்‌தாந்தம்‌ என்று அவனுடைய அபிப்ராயத்தாலே இவர் தம்மைத்‌ தனக்கு தாரகராக நினைக்கிற வாகாரம்‌ தோற்றுகையாலும்‌ அவனுக் கிவர்‌ பரியக்‌ குறையில்லை யென்கிறார் –

உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் –என்னும் இந்த திருப் பாசுரத்துக்கு ஸ்ரீ ஆளவந்தார் பொருள் அருளிச் செய்ய கேட்டிருந்த முதலிகளில் சிலர் -இவ்வாத்மாவின் ஸ்வரூபம் பரமாத்மா இட்ட வழக்கு என்னக்கூடும்- பரமாத்மாவின் ஸ்வரூபம் ஜீவாத்மா இட்ட வழக்கு என்பது என் -என்று கேட்க
இவன் தன்னை அவனுக்கு ஆக்குவன் என்ற அன்று கர்மம் தடை செய்யவும் கூடும்-சர்வேஸ்வரன் தன்னை இவன் இட்ட வழக்கு ஆக்கும் அன்று தடை செய்பவர் இலர் –-ஆனபின்பு அதுவே நிலை நிற்பது –மேலும் இவன் ஸ்வரூபம் அவன் இட்ட வழக்கு ஆகக் கூடுமோ -என்று இதிலே காணும் சந்தேகிக்க வேண்டுவது –என்று அருளிச் செய்தார் ஸ்ரீ ஆளவந்தார் )

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8–என்னது ஆவி மேலையாய்!- ஏர் கொள் ஏழ் உலகமும்- என்னைப் பெறுகைக்கு உண்டான அபி நிவேசத்தால் ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் ஒரூரை வளையுமா போலே சர்வகதன் ஆனான் -என்னுதல்-இவரைப் பெற்ற பிரியத்தால் வியாப்திலேயும் ஒரு புஷ்கல்யம் உண்டாயிற்று என்னுதல்-இவரைப் பெறுகையாலே விபூதி த்வயமும் புதுக் கணித்தது-துன்னி முற்றும் ஆகிநின்ற-எங்கும் ஓக்க நெருங்கி வியாபித்து நின்ற நிலை -ஜாதி வியக்தி தோறும் பரி ஸமாப்யா வர்த்திக்குமா போலே –சோதி ஞான மூர்த்தியாய்!–உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;-விசத தமமான-ஞான ஸ்வரூபன் ஆனவனே –என்னுடைய ஆத்மா நீ இட்ட வழக்காய்-உன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபம் நான் இட்ட வழக்காம் படி யானோம்

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8—உன்னைக் கிட்ட முதல் இல்லாத எனக்கு அருளாய் -அறிவு இல்லை யாகில் அருளக் கடவதோ என்ன -சர்வஞ்ஞரான நித்ய ஸூ ரிகளுக்கு கிருபை பண்ணவோ -தளர்ந்த இடம் அன்றோ கிருபைக்கு விஷயம் -பொய் நின்ற ஞானத்தை உடைய எனக்கு ஞானப் பிரானான நீ கிருபை பண்ணி அருளாய்-அறிவார் உயிரானாய்!-உன்னை உள்ளபடி அறிவார்க்கு தாரகனாகை உனக்கு ஏற்றமோ –பத்தராவி என்கிறபடியே அறிவார்க்கு உயிராம் அவன் என்னுதல் –ஞானீத்வாத் மைவ -என்கிறபடியே அறிவாரை உயிராக யுடையவன் என்னுதல்

உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்-
-7-18-மேற் சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் யானாகவே கொண்டுளேன்.-அவன், யோகத்தில் இசைந்து, உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்.

ஆக ஜீவேச்வரர்களுக்கு பல காலும் ஹிதாஹிதங்கள் சொல்லுகைக்கு ஹேதுக்களை தர்சிப்பித்தாராய் நின்றார் கீழ் — இப்படி இவர் உபதேசிப்பர் ஆனாலும் , சிஷ்ய லக்ஷண யோக்யதை இல்லாத ஈஸ்வரன் உபதேசத்துக்கு முக்ய பாத்ரம் அன்றே என்னும் ஆ காங்க்ஷையில் அருளி செய்கிறார் மேல் —

அதாவது – சஸ் சிஷ்யனானவன் ஆச்சர்யனை தத் அபிமத ஸ்தலத்திலே வைத்து – தத் சந்த அனுவர்த்தியாய் – தத் விக்ரகத்திலே புரை அற்ற விருப்பம் உடையவனாய் – சகல சிநேகத்தையும் அவன் பக்கலிலே பண்ணி – தத் இதரங்களிலே சங்கம் அற்று –-மிடியனும் பசியனும் விடாயனும் -தனம் சோறு தண்ணீர் -பெற்றார் போலே – அத்யபிநிவேசத்தோடே அவனை அனுபவித்து
சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத் குருப்யோ நிவேதயத் –விஹகேஸ்வர சம்ஹிதை –என்கிற படியே –
தன் ஆத்மா ஆத்மீயங்களை ஆச்சர்யனுக்கு சமர்ப்பித்து எல்லாம் செய்தாலும் –
க்ருத்ஸ்னாம் வா ப்ருதிவீம் தத்யாத் நதத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே – ஆசார்யன் பண்ணின மகோ உபகாரத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே -குறைவாளனாய் – ஆசார்யன் தன்னுடைய தேக யாத்ரா பரம் எல்லாம் தன் மேலேயே பொகட்டு இருக்க –தான் அது அடங்கலும் சுமந்து – திவாராத்ரா விபாகம் அற-அவனைப் பிரியாதே -அவன் நிக்ரஹித்து போ என்றாலும் போகாதவனாய் —
அவனுக்கு அநிஷ்டம் ஆனால் தனக்கு உகப்பான வற்றையும் விட்டு – ஆசார்யன் விதித்த படியே நடத்தும் அவன் ஆகையாலே

ஆனால்‌ இவர்‌ ஈஸ்வரனுக்கு உபதேஸித்தா ரென்னும்போது அவனுக்கு ஸிஷ்ய லக்ஷணம்‌ உண்டோ என்னில்‌, ஸிஷ்யனானவன்‌ ஆசார்யனை ஓரிடத்திலே வைத்துத்‌ தான்‌ அவனுடைய மநோ ரதமாய்‌ அவன் பக்கலிலே புரை யற்ற ஸ்நேஹத்தைப்‌ பண்ணி,
புறம்புண்டான ஸங்கங்களை விட்டு தரித்‌ரன்‌ நிதி கண்டாப் போலவும்‌ பசித்தவன்‌ சோறு கண்டாற் போலவும்‌ தாஹித்தவன்‌ தண்ணீர்‌ கண்டாப் போலவும்‌ ஆசார்யன்‌ பக்கலிலே அத்யபிநிவேஸத்தைப்‌ பண்ணி “ஸரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத்‌குருப்யோ நிவேதயேத்‌” (விஹகேஸ்வர ஸம்ஹிதை)
என்கிறபடியே தன்னுடைய ஆத்மாத்மீயங்களை ஆசார்ய விஷயத்திலே ஸமர்ப்பித்து, “க்ருத்ஸ்நாம்‌ வா ப்ருதிவீம்‌ தத்‌யாத்‌ ந தத் துல்யம்‌ கதஞ்சந” என்று இவன்‌ எல்லாம்‌ செய்தாலும்‌ ஆசார்யன்‌ பண்ணின உபகாரத்துக்கு ஸத்‌ருஸமில்லாமையாலே குறைவாளனாய்‌ ஆசார்யனுடைய தேஹ யாத்ரைகளெல்லாம்‌ தானே சுமந்து செய்யுமவனாய்‌ ஆசார்யன்‌ நிக்‌ரஹித்தாலும்‌ திவா ராத்ர விபாகமற அவனைப்‌ பிரியாதே அவனுக்கிஷ்டமானால்‌ தனக்குகப்பான வற்றையும்‌ விட்டு ஆசார்யன்‌ நியமித்தபடியே நடக்குமவனே ஸச்சிஷ்யனாகையாலே இந்த லக்ஷணம்‌ ஈஸ்வரன்‌ பக்கலிலே உண்டாகையாலே இவனுக்கே ஸச் சிஷ்ய லக்ஷணமுள்ளதென்கிறார்‌.

இருத்தும் எண் தானாய் பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய் ஷூத் த்ருட்பீடித
நிர்தனரைப் போல் கண்டு கொண்டு உண்டு பருகி பரிஜநாதிகளோடே தன்னைத் தந்து
என் செய்வன் என்றே இருந்து அகில பரத்தையும் சமர்ப்பிக்க அது சுமந்து அல்லு நன் பகலும் போகு
என்றாலும் அகல்வானும் அல்லனாய் போகேல் என்றால் உகப்பையும் தவிர்ந்து விதி வகையே நடத்துமவனே உபதேச சத் பாத்ரம்—சூரணை -202-

(ஷூத் த்ருட்பீடித நிர்தனரைப் போல் கண்டு கொண்டு உண்டு பருகி-அதாவது-ஷூத் பீடிதனைப்-பசி உள்ளவனைப் – போல் உண்டு – த்ருட்பீடிதனைப் -நீர் வேட்கை உள்ளவனைப் – போல் பருகி நிர்தனரைப்-வறியவனைப் – போல் கண்டு கொண்டு -)

எம்பெருமானும் -இருத்தும்–அதாவது–இருந்தும் வியந்து என்னை தன் பொன் அடிக் கீழ் –திருவாய்-8-7-1–என்று இவருக்கு அபிமதமான இடத்தில் இவரை இருத்தி —-எண் தானாய்–என் எண் தானான்-திருவாய்-1-8-7- –என்று இவர் நினைவிலே ஒழுகுவானாய்–பொய் கலவாது–அதாவது-பொய் கலவாது என் மெய் கலந்தான் திருவாய்-1-8–5–என்று இவர் திரு மேனியிலே பண்ணும் விருப்பத்தில் புரை இன்றி இருக்க —

இருத்துமெண்டானாய்‌)இருத்தும்‌ வியந்தென்னைத்‌ தன்பொன்னடிக் கீழ்‌” (திருவாய்மொழி 8-7-1) என்று இவரை ஓரிடத்திலே இருத்தி “என்னெண்டானானான்‌” (திருவாய்மொழி 1-8-7) என்று இவருடைய நினைவு தானாய்‌ (பொய்கலவா தன்பு செய்து) “பொய்கலவாதென்‌ மெய்‌ கலந்தானே” (திருவாய்மொழி 1-8-5) என்று இவர்‌ திருமேனியில்‌ பண்ணின ஸங்கத்திலே ஒரு பொய்யின்றிக்கே-

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1—என்னைத் தன் பொன்னடிக் கீழ் –வியந்து–இருத்தும்-என்று -தன் வாசி அறியாதே சப் தாதி விஷயங்களிலே அந்நிய பரனான என்னை -சிலாக்யமான தன் திருவடிகளின் கீழே –-வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல்லடி இறே-வியந்து -சம்சாரத்தில் நம்மையே அபேக்ஷிப்பான் ஒருவன் உண்டாவதே -என்று விஸ்மயப் பட்டு –ச மஹாத்மா ஸூ துர்லப-என்று கை வாங்கி இருக்குமவன் இறே – ஒரு நாளும் பிரியாத படி இருத்தி அடிமை கொள்ளும் –தன் பொன்னடிக்கு கீழ் என்று ப்ராப்ய ஸ்வரூபம் சொல்லிற்று –இருத்தும் என்று ப்ராபக ஸ்வரூபமும் அவனே என்கிறது –வியந்து –இருத்தும் -தன் பேறாக இருத்தும் –-அருத்தித்து -தன் பேறாக இருத்தும் என்கையாலே –அர்த்தித்தவமும் மிகை -சைதன்ய பிரயுக்தமாக வந்தது அத்தனை

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-தட்பத்தை உடைய தாமம் உண்டு -பரம பதம் -அதில் பண்ணைக் கடவ விருப்பத்தை என் பக்கலிலே பண்ணி தன் விபூதிகனாக என்னை ஆதரித்து என்னவுமாம்–நான் மநோ ரதித்த படியே எனக்கு கை புகுந்தான் என்னுதல் என் மநோ ரதத்தை தான் கைக் கொண்டான் அதாகிறது – மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-என்று
நான் அத்தேசத்தில் அனுபவிக்க எண்ண திரு நகரிலேயே வந்து என்னை அனுபவிக்க எண்ணா நிற்கை

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-வெண்ணெய்யில் பண்ணின விருப்பத்தில் பொய் இல்லாதப்போலே கிடீர் என் உடம்பில் பண்ணுகிற விருப்பமும்-அவன் மேல் விழ-தாம் மேன்மையைக் கண்டு இறாய்க்கிறார் ஆயிற்று-அவன் மேல் விழுகிறதும் இத்தாலே யாயிற்று-இந்நின்ற நீர்மை என்று நான் அநாதரிக்கிற சரீரமும் இவனுக்கு கலக்கைக்கு விஷயம் ஆவதே

அன்பு செய்து-அதாவது-அந்தாமத்து அன்பு செய்து-திருவாய்-2-5-1- -என்று பரம பதத்தில் பண்ணும் வ்யாமோகத்தை இவர் பக்கலிலே பண்ணி —-பற்றிலனாய்--அதாவது-பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றான்-திருவாய்-1-2-6- -என்று இவர் பக்கல் சங்கத்தாலே அங்குள்ளார் பக்கல் சங்கத்தை விட்டு –

அந்தாமத் தன்பு செய்து” (திருவாய்மொழி 2-5-1) என்று பரம பதத்தில்‌ பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர்‌ பக்கலிலே பண்ணி (பற்றிலனாய்‌) “‘ பற்றிலனீசனும்‌” (திருவாய்மொழி 1-2-6) என்று இவர் பக்கல்‌ ஸங்கத்தாலே பரமபதத்தில்‌ ஸங்கத்தையும்‌ விட்டு,-

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி –மஞ்சா க்ரோசந்தி இத்வத்-என்னாவி சேர் –
கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே -உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று
குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் –
அம்மானுக்கு--நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு-இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று –

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவன் நித்ய சம்சாரிகளான நம்மை அங்கீ கரிக்குமோ என்னில் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் நித்ய ஆஸ்ரிதர் பக்கல் சங்கத்தை விட்டு நம்மையே தாரகாதிகளாக நினைத்து இருப்பான் ஒருவன் –
யீசனும் பற்றிலன்--நித்ய ஆஸ்ரிதரை யுடையனாய் இருந்தானே யாகிலும் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் அவர்கள் பக்கல் சங்கத்தை யுடையவன் அல்லன்-த்வயி கிஞ்சித் சமா பன்னே -இத்யாதி
முற்றவும் நின்றனன்-நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்

ஷூத் த்ருட்பீடித நிர்தனரைப் போல் கண்டு கொண்டு உண்டு பருகி(-ஷூத் பீடிதனைப்-பசி உள்ளவனைப் – போல் உண்டு – த்ருட்பீடிதனைப் -நீர் வேட்கை உள்ளவனைப் – போல் பருகி
நிர்தனரைப்-வறியவனைப் – போல் கண்டு கொண்டு )-இருந்தான் கண்டு கொண்டு –திருவாய்-8-7-2–என்றும் –என்னை முற்றவும் தான் உண்டான் -திருவாய்-8-7-2– என்றும் , தான் என்னை முற்றப் பருகினான்-திருவாய்-9-6-10 -என்று சொல்லுகிறபடி நிர் தனன் நிதி கண்டார் போலேயும் – பசித்தவன் சோறு கண்டார் போலேயும் – தாஹித்தவன் தண்ணீர் கண்டார் போலேயும் – அத்யந்த அபிநிவேசத்தோடே இவரை அனுபவித்து –

(ஷூத்‌த்‌ருட் பீடித நிர்த்தநரைப் போலே கண்டு கொண்டுண்டு பருகி) “இருந்தான்‌ கண்டு கொண்டு (திருவாய்மொழி 8-7-2) என்று நிர்தநனானவன்‌ நிதி கண்டாப் போலே கண்டு கொண்டு “என்னை முற்றவும்‌ தானுண்டான்‌” (திருவாய்மொழி 9-6-8) என்றும்‌ “தானென்னை முற்றப்‌ பருகினான்‌ (திருவாய்மொழி 9-6-10) என்றும்‌ சொல்லுகிறபடியே பசி கனத்தவன்‌ சோறு கண்டாப்‌ போலவும்‌ தாஹித்தவன்‌ தண்ணீர்‌ கண்டாப் போலவும்‌ இவரை அபி நிவேஸத்தோடே அநுபவித்து-

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-தரித்ரன் நிதி கண்டால் கண்டு கொண்டே இருக்குமா போலே -பார்த்த படியே இரா நின்றான் -அந்யோன்யம் அபிவிஷந்த்வ நதிருப்திம் உபஜக்மது -என்கைக்கு எதிர்தலையான தம்மை காண்கிறீலர்-இத்தை நினைத்து இறே அர்த்தித்தவம் என்னும் இதுவும் மிகை என்றார் முதல் பாட்டிலே –

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-சம்சாரத்திலே அணு பரிமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது தனக்கு ஏற்றமாம் படி கௌரவியா நின்றான் -சிறிய என்னாருயிர் என்றது -தான் தம்மைப் பார்த்து -அவனுடைய ஆதரத்தைக் கொண்டு சொல்லுகிறார் இது –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10—நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இறே இவருடைய பாரிப்பு – சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இறே
தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –
முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் –வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இறே இவர் பாரித்தது

பரிஜனாதிகளோடே தன்னைத் தந்து-அதாவது–பரிஜன பரிபர்ஹா பூஷணா ந்யாயுதானி ப்ரவர குண கணாச்ச ஜ்ஞான சக்த்யா தயஸ்தே பரமபதம தாண்டான் யாத்மா தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகரத்த –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்–63–என்றும்-எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –திருவாய்-2-7-11–என்றும் -சொல்லுகிற படியே தன் விபூதியையும் தன்னையும் இவருக்குக் கொடுத்து –

பரிஜநாதிகளோடே தன்னைத்‌ தந்து) ‘ பரிஜந பரிபர்ஹா பூஷணநாந்யாயுதாநி ப்ரவர குணகணாஸ்ச ஜ்ஞாந ஸக்த்யாத யஸ்‌தே பரமபத மதாண்டாந்யாத்ம தேஹஸ்‌ ததாத்மா வரத ஸகலமேதத்‌ ஸம் ஸ்ரிதார்த்த,ம்‌ சகர்த்த” (வரத ராஜஸ்தவம்‌ 63) என்றும்‌ “எனக்கே தன்னைத்‌ தந்த கற்பகம்‌” (திருவாய்மொழி 2-7-11 என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னையும்‌ தன்‌ விபூதியையும்‌ இவர்க்குக்‌ கொடுத்து,-

பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த
–63—ஹே வரத சேஷ சேஷாசநாதி பரிஜனங்களும் சத்ர சாமராதி பரிச் சதங்களும் கிரீட குண்டலாதி பூஷணங்களும் திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும் ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான சிறந்த குண கணங்களும் பரமபதமும் அண்டங்களும் ஸ்வ அசாதாரண விக்ரஹமும் திவ்ய ஆத்ம ஸ்வரூபமும் ஆகிய இவை எல்லாவற்றையும் ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம்
என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11–அசாதாரணமாக தன்னைத் தந்த-கற்பகம் –
உதார குணத்தில் பிரசித்தமான கல்பக தருவில் காட்டில் இவனுக்கு வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –
அர்த்தியை உண்டாக்கிக் கொடுக்க மாட்டாது-சாதன அனுஷ்டானம் பண்ணாதார் பக்கல் தான் மேல் விழுமது இல்லை ஒருவனுக்கே குறைவற கொடுக்க மாட்டாது பலன்களைக் கொடுக்குமத்தனை போக்கி தன்னைக் கொடுக்குமது இல்லை

என் செய்வன் என்றே இருந்து-அதாவது–உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி–பெரிய திருவந்தாதி-53- -என்கிறபடியே இவர்க்கு எல்லாம் செய்தாலும் தான் இழவாளனாய்– ஆத்மாத்மீய அகில பரத்தையும் -நமஸ் -சப்த முகேன இவர் சமர்ப்பிக்க – வேம்கடத்து உறைவார்க்கு நமவென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கு–திருவாய்-3-3-6- -என்னும்படி – பூயிஷ்டாம்-யஜுர் வேதம்-என்கிறபடியே
நம உக்தி தனக்கு கனத்து தோற்றுகையாலே — அவ் வழியாலே அகில பாரத்தையும் சுமந்து

உன்னடியார்க்கென்‌ செய்வன்‌ என்றே இருத்தி” (பெரியதிருவந்தாதி 53) என்கிறபடியே இவர்க்கு எல்லாம்‌ செய்தாலும்‌ தான்‌ இழவாளனாய்‌ (அகில பரத்தையும்‌ ஸமர்ப்பிக்க அது சுமந்து) இவராத்மாத்மீய ஸகலபரத்தையும்‌ இவன் பக்கலிலே ஸமர்ப்பிக்க “வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாங்கடமை அது சுமந்தார்கட்கே” (திருவாய்மொழி 3-3-6) என்று “பூயிஷ்டாம்‌ தே நம உக்திம்‌” (யஜுர்வேதம்‌! )என்கிறபடியே இவருடைய நம: என்கிற உக்தி அவனுக்கு கனத்துத்‌ தோற்றுகையாலே இவருடைய அகில பரத்தையும்‌ சுமந்து

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி
நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-நிரபேஷர்க்கு–என் செய்வன் -என்று இருக்கிற தர்மம் தான் எப்போதும் ஒருபடிப் பட்டு இருக்கும்-தூர வாஸிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயான் நாபசர்பதே
பாண்டவர்கள் முடி சூடின அன்றும் திரௌபதி குழல் முடித்த பின்பும் பர்த்தாக்கள் சந்நிஹிதராய் இருக்க அவர்களை ரக்ஷகர் என்று நினையாதே தன் பேர் சொன்னவளுக்குத் திரு உள்ளத்திலே தனிசு -ருணம் – பட்டு இருக்குமா போலே அந்த ஆனு கூல்யமுடையார்க்கு என்றும் என் செய்வேன் என்று இருத்தி –

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே
.–3-3-6—சதுர்த்தியில் பிரார்த்தனையைச் சொல்கிறது-நம
தனக்காய் இருக்கும் இருப்பை கழிக்கிறது-என்னல்– யுக்தி மாத்திரமே அமையும்-வருணனுக்கு தொடுத்த அம்பை மருகாந்தரத்திலே விட்டால் போலே –-இவ்விடத்தில் பட்டர் மொட்டைத் தலையன் விஷயமான இதிகாசம் –-ஆம்-ஸூசகம்-கடமை-பிராப்தம்-அது சுமந் தார்கட்கே.–-இக் கோட்டை எல்லாம் சுமந்தார்கட்க்கு என்று என்று ஆழ்வார் கருத்தால் யாதல்-இது தானே குவாலாய் இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே யாதல்-பூயிஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம-

அல்லு நன் பகலும் போகு-என்றாலும் அகல்வானும் அல்லனாய் –-அதாவது–-அல்லு நன் பகலும் இடை வீடு இன்றி நல்கி என்னை விடான்–திருவாய்-1-10-8- -என்று இவர் பக்கலில் பண்ணின ஸ்நேகத்தாலே -திவாராத்ரா -விபாகமற -இவரை விட மாட்டாதே –போகு நம்பீ -திருவாய்-6-2-2–என்று சீறிப் போகச் சொன்னாலும் ,-அகல் வானும் அல்லன் இனி-திருவாய்-2-6-7- -என்கிறபடியே அகலாதவனாய் —
ஆன் பின் போகேல் -திருவாய்-10-3-8–என்று இவர் நிவர்திப்பித்தால் –திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -திருவாய்-10-3-10-– என்கிறபடியே- தனக்கு உகப்பானவையும் தவிர்ந்து –அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே–திருவாய்-10-6-1- -என்று இவர் விதித்த படியே நடத்துகிற
சர்வேஸ்வரனே உபதேசத்துக்கு சத் பாத்ரம் என்கை —

“அல்லு நன்பகலும்‌ இடைவீடின்றி நல்கி யென்னை விடான்‌” (திருவாய்மொழி 1-10-8) என்று இவர் பக்கல்‌ பண்ணின ஸ்நேஹத்தாலே திவா ராத்ர விபா௧ மற இவரை விடமாட்டாதே “போகு நம்பீ” (திருவாய்மொழி 6-2-2) என்று இவர் தாம்‌ உபேக்ஷித்தாலும்‌ “அகல்வானுமல்லனினி” (திருவாய்மொழி 2-6-7) என்று அகலமாட்டாதே (போகேல்‌ என்றால்‌ உகப்பையும்‌ தவிர்ந்து) “ஆன்பின்போகேல்‌” (திருவாய்மொழி 10-3-8) என்று இவனுக்கு இஷ்டமானத்தையும்‌ நிவர்த்தி என்று இவர்‌ நியமித்தால்‌ “திவத்திலும்‌ பசு நிரை மேய்ப்பு உவத்தி (திருவாய்மொழி 10-3-10) என்ற அவ் வுகப்பையும்‌ தவிர்ந்து(விதி வகையே நடத்துமவனே) “அருள் தருவான்‌ அமைகின்றான்‌ அது நமது விதி வகையே ” (திருவாய்மொழி 10-6-1 என்று இவர்‌ விதித்தபடியே நடக்கையாலே ஸதாசார்ய விஷயத்திலே ஸச் சிஷ்யன்‌ வர்த்திக்கும்‌ க்ரமம்‌ இவன்‌ பக்கலிலே உண்டென்கையாலே இவனே உபதேஸ ஸத் பாத்ரம்‌ என்கிறார் –

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே
–1-10-8-தம்முடைய அபிசந்தி ஒழிய அவன் மேல் விழுகிற காலம் ஆகையால் நன்றான இரவும் நன்றான பகலும்-இடைவீடின்றி- நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்
அவன் இடை விடாதே ஸ் நேஹியா நின்றான்-நல்கி என்னை விடான் நம்பி நம்பியே – அபூரணனான என்னை பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்-நம்பி -ஒருத்தனாக நினைத்து-நம்பி அல்லும் பகலும் வீடின்றி நல்கி நம்பி என்னை விடான் மாயமே-ஆழ்வான் -நம்பியே என்று ஸ்வரத இவனையே பூர்ணன் என்பது என்பர் –

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-நீர் பரப்பராய் -முதலிகளாய் -இருப்புதீர்-உறவு உடையாரைப் போலேதீண்டாதே போம் -எத்தனைபேரைத் தீண்டினீர் என்பதை அறியோம் -எங்கள் மேல் புடவை படாமே போம்-முற்பட போகு நம்பீ என்றவாறே வர நின்றான் -பின்பு போகு நம்பீ என்றவாறே தொட்டான் –

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7—ஒரு நீராகக் கலந்தான் -தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றிக்கே உகந்து புகுந்தான்-இவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு ஏற்றம் இவ்விஷயத்தில் இவனுக்கு -மத சம்பந்திகள் அளவும் கீழ் மேல் ஓடும்படி புகுந்தான் –
அகல்வானும் அல்லன் இனி-பிரளய அநந்தரம் உமிழ்ந்தான்-இங்கு அங்கனே செய்வானாய் இருக்கிறான் அல்லன்-சேதனரைப் போலே பாபத்தாலே அகன்று ஒரு ஸூ க்ருத்தாலே கிட்டுதல் இல்லையே இவனுக்கு-பனை நிழல் போல் -உம்மை நோக்கி விட அமையுமோ-உம்மோடு சம்பந்தித்து இருப்பார் செய்வது என் என்ன -அவர்களும் பெற்றார்கள்

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-பசுக்கள் பின்னே போகாதே கொள்–ஜாதி உசிதமான தர்மத்தை விடப் போமோ -அவ்வளவும் தரித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன –கசிகையும் வேட்கையும் உள் கலந்து-கலவியும் நலியும் என் கை கழியேல்–பிரிவில் தரிக்கலாம் படியோ நீ கலவியில் பரிமாறிற்று என்கிறாள் -அபிமத விஷயத்தோடு இருக்கச் செய்தே-சந்த்யா வந்தனம் பண்ண நினைப்பார் யுண்டோ -ஸ்வ ஜனத்தை விட்டோ ஸ்வ ஜனத்தை ரஷிப்பது –

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-பரம பதத்தில் இருப்பைக் குலைத்து அன்றோ பசு மேய்க்கப் போந்தது -அவ்விருப்பு குலைந்து வந்து இருந்ததும் இப்போது பொல்லாது என்று இருக்கிறாள் -அவ்விருப்பிலே இருந்தான் ஆகில் இப்போது வயிறு எரிய வேண்டா வி றே -நம் பேர் இழவு கொண்டு கார்யம் இல்லை –வஸ்து ஸூ ரஷிதமாய் இருக்கும் என்று இ றே இவர்கள் இருப்பது -பரம பதத்தில் இருப்பை விட்டு பசு மேய்க்கப் போகக் கடவ யுன்னை – எங்களை உபேக்ஷித்தாய் என்று இன்னாதாகப் புகுகிறோமோ -அவ்விருப்பிலும் பசு மேய்க்க என்றால் யுகப்புதி என்றுமாம் –

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் பண்ணும் அருளை -என் பக்கலிலே பண்ணுமவனாகச் சமைந்து நின்றான் –அஸ்மா பிஸ் துல்யோ பவது -என்னுமவர்கள் இறே இவர்கள் -ஸ்வதந்த்ரனாகில் தருகிறான் — இனிக் குறை என் என்னில் –
அது நமது விதி வகையே–அது நாம் சொல்லச் செய்வானாக நினைத்து இரா நின்றான் –அது நம்முடைய  பாக்யாதி குணம் இறே -என்றாய்த்து பூர்வர்கள் நிர்வாஹம் -இது பிரகரணத்தோடு சேராது -நாம் விதித்த படியே செய்வானாக நினைத்து இரா நின்றான் -என்று அருளிச் செய்தார் எம்பெருமானார் -தன் பக்கல் குறைவற்று இருந்தாலும் இத்தலையில் இச்சை பார்த்து இருக்கும் இறே –சொல் வகையே என்னாதே- விதி வகையே -என்றது –தானே தருமது வித்யதிக்ரமம் -என்று இருக்கை யாலே 

ஆனால் இங்கன் இன்றிக்கே அஜ்ஞரான சம்சாரிகளுக்கு உபதேசிக்கிற அளவிலே சம்சார விரக்தராய் –ஆத்ம குண உபேதராய் –சம்யக் உப சன்னரானவர்களுக்கு –உபதேசிக்கும் அர்த்தத்தை பகவத் விமுகராய் -பிரயோஜனாந்த பரராய் –அனுவர்த்தன ஹீனரானவர்களுக்கு — வலியப் பிடித்து உபதேசிப்பான் என் என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் —ஆனால் ஸம்ஸாரிகளில் விரக்தராய்‌ இப்படி அநுவர்த்தநமுடையார்க்கு உபதேஸிக்கும் அர்த்தத்தை பகவத் விமுகராய்‌ ப்ரயோஜநாந்தர பரராய் தன் பக்கல் அநு வர்த்தனமும் இன்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து இவர்‌ மேல் விழுந்து உபதேசிப்பான் என் என்னில் அவனோடிவர்களுக்குண்டான ஸம்பந்தத்தை அறிகையாலும் இவர்கள்‌ துக்கம் கண்டு பொறுக்க மாட்டாதே க்ருபையாலும்‌ உபதேஸிப்பர்‌ என்கிறார்‌

நண்ணாதார்‌ மெய்யிலூன்‌ ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநீத்வாதிகள்‌ விஞ்சின ப்ரணிபாத அபிவாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு உளங்கொள்‌ பேசுமளவன்றென்னும்‌ அர்த்தத்தை வம்மின்‌ விரோதம்‌ ஈனச் சொல்‌ எவ்வுயிர்க்கு மறிய வென்று ௮டைவுகெட அதபஸ்கர்க்கு உபதேஸிக்கிறது ஞாலத்தார்‌ பந்த புத்தியும்‌ அநர்த்தம்‌ கண்டு ஆற்றாமையும்‌ மிக்க க்ருபையுமிறே–சூரணை -203–

(அமாநித்வம் -மேன்மக்களை உபேக்ஷை செய்யாமல் இருப்பது –அதபஸ்கர்-தவம் இல்லாதவர் )

நண்ணாதார் -மெய்யில்- ஊன்- ஆசை நிர்வேதத்தோடே-அதாவது-நண்ணாதார் முறுவலிப்ப–திருவாய்மொழியிலும்-4-9–மெய்யில் வாழ்க்கை -பெருமாள் திருமொழியிலும் -3-1–ஊனேறு செல்வத்திலும்–பெருமாள் திருமொழியிலும் -2-1–ஆசை வாய் சென்ற சிந்தையிலும் -பெரியாழ்வார் -4-5-1—சொல்லுகிற படி – பகவத் விமுக லோக யாத்ரையிலும் -மாம்ஸ ஸ்ருகாதி மல ரூப தேஹத்திலும் —
கர்ம உபாதிகங்களான தேக அனுபந்திகளிலும் –உண்டான தோஷ தர்சனத்தாலே – பரீஷ்ய லோகான் கர்ம சிதான் ப்ராம்ஹணோ நிர்வேத மாயாத் நாஸ்தி அக்ருத க்ருதேன -முண்டகம் -2-11- ( செய்யும் செயல்களால் ஈட்டப்படும் பலன்களை ஆராய்ந்த பிராமணன் -செய்யும் செயல்களால் பரம்பொருளை
அடையைப் படுகிறான் இல்லை என்று வெறுப்பை அடைவான் )-இத்யாதிப் படியே பிறந்த நிர் வேதத்தோடே–

(நண்ணாதார்‌ மெய்யிலூனாசை நிர்வேதத்தோடே) “நண்ணாதார்‌ முறுவலிப்ப விலும்‌ (திருவாய்மொழி 4-9) “மெய்யில்‌ வாழ்க்கை”யிலும்‌ (பெருமாள்‌ திருமொழி 5-2-5) ப்ரிய ஜநமபஸ்யந்தீம்‌ பஸ்யந்தீம்‌ ராக்ஷஸீ கணம்‌ ஸ்வ கணேந ம்ருகீம்‌ ஹீநாம்‌ ஸ்வகணேநா வ்ருதா மிவ ரா.ஸு. 15-24) என்றும்‌ “ந சவ்ரி சிந்தாவிமுக ஜந ஸம்வாத வைஸ ஸம்‌வர்‌ ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி:” என்றும்‌ (சொல்லுகிறபடி யே?) சவ்ரி சிந்தா விமுகரான ஸம்ஸாரிகளோட்டை ஸஹவாஸம்‌ ஆழ்வார் தமக்கு அஸஹ்யமானாப் போலே ஸம்ஸாரிகளோடு பொருத்த முடையார்களன்றிக்கே “ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்‌ வேண்டேன்‌” (பெருமாள்‌ திருமொழி 4-1) என்றும்‌ “ஆசைவாய்ச்‌ சென்ற சிந்தையர்‌ (பெரியாழ்வார்‌ திருமொழி 4-5-1) இத்யாதியாலும்‌ ஆழ்வார்களுக்கு அநேக தோஷ துஷ்டமான ஸரீரமும்‌ ஸரீர ஸம்பந்திகளும்‌ அஸஹ்மயமானாப் போலே ஸரீரத்தினுடைய அஸ்திரத்ரத்வாதி, தோஷங்களை அநுஸந்தித்து அவற்றுடன்‌ பொருந்தாமையை உடையார்களாய்‌ “பரீஷ்ய லோகாந்‌ கர்ம சிதாந்‌ ப்‌ராஹ்மணோ நிர்வேத மாயாத்‌ நாஸ்த்யக்ருத: க்ருதேந” (முண்டகோபநிஷத்‌ 2-11 என்கிறபடியே கர்ம ஸாத்‌யங்களான லோகங்கள்‌ அஸ்த்திரங்களாயிருந்தது, ஸ்த்திரமான லோகங்கள்‌ கர்ம ஸாத்‌யமன்றிக்கே இருந்தது என்று இவற்றினுடைய நிரூபணத்தாலே வெறுப்பை உடையவர்களாய்‌-

நண்ணாதார் முறுவலிப்ப–திருவாய்மொழியிலும்-4-9-இவர்கள் நடுவில் நின்றும் என்னை உன் திருவடிகளில் வாங்கி அருள வேணும் -என்ன இவருக்கு சம்சார அனுசந்தானத்தால் வந்த கிலேசம் எல்லாம் நிவ்ருத்தமாம் படி பரமபதத்தில் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான அயர்வறும் அமரர்கள் அடிமை செய்ய பெரிய பிராட்டியாரும் தானும் வ்யாவருத்தனாய் இருந்து அருளினை படியை காட்டி அருள கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிறார் –பிரியம் ஜனம பஸ்யந்தீம் பஸ்யந்தீம் ராக்ஷஸே கணம் ஸ்வ கணே நம்ருகீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவ்ருதாமிவ-என்கிறபடியே-உன்னை ஒழிய அந்நிய பரமான ஜகத்தில் இருக்கிற இருப்பு உன்னை விஸ்லேஷித்த வியசனத்தில் காட்டிலும் மிகவும் துஸ் சஹமாய் இரா நின்றது – ஆனபின்பு அவர்கள் நடுவே இராமே என்னை முடிக்க வேணும் என்று எம்பெருமானைக் குறித்து விண்ணப்பம் செய்கிறார் -என்றுமாம் –

மெய்யில் வாழ்க்கை -பெருமாள் திருமொழியிலும் -ப்ராதி கூல்யமாகிறது –-தேஹாத்மா அபிமானிகள் ஆகையும்- விஷய பிரவணராய் இருக்கையும் – தேஹாத் வ்யதிரிக்த வேறொரு வஸ்து உண்டு என்று அறியாது இருக்கையும் இறே – இப்படி இருப்பாரோடு எனக்குப் பொருந்தாது என்கிறார் இத் திருமொழியில் –

ஊனேறு செல்வத்திலும்–பெருமாள் திருமொழியிலும் -2-ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து விரோதியில் அருசியும் கைங்கர்யத்தில் ருசியும் பிறந்த த்வரையையும் ஆவிஷ்கரிக்கிறார் –

ஆசை வாய் சென்ற சிந்தையிலும் -பெரியாழ்வார் -4-சம்சாரிகளை பார்த்து ஹிதோ உபதேசம் பண்ணி அருளுகிறார்- இத் திரு மொழியில்-முதல் பாட்டு-திரு நாமங்களை சொல்லுமவர்கள் பெரும் பேறு என்னால் சொல்லப் போகாது -என்கிறார்-இரண்டாம் பாட்டு–திரு நாமத்தை சொன்னவர்கள் மோஷத்தை  பெறுவர்கள்-என்கிறார் –மூன்றாம் பாட்டு–ஆத்ம சமர்ப்பணம் பண்ணினார்க்கு யம வச்யதை இல்லை என்கிறார்-நான்காம் பாட்டு –பிரணவ அர்த்தம் நெஞ்சில் பட்டவர்கள்-அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவர் -என்கிறார் -ஐந்தாம் பாட்டு –-விரோதி நிரசன சீலனை ஏத்து வார்க்கு முன்பு கிலேசப் பட்டது போலே – இனி போக வேண்டாம் என்கிறார் (இந்த்ரியங்களே விரோதி )ஆறாம் பாட்டில் ஒருக்கால் உபாய வரணம் பண்ணினார்க்கு -சதா பச்யந்தி பண்ணலாம் -என்கிறார்–ஏழாம் பாட்டில் –விரோதி நிரசன சீலனை அனுசந்திப்ப நித்ய ஸூரிகள் கார்யத்துக்கும்  ஸ்ரீ வைகுண்ட நாதனோடு மன்றாடுவர்கள் என்கிறார் –எட்டாம் பாட்டால் மூன்று எழுத்தை உச்சரிப்பார் ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதி 
அவனுக்கு ஆதரணீயர்
என்கிறார் –ஒன்பதாம் பாட்டில் சர்வ வித பந்துவாக அவனைப் பற்றினால் 
பின்னை யம வச்யதை இல்லை
என்கிறார்-நிகமத்தில் இத் திருமொழி அப்யசித்தவர்கள் ஸ்ரீ யபதி பக்கலிலே  ஸ்ரீ பெரியாழ்வார் பெற்ற வரிசைகளை பெறுவர்-என்கிறார் –

ஆஸ்திக்ய அமா நித்வாதிகள் விஞ்சின--அதாவது- ஆஸ்திகோ தர்ம சீலச்ச சீலவான் வைஷ்ணவச் சுசி கம்பீரஸ் சதுரோ தீரஸ் சிஷ்ய இத்ய பிதீயதே –(சாஸ்திரங்களில் நம்பிக்கை -தர்மங்களைச் செய்ய வேண்டும் என்னும் தன்மை -ஒழுக்கம் விஷ்ணு பக்தி –-தூய தன்மை–காம்பீர்யம் -சாதுர்யம் -தைர்யம் யுடையவனுமான ஒருவன் சிஷ்யன் என்று கொல்லப்படுகிறான்-)என்றும் ,-அமாநித்வ மதம்பித்வ மஹிம்சா ஷாந்தி ஆர்ஜவம் ஆச்சார்யா உபாசனம் ஸௌசம் ஸ்தைர்யம் ஆத்மவி நிக்ரக -ஸ்ரீ கீதை -13-7-(உயர்ந்தவர்களை அலக்ஷியம் செய்யாமலும் -கர்மாநுஷ்டானங்களைப் பெருமைக்காகச் செய்யாமலும் – மூன்று கரணங்களாலும் பிறருக்கு துன்பம் செய்யாமலும் -பொறுமையுடனும் -அனைவரையும் சமமாகப் பார்த்தும் ஆச்சார்யரை வணங்கியும் – ஸாஸ்த்ர நியதிப்படி பரிசுத்தனாகவும் சாஸ்திரங்களில் சொல்லியவற்றை உறுதியுடன் நம்பியும் – ஆத்மாவிலேயே மனசை வைத்து இருப்பதும் )இத்யாதிகளிலும் சொல்லப் படுகிற – ஆஸ்திக்யாதிகளும் –அமாநித்வாதிகளும் ஆகிற சிஷ்ய லஷணமான ஆத்மா குணங்களில் அதிகராய் –

“ஆஸ்திகோ தர்ம ஸ்ரீலஸ்ச ஸீலவாந்‌ வைஷ்ணவஸ் ஸூசி: கம்பீரஸ் சதுரோ தீர: ஸிஷ்ய இத்யபி தீ யதே” என்றும்‌ “அமாநித்வம தம்பித்வ மஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்‌ ஆசார்யோபாஸநம்‌ மெளசம்‌ ஸ்தைர்யமாத்ம விநிக்‌ரஹ நித்யந்து ஸமசித்தத்வம்‌ இஷ்டாநிஷ்டோபபத்திஷ மயிசாநந்யயோகே,ந பக்திரவ்யபிசாரிணீ’ (கீதை 13-7) என்றும்‌ சொல்லப்படுகிற ஸிஷ்ய லக்ஷணங்களாலே மிக்கிருப்பாராய்‌

அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷõந்திரார்ஜவம்
ஆசார்யோபாஸநம் ஸௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ
:–13-7-கர்வமின்மை, டம்பமின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்.

ப்ரணிபாத அபிவாதன பரிப்ப்ரஸ்ன சேவா பரர்க்கு--அதாவது–ப்ரணி பாத்ய அபிவாத்யச –ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-1-1–என்றும் ,-தத் விததி ப்ரணிபாதேன பர பிரச்நேன சேவையா –ஸ்ரீ கீதை-4-34–என்றும் சொல்லுகிற படி – பக்ன அபிமானராய் கொண்டு — ப்ரணி பாத அபிவாதன பரி ப்ரஸ்ன சேவை ஆகிய இவற்றில் – தத் பரராய் –சிரகாலம்-அனுவர்த்தித்தவர்களுக்கு-

(ப்ரணிபாதாபி வாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு) “தத் வித்‌தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா (கீதை 4-34) என்று பக்‌நாபிமாநராய்க்‌ கொண்டு அநுவர்த்தந பூர்வகமாக சிரகால ஸேவை பண்ணினவர்களுக்கு

தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந
:–4-34-அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்து கொள். உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

உளம் கொள் பேசும் அளவன்று என்னும் அர்த்தத்தை– அதாவது- உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே –திருவாய்-4-10-9- -என்றும் — பேசும் அளவன்று இது வம்மின் நமர் ! பிறர் கேட்பதன் முன் -பெரிய திருமொழி -2-4-9-என்றும் இப்படி அஷட் கரணமாக உபதேசிக்க வேண்டும் அர்த்த விசேஷத்தை —

(உளங்கொள் பேசுமளவன்றென்னும்‌ அர்த்தத்தை) “உளங் கொள்‌ ஞானத்து வைம்மின்‌” திருவாய்மொழி 4-10-9) என்றும்‌ “பேசுமளவன்றிது வம்மின்‌ நமர்‌ பிறர்‌ கேட்பதன்‌ முன்‌ (பெரிய திருமொழி 2-4-9) என்றும்‌ இப்படி அஷட் கர்ணமாக உபதேஸிக்க வேண்டும்படியான அர்த்த விஸேஷத்தை-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9–உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள் -பிரயோஜனம் என் என்னில்
உம்மை உயக்கொண்டு போகுறிலே.-அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் -நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –

பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம் நாண் மலர் மேல்
வாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில்
நீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே—2-4-9—பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் சொல்லலாவது ஓன்று இல்லாமையாலே சொல்லப் போகாது – பகவத் விஷயத்தில் இயத்தா ராஹித்யத்தாலே பேசப் போகாது –(பேசினார் பிறவி நீத்தார் லௌகிக விஷயங்கள் பேச முடியாது பகவத் விஷயம் பேசவே முடியாது இது -லௌகிக பகவத் விஷயம் என்று கொண்டு வியாக்யானம்)வம்மின் நமர் –நம்மோடு ஒரு குடல் துவக்கு உடையார் அடங்கலும் வாரும் கோள்-பிறர் கேட்பதன் முன்- இதுக்குப் புறம்பானார் செவிப் படுவதற்கு முன்பே –ய இதம் பரமம் குஹ்யம் -18-என்றும் – (நமர் -ஆஸ்ரிதர்களுக்கு எடுத்துச் சொல்பவன் என்னையே அடைகிறான் ) இதந தே நாத பஸ்காய-என்றும் (பிறர் -நாஸ்திகர்களுக்கு சொல்லாதே ) அநாதிகாரிகள் கேட்கவும் ஆகாது – அதிகாரிகளுக்கு சொல்லாது ஒழியவும் ஆகாது என்று இரண்டும் உண்டு இறே-

வம்மின்-விரோதம்-ஈனச் சொல்-அதாவது–வம்மின் புலவீர் –திருவாய்-3-9-6–என்று வலிய அழைத்து –
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ –திருவாய்-3-9-1–என்று – நான் சொல்லுகிற இது உங்களுக்கு விரோதமாய் தோற்றி இருந்தது ஆகிலும் சொல்லுவேன்-இத்தை கேளுங்கள் என்று அபேஷித்து –ஈனச் சொல் ஆயினுமாக –திருவிருத்தம் -99–என்கையாலே
ஆகிலுமாக -என்று பொகிடு பொருளாகவும்-எவ் உயிர்க்கும் அறிய என்று-அடைவு கெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது--அதாவது–மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்–திருவாய்–9-1-7-என்றும் —திண்ணம் நாம் அறிய சொன்னோம் -திருவாய்-10-2-5–என்று சர்வருக்கும் பிரசித்தம் ஆகும் படியாகவும் –இப்படி அடைவு கேடாக –இதம் தே நாதபஸ்காய நா பக்தாயா கதாசன நஸா ஸூஸ்ரூஷவே வாஸ்யம் நசமாம் யோப்யஸூயதி -ஸ்ரீ கீதை-18-67– –இத்யாதிகளால் சொன்ன அதிகாரிகளுக்கு உபதேசிக்கிறது .

வம்மின்‌ விரோத மீனச்சொல்‌ எவவுயிர்க்கு மறியவென்று) “வம்மின்‌ புலவீர்‌ நும்‌ மெய்வருத்திக்‌ கைசெய்தும்மினோ” (திருவாய்மொழி 3-9-6) என்றும்‌ ” சொன்னால்‌ விரோதமிது ஆகிலும்‌ சொல்லுவன்‌ கேண்மினோ (திருவாய்மொழி 3-9-1 என்றும்‌ “ஈனச் சொல்லாயினுமாக நான்‌ கண்ட நல்லது ஞானப்பிரானை யல்லாலில்லை” (திருவிருத்தம்‌ 99) என்றும்‌ “மன்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌ மாநிலத்தெவ்வுயிர்க்கும்‌ (திருவாய்மொழி 9-1-7) என்றும்‌ “நாமுமக்கறியச்‌ சொன்னோம்‌” (திருவாய்மொழி 10-2-9) என்றும்‌ (அடைவு கெட அதபஸ்கர்க்கு உபேதஸிக்கிறது) முற்படச்‌ சொன்ன அடைவன்றிக்கே “இதம்‌ தே நாதபஸ்காய நாபத்தாய கதாசந ந சா ஸூஸ்ரூஷவே வாச்யம்‌ நசமாம்‌ யோப்‌ய ஸூயதி (கீதை 18-67) என்று உபதேஸத்துக்கு அதி காரமில்லாத தேஹ யாத்ராபரவஸராய்ப்‌ பிறரைக்‌ கவிபாடுவார்க்கும்‌ அதுதானுமின்றிக்கே பஸூ ஸமராய்த்‌ திரிவார்க்கும்‌ ஆசார்ய ப்ரேமமில்லதார்க்கும்‌ ஆசார்ய ஸுஸ்ரூஷை யில்லாதார்க்கும்‌ ஸ்ரோதுமிச்சை இல்லாதார்க்கும்‌ பகவத்‌. விஷயத்தில்‌ அஸூயா பரராயிருப்பார்க்கும்‌ இவர்‌ உபதேஸிப்பான்‌ என்‌ என்னில்‌,

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6—காட்டுது தீயில் அகப்பட்டாரை பொய்கையைக் காட்டி அழைப்பாரை போலே வாருங்கோள் என்கிறார்-புலவீர்!-நல்லதும் தீயதும் அறியும் நீங்கள் –
நீர் அழைக்கிறது என் -பிறரைக் கவி பாடி யாகிலும் தேஹ யாத்திரையை நடத்த வேண்டாவோ என்ன -உங்கள் தரம் குலையாதே ஜீவிக்கல் ஆகாதோ –நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத் தொழில் செய்து ஜீவிக்கப் பாருங்கோள் -என்பர் எம்பார் –

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1–நீங்கள் சில பிரயோஜனங்களை நினைத்து கவி பாடா நிற்க -நான் அத்தை தவிருங்கோள் என்றால் உங்களுக்கு அது அஸஹ்யமாகிலும்
உங்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே சொல்லத் தவிரேன் -அஸேவ்ய சேவை நிஷேத்யத்தயா சொல்லவும் ஆகாதபடியாய் இருக்க சொல்லுகிற எனக்கே விரோதமாய் பலிக்கிலும் உங்கள் அநர்த்தம் கண்டு சொல்லப் புக்கேன் ஆகையால் நீங்கள் மீளும் தனையும் சொல்லத் தவிரேன்-சொன்னால் உங்களுக்கு விரோதம் என்று பிரதிபன்னமாய் இருந்ததே யாகிலும் சொல்லுகிறேன் என்றுமாம்-யோ அவசதாஸ் ச உச்சயதாம் -என்று திரு நாமத்தை சொன்னால் அநந்தரம் இடி விழும் என்று வரும் அனர்த்தத்தை சொன்னிகோள் ஆதல்-திரு நாமத்தை சொன்னி கோள் ஆதல் செய்யுங்கோள் என்றான் இறே ப்ரஹ்லாத ஆழ்வான்-நீங்கள் அஹிதத்தில் பிரவணராய் மீள மாட்டாதாப் போலே உங்கள் ஹிதத்திலே பிரவணனான நானும் மீள மாட்டேன் என்கிறார் –-கேண்மினோ! அனுஷ்ட்டிக்க வேண்டா -நீங்கள் செவி தாழ்க்க அமையும் – ஸ்ரவணம் அனுஷ்டான சேஷமாக வேண்டாவோ -ஸ்ரவணம் மாத்திரமே அமையுமோ என்னில் -விஷய ஸ்வபாவத்தால் அனுஷ்டான பர்யந்தமாக முடியும் என்று இருக்கிறார் பஹு வசனத்தால் அநர்த்தம் சர்வ சாதாரணம் ஆகையால் எல்லாரையும் ஓக்க கால் பிடிக்கிறார் –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
 – 99–எறி திரை வையம் முற்றும்  ஏனத்து உருவாய் இடந்த பிரான் –என்று சக்தியைச் சொல்கிறது – ஞானப் பிரான் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது ஆயினுமாக –ஆகியுமாக என்னாதே –ஈனச் சொல்லாயினும் நன்றாக என்று நைசயம் சொல்லாதே ஆயினும் –-ஆக என்கையாலே – அவன் அருளிச் செய்ததுக்கு நால்வர் இருவர் உண்டானவோபாதி இதுக்கும் சிலர் உண்டாகிலும் உண்டாக – அவர்கள் ஆதரிக்க்கவுமாம் தவிரவுமாம் நான் சொல்லித் தவிரேன் –இவற்றின் அனர்த்தைக் கண்டு இவற்றை நல் வழி போக்கி பரிகரிக்க வேண்டும் அன்றோ –ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே 

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7—இத்தோடு ஓக்க வேறு எண்ணலாவது இல்லை -என்னுதல் -இப்போது இத்தைச் சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றை சொல்லுகிறான் என்று இருக்க வேண்டா என்னுதல் – சுருங்கச் சொன்னோம்-இது தன்னையும் பரப்பு அறச் சொன்னோம் -பிரதிபத்திக்கு அவிஷயமாம் படி அன்றியே ஸூ க்ரஹமாகச் சொன்னோம்
மா நிலத்து -இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை – எவ் உயிர் க்கும்-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் –

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-வியக்தமாக -மதிநலம் அருள பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்யஸூயதி
–18-67-இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமை யுடையோனுக்கும் சொல்லாதே.

ஞாலத்தார் பந்த புத்தியும் அனர்த்தமும் கண்டு ஆற்றாமையும் –-அதாவது— ஞாலத்தார் அவர்க்கும் வானத்தவர்க்கும் பெருமான்–திருவாய்-4-5-8- -என்று நித்ய விபூதியில் உள்ளவோர்பாதி லீலா விபூதியில் உள்ளோர்க்கும் அவனுடைய சம்பந்தம் ஒத்து இருக்க – இவர்கள் அவனை இழந்து கிடக்க ஒண்ணாது என்கிற சம்பந்த ஞானமும் கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை கடல் வண்ணா–திருவாய்-4-9-3- -என்று இவர்கள் சம்சாரத்தில் படும் அனர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாத ஸ்வாபமும்–தாவன் மாத்ரம் அன்றிக்கே –மிக்க கிருபையும் இறே-அதாவது– அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கது–கண்ணி நுண்-8- -என்று ..-ஷிபாமி -என்றும்-ந ஷமாமி-என்றும் ஈஸ்வரன் கை விட்டவர்களையும் திருத்தி அல்லது நிற்க மாட்டாத கரை புரண்ட காருண்யம் இறே என்கை-பந்த புத்தியும் அநர்த்த அசஹத்வமும் இவர் தம்முடைய உக்தி சித்தம் ஆகையாலும் – க்ருபாதிக்யம் சிஷ்யோக்தி சித்தம் ஆகையாலும் ஆய்த்து இப்படி பிரசித்தி தோற்ற அருளிச் செய்தது (பிரசித்தி தோற்ற இறே-என்று அருளிச் செய்கிறார்-என்றவாறு ).

(ஞாலத்தார்‌ பந்த புத்‌தியும்‌) ‘ஞாலத்தார்‌ தமக்கும்‌ வானத்தவர்க்கும்‌ பெருமானை” (திருவாய்மொழி 4-5-8) என்று நித்யாநுபவம்‌ பண்ணுகிற நித்ய ஸூரிகளோபாதி லீலா விபூ தியில்‌ உள்ளார்க்கும்‌ அவனோடு ஸம்ப ந்த முண்டாயிருக்க இவர்கள்‌ இழக்க வொண்ணாது என்கிற ஸம்பந்த ஜ்ஞாநாநுஸந்தாநத்தாலும்‌ (அநர்த்தம்‌ கண்டு ஆற்றாமையும்‌) “கண்டாற்றேன்‌ உலகியற்கை” (திருவாய்மொழி 4-9-3) என்று இவர்கள்‌ ஸம்ஸாரத்திலே படுகிற அநர்த்தம்‌ கண்டு பொறுக்க மாட்டாமலும்‌ (மிக்க க்ருபையுமிறே) “அருள்‌ கண்டீர்‌ இவ்வுலகினில்‌ மிக்கதே” (கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு- 8) என்று இவருடைய மிக்க க்ருபையாலும்‌ உபதேஸித்தார்‌ –

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும்
பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8–இப்படி நெடு வாசி பட்ட விஷயங்களில் ஸ்நேஹம் ஒத்து இருக்கைக்கு ஆதி சம்பந்தம் ஒத்து இருக்கை -என்கிறது –

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3–சம்சாரிகள் பாரிப்பும் -இவர்கள் முடிந்து கிடக்கும் படியையும் கண்டு என்னால் பொறுக்கப் போகிறது இல்லை –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-எம்பெருமான் அருளினது ப்ராதேசிகம் -ஆழ்வார் அருள் சார்வத்ரிகம்- பாலேய் தமிழ் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் -என்றும் இறே சொல்லிற்று –நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்தொரு மூர்த்தி-நெறி யுள்ளி யுரைத்த அம் பகவன் என்று-தான் தோன்றியான தன்னுடைய ஜ்ஞானம் கொண்டு சொன்னது அன்றிக்கே  அவனுடைய அருள் கொண்டு பாடின-தன்னேற்றமும் உண்டே இவர் அருளுக்கு-(தான் தோன்றி பாட்டு கீதை அருள் தூண்ட பாடியது அன்றோ திருவாய்மொழி )
இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று அந்த லோகத்தில் இவருடைய பாட்டு மிக்கப் போலே-இந்த லோகத்தில் இவருடைய அருள் மிக்கது-

மற்றும் இப்படி உபதேசிப்பார் பலரும் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் ..இப்படி எதிர்த் தலையில்‌ அநுவர்த்தந மின்றிக்கே பொறுக்க மாட்டாதே க்ருபையாலே உபதேஸித்தார் வேறும் உண்டோ என்னில்-

தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தவர்க்குமே இவை உள்ளது .-சூரணை -204-

தாய்க்கும்-அதாவது-தன் பக்கலிலே விபரீத புத்தியைப் பண்ணி நிற்கிற பாபிஷ்டனான ராவணனைக் குறித்து –மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா வதம்சா நிச்சதா கோரம் த்வயா ஸுபுருஷர்ஷப–ஸூந்தர-21-19-என்றும்-விதிதஸ் சஹி தர்மஞ்ச சரணாகத வத்ஸல தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி -ஸூந்தர-21-20- -இத்யாதிகளாலே-ஹிதோபதேசம் பண்ணின –நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ –ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17 -என்கிற
சர்வ லோக ஜனனியான பிராட்டிக்கும் —

(தாய்க்கும்‌) “நித்யைவேஷா ஜெகன் மாதா -விஷ்ணு புராணம்‌ 1-8-17) என்றும்‌ “மாதா ச கமலா தேவீ -என்றும் த்வம் மாதா ஸர்வ லோகாநாம் -என்றும் சொல்லுகிறபடியே ஸகல ஜகந் மாதாவான பிராட்டி தம் பக்கலிலே விபரீத பிரதிபத்தி பண்ணி இருக்கிற ராவணனைப் பார்த்து அவனுடைய அநர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாத கிருபையாலும் தம்முடைய மாத்ருத்வ ப்ரயுக்தமான பந்த விசேஷத்தாலும் –மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா வதம்சா நிச்சதா கோரம் த்வயா ஸுபுருஷர்ஷப–ஸூந்தர-21-19-என்றும்-விதிதஸ் சஹி தர்மஞ்ச சரணாகத வத்ஸல தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி –ஸூந்தர-21-20- என்று இப்படி உபதேஸித்தாள்-

மகனுக்கும்-அதாவது-திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக சீறி தன்னை அதி குரூரமான தண்டங்களைப் பண்ணும்படி -பாகவத் அத்யந்த விமுகனாய் -பாபிஷ்ட அக்ராகண்யனான -ஹிரண்யனைக் குறித்து – சர்வ பூதாத்மகே தாத ஜகன்னாத ஜகந்மயே -ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-19-37-என்றும் – உர்வ்யாமஸ்தி –இத்யாதிகளாலே ஹிதத்தை உபதேசித்தும் –-விமுகரான அசுர புத்ரர்களைக் குறித்து – அபார சம்சார விவரத்த நேஷு மாயாத தோஷம் பிரசபம் ப்ரவீமி சர்வத்ர தைத்யாஸ் சமுதாமுபேத சமத்வமாரா தநம் அச்யுதஸ்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-17-89–இத்யாதிகளாலே
ஹிதத்தை உபதேசித்தும் –-மீளவவன் மகனை-பெரியாழ்வார்-1-6-2- -என்கிற ஹிரண்ய புத்ரனான பிரகலாதனுக்கும்-

மகனுக்கும் -மீள அவன் மகனை -(பெரியா -1-6-2) என்றும் ஹிரண்ய புத்திரனான ப்ரஹ்லாதாழ்வான் திருநாமம் சொன்ன அது பொறுக்க மாட்டாமையாலே அதி குரூரமான தண்டங்களைத்‌ தன் பக்கலிலே ப்ரயோகித்த தமப்பனான ஹிரண்யனைக்‌ குறித்து இவன்‌ அவனுடைய அநர்த்தம்‌ பொறுக்க மாட்டாதே “உர்வ்யாமஸ்த் யுதகேஷு சாஸ்தி ” என்று தொடங்கி “த்வய்யஸ்தி மய்யஸ்தி ச” என்றும்‌ “ஸர்பூ தாத்மகே தாத ஜகந்நாதே, ஐகந்மயே பரமாத்மநி கோவிந்தே மித்ராமித்ரகதா, குத: (சி விஷ்ணுபுராணம்‌ 1-19-37 ) என்று உபதேஸித்தும்‌, “அபார ஸம்ஸார விவர்தநேஷு மாயாத, தோஷம்‌ ப்ரஸபம்‌ ப்‌ரவீமி ஸர்வத்ர தைத்யாஸ்ஸமதாமுபேத ஸமத்வ மாராத நமச்யுதஸ்ய, தஸ்மிந்‌ ப்ரஸந்நே கிமிஹாஸ்த்யலப்‌யம்‌ தர்மார்த்த, காமைரலமல்பகா ஸ்தே ஸமாஸ்ரிதாத்‌ ப்‌ ரஹ்மதரோரநந்தாந்‌ நி:ஸம்ம்யோ பக்வபலப்ரபாத: (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-17-89) என்று ஆஸுர ப்ரப்ருதிகளைக்‌ குறித்தும்‌ உபதேஸித்தான்‌

தம்பிக்கும்-அதாவது-யாவந் னலங்காம் சமபித்ரவந்தி வலீமுகா பர்வத கூட மாத்ரா தம்ஷ்ட்ரா யுதாச்சைவ நகாயுதாச்ச ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ–யுத்த-14-3–என்றும் – யாவான் நக்ருஹ்ணந்தி சிராம்சி பாணாராமேரிதா ராஷச புங்கவானாம் வஜ்ரோபமா வாயு சமான வேகா ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ –யுத்த-14-4–என்று இப்படி-தனக்கு ஹிதம் சொன்னது பொறாமல் – த்வாம் து திக் குலபாம்சனம்–யுத்த-16-5- -என்று திக்கரித்த க்ரூரனான ராவணனைக் குறித்து –-ஸூலபா புருஷா ராஜன் சததம் பிரிய வாதினா – அப்ரியயச்யது பத்யச்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப–யுத்த-16-20
பத்தம் காலச்ய பாசேன சர்வ பூதாபஹாரிணா நனச்யந்த முபேஷேயம் ப்ரதீப்தம் சரணம் யதா –யுத்த-16-21- என்று தொடங்கி ஹித உபதேசம் பண்ணின – அவன் தம்பிக்கே –திருவாய்-7-6-9–என்கிற ராவண அனுஜனான ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும்–

(தம்பிக்கும் ) “ மீண்டுமவன்‌ தம்பிக்கே” (திருவாய்மொழி 7-6-9) என்று ராவணனுடைய தம்பியான ஸ்ரீவிபீஷணப்பெருமாள்‌ அந்த ராவணனுடைய அநர்த்தங்கண்டு பொறுக்க மாட்டாதே “த்வாம்‌ து திக்‌ குல பாம்ஸநம்‌” (ரா.யு 16-15) என்று அவன்‌ தான்‌ திக்கரியா நிற்கச்‌ செய்தேயும்‌ அவனைப்‌ பார்த்து “யாவந்ந க்‌.ரஹ்ணந்தி ஸராம்ஸி பாணா: ராமேரிதா ராக்ஷஸபுங்க வாநாம்‌ வஜ்ரோ பமா வாயு ஸமாந வேகா; ப்ரதீயதாம்்‌ தாஸரதாய மைதிலீ, யாவந்ந லங்காம்‌ ஸமபித்‌ரவந்தி வலீமுகா, : பர்வத கூடமாத்ரா:” (ராயு. 14-4) என்றித்யாதி களாலே உபதேஸித்தான்‌

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9—அவன் தம்பி என்று பாராதே -சரணம் என்றான் -என்று கடல் சூழப் பட்ட லங்கையை அவனுக்கு கொடுத்து அருளி -அத்யுத் கடை புண்ய பாபை ரிஹைவ பலமஸ் நுதே -என்கிறபடியே க்ரவ்ய பலத்துக்கும் ஆனு கூல்ய பலத்துக்கும் விளம்பம் இன்றிக்கே ஒழிந்த படி-

இவர்க்கும்-அதாவது-பகவத் விமுகராய் –அநந்ய பரராய் திரிகிற சம்சாரிகளை விட மாட்டாமல் –
வீடு மின் முற்றவும்–1-2 -தொடங்கி பல இடங்களிலும் -பல படிகளாலும் உபதேசித்த இவ் ஆழ்வார் தமக்கும் —

(இவர்க்கும்‌) பின்பு இவர் தாமும்‌ தம்‌ பக்கல்‌ அநுவர்த்தநமின்றிக்கே விமுக ரான ஸம்ஸாரிகளைக்‌ குறித்து “வீடுமின்‌ முற்றவும்‌” (திருவாய்மொழி 1-2-1 என்று தொடங்கி உபதேஸித்தார்‌

இவர் அடி பணிந்தவர்க்குமே-அதாவது-ஓராண் வழியாக பூர்வர்கள் உபதேசித்து போந்த நியமத்தைக் குலைத்து பலரையும் உபதேசிக்கப் படி பண்ணியும் – பல கால் நடந்து துவண்டு கேட்ட பரமார்த்தத்தை ஓலக்கமாக வைத்து உபதேசித்தும் — வ்ருதைவ பவதோ யாதா பூயசீ ஜன்மசன்ததி -தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ-சாண்டில்ய ஸ்ம்ருதி-( உனக்குத் தொடர்ந்து வருகிற பல பிறவிகள் பயன் அற்றுப் போயின -அவற்றுள் இது ஒரு பிறவி என்று நினைத்து இறைவனைச் சரணம் அடைவாய் ) -என்று ருசி விச்வாஸ ஹீநரையும் நிர்பந்தித்து சரமோ உபாயஸ்தர் ஆக்கியும் – இப்படி அதிகாரம் பாராமல் அவர்கள் துர் கதியை பார்த்து உபதேசித்து அருளும் ஸ்வபாவராய்–பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன்–இராமானுச நூற்றந்தாதி-1- -என்று நிரூபகமாய் இருக்கும் எம்பெருமானாருக்குமே- இவ் ஆகாரங்கள் உள்ளது என்கை —

(இவரடி பணிந்தவர்க்கும்‌) “பாமன்னு மாறனடி பணிந்துய்ந்தவன்‌” (இராமானுச நூற்‌. 1 என்கிற உடையவரும்‌ வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஐந்ம ஸந்ததி: தஸ்யா மந்ய தமம்‌ ஜந்ம ஸஞ்சிந்த்ய மரணம்‌ வ்ரஜ (சாண்டில்ய ஸ்ம்ருதி 4-10-9) என்று ருசி யில்லாதாரையும்‌ மேல் விழுந்து உபதேஸித்தருளினார்‌.

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்பதை மணவாள மா முனிகள்-பராங்குச பாத பக்தம் –என்று வட மொழியில் மொழி பெயர்த்தார்-மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜன் -ராமானுஜன் எனக்கு ஆரமுதே –பிராட்டி -பகவான் -பா -ஆழ்வார் -எம்பெருமானார் -பஞ்சாம்ருதம் கொடுத்த அமுதக்கவி -ஆறு சுவைகளும் அமுதம்

இவை என்று கீழ்ச் சொன்ன சம்பந்த ஞானம் அநர்த்த அசஹத்வம் அநவதிக க்ருபை– ஆகிய மூன்றையும் பராமர்சிக்கிறது –

ஆகையாலே பராநர்த்த,ம்‌ பொறுக்க மாட்டாதே உபதேஸிக்கை இவர்களுக்கே யுள்ளது

இப்படி விமுகரான சம்சாரிகளைக் குறித்து இவ் ஆழ்வார் உபதேசித்த இது சபலமாய்த்தோ என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார்-ஆனால்‌ இப்படி விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்குத்‌ தம்முடைய க்ருபையாலே இவருபதேஸிக்கிறாராகில்‌, இவ்வுபதேஸம்‌ பலித்தமை உண்டோ என்னில்‌, இவர்‌ க்யாதி லாப, பூஜா நிரபேக்ஷராய்க்‌ கொண்டு பகவத்‌ கைங்கர்யமாக உபதேஸிக்க ஜகத்தாகத்‌ திருந்துகையாலே தம்முடைய தனிமைக்கும்‌ ஸம்ஸாரிகளுடைய தனிமைக்கும்‌ எம்பெருமானுடைய தனிமைக்கும்‌ க்லேஸப்பட்ட இவருடைய இழவுகளும்‌ தீரப் பெற்றதென்கிறார்‌.

க்யாதி லாப பூஜ அபேஷை யற மலர் நாடி யாட் செய்ய உய்யக் கொண்டு ஆரைக் கொண்டு வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவுகள் தீரப் பெற்றது .–சூரணை -205-

(க்யாதி அபேக்ஷை அற்று –பூஜா அபேக்ஷை அற்று -லாப அபேக்ஷை அற்று -மலர் நாடி யாட் செய்ய-
உய்யக் கொண்டு என்கிற இழவும் -ஆரைக் கொண்டு என்கிற இழவும் -வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும் -தீரப் பெற்றது )

க்யாதி அபேக்ஷை அற்று--அதாவது –நீசனேன் நிறை ஒன்றும் இலேன்-3-3-4 -என்று தண்மைக்கு எல்லையாகத் தம்மை நினைத்து இருக்கையாலும் ,-லாப அபேக்ஷை அற்று-அதாவது
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக -4-9-4–என்று ஐஸ்வர்யத்தை அக்நி சமமாகக் காண்கையாலும் –பூஜா அபேக்ஷை அற்று–அதாவது- தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்-8-9-1- -என்று-பகவத் சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்களுக்கு தம்மை சேஷமாக நினைத்தும் –-ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆள் உடையார்கள் பண்டே–9-1-1- -என்று
இப் பிரபந்தத்தில் அன்வயித்தவர்களை தமக்கு சேஷிகளாக நினைத்தும் இருக்கையாலும் —
க்யாதியிலும் லாபத்திலும் பூஜையிலும் அபேஷை அற்று —

(க்யாதி லாப பூஜாபேக்ஷயற ) “நீசனேன்‌ நிறைவொன்றுமிலேன்‌’ (திருவாய்மொழி 3-3-4) என்று தம்மைத்‌ தண்மைக்கு எல்லையாக நினைத்திருக்கையாலும்‌ “கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பாக” (திருவாய்மொழி 4-9-4) என்று ஐஸ்வர்யத்தை அக்‌நி ஸமமாகக்‌ காண்கையாலும்‌ “தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டன்‌ சடகோபன்‌ (திருவாய்மொழி 8-9-1 என்று பா௧வத ஸேஷத்வத்தில்‌ எல்லையிலே நிற்கிறவர்களுக்குத்‌ தம்மை ஸேஷமாக நினைத்திருக்கையாலும்‌ “ஓதவல்ல பிராக்கள்‌ எம்மை ஆளுடையார்கள்‌ பண்டே” (திருவாய்மொழி 9-1-11) என்று இப்ரபந்தத்திலே அந்வயித்தவர்களைத்‌ தமக்கு ஸேஷிகளாக நினைத்திருக்கையாலும்‌  க்யாதி லாப, பூஜா நிரபேஷராய்க்‌ கொண்டு

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாக நீர் நினைத்தது என் என்ன –நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் – என் பக்கல் சங்கத்தைப் பண்ணின இது இறே –-அ நாதமே குணங்களுக்கு ஆகாரமாய் ஆத்ம குண கந்தம் இல்லாதவன் –என் கண்-பாசம் வைத்த –வானவர்க்கு ஈசன் ஆனவன் என் கண் பாசம் வைத்தான் அவர்களோடு கலந்து அவர்கள் சத்தைக்காக என்னோடு கலந்து தனக்கு சத்தை உண்டாக்குகைக்காக-

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!

வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4—இவன் அர்த்தியாது இருக்க தானே -என்னைக் கொள் என்னைக் கொள் என்று மேல் மேல் எனக் கிளர்ந்து வருகிற நிரவதிக சம்பத்தானது –
நெருப்பாகக் நிச்சேஷமாக நசிக்க -என்னுதல் -தனக்கு விநாச ஹேதுவாக -என்னுதல்
கொள் என்று தமம் மூடும்; இவை விநாச ஹேது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் பிறர் கொள் என்று பிரேரித்த வாறே தம அபிபூதனாய் துராசையாலே முன்பு விநாச ஹேது வானத்தை விரும்பும்
கொள் என்று பிரேரிக்கிறது மனஸ் ஆகவுமாம்-ஹதே பீஷ்மே ஹதேத்ரோணே ஹதே கர்ணே மஹாரதே ஆசாபலவ தீராஜன் சல்யோ ஜேஷ்யாதி பாண்டவான்இவை என்ன உலகியற்கை!
ப்ரத்யக்ஷமும் அகிஞ்சித்கரமாம் படி இருப்பதே –

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-அவன் சேஷித்வத்துக்கு எல்லை யானால் போலே இவர் சேஷத்வத்துக்கு எல்லை யான படி-

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-இப்பத்தை அப்யஸிக்க வல்ல உபகாரகர் –சம்சாரத்தின் தண்மையும்-ஈஸ்வரனே ப்ராப்ய ப்ராபகங்கள் என்றும் இறே இதில் சொல்லிற்று -இத்தை அப்யஸித்து நல்வழியே போமிது இ றே உபகாரகராகை யாவது-நம்மை ஆளுடையார்கள் பண்டே–அத்தை அப்யசிக்கைக்கு ஹேதுவான சரீர பரிக்ரஹம் பண்ணின காலமே பிடித்து நாதர் என்கிறார் –

மலர் நாடி யாட் செய்ய--அதாவது–நறிய நன் மலர் நாடி-5-5-11 -என்கிறபடியே – சேஷத்வ பரிமள யுக்தமாய் ஸ்லாக்யமான ஆத்ம புஷ்பங்களைத் தேடி —ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் -4-10-11–என்று கைங்கர்ய ரூபமாக உபதேசிக்கையாலே ஜகத்தாக திருந்துகையாலும் —

நறிய நன்மலர்‌ நாடி” (திருவாய்மொழி 5-5-11 என்கிறபடியே ஸேஷத்வமாகிற பரிமளத்தை உடைத்தான ஆத்ம புஷ்பங்களைத்‌ தேடி “ஆட்செய்தாழிப்பிரானைச்‌ சேர்ந்தவன்‌ (திருவாய்மொழி 4-10-11 என்று கைங்கர்ய ரூபமாக உபதேஸிக்கையாலே ஐகத்தாகத்‌ திருந்தினபடி.-

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-பரிமளிதமான செவ்விப் பூவாக பாட்டுக்களைத் தேடிக் கொண்டு -சொல் மாலைகள் என்றும் –அடி சூட்டலாகும் அந்தாமமே -என்றும் சொல்லக் கடவது இறே-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11—முறையால் சர்வேஸ்வரனைப் பற்றினவர் -அடிமை செய்வித்துத் கொள்கைக்கு யாயிற்று -கையும் திரு வாழியும் சேர்ந்த சேர்த்தி அழகு -ஆழ்வானுடைய வ்ருத்தத்தைக் காட்டி இவரையும் வ்ருத்தவான் ஆக்கின படி-சேர்ந்தவன்-கையும் திரு வாழி யும் பொருந்தினால் போலே யாயிற்று இவர் பொருந்தின படி -கெடு மரக்கலம் கரை சேர்த்ந்தால் போலே இந்த நன்மைக்கு அடி -திரு நகரியில் பிறப்பு -ராம பக்திக்கு திரு அயோத்தியில் மண் பாடு போலே

உய்யக் கொண்டு என்கிற இழவும்--அதாவது- உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே-4-10-9- -என்று சம்சாரிகள் உஜ்ஜீவன நிமித்தமாக உண்டான இழவும் –
ஆரைக் கொண்டு என்கிற இழவும் உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகோ–7-3-4- -என்று
தனக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த இழவும் .. வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும்-
அதாவது– வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை–8-3-3-என்று அவன் சௌகுமார்யம் அறிந்து பரிகைக்கு ஒருவரும் இல்லை என்ற இழவும் தீரப் பெற்றது என்கை .எல்லாரும் உஜ்ஜீவித்து தமக்கு உசாத் துணையாய் – அவனுக்கு மங்களாசாசனமும் பண்ணுகையாலே –மூன்று இழவும் தீரும் இறே —

(உய்யக்‌ கொண்டு ஆரைக்‌ கொண்டு வாளும்‌ வில்லும்‌ கொண்டு என்கிற இழவும்‌ தீரப்பெற்றது) “உம்மை உய்யக்‌ கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி 4-10-9) என்று ஸம்ஸாரிகளுடைய அநர்த்தங்கண்டு பொறுக்க மாட்டாமல்‌ உபதேஸிக்க அவர்கள்‌ திருந்துகையாலே அவர்கள்‌ தனிமை என்கிற அவ்விழவு தீரப்பெற்றது.“ஆரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4) என்று தமக்கு உசாத்துணை யில்லை என்று சொல்லப்பட்டதுவும்‌ ஸம்ஸாரிகளடையத்‌ திருந்தித்‌ தமக்கு உசாத் துணை உண்டாகையாலே அவ்விழவும் தீரப்பெற்றது. “வாளும்‌ வில்லும்‌ கொண்டு பின் செல்வார்‌ மற்றில்லை’ (திருவாய்மொழி 8-3-3) என்று ஸர்வேஸ்வரனுடைய ஸெளகுமார்ய மறிந்து பரியக்‌ கடவார்‌ ஒருவருமில்லை என்று இழவு பட்ட விவர்க்கு பகவத்‌ விஷயத்துக்குப்‌ பரிவராய்‌ மங்களா ஸாஸநம்‌ பண்ணப்‌ பலருண்டாகையாலே அவ் விழவும்‌ தீரப்பெற்றது.-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9–அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் –நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –

இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ! ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4—வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ -கேட்ப்பார் உண்டால் தான் என்ன வார்த்தை சொல்லுவது-

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை

தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3—ஆளுமாளார் -உபய விபூதியிலும் பரிகைக்கு ஓர் ஆளில்லை -தனியே ஒருத்தரை ஆள வேணும் என்று இருக்கிறார் -நித்ய ஸூ ரிகள் பகவத் அனுபவத்தில் அந்நிய பரர் -சம்சாரிகள் சப்தாதி விஷய பரர்-ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்–ஆபரணமான திவ்யாயுதங்கள் -அவன் ஸுகுமார்யத்தாலே மலை எடுத்தால் போலே சுமையாய் தோற்றுகிறது இவர்க்கு -எதிரிகளுக்கு அஸ்திரமாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறதை -ஸுகுமார்யத்தை அனுசந்தித்த இவருக்கு மலையாய் இருக்கிறது-தாம் -தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ -எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ -நிரூபகங்கள் ஆனவை சுமையோ என்ன -அது தானே செய்கிறது –-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை வாளும் வில்லும் கொண்டு பின்னே செல்லுகைக்கு இளைய பெருமாள் மாத்திரம் ஒருவர் உண்டானாலோ –ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-என்கிறது பரிவரான நீர் இவற்றுக்கு ஆள் அன்றோ என்று தம்மை ஏவுகைக்காக –

மலர் நாடி-என்கிற இதுக்கு நறிய நன் மலர் நாடி –என்கிற இது சொல்லும் போது-சர்வ வ்யாக்யானங்களிலும் –பரிமளத்தை உடையதாய் -ஸ்லாக்யமான புஷ்பங்கள் போல ஆராய்ந்து சொன்ன ஆயிரம்-என்று பிரபந்த விசேஷணமாகச் சொல்லி இருக்கையாலே – இவருக்கு நினைவு ஆத்ம புஷ்பங்களைத் தேடி -என்கிற இது என்று கொள்ள வேண்டும் ..அன்றிக்கே
மலர்நாடி -என்கிற இது –நாடாத மலர்-1-4-9- -என்கிறதை நினைத்து அருளிச் செய்தார் என்று கொள்ளில் ஒரு விரோதமும் இல்லை ..-வாடாத மலர் அடிக் கீழ் வைக்க -என்று கைங்கர்ய பிரசங்கம் உண்டு ஆகையாலே ஆட் செய்ய -என்றதோடு சேரும் இறே-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9—‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’ என்பாரும் உளர்-ஸ்ரீ நஞ்சீயர், ‘எண் திசையும் உள்ள பூக் கொண்டு’ என்கிறபடியே,-‘தேட அரிய மலர்கள் எல்லாம் தேடி’ என்று அருளிச் செய்வர்.அபி நிவேசத்துக்கு ஈடாகத் தேட வரிதான புஷ்பங்களைத் தேடி -எண்டிசையும் உள்ள பூக் கொண்டு -என்னுமா போலே-

இப்படி உபதேசம் பலித்ததாகில்-பரீஷ்ய லோகான் – இத்யாதிப்படியே கர்ம பலமான சம்சார போகங்கள் -அல்ப அஸ்திரத்வாதி தோஷத்தையும் –நித்யனான பரமாத்வானாவன்- கர்ம சாத்யன் அல்லாமையும் –அனுசந்திக்கையால் உண்டான நிர்வேதத்தோடே சம தம உபேதனாய்- உபஹார பாணியாய்க் கொண்டு ஸ்ரோத்ரியனாய் –ப்ரஹ்ம நிஷ்டனான ஆசார்யனை உபசத்தி பண்ண -அவனும் –
நாசம்வச்தர வாசினே ப்ரப்ரூயாத் -என்கிறபடியே -ஒரு சம்வஸ்தரம் பரீஷித்து பின்னை உபதேசிக்கக் கடவனாக சொல்லுகிற சாஸ்திர மரியாதையில் சம்சாரிகள் அனுவர்திக்க இவர் உபதேசித்தார் ஆனாலோ என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –இப்படி உபதேஸம்‌ பலிக்கும்போது “பரீஷ்யலோகாந்‌ கர்மசிதாந்‌ ப்‌,ராஹ்மணோ நிர்வேத மாயாத்‌ நாஸ்த்யக்ருத: க்ருதேந தத்விஜ்ஞா நார்த்தம்‌ ஸகுருமேவாபி கச்சேத்‌ ஸமித்பாணி: ஸ்ரோத்ரியம்‌ ப்‌ரஹ்ம நிஷ்டம்‌ தஸ்மை ஸவித்‌வாநுபஸந்நாய ஸம்யக்‌, ப்ரஸமாந்தசித்தாய மமாந்விதாய யேநாக்ஷரம்‌ புருஷம்‌ வேத, ஸத்யம்‌ ப்ரோவாச தாம்‌ தத்வதோ ப்‌ரஹ்மவித்‌ யாம்‌” (முண்டகோபநிஷத்‌ 2-11) என்று ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி, தோஷாநுஸந்தாநத்தாலும்‌ பரம ப்ராப்யமான தேஸத்தைக்‌ கிட்டப் பெறாமையால்‌ உண்டான வெறுப்போடே ஸம தமாத் யாத்‌ம குணோபேதனாய்‌ ஸோபஹார ஹஸ்தனாய்க்‌ கொண்டு ஸ்ரோத்ரியனாய்‌ ப்‌ரஹ்ம நிஷ்டனான ஆசார்யனை பக்‌நாபிமாநனாய்‌ உபஸத்தி பண்ண அவ்வாசார்யனும்‌ “நாஸம்வத்ஸரவாஸிநே பரப்‌ரூயாத் என்று ஒரு ஸம்வத்ஸரம்‌ பரீக்ஷித்து பின்னையும்‌ உபதேஸிப்பான்‌ என்று சொல்லுகிற ஸாஸ்த்ரக்ரமத்திலே இவரும்‌ ஸம்ஸாரிகள்‌ அநுவர்த்திக்க உபதேஸித்தார் ஆனாலோ என்னில்‌,

ப்ரஹ்ம நிஷ்டரும் சம்வத்சர வாசிகளும் ஆகில் ஏ பாவம் பயன் நன்றாகிலும் சேராது-சூரணை -206-

(உபதேசிக்கும் ஆழ்வார் ப்ரஹ்ம நிஷ்டராகில் -ஏ பாவம் சேராது -என்றும் –உபதேசம் கேட்கும் மக்கள் சம்வத்சர வாசிகளாகில் -பயன் அன்றாகிலும் சேராது -என்றவாறு )

உபதேசிக்கும் ஆழ்வார் ப்ரஹ்ம நிஷ்டராகில் -ஏ பாவம் சேராது-அதாவது உபதேஷ்டாவான இவர் ச க்ரமமாக உபசத்தி பண்ணினவனுக்கு ஒழிய உபதேசியோம் என்று இருக்கும் ப்ரஹ்ம நிஷ்டர் ஆகில் –
அப்படி வந்து உபசத்தி பண்ணினவர்களுக்கு ப்ரீதியோடே உபதேசிக்கை ஒழிய – அநாதிகாரிகளுக்கு உபதேசிக்கப் புக்கு –-ஏ பாவம் பரமே -2-2-2–என்றும் ,-ஒ பாவம் எனக்கு இது பரமாவதே -என்று
உபதேச உபக்ரமத்தில் வெறுத்து சொன்ன உக்தி சேராது —உபதேசம் கேட்கும் மக்கள் சம்வத்சர வாசிகளாகில் -பயன் அன்றாகிலும் சேராது-அதாவது-இவர் பக்கல் உபதேசம் கேட்டவர்கள் சம்வத்சர வாசிகள் ஆகில் உபஹார பாணிகளாய் நாம் அனுவர்த்திது அன்றோ பெற்றோம் என்று இருக்கை ஒழிய – இவருக்கு பிரதம சிஷ்யர் ஆனவர் – பயன் நன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்–கண்ணி நுண்-10- -என்று பிரயோஜன சூன்யர் ஆகிலும் -அவிதரே ஆகிலும் தம்முடைய செயலாலே எல்லாம் நன்றாம் படி திருத்திக் கொள்வார் இவர் என்று –
கிருதக்ஜையாலே உகந்து சொன்ன உக்தியும் சேராது என்கை .-இப்படி ஆச்சார்ய யுக்தியும் சிஷ்ய யுத்தியும் ஆகையாலே முன் சொன்ன ஹேதுக்களாலே விமுகரைக் குறித்து உபதேசிக்க –உபதேச சுத்தியாலே சர்வரும் திருந்தி – இவருடைய இழவுகள் எல்லாம் தீர்ந்தது என்றே கொள்ள வேண்டும் என்றது ஆய்த்து–

(ஏபாவம்‌ பயனன்றாகிலும்‌ சேராது) ஸிஷ்யனுடைய அநுவர்த்தனமுண்டாகில்‌ “ஏபாவம்‌ பரமே” (திருவாய்மொழி 2-2-2) என்று ஓ பாபமே எனக்கிது பரமாவதே என்று உபதேஸோபக்ரமத்திலே வெறுத்துச்‌ சொல்லுகிற ஆசார்யோக்தியும்‌ சேராது. ஸிஷ்யன்‌ தன்‌ அநுவர்த்தனத்தாலே இவ்வர்த்தத்தைப்‌ பெற்றானாகில்‌ “பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணிகொள்வான்‌’ (கண்ணிநுண்‌. 10) என்கிற ஸிஷ்யோக்தியும்‌ சேராது. ஆகையாலே முன்பு சொன்ன க்ரமத்திலே ஸம்ஸாரிகளுடைய அநர்த்தம்‌ கண்டு பொறுக்க மாட்டாதே தம்முடைய க்ருபையாலே உபதேஸித்தார்‌ என்கிறார் –

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2—இவனுடைய பரத்வம் சாத்யமாய் -சாதிக்க வேண்டுவதே -என்ன பாபமோ என்கிறார் –ஏ என்றது ஓ என்றபடி -விஷயத்தை அதிசய ஸூசகம் –பரமே-ஞானம் பிறந்தால் குண அனுபவம் பண்ணுகை அன்றிக்கே-சிலருடைய விப்ரதிபத்தியை பரிஹரிக்கை பரமாவதே-

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-அனுத்தேச்யர் ஆகிலும் அபவ்யரே யாகிலும் எம்பெருமான் அன்றே அனாஸ்ரிதர் என்று கை விடுகைக்கும் அவிதேயர் என்று நிரசிக்கைக்கும் -நின்ற நிலையிலே துர்வ்ருத்தரையும் ஸூ வ்ருத்தர் ஆக்கிக் கொள்ளுவார் ஆழ்வார் அன்றோ-பகவத் விஷயம் போலே அதிகாரம் பார்த்துப் புகுகை யன்றியே நின்ற நிலையிலே புகுரலாம் படி இறே ஆழ்வாருடைய நீர்மை இருப்பது -இவர் ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே யாக்குமவர் ஆகையாலே செயல் நன்றாகத் திருத்தினார்-

இனி இப்படி பரே உபதேசர் ஆன போது பகவத் அனுபவம் விச்சேதம் ஆகாதோ என்கிற சங்கையில் மேல் அருளிச் செய்கிறார் —ஆனால்‌ அபரிச்சே,த்‌,யமாய்‌ நிரதிஸயபோக்யமான பகவத்‌ விஷயத்தை அநுப விக்கிற இவர்‌ பரோபதேஸம்‌ பண்ணுகிறார்‌ என்னும்போது, இவர்க்கு அவ்வநுபவம்‌ கூடினபடி எங்கனே என்னில்‌, இவருடைய அநுபவ பரீவாஹ ரூபமான சொற்கள் தானே பரோபதேஸமா யிருக்கையாலே உள்ளே அநுபவமானது செல்லா நிற்கச்‌ செய்தே பரோபதேஸமாயிருக்கும்‌ என்கிறார்‌.

மெய் நின்று மங்க ஓட்டுக்கு நடுவு அநுபவ கர்ப்ப உபதேசம் —சூரணை-207-

(அநுபவ கர்ப்ப உபதேசம்-அனுபவம் மனசிலே செல்லா இருக்கும் பொழுதே உபதேசம் என்றவாறு )

அதாவது-மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே–திருவிருத்தம் –1- -என்றது முதல்- மங்க ஒட்டு உன் மா மாயை -திருவாய்-10-7-10–என்கிறது அளவாக நடு உள்ள நான்கு பிரபந்தங்களும் அனுபவம் உள்ளே நில்லாச் செய்தே இருக்கும் பர உபதேசம் என்கை .. இவர் தமக்கு அனுபவ கர்பமான உபதேசமும் ,உபதேச கர்ப்பமான அனுபவமுமாகவே செல்லும் என்று இறே-நம் முதலிகள் அருளிச் செய்வது .. ஆகையால் இவருக்கு அனுபவ விச்சேதம் ஒருக் காலும் இல்லை இறே

(மெய்ந்நின்று மங்கவொட்டுக்கு நடுவு) “மெய்ந்நின்று கேட்டருளாய்‌ அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பமே’ (திருவிருத்தம்‌ 1 என்று உபக்ரமித்து“மங்கவொட்டுன்‌ மாமாயை” (திருவாய்மொழி 10-7-10) என்கிறதளவாக நடுவுள்ள நாலு ப்ரபந்தமும்‌ அநுபவம்‌ உள்ளே செல்லா நிற்கச்‌ செய்தே பரோபதேஸமாயிருக்கிறது; இது தான்‌ ஸ்வாநுபவகர்ப்ப, பரோபதேஸமாய்‌ பரோபதேஸ முகத்தாலே ஸ்வாநுபவமாயிருக்கையாலே எல்லா அவஸ்தையிலும்‌ இவர்க்கு அநுபவத்தில்‌ குறை யில்லை

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 
–1-இப்படி நிலை நின்ற ஸ்வபாவம் -உதிரக்  கூறை காட்டுகிறார் -என்று அம்மாள்–ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் பெருமாளுக்கு ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே- பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஆளவந்தார்-ஆழ்வார்  பிறர் படியை காட்டுகிறார்-அம்மாள் நிர்வாஹம்-தம் படியைக் காட்டுகிறார்  -ஆளவந்தார் நிர்வாஹம்இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்-இது ஒரு வெட்டு – பொல்லா  ஒழுக்கம் இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு–ஆச்சார்யன் உபதேசத்துக்கும் கேளாதே பிரமாணங்களாலும் பேதிக்க ஒண்ணாதே இதுவே ஸ்வரூபம் என்னலாம் படி இருக்கை–தேவரீர் திருவடிகளுக்கு இட்டுப் பிறந்த இஜ் ஜன்மம் தப்பாமே பட்டேன் இது என்று கருத்து –இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை (நின்ற நீர்மை விட்டுப் பிரியாத ஸ்வ பாவங்கள் )-அநாதி காலம் பரம புருஷார்த்தத்தை இழந்து சம்சாரத்தில் அகப்பட்டுக் கிடந்த இதில் அநு தாபம் தோற்றும் படி(நீர்மை )

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-தாம் அர்த்திக்கச் செய்தேயும் தம்முடைய பிரக்ருதியால் உண்டான தேகத்தில் சங்கத்தால் எம்பெருமான் தம் வார்த்தையை ஆதரியா விட்டவாறே -சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –

ஆக இப்படி இவருடைய-பர உபதேச விஷயங்களும் – உபதேச ஹேதுக்களும் – உபதேச சாபல்யமும் –
உபதேசம் தான் அனுபவத்தை விட்டு இராது என்னும் இடமும் சொல்லிற்று ஆய்த்து —

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading