ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
செவிலித்தாய் பாசுரம்-தலைவி பிரிவு ஆற்றாமை வருந்தும் நிலையைக் கண்டு இரங்கிப் பேசும் பாசுரம்-நங்கள் வரிவளை யாயங் காளோ. நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே-8-2-1-வளையல் களைந்து போல்-சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வேங்கட வாணனை வேண்டிச் சென்று-அதே போல் இங்கும் உள்ளதே-வட மாருதம் -வடக்கில் இருந்து வருவது-சரத்காலம் வடமாருதம் -ஐப்பசி கார்த்திகை-வடக்கு நோக்கி போகும் தென்றல் காற்று அதுக்கு முன் உள்ள ருது-தென் மேற்கு வட கிழக்கு காற்றுக்கள் –
கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிற தலை மகளைக் கண்ட திருத் தாயார்-
பாதகங்களின் பெருமையையும் –இவள் ஆர்த்தவத்தையும் அனுசந்தித்து –என்னாய் விளையக் கடவதோ -என்கிறாள் –(மானஸ அனுபவம் கிடைத்து பாஹ்ய அனுபவம் கிட்டாமையால் தளர்ந்து )
இப்படி மானஸ அனுபவம் நடக்க பாஹ்ய அனுபவம் ஸித்தியாமையாலே வந்த தளர்த்தியாலே
லௌகிக பதார்த்த தர்சனம் ஸ்மாரகமாய்க் கொண்டு இவரை ஈடுபடுத்தின படியைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் நொந்து உரைத்த பாசுரத்தை வாடைக்கும் மதிக்கும் ஆற்றாது வளை இழந்த தலை மகளைக் கண்டு பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்-திரிகின்றது வட மாருதம்-மத்த கஜமானது ஆளைக் கணிசித்து உலாவுமாப் போலே உலவா நின்றது –நாயகனுடைய தண்ணளி அற்ற ஸமயம் பார்த்து நலிவதாகத் திரியா நின்றது –அன்றிக்கே வாடையானது குளிரக் கடவது இறே -அந்த சைத்யம் மாறாடிச் சுடா நின்றது –திங்கள் இத்யாதி-இதில் ஸ்வ பாவம் அனுபவித்த வாறே நாம் தான் பேசாது இருக்கிறது என் என்று சந்திரனும் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான்–வெம் தீ-நெருப்புச் சுடுமாப் போல் அன்று இறே நீர் கொதித்தால் சுடுவது-முகந்து சொரிகின்றது-அங்குக் குறைவற்றுக் கிடந்த படி-அதுவுமது-வாடையோ பாதியும் சந்திரனோ பாதியும் பாதகமாவன சில யுண்டு இறே-ஒரு கடலோசை
அன்றில் -என்றால் போலே-குளிர்ந்து அழகிய திருத்துழாயைப் பெற அபி நிவேசத்தாலே விண்ணில் யுள்ள அவனால் பெற்ற வர்ணத்தை அமுக்கிப் பசுமை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது-என்னாம் கொல் என் மெல்லியற்க்கே-ம்ருது ஸ்வ பாவையான என் மகளுக்கு என்னாய் முடியுமோ –
திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் –
நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –72-கீழ்-அதிசங்கை தீர்த்த மாத்ரமாய்-ஸ்வ அபேஷிதமான பாஹ்ய சம்ச்லேஷம் பிறவாமையாலே கலங்கி-அவஸ்தாந்தரா பன்னராய்-ஸ்ரீ சர்வஞ்ஞனான அவன் அறிய-நாம் அறியாதே இருக்க நமக்கு சம்சாரத்தில் நசையும் யுண்டாக வேனும என்று பார்த்து
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
நங்கள் வரிவளையில் அர்த்தத்தை-நம் கருத்தை -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்
திரிகின்றது வட மாருதம் –வாடையானது -மத்தகஜம் ஆளை கணிசித்து உலாவுமா போலே உலாவா நின்றது –(சஞ்சரிக்கின்றது முதல் இரண்டு நிர்வாஹங்கள்-மாறாட்டம் -மூன்றாவது நிர்வாஹம் )
நாயகனுடைய தண்ணளி யற்ற சமயம் பார்த்து நலிவதாக திரியா நின்றது –
அன்றிக்கே –வாடை யாவது குளிரக் கடவது இறே –அந்த சைத்தியத்தை மாறாடி சுடா நின்றது –திங்கள் இத்யாதி –இதனுடைய ஸ்வ பாவம் அந்யதாபவித்தவாறே –நாம் தான் பேசாது இருக்கிறது என் –என்று சந்தரன் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான் –வெம்தீ-நெருப்பும் காற்றும் கூடிற்று காணும் –
நெருப்பு சுடுமா போல் அன்று இறே நீர் கொதித்தால் சுடுவது –முகந்து சொரிகின்றது –அங்கு குறைவற்று கிடக்கிறது –வாடையோபாதியும் சந்த்ரனோபாதியும் பிரிந்தார்க்கு பாதகமாவன சில உண்டு இறே –ஒரு கடலோசை -அன்றில் -தென்றல் -விடை மணி ஓசை குழல் இசை -குயில் -என்றாப் போலே – இவற்றிலே ஓன்று புத்திஸ்தமானத்தை-அதுவும் அது –அதினுடைய பாதகத்வத்தில் உறைப்பு -தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே அதுவும் அப்படியே -என்கிறாள் –(பேதை பாலகன் அதாகும் போல் )-அன்றிக்கே –திரிகின்றது என்றது(சஞ்சரிக்கின்றது என்ற பொருளில் அதுவும் அது ) அவ் வாடையும் சந்த்ரனோபாதி நெருப்பை முகந்து சொரியா நின்றது -என்கை —
கண்ணன் இத்யாதி –புறம்பே சிலர் பாதகராக நின்றார்கள் என்று சொல்ல வேணுமோ –
நங்கை-நம் கை – பட்டவை நலிகிறபடி கண்டால் -அவதரித்து ஸூலபனான இது தான்
காதா சித்கதம் ஆகையாலே -என்றும் ஒக்க ஓர் இருப்பேயாய் காட்சி கொடுக்கிற
(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர் இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 – ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் ) தண்ணம் துழாய் -இத்யாதி –அவையானால் கொண்டு இட்டவை இறே –ஸ்வாபாவிகமான நிறமும் வேறுபடா நின்றது –தண்ணம் துழாய் -இத்யாதி-பதி சம்மாநிதா -அயோத்யா காண்டம் –18-21 –
கணவரால் நல்ல செய்தி கூறப் பட்ட சீதை என்று-அவன் தோளின் மாலையை வாங்கி -இட்டுக் கொண்டு ஆடும்படி நினைத்து ஆயிற்று – உடம்பு வெளுக்கிறது –வண்ணம் இத்யாதி –ஸ்வாபாவிகமான நிறமானது பயலையாய்க் கொண்டு உடம்பு அடைய பரவா நின்றது –என்னாம் கொல் இத்யாதி – ஒரு வாடையும் வை வர்ணயமும் வேண்டாதபடி –ம்ருது ஸ்வபாவையாய் இருக்கிற இவளுக்கு –அதுக்கு மேலே-இவையும் ஆனால் என்னாய் விளையக் கடவதோ –(க்ஷண விரஹ அஸஹிஷ்ணுத்வம் )
திரிகின்றது வடமாருதம்--மத களிறு ஆளைக் கணிசித்து உலாவுமா போலே -வருத்தம் செய்வதில் கருத்தை வைத்து திரிதல் -விகாரப்படுகிறது என்றுமாம் –இயற்கையான குளிர்ச்சி மாறி வெவ்விதாயிற்றே-திங்கள் வெந்தீ முகத்து-சொரிகின்றது -வெவ்விய நெருப்பை குடத்தையிட்டு மொண்டு சொரியுமா போலே –-வெந்தீ -லோகத்தில் உள்ள தீயில் வியாவர்த்திக்கிறது-அதுவுமது -மீண்டும் சொல்ல வாய் கூசி –அதுவும் -அது என்கிறாள் –படியின் மேல் வெம்மையைப் பகரினும் பகரு நா முடிய வேம் -கம்பர் –என்னலாம் படி-கண்ணன் விண்ணூர் தொழவே-சரிகின்றது சங்கம் –செயற்கை அழகு குலைந்தமை–தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை-விரிகின்றது முழு மெய்யும்-இயற்க்கை அழகு குலைந்தமை-வாடை திங்கள் சொரியும் வெப்பத்துக்கு ஆற்றாமல் தண்ணம் துழாயை நாடி –
துயரங்களை பொறுக்க மாட்டாத மென்மை உடையவள் –மெல்லியற்கே-
திரிகின்றது வடமாருதம்-வாடைக்காற்று உலவா நின்றது – கொல்லும் யானை திரிகின்றது -என்னுமா போலே–திங்கள் வெந்தீ முகத்து சொரிகின்றது-பூர்ண சந்த்ரனானது லௌகிக அக்னி தண்ணீர் என்னும்படியான கொடிய நெருப்பைக் குடத்தை இட்டு முகந்து சொரிவாரைப் போலே சொரியா நின்றது-அதுவுமது ,-முன்பு திரிகிற வடமாருதமும் அப்படியே–கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்-கிருஷ்ணனுடைய பரம வ்யோம ஸப்த வாஸ்யமான பரமபதத்தை
நித்ய அஞ்சலி பந்தம் -மோக்ஷ தர்மம் -1-64–பண்ணி அனுபவிக்க வேணும் என்கிற மெலிவாலே வளை சரியா நின்றது-சரிகின்றன -என்றும்-சொல்லுவர்—தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது முழு மெய்யும்-முழு மதியாலும் வாடையாலும் யுண்டான வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில் அபி நிவேசத்தாலே ஸ்வா பாவிகமான நிறத்தை அமுக்கி பயலை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது –என்னாம் கொல் என் மெல்லியற்கே-ஆற்ற மாட்டாத ம்ருது ஸ்வ பாவையாய் எனக்குத் துணையான இவளுக்கு என்னாய் முடியுமோ என்று வெறுத்தாள் ஆயிற்று –இத்தால்-வாடையும் திங்களும் வெந்தீயும் சொரியும் என்கையாலே ஆஸ்வாஸ கரருமாய் ப்ரகாஸ கரருமாய்க் கொண்டு லோக உபகாரகரான சீதள ஸ்வ பாவரும் பகவத் விஸ்லேஷ தசையில் தாப ஹேதுவாவர் என்ற படி—கண்ணன் -இத்யாதியாலே ப்ராப்ய தேசத்தில் அபி நிவேசம் பிறந்தால் தன் கையில் யுண்டான மினுக்கமும் குலைந்து (கை வளையும் மேகலையும் காணேன் )அத்தலையில் போக்யதையில் யுண்டான ப்ராவண்யத்தாலே அசாதாரண ஆகாரமும் அந்யதா பாவிக்கும் படியான
ஆர்த்தி அதிசயத்தைச் சொல்லுகிறது-என்னாம் கொல் -இத்யாதியாலே -தங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவானவருக்குப் பிறந்த ஆர்த்தி என்னாய் முடிகிறதோ என்று ஸூஹ்ருத பூதர் வெறுத்து யுரைத்தார் ஆயிற்று
ஸ்வாபதேசம் –
திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து-சொரிகின்றது அதுவுமது- இனிய பொருள்கள் எல்லாம் அவனை நினைவு படுத்தி ஆழ்வாரை இப்பாடு படுத்துகின்றனவே –
கண்ணன் விண்ணூர் தொழவே-சரிகின்றது சங்கம் –சர்வ ஸூலபன் எம்பெருமான் பரம பதத்தில் விருப்பம்-உண்டானதால் பார தந்தர்யம் இழக்க வேண்டி வருமே
தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை-விரிகின்றது முழு மெய்யும் —போக்யதையில் ஈடுபட்டு ஸ்வரூபமும் மாறி ஆற்றாமை விஞ்சிய படி
என்னாம் கொல் என் மெல்லியற்கே-எங்களுக்கு உரியரான ஆழ்வாருக்கு இது என்னாய் முடியுமோ –
ஸ்வாப தேசம்
இத்தால்-ஆழ்வாருடைய ப்ரக்ருதியா உண்டான மார்த்வத்தையும் ஆற்றாமையையும்
இவர் ஆசைப்பட்டது அந்தரங்க விருத்திகள் ஆகையால் அது பெறாமையால் வரும் ஆற்றாமை பாடாற்றலாம் அல்லது என்னும் இடத்தையும் கேட்டவர்கள்- இனி இவரைக் கிடைக்க மாட்டாதோ என்னும்படியான தம் தசையைப் பார்ஸ்வத்தவர்கள் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –
தாத்பர்யம்–பகவத் அலாபத்தால் தளர்ந்த தசையில் பாதகமான லௌகிக பதார்த்த தர்சனத்தாலே
நொந்த ஆழ்வார் தசையைக் கண்டு பார்ஸ்வத்தார் திருத் தாயார் பாசுரமாக அருளிச் செய்கிறார்
நாயகன் பிரிந்த சமயம் பார்த்து வந்த மாந்த மாருதம் பூர்ண சந்திரன் போன்றவை இவளை மேலும் நலிய வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில் அபி நிவேசத்தாலே இவள் அங்கே- பரமபதம் சென்று-நித்ய அனுபவம் பெற்று ஆனந்திக்க ஆசைப்பட்டு இருக்க இவற்றின் நலிவாலே இவள் காலம் என்னவாய் ஆகுமோ என்று வெறுத்துப் பேசும் பாசுரமாய்ச் செல்லுகிறது –
8-2-நங்கள் வரி வளை யாயங்களோ-ப்ரவேஸம்-
நங்கள் வரி வளை–பிரவேசம்
மேல் திருவாய்மொழி பிராபகத்தில் நோக்கு -இத் திருவாய்மொழி பிராப்யத்திலே நோக்காய் இருக்கிறது –
மேலே அவன் குணங்களிலும் ஸ்வரூபத்திலும் ஐயம் கொண்டு தெளிந்து
வணங்குமாறு அறியேன் -என்று தம் தலையிலே ஒரு சாதனத்தை செய்வதற்கு உரிய தகுதி இல்லாமையை தெரிவித்து
யானும் நீ தானே யாவதோ மெய்யே -என்று தம் பாரத்தை அவன் பக்கலிலே வைத்தமையைச் சொல்லி
இப்படி பிராசங்கிகமாக-அவனே பிராபகன் என்னும் இடத்தை அறுதி இட்டார் –
அவனே பிராபகனாம் இடத்தில் பேற்றுக்கு கால தாமதத்துக்கு–காரணம் இல்லையாய் இருக்க –
அவன் வந்து முகம் காட்டாது ஒழிதற்கு காரணம் உண்டாக வேண்டும் என்று பார்த்தார் –
அதில் அவன் பக்கல் பார்க்கலாவது ஒன்றும் இல்லை-இதுக்கடி நம் பக்கலிலே ஆக வேண்டும் என்று பார்த்தார்
என்னுடைய பாபமே சொல்ல முடியாதபடி மிகுதியும் இருக்கிறது -இதில் சந்தேகம் இல்லை -என்றாளே அன்றோ பிராட்டி –
மமைவ துஷ் க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந சம்சய-சமர்தாவபி தௌ யன்மாம் நாவே ஷேதே பரந்தபௌ-சுந்தர -38-48
இவரும் அப்படியே பல நாள் அலைந்து திரிந்து–கண்டவை எல்லாவற்றிலும் ருசி பண்ணிப் போந்தோம்-
நம்முடைய முன்னைய செயல்களையும் நமக்கு இப்போது உள்ள அளவையும்
சர்வஞ்ஞனான சர்வேஸ்வரன்-அறியாமை அல்லை –
பூர்வ ஸூஹ்ருதம் -நாமும் அறியாமல் -சாஸ்திரமும் அறியாதே கிடப்பது ஈஸ்வரன் அபிப்ராயத்தால்
மடி மாங்காய் இட்டு யாதிருச்சிகம்-போலே –
நாம் அறியாது இருக்க–அவன் அறிய — அவன் பக்கல் ருசியிலே நமக்கு குறை உண்டாக வேண்டும்-என்று பார்த்து
அது உண்டாகவுமம் இல்லையாகவுமாம் –
புறம்பு உண்டானவற்றில் ருசி இல்லை என்னும் இடத்தை அவன் திரு உள்ளத்தில் படுத்துவோம் -என்று பார்த்து –
பிராப்யத்துக்கு தடையாக உள்ளவற்றிலும் -கிளி முதலானவை —
பிராபகத்துக்கு தடையாக உள்ளவர்கள் இடத்திலும் -தாயார் முதலானோர்–
பிராப்ய பிரதானம் தானே இது —
பிராபக விரோதித்வம் -தத் சிசுரூஷைகளால் பலன் கிட்டும் -அதனால் தாயார் பிராபக விரோதி என்றவாறு
தமக்கு ருசி இல்லாமையை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
சர்வேஸ்வரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி–அவன் தானே வரக் கண்டு இருக்கை அன்றிக்கே-
அபி சாரிகையாய் –அபி நிவேசத்துடன் -அவன் இருந்த தேசத்துக்கு ஏறப் போவதாக ஒருப்பட-
இதனை நினைத்த தோழிமார் தொடக்கமானார்–உனக்கு இது ஆகாது காண் -என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க-
அவர்களைக் குறித்து
தோழிமார் தொடக்க மானவர்களிலும்–மற்றும் உள்ளவர்களிலும்–நசை இல்லாமையை அவர்களுக்கு அறிவிக்க பாசுரத்தாலே-
தமக்கு நசை இல்லாமையை அவன் திரு உள்ளத்திலே படுத்துகிறார் –
இரண்டாம் திருவாய் மொழியில் -தம்முடைய ஆகாங்ஷானு ரூபமாக அகவாயிலே அவன் வந்து முகம் காட்டினப்பாடியை அனுசந்தித்தவர் –
அவனுடைய பூர்த்தியைக் கண்டு பாஹ்ய சம்ச்லேஷம் பண்ண அபி நிவேசித்து அதித்வரித சித்தராய் ப்ராப்ய பூதனான ஈஸ்வரனுடைய
அபிகம்யத்வ ஸூ சகமான ஸுலப்யாதி குணாவத்தையையும்
அனுபாவ்ய ஆகாரத்தையும்
ஆகர்ஷகமான ஆபி ரூப்யத்தையும்
அநிஷ்ட நிராசகமான பரிகரவத்தையும்
அபரிச்சேதயமான உஜ்ஜ்வல்ய அதிசயத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அவபந்தும் அசக்தையையும்
அபி நிவேச ஜனகமான ஆகார விசேஷங்களையும்
அந்நிய சக்த விஷயத்தில் அஸூல பதையையும்
அநந்யார்ஹத்வ ஆபாதகத்வத்தையும்
சித்த அபஹாரியான திவ்ய விக்ரஹ உச்ச் ராயத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரனை அனுபவிக்கும் இடத்தில் இவ்வருகு யுண்டான அனுபவத்தில் சங்கம் அற்றால் அல்லது
சித்தியாது என்று அறுதி இட்டு த்வரையாலே ஆர்த்தரான தம்முடைய ஆர்த்தியை ஆற்றுகைக்காக
உன்முகரான ஸூ ஹ் ருத பிரக்ருதிகளைக் குறித்து தம்முடைய நிஸ் சங்கதையை வெளியிட்ட பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் தன்னுடைய அபிசரண உத்யோகத்தாலே தோழிமார் தாய்மாராடு
தான் வளர்த்த கிளி பூவை மயில் குயில்களோடு வாசியற சர்வர் பக்கலிலும் சங்கம் அற்று
தன்னுடைய ஸ்த்ரீத்வாதி குணங்களையும் அநா தரித்து அவன் வடிவு அழகிலே அபஹ்ருத சித்தையான
ஆகாரத்தைப் பேசின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-
நங்கள் வரி வளை யாயங்களோ–நான் சங்கை அற்று இருக்கிறேன்–
நீங்கள் சங்கை உடையீர் கோளாய் இருக்கின்றீர் கோள் அல்லீரோ –
(சாடு -கீழே பட்ட சங்கை இவளுக்குப் போந்ததே
இவள் முன்பு பட்ட அதி சங்கை தவிர்ந்து அன்றோ இருந்தாள் )
வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2
தன் பக்கல் தொங்காதவை எல்லா வற்றுக்கும் புகல் அங்கே என்று இருக்கிறான் –
இவளுக்கு கை முதல் அங்கே அன்றோ–
சங்கு தங்கு முங்கை நங்கை– ஸ்வ ரஷணம் ஸூவான்வயம் போனதே -அவன் இடம் சேர்ந்ததே -அவனே சித்த உபாயம் என்றபடி
இது வாகில் உன் துணிவு காலம் சென்றவாறே நீயே இளைத்து மீளுகிறாய் -என்ன
கள்வன் —
நோக்காலே தன் செல்லாமையைக் காட்டி என் ஆத்துமாவையும் ஆத்துமாவோடு–சம்பந்தப் பட்ட பொருள்களையும் கொள்ளை கொண்டவன் –
கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-
ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-
நினைக்கும் கால் நன்கு உணர்வாருக்கும் -ஒருவனாக ஊழி தோறு ஊழி உணரல் ஆகா –
சூழல் உடைய சுடர் கொள் ஆதித் தொல்லை அம் சோதி ஆழி வலவனை –ஆதரிப்பும்–ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம்–
தோழியர்காள் நம் உடையமே தான்– சொல்லுவதோ இங்கு அரியது தான் -என்று -விலஷண வஸ்துவே சுலபன் ஆனால் பற்ற அடுக்குமோ விட அடுக்குமோ -என்கிறாள் –
தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப் பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க் கண் வளர்கின்ற மாலே-8-2-6-
என்னோடே இட்டீடு கொண்டு அல்லது தரியாதானாய் நம்முடைய நிறத்தை கொண்டது–தன்னுடைய வைலஷண்யத்தை பாராதே அன்றோ–
மா மலர்க் கண் வளர்கின்ற மால்–
சம்பந்தம் உள்ளவன்–மலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் என் அளவில் அலரக் காண்கிறிலேன் -என்றது-
விசேஷ கடாஷம் செய்யக் காண்கிறிலேன் -என்றபடி-எங்கும் பக்க நோக்கு அறியான் என்றவாறே -இப்பொழுது இத்தைச் சொல்கிறார் –
கூக்குரல் கேட்க அண்மையில் இருப்பவன் ஆதலின்–குடந்தை மலர்க் கண் வளர்கின்ற -என்கிறாள் –
வல்லி வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மால் தொல்லை அம் சோதி -என்று தொடங்கி
ஆர்க்கு இடுகோ இனிப் பூசல் சொல்லீர் -என்று முடிக்க –
மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-
ஓலம் இட
கார்யப்பாடு அற கூப்பிடும்படி
என்னை பண்ணி
ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாசாயா ஸ்வநுரக்த ஸூஹ்ருஜநே–ராமே பிரமாதம் மாகார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி -அயோத்யா -40-5-
வனத்தில் வசிப்பதற்காகவே படைக்கப் பட்டாய் -என்றபடி –
இதுவே யாத்ரையாகச் செய்து
விட்டு -என்னை தன் பக்கலில் நின்றும் பிரித்து
இட்டு -அறிவு இல்லாத பொருளைப் போலே பொகட்டு
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் –
தன் வடிவைக் காட்டுகின்றிலன்-தான் இருந்த இடத்துக்கு ஓர் அடையாளமும் காட்டுகின்றிலன் -என்றபடி
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே--4-2-8-
அவன் சுனை உடையவன்–புறம்பேயும் ஒரு விஷயத்தில் நசை கிடக்க தனது அனுபவத்தைக் காட்டிக் கொடான்
மேலே-வணங்குமாறு அறியேன் என்று பிராபக ஆபாசங்களை விட்டார்–இங்கே பிராப்ய ஆபாசங்களை விடுகிறார்
காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-
கை செயற்பாலது ஒரு கோல வடிவு -என்பதற்கு—ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! -சித்திரம் உயிர் பெற எழுதினாப் போலே இருந்துள்ள கோல வடிவு என்றும் பொருள் கூறலுமாம் –
கை செயல் -அப்பால் -சித்திரம் வரைய முடியாமல் என்றுமாம் -செயல் கிருத்ரிமம் வடிவு அக்ரித்ரிமம் –
என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் –
நான் இரண்டு ராஜ்ஜியம் இழந்தேன் –
இந்த்ரன் ராஜ்ஜியம் பெற்றுப் போந்தான்-
மகாபலி ஔதார்யம் பண்ணிப் போந்தான்-
ஆஸ்ரித பரதந்த்ரன் ஸுலப்யன் பட்டம் பெற்றான் அவன் –
நான் எனக்கு எல்லா செல்வமான அடக்கத்தையும் நாணத்தையும் இழந்தேன்–
மேலே நான்காம் பாசுரத்திலே -இனி என் கொடுக்கேன் -என்று சொல்லிற்று-
அதற்கும் இதுக்கும் வாசி என் என்னில்
பெரிய திருவடி முதுகில் இருப்பிலும் -கையும் திரு ஆழியுமான சேர்த்தியிலும் தோற்று-மாயக் கூத்தனை ஆதரித்து -கலக்கச் சென்று
கிட்டாமையாலே வந்த இழவு அதலில் –
ஸ்ரீ வாமனின் உடைய அழகிலும் சீலத்திலும் தோற்ற மகா பலியைப் போலே–எல்லா வற்றையும் இழந்தேன் என்கிறார் இப் பாசுரத்தில் –
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-
இனி செய்வது என்
இப்படி ஆன பின்பு எதனைச் செய்வேன்
இவற்றை மீட்கவோ
அவனை நியமிக்கவோ
நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே
செவ்விப் பூவிலே வண்டு படிந்தாப் போலே சேர்ந்தது-
பாதமடைவதன் பாசத்தாலே
மற்ற வன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-
திருவடிகளை கிட்டுகையில் உண்டான விருப்பத்தாலே புறம்பு உண்டான வலிய பற்றுக்களை அடியோடே விட்டார்
இது வாயிற்று இத் திருவாய் மொழியில்-8-2- சொல்லிற்று ஆயிற்று-என்றது-
புறம்பு உண்டான பற்றுக்களை அற்று திருவடிகளை ஆசைப் பட்டவர் அல்லர் –
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14 என்றபடியே-
திருவடிகளின் பற்றாலே -ஒரு காரணம் பற்றி வந்த புறம்பு உண்டான பற்றினைத் தவிர்ந்தவர் -என்றபடி
தடங்கல் விலகினால் தானே கிட்டும் -பிராப்யாந்தர சம்பந்தம் அறுத்த பின்பு தன்னடையே வருமே
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply