ஸ்ரீ மனு தர்ம சாஸ்திரம்(மூலமும் உரையும் )- அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா அவர்கள்-10-11-12-அத்யாயங்கள்–

அத்தியாயம் – 10

அதீயீரம்ஸ் த்ரயோ வர்ணா: ஸ்வகர்மஸ்தா த்விஜாதய: |
ப்ரபூயாத் ப்ராஹ்மணஸ் தேஷாம் நேதாராவிதி நிஷ்சய: [] 1

பிராம்மண,க்ஷத்ரிய, வைசியர் என்னும் மூவர்ணத்தாரும் வேதங்களைக் கற்று, தத்தம் வருணத்துக்குரிய தொழில்களைச் செய்ய வேண்டும்.-பிராம்மணர்கள் வேதங்களைக் கற்ற பிறகு மற்றவர்களுக்கு கற்பிக்கும் தொழிலை மேற்கொள்ள வேண்டும். த்ரிய,
வைசியர்கள் வேதங்களைக் கற்ற பிறகு அவரவர்க்குரிய தொழிலைச் செய்ய வேண்டும். வேதங்கள் கற்றுக் கொடுப்பது இவர்களது தொழிலன்று. அது பிராம்மணன் தொழில். கற்றுக்கொள்வதை மட்டும் இவர்கள் செய்ய வேண்டும்.

ஸர்வேஷாம் ப்ராஹ்மணோ வித்யாத் வ்ருத்யுபாயாந் யதாவிதி | ப்ரப்ரூயாதிதரேப்யஷ் ச ஸ்வயம் சைவ ததா பவேத் || 2
பிராம்மணன் மற்ற வர்ணத்தாருக்கு அவரவர் செய்ய வேண்டிய தொழில் எது என்பதை எடுத்துக்கூற வேண்டும். தானும் தன் குலத்தொழிலை நன்கு கடைப்பிடிக்க வேண்டும்.

வைஷேஷ்யாத் ப்ரக்ருதி ஷ்ரைஷ்ட்யாந் நியமஸ்ய ச தாரணாத் |
ஸம்ஸ்காரஸ்ய விசேஷாச் ச வர்ணாநாம் ப்ராஹ்மண: ப்ரபு: |3

தினமும் வேத மோதி ஹோமங்கள் செய்து தேவர்களுக்கும் பூதங்கணங்களுக்கும் பித்ரு கணங்களுக்கும் மனிதர்களுக்கும் சந்தோஷம் தருகின்றதால் பிராம்மணன் உயர்ந்தவன். அவனுடைய இந்த கிரியைகளால் பிறர்க்கு வேதங்களைச் சொல்லிக் கொடுக்கும்
குருவாகிறான். ஜீவனத்துக்குரிய உபாயத்தைக் காட்டும் பிரபுவாகிறான்.

ப்ராஹ்மண: க்ஷத்ரியோ வைஷ்யஸ் த்ரயோ வர்ணா த்விஜாதய: 1
சதுர்த ஏகஜாதிஸ் து சூத்ரோ நா அஸ்தி து பஞ்சம: ||-4

பிராம்மண, க்ஷத்ரிய, வைசியரென்னும் மூவர்ணத்தாரே த்விஜர்கள் எனப்படுவார்கள். இவர்கள் உபநயனம் என்னும் பூணூல் போடுவதும் காயத்ரி மந்திரத்தை உபதேசம் பெறுவதுமான கிரியையை செய்து கொள்ள வேண்டும். இதனால் இரண்டாம்
முறை பிறப்பெடுத்தவராகின்றனர். அதனால் இருமுறை பிறந்த வர்கள் என்னும் பொருள் படும்படி த்விஜர்கள் என்று சொல்லப் படுகிறார்கள். அடுத்து நாலாம் வர்ணத்தவன் சூத்திரன். ஆக மொத்தம் நான்கு வர்ணங்கள்தான் உண்டு. ஐந்தாவது என்று எதுவும் கிடையாது.

ஸர்வ வர்ணேஷு துல்யாசு பத்நீஷ்வக்ஷ தயோநிஷு | ஆனுலோம்யேந ஸம்பூதா ஜாத்யா ஞேயாஸ் த ஏவதே 1 5
இந்த நான்கு வர்ணத்திலும் அந்தந்த வர்ணத்து ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளே, துல்லியமாக அந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்களாவர். கலப்பினத்தால் பிறந்தவர்கள் வேறு பெயர்களோடு விளங்குவார்கள்.

ஸ்த்ரீஷ்வநந்தரஜாதாசு த்விஜைருத்பாதிதாந் சுதாந் | ஸத்ருஷாநேவ தாநாஹுர் மாத்ருதோஷவிகர்ஹிதாந் 6
த்விஜர்கள் தத்தமக்கு அடுத்திருக்கின்ற வர்ணத்துப்பெண்களிடம் பெற்ற பிள்ளைகள் அவர்களை ஒத்தவர்களாக இருந்தாலும், தாய் வேறு வர்ணத்தவளாதலால் தாயின் கலப்பின தோஷத்தைப் பெற்றவர்களாக இருப்பர். ஆனாலும் தந்தையின்வர்ணத்தைச் சேர்ந்தவர்களேயாவர்.

அநந்தராசு ஜாதாநாம் விதிரேஷ ஸநாதந: | த்வ்யேகாந்தராசு ஜாதாநாம் தர்மயம் வித்யாதிமம் விதிம் || 7

தத்தமது இனத்துக்கு அடுத்த இனத்துப் பெண்ணை மணந்து பெறும் பிள்ளைகளுக்குத்தான் இது பொருந்தும். அதற்கடுத்த இனத்துப் பெண்களிடம் பிறக்கும் பிள்ளைகளைப்பற்றிக் கூறு கிறேன், கேளுங்கள்:

ப்ராஹ்மணாத் வைஷ்ய கந்யாயா மம்படோ நாமஜாயதே |
நிஷாத: சூத்ரகந்யாயாம் ய: பாரஷவ உச்யதே|| 8

பிராம்மணனுக்கு வைசிய மனைவியிடம் பிறந்த பிள்ளைக்கு அம்பஷ்டன்’ என்று பெயர்.
பிராம்மணனுக்கு சூத்திர மனைவியிடம் பிறந்த பிள்ளைக்கு நிஷாதன்’ என்று பெயர். இவனை ‘பாரஷவன்’ என்றும் கூறுவார்கள். இந்தப் பிள்ளை சூத்திரனைவிட மேம்பட்டு இருப்பதினால் பாரஷவன் எனப்படுகிறான்.

க்ஷத்ரியாச் சூத்ரகந்யாயாமத் க்ரூரா ஆசார விஹாரவாந் |
க்ஷத்ர சூத்ரவபுர் ஐந்து ருக்ரோ நாம ப்ரஜாயதே || 9

க்ஷத்ரியனுக்கு சூத்திரப்பெண்ணிடம் பிறந்தவன் ஆசார மற்றவனாக குரூரமான காரியங்களைச் செய்பவனாக இருப்பான். க்ஷத்ரிய சூத்திர சரீரங்களைக் கொண்ட இவனுக்கு ‘உக்ரன்’ என்று பெயர்.

விப்ரஸ்ய த்ரிஷு வர்ணேஷு ந்ருபதிர் வர்ணயோர் த்வயோ: |
வைஷ்யஸ்ய வர்ணே சைகஸ்மிந் ஷடேதே அபஸதா: ஸ்ம்ருதா: || 10

பிராம்மணனுக்கு மற்ற மூன்று வர்ணத்தாரான க்ஷத்ரிய, வைசிய, சூத்திரப் பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகளும், க்ஷத்ரியனுக்கு மற்ற இரண்டு வர்ணத்தாரான வைசிய, சூத்திரப் பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகளும், வைசியனுக்கு சூத்திரப்
பெண்ணிடம் பிறந்த பிள்ளைகளுமான இவ்வறு வகையானவர்களும், அவரவர் குலப் பெண்களிடம் பிறந்த பிள்ளைகளைவிடத் தாழ்ந்தவராவர்.

க்ஷத்ரியாத் விப்ரகயாயாம் சூதோ பவதி ஜாதித: |
வைஷ்யாந் மாகதவைதேஹௌ ராஜவிப்ரா அங்கநாசுதௌ |-11

க்ஷத்ரியனுக்கு பிராம்மண மனைவியிடம் பிறந்தவனுக்கு சூதன் என்று பெயர்.
வைசியனுக்கு க்ஷத்ரியப் பெண்ணிடம் பிறந்தவனுக்கு மாகதன் என்று பெயர்.
வைசியனுக்கு பிராம்மணப் பெண்ணிடம் பிறந்தவனுக்கு வைதேகன் என்று பெயர்.

சூத்ராதாயோகவ: கூத்தா சண்டாலஷ் சாஅதமோ ந்ருணாம் ||
வைஷ்யராஜந்யவிப்ராசு ஜாயந்தே வர்ணஸங்கரா | 12

சூத்திரனுக்கு வைசிய மனைவியிடம் பிறந்த பிள்ளை அயோகவன் எனப்படுவான். க்ஷத்ரிய மனைவியிடம் பிறந்த பிள்ளை க்ஷத்தா எனப்படுவான். பிராம்மண மனைவியிடம் பிறந்த பிள்ளை சண்டாளன் எனப்படுவான்.

ஏகாஅந்தரே த்வானுலோம்யாதம் பஷ்டோக்ரௌயதா ஸ்ம்ருதௌ |
க்ஷத்ருவைதேஹகௌ தத்வத் ப்ராதிலோம்யேஅபி ஜன்மநி || 13

மேல் வர்ணத்தாருக்கும் அவனைவிட கீழ்வர்ணத்துப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகள் அனுலோமர்கள் எனப்படுவர்.-கீழ் வர்ணத்தாருக்கும் அவனைவிட மேல் வர்ணத்துப்
பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகள் பிரதிலோமர்கள் எனப்படுவர்.-அனுலோ மர்களில் அம்பஷ்டனும் உக்ரனும் பிறப்பால் தாழ்ந்தவர்கள். பிரதிலோமர்களில் சூதன், வைதேகன் என்னும் இவ்விருவகையானவர்களும் பிறப்பால் தாழ்ந்தவர்கள்.

புத்ரா யேஅந்தரஸ்த்ரீஜா: க்ரமேணோக்தா த்விஜன்மநாம் |
தாநந்தர நாம்நஸ்து மாத்ருதோஷாத் ப்ரசக்ஷதே /-14

பிராம்மணர்களுக்குப் பிறந்த அனுலோமர்கள் என்னும் பிற வர்ணப் பெண்களிடம் பிறந்த பிள்ளைகள் தாயின் குலத்தவரே யாவர். எனவே தாய் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவளோ அந்த வர்ணத்து சம்ஸ்காரங்களையே (ஜாதகர்மா, உபநயனம் முதலானவை சம்ஸ்காரங்களாகும். இவற்றைப்பற்றி இதற்கு முன்பே விளக்கப் பட்டுள்ளது) செய்ய வேண்டும்.

ப்ராஹ்மணாதுக்ரகந்யாயாமாவ்ருதோ நாம ஜாயதே | ஆபீரோ அம்பஷ்ட கந்யாயா மாயோகவ்யாம் து திக்வண: | 15
பிராம்மணனுக்கும் உக்ர இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் பிறந்த பிள்ளை ‘ஆவரதன்’ எனப்படுவான்.-பிராம்மணனுக்கும் அம்பஷ்ட இனத்தைச்சேர்ந்த பெண் ணுக்கும் பிறந்த பிள்ளை ‘ஆபீரன்’ எனப்படுவான்.-பிராம்மணனுக்கு அயோகவ இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் பிறந்த பிள்ளை ‘திக்வணன்’ எனப்படுவான்.

ஆயோகவஷ் ச க்ஷத்தா ச சண்டாலஷ்சாஅதமோ ந்ருணாம் |
ப்ராதி லோம்யேந ஜாயந்தே சூத்ராதபஸதாஸ் த்ரய: || 16

ஆயோ ன்,க்ஷத்தா,மனிதர்களில் அதமனான சண்டாளன் மூவரும் பிரதிலோமர்களாகப் பிறந்தவர்கள். இவர்கள் சாஸ்திரம் கூறும் கிரியைகள் செய்ய அருகதை யற்றவர்கள்.

வைஷ்யாந் மாகதவைதேஹௌ க்ஷத்ரியாத்த ஏவ து | ப்தீபமேதே ஜாயந்தே பரே அப்யபஸதாஸ் த்ரய:II 17
வைசியனுக்கு மேல் வர்ணத்துப் பெண்களிடம் பிறந்த மாகதன்,-வைதேகன் என்பவர்களும், க்ஷத்ரியனுக்கு பிராம்மணப் பெண்ணிடம் பிறந்த சூதனும் பிரதிலோமர்களே. இவர்களுக்கும் சாஸ்திரம் கூறும் கிரியைகள் செய்யும் அருகதை கிடையாது.

ஜாதோ நிஷாதாச் சூத்ராயாம் ஜாத்யா பவதி புக்க : |
சூத்ராஜ்ஜாதோ நிஷாத்யாம் துஸ வை குக்குடக: ஸ்ம்ருத: 18

நிஷாதனுக்கும் சூத்ரபெண்ணுக்கும் பிறந்தவன் ‘புக்கசன்’ எனப்படுவான்.
நிஷாதபெண்ணுக்கும் சூத்ரனுக்கும் பிறந்தவன் ‘குக்குடகன்’ எனப்படுவான்.

க்ஷத்துர் ஜாதஸ் ததோக்ராயாம் ஷ்வபாக இதி கீர்த்யதே| வைதேஹகேந த்வம்பஷ்ட்யாமுத்பந்நோ வேண உயதே || 19
க்ஷத்தாவுக்கு உக்ர இனத்துப் பெண்ணிடம் பிறந்த பிள்ளைக்கு ‘ஸ்வபாகன்’ என்று பெயர்.
வைதேகனுக்கு அம்பஷ்ட இனத்துப் பெண்ணிடம் பிறந்த பிள்ளைக்கு ‘வேனன்’ என்று பெயர்.

த்விஜாதய: ஸவர்ணாசு ஐநயந்த்யவரதாம்ஸ்து யாந் | தாந் ஸாவித்ரீ பரிப்ரஷ்டாந் வ்ராத்யாநிதி விநிர்திஷேத் 20
த்விஜர்கள் அவரவர் வர்ணத்துப் பெண்களை மணந்து பெற்ற பிள்ளைகளுக்கு உபநயனம் முதலான வேதம் கூறிய சம்ஸ்காரங்கள்-எதுவும் செய்யபடாதபோது அவர்கள் ‘விராத்யர்கள்’ என்று பெயர் பெறுவார்கள்.

வ்ராத்யாத் து ஜாயதே விப்ராத் பாபாஆத்மா பூர்ஜகண்டக: || ஆவந்த்ய வாடதாநௌ ச புஷ்பத: ஷைக ஏவ ச | 21
விராத்யனான பிராம்மணன் அதே இனத்து பிராம்மணப் பெண்ணை மணந்து பிறக்கும் பிள்ளைக்கு ‘பூர்ஜகண்டகன்’ என்று பெயர். இவனுக்கே வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஆவந்தியன், வாடதானன், புஷ்பதன், சைகன் என்பன இவனுக்கு தேசாந்திரயங்களில் வழங்கும் வெவ்வேறு பெயர்கள்.

பல்லோ மல்லஷ் ச ராஜயாத் வ்ராத்யாந் நிச்சிவிரேவ ச
நடஷ் ச கரணஷ் வைச கஸோ த்ரவிட ஏவ ச |-22

விராத்யனான க்ஷத்ரியனுக்கு அதே இனத்துப் பெண்ணிடம் பிறப்பவனுக்கு ‘பல்லன் என்று பெயர். இவனுக்கு தேசாந்திரங்களில் மல்லன், நிச்சிவிரன்,நடன்,கரணன், கசன் என்று பெயர்கள் வழங்குகின்றன.

வைஷ்யாத்து ஜாயதே வ்ராத்யாத் சுதன்வா ஆசார்ய ஏவ ச
காருஷஷ் ச விஜன்மா ச மைத்ர: ஸாத்வத ஏவ ச || 23

விராத்யனான வைசியனுக்கு அதே இனத்துப் பெண்ணிடம் பிறப்பவனுக்கு ‘சுதன்வா’ என்று பெயர். இவனுக்கு தேசாந்திரங்களில் ஆசாரியன், காரூசன், விஜன்மா, மைத்ரன், சாத்வதன் என்று பெயர்கள் வழங்குகின்றன.

வ்யபிசாரேண வர்ணாநாமவேத்யா வேதநேந ச |
ஸ்வகர்மணாம் சத்யாகேந ஜாயந்தே வர்ணஸங்கரா: | 24

பிராம்மணன் முதல் நால்வர்ணத்தாரும் பிற வர்ணத்துப் பெண்களை மணப்பதாலும், தத்தமக்குரிய சாஸ்திர முறையான கிரியைகளை செய்யாமல் விடுவதாலும் கலப்பினங்கள் ஏற்படுகின்றன.

ஸங்கீர்ண யோநயோ யேது ப்ரதிலோமா அனுலோமஜா: 1
அன்யோ அன்யவ் யதிஷக்தாஷ் ச தாந் ப்ரவக்ஷ்யாம்ய சேஷ: | 25

பிரதிலோமர்களும் அனுலோமர்களும் பரஸ்பரம் மணந்து கொள்வதால் ஏற்படும் ஜாதிகளைக் கூறுகிறேன் கேளுங்கள்:

சூதோ வைதேஹகஷ்சைவ சண்டாளஷ் ச நராஅதம: |
மாகத: க்ஷத்ருஜாதிஷ் ச ததா ஆயோகவ ஏவ ச || 26

ஏதே ஷட் ஸத்ருஷாந் வர்ணாஞ்ஜ நயந்தி ஸ்வயோநிஷு | மாத்ரு ஜாத்யாம் ப்ரசூயந்தே ப்ரவராசு ச யோநிஷு || 27
சூதன், வைதேகன், சண்டாளன், மாகதன், க்ஷத்தா, அயோவன் என்னும் இவ்வறுவகையாரும் தத்தமது இனப் பெண்களை மணந்து பெறும் பிள்ளைகளும் தாயின் இனத்துக்குத் தக்கபடி உயர்வையோ, தாழ்வையோ பெறுவார்கள்.

யதா த்ரயாணாம் வர்ணாநாம் த்வயோராத்மா அஸ்யஜாயதே | ஆநந்தர்யாத் ஸ்வயோந்யாம் து ததா பாஹ்வேஷ்வபி க்ரமாத் !-28
பிராம்மணனுக்கு, பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய மனைவி களிடம் பிறந்த பிள்ளைகளுக்கு உபநயனம் முதலான சம்ஸ்காரங் களும் உண்டு. எனவே, இவர்கள் த்விஜர்கள். அவ்வாறே அவரவர் குலத்துப் பெண்டிருக்குப் பிறந்தவர்கள் உத்தமமான பிராம்மண குலம், உத்தமமான க்ஷத்ரிய குலம், உத்தமமான வைசிய குலம் என்று தர்மத்தைக் கடைப்பிடிப் பார்கள்.மற்ற மனைவிரிடம் பிறந்தவர்கள் வரிசைக் கிரமமாக குறைவையடைகிறார்கள்.

தேசாபி பாஹ்யாந் சுபஹும்ஸ் ததோ அப்யதிக தூஷிதாந் பரஸ்பரஸ்ய தாரேஷு ஐநயந்தி விகர்ஹிதாந்|| 29
அனுலோமர்களும் பிரதிலோமர்களும், பரஸ்பரம் மணம் செய்து கொண்டு இன்னும் தூஷிக்கத்தக்க பிள்ளைகளைப் பெறு கிறார்கள்.

ஸஜாதிஜா அநந்தரஜா: ஷட் அதா த்விஜதர்மிண: |
சூத்ராணாம் து ஸதர்மாண: ஸர்வே அபத்வம்ஸஜா: ஸ்ம்ருதா: ||| 30

த்விஜர்கள் தத்தம் வர்ணத்துப் பெண்களை மணந்து பெற்ற பிள்ளைகளும், தமக்கடுத்து வர்ணத்துப் பெண்களை மணந்து பெற்ற பிள்ளைகளும் உபநயனம் முதலான வைதீக சமஸ்காரங்களுக்கு உரியவர்கள்.

தபோ பீஜ ப்ரபாவைஸ் து தே கச்சந்தி யுகேயுகே |
உத்கர்ஷம் சாஅபகர்ஷம் ச மனுஷ்யேஷ்விஹ ஜன்மத: 31

தவத்தாலும், பிறப்பாலும் உயர்வோடு விளங்கிய குலங்கள் யுகம் மாறமாற தாழ்வை படிப்படியாக அடையும்

ஷநகைஸ்து க்ரியாலோபாதிமா க்ஷத்ரிய ஜாதய: 1
வ்ருஷலத்வம் கதா லோகே ப்ராஹ்மணா அதர்ஷநேந ச || 32

க்ஷத்ரியர்கள் உபநயனம் முதலான கிரியைகளை விட்டு விட்டதாலும், பிராம்மணர்கள் மூலமாக யக்ஞங்கள் பிராயச்சித்தங்கள் முதலானவைகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமையாலும் மெல்ல மெல்ல சூத்திரத்தன்மையை அடைந்தார்கள்.

பௌண்ட்ரகாஷ் சௌட்ர த்ரவிடா: காம்போஜாயவநா: ஷகா: |
பாரதா: பஹ்ளவாஷ் சீநா: கிராதா தரதா: கஷா: || 33

பெளண்ட்கர்கள், ஓட்ரர்கள், காம்போஜர்கள், யவனர்கள், சகர்கள், பாரதார்கள்,ப் ஹ்லவர்கள், சீனர்கள், கிராதர்கள், தரதர்கள், கசர்கள் முதலானவர்களனைவரும் இவ்வாறு சூத்திரர்களானார்கள்.

முகபாஹுருபஜ்ஜாநாம் யாலோகே ஜாதயோ பஹி: |
ம்லேச்ச வாசஷ் சாஆர்யவாச: ஸர்வே தேதஸ்யவ: ஸ்ம்ருதா: [-34

நான்கு வர்ணத்தாரால் கலப்பு ஜாதிகள் உருவாயின. இந்த ஜாதியரில் சிலர் மிலேச்ச பாஷையை பேசுபவராயினர். சிலர் ஆர்யபாஷையே பேசுபவராயினர். ஆனாலும் இவர்கள் அனைவருமே’தஸ்யூக்கள்” எனப் பெயர் பெற்றனர்.

யே த்விஜாநாமபஸதா யேசா அபத்வம்ஸஜா: ஸ்ம்ருதா: |
தே நிந்திதைர் வர்தயேயுர் விஜாநாமேவ கர்மபி: 11 35

த்விஜர்களைவிட தாழ்வானவர்களான நிந்திக்கப்பட்ட குலத்தவர் த்விஜர்களுக்கு வேலையாட்களாக பணிபுரிவார்கள்.

சூதாநாமஷ்வ ஸாரத்ய மம்பஷ்டாநாம் சிகித்ஸநம் | வைதேஹகாநாம் ஸ்த்ரீகார்யம் மாகதாநாம் வணிக்பத: || 36
சூதர்கள் தேர்ப்பாகர்களாக ஜீவனம் செய்வார்கள். அம்பஷ்டர்களுடைய ஜீவனத் தொழில் வைத்தியம் செய்தல். வைதேககர்கள் அந்தப்புரக் காவலர்களாக இருப்பார்கள். மாகதர்கள் வர்த்தகம் செய்வார்கள்.

மத்ஸ்யகாதோ நிஷாதாநாம் தஷ்டிஸ் த்வாயோகவஸ்ய ச |
மேதா அந்த்ர சுஞ்சு மத்கூநாமாரண்ய பசுஹிம்ஸநம் || 37

நிஷாதர்களுக்கு மீன்பிடித்தல் தொழில். அயோகவர் தச்சு வேலை செய்துஜீவிப்பார்கள். மேதர்கள், ஆந்தர்கள், சுஞ்சுகள், மத்குகள் என்னும் இவர்கள் காட்டிலுள்ள மிருகங்களை ஹிம்சித்துஅதைக் கொண்டு ஜீவிப்பார்கள்.

க்ஷத்ருக்ர புக்கஸாநாம் து பிலௌகோ வத பந்தநம் |
திக் வணாநாம் சர்மகார்யம் வேணாநாம் பாண்டவாதநம் || 38

க்ஷத்தர்கள், உக்ரர்கள், புக்சர்களுக்கு உடும்பு முதலானவற்றைப் பிடித்தல் தொழில். திக்வணர்கள் (சக்லியர்), தோல் வேலைசெய்வார்கள். வேணர்களுக்கு முரசறைதல், தப்பட்டை அடித்தல் தொழில்.

சைத்ய த்ரும ஷ்மஷாநேஷு ஷைலே சூபவநேஷு ச
வஸேயுரேதே விக்ஞாதா வர்தயந்த: ஸ்வகர்மபி: |-39

இவர்களனைவரும் ஊருக்கு வெளியே மரத்தடிகளிலும்,சுடுகாடு, மலையடிவாரம், வனங்களின் அருகாமையிலும் எல்லோருக்கும் பரிச்சயமானவர்களாக தத்தமது தொழிலை செய்து வருவார்கள்.

சண்டாள ஷ்வபகாநாம் து பஹிர் க்ராமாத் ப்ரதிஷ்ரய: |
அப்பாத்ராஷ்ச கர்தவ்யா தநமேஷாம் ஷ்வகர்தபம்||| 40

சண்டாளர்களும் ஸ்வபாகர்களும் ஊருக்கு வெளியில் வசிக்க வேண்டும். கொலையைத் தொழிலாக கொண்டவன் சண்டாளன். நாயையும் கழுதையையும் வளர்ப்பார்கள். இவையே இவர்களின்செல்வமாகும்.

வாஸாம்ஸி ம்ருதசேலாநி பிந்நபாண்டே போஜநம் | கார்ஷ்ணார்ய ஸமலங்கார: பரிவ்ரஜ்யா ச நித்யஷ: | 41
இரும்பு வலைகளே இவர்களது அணிகலன்கள். எப்போதும் இவர்கள் திரிந்து கொண்டேயிருப்பார்கள்.

ந தை: ஸமயமந்விச்சேத் புருஷோ தர்மமாசரந் | வ்யவஹாரோ மிதஸ் தேஷாம் விவாஹ: ஸத்ரு ை: ஸஹ |-42
தர்ம காரியங்களைச் செய்யும்போது இவர்களைக் காண்பதும் கூடாது. இவர்கள் இனங்களுக்குள்ளேயே இவர்கள் திருமண சம்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கல் முதலான விவகாரங்களையும் (கடன்) தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ள வேண்டும்.

அந்நமேஷாம் பராஅதீநம் தேயம் ஸ்யாத் பிந்நபாஜநே | ராத்ரௌ ந விசரேயுஸ் தேக்ராமே நகரேஷு சI-43
ஊருக்குள் இவர்களுக்கு உணவு கொடுக்கும் போது வேலை யாட்களைக் கொண்டு கொடுக்கச் செய்ய வேண்டும். கிராமங் களிலோ நகரங்களிலோ இவர்கள் இரவில் சஞ்சரிக்கக்கூடாது.

திவா சரேயு: கார்யார்தம் சிஹ்நிதா ராஜசாஸநை: | அபாந்தவம் ஷவம் சைவ நிர்ஹரேயுரிதி ஸ்திதி: || 44
ராஜ முத்திரையை வைத்துக் கொண்டு, பகல் பொழுதுகளில் அரச ஆணைகளை கிராம நகரத் தெருக்களில் பறைசாற்றுவதுஇவர்கள்தொழில் யாருமற்ற அனாதைச் சவங்களை அகற்றுவதும் இவர்கள் தொழிலேயாகும்.

வத்யாம் ச ஹந்யு: ஸததம் யதாசாஸ்த்ரம் ந்ருபா ஆக்ஞயா
வத்யவாஸாம்ஸி க்ருஹ்ணீயு: ஷய்யாஷ் சாஆபரணாநி ச 45

மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை, அரசன் எந்த முறையில் கொல்லச் சொல்லி ஆணை பிறப்பித்துள்ளானோஅந்த முறையில் கொல்வது இவர்கள் வேலை. அப்படிக் கொன்றவனின் ஆடை, படுக்கை, அவன் அணிந்திருந்த ஆபரணங்களை இவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வர்ணாஅபேத அவிக்ஞாதம் நரம் கலுஷயோநிஜம் |
ஆர்ய ரூபமிவா அநார்யம் கர்மபி ஸ்வைர் விபாவயேத் || 46

நால்வர்ணத்தினின்றும் விலகிய கலப்பினத்தவனானவனைப் பார்க்க.அவன் செய்யும் தொழிலைக் கொண்டு அவன் நீசன் என்பதை அறிய வேண்டும்.

அநார்யதா நிஷ்டுரிதா க்ரூரதா நிஷ்க்ரியா ஆத்மதா|
புருஷம் வ்யஞ்ஜயந்தீஹ லோகே கலுஷயோநிஜம் |-47

நிந்திக்கத்தக்க கொடூரமான செயல்களைச் செய்தல், சாஸ்திர முறைப்படியான கிரியைகளைச் செய்யாதிருத்தல், கொடூரமாகப் பேசுதல், கொல்லுதல் முதலான ஒருவனின் இழிகுணங்களே அவன் கீழானவன் என்பதை எடுத்துக்காட்டும்.

பித்ர்யம் வா பஜதே ஷீலம் மாதுர் வோபயமேவ வா|
ந கதஞ்சந துர்யோநி: ப்ரக்ருதிம் ஸ்வாம் நியச்சதி|| 48

ஒருவன் தன் தந்தையின் குணங்களையோ, தாயின் குணங்களையோ, இருவரின் குணங்களையோ உடையவனாக இருப்பான். இழியவன் தனக்கு இயற்கையாக அமைந்த இத்தகைய குணங்களாலே, தான் யார் என்பதை வெளிப்படுத்துவான்.

குலே முக்யே அபி ஜாதஸ்ய யஸ்ய ஸ்யாத் யோநி ஸங்கர: |
ஸ ஸ்ரயத்யேவ தச்சீலும் நரோ அல்பமபி வா பஹு|| 49

உயர் குலத்தைச் சேர்ந்த பெண் பெற்ற மகனாக இருந்தபோதும், அவளது ஒழுக்கக் கேட்டால் எவனுக்கோ பிறந்தவனாக இருந்தால், அந்த மகன் கொஞ்சமோ அதிகமோ தந்தையின் குணத்தைக் கொண்டவனாகவே இருப்பான்.

யத்ர த்வேதே பரித்வம்ஸா ஜாயந்தே வர்ணதூஷகா: 1
ராஷ்ட்ரியை: ஸஹ தத் ராஷ்ட்ரம் க்ஷிப்ரமேவ நிநஷ்யதி |||-50

எந்த நாட்டில் முறைகேட்டால் பிறக்கும் பிள்ளைகள் பெருகுகிறார்களோ, அந்த நாடு நாட்டுமக்களுடன்கூட விரைவில் அழியும்.

ப்ராஹ்மணா அர்தே கவா அர்தே வா தேஹத்யாகோ அனுபஸ் க்ருத: 1 ஸ்த்ரீபாலா அப்யுபபத்தெள ச பாஹ்யாநாம் ஸித்தி காரணம் || 51
பசுக்கள், பிராம்மணர்கள், பெண்கள், பாலகர்களைக் காப்பாற்றுவதற்காக தம்முயிரையும் கொடுக்கின்ற கீழ்ஜாதிக் காரர்கள் நல்லுலகத்தையடைவார்கள்.

அஹிம்ஸா ஸத்யமஸ்தேயம் ஷௌச மிந்த்ரிய நிக்ரஹ: 1 ஏதம் ஸாமாஸிகம் தர்மம் சாதுர்வர்ண்யே அப்ரவீந்மனு: || 52
பிறரை ஹிம்சிக்காதிருத்தல், சத்தியம் பேசுதல், பிறர் பொருளை கவராதிருத்தல், உள்ளும் புறமும் தூய்மையோடிருத்தல், ஐம்புலன்களை அடக்கியிருத்தல் என்னும் இந்த தர்மங்கள் நான்கு வர்ணத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான தர்மங்கள்.

சூத்ராயாம் ப்ராஹ்மணாஜ்ஜாத: ஷ்ரேயஸா சேத் ப்ரஜாயதே 1
அஷ்ரேயாந் ஷ்ரேயஸீம் ஜாதிம் கச்சத்யா ஸப்தமாத் யுகாத் |-53

சூத்திரப் பெண்ணிடம் பிராம்மணன் பெற்ற பெண் பிராம்மணனை மணந்து, அவளுக்குப் பிறந்த பெண்ணும் பிராம்மணனையே மணந்து, இவ்வாறு பெண்வயிற்றுப் பெண்ணாக
பிராம்மணர்களையே மணந்து வந்தால் ஏழாவது தலைமுறையில் பிறப்போர் பிராம்மணராகின்றனர்.

சூத்ரோ ப்ராஹ்மணதாமேதி ப்ராஹ்மணஷ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ் ஜாதமேவம் து வித்யாத் வைஷ்யாத் ததைவ ச || 54

இவ்வாறாக சூத்திரன் பிராம்மணத் தன்மையை அடைவான். பிராம்மணனும் சூத்திரத் தன்மையை அடைவான். இதேமுறை க்ஷத்ரியனுக்கும், வைசியனுக்கும் பொருந்தும்.

அநார்யாயாம் ஸமுத்பந்நோ ப்ராஹ்மணாத்து யத்ருச்சயா |
ப்ராஹ்மண்யாமப் யநார்யாத் து ஷ்ரேயஸ்த்வம் க்வேதி சேத் பவேத்|| 55

திருமணம் செய்து கொள்ளாமலே சூத்திரப் பெண்ணிடம் பிராம்மணன் பெற்ற பிள்ளை உயர்ந்தவனா, பிராம்மணப் பெண்ணிடம் சூத்திரன் பெற்ற பிள்ளை உயர்ந்தவனா என்று
பார்ப்போம்.

ஜாதோ நார்யாமநார்யா மார்யாதார்யோ பவேத் குணை: |
ஜாதோ அப்யநார்யாதார்யாயாமநாய இதி நிஷ்சய: |-56

இவர்களில் பிராம்மணன் பெற்ற பிள்ளையே உயர்ந்தவ னாவான். பிராம்மணப் பெண் பெற்ற பிள்ளை தாழ்ந்தவனாவான்.

தாவுபாவப் யஸம்ஸ்கார்யாவிதி தர்மோ வ்யவஸ்தித: 11
வைகுண்யாஜ் ஐந்மந: பூர்வ உத்தர: ப்ரதிலோமத: || 57

ஆனால் இவ்விருவகைப் பிள்ளைகளுக்கும் உபநயனம் முதலான சம்ஸ்காரங்கள் இல்லை. பிராம்மணனுக்குப் பிறந்த பிள்ளை சூத்திரப் பெண்ணிடம் ஜன்மித்ததால் அவனுக்கு வைதீக சடங்குகள் இல்லை.-பிராம்மணப் பெண்பெற்றபிள்ளையோவெனில் சூத்திரனை
விட தாழ்ந்தவனாவான்.

சுபீஜம்சைசுக்ஷேத்ரே ஜாதம் ஸம்பத்யதே யதா |
ததா ஆர்யாஜ் ஜாதா ஆர்யாயாம் ஸர்வம் ஸம்ஸ்காரமர்ஹதி ||-58

நல்ல மண்ணில் விதைக்கப்பட்ட நல்ல விதை நல்லபடிமுளைக்கும். அவ்வாறே நல்ல குலத்தில் உதித்த ஆணும் பெண்ணும் பெற்ற பிள்ளை உயர்ந்தவன். இவனே வைதீக சடங்குகள் செய்யத் தகுதிபெற்றவன்.

பீஜமேகே ப்ரஷம்ஸந்தி க்ஷேத்ரமந்யே மநீஷிண: | பீஜக்ஷேத்ரே ததைவா அந்யே தத்ரேயம் து வயவஸ்திதி: |59
சிலர் விதையே முக்கிய மென்று விதையைப் புகழ்ந்து பேசுவார்கள். சிலர் நிலமே முக்கியமென்று நிலத்தைப் புகழ்ந்து பேசுவார்கள். இரண்டுமே முக்கியம் என்று வேறு சிலர் கூறுவார்கள்.-இந்த விஷயத்தை எப்படி நிர்ணயிக்க வேண்டும் என்று பார்ப்போம்

அக்ஷேத்ரே பீஜமுத்ஸ்ருஷ்டமந்தரைவ விநஷ்யதி | அபீஜகமபி க்ஷேத்ரம் கேவலம் ஸ்தண்டிலம் பவேத் |60
வளமற்ற மண்ணில் உயர்ந்த விதை விதைக்கப்பட்டாலும் பலனிருக்காது. வளமான மண்ணில் நல்ல விதையை விதைத்தால் பயிர் நன்கு வளரும். எனவே மண்ணும் விதையும் இரண்டும் முக்கியம்.

யஸ்மாத் பீஜ ப்ரபாவேண திர்யக்ஜா ருஷயோ அபவந் பூஜிதாஷ் ச ப்ரஷஸ்தாஷ் ச தஸ்மாத் பீஜம் ப்ரஷஸ்யதே |61
ஆயினும் மிருகங்களிடத்தே பிறந்தவர்கள்கூட தந்தையின் உயர்வினால் ரிஷிகளாகி விளங்கினர். எல்லோராலும் பூஜிக்கப் படுபவர்களாகவும் புகழ் மிக்கவர்களாகவும் விளங்கினர். எனவே மண்ணைவிட விதையே சிறந்ததென்று கூறலாம். (உ -ம். ரிஷ்ய சிருங்கர்)

அநார்யமார்ய கர்மாணமார்யம் சாஅநார்யகர்மிணம் |
ஸம்ப்ரதார்யா அப்ரவீத் தாதா ந ஸமௌ நா அஸமாவிதி|| 62

மேல் வர்ணத்தவன்தாழ்ந்தவன் தொழிலைச் செய்வதால் தாழ்ந்தவனாகிவிட மாட்டான். கீழ் ஜாதிக்காரன் மேல் வர்ணத்தார் தொழிலைச் செய்வதனால் உயர்ந்தவனாகி விடமாட்டான் ஆயின் அவரவர் தொழிலை விட்ட விஷயத்தில் இருவரும் சமமாகி விடுவார்கள்.

ப்ராஹ்மணா ப்ரஹ்மயோநிஸ்தா யே ஸ்வகர்மண்யவஸ்திதா |
தே ஸம்யகுபஜீவேயு: ஷட் கர்மாணி யதாக்ரமம்|1) 63

பிராம்மணனுக்கு பிராம்மணப் பெண்ணிடமாகப் பிறந்த பிராம்மணர்கள் தங்களுக்குரிய சுய கர்மாக்களைச் செய்ய வேண்டும். தமக்குரிய ஆறு கர்மாக்களை முறையாகச் செய்தபடி வாழ்க்கை நடத்த வேண்டும்.

அத்யாபநமத்யயநம் யஜநம் யாஜநம் ததா|
தாநம் ப்ரதிக்ரஹஷ்சைவ ஷட் கர்மாண்யக்ர ஜன்மந: I-64

வேதங்களைப் படித்தல், வேதங்களை பிறருக்கு கற்றுக் கொடுத்தல், யாக யக்ஞங்கள் செய்தல், யாக யக்ஞங்களை பிறருக்கு செய்து கொடுத்தல், பிறரிடமிருந்து தானம் வாங்குதல், பிறருக்குத் தானம் கொடுத்தல் என்னும் ஆறு கர்மாக்களும் பிராம்மணர்க்குரியவை

ஷண்ணாம்து கர்மணாமஸ்ய த்ரீணிகர்மாணி தீவிகா |
யாஜநா அத்யாபநே சைவ விசுத்தாச்ச ப்ரதிக்ரஹ: || 65

இவற்றில் பிறர்க்கு வேதங்களைச் சொல்லிக் கொடுப்பதாலும், யாக யக்ஞங்களை பிறர்க்கு செய்து கொடுப்பதாலும், பிறரிடமிருந்து தானம் பெறுவதனாலும் பிராம்மணர்கள் தங்கள் ஜீவனத்தை நடத்த வேண்டும்.

த்ரயோ தர்மா நிவர்தந்தே ப்ராஹ்மணாத் க்ஷத்ரியம் ப்ரதி| அத்யாபநம் யாஜநம் ச த்ருதீயஷ் ச ப்ரதிக்ரஹ: || 66
பிராமணனுக்குரிய ஜீவன உபாயத்துக்கான இந்த மூன்றும் தவிர்த்து மற்ற மூன்று தர்மங்களும் க்ஷத்ரியனுக்குரியன. அதாவது வேதம் கற்றல், யாகயக்ஞங்கள் செய்வித்தல், தானம் கொடுத்தல் இம்மூன்றும் க்ஷத்ரியனுக்குரியன.

வைஷ்யம் ப்ரதி ததைவைதே நிவர்தேரந்நிதி ஸ்திதி: |
ந தெள ப்ரதி ஹி தாந் தர்மாந் மனுராஹ ப்ரஜாபதி: 1-67

பிராம்மணனுக்குரிய ஆறு தர்மங்களில் மூன்று தர்மங்கள்எவ்வாறு கூத்ரியனுக்கு இல்லை என்று கூறப்பட்டதோ, அவ்வாறேவைசியனுக்கும் இல்லை. மனு இவர்களுக்கு இந்த தர்மங்கள் இருப்பதாகக் கூறவில்லை.

ஷஸ்த்ரா அஸ்த்ரப்ருத் த்வம் க்ஷத்ரஸ்ய வணிக் பசுக்ருஷிர் விஷ: | ஆஜீவநார்தம் தர்மஸ்து தாநமத்யயநம் யஜி: || 68
க்ஷத்ரியனுடைய ஜீவனுத்துக்காகவும், பிரஜைகளைக் காப்பதற்காகவும் சஸ்திரங்களும் அஸ்திரங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.(சஸ்திரங்கள் என்பது கத்தி, வாள் முதலான ஆயுதங்கள் எவை எவை யுண்டோ அவை அத்தனையையும் குறிப்பிடும். அஸ்திரங்கள்என்பது ஆயுதங்களைக் குறிக்காது. மந்திரங்களைக் குறிக்கும்.மந்திரம் கூறி எதிரியின் மீது எய்யப்படுவது பாணமானாலும் புல்லானாலும் அதன் மூலமாக குறிப்பிட்ட மந்திர தெய்வ சக்திஎதிரியைத் தாக்கி அழிக்கும். ராமர் காகாசுரன் மீது ஒரு புல்லைக்கிள்ளி பிரம்மாஸ்திரம் ஜபித்து எறிந்தார். அது மூவுலங்களிலும்அவனைத் துரத்திக் கொண்டு சென்றதைப் புராணம் கூறுகிறது.ஆக்னேயாஸ்திரம் தீயாகி எரிக்கும். வருணாஸ்திரம் மழையாகிப்பொழியும்.)வைசியனுக்கு வர்த்தகம் செய்தல், விவசாயம் செய்தல், பசுக்களைக் காத்தல் இவை ஜீவனத்துக்கானவை. க்ஷத்ரியனுக்கும் வைசியனுக்கும் விதித்துள்ள யாகம் செய்வித்தல், தானம் கொடுத்தல், வேதம் கற்றல் என்பவை அவன் ஆத்மாவை உய்விப்பதற்கானவை.

வேதா அப்யாஸோ ப்ராஹ்மணஸ்ய க்ஷத்ரியஸ்ய ச ரக்ஷணம் |
வார்தாகர்மைவ வைஷ்யஸ்ய விஷிஷ்டாநி ஸ்வர்மசு || 69

ஒருவனுடைய ஸ்வதர்மம் என்னும் குலத்தொழில் எது என்று பார்த்தால், பிராம்மணனுக்கு வேதம் கற்றுக் கொடுத்தல் குலத்தொழில். க்ஷத்ரியனுக்கு பிரஜைகளைக் காத்தல் குலத்தொழில். வைசியனுக்கு வர்த்தகம் செய்தல் குலத்தொழில்.

அஜீவம்ஸ்து யதோக்தேந ப்ராஹ்மண: ஸ்வேந கர்மணா |1 ஜீவேத் க்ஷத்ரியதர்மேண ஸஹ்யஸ்ய ப்ரத்யநந்தர: |70
பிராம்மணன் தன் குலத்தொழிலைச் செய்து, அதனால் வரும் வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாவிட்டால், தனக்கடுத்தபடியான க்ஷத்ரியனுடைய தொழிலை ஏற்கலாம்.
இப்படிச் சொல்வதால் வாளைச் சுழற்ற வேண்டும், கத்தியைத் தூக்கிப் போரிட வேண்டும் என்பது பொருளல்ல. கிராமாதிகாரியாக இருப்பது,நீதிபதியாக இருப்பது முதலானவற்றால் வருமானம் ஈட்டவேண்டும்.)

உபாப்யாமப்யஜீவம்ஸ் து கதம் ஸ்யாதிதி சேத் பவேத் |
க்ருஷி கோரக்ஷ மாஸ்தாய ஜீவேத் வைஷ்யஸ்ய ஜீவிகாம் || 71

பிராம்மணன் தன் தொழிலாலும் க்ஷத்ரியத் தொழிலாலும் ஜீவனம் நடத்த இயலாதபோது வைசியனுக்குரிய தொழில்களான விவசாயம், பசுக்காத்தல் முதலியவற்றைச் செய்து ஜீவிக்கலாம்.

வைஷ்யவ்ருத்யா அபி ஜீவம்ஸ்து ப்ராஹ்மண: க்ஷத்ரியோ அபிவா |
ஹிம்ஸா ப்ராயாம் பரா அதீநாம் க்ருஷிம் யத்நேந வர்ஜயேத் ||-72

பிராம்மணனும் க்ஷத்ரியனும் வைசியத் தொழிலைச் செய்ய நேர்ந்தால், பிறர்க்கடிமையாக இருக்கச் செய்கின்றதும், பூமியிலுள்ள சிறிய உயிர்களை ஹிம்சிப்பதுமான பயிர்த்தொழிலை முயற்சி செய்தாவது விடவேண்டும்.

க்ருஷிம் ஸாத்விதி மந்யந்தே ஸா வ்ருத்தி: ஸத் விகர்ஹிதா| பூமிம் பூமி ஷயாம்ஷ் சைவ ஹந்தி காஷ்டமயோ முகம் || 73
விவசாயம் செய்வது உயர்ந்த தொழில் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் நல்லோர் இதை ஏற்கவில்லை. கலப்பை, மண்வெட்டி போன்றவற்றால் பூமியை வெட்டுவதாலும் பூமியிலுள்ள உயிரினங்களை வெட்டுவதாலும் இது உயர்ந்த தொழிலல்ல.

இதம் து வ்ருத்தி வைகல்யாத் த்யஜதோ தர்மநைபுணம் |
விட்பண்யமுத் த்ருதோத்தாரம் விக்ரேயம் வித்தவர்தநம் 74

பிராம்மணனும் க்ஷத்ரியனும் தங்கள் தொழிலால் ஜீவனம்நடத்தமுடியாத நிலையில் தர்மத்தை விடவும் மனமில்லாமல், பிழைக்கும் வழியும் இல்லாதபோது பொருட்களை விற்கும்தொழிலில் ஈடுபடலாம். அப்படி ஈடுபடும்போது விற்கத்தக்க
பொருட்களையும், லாபம் தரக்கூடிய பொருட்களையும் கூறுகிறேன்,கேளுங்கள்:

ஸர்வாந் ரஸாநபோஹேத க்ருதா அந்நம் ச திலை: ஸஹI அஷ்மநோ லவணம் சைவ பஷவோ யேச மானுஷா: || 75
ரசப்பொருட்கள், சமைத்த அன்னம், எள், ரத்தினங்கள், உப்பு, மிருகங்கள், மனிதர்கள் – விற்கக்கூடாதவை இவை.

ஸர்வம் ச தாந்தவம் ரக்தம் ஷாணக்ஷெளமா ஆவிகாநி ச |
அபி சேத்ஸ்யுரரக்தாநி பலமூலே ததெளஷதீ: || 76

அப: ஷஸ்த்ரம் விஷம் மாம்ஸம் ஸோமம் கந்தாம்ஷ் ச ஸர்வஷ: |
க்ஷரீரம் க்ஷெளத்ரம் ததி க்ருதம் தைலம் மது குடம்குஷாந் || 77

ஆரண்யாம்ஷ்ச பசூந் ஸர்வாந் தம்ஷ்ட்ரிணஷ்ச வயாம்ஸி ச 1
மத்யம் நீலிம் ச ளா ம் ச ஸர்வாம்ஷ் சைக பாம்ஸ் ததா |-78

சிவப்புநிற பருத்தித் துணிகளை விற்கலாகாது. சணலால் நெய்தவை, கம்பளியால் நெய்தவையான ஆடைகளையும் விற்கக்கூடாது.-பழங்கள், கிழங்குகள், ஒளஷதங்களை விற்கக் கூடாது. தண்ணீர், ஆயுதங்கள், விஷம், மாமிசம், சோமலதை (யாகத்துக்குப் பயன்படும் கொடி), வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், எண்ணெய், தேன், வெல்லம்,தர்ப்பைகளை விற்கக்கூடாது. யானைகள், சிங்கங்கள், பறவைகள், மீன்கள், கள், அவுரிச்செடி, அரக்கு, ஒற்றைப்பல் வரிசையுள்ள மிருகங்களையும் விற்கக்
கூடாது.

காமமுத்பாத்ய க்ருஷ்யாம் து ஸ்வயமேவ க்ருஷீவல: | விக்ரீணீத திலாஞ் சுத்தாந் தர்மார்தமசிரஸ்திதாந் || 79
வேறுவழியின்றி எள்ளைப் பயிரிட வேண்டி வரும்போது, எள்ளைப் பயிரிட்டு, அது விளைந்த பிறகு வெகுகாலம் வைத்துக் கொள்ளாமல் உடனே விற்றுவிட வேண்டும்.

போஜநா அப்யஞ்ஜநாத் தாநாத் யதந்யத் குருதே திலை: |
க்ருமிபூத: ஷ்வவிஷ்டாயாம் பித்ருபி: ஸஹ மஜ்ஜதி || 80

சாப்பிடவும், உடலுக்குத் தேய்த்து நீராடவும், தானம் கொடுக்கவு மல்லாது வேறு காரியங்களுக்கு எள்ளை உபயோகிப் பவன் கிருமி ஜன்மமெடுத்து தன் பித்ருக்களுடன் கூட நாய் மலத்தில் வீழ்வான்.

ஸத்ய: பத்தி மாம்ஸேந லாக்ஷயா லவணேந ச | த்ரயஹேண சூத்ரோ பவதி ப்ராஹ்மண: கூர விக்ரயாத் |-81
மாமிசங்களையும் அரக்கையும் விற்றவன் உடனே பிராமணத் தன்மையை இழப்பான். பாலை விற்றால் மூன்று நாட்களில் சூத்திரனாவான்.

இதரேஷாம் து பண்யாநாம் விக்ரயாதிஹ காமத: 1 ப்ராஹ்மண: ஸப்தராத்ரேண வைஷ்யபாவம் நியச்சதி || 82
மேலும் விற்கக்கூடாது என்று கூறப்பட்ட மற்றப் பொருட்களை லாபம் கருதி விற்றால் ஏழு நாட்களில் வைசியத் தன்மையை அடைகிறான்

ரஸாரஸைர் நிமாதவ்யா நத்வேவ லவணம் ரஸை: | க்ருதாந்நம் சாஅக்ருதாந்நேந திலா தாந்யேந தத்ஸமா: | 83
நெய், தேன், வெல்லம் முதலான ரசப்பொருட்களை பண்டமாற்று முறையில் பிறரிடம் கொடுத்து அவர்களிடம் உள்ளதை தான் பெற்றுக் கொள்ளலாம். உப்பை மட்டும் பண்டமாற்று செய்து கொள்ளலாகாது. அன்னத்துக்கு பதிலாக அரிசியை பண்டமாற்று செய்து கொள்ளலாம். எள்ளை மற்றத் தானியங்களுக்கு பண்டமாற்று செய்து கொள்ளலாம்.

ஜீவேதேதேந ராஜன்ய: ஸர்வேணா அப்யநயம் கத: 1 நத்வேவ ஜ்யாயஸீம் வ்ருத்திமபிமந்யேத கர்ஹிசித் || 84

க்ஷத்ரியன் வேறுவழியின்றி விற்பனைத் தொழிலில் ஈடுபட்டால், பிராம்மணனுக்கு எந்தப் பொருட்கள் விற்கக்கூடாது என்று கூறப்பட்டனவோ அவற்றை விற்று வைசியத் தொழிலை மேற்கொள்ளலாம். ஆனால் எவ்வகையிலும் பிராம்மணத் தொழிலைச்செய்ய விரும்பக் கூடாது.

யோ லோபாததமோ ஜாத்யா ஜீவேதுத்க்ருஷ்ட கர்மபி: |
தம் ராஜா நிர்தநம் க்ருத்வா க்ஷிப்ரமேவ ப்ரவாஸயேத் |-85

கீழ் ஜாதியில் பிறந்தவன், மேல் வர்ணத்தாருக்குரிய குலத்தொழிலைச் செய்து ஜீவனம் நடத்தினால், அரசன் அவனைக் கண்டுபிடித்து அவன் செல்வத்தை பறிமுதல் செய்து நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்.

வரம் ஸ்வதர்மோ விகுணோ ந பாரக்ய: ஸ்வனுஷ்டித: |
பரதர்மேண ஜீவந் ஹி ஸத்ய: பததி ஜாதித: |-86

தொழில் உயர்ந்ததாக இல்லாவிட்டாலும், அவரவர் குலத் தொழிலே அவரவர்க்கு உயர்வைத் தருவது. மற்றவர் குலத்தொழில் உயர்ந்ததாக இருந்தாலும் அதைக் கடைப்பிடிக்கக் கூடாது; அது உயர்வைத் தராது. அப்படி பிறரது குலத் தொழிலைச் செய்பவன் தன் குலத்தினின்றும் நீங்கியவனாகிறான்..

வைஷ்யோ அஜீவந் ஸ்வதர்மேண சூத்ரவ்ருத்யா அபிவர்தயேத் |
அநாசரந் நகார்யாணி நிவர்தேத ச ஷக்திமாந் 11 87

வைசியன் தன் குலத்தொழிலைக் கொண்டுஜீவனம் நடத்த இயலாதபோது, சூத்ரிரனுடைய தொழிலால் ஜீவிக்கலாம். ஆனால் தூய்மையற்ற அநாசாரமான தொழில்களில் ஈடுபடக் கூடாது.

அஷக்னுவம்து சுஷ்ரூஷாம் சூத்ர: கர்தும் த்விஜந்மநாம் |
புத்ரதாரா அத்யயம் ப்ராப்தோ ஜீவேத் காருககர்மபி: || 88

சூத்திரன், தன் குலத் தொழிலான பிராம்மணர் முதலான த்விஜர்களுக்கு பணிசெய்யும் தொழிலைச் செய்ய இயலாத சூழ்நிலையில் தன் மனைவி மக்கள் பசியால் துன்புறாமல் காக்க கைத்தொழில்கள் எதையேனும் செய்து சம்பாதிக்கலாம்.

யை: கர்மபி: ப்ரசரிதை: சுஸ்ரூஷ்யந்தே த்விஜாதய: தாநி காருககர்மாணி ஷில்பாநி விவிதாநி ச|| 89
த்விஜர்களுக்குத் தேவையான மரவேலைகள், இரும்பு வேலைகள் முதலானவற்றைச் செய்து பிழைப்பதால் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றியதாகவும் ஆகிறது.

வைஷ்யவருத்திம நாதிஷ்டந் ப்ராஹ்மண: ஸ்வே பதி ஸ்தித: 11 அவருத்திகர்ஷித: ஸீதந்நிமம் தர்மம் ஸமாசரேத் || 90
பிராம்மணன் ஜீவனத்துக்கு வழியில்லாவிட்டாலும், க்ஷத்ரிய, வைசிய தொழில்களும் வேண்டாமென்று, தன் குல தர்மங்களையே கடைப்பிடித்தபடி இருக்க வேண்டும். வேறு தொழில்கள் வேண்டாம் என்று நினைத்தால் எத்தகைய தர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

ஸர்வத: ப்ரதிக்ருஹ்ணீயாத் ப்ராஹ்மணஸ் த்வநயம்கத: | பவித்ரம் துஷ்யதீத்யேதத் தர்மதோ நோபபத்யதே || 91
நெருக்கடி காலத்தில் பிராம்மணன், நிந்திக்கத்தக்கதொழில்களைச் செய்பவரிடமிருந்தும் தானம் பெறலாம். பவித்ரமான ஒன்று தூஷிக்கத்தக்க பொருளோடு சேர்ந்தாலும் பவித்ரமானதாகவே இருக்கும்.-தங்கத்தோடு செம்பைச் சேர்ப்பதால் தங்கம் கெட்டுப்போகாது.கங்கையில் மற்றநீர் சேருவதால் கங்கை தூய்மையிழக்காது.

நா அத்யாபநாத் யாஜநாத் வா கர்ஹிதாத்வா ப்ரதிக்ரஹாத்| தோஷோ பவதி விப்ராணாம் ஜ்வள நாஅம்புஸமா ஹிதே|| 92

பிராம்மணர்களுக்கு, வேறு வழியில்லாத போது தகாதவனுக்கு சொல்லிக் கொடுப்பது, யாகம் செய்து கொடுப்பது, தகாதவனிடம் தானம் வாங்குவது முதலியவற்றால் தோஷங்கள் ஏற்படா. ஏனெனில் நெருப்பைப் போலவும் நீரைப் போலவும் இயற்கையாகவே
பரிசுத்தர்களாக இருப்பதால் இவர்களை தோஷங்கள் ஒட்டா

ஜீவிதா அத்யயமாபந்நோ யோஅந்நமத்தி யதஸ் தத: 1
ஆகாஷமிவ பங்கேந ந ஸ பாபேந லிப்யதே|-93

உயிர் போகும்படியான ஆபத்துக் காலத்தில் கீழ் ஜாதிக்காரனிடம் சாப்பிட்டாலும் தூய்மை கெடமாட்டான். ஆகாசத்தில் எறியப்பட்ட சேறு ஆகாசத்தை அழுக்காக்க இயலுமா? அவ்வாறே பிராம்மணனும் தூய்மை கெட மாட்டான்.

அஜீகர்த: அதம் ஹந்துமுபா அஸர்பத் புபுக்ஷித: |
நசாஅலிப்யத பாபேந கூத்ப்ரதீகாரமாசரந் ||| 94

முன்னர் அஜீகர்த்தர் என்னும் முனிவர் பசியால் வாடிய நிலையில் தம் மகனை விற்று அதற்கு ஈடாக நூறு பசுக்களைப் பெற்றார். இதனால் அம்முனிவருக்குபாபம் ஏதும் அண்டவில்லை.

ஷ்வமாம்ஸமிச்சந் நார்தோ அத்தும்தர்மா அதர்மவிசக்ஷண: 11 ப்ராணாநாம் பரிரக்ஷார்தம் வாமதேவோ ந லிப்தவாந்|| 95
வாமதேவ முனிவர் தர்மா தர்மங்களைப் பற்றி அறிந்தவர். அவர் பசியால் நொந்தபோது, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாய் மாமிசத்தை உண்ண முனைந்த போதும் அவருக்கு பாபம் ஏதும் அண்டவில்லை.

பரத்வாஜ: க்ஷதாஆர்தஸ் து ஸபுத்ரோவிஜநே வநே |
பஹ்வீர் கா: ப்ரதிஜக்ராஹ வ்ருதோஸ் தஷ்ணோ மஹாதபா: || 96

மகாதபஸ்வியான பரத்வாஜர் ஜனநடமாட்டமற்ற ஆரண்யத்தில் பசியால் வருந்தி வருதன் என்னும் தச்சனிடத்தில் அநேகம் பசுக்களை தானமாகப் பெற்றார்.

க்ஷதா ஆர்தஷ் சாஅத்து மப்யாகாத் விஸ்வாமித்ர: ஷ்வஜாகநீம் |
சண்டாள ஹஸ்தாதாதாய தர்மா அதர்மவிசக்ஷண: 97

தர்மாதர்மமறிந்த விஸ்வாமித்ர முனிவர் பசிக் கொடுமையால் நொந்த போது சண்டாளன் கையிலிருந்து நாயின் முழங்கால் மாமிசத்தை வாங்கிக் கொண்டார். அதனால் அவருக்கு எந்தப் பாபமும் அண்டவில்லை.

ப்ரதிக்ரஹாத் யாஜநாத் வா ததைவா அத்யாபநாதபி |
ப்ரதிக்ரஹ: ப்ரத்யவர: ப்ரேத்ய விப்ரஸ்ய கர்ஹித: 98

வேறு வழியில்லாதபோது தகாதவனிடம் தானம் வாங்கலாம். பாடம் சொல்லிக் கொடுக்கலாம், யாகம் செய்து வைக்கலாம் என்று கூறியிருந்தபோதும், வேறு வழியில்லை என்ற ஆபத்தான கட்டத்தில் மட்டுமேதகாதவனிடம் தானம் வாங்கவேண்டும். மற்ற தருணத்தில் இத்தகைய தானம் வாங்கினால் அது நரகத்தைக் கொடுக்கும்.
யாகம் செய்து வைப்பதாலும், பாடம் சொல்லிக் கொடுப்ப தாலும் ஜீவனம் நடத்த முடியாத நிலையில் தன்னுயிரையும் குடும்பத்தார் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியில்லை என்னும்போது மட்டுமேஇத்தகைய தானத்தை வாங்கலாம்.

யாஜநா அத்யாபநே நித்யம் க்ரியேதே ஸம்ஸ்க்ருதா ஆத்மநாம் |1
ப்ரதி க்ரஹஸ்து க்ரியதே சூத்ராதப்யந்த்யஜன்மந: |-99

வேதம் சொல்லிக் கொடுத்தலையும், யக்ஞம் செய்து வைத்தலையும் உபநயன சம்ஸ்காரம் உள்ளவனுக்குத்தான் செய்ய முடியும்.தானம் வாங்குதல் அப்படியல்ல. எவரிடமும் வாங்கலாம். எந்த சம்ஸ்காரமுமில்லாத சூத்திரனிடமிருந்தும் பெறலாம். தானம் பெறுவதால் கிட்டுவது பாபமேயல்லவா?

ஜபஹோமைரபைத்யேநோ யாஜநா அத்யாபரை: க்ருதம்
ப்ரதிக்ரஹநிமித்தம் துத்யாகேந தபஸைவ ச|| 100

தகாதவனுக்குச் சொல்லிக் கொடுப்பதாலும், யக்ஞம் செய்து வைப்பதாலும் விளையும் பாபம் உரிய பிராயச்சித்தங்களைச் செய்து கொள்வதால் நீங்கும். ஆனால் தகாதவனிடம் பெற்ற தானத்தால் விளையும் பாபம் மிகக் கொடிய பாபம்.அந்தப் பாபம் நீங்க வேண்டுமானால் தானம் வாங்கிய பொருளை கொடுத்துவிட்டு, மேற்கொண்டு தவமும்
செய்ய வேண்டும்.

ஷிலோஞ்ச மப்யாததீத விப்ரோ அஜீவந் யதஸ் தத: |
ப்ரதிக்ரஹாச்சில: ஷ்ரேயாம்ஷ்ததோ அப்யுஞ்ச: ப்ரஷஸ்யதே || 101

பிராம்மணன் ஜீவனத்துக்கு வழியில்லாதபோது வயல்கரைகளில் சிந்தியிருக்கும் நெல்மணிகளைச் சேகரித்து எடுத்துச் சென்றோ உஞ்சவிருத்தி செய்தோ பிழைக்கலாம். தகாத தானத்தைவிட இவ்விரண்டும் சிரேஷ்டமானவை. அதிலும் உஞ்சவிருத்தியில்
பிழைப்பது மிகவும் சிரேஷ்டமானது.(பகவானை எண்ணி பஜனை செய்தபடியே வீதிகளில்
போகவேண்டும். இல்லற வாசிகள் இவரை பூஜித்து இவர்கரத்திலுள்ள சொம்பில் அரிசியை இடுவார்கள். அதைக் கொண்டு வந்து சமைத்து, பகவானுக்கு நைவேத்தியம்காட்டி உண்பது உஞ்ச விருத்தி. இதை யாசகமாக எண்ணக்கூடாது. பகவானைத் தவிர வேறு எண்ணமில்லாத உயர்ந்த வாழ்க்கையை வாழ வைக்கும்ஜீவனோபாயம். பிராம்மணனுக்கு இது மிகவும் சிரேஷ்டமான வழி)

ஸீதத்பி: குப்யமிச்சத்பிர்தனம் வா ப்ருதிவீபதி: |
யா ய: ஸ்யாத் ஸ்நாதகைர் விப்ரைரதித்ஸம்ஸ் த்யாகமர்ஹதி || 102

வித்வானான விப்ரன்தான் குடும்ப வாழ்வை ஏற்று நடத்துவதற்காக ஆடை,தானியங்கள், தங்கம், வெள்ளி முதலானவைகளை நெறிமுறை சற்று தவறிய அரசனிடமும் வாங்கலாம், ஆனால் அவன் தராமல் கருமித்தனமாக இருந்தால், மீண்டும் அவனிடம் செல்லக் கூடாது.

அக்ருதம் ச க்ருதாத் க்ஷேத்ராத் கௌரஜாஆவிகமேவ ச
ஹிரண்யம் தான்யமந்நம் ச பூர்வம் பூர்வமதோஷவத் |-103

அப்படி அரசனிடம் கேட்கும் போது, உழுது பயிரிட வேண்டிய பூமியைவிட, உழாமல் தானாகவே விளையும் பூமியைக் கேட்க வேண்டும். பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், தங்கம், தானியம்,அன்னம் என்னுமிவைகளில் முன்னிருப்பவை அதை
அடுத்தடுத்திருப்பவற்றைவிட தோஷம் குறைந்தவை. எனவே ஒருவனிடம் யாசிக்கும்போது பின்னால் பின்னால் கூறப்பட்டதை யாசிக்காமல், முன் முன் இருப்பதை யாசிக்க வேண்டும்.
அதாவது அன்னத்தை யாசித்துப் பெறுவது மிகுந்த தோஷம் தரும். அதைவிட தானியத்தைக் கேட்டுப் பெறுவதில் தோஷம் குறைவு. அதையும்விட அதையும்விட என்று முன் முன் கூறப்பட்டவற்றைக் கேட்டுப் பெறும்போது தோஷம் குறைந்து கொண்டே போகிறது.

ஸப்த வித்தா ஆகமா தர்ம்யா தாயோ லாப: க்ரயோ ஐய: 1
ப்ரயோக: கர்மயோகஷ்ச ஸத்ப்ரதிக்ரஹ ஏவ ச||-104-

தர்மமாக தனம் வரும் வழிகள் ஏழு.1-பாகப்பிரிவினையால் கிடைப்பது-2-ஒருவனுடைய வித்யா திறமைக்காக கிடைக்கும் சன்மானம்.3-வாங்கி விற்பதால் கிடைக்கும் லாபம்.4-ஒரு நாட்டை வென்று அங்கிருந்து கொண்டு வந்த செல்வம்-இது படைவீரர்களுக்கும் பங்கிட்டளிக்கப்படுவதால் அரசனுக்கும் படைவீரர்களுக்கும் வருமானமாகிறது.-5.வாதப்போரில் வென்று கிடைப்பது. அதே போன்று எந்தக் கலைஞர்களுக் கிடையிலும் நடக்கும் போட்டியில் வென்றுகிடைப்பது.-6-.விவசாயம், தொழில், பசுக்காத்தல் மூலமாகக் கிடைப்பது.-7-தானத்தால் கிடைப்பது.

வித்யா ஷில்பம் ப்ருதி: ஸேவா கோரக்ஷயம் விபணி: க்ருஷி: |
த்யுதிர் பைக்ஷ்யம் குஸீதம் ச தஷ ஜீவநஹேதவ: I-105

வித்யை, கைத்தொழில், அரசனிடம் படைவீரனாக ஊழியம் புரிதல், பசு காத்தல், வர்த்தகம், விவசாயம்,பிறரிடம் சேவகம் புரிதல்,வட்டியால் தனம் சேர்த்தல், நாடகம் நடனம் கூத்து
முதலான கலைகளால் சம்பாதித்தல்,பிட்சை என்னும் பத்தும் ஜீவனத்துக்கான வழிகள்.

ப்ராஹ்மண: க்ஷத்ரியோ வாஅபி வருத்திம் நைவ ப்ரயோஜயேத் 11
காமம்து களு தர்மார்த்தம் தத்யாத் பாபீயஸே அல்பிகாம் || 106

பிராம்மணனும் க்ஷத்ரியனும் தனத்தைக் கொண்டு தனத்தைப் பெருக்கும் வட்டித் தொழிலைச் செய்யக்கூடாது . ஆனால் வரும் வட்டியை தர்மகாரியத்துக்கு உபயோகப்படுத்தலாம் என்று ஆசைப்பட்டால் மிகவும் குறைந்த வட்டிக்குக் கொடுக்கலாம்.

சதுர்தமாததாநோஅபி க்ஷத்ரியோ பாகமாபதி |
ப்ரஜா ரக்ஷந் பரம் சக்த்யா கில்பிஷாத் ப்ரதிமுச்யதே |-107

ஆபத்துக் காலத்தில் அரசன் மக்களிடமிருந்துநான்கில் ஒரு பாகம் வரியாகப் பெறலாம். மக்களை முயற்சியோடு நன்கு காப்பாற்றுகின்ற அரசனுக்கு இத்தகைய அதிக வரியால் பாபம் ஏற்படாது.

ஸ்வதர்மோ விஜயஸ் தஸ்ய நாஆஹவே ஸ்யாத் பராங்முக: |
ஷஸ்த்ரேண வைஷ்யாந் ரக்ஷித்வா தர்ம்யமாஹரயேத் பலிம் || 108

அரசனுக்கு தன்னுடைய தர்மமே முக்கியம். தான் வெற்றியை அடையும் நோக்கத்திலிருந்து அவன் எப்போதும் பின்வாங்கக் கூடாது. ஆயுதமேந்திய வீரர்களைக் கொண்டு வைசியர்களைக் காக்க வேண்டும். அவர்களிடமிருந்து முறையான வரியை வசூலிக்க வேண்டும்.

தாந்யே அஷ்டமம் விஷாம் சுல்கம் விம்ஷம் கார்ஷாபணாத் வரம் |
கர்மாபகரணா: சூத்ரா: காரவ: ஷில்பிநஸ்ததா || 109

ஆபத்துக் காலத்தில், தானியங்களில் இருபது பங்கில் எட்டுபங்குவரியாகப் பெறவேண்டும்.
வணிகருக்கு கிடைத்த லாபத்தில் கார்ஷா பணங்களுக்கு இருபதில் ஒரு பாகம் பெற வேண்டும்.-மற்றபடி கைத்தொழில் புரிகின்ற சூத்திரர்களிடமிருந்தும்,-தச்சன், கருமார் போன்றவர்களிடமிருந்தும் வரி வசூலிக்கக் கூடாது. இவர்களிடமிருந்து வேண்டிய வேலைகளை வாங்கிக் கொள்ளலாம்.

சூத்ராஸ் து வருத்திமாகாங்க்ஷந் க்ஷத்ரமாராதயேத் யதி |
தநிநம் வாஅப்யுபா ஆராத்ய வைஷ்யம் சூத்ரோ ஜிஜீவிஷேத் |-110

சூத்திரன், பிராம்மணனுக்கு பணிவிடை புரிவதைத் தவிர்த்து வேறு ஜீவனோபாயத்தை விரும்பினால், க்ஷத்ரியனிடத்தில் வேலைக்குச் சேரலாம். அல்லது செல்வந்தனான வைசியனிடத்தில் வேலைக்குச் சேரலாம்.

ஸ்வர்கார்த முபயார்தம் வா விப்ராநாராத யேத்துஸ: |
ஜாத ப்ராஹ்மண ஷப்தஸ்ய ஸாஹ்யஸ்ய க்ருதக் ருத்யதா 111

அனைத்து நலன்களையும் நல்லுலகத்தையும் அடைய வேண்டுமானால் சூத்திரன் பிராம்மணனைப் பூஜித்து அவனுக்கு பணிவிடைகள் புரிய வேண்டும். இவன் பிராம்மணதாசன் என்று பெயர் பெறுவதனாலேயே தான் பிறந்த பயனை எய்தியவனாகிறான்.

விப்ரஸேவைவ சூத்ரஸ்ய விஷிஸ்டம் கர்ம கீர்த்யதே|
யததோ அந்யத் தி குருதே தத் பவத்யஸ்ய நிஷ்பலம் || 112

பிராம்மணனுக்குச் சேவை புரிவதே சூத்திரனுடைய சுயதர்மமாகும். அதுவே மேலான தர்மம் என்று சொல்லப்படுகிறது. வேறு எதைச் செய்வதாலும் அவனுக்கு பலன் கிடையாது.

ப்ரகல்ப்யா தஸ்ய தைர் வருத்தி: ஸ்வகுடும்பாத் யதா அர்ஹத: |
ஷக்திம் சாஅவேக்ஷ்ய தாக்ஷ்யம் ச ப்ருத்யாநாம் ச பரிக்ரஹம்| 113

பிராம்மணன், தனக்கு சேவை புரியும் சூத்திரனுடைய வேலைகள், சாமர்த்தியமாக அவன் செய்யும் காரியங்கள்,அவன் போஷிக்க வேண்டிய குடும்பம் – இவைகளையெல்லாம் யோசித்து, அவனுக்குத் தேவையானதை வழங்க வேண்டும்.

உச்சிஷ்டமந்நம் தாதவயம் ஜீர்ணாநி வஸநாநிச ||
புலாகாஷ் சைவ தாந்யாநாம் ஜீர்ணாஷ்சைவ பரிச்சதா: || 114

சாப்பிட்ட பிறகு எஞ்சிய அன்னத்தை அவனுக்குக் கொடுக்க வேண்டும். பழைய துணிகளையும், பாத்திரங்களையும், தானியங் களையும் கொடுக்க வேண்டும்.

நசூத்ரே பாதகம் கிஞ்சிந் ந ச ஸம்ஸ்காரமர்ஹதி 11
நாஅஸ்யா அதிகாரோ தர்மே அஸ்தி ந தர்மாத் ப்ரதிஷேதநம் || 115

எந்த தர்ம காரியமும் செய்யாமலிருந்தாலும் சூத்திரனுக்கு சிறிதும்பாபம் நேராது. தனியாக வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. இவனது சேவையே இவனுக்கு நல்லுலகங்களைப்
பெற்றுத் தரும். மற்றவர்கள் அப்படியல்ல, அவரவர்க்கு என்று கூறப்பட்டுள்ள தர்ம காரியங்களையும் தானம் செய்தல் முதலானவைகளையும் செய்தே ஆகவேண்டும்.
மேலும் அவனுக்கு வேறு எந்தக் கிரியைகளும் கிடையாது.-பிராம்மண சேவையால் அவன் சுயதர்மத்தைச் செய்தவனாகிறான்.

தர்மேப்ஸவஸ்து தர்மக்ஞா: ஸதாம் வ்ருத்தமனுஷ்டிதா: 11 மந்த்ரவர்ஜம் ந துஷ்யந்தி ப்ரஷம்ஸாம் ப்ராப்னுவந்தி ச 116
தாங்களும் சத்கர்மாக்களைச் செய்ய வேண்டும் என்று விரும்பும் சூத்திரர்கள், தங்கள் சுய தர்மத்தை நன்கு அறிந்தவர்களாக அதை விடாமல் செய்தபடியே, மந்திரங்களில்லாமல் செய்யக்கூடிய கர்மானுஷ்டானங்களைச் செய்யலாம். இப்படிச் செய்வதால் பிறர் நிந்தனைக்கு ஆளாகாமல் மேன்மைகளை அடையலாம்.

யதா யதாஹி ஸத்வ்ருத்தமாதிஷ்டத்யந யக: 1
ததாததேயம் சாஅமும் ச லோகம் ப்ராப்நோத் யநிந்தித: || 117

சூத்திரன் அசூயையில்லாமல் நல்லபடி தன் காரியங்களைச் செய்து வரவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு இவன் மூவர்ணத்தாரிடமும் அசூயையின்றி காரியமாற்றுகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு உலகத்தாரால் நிந்திக்கப்படாதவனாக வாழ்ந்து,மறுமையில் நல்லுலகத்தையும் அடைவான்.

ஷக்தேநாபி ஹி சூத்ரேண நகார்யோ தநஸஞ்சய: |
சூத்ரோஹி தநமாஸாத்ய ப்ராஹ்மணாநேவ பாததே Π-118

சூத்திரன் மிகுந்த தனத்தை அடைந்தாலும், தன் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவுக்கு மேல் சேர்த்து வைக்கக் கூடாது. அப்படி அவன் மிகுந்த தனவானாக இருந்தானேயாகில், தர்மத்தை அறியாதவனாக பிராம்மணர்களுக்குத் தொல்லைகளைத் தருவான்.

ஏதே சதுர்ணாம் வர்ணாநாமாபத்தர்மா: ப்ரகீர்திதா:
யாந் ஸம்யகனுதிஷ்டந்தோ வ்ரஜந்தி பரமாம் கதிம் || 119

நான்கு வர்ணத்தவரும் ஆபத்துக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் கூறப்பட்டன. இவற்றை நன்கு கடைப்பிடிப்பவர்கள் மேலான நிலையை அடைவார்கள்.

ஏஷ தர்மவிதி: க்ருத்ஸ்நஷ் சாதுர்வர்ண்யஸ்ய கீர்தித: |
அத: பரம் ப்ரவக்ஷ்யாமி ப்ராயசித்த விதிம் ஷீபம்| 120

இதுவரை நான்கு வர்ணத்தாரின் தர்மவிதிகளும் முழுமையாகக் கூறப்பட்டன.
இனி சுபத்தை விளைவிக்கும் பிராயச்சித்த விதிகளைப் பற்றிக் கூறுகிறேன்.
(பத்தாவது அத்தியாயம் முற்றிற்று.)

———–

அத்தியாயம் – 11

ஸாந்தாநிகம் யக்ஷமாண மத்வகம் ஸர்வ வேதஸம் ||
குர்வர்த்தம் பித்ருமாத்ரர்தம் ஸ்வாத்யாயார்த்யுபதாபிந: |-1

நவைதாந்ஸ்நாதகாந் வித்யாத் ப்ராஹ்மணாந் தர்மபிக்ஷகாந் |
நிஸ்ஸ்வேப்யோ தேயமேதேப்யோ தாம் வித்யாவிசேஷத: |-2

திருமணம் புரிந்து கொள்ள விழைபவன்,யாகங்கள் செய்ய விரும்புபவன், புண்ணியாத்திரை செல்ல விரும்புபவன், தன்னிடமுள்ள செல்வமனைத்தையும் யாகம் புரிய செலவிட்டவன், குருதட்சிணை கொடுக்க விரும்பி தனத்தை வேண்டுபவன்,
பெற்றோரை போஷிப்பதற்காக தனத்தை வேண்டுபவன், தான் வேதமோதும் காலத்தில் தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டி தனத்தை வேண்டுபவன், நோயாளி – இவர்கள் யாசித்துப் பெறும் தகுதியுடையவர்கள். இவர்களுக்கு தனத்தையும்
தங்கத்தையும் வழங்க வேண்டும். வேதத்தைக் கற்க விரும்புபவருக்கு கற்றுத்தர வேண்டும். இந்த வித்யா தானம் விசேஷமானது.-மொத்தத்தில் இந்த ஒன்பது வகையானவர்களும் தானம் ஏற்கத் தகுதியானவர்கள். அவர்கள் வேண்டுவதைக் கொடுப்பதே மிகச்
சிறந்த தர்மமாகும்.

ஏதேப்யோ ஹித்விஜாக்ரேப்யோ தேயமந்நம் ஸ தக்ஷிணம் |
இதரேப்யோ பஹிர்வேதிக்ருதாந்நம் தேயமுச்யதே || 3

இந்த ஒன்பது வகையான திவிஜர்களும் யாசகம் கேட்டுவந்தபோது, யக்கும் செய்யும் இடத்திலேயே அவர்களுக்கு அன்னமிட்டு தட்சிணைகளை வழங்க வேண்டும். மற்றவர்களுக்குயக்ஞம் செய்யும் இடத்துக்கு வெளியில்தான் அன்னமிட வேண்டும்.

ஸர்வரத்நாநி ராஜாது யதாஅர்ஹம் ப்ரதிபாதயேத்|
ப்ராஹ்மணாந் வேதவிதுஷோ யாக்ஞார்தம் சைவ தக்ஷிணாம் || 4

அரசன் தனக்கு யாகம் செய்துவைக்கும் வேதவிற்பன்னர்களான பிராம்மணர்களுக்கு சகலவித ரத்தினங்களையும், உயர்ந்த வஸ்துக்களையும் யாகதட்சிணைகளாக வழங்கவேண்டும்.

க்ருததாரோ அபராந் தாராந் பிக்ஷித்வா யோஅதிகச்சதி |
ரதிமாத்ரம் பலம் தஸ்ய த்ரவ்யதாதுஸ் து ஸந்ததி: || 5

ஏற்கெனவே மணம் புரிந்து கொண்டவன், மேலும் தாரங்களை மணக்க விரும்பியவனாக யாசகம் கேட்டுவந்தால் அவனுக்கு தனமோ தங்கமோ கொடுக்கக் கூடாது. புத்ரபலனை வேண்டி மணம் புரிவதே தர்மமானது. அத்தகைய மணம் ஒருமுறை நடந்து முடிந்த பிறகு,
மீண்டும் ஒருவன் மணம் புரிய விரும்புவது அவனுடைய இச்சையின் பொருட்டே என்பதால் இத்தகைய மறுமணங்கள் தர்மமானவை யல்ல.-இத்தகைய மணத்துக்காக பொருளுதவி செய்தவனுக்கு என்ன பலன் கிட்டும்? முதல் மணத்துக்கு பொருளதவி செய்தவனுக்கு,
ஒருவனுக்கு தர்மமான சந்ததி கிடைக்கச் செய்த புண்ணிய பலன் கிட்டும். அடுத்த மணத்துக்கு பொருளுதவி செய்தவனுக்கு, தேவையில்லாத சந்ததியைப் பெறுவதற்கு உதவியவன் என்ற பெயர் மட்டுமே கிட்டும். புண்ணியம் கிட்டாது.

தநாநி து யதாஷக்தி விப்ரேஷு ப்ரதிபாதயேத் |
வேதவித்சு விவிக்தேசு ப்ரேத்ய ஸ்வர்கம் ஸமஷ்னுதே 6

வேதங்களை நன்கு ஓதி உணர்ந்தவர்களாகவும், மனைவி மக்களோடு கிருஹஸ்தர்களாகவும் இருக்கின்ற பிராம்மணர்களுக்கு தானமளிப்பவன் சொர்க்கலோகத்தை அடைவான்.

யஸ்ய த்ரைவார்ஷிகம் பக்தம் பர்யாப்தம் ப்ருத்ய வருத்தயே ||
அதிகம் வாஅபி வித்யேத ஸஸோமம் பாதுமர்ஹதி || 7

தன்னுடைய குடும்ப போஷணத்துக்காக மூன்று வருடத்துக்குத் தேவையான தனதானியங்களையோ, அதற்கும் அதிகமாகவோ சேர்த்து வைத்த பிறகுதான் ஒருவன் ஸோமயாகம் செய்வதற்குரிய அருகதையைப் பெறுகிறான்.

அத: ஸ்வல்பீயஸி த்ரவ்யே ய: ஸோமம் பிபதித்விஜ: |
ஸ பீதஸோம பூர்வோ அபி ந தஸ்யா ஆப்நோதிதத் பலம் || 8

அவ்வாறன்றி குடும்ப போஷணத்துக்காக சிறிது தனமே இருக்கும் போது, ஒருவன் சோமயாகம் செய்தால் அதன் பலனை அடைய முடியாது.

ஷக்த: பரஜநே தாதா ஸ்வஜநே துக்கஜீவிநி | மத்வாபாதோ விஷா ஆஸ்வாத: ஸ தர்மப்ரதி ரூபக: I| 9
தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு துக்கம் கொடுப்பவனாகி அவர்களை நலியச் செய்தபடி வெளியாருக்கு தானம் கொடுத்துவள்ளல் என்ற பெயரை சம்பாதிக்கின்ற தனவந்தனுக்கு, அப்போதைக்கு அந்தப் புகழ் தேனைப்போல இனிக்கும். ஆனால்
அவன் இறந்த பிறகு விஷத்துக்கு நிகரான நரகத்தையே கொடுக்கும்.

ப்ருத்யாநாமுபரோதேந யத்கரோத் யௌத்ர்வ தேஹிகம் | தத் பவத்யசுகோதர்கம் ஜீவதஷ் ச ம்ருதஸ்ய ச || 10
தன்னைச் சேர்ந்தவர்களை நலியச் செய்தபடி வெளியாருக்குதானம் கொடுப்பவன், தான் இறந்தபிறகு நல்லுலகத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்துக்காக தானம் கொடுப்பவனாக இருந்தாலும் அந்த நோக்கம் நிறைவேறாது. இருக்கும் போதும் இறந்தபிறகும் அவனுக்கு எந்த சுகமும் இல்லை.

யக்ஞஷ் சேத் ப்ரதிருத்த: ஸ்யாதேகேநா அங்கேந யஜ்வந: 1 ப்ராஹ்மணஸ்ய விசேஷேண தார்மிகே ஸதி ராஜநி|-11

யோ வைஷ்ய: ஸ்யாத் பஹுப ர் ஹிநக்ரதுரஸோமப: |
குடும்பாத் தஸ்ய தத் த்ரவ்யமாஹரேத் யக்ஞஸித்தயே ||-12

பிராம்மணன் யக்ஞம் செய்யும் போது, மற்ற அங்கங்கள் எல்லாம் இருந்து, ஒரு அங்கம் நிறைவேறாமல் இருக்குமானால், அதற்கான தனத்தை அடைய இவ்வாறு செய்யலாம்.
மிகுந்த பசுக்களும் செல்வமும் நிறைந்த வைசியன் சோமயக்கும் செய்யாதவனாக இருந்தால், அப்படிப்பட்டவனிடமிருந்து தனத்தை, அவனாகக் கொடுக்காவிட்டாலும் அபகரித்துக் கொண்டு வந்து யக்ஞத்தை பூர்த்தி செய்யலாம்.-ஒரு அரசன் தர்மமாக ஆளும் ராஜ்ஜியத்தில் இப்படிச் செய்வதும் தர்மமே யாகும். தர்மம் அறிந்த அரசன் இதைத் தர்மம்
என்றறிந்து ஆதரவு கொடுப்பான்.

ஆஹரேத் த்ரீணி வா த்வே வா காமம் சூத்ரஸ்ய வேஷ்மந: 11
நஹி சூத்ரஸ்ய யக்ஞே கஷ்சிதஸ்தி பரிக்ரஹ: || 13

யக்ஞத்துக்கு இரண்டு மூன்று அங்கங்கள் குறைவுபடுமானால், வைசியனிடமிருந்து கொண்டு வந்தது போதாது போனால், சூத்திரனிட மிருந்தும் கொண்டுவரலாம். சூத்திரன் யக்ஞம் எதுவும் செய்பவ னல்லவே!-யக்ஞம் செய்பவரிடமிருந்தோ, செய்யக் கூடியவரிடமிருந்தோ கொண்டு வரக்கூடாது. அவர்களுக்குத் தேவைப்படும் ஒன்றை
அவர்களிடமிருந்து பெறுவது தகாது. அதனால் யக்ஞம் செய்யாதவனான வைசியனிடமிருந்தும் சூத்திரனிடமிருந்தும் கொண்டுவரலாம்.

யோ அநாஹிதாக்நி: ஷதகுரயஜ்வா ச ஸஹஸ்ரகு: |
தயோரபி குடும்பாப்யாமாஹ ரேதவிசாரயந்|-14

ஆஹிதாக்னியாக இல்லாமல் நூறு பசுக்களுக்கு சொந்தக் காரனாக இருப்பன், ஆஹிதாக்நியாக இருந்து ஆயிரம் பசுக்களுக்கு சொந்தக்காரனாக இருப்பவன் – இத்தகைய பிராம்மக்ஷத்ரியரிடமிருந்தும் இரண்டு மூன்று யக்ஞாங்கங்களை
விசாரணையேயின்றிக் கொண்டு வரலாம்.

ஆதாந நித்யாச்சா ஆதாதுராஹரேத ப்ரயச்சத: |
ததா யஷோ அஸ்ய ப்ரததே தர்மஷ்சைவ ப்ரவர்ததே || 15

எப்போதும் தானம் வாங்குவதிலேயே ஆசை கொண்டவனாகவும், கொடுப்பதில் எப்போதும் ஆசையற்றவனாகவும் இருக்கின்ற பிராம்மணனிடம், யக்ஞத்துக்குத தேவையானதைக்
கேட்டும் கொடுக்கவில்லையெனில்,தானாகக் கொடாததை அபகரித்துப் பெறலாம். இதனால் அபகரித்தவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. யக்ஞத்துக்காக செய்ததால் புகழே கிட்டும். இப்படிச்செய்வது தர்மமேயாகும்.

ததைவ ஸப்தமே பக்தே பக்தாநி ஷடநஷ்நதா |
அஷ்வஸ்த நவிதாநேந ஹர்தவ்யம் ஹீநகர்மண: |-16

உண்ண உணவுக்குக்கூட வழியற்ற தரித்ர நிலையில், ஒருவன் திருடியும் சாப்பிடலாம். அப்படிச் சாப்பிடுவது திருட்டுத்தனமும் அல்ல,தர்மவிரோதமும் அல்ல. ஆனால் அதற்கும் ஒரு விதிமுறைஉண்டு. தொடர்ந்து ஏழாவது வேளையும் பட்டினி கிடக்க நேர்ந்தால்(தொடர்ந்து மூன்று நாட்கள். ஒரு நாளைக்கு இரு வேளை உணவு
என்பதே சாஸ்திரம் கூறிய முறை) அப்போது, அதாவது நான்காவதுநாள் காலை நற்கர்மாக்கள் எதுவும் செய்யாதவனுடைய வீட்டிலிருந்து தனத்தை அவனுக்குத் தெரியாமலே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அன்று ஒரு நாள் உணவுக்கு மட்டும்தேவையான அளவே தனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கலாத் க்ஷேத்ரா தகாராத் வா யதோ வாஅப்யுபலப்யதே |
ஆக்யாதவ்யம் து தத் தஸ்மை ப்ருச்சதே யதி ப்ரூச்சதி || 17

வயல், வீடு, நெற்களஞ்சியம் மற்றும் எந்த இடத்திலிருந்தும்,நற்கர்மாக்கள் புரியாதவனுடைய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். உரிமையாளன் பார்த்து ‘ஏன் திருடினாய்?” என்று கேட்டால் தான் மூன்று நாட்களாகப் பட்டினி கிடப்பதைக் தெரிவிக்க வேண்டும்.

ப்ராஹ்மணஸ்வம் ந ஹர்தவ்யம் க்ஷத்ரியேண கதாசந |
தஸ்யுநிஷ்க்ரிய யோஸ் து ஸ்வமஜீவந் ஹர்துமர்ஹதி || 18

க்ஷத்ரியனுக்கு இந்த நிலை ஏற்படுமாயின், பிராம்மணன் சொத்தை களவாடக் கூடாது. நற்கிரியைகள் செய்யாத க்ஷத்ரியனிடத்திலும் வைசியனிடத்திலும் களவாடலாம்.

யோ அஸாதுப்யோ அர்தமாதாய ஸாதுப்ய: ஸம்ப்ரயச்சதி |
ஸக்ருத்வா ப்லவமாமாம் ஸந்தாரயதி தாவுபெள |-19

எவன் நற்கர்மாக்கள் செய்யாதவனிடமிருந்து தனத்தை அபகரித்து யக்ஞங்கள் நடத்துவதற்கு கொண்டு போய் கொடுக்கிறானோ,அவன் தன்னையும், எவனிடத்தில் அபகரித்தானோ அவனையும் கடைத் தேற்றியவனாகிறான்.

யத் தனம் யக்ஞஷீலாநாம் தேவஸ்வம் தத் விதுர் புதா: |
அயஜ்வநாம் து யத் வித்தமாசுரஸ்வம் ததுச்யதே|| 20

யக்ஞங்கள் செய்கின்ற தன்மை கொண்டவனிடம் இருக்கின்ற தனம் தெய்வங்களுடையது என்று சான்றோர் கூறுவர்.-யக்ஞங்கள் செய்யாதவனிடமிருக்கின்ற தனம் அரக்கர்
களுடையது என்றும் சான்றோர் கூறுவர்.-எனவே யக்ஞங்கள் செய்யாதவனிடமிருந்து அபகரித்து, யக்ஞங்கள் செய்வதற்குக் கொடுப்பது தர்மகாரியமே அல்லவா…

ந தஸ்மிந் தாரயேத் தண்டம் தார்மிக ப்ருதிவீபதி:
கூத்ரியஸ்ய ஹி பாலிஷ்யாத் ப்ராஹ்மண: ஸீததி க்ஷதா|| 21

இவ்வாறாக தனத்தை அபகரித்தவனை, அரசன் தண்டிக்கக் கூடாது.-க்ஷத்ரியனான அரசன் தர்மமறியாத சிறு பிள்ளைத் தனத்தோடு நடந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு நடந்து கொள்வதால் பிராம்மணர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும்.

தஸ்ய ப்ருத்யஜநம் ஞாத்வா ஸ்வகுடும்பாந் மஹீபதி: |
ஸ்ருதஷீலே ச விக்ஞாய வ்ருத்திம் தர்ம்யாம் ப்ரகல்பயேத் || 22

அரசன், தர்மவான்களாக யக்ஞங்கள் புரிகின்ற தக்க தன வசதி அற்றவர்களாக இருக்கின்ற பிராம்மணர்களைக் கண்டுபிடித்து அவர்களது வித்யைகளையும் ஆசாரங்களையும் அறிந்து கொண்டு, தக்கபடி அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

கல்பயித்வா அஸ்யவருத்திம் ச ரக்ஷேதேநம் ஸமந்தத: |
ராஜா ஹி தர்மஷட் பாகம் தஸ்மாத் ப்ராப்நோதி ரக்ஷிதாத் 23

அத்தகை பிராம்மணனது ஜீவனத்துக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்து, அவர்களுக்கு எவராலும் துன்பம் ஏற்படாதவாறு எப்போதும் காப்பாற்றுகின்ற அரசனுக்கு, அப்பிராம்மணன் செய்யும் யக்ஞங்களாலும் தவங்களாலும் அவனுக்குக் கிடைக்கும் புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கு புண்ணியம் வந்தடையும்.

ந யக்ஞார்தம் தநம் சூத்ராத் விப்ரோ பிக்ஷேத கர்ஹிசித்
யஜமாநோஹி பிக்ஷித்வா சண்டாள: ப்ரேத்ய ஜாயதே|| 24

எத்தருணத்திலும் பிராம்மணன் யக்ஞம் செய்வதற்கான தனத்தை சூத்திரனிடம் யாசிக்கக்கூடாது. அப்படி யாசித்து யக்ஞம் செய்தவன் அடுத்த பிறவியில் சண்டாளனாகப் பிறப்பான். ஆனால் யாசிக்காமல் வந்த பொருளை யக்ஞத்துக்கு உபயோகப்படுத்தலாம்-

யக்ஞார்தம் பிக்ஷித்வா யோ நஸர்வம் ப்ரயச்சதி |
ஸ யாதி பாஸதாம் விப்ர: காகதாம் வா ஷதம்ஸமா:| 25

யக்ஞத்துக்காக என்று கூறி பொருளை சேகரித்து விட்டு மொத்தத்தையும் யக்ஞத்துக்குப் பயன்படுத்தாதவன் இறந்தபிறகு நூறு முறை கழுகாகவோ காகமாகவோ பிறப்பெடுப்பான்.

தேவஸ்வம் ப்ராஹ்மணஸ்வம் வா லோபேநோபஹிநஸ்தி ய: ||
ஸ பாபாஆத்மா பரே லோகே கருத்ரோச்சிஷ்டேந ஜீவதி || 26

தேவாலயத்தினுடைய சொத்தையும், பிராம்மணனுடைய சொத்தையும் பேராசையால் அபகரிக்கும் பாவி இறந்த பிறகு நரகத்தில் கழுகுகள் தின்று மிகுந்ததைக் தின்பவனாவான்.

இஷ்டிம் வைஷ்வாநரீம் நித்யம் நிர்வபேதப் தபர்யயே|
க்ளுப்தாநாம் ப ஸோமாநாம் நிஷ்க்ரு த்யர்தமஸம்பவே 27

ஒரு வருடம் முழுக்க சோமயக்ஞம் செய்யாவிடில், அடுத்த வருடத்தில் அந்த தோஷம் நீங்குவதற்காக வைஷ்வாநரயக்கும் செய்ய வேண்டும். அதற்குரிய தனம் இல்லாவிடில் தகாதவனிடமிருந்து தனம் கிடைத்தாலும் அதைப் பெற்று யக்ஞம் நடத்தலாம்.

ஆபத் கல்பேந யோ தர்மம் குருதே அநாபதி த்விஜ: |
ஸ நா ஆப்நோதி பலம் தஸ்ய பரத்ரேதி விசாரிதம் || 28

ஆபத்து சமயத்தில் இன்னின்ன முறைகளில் யக்ஞம் செய்யலாம் என்று கூறியுள்ளபடி தவிஜர்கள் செய்ய வேண்டும். இதே முறையை ஆபத்து இல்லாத காலத்தில் செய்யக்கூடாது. அப்படிச் செய்பவன்நல்லுலகத்தை அடைய மாட்டான்.

விஷ்வைஷ் ச தேவை: ஸாத்யைஷ் ச ப்ராஹ்மணைஷ்ச மஹர்ஷிபி: | ஆபத்சு மரணாத் பீதைர் விதே: ப்ரதிநிதி: க்ருத: i| 29
இவ்வாறாக யக்ஞங்கள் தினம் தினம் செய்பவை, வருடந்தோறும் செய்பவை, வாழ்நாளில் ஒருமுறையாவது செய்ய வேண்டியவை என்று இருக்கின்றன.-அதுபோக ஆபத்துக் காலத்தில் தன்னைக்காத்துக் கொள்வதற்காக எதிரியை அடக்கக்கூடிய அழிக்கக் கூடிய ஹோமங்களையும் செய்யலாம். இதையே இந்த ஸ்லோகத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறார். விஸ்வேதேவர்களும், தேவர்களும், சாத்யர்களும், பிராம்மணர்களும், மகரிஷிகளும், ஒருவனுக்கு மரணபயம் வந்த தருணத்திலும் ஆபத்துக் காலத்திலும் இத்தகைய ஹோமங்களைச் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.

ப்ரபு: ப்ரதமகல்பஸ்யயோ அனுகல்பேந வர்ததே|
ந ஸாம்பராயிகம் தஸ்ய துர்மதேர் வித்யதே பலம் || 30

ஆனால் எப்போதும் செய்யச் சொல்லியிருக்கின்ற பிரதானமான யக்ஞங்களை பிரதானமாகச் செய்யவேண்டும். அதை விட்டுவிட்டு ஆபத்தில் செய்யச் சொல்லியிருக்கின்ற யக்ஞங்களை தன்னுடைய லாபத்துக்காக அடிக்கடி செய்யும் தீய புத்திக்காரன் அதன் பலனை அடையமாட்டான்.

ந ப்ராஹ்மணோ வேதயேத கிஞ்சித் ராஜநி தர்மவித்
ஸ்வவீர்யேணைவ தாஞ்சிஷ்யாந் மாநவாநப காரிண: ||| 31

வேதவிற்பன்னனான பிராம்மணன், தனக்கு அபகாரம் செய்தவனைத் தண்டிக்க நினைத்தால், அரசனிடம் சென்று முறையிட்டு, அரசன் விசாரணை செய்து, அதன் பிறகு தண்டனை வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. தானே ஹோமம் செய்து
அதன் மூலமாக எதிரிக்கு வேண்டிய தண்டனை வழங்க முடியும்.

ஸ்வவீர்யாத் ராஜவீர்யாச் ச ஸ்வவீர்யம் பலவத்தரம் |
தஸ்மாத் ஸ்வேநைவ வீர்யேண நிக்ருஹ்ணீயா தரீந் த்விஜ: || 32

ஒரு வேற்பன்னனான த்விஜன், தன் சக்தியையும் அரசனது சக்தியையும் ஒப்பு நோக்கும் போது அவனுடைய சக்தியே பலமானதாக இருக்கும். எனவே அவன் தன்னுடைய சக்தியாலே எதிரிகளை வெல்லலாம்.

ஷ்ருதீரதர்வா ஆங்கிரஸ்: குர்யாதித்யவிசாரயர் |
வாக்ஷஸ்த்ரம் வை ப்ராஹ்மணஸ்ய தேந ஹந்யாதரீந்த்விஜ: || 33

தொல்லை தரும் எதிரிகளை ஒழிக்க வேண்டும் என்னும் போது த்விஜர்கள் ஆங்கிரஸ மஹரிஷி சம்பந்தப்பட்ட அதர் மந்திரங்களை தயக்கமின்றி பிரயோகிக்க வேண்டும். பிராம்மணனுடைய வாக்கு என்னும் ஆயுதத்தால் பகைவர்களை அழிக்க வேண்டும்.
(க்ஷத்ரிய வீரர்களும் வைசிய வணிகர்களும்கூட தங்களுக்குத் தொல்லை தரும் எதிரிகளை அழிக்க பிராம்மணர்களைக் கொண்டு இத்தகைய ஹோமங்களைச் செய்யவேண்டும் என்று இந்த ஸ்லோகத்தால் கூறுகிறார்)

க்ஷத்ரியோ பாஹுவீர்யேந தரேதாபதமாத்மந: |
தநேந வைஷ்ய சூத்ரௌ து ஜபஹோமைர் த்விஜோத்தம: 34

க்ஷத்ரியன் தனக்கு வந்த ஆபத்தை, தன் தோள் வலிமையால் தீர்த்துக் கொள்ள வேண்டும். வைசியனும் சூத்திரனும் தன் தனத்தைக் கொண்டு தீர்த்துக் கொள்ள வேண்டும்.
க்ஷத்ரியன் தன்னால் வெல்ல முடியாத ஆபத்து நேருங்காலத்தில் பிராம்மணர்களைக் கொண்டு ஜப ஹோமங்கள் செய்யவேண்டும். வைசியனும் அவ்வாறே செய்ய வேண்டும். தங்களுடைய தோள் வலிமையாலும், தன வலிமையாலும் தீர்த்துக்கொள்ள முடியாத
வற்றை, பிராம்மணனுடைய வாக்கு வலிமையைக் (மந்திரங்களைக்) கொண்டு தீர்த்துக் கொள்ள வேண்டும்.

விதாதா ஷாஸிதா வக்தா மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே |
தஸ்மை நாஅகுஷலம் ப்ரூயாந் ந சுஷ்காம் கிரமீரயேத் || 35

சாஸ்திரங்கள் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று விதித்திருக்கிறதோ அதை அப்படிச் செய்பவன் பிராம்மணன். பிராம்ணன் செய்கின்ற ஹோமங்களாலும் அனுஷ்டானங்களாலும் தான் அனைவரும் சுபிட்சமாக வாழமுடியும். எனவே பிராம்மணன்
என்பவன் எல்லோருக்கும் நன்மையை விரும்புகின்ற நண்பன்.எனவே பிராம்மணனிடம் எவரும் கடுஞ்சொற்களைப் பேசக்கூடாது. அவன் மனம் நோகும்படியான எந்தச் செயலையும் செய்யக்கூடாது.

நவை கந்யா நயுவதிர் நா அல்பவித்யோ ந பாலிஷ: |
ஹோதா ஸ்யாதக்நி ஹோத்ரஸ்ய நாஆர்தோ நாஅஸம்ஸ்க்ருதம் ததா|| 36

கன்னிப்பெண், யுவதி, சிறிதளவு படித்தவன், மூடன், உபநயனம்முதலான சம்ஸ்காரங்கள் இல்லாதவன்,உடல் நலமற்றவன்முதலானோர் அக்னிஹோத்ரனுக்கான ஹோமங்களைச் செய்யக் கூடாது.

நரகே ஹி பதந்த்யேதே ஜூஹ்வத: ஸசயஸ்ய தத் |
தஸ்மாத் வைதாநகுஷலோ ஹோதா ஸ்யாத் வேதபாரக: | 37

அவ்வாறு செய்தால் நரகத்தில் வீழ்வார்கள். பிறருக்காகஅக்ஹோத்ரமும் செய்யக்கூடாது.எனவே வேதமந்திரங்களைமுழுவதும் அறிந்தவனே பிறருக்காக ஹோமங்கள் செய்ய வேண்டும்.

ப்ராஜாபத்ய மதத்வா அஷ்வமக்ந்யாதேயஸ்ய தக்ஷிணாம் |
அநாஹிதா அக்நிர் பவதி ப்ராஹ்மணோ விபவே ஸதி || 38

ஆதானம் செய்யும்போது தனிகனாக இருக்கும் பிராம்மணன்பிரஜாபதி ரூபமான குதிரையை தட்சிணையாகக் கொடுக்க வேண்டும்.அவ்வாறு செய்யாவிடில் ஆஹிதாக்நியாக மாட்டான்.எனவே ஆதான கிரியையின் போது குதிரையை தானம் செய்தாகவேண்டும்.

புண்யாந்யந்யாநி குர்வீத ஷ்ரத்ததாநோ ஜிதேந்த்ரிய:|
நத்வல்பதக்ஷிணைர் யக்ஞைர் யஜேதேஹ கதஞ்சந || 39

புலனடக்கமும் சிரத்தையும் கொண்டவன், தீர்த்த யாத்திரை,தேவாலயம் அமைத்தல், குளம் வெட்டுதல் முதலான புண்ணிய கிரியைகளைச் செய்ய வேண்டும். யக்ஞங்களில் தட்சிணைகளை தாராளமாகக் கொடுக்க வேண்டும்.

இந்த்ரியாணி யஷ: ஸ்வர்கமாயு: கீர்திம் ப்ரஜா: பசூந் | ஹந்த்யல்பதக்ஷிணோ யக்குஸ் தஸ்மாந் நா அல்பதநோ யஜேத்|| 40
சொற்பதக்ஷிணையோடு யக்ஞத்தை முடித்தாலும், சொற்ப தனத்தோடு யக்ஞம் செய்தாலும் கண்பார்வைக் குறைவு, காது மந்தம், புத்தி பேதலித்தல், ஊமையாதல் முதலான குறைகள்
ஏற்படும்; புகழைக் கெடுக்கும்; ஆயுளைக் குறைக்கும்; புத்திரர்கள் இறப்பார்கள்; பசுக்கள் குதிரைகள் முதலான செல்வங்கள் அழியும். இறந்த பிறகு சொர்க்கலோகமும் கிட்டாது.எனவே சொற்ப தனத்தோடு யக்ஞம் செய்யக்கூடாது.

அக்நிஹோத்ர்யபவித்யா அக்நீந் ப்ராஹ்மண: காமகாரத: |
சாந்த்ராயணம் சரேந் மாஸம் வீரஹத்யாஸமம் ஹி தத் || 41

அக்னிஹோத்திரியாக இருப்பவன், காலையும் மாலையும் ஒளபாசனம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவன் வீரனைக் கொன்றபாபத்தை அடைகிறான். எனவே ஒளபாசனம் செய்ய முடியாமல் விட்டுப் போனால் அந்தப் பாவம் நீங்க ஒரு மாதம் சாந்திராயண விரதத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.

யே சூத்ராததிகம்யா அர்தமக்நி ஹோத்ரமுபாஸதே 1
ருத்விஜஸ் தே ஹி சூத்ராணாம் ப்ரஹ்மவாதிஷு கர்ஹிதா: 42

சூத்திரனிடம் யாசித்துப் பெற்று, அதைக் கொண்டு அக்னிஹோத்ரம் செய்பவன், அக்னி ஹோத்ரம் செய்த பலனை அடையமாட்டான். சூத்திரனுக்கு புரோகிதனாக இருந்தது
போன்றதாகும் இது. இத்தகு செயலை வேதமறிந்தோர் நிந்திப்பர்.

தேஷாம் ஸத்தமக்ஞாநாம் வ்ருஷலாக் ந்யுபஸேவிநாம்
பதா மஸ்தகமாக்ரம்ய தாதா துர்காணி ஸந்தரேத் || 43

இத்தகு காரியத்தை செய்யும் த்விஜன் நற்கதியை அடைய
முடியாது. மாறாக இவனுக்கு யாசித்தபோது கொடுத்தவன் நற்கதி யடைவான்.

அகுர்வந் விஹிதம் கர்ம நிந்திதம் ச ஸமாசரந் | ப்ரஸக்தஷ்சேந்த்ரியா அர்தே ப்ராய சித்தீயதே நர: 44
தர்ம சாஸ்திரம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விதித்துள்ளதோ அப்படி நடந்து கொள்ளாதவனும், எந்தெந்த செயல்களைச் செய்யக்கூடாது என்று விதித்துள்ளதோ அவற்றைச் செய்தவனும், புலனடக்கமின்றி மனம் போனபடி வாழ்ந்தவனும்
தன் பாவங்கள் நீங்க பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.

அகாமத க்ருதே பாபே ப்ராய் சித்தம் விதுர்புதா: |
காமகாரக்ருதே அப்யாஹுரேகே ஷ்ருதி நிதர்ஷநாத் || 45

அறிஞர்கள், ஒருவன் தெரியாமல் செய்த பாவத்திற்கு மட்டுமே பிராயச்சித்தம் உண்டு என்று கூறுகிறார்கள். சிலர், தெரிந்தேபாவம் செய்திருந்தாலும்கூட பிராயச்சித்தம் உண்டு என்று கூறுகிறார்கள்.

அகாமத: க்ருதம் பாபம் வேதாஅப்யாஸேந ஷீத்யதி |
காமதஸ் து க்ருதம் மோஹாத் ப்ராயச்சித்தை: ப்ருத விதை: || 46

தெரியாமல் செய்தபாபங்கள் வேதங்களை ஓதுவதாலேயே நசித்துவிடும். ஆனால் காமத்தாலும் மோகத்தாலும் செய்த பாபங்களை பலவகையான பிராயச்சித்தங்களை செய்தே நீக்கிக் கொள்ள முடியும்.

ப்ராயஷ்சித்தீயதாம் ப்ராப்ய தைவாத் பூர்வக்ருதேந வா
ந ஸம்ஸர்கம் வரஜேத் ஸத்பி ப்ராயஷ்சித்தே அக்ருதேத்விஜ:|| 47

முன்னர் செய்த பாவவினைக் காரணமாகவோ, தெய்வச் செயலாலோ வெளிப்படையாக பாவத்தின் பலன் தெரியுமாறுகொடிய நோய் முதலானவை ஏற்பட்டால் பிராயச்சித்தம் செய்து கொள்ளாமல் சாதுக்களோடு யாகங்களில் கலந்து கொள்ளக் கூடாது.

இஹ துஷ்சரிதை: கேசித் கேசித் பூர்வக்ருதைஸ் ததா |
ப்ராப்னுவந்தி துராமாநோ நரா ரூபவிபர்யயம் || 48

இப்பிறவியில் செய்தபாபச்செயல்களாலும், பூர்வ ஜன்மங்களில் செய்த பாபச் செயல்களாலும் துராத்மாக்களான மனிதர்கள் விகாரமான உருவ மாறுபாடுகளை அடைவார்கள்.

சுவர்ணசௌர: கௌணக்யம் சுராப: ஷ்யாவதந்ததாம் |
ப்ரஹ்மஹா க்ஷய ரோகித்வம் தௌஷ்சர்மயம் குருதல்பக: II-49-

பி ந: பௌதிநாசிக்யம் சூசக: பூதிவக்த்ர தாம் |
தான்ய சௌரோ அங்கஹீனத்வ மாதிரைக்யம் து மிஷ்ரக: ||-50-

அந்நஹர்தா ஆமயாவித்வம் மௌக்யம் வாகபஹாரக: |
வஸ்த்ரா அபஹாரக: ஷ்வைத்ர்யம் பங்குதாமஷ்வ ஹாரக: ||51
ஏவம் கர்மவிசேஷேண ஜாயந்தே ஸத்விகர்ஹிதா: |
ஜடமூகா அந்தபதிரா விக்ருதா ஆக்ருதயஸ் ததா||52-

முற்பிறவியில் செய்த பாபங்களுக்கு இப்பிறவியில் விளையும் பயன்களைப் பார்ப்போம்.
தங்கத்தைத் திருடியவனுக்கு புழுத்துப் போன நகங்கள் ஏற்படும்.
கள் குடித்தவனுக்கு சொத்தைப் பற்கள் ஏற்படும்.
பிரம்மஹத்தி செய்தவனுக்கு க்ஷயரோகம் ஏற்படும்.
குரு பத்னியைக் கூடியவனுக்கு பீஜமில்லாமை ஏற்படும்.-கோள் சொன்னவன் துர்வாசனையுள்ள மூக்கை அடைவான்.
வீண்பழி சுமத்தியவன் துர்வாசனையுள்ள வாயை அடைவான்.
தானியங்களைக் களவாடியவன் அங்கஹீனனாவான்.
தானியங்களில் கலப்படம் செய்தவன் அதிக உறுப்புகொண்டவனாவான்.
அன்னத்தைத் திருடியவன் அஜீர்ண நோய் கொண்டவனாவான்.
குருவுக்குத் தெரியாமல் அவர் வித்தையைக் கற்றவன்ஊமையாவான்.
வஸ்திரங்களைத் திருடியவன் வெண்குஷ்டனாவான்.
குதிரைத் திருடன் முடவனாவான்.
இவ்வாறு உடல் இயக்கம் குறைந்தவர்களாகவும், விகார உருவம் பெற்றவர்களாகவும், சான்றோர்களால் நிந்திக்கப்பட்டவர்களாகமுற்பிறவிப் பயன்களை அனுபவிப்பார்கள்.

சரித வ்யமதோ நித்யம் ப்ராயசித்தம் விசுத்தயே|
நிந்த்யைர் ஹி லக்ஷணைர் யுக்தா ஜாயந்தே ஸ: அநிஷ்க்ருதைந-53

ஏற்கெனவே செய்த பாபங்களுக்காக தினமும் பிராயச்சித்தங்களைச் செய்து பரிசுத்தி அடைய வேண்டும். இல்லாவிடில்அடுத்தபிறவியிலும் நிந்திக்கத்தக்க இத்தகைய விகாரங்களோடுபிறப்பர்.

ப்ரஹ்மஹத்யா சுராபாநம் ஸ்தேயம் குர்வங்கநாகம: 11 மஹாந்தி பாதகாந் யாஹு: ஸம்ஸர்கஷ்சா அபி தை: ஸஹ: || 54பிராம்மணனைக் கொல்லுதல், போதை தரும் கள்ளைஅருந்துதல், தங்கம் முதலானவற்றைத் திருடுதல், குரு மனைவியைஅடைதல் முதலானவை மிகப்பெரும் பாபங்களாகும். இத்தகையபாபங்கள் புரிந்தாரோடு கூடியிருத்தலும் மிகப் பெரும் பாபமேயாகும்.

அந்ருதம் ச ஸமுத்கர்ஷே ராஜகாமி ச பை நம் |
குரோஷ் சா ஆலீகநிர்பந்த ஸமாநி ப்ரஹ்ம ஹத்யயா || 55

மேலோரிடம் பொய் பேசுதல், ஒருவரைப் பற்றி அவனுக்கு பெரும் தண்டனை கிடைக்கும் வண்ணம் மன்னனிடம் கோள் சொல்லுதல், குருவின் மீதுப சுமத்துதல் முதலான பாபங்களும் பிரம்மஹத்திக்கு நிகரான பாபங்களேயாகும்.

ப்ரஹ்மோஜப்தா வேதநிந்தா கெளடஸாக்ஷ்யம் சுஹ்ருத் வத: 1 கர்ஹிதா அநாத்யயோர் ஐக்தி: சுராபாநஸமாநி ஷட்|| 56
படித்த வேதத்தை தொடர்ந்து ஓதாமல் மறந்து போதல், வேதத்தை நிந்தித்தல், பொய்சாட்சி கூறுதல், நண்பனை அடித்தல், சாப்பிடத் தகாதவை என்று விலக்கியுள்ள பதார்த்தங்களை சாப்பிடுதல், சிறுநீர் முதலானவற்றை உட்கொள்ளல் என்னும் இவையெல்லாம் கள் உண்டதற்கு சமமான பாபத்தைத் தரும்.

நிக்ஷேபஸ்யா அபஹரணம் நராஅஷ்வரஜதஸ்ய ச |
பூமி வஜ்ரமணீநாம் ச ருக்மஸ்தேயஸமம் ஸ்ம்ருதம் || 57

ஒருவன் தன்னிடம் சிறிது காலம் பாதுகாத்துத் தரும்படி கொடுத்து வைத்திருந்த தங்கத்தைத் திருடுதலும், மனிதர்கள் குதிரைகள் வெள்ளி பூமி வைரம் மணிகள் முதலானவற்றைக் திருடுதலும் தங்கத்தைக் திருடியதற்குச் சமம்.

ரேத:ஸேகம் ஸ்வயோநிஷு குமாரீஷ்வந்த்யஜாசு ச |
ஸக்யு: புத்ரஸ்ய ச ஸ்த்ரீஷு குருதல்பஸமம் து: | 58

உடன் பிறந்த சகோதரி, பெற்ற மகள், சண்டாளப் பெண் நண்பனின் மனைவி, மகனுடைய மனைவி இவர்களைக் கூடிச் சுகித்தவன் குருபத்னியைக் கூடியவன் அடையும் பாபத்தை
அடைகிறான்.

கோவதோ அயாஜ்ய ஸம்யாஜ்ய பாரதார்யா ஆத்ம விக்ரயா: |
குரு மாத்ரு பித்ருத்யாக: ஸ்வாத்யாயா அக்ந்யோ: சுதஸ்ய ச||| 59

பரிவித்திதா அனுஜே அனூடே பரிவேதநமேவ ச
தயோர் தாநம் ச கந்யாயாஸ் தயோரேவ ச யாஜநம் || 60

கந்யாயா தூஷணம் சைவ வார்துஷ்யம் வரதலோபநம்|
தடாகா ஆராமதாராணா மபத்யஸ்ய ச விக்ரய: |61

வ்ராத்யயா பாந்தவத்யாகோ ப்ருத்யா அத்யாபநமேவ ச
ப்ருத்யா சாஅத்யயநா ஆதாநமபண்யாநாம் ச விக்ரய: [I 62

ஸர்வா ஆகரேஷ்வதீகாரோ மஹாயந்த்ரப்ரவர்தனம் |
ஹிம்ஸௌ தீநாம் ஸ்த்ரயாஜீவோ அபிசாரோ மூல கர்ம ச-63


மஷுகாணாம் த்ருமாணாமவபாதநம் |
ஆத்மார்தம் ச க்ரியாரம்போ நிந்திதா அந்நா அதநம் ததா||-64-


அநாஹிதா அக்நிதா ஸ்தேயம்ருணாநாமநபக்ரியா |
அஸச்சாஸ்த்ரா அதிகமம் கௌஷீலவ்யஸ்ய சக்ரியா ||-65-


தான்யகுப்ய ப ஸ்யதேயம் மத்யபஸ்த்ரிநிஷேவணம் |
ஸ்த்ரீ சூத்ரவிட் க்ஷத்ரவதோ நாஸ்திக்யம் சோபபாதகம் ||-66

இதுவரை கூறியவை மகா பாதகங்கள். இனி கூறப்போகின்றவை உப பாதகங்கள்.பசுவைக் கொல்லுதல், தகாதவர்களைக் கொண்டு யாகம் செய்வித்தல், பிறர் மனைவியைப் புணர்தல், தன்னைத்தானே விற்றல், குருவையும் பெற்றோரையும் போஷிக்காமல் கைவிடல்,வேதத்தை ஓதாமல் விட்டுவிடல் அக்னி ஓம்புதலை விட்டுவிடல்.பிள்ளைக்கு உபநயம் முதலான கிரியைகளைச் செய்யாமல் விட்டுவிடல், தனக்கு இளைய சகோதரன் மணம் புரிந்து கொண்ட பிறகு மணம் புரிந்து கொண்டவன், மூத்தவனுக்கு முன்பு மணம் புரிந்து கொண்ட இளையவன், மூத்தவனுக்கு முன்பு மணம் புரிந்து கொள்ளும் இளைய சகோதரனுக்கும், இளையவன் மணம் புரிந்து கொண்ட பிறகு மணம் புரிந்து கொள்ளும் மூத்தவனுக்கும் பெண்ணைக் கொடுப்பது, கன்னிப் பெண்ணிடம் தகாத முறையில் கைகளால் சீண்டுவது, ஒரு கன்னிப் பெண்ணுக்கு களங்கம் கற்பித்துப் பேசுவது, அதிக வட்டியால் ஜீவனம் நடத்துவது, பிரம்மச்சரிய விரதத்தில் இருப்பவன் பெண்ணைப் புணர்வது, தடாகம் மலர்வனம் மனைவி மகன்களை விற்பது, உரிய காலத்தில் உபநயனம் முதலான சம்ஸ்காரங்களைச் செய்து கொள்ளாமலிருத்தல், காப்பாற்ற வேண்டிய தருணத்தில் காப்பாற்றாமல் பந்துக்களை கைவிடல்,தனத்தைப் பெற்றுக் கொண்டு வேதம் சொல்லிக் கொடுத்தல்,தனத்தைக் கொடுத்து வேதத்தைக் கற்றல், விற்கத் தகாத பொருட்களை விற்றல், தங்கச் சுரங்கத்தில் அதிகாரியாக இருத்தல்,பெரிய எந்திரங்களை அமைக்கும் பணியில் அதிகாரியாக இருத்தல்,மூலிகைகளை அழிப்பது, மனைவியை வேசியாக்கிப் பிழைப்பது,விறகுக்காக பச்சை மரங்களை வெட்டுவது, அபிசாரம் முதலானவற்றால் தீங்கிழைக்காதவனைக் கொல்லுதல், மந்திர ஒளஷதங்களால் பிறரை வசியம் செய்தல், தேவ நிவேதனத்துக்காக சமைக்காமல் தனக்காக சமைத்தல், உணவில் சேர்க்கக் கூடாது என்று சொல்லப் பட்டுள்ளவற்றைச் (பூண்டு, வெங்காயம், காளான் முதலானவை) சேர்த்து சமைத்துண்பது, செய்ய வேண்டிய அக்னி ஆதானத்தை செய்யாதிருத்தல், தங்கம் தவிர்த்து மற்ற உயர்ந்த பொருட்களைத் திருடுதல், வாங்கிய கடனை திரும்பக் கொடுக்காதிருப்பது, வேதத்துக்கு விரோதமான சாஸ்திரங்களை கற்பது, ஆடல் பாடல்களைக் கற்பது, தானியங்கள், செம்பு முதலான உலோகங்களையும் பசுக்களையும் திருடுவது, குடிகாரியான பெண்ணை த்விஜர்கள் மணப்பது, பெண்ணையோ சூத்திரனையோ வைசியனையோ க்ஷத்ரியனையோ கொல்வது, நாஸ்திக புத்தி யோடிருப்பது – இவை யாவும் உப பாதகங்கள் எனப்படும்.

ப்ராஹ்மணஸ்ய ருஜ: க்ருத்யா க்ராதிரக்ரேயமத்யயோ: 1
ஜைஹ்ம்யம் ச மைதுநம் பூம்ஸி ஜாதிப்ரம்ஷகரம் ஸ்ம்ருதம்|| 67

பிராம்மணனை எலும்பு முறிவு ஏற்படுமாறு அடித்தல், துர்கந்தமுள்ள கள்ளையும் மலத்தையும் முகர்தல், மோசம் செய்தல், ஆணின் முகத்தில் மைதுனம் செய்தல் என்னுமிவை செய்தவர் ஜாதியிலிருந்து வீழ்ந்தவராவர். அதாவது இப்படிச் செய்தவன் தன்
வர்ண தர்மத்திலிருந்து வீழ்ந்து விட்டவன். தன்னை பிராம்மணன் என்றோக்ஷத்ரியன் என்றோ வைசியன் என்றோ சூத்திரன் என்றோ கூறிக் கொள்ள இயலாத நீசன் ஆகிறான். இதற்கு ஜாதி பிரம்சகரபாபம் என்று பெயர்.

கரா அஷ்வோஷ்ட்ரம்ருகே பாநாமஜா அவிகவதஸ் ததா| .
ஸங்கரீகரணம் ஞேயம் மீநாஹிமஹிஷஸ்ய ச | 68

கழுதை, குதிரை, ஒட்டகம், மான், யானை, வெள்ளாடு, செம்மறியாடு, மீன், பாம்பு, எருமை முதலானவைகளைக்கொல்லுவது சங்கரீகரணம் எனப்படும்.

நிந்திதேப்யோ தநா ஆதாநம் வாணிஜ்யம் சூத்ரஸேவநம் |
அபாத்ரீகரணம் நேயமஸத்யஸ்ய ச பாஷணம்|| 69

நிந்திக்கத்தக்க பாவிகளிடமிருந்து தானம் பெறுதல், வர்த்தகம், சூத்ரனிடம் பணிபுரிதல், பொய்பேசுதல் என்னுமிவை அபாத்கரணம் எனப்படும்.

க்ருமிகீட வயோஹத்யா மத்யா அனுகதபோஜநம் |
பலைத: குசுமஸ்தேய மதைர்யம் ச மலா ஆவஹம்|| 70

கிருமிகளையும் பூச்சிகளையும் கொல்லுதல், பறவைகளைக் கொல்லுதல், கள்ளோடு கூட ஒரே பாத்திரத்தில் கொணர்ந்த உணவு, பழங்கள் விறகு பூக்களைத் திருடுதல், அற்ப விஷயத்துக்கெல்லாம் பெரிதாக துக்கித்தல் என்னுமிவை மலினீகரணங்கள் எனப்படும்.

ஏதாந்யேநாம்ஸி ஸர்வாணி யதோதாநி ப்ருதக் ப்ருதக் | 1
யைர்யைர் வ்ரதைர போஹ்யந்தே தானி ஸம்யங்நிபோதத |71

இதுவரை கூறப்பட்ட சகல பாபங்களுக்கும் உரிய பிராய சித்தங்களைக் கூறுகிறேன், கேளுங்கள்.

ப்ரஹ்மஹா த்வாதஷ ஸமா: குடிம் க்ருத்வா வநே வஸேத் |
பைக்ஷாஷ்யாத் மவிசுத்யர்தம் க்ருத்வா ஷவஷிரோத்வஜம் || 72

பிரம்மஹத்தி பாபம் நீங்க முதலில் ஊரைவிட்டு வெளியேறி வனத்தில் குடில் அமைத்து வசிக்க வேண்டும். அடுத்ததாக கையில் மண்டையோட்டை ஏந்தியபடி தினமும் ஊருக்குள் வந்து ஏழு வீடுகளில் பிச்சையெடுத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு வருடங்கள் நடக்க வேண்டும்.

லக்ஷ்யம் ஷஸ்த்ரப்ருதாம் வா ஸ்யாத் விதுஷாமிச்சயா ஆத்மந: 11
ப்ராஸ்யேதாத்மா நமக்நெள வாஸமித்தே த்ரிரவாஷிரா: I |-73

வேண்டுமென்றே பிரம்மஹத்தி செய்தவன் பிறரால் எய்யப்பட்ட அம்புகளால் அடிபட்டு இறக்க வேண்டும். அல்லது இறக்கும் வரை அப்படியே கிடக்க வேண்டும். அல்லது நன்கு எரியும் அ நியின் முன் மும்முறை தலைகீழாக விழ வேண்டும்.

யஜேத வா அஷ்வமேதேந ஸ்வர்ஜிதா கோஸவேந வா |
அபிஜித் விஷ்வஜித்ப்யாம் வாத்ரிவ்ருதா அக்நிஷ்டுதா அபி வா|| 74

அல்லது, அஸ்வமேதயாகம் செய்தோ, ஸர்வஜித் யாகம் செய்தோ, கோசவ யாகம் செய்தோ, அபிஜித் யாகம் செய்தோ,விஸ்வஜித் யாகம் செய்தோ த்ரில்ருத்தாக்னி டோமம் செய்தோ பிரம்மஹத்தி பாபத்தினின்று விடுபடலாம்.

ஜபந் வா அந்யதமம் வேதம் யோஜநாநாம் ஷதம் வ்ரஜேத் ப்ரஹ்மஹத்யா அபநோதாய மிதபுங்நி யதேந்த்ரிய: || 75
அல்லது புலனடக்கி ஏதேனும் ஒரு வேதத்தை ஓதியபடியே. சொற்ப ஆகாரம் சாப்பிட்டபடி நூறு யோஜனை தூரம் நடக்க வேண்டும்.

ஸர்வஸ்யம் வேதவிதுஷே ப்ராஹ்மணாயோப பாதயேத் | தநம் வா ஜீவநாயா அலம் க்ருஹம் வா ஸபரிச்சதம் ||76
அல்லது வேதவிற்பன்னனான பிராம்மணனுக்குத் தன் சொத்துமுழுவதையும் கொடுத்து விட வேண்டும். அல்லது ஜீவனத்துக்குத்தேவையான அளவாவது கொடுக்க வேண்டும். அல்லது தனம்,தானியம், பசுக்களோடு வீட்டைக் கொடுக்க வேண்டும்.

ஹவிஷ்யபுக் வாஅநுச ரேத் ப்ரதிஸ்ரோத: ஸரஸ்வதீம் ஜபேத் வா நியதா ஆஹாரஸ் த்ரிர்வை வேதஸ்ய ஸம்ஹிதாம் || 77
அல்லது சரஸ்வதி நதி சமுத்திரத்தில் கலக்குமிடத்திலிருந்துசரஸ்வதி பிரவாகத்துக்கு எதிராகவே ஸரஸ்வதியின் ஆரம்ப இடம் தெரியும் வரை கரையோரமாக நடந்து செல்ல வேண்டும். அல்லதுஆகார நியமத்தைக் கொண்டு மூன்று வேதங்களையும் மூன்று மூன்றுமுறை பாராயணம் செய்ய வேண்டும்.

க்ருதவாபநோ நிவஸேத் க்ராமா அந்தே கோவ்ரஜேஅபி வா ஆஸ்ரமே வ்ருக்ஷமூலே வா கோ ப்ராஹ்மணஹிதே’ ரத: |78
பன்னிரன்டு வருடங்கள் வனத்தில் வசிக்கும் விரதத்தைஏற்றவன், அப்படி வசிக்கும் சூழ்நிலை இல்லை என்றால் வேறுமுறையிலும் வசிக்கலாம். கிராமத்துக்கு அருகிலேயே பசுக் கொட்டிலிலோ ஆஸ்ரமத்திலோ மரத்தடியிலோ தங்கியிருக்கலாம்.தலையை மொட்டை யடித்துக் கொண்டிருக்க வேண்டும். அருகில்உள்ள பசுக்களுக்கும் ஆசிரமவாசிகளான பிராம்மணர்களுக்கும்ஹிதம் தரும் காரியங்களைச் செய்தபடி காலங்கழிக்க வேண்டும்.

ப்ராஹ்மணார்தே கவார்தே வா ஸத்ய: ப்ராணாந் பரித்யஐந் | முச்யதே ப்ரஹ்மஹத்யாயா கோப்தா கோப்ராஹ்மணஸ்ய ச || 79
இப்பன்னிரண்டாண்டுகளுக்கிடையே பிராம்மணனைக்411 காப்பதற்காகவோ, பசுவைக் காப்பாற்றுவதற்காகவோ தன் உயிரைத் தியாகம் செய்தால், அவனுடைய பிரம்மஹத்தி பாபம் அவனை விட்டு நீங்கி விடும்.

த்ரிவாரம் ப்ரதிரோத்தா வா ஸர்வஸ்வமவஜித்ய வா |
விப்ரஸ்ய தந்நிமித்தே வா ப்ராணலாபே விமுச்யதே || 80

அதேபோன்று பிராம்மணனுடைய பொருளை திருடிச் செல்பவனை உயிருக்குத் துணிந்து விரட்டிப் பிடித்து அந்தப் பொருளை மீண்டும் கொண்டு வந்து பிராம்மணனிடம் ஒப்படைத்தாலும் பிரம்மஹத்தி பாபம் அவனை விட்டு நீங்கும். திருடனைப் பிடிக்கும் போது அவனோடு எவ்வளவோ போராடியும்கூட, அந்தப் போரில் வெல்ல முடியவில்லை,
திருடனைப் பிடிக்க முடியவில்லை என்ற போதிலும், தன் உயிருக்குத் துணிந்துபோரிட்ட அந்தச் செய்கையால் அவனது பிரம்மஹத்தி பாபம் அவனை விட்டு நீங்கும்.
பொருளை திருடனிடம் பறிகொடுத்துவிட்டு மனம் தாளாமல் உயிர்போகும் நிலையிலுள்ள அப் பிராம்மணனுக்கு, தன்னுடைய பொருளைக் கொடுத்து அவன் உயிரைக் காத்தாலும் இவனது பிரம்மஹத்தி பாபம் நீங்கும்.

ஏவம் த்ரூடவரதோ நித்யம் ப்ரஹ்மசாரீ ஸமாஹித: 11
ஸமாப்தே த்வாதஷே வர்ஷே ப்ரஹ்மஹத்யாம் வ்யபோஹதி |-81

இவ்வாறாக திடமான மனத்தோடு பன்னிரண்டு ஆண்டுகள் விரதத்தைக் கடைப்பிடித்தபடி, பிரம்மசரிய விரதத்தோடு காலம் கழித்தால் பன்னிரண்டாண்டுகள் பூர்த்தியான பிறகு பிரம்மஹத்தி பாபத்திலிருந்து நீங்குவான்.

ஷிஷ்ட்வா வா பூமிதேவாநாம் நரதேவ ஸமாகமே |
ஸ்வமேநோ அவப்ருதஸ்தநாதோ ஹயமேதே விமுச்யதே || 82

ஆலய தெய்வங்கள் சாட்சியாக, அரசன் முன்னிலையிலும். வேதவிற்பன்னர்கள் முன்னிலையிலும் தான் செய்த பிரம்ம ஹத்தியை எடுத்துக் கூறி, அஸ்வமேதயாகம் செய்து முடித்து அவப்ருத ஸ்நானம் செய்தவுடன் அவனுடைய பிரம்மஹத்தி பாபம் நீங்கும்.

தர்மஸ்ய ப்ராஹ்மணோ மூலமக்ரம் ராஜந்ய உச்யதே | தஸ்மாத் ஸமாகமே தேஷாமேநோ விக்யாப்ய த்யதி || 83
தர்மத்தை ஒரு மரமாக எடுத்துக் கொண்டால், அதன் வேர்கள் பிராம்மணனர்கள். அதன் நுனி அரசன். அத்தகைய பிராம்மணர்களும் அரசனும் சேர்ந்திருக்கும்போது அவர்களிடத்தில் தான் செய்த பாபத்தை பகிங்கரமாக வெளிப்படுத்திய பிறகு அஸ்வமேதயாகம் செய்தானானால் அவன் பாபம் நீங்கி பரிசுத்தனாகிறான்.

ப்ராஹ்மண: ஸம்பவேநைவ தேவாநாமபி தைவதம்|
ப்ரமாணம் சைவ லோகஸ்ய ப்ரஹ்மா அத்ரைவ ஹிகாரணம் || 84

பிராம்மணன் தன் பிறப்பினால் தேவர்களால் போற்றப்படுபவனாகிறான். ஏனெனில் உலகத்துக்குக் காரணமாயமைந்தவை வேதங்கள். வேதங்களே அனைத்து தர்மங்களையும் உபதேசிக்கின்றன. அந்த வேதங்களை எப்போதும் ஒதுகின்ற வாக்கை உடையவன் பிராம்மணன். இவனது இத்தகைய வாக்கினாலேயே தேவர்கள் அனைவரும் நிறைவை அடைகின்றனர்.

தேஷாம் வேதவிதோ ப்ரூயுஸ் த்ரயோ அப்யேந:சு நிஷ்க்ருதிம் | ஸாதேஷாம் பாவநாய ஸ்யாத்பவித்ரா விதுஷாம் ஹி வாக் || 85
மூன்று வேதங்களையும் நன்குணர்ந்த வேதவிற்பன்னர்கள் முன்னிலையில் தன்னுடைய பாவங்களை எடுத்துரைத்து, அதற்கு பிராயச்சித்தமாக அவர்கள் என்ன சொல்கிறார்களோ அப்படிச் செய்தால் பாபம் நீங்கும். வேதவிற்பன்னர்களுடைய வாக்கே தூய்மையான தாகும்

அதோ அந்யதமமாஸ்தாய விதிம் விப்ர: ஸமாஹித: |
ப்ரஹ்மயத்யாக்ருதம் பாபம் வ்யபோஹத்யாத்மவத் தயா ||| 86

பிரம்மஹத்திக்காரன் இதுவரை கூறிய வழிகளில் ஏதேனும் ஒரு பிராயச்சித்த வழியைப் பின்பற்றினால் தன் பாபத்தினின்றும் விடுபடுவான்.

ஹத்வா கர்பமவிக்ஞாதமேததேவ வரதம் சரேத் |
ராஜந்யவைஷ்யௌ சேஜாநாவாத்ரேயீமேவ ச ஸ்த்ரியம்|| 87

கர்ப்பத்தைக் கலைத்தாலும், யாகத்தில் ஈடுபட்டிருக்கும் க்ஷத்ரிய வைசியரைக் கொன்றாலும், பிராம்மணப் பெண்ணைக் கொன்றாலும் இதுவரை கூறிய வழிமுறைகளின் படியே பிராயசித்தம் செய்து கொள்ள வேண்டும்.

உக்த்வா சைவாஅந்ருதம்ஸாஷ்யே ப்ரதிருத்ய குரும் ததா
அபஹ்ருத்ய ச நிக்ஷேபம் க்ருத்வா ச ஸ்த்ரீ ஹ்ருத் வதம்|| 88

பொய்சாட்சி கூறியவனும், குருவின் மீது பழிசுமத்தியவனும், பாதுகாக்கக் கொடுத்த பொருளை அபகரித்தவனும், பெண்ணைக் கொன்றவனும், நண்பனைக் கொன்றவனும்கூட இத்தகைய பிராயச்சித்தங்களையே செய்து கொள்ள வேண்டும்.

இயம் விசுத்திருதிதா ப்ரமாப்யா அகாமதோ த்விஜம் |
காமதோ ப்ராஹ்மண வதே நிஷ்க்ருதிர் ந விதீயதே || 89

இந்த பிராயச்சித்தங்களெல்லாம் அறியாமல் செய்த பிரம்மஹத்தி பாபத்துக்கே சொல்லப்பட்டது. வேண்டு மென்றே பிராம்மணனைக் கொன்றதற்கு பிராயச்சித்தம் சொல்லப்படவில்லை.

சுராம் பீத்வா த்விஜோ மோஹாதக்நிவர்ணாம் சுராம் பிபேத்|
தயா ஸ காயே நிர்தக்தே முச்யதே கில்பிஷாத் தத: || 90

த்விஜர்கள் சுராபானத்தை மோகத்தால் குடித்தால், சிவக்கக் காய்ச்சிய கள்ளை அவன் வாயில் ஊற்ற வேண்டும். அதனால் அவன் உடல் வெந்துபோனால் அவன் சுராபானம் குடித்த பாபத்திலிருந்து நீங்குகிறான்.

கோமூத் ரமக்நி வர்ணம் வா பிபேது தகமேவ வா |
பயோ க்ருதம் வாஆமரணாத் கோஷக்ருத்ரஸமேவ வா 91

அல்லது பசுவின் மூத்திரத்தையாவது,பசுவின் பாலையாவது, பசுவின் சாணக் கரைசலையாவது, பசுநெய்யையாவது தள தளவெனக் காய்ச்சிசாகும்வரை குடிக்க வேண்டும்.

கணாந் வா பக்ஷயேதப்தம் பிண்யாகம் வா ஸக்ருந் நிஷி |
சுராபாநா அபனுத்யர்தம் வாலவாஸா ஐடீ த்வஜீ|| 92

அல்லது கம்பளியைத் தரித்து, ஜடைகளை வளர்த்துக் கொண்டு,) கள்குடுவை போன்ற பாத்திரத்தில் இரவு ஒரு வேளை மட்டும் நொய்கஞ்சியை குடிக்க வேண்டும். அல்லது பிண்ணாக்கை சாப்பிட வேண்டும்.

சுராவை மலமந்நாநாம் பாப்மா ச மலமுச்யதே |
தஸ்மாத் ப்ராஹ்மண ராஜந்யௌ வைஷ்யஷ்ச ந சுராம்பிபேத் || 93

அன்னத்தைக் கொண்டு சாராயம் காய்ச்சுவார்கள். அதைக் குடிப்பதும் பாபமேயாகும். இது சுராபானத்துக்கு நிகரானது. எனவே பிராம்மண க்ஷத்ரிய வைசியர்கள் இதைக் குடிக்கக்கூடாது.

கௌடீ பைஷ்டீ ச மாத்வீச விக்ஞேயாத்ரிவிதா சுரா |
யதைவைகா ததாஸர்வா ந பாதவ்யா த்விஜோத்தமை: || 94

கெளடி, பைஷ்டி, மாத்வி என்று சாராயம் மூன்று வகையாக இருக்கும்.-கெளடி என்பது வெல்லத்தைக் கொண்டு காய்ச்சுவது.-பைஷ்டி என்பது சாதத்தைக் கொண்டு காய்ச்சுவது.
மாத்வீ என்பது ஒருவகைப் பூக்களைக் கொண்டு காய்ச்சுவது.-மூன்றுமே சாராயங்கள்தான். இதில் மேலென்றும் ழென்றும் எதுவும் கிடையாது. எனவே த்விஜர்கள் இவை எவற்றையும் குடிக்கக் கூடாது.

யக்ஷரக்ஷ: பிஷாசாஅந்நம் மத்யம் மாம்ஸம் சுரா ஆஸவம் |
தத் ப்ராஹ்மணேந நாஅத்தவ்யம் தேவாநாமஷ்நதா ஹவி: |-95

சாராயம், மாமிசம், புளிக்க வைக்கப்பட்ட சுராபானம், கள் இவையெல்லாம் யட்சர்கள் ராட்சதர்கள் பிசாசர்களுக்குரியவை. தேவர்களுக்குரியவை ஹோமம் செய்கின்ற ஹவிஸ். எனவே தேவர்குரிய ஹவிஸை உண்ணும் பிராம்மணன், யட்ச ராட்சத பிசாசர்களுக்குரியவற்றை உண்ணக் கூடாது.

அமேத்யா வா பதேந் மத்தோ வைதிகம் வாஅப்யுதாஹரேத் |
அகார்யமந்யத் குர்யாத் வா ப்ராஹ்மணோ மதமோஹித: || 96

சாராயம் குடித்து போதையில் இருக்கும் பிராம்மணன் மலத்திலும் விழலாம்; வேதமும் ஓதலாம்; வேறு கூடாத காரியம் எதுவும் செய்யலாம்.

யஸ்ய காயகதம் ப்ரஹ்ம மத்யேநாஆப் லாவ்யதே ஸக்ருத் |
தஸ்ய வ்யபைதி ப்ராஹ்மண்யம் சூத்ரத்வம் சஸ கச்சதி || 97

எப்போது போதையிலிருந்து ஒரு பிராம்மணன் வேதவாக்கியம் கூறுகிறானோ, அப்போதே அவனுடைய பிராம்மணத் தன்மை அவனிடமிருந்து நீங்கிவிடும். உடனடியாக அவன் சூத்திரனாகிறான்.

ஏஷா விசித்ரா அபிஹிதா சுராபானஸ்ய நிஷ்க்ருதி: |
அத ஊர்த்வம் ப்ரவக்ஷ்யாமி சுவர்ணஸ்தேய நிஷ்க்ருதிம் || 98

இதுவரை போதை தரும் கள், சாராயம் முதலானவைகளைத் குடிப்பதால் ஏற்படும் பாவங்கள், அந்தப்பாப பரிகாரங்கள் கூறப்பட்டன. இனி தங்கத்தைத் திருடியதால் ஏற்படும் பாப பரிகாரங்களைக் கூறுகிறேன்.

சுவர்ணஸ்தேயக்ருத் விப்ரோ ராஜாநமபிகம்ய து |
ஸ்வகர்ம க்யாபயன் ப்ரூயாந் மாம் பவாநனு ஷாஸ்த்விதி || 99

தங்கத்தை திருடிய விப்ரன் அரசனிடம் சென்று தான் திருடியதை எடுத்துக் கூறி தனக்கு தண்டனை வழங்குமாறு கேட்க வேண்டும்.

க்ருஹீத்வா முஸலம் ராஜா ஸக்ருத் தஷ்யாத் து தம் ஸ்வயம்|
வதேந சுத்யதி ஸ்தேநோ ப்ராஹ்மணஸ் தபஸைவ வா 100

திருடிய பிராம்மணன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளமன்னனிடம் போகும்போது தோளில் ஒரு உலக்கையை சுமந்துசெல்ல வேண்டும். அதை அரசனிடம் கொடுக்க வேண்டும். அரசன்
அந்த உலக்கையால் அப்பிராம்மணனை அடிக்க வேண்டும். அந்த அடியால் பிராம்மணன் இறந்தாலும் அல்லது இறந்ததற்கு சமமாக வீழ்ந்தாலும் அந்தப்பாபத்திலிருந்து நீங்குவான்.
அல்லது திருடிய பிராம்மணன் தவம் செய்தும் அந்தப்பாபத்திலிருந்து விடுதலை யடையலாம் .

தபஸா அபனு னுத்சுஸ்து சுவர்ணஸ்தேயஜம் மலம் |
சீரவாஸா த்விஜோ அரண்யே சரேத் ப்ரஹ்மஹணோ வரதம் || 101

தவத்தால் தன்னுடைய பாபத்தை நீக்கிக் கொள்ள நினைப்பவன், மரவுரி தரித்து ஆரண்யத்தில் பன்னிரண்டு வருடங்கள்பிரம்மஹத்தி பாபம் போக விதிக்கப்பட்ட விரதத்தைக்கடைப்பிடித்தபடி வாழ வேண்டும்.

ஏதைர் வரதைரபோ ஹேத பாபம் ஸ்தேய க்ருதம் த்விஜ: | குருஸ்த்ரீகமநீயம் து வ்ரதைரேபிரபா ஆனுதேத் |-102
த்விஜர்கள், பிராம்மணனுடைய தங்கத்தை திருடிய பாபத்தை இத்தகைய பிராயச்சித்தங்களால் போக்கிக் கொள்ள வேண்டும். இனி குருவின் மனைவியைப் புணர்ந்த பாபத்தைப் போக்கிக் கொள்ளத் தக்க பிராயச்சித்தங்களைக் கூறுகிறேன்.

குருதல்ப்யபி பாஷ்யைநஸ் தப்தே ஸ்வப்யாதயோமயே|
சூர்மீம் ஜ்வலந்தீம் வா ஆஷ்லிஷ்யேந் ம்ருத்யுநா ஸ விசுத்யதி || 103

குரு மனைவியைப் புணர்ந்தவன், தான் செய்த பாபத்தைக் கூறி, பழுக்க காய்ச்சிய இரும்புக் கட்டிலில் படுக்க வேண்டும். அல்லது பழுக்க காய்ச்சிய இரும்பினால்செய்யப்பட்ட பெண் உருவத்தை அணைத்துக் கொள்ள வேண்டும். இவ்விரு வழிகளாலும் மரணத்தை அடைந்தவன் பாபம் நீங்கிப் பரிசுத்தனாகிறான்.

ஸ்வயம் வா ஷிஷ்நவ்ருஷணா வ்ருத்க்ருத்யா ஆதாய சா ஆஞ்ஜலௌ|
நைர்ருதீம் திஷமாதிஷ்டேதா நிபாதாதஜிஹ்மக: !-104

அல்லது தனது குறி, விதைகளை அறுத்துக் கையிலேந்திக் கொண்டு இறக்கும் வரையில் தென்மேற்குத் திசையை நோக்கிப் போக வேண்டும்.

கட்வாங்கீ சீரவாஸா வா ஷ்மஷ்ருலோ விஜநே வநே
ப்ராஜாபத்யம் சரேத் க்ருச்ரமப்தமேகம் ஸமாஹித: || 105

தன் மனைவி என்று எண்ணி குருபத்தினியைப் புணர்ந்தவன் குண்டாந்தடியை ஏந்தி, கிழிந்த ஆடைகளை உடுத்தி, தலைமுடி, தாடிகளை வளர்த்துக் கொண்டு, நகங்களையும் வெட்டாமல் வளர்த்தபடி மனத்தை அடக்கியவனாக யாருமற்ற வனத்தில் ஒரு வருட. காலம் பிராஜாபத்ய விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

சாந்த்ராயணம் வா த்ரீந் மாஸாநப் யஸ்யேந் நியதேந்த்ரிய:
ஹவிஷ்யேண யவாக்வா வா குருதல்பா அபனுத்தயே|-106-

அல்லது இந்திரியங்களை அடக்கியவனாக, யவை தானியத்தையும், பழம் கிழங்குகளையும் சாப்பிட்டபடி, மூன்று மாதங்கள் சாந்திராயண விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

ஏதைர் வரதைரபோஹேயுர் மஹாபாதகிநோ மலம் |
உபபாதகிநஸ் த்வேவமேபிர் நாநாவிதைர் வ்ரதை: || 107

இவ்வாறாக மகா பாதகங்களை நீக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் கூறப்பட்டன. இனி உபபாதகங்களின் பாபங்களை நீக்கிக் கொள்ளத்தக்க பிராயச்சித்த விரதங்களை கூறுகிறேன்.

உபபாதக ஸம்யுக்தோ கோக்நோ மாஸம் யவாந் பிபேத்|
க்ருதவாபோ வஸேத் கோஷ்டே சர்மணா தேந ஸம்வ்ருத: [1–108-


சதுர்தகாலமஷநீ யாதக்ஷாரலவணம் மிதம் |
கோமூத்ரேணா ஆசரேத் ஸ்நாநம் த்வெள மாஸௌ நியதேந்த்ரிய || 109


திவா அனுகச்சேத் காஸ் தாஸ் து திஷ்டந் ஊர்த்வம் ரஜ:பிபேத் |
சுஷ்ரூஷித்வா நமஸ்க்ருத்ய ராத்ரௌ வீராசநோ வசசேத்|| 110


திஷ்டந்தீஷ்வனு திஷ்டேத் து வ்ரஜந்தீஷ்வப்யனு வ்ரஜேத் |
ஆஸீநாசு ததா ஆஸிநோ நியதோ வீதமத்ஸர: |–111

ஆதுராமவிஷஸ்தாம் வா சௌரவ்யாக்ராதிபிர் பயை: |
பதிதாம் பங்கலக்நாம் வா ஸர்வோ பாயைர் விமோசயோத்|| 112
உஷ்ணே வர்ஷதி ஷீதேவா மாருதே வாதி வா ப்ருஷம் |
குர்வீதா ஆத்மநஸ் த்ராணம் கோரக்ருத்வா து ஷக்தித: 113
ஆத்மநோ யதி வாஅந்யேஷாம் க்ருஹே க்ஷேத்ரே அதவா கலே |
பக்ஷயந்தீம் ந கதயேத் பிபந்தம் சைவ வத்ஸகம் || 114
அநேந விதிநா யஸ் து கோக்நோகா மனுகச்சதி |
கோஹத்யாக்ருதம் பாபம் த்ரிபிர் மாஸைர் வ்யபோஹதி || 115

பசுவைக் கொன்றவன் மொட்டையடித்துக் கொண்டு ஒரு மாதம் முழுவதும் நொய்க்கஞ்சி குடிக்க வேண்டும். அப்போது தான் கொன்ற பசுவின் தோலைப் போர்த்துக்கொண்டு பசுக் கொட்டிலில் வசிக்க வேண்டும்.அடுத்த இரண்டு மாதங்கள் நான்காவது காலத்தில் மட்டும் ஒருவேளை உணவை உப்பும் உறைப்புமின்றி சாப்பிட வேண்டும்.பசுவின் சிறுநீரால் நீராட வேண்டும். புலன்களை அடக்கியவனாக இருக்க வேண்டும்.இந்த மூன்று மாதங்களும் பகல் பொழுதில் மேய்ச்சலுக்குப் போகும் பசுக்களுடன் தானும் போக வேண்டும். அவை தாவிச் செல்லும்போது மேலே கிளம்பும் புழுதியால் அவன் உடல் மூடப்படவேண்டும். மாலையில் மேய்ச்சல் முடிந்து வந்த பசுக்களுக்கு தேவையான பணிவிடைகளைச் செய்ய வேண்டும்.பிறகு பசுக்களை வணங்கி, வீராசனத்தில் இரவு முழுவதும் அமர்ந்திருக்க வேண்டும். பகலில் பசுக்கள் திரிந்து கொண்டிருக்கும் போது தானும் அவைகளைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அவைகள் அமர்ந்தால் அவைகளைத் தொடர்ந்து தானும் அமரலாம்.இத்தகைய நியமங்களை கோபதாபங்களற்றவனாக கடைப்பிடிக்க வேண்டும்.-ஆரண்யத்தில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் போது, திருடர்களாலும் புலி முதலியவற்றாலும் அவைகளுக்கு ஆபத்து நேரிட்டாலும் அல்லது பசுக்கள் பள்ளத்தில் விழுதல் முதலான ஆபத்துக்களில் மாட்டிக் கொண்டாலும் தன் சக்தி முழுவதையும்
பயன்படுத்தி பசுக்களைக் காப்பாற்ற வேண்டும்.-மிகுந்த வெயிலிலும், மழையிலும், புயல்காற்றிலும் தன்னைக் காத்துக் கொள்வதை முதன்மையாக எண்ணாமல் பசுக்களைக் காக்க வேண்டும். தன்னுடைய வீட்டிலோ, பிறரது வீட்டிலோ, வயலிலோ,களத்திலோ பசுக்கள் மேய்ந்தால் அதை வெளியில் சொல்லக்கூடாது.கன்று பால் குடித்ததையும் வெளியில் சொல்லக் கூடாது.இவ்வாறாக, பசுவைக் கொன்றவன் பசுக்களைக் காத்து விரதம் அனுஷ்டித்தால் பசுவைக் கொன்ற பாவத்தினின்றும் விடுதலையடைவான்.

ஏததேவ வ்ரதம் குர்யுரு பாதகிநோ த்விஜா: |
அவகீர்ணிவர்ஜம் சுத்யர்தம் சாந்த்ராயணமதா அபி வா || 117

இவ்வாறாக அவகீர்ணியைத் தவிர்த்து மற்ற உபபாதகங்கள் செய்தவர்கள் அனைவருமே தமது பாபங்கள் நீங்குவதற்காகபசுவைக் கொன்றதற்குச் சொல்லப்பட்ட பிராயச்சித்தங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அல்லது சாந்த்ராயண விரதத்தைக்
கடைப்பிடிக்க வேண்டும்.

அவகீர்ணீது காணேந கர்தபேண சதுஷ்பதே
பாகயக்குவிதாநேந யஜேத நிர்ருதிம் நிஷி |-118

அவகீர்ணியானவன்,ஒரு கண்அற்ற கழுதையைக் கொண்டு. இரவு நேரத்தில் நாற்சந்தி கூடுமிடத்தில் நிர்ரிதி தேவதைக்கு ஹோமம் செய்ய வேண்டும்.

ஹுத்வா அக்நெள விதிவத் தோ மாநந்ததஷ் ச ஸமித்ய்ரு சா |
வாதேந்த்ர குரு வஹ்நீநாம் ஜூஹுயாத் ஸர்பிஷா ஆஹு : || 119

இவ்வாறு நிர்ரிதி தேவதைக்கு விதிப்படி ஹோமம் செய்தபிறகு வாயு, இந்திரன், பிருஹஸ்பதி, அக்நி முதலானோருக்கு நெய்யால் ஹோமம் செய்ய வேண்டும்.

காமதோ ரேதஸ: ஸேகம் வரதஸ்தஸ்ய த்விஜன்மத: |
அதிக்ரமம் வ்ரதஸ்யா ஆஹுர் தர்மக்ஞாப்ரஹ்ம வாதி : Π 120

பிரம்மசரிய விரதம் ஏற்றுள்ள விஜன், மனத்தில் காமம் கொண்டவனாக ஒரு பெண்ணுடன் புணர்ந்தால் அவன் அவகீர்ணி எனப்படுவான்.

மாருதம் புருஹுதம் ச குரும் பாவகமேவ ச |
சதுரோ வ்ரதிநோ அப்யேதி ப்ராஹ்மம் தேஜோ அவகீர்ணிந: || 121

அவகீர்ணியானவனின் தேஜஸ்(இது நாள் வரை செய்த வேதா யாசத்தானும், அனுஷ்டானங்களாலும் ஏற்ப்ட்ட பிரம்மதேஜஸ்) அவனை விட்டு நீங்கி வாயு இந்திரன், ப்ருஹஸ்பதி, அக்னி ஆகியோரிடம் சேர்ந்து விடும்.

ஏதஸ்மிந்நேநஸி ப்ராப்தே வஸித்வா கர்தபா அஜிநம் |
ஸப்தா அகாராம்ஷ்சரேத் பைக்ஷ்யம் ஸ்வகர்மபரிகீர்தயந் |-122

அவகீர்ணியானவன் இப்போது சொல்லியபடி ஹோமத்தைச் செய்த பிறகு, கழுதையின் தோலைப் போர்த்திக் கொண்டு, தான் ஒரு அவகீர்ணி என்பதைச் சொல்லி ஏழு வீடுகளில் பிச்சையெடுக்க வேண்டும்.

தேப்யோ லப்தே பைக்ஷேண வர்தயந்நேக காளிகம் |
உபஸ்ப்ருஷம்ஸ் த்ரிஷவணம் த்வப்தேந ஸ விசுத்யதி |-123

இவ்வாறாக பிச்சையெடுத்து தினமும் ஒருவேளை மட்டும்சாப்பிட வேண்டும். இவ்வாறாக ஒரு வருடம் விரதம் கடைப் பிடித்தால் அவன் பரிசுத்தமடைவான்.

ஜாதிப்ரம்ஷகரம் கர்ம க்ருவா அந்யதமமிச்சயா
சரேத் ஸாந்தபநம் க்ருச்ரம் ப்ராஜாபத்யமநிச்சயா || 124

ஜாதி பிரம்ஷகரம் என்னும் தன்னுடைய ஜாதியிலிருந்தும்வீழ்ந்து விடுகின்ற பாபச் செயல்களில் எதையேனும் அறிந்தேசெய்தவன் சாந்தபனம் என்னும் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். தெரிந்தே செய்தால் பிரஜாபத்யக்ருச்ர விரதத்தைச்செய்ய வேண்டும்.

ஸங்கரா அபாத்ரக்ருத்யாசு மாஸம் ஷோதநமைந்தவம் |
மலிநீ கரணியே தப்த: ஸ்யாத் யாவகைஸ் த்ரயஹம்[1 125

சங்கரீகரணம், அபாத்ரீகரணம் எனப்படும் பாபச் செயல்களைச் செய்தவன் ஒருமாதம் சாந்ராயண விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். மலிநீகரணம் எனப்படும் பாபச் செயல்களைச் செய்தவன்மூன்று இரவுகள் கொதிக்கும் கஞ்சியைக் குடிக்க வேண்டும்.

துரீயோ ப்ரஹ்மஹத்யாயா: க்ஷத்ரியஸ்ய வதே ஸ்ம்ருத: 1
வைஷ்யே அஷ்டமாம்ஷோ வருத்தஸ்தே சூத்ரே ஞேயஸ் துஷோடஷ: || 126

க்ஷத்ரியனைக் கொன்றவன், பிரம்மஹத்தி பாபத்துக்குச்சொன்ன பன்னிரண்டாண்டுகள் கடைப்பிடிக்க வேண்டியபிராயச்சித்த விரதத்தின் நாலில் ஒரு பங்கான மூன்று வருடங்கள்கடைப்பிடிக்க வேண்டும்.-வைசியனைக் கொன்றவன் ஒன்றரை வருடங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.-சூத்திரனைக் கொன்றவன் ஒன்பது மாதங்கள் கடைப்பிடிக்க
வேண்டும்.

அகாமதஸ்து ராஜந்யம் விநிபாத்ய த்விஜோத்தம: |
வ்ருஷபைகஸஹஸ்ரா கா தத்யாத் சுசரிதவ்ரத: |-127

அறியாமல் க்ஷத்திரியனைக் கொன்ற த்விஜோத்தமன், ஆயிரம் பசுக்களையும் ஒரு காளையையும் வேதமோதும் பிராம்மணர்களுக்கு தானம் அளிக்க வேண்டும்.

த்ரயப்தம் சரேத் வா நியதோ ஜடீ ப்ரஹ்மஹணோ வ்ரதம்
வஸந் தூரதரே க்ராமாத் வ்ருக்ஷ மூல நிகேதந: || 128

அல்லது புலனடக்கத்தோடு ஜடைகள் தரித்து கிராமத்துக்கு வெளியே மரத்தடியில் மூன்று வருடங்கள் பிரம்மஹத்திக்கான பிராயச்சித்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

ஏததேவ சரேதப்தம் ப்ராயக்ஷ்சித்தம் த்விஜோத்தம: |
ப்ரமாப்ய வைஷ்யம் வருத்தஸ்தம் தத்யாத் வைகஷதம் கவாம் || 129

வைசியனைக் கொன்ற த்விஜோத்தமன் இதேபோன்று ஒரு வருடம் விரதம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் நூற்றொரு பசுக்களையும் தானம் செய்யவேண்டும்.

ஏததேவ வ்ரதம் க்ருத்ஸ்நம் ஷண்மாஸாந் சூத்ரஹா சரேத்
வ்ருஷபைகாதஷா வாஅபி தத்யாத் விப்ராயகா: ஸிதா: || 130

சூத்திரனைக் கொன்ற த்விஜோத்தமன் இதே விரதத்தை ஆறு மாதங்கள் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பத்து பசுக்களையும் ஒரு காளையையும்தானமளிக்க வேண்டும்.

மார்ஜாரநகுலௌ ஹத்வா சாஷம் மண்டூகமேவ ச |
ஷ்வ கோதோலூக காகாம்ஷ் ச சூத்ரஹத்யா வ்ரதம் சரேத்|-131

பூனை,கீரி,குருவி, தவளை, நாய், உடும்பு, கோட்டான், காகம் முதலானவற்றை வேண்டுமென்றே கொன்றால் சாந்த்ராயண விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

பய: பிபேத் த்ரிராத்ரம் வாயோஜநம் வாஅத்வநோ வ்ரஜேத் 1 உபஸ்ப்ருஷேத் ஸ்ரவந்த்யாம் வாசூக்தம் வாஅப்தைவதம் ஐபேத்|| 132
வேண்டுமென்றே கொல்லாதபோது, அந்தப் பாபத்திலிருந்து விடுபட மூன்று நாட்கள் பாலை மட்டும் ஆஹாரமாக உட்கொண்டு இருக்க வேண்டும். அல்லது, ஒரு யோஜனை தூரம் நடக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் அவ்வாறு நடக்க வேண்டும்.-அதற்கு சக்தியற்றவன் மூன்று நாட்கள் நதியில் நீராடவேண்டும், அல்லது வருண மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.

அப்ரிம் கார்ஷ்ணா யஸீம் தத்யாத் ஸர்பம் ஹத்வா த்விஜோத்தம: |
பலால பாரகம் ஷண்டே ஸைஸகம் சைகமாஷகம் || 133

நல்ல பாம்பைக் கொன்ற த்விஜோத்தமன் இரும்புத் தடியை தானம் செய்ய வேண்டும். வேறு பாம்பை அடித்தால் வைக்கோல் சுமையையும் ஒரு மாடம் எடையுள்ள ஈயப்பாத்திரத்தையும் தானம் செய்ய வேண்டும்.

க்ருதகும்பம் வராஹேது திலத்ரோணம் து தித்திரெள |
சுகே த்விஹாயநம் வத்ஸம் க்ரௌஞ்சம் ஹத்வா த்ரிஹாயநம்|| 134
பன்றியைக் கொன்றவன் நெய் நிரம்பிய குடத்தைதானம் செய்யவேண்டும்.-தித்திரிப் பறவையைக் கொன்றவன் ஒரு துரோணம் எள்ளை தானம் செய்ய வேண்டும். கிளியைக் கொன்றவன் இரண்டு வயது கன்றை தானம் செய்ய வேண்டும்.-கிரௌஞ்ச பறவையைக் கொன்றால் மூன்று வயது கன்றை தானம் செய்ய வேண்டும்.

ஹத்வா ஹம்ஸம் பலாகாம் ச பகம் பர்ஹிணமேவ ச
வானரம் ஷ்யேநபாஸௌ ச ஸ்பர்ஷயேத் ப்ராஹ்மணாய காம் || 135

அன்னம், நாரை, கொக்கு, மயில், குரங்கு, ராஜாளி, கழுகு முதலான பறவைகளைக் கொன்றால் பிராம்மணனுக்கு ஒரு பசுவை தானம் செய்ய வேண்டும்.

வாஸோ தத்யாத் தயம் ஹத்வா பஞ்ச நீலாந் வ்ருஷாகஜம் |
அஜமேஷா வநட்வாஹம் கரம் ஹத்வைக ஹாயநம் || 136

குதிரையைக் கொன்றவன், வஸ்திரதானம் செய்ய வேண்டும்.-யானையைக் கொன்றவன், ஐந்து கறுப்புக் காளைகளைத் தானம் செய்ய வேண்டும்.-ஆட்டைக் கொன்றவன், ஒரு காளையைத் தானம் செய்ய வேண்டும். கழுதையைக் கொன்றவன் ஒரு வயது கன்றை தானம் செய்ய வேண்டும்.

க்ரவம்யாதாம்ஸ்து ம்ருகாந் ஹத்வா தேனும் தத்யாத் பயஸ்விநீம் |
அக்ரவ்யாதாந் வத்ஸதரீமுஷ்ட்ரம் ஹத்வா து க்ருஷ்ணலம் || 137

மாமிசத்தை உண்ணும் புலி முதலான மிருகங்களைக் கொன்றால், நன்கு பால் கறக்கும் பசுவை தானமளிக்க வேண்டும்.-மாமிசம் உண்ணாத மிருகங்களைக் கொன்றால், குன்றிமணி எடைத் தங்கத்தை தானமளிக்க வேண்டும்.

ஜீநகார்முகபஸ்தா அவீந் ப்ருதக் தத்யாத் விசுத்தயே |
சதுர்ணாமபி வர்ணாநாம் நாரீர் ஹத்வா அநவஸ்திதா: |-138

விபச்சாரியான பிராம்மண, சத்ரிய, வைசிய, சூத்திரப்பெண்ணைக் கொல்ல நேர்ந்தால் நன்கு வளர்ந்துள்ள ஆடுகளைத் தானம் செய்ய வேண்டும்.

தாநேந வதநிர்ணேகம் ஸர்பாதீநாம ஷக்னுவந் || ஏகைகஷஷ் சரேத் க்ருச்ரம் த்விஜ: பாபா அபநுத்தயே || 139
பாம்பு முதலானவைகளைக் கொல்ல நேர்ந்தபோது, குறிப்பிட்டுள்ள படி தானங்கள் செய்ய இயலாவிடில், கிருச்ர விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

அஸ்திமதாம் து ஸத்வாநாம் ஸஹஸ்ரஸ்ய ப்ரமாபணே |
பூர்ணே சா அனஸ்யநஸ்த்நாம் து சூத்ரஹத்யாவ்ரதம் சரேத் 140

எலும்புகளற்ற பிராணிகளை ஆயிரம் கொன்றாலும், கொசு முதலானவற்றை ஒரு வண்டிச் சுமைவரை கொன்றாலும், சூத்திரனைக் கொன்றதற்குரிய பிராயச்சித்தத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

கிஞ்சிதேவ து விப்ராய தத்யாதஸ்திமதாம் வதே |
அநஸ்த்நாம் சைவ ஹிம்ஸாயாம் ப்ராணாயாமேந அத்யதி || 141

எலும்புகள் இருக்கும் பிராணிகளில் ஒன்றைக் கொன்ற போது, ஒரு பணம் பிராம்மணனுக்குதானம் செய்ய வேண்டும். கொசு முதலானவற்றைக் கொன்றால் பிராணாயாமம் செய்ததும் பாவம் நீங்கும்.

பலதாநாம் து வ்ருக்ஷாணாம் சேதநே ஜப்யம்ரு தம் | குல்மவல்லீலதாநாம் ச புஷ்பிதாநாம் ச வீருதாம் || 142

பழங்களைத் தரும் மரங்களையும், மரங்களைச் சுற்றிக் கொண்டு படர்ந்திருக்கும் கொடிகளையும், பூக்கும் கொடிகளையும், செடிகளையும் வெட்டினால், ஒன்றை வெட்டியதற்கு சாவித்ரி முதலான ரிக்குகள் நூறு ஜபிக்க வேண்டும்.

அந்நாத்யஜாநாம் ஸத்வாநாம் ரஸஜாநாம் ச ஸர்வஷ: |
பல பூஷ்போத்பவாநாம் சா க்ருதப்ராஷோ விஷோதநம் || 143

நெல் முதலியவைகளில் தோன்றியவையும், சாறுகளில் (ரசங்களில்) தோன்றியவையும், பழங்களில் தோன்றியவையும், மலர்களில் தோன்றியவையையுமான உயிர்களைக் கொன்ற போது, நெய்யை உண்டால் பாபம் நீங்கும்.

க்ருஷ்ட ஜாநாமோஷதீநாம் ஜாதாநாம் ச ஸ்வயம் வநே |
வ்ருதா ஆலம்பேஅனுகச்சேத் காம் திநமேகம் பயோவ்ரத: 144

உழுத நிலத்தில் விளைந்த ஓஷதிகள், பயிர்கள், வனத்தில் தோன்றிய தானியங்கள் முதலானவைகளை காரணமின்றி வெட்டினால், ஒரு நாள் பயோவிரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஏதைர் வ்ரதைரபோஹ்யம் ஸ்யாதேநோ ஹிம்ஸாஸமுத்பவம் |
ஞாநா அஞ்ஞாநகருதம் க்ருத்ஸ்நம் ஷ்ருணுதா அநாத்ய பக்ஷணே|| 145

இவ்வாறான பிராயச்சித்தங்களால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். இனி உண்ணத்தகாத வற்றை உண்டதால் ஏற்பட்ட தோஷங்களை நீக்கிக்கொள்ளுவதற்கான பிராயச்சித்தங்களைக் கூறுகிறேன், கேளுங்கள்.

அக்ஞாநாத் வாருணீம் பித்வா ஸம்ஸ்காரேணைவ சுத்யதி | மதிபூர்வமநிர்தேஷ்யம் ப்ராணாஅந்திக மிதி ஸ்திதி: || 146
தான் குடிப்பது கள் என்பதை அறியாமல் குடித்தவன்,சாஸ்திரத்திலுள்ள சம்ஸ்காரங்களைச் செய்து கொள்வதால் சுத்தமாவான். தெரிந்தே குடித்தவனுக்கு அவன் உயிரை விடுவது தான் பிராயச்சித்தமாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அப: சுரா பாஜ நஸ்தா மத்யபாண்டஸ்திதாஸ் ததா | பஞ்சராத்ரம் பிபேத் பீத்வா ஷங்கபூஷ்பீஷ்ருதம் பய: || 147
கள் இருந்த குடுவை, சாராயம் இருந்த குடுவைகளில் ஊற்றிவைக்கப்பட்ட தண்ணீரைக் குடித்தவன், ஐந்து தினங்கள் சங்குப்பூவைப் போட்டுக் காய்ச்சிய பாலைப் பருகவேண்டும்.

ஸ்ப்ருஷ்ட்வா தத்வா ச மதிராம் விதிவத் ப்ரதிக்ருஹ்ய ச சூத்ரோச்சிஷ்டாஷ்ச பீத்வா அப: குஷவாரி பிபேத் த்ரயஹம்|| 148
கள்ளையோ சாராயத்தையோ தொட்டாலும், பிறர்க்குக் கொடுத்தாலும், பிறர்கையிலிருந்து தான் வாங்கினாலும், சூத்திரன் குடித்து மிகுந்த நீரை பருகினாலும் மூன்று தினங்கள், தர்ப்பைகள் போட்டு காய்ச்சிய நீரைப் பருக வேண்டும்.

ப்ராஹ்மணஸ்து சுராபஸ்ய கந்தமாக்ராய ஸோம : 1
ப்ராணாநப்சு த்ரிராமஸ்யக்ருதம் ப்ராஷ்ய விசுத்யதி || 149

சோமயாகம் செய்த விப்ரன் குடிகாரனிடமிருந்து வரும் சாராய நெடியை முகர நேர்ந்தால் நீரின் நடுவில் நின்று மூன்று பிராணாயாமங்கள் செய்து, நெய்யைப் பருக வேண்டும்.

அக்ஞானாத் ப்ராஷ்ய விண்மூத்ரம் சுராஸம்ஸ்ப்ருஷ்டமேவச
பூந: ஸம்ஸ்காரமர்ஹந்தி த்ரயோ வர்ணா த்விஜாதய:| 150

தெரியாமல் மல மூத்திரங்கள், கள் சேர்ந்தவைகளை உண்டு விட்டால் மீண்டும் ஸம்ஸ்காரம் (பூணூல் தரிப்பது) செய்து கொள்ள வேண்டும். இது மூவர்ணத்தாருக்குமான பிராயச்சித்தம்.

வபனம் மேகலா தண்டோ பைக்ஷசர்யா வரதாநி ச
நிவர்தந்தே த்விஜாதீநாம் புந: ஸம்ஸ்கார கர்மணி||-151

மீண்டும் உபநயன சம்ஸ்காரம் செய்து கொள்ளும்போது சவரம் செய்துகொள்ளல், அரைஞாண் அணிதல், தண்டம் ஏந்துதல், பிட்சை ஏற்றல் முதலானவை செய்ய வேண்டியதில்லை.

அபோஜ்யாநாம் து புக்த்வா அன்மன் ஸ்த்ரிசூத்ரோச்சிஷ்டமேவ ச
ஜக்த்வா மாம்ஸபக்ஷ்யம் ச ஸப்தராத்ரம் யவாந் பிபேத்||| 152

சாப்பிடக்கூடாதவர்களின் அன்னத்தைசாப்பிட்டாலும், பெண்களோ சூத்திரர்களோ சாப்பிட்டு மிகுந்த அன்னத்தை சாப்பிட்டாலும், சாப்பிடக்கூடாத ஜந்துக்களின் மாமிசத்தை
சாப்பிட்டாலும் ஏழு நாட்கள் கொதிக்கும் யவை கஞ்சியைக் குடிக்க வேண்டும்.

ஷுக்தாநி ச கஷாயாம்ஷ் ச பீத்வா மேத்யாந்யபி த்விஜ: I
தாவத் பவத்யப்ரயதோ யாவத் தந் ந வ்ரஜத்யத: I-153

இயற்கையில் நல்ல இனிய ரசமாக இருந்தாலும் நீண்ட நாட்கள் வைத்திருப்பதால் புளித்தவைகளையும், புளிக்க வைத்துக் காய்ச்சிய கஷாயங்களையும், திரிந்து போன கெட்டுப்போன உணவு போன்றவற்றையும் சாப்பிட்டால், அது ஜீரணமாகும்வரை சாப்பிட்டவன் தூய்மையற்றவனாகிறான்.

விட்வராஹகரோஷ்ட்ராணாம் கோமாயோ: கபிகாகயோ: |
ப்ராஷ்ய மூத்ரபுரீஷாணி த்விஜஷ் சாந்த்ராயணம் சரேத் |-154

பன்றி, கழுதை, ஒட்டகம், நரி, குரங்கு, காகம் இவற்றின் மல ஜலங்களை அறியாமல் உண்ட தவிஜன் சாந்த்ராயண விரதத்தைஅனுஷ்டிக்க வேண்டும்.

ஷுஷ்காணி புக்த்வா மாம்ஸாநிபௌபாநி கவகாநி ச |
அக்ஞாதம் சைவ சூநாஸ்தமேததேவ வரதம் சரேத் || 155

வெயிலில் காயவைத்த மாமிசம், காளான், எதனுடையதென்று தெரியாத மாமிசம், கசாப்புக் கடையிலிருந்து வாங்கிய மாமிசங்களை சாப்பிட்டவனுக்கும் சாந்திராயண விரதமே பரிகாரமாகும்.

க்ரவ்யாத சூகரோஷ்ட்ராணாம் குக்குடாநாம் ச பக்ஷணே|
நரகாக கராணாம் ச தப்தக்ருச்ரம் விஷோதநம்|| 156

மாமிசம் உண்ணும் ஐந்துக்கள், ஊர்ப் பன்றி, ஒட்டகம், கோழி, மனிதன், காகம், கழுதை முதலானவற்றின் மாமிசத்தை தெரிந்தே உண்டவன் தப்தகிருச்ர விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

மாஸிகா அன்னம் து யோ அஷ்யாதஸமாவர்தகோ த்விஜ: ||
ஸத்ரீண் யஹாந்யுபவஸேதேகாஹம் சோதகே வஸேத் ||| 157

சமாவர்த்தனம் செய்து கொள்ளாத பிரம்மசாரி ஏகோதிஷ்டம் முதலான மாமிச சிராத்தஅன்னங்களைப் புசித்தால் மூன்று நாட்கள் உபவாசம் இருக்கவேண்டும். இம்மூன்று நாட்களில் ஒருநாள் முழுவதும் தண்ணீரில் அமிழ்ந்திருக்க வேண்டும்.

ப்ரஹ்மசாரீது யோ அஷ்நீயாந் மது மாம்ஸம் கதஞ்சந | ஸக்ருத்வா ப்ராக்ருதம் க்ருச்ரம் வரதசேஷம் ஸமாபயேத் 158
இத்தகைய பிரம்மசாரி தேன், மாமிசம் முதலானவற்றை சாப்பிட்டால் ப்ராஜாபத்ய விரதத்தை அனுஷ்டித்து, பிறகு பிரம்மசரிய விரதத்தின் மீதி நாட்களை பூர்த்தி செய்து சமாவர்த்தனம் செய்ய வேண்டும்.

பிடால காகா மூச்சிஷ்டம் ஐக்த்வாஷ்வநகுலஸ்ய ச கேஷகீடா அவபந்நம் ச பிபேத் ப்ரஹ்மசுவர்சலாம் || 159

பூனை, காகம், எலி, கோழி, அணில் முதலானவை சாப்பிட் டதையும்,தலைமுடியோ புழுவோ விழுந்த அன்னத்தையும் மண்ணைக் கிள்ளிப் போட்டு தூய்மை செய்யாமல் சாப்பிட்டால்,
தர்ப்பைகள் போட்டு கொதிக்கக் காய்ச்சிய நீரைப் பருக வேண்டும்.

அபோஜ்யமன்மன் நாஅத்தவ்ய மாத்மந: சுத்தி மிச்சதா |
அக்ஞாநபுக்தம் தூத்தார்யம் ஷோத்யம் வாஅப்யாஷு ஷோதநை: || 160

ஆத்ம சுத்தியை விரும்புபவன் தூய்மை குறைந்த அன்னத்தை சாப்பிடலாகாது. தெரியாமல் சாப்பிட்டு விட்டால் சாப்பிட்டதைவாந்தி பண்ணிவிட வேண்டும். இல்லையேல் முதலில் கூறிய படி பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஏஷோ அநாத்யா அதநஸ்யோக்தோ வ்ரதாநாம் விவிதோ விதி: |
ஸ்தேய தோஷா அபஹர்த்ரூணாம் வரதாநாம் ஷ்ரூயதாம் விதி: || 161

சாப்பிடத்தகாததை சாப்பிட்டதற்காக தோஷம் நீங்கும்பிராயச்சித்தங்கள் இதுவரை கூறப்பட்டன. இனி பலவகையான திருட்டுக்களுக்குரிய பிராயச் சித்தங்களைக் கூறுகிறேன், கேளுங்கள்.

தான்யா அந்நதனசௌர்யாணி க்ருத்வா காமாத் த்விஜோத்தம: |
ஸ்வஜாதீய க்ருஹாதேவ க்ருச்ராப்தேந விசுத்யதி || 162

பிராம்மணன், பிராம்மணனது வீட்டில் தானியங்களையும்.அன்னத்தையும், தனத்தையும் திருடினால், ஒரு வருடம் பிராஜாபத்யவிரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

மனுஷ்யாணாம் து ஹரணே ஸ்த்ரீணாம் க்ஷேத்ரக்ருஹஸ்ய ச |
கூபவாபீ ஜலாநாம் ச சுத்திஷ் சாந்த்ராயணம் ஸ்ம்ருதம் || 163

ஆண்கள் பெண்களை அபகரித்துச் சென்றாலும், ஒருவனுடைய பூமி வீடுகளை அபகரித்தாலும், கிணறு துரவுகளை அபகரித்தாலும்சாந்திராயண விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறுவர்

த்ரவ்யாணாமல்ப ஸாராணாம் ஸ்தேயம் க்ருத்வா அந்ய வேஷ்மத: |
சரேத் ஸாந்தபநம் க் ச்ரம் தந் நிர்யாத்யா ஆத்ம சுத்தயே |-164

சொற்ப மதிப்புள்ள பொருளைத் திருடியவன், சொந்தக்காரனுக்கு அப்பொருளைத் திருப்பிக் கொடுத்து விட்டு சாந்தபந க்ருச்ர விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

பஷ்யபோஜ்யா அபஹரணே யாநஷய்யா ஆஸநஸ்ய ச 1
பூஷ்பமூலபலாநாம் ச பஞ்சகவ்யம் விஷோதநம்|| 165

பணியாரங்களையும், பாயசங்களையும், வாகனங்களையும், ஆசனங்களையும், மலர்கள், பழங்கள் கிழங்குகளையும் திருடியவன் பஞ்சகவியம் சாப்பிட வேண்டும்.

த்ருணகாஷ்ட த்ருமாணாம் ச சுஷ்கா அன்னஸ்ய குடஸ்ய ச |
சேலசர்மா ஆமிஷாணாம் சத்ரிராத்ரம் ஸ்யாதபோஜநம்|| 166

வைக்கோல்,விறகு,அரிசி, வெல்லம்,ஆடைகள், தோல்கள்,மாமிசம் இவற்றில் ஏதொன்றைத் திருடினாலும் மூன்று நாட்கள் உபவாசம் இருக்கவேண்டும்.

மணிமுக்தா ப்ரவாலாநாம் தாம்ரஸ்ய ர தஸ்ய ச 1
அய: காம்ஸ்யோபலாநாம் ச த்வாதஷாஹம் கணா அந்நதா|| 167

ரத்தினங்கள், முத்துக்கள், பவழங்கள், செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம், கற்கள் இவைகளில் ஏதொன்றைத் திருடினாலும் பன்னிரண்டு நாட்கள் நொய் உணவைச் சாப்பிடவேண்டும்.

கார்பாஸகீட ஜோர்ணாநாம் த்விஷபைகஷபஸ்ய ச | பக்ஷிகள்தௌஷதீநாம் ச ரஜ்ஜ்வாஷ் சைவத்ரயஹம் பய: -168-

பருத்தி ஆடைகள்,பட்டு ஆடைகள், கம்பளிகள் இவைகளையும், குதிரைகள் பசுக்கள் இவைகளையும், பறவைகளையும்.சந்தனம் போன்ற சுகந்த திரவியங்களையும், கயிறு முதலானவைகளில் ஏதான்றைத் திருடினாலும் மூன்று நாட்கள் பாலை மட்டும்
அருந்த வேண்டும்.

ஏதைர் வ்ரதைரபோஹேத பாபம் ஸ்தேயக்ருதம் த்விஜ:
அகம்யாகமநீயம் து வ்ரதைரேபி ரபானுதேத் || 169

இப்போது கூறிய விரதங்களெல்லாம் திருட்டுக் குற்றத்தால் ஏற்பட்ட பாபங்களைப் போக்கும். அடையத் தகாதவற்றை அடைவதால் ஏற்படும் பாபங்களை போக்கிக் கொள்ளத்தக்க பிராயச்சித்தங்களைக் கூறுகிறேன்.

குருதல்பவ்ரதம் குர்யாத் ரேத: ஸிக்த்வா ஸ்வயோநிஷு |
ஸக்யு: புத்ரஸ்ய ச ஸ்த்ரீஷு குமாரீஷ்வந்த்யஜாசு ச || 170

நண்பனின் மனைவி, மருமகள், பெற்ற மகள், சண்டாளப் பெண், இவர்களைப் புணர்ந்தவன் குரு மனைவியைப் புணர்ந்த வனுக்குரிய பிராயச்சித்தத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

பைத்ருஷ்வஸேயீம் பகிரீம் ஸ்வஸ்ரீயாம் மாதுரேவ ச |
மாதுஷ்ச ப்ராதுஸ் தநயாம் கத்வா சாந்த்ராயணம் சரேத் 171

அத்தை மகள், பெரியம்மா மகள், சிறிய தாயின் மகள், கூடப் பிறந்த சகோதரியின் மகள், தாய்மாமன் மகள் முதலானோரைப் புணர்ந்தால் சாந்த்ராயண விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

ஏதாஸ் திஸ்ரஸ்து பார்பயார்தே நோபயச்சேத் து புத்திமாந் |
ஞாதித்வேநா அனுபேயாஸ் தா: பத்தி ஹ்யுப்பயந்நத: || 172

இதுவரை கூறிய இப்பெண்களை, அதாவது அத்தை மகள், பெரியம்மா மகள், சிறிய தாயின் மகள், கூடப்பிறந்த சகோதரியின் மகள், தாய்மாமன் மகள் முதலானோரை அறிவாளியானவன் மணம் செய்து கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்து கொள்பவன் நரகத்தில் வீழ்வான்.

அமானுஷீஷு புருஷ உதக்யாயாமயோநி 1
ரேத: ஸிக்த்வா ஜலே சைவ க்ருச்ரம் ஸாந்தபநம் சரேத் 173

பசுவைத் தவிர்த்து மற்ற மிருகங்களிடமும், ரஜஸ்வலையான (வீட்டுக்கு விலக்கான பெண்ணிடமும், பெண்ணின் உடம்பில் மற்ற இடங்களிலும், தண்ணீரிலும் தன் ரேதசை விட்ட மனிதன் சாந்தபளுக்ருச்ர விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பசுவுடன் புணர்ந்தால் அவகீர்ணிக்குரிய பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

மைதுனம் து ஸமாஸேவ்ய பூம்ஸி யோஷிதி வாத்விஜ: |
கோயாநே அப்சு திவா சைவ ஸவாஸா: ஸ்நாநமாசரேத் 174

ஒரு ஆண், ஆணுடன் புணர்ந்தாலும், மனைவியுடன் வண்டி முதலானவற்றில் புணர்ந்தாலும், தண்ணீரிலும், பகலிலும் புணர்ந்தாலும் உடுத்தியிருக்கும் ஆடையோடு தலைமுழுக வேண்டும்..

சண்டாள அந்த்யஸ்த்ரியோ கத்வா புக்த்வா ச ப்ரதிக்ருஹ்யச 11
பதத்யக்ஞாநதோ விப்ரோ ஞாநாத் ஸாம்யம்து கச்சதி–175

பிராம்மணன் அறியாமையால் சண்டாளப் பெண்ணையோ, மிலேச்ச ஜாதிப் பெண்ணையோ புணர்ந்தாலும், அவர்கள் அன்னத்தைச் சாப்பிட்டாலும், அவர்கள் கொடுத்ததை வாங்கிக் கொண்டாலும் உடனே பதிதனாவான். அப்பாவத்திலிருந்து மீள
பதிதனுக்கு விதித்த பிராயச்சித்தத்தைஅனுஷ்டிக்க வேண்டும்.-அறிந்தே செய்தால் அந்தப் பெண்களுடைய ஜாதியே ஆகிடுவான்.

விப்ரதுஷ்டாம் ஸ்த்ரியம் பர்தா நிருந்த்யாதேக வேஷ்மநி |
யத் பூம்ஸ: பரதாரேஷு தச்சைநாம் சாரயேத் வரதம்||| 176

வேண்டுமென்றே விபச்சாரம் செய்யும் பெண்ணை, அவள் கணவன் வீட்டு வேலை எதுவும் செய்யவிடாமல், வீட்டிலேயே சிறைவைக்க வேண்டும். பிறன் மனைவியைச் சேர்ந்தவனுக்கு
விதிக்கப்பட்ட பிராயச்சித்தத்தை அவள் செய்யுமாறு விதிக்க வேண்டும்.

ஸா சேத் பூந: ப்ரதுஷ்யேத் து ஸத்ருஷேநோப மந்த்ரிதா |
க்ருச்ரம் சாந்த்ராயணம் சைவ ததஸ்யா: பாவனம் ஸ்ம்ருதம் 177

இதற்குப் பிறகும் அவள் விபசாரம் செய்தாளானால் அந்தப் பாபம் நீங்க க்ருச்ரசாந்த்ராயண பிராயச்சித்தம் அனுஷ்டிக்கச் செய்ய வேண்டும்.

யத்கரோத்யேகராத்ரேண வ்ருஷலீ ஸேவநாத் த்விஜ: 1
தத் பைக்ஷபுக் ஐபந் நித்யம் த்ரிபிர் வர்ஷைர் வ்யபோஹதி 178

த்விஜன் சண்டாளப் பெண்ணுடன் ஓரிரவு கூடிய பாவத்தைப் போக்க வேண்டுமானால், மூன்று வருடங்கள் பிட்சான்னத்தை உண்டு, காயத்ரி ஜபித்தபடி காலங் கடத்த வேண்டும்.

ஏஷா பாபக்ருதாமுக்தா சதுர்ணாமபி நிஷ்க்ருதி: |
பதிதை: ஸம்ப்ரயுக்தாநாமிமா: ஷ்ருணுத நிஷ்க்ருதீ: || 179

ஹிம்சை, தகாதவற்றைசாப்பிடல், திருட்டுத்தனம், கூடக் கூடாததைக் கூடல் என்னும் பாபங்களுக்குரிய பிராயச்சித்தங்கள் கூறப்பட்டன. இனி பதிதர்களுடன் கூடினவர்களுக்குரிய பிராயச் சித்தங்கள் கூறப்படும்.

ஸம்வத்ஸரேண பததி பதிதேந ஸஹா ஆசரந்|
யாஜநா அத்யாபநாத் யௌநாந் நது யாநா ஆஸ நா அ நாத்|| 180

ஒரே வண்டியில் போதல், ஒரே ஆசனத்தில் அமர்தல், ஒரேபந்தியில் சாப்பிடல் என்று ஒரு வருடகாலம் பதிதனுடன்சேர்ந்திருந்தால்,இவனும் பதிதனாவான். பதிதனுக்கு வேதம்சொல்லிக் கொடுத்தாலும், விவாக சம்பந்தம் செய்து கொண்டாலும்உடனடியாகப் பதிதனாவான்.

யோ யேந பதிதேநைஷாம் ஸம்ஸர்கம் யாதி மாநவ: |
ஸ தஸ்யைவ வரதம் குர்யாத் தத்ஸம்ஸர்க விசுத்தயே|| 181
எவன் எத்தகைய பதிதனோடு (பாவியோடு) கூட்டுறவுவைத்துக் கொள்கிறானோ, அந்தக் கூட்டுறவால் ஏற்பட்ட தோஷம்நீங்குவதற்கு அந்தப் பதிதனுக்கு விதிக்கப்பட்ட பாவத்திற்குரியபிராயச்சித்தத்தை செய்து கொள்ள வேண்டும்.

பதிதஸ்யோதகம் கார்யம் ஸபிண்டைர் பாந்தவைர் பஹி: |
நிந்திதே அஹநி ஸாயாஅஹ்நே ஞாத்த்யுத்விக் குருஸந்நிதௌ|| 182
ஒருவன் இவ்வாறு ஜாதி பிரஷ்டனாகிவிட்டால் அவனுடையசபிண்டர்கள் (பங்காளிகள்) கிராமத்துக்கு வெளியே குரு,பங்காளிகள், ரித்விக்குகள் முன்னிலையில் நவமியில் மாலைவேளையில் அந்த பிரஷ்டனுக்கு பிரேதத்துக்கு செய்யும் கிரியைகள்,உதக தானம். பிண்டமிடுதல் முதலானவற்றைச் செய்யவேண்டும்.

தாஸீ கடமபாம் பூர்ணம் பர்யஸ்யேத் ப்ரேதவத் பதா |
அஹோராத்ரமு பாஸீரந்நசௌசம் பாந்தவை: ஸஹ 183
ஒரு பணிப்பெண் தண்ணீர் நிறைந்த குடத்தை பிரேதம்போல்தெற்குமுகமாக வைத்து, அதை காலால் உதைத்து, பானையில் உள்ளநீர் வடிந்து போகுமாறு செய்ய வேண்டும். பங்காளிகள் அன்றுஒருநாள் தீட்டுக் காக்க வேண்டும்.

நிவர்தேரம்ஷ் ச தஸ்மாத் து ஸம்பாஷணஸஹா ஆஸநே |
தாயாத்யஸ்ய ப்ரதாநம் ச யாத்ரா சைவ ஹி லௌகி || 184

அதன் பிறகு பங்காளிகள் லெ கீக காரியங்கள் எதிலும் அவனைச் சேர்க்கக் கூடாது. அவனுடன் அமர்வதும் பேசுவதும் கூடாது.

ஜ்யேஷ்டதா ச நிவர்தேத ஜ்யேஷ்டாஅவாப்யம் சயத்தனம்
ஜ்யேஷ்டாம்ஷம் ப்ராப்னுயாச் சாஅஸ் ய யவீயாந் குணதோ அதிக: || 185

இத்தகைய பதிதன் வீட்டில் மூத்த மகனாக இருந்தாலும் இவன் ஜேஷ்டன் என்ற மரியாதைக்குரியவனாக மாட்டான். சொத்தில் ஜேஷ்டபாகம் என்னும் இருபதில் ஒரு பாகம் இவனுக்குக் கிடையாது.-இவனுக்கு அடுத்த சகோதரன் குணவானாக இருந்தால் ஜேஷ்ட
பாகம் என்னும் உத்தாரதனத்தை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ப்ராயஷ்சித்தே து சரிதே பூர்ண கும்பம்பாம் நவம் |
தேநைவ ஸார்தம் ப்ராஸ்யேயு: ஸ்நாத்வா பூண்யே ஜலாஷயே|| 186

பதிதன் பிராயச்சித்தம் செய்து கொண்டால், அவன் பங்காளிகள் அவனுடன் சேர்ந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராட வேண்டும். பிறகு தண்ணீர் நிரப்பிய குடத்தை தண்ணீரில் போட வேண்டும்.

ஸ த்வப்சு தம் கடம் ப்ராஸ்ய ப்ரவிஷ்ய பவனம் ஸ்வகம் |
ஸர்வாணி ஞாதிகார்யாணி யதாபூர்வம் ஸமாசரேத் |-187

அதன் பிறகு பிராயச்சித்தம் செய்து கொண்டு பரிசுத்தனாகி பதிதத்தன்மை நீங்கிய அவன் தனது இல்லத்துக்குச் செல்ல வேண்டும். இதற்கு முன்பு செய்தபடி சிராத்தம் முதலான சகலகாரியங்களையும் செய்ய வேண்டும். இவ்வாறாக அவன் தன்ஜீவனத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.

ஏவமேவ விதிம் குர்யாத் யோஷித்சு பதிதாஸ்வபி |
வஸ்த்ரா அந்ந பாநம் தேயம் து வசேயுஷ் ச க்ருஹாந்திகே|| 188

பதிதைகளான பெண்கள் விஷயத்திலும் இவ்வாறே செய்யவேண்டும், வீட்டுக்கு வெளியே வசிக்க இடம் கொடுத்து அன்னபானங்களை அவளுக்கு வழங்க வேண்டும். வீட்டுக்குள் சேர்க்கக்கூடாது.

ஏநஸ்விபிர நிர்ணிக்தைர் நாஅர்தம் கிஞ்சித் ஸஹா ஆசரேத்
க்ருத நிர்ணேஜநாம்ஷ் சைவ ந குப்ஸேத கர்ஹிசித் || 189
பாபம் புரிந்தவர்கள், பிராயச்சித்தம் செய்து கொள்ளாதவரைஅவர்களுடன் தன விஷயத்தில் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது-பிராயச்சித்தம் செய்து கொண்டபிறகு பழையபடி பழகவேண்டும். அவன் முன்பு செய்த குற்றத்தைக் கூறி அவனைத்தூற்றக்கூடாது.

பாலக்நாம்ஷ் ச க்ருக்நாம்ஷ்ச விசுத்தாநபி தர்மத: |
ஷரணா ஆகத ஹந்த்ரூம்ஷ்சஸ்த்ரீஹந்த்ரூம் ச நஸம்வசேத்||190

பாலகனைக் கொன்றவன், செய்ந்நன்றி மறந்து தீங்கிழைத்தவன்,சராணாகதி அடைந்தவனைக் கொன்றவன், பெண்ணைக்கொன்றவன் முதலானோர் பிராயச்சித்தம் செய்து கொண்ட பிறகும்அவர்களுடன் சேர்ந்து வசிக்கலாகாது.

யேஷாம் த்விஜாநாம் ஸாவித்ரீ நாஅனூச்யேத யதாவிதி 1
தாம்ஷ் சாரயித்வா த்ரீந் க்ருச்ராந் யதாவித்யுபநாயயேத்II 191

பிராம்மண க்ஷத்ரிய வைசியப் பிள்ளைக்கு உரிய காலத்தில் உபநயனம் செய்து வைக்காவிடில், அவர்களை மூன்று பிராஜாபத்ய க்ருச்ரங்களை பிராயச்சித்தமாக செய்ய வைத்து, அதற்குப் பிறகு உபநயனம் செய்ய வேண்டும்.

ப்ராயஷ்சித்தம் சிகீர்ஷந்தி விகர்மஸ்தாஸ் து யே த்விஜா: |
ப்ரஹ்மணா ச பரித்யக்தாஸ் தேஷாமப் யேததாதிஷேத்|| 192

செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்யாமல், தகாதவற்றைச் செய்த த்விஜர்கள் பிராயச்சித்தம் செய்ய விரும்பினால் அப்போது பிராம்மணர்கள் பிராஜாபத்யக்ருச்ர விரதத்தையே பிராயச்சித்தமாக விதிக்க வேண்டும்.

யத் கர்ஹிதேநா அர்ஜயந்தி கர்மணா ப்ராஹ்மணா தநம்
தஸ்யோத் ஸர்கேண சுத்யந்தி ஜப்யேந தபஸைவ ச ! 193

பிராம்மணன்,தகாதவனிடம் தானம் வாங்குதல் போன்ற நிந்திக்கப்பட்ட வழிகளில் எந்த வழியில் தனத்தை சம்பாதித்திருந்தாலும் அதை தானம் செய்துவிடுவதாலும், இனி சொல்லப்போகும் ஜபதங்களைச் செய்வதாலும் தூய்மையடைவான்.

ஜபித்வா த்ரீணி ஸாவித்ர்யா: ஸஹஸ்ராணி ஸமாஹித: |
மாஸம் கோஷ்டேபய: பீத்வா முச்யதேஅஸத் ப்ரதிக்ரஹாத் 194

தகாதவனிடம் தானம் வாங்கியவன் மூவாயிரம் காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும். பசுக் கொட்டிலில் பசுக்களுடன் பாலைஆஹாரமாகக் கொண்டு இருக்கவேண்டும். இப்படிச் செய்தவன் அந்த தோஷத்திலிருந்து விடுபடுவான்.

உபவாச க்ருஷம் தம் து கோவ்ரஜாத் புநராகதம் | ப்ரணதம் பரிப்ருச்சே : ஸாம்யம் ஸௌம்யேச்சஸீதி கிம் || 195

இவ்வாறாக காயத்ரி ஜபமும் பால் மட்டும் ஆகாரமாகவும் பசுக்கொட்டிலில் வசித்து, தன் பிராயச்சித்தத்தைப் பூர்த்தி செய்து கொண்ட பிறகு, சான்றோரை அணுகி வணங்க வேண்டும். பாலை மட்டும் ஆகாரமாகக் கொண்டதால் இளைத்த உடலோடு வந்திருக்கும் அவனிடம், இனி இவ்வாறாக தகாத தானங்களை வாங்காதே, எங்களுக்குச் சமமாக இருப்பாயாக, என்று புத்திமதி கூறவேண்டும்.

ஸத்யமுக்த்வா து விப்ரேஷு விகிரேத் யவஸம் கவாம் |
கோபி: ப்ரவர்திதே தீர்தே குர்யுஸ் தஸ்ய பரிக்ரஹம் |-196

‘இனி தகாதவரிடம்தானம் வாங்க மாட்டேன்”, என்று அவன் சத்யம் செய்ய வேண்டும் . பிறகு வைக்கோலை அவர்கள் முன்னிலையில் பசுக்களுக்குக் கொடுக்க வேண்டும். பசுக்கள் உண்ட பிறகு, பரிசுத்தமான அந்த ஸ்தலத்தில் பிராம்மணர்கள் அவனைத் தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

வ்ராத்யாநாம் யாஜநம் க்ருத்வா பரேஷாமந்த்ய கர்ம ச
அபிசாரம நம் ச த்ரிபி: க்ருச்ரைர் வ்யபோஹதி || 197

விராத்யர்களுக்கு யாகம் செய்து வைத்தல், பிறர்களுக்கு அந்திமக் கிரியைகளைச் செய்தல், அபிசார ஹோமங்கள் செய்தல் முதலானவற்றைச் செய்தவன், மூன்று பிராஜபத்யக்ருச்ரங்களை அனுஷ்டித்தால் பரிசுத்தமடைவான்.

ஷரணாஆகதம் பரித்யஜ்ய வேதம் விப்லாவ்ய சத்விஜ: |
ஸம்வத்ஸரம் யவாஆஹாரஸ் தத்பாபமப ஸேத்தி || 198

தன்னைச் சரணடைந்தவனைக் காப்பாற்றாமல் கைவிட்டவனும், தகாவனுக்குவேதம் கற்பித்தவனும் ஒருவருட காலம் யவை தானியத்தை மட்டும் ஆஹாரமாக ஏற்கவேண்டும். அப்படிச்செய்தால் பாபத்திலிருந்து விடுதலையடைவான்.

ஷ்வஸ்ரு காலகரைர் தஷ்டோ க்ராம்யை: க்ரவ்யாத்பிரேவ ச
நரா அஷ்வோஷ்ட்ரவராஹைஷ்ச ப்ராணாயாமேந சுத்யதி || 199

நாய், நரி, கழுதை, மனிதன், குதிரை, ஒட்டகம், பன்றி போன்றவை கடித்தால் மூன்று பிராணாயாமங்கள் செய்ய வேண்டும்.

ஷஷ்டா அந்நகாலதா மாஸம் ஸம்ஹிதாஜப ஏவ வா
ஹோமாஷ் ச ஷாகலா நித்யமபாங்க்த்யாநாம் விஷோதநம் || 200

பதிதர்கள் என்று சொல்லப்பட்டவர்களில் இதுவரை பிராயச்சித்தம் எதுவும் தனிப்பட சொல்லப்படாத பதிதர்கள் மூன்றுநாட்கள் உபவாசமிருந்து நான்காம் நாள் உணவுண்ண
வேண்டும். இவ்வாறாக தொடர்ந்து ஒரு மாதம் செய்ய வேண்டும். இந்த ஒருமாதம் தினமும் வேதம் ஓதவேண்டும். ஹோமமும் செய்ய வேண்டும். இவ்வாறாக செய்தால் பரிசுத்தனாவான்.

உஷ்ட்ரயாநம் ஸமாருஹ்ய கரயாநம் து காமத: |
ஸ்நாத்வா து விப்ரோ திக்வாஸா: ப்ராணா யாமேந சுத்யதி || 201

வித்வானான பிராம்மணன் ஒட்டகம் பூட்டிய வண்டியிலோ, கழுதைகள் பூட்டிய வண்டியிலோ பிரயாணம் செய்தால், நீரில் அமிழ்ந்து அணிந்துள்ள ஆடைகளை அதிலேயே விட்டுவிட்டு,
வேறு ஆடை அணிய வேண்டும். பிறகு பிராணாயாமம் செய்தால் சுத்தனாவான்.

விநா அத்பிரப்சு வாஅப்யார்த: ஷாரீரம் ஸந்நிவேஷ்ய ச
ஸசைலோ பஹிராப்ளுத்ய காமாலப்ய விசுத்யதி| 202

தண்ணீரை எடுத்துக் கொண்டு வருவதற்குள், வேகத்தால், தண்ணீரிலேயே மலஜலம் கழித்தால் உடுத்தியிருக்கும் ஆடையோடு நீராட வேண்டும். பிறகு பசுவைத் தொட்டால் பரிசுத்தனாவான்.

வேதோதிதாநாம் நித்யாநாம் கர்மணாம் ஸமதிக்ரமே | ஸ்நாதகவ்ரதலோபே ச ப்ராயஷ்சித்தமபோஜநம் || 203

தனிப்பட்ட பிராயச்சித்தங்கள் சொல்லப்படாததான, வேதம்விதித்த நித்யகர்மாக்களை விடல், ஸ்நாதக விரதத்தில் ஏதேனும்குறை ஏற்படல் முதலியவாற்றுக்கு ஒருநாள் உபவாசமிருத்தலேபிராயச்சித்தமாகும்.

ஹுட்காரம் ப்ராஹ்மணஸ்யோக்த்வா த்வட்காரம் ச கரீயஸ: 1
ஸ்நாத்வா அநஷ்நந்நஹ: சேஷமபிவாத்ய ப்ரஸாதயேத் || 204

தன்னைவிட வயதிலும் வித்தையிலும் பெரியவனானபிராம்மணனைப் பார்த்து அதட்டினாலும், ஏகவசனத்தில்மரியாதைக் குறைவாகப் பேசினாலும் அந்தப் பாபம் நீங்க நீராடிஅன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மறுநாள் அவரிடம்சென்று, பாதங்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தாடயித்வா த்ருணோநா அபி கண்டே வாஆபத்ய வாஸஸா | விவாதே வா விநிர்ஜித்ய ப்ரணிபத்ய ப்ரஸாதயேத் 205
பிராம்மணனைப் புல்லால் அடித்தாலும்கூட பாபமே.அவ்வாறே கழுத்தில் துணியைப் போட்டு இழுத்தாலும், முன்னர்சொன்னபடி இந்த பாபத்துக்கும் அவர் காலில் விழுந்து மன்னிப்புபெறுவதே பாபம் நீங்கும் வழியாகும்.

அவகூர்ய த்வப்த ஷதம் ஸஹஸ்ரமபிஹத்ய ச 1
ஜிகாம்ஸயா ப்ராஹ்மணஸ்ய நரகம் ப்ரதிபத்யதே 206

பிராம்மணனைக் கொல்வதற்காக தடியைக் கையிலெடுத்தவனுக்கு நூறாண்டுகள் நரகவாசம் ஏற்படும். கையிலெடுத்ததோடுஅடிக்கவும் செய்தவனுக்கு ஆயிரம் வருடங்கள் நரகவாசம் ஏற்படும்.

ஷோணிதம் யாவத: பாம்சூந் ஸங் க்ருஹ்ணாதி மஹீதலே| தாவந்த்யப்த ஸஹஸ்ராணி தத்கர்தா நரகே வசேத் | 207

அடிக்கப்பட்ட பிராம்மணன் உடலிலிருந்து ஒழுகிய ரத்தம் பூமியில் எத்தனை மண்துகள்களை நனைக்கிறதோ, அத்தனை ஆயிரம் வருடங்கள், அடித்தவனுக்கு நரகவாசம் ஏற்படும்.

அவகூர்ய சரேத் க்ருச்ரமதிக்ருச்ரம் நிபாதநே |
க்ரூச்ரா அதிக்ருச்ரெள குர்வீத விப்ரஸ்யோத்பாத்யஷோணிதம் || 208

கையில் தடியை எடுத்து அடிக்க ஓங்கியவன் அந்தப் பாபம் நீங்க அதிக்ருச்ர விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அடித்தவன், க்ருச்ர விரதம் அதிக்ருச்ர விரதம் இரண்டையும்
அனுஷ்டிக்க வேண்டும்.

அனுக்த நிஷ்க்ருதீநாம் து பாபாநாமபனுத்தயே
ஷக்திம் சாஅவேக்ஷ்ய பாபம் ச ப்ராயஷ்சித்தம் ப்ரகல்பயேத் || 209

இப்போது கூறப்படாத, கொலைக்கு முயன்ற பாபங்களுக்கு, செய்தவனுடைய சக்தியையும், பாபத்தின் தன்மையையும் ஆராய்ந்து பிராயச்சித்தங்களை விதிக்கவேண்டும்.

யைரப்யுபாயை ரேநாம்ஸி மாநவோ வ்யபகர்ஷதி |
தாந் வோ அப்யுபாயாந் வக்ஷ்யாமி தேவர்ஷி பித்ரு ஸேவிதாந்| 210

இனி பாபங்களைப் போக்கும் விரதங்களைப் பற்றிக் கூறுகிறேன். இவை தேவர்களாலும் ரிஷிகளாலும் பித்ருக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

த்ரயஹம் ப்ராதஸ் த்ரயஹம் ஸாயம் த்ரயஹமத்யாத யாசிதம் |
த்ரயஹம் பரம் ச நாஅஷ்நீயாத் ப்ராஜாபத்யம் சரந்த்விஜ: ||-211-

ப்ராஜாபத்யக்ருச்சம் என்பதை எப்படிக் கடைப்பிடிப்பது என்று பார்ப்போம்.-முதல் மூன்று நாட்கள் காலையில் மட்டும் உண்ண வேண்டும்.-அடுத்த மூன்று நாட்கள் மாலையில் மட்டும் உண்ண வேண்டும்.-அதற்கடுத்த மூன்று நாட்கள் தானாக யாசிக்காமல் கிடைத்ததை
உண்ண வேண்டும். அதற்கும் அடுத்த மூன்று நாட்கள் எதுவும்-சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.-இவ்வாறாக த்விஜர்கள் ப்ராஜாபத்யலகருச்ரம் என்று இந்த
விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

கோமூத்ரம் கோமயம் ஸீரம் ததி ஸாபி: குஷோதகம்|
ஏகராத்ரோ பவாசஸ் ச க்ருச்ரம் ஸாந்தபநம் ஸ்ருதம் || 212

சாந்தபநக்ருசரம்: முதல்நாள் பசுவின் நீர், சாணம், பால், தயிர்,நெய், தர்ப்பைகள் ஊறிய தண்ணீர் இவைகளைச் சேர்த்து சாப்பிடவேண்டும் மறுநாள் உபவாசமிருக்க வேண்டும். இதற்கு சாந்தபநக்ருச்ர விரதம் என்று பெயர்.

ஏகைகம் க்ராஸமஷ்நீயாத் த்ரயஹாநி த்ரீணி பூர்வவத் த்ரயஹம் சோபவஸேதந்த்ய மதிக்ருச்ரம் சரந் த்விஜ: || 213
க்ருச்ரவிரதத்துக்குக் கூறியது போன்றே முதல் மூன்று நாட்கள் காலையில் மட்டும் புசிக்க வேண்டும். ஆனால் ஒரு கவளம் அன்னம் மட்டுமே சாப்பிட வேண்டும். பிறகு மூன்று நாட்கள் மாலையில் மட்டும் ஒவ்வொரு கவளம் சாப்பிட வேண்டும். அதன்பிறகு மூன்று நாட்கள் கேட்காமல் கிடைத்ததை ஒவ்வொரு கவளம் சாப்பிட வேண்டும். அடுத்த மூன்றுநாட்கள் உபவாசமிருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் விரதத்துக்கு அதிக்ருச்ரவிரதம் என்று பெயர்.

தப்த க்ரூச்ரம் சரந் விப்ரோ ஜல ர க்ருதா அநிலாந்|
ப்ரதித்ரயஹம் பிபேதுஷ்ணாந் ஸக்ருத்ஸ்நாயீ ஸமாஹித:/ 214

தப்தக்ருசர விரதம்: தப்தக்ருச்ர விரதத்தை அனுஷ்டிக்கும் விப்ரன் முதல் மூன்றுநாட்கள் வெந்நீரைக் குடிக்க வேண்டும். அடுத்த மூன்று நாட்கள் காய்ச்சிய பாலைக் குடிக்க வேண்டும்.-பிறகு மூன்று நாட்கள் நெருப்பை உண்டாக்கி அதன் சூட்டை அனுபவித்தபடி இருக்க வேண்டும். தினமும் ஒரு வேளை நீராட வேண்டும்.

யதாஆத்மநோ அப்ரமத்தஸ்ய த்வாதஷா அஹமபோஜநம் |
பராகோ நாம க்ருச்ரோ அயம் ஸர்வபாபாஅப நோதந: I-215

பராகக்ருச்ர விரதம்: இந்திரியங்களை அடக்கி, மிக்க நியமத்தோடு பன்னிரண்டு தினங்கள் எதுவுமே சாப்பிடாமல் முழுமையாக உபவாசமிருக்க வேண்டும். இதற்கு பராகக்ருச்ர விரதம் என்று பெயர். இந்த விரதம் அனைத்துப் பாபங்களையும் போக்கும்.

ஏகைகம் ஹ்ரஸயேத் பிண்டம் க்ருஷ்ணே ஷுக்லே ச வர்தயேத் 1
உபஸ்ப்ருஷம்ஸ்த்ரிஷவணமேதச் சாந்த்ராயணம் ஸ்ம்ருதம்|| 216

சாந்த்ராயண விரதம்: காலை மாலை மத்யானம் மூன்று வேளையும் நீராட வேண்டும். பெளர்ணமியன்று பதினைந்து கவளங்கள் உணவு சாப்பிட வேண்டும். மறுநாள் ஒரு கவளம் குறைத்துப் பதினான்கு கவளங்கள். இவ்வாறு தினம் ஒரு கவளமாகக்
குறைத்துக் கொண்டே வர வேண்டும். சதுர்த்தசியன்று ஒரு கவளத்தில் வந்து நிற்கும். மறுநாள் அமாவாசையன்று உபவாசமிருக்க வேண்டும். அடுத்த நாள் பிரதமையில் ஒரு கவளம்சாப்பிட வேண்டும். அடுத்த நாள் இரண்டு கவளம் சாப்பிட்டுவர பெளர்ணமியில் பதினைந்து கவளங்களில் வந்துநிற்கும்.-இவ்வாறு விரதமிருப்பதற்கு சாந்த்ராயண விரதம் என்று பெயர்.இதை பிபீலிகா சாந்த்ராயண விரதம் என்றும் கூறுவர்.

ஏதமேவ விதிம் க்ருத்ஸ்நமாசரேத் யவமத்யமே |
சுக்ல பக்ஷாதிநியதஷ் சரம்ஷ்சாந்த்ராயணம் வ்ரதம் || 217

யவசாந்த்ராயண விரதம்: அமாவாசைக்கு மறுநாள் பிரதமையன்று ஒரு கவளம் சாப்பிட வேண்டும். பிறகு தினம் ஒரு கவளமாகக் கூட்டிக் கொண்டே வர பௌர்ணமியன்று பதினைந்து கவளங்களில் வந்து நிற்கும். பிறகு ஒவ்வொரு கவளமாக குறைத்துக் கொண்டே வந்து அமாவாசையன்று முழு உபவாசமிருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் விரதத்துக்கு யவசாந்த்ராயண விரதம் என்று பெயர்.

அஷ்டாவஷ்டௌ ஸமஷ் யாத் பிண்டாந் மத்யந்திநே ஸ்திதே நியதே ஆத்மா ஹவிஷ்யாஅஷீ யதி சாந்த்ராயணம் சரந்|-218
யதிசாந்த்ராயண விரதம்: தினமும் நியமத்தோடு அனுஷ்டானங்களைச் செய்து, மத்யானம் ஒருவேளை மட்டும் ஹோமம் செய்து மிகுந்த ஹவிஸ் அன்னத்தை எட்டு பிண்டங்கள் அளவு (கவளம் என்பது ஒரு கை அளவு. பிண்டம் என்பது இரண்டு கையளவு.) சாப்பிட வேண்டும். இதற்கு யதிசாந்த்ராயண விரதம் என்று பெயர்.

சதுர: ப்ராதரஷ்நீயாத் பிண்டாந் விப்ர: ஸமாஹித: சதுரோ அஸ்தமிதே சூர்யே சிசுசாந்த்ராயணம் ஸ்ம்ருதம் || 219
சிசுசாந்த்ராயண விரதம்: காலையில் நான்கு பிண்டங்கள் அளவு சாப்பிட வேண்டும். இரவில் நான்கு பிண்டங்கள் அளவு சாப்பிட வேண்டும். இந்த நியமத்தோடு கடைப்பிடிக்கும் விரதத்துக்கு சிசுசாந்த்ராயண விரதம் என்றுபெயர்.

யதா கதஞ்சித் பிண்டாநாம் திஸ்ரோ அஷீதி: ஸமாஹித: | மாஸேநா அஷ்நந் ஹவிஷ்யஸ்ய சந்த்ரஸ்யைதி ஸலோகதாம் || 220
ஒரு மாதம் முழுவதும் சிறிதளவு ஹவிஸை மட்டும் ஒருவேளை சாப்பிட்டு விரதமிருப்பவன் சந்திரலோகத்தை அடைவான்.

ஏதத் ருத்ராஸ் ததா ஆதித்யா வஸவஷ் சா அசரந்வரதம் |
ஸர்வா அகுஷலமோக்ஷாய மருதஷ்ச மஹர்ஷிபி:| 221

இத்தகைய விரதங்களை பதினொரு ருத்ரர்களும், பன்னிரண்டு ஆதித்யர்களும், ஏழு மருத்துக்களும், எட்டு வசுக்களும் அனுஷ்டித்து மேன்மைகளை அடைந்தார்கள்.

மஹாவ்யாஹ்ருதிபிர்ஹோம: கர்தவ்ய: ஸ்வயமந்வஹம் |
அஹிம்ஸா ஸத்யமக்ரோதமார்ஜவம் ச ஸமாசரேத் |-222

சாந்த்ராயண விரதமேற்போர் தினமும் மகா வியாக்ருதிமந்திரங்களால் நெய்யை விட்டு ஹோமம் செய்ய வேண்டும். அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும். சத்தியமே பேச
வேண்டும். குரோதமற்று இருக்க வேண்டும்.

த்ரிரஹஸ் த்ரிர் நிஷாயாம் ச ஸவாஸா ஜலமாவிஷேத் 1
ஸ்த்ரீசூத்ர பதிதாம்ஷ் சைவ நாஅபிபாஷேத கர்ஹிசித்|| 223

காலையும் மாலையும் மத்யானமும் தண்ணீரில் மூழ்கிக் குளிக்க வேண்டும். அதாவது ஓடும் நதியில் குளிப்பது சிரேஷ்டம். அல்லது ஏரி குளங்களில் நன்கு முழ்கிக் குளிக்க வேண்டும்.

ஸ்தா நாஆசநாப்யாம் விஹரே தஷக்தோ அத: ஷயீத வா
ப்ரஹ்மசாரீ வ்ரதீ ச ஸ்யாத் குருதேவத்விஜா அர்சக: |-224

விரதமனுஷ்டிக்கும் போது இரவு தூங்குதல் என்ற விதியைவைத்துக் கொள்ளக் கூடாது. அமர்ந்திருக்க வேண்டும். முடியாத போது சிறிது படுக்கலாம். (பகலிலும் இதே விதிதான்) ஆனால் மஞ்சத்தில் படுக்கக் கூடாது. பிரம்மசரிய விரதத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். குருவையும் தேவர்களையும் உத்தம த்விஜர்களையும்பூஜிக்க வேண்டும்.

ஸாவித்ரீம் ச ஐபேந் நித்யம் பவித்ராணி ச ஷக்தித: |
ஸர்வேஷ்வேவ வரதேஷ்வேவம் ப்ராயஷ்சித்தார்த மாத்ருத: || 225

தினமும் காயத்ரீ மந்திரத்தை முடிந்த வரை அதிகபட்சமாக ஜபிக்க வேண்டும். இந்த விதிமுறையை எல்லா பிராயச்சித்தவிரதங்களிலும் அனுஷ்டிக்க வேண்டும்

ஏதைர் த்விஜாதய: ஷோத்யா வரதைராவிஷ்க்ருதை நஸ: அநாவிஷ்க்ருதபாபாம்ஸ் து மந்த்ரைர் ஹோமைஷ்ச சோதயேத்-226இவ்வாறாக தங்கள் பாபங்களைக் கூறி பிராயச்சித்தம் கேட்டுவந்த த்விஜர்களுக்கு வேதவிற்பன்னர்கள் பிராயச்சித்தங்களை எடுத்துரைக்க வேண்டும்.-தங்கள் பாபங்கள் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும்.என்று கேட்டு வந்தவர்களுக்கு அதற்குத் தக்கபடி மந்திர ஜபங்களையும், ஹோமங்களையும் எடுத்துரைக்க வேண்டும்.

க்யாபநேநா அனுதாபேந தபஸா அத்யயநேந ச |
பாபக்ருந் முச்யதே பாபாத் ததா தாநேந சாஆபதி 227
தான் செய்த பாபத்தை வெளிப்படையாகக் கூறி மனம் வருந்துவதாலும், தவத்தாலும், வேதமோதுவதாலும், தானம் செய்வதாலும்பிராயச்சித்தம் செய்வதாலும் ஒருவன் தன் பாபத்திலிருந்து விடுபடுகிறான்.

யதா யதா நரோ அதர்மம் ஸ்வயம் க்ருத்வா அனுபாஷதே
ததா ததா த்வசேவாஅஹிஸ் தேநாஅதர்மேண முச்யதே |-228
ஒருவன் தான் செய்த பாபத்தை வெளிப்படையாகத் தெரிவித்துஎவ்வளவுக் கெவ்வளவு மனம் வருந்துகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு பாம்பு சட்டையையுரிப்பது போல், தன் பாபத்தைஉரித்தெறிகிறான்..

யதா யதா மநஸ் தஸ்ய துஷ்க்ருததம் கர்ம கர்ஹதி 1
ததா ததா சரீரம் தத் தேநா அதர்மேண முச்யதே| 225
ஒருவன் எந்த அளவுக்கு மனம் வருந்தி, ஐயோ இப்படி செய்தவிட்டேனே’ என்று சுய பச்சாதாபப் படுகிறானோ அந்த அளவுக்குஅவன் பாபத்திலிருந்து விடுபடுகிறான்.

க்ருத்வா பாபம் ஹி ஸந்தப்ய தஸ்மாத் பாபாத் ப்ரமுச்யதே |
நைவம் குர்யாம் பூநரிதி நிவ்ருத்யா பூயதே துஸ: |-230

பாபம் புரிந்து விட்டு ‘ஐயோ இப்படிச் செய்து விட்டேனே என்று பரிதவித்து மனம் நொந்து துடித்து பாபத்திலிருந்து விடுபட்டவன் மீண்டும் அப் பாபத்தைச் செய்யவே கூடாது.

ஏவம் ஸஞ்சிந்த்ய மனஸா ப்ரேத்ய கர்மபலோதகம் |
மனோவாங்மூர்திபிர் நித்யம் சுபம் கர்ம ஸமாசரேத் || 231

இதுவரை கூறியதை யெல்லாம் நன்கு மனத்தில் நிறுத்திக் கொண்டு, பாபம் செய்வதால் வரும் கேட்டையும், புண்ணியம் செய்வதால் வரும் நன்மையையும் சீர்தூக்கிப் பார்த்து, மனத்தாலும் வாக்காலும் உடலாலும் எப்போதும் புண்ணியம் தரும் காரியங்களைச் செய்ய வேண்டும்.

அக்ஞாநாத் யதிவா ஞாநாத் க்ருத்வா கர்ம விகர்ஹிதம் |
தஸ்மாத் விமுக்திமந்விச்சந் த்விதீயம் ந ஸமாசரேத் |232

தெரிந்தோ, தெரியாமலா பாபம் தரும் காரியத்தைச் செய்து விட்டு, அப்பாபத்திலிருந்து விடுதலை அடைய நினைப்பவன்,மீண்டும் இரண்டாவது முறை அந்தப் பாபத்தைச் செய்யக்கூடாது.

யஸ்மிந் கர்மண்யஸ்ய க்ருதே மனஸ: ஸ்யாதலாகவம் |
தஸ்மிம்ஸ் தாவத் தப: குர்யாத் யாவத் துஷ்டிகரம் பவேத் I233

பாபம் செய்தவன், பிராயச்சித்த விரதத்தை அனுஷ்டித்து முடித்த பிறகும். அவன் மனத்துக்கு பாபம் நீங்கிவிட்டது என்ற திருப்தி ஏற்படவில்லையானால், திருப்தி ஏற்படும்வரை அந்த பிராயச்சித்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

தபோ மூலமிதம் ஸர்வம் தைவமானுஷகம் சுகம் |
தபோ மத்யம் புதை: ப்ரோக்தம் தபோ அந்தம் வேததர்ஷிபி:|| 234

தேவர்களும் மனிதர்களும் அனுபவிக்கும் சுகத்துக் கெல்லாம் தவமே காரணம். சுகத்தின் ஆதிக்கும் நடுவுக்கும் முடிவுக்கும் தவமே காரணம் என்று வேதமறிந்தோர் கூறியுள்ளனர்.

ப்ராஹ்மணஸ்ய தபோ ஞாநம் தப: க்ஷத்ரஸ்ய ரக்ஷணம்|
வைஷ்யஸ்ய து தபோ வார்தா தப: சூத்ரஸ்ய ஸேவநம்|| 235

தவம் என்பது யாருமற்றகாட்டில் போய் உட்கார்ந்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையையே தவமாக்கிக் கொள்ளலாம்.-ஞானத்தை அடைவதே பிராம்மணன் செய்யும் தவம். க்ஷத்ரியர்களுக்கு மக்களைக் காப்பதே தவம்.
வைசியர்களுக்கு வர்த்தகமே தவம்.-சூத்திரர்களுக்கு பணிபுரிதலே தவம்.

ருஷய: ஸம்யதா ஆத்மாந பலமூலா அநிலா அஷநா: |
தபஸைவ ப்ரபஷ்யந்தி த்ரைலோக்யம் ஸசராசரம்|| 236

ரிஷிகள் மனம் வாக்கு சரீரத்தால் தூய்மையானவர்களாக, தூய்மையான நியமங்களைக் கடைப்பிடித்து, பழங்களையும் கிழங்கு களையும் உண்டு, சில சமயம் காற்றை மட்டுமே சுவாசித்தபடி தவம் புரிந்து, தங்கள் ஞானதிருஷ்டியால் இருந்த இடத்திலிருந்தபடியே மேலுலகத்தையும் பாதாளத்தையும் இந்த பூமி முழுவதையும் பார்க்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஒளஷதாந்யகதோ வித்யா தைவீ ச விவிதா ஸ்திதி: |
தபஸைவ ப்ரசித்யந்தி தபஸ் தேஷாம் ஹி ஸாதநம் || 237

நோய்களை நீக்குகின்ற மூலிகைகளை அறிகின்ற திறனும், பிரம்ம ஞானமும், மேன்மையான உலகங்களும் இன்னும் பலவும் தவத்தாலேயே அடையப்படுகின்றன. அனைத்தையும் அடையும் சாதனமாக தவமே இருக்கிறது.

யத் துஸ்தரம் யத் துராபம் யத்துர்கம் யச்ச துஷ்கரம்
ஸர்வம்தத் தபஸா சாத்யம் தபோஹி துரதிக்ரமம் || 238

தவத்தால் தாண்ட முடியாததையும் (வினைப்பயன்களையும்) தாண்டலாம். தவத்தால் ஏறமுடியாத எந்த உச்சத்தையும் (மேலுலகங்களையும்) எட்டலாம். தவத்தால் செய்ய இயலாத எந்தக் காரியத்தையும் (விஸ்வாமித்திரரைப் போன்று படைத்தல் தொழிலையும்)செய்யலாம். தவத்துக்கு மிஞ்சிய சக்தி எதுவுமே கிடையாது.

மஹாபாதகிநஷ்சைவ சேஷாத் சாஅகார்யகாரிண: 11
தபஸைவ சுதப்தேந முச்யந்தேகில்பிஷாத் ததக: || 239

மஹாபாதகங்களைச் செய்தவர்களும் தங்கள் தவத்தினால் பாபங்களிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். சிறு பாபங்களைச் செய்தவர்களும் விடுபட்டிருக்கிறார்கள்.
நன்கு தவம் செய்த எல்லோருமே தங்கள் பாபங்களிருந்து விடுபட்டிருக்கிறார்கள்.

கீடாஷ் சாஅஹி பதங்காஷ் ச பஷவஷ் ச வயாம்ஸி ச |
ஸ்தாவராணி ச பூதாநி திவம் யாந்தி தபோ பலாத் II 240

பூச்சிகளும், பாம்புகளும், அணில்களும், மிருகங்களும், பறவைகளும், தாவரங்களும் தவம் செய்து சொர்க்கத்தை அடைந்துள்ளன.

யத்கிஞ்சிதேந: குர்வந்தி மநோவாக் மூர்திபிர் ஜநா: 1
தத் ஸர்வம் நிர்தஹந்த்யா தபஸைவ தபோதநா: II 241

தவத்தையே தனமாக எண்ணி சேமித்து வைப்பவர்கள்,-மனத்தாலும் வாக்காலும் உடலாலும் ஏதோ சிறிது பாபம் செய்தாலும் அதுவும் தவத்தால் எரிக்கப்பட்டுவிடும். தவத்தையே தனமாகக் கொண்டவர்கள் என்பதால் தபிஸ்விகள் தபோதனர்கள்எனப் படுகிறார்கள்.

தபஸைவ விசுத்தஸ்ய ப்ராஹ்மணஸ்ய திவெளகஸ: I
இஜ்யாஷ் ச ப்ரதிக்ருஹ்ணந்தி காமாந் ஸம்வர்தயந்தி ச 242
தவம் செய்து தூய்மையடைந்த பிராம்மணர்கள் யாகயக்ஞங்கள்மூலமாகக் கொடுக்கும் ஹவிஸை தேவர்கள் பிரியத்தோடுஏற்பார்கள். அவர்கள் கேட்கும் வரங்களையும் கொடுப்பார்கள்.

ப்ரஜாபதிரிதம் ஷாஸ்த்ரம் தபஸைவா அஸ்ருஜத் ப்ரபு:
ததைவ வேதாந் ருஷயஸ் தபஸைவ ப்ரபேதிரே ||-1–243
பிரஜாபதியானவர், தவம் செய்தே இந்த தர்ம சாஸ்திரங்களைஇயற்றினார். அவ்வாறே ரிஷிகள் தவத்தினாலேயே வேதங்களைஅறிந்தார்கள்.

இத்யேதத் தபஸோ தேவா மஹாபாக்யம் ப்ரசக்ஷதே 1
ஸர்வஸ்யாஅஸ்ய ப்ரபஷ்யந்தஸ் தபஸ: பூண்ய முத்தமம் 244-
தேவர்கள், தவத்தாலேயே தாங்கள் தேவர்களானதை எண்ணி,தவத்தின் மேன்மையை அறிந்தவர்களாக மிக உயர்ந்ததானதவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

வேதாஅப்யாஸோ அந்வஹம் ஷக்த்யா மஹாயக்ஞக்ரியா க்ஷமா நாசயம்த்யாஷு பாபாரி மஹாபாதகஜாந்யபி |-245-தினமும் வேதமோதுதல், பஞ்ச மகா யக்ஞங்களைச் செய்தல்,பூர்வப் பயனால் வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளல்என்னும் இவை மூன்றும் மஹா பாபங்களையும் சீக்கிரமாக நசிக்கச்செய்யும்.

யதைதஸ் தேஜஸா வஹ்நி: ப்ராப்தம் நிர்தஹதி க்ஷணாத்
ததா ஞாநா அந்நிநா பாபம் ஸர்வம் தஹதி வேதவித் ||-1-246

அக்னியானது, தன்னருகிலுள்ள விறகுகளையெல்லாம் எரித்துச் சாம்பலாக்குவது போன்று வேதவிற்பன்னன் தனது ஞானம் என்னும் அக்னியினால் சகலபாபங்களையும் எரித்துவிடுவான்.

இத்யேததே நஸாமுத்தம் ப்ராயஷ்சித்தம் யதாவிதி |
அத ஊர்த்வம் ரஹஸ்யாநாம் ப்ராயசித்தம் நிபோதத 247

வெளிப்படையாள பிரம்மஹத்தி பாபம் முதல் அனைத்துப் பாகங்களுக்குமான பரிகாரங்கள் இதுவரை கூறப்பட்டன. இனி ரகசியமான பாபங்களின் பரிகாரங்களைக் கூறுகிறேன், கேளுங்கள்:

ஸவ்யாஹ்ருதி ப்ரணவகா: ப்ராணாயாமாஸ்து சோடஷ் |
அபி ப்ரூணஹணம் மாஸாத் பூநந்த்யஹரஹ: க்ருதா: || 248

வியாக்ருதி பிரணவங்களோடு பதினாறு பிராணாயாமங்களைச்
செய்தால் பிரம்மஹத்தி பாபத்திலிருந்தும் நீங்கி பரிசுத்தமடைய முடியும். மந்திர சித்தி அடைந்தவர்களுக்கே இது பொருந்தும். )

கௌத்ஸம் ஐப்த்வாஅப இத்யேதத் வாசிஷ்டம் சப்ரதீத் ய்ருசம் | மாஹித்ரம் சுத்தவத்யஷ் ச சுராபோ அபி விசுத்யதி || 249
கௌத்ஸ மகரிஷி அருளிய அப’ என்று தொடங்கும் சூக்தத்தையும், அவ்வாறே வசிஷ்டர் அருளிய சூக்தத்தையும், மஹித்ரமகரிஷி அருளிய சூக்தத்தையும் தினமும் பதினாறு முறை
ஜபிக்க வேண்டும் இவ்வாறு முப்பது தினங்கள் ஜபித்தால் மதுவருந்தியவன் அந்தப் பாபத்தினின்றும் நீங்கி பரிசுத்தனாகிறான்.

ஸக்ருஜ் ஜப்த்வா அஸ்யவாமீயம் ஷிவஸங்கல்பமேவ ச |
அபஹ்ருத்ய சுவர்ணம்து க்ஷணாத் பவதி நிர்மல: [11 250

ஒரு மாதம், தினமும் வாமசூக்தத்தையும், சிவ சங்கல்பத்தையும்ஜபித்துவந்தால் பிராம்மணனிடம் தங்கத்தைத் திருடிய பாவத்திலிருந்து விடுபட முடியும்.

ஹவிஷ்பாந்தீயமப்யஸ்ய நதமம்ஹஇதீதி ச |
ஜபித்வா பௌருஷம் சூக்தம் முச்யதே குருதல்பக: 251′
ஹவிஷ் பாந்தம்’ எனத் தொடங்கும் ரிக்குகளையும், ‘நதமம் என்று தொடங்கும் ரிக்குகளையும், ‘இதி வா’ எனத் தொடங்கும் ரிக்கையும் கொண்ட புருஷ சூக்தத்தையும் ஒரு மாதம் தினந்தோறும்பதினாறு முறை ஜபித்து வந்தால் குரு மனைவியைக் கூடியபாபத்திலிருந்து விடுபடலாம்.

ஏநஸாம் ஸ்தூல க்ஷ்மாணாம் சிகீர்ஷந்நபநோதநம் |
அவேத்ர்யுசம் ஐபேதப்தம் யத்கிஞ்சேதமிதீதி வா || 252

பெரிய பாபங்களையும், சிறு பாபங்களையும் போக்கிக்கொள்ள வேண்டுபவன், அவ தே என்னும் ரிக்கையும், ‘யத்கிஞ்சேதம்’ என்னும் ரிக்கையும், ‘இதி வா’ என்னும் ரிக்கையும் ஒரு வருடகாலம் தினமும் ஒரு முறை ஜபிக்க வேண்டும்.

ப்ரதிக்ருஹ்யா அப்ரதிக்ராஹ்யம் புக்த்வா சாஅந்நம் விகர்ஹிதம்
ஜபம்ஸ் தரத்ஸமந்தீயம் பூயதே மாநவஸ் த்ரயஹாத் | 253

வாங்கக்கூடாதவரிடம் தானம் வாங்கினாலும், தகாததை தானே சம்பாதித்தாலும், தகாத அன்னத்தை சாப்பிட்டாலும், ‘தரத்ஸமந்தீஎன்று தொடங்கும் ரிக்குகளை ஜபித்து மூன்று நாட்களில்பரிசுத்தனாக முடியும்.

ஸோமாரௌத்ரம் து பஹ்வேநா மாஸ மப்யஸ்ய அத்யதி ஸ்ரவந்த்யாமாசரந்ஸ்நாநமர்யம்ணாமிதி சத்ருசம் I-254
அதிக பாபங்களைச் செய்தவன் ‘சோமாருத்வா’ என்று தொடங்கும் ரிக்குகளையும், அர்யமணம்’ என்று தொடங்கும் ரிக்குகளையும் ஒரு மாத காலம் நதியில் நீராடி ஜபிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் பாபங்களிலிருந்து விடுபட்டு பரிசுத்தனாவான்.

அப்தா அர்தமிந்த்ரமித்யேத தேநஸ்வீஸப்தகம் ஐபேத் |
அப்ரஷஸ்தம் து க்ருத்வா அப்சு மாஸமாஸீத பைக்ஷகம் |-255

நிறைய பாபங்களைச் செய்த பாபி இந்த்ரம் மித்ரம்’ என்னும் ஏழு ரிக்குகளையும் ஆறு மாத காலம் ஐபிக்க வேண்டும். தண்ணீரில் மலஜலம் விட்டவன், ஒரு மாதம் பிச்சையெடுத்து
சாப்பிடுவதால் அப்பாபத்தினின்றும் நீங்குவான்.

மந்த்ரை: ஷாகலஹோ மீயைரப்தம் ஹுத்வா க்ருதம் த்விஜ: 1
சுகுர்வப்ய பஹந்த்யேநோ ஜப்த்வா வா ந ம இத்ர்யுசம் |-256

மஹாபாதகங்களைச் செய்த த்விஜன், சாகல ஹோம மந்திரங்களோடு ஒரு வருடகாலம் நெய் வார்த்து ஹோமம் செய்ய வேண்டும். அல்லது ‘நம இந்த்ரஷ்ச’ என்னும் ரிக்கை ஒரு
வருட காலம் ஜபிக்க வேண்டும். இதனால் பாபங்கள் நீங்கி பரிசுத்தனாவான்.

மஹாபாதக ஸம்யுக்தோ அனுகச்சேத் கா: ஸமாஹித: |
அப்யஸ்யா அப்தம் பாவமாநீர் பை ஹாரோ விசுத்யதி || 257

மஹாபாதகங்கள் அதிகம் செய்தவன் பிச்சையெடுத்து ஜீவனம் நடத்த வேண்டும். புலன்களை அடக்கி ஒரு வருடம் பசுக்களுடன இருக்க வேண்டும். அப்போது தினமும் பாவமான ரிக்குகளை ஜபித்தபடி இருக்க வேண்டும். இதனால் பாபங்கள் நீங்கி பரிசுத்தனாவான்.

அரண்யே வா த்ரிரப்யஸ்ய ப்ரயதோ வேதஸம்ஹிதாம்
முச்யதே பாதகை: ஸர்வை: பராகை: ஷோதிதஸ் த்ரிபி: [258

பராகக்ருச்ர விரதத்தை அனுஷ்டித்து, தூயவனான பிறகு. வனத்தில் வசித்தபடி வேதசம்ஹிதையை மூன்று முறைபாராயணம் செய்யவேண்டும். உள்ளும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும். இதனால் எல்லாப் பாபங்களும் போகும்.

த்ரயஹம் தூபவசேத் யுக்தஸ் த்ரிரஹ்நோ அப்யுபயந்ந : | முச்யதே பாதகை: ஸர்வைஸ் த்ரிர் ஜபித்வா அகமர்ஷணம் 259
மூன்று நாட்கள் ஐம்புலன்களை அடக்கி, மூன்று வேளையும் நீராடி, எதுவும் சாப்பிடாமல் உபவாசமிருந்து மூன்று வேளையும் ஜலத்தில் இருந்து அகமர்ஷண மந்திரங்களை மூன்று முறை ஜபிக்க வேண்டும். அப்படி இயலாதவர்கள் மூன்று முறை ஜபிக்க வேண்டும்
என்று சொல்லப்பட்டுள்ளது. சக்தியிருப்பவர்கள் அவரவர் சக்திக்குத் தக்கபடி பலமுறை ஜபிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபட முடியும்.

யதா அஷ்வமேத: க்ரதுராட் ஸர்வபாபா அபநோதந: |
ததா அகமர்ஷணம் சூக்தம் ஸர்வபாபா அபநோதகம் || 260

யாகங்களில் அஸ்வமேதம் எவ்வாறு உயர்ந்ததாக உள்ளதோ அவ்வாறு சகல பாபங்களையும் போக்கத்தக்க அகமர்ஷண சூக்தம் உயர்ந்ததாக உள்ளது .எனவே அகமாண சூக்தத்தை ஜபித்தால் அனைத்துப் பாபங்களும் நசிக்கும்.

ஹத்வா லோகாபீபாம்ஸ் த்ரீநஷ்நந்நபி யதஸ் தத: 1 ரிக்வேதம் தாரயந் விப்ரோ நைந ப்ராப்நோதி கிஞ்சந|| 261
ரிக் வேதத்தை அத்யயனம் செய்பவன், உலகங்களை அழித்தாலும், மகா பாவிகளின் உணவை சாப்பிட்டாலும் சிறிதளவும் பாபத்தை அடையான்.

ரிக்ஸம்ஹிதாம் த்ரிரப்யஸ்ய யஜுஷாம் வா ஸமாஹித: | ஸாம்நாம் வா ஸரஹஸ்யாநாம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே |-262

ரிக்வேத பாராயணமும், ய ர் வேத பாராயணமும், ஸாமவேத பாராயணமும் பாபங்களைப் போக்குபவை.இவற்றில் ஏதாவது ஒரு வேதத்தை மூன்று முறை பாராாயணம் செய்தவன் சகல பாபங்களிலிருந்தும் விடுதலை அடைவான்.

யதா மஹாஹ்ருதம் ப்ராப்ய க்ஷிப்தம் லோஷ்டம் விநஷ்யதி |
ததா துஷ்சரிதம் ஸர்வம் வேதே த்ரிவ்ருதி மஜ்ஜதி || 263

பெரிய மடுவில் விழுந்த மண்கட்டி கரைந்து போவதுபோன்று ரிக், யஜூர்,சாம வேத பாராயணங்களால் சகல பாபங்களும் கரைந்து போகும்.

ருசோ யஜும்ஸிசாஅந்யாநி ஸாமாநி விவிதாநி ச |
ஞேயஸ் ச வேதவித் ஏச தரிவருத் வேதோ யோ வேதைநம்-264

ரிக், ய ர்,சாம வேதங்களையும், இவற்றின் மந்திர பிரம்மாணங்களையும் சேர்த்து ‘திரிவிருத் வேதம்’ என்று கூறுவார்கள். இந்த திரிவிருத் வேதத்தை அறிந்தவனையே ‘வேதவித்’ என்று கூறுவார்கள்.

ஆத்யம் யத் த்ரயக்ஷரம் ப்ரஹ்ம த்ரயீ யஸ்மிந் ப்ரதிஷ்டிதா |
ஸகுஹ்யோஅந்யஸ் த்ரிவ்ருத் வேதோ யஸ்தம் வேத ஸ வேதவித்|| 265

வேதங்களுக்கு முதலில் இருக்கின்ற, அகார, உகார, மகாரங்கள் என்னும் மூன்று அட்சரங்கள் சேர்ந்த பிரணவம் சிரேஷ்டமானது;-பிரம்ம தத்துவத்தைத் தெரிவிப்பதும், மிகவும் ரகசியமானதுமான பிரணவத்தின் சொரூபத்தையும், பொருளையும் அறிந்தவன் ‘வேதவித்’ எனப்படுவான்.
(பதினோராம் அத்தியாயம் முற்றிற்று.)

——–

அத்தியாயம் – 12

சாதுர்வர்ணஸ்ய க்ருத்ஸ்நோ அயமுக்தோ தர்மஸ் த்வயா அநக |
கர்மணாம் பலநிர்வ்ருத்திம் ஷம்ஸ் நஸ் தத்வத: பராம் || 1

மகரிஷிகள் கூற்று: மேன்மையானவரான பிருகு முனிவரே,நான்கு வர்ணத்தவருடைய தர்மங்களையும், கலப்பினத்தாரின்தோற்றங்களைப் பற்றியும், தொழில்களைப் பற்றியும், கர்ம பலன்களின் பரிகாரங்களைப் பற்றியும் கூறினீர்கள். இனி ஜன்மாந்திரங்களின் வினைப்பயனைப் பற்றி எங்களுக்கு எடுத்துரைக்கவேண்டுகிறோம்.

ஸ தானுவாச தர்மாஆத்மா மஹர்ஷீந் மாநவோ ப்ருகு: |
அஸ்ய ஸர்வஸ்ய ஷ்ருணுத கர்மயோகஸ்ய நிர்ணயம் !|| 2

தர்மாத்வாவும் மநுவின் மகனுமான பிருகு மகரிஷி,முனிவர்களைப் பார்த்து “அனைத்து வினைகளுக்கும் ஏற்படும்பலன்களைப் பற்றி எடுத்துரைக்கிறேன், கேளுங்கள்,” என்றார்.

சுபாஅசுப பலம் கர்ம மநோவாக்தேஹஸம்பவம் |
கர்மஜா கதயோ ந்ருணா முத்தமா அதமமத்யமா: || 3

மனம், வாக்கு, உடலால் கர்மவினைகள் ஏற்படுகின்றன. இவை நல்வினை தீவினை என்று இருவகையாக ஏற்படும். இதனைக் கொண்டு நல்வினைக்கு நல்ல பலனும், தீ வினைக்கு தீய பலனும் அடைவார்கள். இந்த பலன்களாலேயே உத்தமப் பிறவிகளும்,மத்திமப் பிறவிகளும், கடைநிலைப் பிறவிகளும் ஏற்படும்.

தஸ்யேஹ த்ரிவிதஸ்யா அபி த்ரயதிஷ்டாநஸ்ய தேஹிந: |
தஷலக்ஷணயுக்தஸ்ய மநோ வித்யாத் ப்ரவர்தகம் | 4

ஒருவன் செய்யும் நற்செயல்களாலும், தீச்செயல்களாலும், இடைப்பட்ட செயல்களாலும் ஏற்படும் பத்து வகையான வினைகளுக்கு மனமே மூலகாரணமாயிருக்கிறது.

பரத்ரவ்யேஷ்வபித்யாநம் மநஸா அநிஷ்ட சிந்தநம்|
விததா அபிநிவேஷஷ்ச த்ரிவிதம் கர்ம மானஸம்||-5-

பிறர் பொருளின் மீது ஆசைப்படுதல் போன்ற நினைப்புகளால் மனம் மூன்று வகையான கர்மாக்கள் செய்ய காரணமாகிறது.

பாருஷ்யமந்ருதம் சைவ பைசுந்யம் சாஅபி ஸர்வ : |
அஸம் பத்தப்ரலாபஷ்ச வாக்மயம் ஸ்யாச் சதுர்விதம் || 6

கடுமையாகப் பேசுதல், பொய்பேசுதல், பழி சுமத்துதல், ஊர்வம்பு பேசுதல் என்னும் நான்கும் வாக்கால் ஏற்படும் பாபங்கள்.

அதத்தாநாமுபா ஆதாநம் ஹிம்ஸா சைவா அவிதாநத:
பரதாரோபஸேவா ச ஷாரீரம் த்ரிவிதம் ஸ்ம்ருதம்||| 7

பிறர் சொத்தைப் பறித்து அனுபவித்தல், ஹிம்சித்தல், பிறர் மனைவியை அடைதல் என்னும் மூன்றும் உடலால் ஏற்படும் பாபங்கள்.

மாநஸம் மநஸைவா அயமுI புங்தே பாஅ பம் |
வாசா வாசா க்ருதம் கர்மகாயேநைவ ச காயிகம்|| 8

மனத்தால் செய்த பாபங்களின் பலனையும், புண்ணியங்களின் பலனையும் மனத்தாலேயே அனுபவித்தாக வேண்டும்.-வாக்கால் செய்த பாபங்களின் பலனையும், புண்ணியங்களின்
பலனையும் வாக்காலேயே அனுபவித்தாக வேண்டும்.

ஷரீரஜை: கர்மதோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர: 1
வாசிகை: பக்ஷி ம்ருகதாம் மாநஸைரந்த்யஜாதிதாம் ||-
9
மனிதன் உடலால் செய்த பாபங்களால் அடுத்து, மரம், செடி கொடிகளாக பிறவியெடுப்பான்.
வாக்கால் செய்த பாபங்களால் மிருகம், பறவையாக பிறவியெடுப்பான்.
மனத்தால் செய்த பாபங்களால் சண்டாள ஜாதி மற்றும் மிகத் தாழ்ந்த ஜாதிகளில் பிறப்பான்.

வாக்தண்டோ அத மநோதண்ட: காயதண்டஸ் ததைவ ச
யஸ்யைதே நிஹிதா புத்தௌ த்ரிதண்டீதி ஸ உச்யதே|| 10

திரிதண்டத்தைக் கையில் ஏந்தியவன் சந்யாசி. வாக்கு மனம் உடல் என்னும் மூன்றையும் கட்டுப்படுத்தி ஸ்திரமாக தன்வசம் வைத்திருப்பவனே திரிதண்டி, இவனே உண்மையான சந்யாசி.

த்ரிதண்டமேதந் நிக்ஷிப்ய ஸர்வபூதேஷு மாநவ: | காமக்ரோதௌ து ஸம்யம்ய தத: ஸித்திம் நியச்சதி 11
மனம் வாக்கு உடலை அடக்கியவனாக சகல உயிர்களிடத்தும் கருணை செலுத்தி, காமம் குரோதம் முதலான எந்த தீய பண்பும் நெருங்காமல் தன்னைக் காத்து கொள்பவனே சித்தியை அடைவான்.

யோ அஸ்யா ஆத்மந: காரயிதா தம் க்ஷேத்ரக்ஞம் ப்ரசக்ஷதே ய: கரோதி து கர்மாணி ஸ பூதாத்மோச்யதே பூதை:|| 12 ஆத்மாவுக்கு உபகாரமாக இருக்கும் உடலை நல்லதும் கெட்டதுமான அனைத்து காரியங்களையும் ஈடுபடச் செய்பவனை க்ஷேத்ரக்ஞன் என்பார்கள்.-எந்த உடலானது சகல காரியங்களையும் செய்து கொண்டிருக்
கிறதோ, அந்த உடல் ஐம்பூத தத்துவங்களால் ஆனது என்பதால் பூதாத்மா என்பார்கள்.

ஜீவஸம்ஞோஅந்தராத்மா அந்ய: ஸஹஜ: ஸர்வ தேஹிநாம் |
யேந வேதயதே ஸர்வம் சுகம் துக்கம் ச ஜன்ம சு || 13

க்ஷேத்ரக்ஞனுக்கும் பூதாத்மாவுக்கும் வேறான மஹத் என்று ஒரு தத்துவம் உள்ளது. இந்திரியங்களையும் அகங்காரத்தையும் உருவமாகக் கொண்ட மஹத் தத்துவத்தை் கொண்டே க்ஷேத்ரக்ஞன் சுகதுக்கங்களை அனுபவிக்கிறான்.

தாவுபௌ பூதஸம்ப்ருக்தெள மஹாந் க்ஷேத்ரக்ஞ ஏவ ச
உச்சாவசேஷு பூதேஷு ஸ்திதம் தம் வ்யாப்ய திஷ்டத: || 14

தாழ்ந்தமஹத்தும் க்ஷேத்ரக்ஞனும் பஞ்சபூதங்களுடன் கூடி உயர்ந்த சகல உயிர்களிடத்தும் உள்ளுறையும் பரமாத்வாவை அண்டியிருக்கும்.

அசங்க்யா மூர்தயஸ் தஸ்ய நிஷ்பதந்தி ஷரீரத: |
உச்சாவசாநி பூதாநி ஸததம் சேஷ்டயந்தி யா: I| 15

பரமாத்வா விலிருந்து கணக்கற்ற க்ஷேத்ரக்ஞர்கள், அக்னியிலிருந்து தெறிக்கும் தீப்பொறிகளைப் போல வெளிப்பட்டு உயர்ந்ததும் தாழ்ந்ததுமான தேவர் மனிதர் மிருகம் போன்ற ரூபங்களோடு வெளிப்பட்டு பூத தத்துவங்களால் இயங்குகின்றனர்.

பஞ்சப்ய ஏவ மாத்ராப்ய: ப்ரேத்ய துஷ்க்ருதிநாம் ந்ருநாம் |
ஷரீரம் யாதநார்தீய மந்யதுத்பத்யதே த்ருவம்|| 16

மனிதர்கள் பாபம் புரிந்தவர்களாக, நரகங்களைஅனுபவிக்கதக்க, எத்தகைய துன்பங்களையும் பொறுக்க கூடியதான யாதனா சரீரத்தை அடைகின்றனர்.

தேநா அனுபூய தா யாமீ: ஷரீரேணேஹ யாதநா: | தாஸ்வேவ பூதமாத்ராசு ப்ரலீயந்தே விபாகஷ:–17
பாபாத்மாக்களான ஜீவர்கள் இந்த யாதனா சரீரத்தைப் பெற்றுயமனால் ஆணையிடப்பட்ட சகல துன்பங்களையும் (தண்டனைகளையும்) அனுபவிப்பர். அப்போது முன்பிருந்த பஞ்ச பூதங்களும் கலைந்து வெளியிலுள்ள பஞ்சபூதங்களுடன் லயிக்கின்றன.

ஸோஅனுபூயா அசுகோதர்காந் தோஷாந் விஷயஸங்கஜாந்
வ்யபேத கல்மஷோ அப்யேதி தாவேவோபௌ மஹௌ ஐஸௌ 18

மனிதன்தான் செய்த தீய வினைகளின் பலனையெல்லாம், நரகத்தில் அனுபவித்த பிறகு, பாபம் நீங்கியவனாக மீண்டும் மஹத்தின் சேர்க்கையையும், பரமாத்ம சேர்க்கையையும் அடை கிறான்.

தௌ தர்மம் பஷ்யதஸ் தஸ்ய பாபம் சாஅதந்த்ரிதௌ ஸஹ 11 யாப்யாம் ப்ராப்நோதி ஸம்ப்ருக்க: ப்ரேத்யேஹ ச சுகா அசுகம் || 19
ஜீவன் தர்மத்தோடும் அதர்மத்தோடும் கூடியவனாக எந்த சுக துக்கங்களை அனுபவிக்கிறானோ அடைகிறானோ அதை ‘மஹத்’தும்பரமாத்மாவும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

யத்யாசரதி தர்மம்ஸ ப்ராயஷோ அதர்மமல்பஷ: 1 தைரேவ சாஆவ்ருதோ பூதை: ஸ்வர்கே சுகமுபாஅஷ்நுதே 20
ஜீவன் தர்மத்தை அதிகமாகவும், அதர்மத்தை கொஞ்சமாகவும் செய்திருந்தால், பஞ்ச பூதங்களோடு கூடியவனாக ஸ்வர்க லோகத்தையடைந்து சுகமாக இருக்கின்றான்.

யதி து ப்ராயஷோ அதர்மம் ஸேவதே தர்மமல்ப : |
தைர் பரித்யக்தோ யாமீ: ப்ராப்நோதி பூதை: ஸ யாதநா: 21 ||

ஜீவன் அதர்மத்தை அதிகமாகவும், தர்மத்தைக் குறைவாகவும் செய்திருந்தால் ஐம்பூதங்களும் நீங்கிய கடினமான நரகத்துன்பங்களைத் தாங்கக் கூடிய யாதனா சரீரத்தோடு யமவாதனைகளை அனுபவிப்பான்.

யாமீஸ் தா யாதநா: ப்ராப்ய ஸ ஜீவோ வீதகல்மஷ: ||
தாந்யேவ பஞ்சபூதாநி பூநரப்யேதி பாகவு: ||| 22

அந்த ஜீவன் நரகவேதனைகளை அனுபவித்த பிறகு பாபங்கள் நீங்கப் பெற்று, ஐம்பூதச் சேர்க்கையை மீண்டும் அடைகிறான்.

ஏதா த்ருஷ்ட்வா அஸ்ய ஜீவஸ்ய கதி: ஸ்வேநைவ சேதஸா |
தர்மதோ அதர்மதஷ் சைவ தர்மே தத்யாத் ஸதா மந: || 23

இவ்வாறாக ஜீவனுக்கு, செய்யும் பாப்ப்புண்ணியங்களுக்கேற்ப சொர்க்கமும் நரகமும் கிட்டும் என்பதையும் சொர்க்க போகங்கள் அனுபவிக்கவும், நக வேதனைகளை அனுபவிக்கவும் அதற்குத்தக்க சரீரம் கிடைக்கும் என்பதையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்-அறிந்து கொண்டு மனத்தை எப்போதும் தர்மகாரியங்களைச் செய்வதிலேயே ஈடுபடுத்த வேண்டும்.

ஸத்வம் ரஜஸ் தமஷ்சைவ த்ரீந்வித்யாதாத்மநோ குணாந் |
யைர் வ்யாப்யேமாந் ஸ்திதோ பாவாந் மஹா ஸர்வாநசேஷத: 24

இனி சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களின் தன்மைகளைக் கூறுகிறேன். இக்குணங்களுடன் கூடிய மஹத் தத்துவம் அனைத்திலும் வியாபித்துள்ளது.

யோ யதைஷாம் குணோ தேஹே ஸாகல்யேநா அதிரிச்யதே 1
ஸ ததா தத்குணப்ராயம் தம் கரோதி ஷரீரிணம் || 25

இந்த மூன்று குணங்களும் எல்லோருக்கும் இருந்தாலும்,எவனிடத்தில் எந்த குணம் முழுமையாக உள்ளதோ, அவனை அந்தகுணம் கொண்டவனாக அறியவேண்டும்.

ஸத்வம் ஞாநம் தமோ அஞ்ஞானம் ராகத்வேஷௌ ரஜ: ஸ்ம்ருதம் |
ஏதத் வ்யாப்திமதேதேஷாம் ஸர்வ பூதா ஆஸ்ரிதம் வபு: || 26

ஸத்வ குணம் என்பது ஞானம். தமோ குணம் என்பதுஅஞ்ஞானம். விருப்பும் வெறுப்பும் ரஜோகுணம். இம்மூன்றுகுணங்களும் சகல உயிர்களிடத்தும் வியாபித்துள்ளன.

தத்ரயத் ப்ரீதிஸம்யுக்தம் கிஞ்சிதாத்மநி லக்ஷயேத் ப்ரஷாந்தமிவ சுத்தா ஆபம் ஸத்வம் ததுப தாரயேத் |-27
ஆத்மாவுடன் கூடி நிம்மதியாகவும், ப்ரீதியோடும் பிரகாசமான உருவத்தோடும் இருக்கும் குணத்தை சத்வகுணம் என்றறியவேண்டும்.

யத் து துக்கஸமாயுக் தமப்ரிதிகரமாத்மந: |
தத் ரஜ: ப்ரதீபம் வித்யாத் ஸததம் ஹாரி தேஹிநாம் || 28

அந்த ஆத்மாவுடன் துக்கத்தோடு கூடியதாகவும், பிரீதியைக்கொடுக்காததாகவும், எப்போதும் விஷயங்களிலேயே ஈடுபடுவதாகவும் உள்ள குணத்தை ரஜோ குணம் என்றறிய வேண்டும்.

யத்து ஸ்யாந் மோஹஸம் யுக்த மவ்யக்தம் விஷயாத்மகம்| அப்ரதர்க்யமவிஞேயம் தமஸ் ததுப தாரயேத்| | 29
மோகத்தோடு கூடியதாக, நன்றும் தீதும் அறியும் ஞான மற்றதாக, புலன்களால் அறியப்படாததாகவும் உள்ள குணத்தைதமோ குணம் என்றறிய வேண்டும்.

த்ரயாணாமபி சைதேஷாம் குணாநாம் ய:பலோ தய: |
அக்ந்யோமத்யோ ஐகந்யஷ் ச தம் ப்ரவயாம்யசேஷத: 30

இந்த மூன்று குணங்களிலும் உயர்ந்த பலன்களையும், மத்திம பலன்களையும், கீழான பலன்களையும் அளிப்பவை பற்றிய விஷயங்களை முழுமையாகக் கூறுகிறேன், கேளுங்கள்.

வேதா அப்யாஸஸ் தபோ ஞானம் ஷௌசமிந்த்ரிய நிக்ரஹ:
தர்மக்ரியா ஆத்மசிந்தா ச ஸாத்விகம் குணலக்ஷணம்|| 31

வேதமோதுதல், தவம் செய்தல், ஆத்மஞானத்தோடிருத்தல், உள்ளும்புறமும் தூய்மையோடிருத்தல், ஐம்புலன்களையும் அடக்கி யிருத்தல், தர்மமான செயல்களைச் செய்தல், ஆத்மாவைப் பற்றி சிந்தித்தல் என்பவை சத்துவ குணத்தால் ஏற்படுபவை.

ஆரம்ப ருசிதா அதைர்யமஸத்கார்ய பரிக்ரஹ: 1
விஷயோபஸேவா சாஅஜஸ்ரம் ராஜஸம் குணலக்ஷணம்–32

பலனை எதிர்பார்த்து காரியங்கள் செய்தல், அதைரியம், கூடாத செயலைச் செய்தல், விஷய சுகங்களில் நாட்டத்தோடிருத்தல் என்பவை ரஜோ குணத்தால் ஏற்படுபவை..

லோப: ஸ்வப்நோ அத்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பிந்ந வ்ருத்திதா|
யாசிஷ்ணுதா ப்ரமாதஷ் ச தாமஸம் குணலக்ஷணம் || 33

பேராசை, அதிக தூக்கம், கோழைத்தனம், கோள்சொல்லல், நாஸ்திக புத்தி,ஒழுக்கமின்மை,பிச்சையெடுத்தல், போதை யோடிருத்தல் என்பவை தமோ குணத்தால் ஏற்படுபவை.

யத் கர்ம க்ருத்வா குர்வம்ஷ் ச கரிஷ்யம்ஷ சைவ லஜ்ஜதி | தஜ்ஞேயம் விதுஷா ஸர்வம் தாமஸம் குணலக்ஷணம் || 34
ஒரு காரியத்தை செய்யப்போகும் போதும், செய்யும் போதும்,செய்தபிறகும், அந்தக் காரியத்துக்காக உள்ளம் வெட்கமுறுமானால்அது தமோ குணத்தின் லட்சணம் என்றறிய வேண்டும்.

யேநா அஸ்மிந் கர்மணா லோகே க்யாதிமிச்சதி புஷ்கலாம் ||
ந ச ஷோசத்ய ஸம்பத்தெள தத் விக்நேயம் து ராஜஸம் || 35

இவ்வுலகில் மிக்க புகழை அடைவதை மட்டுமேகுறிக்கோளாகக் கொண்டு, பரலோக சௌக்கியத்தைத் தரும் புண்ணியங்களைப்பற்றிக் கவலைப் படாமல் காரியங்களைச் செய்தல் ரஜோ குணத்தின் லட்சணம் என்றறிய வேண்டும்.

யத் ஸர்வேணேச்சதி ஞாதும் யந் ந லஜ்ஜதி சாஆசரந் | யேந் துஷ்யதி சாஆத்மா அஸ்ய தத் ஸத்வகுண லக்ஷணம்|| 36
எந்தக் காரியத்தைச் செய்யப் போகும் போதும், செய்யும் போதும், செய்த பிறகும் உள்ளம் வெட்கப்படாதோ,எந்தகாரியத்தைச் செய்வதனால் ஆனந்தம் ஏற்படுமோ, அத்தகைய காரியங்களைச் செய்தல் சத்வ குணத்தின் லட்சணம் என்றறிய வேண்டும்.

தமஸோ லக்ஷணம் காமோ ரஜஸஸ் த்வர்தம் உச்யதே | ஸத்வஸ்ய லக்ஷணம் தர்ம: ஷ்ரேஷ்ட்யமேஷாம் யதோத்தரம் || 37
காமமே பிரதானமாக இருத்தல் தமோ குணத்தின் லட்சணம். பொருளாசையே பிரதானமாக இருத்தல் ரஜோ குணத்தின் லட்சணம். தர்மமே பிரதானமாக இருத்தல் சத்வ குணத்தின்
லட்சணம். தமோ குணத்தைவிட ரஜோ குணம் சிறந்தது. ரஜோ குணத்தைவிட சத்வ குணம் சிறந்தது.

யேந யாம்ஸ்து குணேநைஷாம் ஸம்ஸாராந் ப்ரதிபத்யதே 1
தாந் ஸமாஸேந வஷ்யாமி ஸர்வஸ்யா அஸ்ய யதாக்ரமம் || 38

இந்த குணங்களால் ஜீவன் எத்தகைய நிலைகளை அடைகிறான் என்பவற்றைமுழுமையாக வரிசைப்படி கூறுகிறேன், கேளுங்கள்.

தேவத்வம் ஸாத்விகா யாந்தி மனுஷ்யத்வம் ச ராஜஸா: |
திர்யத்வம் தாமஸா நித்யமித்யேஷா த்ரிவிதா கதி: 39

சத்வ குணத்திலேயே நிலைத்திருப்பவன் தேவப்பிறவியை அடைவான்.
ரஜோ குணத்திலேயே நிலைத்திருப்பவன் மனிதப் பிறவியை அடைவான்.
தமோ குணத்திலேயே நிலைத்திருப்பவன் பறவை மிருகம் முதலான கீழ்ப்பிறவிகளை அடைவான்.

த்ரிவிதா த்ரிவிதைஷா து விக்ஞேயா கௌணிகீ கதி: ||
அதமா மத்யமா அக்ந்யா ச கர்மவித்யா விசேஷத: |40

முக்குணங்களால் கிடைக்கும் மூன்று வகையான பிறவிகளும், தேசம் காலம் செயல் இவற்றின் பேதங்களாலும், ஞானபேதத்தாலும், உயர்ந்த தாழ்ந்த மத்திம பேதங்களாலும் மீண்டும் மூவகையாக உள்ளன.

ஸ்தாவரா: க்ருமிகீடாஷ் ச மத்ஸ்யா: ஸர்பா: ஸகச்சபா: |
பஷவஷ் ச ம்ருகாஷ்சைவ ஜகந்யா தாமஸ் கதி: I41-

செடிகள், மரங்கள் முதலான அசையாத தாவரப் பிறவிகள்தமோ குணத்தால் ஏற்பட்ட கடைநிலைப் பிறவிகள். அவ்வாறேபுழு, பூச்சி, மீன், பாம்பு, ஆமை. பசுக்கள், மிருகங்கள் என்னும்இப்பிறவிகளும் தமோ குணத்தால் ஏற்பட்ட கடைநிலைப்பிறவிகளேயாகும்.

ஹஸ்திநஷ் ச துரங்காஷ் ச சூத்ரா ம்லேச்சாஷ் ச கர்ஹிதா: 1
ஸிம்ஹா வ்யாக்ரா வராஹாஷ் ச மத்யமா தாமஸீகதி: ||
42யானை, குதிரை, சிங்கம், புலி,பன்றி என்னும் இப்பிறவிகள்தமோ குணத்தால் ஏற்பட்ட மத்திமநிலைப் பிறவிகள்.
அவ்வாறே சூத்திரர்களும் மிலேச்சர்களும் கூட தமோகுணத்தால் ஏற்பட்ட மத்திம நிலைப் பிறவிகளேயாவர்.

சாரணாஷ்ச சுபர்ணாஷ்ச பூருஷாஷ்சைவ தாம்பிகா:
ரக்ஷாம்ஸி ச பிஷாசாஷ் தாமஸீ சூத்தமா கதி: /
43சாரணர்கள், பறவைகள், டாம்பீகமான மனிதர்கள்,ராட்சதர்கள், பிசாசர்கள் என்னும் பிறவிகள் தமோ குணத்தால்ஏற்பட்ட உத்தம நிலைப்பிறவிகள்.

ஐல்லா மல்லா நடாஷ்சைவ புருஷா: ஷஸ்த்ரவ்ருத்தய:|
த்யூத பாந ப்ரஸக்தாஷ் ச ஐகந்யா ராஜஸீ கதி: || 44

உலக்கைகளைக் கொண்டு யுத்தம் செய்பவர்கள், கைகளால் மல்யுத்தம் செய்பவர்கள், நாட்டியமாடுபவர்கள், ஆயுதங்களைச்செய்பவர்கள், சூதாடிகள், குடிகாரர்கள் – இவர்கள் ரஜோகுணத்தின் கடைநிலைப் பிறவிகள்.

ராஜாந: க்ஷத்ரியாஷ்சை ராக்ஞாம்சைவ புரோஹிதா: | வாதயுத்த ப்ரதாநாஷ் ச மத்யமா ராஜஸீ கதி:|| 45

அரசர்கள், ஷத்ரிய ஜாதியில் தோன்றியவர்கள், அரச புரோகிதர்கள், வாத பிரதிவாதங்கள் நடத்துவதில் சிறந்த திறமை பெற்ற சாஸ்திர விற்பன்னர்கள் – இவர்கள் ரஜோ குணத்தின்
இடைநிலைப் பிறவிகள்.

கந்தர்வா குஹ்யகா யக்ஷா விபுதா அனுசராஷ்ச யே
ததைவா அப்ஸரஸ்: ஸர்வா ராஜஸ் சூத்தமா கதி: |-46

கந்தர்வர்கள், குஹ்யர்கள், யட்சர்கள், விபுதர்கள், அப்சரஸ்கள் – இவர்கள் ரஜோ குணத்தின் உயர்நிலைப் பிறவிகள்.

தாபஸா யதயோ விப்ராயே ச வைமாநிகா கணா: |
நக்ஷத்ராணி ச தைத்யாஷ் ச ப்ரதமா ஸாத்விகீ கதி: 47

தபஸ்விகள், சன்யாசிகள், வேதவிற்பன்னர்கள், புஷ்பக விமானங்களில் சஞ்சரிக்கும் வித்யாதரர்கள், தைத்தியர்கள், நட்சத்திரங்கள் – இவர்கள் சத்வ குணத்தின் கடைநிலைப் பிறவிகள்.

யஜ்வாந ரிஷயோ தேவா வேதா ஜ்யோதீம்ஷி வத்ஸரா:
பிதரஷ் சைவ ஸாத்யாஷ் ச த்விதீயாஸாத்விகீ கதி: || 48

யாகம் செய்பவர்கள் (யாகம் செய்வதிலேயே மனத்தைச் செலுத்துபவர்கள்), ரிஷிகள், தேவர்கள், வேதரூபமான தெய்வங்கள், கிரக தெய்வங்கள், பித்ரு தேவர்கள், சாத்யர்கள் – இவர்கள் சத்வ குணத்தின் இடைநிலைப் பிறவிகள்.

ப்ரஹ்மா விஸ்வஸ்ருஜோ தர்மோ மஹாநவ்யக்தமேவ ச|
உத்தமாம் ஸாத்விகீமேதாம் கதிமாஹுர் மநீஷிண: || 49

பிரம்மதேவர், பிரஜாபதிகள், தர்மதேவர், மஹத், அவ்யக்தம் – இவர்கள் சத்வ குணத்தின் உத்தமப் பிறவிகள்.

ஏஷ ஸர்வ: ஸமுத்திஷ்டஸ் த்ரிப்ரகாரஸ்ய கர்மண: 1 த்ரிவிதஸ் த்ரிவித: க்ருத்ஸ் : ஸம்ஸார: ஸார்வபௌதிக: [-50
முக்குணங்களால், மனம், வாக்கு, உடலால் ஏற்படும் பாவ புண்ணிய பலன்களால், உயர்நிலை. இடைநிலை கடைநிலைப் பிறவிகள் ஏற்படுவதைப் பற்றிக் கூறினேன். இதில் சில பிறவிகள்மட்டும் கூறப்பட்டன. மற்றவற்றை இவ்வாறு ஊகித்துக் கொள்ள வேண்டும்.

இந்த்ரியாணாம் ப்ரஸங்கேந தர்மஸ்யா அஸேவநேந ச |
பாபாந் ஸம்யாந்தி ஸம்ஸாராநவித்வாம்ஸோ நராதமா: || 51

ஐம்புலன்களையும் அடக்காது அதன் வழியில் போய் விஷயசுகங்களில் நாட்டம் கொண்டு செயல்படுவதாலும், தர்மத்தின்வழியில் நடக்காததாலும், செய்த பாவங்களுக்குரிய பிராயசித்தங்களைச் செய்து கொள்ளாமையாலும், அறிவற்ற மூட மனிதர்கள் தாழ்ந்த நிலைகளை அடைவார்கள்.

யாம்யாம் யோநிம் து ஜீவோ அயம் யேநயேநேஹ கர்மணா க்ரமஷோ யாதி லோகே அஸ்மிம்ஸ் தத்தத் ஸர்வம் நிபோதத|| 52
ஜீவன் எந்த எந்த கர்மவினைகளைச் செய்து எந்தெந்தஉலகத்தை அடைகிறான், எந்தெந்த பிறவியை அடைகிறான்என்பதை முழுவதும் கூறுகிறேன், கேளுங்கள்.

பஹுந் வர்கணாந் கோராந் நரகாந் ப்ராப்யதத்க்ஷயாத் ஸம்ஸாராந் ப்ரதிபத்யந்தே மஹாபாதகிநஸ் த்விமாந் || 53
மிகப்பெரிய பாவங்களைச் செய்தவர்கள், பல்லாயிரம்வருடங்கள் பயங்கர நரகங்களை அனுவிப்பார்கள். பின்னர்மீதியிருக்கும் பாபத்தை அனுபவிக்க எத்தகைய பிறவிகளைஎடுப்பார்கள் என்பதைக் கூறுகிறேன்.

ஷ்வ கரகரோஷ்ட்ராணாம் கோ அஜாஅவிம்ருக பக்ஷிணாம்
சண்டாளபூக்கஸாநாம் ச ப்ரஹ்ம்ஹா யோநிம்ருச்சதி || 54

பிரம்மஹத்தி செய்தவன் நரக வேதனைகளை அனுபவித்த பிறகு,நாய், பன்றி, கழுதை, ஒட்டகம் போன்ற மிருகங்களாகவும், பறவைகளாகவும் பிறப்பெடுப்பார்கள். மனிதப் பிறவிகளில் சண்டாளர்கள் புக்கஸர்கள் முதலானதாழ்ந்த பிறவிகளை எடுப்பார்கள்.

க்ருமி கீட பதங்காநாம் ச திரஷ்சம் சாஅம்பு சாரிணாம் |
ஹிம்ஸ்ராணாம் ச ஸத்வாநாம் சுராபோ ப்ராஹ்மணோ வ்ரஜேத் | 55

கள்ளுண்டவனான வேதம் படித்த பிராம்மணன், புழு பூச்சிகள், அணில்கள், மலமுண்ணும் ஜந்துக்கள், புலி முதலான கொடிய மிருகங்கள் முதலான பிறவிகளை அடைவான்.

லூதா அஹிஸரடாநாம் ச திரஷ்சாம் சாஅம்புசாரிணாம் |
ஹிம்ஸ்ராணாம் ச பிஷாசாநாம் ஸ்தேநோ விப்ர: ஸஹஸ்ரஷ: -56

தங்கத்தைத் திருடிய வேதம் படித்த பிராம்ணண், சிலந்தி, பாம்பு, ஓணான், நீரில் வாழும் உயிரினங்கள், கொடிய மிருகங்கள், பிசாசர்கள் முதலான பிறவிகளை அடைவான்.

த்ருணகுல்மலதாநாம் ச க்ரவ்யாதாம் தம்ட்ரிணாமபி |
க்ரூர கர்மக்ருதாம் சைவ ஷதஷோ குருதல்பக: || 57

குரு மனைவியைப் புணர்ந்தவன்,புல், புதர், கொடி, கழுகு, சிங்கம், புலி முதலான பிறவிகளை பலமுறை அடைவான்.

ஹிம்ஸ்ரா பவந்தி க்ரவ்யாதா: க்ருமயோ அபக்ஷ்ய பக்ஷிண: |
பரஸ்பரா ஆதிந: ஸ்தேநா: ப்ரேதா அந்த்யஸ்த்ரீ நிஷேவிண: 58

பிராணிகளைக் கொல்வதையே தங்கள் சுபாவமாகக் கொண்டவர்கள் மாமிசபட்சிகளான பூனை முதலான பிறவிகளை யெடுப் பார்கள். தகாததை சாப்பிடுபவர்கள் புழுக்களாய் பிறப்பார்கள். திருடர்கள், தம் இனத்தையே உண்ணும் பிராணிகளாகப் பிறப்பார்கள். சண்டாளப் பெண்ணை புணர்ந்தவர்கள் பிரேத சரீரத்தோடு அலைவார்கள்.

ஸம்யோகம் பத்தைர் கத்வா பரஸ்யைவ சயோஷிதம் | அபஹ்ருத்ய ச விப்ரஸ்வம் பவதி ப்ரஹ்மராக்ஷஸ: || 59
பதிதர்களுடன் கூடியிருந்தவனும், பிறர் மனைவியைப் புணர்ந்தவனும், விப்ரனின் பொருளைத் திருடியவனும் பிரம்ம ராட்சஸனானாவான்.

மணிமுக்தா ப்ரவாலாநி ஹ்ருத்வா லோபேந மாநவ: 1 விவிதாநி ச ரத்நாநி ஜாயதே ஹேமகர்த்ருஷு|-60
ரத்தினங்கள், முத்துக்கள், பவழங்கள், பல வகையான உயர்ந்த ரத்தினக்கற்கள் முதலானவற்றைத் திருடியவன் பொற்கொல்லனாகப் பிறப்பான்.

தான்யம் ஹ்ருத்வா பவத்யாகு: காம்ஸ்யம் ஹம்ஸோ ஜலம்ப்லவ: | மது தம் : பய: காகோ ரஸம் ஷ்வா நகுலோ க்ருதம் |-61 தானியங்களைத் திருடியவன் எலியாகப் பிறப்பான். வெண்கலத்தைத் திருடியவன் அன்னமாகப் பிறப்பான். தண்ணீர் திருடியவன் தவளையாகப் பிறப்பான். பால் திருடியவன் காகமாகப் பிறப்பான். பொருட்களைத் தேன் திருடியவன் ஈயாகப் பிறப்பான். ரசப் திருடியவன் நாயாகப் பிறப்பான்.

மாம்ஸம் க்ருத்ரோ வபாம் மத்குஸ் தைலம் தைலபக: கக: | சீரீவாகஸ்து லவணம் பலாகா ஷகுநிர் ததி ய-62

மாமிசத்தைத் திருடியவன் கழுகாகப் பிறப்பான்.-வபையைத் திருடியவன் நீர்காக்கையாக பிறப்பான்.(வபை என்பது குதிரை முதலான மிருகங்களின் வயிற்றில் ஜவ்வு
போன்றுள்ள ஒரு பகுதி. இது குடலைச் சுற்றி மெல்லிய தோல்போல இருக்கும். அஸ்வமேதம் முதலான யாகங்களில் குதிரையைப்பலிகொடுத்த பிறகு, இந்த வபையை யாகம் செய்தவர் உண்பது பழக்கத்தில் இருந்தது.)எண்ணெய் திருடியவன் வெளவாலாகப் பிறப்பான். உப்பைத் திருடியவன் சுவர்க்கோழியாகப் பிறப்பான். தயிரைத் திருடியவன்
ராஜாளியாகப் பிறப்பான்.

கௌஷேயம் தித்திரிர் ஹ்ருத்வா க்ஷௌமம் ஹ்ரத்வா து த துர: 1
கார்பாஸ தாந்தவம் க்ரௌஞ்சோ கோதா காம்காக்குதோ குடம் || 63

பட்டு வஸ்திரங்களைத் திருடியவன் தித்திரிப் பறவையாகப்பிறப்பான்.
தண்ணீர் திருடியவன் தவளையாகப் பிறப்பான்
பசுவைத் திருடியவன் உடும்பாகப் பிறப்பான்.
வெல்லத்தைத் திருடியவன் வாக்குதப் பறவையாகப் பிறப்பான்.

சுச்சுந்தரி: சுபாந் கந்தாந் பத்ரஷாகம்து பர்ஹிண: 11
ஷ்வாவித் க்ருதாஅந்நம் விவிதமக்ருதாந்நம் து ஷல்யக: || 64

வாசனை திரவியங்களைத் திருடியவன் மூஞ்சூறாகப் பிறப்பான்.
கீரை, காய்கறிகளைத் திருடியவன் மயிலாகப் பிறப்பான்.
சமைத்த அன்னத்தைத் திருடித் தின்றவன் முள்ளம் பன்றியாகப் பிறப்பான்.
சமைக்காத அரிசி பருப்பு முதலானவைகளைத் திருடியவன் சல்ய மிருகமாகப் பிறப்பான்.

பகோ பவதி ஹ்ருத்வா அக்நிம் க்ருஹகாரீ ஹ்யுபஸ்கரம் |
ரத்நாநி ஹ்ருத்வா வாஸாம்ஸி ஜாயதே ஜீவஜீவக: || 65

நெருப்பைத் திருடியவன் நாரையாகப் பிறப்பான்.-முறம், உரல் முதலான வீட்டுக்குத் தேவையான பொருட்களைத்திருடியவன் குளவியாகப் பிறப்பான். சிவப்பு நிறமுள்ள துணிகளைத்திருடியவன் சகோரப் பறவையாகப் பிறப்பான்.

வ்ருகோ ம்ருகேபம் வ்யாக்ரோ அஷ்வம் பலமூலம் து மர்கட: |
ஸ்த்ரீம்ருக்ஷ: ஸ்தோககோ வாரி யாநாந்யுஷ்ட்ர: பசூநஜ: II-66

மானைத் திருடியவன் ஓநாயாகப் பிறப்பான்.
குதிரையைத் திருடியவன் புலியாகப் பிறப்பான்.
பழங்களையும் மூலிகைகளையும் திருடியவன் குரங்காகப் பிறப்பான்.
பெண்ணைத் திருடியவன் கரடியாகப் பிறப்பான்.
தண்ணீரைத் திருடியவன் சாதகப் பறவையாகப் பிறப்பான்.
மாட்டுவண்டி போன்ற வண்டிகளைத் திருடியவன்
ஒட்டகையாகப் பிறப்பான்.
மற்றபடி ஆடு மாடு போன்ற மிருகங்களைத் திருடியவன்வெள்ளாடாகப் பிறப்பான்.

யத்வா தத்வா பரத்ரவ்ய மபஹ்ருத்ய பலாந் நர: 1 அவஷ்யம் யாதி திர்யத்வம் ஐக்த்வா சைவாஅஹுதம் ஹவி: || 67
பிறருடைய திரவியத்தை அபகரித்தவன் அதன் பலனை அவசியம் அனுபவித்தே ஆகவேண்டும். அதை அனுபவிக்ககண்டிப்பான ஐந்துவாக பிறப்பான். அவ்வாறே ஹோமம் செய்யப்படாத ஹவிஸை சாப்பிட்டவனும் ஐந்துவாகப் பிறப்பான்.

ஸ்த்ரியோ அப்யேதேந கல்பேந ஹ்ருத்வா தோஷமவாப்னுயு: 1
ஏதேஷாமேவ ஐந்தூநாம் பார்யாத்வமுபயாந்தி தா: || 68

இத்தகைய பாவங்களைப் புரிந்த பெண்களும் அந்த ஜந்துக்களின் மனைவிகளாகப் பிறப்பார்கள்.

ஸ்வேப்ய: ஸ்வேப்பஸ்து கர்மப்யஷ் யூதா வர்ணாஹ்யாநாபதி |
பாபாந் ஸம்ஸ்ருத்ய ஸம்ஸாராந் ப்ரேஷ்யதாம் யாந்தி சத்ருஷு|| 69

நான்கு வர்ணத்தவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கிரியைகளை,-அதாவது கடமைகளை செய்யாது விட்டுவிட்டால் தாழ்ந்தஜாதியில் பிறந்து ஜன்மாந்திரங்களில், சத்ருக்களுக்கு பணிவிடை புரிபவர்களாக ஆவார்கள்.

வாந்தா அஷ்யுல்கா முக: ப்ரேதோவிப்ரோ தர்மாத்ஸ்வகாச் ச்யுத: |
அமேத்ய குணபா அஷீச க்ஷத்ரிய: கடபூதந: I |-70

இவ்வாறு தன் காமாக்களை (கடமைகளை) செய்யாது விட்ட வேதம் படித்த பிராம்மணன் வாந்தியெடுத்ததை சாப்பிடும் கொள்ளிவாய் பிசாசு என்னும் பிரேத ஜன்மத்தை எடுப்பான்.
அவ்வாறே தன் கர்மாக்களைச் செய்யாது விட்ட க்ஷத்ரியன், மலத்தையும் பிணத்தையும் சாப்பிடும் கடபூதமாகப் பிறப்பான்.

மைத்ரா அக்ஷஜ்யோதிக ப்ரேதோ வைஷ்யோ பவதி பூயபுக் 11
சைலா அஷ கஷ் ச பவதி சூத்ரோ தர்மாத் ஸ்வகாச் ச் த: || 71

இத்தகைய கர்மாவைக் கைவிட்ட வைசியன் சீழை உண்கின்ற மைத்ராஷ ஜோதி என்னும் பிரேத ஜன்மாவை எடுப்பான்.-இத்தகைய கர்மாவைக் கைவிட்ட சூத்திரன் பேன்களைத்
தின்னும் ‘சைலாஷகம்’ என்னும் பிரேத ஜன்மாவை எடுப்பான்.

யதாயதா நிஷேவந்தே விஷயாந் விஷயா ஆத்மகா |
ததததா குஷலதா தேஷாம் தேசூபஜாயதே || 72

விஷய சுகங்களில் பற்றுவைத்தவர்களான மனிதர்கள், எவ்வளவுக் கெவ்வளவு அந்த சுகங்களை அனுபவிக்கிறார்களோ, அவ்வளவுக் கவ்வளவு அதில் ஆழ்ந்து மூழ்கிப் போவார்கள்.

தே அப்யாஸாத் கர்மணாம் தேஷாம் பாபாநாமல் புத்தய: | ஸம்ப்ராப்னுவந்தி துக்காநி தாஅதாஸ்விஹ யோநிஷு|-73
அற்ப புத்தி கொண்ட இந்த மூடர்கள், நன்கு தாங்கள் புரிந்த பாப கர்மாக்களினால், அந்தப் பாபங்களின் மேல் கீழ்தன்மைகளுக்குத் தக்கபடி கீழான, அதைவிடக் கீழான, அதையும் விடக் கீழான, ஐந்துக்களாகப் பிறந்து துக்கங்களை அனுபவிப் பார்கள்.

தாமிஸ்ராதிஷு சோக்ரேஷு நரகேஷு விவர்தநம்| அஸிபத்ரவநாதிநி பந்தநச்சேதநாநி ச 11 74
மேலும் அவர்கள் தாமிஸ்ரம் போன்ற கொடிய நரகங்களை அடைந்து வேதனைகளை அனுபவிப்பார்கள். அசிபத்ர வனம் முதலான நரகங்களை அடைந்து, கட்டுண்டும் வெட்டுண்டும் பல வேதனைகளை அனுபவிப்பார்கள்.

விவிதாஷ்சைவ ஸம்பீடா: காகோலூகைஷ் ச பக்ஷணம் | கரம் ப வாலுகாதாபாந்கும்பீபாகாம்ஷ் ச தாருணாந் II 75
மேலும் காக்கை. கோட்டான் போன்றவற்றால் உண்ணப் படுதல், எரியும் மணலில் புரட்டப்படுதல், பெரிய பாண்டத்தில் வேகவைக்கப்படுதல் முதலான கோர நரக வேதனைகளை அனுபவிப்பார்கள்

ஸம்பவாம்ஷ்ச வியோநீஷ் துக்கப்ராயாசு நித்ய : | ஷீதாதபா அபிகாதாம்ஷ்ச விவிதாநி பயாநி ச|| 76
குளிர், வெயில், மழை முதலானவற்றால் துக்கங்களை ஜாதிகளில் எப்போதும் அடைந்தபடியும், பயந்தபடியும் வாழும் பறவை மிருக பிறப்பார்கள்.

அஸக்ருத் கர்பவாஸே வாஸம் ஜன்ம ச தாருணம் |
பந்தநாநி ச கஷ்டாரி பரப்ரேஷ்யத்வமேவ ச|-77

அதன் பிறகு, மீண்டும் மீண்டும் மிகுந்த கஷ்டமான கர்ப்ப வாசங்களைச் செய்து பிறந்து பந்தப்படுத்தும் கஷ்டங்களை அனுபவித்து, பிறருக்கு அடிமையாக வாழ்வார்கள்.

பந்துப்ரிய வியோகாம்ஷ்ச ஸம்வாஸம் சைவ துர்ஜநை: |
த்ரவ்யா அர்ஜநம் ச நாஷம் ச மித்ராஅமித்ரஸ்ய சாஅர்ஜநம் ॥-78

மேலும் பந்துக்களையும் நண்பர்களையும் இழத்தல்,-தீயவர்களோடு சேர்ந்து வாழ்தல், செல்வத்தை தேடுவதில் மிகுந்த துன்பமும், சேர்ந்த செல்வம் அழிவதும், நண்பர்கள் பகைவர்களாவதுமான துன்பங்களை அனுபவிப்பார்கள்.

ஜராம் சைவா அப்ரதீ காராம் வ்யாதிபிஷ்சோபபீட நம்
க்லேஷாம்ஷ்ச விவிதாம்ஸ் தாம்ஸ்தாந் ம்ருத்யுமேவ சதுர்ஜயம்|| 79

சிகிச்சை செய்ய இயலாததான வியாதிகளால் பீடிக்கப்பட்டும், முதுமையால் தளர்ந்தும், பலவகையான மனக்கலக்கங்களுக்கு ஆட்பட்டும்,எதனாலும் தடுத்து நிறுத்த முடியாத மரணத்தை அடைவார்கள்.

யாத்ருஷேந து பாவேந யத்யத் கர்ம நிஷேவதே |
தாத்ருஷேந ஷரீரேண தத்தத் பலமுபா அஷ்நுதே|| 80

சத்வ ராஜஸ் தாமஸங்களில் எந்த புத்தியோடு எந்த காரியங்களைச் செய்கிறானோ, அதற்குத் தக்கபடி உடலெடுத்து அந்தந்த காரியங்களுக்குரிய பலனை அனுபவிக்கிறான்.

ஏஷ ஸர்வ: ஸமுத்திஷ்ட: கர்மணாம் வ: பலோதய: |
நை: ஷ்ரேயஸகரம் கர்ம விப்ரஸ்யேதம் நிபோதத ||-81

சாஸ்திரம் உரைத்த முறைகளையும், சாஸ்திரத்துக்குவிரோதமான காரியங்களைச் செய்வதால் ஏற்படும் பலன்களையும் இதுவரை உங்களுக்கு எடுத்துரைத்தேன். இனி வேதம் படித்தபிராம்மணனுக்குமோட்சமென்னும் மேன்மையைத் தரக்கூடிய கர்மானுஷ்டானங்களைத் தெரிவிக்கிறேன், கேளுங்கள்.

வேதா அப்யாஸஸ் தபோ ஞாநமிந்த்ரியாணாம் ச ஸம்யம: | அஹிம்ஸா குருஸேவா ச நி:ஸ்ரேயஸகரம் பரம் || 82
வேதங்களைக் கற்றுணர்தல், தவம் செய்தல், பிரம்ம ஞானத்தைஅடைதல், இந்திரியங்களை அடக்குதல், அஹிம்சை, குருசேவைஎன்னும் இவையனைத்தும் மேலான மோட்சத்தை அடைவதற்குரிய சாதனங்கள்.

ஸர்வேஷாமபி சைதேஷாம் சுபாநாமிஹ கர்மணாம் |
கிஞ்சிச் ச்ரேயஸ்கரதரம் கர்மோக்தம் புருஷம் ப்ரதி || 83

இப்போது கூறிய இவற்றில் மிகமிக உயர்ந்தது எது என்றுபார்ப்போம்.

ஸர்வேஷாமபி சைதேஷாமாத்மஞானம் பரம் ஸ்ம்ருதம் |
தத் த்யக்ர்யம் ஸர்வ வித்யாநாம் ப்ராப்யதே ஹ்யம்ருதம் தத: || 84

இவையனைத்தையும் பார்க்குமிடத்து ஞானம் அடைதலேமிகமிக உயர்ந்தது. ஞானம் என்றால் பரம்பொருளை அறியும்பிரம்மஞானம். இந்த பிரம்மஞானத்தாலேயே மோட்சத்தை அடைய முடியும்.

ஷண்ணாமேஷாம்து பூர்வேஷாம் கர்மணாம் ப்ரேத்ய சேஹச |
ஷ்ரேயஸ்கரதரம் ஞேயம் ஸர்வதா கர்ம வைதிகம் || 85

வேதங்களைக் கற்றுணர்தல், தவம் செய்தல், பிரம்ம ஞானத்தை அடைதல், இந்திரியங்களை அடக்குதல், அஹிம்சை,குருசேவை என்னும் இந்த ஆறு கர்மாக்களிலும் பிரம்மஞானமே கைமேல் பலனாக மோட்சத்தைக் கொடுக்கும் என்பதால் பிரம்மஞானமே
கண்டிப்பாக சம்பாதிக்க வேண்டிய ஒன்றாகும்.

வைதிகே கர்மயோகேது ஸர்வாண்யேதாந் யசேஷத: | அந்தர்பவந்தி க்ரமஷஸ் தஸ்மிம்ஸ் தஸ்மிந் க்ரியாவிதெள 86
வைதிக காமாக்களை விடாது முழுமையாகச் செய்து வரும்போது, அதன் மூலமாக இந்த ஆறு கர்மாக்களின் உயர்ந்த பலன்கள் அனைத்தும் கிட்டும்.

சுகா ஆப்யுதயிகம் சைவ நை:ஷ்ரேயஸிகமேவ ச
ப்ரவ்ருத்தம் ச நிவருத்தம் ச த்விவிதம் கர்ம வைதிகம் || 87

இந்த வைதிக கர்மாக்கள் பிரவிருத்தி, நிவ்ருத்தி என்று இரு வகையான பயன்தரும்.
ஸ்வர்க்கம் முதலானவற்றை அடைய ஹேதுவான ஜன்மாக்களைக் கொடுக்கும்போது பிரவிருத்தி கர்மாவாகிறது. சம்சாரத்தினின்று விடுதலை அடைவதற்கு ஹேதுவான கர்மாக்கள் நிவ்ருத்தி கர்மா எனப்படுகிறது.

இஹ சாஅமுத்ரவா காம்யம் ப்ரவருத்தம் கர்ம கீர்த்யதே |
நிஷ்காமம் ஞானபூர்வம் து நிவ்ருத்தமுபதிஷ்யதே |-88

இவ்வுலகத்தில் வேண்டியவைகளை அடைவதற்காகவும் இறந்த பிறகு நல்லுலகங்களை அடைவதற்காகவும் காரியங்களைச் செய்வது பிரவிருத்திகர்மா எனப்படும்.-இவ்வுலத்தில் எந்தப் பலனையும் கேளாமலும், இறந்தபிறகும்கூட எந்தப் பலனையும் எதிர்பாராமலும் செய்யும் கர்மா நிவ்ருத்தி கர்மா எனப்படும். இது ஆசையற்றதும் ஞானத்தைத்
தருவதுமான கர்மா.

ப்ரவ்ருத்தம் கர்ம ஸம்ஸேவ்ய தேவாநாமேதி ஸாம்யதாம் | நிவ்ருத்தம் ஸேவமாநஸ்து பூதாந்யத்யேதி பஞ்ச வை|-89
பிரவ்ருத்தி கர்மாக்களான யக்ஞங்கள், தானங்கள் முதலானவற்றைச் செய்வதால் தேவர்களின் உலகத்தை அடைந்து அவர்களுக்கு சமமான நிலையை அடையலாம். நிவ்ருத்தி வழியில் இருப்பவர்களுக்கு, கர்மவினைகளுக்குக் காரணமான பஞ்சபூதங்களும் அவனைவிட்டு நீங்கும். அப்படியென்றால் மோட்சத்தை அடைவான் என்று பொருள்.

ஸர்வபூதேஷு சாஆத்மாநம் ஸர்வபூதாநி சாஆத்மநி |
ஸமம் பஷ்யந்நாத்மயாஜீ ஸ்வாராஜ்யமதி கச்சதி|| 90

சகல உயிர்களிலும் பரமாத்ம சொரூபம் உறைகிறது என்பதை அறிந்து, பஞ்சபூதங்களும் தன்னுடைய ஆத்மாவுக்குள் பரமாத்ம சொரூபமாக இருப்பதை உணர்ந்து, எல்லாஉயிர்களையும் சமமாக பாவிக்கும் நிலையை அடைந்தவனாக, தன்னுடைய ஆத்மாவையே பரமாத்மாவுக்கு அர்ப்பணிக்கும் ஒருவனே மோட்சத்தை
அடைவான்.

யதோக்தாந்யபி கர்மாணி பரிஹாய த்விஜோத்தம: 11 ஆத்மஞானே ஷமே ச ஸ்யாத் வேதா அப்யாஸே ச யத்நவாந் || 91
த்விஜோத்தமன்,தனக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை விட்டாவது, ஆத்ம ஞானத்தை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். வேதத்தை ஓதுவதில் முயற்சியோடிருக்க வேண்டும். வேதமோதுவதில் முழுமையாக ஈடுபட்டால், அது ஆத்ம ஞானத்தை நல்கும்.

ஏதத் தி ஜன்மஸாபல்யம் ப்ராஹ்மணஸ்ய விசேஷத: 1
ப்ராப்யைதத் க்ருதகருத்யோஹித்விஜோ பவதிநாஅந்யதா || 92

வேதா யாசம் செய்தபடி ஆத்மஞானம் அடைவதே பிராம்மணனுக்கு விசேஷமாக பிறவி வினைகளை நீக்கும் வழி. க்ஷத்ரியனும் வைசியனும்கூட பிறவி வினைகளை நீக்கிக் கொள்ளும் வழி இதுவேயன்றி, வேறொன்றும் இல்லை.

பித்ருதேவ மனுஷ்யாணாம் வேதஷ் சக்ஷ: ஸநாதநம் |
அஷக்யம் சாஅப்ரமேயம் ச வேதசாஸ்த்ரமிதி ஸ்திதி: || 93

பித்ருக்களுக்கும் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் எப்போதும் ஞானத்தைக் கொடுக்கும் கண்ணாக விளங்குவது வேதமேயாகும். பழமையான வேதமானது மற்ற எவராலும் இயற்றப்பட்டதுமல்ல, இயற்றக்கூடியதுமல்ல. அதன் தன்மை இதுவென எவராலும்
அளவிடமுடியாது.

யா வேதபாஹ்யா: ஸ்ம்ருதயோ யாஷ் ச காஷ் ச குத்ருஷ்டய: |
ஸர்வாஸ்தா நிஷ்பலா: ப்ரேத்ய தமோநிஷ்டா ஹிதா: ஸ்ம்ருதா: || 94

வேதத்துக்கு விரோதமாக சொல்பவை எவையோ, தவறாக போதிப்பவை எவையோ அவையனைத்தும் மந்த புத்தியை உருவாக்கி,நற்பலன்களை அடைய வொட்டாமல் தடுத்து
நரகத்துக்கு வழிவகுக்கும்.

உத்பத்யந்தே விநஷ்யந்தி யாந்யதோ அந்யாநி காநிசித்
தாந்யர்வாக் காளிகதயா நிஷ்பலாந்யந்ருதாநி ச || 95

வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாமல், அதற்கு மாறாகக் கூறப்படும் சாஸ்திரங்கள் வேகமாக அழியும். புதிதாக ஏற்பட்ட சாஸ்திரங்களைக் கற்பதால் நற்பலன் எதுவுமில்லை. ஏனெனில் அதில் உள்ளவை யாவும் பொய்களே யாகும்.

சாதுர்வர்ண்யம் த்ரயோலோகாஷ் சத்வாரஷ் சாஆஸ்ரமா: ப்ருதக்|
பூதம் பவ்யம் பவிஷ்யம் ச ஸர்வம் வேதாத் ப்ரஸித்யதி|-96

நான்கு வர்ணங்களைப் பற்றியும், மூன்று உலகங்களைப் பற்றியும்,நான்கு ஆஸ்ரமங்களைப் பற்றியும் வேதத்தில் கூறப் பட்டுள்ளது. நடந்ததும் நடப்பதும் நடக்கப்போவதும் வேதத்தில்கூறப் பட்டுள்ளது.

ஷப்த: ஸ்பர்ஷஷ் ச ரூபம் சரஸோ கந்தஷ்ச பஞ்சம:
வேதாதேவ ப்ராசூயந்தே ப்ரசூதி குணகர்மத: II 97

சப்தம், ஸ்பரிசம், உருவம், ரசம், கந்தம் என்னும் ஐந்தும்வேதத்திலிருந்தே தோன்றின. இவைகளின் குணங்களும் செயல்களும்வேதத்திலேயே விளக்கப்பட்டுள்ளன.

பிபர்தி ஸர்வபூதாநி வேதசாஸ்த்ரம் ஸநாதநம் |
தஸ்மாதேதத் பரம் மந்யே யஜ் ஐந்தோரஸ்ய ஸாதநம் || 98

சநாதனமான வேதசாஸ்திரமே சகல பூதங்களையும் தாங்குகிறது.எனவே வேதமே ஒருவனுக்கு மேலான நிலையை அடைய வைக்கும்சாதனமாகும்.

ஸேநாபத்யம் ச ராஜ்யம் ச தண்டநேத்ருத்வமேவ ச |
ஸர்வலோகாஅதிபத்யம் ச வேதசாஸ்த்ர வீதர்ஹதி || 99

வேதசாஸ்திரம் முழுவதும் அறிந்தவனுக்கு சேனாபதியாகிபடைகளை நடத்தும் தகுதி இருக்கும். ராஜ்ஜியத்தை ஆளும் தகுதிஇருக்கும். இவ்வளவு ஏன், சகல உலகங்களையும் ஆட்சி செய்யும்தகுதியும் இருக்கும்.

யதா ஜாதபலோ வஹ்நிர் தஹத்யார்த்ராநபி த்ருமாந்|
ததா தஹதி வேதக்ஞ: கர்மஜம் தோஷமாத்மந:
-100
கொழுந்துவிட்டெரியும் அக்னியானது எவ்வாறு பசுமையான மரங்களையும் எரிக்கும் சக்தி பெற்றுள்ளதோ அவ்வாறே வேதத்தை அறிந்தவன் கர்மவினைகளைத் தரும் தன்னுடைய தோஷங்களை யெல்லாம் எரித்து அழித்து விடும் சக்தி பெற்றவன்.

வேதசாஸ்த்ரா அர்த தத்வக்ஞோ யத்ரதத்ரா ஆஸ்ரமே வஸந் |
இஹைவ லோகே திஷ்டந் ஸ ப்ரஹ்ம பூயாய கல்பதே || 101

வேதசாஸ்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்த தத்துவ ஞானி, பிரம்மசாரியாக இருந்தாலும், கிருஹஸ்தனாக இருந்தாலும், வானபிரஸ்தனாக இருந்தாலும், சந்யாசியாக இருந்தாலும் இந்த உலகத்திலே வாழ்ந்தபடியே பிரம்மஞானத்தை அடைவான்

அக்ஞேப்யோ க்ரந்திந: ஷ்ரேஷ்டா க்ரந்திப்யோ தாரிணோ வரா | தாரிப்யோ ஞாநிந: ஷ்ரேஷ்டா ஞாநிப்யோ வ்யவஸாயிந: -102
ஏதோ சிறிது படித்தவர்களைவிட, முழுமையாக வேதத்தைப் படித்தவர்கள் சிரேஷ்டமானவர்கள். முழுமையாகப் படித்தவர்களை விட, அதை நன்கு மனத்தில் பதிய வைத்துக் கொண்டவர்கள் சிரேஷ்ட மானவர்கள்.-நன்கு மனத்தில் பதிய வைத்துக் கொண்டவர்களைவிட அதன் அர்த்தத்தை அறிந்தவர்கள் சிரேஷ்டமானவர்கள்.
அதன் அர்த்தத்தை அறிந்தவர்களைவிட,அதன்படி ஒழுகு பவர்கள் மிகவும் சிரேஷ்டமானவர்கள்.

தபோ வித்யா ச விப்ரஸ்ய நி:ஸ்ரேயஸகரம் பரம் |
தபஸா கில்பிஷம் ஹந்தி வித்யயா அம்ருதமஷ்நுதே|| 103

தவமும் வேதமும் விப்ரனுக்கு மிகுந்த மேன்மையைக் கொடுக்கும். தவத்தால் பாபங்கள் நீங்கும், வேதத்தால் அமிர்தத்தைப் பருகுவான்.

ப்ரத்யக்ஷம் சாஅனுமாநம் ச சாஸ்த்ரம் ச விவிதா ஆகமம் |
த்ரயம் அவிதிதம் கார்யம் தர்ம சுத்திம பீப்ஸதா ||-104

பிரத்யட்சமாக பார்ப்பது, ஊகித்து அறிவது, சாஸ்திர விதிகளை அறிவது என்னும் மூன்றுமே ஒருவன் தனக்குரிய தர்ம வழியில் நடந்து தன்னை மேன்மைப்படுத்திக் கொள்வதற்குரிய சாதனங்களாகும்.

ஆர்ஷம் தர்மோப தேஷம் ச வேதசாஸ்த்ரா அவிரோதிநா |
யஸ் தர்கோ அநு ஸந்தத்தே ஸ தர்மம் வேத நேதர: || 105

வேதத்தையும், தர்மத்தை உபதேசிக்கும் நூல்களையும், வேதத்துக்கு விரோதமாக இல்லாத தர்க்கம் முதலான சாஸ்திரங்களையும் நன்கு படித்தே ஒருவன் தர்மத்தை அறிய முடியும்.

நை: ஸ்ரேயஸமிதம் கர்ம யதோதிதமசேஷத: I
மாநவஸ்யா அஸ்ய ஷாஸ்த்ரஸ்ய ரஹஸ்ய முபதிஷ்யதே|| 106

இதுவரை மோட்சமடைய சாதனமான கர்மாக்கள் அனைத்தும் முழுமையாகக் கூறப்பட்டன.
இந்த மானவ தர்மத்தின் ரகசியமான விஷயத்தை இப்போது கூறுகிறேன், கேளுங்கள்:

அநாம்நாதே தர்மேஷு கதம் ஸ்யாதிதி சேத்பவேத் 1 யம்ஷிஷ்டா ப்ராஹ்மணா ப்ரூயு: ஸ தர்ம: ஸ்யாதஷங்கித: | 107
இதுவரை சொல்லிய தர்மசாஸ்திர விதிகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறேன்.-நான் கூறப்போகும் லட்சணங்கள் பொருந்திய சிஷ்டர்களான பிராம்மணர்களிடம் சந்தேகத்தைக் கேட்க வேண்டும். அவர்கள் கூறுவது கொள்ள எதுவோ அதுவே தர்மம் என்று சந்தேகமின்றி ஏற்றுக் வேண்டும்.

தர்மேணா அதிகதோ யைஸ்து வேத: ஸபரிப்ரும்ஹண: |
தேஷிஷ்டா ப்ராஹ்மணா ஞேயா: ஸ்ருதீ ப்ரத்யட்ச ஹேதவ: || 108

வேதங்கள், வேதாங்கங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள், மீமாம்சை,தர்க்கம் முதலான சாஸ்திரங்கள் அனைத்தையும் படித்தவர்களாகவும், அவற்றின் பொருளை முழுமையாக அறிந்தவர்களாகவும் இருக்கின்ற பிராம்மணர்கள் சிஷ்டர்கள் எனப்படுவர்.

தஷராஅவரா வர பரிஷத் யம் தர்மம் பரிகல்பயேத்
த்ரயவரா வாஅபி வ்ருத்தஸ்தா தம் தர்மம் ந விசாலயேத் l 109

பத்து சிஷ்டர் சேர்ந்திருக்கும் சபையில் அவர்கள் எதை தர்மம் என்று நிர்ணயிக்கிறார்களோ அதையே தர்மமாக ஏற்க வேண்டும். பத்து சிஷ்டர்கள் சேராதபோது, மூன்று சிஷ்டர்கள் சேர்ந்து எதை தர்மம் என்று நிர்ணயிக்கிறார்களோ அதை தர்மமாக ஏற்க வேண்டும். ஏற்பதில் எந்த சந்தேகமும் கொள்ளக்கூடாது.

த்ரைவித்யோ ஹேதுகஸ் தர்கீ நைருக்தோ தர்மபாடக: |
த்யஷ் சா ஆஸ்ரமிண: பூர்வே பரிஷத் ஸ்யாத் தஷாஅவரா || 110

வேதங்களில் மூன்று சாகைகளை ஓதியவன், தர்க்கம் மீமாம்சை முதலான சாஸ்திரங்களைப் படித்தவன், தர்மசாஸ்திரங்களை அறிந்தவன், பிரம்மச்சாரி, கிருஹஸ்தன், சந்யாசி என்னும் மூன்று ஆஸ்ரம வாசிகள் முதலானோர் பத்து பேர்களுக்குக் குறையாமல் இருக்கும் சபைக்கு ‘பரிஷத்’ என்று பெயர்.

ருக்வேதவித் யஜுர்விச் ச ஸாமவேதவிதேவ ச |
த்ரயவரா பரிஷஜ் ஞேயா தர்மஸம்ஷய நிர்ணயே|1 111

ரிக் வேதத்தை நன்கு உணர்ந்தவர்களும், ய ர் வேதத்தை நன்குணர்ந்தவர்களும், சாம வேதத்தை நன்குணர்ந்தவர்களுமான மூவர் இருக்கும் சபையும் பரிஷத் ஆகும். இவர்களும் தர்மம் எதுவென நிர்ணயிப்பார்கள். சந்தேகம் வந்தபோது இவர்களின்பரிஷத்தில் கேட்டு தெளிவு கொள்ளலாம்.

ஏகோஅபி வேதவித் தர்மம் யம்வயவஸ்யேத் த்விஜோத்தம: |
ஸவிக்ஞேய: பரோ தர்மோ நாஅக்ஞாநாமுதிதோ அயுதை: I-112

வேதவித்தான விஜேத்தமன் ஒருவனிடமேகூட தர்மம் எதுவென கேட்டு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் வேதமோ தர்மசாஸ்திரமோ தெரியாத பலபேர்கள் கூடி இதுவேதர்மம் என்று எவ்வளவு கூறினாலும் அதை ஏற்கக் கூடாது.

அவ்ரதா நாமமந்த்ராணாம் ஜாதிமாத்ரோபஜீவிநாம் |
ஸஹஸ்ரஷ: ஸமேதாநாம் பரிஷத்த்வம் ந வித்யதே|| 113

பிரம்மசர்யம் முதலான விரதங்களை அனுஷ்டிக்காதவர்களும்,மந்திரக் கிரியைகள் எதுவுமற்றவர்களுமான ஜாதியை மாத்திரமே சொல்லிக் கொண்டு ஜீவிப்பவர்கள் ஆயிரமாயிரமாய் சேர்ந்திருந்தாலும் அது ‘பரிஷத்’ ஆகாது.

யம் வதந்தி தமோபூதா மூர்கா தர்மமதத் வித:
தத்பாபம் ஷததா பூத்வா தத்வத்த் ரூநநுகச்சதி | 114

தமோ குணம் கொண்டவர்களான மூர்க்கர்கள் தர்மத்தையோ,வேதார்த்தத்தையோ அறியாமலே, தர்மம் தெரிந்தவர்கள் போல காட்டிக் கொண்டு, பிராயச்சித்தம் முதலானவற்றைக் கூறினால், எவனுக்குக் கூறுகிறார்களோ அவனுடைய பாபம் நூறு மடங்காகி கூறியவனை வந்தடையும்.

ஏதத் வோ அபிஹிதம் ஸர்வம் நி:ஸ்ரேயகரம் பரம் |
அஸ்மாதப்ரச்யு தோ விப்ர: ப்ராப்நோதி பரமாம் கதிம் |-115

மோட்ச சாதனமான அனைத்தையும் உங்களுக்குக் கூறினேன்.
நான் கூறியபடி ஒழுகுபவர்கள் ஸ்வர்க்கத்தையும் மோட்சத்தையும் அடைவார்கள்.

ஏவம் ஸ பகவாந் தேவோ லோகாநாம் ஹிதகாம்யயா |
தர்மஸ்ய பரமம் குஹ்யம் மமேதம் ஸர்வமுக்தவாந்|| 116

பகவானும், உலகங்களின் ஹிதத்தை விரும்புபவருமான மனு, மிகவும் மேலானதும் ரகசியமானதுமான இந்த தர்ம சாஸ்திரத்தை எனக்கு உரைத்தார்.

ஸர்வமாத்மநி ஸம்பஷ்யேத் ஸச் சாஅஸச் ச ஸமாஹித:
ஸர்வம் ஹ்யாத்மநி ஸம்பஷ்யந் நாஅதர்மே குருதே மந: || 117

சத், அசத் ரூபமான அனைத்தும் பரமாத்ம சொரூபமே என்றும்,-அந்த பரமாத்மாவே தன்னுள் உறைகிறார் என்னும் ஆத்ம சொரூபத்தை அறிந்தவன் மனம் எந்நாளும் அதர்மத்தில் செல்லாது.

ஆத்மைவ தேவதா: ஸர்வா: ஸர்வமாத்மந் யவஸ்திதம் 1 ஆத்மாஹி ஐநயத்யேஷாம் கர்மயோகம் ஷரீரிணாம்| 118
சகல தேவர்களுக்குள்ளும் உறைவது பரமாத்ம சொரூபமே. உடலெடுத்த அனைவருக்கும் கர்ம யோகங்களை ஏற்படுத்துவதும் ஆத்ம சொரூபத்தோடிருக்கும் பரமாத்வே.

கம் ஸந்நிவேஷயேத் கேஷு சேஷ்டநஸ்பர்ஷநே அநிலம் |
பக்தி த்ருஷ்ட்யோ பரம் தேஜ: ஸ்நேஹே அபோ காம் ச மூர்த்தி |-119

மனஸீந்தும் திஷ: ஸ்ரோத்ரே க்ராந்தே விஷ்ணும்பலே ஹரம் |
வாச்யக்ம் மித்ரமுத்ஸர்கே ப்ரஜநே சப்ரஜாபதிம் || 120

ப்ரஷாஸிதாரம் ஸர்வேஷாமணீயாம்ஸ மணோரபி
ருக்மா ஆபம் ஸ்வப்நதீகம்யம் வித்யாத்தம் பூருஷம் பரம்| 1-121

வெளியிலுள்ள ஆகாசத்தை சரீரத்திலுள்ள ஆகாசத்துடன் லயிக்கச் செய்ய வேண்டும்.
வெளியிலுள்ள வாயுவை சரீரத்திலுள்ள வாயுவுடன் லயிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறே அக்னியுடன் அக்னியையும், தண்ணீருடன் தண்ணீரையும், பிருத்வி(மண்)யுடன் பிருத்வியையும் லயிக்கச் செய்ய வேண்டும்.
மனத்தில் சந்திரனை லயிக்கச் செய்ய வேண்டும். பிறகு காது களில் திக்குகளையும், பாதங்களில் விஷ்ணுவையும், பலத்தை சிவபிரானிடமும், வாக்கை அக்னியிடமும், ஆசன பாகத்தை மித்ரனிடமும், லயிக்கச் செய்ய வேண்டும். உபேந்திரியத்தை பிரஜாபதியிடமும் லயிக்கச் செய்ய வேண்டும்-கர்மாக்களுக்குத் தக்க பலனை அளிப்பவரும், அணுவுக்குள் அணுவாக இருப்பவரும், ஞானக்கண்களால் மட்டுமே காணக் கூடியவரும், தங்கம் போல் பிரகாசிப்பவருமான ஞானத்தால் பரமாத்மாவை காண வேண்டும்.

ஏதமேகே வதந்த்யக்ம் மனுமந்யே ப்ரஜாபதிம் | இந்த்ரமேகே பரே ப்ராணமபரே ப்ரஹ்ம ஷாஷ்வதம் 122

சிலர் பரமாத்வை அக்நியாக உபாசிப்பர்கள். சிலர் பிரஜாபதிகளாக உபாசிப்பர்கள். உபாசிப்பர்கள். சிலர் தேவேந்திர வடிவமாக உபாசிப்பர்கள். சிலர் தன்னுள் இருக்கின்ற பிராணனாக எண்ணி உபாசிப்பர்கள். சிலர் பிரம்ம சொரூபமாக உபாசிப்பர்கள்.

ஏஷ ஸர்வாணி பூதாநி பஞ்சபிர் வ்யாப்ய மூர்திபி: 11 ஜன்மவ்ருத்தியைர் நித்யம்ஸம்ஸாரயதி சக்ரவத் |-123

பரமாத்மா, ஐம்பூத சேர்க்கையோடு உயிர்களை இயங்க வைக்கிறார்கள். உடலெடுத்த உயிர்கள் தாங்கள் சம்பாதித்த பாபபுண்ணியங்களில் தேரின் சக்கரங்களைப் போல மேலும்
கீழுமாக பிறவிகளை எடுக்கிறார்கள். இறுதியில் மோட்சத்தை அடையும்வரை பிறப்பும் இறப்பும் இருக்கும்.

ஏவம் ய: ஸர்வபூதேஷு பஷ்யத் யாத்மாநமாத்மநா |
ஸஸர்வ ஸமதாமேத்ய ப்ரஹ்மாஅப்யேதி பரம்பதம்|| 124

எவன், எல்லா பூதங்களிலும் உள்ள ஆத்மாவை அறிந்தவனாக, பிரம்ம ஞானம் பெற்றவனாக இருக்கிறானோ, அவன் மேலான பரப்பிரம்மத்தின் பதத்தை அதாவது பரமபதத்தை அடைகிறான்.
(பன்னிரண்டாம் அத்தியாயம் முற்றிற்று.)

மனுதர்ம சாஸ்திரம் நிறைவடைகிறது.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மநு பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading