ஸ்ரீ யாதவாப்யுதயம்–23- சர்க்கம் -ஸ்லோகார்த்தங்கள்–ஸ்ரீ கிருஷ்ணன் தூது செல்லுதல் -மஹா பாரத யுத்தம் -விஸ்வ ரூப தர்சனம் -பரீக்ஷித் உஜ்ஜீவனம் -தர்ம ப்ரதி போதநம் -ஸ்ரீ மத் பாகவதம் -1-7-17-1-11-21-2484-2542-62 ஸ்லோகங்கள்-குருஷேத்ர யுத்தத்தில் ஆரம்பித்து பாண்டவர்கள் பட்டாபிஷேகத்துடன் நிறைவேறும்
ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ–
ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:
ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு
———–
அதாதிகார ஸ்யவநாத் யஸ் இந்த்ரா பஞ்சா பவன் பாண்டு ஸூதா ப்ருதிவ்யாம்
ஜயார்திநஸ் தே ஜகத் ஏக நாதம் ப்ரபேதிரே சத்த்வ தநா ஸ தாரா –1-
அதன் பின் முற்காலங்களில் இந்த்ரர்களாய் இருந்திட்டாராய்
இத்தலத்தில் பாண்டவர்களாய் இப்போது விளங்குவர்கள்
தமது மனைவி திரௌபதியுடன் தரணி நாதன் கண்ணன் தனை
எதிரிகளாம் கௌரவரை வென்றிடற்குச் சரண் அடைந்தனரே–சத்த்வகுணமே மூலமாக யுடையவர்கள்
தமோ பஹைஸ் தத்த்வ விதாம் ருஷீணாம் வாக்யைர் த்ரீ வேதம் அநு ஸஞ்ஜிஹாநை
கிருஷ்ணம் யதாவத் க்ருதிநோ விதந்த தஸ்யா பவத் ப்ராண சம ஸகாய–2-
நல் வினையோர் பாண்டவர்கள் மும்மறைகளில் தேர்ந்தவர்களாய்
நல்லறிவுடை முனிவர்களின் நல்லறிவுரைகளினாலே
உள்ள படியே கண்ணன் தன்னை உணர்ந்தவர்களாய் அவனுடைய
உள்ளத்திலே இடம் பெற்று ஒத்த தோழராய் ஆகினரே –2-மம ப்ராணா ஹி பாண்டவா
தத் ஆஸ்ரயாஸ் தத் ப்ரணிதேய க்ருத்யா தேநைவ நாதேந ஸதா ஸநாத
அபாரயன் யோகிபிர் அப்ய ஜய்யான் பாஹ்ய அந்தரான் ஜேதும் அராதி வர்க்கான்–3-
அவன் தன்னையே நாடியராய் அவனுடைய அறிவுரையைத்
தவறாமல் செயல் படுத்தி வருபவராய் தேவ தேவன்
அவன் தன்னையே நாதனாய் யுடையராய் பாண்டவர்கள்
தவசிகளும் வெல்லா உள் வெளிப்பகையை வென்றனரே
ப்ரதிகிரியா ப்ராக் பவ துஷ் க்ருதா நாம் ப்ராணோ பரோதாபி நிருத்த பாப
தீராஸ் த்ரிலோகீ ஸூஹ்ருத ப்ரஸாதாத் விபாக ரம்யா விபத ப்ரஸேஹு–4-
உயிர் பற்றிய கவலையை விட்டு தீ வினையையும் அறவே ஒழித்து
உயர்ந்தவராம் பாண்டவர்கள் உலகுக்கு எலாம் நலம் தனை
செயும் பரமனின் அருள் தன்னால் துன்பங்களை முன் செய்த
தீய வினையின் பலன்களாக நினைத்திட்டுப் பொறுத்தனரே-
அலங்கயன் விஸ்வ பதே ப்ரஸாதாத் வ்ருத்திம் பராசீம் இவ வீத ராக
அராதி பிஸ் சத்மவிதி ப்ரவீணை ஆபாதி தாம் அக்னி ஜலாதி பீடாம் –5-
கபடர்களாம் கௌரவர்களின் கபட தீ நீர் விடம் முதலாம்
விபத்துக்களை வைராக்யத்தால் பரன் அருளால் அகற்றிட்டரே-
கலிங்க நீதிம் கலஹை கதாநாம் கரணம் ச பார்த்தேந நிபத்த வைரம்
ஆஸ்தாய துச்சாஸந பூர்வ ஜன்மா தர்மோத்தரான் ஜேதும் இயேஷ பார்த்தான் -6-
துச்சாதனன் அண்ணனான துரியோதனன் தீய திட்டம்
கச்சிதமாக இடும் சகுனியின் உக்தியினால் அர்ச்சுனன் மேல்
உச்ச பகையுடைக் கர்ணன் தனை முன் வைத்து அற நெறியில்
உச்சிதமுடைப் பாண்டவர்களை வென்றிடற்கு விரும்பினனே —
ஸ ராஜ ஸூய க்ரது தர்ம பத்நீம் பீமேந காண்டீவப்ருதா ச மாந்யம்
த்யூ தச்சல ப்ராபிதா தாஸ பாவாம் ஸாத்வீம் முதா பர்யபவத் ஸபாயாம் –7-
தர்மனுக்குப் பத்னியாய் இராச ஸூய வேள்வி தனைப்
புரிந்தவளும் பீமனுக்கும் பார்த்தனுக்கு பதிவிரதையாம்
திரௌபதியை சூதாட்டத் திட்டத்தால் அடிமையாக்க
அரங்கினிலே சூழ்ச்சி செய்து அக்ரமமாய் அவமதித்தனே
அநந்ய நாதாம் ஸ்திதிம் ஆப்நுவத்யா நாத ஸ்வ ஸம்போதந நாம கர்பம்
சுஸ்ராவ துராந்தரிதோபி ஸுவ்ரி ப்ராக் ரோஷநம் பார்த்த பதி வ்ரதாய –8-
பாண்டவர்கள் பதி வ்ரதை பாஞ்சாலி தனைக் காக்க
ஈண்டு யாரும் இலா நிலையால் எங்கோ உள்ள கண்ணன் தன்னை
வேண்டித் திரு நாமங்களை உருக்கமாகக் கதறிடவதை
ஆண்டவனும் கேட்டு அவளுக்கு அருளினானே அங்கு இருந்தே
மித்யா விசாராத் மிஷதாம் குரூணாம் ப்ரபு ஸதாம் பாண்டவ தர்ம பத்நீம்
துச்சாஸந வ்யாகுலித உத்தரீயாம் அக்ஷய்ய கௌசேயவதீம் அகார்ஷீத் –9-
பிதா மகருடன் துரோணாதிகள் பயனில்லாத ஆராய்ச்சியில்
பதிந்திருந்து பேசாமலே பார்த்து இருக்கவே துச்சாதனன்
பதிவிரதையின் துகில் உரிக்க முயன்ற போது நன்மை செய்யும்
நாத்தனாவான் பட்டாடைகள் மேன்மேல் வர அருள் புரிந்தனனே
அவாப்து காமாஸ் ப்ரபலைர் அமித்ரைஸ் அக்ஷஸ் சலேநாபஹ்ருதம் ஸ்வ ராஜ்ஜியம்
நிஷிப்த கர்த்த வ்யபார பபூவு சத்த்வாதிகா ஸாத்வத (ஸாத்விக )யூத நாதே –10-
கபடத்தால் பரிபோன தமது நாட்டை மீண்டும் பெற
அப்பாண்டவர் சாத்விகர்களின் நாதனான கண்ணனிடம்
அப்பாரத்தை சமர்ப்பித்தனர் பதின்மூன்று ஆண்டுகளுக்
குப் பின்னர் நியாயமான கார்யத்தைச் செய்வதற்கே-
ஸ்வா தந்தர்ய கந்த த்விரதாங்குசேந ஸ்வே நைவ சீலேந விநீயமாந
அநந்ய லப்யம் பிரதிலம்பிதோபூத் ப்ரபு ஸ்வயம் பாண்டவ தூத பாவம் –11-
எங்கும் ஈசனாம் அக்கண்ணன் அடங்கா மத களிருக்கு
அங்குசம் போலே பணிவு என்னும் அருமையான பண்புக்கு
அடங்கியவனாய் வேறு யாரும் வேண்டா மிகத் தாழ்வான
பாண்டவர்க்குத் தூதன் எனும் பதவியைப் பெற்றானே
ஸ தாத்ருஸீம் ஆத்ரியத த்ரி தாமா ப்ரேஷ் க்ரியாம் ப்ரேஷித தேவ ப்ருந்த
நநு ப்ரபூணாம் நிரபேஷ பூம்நாம் ப்ரஸாதநம் பக்த ஜநே குணத்வம் –12-
பரமபதம் மண்டலம் பாற் கடலாம் முவ்விடத்தைத்
தரிக்கின்ற மா பரனும் தேவர்களைப் பணியாட்களாய்
உரியனுமாய் இருக்குமிவன் இத்தூதன் பணி ஏற்றனன்
பெருமை நாடா மகான்களுக்கு பத்தர் அடிமை பேர் அணியாம்–பக்த பராதீனனாவதே தனக்குப் பரம பூக்ஷணம் என்று இருக்குமவன்
அபி ப்ரபூத அநு குண க்ரியாப்ய ஸ்லாகா பதம் தத்வ விதாம் பபூவ
அநந்ய தந்தரஸ்ய விபோஸ் ததே தத் நாதோசிதம் நந்த்ருஷு பாரதந்தர்யம் –13-
பிறர்க்காக அழிப்பு காத்தல் படைத்தலாம் தன் செயலை விட
சிறந்ததாக பக்தர்க்காய் செய்வதுவே தத்து வங்கள்
அறிந்திட்ட பெரியோர்கள் அதிகமாகப் புகழ்கின்றனர்
அற பணிந்தார்க்கு அதீனமாதல் நாதனுக்கு நியாயமேயாம்
தபஸ் யத புத்ர ஸமுத்பவ அர்த்தம் மார்க்கா கதம் மோசயத பிசாசம்
அஜன் மநோ ஜன்ம ப்ருதச்ச ஸுவ்ரே ஸ்வாமித்வ ஸம்வாதி பபூவ தூத்யம் –14-
மகனைப் பெற தவம் புரிய கயிலை செல்கையில் ஒரு பேய்க்கு
முக்தி தன்னை அளித்திட்ட பரமனுக்கு தூது என்பது
தகவற்றது ஆகாதவனுடை ஸுசீல்ய குணத்தாலே–பேய் -கண்டாகர்ணன்
ஸ ரோஷ ஸீராயுத ஹேதி ஸக்த்யா ஸா சீக்ருதாம் கௌரவ ராஜதாநீம்
அத்யாபி கங்கா ஸலில ப்ரவாஹே ப்ரக் ராந்த பாதாம் இவ ஸம் ப்ரபேதே –-15-
சுயம்வரத்தில் துரியோதனன் மகள் தன்னை அபஹரித்த
சாம்பனையைக் கௌரவர்கள் சிறை பிடித்ததும் பலராமன்
அத்தினாபுரம் தன்னைக் கங்கையில் இழுத்திட்டான் சினத்தினால்
அக்கண்ணன் தூதுக்காய் அந்நகருக்குச் சென்றிட்டான் —
ஸாம்ப3ம் கௌரவ்ய புத்ரீஹரண நியமிதம் ஸாந்தவநார்த்தீ2 குரூணாம்
யாதஸ்தத்3வாக்ய ரோஷோத்3 த்4ருத கரிநக3ரோ மோசயாமாஸ ராம: |
தே கா4த்யா: பாண்3வேயை ரிதி யது3 ப்ருதனாம் நாமுசஸ்த்வம் ததானீம்
தம் த்வாம் து3ர்போ3த4 லீலம் பவனபுரபதே தாப சா’ந்த்யை நிஷேவே || (நாராயணீயம்-83 – 10)
துரியோதனின் பெண்ணை அபகரித்தால் சாம்பனைக் கட்டிப் போட்டு விட்டார்கள் கௌரவர்கள்.
அவர்களுடன் நல்ல வார்த்தைகள் பேசுவதற்காகச் சென்றான் ஸ்ரீ நம்பி மூத்த பிரான்
ஆனால் கௌரவர்கள் பேசிய பேச்சால் ஸ்ரீ நம்பி மூத்த பிரான் கோபம் அடைந்து ஹஸ்தினாபுரத்தையே
மேலே கிளப்பி விடுவித்தான். கௌரவர்கள் பாண்டவர்கள் கையால் மடிய வேண்டியவர்கள் என்பதால்
தாங்கள் அப்போது யாதவ சேனையை அங்கு அனுப்பவில்லை.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! யாராலும் இன்னதென்று கூற முடியாத லீலைகளைப் புரியும் தாங்கள்
அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் –
கத்யோதவத் தர்சித கஞ்ச தீப்தீந் ப்ராஞ்ஞா த்ருசோ பூமி ப்ருத ஸபாயாம்
ப்ராப்தோயதோ பாநுர் இவ த்ரி தாமா ப்ரச் சாத யாமாஸா குரூந் ஸ்வ தாம்நா –16-
பர ப்ரஹ்மம் கண்ணன் தன்னை மதிக்காமல் இருக்க எண்ணிய
கௌரவர்களை த்ருதராஷ்ட்ரன் ஸபைக்குள்ளே ஸூர்யன் போல்
தோன்றியவரை மின்மினி போல் சிறு ஒளியுடையராக்கி விட்டு
அவர்கள் உளது தெரியாதபடி ஆக்கிட்டான் தன் சக்தியால்
கழல் மன்னர் சூழக்* கதிர் போல் விளங்கி* எழலுற்று மீண்டே* இருந்து உன்னை நோக்கும்*சுழலை பெரிது உடைத்* துச்சோதனனை* அழல விழித்தானே! அச்சோ அச்சோ* ஆழி அங் கையனே! அச்சோ அச்சோ–1-8-5
ததா கமேந பிரதிபன்ன ஹர்ஷா தத் தர்சநேதா ஹித பார வஷ்யா
அதர்கித பர ஸ்ம்ருத வைர பந்தா வ்ருத்திம் த்விஷந்தோ விதாதுர் யதாஹம் –17-
அவன் வரவைக் கண்டதுமே ஆனந்தம் உற்றவராய்
அவனிடத்து இருந்த நீள் பகை தன்னை உடன் மறந்த
அவ்வரிகள் தக்கவாறு அவனிடத்தே உறவாடினார் –அவ்வரிகள் -அந்த எதிரிகள்
உலூ கலே பக்த குணே ச பத்தம் குணோத்தரே கோப வதூ ஸ்தநே ச
இயேக்ஷ பந்தும் ஜகத் ஏக பந்தும் துர்யோதநோ துஸ் த்யஜ ம்ருத்யு பாச —18-
உள்ளன்பினால் கட்டுண்டான் உரலோடும் -கோபியரின்
கள்ளமில்லா பாசத்தால் கட்டுண்டான் மார்போடும்
நல் குணமில்லா துரியோதனன் எதால் அவனைக் கட்டிடுவான்
தள்ளவியலா எமன் கயிற்றால் தான் கட்டுண்ணப் போகிறானே
ப்ரகாஸயன் கிஞ்சித் இவா ப்ரமேய ப்ரபாவம் ஆத்மீயம் அநந்ய வேத்யம்
முஹு ப்ரதீபா சரணோத் ஸூகாநாம் மோகா ஸதாம் மூடதியாம் அகார்ஷீத் –19-
பிறர் அறிய இயலாதவன் மேன்மையினை அக்கண்ணன்
சிறிது புலப்படச் செய்து தனை வதைக்க ஆர்வமுடை நல்
அறிவில்லா அவர் விருப்பம் அறும் படியே செய்திட்டேனே -விஸ்வ ரூபம் எடுத்து அவர்கள் அழியும் படி செய்து அருளினான்
யுத்3தோ4த்3யோகே3த2 மந்த்ரே
மிலதி ஸதி வ்ருத: ப2ல்கு3னேன த்வமேக:
கௌரவ்யே த3த்த சைன்ய: கரிபுர மக3மோ
தௌ3த்யக்ருத் பாண்டவார்த்த2ம் |
பீஷ்மத்3ரோணாதி3 மான்யே தவ கலு வசனே
தி4க்ருதே கௌரவேண
வ்யாவருண்வன் விச்’வரூபம் முனிஸத3ஸி புரீம்
சோ’ப4யித்வாSS க3தோபூ4: || (நாராயணீயம்-86 – 5)
பிறகு போருக்கு வேண்டிய பிரயத்தனமும் , அதற்கான மந்திராலோசனையும் நடை பெற்றன.
ஸ்ரீ அர்ஜுனன் தாங்கள் ஒருவரையே துணையாக வேண்டினான்.
துரியோதனன் மொத்த யாதவ சேனையின் உதவியைப் பெற்றான்.
பிறகு ஸ்ரீ பாண்டவர்களின் தூதுவனாக ஹஸ்தினாபுரம் சென்றீர்கள். ஸ்ரீ பீஷ்மர் ஸ்ரீ துரோணர் போன்றவர்களால்
வெகுமானிக்கபடும் தங்கள் வாக்கு, துரியோதனனால் நிராகரிக்கப் பட்டது.
அங்கே சபையில் விச்வ ரூபத்தை எடுத்துக் கொண்டு பட்டணத்தைக் கதி கலங்கச் செய்து விட்டுத் திரும்பி வந்தீர்கள் அல்லவா?
ஸ்வ வேதிதம் ஸம்ஸதி தார்த்தராஷ்ட்ரே சந்திஸ் ஸதோ தர்ம ஸூதஸ்ய வாக்யம்
அநாததாநே முரபிந் நிவ்ருத்த ஸ அநு க்ரஹோ விக்ரஹம் அந்வ மம்ஸ்த –20-
அவையில் தான் எடுத்துரைத்த தர்மபுத்ரன் உடன்பாட்டை
கௌரவர்கள் ஏற்காததால் முராசுரனை வதைத்த பிரான்
தூதின் நின்று பின் வாங்கி சண்டைக்கு அனுமதித்தனனே
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-1-
நராம் ச ஜூஷ்டேந தநஞ்ஜயேந ப்ரதீ பவன் சாரதிர் ஆத்மநா ச
தநுர் ப்ருதா தோத்தர ப்ருத ச பேஜே ப்ருதக்த்வம் ஐக்யம் ச யதா ப்ரமாணம் –21–
நரன் நாரணர் அர்ஜுனனும் கண்ணனுமாய் இருக்கின்றனர்
சீடனாக இருந்திட்ட நரன் தேரின் முதலாளியும்
குருவான நாரணரோ தேரோட்டியும் ஆகி யுள்ளனர்
கண்ணனுடன் அர்ஜுனனும் இணை பிரியா நண்பராவார்
இருவரிலே குருவான நாராயணர் சாரதியானார்
சீடனாக இருந்தவன் தேருடைத் தலைவனானான்
இருவர்களும் மாறுபட்ட இடமிருப்பதால் வேறுபாடும்
இருவர்களும் சேர்ந்து இருப்பதால் ஐக்கியமும் தோன்றிடுதே –
ரதாதி ரூடம் ச ரதம் ச ரக்ஷன் யதார்த்ததோ தர்சயதி ஸ்ம யந்தா
த்ரயந்த சிந்தா நிரபேஷம் ஈஷ தத் தாத்ருசம் தத்த்வ விபாகம் ஆத்யம் –22
தேர் ஏறிய அர்ச்சுனனனையும் தேரினையும் காப்பவனாம்
பார்த்த சாரதி மறை தன்னில் பகர்ந்திட்ட தத்வங்களின்
பிரிவுகளாய் சேதனனும் அசேதனனும் ஈஸ்வரனும்
இருக்கின்ற மூன்றினையும் அறிவித்தான் நேராகவே
புரஸ் ஸ்திதே கோப்தரி விஸ்வ ஹேதவ் பஸ்சாத் அவஸ்தயிநி தத் ப்ரவர்த்தயே
அநந்ய யோகாத் ஸ ரதோ பபார ப்ராதீத வேத்யாம் ப்ரணவ ப்ரவ்ருத்திம்–23-
தேர் தன்னைப் பார்ப்பவருக்கு முதன் முதலில் தெரிகின்றவன்
காரணமாய் அனைத்துக்கும் காப்பவனும் கண்ணன் தான்
பார்த்தன் பின் தோன்றியனாய் பரமனுக்கு உட்பட்டவன்
தேர் தன்னை மறை வல்லோர் ப்ரணவம் எனத் தெளிகிறார்கள்-
ப்ரபுர் பபவ் ப்ரக்ரஹ தோத்ர பாணி காலாத்மநா பாவித பாச தண்ட
யதா ததா தேவ கணேந மேநே சாந்தம் பலம் சாந்த நவ ப்ரதாநம் –24-
கடிவாளமும் சாட்டையும் கையிலுடைய இக்கண்ணன்
ஈட்டி பாசக் கயிற்றினையும் ஏந்திய எமன் போல் தோன்றிய
அச்சமயமே தேவேந்திரன் கங்கை மைந்தன் தலை வகிக்கும்
அச்சேனை அழிந்தது என அறுதியிட்டது அச்சமயமே –
துரந்தர ஸ்வர்க்க நிகேத நாநாம் துர் யோத்தி தைர் தூ சரிதா ரஜோபி
ரராஜ மத்யே ரத யூத பாநாம் கோஷ்டே பஸூநாம் இவ கோப வேஷ –25-
தேவர்களைக் காக்கின்ற சுமை தன்னை ஏற்றுள்ள
தேவ தேவன் துரகதங்கள் கிளர்ந்திட்ட தூள் படிந்த
தேகமுடன் மகா ரதர்கள் சூழ்ந்தவனாய் கோக்களிடை
கோபனைப் போல் போர்க்களத்தின் நடுவினிலே தோன்றினனே
ஸமுத்ர ஸங்காத நிபே நிருபாணாம் ஸைன்ய த்வயே ஸம் யதி ஸம் ப்ரவ்ருத்தே
அஸ்தாந காருண்ய வஸாத் நிவ்ருத்தம் தனஞ்ஜய வீத சுசம் விதேநே –26
இரு கடல்களின் கொந்தளிப்பாய் இரு படைகளும் போர் செய்ய
இருக்கின்ற நிலை தன்னில் இரக்கமாகா ஸமயத்தில்
அருச்சுனனோ திடீரென்று உறவினரைக் கொல்ல மனம்
வருந்திடவும் அக்கண்ணன் வருத்தத்தைப் போக்கிடனனே –
கீத உபதேஸம் –27-32-
பலாத் அபி ஸ்வாது தம ப்ரரோஹம் ப்ரோத்ஸாஹநே ஸக்யுர் இவோத் யதஸ் ஸ
ஜகத் ஹிதார்தாய ஜகவ் தயாவாந் அந்யைர் அவிஜ்ஜேயம் அநந்ய தர்மம் –27-
கருணைக் கடலாம் கண்ணன் தன் தோழனுக்கு ஊக்கத்தைத்
தருபவன் போல் உலகத்தின் நன்மைக்கு என உடல் பயனிலும்
பெரிதான பகவானிடம் பற்றுடைய பக்தியோகம்
பெருக்கின்ற தர்மத்தை கீதை முகமாய் உபதேசித்தானே-
சிரந்தந ஸ்நேஹ தயாதி மூலம் சிந்தார்ணவம் நிஸ் தரதோ துரந்தம்
க்ரீடிநஸ் கேஸவ ஸூக்திர் ஆஸீத் காலோசித காசந போத பாத்ரீ —28-
பிறப்பினின்று தொடர்ந்து வந்த நட்ப்பு கருணை போர் தன்னில்
இறப்பதுவும் அதர்மமோ எனும் அச்சம் குலம் கழிவதில்
வருத்தத்தின் மூலமான வரையில்லா சிந்தையெனும்
பெரும் கடலைக் கடக்க பரமன் பகர்ந்துவே கப்பலானதே-
அபங்குரைர் தவ்த பல அநு ஷங்காத் வித்யா சரைர் விஸ்வ குரோர் உபாத்தை
விவேக தத்வா விஷமான் அஜை ஷீத் அந்தஸ் ஸ்திதாந் ஜிஷ்ணுர் அராதி சங்காந் –29-
வில்லேந்தி வெளிப்பகைவரை வெல்வதற்கு முன்னாக வெற்றி சீலன் காண்டீவன் உள் பகைவரை விவேகம் எனும்
வில்லேந்தி குருவான கண்ணனிடம் கற்றிட்ட வித்யைகளாம் அம்புகளால் வெற்றி தனை அடைந்தனனே
உள் பகைவர் அடங்காவையால் உறிய கீதையின் அறிவுரைகளாம்
அம்புகளும் பரிசுத்த பலன்களுடன் சேர்ந்து இருப்பதால்
உள் பகைவரை அறிவு எனும் உத்தமமான அம்புகளால்
அடியோடு வென்றிட்டான் அக்கண்ணனின் அருளாலே-
உபக்ந பூதாம் ஸ்ருதி வல்லரீணாம் உபாஸ்த துஷ்யந் உபதேஸ முத்ராம்
நகாம் சுபி ஷிப்த தம கலங்காம் நாதஸ்ய பார்த்தோ நத பூர்வ பாக –30-
அருச்சுனனும் முன் வணங்கி அமர்ந்திட்டு இருப்பவனாய்
மறைக் கொடிக்குக் கொழு கொம்பு போன்றதாயும் நகங்கள் ஒளி
பரவி இருள் என்னும் அறியாமையை புறந்தள்வதும் கண்ணனுடைத்
திருக்கையின் உபதேஸ முத்திரையை ஊர்ந்து நோக்கித் தெளிந்து வந்தனே
விபக்த ஸாமாந்ய விசேஷ தர்மா ப்ராதுர் பபூவ உபநிஷத் ப்ரபோர்யா
ஸ ஏவ தாம் வ்யாஸ முநிஸ் ஸமீசீம் பர்ய க்ரஹீத் பாரத வேத வக்தா –31-
இவ் வுலகத்தின் அற நெறியையும் உயர் முக்தி நெறிகளையும்
செவ்வையாக எடுத்து உரைக்கும் கீதை என்னும் துணை மறையை
அவ்வீஸ்வரன் உபதேஸித்தான் அவனே வ்யாஸ முனிவராய்
அவ்வுரையை பாரதத்திலே அடக்கிட்டு வைத்தனனே
அபஞ்ஐ நீயாம் பர தர்ம சத்தாம் (சக்தாம் )அநஸ்வரீம் பாரத ஸூர்ய தீபம்
விதுஸ் ஸ்ருதிநாம் அநகாம் வயஸ்யாம் கீதாம் அசம்மூட ஐநாவி கீதம் –32-
முக்தி தர்மம் வடிவெடுத்தால் போன்றதாயும் பாரதம் எனும்
செஞ்சுடரோன் ஒளிகளிலே சற்றும் அழியா ஒளியாகவும்
மறைமகனின் குற்றமற்ற பாங்கியுமாம் கீதை தன்னை
அறிவிலார் அல்லாதார் எவராலும் பழிக்க இயலா
கபி த்வஜஸ் தஸ்ய விபோர் அபஸ்யத் ததர்ப்பிதம் சஷுர் அவாப்ய திவ்யம்
விரிஞ்ச பூர்வைர் அபி துர் நிரீஷம் விஸ்வாஸ்ரயம் ரூபம் அசேஷ மூர்த்தே -33-
கண்ணனாகவே அளித்திட்ட திவ்ய கண்ணால் அனைத்தினையும்
தன்னுடலில் யுடையதான நான்முகனும் காண இயலா
அண்டங்கள் அனைத்திற்கும் ஆதாரமாம் அவ்வுருவத்தைக்
கண்டிட்ட அருச்சுனனும் வியப்புடனே கண்டிட்டனனே
தஸ்மிந் அபி க்யாப்த ஸமஸ்த லோகே ஸ தத் ஸ்வரூபேண விகல்ப்ய மாநே
விடம்பி தாந் கோபுர தாரி பிம்பை தேவான் விபோர் ஐக்ஷத திவ்ய தேஹே –34-
உலகெல்லாம் பரவியுள்ளதால் இவ்வுருவே பரமாத்மனோ
அலதுயவன் திரு மேனியோ எனப்புரியா மூர்த்தியிலே
எலா தேவரும் இருப்பதனை உற்று நோக்கி கோபுரத்தில்
சிலைகளினைப் போல் இருக்கும் தேவர்கள் என உணர்ந்தனனே-
ப்ரக்யாத தீஷிதம் ப்ரணதார்த்தி பங்கே பார்த்தஸ் ததா தைத்ய ரிபும் ப்ரபந்ந
விநாஸ யாமாஸ பலம் ரிபூணாம் விபத் ப்ரதீ கார பரேண சக்யா –35-
பக்தர்களின் துயர் விலக்க ப்ரதிஜ்ஜை யுடையவன் என
தக்கவறியும் அர்ச்சுனன் அவன் தாள் பணிந்து தமக்கு இழைக்கும்
மிக்க கொடும் செயல்களுக்கு எல்லாம் பதில் அளிக்கும் நோக்குடனே
அக் கொடியவரின் சேனைகளை அழிப்பதற்குத் தொடங்கினனே –
ஸ்வ ஹஸ்த பத்மாஞ்சித தோத்ர பாச ஸ்வச் சந்த லீலா ஸஹ தர்ம சாரீ
கதா கதைர் அப்ரதிமை ஸ சக்ரே ஜய ஸ்ரீயோ ஜைத்ர ரதேந டோலாம் –36-
தன் விருப்பம் எனும் லீலா தேவிக்கு உடன்பட்டு
தன்மங்களைச் செய்கிறானாய் தாமரை என திருக்கைகளில்
தண்டகலினம் கொண்டு வெற்றி தரும் தேரில் இங்கும் அங்கும்
ஸஞ்சரிப்பவனாய் ஜய லஷ்மியை ஊஞ்சலில் ஆட்டினனே –
ஸ விஸ்மய ஸம்யதி ஸவ்யஸாசீ தத் தாத்ருசா சாரதி நா ஸமேத
மநோஜவா நாம் நிஜஸாயகாநாம் அக்ரே சரம் ஸ்யந்தனம் அந்வ பஸ்யத் –37-
இடக்கையாலும் சரம் வீசும் அர்ஜுனனும் அப்படித் தேர்
விடும் சாரதி யுடன் போரில் மநோ வேகமாய் விரைந்தே சென்
றிடும் தனது சரத்துக்கு முன் தேர் செல்வதை உவந்திட்டனே-
யதா ந்யச்ச த்யயம் இந்த்ரியாச்வாந் ஜீவ ஆஸ்ரய தேஹ ரதே நிபத்தான்
ததார்ஜுன ஸ்யந்தந துர்யநேதா பபூவ நான்யேந நிதர்ச நீய –38-
ரதமான தேஹத்தில் இந்திரியங்களை உள்ளிருந்து
இருடீகேசன் ஆள்வது போல் அர்ஜுனன் தேர் குதிரைகளை
செலுத்தி வந்த அவனுக்கு நிகரானவன் யாருமில்லை –
யதேக தேசே நிகிலம் ததந்யத் தத் தேஹ பாகேஷு ச ஸம் விபக்தம்
ரத ஏக தேச தம் அவேஷ்ய பார்த ப்ரா புத்த தம் சாரதிம் அப்ரதர்க்யம் –-39-
எந்தப் பரமனின் ஒரு பக்தியில் எலாம் ஒடுங்கி இருந்திடுமோ
எந்தப் பரமனின் அங்கங்களில் அவையவைகள் பிரிந்து இருக்குமோ
அந்தப் பரமன் தன் தேரின் ஒரு பகுதியில் கிரீடி கண்டு
இந்தத் தேரின் பாகனின் நிலை அறிதற்கு அரிது என உணர்ந்தான்-
நிவர்த்திதம் வைரி ஜநோபமர்த்தாத் ந்யஸ்தம் ரதே சக்ரம் உபாததாந
நத ப்ரதிஜ்ஞ அநுபரோத ஹேதோ ஆத்ம ப்ரதிஜ்ஞம் அஜஹாத் ஸ்வ தந்த்ர -40-
எதிரிகளை அழித்திடற்கு ஆயுதமே எடுக்கேன் எனும்
சத்தியத்தை தன் பக்தர் பிதாமகரின் ஸத்யத்தை
ஸத்யமாக்க தன் கையிலே திருவாழியைக் கொண்டிட்டானே –
ப4க்த்தோத்தம்ஸேSத பீ4ஷ்மே
தவ த4ரணி பரக்ஷேப க்ருத்யைக ஸக்தே
நித்யம் நித்யம் விபி4ன்த3தி அயுத ஸமாதி4க2ம்
ப்ராப்த ஸாதோ3 ச பார்த்தே2|
நிச்’சஸ்த்ர தவ ப்ரதிக்ஞாம் விஜ ஹத3ரிவரம்
தா4ராயன் க்ரோத4 சா’லீவ
ஆதா4வன் ப்ராஞ்ஜலிம் தம் நத சி’ரஸா மதோ2
வீக்ஷ்ய மோதா3த3 பாகா3 : || (ஸ்ரீ நாராயணீயம்-86- 7)
பக்த சிரோன்மணியாகிய ஸ்ரீ பீஷ்மர், தாங்கள் செய்ய விரும்பியபடியே பூ பாரத்தை ஒடுக்கலானார்.
ஒவ்வொரு நாளும் பதினாயிரத்துக்கும் அதிகமான வீர்களைக் கொன்று குவித்தார்.
அதைக் கண்ட ஸ்ரீ அர்ஜுனன் மனம் சோர்ந்து விட்டான். போரில் ஆயுதம் எடுப்பதில்லை என்று தாங்கள்
செய்திருந்த பிரதிக்ஞையை உதறித் தள்ளினீர்கள், கோபத்துடன் சக்ராயுதத்தை எடுத்துக்கொண்டு
ஸ்ரீ பீஷ்மரை நோக்கி ஓடினீர்கள்! தலையைக் குனித்து அஞ்சலி செய்து கொண்டிருந்த
ஸ்ரீ பீஷ்மரைக் கண்டதும் சந்தோஷத்துடன் திரும்பிச் சென்று விட்டீர்கள் அல்லவா?
த்விஷத் ப்ரயுக்தம் துரபோஹம் அஸ்த்ரம் புஜாந்தராலேந விபுஸ் ப்ரதிச்சந்
விதாய வைகல்பிக வைஜயந்திம் பிரச்சாதிதம் ப்ராணயதி ஸ்ம பார்த்தம் –41–
பகதத்தன விட்ட வைஷ்ணவ அஸ்த்ர சக்தியை அர்ஜுனனால் அடக்கப்பட மாட்டாது என்று தயை புரிந்து அர்ஜுனனை தனது திரு மேனியால் மறைத்து அத்தைத் தனது திருமார்பில் கொண்டான்
அது வனமாலை போல் பொலிந்தது -இவ்வாறு அவ்வாபத்தின் நின்றும் அர்ஜுனனை ரக்ஷித்து உயிர் அளித்து அருளினான் –
நிவேசிதாம் தஸ்ய பதே ச பூஜாம் நிஸாம்ய கங்காம் இவ சந்த்ர மௌலவ் (சம்பு )
அநந்ய ஸாமாந்யம் அமம்ஸ்த ஸக்யூஸ் சங்கோச வைதேசிகம் ஈஸ்வரத்வம்–42-
கண்ணனுடைய திருவடிகளில் தானிட்ட புஷபங்கள்
கங்கையைப் போல் சிவனுடைய திருமுடியில் அர்ஜுனனே
கண்டிட்டுத் தன் தோழன் கண்ணனுடைய இறைமையானது
இன்னொருவர் இடத்தினிலே இல்லாததை உணர்ந்திட்டானே –
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததோ
திவாகரே அநஸ்தமிதே அதி காடம் தமஸ் ஸ்ருஜஸ் தாமஸ மோஹநார்த்தம்
ப்ரபந்ந ரஷா பிரதிபன்ன தீஷா ஸத்யாபி ஸந்தம் விததே ஸஹாயம் –43–
தன்னிடத்து சரண் புகுந்த தன் பக்தன் தன் சபதம்
தன்னை நிறைவேற்றிடற்கு ஸூர்யனின் அந்திமத்தின்
முன்பேயே நல்லிருளைப் படைத்திட்டான் திருக் கண்ணனே
ஸூரைர் அசேஷைர் அபி ஜாத ரோஷைர் ஸ துர் ஐயான் பீஷ்ம முகான் ஜிகாய
ஸஹாய ஸக்த்யா யுதி ஸவ்ய ஸாஸீ கிம் துஷ்கரம் கேஸவம் ஆஸ்ரிதாநாம் –44-
சினம் மிகுந்த தேவராலும் வெல்ல வாகா கங்கை மகன்
அனையோரை அர்ஜுனனே அன்பனான கண்ணனுடைத்
துணையாலே போரினிலே ஜயித்திட்டான் கேசவனின்
துணையுடையார் எவராலும் செய்யவாகாதும் உண்டோ தான் –
ஸ்வப்நஸ் கிம் ஆஸீத் அத வேந்த்ர ஜாலம் பபூவ கந்தர்வ புரீ கிமேஷா
இதீவ சங்காம் விததே ப்ரலீநா பதாகிநீ கௌரவ பாண்டவாநாம் —45-
மா பெரிய பாண்டவரின் கௌரவரின் சேனைகள் எலாம்
மாண்டனதால் இது வென்ன ஸ்வப்நமா மாய வித்தையா
வானத்தில் உள்ள கந்தர்வ நகரா வென வியப்பளித்ததே-
ஆக்ருஷ்ட தேவா ஸூர ஸாம் பராயை ஓஜஸ் விநாம் ஸஸ்த்ர ப்ருதாம் உதந்தை
ப்ராயஸ் ததா ப்ரத்யவஹார லீலாம் ஆகாலிகீம் விஸ்வ புக் அந்வ புங்க்த –46
ஸுராஸுரர்களின் போர்களுக்குப் போட்டியாக செயல்களினை
வீரர்கள் செய்திடவும் உலகமெலாம் அழிக்கின்ற
பெருமாளின் அகாலத்துப் பிரளயம் போல் ஆனதுவே –
ஜிகாம்ஸூ அஷ்டா தச சம்ப தந்தீ அஷவ் ஹிணீர் அத்புத பீம ரூபா
ஸ்வ தந்த்ர யாமாஸ மித ப்ரதீபாந் ஸூத்ரா வசக்தான் இவ தாரு மர்த்யான் –47-
அச்சத்தையும் வியப்பினையும் விளைத்திட்டு சண்டையிடும் அவ்
அஷவ்ணிகள் பதினெட்டையும் அழித்திடற்கு விரும்பியவனாய்
அவ் வொவ்வொரு வீரர்களை ஒரு நூலில் கோத்திட்ட
தன் கட்டில் உள பதுமைகள் போல் ஆட்டி வைத்தனனே –
க்ருஷீ வலஸ் ஸ்தாவர ஜங்கமாநாம் க்ஷேத்ரே குரூணாம் சம கால பாகாந்
அநீக சாலீந் புஜ சாலி வர்கைஸ் பலோப பன்னாந் ப்ரபு இத்ய லாவீத் –48-
குரு க்ஷேத்ரமாம் விளை வயலில் குடியானனாம் திருக் கண்ணன்
ஒரு காலில் விளைந்த சேனைகளாம் பயிரை எலாம்
அறுத்திடற்கு திறம் கொண்ட கரங்களால் அறுத்து ஒழித்தனனே –
நிஸ் தீர்ய ஸங்க்ராம மஹா ஸமுத்ரம் ஸம்ஸார போதேந பரேண சக்யா
தனஞ்ஜயஸ் தத் பதம் ஏவ பேஜே நிர் தூத நீஹார திவாகராபா –49-
ஸம்ஸாரக் கடல் கடக்க கப்பல் போல் பரமன் துணை
கொண்டவனாய் அர்ஜுனனும் கடும் பனியைப் போக்கிட்டு
மின்னிடும் அரி போல் ஆகிப் பரமன் அடியைப் பணிந்தானே-
திரௌணிஸ் ததா ஸுவ்ப்திகம் ஆததாந க்ருபேண ஸார்தம் க்ருத வர்மணா ச
ஹதா ஹிதைஸ் பாண்டு ஸூதைர் அவாப்தம் ஸைன்யவ் அசேஷம் சமயாம் பபூவ –50-
விரோதிகளை மாய்த்திட்ட பாண்டவர்களின் எஞ்சியவரை
த்ரோணருடைய மகன் அஸ்வத்தாமன் க்ருபர் க்ருதவர்மா
வரோடுமுடன் நடுவிரவில் உறக்கத்தில் உள்ள போது
விரோதமுடன் அழித்திட்டான் மிச்சமேதும் இல்லாமலே-
இத்தம் தச அஷ்டவ் ச நிபாத்ய பூமவ் அஷவ்ஹிணீ அத்புத பீம ரூபா
ஸதாம் பதிஸ் சத்த்வ ஸம்ருத்தி ரோகாத் உல்லாகிதாம் ஆதநுதேவ ப்ருத்வீம் –51–
நல்லோரின் நாதனான நம் கண்ணன் பயம் விளைக்கும்
எல்லாப் படையினரையும் அழித்திட்டு பூமிக்கு
நல்லவர்களின் வளத்திற்குத் தடையான பாரம் எனும்
இல்லல் தன்னை நீக்கிட்டு இவ்வுலகை ஸூத்த மாக்கினான் –
விபுஸ் ஸ்வ ஸங்கல்ப ஹதான் வி நக்நந் தர்மை கதாநேந தனஞ்ஜயேந
ப்ரதோத ஸந்தம் சிதயோக ஹார்ஷீத் பாஞ்சால கன்யா பரிபூதி ஸல்யம் –52-
ப்ரபு கண்ணன் மனத்தால் முன்னமே தான் கொன்றவர்களை
தர்மத்திலே நோக்குடைய தனஞ்சயனால் அழிக்க வைத்து
திரௌபதிக்கு நேர்ந்திட்ட இகழ்ச்சியாம் அம்புதன்னை பறித்து எறிந்தான் தன்னுடைய சாட்டை எனும் இடுக்கியினால் –
பர அஸ்த்ர விஸ்ரம் ஸிதம் உத்தராயா பத்மாஸநாத் யைர் அபி பூஜிதேந
கங்கா தரண்யோ ப்ரபவேந கர்பே பஸ் பர்ச பாதேந பரா வரேஷ –53-
அஸ்வத்தாமா என்னும் எதிரியுடைய ஓர் அஸ்த்ரம்
பொசிக்கிட்ட உத்தரையின் கர்ப்பத்தை உயிர்ப்பிக்க
திசைமுகன் முதலானார்கள் தொழுதிட்டும் பூமிக்கும்
கங்கைக்கும் பிறப்பிடமுமாம் தன் பதங்களால் தொட்டு அருளினான் –
விப் லோஷிதம் த்ரவ்ணி சரேண பாலம் சஞ்சீவ யந் பாத ரஜஸ் ப்ரபாவாத்
வதூ க்ருத ஷுத்ர சிலா விசேஷம் ராமாநுஜோ ராமம் இவான்வகார்ஷீத் –54
அந்த சிசுவைத் தன் பாதத் தூசி தன்னால் உயிர்ப்பித்ததால்
அந்தக் கண்ணன் கால் தூளால் ஒரு கல்லைப் பெண்ணாகிய
முந்தைய தசரத ராமனை ஓத்திட நினைத்தான் போலும் –
தஸ்ய ஸ்ருதி ஸ்ரேணி சிரோ த்ருதா நாம் ஸ்பர்ச பிரஜே சாதிபிர் ஈப்ஸிதோபூத்
பரீக்ஷித் உத்தான பரீ ஷிதா நாம் அகச்சிதாம் அங்க்ரி ரஜஸ் கணா நாம் –55-
எல்லாவித பாபத்தையும் அகற்றிடற்கு வல்லனவும்
எல்லாவித உபநிடங்களுக்கும் ஏற்றனவும் பரீட்சித்தை
உள்ளவனாய் ஆக்கினதும் ஆகிய செயல்கள் புரிந்ததால்
வல்லவனான அடித்துகள்கள் பிரமனாதிகள் விரும்பினரே
அஜா ததீ நாம் (அஜஸ் ததா நாம்) த்ருபத ஆத்ம ஜாயா காலஸ்ய தீப்தாம் இவ கட்க ரேகாம்
விபக்ஷ ஸம்ஹார மஹா புஜங்கீம் வேணீம் ப்ரியை ஸம் யமயாம் பபூவ –56-
புறக்கணித்தும் திடமுள்ளதும் யமன் வாளின் ஒளி போன்றும்
செறுநர்களைக் கொல்லும் மா சர்ப்பத்தினை போன்றதுமாம்
திரௌபதியின் கரும் தூங்கல் தொங்குவதை அவளுடைய
பர்த்தாக்களைக் கொண்டே யவன் முடிந்திட்டு அருளினனே-
பிதா மஹாய பிரததாந பார்த்த சர ப்ரயுக்த சயனம் யத் அக்ர்யம்
யோகாஸநம் யோஜித சித்த தைர்யம் ததேவ பர்யாப்த குணம் ததா ஆஸீத் –57–
அம்புகளால் அர்ஜுனன் பிதா மகற்கு அமைத்திட்ட
அம்பு பள்ளி தம் மனத்தினை ஒரு நிலையில் வைத்திடற்குச்
செம்மையான பண்புகள் எலாம் நிறை யோக இருக்கை யானதே-
விந்யஸ்ய தர்ம தநயே விஜய அதிகாரம் ஸக்ய அர்ஜுநேந யஸஸேவ தநுர் தராணாம்
ததமவ் ச தைத்ய மதநோ யுதி பாஞ்ச ஜன்யம் வ்ருஷ்ண் யந்தகாதி பரி சேஷித பூமி பார –58-
அரக்கர்களை அழித்து வரும் அக்கண்ணன் வில்லாளி
அர்ஜுனனாம் தன் தோழனின் ஆற்றலினால் தர்ம புத்ரன்
வெற்றியாளி என விளங்க வைத்திட்டு யாதவர்கள்
திரள் புவி சுமை எனும் நிலையில் தன் சங்கை ஊதிட்டானே
ப்ரத்யாதி நாய ரதம் ஆத்த ஜயஸ் ஸ ஜன்யாத் தன்ய அவலோகந தனஞ்சய தர்ச நீய
சாரத்ய ஸம்வித வதீ ரித ஹேதி ஜுஷ்ட ஸேநா பராக பரிதூ ஸர குந்தல ஸ்ரீ –59-
தேரோட்டியாய் இருக்க முடிவு செய்ததினால் விட்டப்போர்
கருவிகள் எல்லாம் மீண்டு அடைய சேனைகளின் தூள் படிந்த தன்
உருவம் எல்லாம் அழகுற்ற வெற்றி பெற்ற அர்ஜுனனின்
தேர் தன்னை போரினின்று திருப்பிட்டனன் கண்ணனுமே
ஆலிங்க்ய காடம் அவகாட ரஸம் ரணாப்தவ் வீர வ்ரணை க்ருத விபூஷணம் இந்த்ர ஸூநும்
அந்நிய அவதார பரி கல்பந கேலி லோபாத் ஐக்யம் நிநாய நிஜம் அம்சம் இவான்யநிஷ்டம் –60-
போர்க்களத்தின் மகிழ்ச்சியிலே மூழ்கினனாய் வீரன் பெறும்
போர் வடுக்களை அணிகளாய்ப் பெற்றவனாம் அர்ஜுனனை
ஆரத்தழுவி பின் வரும் தன் அவதார லீலைகளின்
காரணத்தால் அவனிடமுள்ள தன் அம்சத்தை மீட்டிட்டான் –
ரண புவி சர தல்பே லீலயா ஸாயிதேந ஸ்வ பத ஸமுதிதாயாஸ் ஸூநுநா ஸித்த ஸிந்தோ
அநதி சிர விலம்பாத் ஆப்து காமம் தரித்ரீம் கலிம் இவ சமயிஷ்யன் க்யாப யாமாஸா தர்மான் –61-
போர்க்களத்தில் வில் படுக்கையில் படுத்திருக்கும் தன்னுடைய
சீரடியினில் தோன்றிட்ட சுர நதி மகன் மூலமாக
தாரணியில் வர உள கலி தன் கொடுமையைக் குலைத்திடற்கு
ஏராளமாம் அறங்களையும் வெளியிட்டுப் பரப்பினனே –
அப்ரத்யூஹித ஸார்வ பவ்ம விபவைர் அப்யர்ச்சித பாண்டவை ப்ரத்யா வ்ருத்தி மஹோத்ஸவேந முதிதாம் ப்ராப்தஸ் புரீம் த்வாரகாம்
ப்ரத்யக்ஷம் ப்ரதயாம் பபூவ விஹரன் ப்ரீத ப்ரியாபி ஸமம் ஸூத்த ஸாம பாதகமைர் அதிகதாம் ஸ்வா தீநதாம் ஸ்ரீ பதி –62-ஸ்ரீ மத் பாகவதம் -1-9-49-11-30-
தடைகள் எலாம் நீங்கிடவே நிலையான ஆளுமை தனை
அடைந்திட்ட பாண்டவர்களால் ஆராதனை செய்யப் பெற்று தன்
னுடை மா நகர் துவாரகையில் உவப்புடன் புகுந்திட்டு தன்
னுடைத் தாரங்களுடன் மறை இசையினிலே களித்து இருந்தனனே –
———-
சுபம்
————
ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்தகுரவே நம:
—————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply