ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-11-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-11-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

ப்ரஹ்ம ருத்ராதி சர்வ ஆத்மாக்களுக்கு அந்தராத்மா பூதனாய் ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீகனாய் –
அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண நீதியாய்
அப்ராக்ருத ஸ்வ அதாசாரண திவ்ய ரூப பூஷண ஆயுத மஹிஷீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய் இருந்த எம்பெருமானை அலற்றி
அவா அற்று நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராய் அவனைப் பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதி களால் இவை ஆயிரமும் அவற்றிலே தம்முடைய அபேக்ஷிதம் பெற்று விடாய் தீர்ந்த பத்து
இவற்றை அறிந்தார் பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களுக்கும் மேற்பட்டார் என்கிறார் –

——————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-11-

நிகமத்தில் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் உயர்வற உயர்நலம் உடையனாய் -அபரிமித திவ்ய பூஷண பூஷிதனாய் சர்வ ஆயுத உபேதனாய் லஷ்மீ பூமி நீளா நாயகனாய்  -அஸ்தானே பய சங்கிகைகளான அநந்த வைனதேயாதிகளாலே  -அனவரத பரீசர்யமான சரண நளினனாய் ஸ்ரீ வைகுண்ட  நிலயனான சர்வேஸ்வரனாய் -ஸ்வ விபூதி பூதரான -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மாவாய் -தன்னைக் காண வேணும் என்று விடாய்த்து ஆஸ்ரயிக்குமவர்களுடைய விடாய் தீர சம்ச்லேஷிக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானைக் காண வேணும் என்று கூப்பிட்டு -அவனைப் பெற்று நிர்த்துக்கராய்-நிரஸ்த ஸமஸ்த பிரதிபன்னகரான ஆழ்வாருடைய பக்தி பலாத்கார பூர்வகமாக பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு -கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க முடியாத படியான  பரமபக்தியாலே பிறந்த அந்தாதியான இத்திருவாய் மொழி வல்லார் சரம்சாரத்திலே பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களோடே ஒப்பர் என்கிறார் – அயனை அரனை அவா அறச் சூழ் அரியை-என்றுமாம் –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அயனை அரனை –அவா அறச் சூழ் அரியை- அலற்றி–என்றுமாம் –1–முதலிலே மயர்வற மதி நலம் அருளினன் -என்றார் -நடுவு பல இடங்களிலும் அவனே அபாஸ்ரயம் என்றார் -முடிவிலும் -இன்று என்னைப் பொருளாக்கி -என்றும் -என் தலை மிசையாய் வந்திட்டு -என்றும் -எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தையே தமக்கு உபாயமாகப் பேசித் தலைக் காட்டினார் –
-2–இங்கனே இருக்கிற நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு அடியான ஸ்ரீயபதித்தவத்தை-மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -என்று முதலிலே தொடங்கி நடுவு பல இடங்களிலும் பிரஸ்தாவித்துக் கொடு போந்து –முடிவிலே திருவாணை நின் ஆணை என்றும் -கோலா மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும் தலைக் கட்டினார் –
-3–ததீயருடைய பிராப்தையையும் முதலிலே அயர்வறும் அமரர்கள் என்று தொடங்கி –நடுவு பல இடங்களிலும் -அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும் பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமை அகப்பட பரக்கத் பேசிக் கொடு போந்து முடிவிலும் அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்றும் தலைக் கட்டினார்-
-4-எம்பெருமானுக்கு ஸுசீல்யம் என்று கொண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு–எத்திறம் என்று தொடங்கி பல இடங்களிலும் பேசினார் –
-5-இவனுக்கு அசாதாரண திரு நாமம் நாராயணன் என்னும் இடம் -வண் புகழ் நாரணன் -என்று தொடங்கி பல இடங்களிலும் பேசிக் கொடு போந்து -வாழ் புகழ் நாரணன் -என்று தலைக் கட்டினார் –
ஆழ்வார் இப்படி ஆறி —- யால் இவ்வைந்து அர்த்தமே இப்பிரபந்தத்துக்கு பிரதான அர்த்தங்கள் என்று கருத்து –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-11-

அநந்தரம் பல அவாப்தி பிரகாரத்தை ப்ரதிபாதித்துக் கொண்டு இத்திருவாய் மொழிக்குப் பலமாக
இதில் ஞானம் யுடையவர்களுடைய ஜென்ம உதகர்ஷத்தை அருளிச் செய்கிறார்

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி-ஆஸ்ரிதருடைய அபி நிவேசம் தீரும்படி நிரவதிக சம்ச்லேஷம் பண்ணுகையாலே
விஸ்லேஷ துக்க நிர்ஹரண ஸ்வ பாவனாய் –
வஸ்ய ஸூ த்தி பண்ணும் படியான அவா அறும் படியாகத் தன் குணாதிகளாலே சூழ்ந்து ஹரித்துக் கொள்ளுமவன் என்றுமாம்
முக்த ப்ராப்யதயா பூர்வ பக்ஷதயா சங்கிதனான ஹிரண்ய கர்ப்பனுக்கும் அந்தராத்மாவாய்-
அப்படி பசுபதி மத ப்ராப்யனான ருத்ரனுக்கும் அந்தராத்மாவான
பரம ப்ராப்ய பூதனை பிராபிக்கையில் யுண்டான த்வரையாலே கூப்பிட்டு –
ப்ராப்ய ஸித்தியாலே-அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -சொன்ன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் அதி பர பக்தி ரூபமாக முடிந்த
அவா இல் அந்தாதி களான இப்பத்தையும் அனுசந்தித்து பிறந்தார் உயர்ந்தே–
`இது கலி விருத்தம் –

————————————————

இப்படி ஸ்ரீ யபதியான நாராயணனுக்குப் பிரகார பூதனான சேதனனுக்கு உபாயத்வேன ப்ரவ்ருத்தனாய்க் கொண்டு
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்கிற மஹா வாக்யார்த்தத்தினுடைய
அவாந்தரார்த்த ரூபமான ப்ராப்ய ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளாயுள்ள அர்த்த பஞ்சகத்தையும்
தத் பிரகார விசிஷ்டானாம்படி சமர்மமாக அருளிச் செய்து தலைக்கட்டினார் ஆய்த்து-

இதில் முதல் பத்திலும் இரண்டாம் பத்திலும் -ரக்ஷகத்வ போக்யத்வ விசிஷ்டமான சேஷித்வ ஸ்வரூபம் சொல்லுகையாலும்
மூன்றாம் பத்திலும் நாலாம் பத்திலும் தத் ஏக அனுபவத்வ தத் ஏக பிரியத்வ ரூபமான சேஷத்வ ஸ்வரூபம் சொல்லுகையாலும்
இந்நாலும் அநுவ்ருத்தமாக இந்த சேஷித்வ சேஷத்வங்களினுடைய அசாதாரண்யத்தைச் சொல்லுகையாலும்
பிரதம அக்ஷரத்திலே சேஷித்வத்தைச் சொல்லி
த்ருதீய அக்ஷரத்தில் சேஷத்வ ஆஸ்ரயத்தைச் சொல்லி
அவதாரணார்த்தமான உகாரத்தில் உபயோஸ் சம்பந்த தாஸ்யத்தைச் சொல்லுகிற ப்ரணவார்த்தத்தை பிரதிபாதித்ததாய்

அநந்தரம்
அஞ்சாம் பத்திலே உபாய ஸ்வரூபத்தையும்
ஆறாம் பத்திலே உபாய வரணத்தையும்
ஏழாம் பத்தில் விரோதி ஸ்வரூபத்தையும்
எட்டாம் பத்தில் தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகையாலே
சாப்தமாகவும் அர்த்தமாகவும் ஸித்தமான நமந நாமந வானான ஈசுவரனுடைய உபாய பாவத்தையும் –
நமந ரூபமான சரணாகதி ஸ்வரூபத்தையும் -ஆத்மாத்மீய ஸித்தமான அஹங்கார மமகார ரூப
விரோதி ஸ்வரூபத்தையும் தத் நிஷேதத்தையும் சொல்லுகிற நமஸ் சப்தார்த்தத்தை ப்ரதிபாதித்தாய்

ஒன்பதாம் பத்திலும் பத்தாம் பத்திலும் சர்வ வித பந்துத்வ கைங்கர்ய பிரதி சம்பந்தித்வ அபிவிஷ்டமான
பல அவாப்தியைச் சொல்லுகிற சரம பதார்த்தத்தை பிரதிபாதித்தாய்
பிரபந்த சங்க்ரஹமான் முதல் பாட்டில் அருளிச் செய்த க்ரமத்திலே சர்வ ஸாஸ்த்ர சங்க்ரஹமான
மூல மந்த்ரார்த்தை இப்பிரபந்தத்தில் விஸ்தரேண ப்ரதிபாதித்தார் ஆய்த்து

இன்னமும் பிரதமத்திலே ஸ்ரீ யபதித்தவ நாராயணத்வங்களை பிரதிபாதித்து
நாராயணனுடைய சீல ஸுலப்யாதிகளாயும் ஞானாதிகளாயும் உள்ள குணங்களை ஸஹரசமாக ப்ரதிபாதித்து
உத்தமமான க்ரியா பாதத்தால் விரோதி பூத ரஹிதமான புருஷார்த்த ரூப பகவத் கைங்கர்ய அவாப்தியை ப்ரதிபாதிக்கையாலும்
வாக்ய த்வயாத்மகமான சரணாகதி ஸ்வரூபத்தையும் வீசதீகரித்து அருளினார் ஆய்த்து

இவ்வுபாய வரணம் தத் இதர சகல நிவ்ருத்தி யுக்தமாய் இருக்கும் என்றும்
உபாய பூத குண விசிஷ்டானாய் அத்விதீயனாய் இருக்கும் என்றும் ப்ரதிபாதித்து
உபாய கார்யமான ஸமஸ்த விரோதி நிவ்ருத்தியையும்
பல சித்தி நிபந்தன தாதர்யத்தையும் ப்ரதிபாதிக்கையாலே சரம ஸ்லோகார்த்தத்தையும் விசதீகரித்து அருளினார் ஆய்த்து

ஆக சர்வ பிரகார பகவச் சேஷ பூதனாய் -அநந்ய பிரயோஜனனாய் -அநந்ய சரண்யனான இவ்வதிகாரிக்கு
ஞாதவ்யமான ரஹஸ்ய த்ரயத்தையும் சப்பிரகாரமாக பிரகாசிப்பிக்கையாலே –
இப்பிரபந்தமானது விலக்ஷணரான சாத்விக அக்ரேசர்க்கு நித்ய அனுசந்தேயமாகக் கடவது –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-11-

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார் -ஆழ்வாருடைய கிலேசம்  இன்றியே பலத்திலே அந்வயிப்பர் என்கிறார் –

அவா  அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அவா அறச் சூழ் அரியை–நித்தியமான ஸ்வரூபத்தையும் ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களையும் ஸுந்தர்யாதி விசிஷ்டமான நித்ய மங்கள விக்ரஹத்தையும் -அபரிமித திவ்ய பூஷணங்களையும் சங்க சக்ராதி திவ்ய ஆயுதங்களையும் -லஷ்மீ ப்ரப்ருதி திவ்ய மஹிஷீ வர்க்கத்தையும் உடையனாய் அஸ்த்தானே பய சங்கிகைகளான நித்ய ஸூ ரிகளாலே பரிச்சர்யமாணமான திருவடித் தாமரைகளை யுடையனாய் இருந்துள்ளவனை
அயனை அரனை--ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மாவானவனை –
அவா அறச் சூழ் கை யாவது -தன்னைக் காண வேணும் என்று விடாய்த்த ஆஸ்ரிதர் யுடைய விடாய் தீர சம்ச்லேஷிக்கை–இஸ் சாமா நாதி கரண்யத்தாலே -ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கலில் ஈச்வரத்வ சங்கை அறுக்கிறார்-அவர்களுடைய சத்தா ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஈஸ்வர அதீனம் ஆகையால் அவர்களுக்கு பாரதந்தர்யமே ஸ்வரூபம் -நிர்வாஹகத்வம் கர்மத்தால் வந்தது -இஸ் சாமா நாதி கரண்யத்தாலே நிர்வகிக்குமது அன்றியே எளியராய் இருப்பார்க்கு நிர்வஹிப்பதும் சில புடைகள் யுண்டு –அயனை அரனை–அவா அற்று-அரியை -அலற்றி -வீடு பெற்ற–என்னுதல் -/
அலற்றி-அவா அற்று- -வீடு பெற்ற–என்னுதல் -/ கூப்பிட்டு- அவா  அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்— அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் –பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -இவரைச் சொல்லுவித்த அபி நிவேசம் -ப்ரேரகனான மைத்ரேயனுடைய ஸ்த்தானத்திலே நிற்கிறது யாய்த்து –
முடிந்த -அவா இல் அந்தாதி இப்பத்து -பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி –அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூ ரிகளோடே ஒப்பர்கள் –
1- முதல் திருவாயமொழியில் நாராயண சப் தார்தத்தை அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கும் இடத்தில் -வண் புகழ் நாரணன் -என்று பிரயோகித்து -அமைவுடை நாரணன் -என்றும் -செல்வ நாரணன் -என்றும் -நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் -என்றும் -திரு நாரணன் -என்றும் -நாராயணன் நாங்கள் பிரான் -என்றும் -சொல்லிக் கொடு போந்து -திண்ணம் நாரணமே என்றும் -வாழ் புகழ் நாரணமே -என்றும் தலைக் கட்டுகையாலே -அவனுக்கு அசாதாரணமான திரு நாமம் இதுவே என்னும் இடம் தோற்றுகிறது-
2-முதலிலே மலர் மகள் விரும்பும் -என்றும் திருவுடை அடிகள் என்றும் -கமல மலர் மேலே செய்யாள் -என்றும் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்றும் -சொல்லிக் கொடு போந்து -திருவாணை நின்னாணை கண்டாய் -என்றும் கோலா மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும் தலைக் கட்டுகையாலே -ஸ்ரீ மானான நாராயணனே ப்ராப்யமும் ப்ராபகமும்-என்று இவருக்கு பக்ஷம் என்னும் இடம் தோற்றுகிறது -இவ்வர்த்தம் உபநிஷத் பிரசித்தம் -அநந்ய பாரமான நாராயண அநுவாகத்திலே-நாராயண சப் தத்தாலே சர்வாதிகனைச் சொல்லி -ஹ்ரீச்சதே லஷ்மீ ச்ச பத்நவ் -என்று உத்தர நாராயணத்திலே சொல்லிற்று –
3-முதலிலே மயர்வற மதிநலம் அருளினன் என்றும் -எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே -என்றும் சொல்லி -நாலு பிரயோகம் எடுத்து சரணம் புக்கு -தேவிமாராவாரிலே -தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த -என்றும் சொல்லிக் கொடு போந்து –இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்ந்து என் செய்வான் -என்றும் தலைக் கட்டுகையாலே -அம் மிதுனத்தைப் பெறுகைக்கு சாதனமும் அவனுடைய நிர்ஹேதுக கிருபை என்னும் இடம் தோற்றிற்று-
4-முதலிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று தொடங்கி -அடியார்கள் குழாங்களை— உடன் கூடுவது என்று கொலோ என்று பிரார்த்தித்து -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமையில் ததீய சேஷத்வத்தை பரக்கத் சொல்லி -அடியாரோடு இருந்தமை என்று தலைக் கட்டுகையாலே பகவத் சேஷத்த்வத்தின் யுடைய எல்லை யாகிறது ததீய சேஷத்வம் என்னும் இடம் தோற்றிற்று –
இவ்வர்த்தங்கள் இப்பிரபந்தத்துக்கு பிரதானம் -என்று கருத்து –
பகவத் ந்யஸ்த பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு போது போக்கு இப்பிரபந்தம் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் -கேட்டாரார் வானவர்கள் -என்றும் தானே அருளிச் செய்தார் இ றே —

————————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-11-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

பல அவாப்த்தி பிரகாரம் பிரதிபாதித்துக் கொண்டு -வீடு பெட்ரா -பலமாக ஞானம் உடையவர் ஜென்ம உதகர்ஷம் அருளிச் செய்கிறார்
உயர்ந்தே பிறந்தார் என்றவாறு -உயர்ந்தவர்களாகவே பிறப்பார்கள்
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி-ஆச்ரித அபி நிவேசம் -தீரும் படி நிரவதிக சம்ச்லேஷ அனுபவம்
விஸ்லேஷ துக்கம் தீரும் படி –
கார்யந்து ஜைமினி -காரணம் தியானிக்க -ஹிரண்ய கர்ப்பம் பூர்வ பஷிதயா சங்கீதா நான்முகன் -ந பிரம்மா ந –
இத்யாதி இவர்களும் ஸ்ருஷ்ட்யர் -ஏகோகை நாராயண ஆஸீத் –
சைவர் காபாலிகர் பாசுபதர் -அந்தராத்மா பரம ப்ராப்யம் இவனே -கார்ய காரண நிபந்தனை சாமா நாதி கரண்யம்
த்வரையாலே கூப்பிட்டு
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்-பிராப்தி சித்தி பெற்று
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த-அதி பரம பக்தி ரூபமான சரம பக்தி பரம பக்தி முடிந்த அவா –
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-இந்த பத்தும் அனுசந்தித்து -உயர்ந்தே பிறந்தார்
அவா அற -மூன்று தத்துவங்களையும் கபளீ கரித்து
வஸ்ய புத்தி பண்ணும் படி அவா அறும் படி குணங்களால் அபஹரித்துக் கொண்டு –

அர்த்த பஞ்சகம் –
ஸ்ரீ யபதி நாராயணன் -சர்வ பிரகார சேஷ பூதனுடைய -உபாயத்வேந பிரவ்ருத்தனாய் -அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி
மஹா வாக்கியம் -அவாந்தர -ப்ராப்ய பிரம்மா ஸ்வரூபம் -ஆதிகளாய் அர்த்த பஞ்சகம் –
முதல் இரண்டு பத்தால் ரக்ஷகத்வம் -போக்யத்வ விசிஷ்டமான சேஷித்வம் -அகாரார்த்தம்
அநந்யார்ஹ சேஷ பூதன் -மூன்றாம் நான்காம் பத்தில் ததேக அனுபவம் ததேக பிரிய -மகார்த்தம்
இந்த நாலும் -பிரதம அக்ஷரத்தில் சேஷித்வம் சேஷத்வ ஆஸ்ரயம் சொல்லி-
அவதாரண உகாரத்தால் சம்பந்தம் அநந்யார்ஹத்வம் -பிரணவ அர்த்தம் சொல்லி –
உபாய ஸ்வரூபம் ஐந்தாம் பத்தால்
உபாய வரணம் ஆறாம் பத்தால்
ஏழாம் பத்தில் விரோதி ஸ்வரூபம்
எட்டாம் பத்தில் தத் நிவ்ருத்தி
சாப்தமாகவும் ஆர்த்தமாகவும் -நமஸ் அர்த்தம் அருளிச் செய்து –அகங்கார மமகார நிவ்ருத்தி
சர்வ வித பந்துத்வ பிரதி சம்பந்தத்வம் ஒன்பதாம் பத்தாம் பத்தில் அருளிச் செய்து -நாராயணாய அர்த்தம்
-கைங்கர்ய பிரதிசம்பந்தி -விசிஷ்டமான பல அவாப்த்தி -சரம பதார்த்தம்
முதல் பாட்டில் உயர்வற -உயர்நலம் -சங்க்ரஹமான –
உத்கீத ப்ரணவம் மாறாடி -பத்து பத்திலும் விரித்து –
மீண்டும் சங்க க்ரஹமாக சொல்லி
பிரதமத்வத்தில் ஸ்ரீ யபதித்தவ நாராயண -கோலத் திரு மகள் உடன் – -சீல ஸுலப் யாதிகளை சொல்லி
கிரியா பாதத்தால் பிரபத்யே -பகவத் கைங்கர்யம் சொல்லி வாக்ய த்வயம் -பின் மூன்று பூர்வ -முதல் மூன்று உத்தர வாக்கியம்
–சரணாகத ஸ்வரூபம் விகசித்து அருளினார்
தத் இதர தர்மங்களை விட -பரித்யஜ்ய மாம் -உபாய வரணம் –
உபாய பூதன் அத்விதீயம் மாம் ஏக்கம் -பிரதிபாதித்து
ஸமஸ்த விரோதிகள் நிவ்ருத்தி பல சித்தி நினைப்பித்தன தாதார்த்யம் சரம ஸ்லோகார்த்தம் வீசாதீ கரித்து
சர்வ பிரகார சேஷ பூதன்
அநந்ய பிரயோஜனம்
அநந்ய யாரஹருக்கு -ரகஸ்ய த்ரயமும்
நித்ய அனுசந்தேயம் சாத்விக அக்ரேஸருக்கு –

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்-
ஞான ஆனந்தஙகளே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்-
வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்-
அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்-
திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்-
அஸ்தானே பயசங்கை செய்யும் நித்யசூரிகள் -திரு வநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
எப்பொழுதும் அடிமை செய்யும் திருவடித் தாமரைகளை உடையவனாய்-
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-சர்வேஸ்வரனாய்-
தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்-
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற அடியவர்கள் விடாய்-தீரக் கலக்கும் தன்மையான
எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு-
அவனைப் பெற்று துக்கம் அற்றவராய்-எல்லா தடைகளும் நீங்கினவராய்-
ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-ஆயிரம் திருவாய் மொழியும்-அவற்றில் வைத்துக் கொண்டு-
மேலே கூறிய படி அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-
பரமபக்தியால் பிறந்த அந்தாதியான-இத் திருவாய்மொழி வல்லார்-
சம்சாரத்தில் பிறந்து வைத்தே-அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்-என்கிறார்-

அவா அறச் சூழ் அரியை –
விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே-
ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் –
அவா அறச் சூழுகையாவது-
தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-அடியவர்களின் விடாயை தீர கலக்கை –

அயனை அரனை அலற்றி-
தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை-
அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்-
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்-
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்-
இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு-
அவை
அயனை அரனை அவா அற்று-அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச்-சூழ் அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –மற்று ஒரு வகை-

அலற்றி அவா அற்று வீடு பெற்று –
கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –
பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்-
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –
அன்றிக்கே-
அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்-
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் பேரும் உண்டானார்கள்-
அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று-அவற்றை விட்டு இவற்றைப் பற்றுகைக்கு அடி-
இவருடைய காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –
-பக்தர்களுக்கு ஹிதமாக-பராங்குசர் அருளிச் செய்தவை –

நாவலம் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலம் தீவது போலவ வல்லார் குருகூர்ப் புலவன்
கேவலம் தீம் கரும்பாம் கவி போல் எங்கும்
கூவலம் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோள் இழைத்தே-சடகோபர் அந்தாதி -58
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றும் இன்றி
விரிக்கும் தொறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரிக்கின்ற நுண்மணல் ஊற்று ஒக்கும் தொண்டர் சுரத்தலினே -சடகோபர் அந்தாதி -68

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
தரிக்க ஒண்ணாத படியான-பரம பக்தியால் பிறந்த தாயிற்று-இத் திருவாய்மொழி
இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில்-ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு-பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
பகவானுடைய திருவருள் பாதியும்-தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு-
சரீரத்தின் முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்-
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –

கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற பக்தியினுடைய இடத்திலே-
சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க – அது அடியாக பிறந்த-பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இதனை அறிந்தவர்கள்-இவ் உலகத்தில் பிறந்து வைத்தே-நித்ய சூரிகளோடு ஒப்பர் –
பிறந்தே உயர்ந்தார் –
சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் –
பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் —

அவா -சாமான்யம் -தத் தத் அதிகாரி அனுகுணமாக -உண்டே –
மோக்ஷம் பெற அவா -என்னால் முமுஷுவாக ஆழ்வாருக்கு
அயன் அரன் போல்வாருக்கு மோக்ஷம் அபேக்ஷை இல்லையே
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசனம் அவா அவர்களுக்கு போக்கி அருளினான் –
ஸூ விபூதி பூதர்-அவர்களுக்கு பார தந்தர்யம் சொல்வது -சரீரமாக இருந்து -பிரகாரத்தால் –
சகல அபேக்ஷித பிரதன்-ஸம்ஸலேஷிக்கும் ஹரி –
விஸ்லேஷ துக்கம் அபகரிக்கும் ஹரி
அவா அறச் சூழ் அரி -நாராயணன் என்னால் -இதுவே நிரூபணம் –
அரன் அயன் இவர்கள் இடம் அவா இல்லாமல் அரியை அலற்றி -என்றுமாம்
ஸ்ரீ மைத்ரேயர் கேட்க கேட்க சொன்னது போலே ஆழ்வாருக்கு பக்தி உந்த அருளிச் செய்கிறார் என்றவாறு –
பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் -வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால்
பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading