ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-10-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-
இப்படி எம்பெருமானுக்கும் மறுத்து அருள ஒண்ணாத தொருபடி பிராட்டி திருவாணை யையும் தன் திருவாணை யையும் இட்டு
நிர்ப்பந்தித்துக் கொண்டு ஆர்த்த ஸ்வரத்தாலே கூப்பிடும் அளவில்-
தாம் மநோ ரதித்த படியே எம்பெருமானும் எழுந்து அருள -அவனைக் கண்டு –
மஹான் அஹந்காராதிகள் எல்லா வற்றையும் வியாபித்து அவற்றில் காட்டிலும் பெரிதான மூல பிரக்ருதிக்கும் –
அத்தையும் வியாபித்து அதிலும் பெரிதான முக்தாத்மாவுக்கும் –
அதிலும் பெரிதான உன்னுடைய சங்கல்ப ஞானத்துக்கும் ஆத்மாவாய் இருந்த நீ
அந்த சங்கல்ப ஞானத்தில் காட்டிலும் பெரிதாய் இருந்த என்னுடைய விடாய் எல்லாம் தீரும்படி
அந்த ஜெகதாகாரனான படி அன்றியே நீயான படியே வந்து சூழ்ந்தாய் –
என்னுடைய மநோ ரதமும் ஒரு படியே முடிந்தது என்கிறார்
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-10-
எம்பெருமானுக்கு இவர் அபேக்ஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் ஆணையிட்டுத் தடுத்து பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட இவர் பிரார்த்தித்த படியே பரிபூர்ணனாய்க் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு -அபரிச்சேதயமான பிரகிருதி தத்துவத்திலும் -ஆத்மதத்வத்திலும் உன்னுடைய சங்கல்ப ஞான ரூப ஞானத்திலும் பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் -என்னுடைய மநோ ரதமும் ஒரு படி முடிய பெற்றேன் -என்கிறார் –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-
பத்துத் திக்குகளிலும் வியாப்தமாய் அபரிச்சேதயமாய் இருக்கிற பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் நிற்கிறவனே -அத்தையும் கூட வியாபித்து அதுக்கு நியாமகனான ஆத்ம தத்துவத்துக்கு ஆத்மாவானவனே -பிரகிருதி புருஷ தத்துவங்களில் இரண்டையும் வியாபித்து அவற்றுக்கும் நிர்வாஹகமுமாய் சங்கல்ப ரூபமாய் ஸூ க ரூபமான ஞானத்தை யுடையவன் –சுடர் ஞான இன்பம் -என்று எம்பெருமானைச் சொல்லிற்று ஆகவுமாம் -அதினிலும் பெரிதான என்னுடைய விடாய் கெடும்படி வந்து சம்ச்லேஷித்தாயே –
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-10-
அநந்தரம் தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகாம்படியான என் அபி நிவேசமானது கெடும்படியாக
சர்வ பிரகார பரிபூர்ணனாய்க் கொண்டு ஸம்ஸ்லேஷித்தாய் -என்று தமக்கு சாயுஜ்ய ஸித்தமான
பரிபூர்ண போக பிரதானம் பண்ணின படியை அருளிச் செய்கிறார்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ–கார்ய வர்க்கத்தை அடங்கச் சூழ்ந்து -வியாபித்து விஸ்தீர்ணமாய்
கீழும் மேலும் உண்டாகையாலே பத்துத் திக்கிலும் ஸந்நிஹிதமாய்-
உத்பத்தி விநாச ரஹிதமாகையாலே நித்தியமாய் –
ஸமஸ்த காரியங்களுக்கும் அவ்வருகு ஆகையால் அபரிச்சின்னமாய் –
போக மோக்ஷங்களை விளைக்க நல் தரையான ப்ரக்ருதியை பிரகாரமாக யுடையையாய் –
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-அந்தப் பிரகிருதி தத்துவத்தை ஸ்வ ஞானத்தால் வ்யாபித்துக் கொண்டு
காட்டில் பெருத்து ஏக ரூபத்வாதிகளாலே மேலாய்
ஸ்வயம் ப்ரகாஸத்வாதி வை லக்ஷண்யத்தை யுடையையாய்
விகாச ஸ்வ பாவமான ஞான பிரபையையுடைய ஆத்மாவை பிரகாரமாக யுடையையாய்
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-இந்த பிரகிருதி புருஷர்கள் இருவரையும் வியாபித்து அதுக்கு அவ்வருகாய்
கல்யாண குணங்களால் உஜ்ஜவலமான ஞானானந்த லக்ஷண ஸ்வரூபத்தை யுடைய நியந்தா வானவனே
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–அந்தத் தவ்ய த்ரயத்தையும் வளைத்துக் கொண்டு
அதுக்கு அவ்வருகாம் படியாய் இருக்கிற என் அபி நிவேசமானது
சமிக்கும் படியாக ஸ்வரூப ரூப குண விக்ரஹ பூஷண ஆயுத மஹிஷஹீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய்க் கொண்டு
பரிபூர்ணனான உனக்கு உள்ளே யாம்படி சாயுஜ்ய மோக்ஷத்தைத் தந்தாய் இ றே
ஓ ஓ ஓர் அதிசயமே என்று அடி தோறும் ஹ்ருஷ்டராகிறார்
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-10-
எம்பெருமானுக்கு இவர் அபேக்ஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் ஆணையிட்டுத் தடுத்து பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட இவர் பிரார்த்தித்த படியே பரிபூர்ணனாய்க் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு -அபரிச்சேதயமான பிரகிருதி தத்துவத்திலும் -ஆத்மதத்வத்திலும் உன்னுடைய சங்கல்ப ஞான ரூப ஞானத்திலும் பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் -என்னுடைய மநோ ரதமும் ஒரு படி முடிய பெற்றேன் -என்கிறார் –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ—சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ–-இப்போது பிரகிருதி புருஷாதிகளைச் சொல்லுகிறது -தம்முடைய அபி நிவேசம் பெரியவற்றில் பெரியது என்று சொல்லுகைக்காக -அவற்றுக்கு ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லாமையால் அவ்வளவையும் சொல்லுகிறது –ஸ் வ கார்யமான மஹத்தாதிகளைப் பத்துத் திக்கிலும் புக்கு எங்கும் வியாபிக்க -நித்தியமாய் அபரிச்சேதயமாய் -சேதனர்க்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவானவனே –சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ—அத்தையும் வியாபித்து அதில் காட்டில் பெரியதாய் அதுக்கு நியாந்தா வாகையாலே மேலாய் -விகாராதிகள் இல்லாமையால் விலக்ஷணமாய் விகஸ்வர தேஜோ ரூபமான ஆத்மவஸ்துவுக்கு ஆத்மாவானவனே –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சிங்கள ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே -என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–
—————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-10-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-
தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகான-கபளீ கரம் பண்ணும் படி -அபி நிவேசம் -அவா -காதல் பக்தி -சர்வ பிரகார
பரி பூர்ணனாக கொண்டு ஸம்ஸலேஷித்து சாயுஜ்யம் – சோஸ்ச்னுதே ஸர்வான் காமான் –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-பிரகிருதி -அகன்று -ஆழ்ந்து உயர்ந்து ஆகையால் சூழ்ந்து
-விஸ்தீர்ணமாய் வியாபித்து -பத்து திக்கிலும் சந்நிஹிதமாய்-பிரக்ருதிக்கு கீழ் எல்லை இல்லை உத்பத்தி விநாச ரஹிதம் நித்யம்
-தத்வ த்ரயமும் நித்யம் -நிலை மாறும் அவஸ்தா பேதம் -ஸமஸ்த காரியங்களுக்கும் அவ்வருகு பெரும் -இவற்றை பிறப்பிக்கும் –
அபரிச்சின்னமாய் போக மோக்ஷங்கள் விளை நிலம் –
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-தத் ஞானத்தால் வியாபித்து மேலாய் ஸ்வயம் பிரகாசத்தால் –
அணு -சூஷ்மம் -ஞானத்தால் பெருத்ததால் -சூழ்ந்து -நல்ல ஞானம் உடைய
மலர் விகாசம் அடைந்த சோதி ஞான வடிவம் -ஏக ரூபாத்வாதிகளால் மேலால் -ஞான பிரபையை உடைய -ஆத்மதத்வம் பிரகாரமாக கொண்டு
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-கல்யாண குணங்களால் உஜ்வலமான-சுடர் ஞான இன்பம் –
ஞானம் ஆனந்தம் கட்டடங்க உணர் முழு நலம் முழு உணர்வு முழு நலம் -முன்பே பார்த்தோம் -அத்தையே ஞானம் இன்பம் இங்கும்
-சுடர் வளர்ந்து கொண்டே -லக்ஷணம் ஸ்வரூபம் –
ஆத்மா ஞானத்தால் -ப்ரஹ்மம் ஞானம் ஆனந்தங்களாலே ஆக்கப் பட்டது –
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே-தத்வ த்ரயங்களையும் வளைத்துக் கொண்டு அதுக்கு அவ்வருகு -சமிக்கும் படி
அவன் -தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் திருமேனி விபூஷணம் மஹிஷீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய் கொண்டு பரி பூர்ணனாய் -சூழ்ந்து –
பரஞ்சோதி -வடிவுடன் -ஆழ்வார் காதல் தனக்கு உள்ளே ஆகும் படி சாயுஜ்யம் அளித்து –
சேர்ந்து இருந்து குணானுபவம் பண்ணும் பேறு– ஓ அதிசயம் ஒவ் ஒரு இடத்திலும் அடி தோறும் ஹ்ருஷ்டர் ஆகிறார் -பேர் ஆனந்தம் பெற்றார் –
எம்பெருமானுக்கு இவர் விரும்பிய கார்யத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி-
பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து-மிகப் பெரிய துன்பத்தோடு கூப்பிட்டு-இவர் வேண்டிக் கொண்ட படியே-
எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு வந்து கலந்து அருளக் கண்டு-
அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்-ஆத்ம தத்வத்தாலும்-
உன்னுடைய நினைவின் உருவமான ஞானத்திலும்-பெரியதான என் விடாய் எல்லாம் தீர-வந்து -என்னோடு -கலந்தாய்-
என்னுடைய விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது-என்கிறார் –
இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து-அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு-என்னோடு வந்து கலந்து-
உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்-என்னவுமாம் –
அங்கே பாரதம் ஆரோப்ய முனின பரிஷச்வஜே -யுத்தம் -180-39-பரதனை மடியிலே வைத்து சந்தோஷத்துடன் தழுவினார் -என்னும்படியே-
க்ருதக்ருத்ய ததா ராமா விஜுரஹ பிரதமோதக —
துயர் ஆறு சுடர் அடி -அறுக்கும் அறும் சுடர் அடி -இரண்டு நிர்வாகம் போலே –
ஆழ்வார் விடாயைத் தீர்த்து அவன் விடாயும் தீர பெற்றான் என்று நிகமிக்கிறார் –
தம்முடைய அபி நிவேசம் பெருத்த படியை இவற்றின் பெருமையை சொல்லி –ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லையே
அப்ரஹமாதமக தத்வம் இல்லையே -அதனால் இவற்றை சொல்கிறார் அவனையே சொல்லலாம் படி –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-
தன்னிடத்தில் உண்டான மகத்து முதலான தத்துவங்களை-பத்து திக்கிலும் புக்கு-எங்கும் ஒக்கப் பரந்து-
என்றும் உள்ளதாய் -அளவிட முடியாததாய்-
மக்களுக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான-மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே –
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-
அதற்குள்ளும் பரந்து-அதனைக் காட்டிலும் பெரியதாய்-அதனை ஏவுகின்றது ஆகையாலே மேலாய்-
விகாரம் முதலானவைகள் இல்லாமையாலே சிறந்ததாய்-
மலர்ந்த ஒளி உருவமான ஆத்மா வஸ்துவுக்கும்-ஆத்மா ஆனவனே –
பேறு பெறுகிற இப்பொழுது-மூலப் பிரக்ருதியையும் ஆத்மாவையும் சொல்லுகிறது-
கீதையில் ஆத்மாவை -சர்வ கதம் -வெல்வேறு ஜீவாத்மாக்கள் -மூலம் வியாப்தி -என்றபடி –
தம்முடைய காதல் பெரியவற்றிலும் பெரியது என்கைக்காக –
அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய-தோன்றுதல் நிலைத்தல் இல்லாமையாலே அவ்வளவும் சொல்லுகிறது –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ –
சுடர் இன்ப ஞானமேயோ -ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனே-
சுடர் -சங்கல்ப ரூபமான -தடை இல்லாததால் சுடர் என்கிறார்-
அவை இரண்டினையும் தன்னுள் அடக்கிக் கொண்டு-அவற்றுக்கு நிர்வாஹகனான-நினைவின் உருவகமாய்-
சுகத்தின் உருவமான ஞானத்தை உடையவனே என்று-நினைவின் உருவமான ஞானத்தினைச் சொல்லுதல்-
அன்றிக்கே
சுடர் ஞான இன்பமேயோ என்று-ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் –
அனுகூல ஞானமே ஆனந்தம் –
சூழ்ந்து –
மேலே கூறிய மூன்று தத்துவங்களையும்-விளாக்குலை கொண்டு –
அதனில் பெரிய –
அவை குளப்படியாம் படி பெரிதான –
என் அவா –
என்னுடைய காதலை
அறச் சூழ்ந்தாயே-
அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே –என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே-
பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே-மீண்டு புகுந்து-
ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து-உச்சியை மோந்து உகந்து-அணைத்தால் போலே -ஆயிற்று-
இவருடைய விடாய் கெடும்படி கலந்தது –
அற -வஸ்து அல்பம் -என்கிறார் அபாவம் என்கிறார் இல்லை -சங்கல்பம் தடுக்க முடியாத ஞானம் –
-அனுகூலமானதால் ஆனந்தம் -ஆஸ்ரயம் ஞானமேயோ-ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா என்றவாறு –
மேரு மலை மேல் கீழே உள்ள கடுகு பார்த்து அல்பம் என்னுமா போலே -அல்பத்தவம் என்றவாறு –
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply