ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-9-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-9-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

ஸ்ரீ வைகுந்தம் புகும் அளவில் வாசலில் வானவர் -ஸ்ரீ வைகுந்தன் தமர் ஆகையால் எங்களுக்கு ஸ்வாமிகளான நீங்கள்
எங்களுடைய பகவத் கைங்கர்ய ரூபமான ஸம்ருத்திகளைக் கொள்ள வேணும் என்று சமர்ப்பித்து
பகவத் குண அனுபவ ஜெனித நிரதிசய ப்ரீதி காரித சர்வ பரிசர்ய ஏக போகரான அமரரும்
பகவத் குண அனுபவ ஜெனித ப்ரீதியாலே அப்ரக்ருதிங்கதராய் ஒரு பிரவ்ருத்தி பண்ணுகைக்கு
ஷமர் இன்றியே இருக்கும் முனிவரும்
பூமியுள்ளே யுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு நாட்டிலே வருகைக்கு நாம் என்ன பாக்யம் பண்ணினோம்
என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-9-

ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று திரு வாசலிலே முதலிகளாலே சம்மதரானவாறே-அங்குத்தை நித்ய ஸூரிகள் சம்சாரிகள் ஆனவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் வருவதே -இது என்ன புண்ய பலம் -என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார் –

வைகுந்தம்  புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

ஸ்ரீ வைகுண்டத்தில் புகும் காட்டில் திருவாசலில் முதலிகள்  வைகுந்தனுடையார் எங்களுடைய ஸ்வாமிகள் எங்கள் பதத்தைக் கைக் கொள்ள வேணும் என்று -/ அமரரும் முனிவரும்-கைங்கர்ய தாரகரான அமரரும்  அதுக்கும் ஷமர் அன்றிக்கே பகவத் குணங்களில் ஈடு பட்டு இருக்கும் ஸ்வபாவரான முனிவரும் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-9-

அநந்தரம்-ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய சேஷ பூதரானவர்கள் நமக்கு உத்தேசியர் என்று
திரு வாசல் காக்கும் முதலிகளானார் ஆதரித்த படியை அருளிச் செய்கிறார் –

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்–ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று புக்க அளவிலே திரு வாசல் காக்கும் முதலிகளானவர்கள்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று-வியந்தனர் – ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆதரணீயரானவர்கள் நமக்கு உத்தேச்யர்-
எங்கள் அதிகாரத்தில் புகுர வேணும் என்று உகந்தார்கள்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் –அத்தேசத்தில் கைங்கர்ய பரராயும் குண அனுபவ பரராயும் இருக்கிற அமரரும் முனிவரும்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–என்று வியந்தனர் -பூமியிலே சப்தாதி விஷய ப்ரவணராய் இருந்தவர்கள் பரமபதத்தே
புகுவது ஒரு பாக்யமே என்று உகந்தார்கள்
வியந்தனர் என்கிற இடம் -எமது இடம் புகுது என்று வியந்தனர் என்றும் –
அமரரும் முனிவரும் வியந்தனர் -என்றும் இரண்டு இடத்திலும் அந்வயிக்கிறது –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-9-

ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று திரு வாசலிலே முதலிகளாலே சம்மதரானவாறே-அங்குத்தை நித்ய ஸூரிகள் சம்சாரிகள் ஆனவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் வருவதே -இது என்ன புண்ய பலம் -என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார்

வைகுந்தம்  புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று–பரமபதத்தைச் சென்று கிட்டின அளவிலே திரு வாசல் காக்கிற முதலிகள் -ஸ்ரீ வைகுண்ட நாதனுடையார் எங்களுக்கு ஸ்வாமிகள் -எங்கள் பதத்தைக் கொள்ள வேணும் என்றாய்த்து அவர்கள் பாசுரம் -பயிலும் திருவுடையார் யாவராலும் எம்மையாளும் பரமர் -என்ற இவரைப் போலே யாய்த்து அங்குள்ளாரும் இருப்பது -திருவாசல் முதலிகள் எதிரே வந்து சத்கரித்து -கையைக் கொடுத்து -கொண்டு புக்கு தங்கள் கைபுடைகளிலே இருத்தி பிரம்பையும் கொடுப்பார்கள் ஆயத்து-சென்று புகுகிறவர்களுக்கும் கைங்கர்யமே உத்தேச்யம் -அங்கு இருக்கிறவர்களுக்கு கைங்கர்யமே யாத்திரை -ஆகையால் இவர்கள் கொள்வதும் அவர்கள் கொடுப்பதும் அது -புகுது என்றது -புகுதுக -என்றபடி
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்-இவர்களால் ஸதக்ருதரான அளவிலே நித்ய ஸூ ரிகள் விஸ்மயப்படுவார்கள் —அமரரும் முனிவரும்–கைங்கர்ய தாரகரானவர்கள் –அமரர் -அதுக்கு ஷமர் அன்றிக்கே ஸுந்தர்ய சீலாதிகளிலே ஈடுபடும் ஸ்வ பாவரானவர்கள் –முனிவர்கள் -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே அடிமையில் ஒன்றும் குறைய நிற்க மாட்டாதாரும் -குண அனுபவத்துக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாத படியாய் இருப்பாரும் யாய்த்து -வியந்தனர் -விஸ்மயப் பட்டார்கள் –வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–சம்சாரத்தில் சப் தாதி விஷயங்களில் பழகிப் போந்தவர்கள் பரம பதத்திலே வந்து புகுந்து கைங்கர்யமே யாத்திரை யாவது –இது ஒரு பாக்ய பலம் இருந்த படியே -என்றாய்த்து அவர்கள் கொண்டாடுவது –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-9-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

திருவாசல் காக்கும் முதலிகள் ஸத்காரம் –
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்-புக்க அளவில் கோயில் வாசல் காக்கும் முதலிகள்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று-எங்களுக்கு சேஷி -பொன்னடி சாத்தி அருள வேணும் -புகுத்துக என்று -அகத்தில் அதிகாரத்தில்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்-கைங்கர்ய நிஷ்டர்கள் குணானுபவ நிஷ்டர்கள் -அனுபவித்து உருகி –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-பாக்யம் -என்றவாறு -கிருபையால் -பூமியிலே சப்தாதி பிரவணராய்
-இங்கே வருவதே என்று உகந்து -ஆச்சரியமாக எமது இடம் புகுந்து வியந்தனர் என்றவும் –
அமரரும் முனிவரும் வியந்தனர் என்றும் -கொள்ளவுமாம்

பரமபதத்தில் சென்று திரு வாசலில்-முதலிகளால் உபசரிக்கப் பட்டவர்களாக-
அங்குள்ள நித்ய சூரிகள்
பரம பதத்தில் வருவதே –இது என்ன புண்ணியத்தின் பலம் –என்று ஈடுபட்டார்கள் -என்கிறார் –

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் –
பரம பதத்தை சென்று கிட்டின அளவில்-திரு வாசல் காக்கும் முனிவர்கள் –

வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று –
ஸ்ரீ வைகுண்ட நாதன் உடையார் எங்கள் உடைய ஸ்வாமிகள்-
எங்கள் பதத்தினைக் கைக் கொள்ள வேண்டும் -என்று ஆயிற்று அவர்கள் பாசுரம் –
பயிலும் திரு உடையீர் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -2-7-1- என்ற இவரைப் போலே ஆயிற்று -அங்கு உள்ளாறும் இருப்பது -என்றது
திருவாசலில் முதலிகள் எதிரே வந்து உபசரித்து கையைக் கொடுத்து-கொண்டு புக்கு தங்கள் கைப் புடைகளிலே இருத்தி
திருக் கையில் பிரம்பையும் கொடுப்பார்கள் -ஆயிற்று -என்றபடி –
சென்று புகுகிற வர்களுக்கும் அடிமை வேலையே உத்தேச்யம்-
அங்கு இருக்கிற வர்களுக்கும் அடிமை வேலை செய்தலே தொழில் ஆகையாலே-
கைங்கர்யமே உத்தேச்யம் கைங்கர்யமே யாத்திரை என்றவாறு -இவர்கள் கொள்ளுவதும் அது-
–புகுத -என்றது -புகுதுக -என்றபடி –

வைகுந்தத்து அமரரும் முனிவரும் –
ஸ்ரீ பரத ஆழ்வானையும் இளைய பெருமாளையும் போலே-குணநிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும் –

வியந்தனர்-
ஈடுபட்டார்கள் –

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –
கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று-இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்-
பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக-புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading