திருக்குறளும் ஸநாதந தர்மமும்

1; “அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன்‌ முதற்றே யுலகு,

எழுத்தெல்லாம்‌ – எல்லா எழுத்துக்களும்‌, அகர
முதல-அக.ரத்தை முதலெழுத்தாக உடையன : (அது
போல), உலகு-உலகம்‌, ஆதிபகவன்‌ முதற்று- கடவுளை
முதலாக உடையது, ஏ அசை,

எல்லா எழுத்துக்களுக்கும்‌ எப்படி. அகரம்‌ முதலெழுத்தோ, அப்படியே உலகத்திலுள்ள எல்லரவற்‌றுக்கும்‌ கடவுள்‌ முகற்பொருள்‌ என்பது கருத்து.
அதிலிருந்து கடவுள்‌ எனப்படும்‌ பரம்பொருள்‌ ஒன்றுஉண்டு என்பது பெற்‌ப்பட்டது, காரணமின்றிக்‌ காரிய மில்லாமையின்‌,
அகரமுதல–அகாமாகிய முதல்‌. என்பது அகரமுதல்‌எனத்‌ தொகையாகும்‌. தொகை என்பதை வடமொழியில்‌ ஸமாஸம்‌. என்பர்‌. ‘ அகரமுதல்‌ என்பதற்குப்‌ பலவின்‌ யால்விஞூதி ஆகிய ௮ சேர்க்கப்பட, அகரமுதலஎனக்‌ குறிப்புவினைமுற்று ஆயிற்று, எழுத்து என்பது ஈண்டுப்‌ பன்மை, ஆதி பகவன்‌ என்பது ஆதியாய பகவன்‌ என விரியும்‌, ஆதி என்பதும்‌ பகவன்‌ என்பதும்‌வடமொழிச்சொற்களின்‌ தற்பவம்‌, பகம்‌ என்றசொல்‌ ஐச்வர்யம்‌, வீர்யம்‌, ர்த்தி, இரு, ஞானம்‌, வாக்கியம்‌ என்ற ஆறினையுங்‌ குறிக்கும்‌; பகத்தை.யுடையவன்‌ பகவான்‌. பகவான்‌ என்பதன்‌ இடை.க்குறை பகவன்‌ என்பது, பகவர்‌ பலர்‌ ஆ.தலாலும்‌, அவருள்‌
முதல்வர்‌ கடவுள்‌ ஆதலாலும்‌ கடவுளைக்‌ குறிக்க ஆதி பகவன்‌ என ஆரியர்‌ வழங்கினர்‌. “ ஆதி பகவன்‌ ஆகிய முதல்‌? என்பது ஆதிபகவன்முதல்‌ என ஆயிற்று;
அதற்கு து விகுதி சேர்க்க, ஆதிபகவன்முதற்று என்ற குறிப்புவினை வந்தது, உலகு என்பது *உலகம்‌” என்‌பதின்‌ கடைக்குறை; அச்சொல்‌ பல பொருள்களைக்‌
குறிப்பினும்‌, சொல்வகையான்‌ ஒருமையாகலான்‌ ஒருமை வினையைக்‌ கொண்டது.

“ அகரத்திற்குக்‌ தலைமை…சாதமாச்‌ திரையாகிய இயல்பால்‌ பிறத்தலானும்‌” எனப்‌ பரிமேலழகர்‌ கூறுவர்‌.
ருக்வேதகம்‌ ஐதரேயஆரண்யகம்‌ மூன்றாவது அத்தி யாயம்‌ ஆறாவது கண்டம்‌ அகரமே * சர்வவாக்கும்‌,அகரமே ஸ்பர்சங்களாலும்‌ (வாய்க்குள்ளிருக்கும்‌ பல உறுப்புகள்‌ ஒன்றோடொன்று தொட்டு சேர்வதினாலும்‌), ஊஷ்மங்களினாலும்‌ (அவ்வுறுப்புகள்‌’ கேரே
சேராமல்‌ சற்று விலகி இருஈ்து கொண்டு இடையில்‌ கொஞ்சம்‌ காற்று விட்டு ஊதுவதினாலும்‌), வெளியாக்‌ கப்பட்டு ககாரம்‌, மகரம்‌, பாகரம்‌ முதலிய பல்வேறு
எழுத்துருவங்களை அடைகின்‌ ௨22 எனப்பொருள்‌ படும்‌படி. கூறுகிறது.

மேதபாஷ்யம்‌, ஆகாயத்தின்‌ குணமாகிய காதம்‌ ஒன்றே காகஸ்வரம்‌, புல்லான்‌ குழல்‌, வீணை, தம்பட்டை முதலிய கருவிகளுக்கு ஏற்றவாறு ஒலிப்பது போலவும்‌, பஞ்ச லோகங்கள்‌ உருக்குக்குழாய்களின்‌ சன்மைக்‌ கேற்ப ‘நடராஜவிக்ரஹம்‌, விஷ்ணுவிக்ரஹம்‌ முதலிய பல வேறுவடி.வங்களை அடைவகைப்‌ போலவும்‌ இயல்பாசிய
கரதமாத்திசையாம்‌ அகரமும்‌ உதடு, பல்‌, அண்‌ணம்‌. _ இவற்றின்‌ ‘தொழிலிற்கு  வேறு
எழுத்துக்களாய்‌. வருகின்றது.

அதற்கு மற்றொரு காரணம்‌ “ அக்ஷரங்களுள்‌ அகரம்‌ ஆகின்றேன்‌ யான்‌ (அக்ஷராணாம்‌ – அகாரோ –அஸ்மி – பகவத்‌ கீதை – 10 வது அத்தியாயம்‌ 88 வது சுலோகம்‌)” எனப்‌ பகவத்‌ கீதையில்‌ கண்ணன்‌ கூறிய.மாகு மென்பர்‌; அப்பகவத்‌ தகைத்தொகூரின்‌ கருத்த-எழுத்துக்களுள்‌ தன்னை அகாரமாக உ்பாஸிக்கவேண்டும்‌-என ஆதிசங்கரசாரிய ஸ்வாமிகள்‌ கூறி இருத்தலின்‌ அவர்கூற்று ஆராய்தற்பாலது

உலகில்‌ உண்டாக்கப்படும்‌ காரியப்பொருள்களுக்‌ ‘கெல்லாம்‌ பொதுவாக முதற்காரணம்‌ எனப்படும்‌ உபாதான காரணமொன்றும்‌, நிமித்த காரணம்‌ எனப்படும்‌ மற்‌ றொரு காரணமும்‌ இருப்பதைக்‌ காண்கிறோ ம்‌. “ஒரு மூலமில்லாமல்‌ இவ்வுலகமிராது ‘” எனச்‌ சாந்தோக்கிய உப நிஷத்‌திற்‌ சொல்லப்படிருக்கறது (சா- உப- அத்யா 6கண்டம்‌ 8, மந்த்ரம்‌ 8),

உதாரணமாக மட்கலத்‌திற்கு மண்‌ முதல் காரணம்‌ (அதாவது உபாதான காரணம்‌),குயவன்‌ நிமித்த காரணம்‌, ஆனால்‌ பகவான்‌ உலகத்‌தை ஸிருஷ்டிக்கும்போது அவர்‌ இரண்டற்ற பரம்‌ பொருளாகையால்‌ தானே முதற்காரணமுமாகிறார்‌ என்பது திரு நான் மறை முடியான வேதாந்த சாஸ்திரத்தின்‌ கருத்து,

இக் கருத்தையே ஆதிபகவன்‌. முதற்றே வுலகு!” என்னு மிடத்‌தில்‌ முதல் காரணத்‌தைக்‌ குறிக்கும்‌ முதற்றே என்றும்‌ சொல்லால்‌: உணர்த்துகிறார் போலும்‌. இதனால்‌ தேவர்‌ குறளும்‌ திருநான்மறைமுடியும்‌ ஒரு வாசகமென்றுணர்‌
என்னும்‌ ஒளவையாரின்‌ வாக்கின்‌ உண்மை வெளியாகிறது .

எல்லா உலகும்‌ ஆவாய்‌ நீயே என்னும்‌ தத்துவத்தையே இக் குறள்‌ உவமை வாயிலாகப்‌ போதிக்‌கிறது :
கடவுள்‌ எல்லா சராசாரப்‌ பொருளிலும்‌ அவற்றின்‌ தன்மையாய்‌ நிற்குமாறு போல்‌ அகரம்‌ எல்லா எழுத்துக்களிலும்‌ கலந்து தனியாய்‌ நிற்கும்‌” என்று தொல் காப்பியம்‌ எழுத்ததிகாரத்தில்‌ எழுதும்‌ சமயத்தில்‌ சொல்லியிருக்கிறார்‌ நச்‌சினார்க்கினியர்‌. அதற்குப்‌ பலமாக முன்னரே கூறிய படி. அக்ஷரங்களுக்குள்‌ அகாரமாகின்றேன்‌ யான்‌ என்து கண்ணன்‌ சொல்வதை எடுத்துக்‌ காட்டியிருக்கிறார்‌.

அதே 10 வது அத்தியாயத்தில்‌ 20 வது சுலோகத்தில்‌.
“ஸமஸ்த பூதங்களின்‌ ஹிருதயத்தில்‌ இருக்கிற ஆத்மா நானே… பூதங்களுக்கு ஆதியும்‌ ஸ்திதியும்‌ அந்தமும்‌
நானே
(அஹம்‌ – ஆத்மா .மாலாகேச – ஸர்வ வஷதா- சயஸ்யித : | அஹம்‌-ஆதிஸ்௪ -ம;ப* பஞ்ச- வுடு கானாம்‌-
அந்த – ஏவ- ௪)” என்று கண்ணன்‌ கூறி 89 வது சுலோ:கத்தில்‌
“ சகலபூதங்களுக்கும்‌ காரணம்‌ அல்லது விதை
எதுவோ ௮து நான்‌. ஜங்கமம்‌, ஸ்தாவரம்‌, ஆகிய என்னையன்றி வேறில்லை;
யச்சாமி.-ஸர்வ -வ-தானாம்‌- ஜம்‌ – தத்‌- அஹம்‌- அர்ஜுன |. அஸ்தி- வினா -யத்‌ – ஸ்யாத்‌-மயா- ஹஷதம்‌- சாசாம்‌?” என்று சொல்லி முடிக்கிறார்‌. –
ஆகையினால்‌ கண்‌னன்‌ அதிஷ்டானம் பற்றித்‌ தன்னைச்‌ சராசரப் பொருள்‌களுக்கு முதற்காரண்மாகக்‌ கூறினார்‌ என்பது உறுதியாகிறது,
ஆகையால்‌ நச்சினார்க்கு இனியார் அகரம்‌ மற்ற
எமுத்‌துக்களில்‌ கலந்து நிற்றலுக்குக்‌ கடவுள்‌ மற்‌ற ௪ராசரங்களில்‌ கலந்து நிற்பதை உவமையாக எடுத்தது மூதற்காரணம் பற்றியே,

2… கற்றதனாலாய பயனென்கொல்‌ வாலறிவனற்றாள்‌ தொழா ரெனின்‌.

(உலகு) உலகத்தார்‌,
வாலறிவனற்றாள்‌ சுத்தமான அறிவினையுடைய கடவுளின்‌ திருவடிகளை,
‘தொழார்‌ எனின்‌ -வணங்காம லிருந்தால்‌, (அவர்‌)
(எழுத்து – நூல்களை) கற்‌றதனால்‌ – படித்ததால்‌, ஆயஆகிய, பயன்‌ பலன்‌, என்‌ கொல்‌ = என்னமோ? (ஒன்றுமில்லை என்பது கருத்து),

உலகு, எழுத்து என்பன முதற் குறளிலிருக்து எடுத்‌துக் கொள்ளப்பட்டன. வட மொழிநூலாசிரியர்‌அனுவர்த்தித்தன. என்ற சொல்லை வழங்குமிடத்து தமிழில் அதிகரித்தன. என்ற சொல்லை வழங்குகிறார்கள்

ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்ரியம் -இத்தையே ஆதிபகவன் -வாலறிவன்
ஸாஸ்‌திரங்களைக்‌ சுற்றதின்‌ பயன்‌ கடவுளின்‌ சரணங்களைத்‌ தொழுது மறு ஜன்ம மில்லாமல்‌ செய்து கொள்வது தான்‌ எனப்‌ பொருள்‌ படும்படி. இக் குறளின்‌ கருத்தைப்‌ பரிமேலழகர்‌ வெளியிட்டிருக்‌கிறார்‌. இக் கருத்தையே ஸ்ரீபாகவத்தில்‌ 8 வது ஸ்கந்தத்தில்‌ விதுர மைத்ரேய ஸம்வாத த்தில்‌
“ஸ்ருதஸ்ய-பும்ஸாம்‌-ஸுஈசிரஸ்ரவஸ்ய – நநு -அஞ்‌ஜஐஸா ஸூரிவி:-ஈவிதோ -ர்த்த: |யத்‌- தத்‌ – குணாதுச்ரவணம்‌ – முகுக்‌, – பாஉாரவிக்‌உம்‌ – ஹ்ரு,யேஷு-ஈயேஷாம்‌?’ என்னும்‌ (8-18-4) ஸ்லோகத்தில்‌ சொல்‌லப் பட்டி ருக்கிறது.

3-மலர்மிசை யேகினான்‌ மாணடி சேர்ந்தார்‌
நிலமிசை நீடு வாழ்வார்‌.

மலர் மிசை – (உள்ளமாகிய) தாமரை மலரின்‌
கண்‌,ஏகினான்‌ – (அன்பால்‌ நினைப்பவர்‌ நினைத்த வடிவோடு விரைந்து) சென்றடைந்தவனுடைய,
மாணடி.– மாட்‌சிமைப்பட்ட அடிகளை ,
நீடு _ வெகு காலம்‌, | வாழ்வார்‌ இருப்பார்‌.

காரிய பிரமம்‌. எனப்படும்‌ _ஸகுணபரமாத்மாவை.உபாஸனை செய்வோர்‌ அக் காரியப் பிரம்ம லோகத்தில்‌ மகாப் பிரளய பர்யந்தம்‌ இருப்பர்‌. என்ற வேதாந்தக்‌ கொள்கையை இக் குறள்‌ கூறுகிறது

மலர்மிசை என்னும்‌ சொல்‌ கரரியப் பிரம்மமாகும்‌; திரிமூர்‌த்திகளில்‌ சேர்ந்த திருமாலைத்‌ திக்கும்‌ “மனன: – மலமற – மலர்‌ மிசை யெழுதரு – மனனுணர்‌ – வளவி லன்‌”’ என்னும்‌ நம்மாழ்வார்‌ (திருவாய்மொழி 1-1. 2) பாசுரத்தில்‌ காணப்படுகிறது.” இதை அனுசரித்து மலர்‌!மிசையேகினான்‌ என்னும்‌ பதத்‌திற்குத்‌ திருமாலெனப்‌பொருள்‌ கொள்ளலாம்‌. அவ்விதம்‌ கொள்ளின்‌ இவ்வாசிரியர்‌ மேலே கடவுளைக்‌ குறிக்குமிடத்‌து, –தாமரைக் கண்ணான்‌, உலகளந்தான்‌” என்னும்‌ பதங்களை ப்ரயோகிப்பதும்‌ பொருந்தும்‌.

ஸ்ரீ பாகவதத்திலும்‌ முதல்‌ ஸ்கந்தத்தில்‌ நாரதர்‌ தன் வரலாற்றைக்‌ கூறுமிடத்து,
“ஹட த. இவ-மே-சீஷ்‌ ரம்‌- உர்றானம்‌-யா தி. செதஹி’?(1-6-584) என்று சொல்லப்பட்டிருக்கிறது  இதன்‌ பொருள்‌ :-விளிக்கப்படும்‌ ஒருவன்‌ விரைந்து. செல்வது
போல்‌ பகவான்‌ உள்ளத்தின் கண்‌ (உள்ளத் தாமரையின்‌ கண்‌) தர்பனம்‌ கொடுக்க விசைந்து செல்லுகிறான்‌-என்‌றவாறு. இக்குறளிலுள்ள மலர்‌ மிசை யேகினான்‌ என்‌னும்‌ சொற்றொடருக்கு அன்பால்‌ நினைவாரது உள்ளக்‌ கமலத்தின்‌ கண்‌ அவர்‌ நினைத்த வடிவோடு விரைந்து சென்றவன்‌”? என்று பரிமேலழகர்‌ உரை செய்தது மேற்‌ கூறப்பட்ட பாகவத ஸ்லோகத்தின்‌ கருத்தை அனுசரித்திருக்கிறது
மலர்‌ என்பதற்குத்‌. தாமரை யோன்ற ஹிருதயம்‌! என்றும்‌ பொருள்‌ கூறுவர்‌.
மலர்மிசை என்பதை பூமேல்‌ நடந்தான் என்‌பதோர்‌ பெயர் பற்றிப்‌ பிறிதொரு கடவுட்கு ஏற்றுவாரும்‌ உளர்‌?! என்று பரிமேலழகர்‌ கூறியிருக்கிறார்‌.
பிறிதொரு கடவுள்‌ ! என்பதால்‌ ஜைனக் கடவுளாம்‌ அருகனையே அவர்‌ ‘குறிப்ப்பார் என்பர் ,
ஆனால்‌ திருவள்ளுவர்‌ திருக் குறள் முழுவதுமே வேதக் கொள்கையையே தழுவி வருவதாலும்‌,
அருகன்‌. என்னும்‌ மூன்று இடங்களில்‌ ஈசனைக்‌ குறிக்கப்பட்டிருப்பதாகும் -அச்சொல்‌
வேதக்கடவளாம்‌ சிவனையே குறிப்பகாகக் கொள்ளலாம்‌, மற்றும்‌ அக்காலத்தில்‌ அநாதியாய்‌ உள்ள வேதத்திலுள்ள சிவனையே ஜைனர்கள்‌ அருகக் கடவுளாகத்‌
தொழுது வந்தார்கள்‌ என்பதும் ஜைன மதத்திலும் சொல்வர் ,
ஜைன சமயத்தினராகிய முனைப்பாடியார்‌ என்பவரால்‌ இயற்றப்பட அற நெறிச் சாரம்‌ என்னும்‌ நூலில்‌ அவன்கொல்‌.இவன்‌ கொல்‌-என்று ஐயப்படாதே.வன்‌ கண்ணே செய்ம்மின்கன்‌ –
சரதை இவன்றானும்‌ – நின்று கால் சீக்கும்‌-ரிழறிகமும்‌ -பிண்டிக்‌கும்‌ – வென்றிச்‌ சீர்முக்‌ குடையான்‌ வேந்து”என்னும்‌ 219-வ௮ செய்யுளில்‌::
சிவன்‌ பாலே சிந்தையை நிறுத்தங்கள்‌, அச்சிவனும்‌ அசோக மரத்தின்‌ பக்கம் நின்று குடைகளுடையவனை அருகனே யாவான்‌” என்று சொல்லியிருக்கிறார்‌, .

1800. வருஷங்‌களுக்கு முன்‌ சக்கரவர்த்தியாயிருந்த -ப்ரீஹர்ஷர்‌”?என்ற மகாகவி மூன்றுநாடகங்களியற்றியிருக்கிறார்‌.
அவற்றுள்‌ ரத்னாவளி என்னும்‌ நாடகத்தில ஆரம்பத்தில்‌ நான்கு ஸ்லோகங்களில்‌ சிவனையும்‌, பார்வதியையும்‌, விஷ்ணுவையும்‌, நாகாநந்தம்‌ என்னும்‌ நாடகத்தில்‌ ஜைனக்‌கடவுளையும்‌ துதித்‌திருக்கிறார்‌.
திருவள்ளுவரும்‌ அக்காலத்தவரரதலால்‌ வேதக்‌ கொள்கையை அனுசரித்தே கடவுளை இம் மூன்று முறைகளிலும்‌ அநு சந்தித்து இருக்கக்‌ கூடும்‌,

4, வேண்டுதல்‌ வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்‌கி
யாண்டு மிடும்பை யில.
வேண்டுதல்‌ வேண்டாமையிலான்‌ அடி சேர்ந்தார்க்கு-விருப்பம்‌, வெறுப்பு அற்‌று கடவுளின்‌ அடிகளை இடைவிடாது தியானிப்பவற்கு,
யாண்டும்‌-ஒரு பொழுதும்‌,
இடும்பை –பிறவித்‌ துன்பங்கள்‌,
இல –இல்லை.

இல என்பது பன்மையாதலின்‌ இடும்பை என்பது பன்மைப் பெயராகும்‌.
“சரீரம் அற்றவரை ப்ரியம்‌, அப்ரியம்‌ இவ்விரண்டும்‌ அணுகா” என்னும்‌ சாந்தோக்கிய உபநிஷத்‌ (8-12-1) தொடரும்‌,
“என்னை யடைந்த மகாத்‌மாக்கள்‌ துக்கத்‌திற்கு இருப்பிடமாயும்‌ சாஸ்வத மற்றதாயும்‌ உள்ள மறுபிறப்பை யடையார்கள்‌”
(மாம்‌. உபேத்ய-புனர்‌ – ஜன்ம-உ௱£₹வாலயம்‌ – அஸாஸ்வதம்‌-ந -ஆப்‌நு வந்தி- மஹாத்மான:- ஸம்ஹிதியிம்‌ – பரமாம்‌ _ மதா-என்றும்‌ அர்த்தமுள்ள பகவத்தீதை (8-15) தொடரும்
இங்கு குறிக்கத்‌ தக்கன.

5. பொறி வாயி லைந்தவித்தான்‌ பொய்தீரொழுக்க
நெறி நின்றார்‌ நீடு வாழ்‌வார்‌.

பொறி- வாயில்‌ – ஐந்து – அவித்தான்‌- பொய்‌ தீர்‌ -‘ஒழுக்ககெறி – நின்றார்‌ –இந்திரியங்களின்‌ மூலம்‌ நேரும்‌
ஐவகைப் பொருள்களின்‌ நுகர்ச்சியைப்‌ போக்கிய கட.வுளின்‌ உண்மையான தர்ம மார்ககத்தில்‌ அசைவற்று நிற்‌பவர்‌,
நீடு வாழ்வார்‌ முக்‌தி யடைவர்‌.
மூன்றாம்‌ குறளில்‌ நிலமிசை என ஆரியர்‌ கூறியிருத்‌தலானும்‌, இக் குறளில்‌ அச் சொல்லைக்‌ கூறாமையாலும்‌,
அக் குறள்‌ காரியப் பிரம்ம லோகத்தைக்‌ குறிக்கின்றது
என்றும்‌,
இக் குறள்‌ முக்‌தியையே குறிக்கின்றது என்றும்‌. கொள்ள வேண்டும்‌.
ஸ்ரீ சங்கராசாரியசுவாமிகள் பிருஹதாரண்யகோபனிஷத்‌4 வது அத்தியாய பாஷ்யத்தில்‌ “ப்ரஹ்ம லோக:” என்பதற்கு “ப்ரம்மணோ லோக: (ப்ரம்மாவினுடைய லோகம்‌)”” என்றும்‌ “ப்ரஷஹ்மைவ லோக; (ப்ரம்மமாகிய லோகம்‌)” என்றும்‌ இருவகையாக விரி கூறியிருத்தல்‌ நோக்கத் தக்கது.
“ப்‌. ரஹ்மைவ லோக: என்பதை ஒட்டியே சிறப்பென்னும்‌ செம்‌ பொருள்‌ என இவ்வாசிரியர்‌ பின்னர்‌ (69 ம்‌ ‘ குறள்‌) கூறுகின்றார்‌:
ப்ரஹ்மைவ லோக- என்பது ௮த்வைதக் கொள்கையேயாகும்‌.
Ar Bus ற்‌ கையவா நீப்பின்‌”,ஆரா வியற்கை யவா நீப்பின் என்ற (71 வது) குறளில்‌ கூறப்பட்ட ஜீவன் முக்தியும்‌:
அத்வைதக் கொள்கையே.
“எப் பொருள்‌ எத்தன்மைத் தாயினும்‌’” என (66 வது )குறளில்‌ கூறப்படும்‌ அய” யாஸமும்‌ அத்வைதக் கொள்கையே
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம்‌, மாறுபாடு, ரஸம்‌, காந்தம் இவை எப்போதும்‌ இல்‌லாதவனும்‌, ஆதி, அந்தம்‌ இவை அற்‌றவனுமான கடவுளைத் தியானிப்பவர்‌ யமனிடமிருந்து விடப்படுகின்‌ றனர்‌ ””என்ற கடோபனிஷத்‌ (1-3-15) தொடரும்‌
“அழந்மம்‌- அரஸஸ்பர்பாம்‌-அருப்தம்‌-அபரி.ல ரஹம்‌.! அரூபம்‌-அர.ஹி ஜ்னோேயம்‌-5 ருஷ்ட்லா – ஆத்மானம்‌ – விமுச்யதே” என்‌னும்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌ 20 வது அத்யாயம்‌-10 வது ஸ்லோகமும்‌ ஒப்பிடத்தக்கன.

6. பிறவிப்‌ பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்‌.
இறைவனடி. கடவுளின்‌ திருவடிகளை,
(சேர்ந்தார்‌- இடைவிடாது தியானிப்பவர்‌),
பிறவிப் பெருங்கடல்‌–பிறவி யாகிய பெருங்கடலை,
நீந்துவர்‌ – தாண்டுவர்‌ ;
சேராதார்‌– தியானிக்காதவர்‌,
(அதனை) நீந்தார்‌- தாண்ட மாட்டார்‌.
சேர்ந்தார்‌ என்பது ப்ரகரணத்தால்‌ கிடைக்கின்‌றது
விடுபட்டவர்களாகி ஸம்ஸார ஸாகரத்தைத்‌ தாண்டுகிறார்களோ”! என்கிற பொருளுள்ள,
“யம்‌ – த்ருஷ்ட்வா யதாய தாத -ந ஸோ சந்தி – மத-ஜ்வார: ஜன்ம-
ம்ருத்யு – ஸ்யாத்‌-முக்தா :- தீர்ணா:-ஸம்ஸார- ஸாகரம்‌?”
என்னும்‌ மஹாபாரதம்‌ அனுஸாஸனபர்வம்‌ 167 அத்யாயம் 42 வது சுலோகம்‌ கூறும்‌.
அதனையே ஸம்ஸார . -ஸாகாம்‌ – கோரம்‌- தரிஷ்யக்தி – ஸூ ஸ் தரம் ” என்‌னும்‌ மகாபாரதம்‌ அச்வமேத பர்வம்‌ 19 வது அத்‌யாயம்‌ 88 வது சுலோகமும்‌ கூறும்‌,

7. வானின்‌று உலகம்‌ வழங்கி வருதலான்‌
தான் அமிழ்த மென்றுணரற்‌ பாற்று.
வானின்று-மழை காரணமாக,
உலகம்‌ –உலகத்தில் உள்ள பொருள்கள்‌,
வழங்கி வருதலான்தான்‌ -ஜீவித்துவருதலாலேயே, அமிழ்தம்‌- அம்ருதம்‌, என்று,
உணரற்‌ பாற்று -உணரத் தக்கது

நீரை வடமொழியில்‌ அம்ருதம்‌ என்ற சொல்லால்‌ வழங்குகின்றனர்‌. அச்சொல்லிற்கு மரணமற்றது என்‌பது காரணப் பொருள்‌.
மழை உலகத்துப்பொருளின்‌ மரணமின்மைக்குக்‌ காரணமாய்‌ இருத்தலின்‌, அதனை அச் சொல்லால்‌ குறித்‌தனர்‌ என இவ்வாசிரியர்‌ கருதுகின்றார்
வடமொழி அம்ர்தம்‌ என்ற சொல்‌ -.தமிழில்‌ அமிழ்தம்‌, அமிழ்து, அமிர்தம்‌, அமிர்து, அமுதம்‌ அமுது என வழங்குகிறது.
வானின்று என்றவிடத்து நின்று என்பது ஏதுப்‌ பொருளில்‌ வந்த ஐந்தாம்‌ வேற்றுமைச் சொல்லுருபு எனக்‌ கொள்ளல்‌ தகும்‌.

8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்‌
வறக்குமேல்‌ வானோர்க்கு மீண்டு,
வானம்‌ – மழை,
வறக்குமேல்‌ – பெய்யாவிடின்‌
ஈண்டு –இப்பூவுலகிலிருந்து
வானோர்க்கு–தேவர்க்கு,
சிறப்பொடு – சிறப்பாக
பூசனை -பூசனம்
செல்லாது -நடவாது
வானோர்க்குப்‌ பூசனையாவது யாகம்‌, ஹோமம்‌ முதலியன, வானோர் எனபதிலுளள, வான்‌” என்பது ஸ்வர்க்கதைக் குறிக்கும்‌.
ஸ்ரீ கீதை 11-12-13 ஸ்லோகங்களில்
வானவர்‌ மானிடரை மழையாலும்‌, மானிடர்‌ வானவரை யஜ்ஞத்தாலும்‌ பரஸ்‌பரம்‌ .’உபசரித்துக்‌ கொள்ளுவதால்‌ இருவரும்‌ நிரந்‌தரமான நன்மையை அடைவார்கள்‌ எனப்‌ பொருள்‌ படக் கூறியிருக்கிறது,

தேவாந் பாவய தாநேந தே தேவா பாவ யந்து வ–
பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரமவாப்ஸ்யத—৷৷3.11৷৷

இஷ்டாந் போகாந் ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞ பாவிதா–
தைர் தத்தாந் அப்ரதாயை யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ—৷৷3.12৷৷

யஜ்ஞ ஸிஷ்டாஸிந ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை-
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த் யாத்ம காரணாத்—৷৷3.13৷৷

9, தானம்‌ தவமிரண்டுக்‌ தங்கா வியனுலகம்‌
வானம்‌ வழங்கா தெனின்‌.
வானம்‌ -மழை,
வழங்காது எனின்‌ -பெய்யாவிடின்‌,
வியனுலகம்‌ அகன்ற உலகத்தின்‌ கண்‌,
தானம்‌, தவம்‌ -தானமும் தபஸ்‌ஸும் ,- இரண்டும்‌,
தங்கா -உண்டாகாது
இக்குறளினின்று வெளியாகும்‌ நாயனார் கருத்தாவது :–வானின்று பெய்யும்‌ மழையின்‌. உத்தேசம்‌ மக்கள்
உயிர்‌ பிழைத்திருப்பது. முக்கியமல்ல என்பதே;
மக்கள்‌ அவரவர் அதிகரரத்திற்குத்‌ தகுந்தபடி, தானமோ,
தவமோ செய்யார் எனின்‌. அவர்கள்‌ உயிர்‌ பிழைத்திருப்‌பது வீணே.
இக்கருத்தையே த வா-வம்ஷஷி-நிவேஷ்‌ உ௨வ்யெள-சண்டே வதய” வா-திரு ஷாம்‌-ஸ்பிலாம்‌-பூனவரு்‌ தம்‌ அஉரதாரம்‌-உரிக ரம்ச அதபஸ்வினம்‌’? என்னும்‌ மஹா
பாரதம்‌, உச்யோக பர்வம்‌-33 அத்யாயம்‌ 67 . சுலோகம்‌ கூறுகிறது,
அந்த ஸ்லோகத்தில்‌ இப் பொருள்‌ சற்று கடுமையாகவே கூறப்பட்டிருக்கிறது,
தானம்‌ செய்யாத பணக்காரனையும்‌ தவம்‌ செய்யாத தரித்திரனையும்‌ கழுத்தில்‌ கல்லைக் கட்டி. சமுத்‌திரத்‌தில்‌ விட்டு விடலாம்‌ என்று கூறுகிறது.
இதனால ஈகை இல்லாத பணக்காரனும்‌ தவம்‌ செய்யாத ஏழையும்‌ பூதேவிக்கு பாரமே என்னும்‌ தத்துவம்‌ குறிப்பிடப்படுகிறது –
அவ்‌விதம்‌ பாரமாயிருப்பவர்கள்‌ உலகில்‌ அதிகமாகும்‌ பொழுது தான்‌ யுத்தங்கள்‌, கலஹங்கள்‌, கொள்ளை நோய்‌கள்‌ முதலியவைகளின்‌ மூலம்‌ பூ பாரம்‌ குறைக்கப்படுகிறது
ஆகையால்‌ அவைகளுக்கெல்லாம்‌ மருந்து தானமும்‌ தவமுமே.

10: இருமை வகை தெரிர்‌ தீண்டறம்‌ பூண்டார்‌
பெருமை பிறங்குற்‌ றுலகு.
இருமை வகை – இம்மை, மறுமை இவ்விரண்டின்‌ தன்‌மையை,
தெரிந்து -ஆராய்ந்து பார்த்து,
ஈண்டு இவ்‌ வுலகத்தில்‌,
௮றம்‌ பூண்டார்‌ பெருமை –துறவறத்தைக்‌ கொண்டவரின்‌ பெருமை,
உலகு. உலகத்தில்‌,
பிறங்‌கிற்று சிறப்புள்ளது ஆகும்‌,
இவ்வதிகாரம்‌ நீத்தாரைப் பற்றிக்‌ கூறுதலான்‌ ஈண்டு அறம்‌ என்பது துறவறத்தைக்‌ குறிக்கும்
இருமை வகை என்பதற்கு “பிறப்பு வீடு என்னும்‌ இரண்டினது கூறுபாடுகளை” என்று பொருள்‌ கூறுகிறார்‌ பரிமேலழகர்‌.

11-உரனென்னுக்‌ தோட்டியா னோரைந்துங்‌-காப்‌பான்
வரனென்னும்‌ வைப்பிற்கோர்‌ வித்து.
உரன்‌- மனத் திண்மை,
என்னும்‌ -என்ற,
தோட்டியால் -சம்மட்டியால்
ஓர்‌ ஐக்தும்‌ -ஒப்பற்ற ஐந்து இந்திரியங்களையும்‌,
காப்பான்‌ -கெட்ட வழியிற்‌ செல்லாது காப்பவன்‌,
வரன்‌ எல்லாவற்றிற்கும்‌ மிகுந்தது
என்‌னும்‌ -எனச் சொல்லப்படும்‌,
வைப்பிற்கு – நிலைக்கு,
ஓர்‌வித்தாம்‌– ஒரு விதை ஆவான்‌..
இந்திரியங்கள்‌ எவரையும்‌ இழுத்துவிட ஆற்றல்
உள்ளமையால்‌ அவை ஒப்பற்றன எனக்‌ கூறப்பட்டது,
“ஐந்து என்பது ஐந்து ஞானேந்திரியங்களை குறிக்‌கும்‌,
உரனைத்‌ தோட்டிக்கு உவமித்தலான்‌, இந்திரி.ங்களை ஐந்து யானைகளுக்கு உவமிக்கப்பட்டதாகக்‌ கொள்ளவேண்டும்‌””,
“ப்ரஹ்ம வித்்‌ பரத்தை ௮டைகிறான்‌-என்ற தைத்திரீய உபனிஷத்‌ (2, 1) தொடரில்‌ பரம்‌ என்பது மோக்ஷத்தைக்‌ குறித்தலின்‌ வரன்‌?” என்பதற்கு மோக்ஷம்‌ என்ற பொருள்‌ கூறப்பட்டது,

மனமானது இந்திரியங்களின்‌ வழியாய்‌ எப்போதும்‌
“வெளி முகமாவே சென்று கொண்டிருப்பதினால்‌ தான்‌
தன்னுள்ளே ஜ்வலிக்கும்‌ ௮கண்ட. ஆனந்த ப்ரகாஸத்தைக்‌ காணாது வீணாகின்‌றன .
இப் பொ ருள்‌ கடோபனிஷத்தில்‌ (2-1.1) கூறப்பட்டிருக்கிறது
இக்குறளில்‌ இந்திரியங்களை அடக்குவது வித்து என்று கூறப்படுவதால்‌ இதற்கு அடுத்தபடியான ஸகுண
ஈஸ்வர த்யானம்‌ முளை எனவும்‌, அவர்‌ அருளால்‌ ஏற் படும்‌ ஆத்மஜ்ஞானம்‌ புஷ்பம்‌ எனவும்‌, வரன்‌, என்னும்‌-
மோஷமானது’ பிறவி என்னும்‌ விருக்ஷத்தின்‌ ‘பலனாம்‌:
பழமாகவும்‌ பெறப்படுகிறது. :
இந்த்ரியங்களைத் தம் தம் விஷயங்களில் இருந்து மனத்‌
தால்‌ ஒருவன்‌ திருப்பனால்‌ ஆத்மாவில்‌ ஜ்வலிக்கும்
ப்ரம்மத்தைப்‌ பார்க்கிறான்
இந்திரியாணி இந்த்ரியார்த்தே -மனஸர-விநி”வர்தயேத் தத; பஸ்யதி- தத்‌ – ப்ரஹ்ம-ஜ்வலத்‌-ஆத்‌மனி – ஸம்ஸ்ஸிதம்‌’? என்னும்‌ மகாபாரதம்‌ அனுசாசன பர்வம்‌ 167 வது அத்தியாயம்‌ 31, 37-ம்‌ ஸ்லோகங்கள்‌ கூறும்‌.

1. ஐந்து வைத்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங்‌ கரி,
ஐந்தவித்தான்‌ –ஐந்து இந்திரியங்களையும்‌ அடக்கிய துறவியின்‌,
ஆற்றல்‌ -சக்‌திக்கு,
அகல் விசும்‌புளார்‌ கோமான்‌ -௮கன்ற ஸ்வர்க்கத்தில்‌ உள்ளோர்க்கு அரசனாகிய இந்திரனே,
கரி – சாக்ஷி,
சாலும்‌ – பொருந்தும்‌.
ஈண்டு ஐந்தவித்தான்‌ என்று
இந்திரனை ஆயிரங்கண்ணன்‌ ஆக்கிய கெளதமரையும்‌,
இந்திரப்‌ பட்டம்‌ எய்திய நகுஷனைப்‌ பாம்பாக்கிய அகஸ்தியரையும்‌,
ஸோம யாகத்தில்‌ ஸோமத்தில்‌ ஒருபாகத்தை ௮ச்‌வினி தேவதைகளுக்கு இந்திரனைக்‌ கொடுக்கச்‌ செய்த ச்யவனரையும்‌,
மருத்தன்‌ யாகத்தில்‌ இநதிரனை வரச்‌
செய்த சம்வர்த்தரையும்‌,
பன்னிரு ஆண்டுகளில்‌ தான்‌ யாகம்‌ செய்ய அப்போது மழைபெய்யாமல்‌ தடுத்த இநதிரனை மழை பெய்யும்படி. செய்வித்த அகஸ்‌தியரையும்‌ குறிக்கும்‌.
இக் கதைகளை மகாபராதம்‌ அனுஸாஸன பர்வம்‌, அச்வமேத பர்வம்‌ முதவியவனிதில்‌ காண்க.
மூவுலகையும்‌ ஆளும்‌ ஐஸ்வரிய முடையோனுடைய
ஆற்‌றலைவிட பஞ்சேந்திரியங்களையும்‌ அடக்கிய தவசியின்‌ ஆற்றல்‌ பெரிது என்னும்‌ உண்மை இக்குறளினின்றும்‌ பெறப்படுகிறது,
13. சிறப்பீனுஞ்‌ செல்வமு மீனு மறத்தினாங்கு
ஆக்க மெவனோ வயிர்க்கு
உயிர்க்கு -மனிதர்க்‌கு
சிறப்பு-மோ க்ஷத்தை,
ஈனும் -தருவதும்
செல்வமும் -இம்மைச் செல்வமும் மறுமைச் செல்வமுமாம் ஸ்வர்க்காதி இன்பங்களையும்‌,
ஈனும்‌ – தருவதுமான,
அறத்தின்‌ – தருமத்தைக்‌ காட்டி லும்‌,
ஓங்கு-மேலான,
ஆக்கம்‌ -மேன்மையைத்‌ தருவது
எவன்‌ யாது?
சிறப்பு, செல்வம்‌ என்பன கடோபநிஷத்தில்‌ கூறப்‌படும்‌” சிரேயஸ்‌, ப்ரேயஸ்‌ 1-2-2) என்பவற்றைக்‌ குறிக்கும்‌.
ஸ்வர்க்காதி சுகத்தைத்‌ தரும்‌ ப்ரவ்ருத்தி தர்மமும்‌
மோக் ஷசுகத்தைக்‌ கொடுக்கும்‌ “நிவ்ருத்தி தர்மம்‌
ஆக தர்ம மார்க்கம்‌ இரண்டுவிதமென்று சொல்லப்படும்‌
எனப்‌ பொருள் கொண்ட
“ஸு வாவ” யுயிகம்‌ சைவ நைஸ்ரேயஹிகமேவ – ௪. ப்ரவ்ருத்தம்‌ – ௪- நிவ்ருத்‌தம்‌ – ௪ – த்விவிதம்‌ – கர்மவைஷிகம்‌ என்னும்‌. மனு ஸ்ம்ருதி -19வ.து அத்யாயம்‌ 88-வது ஸ்லோகமும்‌ ஈண்டு குறிப்பிடத்‌ தக்கது .
14, அன்றறிவா மென்னாதறஞ்‌ செய்க மற்றது
பொன்றுங்காற்‌ பொன்றாத் துணை.
(உயிர்‌ மனிதர்‌), அன்று கிழத் தனத்தில்‌,
அறம்‌-தர்மத்தை,
அறிவாம்‌ – செய்வோம்‌,
என்னாது – என்று நினையாமல்‌, (தருமத்தை),
செய்க-(இப்போதே) செய்‌தல் வேண்டும்‌.
அது-அத் தருமத்தின்‌ பயன்‌,
பொன்றுங்‌ கால்‌ -சாகும் பொழுது,
(அவர்க்கு) பொன்றாத்‌. துணை –அழிவில்லாத துணை,(ஆகும்‌).
மற்று என்பது அசைநிலை,
பர லோகத்தில்‌ மனிதர்க்குச்‌ சகாயமாமிருப்பதது தர்மமே என
தர்ம – ஏகோ – மனுஷ்யாணாம்‌-ஸஹாய:-பாரலெளகிக:” என்னும்‌ மகாபரரதம்‌ அனுசாஸநிக பர்வம்‌ 178-வது அத்யாயம்‌ 16-வது ஸ்லோகம்‌ கூறும்‌.
ஸ்தூல சரீரத்தை விட்டு ஜீவன்‌ செல்லும்‌ போது அவனுடைய நற் செயல்‌ தீச் செயல்‌ இவற்றின்‌ பயனே அவனுடன்‌ செல்லுமாகையாலும்‌, எப்போது
தனக்கு மரணம்‌ நேரிடும்‌ என்று அறியப்படாமையாலும்‌” அப்போதைக் கப்போதே ஒவ்வொருவரும்‌ தர்மச் செயல்களைச்‌ செய்யவேண்டும்‌ என்பது கருத்து
கல்வியையும்‌ பொருளையும்‌ சம்பாதிக்கும்‌’ விஷயத்‌தில்‌ தான்‌ சரஞ்ஜீவி என்‌ற எண்ணத்தைக்‌ கொண்டே.
அவ்விரண்டையும்‌ சம்பாதித்துக்‌ கொள்ள வேண்டும்‌,
தர்மம்‌ செய்யும்போதோ யமன்‌ தன்னைப்‌ பிடித்‌து விட்‌டான்‌ என்து நினைத்துக் கொண்டு உடனே செய்ய வேண்‌டும்‌ எனக்‌ கூறும்‌
“அஜராமரவத்‌ – ப்ராஜ்ஞ:-.விதியாம்‌- அர்பூம்‌-௪ – ஸாயயேத்‌ – க்ருஹீ.த-இவ- கேஸேஷு ம்ருத்யுநா யர்மம் ஆசரேத் என்னும்‌ ச்லோகம்‌ இதன்‌ பொருளையே கூறுகிறது.
ஸ்வ கார்யம்‌ அதீய-குர்வீத-பூர்வ.௮ஹ்நே-ச-௮பராஹ்நிகம்‌
ந-ஹி-ப்ரதிக்ஷதே – ம்ருத்யு-க்ருதம்‌-வா-௮ஸ்ய.ந .வா-அக்ருதம்‌,
அய.ஏவ.குரு-யத்‌-ஸரேய: மா.ஃத்வாம்‌ -கால:.அத்யகா-மஹான்‌ உ
க:-ஹி.ஜாநாதி-கஸ்ய-அதீய.ம்ருத்யு:-காலே;-ஷவிஷ்யதி,
அக்ருதேஷு-ஏவ-கார்யேஷ-ம்ருத்யு – வை.சம்ப்‌ரகர்ஷதி,
யுவா-ஏ௫-பர்மசீல:-ஸ்யாத்‌-அநி மித்தம்‌. ஹி-ஜீவிதம்‌ !-சாந்தி – 283-14 16.
செளமாரே..ஆசரேத்‌ ப்ராஜ்ஞூ:-யூர்மான்‌. மா மவதான்‌.. இஹ துர்லபம்‌.மானுஷம்‌ – ஜன்ம-தத்‌.அபி-௮,ப* ருவம்‌-அர்உ௦-ஸ்ரீமத்‌ பாகவதம்‌ – 7-வது ஸ்கந்தம்‌.
15. அறத்தா ரிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானெ டூர்ந்தா னிடை.
அறத்தாறு – தர்மத்தின்‌ பிர யோஜனம்‌,
இதுவெனே வேண்டா இது என்று கூற வேண்டாம்‌,
அது, சிவிகை-பல்லக்கை,
பொறுத்தானோடு தூக்குகின்றவனோடு
ஊர்கந் தானிடை- தூக்கப்படுகின்‌றவனிடத்தில்‌ (காணப்‌ படும்‌).
பல்லக்குக்குள்‌ இருக்கின்‌றவன்‌ தர்மத்தைச்‌ செய்‌தவன்‌ என்பதும்‌ அதனைத்‌ தூக்குகின்றவர்கள்‌ தர்மத்‌தைச்‌ செய்யாதவர்‌ என்பதும்‌ வெளிப்படையாக அறியப்படும்‌. “சிலர்‌ சிபிகையைத்‌ தூக்குகின்றனர்‌, இலர்‌
அதனுள்‌ இருக்கின்‌றனர்‌ * என
வஹந்தி சிவிகாம் அன்யே-யாந்தி அன்யே-சிவிகாஹ தா:” என்று மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 331-வ.து அத்யாயம்‌ 42-வது ஸ்லோகம்‌ கூறும்‌: உலகத்தில்‌ நல்வினை தீவினை இருக்கும் வரை, அதாவது, உலகம்‌ இருக்கும் வரை, மேல் கண்ட. வினைகளின்‌ பயனாக மேல்‌ கீழ்‌ நிலைகள்‌ எம்முறையிலாவது இருந்தே தீரும்‌. ஞானிக்கு இருவினைகளும்‌ அழிந்த ஞான்று பொய்யான இவ்வுலகமும்‌ அழியும்‌, உண்மையான ஆன்மா வெளிப்படும்‌.
16. அறத்தான்‌ வருவதே இன்பமற்‌ றெல்லாம்‌
புறத்த புகழு மில.
அறத்தான்‌ – தர்மத்தால்‌,
வருவதே -பெறப்படுவதே ,
இன்பம்‌. இன்பம்‌ (ஆகும்‌).
மற்றெல்லாம்‌-வேறு எல்லாம்‌,
(அதன்‌)புறத்த- இன்பத்தைத்‌ தருவனவல்ல,
புகழும்‌ – கீர்த்தியையும்‌,
இல – உடையன வல்ல.
இன்பத்தையும்‌ புகழையும்‌ கொடுப்பது தர்மச் செயலே யன்றி வேறில்லை என்பது கருத்து.
பாவத்தான்‌ வரும்‌ பிறனில் விழைவு முதலாயின
அக்கணத்துள்‌ இன்பமாய்த்‌ தோன்றுமாயினும்‌ பின்‌
துன்பமாய்‌ விளைதலின்‌ “புறத்த? என்றார்‌ ” என்கிறார்‌ பரிமேலழகர்‌.
பகவத்கீதையில்‌ ஸ்ரீ கிருஷ்ணபகவானும்‌
நான்‌ மக்களிடை தர்மத்திற்கு விரோதமில்லாத இன்பமாக அமர்ந்திருக்கிறேன்‌

பலம் பலவதாமஸ்மி காம ராக விவர்ஜிதம்.–
தர்மாவிருத்தோ பூதேஷு காமோஸ்மி பரதர்ஷப৷৷7.11৷৷-பலவதாம் ச அஹம் –பாட பேதம்

பரதர்ஷப–பரத குலத்தில் உதித்தவர்களில் சிறந்தவனே
அஹம் -நான்
பலவதாம் -பலமுடையவர்களுடைய
காம ராக விவர்ஜிதம் பலம் அஸ்மி .–காமங்களில் ஆசை அற்ற பலமாகவும் இருக்கிறேன்
பூதேஷு–ஜீவ ராசிகள் இடம்
தர்மாவிருத்தோ -அறத்துக்கு முரண் அல்லாத
காமோஸ்மி –காமமாய் இருக்கிறேன்

பரத குலத்தில் உதித்தவர்களில் சிறந்தவனே -நான் பலமுடையவர்களுடைய காம்யங்களில்
ஆசையற்ற பலமாகவும் இருக்கிறேன்
ஜீவ ராசிகள் இடம் அறத்துக்கு முரண் அல்லாத காமமாய் இருக்கிறேன்
பலவான்களின் பலமும் –காமம் ஆசை அற்றும்-அற்ற பலன் -ராவணாதிகள் பலம் இல்லை என்று விலக்க —
ஸூசுகத்துக்காக ஆசை காமம் -முன்னிலை ராகம் – தர்மத்துக்கு விரோதம் அற்ற ஆசைகள் நானே —
மற்றும் உள்ள நன்மைகள் அனைத்தாகவும் -உள்ளேன் -இவை அனைத்தும் என் சரீரம் பிரகாரம் –

யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ் தாமஸாஸ்ச யே.–
மத்த ஏவேதி தாந் வித்தி நத்வஹம் தேஷு தே மயி৷৷—7.12৷৷

ஸ ஏவ ஸாத்த்விகா பாவா -ஸத்வ குணம் மிகுதி யுடையதாகவே உலகில் யாவை சில பொருள்கள் உள்ளனவோ
ஸ ஏவ ராஜஸாஸ் தாமஸாஸ் பாவா .–ரஜோ குணம் மிகுதி யுடையதாகவே தமோ குணம் மிகுதி யுடையதாகவே உலகில் யாவை சில பொருள்கள் உள்ளனவோ
தாந் மத்த ஏவ இதி -அவற்றை என்னிடம் இருந்தே உண்டானவை என்றும்
தே மயி இதி -அவை என்னிடமே உள்ளன என்றும்
வித்தி -அறிவாய்
அஹம் து -நானோ என்னில்
ந தேஷு -அவற்றை ஒட்டி இல்லை –

சத்வ குண மிகுதியை யுடையவையாகவே -உலகில் -யாவை சில பொருள்கள் உள்ளனவோ –
ரஜோ குண மிகுதியையோ -தமோ குண மிகுதியையோ உடையவையாகவே யாவை சில பொருள்கள் உள்ளனவோ
அவற்றை என்னிடம் இருந்தே உண்டானவை என்றும் அவை என்னிடமே உள்ளன என்றும் அறிவாய் -(உபாதான காரணம் நானே )
நானோ எனில் அவற்றை ஒட்டி இல்லை –

17. இல் வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்‌கும்‌
நல்லாற்றி னின்ற துணை.
இல்வாழ்வான்‌ -கிருஹஸ்தன்‌ (இல்லறத்திலிருப்பவன்‌),
என்பான்‌ என்று சொல்லப்படுவன்‌,
இயல்பு -ஸாஸ்த்ர முறையை
உடைய – அனுசரிக்க,
மூவர்க்‌கும்‌ -பிரம்மசாரி, வானப்ரஸ்தன்‌ சன்னியாசி என்கிற மூவர்க்கும்‌,
நல்லாற்றின்‌ – தரும ஒழுக்கத்தின்‌ கண்‌,
நின்ற -இருக்கின்‌ற ,
துணை – துணை (அவன்‌), .
கிருஹஸ்தன்‌ மற்ற மூவர்க்கும்‌ உணவு, உடை, வஸிக்கு மிடம்‌ இவற்றைக்‌ கொடுக்க வேண்டுமென்பது கருத்து.
“கிருஹஸ்தாஸ்ரமத்தை அண்டி ஏனைய ஆசிரமங்களெல்லாமிருக்கின்றன” என்ற பொருளுள்ள
ஏவம்‌ – ஹா ர்ஹஸ்ம யம்‌ ஆஸ்ரித்ய – வர்தந்தே -இதராஸ்ரமா:” என்னும்‌ மகாபாரதம் சாந்தி பர்வம்‌ 269-வது
அத்யாயம்‌, 6-வது சுலோகமும்‌,
* தாயை அண்டி எல்லா ஜந்துக்களும்‌ ஜிவிக்கின்றன. –போல கிருஹஸ்தாஸ்ரமத்தை அண்டி ஏனைய ஆஸ்ரமங்கள் ஜீவிக்கின்றன -என்னும் பொருளுள்ள.
யதா மாதரம்‌- ஆஸ்ரித்ய- ஸர்‌வே – ஜீவந்தி- ஜந்தவ;, ததா-ம்‌ கிருஹாஸ்ரமம்‌ -ப்ராப்ய ஸர்வே – ஜீவந்தி – சாஸ்ரமா:”’ என்னும்‌ மகாபாரசம்‌ – அனுஸாநிக பர்வம்‌ 211-வது – அத்யாயம்‌ 49 – வது ஸ்லோகமும கூறும்‌,
இக்கருத்தையே ** தயைவ ஆஸரமிண ;–ஸர்வே-கிருஹஸ்யே -யாந்தி ஸம்ஸ்ஸிதிம்‌.!’ என்‌னும்‌ மநுஸ்ம்ருதி 6-ஆவது அத்யாயம்‌ 90-வது சுலோகமும்‌ கூறுகிறது.
இக் கருத்தைக்‌ கொண்டே சாந்தோக்யோபனிஷத் கிருஹஸ்தனைக்‌ கூறி முடிக்கின்றது
என வியாஸருடைய ப்ரஹ்ம ஸூத்ரம்‌ 3-வது அத்யாயம்‌, 4-வது பாதம்‌ 48-வது ஸூத்ரம் கூறும்‌,
18. தென்புலத்தார்‌ தெய்வம்‌ விருந்தொக்க றானென்றாங்கு
ஜம்புலத்தா றோம்ப றலை… _
தென்புலத்தார்‌- பித்ரு தேவதைகள்
தெய்வம்‌.-தெய்வங்கள்
விருந்து -விருந்தினர்
ஒக்கல்‌ -சுற்றத்‌தார்கள்
தான்
என்ற ஆங்கு ஐம்புலத்து -என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்திலும்
ஆறு -தர்மத்தை
ஓம்பல் -தவறாமல் செய்தல்
தலை -இல் வாழ்வானுக்கு சிறந்தது ஆகும்
தேவதை அதிதி பிருத்தியூர் பிதிரர் தான் ஆகிய ஐவருக்கும் செலுத்த வேண்டிய கடனுடன் ஜீவன் பிறக்கிறான் என்று
தேவதாதி அதித்யாநாம் பித்ரூணாம் ஆத்ம ந-ய நிர்வபதி பஞ்சாணாம் உச் ஜீவசன் -ந -ஸ -ஜீவதி -வனபர்வம் -314-60-என்றும்
தேவதா ஸ்து அதிதி த்யேய பித்ரு ஹய ச ஆத்மனாஸ் தயா ருணவான் -ஜாயதே மர்த்ய -தஸ்மாத் அந்த ருணதாம் வ்ரஜேத் -சாந்தி பர்வம் -292-9-
பித்ருதேவதைகள் தெற்கு இருப்பதை தைத்ரீய ஸம்ஹிதை 6-1-1 கூறும்
பித்ரு தேவதையும் தேவதைகளுக்கும் அடங்கும் என்றாலும் ப்ராமண வஸிஷ்ட நியாயப்படி சிறப்பு நோக்கித்தானியாக கூறப்பட்டார்கள்
யாது சிறப்பு எனில் -அவர்கள் எப்போதும் ப்ரஹ்மசாரிகளாயும் சுத்தராயும் கோபம் அற்றவர்களாயும் இருக்கின்றனர்
அக்ரே சயர் ஸுசபரா ஸததம் ப்ரஹ்மசாரிணா ந்யஸ்த ஸாஸ்த்ரா மஹா தேவா பிதர பூர்வ தேவதா -மநு –33-192-
தெற்கு வழி பித்ரு லோகத்துக்குச் செல்லும் மார்க்கம்
உத்தர மார்க்கம் –வடக்கு வழி -தேவலோகம் செல்லும் மார்க்கம் எண்டு உபநிஷதும் கீதையும் கூறும்
பித்ரு கர்மங்கள்‌ செய்யும்‌ போது தென் தோளில்‌ (வலதுதோளில்‌) பூணூலையும்‌, தேவ கார்யம்‌ செய்யும் போது வட தோளில்‌ (இடது தோளில்‌) பூணூலையும்‌ தரிக்க வேண்‌டுமென்று வேதமும்‌ தர்ம சாஸ்த்ரங்களும்‌ கூறுகின்‌றன:
ஒருவன்‌ இழக்கு திக்கை நோக்கி நிற்கும்போது வலது
‘தோள்‌ தென் தோளாகவும்‌ இடது தோள்‌ வட தோளாகவும்‌: ஆகிறது.
அண்டத்தில்‌ உள்ளது பிண்டத்தில்‌ என்ற நியாயப்படி, ஒவ்வொரு உடலிலும்‌ வலது பாகம்‌ தென்புறமாகையால்‌ பித்ரு க்ருத்யம்‌ செய்யும் போது பூணூலை வலமாகத்‌ தரிப்பது பித்ருக்களைத்‌ தென் புலத்‌தார்‌ என்று நாயனார்‌ அழைப்பதற்குச்‌ சான்றாகும்‌.
மூவர்‌ணத்தவர்‌ அல்லாமல்‌ நான்காம்‌ வர்ணத்தவராகிய வேளாளரும்‌ கூட பித்ரு கார்யங்களில்‌ வலது தோளில்‌ பூணால்‌ தரிப்பது இன்றும்‌ காணலாம்‌,
பித்ரு கார்யங்‌களினின்றும்‌ தெய்வ கார்யங்களினின்றும்‌ சாஸ்த்ர முறையில்‌ விடுபட்ட துறவிக்கு இருவகைப்‌ பூணூலும்‌ இல்லை.
உலகமானிடரிடமிருந்து மாத்‌திரமல்லாமல்‌
பித்ருக்கள்‌, தேவர்கள்‌, இவர்களிடமிருந்தும் கிடைககும்‌ பயன்களிலும்‌ ஆசையற்றவனே உண்மைத் துறவி
யாவான்‌.
இக் குறளின்படி, ஒருவன்‌ நடந்து, தன்‌ வருவாயில்‌ ஆறில்‌ ஒரு பங்கைப்‌ பகிர்ந்து தன்னை அண்டி வருவோருக்‌காக ஒதுக்கி வைத்து ஒவ்வோரு நாளும்‌ ஒருவருக்காவது:
விருந்தளித்துக்‌ கொண்டு வந்தால்‌ உலகில்‌ உணவில்லாத்திண்‌டாட்டம்‌ அறும்‌.
நாயனார்‌ கூறுகிறபடி ஒவ்வோருவரும்‌ தெய்வ கர்மம்‌ செய்து வந்தால்‌ கெட்ட கார்யங்களும்‌, அவைகளுக்குக்‌ காரணமான கெட்ட எண்ணமும்‌ குறையும்‌.
அரசாங்கத்திற்குக்‌. கண்காணிப்புச் செலவும் சேனைச் செலவும்‌ குறையும்‌. அப்போது அரசாங்கத்திற்கு ஒவ்வொருவருடைய வருவாயிலும்‌’ ஆறில்‌ ஒருபங்கு கொடுப்பதினாலேயே அரசாங்கச் செலவு கட்டிக் கொண்டு போகும்‌.
அரசனுக்கு ஆறில்‌ ஒருபங்கு கொடுப்பது என்பது ஆன்றோர்‌ வழக்கு.


* ஆடிதி க. பலிஞ்ஈ. அபி.ப்ரஜா ஹூ ப 2.குரு கக்‌௨௧,
கைட்‌ ஹாமும்‌ . அரிதப்ரஜ்ஞ:. தாஸாம்‌ ஏவ .- அவிஸூந்தயே! – சாந்திபர்வம்‌ 26-9 ஸ்லோகமும்
தபஷ்ஷட்மா மும்‌-அக்ஷய்யம்‌- உதி . ஆரண்யகா..
ஹி ஈ:” என்னும்‌ சாகுந்தளம்‌ -2- 13 வது ஸ்லோகமூம்‌,
“ஆஃதித. அழு. ஷட்ஹா மும்திருமாச்௪ – way – wiGaprb” a sr
னும்‌ மனுஸ்ம்ருதி 7- 130வது ஸ்லோகமும்‌ இந்த கருத்தைத் தான்‌ கூறுகிறது. ்‌
மற்ற ஐந்து பங்குகளுக்கும்‌ வினியோகத்தை இக்‌
குறளில்‌ நாயனார்‌ தெளிவுபடுத்தியிருக்கிறார்‌.
விருந்தோம்பல்‌ என்பது நம்மை அண்டி.வந்வர்களை
ஓம்பல்‌, சுற்றத்தாரில்‌ உபகாரத்‌திற்குக்‌ தகுதியானவர்‌களை நாமே தேடி உபகரிக்க வேண்டுமென்பது கருத்து ,
“* செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்‌!” என்பது ஒளவையார் வாக்கு. “ர-ஷிதா ஜீவ லோகஸ்ய-ஸ்வ ஜனஸ்ய-ச -ரக்ஷிதா !’ என்பது வால்மிகி யினுடைய வாக்கு. பாலகாண்டம்‌ 1 18-14 வது ஸ்லோகங்கள்‌).
இவ்வாக்கின்படி பொதுவாக உலகத்திலுள்ள
ஜீவர்களை யெல்லாம்‌ ரக்ஷிக்கும்‌ பொறுப்போடு கூட தன்‌
சுற்றத்தாரையும் ரக்ஷிக்கும்‌ பொறுப்பு விசேஷித்து கூறப்டுகிறது

இவ்வெல்லா தர்மங்களையும்‌ செய்‌வதற்கு தான்‌ கேடில்லாமல்‌ வாழ வேண்டியது இன்றியமையாதலால்‌ தன்னையும்‌ ரக்ஷித்துக் கொள்ள வேண்‌டும்‌ என்னும்‌ கருத்தை நாயனார்‌ தான்‌ என்னும்‌ பதத்‌தால்‌ குறிப்பிடுகிறார்‌.
இதையே தைத்தரீய உபனிடதம்‌;குசலமாக. இருக்கும்‌ விஷயத்தில்‌ (அதாவது தன்‌ யோக ஷேமத்தில்‌) அலக்ஷியமாய்‌ இராதே? என்று சிக்ஷவல்லி 11 வது ௮னுவாகம்‌ முதலாவது மந்திரத்தில்‌ கூறுகிறது
இக்குறளின் தொடக்கத்திலுள்ள “தென்‌ புலத்தார்‌-என்னும்‌ சொல்லைக் கொண்டே வைதிக நூல்களில்‌ நாயனாருக்கு எவ்வளவு ஆற்றல்‌ இருக்கின்‌றது என்பது நன்றாகப்‌ புலப்படுகிறது
தேவ கார்யாத் அபி முனே – பித்ரு -கார்யம்‌ – விசிஷ்பதே?? – சாந்தி பர்வம் – 347-59 339-58,
எல்லா கர்மங்களையும்‌ ஸ்ரத்தையுடன்‌ செய்ய“வேண்டியது a விதியாயினும்‌ தென்புலத்தாருக்குச்‌ செய்‌யும் கடைமையே ஸ்ரார்த்தம் – அதாவது ஸ்ரத்தை பூர்வகமான கர்மம் என்று வழங்கப்படுகிறது
அஹீ யர் ஹிதம் பூர்வம்‌” என்பது பாணினி ஸூத்ரம் -விசேஷமாக ஆராதிக்கப்படுவதை முதலில் சொல்ல வேண்டும் என்பதே இச்சூத்திரத்தின்‌ கருத்து,
இதை அனுசரித்தே நாயனார்‌ தென்புலத்தாரை முதலில்‌ கூறினார்‌ போலும்‌.
நாயனாருக்கு ஆழ்ந்த சாஸ்த்ர நுட்பங்‌களிலுள்ள ஆர்வமும்‌ ஆற்றலும்‌ இக் குறளைக்‌ கொண்டே அறிந்து கொள்ளலாம்‌.

19, வையத்துள்‌ வாழ்வாங்கு வாழ்பவன்‌ வானுறையுந்
தெய்வத்துள்‌ வைக்கப்‌ படும்‌.-
வையத்துள்‌ – பூமியில்‌,
வாழ்‌ வாங்கு– வாழவேண்‌டிய முறைப்படி,
வாழ்பவன்‌,
வான்‌ -வானின் கண்‌,
உறையும்‌- தங்கும்‌,
தெய்வத்‌துள்‌ – தேவதைகளுள்
வைக்கப்படும் -வைக்கப் படுவான்‌.
“ தனக்கு விதிக்கப்பட்ட .கர்மாக்களைச்‌ செய்பவன்‌ தேவர்களோடு ஒப்பாவான்‌”” என “ப்ரவ்ருத்தம்‌- கர்‌ம-.ஸம் ஸேவ்ய – தேவானாம்‌ – ஏதி – ஸாம்யதாம்‌’” என்னும்‌ மனு ஸ்ம்ருதி 13- 90 ஸ்லோகம்‌ கூறுகிறது.

20. பெண்ணிற்‌ பெருந்தக்க யாவுள கற்பென்‌னும்
திண்மை யுண்‌டாகப்‌ பெறின்‌
கற்பு- பாதி வ்ரத்யம்‌,
என்னும்‌ -என்ற,
திண்மை-கலங்காத நிலைமை,
உண்டாகப் பெறின்‌ – இருந்தால்‌,
பெண்ணின்‌- மனைவியைக்‌ காட்டிலும்‌;,
பெருந்தக்க -மேம்பட்ட “பொருள்கள்‌,
யா -எவை
உள -இருக்கின்‌றன
பெண்டிர்க்குப் பழமையான தன்மை பாதி வ்ரதாத்வம்‌- நாரீணாம்‌ – ஏதத்‌ -ஏவ -ஸநாதனம்‌” எனும்‌ அனுசாஸனிக பர்‌வம்‌ 249 – 19 வது ஸ்லோகம்‌ கூறுகிறது…
இன்னும்‌ நம்‌ நாட்டில்‌ புருஷர்களை விட ஸ்த்ரீகளிடையே
தர்ம ஸ்ரத்தை அதிகமாய்க்‌ காணப்படுகிறது.
நம் நாட்டில்‌ இதர நாடுகளை விடவும்‌ இதர தர்மங்களை விடவும்‌ ஸாஸ்த்ரங்களில் பாதி வ்ரத்யம் வற்புறுத்தப் பட்டு இருப்பதே இதற்க்குக் கரணம்
புருஷர்கள்‌ உத்தம கதியை யடைய வேண்டுமானால்‌ ஊன் கண்ணுக்குத்‌ தெரியாத கடவுளை மனதால்‌ உருவாக்கி வழி பட வேண்டும்‌.
ஸ்த்ரீகளுக்கோ வென்றால்‌ கண்ணுக்குப்‌ ப்ரத்தியஷமாய்ப்‌ புலப்படும்‌ கணவனையே தெய்வமாக்கி வழிபட்டு உத்தம கதியை அடையுமாறு கடவுளின்‌ ஆணையான சாஸ்த்ரம்‌ விதித்திருப்பதால்‌, அக் கணவனிடம்‌.குணமிருப்பினும்‌ குற்றமிருப்பினும்‌ கடவுளே ௮க் கணவனிடம்‌ உட் புகுந்து பெண்டிர்க்கு உத்தமகதியை அளிக்‌கின்றான்‌.
பசு கோணலான கொம்புடைய தாயிருப்பினும்‌- அதைப்‌ பூஜிப்பவர்களுக்கு அதனுள்‌ நின்று கடவுளே நன்மை பயக்குவது போல.

21- தெய்வந் தொழா அள்‌ கொழுநற்‌ றொழுதெழுவாள்‌
பெய்யெனப்‌ பெய்யு மழை.
தெய்வம்‌ -(வேறு)தெய்வத்தை,
தொழாள்‌ – வணங்‌காமல்‌,
கொழுநன்‌ – கணவனையே,
தொழுது -வணங்கி
எழுவாள்‌ -(படுக்கையை விட்டு) எழுந்திருப்பவள்‌,
பெய்‌ என-பெய்‌ என்று கூ.ற
மழை, பெய்யும்‌.
“கொழுநன்‌”” என்பது பழந்தமிழில்‌ கணவனைக்‌ குறிக்கும்‌. “பெண்டிர்க்குப்‌ பதியே தெய்வம்‌ ; வேறு புகலிடம்‌ இல்லை? என
“பதி: ஹி.- தை வதம்‌ – ஸ்த்ரீணாம்‌-பதி :-வச்யூ- :- பதி: மதி : ந- அன்யாம்‌ – மதம்‌. அஹம்‌ – பஸ்யே – ப்ரமஉாயா ;- யமா – பதி :” என்னும்‌ அனுசாஸனிகபர்வம்‌ 550 -95 வது ஸ்லோகமும்‌ “* ௮திகமாய்‌ காயக்லேசம்‌ முதலியவைகள்‌ செய்து அதனால்‌ புருஷன்‌ அடையும்‌ பலத்தைப்‌ பதியை பூஜை செய்வதினாலேயே ஸ்த்ரீயானவள்‌ வெகு ஸுலபமாய் அடைந்து விடுகிறாள்‌ ‘? என
“காய – கிலேமான – மஹதா – புருஷ. ப்ராப்னுயாத்‌ – ஹலம்‌ – தத் ஸர்வம்‌ – லபதே – நாரீ . ஸுவேந – பதி – பூஜயா
என்னும்‌ மேற்கண்ட அனுசாசனிக பர்வம்‌ 980 -96 வது ஸ்லோகமும்‌ கூறும்‌.
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை, .
நீதி தவறா நெறியினோர்க்கு ஓர் மழை,
காதல்கற்புடை மங்கையர்க்கோர்‌ மழை,
மாதம்‌ மும்மழை பெய்யெனப்‌ பெய்யுமே”-என்பது-ஆன்றோர் வாக்கு
பொதுவாய்‌ ஒரு ஜீவன்‌ கடைத்‌தேற வேண்டுமானால்‌ பகவானிடத்‌தில்‌ எல்லை கடந்த அன்பு ஏகாரக்கிர சித்தத்துடன் நிலைத்‌ திருக்க வேண்டும்‌.
ஆனால்‌ இவ் விதம்‌ அன்பு செய்யும்‌ ஜீவன்‌ ப்ரத்யக்ஷமான கண்களால்‌ பகவானைப்‌ பார்த்திரானாகையால்‌ சாஸ்‌திரங்களைக்‌ கொண்டும்‌, அனுபவிகளின்‌ . வார்த்தையைக் கொண்டும்‌ பகவானுடைய ஸ்வரூபத்தைத்‌ தன் மனதால்‌ ஊகித்துக்‌ கொண்டு அந்த ஊூகித்த ஸ்வரூபத்தில்‌ அன்பையும்‌ ஏகாக்‌ரதையையும்‌ செலுத்தியாக வேண்டும்‌.
ஆனால்‌ பதிவ்‌ரதைகளான ஸ்தரீகளுக்கோ இந்த சிரமம்‌ இல்லை.-ஏனெனில்‌ நமது சாஸ்திர முறைப்படி. ஸ்த்ரீகள்‌ இந்த ஊனக் கண்ணிற்கே புலப்படும்‌ தங்கள்‌ பதிகளிடத்தே பேரன்பும்‌ ஏகாக்ரசித்தமும்‌ வைக்கும் போது அந்த. ஸ்த்ரீகள்‌ விஷயத்தில்‌ மாத்திரம்‌ பகவானே அந்த கணவனுடைய சரீரத்தில்‌ ஆவிர்பவித்து அவர்கள்‌ ஜன்மத்‌தைக்‌ கடைத்தேற்றி வைக்கிறான்‌.
ஏனையோருக்குப்‌ ‘பசவானுடைய ஸ்வரூபத்தை மனதால்‌ கற்பனை செய்ய வேண்டிய சிரமமும்‌, அவ்விதம்‌ மனதில்‌ உருவாக்கப்‌ பட்ட பகவானுக்கென்று நினைத்து செய்யப்படவேண்‌டிய யக்ஞம்‌, தானம்‌ முதலிய கர்மானுஷ்டான சிரமமும்‌ இல்லாமல்‌ ப்ரத்தியஷமாகப்‌ புலப்படும்‌ பதியை வழிபட்டு அவனுக்குச்‌ செய்யும்‌ பணிவிடையே யக்ஞ தான முதலிய எல்லா ஸத் கர்மானுஷ்டானமாக நிற்பதால்‌ மற்றவர்களை விட பதிவ்ரதா ஸ்த்ரீகள்‌ சுலபமாய்‌ கடைத்தேறும்‌ பாக்கியம்‌ பெற்றவராகி யிருக்கிறவர்‌கள்‌.
நமது சாஸ்திர மூறைப்படி பெண்கள்‌ கன்னிப்‌ பருவத்தில்‌ பரமேஸ்வரனையே பதியாக பாவித்து அனுஷ்டிக்க வேண்‌டிய சில நோன்புகள்‌ ஏற் பட்டிருக்‌கின்றன,
இந்த நோன்புகள்‌ தெலுங்கு கன்னட நாடுகளில்‌ இன்னமும்‌ அனுஷ்டி.க்கப்பட்டு வருகின்றன. –
கல்‌யாணமான பின்னர்‌ பதியையே கணவனாகப் பாவித்து
தொழுதல் வேண்டும்‌-இதுவே பதி விரதம்‌ அல்லது கொழுனன்‌ நோன்பு. ஒவ்வொரு உள்ளத்திலும்‌ ஈசன்‌
அந்தர்யாமியாமிருக்கிறான்‌ என்பது வேதத்தின்‌ துணிபு. அம் முறையில்‌ நமது உள்ளத்திலேயே எல்லாம்‌ அறியும்‌ படியான சர்வஜ்ஞத்வமும்‌, எல்லாவற்றையும்‌ ஆக்கும்‌ வல்லமையாம்‌ சர்வ சக்தியும்‌ உறைந்திருக்கிறது
இந்த சக்தி நமக்குப்‌ புலப்பட்டு வெளியாகாமலிருப்பதற்குக்‌
காரணம்‌ நம் மனம்‌ ஐம்புலன்களின்‌ வழியாய்‌ வெளிமுகமாயத்‌ திரிந்து கொண்டிருப்பதே. அத்திரிதலை நிறுத்தி அது ஒருமுகப்படும் பொழுது அது உள் நோக்கும்‌ ஆற்‌றலை அடைகிறது.
அவ்விதம்‌ உள்‌ நோக்க ஆரம்பிக்‌கும்பொழுது உள்ளிருக்கும்‌ ஈசத் தன்மை சிறிது சிறிதாக வெளியாகிறது . வெளியிலிருக்கும் உலகம் எல்லாம்‌ ‘நம்முள்ளத்தில்‌ உறைந்திருக்கும்‌ ஈசனிடம்‌ அடங்கி யிருக்கறது.
அவ்வீசச் தன்மை வெளிப்படும்போது உலகத்தில்‌ எக்காரியத்தையும்‌ ஆக்கும்‌. ஆற்றலும்‌ ப்ரகாசிக்கிறது
மழை பெய்யென்னால்‌ பெய்க, வெளி முகமாகத்‌. திரியும்‌ ஐம்புலன்களைத்‌ திரியாமல்‌ தடுக்க உபாயமென்னவென்றால்‌ வெளிப்பொருள்களில்‌. மாறி மாறி வரும்‌ அன்பைவிட ஒரே இடத்தில்‌ அசையாத ப்ரேமை அல்லது பேரன்பு ஏற்படுவதே,
முறுக்கு தின்று கொண்டிருக்கும்‌ ஒரு குழந்தையிடம்‌ மிட்டாயைக்‌ காட்டினால்‌ முறுக்கைக்‌ கீழே போட்டுவிட. அது
போல்‌ அதிக -அன்பிற்குப்‌ பாத்திரமான ஒரு பொருளை மனம்‌ கவரும்போது அல்ப சுகப் பொருளைத் தானாகவே விட்டு விடுகிறது – அவ்வித அன்பை என்றும்‌ அழியாத. கடவுளிடம்‌ வளர்ப்பதே அடியாரின்‌ பக்தியோகம்‌,
கண்ணுக்கெதிரே புலப்படும்‌ கடவுளாம்‌ கணவனிடம்‌ அப்பேரன்பை வளர்ப்பதே பதிவ்ரதம்‌.
அப்பிரேமை வளர்ச்சி முதிரும்போது மனம்‌ ஒருமைப்‌ படுகிறது.-மனம்‌ ஒருமைப்பட்டபோதே உள்‌ நோக்க இடந்தருகிறது.-
உள்நோக்கும்போது ஈசத்தன்மை வெளியாகின்றது. அப்போது பெய்யெனப்‌ பெய்யும்‌ மழை.-பெரிய யோகிக்கு ௮திக சிரமத்தின் பேரில்‌ கிடைக்கும்‌ பக்தி பதிவ்ரதைக்கு மிகவும்‌ சுலபமாய்க்‌ இடைக்கிறது
“கொக்கென்று நினைத்தாயோ-கொங்கணவா?’-என்‌னும்‌ கதையில்‌ சொல்லியிருக்கிறபடி, ஒரு பதிவ்ரதை
தன்னுடைய பாதி விரதத்தாலே தூரத்தில்‌ நடந்ததைத் தெரிந்து கொண்ட கதை ஸ்ரீ மகாபாரதம்‌ வன
பர்வம்‌ 209 அத்யாயத்தில்‌ சொல்லப்பட்‌ டிருக்கிறது.

“என்னுடைய பதி சேவையின்‌ ப்ரபாவத்தினாலேயே
கொக்குக்‌ கதையை நான்‌ அறிந்துகொண்டேன்‌ “எனப்‌ பொருள்படும்‌
” சுற்ரூஷாயா :-ஹலம்‌–பஸ்ய- பத்யு:-ப்ராஹ்மண – யாத்ருஸும்‌ -வலாகா ;:_-ஹி-த்வயா ம உம்‌பாட ரோலாத்‌ – தத்‌ – விஷிதம்‌–மயா ்‌ என்னும்‌ மகாபாரதம்‌ வனபர்வம்‌ 209-வது அத்யாயம்‌ 89, 38 சுலோகங்கள்‌ குறிப்பிடத்‌ தக்கன.
அதையே நாயனார்‌, ‘தெய்வம் தொழா அள்‌’என்றார்‌;காணாத தெய்வத்தைக்‌ கற்பனையால்‌ உருவாக்கித்‌ தொழும்‌ சிரமமின்றி என்பது பொருள்‌.

22. இறைகாக்குங்‌ காப்பெவன்‌ செய்யு மகளிர்‌
நிறைகாக்குங்‌ காப்பே தலை.
மகளிர்‌ -மனைவிகளை,
சிறை –காவல்களால்‌,’ காக்‌கும்‌ காப்பு, எவன்‌ என்ன, செய்யும்‌ ?
நிறை தம் மனத்திண்மையால்‌, காக்கும்‌ காப்பே, தலை சிறந்தது.
நன்மையைச்‌ செய்யும்‌ புருஷர்களால்‌ காக்கப்பட்ட மகளிர்‌ காக்கப்பட்டவர்‌ ஆகார்‌; தம்மைத் தாமே காப்‌பவரே காக்கப் பட்டவர்‌!? என
“அரஷிதா க்ருஹேயா –புருஷை :–ஆப்‌தகரரிஹி :–ஆத்மானம்‌- ஆத்‌மனா-யா;து – ரஷேயு :–தர.ஸ்ுரகூதிதர:? என்‌னும்‌ மனுஸ்ம்ருதி 9-வது அத்யாயம்‌ 19-வதுஸ்லோகம் ‘
“துன்பம்‌ வரும்‌ காலத்திலும்‌ தம்மைகத் தாமே காத்‌துக்கொள்ளும்‌ மகளிர்‌ ஸ்வர்க்கமடைவது திண்ணம்‌”
என
“வைலஷம்யம்‌ அபி-ஸம்ப்ராப்தா…. மோாபாரயக்‌ தி-.குலஸ்த்ரிய :–ஆத்மானம்‌- ஆ த்மனா-ஸ த்ய:–ஜித :–அங்வர்யமோ-ந-ஸம்ஸாய : ॥| என்னும்‌ மகாபாரதம்‌ வனபர்‌வம்‌ 68-வது அத்யாயம்‌ 8-வது ஸ்லோகமும்‌ கூறுகிறது.
ஸ்ரீ ராமாயணத்திலும்‌ ராவண வதத்திற்குப்‌ பிறகு விபிக்ஷணர்‌ சீதா தேவியை ஸ்ரீராமனிடம்‌ மூடுபல்லக்கில்‌ அழைத்துக் கொண்டு வரும்‌ சமயத்தில்‌ வானரங்கள்‌.
‘தேவியைப்‌ பார்க்க வேண்டுமென்று ஆவலுடன் அருகில்
குழுமி வரா , விபீஷணர்‌ அவைகளைத்‌ துரத்தி யடித்தார்‌.
அதைப் பார்த்த ஸ்ரீராமன்‌ விபீஷணரைப்‌ பார்த்து
இந்த வானரங்கள்‌ என்னுடைய ஸ்வ ஜனங்கள்‌, இவர்‌களை விரட்ட வேண்டாம்‌”?” என்று விபீஷணரை
நிறுத்தி விட்டு மேலும்‌ சொல்லுகிறார்‌
வீடுகளோ, படுதாக்களோ, கோட்டை ,மதில்களோ, முகமூடிகளோ,ஸ்த்ரீகளை ரக்ஷிப்பதில்லை, மற்றும்‌ இவைகளைப்‌ போன்ற கட்டுப்பாடான. அரண்மனை ஏற்பாடுகள்‌ ஸ்த்ரீகளை ரக்ஷியா ; நற்சீலம்‌ ஒன்றே பெண்களுக்கு _ உண்மையான வேலி மேனி,
“நிவர்தய – ஏலம்‌. உத்யோ.மம்‌ ஜனோயம்‌ – ஸ்வஜனோ- மம | ந- ம்‌ ருஹாணி-ஈ – வஸ்த்ராணி -ஈ-ப்ரா காசா:- திரஸ்க்ரியா : |- ஈத்ருஸமா – ராஜஸத்கரரா ; வ்ருத்தம்‌ ஆவசணம்‌ – ஸ்த்ரியா :”?யுத்தசாண்டம்‌ 111/-வ௫ சர்க்கம்‌ 25, 26-வதுஸ்லோகங்கள்‌) என்று சொல்லி விட்டு ஸீதா தேவியைப்பல்லக்கை விட்டு இறங்கச்‌ செய்து எல்லோரும்‌ பார்க்கும்படியாக காலாலேயே வரும்படி. கட்டளையிட்டார்‌,
“ விஸ்ருஷ்ய. புஎபி/காம்‌-சஸ்மாத்‌-பத்‌ ஏயாமேவ – அபசார்‌:
பத | ஸமீபே – மம – வைஷேஷஹீம்‌ – பரா்யந்து – இமே-
வனெளகஸ: ॥ [ஸ்ரீமத்‌ ராமாயணம்யுதக்தகாண்டம்‌ 117
ஸர்க்கம்‌ 50) வதா சலோகம்‌.|
சீதாதேவியின்‌ சீலம்‌. ராு்ஷஸர்களும்‌, வானரங்களும்‌, க்ஷத்ரியர்களும்‌ ஒரு. மனப்பட்டு மனமுருகி அன்புக்கடலில்‌ முழுகும்படி.. செய்தது. வகுப்பு வேற்றுமை, நாட்‌டு வேற்றுமை. முதலியவைகளால்‌ ஏற்படும்‌ மனவேற்றுமை ஒழிந்து உண்மையான ஓற்றுமைக்குக்‌ காரணமான அன்பைப்‌ பெருக்க உண்மையான சீலம்‌ அழியாத சக்தி வாய்ந்தது என்பதற்கு இது சாஸ்வதமான அத்தாஷி.

25. பெற்றாற்‌ பெறிற் பெறுவர்‌ பெண்டிற்‌ பெருஞ்‌ சிறப்புப்‌
புத்தேளிர்‌ வாழு முலகு.
பெண்டிர்‌ – மனைவியர்‌,
பெற்றான்‌ -(தம்மை.எய்‌திய)கணவனை,
பெறின்‌ -கற்போடு அடைவார்களாயின்‌,
புத்‌தேளிர்‌ –தேவர்கள்‌ வாழும்‌,
உலகு– உலகின்கண்‌_
பெருஞ்‌ சிறப்பு = மேலான சிறப்பை,
பெறுவர்‌ – அடைவர்‌,
நாஸ்தி யஞ்ஞா -ஸ்த்ரியா;- கஸ்சித்‌-ந-ஸ்.ரர தயூம்‌ நஅபி.உபோஷணம்‌ யா – து – ஷர்‌ தரி – ஸூஸ்ரூஷா -ஸா ஸ்வர்‌காய. அஹி ஜாயதே” என்னும்‌ மகாபாரதம்‌ விராட
பர்வம்‌ 20வது அத்யாயம்‌ 47 வது ஸ்லோகம்‌ -இத்தையே கூறுகிறது,
ஸ்ரீமத்‌ ராமாயணத்தில்‌ ஸ்ரீராமன்‌ வனத்தில்‌ அத்ரி மகரிஷியின்‌ ஆஸ்ரமத்தை யடைந்த பொழுது அங்கு அந்த ரிஷியின்‌ பத்தினியான ௮நஸூயா தேவி ஸீதா தேவியைப்‌ பார்த்து காட்டில்‌ கஷ்டப்படும்‌ ஸ்ரீராமனைப்‌ பதி வ்ரதையான சீதை பின்‌ தொடர்ந்து வந்திருக்கும்‌ விஷயத்தில்‌ தன்னுடைய ஆனந்தத்தைத்‌ தெரிவிக்கும் போது, “கொழுநன் நரகத்தில் இருப்பினும்‌ வனத்‌திலிருப்பினும்‌, பாவியாயிருந்தாலும்‌, அவ லஷணமாயிருப்பினும்‌ எந்த. ஸ்த்ரீகளுக்கவன்‌ ப்ரியமான வஸ்துவோ அவர்களுக்கு உத்தம லோகங்கள்‌ இடைக்கும்‌
[நரகஸ்யோ – வனஸ்மோ.- வா_ஸூ ஹோவா யதி வா அஸூஹ யாஸாம்‌ – ஸ்த்ரீணாம்‌ – ப்ரியோ – மஹரார்தா – தாஸாம்‌ – லோகா:- மஹோதயா;-அயோத்யா-17-22-23] என்று பொருள்‌ படும்படி கூறுகிறாள்‌.
அனசூயாதேவிக்குச்‌ சீதை மறுமொழி கூறும் இடத்தும் அக்னி சாக்ஷியாக நான்‌ ஸ்ரீராமனை மணந்த காலத்தில்‌ என்‌ தாயார்‌ எனக்கு உபதேஸித்த வாக்‌கியங்களையே தாங்களும்‌ எனக்கு இன்று ஞாபகப்படுத்துகிறீர்கள்‌.-கணவனைக் கற்புடன்‌ அடைவதைக் காட்டி,லும்‌ பெண்டிருக்கு வேறு தவமில்லை. சத்தியவானை
அடைந்த சாவித்திரி இன்று ஸ்வர்க்கத்தில்‌ ப்ரகாசிக்‌கிறாள்‌. தாங்கள்‌ பதி ஸிஸ்ரூஷையினாலேயே தேவர்கள்‌ வாழும்‌ உலகை அடையப்‌ போகிறீர்கள்‌. இவ்விதமே எத்தனையோ உத்தம ஸ்‌திரீகள்‌ த்ருடமான பதிவ்ரதா தர்மத்‌தினால்‌ தேவர்கள்‌ வாழும்‌ உலகத்தில்‌ பெரு வாழ்வு வாழ்கின்றனர்‌.
(சாவித்ரீ -பதி- ஸூஸ்ரூஷாம்‌ – க்ருத்‌வா – ஸ்வர் கே – மஹீயதே – தயா திவம்‌– – ஏவம்‌. – வியாஸ்௪’ப்ரவரா :-ஸ்த்ரிய :- பர்த்ரு – த்ருடவ்‌ரதா:- தேவலோகே- மஹியந்தே-புண்யேந -ஸ்வேந – கர்மணா’ (அயோத்யா,
118 வத சர்க்கம்‌-10, 12 சுலோகங்கள்‌) என்று சொல்லுகிறாள்‌. இக்கருத்தையே ஸ்ரீபாகவகம்‌ ப்ருது சரித்ரத்‌தில்‌ 4 வது ஸ்கந்தம்‌ 2& வது அத்யாயம்‌ “* அஹோ-இயம்‌ வதூ : – தன்யா -யா – ச -ஏவம்‌ – ஸூஹு ஜாம் – பதிம்‌ – ஸர்வாத்மனா-பதிம்‌ ஹேஜே – யஜ்ஜேஸம்‌ – ஸ்ரீ :- வயு ரீவ-ஸைஷா . நூநம்‌ – வ்ரஜதி -ஊர்த்வம்‌ – அமும்‌ – வைன்யம்‌ – பதிம்‌ – ஸதீ – பஸ்யத – அஸ்மான்‌-அதீத்ய – அர்சி :- துர்விஹாவ்யேன-கர்மணா””என்னும்‌ 25, 26 வது ஸ்லோகங்கள்‌ கூறுகின்றன.

24–, தம் பொருள் என்ப தம்‌ மக்கள் அவர் பொருள்
தம் தம்‌ வினையான்‌ வரும்‌.
தம் மக்கள்‌ – தம்முடைய மக்களை,
தம்‌ – தம்முடைய
தம் பொருள்‌ என்ப -பொருள் என்று கூறுவர் .
அவர் பொருள் அவர் செய்த பொருளின் பயன்
தம் தம் வினையால் -தம்மால் செய்யப்பட வினைப்பயனோடு வரும்‌.
இறந்த பின்னர்‌ அவரவர்‌ செய்த நல் வினை தீவினைகள்‌ பயன்களும்‌, மக்கள்‌ செய்த ஈமச் சடங்கு ௮தாவது, சிராத்தம்‌, தானம்‌ முதலியவற்றின்‌ பயனும்‌ வரும்‌ என்‌பதை இக் குறள்‌ உணர்த்திற்று,
“இம்மையிலும்‌ மறுமையிலும்‌ பெரிய ஆபத்திலிருந்து மனிதரை மக்கள்‌ காக்கின்றமையான்‌, அவர்‌மக்கட்‌ பேற்றினை விரும்புகின்றனர்‌ ” என
* ய௨ர்மம்‌புருஷ்ல்யாவ” ச – புத்ரம்‌ – இச்ஷஹக்தி – மானவா :- ப்ரேத்ய- இஹ – ௪- சம்ப்ராப்தா:- தீராயந்தே-மஹதோ – ஒயாத்॥”” என்னும்‌ மகாபாரதம்‌ த்ரோணபர்வம்‌ 196 வது அச்யாயம்‌ 17 வது ஸ்லோகம்‌ கூறும்‌.
இவ்வுலகலிருந்து வேற்றுலகத்திற்கு மனிதர்‌ செல்ல மக்கள்‌ துணை புரிதலான்‌ சுயநலத்தைக்‌ கருதியே அவர்‌ மக்கட்‌ பேற்றினை விரும்புகின்றனர்‌ ‘ என
* இச்மக்தி – பிதர :-புத்சான்‌ – ஸ்வார்யஹேதோ :- வடொத்கச – இஹ லோகாத்‌ – பரே – லோகே – தாரமிஷ்யசக்தி – மானவா:”என்னும்‌ மகாபாரதம்‌ துரோணபர்வம்‌ 174 வது அதியாயம்‌ 54 வது ஸ்லோகம்‌ கூறும்‌.

25… மக்கண் மெய்‌ தீண்டல் உடற்கின்ப மற்றவர்‌
சொற் கேட்டல் இன்பஞ்‌ செவிக்கு.
மக்கள்‌ – தம்மக்கள்‌, மெய்‌-(தம்முடைய) உடலை,
தீண்டல்‌ தொடுதல்‌, உடற்கு– உடலுக்கு, இன்பம்‌ –சுகத்திற்குக்‌ காரணம்‌ (ஆகும்‌). அவர்‌ சொல்‌ கேட்‌டல்‌ அவர்களுடைய சொல்லை கேட்குதல்‌, செவிக்கு -காதுக்கு, இன்பம்‌ — இன்பத்திற்குக்காரணமாகும்‌.

இங்கு மக்கள்‌ என்பது தம்மக்களையே குறிக்கும்‌.
‘இன்பம்‌ என்ற சொல்‌ இரண்டிடத்திலும்‌ இன்பத்‌திற்குக்‌ காரணம்‌ என பொருள்‌ படுதலின்‌ ஆகுபெயர்‌. அவர்‌ என்ற சொல்‌ தம் மக்களையே குறிக்கும்‌.
குழந்தையால்‌ ஆலிங்கனஞ்‌ செய்யப்பட்டபோது உண்‌டாம்‌ சுகத்திற்கு ஈடின்மையால்‌, குழந்தையின்‌ ஸ்பர்சத்தைக்‌ காட்டிலும்‌ இனிமையானது வேறொன்றுமில்லை ??: என
“ஸ்ரிறானா-ஆலிங்‌ ம்‌ யமானஸ்ய-ஸ்பர்பா-ஸ௫தே :- யயா – ஸுவ: புத்ரஸ்பர்ஸாத்‌ – ப்ரியதர :- ஸ்பர்போ லோகே. ஈ வித்தே? என்னும்‌ மகாபாரதம்‌ ஆதிபர்வம்‌ 98 வது அத்யாயம்‌ 51வது சுலோகமும்‌,
“புத்ரஸ்‌. பர்றாத்‌ -து – லோகேஷு -ந – அன்யத்‌ – ஸுயவூம்‌ –
. அதி – இவ.- ஹி? என்னும்‌ மேற்சொன்ன ஆதிபர்வம்‌
64 வது அச்யாயம்‌ 67 வது ஸ்லோகமும்‌,
குழந்தையின் மழலைச் சொற் போல்‌ இனிமையாயுள்ளது ” என-ஓுரக்யம்‌ – கார்தம்‌-வவிஷ்யதி – வாலஸ்ய-இவ- ப்£வ்‌ருத்தஸ்ய – கலம்‌ – அவ்யக்தம்‌ – அத்‌ ஷுதம்‌ ” என்னும
மகாபாரதம்‌ அனுசாஸனபர்வம்‌ 181 வது அத்யாயம்‌ 41 வது. ஸ்லோகமும்‌ கூறும்‌,

குழலினிது யாழினிது என்பர்‌ தம்‌ மக்கள்‌
மழலைச்சொல்‌ கேளாதவர்‌ :
அமிழ்தினு மாற்ற வினிதே தம்மக்கட்‌
சிறுகை யளாவிய கூழ்‌ ?” .
என்னும்‌ குறள்கள்‌ இங்கு குறிப்பிடத்தக்கன.
சுட்டிய இனை நிலைக் கிளவி என்பர்‌ ஆசிரியர்‌ தொல்காப்‌பியனார்‌.

26. அன்பிலா ரெல்லாசம் தமக்குரிய ரன்புடையார்
என்பு முரியர்‌ பிறர்க்கு. ்‌
அன்பு-அன்பினை, உடையார்‌, என்பும்‌ -எலும்பினாலும்‌, பிறர்க்கு, உரியர்‌; அன்பு அன்பினை, இலார்‌ -.உடைத்தாயிராதவர்‌, எல்லாம்‌ எல்லாப் பொருளாலும்‌, தமக்கு தமக்கே, உரியர்‌,
இந்திரன்‌ வ்ருத்தாசுரனை வெல்ல வஜ்ராயுதம்‌ செய்‌வதற்குத்‌ தச முனிவரின்‌ முதுகெலும்பு வேண்டும்‌ என
அவரை இந்‌திரன்‌ வேண்ட, அம்முனிவர்‌ யோக சக்தியால்‌ ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்க, அவன்‌: முதுகு எலும்பால் வஜ்ராயுதம்‌ செய்யப்பட்டதை ஈண்டு இவ்வாசிரியர்‌.குறிக்கின்‌றனர்‌.
இந்த வ்ருத்தாந்தம்‌ ஸ்ரீபாகவதம்‌ 6வது. ஸ்கந்தம்‌ 9, 10 வது அத்யாயங்களில்‌ பார்க்க,
சிபி சக்ரவர்த்தி தன்‌ உடலப்‌ புறாவுக்கு கொடுத்ததையும்‌, கர்ணன்‌ தன்‌ உடலோடு பிறந்த கர்ண குண்டலங்களை இந்தரனுக்‌’குக்‌ கொடுத்ததையும்‌ மகாபாரதம்‌ வனபர்வம்‌ 182,188 வது அத்யரயங்களும்‌ -வனபர்வம்‌ 811 வது அத்யாயமும்‌ கூறுகின்றன.

27. என்பி லதனை வெயில் போலக்‌ காயுமே
அன்பி லதனை யறம்‌.
-என்பிலதனை -எதும்பில்லாத ‘ உடம்பை, வெயில்‌ காயும்‌ போலே -தகிக்குமாறு, அறம்‌ = தர்மக்கடவுள்‌,-அன்பிலதனை- துன்பப்படுத் தும்‌,
அன்பு. இருத்தலும்‌ இல்லாமையும்‌ மக்களிடமே நிகழமாதலால்‌; அன்பில்லாத மக்கள்‌ ௮ஃறிணைப்‌ பொருட்கட்குச்‌ சமம்‌ என்பதைக்‌ குறிக்க “அன்பிலாரை என்ற சொல்லை ஆசிரியர்‌ வழங்காது -அன்பிலதனை -என்ற சொல்லை வழங்கியது நோக்கத்தக்கது
ஆறாம் என்பது ஈண்டு அறத்திற்கு பதிதேவதையாய்‌ இருக்கும்‌ தர்மராஜனைக்‌ “குறிக்கும்‌.

செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்து இருப்பான்
நல் விருந்து வானத்தவருக்கு
இல் -வீட்டில் இருந்து -செல் விருந்து -செல்கின்ற விருந்தினரை -ஓம்பி -உபசரித்த பின்னர் -இல் -வீட்டுக்கு -வரு விருந்து -வருகின்ற விருந்தினரை -பார்த்து இருப்பான் -எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவன் -வானத்தவருக்கு -தேவர்களுக்கு -நல்ல விருந்து ஆவான்
மனு ஸ்ம்ருதி -3-106 இத்தையே சொல்லும்
இது விஷயத்தில்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌ 90 வத அத்தியாயம்‌ நகுலோபாக்யானம்‌ இங்கு குறிப்‌
பிடக்தக்கது. அதன்‌ கதை பின்வருமாறு:..தர்மபுத்திரர்‌ அசுவமேத யாகம்‌ செய்தபிறகு அன்னதானம்‌ ஏராள மாய்ச்‌ செய்தார்‌. அந்த அன்னதானத்தைச்‌ சபையி லுள்ளோர்‌ அனைவரும்‌ புகழ்ந்தனர்‌. ௮ந்த சமயம்‌ ஒரு பக்கம்‌ தங்கமாய்ப்‌ பிரகாசித்த சரீரத்துடன்‌ கூடிய ஒரு ,
கீரிப்பிள்ளை ௮ங்குவந்து “குருஷேத்திரத்தில்‌ :மாவைக்
கொடுத்த உஞ்சவருத்தி: பிராம்மணனுடைய தானத்‌;திற்கு இந்த யாகம்‌ ஈடாகாது?” எனச்‌ சொல்லிற்று.
இதைக்‌ கேட்ட சபையோர்கள்‌ ஆச்சரியமடைந்து ௮ந்தக்‌ கீரிப்பிள்ளையைப்பார்தது, “நீயார்‌? நீ என்‌ இப்படிச்‌
சொல்கிறாய்‌?” என்று கேட்டார்கள்‌. கீரிப்பிள்ளை அடி.யில்‌ வருமாறு சொல்லிற்று:
குருஷேத்திரத்தில்‌ உஞ்ச வ்ருத்தி செய்து பிழைக்‌கும்‌. பிராமணன்‌ ஒருவன்‌ இருக்கிறான்‌. அவனுடைய குடும்பத்தில்‌ அவன்‌ மனைவி, புத்ரன்‌, நாட்டுப்பெண்‌ஆகிய மூவர்‌ இருந்தனர்‌. இந்த பிராமணன்‌ கொண்டு வருவ திவிருந்தே அவர்கள்‌ ஜீவித்து வந்தனர்‌. ஒரு சம யம்‌ தேசத்தில்‌ துர்பிக்ஷம் ஏற்படவே அவருக்கு கோதுமை மாவுதான்‌ ” கொஞ்சம்‌ கிடைத்தது. அதை
4 பாகமாய்ச்‌ செய்து சாப்பிட ஆரம்பித்தார்கள்‌. அந்த சமயத்தில்‌ ஒரு அதிதி வந்து சேர்ந்தார்‌. உஞ்ச வ்ருத்தி
பிராமணன்‌ வந்தவரை உபசரித்து தன்னிடம்‌ இருந்த மாவைக்‌ கொடுத்து அதைச்‌ சாப்பிடச் சொன்னார்‌. அதிதிக்கு அதைச் சாப்பிட்டும்‌ பசி தீரவில்லை. அவருடைய ஸ்திதியைப்‌ பார்க்க பிராமணர்‌ வருத்தமடைந்தார்‌-இதைப் பார்த்த அவருடைய பத்னி தன்‌ பாகத்தையும் கொடுத்தாள்‌. அசைச் சாப்பிட்டும்‌ அவருடைய பசி தணியவில்லை
பிறகு பிராமணனுடைய புத்ரனும்‌, நாட்டுப்‌ பெண்ணும்‌ தங்களுடைய பாகத்தைக்‌ கொடுத்தார்கள்‌. உடனே தேவலோகத்தில் இருந்து .புஷ்பவர்ஷம்‌ பெய்தது.
வந்த அதிதி உஞ்சவ்ருத்தி பிராமணனைப்‌ பார்த்து“உங்கள்‌ குடும்பத்தாரைப்‌ போல்‌, நான்‌ கண்ட தில்லை, தங்களுக்கென்று கொஞ்சங்கூட வைத்துக்கொள்ளாமல்‌ எல்லாவற்றையும்‌ எனக்காகக்‌ கொடுத்துவிட்டீர்‌களே. உங்களுடைய தானமே தானம்‌.
“உங்‌களை ஸ்வர்க்க. கதிக்கு அழைத்துச்‌ செல்ல தேவதைகள்‌ விமானத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்‌. உன்னுடைய பச்னி, மகன்‌, நாட்டுப்பெண்‌ இவர்களுடன்‌ ஸ்வர்க்கத்தை – அடைவாயாக. நான்‌ தர்ம தேவதை. என்று சொல்லி மறைந்தார்‌. அவர்கள்‌ நான்கு பேரும்‌. விமானத்தில்‌ ஏறி ஸ்வர்க்கக்தை அடைந்தனர்‌, அந்த மாவைச்‌ சாப்பிட்ட சமயத்தில்‌ ழே உதிர்ந்த மாவும்‌ ஜலமும்‌ பட்டு என்‌ சரீரத்தின்‌ ஒருபாகம்‌ தங்க மயமாய்‌ ஆகி விட்டது . மற்றொரு பாகம்‌ அம்மாதிரியாகும்‌ என நினைத்து அநேக யாகங்களுக்குப்‌ போனேன்‌, இந்த யாகத்திற்கும்‌ ஆசையுடன்‌ வந்தேன்‌ ; ஆனால்‌ என்‌ சரீரத்தின்‌ மற்ற பாகம்‌ தங்கமயமாக ஆகவில்லை, . அதனால்‌ தான்‌ இந்த யாகம்‌ அந்த ப்ராம்மணனுடைய தானத்‌திற்கு ஈடில்லை என்று சொன்னேன்‌ ?? என்று சொல்‌லிற்று, இதிலிருந்து அதிதி ஸத்காரத்தின்‌ விசேஷம்‌ வெளியாகிறது ,
அடியிற்குறிப்பிட்டிருக்கும்‌ ஸ்லோகங்களும்‌ அதிதி
சத் காரத்தின்‌ மஹிமையையே கூறுகின்றன :–
அதிஸி :– பூஜித :–யத்‌ .. ஹி-யூ* யாயதே – மனஸா -பலம்‌ | ௩. தத்‌- கீரது – ( ரதேக- அபி . துல்யம்‌- ஆஹ: இரிஷிண மபண்ையை – மு ருஹஸ்‌ஸ்‌:ப “து. முச்சத |௩ -அன்யதீ.தஸ்மாத்‌ – பரஃ-பூர்ம இதி – ப்ராஹு:.”மரீஷிண : |தஸ்மாத்‌ – ம்‌ ருஹஸ்‌. மாடு ரமஸ்ய : ௩. அன்யத்‌ – ற உவதம்‌..அஸ்திவை_ருதே – அதிஸ்ிம்‌ – ஈரவ்பாவ* ர.மனஸா.ஏதத்‌ .. வீசாய்‌ ”_ மகாபாரதம்‌ – அனுசாசனிகபர்வம்‌ 2 வது அத்தியாயம்‌ 107, 86, 106 வது ஸ்லோகக்கள்‌. ்‌

30. இனைத் துணைத்தென்ப தொன்‌றில்லை விருந்தின்
றுணைத் துணை வேள்விப்‌ பயன்‌
வேள்விப் பபன்‌ -(விருந்தினரை) உபசரித்தலாகிய வேள்வியின்‌ பபன்‌, இனைத் துணைத்து -இவ்வளவுக்குட்
பட்டது என்பது,== ஒன்று ஒன்றும்‌, | இல்லை; விருந்தினை — விருந்தினருடைப, துணைத்‌ துணை -யோக்யதைக்‌குத்‌ தகுந்தது ஆகும்‌.
அதிதி பூஜனத்தை மனுஷ்ய யஜ்ஞம்‌ (ந்ருயத்ஜோதியிபூஜனம்‌) என்று மனு தர்ம சாஸ்த்ரம்‌ கூறும்‌,
“ஐம்பெரும்‌ வேள்விகளுள்‌ ஒன்றாதலின்‌ வேள்விஎன்றும்‌, பொருளளவு தான்‌ சிறியதாயமினும்‌ தக்கார்‌ கைப்பட்டால்‌ வான்‌ சிறிதாப் போர்த்து விடு மாதலின்‌, இனைத்துணைத்தென்ப தொன்றில்லை என்று கூறினார்‌:
– இதனால்‌ இருமையும்‌ பயத்தற்கு காரணம்‌ கூறப்பட்‌டது” என்கிறார்‌ பரிமேலழகர்‌,
தானம்‌ செய்பப்படம்‌ பொருள்‌ சிறிதாயினும்‌ அது தகுதியான சத்பாத்திரத்தின்‌ கையில்‌ சேர்ந்தால்‌ மிகவும்‌ பெரிய ஆகாசத்தைபும்‌ சிறிது என்னும்படி மேலான பயனைத்‌ தந்துவிடும்‌ என்பதுபோல்‌ நாம்‌ செய்‌யும்‌ விருந்தின்‌ பயனும்‌ விருந்தினரின்‌ யோக்யதைக்குத்‌ தக்கபடி பயனளிக்கும்‌ என்பது கருத்து.
“ யதிஹமஸ்தே-ஜலம்‌. த்வா-ை?க்ஷம்‌-உத்‌ மாதபுகர்ஜலல்‌ | தீஉன்னம்‌-மேருணா.துல்யம்‌-தஜ்ஜலம்‌..ஸா.மமோபமம்‌? ॥ ‘என்பது பராசருடைய வசனம்‌ பராசர சம்ஹிதை ஆசார காண்டம்‌ அத்யாயம்‌ 1- ஸ்லோகம்‌ 53).
பாத்ரஸ்யடஹி-விஸேஷண.ஸற* ர திஉயாகதயைவ-௪ | அல்பம்‌-வா- பஹ -உஃவா-ப்ரேத்ப. உரநஸ்ய-ஹலம்‌- அஸ்ர்‌ துதே*? என்று மனு ஸ்ம்ருதி 7-வது அத்யாயம்‌ .86-வது ஸ்லோகம்‌ கூறுகிறது.

31. அல்லவை தேய வறம் பெருகு நல்லவை:
நாடி. யினிய சொலின்‌.
நல்லவை– புண்ணியங்களை, நாடி- கருதி, இனிய -இனிய சொற்களை, சொல்லின்‌ – கூறினால்‌, அல்லவை-பாபங்கள்‌, தேய- குறைய, அறம்‌ – தர்மம்‌, பெருகும்‌,
முதன்‌ முதலில் பாபச்செயல்களின் பயனைப் போக்க முயல வேண்டும்‌. -அது அழிந்தால்‌ புண்ணியச்‌ செயல்‌களின்‌ பயன்‌ தானே பெருகும்‌ என்பது கருத்து.-* ஜிஹ்வாழ்‌ ரே-வர்ததேஃலக்ஷ்மீ : *,-நீதி சாஸ்த்ரம்‌,

32. எழுமை யெழு பிறப்பு முள்ளுவர்‌ தங்கண்‌
விழுமம் துடைத்தவர்‌ நட்பு.
(பயன்‌ தெரிவார்‌ -உபகாரத்தின்‌ பயனை ஆராய்‌வார்‌)-தங்கள்‌ – தம்மிடத்தில்‌, விழுமம்‌– துன்பத்தை,
துடைத்தவர்‌ நட்பு-போக்கியவருடைய சினேகத்தை
எழமை–‘எழு பிறப்பும்‌- புண்ய பாபங்கள்‌ தொடரும்‌ எழு
வகைப்பட்ட -பிறப்புக்களிலும்‌, உள்ளுவர்‌ நினைப்பர்‌,
தனது ஏழு ஜென்மங்களிலும் , தன்‌ சந்நிதியில் எழுதலை முறைகளிலும் மறக்க முடியாதது. -தனக்கு ஒருவர் ஆபத்துக்கு காலத்தில் உதவியது என்றும் கருத்துக் கொள்‌ளலாம்‌.–தனது மறு ஜன்மங்களில் அனேகமாய்‌ எல்லாருக்கும் போர்வை ஜென்ம நினைவு மறந்து போயினும் பேர் உதவி செய்தவரை மறு லான்மத்தில் காண நேர்ந்தால் நம்மை யறியாமலேயே அவரிடம்‌ பூர்வ ஜன்ம வாசனையினால்‌ பேர் அவா ஏற்படலாம்‌ என்பது கருத்து.

33. கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
ஓன்று நன்று உள்ளக்‌ கெடும்‌.
கொன்றன்ன (முன்‌ நன்மை செய்தவர்‌)
கொல்லுதலை ஓத்‌த, இன்னாச்செயலை, -செயினும்‌- செய்‌தாலும்‌, அவர்‌ செய்த ஒன்றா நன்று ஒரு உபகாரத்தை, உள்ள – நினைக்க, (௮து ) கெடும்‌ — போக்கப்படும்‌.
அய்ய வனை
முன்பு உபகாரம்‌ செய்தவன்‌ பின்னர்ப்‌ பெரிய அபகாரத்தைச்‌ செய்யினும்‌, அவன்‌ செய்த உபகாரத்தை. நினைத்து அபகாரத்தை மறப்பது கடனாகும்‌ என,
“பூர்‌:லோபகாரீ -ய:- தே – ஸ்யரத்‌ . அபராயே – மரீயஹி -; உபகாரேண – தத்‌ . தஸ்ய- ௯்ஷக்தல்யம்‌ -அபசரயின :’?: என்று. மகாபாரதம்‌ வன பர்வம்‌ 98 வது அத்யாயம்‌ 27 வது ஸ்லோகம்‌ கூறும்‌.

34, எந் நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்‌வில்லை
செய்ந் நன்றி கொன்ற மகற்கு–
எந்நன்றி -எவ்வகைப்பட்ட அறத்தையும்‌, கொன்‌றார்க்கும்‌-சிதைத்தவர்க்கும்‌, உய்வு-பிராயச்சித்தம்‌;-உண்டாம்‌ இருக்கிறது ; செய்ந் நன்றி- செய்யப்பட்ட உபகாரத்தை,-கொன்ற மகற்கு மறக்காதவனுக்கு, உய்வு-பிராயச்சித்தம்‌, இல்லை. ்‌
“ப்ரம்ம ஹத்தி செய்தவனுக்கும்‌, கள்ளினைக்‌ குடித்‌தோனுக்கும்‌, திருடனுக்கும்‌, விரதம் இழந்தவனுக்கும் பெரியோர்களால்‌ பிராயச்சித்தம் விதிக்கப்பட்டது.
செய் நன்றி கொன்றோனுக்கு விதிக்கப்படவில்லை”’ என
“ப்ரஹ்மவ” நே – ௪ -ஸுராபே -௪- சோரே.. ஷம்‌நவ்ரதே தியா. ட நிஷ்க்ருதி:- விஹிதா – ஸத்‌ ஷி :- க்குதீவே – சாஸ்தி நிஷ்க்ருதி:” | என்று.
ஸ்ரீமத்‌ ராமாயணம்‌ கிஷ்கிந்தா. காண்டம்‌ -34- 12-வது ஸ்லோகமும்‌, மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌277-வது அத்யாயம்‌ 11-ம்‌ ஸ்லோகமும்‌ கூறும்‌.
* ஆன்முலை யறுத்த அறனில்‌ லோர்க்கும்‌,
மாணிழை மகளிர்‌ கருச்சிதைத்‌ தோர்க்கும்‌,
பார்ப்பார்‌ தப்பிய கொடுமை யோர்க்கும்‌,
வழுவாய்‌ மருங்கிற்‌ கழுவாயு முளவென,
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்‌,
செய்தி கொள்றார்க்‌ குய்தி யில்லென..
அறம் பா டிற்மே ஆயிழை கணவ”-என்னும்‌ புதகானூற்று 34 வது) செய்யுளும்‌ இக்கருத்‌தையே கூறும்
தையே கூறும்‌, ்‌

35. சமன் செய்து சீர் தூக்குங்‌ கோல் போலமைந்தொருபால்‌
கோடாமை சான்றோர்க்‌ சணி.
கோல்‌–தூக்கும்கோல்‌, –சமன்செய்து – (இருபுறமும்‌) சமனாகச்‌ செய்யப்பட்டு, –சீர்‌ – சமமான நிறையை,
தூக்கும் போல்‌- தூக்கக்‌ காட்டுகிறது போல்‌,
௮மைந்து (வாதிகள்‌ இருவரிடமும்‌) சமமான எண்ணத்‌தோடு இருந்து, ஒருபால்‌–ஒரு பக்கத்தில்‌, கோடாமை -நடுநிலை தவறாமை, சான்றோர்க்கு -மேலோருக்கு–அணி -ஆபரணம்‌ (ஆகும்‌). ..
இக்கருத்தையே பின்னர்க்‌ கூறப்பட்ட புற நானூாறு.மதுரைக்‌ சாஞ்சி, கலித் தொகை இவற்றிலுள்ள அடிகள்‌ குறிக்கும்‌…
விரிசீர்த்‌ –
தெரிகோன்‌ மென்ன போல வொருதிறம்‌ .
பற்றலிலியரோ (புறநானாறு, 6, 8—9)
ஜெமன்‌ கோலன்ன செம்மைத்தாகி (மதுரைக்கா 4-1)
ஓர் வுற்றோரு திற மொல்‌ காத நேர்கோல்‌
அறன்‌.புரி நெஞ்சத்தவன்‌, (கலித்‌. 42, 14- 15).
ஸம: – அஹம்‌ – ஸர்வ வஹுதேஷு பச்ய – மே – ஜாகலே -வ்ரதம்‌ | துலா-மே – ஸர்வஷு்தேதேஷ-ஈ – ஸமா -திஷ்டதி ஜாஜலே |என்ற சாந்தி பர்வம்‌ 238-10- சுலோகம்‌ இங்கு குறிப்பிடத்‌தகும்‌.

36. வாணிகம் செய்வார்க்கு வாணிகம்‌ பேணிப்‌
பிறவும் தம் போற்‌ செயின்‌.
பிறவும்‌- பிறருடைய பொருள்களையும்‌, தம் போல்‌-தம்முடைய பொருள்கள் போல, பேணி- போற்றி, செயின்‌ செய்தால்‌, அஃதே, வாணிகஞ்செய்வார்க்கு-வணிகர்க்கு, -வாணிகம்‌- உயர்ந்த வணிகத்‌ தன்மை (தகும்‌),
இக் குறள்‌ வைஸ்யரின்‌ சிறப்புத் தன்மையைக்‌ கூறுகின்றது.

37. அடக்கம் அமரருளுய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்து விடும் .
அடக்கம்‌ -இந்‌திரியங்களை. அடக்குதல்‌ , அமரருள்‌.-தேவர்களுள்‌, உய்க்கும்‌ — செலுத்தும்‌; அடங்காமை-அவற்றை அடக்காமை, ஆரிருள்‌ -நெருங்கிய இருளோடு கூடிய நரகத்தில்‌, உய்த்துவிடும்‌- திண்ணமாய்ச்‌ செலுத்தும்‌,
இந்திரியங்களின்‌ இயற்கை தாம்‌ எவ் விஷயத்தைக்‌ கொள்ளக் கூடாதோ அவற்றைக்‌ கொள்ளுதலே ஆகும்‌. அவற்றைத்‌ துஷ்டக் குதிரைகட்கு ஒப்பிடும்‌ கடோபனி
ஷத்து (1-3-5-). அவ்வாறு அவைகளைப்‌ போக விட்டால்‌ அதன்‌ பயன்‌ நரகத்தை அடைவதே யாகும்‌ ; அவ்வாறு“போக விடாது அவற்றை இழுத்துக், கொள்ள வேண்டிய விஷயங்களிற்‌ செலுத்தினால்‌ அதன் பயன்‌ ஸ்வர்க்கத்தை அடைதல் ஆகும்
ஆர் இருள் என்பதும் ஈஸாவாஸ உப நிஷத்தில்‌ உள்ள அந்நியம் – தமஸ் -என்றுமாம்

38. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்‌
எழுமையு மேமாப்‌ புடைத்து.
ஆமைபோல்‌, (உயிர்‌ – மனிதன்‌), ஒருமையுள்‌ -ஒரு பிறப்பில்‌, ஐந்த ஜந்து ஞானேந்த்ரியங்களையும்‌, அடக்‌கல்‌ ஆற்றின்‌-அடக்கினால்‌, அஃது, எழுமையும்‌-ஏழு பிறப்புக்களிலும்‌, ஏமாப்பு உடைத்து – ஷேமம்‌ தருதலை உடைதது,
ஆமை எவ்வாறு எல்லா அங்கங்களையும்‌ குறுக்கிக்‌ கொள்ளுமோ, அவ்வாறு இந்திரியங்களை அவ்வவற்றின்‌ விஷயத்தில்‌ செல்லாது அடக்குபவன்‌ நிலைபெற்ற பிரகஜ்ஜையை அடைவான்‌–என
4யஉ£.- ஸம்ஹூதே.- ௪.
அயம்‌ – கூர்ம;-அங்கானி.. இவ – ஸர்வ:ற:. “இர்‌ திரியாணி2 இந்திரியார்பேவ்‌ய : – தஸ்ய… ப்ரஜ்ஞா -என்னும்‌ பகவத்கீதை 2வது அத்யாயம்‌ 58 வது ஸ்லோகம் கூறும்‌
**பட ா.மம்ஹரதே … சாமான்‌ . கூர்ம: – அ. மூனி-இவ ஸர்வா |சரா3.”-ஆத்மஜ்யோதி:. ஆத்மா-அயம்‌- ஆத்மன்யேவ .ப்ரபஸ்ர்யதி-என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 173 வது – 51வது ஸ்லோகமும்‌ இந்த கருத்தையே கூறும்‌,
௮9, கதங்காத்துக்‌ கற்றடங்க லாற்றுவான்‌ செவ்வி
அறம்பார்க்கு மாற்றி னுழைக்து,

389-கதம்‌ காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து
கதம் -கோபத்தை,காத்து போக்கி -கற்று – நூல்களை ஆராய்ந்து, அடங்கலாறறுவான்‌ செவ்வி-இந்திரியங்களை அடக்குவானுடைய நன்மைக்குரிய | பக்‌ககுவ காலத்தை,–அறம்‌ -தர்மக்கடவுள்‌, ஆற்‌றின்‌ – “அவன்‌ வழியே சென்று, பார்க்கும்‌ –நோக்கி நிற்கும்‌.
இந்தி ரிய ரநிக்ரஹம்‌ செய்வோனை அனுக்ரகிக்க அறக்கடவுள்‌ காத்துக் கொண்டிருக்கு மென்பது கருத்‌து .
‘இந்திரியங்களை அடக்குவதற்குத தர்ம சாஸ்திரங்களின்‌ அறிவும்‌, தூய்மையான செயலைச்‌ செய்தலும்‌, அக் காரணம்‌ பற்றி வரும்‌ மனத் தூய்மையும்‌ காரணமாகும்‌ என்
கட(1-3-6-8-) விளக்கும்‌.

40-ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்‌
இழிந்த பிறப்பாய்‌ விடும்‌.
ஒழுக்கம்‌ -தர்ம சாஸ்‌திரங்களில்‌ தத் தம்‌ வர்ணங்‌களுக்கேற்ற முறைப்படியும்‌, பெரியோரால்‌ நடக்கப்‌பட்ட முறைப்டியும்‌ நடத்தலை,– உடைமை, “குடிமை நற் பிறப்பிற்குக்‌’ கரணம்‌, (ஆகும்‌) ; இழுக்கம்‌– சதாசாரத்‌திலிருந்து தவறுகை, இழிந்த பிறப்பு –இழிந்த
பிறப்பிற்குக்‌ காரணம்‌, ஆய் விடும்‌ — ஆகும்‌.
குடிமை, பிறப்பு, இவை அவற்றின்‌ கரரணம்‌’ எனப்‌: பொருள்‌ தருதலின்‌ ஆகு பெயராகும்‌.
தர்ம நூல்கள்‌ தன்‌ வர்ணத்திற்கு விதித்த அனுஷ்‌டானங்களைச்‌ செய்தால்‌ அதுவே உயர்வு என்றும்‌.பிறருக்கேற்பட்ட தர்மத்தை அனுஷ்டித்தால்‌ தன்‌ பிறப்பினின்று நழுவி விடுகிறான்‌’? என்ற கருத்துள்ள “வரம்‌ – ஸ்வயர்ம :- விரூண :- ஈ- பாரக்ய; – ஸ்வனுஷிடுத மேண . ஜீவன்‌. ஹி… ஸ£$ய :.. பததி – ஜாதித:” என்னும்‌ மனு ஸ்ம்ருதி 10வது அத்யாயாம்‌ 97 வது ஸ்லோகம்‌ கூறுவது இங்கு நோக்கத் தகுந்தது,
*ஸ்வஹாவ- விஹிதம்‌… கர்ம- குர்வன்‌ – ஈ . அப்னோதி – கல்ஞ9ஷம்‌,? :பரயூர்‌ மோ. ஒயாவஹ:” என்னும்‌ பகவத் கீதை 18வது அத்‌யாயம்‌ 85 வது ஸ்லோகத்திலுள்ள வாக்கியமும்‌ இக் கருத்‌தையே சொல்லும்‌,

41, மறப்பினும் ஒத்துக் கொளலாகும்‌ பார்ப்பான்
பிறப்பொழுக்கங்‌ குன்றக்‌ கெடும்‌.
ஓத்து (கற்ற) வேகத்தினை, –மறப்பினும்‌ -மறந்தானாயினும்‌,-கொளல்‌ ஆகும்‌ -வருணம்‌ கெடாமையின் பின்னும்‌ அஃது ஓதிக் கொள்ளலாம்‌. பார்ப்பான்‌ = அந்தணனது, பிறப்பு–(உயர்ந்த) வருணம்‌,-ஒழுக்கம்‌ குன்‌ற-தன்‌ ஒழுக்கம்‌ குன்ற, கெடும்‌.
“மறந்த வழி இழி குலக்தனாமாகலின்‌’ “மறக்கலாகாது” என்னும்‌ கருத்தான்‌ * மறப்பினும்‌?” என்றார்‌..

சிறப்புடைவருணத்திற்கு மொழிந்தமையின்‌, இஃது .ஏனைய வருணங்களுக்கும்‌ கொள்ளப்படும்‌ என்று கூறுகிறார்‌ பரிமேலழகர்‌.
ஒவ்வொரு பிராம்மணனும்‌ வேதாத்யயனம்‌ செய்து
(வேதங்களை மறவாது இருக்கவேண்டும்‌ என்றும்‌, மறப்‌பின்‌ மறுபடியும்‌ அத்யயனம்‌ செய்யவேண்டும்‌ என்றும்‌,
பிராம்மணனாய்ப்‌ பிறந்தது முதல்‌ பிராம்மண தர்மங்‌களிலிருந்து ஒரு போதும்‌ தவறக் கூடாதென்றும்‌, . தவறினால்‌ அதனாலுண்டாகும்‌ கேட்டை அனுபவித்தே தீர வேண்டும்‌ என்றும்‌ இக்குறள்‌ கூறும்‌, –
பார்ப்பான்‌ தன்‌ பிறப்பிற்குரிய ஒழுக்கங்‌ குன்றின்‌ கேடு அவனுக்கு மாத்திரமன்றி, நாட்டில்‌ உள்ளோர்‌ அனைவர்க்கும்‌ கேடு நிகழும்‌ என்பதை உணர்த்து வதற்கே பரர்ப்பானின்‌ பிறப்பொழுக்கம்‌ ஒருக் காலும்‌ தவறக் கூடாது என்று உரை கூறுவாருமுளர்‌
ஸூர்ய க்ரஹணம் முதலிய புண்ணிய காலங்களில் சொல்லப்படும் மஹா சங்கல்பத்தில் வரும் ஜாதி ஷீரம் ச கராணாம் –என்ற பதத்தினால் குறிக்கப்படும் பாபத்தையே இங்கு ஒழுக்கம் குன்ற என்ற தொடரினால் ஆசிரியர் குறிக்கிறார்

42, பிறன்மனை நோக்காத: பேராண்மை சான்‌’றோர்க்கு
, அறனொன்றோ வான்ற வொழுக்கு
பிறன்மனை -பிறன் மனைவியை, நோக்காத. பாராத,–சான்‌’றோர்க்கு-கிருஹஸ்தர்களுக்கு, ஒன்று — ஒப்பற்ற, அறனோ -தர்மமும் -ஆன்ற மேலான, ஒமுக்கு–ஒழுக்கமும்‌, (ஆகும்‌).
புறப் பகைகளை யடக்கும்‌ ஆண்மை யுடையவர்க்கும்‌ உட்பகையாகிய காமம்‌ அடக்குதற்கு அருமையின்‌ அதனை அடக்கிய ஆண்மையைப்‌ பேரண்மை என்றார்‌?” என்று:
கூறுகிறார்‌ பரிமேலழகர்‌,

48 திறனல்ல தற்பிறர்‌ செய்யினு நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
தன்‌ -தனக்கு, பிறர்‌,திறனல்ல -செய்யத்தகாத காரியங்களை, செய்யினும்‌ – செய்தாலும்‌, (அதனால்‌ அவர்‌கட்‌குவரும்‌) நோ வருத்தத்‌திற்கு,-நொந்து வருத்தப்‌பட்டு, அறனல்ல- தர்மமல்லாத காரியங்களை, செய்‌யாமை, நன்று -நல்லது , .
தமக்குத்‌ தீங்கு செய்தோர்க்குக்‌ தாமும்‌ தீங்கு இழைக்க வேண்டும்‌ என நினைத்கல்‌ இயற்கையாயினும்‌… அதனைத்‌ தடுடுத்தலே மேலானது என்பது கருத்து.
ஸ்ரீமத்‌ சரமாயணத்தில்‌ அயோத்யாகாண்டம்‌ 1 1வதுசர்க்கம்‌ 11 வது சுலோகத்தில்‌ “ந – ஸ்மரதி – அபகாராணாம்‌ – சதம்‌ –அபி- ஆத்மவத்தயா’-என்று ஸ்ரீராமனுடைய குணங்களை வர்ணிக்குமிட்த்தில்‌ சொல்லப்பட்‌டிருக்கிறதைப்‌ பார்க்கவும்‌. ஒருவன்‌ தனக்கு நூற்றுக்‌ கணக்கான இன்னல்கள்‌ செய்யினும்‌ தனது. பெருந் தன்மையினால்‌ அவைகளை நினைக்கக் கூட மாட்டான்‌ ஸ்ரீராமபிரான்‌ என்பது இதன்‌ பொருள்‌.

44-அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்‌றின்
ஏதம்‌ படுபாக்‌ கறிந்து.
(நினைப்பவர்‌ – ஆராய்வோர்‌) இழுக்காற்றின்- கெட்ட வழி காரணமாக, ஏதம்‌ – தீமை, படுபாக்கு.- வருதலை அறிந்து அழுக்காற்றின்‌- பொறாமையால்‌, அல்லவை -தீயச் செயல்களை, செய்யார்‌- செய்ய மாட்டார்கள்‌.

45.–சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம்‌ வேண்டு பவர்‌.
மற்றின்பம்‌ – பேரின்பத்தை (மோஷத்தை),-‘வேண்டு பவர்‌,’சிற்றின்பம்‌_ சிற்றின்பத்தை, வெஃகி -விரும்பி, ௮றனல்ல– தியச் செயல்களை, செய்யார்‌ – செய்ய மாட்டார்‌.

இம்மையின்பம்‌, மறுமையின்பம்‌-இரண்டும்‌ சிற்றின்பம்‌ எனப்படும்‌, இரண்டிற்கும்‌ எல்லை இருத்‌தலின்‌.

46, புறங்கூறிப்‌ பொய்த்துயிர்‌ வாழ்தலிற்‌ சாதல்‌
அறங்கூ.று மாக்கந்‌ தரும்‌.
(ஒருவன்‌) புறங்கூறி-ஒருவர்‌ இல்லாத இடத்து அவரைப் பற்றிக்‌ கூற்றம்‌ கூறி, பொய்த்து-௭திரில்‌ பொய்யாக நடித்து, உயிர் வாழ்‌ தலின்‌ -உயிரோடு இருத்‌தலைக் காட்டிலும்‌,-சாதல்‌, அறம்‌- தர்ம நூல்கள்‌,-கூறும்‌ -சொல்லும்‌, ஆக்கம்‌-நன்மையை, தரும்‌-கொண்டு வரும்‌.
புறங்கூறுதலால்‌ வரும்‌ பாவத்தைச்‌ சாதல்‌ தடுக்கும்‌ என்பது கருத்து
47. மறந்தும்‌ பிறன் கேடு சூழற்க சூழின்‌
அறஞ்சூழுஞ்‌ சூழ்ந்தவன்‌ கேடு,
(ஒருவன்‌) மறந்தும்‌, பிறன்கேடு-பிறனுக்குக்‌ கேட்டினை, சூழற்க–செய்ய நினைக்கக்‌ கூடாது ; சூழின்‌-நினைத்தால்‌, சூழ்ந்தவன் – நினைத்தவனுக்கு, கேடு-கேட்டினை, அறம்‌ அறக் கடவுள்‌, சூழும்‌ –நினைக்கும்‌,
*கெடுவான்‌ கேடு -நினைப்பான்‌, விநாச காலே விபரீத புத்தி என்பன ஆன்றோர் வாக்கியங்கள்‌.

.

48. புத்தே ளூலகத்து மீண்டும்‌ பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற.
ஒப்புரவின்‌-உபகராரத்தைக்‌ காட்டிலும்‌, பிற -வேறான, நல்ல – நற் செயல்களை, புத்தேளுலகத்தும்‌ -ஸ்வர்க்கத்திலும்‌, ஈண்டும்‌ – இவ்வுலகத்‌திலும்‌, பெறல்‌ -பெறுதல்‌, அரிது இல்லை ஏ அசை
இம்மையிலும்‌ மறுமையிலும்‌ பர உபகாரகமே சிறந்தது கே என்பது கருத்து.
இந்த கருத்தையே பின்‌ குறிக்கப்பட்டிருக்கும்‌ ஸ்ரீமத் பாகவத ஸ்லோகக்களும்‌ வெளியிடுகின்‌றன :….
பஸ்ர்யத-ஏதான்‌-மஹா ஹா .மான்‌-பர-அர்‌ பூ-ஏகாந்த-ஜீவிதான்‌-
வாத-வர்ஷு- ஆதப-ஹிமான்‌-ஸஹந்த:-வாரயநக்தி நஃஅஹோ-ஏஷாம்‌-வரம்‌-ஜன்‌ ம-ஸர்.வ-ப்ராணி-உபஜீவனம்‌-
ஸுஜனஸ்ய-இவ-யேஷாம்‌-வை-விமுபா-யாந்தி-ந-அர்‌ புநின:-
பத்‌ ர-புஷ்ப-௨டல-தநாயா-மூல-வல்கல.-2 ஈர ஹி:-
கந்‌ -கிர்யாஸ- ஷஸ்ம; ௮ஸ்ஸ்ரி-தோக்மை:-காமான்‌ -விதன்‌ வதே-
ஏதாவத்‌.ஜன்‌ ம-ஸாஹல்யம்‌- உ ஹிஞம்‌-இஹ-ே ஹிஷ-ஈ
ப்ராணை : அர்டை..யியா-வாவா-ஸ்்ரேய-ஏவ-ஆசரேத்‌.ஸஉ
ஸ்ரீ பாவதம்‌ 10 வதுஸ்கந்தம்‌ 23 வது அத்யாயம்‌ 32-35.-ஸ்லோகங்கள்

49, அருள் சேர்ந்த நெஞ்சினார்க்‌ இல்லை யிருள்‌ சேர்ந்த
இன்னா வுலகம் புகல் –
அருள்‌ -தயையோடு, சேர்ந்த கூடிய, நெஞ்சினார்க்‌கு — மனமுடையவர்க்கு, இருள்‌ சேர்ந்த இன்னா உலகம்‌-இருளோடு கூடிய அர்த்த புகல்‌ -புகுதல்‌, இல்லை –
“எல்லா பூதங்களிடத்தும்‌ அபயத்தைக்‌ கொடுப்‌போன்‌ சிறந்த விஷ்ணுவின்‌ பரம பதத்தை யடைவான்‌ ”
– என, *அபயம்‌-ஸர்வ-ஷஹ ஒதேவய: -ய;_உஉ௱ இ- மஹிபசே ஸ- மச்ஹூதி- பரம்‌ – ஸ்தானம்‌ – விஷ்ணோ:- பஉம்‌ – அனா மயம்‌ – என்னும்‌- மகாபாரதம்‌ ஸ்‌திரிபர்வம்‌ 7 வது அத்‌ யாயம்‌ 25வது ஸ்லோகம்‌ கூறும்‌.
அருளுடையார்க்கு நரக வேதனை இல்லை என்பது கருத்து.

50. அருளில்லார்க்‌ கவ்வுலக மில்லை பொருளில்லார்க்‌
கிவ்வுலக மில்லாதி யாங்கு.
பொருள்‌ இல்லார்க்கு, இவ்வுலகம்‌ . இவ்வுலகத்‌தின்பம்‌, இல்லாதியாங்கு-இல்லாதது போல, அருளில்‌லார்க்கு, அவ்வுலகம்‌ -காரிய ப்ரம்ம லோகத்தின்‌ இன்‌பம்‌, இல்லை.
துறவறத்தைப்‌ பூண்டமையால்‌ அவர்‌ ப்ரம்‌ம லோகத்தை யடைந்த போதிலும்‌ அருளில்லாத காரணம்‌ ‘ பற்றி அவர்‌ ஆங்கு இன்பத்துடன்‌ இரார்‌ என்பதே. இக் குறளுக்குக்‌ கருத்து என்றும் கூறலாம்‌-

51. தன்னூன்‌ பெருக்கற்குத்‌ தான் பிறி தூனுண்‌பான்‌
எங்கனம் ஆளும் அருள் –
தன்‌ – தன்னுடைய, ஊன் பெருக்கற்கு -உடம்பை வளர்த்ததற்கு, தான்‌, பிறிதூன்‌ -வேறொன்றின்‌ ஊனை உண்பான்‌, அருள்‌ -அருளை, எங்கனம் -எப்படி,ஆளும்‌ – தன் வசப்படுத்‌துவான்-
மற்றொன்றன்‌ மாமிசத்தால்‌ தன்‌ மாமிசத்தை வளர்க்க விரும்புகின்றவனைக்‌ காட்டிலும்‌ கொடியன்‌ இல்லை” எனப்‌ பொருள் பட
“ஸ்வ – மாம்ஸம்‌ – பர மாம்ஸேந – யேர – வர்யயிதும்‌ – இச்ஹதி – நாஸ்தி-ஷுத்திரதா தஸ்மாத்‌ – ந – நிருஸிம்ஸதரோ – நர? என்னும்‌ மகாபாரதம்‌ அனுசாசனபர்வம்‌ 178 அத்தியாயம்‌ 13 வது சுலோகமும்‌; “ ஸ்வ – மாம்ஸம்‌ -ப.ர – மாம்ஸேன- யோ – வர்யூயிதும்‌- இச்ஹதி -உத்விம்ன வாஸம்‌ லஹதே-யத்ர-யத்‌ரஉபஜாயதே” என்னும்‌ அதே பர்வம்‌ 233 அத்யாயம்‌ 6வது ஸ்லோகமும்‌,
“ஸ்வ-“மாம்ஸம்‌ – பரமாம்ஸேன-யோ – வர்யயிதும்‌-இச்‌ ஊதி – அவி. வாஸ்யேச.. அவஹவீடேக்‌ – ஸ – இதி – ஹோவாச நார -என்று மேற்படி பர்வம்‌ 177 வது அத்யாயம்‌.14 வது ஸ்லோகமும்‌,
“*ஸ்வமாம்ஸம்‌- பரமாம்ஸேன -யா – வயமிதும்‌ – இச்ஹஊதி – அனஹியர்ச்ய – பித்ரூன்‌ -தெவான்‌ -ததோ – நாஸ்தி அபுண்யக்ருத்‌’ என்று மனு ஸ்ம்ருதி 5 அத்யாயம்‌ 62 வது ஸ்லோகமும்‌ கூறும்‌.

52. அவி சொரித்தாயிரம்‌ வேட்டலின்‌ ஒன்றன்‌
உயிரசெகுத்‌ துண்ணாமை ஈன்று. ‘
அவி– ஹவிஸ்ஸூக்களை, சொரிந்து மிகுதியாகக்‌ கொடுத்து, (இல்லறத்தான்‌), ஆயிரம்‌ வேட்டலின்‌ –
ஆயிரம்‌ யாகங்கள்‌ செய்வதைக் காட்டிலும்‌, ஒன்றன்‌ -ஒன்றினுடைய, உயிர்‌ – பிராணனை, செகுத்து போக்கி (துறவறத்தான்‌)), ஊன்‌ – மாம்ஸத்தை உண்ணாமை,-நன்று -நல்ல பயனைத்‌ தரும்‌.
இந்த குறளுக்குப்‌ பரிமேலழகர்‌ அடியில்‌ கண்டவாறு உரைசெய்‌திருக்கிறார்‌:- ்‌
அவிசொரிந்து-(தீயின் கண்‌ நெய்‌ முதலிய) அவிகளைச்‌ சொரிந்து, ஆயிரம்‌ வேட்டலின்‌ — ஆயிரம்‌ வேள்வி வேட்டலினும்‌, , ஒன்‌றன்‌ உயிர்செகுத்து உண்ணாமை -ஒரு விலங்கின்‌ உயியைப் போக்கி (௮து நின்று ஊனை) உண்‌ணாமை நன்று,

அவ் வேள்விகளான்‌ வரும்‌ பயனிலும்‌ இவ் விரதத்‌தால்‌ வரும்‌ பயனே பெரிதென்பதாம்‌.
– **மாதம்‌ ஒரு அச்வமேதமாக நூறு வருஷம்‌ செய்பவனும்‌, மாமிசம்‌ தின்னாதவனும்‌ சமம்‌!” என
“*மாஷஹி-|ம்ரஹி- அஸ்வமேயேன-யோ-யஜேத-மதம்‌ -ஸமா:-ந ஸ்‌ வாஉதி- ௪-யோ-மாம்ஸம்‌ – ஸமம்‌ – ஏதத்‌ – மதம்‌- மம.” என்னும்‌ மகாபாரதம்‌ அனுசாசன பர்வம்‌. 177 வத அத்‌யாயம்‌ 16 வது ஸ்லோகமும்‌,
“ தவத்தோர்‌ மாம்சம்‌ உண்ணுவஇல்லை”? என்‌ *:ந- பக்ஷ யந்தி – அதோ – மரம்ஸம்‌ தபோயுக்தா :-மனீஷிண:-‘ என்னும்‌ 176 வது அத்யாயம்‌11 வது ஸ்லோகமும்‌ கூறும்‌.
*வர்ஷே – வர்ஷே – அஸ்‌வமேயேன – யோ – யஜேத – பாதம்‌ – ஸமா ₹- மாம்ஸானி௪-ந- வாதேத்-ம :- தயோ :- புண்யஹலம்‌ – ஸமம்‌?” என்னும்‌ மனுஸ்மிருதி 5 வது அத்யாயம்‌ 53 வது ஸ்லோகமும்‌ இந்தக் கருத்தையே கூறும்‌, ‘ °
இக் குறளால்‌ வேள்விகளுக்குப்‌ பயனுண்டென்பதே ஆசிரியர்‌ கருத்து. வேள்வி ஒரு. பாபச்செயல்‌. என்பது ஆசிரியர் கருத்து அன்று.
“ஆயிரம்‌ ஏகாதசி உபவாசஙகளக்‌ காட்டிலும்‌ ஒரு சிவராத்திரி உபவாசம்‌ உயர்ந்தது என்று சொல்லுமிடத்து ஏகாதச உபவாசமும்‌ ஒரு புண்‌ணிய வ்ரதம் தான்‌ என்றே சொல்லப்பட்டதாகும்‌.
அங்கனமில்லாது எகதசி உபவாசம்‌ ஒரு பாப காரியமாயிருந்தால் ஒவ்வொரு சிவ ராத்திரிவ்ரதமும்‌: அதைவிட ஆயிரம்‌ மடங்கு பாபத்தைக் கொடுக்கக்‌ கூடியதென்ற விபரீதார்த்‌தமே ஏற்படும்‌, ஆதலால்‌ வேள்வி என்பது ஒரு புண்ணிய காரிபமென்ற கருக்தை3ப இங்கு நாயனார்‌ தெரிவிக்கிறார்‌.

இக் குறளைப்பற்றிச்‌ சிலர்‌ கீழ்வருமாறு அபிப்பிராயப் படுகிறார்கள்‌ :–
தமிழ் நாட்டில்‌ பண்டை சங்கநூல்களில்‌ புலால்‌ உண்ணுவது ஆஷேபிக்கப்படாதது மாத்திரமே யன்றி அது போற்றப்பட்டு மிருக்கறது . பழைய தமிழ் மக்‌கள்‌ புலாலருந்துவதைச்‌ சிறப்பாகத்தான்‌ கொண்டிருக்‌ தார்கள்‌. வேதங்களிலும்‌ யாகம்‌ முதலியவைகளில்‌ மாம்சம்‌ உபயோகப்படுத்தப்பட்ட தென்பது தெளிவாகத்‌ செரிகிறது.. ஆதலால்‌ திருவள்ளுவர்‌ வைதிகக்‌ கொள்கையினராயிருந்தாலும்‌ முதன்‌ முதலாக புலால்‌ மறுத்தலைப்‌ பிரசாரம்‌ செய்ததற்குக்‌ காரணம்‌ என்ன எனில்
அவர் காலத்தில்‌ வடநாட்டிலிருந்து . புத்த சமண மதப்‌ரசாரங்கள்‌ தென்னாட்டில்‌ ‘ ஆரம்பிக்கப்‌பட்டன. . அப்போதிருந்த வைதிக மகான்கள்‌ பெளத்‌தர்களுடையஅஹிம்‌ஸக் கொள்கையைத்‌ தங்களுடைய மதத்தில்‌ சேர்‌.த்துக் கொண்டார்கள்‌. அதனால்தான்‌ இக் காலத்து பிராமணர்கள்‌ புலால்‌ தவிர்த்‌திருந்து இருக்கிறார்‌கள்‌ போலும்‌, : ்‌
ஆனால்‌ இவ்விதம்‌ அபிப்பிராயப்படுவது சரியாகத்‌: தோன்றவில்லை. இங்கு அஹிம்ஸா தர்மத்தை உபதே சித்திருப்பது பெளத்த சமயக் கொள்கைகளை அநுசரித்து அன்று, வேதங்களிலும்‌ தர்ம சாஸ்திரங்களிலும்‌. உபதேஸிக்கப்பட்டிருக்கிற அஹிம்ஸா தர்மத்தை யனுசரித்ததே அகும்‌, அதெப்படியென்றால்‌, வேதங்களும்‌ தர்மசாஸ்த்ரங்களும்‌ ஒருவன்‌ கிரகஸ்தாச்ரமத்தை விட்டு. சன்யாஸாச்ரமத்தை யடையும்‌ போது உலகில் உள்ள எல்லாப்பிராணிகளுக்கும் அபயப்பிரதான ப்ரதிஜ்ஜை செய்து அஹிம்ஸா விரதத்தைக்‌ கைக் கொள்ளும்‌படி. உபதேஸிக்கின்றமன, பெளத்த மதமோ அம் மதத்தில்‌
சேர்ந்தோர்‌ எல்லாருக்குமே கொல்லாமையை உபதேதசிக்கிறது. அனால்‌ அந்த உபதேசம்‌ அனுஷ்டானத்தில்‌ விபரீதமாகவே முடிந்திருக்கிறது. : தற்காலம்‌ பெளத்த மதம்‌ பெருவாரியாக வழங்கும்‌ தேசங்கள்‌ பர்மா, சீனா, ஜப்பான்‌, முதலியன. பொதுலாய்‌ மக்கள்‌ எல்லோரும்‌ அஹிம்ஸா தர்மத்தை யனுஷ்டிக்க வேண்டும்‌ என்கிற இயற்கைக்கு மாறான உபதேசத்தைஅந்த மதம்‌ செய்த தின்‌ பயனாக அந்நாடுகளில்‌ மாமிசம்‌ சாப்பிடாதவர்‌களே இல்லை என்கிற விபரீத அனுஷ்டானம்‌ எற்பட்டுப்‌ போய்விட்டது. பெளத்த நாடுகளில்‌ பெளத்த மக்கள்‌ பாம்பு, தவளைகளைக்‌ கூட தின்று விடுவதாகச்‌ சொல்லப்‌ படுகிறது . ஆனால்‌ பர்மா முதலிய நாடுகளிலுள்ள பெளத்தர்கள்‌ “பெளத்தர்கள்‌ நேராகவே கொல்லுவது இல்லை. துலுக்கர்‌ முதலிய இதரமதஸ்தர்கள்‌ கொல்‌வதை நாங்கள்‌ தின்கிறோம்‌.-அதில் என்ன தோஷம்‌”என வாதிக்கிறார்கள்‌ என்றுகேள்வி. ஆதி புத்த பகவான்‌ மரணமடைந்ததே ஒரு சிஷ்யனுடைய வீட்டில்‌ ‘ அவனால்‌ பரிமாரப்பட்ட பன்றி மாம்சத்தை அதிகமாகத்‌ .தின்‌று விட்டதால்‌ ஏற்பட்ட அதிசாரம்‌ காரணமாகத்‌ தான்‌ என்று புத்தருடைய சரித்திரங்கள்‌ கூறுகின்‌றன, . பிறர்‌ கொன்றதைக்‌ தாம்‌ சாப்பிட்டால்‌ தவறில்லை என்ற கொள்கையை நாயனார் இக் குறளில்‌ –
‘பரிஹசித்‌திருக்கிறார்‌ ; —
தினற்பொருட்டாற்‌ கொல்லா துலகெகெனின்‌
யாரும்‌ விலைப்பொருட்டா லூன்றருவாரில்‌.””
இக்குறளுக்குப்‌ பரிமேலழகர்‌ கீழ்வருமாறு உரை ” செய்திருக்கிறார்‌.
தினல்‌ பொருட்டால்‌ = (பேதைமை காரணமாகவல்லது)ஊன் தின்‌கை காரணமாக, உலகு உலகம்‌,-கொல்லாது எனின்‌ – கொல்லாதாயின்‌, விலைபொருட்‌டான்‌ ஊன்தருவார்‌ -பொருள்‌ காரணமாக ஊன்விற்பார்‌, யார்‌ உம்‌ யாவரும்‌, இல்‌ இல்லை.
“பின்‌ நிகழும்‌ தின்கை முன்‌ நிகழும்‌ கொலைக்குக்‌ காரணமாகாமையின்‌, தின்பார்க்குக்‌ காரணத்தானல் வரும்‌ பாவம்‌ இல்லை!” என்ற வாதியை நோக்கி அருத்‌தாபத்தியளவையால்‌ காரணமாதல்‌ சாதித்தலின்‌
இதனான்‌ மேலது வலியுறுத்தப்பட்டது. [இவன்‌ வாங்குவான்‌ என்ற நம்பிக்கையே கொலைஞன்‌ கொல்லுவதற்கு ‘காரணமாசையால்‌], “கொன்று தின்னாது விலைக்குக்‌ கொள்ளுவர்க்குக்‌ குற்மமென்னை யென்பார்க்கு அதனாலும்‌ கொலைப்பாவம்‌ வருமென்பர்‌ மணக்குடவர்‌. இந்தக் கருத்தையே “ய2ி – சேத்‌- வாடிகோ – ஈ – ஸ்யாத்‌ – ௩,த௨ா – வாதகோ “வாடிகார்மாய – த்த்‌ வாதயதி- வை-௩ ;”’ என்னும்‌ மகாபாரதம்‌ ௮னுசாசன பர்வம்‌ 177 வது அத்யாயம்‌ 30-வது ஸ்லோகமும்‌ கூறுகிறது.
நமது வேதசாஸ்திரங்களோ பொதுவாக எல்லா மக்களுக்கும்‌ பூர்ண அஹிம்ஸா தர்மத்தை உபதேசிக்க வில்லை. நாலாவது ஆச்ரமமாகிய ஸன்யாஸாச்ரமத்திற்கு
மாத்திரம்‌ உயிருள்ள ஒரு செடி.யமினுள்ள இலையைக் கூடக்‌ கிள்ளக்கூடாது என பூர்ண அஹிம்ஸாதர்மம்‌ உபதேஸிக்கிறது. வர்ணாச்ரமங்களின்‌ படிகளையனுசரித்‌து அஹிம்ஸா தர்மமும்‌ படிப்படியாக கடுமையாக்கப்‌ பட்டிருக்கிறது.
சாமவேதத்தில்‌ சாந்தோக்ய உபனிட தத்தின்‌ முடிவில்‌
.கிருஹஸ்தாச்சமத்தைச்‌ சொல்லிக்‌ “குடும்பத்திலிருந்து கொண்டே சுத்தமான தேசத்தில்‌ யக்ஞங்களைத்‌ தவிர
மற்றைப் பொழுது எவ்வித ஹிம்ஸையையும்‌ செய்யாமல்‌ இருப்பவன்‌ ப்ரம்மலோகம்‌ எனும்‌ மோக்ஷத்தை யடைகிறான்‌?” என்று கூறப்பட்டிருக்கிறது , இவ்வுலகத்தில்‌
யுத்தம்‌ முதலிய காரியங்களுக்கு. நாம்‌ அனேக மக்கள்‌ தம்முயிரைப்பலியிடுதல்‌ எப்படி. அவச்யமான தர்மமாக ஆகிறதோ அவ்விதம்‌ நம்‌ மனுஷ்ய சக்தியை மீறி வானின்று நமக்குக்‌ கிடைத்து நாம்‌ அனுபவிக்கும்‌, மழை, காற்று, ப்ரகாசம்‌, மின்சார சக்தி, முதலியவைகளுக்குக்‌ கைம்மாறக இல்வுலகத்திலுள்ள செடி, கொடிதான்யம்‌ முதல் மனிதன்‌ ஈறாக உள்ள” உயிர்களை வானுலகின்‌ தளர்ச்சி.யின்மையின்பொருட்டு நம்‌ பகுத்தறிவிற்கெடடாத வேத.விதிப்படி. அர்ப்பணம்‌ செய்வதே யக்ஞம்‌,
மநிதர்‌ ஊன்‌ உண்பதற்காக: யக்ஞம்‌ ஏற்பட்டதல்ல. யக்ஞங்களில்‌ சோமலதையோ, சீந்துக்கொடியோ, பாபரகிதமான ஒருகசப்பு ரசத்தை யுடையதே யன்றி மயக்கம் தரும்‌ மதுப்பிரிவைச் சேர்ந்ததல்ல,. இது வைத்திய நிகண்டுகளைப்‌ பார்த்தாலே தெளிவாகசத் தெரிகிறது. ஆதலாலே தான்‌ நம்‌ திருவள்ளுவ நாயனார்‌ கொல்லாமை என்ற அறத்தை(வேத சாஸ்திரங்களின்‌ கொள்கையை யனு சரித்து துறவிகளுக்காகவே துறவறவியலில்‌ சொல்லியிருக்கிறார்‌. வேதியரை “அறுதொழிலோர்‌? என்று மற்றொரு குறளில்‌ சொல்லுவதினாலேயே வேதியர்க்கு, வேட்டல்‌ (யாகங்‌களைச்‌ செய்தல்‌), வேட்டுவித்தல்‌(யாகங்கள்‌ செய்வித் தல்‌] இரண்டும்‌ ஸ்வதர்ம்மெனக்‌ கருதுகிறார்‌,
இதிலிருந்து தற்காலமுள்ள வேதியர்கள்‌ யக்ஞத்தைத்‌தவிர இதர காலங்களில்‌ கொல்லாவிரதம்‌ பூண்‌டு இருப்பதும்‌, திருவள்ளுவர்‌ கொல்லாமையை உபதேசித்து இருப்பதும்‌, பெளத்தம்‌ முதலிய நாஸ்திகமதங்களின்‌ வாசனையால்‌ அல்ல என்பதும்‌, ஆஸ்திக மதமான :அநாதி’வேத சாஸ்த்ரங்களை யனுசரித்தே யென்பதும்‌ அறியப்‌ படுகின்றன. தமிழ்‌ நாட்டு சங்ககாலத்துநூல்களிலும்‌: மாம்சத்தை உண்டு களிக்கும்‌ பழக்கத்தைக்‌ குறிக்கும்‌. பாடல்கள்‌ அறுதொழிலோராகிய வேதிய இல்லறத்‌தவரையோ அல்லது அந்தணரெனும்‌ சொல்லால் குறிக்கப்பட்ட எவ்வுயிர்க்கும்‌ செந்தண்மை பூண்டு ஒழுகும் ஸன்யாஸாச்‌ரமிகளையோ பற்றி எழுந்ததல்ல என்பது வெளிப்‌படை.

54. வேண்டிய வேண்டியாங்‌ கெய்தலாற்‌ செய்தவம்‌
ஈண்டு முயலப்‌ படும்‌.
(ஒருவன்‌), வேண்டிய விரும்பியவற்றை, வேண்டி.யாங்கு -விரும்பியபடியே, எய்தலான்‌ -அடைதலான்‌,-ஈண்டு -இவ்வுலகத்தில்‌, செய் தவம்‌ செய்ய வேண்டிய தவம் ,(ஒருவனால்‌), முயல முயல்‌, படும்‌ -பொருந்தும்
எவை நினைத்தற்கும்‌ அடைதற்கும்‌ அரிதோ அவை யெல்லாம்‌ தவத்தால்‌ அடையப்படும்‌ என
யத்‌. உ௱ரரபம்‌ – உுராம்னாயம்‌.உ௱சாயர்வஒம்‌ – உ௱ரன்வயம்‌ தத்‌ ஸர்வம்‌ – தபஸா – ஸாய”யம்‌-சபோ.ஹி- உமர்‌ அதிக்.ரமம்‌” என்னும்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌
அதியாயம்‌ 17 வது ஸ்லோகம்‌ கூறுகிறது
மாண்ட மனம் பெற்றார்‌ மாசிலுறக்கத்து வேண்‌டிய வேண்டி யாங்‌ கெய்துதல்‌ வாய்‌ ” என கலித் தொகை-143- வது செய்யுள்‌ கூறும்‌.

55. துறந்தார்க்குத்‌ துப்புரவு வேண்டி மறந்தார்‌ கொல்‌
மற்றை யவர்க டவம்‌.
துறந்தார்க்கு- துறவறம்‌ பூண்டார்க்கு, துப்புரவு -உபசாரத்தை, வேண்டி– செய்யவேண்டி, மற்றையவர்‌கள்‌– இல்லறத்திலுள்ளார்‌, தவம்‌- தவத்தை, மறந்தார்‌கொல்‌ -மறந்தாரோ
மற்றையவர்கள்‌ என்பது ப்ரம்மசாரி, க்ருஹஸ்தன் –
இருவரையும்‌ குறிக்க. ஆற்றல் உடைத்‌தாயினும்‌, துப்புரவு
செய்தல்‌ ப்ரம்மசாரியால்‌ முடியாதாகையால்‌ அச் சொல்‌ க்ருஹஸ்‌தரையே குறிக்கும்‌ என்க.
*இல்வாழ்வா னென்‌பான்‌ இயல்புடைய மூவர்க்கும்‌
நல்லாற்றினின்‌ற. துணை(17 வது குறள்‌)” என்பது ஈண்டு ஒப்பிடத்தக்கது.

5.5- வஞ்ச மனத்தான்‌ படிற்றொழுக்கம்‌ பூதங்கள்‌
ஜந்து மகத்தே நகும்‌.
வஞ்சமனத்தான்‌ படிற்றொழுக்கம்‌- வஞ்சகத்தோடு கூடிய மனத்தை யுடையானின்‌ குற்றமுள்ள நடத்தையை (கண்டு), அகத்து-உடலில்‌, (உள்ள) பூதங்கள்‌ ஐந்தும்‌-ஐந்து பூதங்களும்‌, நகும்‌ -பரிகசிக்கும்‌.
– “கர்மேந்த்ரியாணி – ஸம்யம்ய – ய – ஆஸ்தே – மனஅறா – ஸ்மான்‌ – இந்தரியார்மான்‌. மியாயா- ஆசார ;.-ஸ-உச்யேே த (கீதை.3-6-.) என்‌னும்‌ ஸ்லோகம்‌ இங்கு குறிப்பிடத்‌ தகுக்தது .மனம்‌ கெட்டு, வெளிப் புறத்தில்‌ நன்னடடத்தையோடு கூட இருப்பதாக நடித்தல்‌. துறவறத்தான்‌ கொள்ளத்‌ தகுந்தது அன்று என்பது கருத்‌து.

56. பகுத்துண்டு பல்லுயி ரோம்புத நூலோர்‌
தொகுத்தவற்று ளெல்லாம் தலை.
நூலோர்‌- சாஸ்திரங்கள்‌ எழுதிய பெரியோர்‌,தொகுத்தவற்றுள்‌ எல்லாம்‌–தொகுத்துக்கூறிய-தர்மங்‌கள்‌ எல்லாவற்றுள்ளும்‌, தலை சிறந்தது, (துறவறத்‌தான்‌) பகுத்து – (உண்பதனை பல சிறு உயிர்கட்கும்‌,பிரித்துக் கொடுத்து , உண்டு–உண்பித்து, பல்லுயிர்‌ -பலப்ராணிகளையும்‌, ஓம்புதல்‌ காத்தல்‌, ஆகும்‌,
வானப்ரஸ்தன்‌ ஒருவருஷத்திற்கு வேண்டிய பொருளைச்‌ சேகரித்து வைத்துக் கொள்ளலாமென்றும்‌- அதிதிகளை உபசரிக்க வேண்டும்‌ என்றும்‌ தர்மசாஸ்த்‌ரங்கள்‌ கூறுவதை ஈண்டு இந்நூலாசிரியர்‌ கூறியிருத்தல் நோக்கத் தக்கது, இக்குறளில்‌ துறவறத்தான்‌ என்பது ‘வானப்ரஸ்தனை மாத்திரம்‌ குறிக்கும்‌.”
“ஸமா – நிசய – ஏவ-வா”’ என்கிறது மனு ஸ்ம்ருதி ,,6 – 18 வது ஸ்லோகம்‌,

57-. நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்‌
புல்லறி வாண்மை கடை,
நில்லாதவற்றை – நிலையில்லாத பொருள்களை, நிலையின-நிலை யுள்ளவை, என்று, உணரும்‌,-புல்லறிவாண்மை.-சிற்‌றறிவைக்‌ கொள்ளுதல்‌, கடை-இழிந்தது – ஆகும்‌.
இப் பொருள்‌ நித்தியம்‌ இப் பொருள்‌ அநித்‌தியம்‌.
என்ற விவேகம்‌ சன்னியாசிக்கு வேண்டும்‌ என்பது இக்‌ குறளின்‌ கருத்து
.
58. நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்‌
பெருமை யுடைத்திவ்‌ வுலகு.
இவ்வுலகு – இந்த உலகம்‌, ஒருவன்‌, நெருநல்‌ -நேற்று, உளன்‌-இருந்தான்‌, இன்று– இப்பொழுது.இல்லை -இறந்து விட்டான்‌, என்னும்‌ – என்று கூறப்‌படும்‌, பெருமை-பெருமையை, உடைத்து.
இங்குப்‌.பெருமை என்பது அதற்கு மாறான இழிவு என்ற. பொருளைக்‌ கொண்டது.
ஸுஷ்ம சராீரத்தோடு கூடிய ஜீவன்‌ ஸ்தூல சரீரமின்றி ஒரு செயலையுஞ்‌ செய்யத் தகாதவனாகையாலும்‌,-ஸ்தூல சரீரம்‌ எப்போது அழியும்‌ எனத் திண்ணமாய்க் கூற இயலாமையாலும்‌, அது நன்னிலையில்‌ இருக்கிறது என எண்ணுங்காலத்தே அழியுமாகையாலும்‌ அதனை நிலையுள்ளது என்று எண்‌ணுதல்‌ சன்னியசிக்குத் தகாது .
“நேற்று இருந்தான்‌, இப்பொழுது இறந்தான்‌?”என ருக்வேதம்‌ 10 வது மண்டலம்‌ 85 வத ஸூக்தமும்‌,
அதர்வண வேதம்‌ 9வதுகாண்டம்‌ 10 ஸூக்‌ தமும்‌, “இப்‌போதே நான் கண்ட அவன்‌ எவ்வாறு இறந்தான்‌!” என
“இதானீம்‌- தாவத்‌ – எவ – ௮ஸெள்‌ -மயா . தீருஷ்ட :- கமம்‌ – என்னும்‌ மகாபாரதம்‌ -சாந்தி பர்வம்‌-227 வது அதயாயம்‌ 99-100 வது ஸ்லோகமும்‌ கூறும்‌,

59. குடம்பை தனித்து ஒழியப் புட் பறந்தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு.
உடம்போடு – ஸ்தூல சரீரத்‌துடன்‌, உயிரிடை -உயிர்க்கு,(உள்ள) நட்பு – சம்பந்தம்‌, குடம்பை-மூட்டை, தனித்து , ஒழிய -கிடப்ப, புள்‌ – பறவை,-பறந்தற்று-பறந்தது போன்றது.
பறவை குஞ்சாகப்‌ பொறிக்கப்படும்‌ வரை அதற்கு முட்டை யோட்டுடன்‌ சம்பந்தமும்‌, குஞ்சாகப்‌ பொறிக்‌கப்பட்ட பின்னர்‌ அதற்கு அதனோடு சம்பந்தமின்மையும்‌, அது வெளியில்‌ எறியப்படுவதும்‌ நோக்கத்தக்கன.

61. யாதனின்‌ யாதனின்‌ னீங்கியொன் நோதல்‌
அதனி னதனி னிலன்‌.
யாதனின்‌ யாதனின்‌ – எவ்வெப்பொருள்களினின்‌றும்‌, நீங்கியான்‌ – பற்றை விட்டவன்‌, ௮தனின்‌ அதனின்‌ -அவ்வப்பொருள்களினின்றும்‌, கோதல்‌ இலன்‌ – வருத்‌தத்தை அடையான்‌.
இக் கருத்தையே “யதோ யதோ -நிவர்ததே – தத :- சத : விமுச்யதே – நிவர்தனாத்‌ – ஹி. ஸர்வதோ … ஈ -வேத்தி – ௨௱;வூம்‌ – அணு – அடி என்னும்‌ மகாபாரதம்‌
உத்யோக பர்வம்‌ 36 வது அக்யாயம்‌ 14 வது ஸ்லோகமும்‌
“யதா.யதா-௪-பர்யேதி.லோக தந்த்ரம்‌ அஸாரவத்‌ – ததா .. ததா… விராக:..-அத்ர – ஜாயதே -ந. அத்ர . ஸம்மய:”” என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்‌வம்‌ 374 வது அத்யாயம்‌ 4 வதுஸ்லோகமும்‌ கூறும்‌.
பொருளிள் கண்‌ உள்ள பற்றே அப் பொருள் பற்றி அரும்‌ வருத்தத்திற்குக்‌ காரணமே யன்றி, பொருள்‌ தானே யில்லை என்பது இக் குறளின்‌ கருத்து.

61. அடல்வேண்டு மைந்தன்‌ புலத்தை விடல்‌ வேண்டும்‌
வேண்டிய வெல்லா மொருங்கு
ஐந்தன்‌- ஐந்து இந்திரியங்களின்‌, புலத்தை = விஷயங்களின்‌ நுகர்ச்சியை -, அடல்‌ வேண்டும்‌ – .அழியும்படி செய்ய வேண்டும்‌ ; வேண்டிய எல்லாம்‌ –சேர்க்கப்பட்ட பொருள்கள்‌ எல்லாவற்றையும்‌, ஒருங்கு – ஒரே காலத்‌தில்‌, விடல் வேண்டும்‌.
ஒருவன்‌ துறவி ஆகும்போது பெண்ணாசை, மண்‌ணாசை, மக்களாசை விட்டேன்‌, விட்டேன்‌, விட்டேன்‌ எனக்‌ கூறுதல்‌ யாவரும்‌ அறிந்ததே.
உண்மையாய்‌ அவற்றை விடுவதற்கு இன்றியமையாத காரணம்‌ அவன்‌, தனது இந்திரியங்களை முழுவதும்‌ அடக்குதலே யாகும்‌ என்பதை இக்குறள்‌ அறிவிக்கின்றது –

62. யானென தென்னுஞ் செறுக்கறுப்பான்‌ வானோர்க்கு
உயர்ந்த வுலகம்‌ புகும்‌.
(உடல்‌ உடலையும்‌) (ஐந்து ஐந்து இந்திரியங்‌களையும்‌), (வேண்டிய எல்லாம்‌ தேடிய பொருள்கள்‌ எல்லாவற்றையும்‌), யான்‌, எனது, என்னும்‌, செறுக்கு அறுப்பான்‌ -மயக்கத்தைப்‌ போக்குபவன்‌, வானோர்க்கு உயர்ந்த தேவதைகளுக்கும்‌ அடைதற்குச்‌. சிறந்த, உலகம்‌ பிரம்ம லோகத்தை, புகும்‌–அடைகின்றான்‌.
வானோர்க்கு உயர்ந்த உலகம்‌ என்பதற்குத்‌ தேவதைகள்‌ இருக்கும்‌ ஸ்வர்க்கத்திற்கும்‌ மேற்பட்ட உலகம்‌ எனப்‌ பொருள்‌ கூறினும்‌ பொருந்தும்‌, –
உலகம்‌ என்பதற்கு ப்ரம்மாவின்‌’ உலகம்‌ என்றும்‌: பிரம்மம்‌ ஆகிய உலகம்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌,-
சுத்தமான தியான யோகத்தால்‌ நிர்மமர்களாயும்‌, நிரஹங்க்ருதர்களாயும்‌ இருக்கும்‌ மகாத்மாக்கள்‌ மேலான்‌ லோகத்தை. யடைகின்றனர்‌ என
தியான -யோக -பாஙத்யேன . நிர்மமா:. நிரஹங்க்ரு தா௨ஆப்‌ – மஹாக்மான :-, மஹாந்தம்‌ – லோகம்‌ – உத்தமம்‌?” என்னும்‌. மகாபாரதம்‌ அஸ்வமேத பர்வம்‌ 51 வது அத்யாயம்‌ 22வது ஸ்லோகமும்‌,
“நிர்மமர்களாயும்‌ நிரகங்‌க்ருதர்களாயும்‌ இருப்பவர்கள்‌ திண்ணமாய்‌ முக்தியை அடைகின்றனர்‌?? “நிர்மமோ -நிரஹங்காரோ .- முச்யதே அத்ர-ஸம்பாய:”” என்னும்‌ மேற்சொன்ன பர்வம்‌ 36வது அத்யாயம்‌ 19 லது ஸ்லோகமும்‌ கூறும்‌.
இக் கருத்தையே, – ம்ருத்யு த்ர்யக்ஷரம்‌ – ப்ரஹ்ம- ஸு றாஸ்வதம்‌ – மமேதி-௪- வேத்‌ ம்ருத்யு :- ௩- மமேதி . ௪ . ஸமாஸாவதம்‌’ என்னும்‌ மேல் சொன்ன 51 வது அத்யாயம்‌ 29 வது சுலோகமும்‌ கூறுகிறது:

63. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப்‌ படும்‌.
பற்று, அற்ற கண்ணே-முற்றிலும்‌ நீங்கிய பொழுதே , பிறப்பு-மறு ஜன்மம்‌, அறுக்கும்‌ நீங்கும்‌; மற்று–அல்லாத இடத்து -நிலையாமை – நிலையில்லாத் தன்மை யாகிய பிறப்பும்‌ இறப்பும்‌, காணப்படும்‌ -தோன்றும்‌.
ஜனன மரணங்களாகிய காரியத்திற்குப்‌ பற்றே சிறந்த காரணம்‌ ஆகையால்‌ காரணமாகிய பற்று அழியாத வரையில்‌ காரியமாகிய ஜனன மரணங்கள்‌ அழியா என்பது கருத்து. பற்று இல்லையேல்‌ பஞ்சபூதங்களை வெல்லுகிறான்‌ என நிவ்ருத்தம்‌ . ஸேவமானஸ்து – பூசான்‌ – அத்யேதி – பஞ்ச – வை” என்னும்‌ மநுஸ்ம்ருதி-19-90-கூறும்‌

பொருள் அல்லாதவற்றைப் பொருளென்‌று உணரும்‌
மருளானா மாணாப்பி றப்பு
பொருளல்லவற்றை- _மெய்ப்பொருளல்லாத வற்றை, பொருள்‌ -மெய்ப்பொருள்‌, என்று, உணரும்‌ -அறியும்‌,-மருளான்‌ — அஞானத்தால்‌, மாணாப்பிறப்பு- சிறக்காத பிறப்பு, ஆம்‌ – உண்டாகும்‌,
பிறப்பு என்பது இறப்பிற்கும்‌ உபலக்ஷணம்‌ ஆகும்‌,
பிறப்பு துன்பமென்பதும்‌ அப்பிறப்பிற்கு முதற்காரணம்‌ (உபாதான காரணம்‌) அவிச்சை (அவித்யை) யென்பதுங்‌ கூறப்பட்டன. என “இக்குறளின்‌ உரையின்‌ இறுதியில்‌ கூறியிருக்கிறார்‌ பரிமேலழகர்‌, —
மருள்‌ என்பது யாது? ஒரு கயிற்றை யிருளில்‌ கண்டு பாம்பு எனத்‌ தவறி எண்ணுகிறோம்‌. ஆங்குள்ள பொருள்கள்‌ இரண்டு ஆகும்‌. ஒன்று கயிறு, மற்றொன்று பாம்பு, அவற்றுள்‌ கயிறு என்பது மெய்ப்பொருள்‌ ;பாம்பு என்பது மெய்யல்பொருள்‌, . அவ்வாறே உலகத்‌தில்‌ தோன்றும்‌ ஒவ்வொரு பொருள்களிலும்‌ கடவுளும்‌ தோற்றப் பொருள்களும்‌ உள; கடவுள்‌ கயிறு போன்‌றது .மரம்‌ முதலிய எல்லாப்பொருள்களையும்‌ கடவுளாக, நினைத்தல்‌ மருளின்மை; மரம்‌ முதலியவாக நினைத்தல்‌ மருள்‌. மருள்‌ என்பதையே அவித்யை என்பர்‌.
“யத்‌ – அவித்யா – விலாஸேன – வூஓத-வெளதிக ஸ்ருஷ்டய :”” என்று கூறுகிறது வேதாந்தபரிபாஷை.
கடோபனிஷத்தில்‌ முதல்‌ அத்யாயம்‌ 8 வத வல்லி 7,8 மந்த்ரங்கள் அக்ஞானத்தால்‌ பிறப்பையும்‌ ஞானத்தினால்‌ மறுபிறப்பற்ற பதவியையும்‌ ௮டையலாமென்று கூறுகின்றன.

68. இருணீங்கி யின்பம்‌ பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
மருள்‌ -அஞ்ஞானத்தை , நீங்கி-நீக்கி, மாசறு காட்‌சியவர்க்கு குற்றமற்ற அறிவுடையோருக்கு, இருள்‌ -பிறப்பிற்குக்‌ காரணமாகியது, நீங்கி -நீங்க, இன்பம்‌ – பேரின்பமாகிய வீடு, பயக்கும்‌ -ஸித்திக்கும்‌, —
இருள்‌ என்பதும்‌ தமஸ்‌ என்பதும்‌ ஒருபொருட்‌ கிளவியாகும்‌:-தமஸ்‌ என்பதற்கு ஸம்ஸார நியாமகம்‌ எனசங்காாசார்ய ஸ்வாமிகள்‌ பிரஹதாரண்ய உபநிஷத் (4-4:10) பாஷ்யத்தில்‌ பொருள்‌: கூறியிருத்தல்‌ நோக்கத் தககது-
மருள்‌ என்பதும்‌ அவித்தை என்பதும்‌ ஒருபொருட்‌. கிளவி யாகும்‌, -ஆனந்த ஸ்வரூபமான பிரம்மமே மோக்ஷத்‌தின்‌ ஸ்வரூபம்‌ என்னும்‌ உபநிஷத் கொள்கையை யனுசரித்தே இங்கு ஆசிரியர்‌ மோக்ஷத்தை இன்பமெனக் கூறுகிறார் .
“வீடானது நிரதிசய பொருளுணர்வே என்பதும்‌-அதுக்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் உணர்வே என்பதும் கூறப்பட்டன -என இக்குறளுரையில்‌ பரிமேலழகர்‌ கூறுகிறார் –
“அவித்யா – நிவ்ருத்தி- உபலக்ஷித – ஆனந்த – ஸ்வரூப அவாப்தி :- மோஷ:””. என்று கூறும்‌ வேதாந்த நூல்கள் –
இங்கு கேவலப் பொருள்‌ என்பது குணம்‌ குறி இவற்‌றைக்‌ கடந்த பரம் பொருளையே குறிக்கும்‌, வீடு என்றும்‌ மோக்ஷம் ஒரு காரணத்தால்‌ உண்டாகின்ற என்றும்‌ வேதாந்த சாஸ்தாம்‌ கூறுவதில்லை. ஒரு நாள்‌ உண்டான பொருளாயிருந்தால்‌ அதற்கு என்றாவது ஒருநாள்‌ நாசம்‌: ஏற்பட்டே தீரும்‌. நாசமற்ற நித்யமான வஸ்துவே மோக்ஷம் என்பதும் எல்லாச் சமயங்களின்‌ கொள்கை யாகும்‌.வேதாந்‌தக் கொள்கையின்படி. ஒவ்வொரு ஆத்மாவும்‌, உண்மையில்‌ நித்ய முக்தமாகவே யுள்ளது. அது உண்‌மையில்‌ மோக்ஷ ஸ்வரூபமே. ஆதலால் மோக்ஷம்‌ புதிதாக உண்டாகும்‌ பொருளன்று. ஆதலாலேயே அதற்கு
முடிவுமில்லை, மூடிக் கொண்டிருந்த மேகம்‌ விலகுங்‌கால்‌ பூர்வமே யுள்ள சூர்யன்‌ ப்ரகாசிப்பது போல்‌ மெய்‌யறிவால்‌ மருள்‌ நீங்க, என்றும்‌ வீடாகவே யுள்ள ஆத்மா பிரகாஸிக்கின்றது. ஆதலால்‌ மோக்ஷம்‌ ஞானத்தால்‌ உண்‌டாகிறது என்ற, உலக வழக்கு பெயரளவிலேயே”ஒழிய ‘உண்மை யன்று.
‘ பகவத்‌ கீதையில்‌ ஸ்ரீ கிருஷ்ண பகவான்‌ அர்ச்சுனனைப்‌ பார்த்து கூறுவதாவது -துர்யோதனாதிகளையெல்லாம்‌. நான்‌ முன்னமேயே ..கொன்று விட்‌டேன்‌ (மயா – ஏவ – ஏதே – நிஹதா :- பூர்வம்‌ – ஏவ), நீ ‘பெயரளவில்‌. மாத்திரம்‌ (அதாவது நிமித்த மாத்திரமாக] அவர்களைக்‌ கொல்லுபவன்‌: ஆகுக (நிமித்த – மாத்ரம்‌ -பவ – ஸவ்யஸாசின்‌ ”?) 11 வது அத்யாயம்‌ 33 வது ஸ்லோகம்
கீதையில் நிமித்த மாத்ரம்‌” என்றுள்ள வாக்யத்தை யனுசரித்தே. பரிமேலழகர்‌ உரையிலும்‌ ஞானத்தை
மோக்ஷத்துற்கு நிமித்த காரணமென வழங்கப்பட்டிருக்கிறது-. இதைக் கொண்டு வீடு என்னும்‌ மோஷம்‌ ஞானமென்னும்‌ மெய்யுணர்வால்‌ ஆக்கப்பட்ட ஒரு பொருள்‌ என்று கொள்வதற்கில்லை. அவ்வீடு ஸூரியனைப்போல்‌ நிதய ப்ரகாசமாய்‌ விளங்கும்‌ நித்யானந்த மயமான ஆத்ம ஸ்வரூபமே.

66. – எப்பொரு ளெத்தன்மைத்‌ தாயினு மப்‌ பொருள்
மெய்ப்பொருள்‌ காண்பது அறிவு .
எப்பொருள்‌ – எந்தப்பொருளும்‌, எத்தன்மைத்து ஆயினும்‌ -எத்தன்மையை உடையதாகத்‌ தோற்றினும்‌-அப்பொருள்‌ – அப்பொருளிடத்தில்‌, (அதற்கு ஆதாரமாய்‌ நிற்கும்‌)-மெய்ப்பொருள்‌ – மெய்ப்பொருளாகிற கடவுளை, காண்பது-காண்டல்‌, அறிவு – அறிவு(ஆகும்‌)’
*இவர்‌ மறைத்து எப்பொருளிலும்‌ விளங்குகிறார்‌–இவர்‌ சூஷ்ம தர்சிகளால்‌ சூஷ்ம ச்ருஷ்டியால்‌ பார்க்கப்‌ படு கின்றார் ‘” என கடோபனிஷத்‌ (1-3-12) கூறுகிறது .
ஒரு பொருளில்லாக விடத்து அப்பொருளிருப்பாதாக நினைத்தலை சங்கராசாரிய ஸ்வாமிகள்‌ அத்‌யாஸம்‌ என்பர்‌,

67. கற்றீண்டு மெய்ப்பொருள்‌ கண்டார்‌ தலைப்‌ படுவர்‌
மற்றீண்டு வாரா கெறி.
ஈண்டு -இம்மக்கட்பிறப்பின்கண்‌, கற்று-ஆசிரியர் இடத்தில்‌ ஸ்ரவணம்‌ செய்து , மெய்ப் பொருள்‌ பரம்‌ பொருளாகிய கடவுளை, கண்டார்‌.-அபரோக்ஷமாகக் கண்டவர்‌, மற்று மறுபடியும்‌, ஈண்டு இவ்வுலகத்‌திற்கு, வாராகெறி -வாராத மார்க்கத்தின்‌ கண்‌, தலைப் படுவர்‌ தோன்றுவர்‌,
மெய்ப் பொருளை .அபரோஷமாகக்‌ காணும்‌ வரையில்‌ ஸ்ரவணம்‌ செய்ய வேண்டுமென்பது கருத்து.
இதனையே ப்ருகதாரண்யகஉபநிஷத்தில்‌ உள்‌ள கேள்வி”
என்பதற்கு அர்த்தமாக சங்கராசார்ய ஸ்வாமிகள்‌ கூறுதல்‌ நோக்கத்தக்கது. அக்னி ஹோத்ரத்திற்கு. அரிசி வேண்டுபவன்‌ அரிசி கிடைக்கும் வரை நெல்லுக்‌. குத்துதலை அவர்‌ உதாரணமாகக்‌ காட்டியதும்‌ நோக்கத் தக்கது –
இங்குப்‌ பரிமேலழகர்‌ கூறுவதாவது :- “கற்று? என்றதனால்‌ பலர் பக்கலினும்‌, பலகாலும்‌ பயிறலும்‌ “ஈண்டு?”என்றதனால்‌ வீடு பேற்றிற்கு உரிய மக்கட் பிறப்பினது பெறுதற்கருமையும்‌ பெற்றாம்‌.
ஈண்டு வராத நெறி-வீட்டு நெறி.
வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற் பொருளை உணர்தற்கு உபாயம்‌ மூன்று ; அவை கேள்வி,விமரிசனம்‌-பாவனை, என்பன. அவற்றுள்‌ கேள்வி இதனால்‌ சொல்‌லப்பட்டது,
கடவுளைத் தவிர வேறு எப்பொருளும்‌ கற்பனையே.-கடம்‌ என்பது சரீரத்தைக்‌ குறிக்கும்‌, ஸ்தூலம்‌,.ஸூஷ்மம்‌, காரணம்‌, என்னும்‌ மூவகைச் சரீரங்களுள்‌ உள் நின்ற பரம் பொருளே கடவுள்‌. இதையே உபனிடதங்கள்‌ * சாரீராணாம்‌ ஆத்மா? என்று கூறுகின்றன–ஆத்ம சாஸ்த்திற்கும்‌ “சரரீரக மீமாம்ஸை!” எனப்‌பெயர்‌ வழங்குகிறது. கடவுள்‌ மெய்ப் பொருள்‌ என்பதாலேயே மற்றைப் பொருள்கள்‌ பொய்ப் பொருள்கள்‌ எனப் பெறப் படுகிறது-.
சாந்தோக்ய உபநிஷத்தில்‌ பின்வரும்‌ முறையில்‌ தத்வ விசாரணைக்கு வழி காட்டப்பட்டிருக்கிற.து :-
ப்ரம்ம சத்யம்‌, ஜகன்மித்யா (மித்யா — கற்பனை) என்‌பது வேதாந்த ஸித்தாந்தம்‌. மட் குடத்திற்குக்‌ காரணம்‌ மண்‌ ;-மண்ணிற்குக்‌ காரியம்‌ மட்குடம, மட்குடத்தை ஆராய்ந்து பார்த்தால்‌ குடமென்பது கற்பனை என்றும்‌ உண்மையில்‌ மிஞ்சுவது மண்ணே. என்னும்‌ தெரிகிறது.
அவ்விதமே மண்ணுக்குச்‌ காரணமாயுள்ள ஒரு பொருளைக்‌ கண்டுபிடித்துவிட்டால்‌ அதுமெய்யாகவும்‌ மண்‌ கற்பனையாகவும ஆகி விடும் , அதற்கொரு காரணம்‌ அதற்கொரு காரணம்‌ என்று தேடிக் கொண்டே போகுமளவில்‌ எல்லாவற்றிற்கும்‌ பரம காரணமாம்‌ ப்ரஹ்மம் என்ற ஒரு பரம்பொருளே மிஞ்சுகிறது.௮துவே உண்மைப் பொருள்‌,-அதற்கு வேறொரு காரணமில்லை. தத்வ விசாரத்தால்‌ ஏற்படும் ஞானமானது தேஜோமயமான நெருப்பைப்‌ போன்றது- பொய்ப்பொருள்களை எல்லாம்‌ எரித்து விடுகிறது.
நெருப்பு அவ்விதம்‌ எரித்துவிட்டு வெண்மையான பஸ்‌மத்தை மிஞ்ச வைக்கிறது . நீற்றுப் போன. திருகீறாம்‌
அர்த பஸ்மக்தை எரிக்க நெருப்புக்கு சக்தியில்லை. அன்‌.
வெண்மைப்பொருளே உண்மைப்பொருள்‌, தத்வஞானம்‌-
என்னும்‌ நெருப்பு கற்பனைப்பொருள்கள்‌ , யாவற்றையும்‌ எரித்‌து விட்டு ப்ரஹ்மம் எனும் பரம் பொருளை மிஞ்ச வைக்‌கிறது -அதுவே வெண்மையாம்‌ உண்மைப் பொருள்‌. அதுவே வீடு, நான்‌ எனும்‌ அகங்காரத் தொகுதியில்‌ உள்ள ஸ்தூல ஸூஷ்ம காரண சரீரங்களை அத் தத்வ விசார
ஞானாக்னி எரிக்கும் போது மிஞ்சும்‌ சுத்த நித்ய அறிவே அம் மெய்ப்பொருள்‌. தன்னைத் தான்‌ காணும்‌. அறிவும்‌ அதுவே , அது பற்றி அதற்கு ஸ்வயம் ஜோதிஸ்‌ என்ற பெயர்‌ விளங்குகிறது.
விஷ்ண ஸஹஸ்ர நாமத்திலும்‌ “தத்‌வத்தை அறிவதும்‌ அத்தத்வமே. அறிவறும்‌ அறியப்‌ படுவதுமாயும் யுள்ள பொருள்‌ ஒரே ஆத்மாவே’? எனப்‌ பொருள்‌ படும்படி “தத்வம்‌, தத்வவித்‌, ஏகாத்ம -என்று மூன்று நாமங்கள்‌ வரிசையாய்‌ அமைந்திருக்கின்‌றன
ஸ்ரவண மனன நிதித்யாஸனங்களென-உபனிடதங்களில்‌ முதற்பொருளை உணர்தற்கு மூவகை. உபாயங்களாக சொல்லப்பட்டவைகளில்‌ முதல்‌ உபாயமாம்‌ ஸ்ரவணத்தை இக்குறள்‌ கூறுகின்றது,

68. ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்‌
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
உள்ளம்‌ – மனம்‌- ஒர்த்து- -மனனஞ்செய்து, உள்ளது-மெய்ப்பொருளை, ஒரு தலையா -நிச்சயமாக, உணரில்‌ -அறிந்தால் -பேர்த்து – மறுபடியும்‌, பிறப்பு- மறுபிறப்பு-உள்ள வேண்டா -நினைக்க வேண்டா.
இக் குறளால்‌ விமர்சனம்‌ என்னும்‌! மனனம்‌ கூறப்‌ பட்டது.

பிறப்பென்னும்‌ பேதைமை நீங்கச்‌ சிறப்பென்‌னும்‌
செம்பொருள்‌ காண்ப தறிவு.
பிறப்பு என்னும்‌ பேதைமை-பிறப்பிற்குக்‌ காரணமாகிய அவித்யை, நீங்க, சிறப்பு வீடு, என்னும்‌ என்று சொல்லப்படும்‌, செம்பொருள்‌ -ஸ்வயம்‌ ஜோதியாகிய கடவுளை, காண்பது – அபரோக்ஷமாகப்‌ பார்த்தல்‌,-அறிவு-ஞானம்‌ ஆகும்‌,
இக்குறள்‌ நிதித்யாஸன மென்னும்‌ ஏகாக்ர தியானத்தைக்‌ கூறுகின்றது. பேதைமையே பிறப்பிற்குக்‌ காரணமென்பது அத்வைத வேதாந்தத்தின்‌ கொள்கை,
ஞானேன – து – தத்‌.- அக்ஞானம்‌ – யேஷாம்‌-நா சிஸிதம்‌ – ஆத்மன :- தேஷாம்‌ – ஆதித்யவத்‌- சஞானம்‌ – பிரகாஸயதி – தத்பரம்‌” (கீதை 5-16) என்பது கீதாச்சார்யனின் உபதேஸம்

70. இன்ப மிடையறா தீண்டு மவாவென்னும்‌
துன்பத்துட்‌ டுன்பங்‌ கெடின்‌.
அவா – பேராசை, என்னும்‌, துன்பத்துட்‌ துன்பம்‌ பெருந்துன்பத்தைக்‌ கொடுக்கும்‌ பொருள்‌, கெடின்‌ – அழிந்து போனால்‌, இடையறாது – இடைவிடாமல்‌, ஈண்‌டும்‌-இவ்வுலகத்‌தின்‌ கண்ணும்‌, இன்பம்‌ பேரின்பம்‌,வரும்‌.
ஆசை யறுபட்டால்‌ இந்த ஜன்மத்திலேயே, அதாவது ,
சாவதற்கு முன்னமேயே மோஷங்கிடைக்கும்‌. “ஸக்‌னோதி – இஹ- ஏவ -ய:-ஸோஷுும்‌- ப்ராக்‌ – சரீர விமோஷணாத்‌- காம-க்‌ரோத- உத்ஒவம்‌ – வேழம்‌ -ஸ-யுக்த –ஸ-ஸ-௦$-நர :*? (கீதை 5-23) என்பது: இவ்விஷயத்தில்‌ கீதையின்‌ உபதேசம்‌,
“ந – அஸ்தி-ரா.ழ- ஸமம்‌ – துக்கம்‌, ந – ௮ஸ்தி – த்யா.ம-ஸமம்‌ – ஸுங்வூம்‌””.சாந்தி – 337-6,

71. ஆரா வியற்கை யவாநீப்பி னந் நிலையே
பேரா வியற்கை தரும்‌.
ஆராவியற்கையவா – நிரம்பாத் தன்மையை யுடைய அவா,-நீப்பின் -நீங்கின்‌ (அத), அந் நிலையே அத்த நிலையின்‌ கண்ணே, பேரா வியற்கை -நித்‌தியமான வீட்‌டினை, தரும்‌–கொண்டுவரும்‌..
“ எப்பொழுது எம் மனிதனுக்கு எல்லா காமங்‌களும்‌ நீங்குகின்றனவோ, அப்போதே அவன்‌ ஈண்டு ப்ரம்மமாகிறான்‌?? 2-3-147 என கடோபனிக்ஷத்தும்‌,
“எவன்‌ காமமற்று பிரம்மத்தில்‌ ஈடுபடுகின்றானோ அவன்‌ பிராணன்‌ வெளிக்கிளம்புவதில்லை. பிரம்மமாக இருந்து
பிரம்மமாகவே ஆகின்றான்‌” (4-4-6) என ப்ருஹதாரண்ய:கோபனிஷத்தும்‌, “எவன்‌ ஒன்றையும்‌ விரும்பாமலும்‌:வெறுக்காமலும்‌ இருக்கின்றானோ அவன்‌ இவ்வுலகிலேயே பிரம்மமாக ஆகின்றான்‌ ”? “என:
யோ – ந – காமயதே-.இஞ்சித்‌ – ந – இஞ்சித்‌ – அவமன்யதே – இஹ – லோகஸ்‌-ய எவ- எஷ;ஃப்ரஹ்ம ஸூயாய – கல்பதே”’ என்‌னும்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌ 47 வது ௮த்யா
யம்‌ 8 வது ஸ்லோகமும்‌ .கூறும்‌,
ஆராயியற்கையவா-என்பது ந -ஜாது – காம :-காமானாம்‌-உபஸோ ஹேன ஸாம்யதி-ஹவிஷா – க்ருஷ்ணவர்த்மா – இவ-ஸூய – ஏவ -அ ஷிவர்யதே” என்னும்‌ மகாபாரதம்‌ ஆதி பர்வம்‌ 69 வது அத்யாயம்‌ 53 வது ஸ்லோகத்தினால்‌ கூறப்பட்டிருக்‌கிறது -. ஆசையை விட்டு ஒழிக்க வேண்டுமென்பதைப்‌ பற்றிக்‌ 8ீழ்‌ குதிப்பட்டிருக்கும் ஸ்லோகங்களும்‌ கவனிக்கத்தக்கன.
பத்‌. ப்ருதிவ்யாம்‌ வ்ரீஹியவா-ஹிரண்யம்‌ . பசவ உடஷித்றிமா ஏகஸ்மாபி . ந பர்யாப்தம்‌.தஸ்மாத்‌ ..தீருஷ்ணாம்‌ – பரித்யேஜேத்‌ |
யா – உமஸ்தீயஜா – ஐ-பர்மதிஹி யா . ௧. ஜீர்யதி . ஜீர்யத :|ய :–அ௮அளெள – ப்ராணாந்திக.. ேே ராம: தாம்‌ – தருஷ்ணாம்‌
ஆதிபர்வம்‌ 79-—13—14_
யத்‌.௪.-காம. ஸையூம்‌. லோகே யத்‌ .ச: திவ்யம்‌- மகத்ணாவும்‌ |
த்ருஷ்ணா . ஆய -ஸ-ம௦வ/ஸ்ய -ஏதே-௩ அர்ஹத:– 0 ஷா ஐஸ்மீ ம்‌: கலாம்‌-சாந்தி…282-.6.
திருக்குறளாசிரியர்‌ ஜீவன் முக்தியைத் தங்கொள்களை யாகக் கொண்டனர்‌ என்பதை இக்குறள்‌ அறிவிக்கின்‌றது ..

72. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும்‌ தான் முந் துறும்‌.
மற்றொன்று – ஊழைத்தவிர்ச்து வேறொன்றை, .-சூழினும்‌ — நினைத்தாலும்‌, தான்‌ -ஊழே, முந்து- முன்‌னர்‌, உறும்‌ நிற்கும்‌; (ஆதலான்‌), ஊழின்‌ -ஊழைக்‌காட்டிலும்‌, பெருவலி–அதிகவலியுள்ளது, யர -யாவைஇருக்கின்றன?
தைலமே.. அதிக பலமுடையது என மகாபாரதத்‌தில்‌ *மைவம்‌- ௪-பரமம்‌ – மன்யே – பெளருஒம்‌-௪- அபி – அனர்மகம்‌’” என்றும்‌ ஆதிபர்வம்‌ 21 வது அத்யாயம்‌ 5 வது லோகமூம்‌சபா பர்வம் 74-35-ஸ்லோகமும் கர்ணபர்வம்‌ 6 வது ௮த்‌யாயம்‌ 3 வது ஸ்லோகமும்‌, கூறும்‌,
மகாபாரதம்‌ கர்ணபர்வம்‌ 22 வது அத்யாயம்‌ 31 வது ஸ்லோகத்தில்‌ “டைவம்‌ -து – பலவததரம்‌” என்று கூறப்பட்டிருக்‌கிறது.
ஸ்ரீமத்‌ ராமாயணத்திலும்‌ அயோத்தியா காண்‌டம்‌
ெ ‘சளமித்ரே – யோத்யும்‌- உத்ஸஹதே – 4 மான்‌? என்னும்‌ 91 வத சுலோகத்திலும்‌, ஜைவம்‌ -௪ – தர- ப்ரபாவம்‌ ” என்னும்‌ 30 வது சலோகத்திலும்‌, இந்தக் கருத்தே கூறப்பட்டிருக்கிற து,
கர்மம்‌, தன்முயற்சி, இவ்விரண்டனுள்‌ அறத்தைச்‌ செய்ய தன்‌ மூயற்சிக்கு ஆற்றல்‌ அதிகமென்றும்‌, பொருளை அடைவதற்கும்‌ காமத்தை நுகர்வதற்கும் ஊழிற்கு ஆற்றல்‌ அதிகமெனவும்‌ உணர்க.

73-படை குடி. கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு.
அரசருள்‌ -அரசர்களுள்‌, படை-சேனை, குடி = நாடு, கூழ் -பொக்கிஷம் -அமைச்சு -மந்திரி -நட்ப்பு -ஸ்நேஹிதர் -அரண் -கோட்டை -ஆறும்‌ – இவ்வாறினையும்‌, உடையான்‌-உடையவனே, ஏறு -சிறந்தவன்‌,(ஆவான்‌)
கூழ்‌ என்பதும்‌ கோசம்‌ என்பதும்‌ ஒரே பொருளைக்‌ கொண்டது. அமைச்சு, நட்பு, என்பது அமைச்சன்‌,நண்பன்‌ என்பன வற்றின்‌ கடைக்குறை . அமைச்சன்‌. என்பது வடமொழி அமாத்யன்‌ என்பதின்‌ தத்பவம்‌.
ஏறு. என்பது – வடமொழியில்‌ வ்ருஷன்‌ என்ற சொல்லைப் போல்‌ சிறப்பினைக்‌ குறிக்க வந்தது.
மகாபாரதம்‌ சாந்திபர்வம்‌ 68 வது அத்யாயம்‌
69, 70, 32,40 வது ஸ்லோகங்களில்‌ * தான்‌, அமாத்யன்‌ கோச ம்‌, பிண்டம்‌, மித்ரர்‌, ஜனபதங்கள்‌, புரம்‌, இவை எழும் அரசனால் போற்றத் தகுக்தவை-என்று
|சாக்ஞா.- ஸப்த – ஏவ – ரஷ்யாணி- தானி- ௪-ஏவ – நிவேபமே – ஆத்மா – அமாத்ய ௮௪ – உண்‌ல மித்ராணி – ௪ எவ – ஹி- ததர – ஜனபடிா : —ட ௪. ஏல – புரம்‌ – ௪- குருநந்தன. “மித்ர அமாத்மய -புரம்‌ – ராஷ்ட்ரம்‌ – உண்லம்‌ – கோபுய—ஸப்த -.அங்கஸ்ய – அஸ்ய – ராஜ்யஸ்ய – ** எனக்‌ கூறப்‌ பட்டதுகாண்க.
அவ்வாறே ஸ்வாமி – அமாத்ய – ஜன » பஉ-உுர் மு – கோு- உண்ம -மித்ராணி? என்றும்‌: _ “ஸ்வாமி -அமாத்ய-ஸுஹ்ருத்‌- கோமா -சரஷ்ட்‌ர-ஐ-பர்‌.ர வபலானி – ௪?” என்றும்‌. அர்த்த சாஸ்த்ரம்‌ கூறும்‌,
அங்கு ஆத்மா புரம்‌, இவற்றிற்கு ப்‌ரதியாக ஸ்வாமி,துர்க்கம்‌ என்று உள்ளன. இவ்வேழில்‌ தான்‌ என்பது சொல்லாமலே விளங்குமாதலால்‌ மற்ற ஆறும்‌ இக் குறளில்‌ கூறப்பட்டிருக்கிறது,
இக் குறளைக் கொண்டு தென்னாட்டு அரசு முறையும்‌. வடநாட்டு அரசு முறையும்‌ ஒருவகைப்பட்ட தென்‌பது தெளிவு –

74. முறைசெய்து காப்பாற்று மன்னவன்‌ மக்கட்கு
இறை யென்று வைக்கப்படும்‌.
முறை -அரச நீதியை -செய்து -அனுசரித்து -(மக்களைக் ) காப்பாற்றும்‌,” மன்னவன்‌, மக்கட்டு, இறை -கடவுள்‌, என்று, வைக்க – கருதப்படுதல்‌, படும்‌ -பொருக்தும்‌.
அரச நீதி மஹா பாரதத்திலும்‌ தர்ம சாஸ்த்ரங்களிலும்‌,-அர்த்த சாஸ்‌திரங்களிலும்‌ விஸ்தாரமாகக்‌ கூறப்‌பட்டிருக்கிறது. நீதிப்படி மக்களைக்‌ காப்பாற்றும்‌ மன்னன்‌ ஆயிரம்‌ அச்வமேத யாகத்தின்‌ பயனை யடைவான்‌ என
அசுவமேய – ஸஹஸ்சேண .ய;-யஜேத்‌-பதி;-பாலயேத்‌ – வா – அமி – யூர்மேண -ப்‌. ரஜா :–துலயம்‌ . ஹலம்‌ – லேத்‌!” என்னும்‌ மகாபாரதம்‌ ஆச்ரம வாஸ பர்வம்‌ 8 வது அத்யரயம்‌ 23வது ஸ்லோகம் கூறும்‌. ்‌
௩ – அவிஷ்ணு;–ப்ர௬ு* வீபத?”ரம்‌. இந்திர – அனில- யம – அர்காணாம்‌ – அம்னேஸ்௪- வருணஸ்ய – ௪- சந்த்ர – வித்தேபாயேோ :–௪- ஏவ – ஜாத்ரா :–நிர்ஹ்ருத்ய – றாஸ்வதீ :- யஸ்மாத்‌-ஏஷாம்‌- மாதரரல”யோ -நிர்மிதோ -ந்ருப :” என்று கூறுகின்றன மனுஸ்ம்ருதி 7 வது அத்யாயம்‌ 4 வது 5வது ஸ்லோகங்கள்‌.

75-கொடையளி செங்கோல்‌ குடி.யோம்ப னான்கும்‌
உடையானாம்‌ வேந்தர்க்கு கொளி.
வேந்தர்க்கு-அரசர்க்‌குள்‌, கொடை வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்தல்‌, அளி சிறந்தோர்‌க்குப்‌ பரிசு வழங்குதல்‌, செங்‌கோல்‌ -நேர்‌மையான ஆட்‌சி , குடியோம்பல்‌– தளர்ந்த குடிகளைக்‌ காத்தல்‌, நான்கும்‌ – இந்நான்கினையும் , உடையான்‌ – உடையவன்‌,-ஒளி சிறந்தவன்‌, ஆம்‌– ஆவான்‌.
கொடை, அளி இவற்றிற்கு உள்ள மாறுபாடு யாதெனின்‌, பிறர்‌ வேண்டக்‌ கொடுத்தலைக்‌ கொடை என்றும்‌ பிறர்‌ வேண்டாது இருக்க அவரைப்‌ போற்றிக்‌ கொடுத்‌தலை.அளி என்றும்‌ கூறலாம்‌, செங்கோன்மை என்ற பொருளில்‌ செங்கோல்‌ என்பது வழங்கப்பட்டது. குடியோம்பல்‌ என்னுமிடத்து குடி தளர்ந்த குடியையே குறிக்கும்‌. – இவ்வாறே மக்கண்‌ மெய்தீண்டல்‌ என்ற குறளில்‌ மக்கள்‌ தம் மக்களையே குறித்தல்‌ காண்க.

தளர்ந்து குடிகள்‌ யார்‌ எனின்‌, அவர்‌, விதவை அனாதையர்‌, அங்கஹீனர்‌, தரித்திரர்‌, முதலானவர்‌ என அரியுவா – அனா – விகலான்‌. – க்ருபணான்‌ – ச. வலாச -௮:..!? என்னும்‌ மகாபாரதம்‌ ‘ஆதிபர்வம்‌ 48-வது அத்‌பாயம்‌ 11-வது ஸ்லோகமும்‌,
“த்வம்‌ – ஹி- நாடு -.து – அ ஈரமாரா௦உரிஒ” சாணாம்‌ – என்னும் மேற் சொன்ன . ஆதிபர்வம்‌ 227-வது அத்யாயம்‌ 126- வது ஸ்லோகமும்‌ : கூறுகிறது,
‘ பாலன்‌, ‘வ்ருத்தன்‌, ரோகி ,வ்யசனி, அனாதை முதலியோரை அசசன்‌ போற்ற வேண்டும்‌ என்று அர்த்த சாஸ்த்ரம்‌ கூறுகிறது, ~~

76, எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விர[ண்டும்‌
கண்ணென்ப வாழு முயிர்க்கு. .
எண்‌ என்ப- எண்‌ எனக்‌ கூறப்படுவன, எனை —மாற்று -எழுத்து என்ப – எழுத்து எனக்‌ கூறப்படுவன -இவ்விரண்டும்‌ _.இவ்விரன்டினையும்‌, வாழும்‌ “உமிர்க்கு–வாழ்க்கையில்‌ உள்ள மக்கட்கு,கண்‌ கண்கள்‌, என்ப -என்று கூறுவர்‌,-(பெரியோர்‌),
எண்‌ என்பது லக்ஷண நூல்களையும்‌, எழுத்து என்பது லக்ஷ்ய நூல்களையுங்‌ குறிக்கும்‌. லஷ்ய தூல்கள்‌ கலைகள்‌ ஆகும்‌. லக்ஷண நூல்கள் அவற்றை ஆராயும்‌ கருவி நூல்கள்‌ ஆகும்‌,

“எண்‌ என்பது. இருமையின்பமும்‌ தமது உள்‌ளத்தால்‌ தெரிந்து பிரித்து எண்ணிக் கொள்வது,- எழுத்து என்பது தாம்‌ கற்கும்‌ கல்விக்குத்‌ துணையுறுப்‌.பாகிய எழுத்து என்றாயிற்று.” என்பர்‌ காலிங்கர்‌-
எண்‌ என்பது கணிதம்‌ என்பர்‌ பரிமேலழர்‌, “எண்ணித்‌ துணிக?” (குறள்‌. 467) போன்ற எண்ணுதல்‌ என்பதற்கு ஆராய்தல்‌ என்ற பொருள்‌ இருத்தலின்‌-எண்‌ என்பதற்கு ஆராய்ச்சி நூல்களாய சாஸ்த்ரங்கள்‌ எனப்‌, பொருள்‌ கொள்ளலாம்‌. எழுதல்‌ என்பதற்கு மனங்கிளர்தல்‌ என்ற. பொருள்‌ “*ஒள் வாயானை யுருத்‌தெழுந்தன்று (புற, வெ. 3-2) போன்ற விடங்களில்‌ இருப்பதால்‌, மனக் கிளர்ச்சியால்‌ தோன்று வதை எழுத்து எனல்‌ கூடும்‌. அவ்வாறாயின்‌ கலைகள்‌. எல்லாம்‌ எழுத்தின் பாற் படும்‌,
கண்‌ என்பது இயற்கையாய்ப்‌ பன்மைப் பெயர்‌: என்றும்‌ ஒருமையாகக்‌ கொள்ள வேண்டின்‌ அதற்குக்‌ தகுந்த அடைமொழியையோ வினைமுற்றையோ வழங்க: வேண்டும்‌ எனவுந்த்‌ தொல்காப்பியத்தால்‌ அறியப்படுகின்றது
அதனைப்‌ பன்மை சுட்டிய சினை நிலைக்கிளவி என்‌:பர்‌ தொல்காப்பியனார்‌, * எண்ணுமெழுத்துங்‌ கண்ணெனத்‌ தகும்‌–எண்ணெழுத்திகழேல்‌?’ என்பது ஒளவை:யார்‌ வாக்கு,

77–.கண்ணுடைய ரென்பர்‌ கற்றோர்‌ முகத்திரண்டு
புண்ணுடையர்‌ கல்லா தவர்‌. ‘
கற்றோர்‌ – படித்‌தவரே , கண்‌ -கண்களை, உடையார்‌ என்பவர்‌ -என்று கூறப்படுவர்‌ ; கல்லாதவர்‌-படியாதவர்‌, முகத்து முகத்தில்‌, இரண்டு, புண்-புண்‌களை, உடையர்‌,(அவர்‌), ்‌
ஒரே பொருளைப்‌ பலர்‌ பார்க்கும்போது, ஒவ்வொரு.வர்க்கும்‌ உண்டாம்‌ மனநிகழ்ச்சி வெவ்வேறாய் யிருக்கின்‌றது -. நன்கு கற்றவர்க்குச் சிறந்த எண்ணம்‌ உண்டாகிறது -; கல்லாதார்க்குத்‌ தீய எண்ணங்கள்‌ உண்ட.கின்றன. ௮க் காரணம்‌ பற்றியே எண்கள்‌ நல்லோரின்‌ நன்மைக்கும்‌, தீயோரின்‌ துன்பத்திற்கும்‌ காரணமாகின்றன. வித்யைக்குத் தக்க கண்‌ இல்லை என மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 2 77 வது அத்யாயம்‌ 35 வது ஸ்லோகம்‌ கூறுவதை நோக்கி- ஞானக்கண்ணுடைமையிற்‌ கற்றார்‌.கண்ணுடையர்‌ – எனப்‌ பரிமேலழகர்‌ கூறினர்‌. ஆனால்‌ இக்குறள்‌ ஊனக் கண்களைப்‌ பற்றியே கூறுகின்றன என்பதே பொருந்தும்‌, ,

78.-ஒருமைக் கட்‌ டான்கற்ற கல்வி யொருவற்கு
எழுமையு மேமாப்‌ புடைத்து. ்‌
ஒருவற்கு-ஒருவனுக்கு, ஒருமைக்கண்‌ -ஒருபிறப்‌பின்கண்‌,தான்‌, கற்ற, கல்வி, எமுமையும்‌-எழுபிறப்‌பின் கண்ணும்‌, ஏமாப்பு-நன்‌மையைத்‌ தருதலை, உடைத்து,
ஒருவன்‌ என்பது ஒருத்திக்கும்‌ உபல௯ஷணம்‌.. காளி:தாஸன்‌ குமார ஸம்பவத்தில்‌ “ தாம்‌ – ஹம்ஸமாலாஸ்ர
தீவ- மங்மாம்‌.- மஹளஷயிம்‌ – ஈக்தம்‌- இவ – ஆத்மஹாஸ்‌: | ஸ்ஸிர – உப3உாம்‌. – உபஷேஸறாகாலே -ப்ரபேரே – பிராக்தன – ஜன்மவிதீயா?? | * தாம்ஹூ என்ற ஸ்லோகத்தில்‌ பார்வதியின்‌ வித்யாப்யாஸச்தை வர்ணிக்கும்போது ஆசிரியன்‌ கற்பிக்கத்‌ தொடங்கும்‌
போதே முன்‌ ஜன்மங்களில்‌ கற்‌.ற கல்வியெல்லாம்‌ அவள்‌ முன்‌ நின்றன எனக்‌ கூறுதல்‌ நோக்கத்தக்கது.

70 மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார்‌ கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்திலர்‌ பாடு
கல்லாதார்‌ – படியாதவர்‌, மேற்பிறந்‌தார் ஆயினும்‌-உயர்ந்த ஜாதியிற் பிறந்‌திருந்தாலும்‌, பாடு – சிறப்பின் கண் -கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்து -தாழ்ந்த ஜாதியில் பிறந்து இருப்பினும் படித்தவரை ஒத்து
உடலோடு அழியும் ஜாதி உணர்வும் உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடையது என்கிறார் பரிமேல் அழகர்
மேற் பிறந்தார் கீழ் பிறந்தார் என்பதால் வர்ண விபாகங்களை ஒத்துக் கொள்கிறார் என்பதும்
ஸ்தூல சரீரம் காரணமாகக் கொண்ட ஜாதியைக் காட்டிலும் ஸூஷ்ம சரீரம் காரணமாகக் கொண்ட கல்வி சிறந்தது என்பதால்
ஸ்தூல ஸூஷ்ம சரீரங்களையும் ஒத்துக் கொள்கிறார் என்பதும் அறியலாம்
எக்குடிப்பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியில் கற்றோரை வருக என்பர் -நறுந்தொகை
வேற்றுமை தெரிந்த நால் பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேல் பால் ஒருவனும் அவன் கண் படுமே –புறநானூறு
மஹா பாரதம் விதுரர் தர்ம வ்யாதன் சரித்திரங்களை இத்தையே காட்டும் –

“தேர்ச்து- ஆராய்ந்து, இறன்‌ அருமையை, அறிர் தட
கொளல்‌ -கொள்ளவேண்டும்‌.
இவ்வஇகாரத்தில்‌ பின்வரும்‌ இரண்டு. குறள்களில்‌
மன்னவன்‌, மன்னன்‌, என்ற சொற்கள்‌ இருக்கின்றமை.
யரல்‌ இக்குறளும்‌ சிற்ப்பாக அரசனைப்பற்றிக்‌ கூறிய
எனக்‌ கொண்டு அரசன்‌ என்ற சொல்‌ உரையில்‌ வருவிக்‌
கப்பட்டது.
-“குணமுடையார்‌, பெருவகையார்‌, TF we GF,
சரதுக்கள்‌ இவளை அர்சன்‌ போற்றித்‌ சன்‌ வசப்படுத்த
வேண்டும்‌ என “கூணவர்த :–மஹோச்ஸாஹா தர்‌
மஜ்ஞா -ஸாயவ:–௪ – Cw-mbay5 HF – நருப :-தை :-
on – சர்ட்ரம்‌ – தர்மேண – பாலயன்‌ ”’ என்னும்‌ மகஈ
பரதம்‌ சாக்திபர்வம்‌ 08 வது அத்யாயம்‌ 18 வது சுலோ
கம்‌ கூறுவதை கோக்குக, அறனறிந்து என்றதால்‌ இவ்வா.
சிரியர்‌ தர்மசாஸ்திசங்களை ஒத்அக்கொள்கன்‌, Meer ne
என்பதை அறியலாம்‌. —

80- அரன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்தல் கொளல்
அரசன் -அறன் -தர்ம ஸாஸ்த்ரத்தை -அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை -வயது கல்வி முதலியவற்றில் சிறந்து இயற்க்கை அறிவு உடையாரது நட்ப்பினை -தேர்ந்து -ஆராய்ந்து திறன் -அருமையை அறிந்து கொளல் -கொள்ள வேண்டும்
குணமுடையார் -பெரு வகையார் -தர்மஞ்ஞர் -சாதுக்கள் இவர்களை அரசன் போற்றித் தன் வசப்படுத்த வேண்டும் -என
“குணவந் த :–மஹோச்ஸாஹா தர்‌மஜ்ஞா -ஸாயவ:–௪ – நருப :-தை :-சர்ட்ரம்‌ – தர்மேண – பாலயன்‌ ”’ என்னும்‌ மகஈ
பரதம்‌ சாந்திபர்வம்‌ 68 வது அத்யாயம்‌ 18 வது ஸ்லோகம்‌ கூறுவதை நோக்குக,
அறனறிந்து என்றதால்‌ இவ்வாசிரியர்‌ தர்ம சாஸ்திசங்களை ஒத்துக்கொள்கின்‌றார்
என்பதை அறியலாம்‌.

81. அளவறிக்து வாழாதான்‌ வாழ்க்கை யுளபோல.
இல்லாகித்‌ தோன்றாக்‌ கெடும்‌.
அளவு பொருள்‌, வலி முதலியவற்றின்‌ எல்லையை,-அறிந்து, வாழாதான் வாழ்க்கை – வாழாதவனுடைய. வாழ்க்கை முறைகள்‌, உள போல -சிறந்து விளங்குவது போல (இருந்து), இல்‌ .ஆகி –மங்கி, தோன்றா. -‘இருந்தவிடம்‌ தெரியாமல்‌, கெடும்‌ அழிந்துலிம்‌,
ஒவ்வொருவனும்‌ அவனது வர்ணம்‌, ஆச்ரமம்‌.இவற்றை யனுசரித்துத்‌ தன்‌ அளவிற்குத்‌ தக்கனவற்‌றைக்‌ கொண்டு அவ் வவற்றின்‌ தர்மங்களைாக்‌ கொண்‌டாலன்றி அவன்‌ கெடுவான்‌ என்பது கருத்து.
இங்கு “ ஆனமுதலி லதிகம்‌ செலவானால்‌, மான மழிந்து மதிகெட்டு, போன திசை – எல்லார்க்குங்‌ கள்னாய்‌ ஏழ்பிறப்புந்‌ தீயனாய்‌-நல்லார்க்கும்‌பொல்லனா நாடு *
என்ற ஒளவையார்பாடல்‌ கருதத்தக்கது
83. பகல்வெல்லுங்‌ கூகையைக்‌ காக்கை . மிகல்‌ வெல்லும்‌,
வேந்தர்க்கு வேண்டும்‌ பொழுது.
காக்கை, பகல்‌ – பகற்பொழுதில்‌, கூகையை =கூகையையும்‌, –ஆந்தையையும் வெல்லும்‌ – கொல்லும்‌, (ஆதலின்‌) ; இகல்‌-மேற்பட்ட வேந்தரை -வெல்லும்‌ வெல்ல நினைக்கும் ,வேந்தர்க்கு அரசர்க்கு, பொழுது தக்க காலம்‌.வேண்டும்‌ – அவசியமானது.
இலர்‌ காலத்தைச்‌ சிறப்பாகக்‌ கொண்டு பகலில்‌காக்கை கோட்டானைக்‌ கொல்லும்‌ உதாஹரணத்தைக்‌ கூறுகின்றார்‌’” என
* கால :- சேரேயான்‌ – இதி – எகே-இவா – காக; – கெளசிகம்‌ – ஹத்தி”? என்னும்‌ அர்த்தசாஸ்திரம்‌ இங்கு நோக்கத்தக்கது, அர்த்தசாஸ்த்‌ரத்தை அரசர்‌ நன்கு. அறியவேண்டும்‌ என ஆசிரியர்‌ கொண்டனர்‌ என்பதைக் காணலாம்

83. நெடும்புனலுள்‌ வெல்லு முதலை யடும்புனலின்‌
நீங்கி னதனைப்‌ பிற.
முதலை, நெடும்புனலுள்‌-ஆழமான நீர்நிலையில்‌,(பிற -பிற வற்றை யெல்லாம்‌), வெல்லும்‌ -கொல்லும்‌ ;புனலின்‌ நீரிலிருந்து, நீங்கின்‌ -வெளியில்‌ வந்தால்‌,அதளை, பிற, அடும்‌ -கொல்லும்‌, . :
தான்‌ வஸிக்குமிடத்தில்‌ முதலை சிறந்த யானையையும்‌ கொல்லும்‌; தன்னிடமிருந்து நீங்கின்‌ நாயும்‌ அதனைக் கொல்லும் என
நக்ர ஸ்‌ வஸ்‌தானம்‌ – ஆஸாதய – கஜேந்த்ரம்‌ – அபி- கர்ஷ்து – ஸ- ஏவ -ப்ரச்யுத :- ஸ்மானாக்‌ -ஸூ னா-அபி-பரிஹூ யதே? என்‌னும்‌ மகாபாரத ஸ்லோகமும்‌,
“தேசம்‌. சிறந்தது என்‌பர் சிலர்‌, தரையில்‌ நாயும்‌ முதலையைக்‌ கொல்லும்‌ தன்‌மையால்‌” என்னும்‌
“தே௪ :- ஸ்ரேயாரன்‌ – இதி எசே -N – முதேோர- ஸ்வா – நகரம்‌ – விகர்ஷூதி – நிம்ஈ .மதோ . ஈக்‌.ர:- ஸ்வானம்‌-இதஇி??என்னும்‌ அர்த்த சாஸ்‌திர வாக்கியமும்‌ இங்கு நோக்கத் தக்கது.

54, கடலோடா கால்வ னெடுந்தேர்‌ கடலோடும்‌.
நாவாயு“மோடா நிலத்து.
கால்வல்நெடுந்தேர்‌-உருளகளை வலுவாகக்‌ கொண்ட பெரியதொரு தேர்‌, கடல்‌ கடலின்கண்‌,ஓடா; கடல்‌-கடலின்கண்‌, ஓடும்‌ செல்லும்‌, நாவாயும்‌-கப்பலும்‌, நிலத்து -நிலத்தின்‌ கண்‌, ஓடா,
எல்லாரது இயற்கைகளும்‌ ஆற்றல்களும்‌ ஒன்றாகவே இராது –வெவ்வேறாகவே யிருக்கின்றன என்பதும்‌, |
ஒவ்வொருவர்க்கும்‌ சிறப்பு சில துறைகளிலேயே இருக்குமன்றி எல்லாத்துறைகளிலும்‌ -இருத்தல்‌ இல்லை என்‌பதும்‌, இக்குறளால்‌ அறியக் கிடக்கின்றன.
இந்தக் குறளின்‌ கருத்தையே *: நாவம்‌ -ஈ -ஸர்க்யம்‌-ஆருஹ்ய-ஸ்யலே – விபரிவர்‌ திதும்‌ – தமா -ஏவ- ரழும்‌-ஆருஹ்ய – ஈ – அப்ஹு – சர்யா – விய்யதே”’ என்னும்‌
மகாபரரதம்‌ அச்வமேதபர்வம்‌ 50 வது அத்யாயம்‌ 30 வது ஸ்லோகம்‌. கூறுகிறது.

85-அறம் பொருள் இன்பம் உயிரெச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும்
நான்கிலும் சோதனையால் அறியவற்றைக் கற்று குற்றமில்லாதாரின் திறம் -மனநிலையை -தெரிந்து -ஆராய்ந்து -தேற -நிச்சயித்தல் -படும் -பொருந்தும் –
இவை நான்கினையும் -தர்ம உபாதை அர்த்த உபாதை காம உபாதை -பய உபாதை -என கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்தில் கூறி நன்கு விளக்குகிறார்
அரசன் அதார்மிகன் எனவும் –அவனைக் கொன்றால் பெரும் பணம் கிடைக்கும் என்றும் -அரசன் மனைவி அவனை நேசிக்கிறான் என்றும் -அரசனைக்கொல்லுவோம் என்றும் ஒருவன் மற்ற ஒருவனைச் சோதிக்கச் சொல்லுதல் முறையே தர்ம உபாதை அர்த்த உபாதை காம உபாதை பய உபாதை ஆகும்
இவற்றுக்கு இணங்காதவனைத் தூயன் என்று அறிதல் வேண்டும்
இவற்றையே பரிமேல் அழகர்
அறவு உபாதை -தர்ம உபாதையாவது -புரோஹிதரையும் அறவோரையும் விட்டு -அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப்போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்ததற்கு எண்ணினம் -இது தான் யாவருக்கும் இயைந்து -நின் கருத்து என்னை – என்று சூளுறவோடு சொல்லுவித்தல்
பொருள் உபாதை யாவது –சேனைத்தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு அவரான் -இவ்வரசன் இவறன் மாலையானாகையால் இவனைப்போக்கி கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்ததற்கு எண்ணினம் -இது தான் யாவருக்கும் இயைந்து -நின் கருத்து என்னை எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்
இன்பு உபாதை யாவது தொன்றுதொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளைவிட்டு, அவளால்‌, * உரிமையுள்‌ இன்னாள்‌ நின்னைக்‌ கண்டு வருத்தமுற்றுக்‌ கூட்டுவிக்க வேண்டுமென்று என்னை விடுத்தான்‌-அவளைக்‌ கூடுவையாமின்‌ நினக்குப்‌ பேரின்பமேயன்றிப்‌ பெபரும்‌ பொருளுங்‌ கைகூடும்‌? எனச்‌ ரூளுறவோடு சொல்லுவித்தல்‌,
௮ச்ச வுபதையாவது–ஒரு நிமித்தத்தின்‌ மேலிட்டு ஓரமைச்‌சனால்‌ ஏனையோரை அவனில்லின்கண்‌ அழைப்பிக்து,“இவர்‌ அறை போவான்‌ எண்ணற்குக்‌’குழீஇனார்‌ என்று தான்‌ காவல்‌ செய்து ஒருவனால்‌ *இவ்வரசன்‌ நம்‌மைக்‌ கொல்வான்‌ சூழ்கின்றமையின்‌ அதனை நாம்‌ முற்படச்‌ செய்து நமக்கு இனிய அரசனொருவள வைத்தல்‌ ஈண்டையாவர்க்கும்‌ இயைந்தது; நின்‌ கருத்து என்ன?”எனச்‌ ரூளுறவோடு சொல்லுவித்தல்‌.
இந் நான்கினும்‌ திரிபிலனாயவழி எதிர் காலத்தும்‌ திரிபிலன்‌ எனக்‌ கருத்‌தனவையால்‌ தெளியப்படும்‌ என்பதாம்‌.

.
86. குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியும்‌
நாணுடையான்‌ கட்டே தெளிவு.
குடி -நற்குடியில்‌, பிறந்து, குற்றத்தின்‌: குற்றங்‌களினின்றும்‌, நீங்கு, வடி -பழிக்கு , பரியும்‌ -அஞ்சும்‌ ,நாணுடையான் கட்டே- “இழி தொழிலினின்‌ கண்‌ மனம்‌ செலுத்தாதவனிடத்தே, (அரசனுக்கு), தெளிவு -தெளிந்த எண்ணம்‌, (படும்‌-பொருந்தும்‌),
படம்‌ என்பது முதற்குறளிலிருக்‌ து வருவிக்கப்பட்‌டது. குற்றத்தினின்றும்‌ நீங்குதல்‌, வடுப்பரிதல்‌, நாணுடைமை இம்மூன்றுக்கும்‌ குடிப்பிறத்தல்‌ சிறந்த காரணமாகையால்‌ அதனை ஆசிரியர்‌ முதலில் கூறினர்‌ என்னலாம்‌.

87-அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
மன்னவன் கோல் -அரசனுடைய செங்கோண்மை -அந்தணர் நூற்கும் -வேதத்திற்கும் அறத்திற்கும் -அதனால் அறியப்படும் தர்மத்திற்கும் -ஆதியாய் -காரணமாகி
நின்றது
அரசன் செங்கோலனாக இல்லாவிடில் பிராமணர் முதலியோர் வேதங்களை அத்யயனம் செய்யார் -அப்போது வேதங்களை அவர் அறியார் -அப்போது வேதங்களின் பூர்வ காண்டம் கூறும் இல்லறத்தையும் உத்தர காண்டம் கூறும் துறவறத்தையும் அவர் அறிவதற்கு இடம் இல்லாமல் போகும்
இங்கு கூறும் அந்தணர் நூலும் தொல்காப்பியர் கூறும் அந்தணர் மறையும் ஒன்றே
இக்குறளால் இவர் வைதிக மதத்தினர் என்பது தெளிவு
ஆறாம் இல்லறம் துறவறம் இரண்டையுமே குறிக்கும்
வேதம் அரசருக்கும் வணிகருக்கும் உரித்தது என்றாலும் தலைமை பற்றி அந்தணர் நூல் என்கிறார் என்பர் பரிமேல் அழகர்

88. ஆபயன்‌ குன்று மறுதொழிலோர்‌ நூன்‌ மறப்‌பர்‌
காவலன்‌ காவா னெனின்‌,
காவலன்‌- அரசன்‌, காவான்‌ எனின்‌ முறைப்படி ஆட்சி செய்யாவிட்டால்‌, ஆ– பசுக்கள்‌, பயன்‌ – பாலில்‌ குன்றும்‌– குறையும்‌ : அறுதொழிலோர்‌ – ஆறு தொழில்‌.களைக்‌ கொண்ட பிராம்மணர்‌, நூல்‌ வேதங்களை,மறப்பர்‌. பயன்‌என்பது வடமொழியில்‌ பயஸ்‌, என்பதன்‌ முதல்‌ வேற்றுமை யொருமையின்‌ தற்பவம்‌.
பிராம்மணனுக்குரிய அறுதொழிலாவன :-வேதத்‌தை ஓதல்‌, வேதத்தை ஓதுவித்தல்‌, யாகத்தைச்‌ செய்‌தல்‌, யாகத்தைச்‌ செய்வித்தல்‌, தானம்‌ கொடுத்தல்‌,தானம்‌ வாங்குதல்‌,
“மறப்பினும்‌ ஓத்துக்‌ கொளலாகும்‌” என்ற குறளின் கூறியபடி. இக்குறளிலும்‌ அறுதொழிலோர்‌ எனக்‌,கூறாது பார்ப்பார்‌ என ஏன்‌ ஆசிரியர்‌ கூறவில்லை எனின்‌,”
பிராமணர்க்குரிய ஆறுதொழில்களைச்‌ செய்யும்‌ பிராம்‌ணர்களையே ஈண்டுக்‌ குறித்தற்கு ௮வ்வாறு ஆசிரியர்‌ கூறினர்‌ என்னலாம்‌.
இக் காரணம்‌ பற்றியே புறநானூற்‌றுச்செய்யுளில்‌ * ஆனியற்பார்ப்பன மாக்கள்‌ (பூற நானூறு -6)” என்ற விடத்து ஆனியல்‌ என்ற அடைமொழியை அச்செய்யுளாசிரியர்‌ வழங்கினர்‌. பசுக்‌களிடம்‌ பால்‌ குன்றினமையால்‌ உலகிற்கு எல்வளவு கேடு வருமோ அவ்வளவு கேடு பிராமணர்‌ வேதத்தை மறத்தலால்‌ உலகிற்கு வரும்‌ என இவ்வாசிரியர்‌ கூறினமையின்‌ இவர்‌ வைதிக மார்க்கக்தினர்‌, என்பதற்னு.
ஐயமில்லை, :
பசுக்கள்‌ பால் குன்றிய வழி அவி இன்மையாலும் அது கொடுத்தற்குரியார்‌ மந்த்ரம்‌ கற்பம்‌ என்பன ஓதாமையாலும்‌ வேள்வி நடவாதாம்‌. ஆகவே வானம்‌ .பெயல்‌ ஒல்லாது!” (மழை பெய்யாது) என்பதாயிற்று என்றார்‌ பரிமேலழகர்‌,
“யஜ்ஞாத்‌-ஹவதி – பர்ஜன்ய :” என்பது சீதாவாக்கியம்‌, :
அல்ப – உற்கா ட. தயரா – மேவா :…அல்ப =ஸஸ்யா . வஸுந்யூஅல்பக்ஷீரப்ரஉ அல்ப – வித்யா – உ விஜாதய:–என்பது பவிஷ்யபுசாண வசனம்‌…
இக்குறளின்‌ உண்மையையே நோ்முகமாகக்‌ கூறுவது வஸ்‌ இ – ப்ரஜாஹ்ய பரிபாலயந்தாம்‌ – நயாய்‌யே – மார்மமேண மஹீம்‌ – மஹீஸாா மா-வ” சாஹ்மணேஹிய பாரம்‌ – அஸ்து-நிக்யம்‌ – லோகா :…ஸமஹஸ்தா. a § பஹு லவங்க?” என்னும்‌ ராமாயணம்‌ முதலிய நூல்களில்‌ இறுதியில்‌ பாராயணம்‌ செய்யப்படும்‌. மங்கள வாக்யம்‌, இதன்‌ பொருள்‌, அரசு: புரிவோர்‌ நன்முறையில்‌ மக்களைப்‌ பாதுகாக்கட்டும்‌ ;:(அதனால்‌) பசுக்களுக்கும்‌ அந்தணர்களுக்கும்‌ சுபம்‌.உண்டாகட்டும்‌; (அதனால்‌) உலகமாந்தர்‌ எல்லோரும்‌ சுகமாக வாழட்டும்‌, என்பதே.
ப்ரதி அம்ரஹாரம்‌ –
ப்ரதி – வோஷம்‌ – ஏவனிப்ரை -கீரிவேத – – வாவதூஉ-டுகை -மோவி :-௪ . தருண்யா ஃ. கபளாம்‌ ஸலாஷி மஜீயதே – யத்ர
மனு:–ஹவிபர்ச?” என்னும்‌ கவி வாக்யெமும்‌ இங்குக்‌
பொருந்தும்‌, [
வாழ்க -அந்தணர்‌ – வானவர்‌-அன்‌-இனம்‌ – வீழ்கதண்புனல்‌ – வேந்தனும்‌ – ஓங்குக – ஆழ்க – தீயது -எல்லாம்‌ – அரன்‌ – காமமே – சூழ்க – வையகமும்‌ -துயர் தீர்க்கவே ” என்பது சம்பந்த ஸ்வாமிகளின்‌ திருப்‌பதிகம்‌.
இந்த குறளில்‌ சொல்லும்‌ அறு தொழிலோர்‌ நூல் மறப்பர்‌ என்னும்‌ கருத்தையே “ப்‌. ரரஹ்மணா :-—. சதுரசோ-வே௨ான்‌ -௩-அதிட்யீரன்‌ ௨ யலி – ரரஜரஈ – பாலயேத்‌” என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 67 வது அத்யாயம்‌ 26 வத ஸ்லோகமும்‌ கூறுகிறது.
ந – ப்ரஹ்மசாரீ – அம்மீத – ஈ- கால்யம்‌ – உஹதே – ச௪-மெள; « * 4 யலி- ௨ண்ஒு:_௨௩- பாலயேத்‌ சாந்தி பர்வம் – 15 – 87.சொல்லும்

889, ஒற்றொற்‌ றுணராமை யாள்க வுடன்மூவர்‌
சொற்றொக்க தேறப்‌ படும்‌,
ஒற்று – ஓர்‌ ஒற்றன்‌, ஒற்று – மற்றோர்‌ ஒற்றனை,உணராமை – அறியாமல்‌, ஆள்க; மூவர்‌, உடன்‌,சொல்‌, ஓக்க – ஓத்திருக்க,-தேற – தெளிதல்‌, படும்‌ -பொருந்தும்‌.
சொல்லோக்க என்பது சொற்றோக்க என விகாரப்‌பட்டது என்னலாம்‌.
ஒற்று என்பது ஒற்றன்‌ என்பதன்‌ கடைக்குறை,-௮ரசனால்‌ ஏவப்படும்‌ ஒற்றர்கள்‌ ஒருவர்க்கொரு ஒற்றர்‌ என அறியாமல்‌ இருக்குமாறு அரசன்‌ ஜாக்‌ரதையாய்‌ இருக்க வேணடும்‌. என்பதும்‌, மூன்று ஒற்றர்கள் ஒரே விதமாய்‌ஒரு பொருளைக்‌ கூறின்‌ அதனை உண்‌மையென அரசர்‌ அறிந்து கொள்ளலாம்‌ என்பதும்‌,
“ப்ரணிய ௪ – தத.குர்யாத்‌. உ உ * யதா. ந…விது; அன்யோன்யம்‌ – ப்ரணியேயா : ததா – தே? என்னும்‌ மகாபாரதம்‌ சாந்திபர்வம்‌ 108 வது அத்யாயம்‌ 8 முதல்‌ 10-வரையான ஸ்லோகங்களும்‌
ந -ஈ – அன்ய:.-அன்யம்‌ – ஸம்ஸ்மா:-தே.. வா. வித்ய: த்ரபாணாம்‌ – எகவாக்யே -ஸம்ப்‌ரத்யய: என்னும்‌ அர்த்‌தசாஸ்திரம் (12) வாக்கியமும்‌ கூறுவதைக்‌ காண்க;

90, மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்‌
தா௮ய தெல்லா .மொருங்கு,.
அடியளந்தான்‌ – அடியால்‌ (உலகங்களை) அளந்த வாமனர்‌,-தாஅயது எல்லாம்‌ – அளந்த. எல்லாவுலகங்‌களையும்‌,-ஒருங்கு – ஒரே காலத்தில்‌, மடியிலா மன்னவன்‌-சோம்பல்‌ இல்லாத அரசன்‌, எய்தும்‌ – அடைகிறான் .
தாஅயது என்பது தாவியது’ என்பதன்‌ இடை.க்குறை, மஹா விஷ்ணு மூன்று உலகங்களையும்‌ மூன்று அடிகளால்‌ அளந்தனர்‌ என்பது ருக்வேதம்‌ முதல்‌ மண்டலம்‌154 வது ஸூத்ரத்திலும்‌ மகாவிஷ்ணு வாமன ரூபத்தைக்‌ கொண்டு பலியினிடத்தில் யாசித்து மூன்று உலகங்களையும்‌ஆக்ரமிக்தனர்‌ என்பது ஸ்ரீமத்‌ வால்மீகி ராமாயணம்‌ பால காண்டம்‌ 29 சர்க்கத்‌திலும்‌, ஸ்ரீமத்பாகவதம்‌ 8 வது ஸ்கந்தம்‌ 18-21 அத்யாயங்களிலும்‌ கூறப்‌பட்டிருக்கிறது , வலு
இவ்வாசிரியர்‌ அத்வைதானுபவி என்பது அறத்‌துப்‌
பாலிலுள்ள பல குறள்களினால்‌ வெளிப்படையாய்‌ அறியப்படுகிறது -அதோடு ஸகுணோபாஸந விஷயத்தில்‌
அடிக்கடி “அடியளந்தான் , உலகளநதான்‌ ‘ என்ற சொற்களால்‌ கடவுளைக்‌ குறிப்பதால்‌” இவர்‌ வாமன மூர்த்தியை உபாஸிப்பலர்‌ என்று ஊூகிக்க வேண்டியிருக்கிறது

91, – முயற்சி திருவினை யாக்கு. முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்‌.
முயற்சி திருவினை – செல்வத்தை, ஆக்கும்‌ – உண்‌டாக்கும்‌ ; முயற்றின்மை – முயற்சி யின்மை, இன்மை -திருவின்‌ இன்மையை, புகுத்திவிடும்‌ – கொண்டு வரும் .
மக்கள்‌ ஒவ்வொருவரும்‌. தம்மால்‌ இயன்றவரை ப்ரயத்தினம்‌ செய்ய வேண்டும்‌ என்பது கருத்து. மக்கிளின்‌ நிலைக்குக்‌ காரணம்‌ தைவம்‌ மாத்‌திரமே யன்றி புருஷப் பிரயத்தினமும்‌ ஆகும்‌ என்பது இதனால்‌ அ.றியப்படுகிறது இக்கருத்தினையே சேனாவரையர்‌ “முயற்சியும்‌ தெய்வமுமாகிய காரணங்களுள்‌ ”எனத்‌ தொல்காப்‌பியம்‌ சொல்லதிகாரம்‌. 242 வது ஸூத்திரத்தின்‌ உரையில் கூறுகின்றனர்‌.

92. அறிகொன்்‌ றறியா னெனின முறுதி
உழையிருக்தான்‌ கூறல்‌ கடன்‌,
(அரசன்‌) அறி – (பிறர்‌) அறிந்து கூறலை -கொன்று-கேட்காமல்‌ அவமதித்து, : அறியான்‌ -(தானும்‌) அறியாமல்‌ இருந்தான்‌, எனினும்‌. உழையிருந்தான் -அமைச்சன்‌,உறுதி -(அவனுக்கு) நன்மை பயக்கும்‌ பொருளை, கூறல்‌, கடன்‌ -கடமை, (ஆகும்‌)
உழையிருக்தான்‌ என்ப தும்‌ வடமொஜியில்‌ அமாத்ய என்பதும்‌ ஒருபொருட்கிளவி, இக்குறளில்‌ அச்‌ சொல் மிகப் பொருத்தம்
ஏன் எனில் அச்சொல்லில் இருந்து யாரது உழை இருந்தான் என்ற கேள்வி பிறக்க கொன்று அறியான் என்பதற்கு எழுவாயாக அரசன் என்று கிடைக்கிறது
அறி என்பது பெயர்ச்சொல்
ராகம் மானம் மதம் இவை நிரம்பித் தவறிய அரசனுக்கு நட்புற்ற மந்திரியின் செயல் கை கொடுத்து உதவும் என்னும் மஹாபாரதச் செய்யுள் நோக்கத் தக்கது

93-ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
அமைச்சன் -ஈன்றாள் பசி -கண்டாலும் பெரியோர் பழிக்கும் செயல்களை செய்தல் தகாது
நூற்றுக்கணக்கான அகாரத்தை செய்தாலாகிலும் தாயைக் காப்பாற்ற வேண்டும் என்று மனு ஸாஸ்த்ரம் -11-11- சொல்லி இருக்க
இங்கு இவ்வாறு சொல்வது எவ்வாறு பொருந்தும் என்னில்
அவ்விதி அனைவருக்கும் பொது -அமைச்சனுக்கு விதி விலக்கு என்பதும்
ஒரு காரணம் பற்றிச் செய்யத்தகாத காரியத்தை அரசர் செய்தலை தர்ம சாஸ்திரங்களும் ஆதரிக்காதே என்றவாறு செய்தலை

(94- சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசு மட்
கலத்துணீர் பெய்திரீ இயற்று
அமைச்சன்‌) சலத்தரல்‌ மோசடியினால்‌–பொருள்‌ -. பொருளை, செய்து – சம்பாதித்து, ஏம்‌ஆர்த்தல்‌ – க்ஷேமத்தை அடைதல்‌, பசுமட்கலத்துள்‌ -சூளையில்‌ வைக்கப்படாத மட்பானையில்‌, நீர்‌ – நீரை,-பெய்து இரீ இயற்று – இருக்குமாறு செய்ததை ஒத்தது
சுடாத பானையில்‌ வைத்த நீர்‌ விரையில்‌ . அதை விட்டு நீங்குமாறு வஞ்சனையால்‌ சம்பாதித்த பணம்‌ விரைவில்‌ கெடும்‌ என்பதம்‌, ௮க் காரணம்‌ பற்றி அமைச்‌சன்‌: “சலத்தை ஏற்றல்‌ தகாது என்பதும்‌, கருத்து.
சலம்‌ என்ப வஞ்சனை என்ற பொருளைக் கொண்ட
வடமொழிச்சொல்லின்‌ தற்பலம்
எம்‌ என்பது ஏமம்‌ என்பதன்‌ இடைக்குறை, ஏமம்‌
என்பன்‌ வடமொழி ஷேமத்தின்‌ தத்பவம்‌.
சலம்‌ என்னும்‌ பதப்‌ரயோகம்‌ செய்திருப்பதிலிருந்து திருவள்ளுவர்‌ தேர்ந்த ஸம்ஸ்க்ருத பாண்டித்யம் உள்ளவரென்பது விளங்குகிற து.

95. அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல்‌ வேந்தவாம்‌
பண்புடைமை தூதுரைப்பான்‌ பண்பு,
தூது உரைப்பான்‌ பண்பு == தூதுரைப்பான் தன்மை, அன்‌புடைமை- அன்புடன்‌ பேசுந்தன்மை, ஆன்ற குடிப்‌ பிறத்தல் = உயர்ந்‌ த. வம்சத்தில்‌ பிறப்பு, வேந்து . அவாம்‌,பண்புடைமை- அரசன்‌ கொண்டாடும்‌. சீலமுடைமை, ஆகும்‌.
குலீனனாயும் சீல சம்பன்னனாயும்‌, வாக்மியாயும்‌-தக்ஷனாயும் ப்ரியம்வ;தனாயும்‌, யதோக்தவாதியாயும்‌, ஸ்ம்ருதிமானாயும்‌, தூதன்‌ இருக்கவேண்டும்‌”என
சாந்திபர்வம் -85-28 ஸ்லோகமும் –83–6 ஸ்லோகமும் கூறும்
சபா பர்வம் –119-6 ஸ்லோகமும் –
மனு அம்ருதி 7-64 ஸ்லோகமும் தூதர் லக்ஷணங்கள் கூறும் –

96- இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப்படும்
அரசர் -இளையர்-வயதில் சிறியவர் – இன முறையர்-உறவினர் – என்று-என நினைத்து இகழார்-அவமதிக்காமல் -நின்ற ஒளியோடு -இட்ட ஆணைப்படி -ஒழுகப்படும் -ஒழுகுதல் பொருந்தும்
ஒளி பிரதாபம் பர்யாயம் -பிரதாபத்தால் இட்ட ஆணை –
எல்லையைக் கடந்த மகன் -பேரன் உடன் பிறந்தான் -இவரை மன்னர் போற்றார் என விராட பர்வம் -5-20- சாந்திபர்வம் -41-24- மனு ஸ்ம்ருதி –7-8- ஸ்லோகங்கள் கூறும்

97. தள்ளா விளையுளுச்‌ தக்காரும்‌ தாழ்விலாச்‌
செல்வருஞ்‌ சேர்வது நாடு.
நரடு, தள்ளா விளையுளும்‌ -குறைவற்ற விளைபொருள்‌களோடும்‌, தக்காரும்‌ தகுதியுடையாரோடும்‌.(தார்‌மிகரோடும்‌) தாழ்விலாச்‌ “செல்வரும்‌ – குறைவு படாத
செல்வத்தை உடையாரோடும்‌, சேர்வது- சேர்ந்திருத்தல்‌ வேண்டும்‌,
குறையாத விளைவுசெய்யும்‌ குடிகளும்‌, இல்லறம்‌-துறவறம்‌ இவற்றில்‌ தவறாத யோக்யரும்‌, பல வகையாலும் பொருள்‌. ஈட்டும்‌ வணிகரும்‌. கூடி வாழ்வதே. நாடாகும்‌;
விளை பொருள்‌ நிறைந்த. காடு, செல்வம்‌ ௮ரசனிடம்‌
பக்தி இவை கூடிய மக்கள்‌,-திருப்தி முற்றிய அமைச்சர்‌ இவற்றை யுடைய அரசனை அசைத்தல்‌ இயலாது என
யஸ்ய – ஸ்ஷீத: – .ஜனப£: – ஸம்பன்ன – ப்ரிய – சாஜக :-ஸந்துஷ்ட: – புஷ்ட-ஸ.விவ:- தரு ஷ-மூல:-ஸபசர்‌ஸிவ :-என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 94-வது அத்‌
யாயம்‌ 3-வது சுலோகம்‌ கூறுதல்‌ நோக்கத் தக்கது –
.
96. பிணியின்மை செல்லம்‌ விளைவின்ப மேமம்‌
அணியென்ப நாட்டி.ற்கிவ்‌ வைந்து.
பிணியின்மை- நோய் இன்மை, செல்வம்‌, விளைவ =நல்ல விளைச்சல்‌, இன்பம்‌ -செளக்கியம்‌, ஏமம்‌ காவல்‌-இவ்வைந்தும்‌, நாட்டிற்கு, அணி அலங்காரம்‌, என்ப
என்று கூறுவர்‌ (புலவர்‌),
ஆதலின்‌ இவ்வைந்தும்‌ நாட்டில்‌ நிலைத்திருக்குமாறு-
அரசன்‌ முயல வேண்டும்‌,

99. ஓதி யுணர்ந்தும்‌ பிறர்க்குரைத்தும் தானடங்காப்‌
பேதையிற்‌ பேதையா ரில்‌.
ஓதியும் -மனம் மொழி மெய்கள்‌ அடங்குவதற்கு ஏதுவாய நூல்களை) கற்றும்‌, உணர்ந்தும்‌ மனனம்‌ செய்‌தும் “பிறர்க்கு உரைத்தும்‌ -உபதேஸித்தும்‌, தான்‌, அடங்கா-அதன்படி நடவாத, பேதையின் — அவிவேகியைக்‌ காட்டிலும்‌, பேதையர்‌ – சிறந்த அவிவேகியர்‌, இல்‌-இல்லை.
ஓதியும்‌ என்றவிடத்‌து உம்மை தொக்கது.
பேதைபார்‌ என்னுமிடத்து ஆர்‌ விகுதி இழிவினைக்‌ குறிக்கும்‌, பிறர்க்குரைத்தும்‌ என்றமையால்‌ இக்குறள்‌
சிறப்பாகப்‌ பிராம்மணரைப்‌ பற்றியது, மறப்பினுமோத்துக்கொளலாகும்‌”” என்னும்‌ (41-வது) குறள்‌ ஈண்டு நோக்கத் தக்கது,-

100. வழி நோக்கான்‌ வாய்ப்பன செய்யான்‌ பழி நோக்கான்‌
பண்பிலன்‌ பற்ரறார்க்கு இனிது.
வழி- தர்மசாஸ்திரங்களை, நோக்கான்‌ படியாமலும்‌, “வாய்ப்பன (அவற்றின்‌) கூறப்பட்ட விதிகளை, செய்யான்‌-அனுஷ்டிக்காமலும்‌, பழி – பாவம்‌ (நேரிடமென்று),-நோக்கான்‌ – பயப்‌ படாமலும்‌, பண்‌ Lj =நற் குணங்களை, இலன்‌ – உடைக்தாய் இராமலும்‌ இருப்பவன்‌-பற்றார்க்கு-பகைவரால்‌ (தீங்குசெய்யப்பட), இனிது எளிதாக ஆவான்‌.
தர்ம சாஸ்த்ரங்களைக்‌ கற்று, அறமுறைப்படி நடந்த பழி பாவத்திற்கஞ்சுபவனைப்‌ பகைவர்‌ எளிதில்‌ வெல்லமுடியாது என்பது குறிப்புப்பொருள்‌.

101. பகையென்னும்‌ பண்பி லதனை யொருவன்‌
நகையேயும்‌ வேண்டற்பாற்‌ றன்று.
ஒருவன்‌, பகை -விரோதி,என்னும் என்ற பண்பிலதனை -கெட்ட பொருளை -நகையேயும்‌ — விளையாட்டிற் காகவும்‌, வேண்டற்பாற்று அன்று – விரும்பிக்கொள்ளக்‌கூடாது,

102. ஏந்திய கொள்கையார்‌ சீறினிடை முரிந்து
வேந்தனும்‌ வேந்து கெடும்‌.
ஏந்திய கொள்கையார்‌-சிறந்த தவமுடையார்‌,சீறின்‌ -கோபித்தால்‌, (௮து ) வேந்தனும்‌ -தேவேந்த்ரனையும்‌, இடை-இடம்‌, முரிந்து = கெட்டு, வேந்து -௮ரசத்‌ தன்மையை -, கெடும்‌ -கெடச்‌ செய்யும்‌.
ஈண்டு ஐந்தவித்தானாற்றல்‌ அகல் விசும்‌புளார் கோமான்‌ இந்திரனே சாலுங்கரி என்னும்‌ (12-வது ) குறள்‌
ஒப்பிடத்தக்கது,
ஆகையால்‌ ஏந்திய கொள்கையரும்‌ அரசரும்‌ சேர்‌ந்து நாட்டை ஆளவேண்டுமென்பனு . அறியத்தக்கது,
ஏந்திய கொள்கையரை ஸ ஸூஹ்ருத : என்ற சொல்‌லால்‌ சாஸ்த்ரம்‌ குறிக்கும்‌,

103- இமை யாரின் வாழினும் பாடிலரே இல்லான்
அமையார் தோள் அஞ்சுபவர்
இல்லான் அமையார் தோள் அஞ்சுபவர் –மூங்கில் போல் அழகுற்ற மனைவின் தோள் காரணமாக அவளிடம் பயப்படுவார் – இமை யாரின் -கண் இல்லாத தேவர்களைப்போல் -வாழினும் –வாழ்ந்தாலும் -பாடிலரே-சிறப்பினை உடையார் அல்லர்
தனது மனையாள் இடத்திலும் காமத்தில் மூழ்கிக்கிடத்தல் தவறு என்றவாறு

104-இரு மனப்பெண்டிரும் கள்ளும் கவரும்
திரு நீக்கப் பட்டார் தொடர்பு
ஸ்த்ரீகள் சூதாட்டம் வேட்டை பானம் -இந்நான்கும் காமத்தால் உண்டாகும் நால்வகைத் துன்பங்கள் –அவற்றால் மனிதன் செல்வத்தை இழக்கிறான் –
இதே கருத்தையே வனபர்வம் -13-7-ஸ்லோகமும் சபாபர்வம் -90-20-21 ஸ்லோகங்களும் சாந்தி பர்வம் -146-26 ஸ்லோகமும்
அர்த்த ஸாஸ்த்ரம் -119 வாக்கியமும் மனு தர்ம ஸாஸ்த்ரம் -7–50 ஸ்லோகமும் கூறும்
லஷ்மீ கடாக்ஷம் வேண்டுபவர்கள் இவற்றில் ஈடுபடுதல் தகாது அன்றோ

105–தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்து ஒழுகலான்
கயவர் -இழிந்த ஆசாரமுடையவர் -தாம் மேவன -விரும்பிய பொருளை -செய்து ஒழுகலான்-தேவர் அனையர் – தேவர்களை ஒப்பர்
தேவர்கள் சுய நன்மையையே கருதுமாறு கயவர் சுய நலத்திற்காக நினைத்தபடி எல்லாம் அக்கிரமம் செய்வர் என்பது குறிப்பு

106. அச்சமே கீழ்கள தாசார மெச்சம்‌
அவாவுண்டே லுண்டாஞ்‌ சிறிது.
கீழ்களது- இழிந்தோருடைய, ஆசாரம்‌ செயல்‌கள்‌, அச்சமே-௮ச்சத்தையே காரணமாகக்‌ கொண்‌டன; எச்சம் அவற்றைத்‌ தவிர்த்து ஏனைய “செயல்‌கள்‌, அவா விருப்பம்‌,உண்டேல்‌ இருப்பின்‌,சிறுது உண்டாம்
செய்யாவிடின்‌ தண்டிப்பார்கள்‌ என நினைத்து இழிந்தோர்‌ தாங்கள்‌ செய்ய வேண்டியவற்றைச்‌ செய்‌கிறார்களே யன்றி விருப்பத்‌துடன்‌ அவற்றை அவர்கள்‌ செய்யவில்லை என்பது கருத்து,
தத்தம்‌ வர்ண தர்மங்களையும்‌, ஆஸ்ரம தர்மங்களையும்‌ செய்யாது இழிந்த நிலையில்‌ உள்ளோரையே கீழ்கள்‌ என்ற சொல்லால்‌ ஆசிரியர்‌ குறிக்கின்றனர்‌. அவர்களிடம்‌ தமக்குள்ள வெறுப்பைக்‌ கீழ்கள்‌ என்று விடத்து அஃறிணை விகுதியாகய கள்‌, என்பதால்‌ அறிவிக்கிறார்

மனுஸ்ம்ருதி 7 வது அத்தியாயம்‌ 22 சுலோகமும்‌
மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 15 வது அத்தியாயம்‌ 34 வது ஸ்லோகமும்‌.குறித்திருக்கும்‌
மகாபாரத ஸ்லோகங்களும்‌ சாந்தி பர்வம் 15- 5-2-13- ஸ்லோகங்களும் இந்தக் கருத்தையே குறிக்கும்

107-தாம்‌ வீழ்வார்‌ மென்றோட்‌ டுயிலினி னிது கொல்
தாமரை க்கண்ணா னுலகு,
தாம்வீழ்வார்‌ மென்றோட்டுயிலின்‌ – தாம்‌ விரும்பும்‌ மகளின்‌ மெல்லிய தோளின் கண்‌ துயில்போல, இனிது கொல்‌-வருந்தாமல்‌ எய்தலாமோ, தாமரைக்கண்ணுனுலகு–செங்கண்மாலுலகம்‌.
தாமரைக் கண்ணான்‌ என்பதற்குத்‌ தாமரையைப்‌ போன்ற கண்களை யுடையவன்‌ எனப்‌ பொருள்‌ கொண்டு-அச் சொல்‌ திருமாலைக்‌: குறிக்கின்றது என்று கெரள்ளப்‌ ,பட்டது, தாமரை என்பதற்குப்‌ பத்மம்‌என்‌.ற (அற்புதம்‌,அப்ஜம்‌ என்‌.ற சங்க்யையுள்‌ கூறப்பட்ட) பேரெண்ணைப்‌பொருளாகக்‌ கொண்டு அச்சொல்‌ இந்திரனைக்‌ குறிக்குமென்பாரும்‌ உளர்‌,
மலர் மிசை ஏகினான்‌ என்‌ற சொல்லை நோக்கின்‌ அச் சொல்‌ ப்ரம்மாவைக்‌ குறிக்கின்றது-என்று சொல்வாரும்‌ உளர்‌,
“நீவி- மோக்ஷ;:- ஹி-மோஷ :” என்கிருர்‌ பர்த்ரு ஹரி ச்ருங்கார சதகத்தில்‌,

108-புலத்தலிழ்‌ புத்தேணே டுண்டோ நிலத்தொடு
நீரியைந்‌ தன்னா ரகத்து,
நிலத்தொடு, நிர்‌, இயைந்தன்னாரகத்து -இயைந்த தன்மையை யுடைய காதலர் இடத்தில் -புலத்தலின் -புலத்தலைக் காட்டிலும் – இனிது – மிக்க இன்பத்தை தருவது , புத்தேணாடு -தேவருலகம்‌, உண்டோ?
ஸ்வர்க்கத்தில்‌ அமையும்‌ இன்பத்தைக் காட்டிலும்‌ ஒத்த அன்பினையும்‌, பிறர்மனை நோக்காச் சிறப்பினையும்
கொண்ட கணவரோடு ப்ரணய கலகஞ்‌ செய்தலால்‌ வரும்‌ இன்பம்‌ சிறந்தது என்பது குறிப்பு,
.
தம்பதிகட்கு ஸெளமன்ஸ்பம்‌ வேண்டும்‌. என ருக்வேதம்‌ அதனையே பலவிடத்துத்‌ தொகுத்தும்‌ விரித்துங்‌ கூறிஉள்ளதே ,

இவ்வாசிரியரின்‌ சமயம்‌ வைதிக சமயமும்‌, “உபாஸ்னா மூர்த்தி வாமன மூர்த்தியும்‌, தத்வநிலை ௮த்வைத அனுபவமும்‌ என்பது தெளிவாகிறது.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading