ஸ்ரீ ஆழ்வார்‌ திருவுள்ளம்‌-பகுதி -2-

தமிழ்‌ அகப்பொருள்‌ முறையும்‌ உள்ளுறைப்‌ பொருளும்‌

பத்திநெறியைப்‌ பாடும்‌ தமிழ்நாட்டுப்‌ பத்தர்களின்‌ பாடல்களில்‌ அகப்பொருள்‌ நூற்கருத்துகளை ஒட்டிய பாடல்‌கள்‌ கலந்து விளங்குவது யாவரும்‌ அறிந்ததே.

வைணவ சமயச்‌ சார்பான நூல்களில்‌ அம்முறை தப்பாய்‌ வளர்ந்‌துள்ளமையும்‌, அகப்பொருட்டுறையில்‌ அமைந்த பாடல்‌களுக்கு
அழகுற உள்ளுறைப்‌ பொருளை விரிவுரையாளர்கள்‌ எழுதியுள்ளமையும்‌ தமிழுலகம்‌ அறியும்‌,
பத்தர்கள்‌ இறைவனை அநுபவிக்கும்‌ பல வகை முறைகளில்‌ தலைவன்‌ தலைவி முறையும்‌ (நாயக நாயகி பாவம்‌) ஒன்றாகும்‌.
இம்‌ முறை உலகத்துப்‌ பிற நாட்டுச்‌ சமய இலக்கியங்களிலும்‌ காணக்கூடியதே, ்‌ .

வைணவ பரம்பரையில்‌ முதல்‌ ஆசாரியரான நம்மாழ்‌வார்‌ நூல்கள்‌ நாலிலும்‌ முதலதான திருவிருத்தத்தில்‌ முதற்‌ பாட்டும்‌ கடை எட்டுப்‌ பாட்டுகளும்‌ தவிர
மற்றவை யாவும்‌ அகப்பொருள்‌ களவித்‌ துறையில்‌ அமைந்த பாடல்‌களே.
கடை.சியில்‌ தோன்றிய நாலான திருவாய்மொழியிலும்‌ 100 திருவாய்மொழிகளில்‌ 27 திருவாய்மொழிகள்‌
(பதிகங்கள்‌) அகப்பொருட்‌ பாடல்‌ முறையில்‌ அமைந்‌துள்ளன.
அவற்றில்‌ ஆழ்வார்‌ தாமான தன்மை நீங்கிப்‌ பெண்‌ தன்மை அடைந்து இறைவனைத்‌ தம்‌ தலைவனாகக்‌கொண்டு அநுபவிக்கின்றார்‌.
அவர்க்கு அந் நிலையில்‌ “பராங்குசநாயகி’ என்று பெயர்‌ வழங்குகின்றார்கள்‌ விரிவாளர்கள்‌.

அப்பாசுரங்கள்‌ “தோழி பாசுரம்‌, தாய்‌ பாசுரம்‌,(தலைவி பாசுரம்‌” என மூன்று வகையாக அமையும்‌. பேச்சு மூன்றுவகையாக இருப்பினும்‌, அநுபவம்‌ ஆழ்வாருடையதே.
பல வகையாகப்‌ பிரியினும்‌ அவர்‌ அநுபவத்திற்குக்‌ குறைவு ஓன்றும்‌ நேர்வதில்லை. *பெருக்காறு பலதலைத்துக்‌ கடலை. நோக்குமா போலே” ஆழ்வார் தம்‌ அன்பு பல பிரிவு
களாகப்‌ பிரியினும்‌ கடலையே சென்று சேரும்‌ என்று ஆசார்ய ஹிருதய ஆரியர்‌ விளக்குகின்றார்‌. (ஸூ . 131)
*இறைவனைப்பற்றிப்‌ பேச வேண்டிய இடத்தில்‌ உலகியற்‌ காமத்தை–காதலைப்‌ பற்றிப்‌ பேசுவது சிறப்பாக இல்லையே!? என்பது சிலர் எழுப்பும்‌ தடை.
இதே தடையை நான்காம்‌ திருவாய்மொழியின்‌ தொடக்கத்தில்‌ முதன்‌ முதல்‌ ஆழ்வார்‌ பெண்‌ தன்மை
அடைந்து பேசும்‌ பாடல்‌ வரும்போது ஈட்டின்‌ ஆரியர்‌ எழுப்பி, விடையும்‌ தருகின்றார்‌.
*இது காமுகர்‌ பேச்சு அன்று; இறைவன்‌ கேட்கத்‌ தக்கவன்‌, நினைக்கத்‌ தக்கவன்‌, தியானம்‌ செய்யத்‌ தக்கவன்‌, பார்க்கத்‌ தக்கவன்‌” என்று
பிரஹதாரண்ய உபரிடதம்‌ கூறுவதுபோலக் கொள்ளப்படும்‌ பகவத்‌ காமம்‌- நல்வினை உள்ள ஒருவனே இப்‌ பேறு பெறுகின்றான்‌”, என்பது அவர்‌ கூறும்‌ விடை.

————-

அகப்பொருள்‌ நூல்களையே வெறுப்பாரும்‌ உண்டு,-திருக்குறள்‌ போன்ற நூலிலும்‌ காமத்துப்பால்‌ அமைந்‌ இருப்பது குறையே எனக்‌ கொள்பவர்‌ சிலர்‌ உண்டு,
*பத்தியையும்‌ ஞானத்தையும்‌ சொல்லும்‌ நூல்களில்‌ இன்பச்சுவை அடிப்படையில்‌ அமைந்த பாடல்‌ எதற்கு?” என்று ஐய வினா எழுப்புவர்‌ சிலர்‌.
அதற்கு மாறாக, “அகப்பொருள்‌ வெறுக்கத்‌தக்க பகுதியன்று. என்றைக்கும்‌ நிலைத்துள்ள இயல்புகளை அழகுற
இன்பச்‌ சுவைப்ட எடுத்துச்‌ சொல்லும்‌ பாடல்கள்‌ அவை. அம்முறைக்கு இலக்கணம்‌ வகுத்தமை தமிழின்‌ சிறப்பு”, என்பர்‌ மற்றொரு சாரார்‌.
திருவள்ளுவர்‌ தம்‌ பொதுமறையில்‌ அம்முறையை ஒழுங்குபடுத்தி அமைத்திருக்கும்‌ தன்மையே அப்பொருளின்‌ ஏற்றத்தினை விளக்குமென்பர்‌ சான்றோர்‌.
“அது தன்னளவில்‌ முடிவது அன்று, கசப்பு மருந்தை உண்ண மாட்டாதார்க்கு வெல்லக்‌ கட்டி பூசி மருந்துண்ணச்‌ செய்வது போலச்‌
சிற்றின்பத்தைக்‌ கூறும்‌ முறையில்‌ பேரின்பத்திற்கு வழிகாட்டுவதே அப்பாடல்களின்‌” நோக்கு”, என்று பெரியோர்‌ சிலர்‌ பணிப்பர்‌,”
இக்‌ கருத்து இறையனார்‌ களவியலுரைக்‌ கருத்தை ஒட்டி அமைகின்றது.-சுருக்கமாக அகப்பொருள்‌ தமிழுக்கு உயிர்நிலையாகும்‌-
இறையனார்‌ அகப்பொருள்‌ உரையே அதன்‌ உண்மையை அறிவது ஆண்டவனுக்கன்‌றி மற்றையோருக்கு அரிது எனப்‌ புலப்படுத்துகின்றது”,” மீனாட்சிசுந்தர
மேலும்‌, அகப்பொருள்‌ நூல்கள்‌ எப்படியிருந்த போதிலும்‌, இங்கு ஒப்பற்ற இறைவனே நாயகனாய்‌ வருவதால்‌ இச்சமயப்‌: பாடல்கள்‌ முழுச்‌சிறப்புப்‌ பெறுகின்றன.
இங்கு மக்களை ஏமாற்றி அழைத்துச்‌ செல்லும்‌ நிலைமை எதுவும்‌ இல்லை என்பதும்‌ குறிக்கொள்ளத்‌ தக்க சிறப்பாகும்‌.

———

பெண்ணாதற்‌ சிறப்பு
ஆழ்வார்‌ ஏன்‌ பெண்தன்மை ஏறிட்டுக்‌ கொள்ள வேண்‌டும்‌ என்றால்‌, அவர்‌ வலிந்து அம்மாற்றம்‌ பெறுதல்‌ இல்லை.
அந்நிலை தானாக வந்தடைகின்றது.
இறைவனது ஆண்மையும்‌ வடிவழகும்‌ சீல குணமும்‌ படுத்தும்‌ பாடு அது.-இறைவனாய தலைவன் முன்‌ எல்லா உயிர்களும்‌ பெண்‌ தன்மை அடைந்து விடுகின்றன.
உயிரின்‌ – சேதனனின்‌ – இயல்பு*அவனுடைமையாம்‌ தன்மை யாதலின்‌” பெண்‌ தன்மை இயல்பாக வந்து விடுகின்றது.
“பெண்களுக்கு மோட்ச நிலை இல்லை”, என்ற நூல் கருத்து உண்டு- ஆனால்‌, இங்கு ஆழ்வார்‌ பெண்‌ நிலையடைந்து இறைவனை அநுபவித்தலை நாம்‌ காண்‌கின்றோம்‌.
இராமாவதாரத்தில்‌ முநிவர்களாய்‌ இருந்தவர்‌களே இராமன்‌ அழகில்‌ ஈடுபட்டு அவனை வேண்டிக்‌ கொண்டு,
அவன்‌ கண்ணனாய்‌ அவதரித்த போது கோபியர்களாக அவதரித்தார்கள்‌- அவனைக்‌ கூடி மகிழ்த்தார்கள்‌. என்பர்‌,
அது ஏற்றுக் கொள்ளப்‌ படுமானால்‌ ஆழ்வார்‌ அப்போதே (பெண்ணிலை யடைந்து இறைவனை அநுபவிப்பது அதனினும்‌ சீரியதே யன்றோ?

————

அகப்‌ பாடலும்‌ பத்திப்‌ பாடலும்‌
திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ பெண்ணிலை அடைந்து பேசும்‌ பாசுரங்கட்கு அமைந்துள்ள ‘உள்ளுறைப்பொருளை
யெல்லாம்‌ ஒருசேரத்‌ தொகுத்து விளக்கமுற அமைக்கின்றார்‌ இந்நூலாசிரியர்‌.
பாசுரங்களில்‌ வரும்‌ கொங்கை முதலிய உறுப்புகள்‌, தூதுவிடும்‌ பறவை முதவியவை யாவற்றுக்கும்‌ உள்ளுறைப் பொருளை விளக்குதலைக்‌ காண்கின்றோம்‌.
தமிழ்‌ அகப்பொருள்‌ இலக்கணத்தோடு இப்பாடல்களில்‌ குறிக்கப்‌ படும்‌ தத்துவம்‌ ஓரளவு ஒத்துள்ளமையும்‌ காணலாம்‌.
இம்‌முறை பற்றிக்‌ குறைவாக நினைப்பவர்க்கு “அப்படியன்று”,என்பதை விளக்குவதற்கே ஆரியர்‌ இவ்வளவும்‌ எழுதுகின்றார்‌ என்பது தோன்றுகின்றது.
இராமாயணத்தில்‌ வரும்‌ பிராட்டி நிலையை ஆழ்வார்‌. அடைந்து பேசுவதாக இவர்‌ எடுத்துக் காட்டுவதும்‌ அதனை வலியுறுத்தும்‌,
உலகியற்‌ காமத்திலும்‌ இங்குப்‌ பேசப்படும்‌ பகுதி வேறானது என்பதை அகப்பொருள்‌ இலக்கணத்திற்கு
மாறாகப்‌ பராங்குச நாயகி மடலேறுவதாகச்‌ சொல்வதும்‌ காட்டுமெனலாம்‌.
அதுபற்றியே பின்னா்‌ எழுந்த பன்னிரு பாட்டியல்‌ அதற்கு விதியும்‌ அமைக்‌கின்றது.

———–

ஆசாரிய ஹிருதய ஆரியர்‌ கூறும்‌ விளக்கங்களை இனிக்‌காண்பாம்‌:
“ஞானத்தில்‌ தம்‌ பேச்சு: பிரேமத்தில்‌ பெண்‌ பேச்சு”என்பது ஸூத்ரம் -1-8-.
பிரேமம்‌-அன்பு.காதல்‌ மிகும்‌ போது தான்‌ ஆழ்வார்‌ பெண்ணான நிலையில்‌ பேசுகின்றார்‌.

நேரிற்‌ கண்டாற் போன்று இறைவனை மனத்தாற்கண்டு அநுபவிப்பது “புணர்ச்சி” எனப்படும்‌.
கண்களால்‌ காண வேண்டுமென்ற புற அநுபவம்‌ பெறாமை பிரிவு எனப்படும்‌,
அகப்‌ பொருட்‌ பாடல்களிற்‌ பெரும்பாலன, ஆற்றாமை காரணமாக எழுந்தவைகளாகவே உள்ளன. -ஒரு திருவாய்மொழி மட்டும்‌ மகிழ்ச்சிப்‌ பேச்சாய்‌ உள்ளது.
தாமான தன்மைப்‌ பேச்சின்‌ போதும்‌ பெண்‌ தன்மைப்‌ பேச்சின்‌ போதும்‌ ஆழ்வாரின்‌ மனப்பாங்கு ஒரே தன்மையதாகத் தான்‌ இருக்கின்றது.
அடியோம்‌ தொடர்ந்து குற்றேவல்‌” என்பது பெண்‌ பேச்சாகும்‌ போது
“*அடிச்சியோம்‌ அடிக்கீ க்‌ குற்றேவல்‌” என்று மாறுகின்றது.
எனவே, அப்‌ பேச்சும்‌ ஆழ்வார்க்கு இயல்பான பேச்சே) வந்தேறியன்று என்பது விளங்கும்‌ (ஸூ 4–21).

————

அழகிய உருவகம்‌
“பெண்ணொருத்தி திருமணம்‌ செய்து கொண்டு தன்‌ நாயகனைச்‌ சேர்வதும்‌ ஓர்‌ ஆன்மா
இறைவனை அடைவதும்‌ ஒரே தன்மையன என்பதை உருவகமாகக்‌ காட்டுகின்றார்‌ ஆசிரியர்‌.
தாய்‌, தந்‌தை , உடலை வளர்க்கும்‌ உணவு, கைப்‌ பிடிக்கும்‌ கணவன்‌, திரு நாண்‌ முதலிய பலவும்‌ ஆங்கு எடுத்‌துக்‌ காட்டப்படுகின்றன.
வித்தை தாய் -; பாலும்‌ அமுதுமாய்‌ இருந்து வளர்த்தது திருமால்‌ திருநாமம்‌-
ஆன்மா திரு மகள்போல ஆசாரியனாகிய தந்தையால்‌ வளர்க்கப்படுகிறது.
வேறொருவருக்கு உரிமை பேசும்‌ நிலலை ஏற்படாமல்‌, உலகின்‌ தலைவனும்‌ காப்பவனும்‌ ஆன அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயகர்‌ ஆவர்‌. அவரை மணம்‌ முடித்தவர்‌ தந்‌தையாய ஆசாரியர்‌.
எட்டு இழையும்‌ மூன்று புரியும்‌ கொண்டது மங்கல நாண்‌: அதைப் போன்றதே *இறைவனைச்‌ சேர்ந்தது ஆன்மா” என்ற தொடர்பை
உணர்த்துகிற எட்டு எழுத்துகளால்‌ ஆகி மூன்று சொற்களாய்‌ இருக்கின்ற பிரணவமாகிய திருமந்திரம்‌,
மந்திரம்‌ உணர்ந்த பின்னரே இறைவனோடுள்ள தொடர்பு

இவ்வாறு பரமபுருடன்‌ ஆன்மாவைக்‌ கைக் கொண்டபின்‌
திருமணம்‌ முடிந்து எஞ்சிய ஓமம்‌ முடியுமளவும்‌ நாலுநாள்‌ பெண்‌ தன்‌ நாயகனை அணுகுதலும் அகலுதலும் இன்றி வேறொருவர்க்கு உரியவரல்லாத அடிமைத்‌ தன்மைக்குப்‌
பொருந்த அவன்‌ அநுபவத்திற்குத்‌ தாக்கவளாக அமைவள்‌.
திருமந்திரதிதல்‌ உள்ள ‘ஓம்‌* என்பது வேரொருவரருக்கு உரியதல்லாத அடிமைத் தன்மையை உணர்த்தும்‌.
ஏற்றுக்‌ கொள்ளப்பட்டு இறைவனை நெருங்கி அவனோடு கலவா விடினும்‌, அகலுதலும்‌ அணுகுதலுமில்லாமல்‌
கைங்கரியத்தை வேண்டுதலை *(நாராயணாய’” என்பதிலுள்ள சதுரத்தி-நான்‌காம்‌ வேற்றுமை–உணர்த்துகின்றது.
மணமக்கள்‌ ஒரே படுக்‌கையில்‌ இருக்கச்‌ செய்தேயும்‌, நெருங்கிப் பழகும்‌ வாய்ப்‌பின்றி சோமன் முதலியவர் நடுவே இருப்பதாகச் சொல்லப்படும்‌ நாலு நாட்கள் போல, அடிமைத்‌ தன்மை அறிதலும்‌ கைங்கரியம்‌ செய்ய வேண்டும்‌ என்ற விருப்பமும்‌ இருப்பதால்‌, இருவருக்கும்‌ நெருக்கம்‌ உண்‌டாயிருக்கவும்‌,
சேர்ந்து அநுபவிக்க இயலாதவாறு. அநுபவ விரோதியான உடம்புடன்‌ கூடி யிருக்கும்‌ நாலு நாள்‌ களையும்‌ ஆன்மா ஒருவாறு கழிக்கின்றது.

பெண்‌, பிறந்த வீட்டைத்‌ துறந்து புக்ககம்‌ செல்லுதல்‌ போல, ஆசாரியன்‌ உபதேசித்த திரு மந்திரத்தால்‌ ஆன்மா
பிறவியை அடை.ந்தது இங்கேயாகையால்‌,
பிறப்பிடமான இவ்வுலகை இறைவன் பாலுண்டான அன்பின்‌ மிகுதியாலே முன்பு தனக்கு ஆதரவாய்‌ இருந்த பல பொருள்களோடும்‌ கை விடுகன்றது
சூழ்‌ விசும்பு” என்னும்‌ திருவாய்மொழியில்‌ சொல்லுகிறபடி அர்ச்சிராதி மார்க்கத்திலே வழியிலுள்ள
அனைவரும்‌ போற்ற நாயகன்‌ அழைத்துச்‌ செல்ல, அவனோடு உடன்‌ செல்கின்றது;
கணவன்‌ வீடு செல்லும்‌ பெண் அவனூரின் எல்லையை அடைந்த பின் அவர்கள் குளிப்பாட்டக் குளிக்குமாறுபோல,
அமுத வெள்ளத்தை. உடைய விரசை என்ற ஆற்றிலே இப்பாலுள்ள அழுக்கெல்லாம்‌ நீங்க நீராடுகின்றது-
குளித்த பெண்ணை நாயகனுடைய உற்றார் உறவினரான மகளிர்‌ அலங்கரிப்பது போன்று, துழாய் மாலை,.அஞ்சனத்தின்‌ நீறு, நண ப்பொடி, ‘ பீதக வாடை,
பல அணிகலன்‌ முதலியவற்றால்‌ மானேய்‌ நோக்கியரான மகளிர்‌ இறைவன்‌ நுகருதற்கேற்றவாறு, அவளை அணி செய்வர்‌
தம்‌ ஈடுபாடு தோன்ற அனைவரும்‌ கூடி நின்று அவளைப்‌ போற்றி”புரைப்பர் – சாமரம்‌ ப்ணிமாறி மகிழ்விப்பர்‌,

மணப் பெண்‌ கணவனின்‌ இல்லத்தை அணுகியவுடன்‌ அங்குள்ள மகளிர்‌ மங்கல விளக்கு முதலியன ஏந்தி வந்து
வரவேற்பது போல, ஆன்மாவை
*நிதியும்‌ நற் சுண்ணமும்‌ நிறைகுட விளக்கமும்‌ மதிமுக மடந்தையர்‌ ஏந்தினர்‌”(10-9-9) என்கிறபடியும்‌,
*சதிரிள மங்கையர்‌ தாம் வந்து எதிர்கொள்ள? (நா. திரு. 6-5) என்கிறபடியும்‌
மங்கலப்பொருள்‌களுடன்‌ தெய்வ மகளிர்‌ எதிர் கொள்வர்‌. பாராட்டோடு சென்ற பெண்‌ கணவன்‌ இல்லில் புகுமாறு போல,
*மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பாரீ” (நா, திரு.10) என்கிறபடி திருமகள்‌ கேள்வனானவனுக்கு
இன்பந்தருமிடமான ஸ்ரீ வைகுந்தத்தை அடைந்து அவனோடே. கூடியிருக்கும்‌.

பின்‌ கணவன்‌ வீட்டிற்கு வந்த பின்‌ மண மக்களும் மற்றுமுள்ள உறவினர்களும்‌ கூடியிருந்து பெரும் களிச்சி உண்ணுமாறு போல,
அடியார்‌ குழாங்களும்‌ அவனுமாக இருக்கிற சேர்த்‌தியிலே பெருங்களிச்சியாக முழுக்க அநுபவிக்கும்‌;
*கட்டெழில்‌ வானவர் போகம்‌ உண்பரே” (6-6-11) என்றபடி நித்திய ஸூரிகள்‌ : அநுபவிக்கிற இன்பத்தை
*அவன்‌ பிரமத்‌துடன்கூட இணை பிரியாமல்‌: எல்லா இன்பங்களையும் (கல்யாண குணங்களையும்‌) அநுபவிக்கின்றான்‌” என்கிறபடியே அநுபவிக்‌கும்‌.

கணவனோடு கூடு வதற்கு கட்டிலிலே ஏறுமாறு போல, மிகச்‌ சிறப்பாகச்‌ செய்யப்பட்ட அவனது கட்டிலிலே
பாத பீடத்திலே அடியிட்டேறி இராமனாய்‌ இருந்து பரதனையும்‌ திருவடியையும்‌. அணைத்துக் கொண்டதும்‌,
கண்ண பிரானாய் இருந்து அக்குரூரனை அணைத்துக்‌ கொண்டதும்‌ ஆன கெளத்‌துப மணிக்கும்‌ அழகு செய்யும்‌
இறைவனது திருமார்பிலே இறைமையின்‌ அடையாளமான கெளத்துபம் போல இன்பப்‌ பொருளாய்‌ ஒளி செய்வதாய்‌ அணைவது ஆன்மாவாகிய பொருள்‌.
அதற்குப்‌ பெண்‌ தன்மையால்‌ உண்டானதாக வரும்‌ பேச்சு, வந்தேறியன்று; பெண் தன்மை இயல்பாக உண்டாவதாகைபாலே
அதனை. உள்ளபடி பெற்ற இவருக்கு அதனால் உண்டான பேச்சும்‌ இயல்பான ‘ பேச்சே என்பது தேற்றம்

———

மூவகை நிலை

பெண்‌ பேச்சாகப்‌ பேசும் இடத்திலும் ஆழ்வாருடைய பேச்சு மூன்று விதமாக அமைந்திருப்பதைக்‌ காண்கிறோம்‌.
ஆழ்வார்‌ தோழியாகவும்‌ தாயாகவும்‌ மகளாகவும்‌ இருந்து பேசுகின்றார் -இதன்‌ கருத்து யாது?

தோழியாவாள்‌ தலைவனையும்‌ தலைவியையும்‌ இணக்கிச் சேர்ப்பவள்‌,
திருமந்திரத்தில்‌ முதற் சொல்லான பிரணவத்‌தால்‌ இறைவனோடு ஆன்மாவுக்குச்‌ சொல்லப்பட்ட:
வேறொன்றிற்கு உரியதல்லாத அடிமைத்தன்மை முதலான
சம்பந்தத்தை அறிதலே அவனோடு ஆன்மா சேருதலுக்கு ஹேது
ஆகையால்‌, அந்தச்‌ சம்பந்த ஞானம்‌ என்கிற அறிவு நிலை.
*தோழி” என்று சொல்லப்படுகின்றது. ்‌

தாயாவாள்‌ பெற்று வளர்த்துப்‌ பெண் பிள்ளை பருவ:மடைந்து தலைவனிடம்‌ கொண்ட அளவற்ற ஈடுபாட்டால்‌.
அவனிருந்த இடத்திற்குப்‌ போக வேண்டுமென்று பதறுமளவிலும்‌, அவன் தானே வரக்‌ கண்டிருத்தலொழியப்‌ படி.
கடந்து போதல்‌ குல மரபுக்கு ஏற்றதன்று என்று கூறித்‌தடுத்து நிறுத்துபவள்‌.
*சித்தோபாயம்‌ என்கிற இறைவனையே உபாயமாகப்‌ பற்றினவர்க்கு அடையப்படு பொருளின்‌ கால தாமதத்துற்குக்‌
காரணம்‌ இல்லாமையால்‌, விரைவாகப்‌. பேற்றைப்‌ பெற வேண்டும்‌ என்ற பதற்றம்‌ தோன்றும்‌.
பேற்றின்‌ சிறப்பைக் க ண்டறிந்ததாலே முறைப்படி – படிப்‌.தடியாக… அவனை அடைதல்‌ வேண்டுமென்று இராமல்‌,
மிக்கு. நடக்கிற அளவில்‌ இது பிரபன்ன குல .மரபுக்ருச்‌ சேராது?
தலைவனானவன்‌ தானே வந்து ஆட்கொள்ளப்‌ பார்த்திருக்க வேண்டும்‌ என்று துடிப்பை அடக்கப்‌ பார்க்கின்ற
உபாயத்‌ துணிவு ஆகிற அறிவு நிலையே தாயார்‌ என்று பெயர்பெறும்‌–இந் நிலையைத்‌ திருமந்திரத்தில்‌ நடுச்சொல்‌ உணர்த்தும்‌,

தலைமகளாவாள்‌ இயற்கையில்‌ தலைவனைக்‌ கூடி அவன்‌ சிறப்புகளிலே ஈடுபட்டுக்‌ ‘குல மரபுகளையும்‌ நோக்காது
அவனை அடை,ந்தல்லது ஆற்றேன்‌ என்னும்‌ பதற்றத்தைஉடையவள்‌. -தலைவனும்‌ சரணடையத்‌ தகுந்தவனுமன் இறைவனுக்குத்‌
திருமந்திரத்தின்‌ கடைச்‌ சொல்லால் ‘சொல்லப்படுவதான அவன்‌ இயல்பு வடிவு குணம்‌ செல்வங்களால்‌ வந்த சிறப்பு இவற்றை எண்ணி, அவனை அநுபவித்‌தலில்‌ தாமதத்தைப்‌ பொறாமையாலே்‌,
அவன் ஒருவனே உபாயமானவன் – என்கிற துணிவையும்‌ மீறி அவனை அடைந்து அநுபவித்தல்லது தரியாதபடி
நடக்கிற *பேற்றில்‌ பதற்றம்‌” ஆகிய அறிவு நிலையை மகள்‌ என்று பெயரிட்டு வழங்குவர்‌.

இம்‌ மூன்றுவித நிலைமைகளும்‌ எக்காலத்தும்‌ ஆழ்வார்‌ தம்‌ உள்ளத்திலே உண்டு. அதனால்தான்‌ இவை *அறிவு நிலை”(பிரஜ்ஞா அவஸ்தை) என்று சுட்டப் பெறுகின்றன.’
திருவாய்மொழி நூலில்‌ தோழியின்‌ பேச்சாய்‌ உள்ளவை மூன்று. திருவாய்‌ மொழிகள்‌–அவை:
தீர்ப்பாரை யாமினி (4-6),
“துவளில்‌ மாமணி” (6-5),
கருமாணிக்க மலை: (8-9) என்பனவாம்‌,

தீர்ப்பாரை யாமினி :
இயற்கையாய்த்‌ தலைமகனைக்‌ கூடிப்பின்‌ அவனைப்‌ பிரிதலால்‌ வந்த ஆற்றாமையாலே மயக்க மடைந்த தலைமகளின்‌
நிலையைக்‌ கண்டு தாய்மார்‌ கலந்த *இவளது நோய்‌ இன்னது” என்பதும்‌, “அதன்‌ காரணம் இன்னது” என்பதும்‌,
(அதனைப்‌ போக்கும் விதம்‌ இன்னது”என்‌யதும்‌ அறியாதே ஒரு கட்டு விச்சியின்‌ சொற்‌ கேட்டு, அவள்‌ ‘நோய்‌ நீங்குதற்காக வெறியாடத்‌ தொடங்கினார்
அப்போது தலைமகனின்‌ இயல்பை நன்கு அறியும்‌ அவன்‌ உயிர்த்‌ தோழி,”வேறு ஒருவருக்கும்‌ உரியள் அல்லாத இவட்டுப்‌ பிறர் தொடர்பு கூறுவதை இவள்‌ ஆற்றாள்‌,
நாம்‌ இதனை விலக்காவிடில்‌ இவளை இழக்க நேரும்‌” என்று எண்ணி, அப்பொழுது தான்‌ தான்‌ ஆராய்ந்து அறிந்தவள்‌ போன்று
இவள்‌ நோவையும்‌ அதற்குக்‌ காரணத்தையும்‌ அவர்கட்குச் சொல்லித்‌ தக்க மருந்துகளையும்‌ விதித்து,
“அங்கோர் கள்ளும்‌ இறைச்சியும்‌ தூவேன்‌ மின் (4-6-3)என்று இவை முதலியவற்றால்‌ வெறி’ விலக்கிப்‌ பேசும்‌ பாடல்கள்‌ இதில்‌ அமைந்துள்ளன.

இதன்‌ உள்ளுறைப்பொருள்‌:
பேற்றினை அடைய உள்‌ளம்‌ பதற்றம்‌ கொண்ட நிலையிலும்‌ அது கிட்டாமையால்‌ ஆற்றாமை மிக்கது
அது காரணமாக அவனையே உபாயமாகக்‌ கொண்ட உபாயத்தில்‌ துணிவு கலங்கியது;
தர்மம்‌ மேற் கொண்டு ஒழுகுதலாலே இந் தோயைப்‌ போக்கலாம்‌-என்று அந்தரியாமியான இறைவனுக்குச்‌ செய்யும்‌ கருமங்களைச்‌ செய்தலில்‌ ஈடுபாடு தோன்றிற்று,
அப்போது சம்பந்த ஞானமானது- அவனுடன்‌ உள்ள தொடர்பு பற்றிய அறிவானது–இந்நோய்‌ கருமத்தின்‌ பலனாக உண்டானதன்று
தற்செயலாக ஏற்பட்ட இறைவனது அருள்‌ நோக்கின்‌ பயனால்‌ உண்டானது. சிறந்த திருமேனியோடு கூடியவனான இறைவனை
அநுபவிக்கையாலே வந்த எடுபாட்டின்‌ விளைவு இது. ஆகையால்‌, கருமம்‌ புரிதல்‌ இதனைப்‌ போக்கும்‌ வழி யன்று.
வேறொருவர்க்‌ குரியதல்லாத அடிமைத் தன்மையாகிய ஆன்மாவின்‌ இயல்புக்கு அது முரணான செயலாகும்‌?
எனவே, அதனியல்பை அழிப்பதாகும்‌. இவ்வாறு பிற உபாயங்களை மேற்கொள்ளுதலை விலக்குவதே இதன்‌ உட்கோள்‌ ஆகும்‌.

துவளில்‌ மாமணி :
திருத்தொலை வில்லிமங்கலம்‌ என்னும்‌ திருப்பதியிலே மிக்க ஈடுபாடு கொண்டுள்ள ஒரு தலைமகளை
அந்நிலைமையி லிருந்து மீட்கப்‌ பார்க்கின்றனர்‌ அவள்‌ தாய்மார்‌.
தோழி யானவள்‌ அவர்களை நோக்கி , “இவளை நீரினி அன்னைமீரீ1 உமக்கு ஆசையில்லை விடுமினோ!” என்கிறாள்‌.
நீங்களன்றோ திருத் தொலை வில்லிமங்கலத்தில்‌ இவளைக்‌ கொண்டுபோய்‌ இவட்கு இந்த ஈடுபாட்டை விளைத்தீர்கள்‌?
இனி அடையப்‌ பட்ட பொருளில்‌ ஈடுபட்டவளான இவளை உங்களால்‌ மீட்க இயலாது.
ஆகையால்‌, நீங்கள்‌ இவள் மேல் கொண்ட ஆசையை விடுங்கள்‌!’ என்று அறிவுறுத்துகின்றாள்‌.

இதன்‌ உள்ளுறைப்‌ பொருள்‌ –
அர்ச்சாவதாரமான எளிய பொருளே உபாயமாகையால்‌, எப்போதும்‌ அதிலே நோக்காயிருக்கும்‌ உபாயத்தைப்‌ பற்றிய துணிவு,
அப்பொருளின்‌ சிறப்பை உணர்தலால்‌ வந்த ஈடுபாட்டின்‌ விளைவான பதற்றம்‌ உபாயத்திலே ‘பொருந்துகிறதோ–சேர்கின்றதோ.-. என்ற வேண்டாத ஐயப்பாட்டாலே அதைத்‌ தடுக்க முயல்கிறது.
அச் சமயம்‌,“சம்பந்த ஞானம்‌– அடிமைப்‌ பொருளின் பால்‌ உண்டான இவ் வீடுபாடு–தலைவனின்‌ உகப்புக்குத்‌ தக்கதே:
உபாயப்‌ பகுதியில்‌ சேராது? அடையப்பட்ட பொருளின்‌ சிறப்புக்‌ காரணமாய்‌ வந்தது; இதனைத்‌ தடுத்தலும்‌ இயலாது? தடுக்கக் கூடுமென நினைத்திருக்கின்ற உரிமையே எண்ணம்‌ நெருங்கிய
அவனுடைமை யாதலகின்ற (பாரதந்தரியமாகிற) இயல்புக்கு மாறானது ஆகையாலே விடத்தக்கது-
என்று தன்‌ தொடர்பை நீக்கும்படி. சொல்லியது இத் திருவாய்‌ மொழியின்‌ பொருளாகும்‌.

கருமாணிக்க மலை :
தலைமகளின்‌ பருவத்தைக்‌ கண்ட உறவினர்‌, சுயம்வரத்‌திற்கு அரசர்களை யெல்லாம்‌ திரட்டுகைக்கு மண முரசு அறை விக்கின்றனர்‌.
திருப்புலியூர்‌ என்னும்‌ திவ்விய தேசத்து இறைவனோடே. இவளுக்குச்‌ சேர்க்கை உண்டாய் விட்டது என்பதை
இவள்‌ வடிவிலும்‌ பேச்சிலும்‌ உண்டான வேறு பாட்டாலே அறிகின்றாள்‌ உயிர்த்தோழி,
அவள்‌, *இம்‌ முரசொலி பெண் பிள்ளை செவியிற்‌படுமாகில்‌, “மானிட வர்கென்று பேச்சுப்படில்‌
வாழாத்‌ தன்மையளா யிருக்கினற இவள்‌, உயிர் தரியாள்‌, ஆகையால்‌, அதனைத்‌ தடுக்க வேண்டும்‌” எனக்‌ கருதுகிறாள்
உறவினர்களிடம் , *இவளுக்குத்‌ திருப்புலியூர்‌ நாயனாரோடே சேர்க்கை உண்டாயிற்றுப்போல இருக்கின்றது?
அவனுடைய குணம்‌ செயல்களையே எப்‌ பொழுதும்‌ சொல்லிச்‌ சொல்லிப்‌ புலற்றுகின்றாள்‌? எனவே, நீஙிகள்‌ செய்வது முறையற்ற செயல்‌? என்று ‘தெரிவிக்‌கின்றாள்
அவரிகள்‌, “அப்படியானால்‌ இவளுக்குத்‌ தக்க உறுப்பழகு, அணியழகு முதலான நாயக லக்ஷணங்கள் அவனுக்கு உண்டோ?” என்று கேட்கின்றார்கள்‌,
அவைகளில்‌ எக்குறைவும்‌ இல்லை. அவற்றுள்‌ ஒன்றும்‌ இல்லையே யானாலும்‌, இவளிடம்‌ அவனுக்கள்றிப்‌ பிறரக்குரியள்‌ அல்லாதவளானமைக்கு அடையாளம்‌ தெளிவாகக் காணலாம்
ஆன பின்பு உங்கள்‌ முயற்சியை விடுங்கள்‌! என்று நடுவு நிலயளாய்‌ நின்று அறம்‌ சொல்லுபவளாய்‌ வேறு மணம்‌ விலகினைமை சொல்லப்‌ பெறுகின்றது
இத்‌ திருவாய்‌ மொழியில்‌, அறத்தொடு நின்ற நிலையே இங்குப்‌ பேசப்‌ படுவது,

உள்ளுறைப்பொருள்‌ :
அடையப்படுகின்ற பொருவின்பால்‌ பதற்றம்‌ கொண்ட நிலையை பேற்றின்‌ கண்‌ பதற்ற நிலையின்‌ முதிர்வை.
உபாயத்‌ துணிவு நிலையிலே நின்று கண்ட பிறகு,
அந் நிலை இறைவனை யன்றி வேறு பிறர்குத்‌ தகுதியற்றதான தன்மையை அறியாதே, *மற்றையோர்க்கும்‌ தகுதியோ” என்ற ஆராய்ச்‌சி எழுந்தது.
அவ்வளவில்‌ சம்பந்த ஞானம்‌ இதற்கு வேறு பிறர்க்கு அடிமை என்ற பேச்சுக்கூட இதன்‌ இயல்பை அழிப்பதாகும்‌.
தலைவனுடைய இனிமையாலும்‌ மற்றும்‌ இயல்பாகவே அவனுக்கு அடிமையாம்‌ தன்மையாலும்‌ இவ்வான்மா
அவனுக்கே அடிமை” என்று அறுதியிடப்‌ படுவது இத்திருவாய்மொழியின்‌ பொருள்‌,

ஆக, தோழியானவள்‌ வெறிவிலக்கியும்‌, ஆசையறுத்தும்‌,
அறத்தொடு நின்றும்‌, “இவ்வான்மா பிறர்க்கு அடிமைப்‌ பட்டதுமன்று? தனக்குத் தானே உரியதுமன்று:
இறைவன்‌ ஒருவனுக்கே அடிமை” என்று சொன்ன மூன்று திருவாய்‌ மொழிகளும்‌ சம்பற்த ஞான நிலையில்‌ பேச்சு என்பது தெளிவு.

தாய்‌ பேச்சான திருவாய்மொழிகள்‌—7 :
*ஆடியாடி” (2-4) என்ற திருவாய்மொழியில்‌ அடியார்கள்‌ குழாங்களை உடன்கூடப்‌ பெருமையால்‌ வந்த வருத்தத்தாலே கொழுகொம்பை இழந்த தளிர் போலத்‌ தலைமகள்‌ வாடுகின்றாள்‌.
*பாலனாய்‌ ஏழுலகில்‌? (4-2) என்ற திருவாய்மொழியில்‌
“கண்ணனது அடியில்‌ சூடிய துழாய்க்கு மெலியும்‌”?என்றபடி. கடந்த போனதை ஆசைப்பட்டு மெலிகின்றாள்‌.
“மண்ணையிருந்து துழாவி” (4-4) யிலே *என்‌ பெண்‌
கொடி ஏறிய பித்தே* (4-4-6) என்னும்படி அவனுக்கு”ஒப்பான பொருள்களையும்‌ உறவான பொருள்களையும்‌ அவனாக எண்ணி, அவற்றைக்‌ கிட்டும்படி பித்தேறிப்‌ பேசுகின்றாள்‌.
‘கடல் ஞாலத்திலே (5-6) “ஈசன்‌ வந்தேறக்கொலோ*”(5-6-1) என்று ஆற்றாமையாலே *அவனைப் போலப்‌ பாவித்‌தலை–அநுகரித்தலைத்‌ தெரிந்து கொள்ளாதே இறைவன்‌ இவள் மீது ஆவேசித்தானோ!” என்று கருதும்படி, அவனாகப்‌ பேசுகின்றாள்‌...

“மாலுக்கு வையத்திலே” (6-6) *கற்புடையாட்டி இழந்தது கட்டே” (6-6-10) என்னும்படி இறைவளை அடையாது துன்பத்தாலே கட்டடங்க இழக்கிறாள்‌.
“உண்ணும்‌ சோற்றில் *(6-7) *இன்றெனக்கு உதவாதகன்ற”(6.7.6) என்று தன்னைப்‌ பிரிந்து
துன்புறுகின்ற தாய்‌, “அந்த ஆபத்தான நிலையில்‌ ‘எனக்கு உதவாதே போனாள்‌” என்னும்படி அகல்‌கின்றாள்‌.
“கங்குலும்‌ பகலிலே” (7-2) *சந்தித்து’ உன்‌ சரணம்‌. சார்வதே வலித்த தையல்‌” (7-2-5) என்னும்படி “அவனை அடைந்து அவன்‌ முன்னிலையில்‌ முடிய வேண்டும்‌” என்றஉறுதி பூண்டவளாகின்றாள்‌.

பத்தியால்‌ வழிபடுவோர்க்குப்‌ பரபத்தி தசையிலுண்‌டாம்‌ வாட்டம்‌, மெலிதல்‌ முதலியவைய போலத்‌ தலைமகளின்‌ இந்நிலமை
உபாயத்தில்‌ கொண்டு சேர்க்குமோ என்று தாயானவள்‌ அஞ்சி, இறைவனையும்‌ வினவ வந்தவர்களையும்‌ பார்த்து
வாடா நின்றாள்‌? மெலியா நின்றாள்‌? என்றாற்போன்று
முறையிடுகின்றாள்‌; “உம்முடைய கிருபை தவிர இவள்பக்கல்‌ உள்ள ஒன்றும்‌ ஹேதுவன்று
ஆனபின்பு இவளை “இப்படித்‌ துடிக்க விட்டிருத்தல்‌ உம்முடைய கி ருயைக்கும்‌ காக்கும்‌ தன்மைக்கும்‌ தக்கதாமோ? என்று
கூப்பிடுகின்ற ஏழு திருவாய்மொழிகளிலும்‌ உபாயத்‌ துணிவு அல்லது உறுதிநிலை தோன்றும்‌.-ஆகையால்‌, தாய்ப்‌ பேச்சான ஏழு திருவாய்‌மொழிகளும்‌ உபாயத்‌ துணிவு நிளையில்‌ பேச்சு என்பது தெளிவு .

தலைமகள்‌ தன்மையில்‌ ஆழ்வார்‌ பேசும்‌ திருவாய்மொழி-17

தலைமகள்‌ *அஞ்சிறைய மட நாரை” (1-4), *வைகல் பூங்கழி” (6.1)) *பொன்னுலகாளீர்‌* (6-8), *எங்கானல்‌”(9-7) என்கிற
நான்கு திருவாய்மொழிகளிலும்‌ அவன்‌ வருகின்ற வரையிலும்‌ பொறுத்திருக்கப்‌ பொறாமல்‌ பதறித்‌ தூது விடுகின்றாள்‌.

“வாயும்‌ திரையுகளிலே (2-1) “ஆற்றாமை சொல்லி அழுவோமை”: என்று எல்லாப்‌ பொருள்களும்‌ இறைவனைப்‌ பிரிந்த காரணத்தினால்‌
துன்புறுகின்றனவாகக்‌ கருதி அவற்றைத்‌ தன்னோடொத்த துபரமுடையனவாகக் கொண்டு அழுகிறாள்‌.

*ஏறாளு மிறை யோ’னில்‌ (4-8) *மாறாளன்‌ கவராத மணிமாமை குறைவிலம்‌?” என்று அவன்‌ விரும்பாதவற்றை வேண்டாவென்று வெறுத்துரைக்கிறாள்‌.

“மாசறு சோதி*யிலே (5-3) “நாடும்‌ இரைக்கவே யாம்‌ மடலூர்தும்‌” என்று (உலகம்‌ முழுவதும்‌ கலக்கமடையும்படி மடல்‌ ஊர்வேன்‌!’ என்று சொல்கிறாள்‌.

ஊரெல்லாம்‌ துஞ்சி*யிலே (5–4) காதல் தோயும்‌ இரவாகிய கறிபமும்‌ முன்னரே உடன்பாடு செங்து கொண்டாற் போன்று சூழ நின்று பொருதலால தப்ப வழியற்றவள் ஆகின்றாள்

எங்ஙனேயோ”லில்‌ (5-5) சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர்‌ உருவம்‌ விருப்பும்‌ வெறுப்பும்‌ சமமாம்படி ௨ரு வெளிப்பாடாய்‌ வெளிப்படும்‌ நிலையளாகின்றாள்‌.

*மானேய்‌ நோக்கிலே: (5-9) திருவல்ல வாழுறையும்‌ ‘தலைவரைக் கூடும்‌ நாளை வேண்டுகின்றாள்‌. : .

“மின்னிடை மடவாரிலே” (6–2) அவன்‌ காலம் தாழ்த்து வரவே, ‘போகு நம்பீ? என்று காதலால்‌ ஊடலை மேற்‌ கொள்கிறாள்‌ *

*வெள்ளைச்‌ சுரி சங்கிலே” (7-3) *என்‌ நெஞ்சும்‌ அவன்‌ பின் போய்‌ விட்டது! ஆகையால்‌, ஒரு துணையுமற்றேன்‌! என்று உசாத் துணையுமற்றவளாகின்றாள்‌.

ஏழையர்‌ ஆவி’யிலே (7–7) கண்ணனது உருவமும்‌ உறுட்புகளும்‌ உருவெளிப்பாட்டாலே இவளை ஒரு சேர நலிகின்றன.

“நங்கள்‌ வரிவளை*யிலே (8–2) *காலம் பல சென்றும்‌ காண்பது ஆணை உங்களோடு எங்களிடையில்லை!‘ என்று நன்மை சொல்கிற்‌ தாய்மார்‌ தோழிமார்களையும்‌ தாண்டிச்‌
செல்லும்‌ நிலை பெறுகின்றாள்‌.

*இன்னுயிர்ச்‌ சேவ*லிலே (0-5) போலியான பொருள்‌களைக்‌ கண்டு நொந்து முடிதலில்‌ துணிந்தவளாகின்றாள்‌.

*மல்லிகைகமழ்‌ தென்றலில்‌ (9-9) மாலைக்‌ காலத்தில்‌ கண்ணன்‌ பசுக்களின்‌ முற்கொழுந்தில்‌ வரக்‌ காணாமையால்‌, பகையாய்‌ நின்று துன்புறுத்தும்‌ பொருள்களாலே நலிவு யடுகின்றாள்‌.

*வேய்மரு தோளிணை”யிலே (10-3) விடியற்காலையிலே கண்ணன்‌ பசு மேங்க்கப்‌ போனானாகத் தவறாக நினைத்துக்‌ கொண்டு அவன்‌ முகத்தைப்‌ பார்த்து, ‘பசு மேய்க்கப்‌ போனால்‌ நலியக்‌ கூடிய பகைப்‌ பொருள்கள்‌ நலியா நின்றன” என்று கூப்பீடு செய்கின்றாள்‌.

இவ்வாறு பதினேழு திருவாய்‌மொழிகளிலும்‌ பேற்றில்‌ பதற்றம்‌ தோன்றும்‌.
இதனால்‌,தலைமகள்‌ பேச்சான பதினேழு திருவாய்‌ மொழிகளும்‌ பேற்‌றில்‌ பதற்ற நிலையில்‌ பேசுமிடம்‌ என்பது தெளிவாம்‌.

இவ்வாறு மூன்று திருவாய்‌ மொழிகளில்‌ பிறர்க்கு உரிய தல்லாத அடிமைத்‌ தன்மையும்‌,
ஏழில்‌ உபாயத்தில் துணிவும் பதினேழு திருவாய்‌ மொழிகளில்‌ பேற்றில்‌ பதற்றமும்‌ ஆகியமூன்று நிலைப்‌ பேச்சுகள்‌ அமைந்துள்ளன (ஸூ 134), இவை யாவும்‌ தோழி, தாய்‌, மகள்‌ பேச்சாய்‌ உள்ளன.

ஆழ்வார்‌ பாசுரங்களில் பல இடங்களில்‌ *தோழிமாரீ”என்றும்‌, *அன்னையா்‌* என்றும்‌ பன்மைக்‌ குறிப்புகள்‌ உள்ளன.
“தோழி” என்பது சம்பந்த ஞானத்தையும்‌, “தாய்‌! என்பது உபாயத்தில்‌ துணிவையுமாயின்‌, இவ்வாறு பன்மையாகக்‌ கூறுவது ஏன்‌ என்னும்‌ கேள்வி எழுவது இயல்பே,
ஆன்மாவோடு இறைவனுக்கு உள்ள சம்பந்தம்‌ ‘ரக்ஷகத்துவம்‌,-சேஷித்துவம்‌, காரணத்துவம்‌,சரீரத்துவம்‌” எனப் பல உண்டு.
ஆகையால்‌, அந்த அந்தச்‌ சம்பந்தகளின்‌ ஞானம்‌ குறித்த தன்மைக்‌ கேற்பத்‌ தோழியரும்‌ பலராயினர்‌.
உபாயமாக இருக்கின்றவனான இறைவனுடைய தன்மையும்‌ வாத்சல்யம்‌, ஸ்வாமித்துவம்‌, செளசல்யம்‌, செளலப்பியம்‌, ஞானம்‌, சக்தி, கிருபை முதலான பல, -அத்தன்மைகள்‌ பற்றித்‌ துணிவு வரும்‌.
அத்தன்மைகளின்‌ பன்மைக்கேற்பத்‌ தாய்மாரும்‌ பலராகப்‌ பேசப்படுவது பொருந்தமேயாகும்‌.

இதைப் போன்ற தலைமகளுடைய பருவங்கள்‌, பேதை பெதும்பை, மஙகை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்‌ பெண்‌” என ஏழு ஆம்‌.
பேற்றில்‌ பதற்றம்‌ கொள்ளும்‌ ஏழு நிலைமைகளை பத்தியின்‌ முதல்நில்‌ தொடங்க கடை நிலை முடியவுமுள்ள நிலை வகைகளின்‌ ஏழு பிரிவுகளை–அவ்‌வேழு பருவமாகக்‌ கொள்ளலாம்‌.
அவையாவன:
ஓரு பொருளைப்‌ பார்த்தவுடன்‌ பிறக்கும்‌ விருப்பம்‌(அபிலாஷை),
அப்‌ பொருளைப்பற்றிய சிந்தனை,
அது இடையராது நடைபெறுகின்ற தொடர்ந்த நிளைப்பு (அநுஸ்ம்ருதி),
அப்பொருளை எப்படியும்‌ பெற்று நுகர வேண்டுமென்கின்‌ற இச்சை,
வேறொன்றாலும்‌ மாற்ற முடியாதபடி முதிர்கின்ற:சுவை,
“அப்பொருளைப்‌ பெறின்‌ இன்பம்‌, பிரியின்‌ துன்பம்‌” என்கிற பரபக்தி ,
பிரிந்த அளவில்‌ உயிர்‌ பிரியும்‌ தன்மைய்தான பரமபத்தி என இவை ஏமு நிலைமைகளாம்‌ (ஸூ 136.)

அருளிச்செயலில்‌ தலைமகளின்‌ உடல்‌ . உறுப்புகளாக எடுத்துச்‌ சிறப்பித்துக்‌ கூறும்‌ ஒவ்வொன்றுக்கும்‌உட்கருத்து உண்டு. அவையாவன ;
1, கூந்தல்‌ பரப்பை ஆதாரமாகக்‌ கொண்டு பெண்களை மயில்‌ என்பர்‌.–இது ஞான மலர்ச்‌சியைச்‌ சொல்கின்றது.-
2..வெண்மையான ஒளியுடைமையால்‌ நெற்றியைப்‌ பிறை என்பர்‌.–இது பிறர்க்கு அடிமை யாகாமை: என்ற தூய்மையைக்‌ குறிக்கும்‌
3… வளைவை யுடைமையால்‌ புருவத்தை வில்‌ என்பர்‌.–இது அகமும்‌ புறமும்‌ ஆய கரணங்களை அடக்கி ஆளுதலாகிய தாந்தியைக் குறிக்கும்‌.
4, இலக்கை நோக்கச்‌ செல்லும்‌ தன்மையால்‌ கண்ணை அம்பு என்பர்‌,–இது தனக்காக வகுத்த இறைவனையே நோக்கும்‌ ஞானத்தைச்‌ சொல்வது.
5: ஆனந்தத்தைத்‌ தரும்‌ தன்மையால்‌ வெண் முறுவலை முத்து என்பர் ,(முத்‌” என்ற வடசொல்‌ *ஆனந்‌தம் ” என்ற பொருள்‌ தரும்‌) இது அப்பொருளை அநுபவித்தால்‌ உனதாகும்‌ ஆனந்தத்தைச்‌ சொல்லும்‌.
6–செத்றிறமுடைமையால்‌ இதழைப்‌ பவளம் என்பர் –இது அவளைப்‌ பற்றுதலில்‌ உண்‌டான அனு ராகத்‌தைச்‌ (ராகம்‌.ஆசை– சிவப்பு ) சொல்லும்‌.
7-நன்கு வளர்ந்த முலையைச்‌- செப்பு என்பர்‌.-இது தலைவனது. அநுபவத்திற்கு ஏற்ற பக்குவமான பக்தியைக்‌ காட்‌.டும்‌
8-நுண்மை உடைமையால்‌ இடையை மின்‌ என்பர்‌.–இது ஞான நிலைச் சிறப்புகளுக்‌கெல்‌லாம்‌ ஆதாரமான ஆன்மாவின்‌ அணுத்‌ தன்மையைக்‌ காட்‌டும்‌.
9-அழகிய அல்குலைத்‌ தேர்‌ என்பர்‌,-இது ஆன்மாவின்‌ இன்பத்தைக்‌ காட்டும்‌,
10-நடை அழகால்‌ அன்னம்‌ என்பர்‌.-இது யாவரும்‌. போற்றும்படி தன்‌னியல்புக்கு ஏற்ப நடக்கிற கதியைக் காட்டும்‌.

ஆக , ஞான மலர்ச்சி , தூய்மை முதலியவைகட்கு இருப்பிடமாய்‌ உள்ளே யிருக்கின்ற ஆன்ம சொரூபத்தின்‌ வகுப்பு இத்தகையது என்பதாம்‌.
ஆன்மா ஒன்றே தோழி, தாய்‌, மகள்‌ என்ற மூவர்‌ தன்மையிலும்‌ மூன்று நிலைகள்‌ அடைவதால்‌,
(பேற்றின்‌ பதற்றமாகச்‌ சொன்ன மகளின்‌ ஆன்ம சொரூபத்‌தைப்‌. பொருளாகக் கொண்டு இங்குப்‌ பேசப்‌ படுகின்றது–அது பொருத்தமேயாகும்‌.)

தோழி, தாய்‌, தலைமகள்‌ என்கிற மூன்று நிலைகளின்‌ செயல்‌ வேறுபாடு: ்‌
தாய்‌ தோழி மீது, “இவளைக்‌ கொண்டு போய்ச்‌ செய்த சூழ்ச்சியை யார்க்கு எடுத்துரைப்பேன்‌!* என்று பழி கூறுவது,.
தோழி தாய்மார் மேல்‌, அவளைத்‌ தொலை வில்லிமங்கலம்‌ அழைத்துக்‌ கொண்டு போனவர்கள்‌ நீங்களே!’ என்று பழி கூறுவது,
ஆக இப்படி ஒருவர்‌ மீது ஒருவர்‌ பழி கூறிக் கொள்வதும்‌?

“தோழிமார்‌ என்னை இணக்கி விளையாட அழைக்க நான்‌ போந்தேன் ”, என்றும்‌,
தாய்மார்‌ என்னை “அழைத்துக் கொண்டு போக நான்‌ போந்தேன் ” என்றும்‌,
இருவர் மேலும்‌ பழி உண்டு என்று தலைவி இசைந்து காட்டி மேலெழுத்திடுவதும்‌ ஆகிய இரண்டும்‌ .முதல்நிலை, -‘

“பலர்‌ காண வீட்டின்‌ முன்னின்றாய்‌!*? என்று தோழி. தலைமகளைக்‌ கடிவது;
*இவளை விட்டு விடுங்கள்‌” என்று தாய்‌மார்க்குக்‌ கூறுவது போலத் தலைமகளுக்குத்‌ துணை செய்வது
ஆக. இப்படி இ ருபடைகளுக்கும்‌ தன்னை அநுகூலமாககக்‌ கொள்வதும்‌?
*ஆரென்னை ஆராய்வார்‌”–என்ற பாசுரத்தால்‌ தாய்மார்‌ தோழிமார்‌. இருவகையரோடும்‌ தலைமகட்கு உடன்பாடு இருப்பதாகக்‌ காட்டப்படுவதும்‌? ஆகிய இரண்டும்‌ இரண்டாவது நிலை.

அவ் விருவகையரோடும்‌ தனக்கு ஒரு தொடர்புமில்லை என்று இரு வகையரையும்‌ தலைமகள்‌ உத.றிவிடுகையும்‌;
இவள்‌ என்றும்‌ அவன்‌ பெயரே கூறி நைந்து. இரங்கும்‌” என்று தலைவியின்‌ ஈடுபாட்டைத்‌ தோழி கொண்டாடுவதும்‌,.
“இவள்‌ திருக்கோளூர்க்கே. நடந்தாள் என்று திருத்தாயர்‌ கொண்டாடுவதும்‌ ஆகிற உதறுதலும்‌ கொண்டாடுதலும்‌. மூன்றாவது நிலை.

இதில்‌ *பழி, மேலெழுத்து” என்ற இரண்டாலும் சம்பந்த ஞானமும்‌ உபாயத்தில்‌ துணிவும்‌ ஆகிய இவை இரண்டும்‌,பேற்றில்‌ பதந்றத்திற்குக்‌ காரணமாக இருப்பது முதல் நிலை.

இருபடை மெய்க்காட்டு, உடன்பாடு என்ற இரண்டாலும்‌. சம்பந்த ஞானம்‌ மற்ற இரண்டிற்கும்‌ துணை புரிகிறது; பேற்றில் பதற்றத்துக்குக் காரணமான சம்பந்த ஞானமும் -உபாயத்‌தில் துணிவும்‌ இட வேறுபாட்டால்‌ அதற்கு உறவாக. அமைவது இடைநிலை.

உதறுதல்‌, கொண்டாட்டம்‌ என்கிற இரண்டாலும்‌ பேற்றில்‌ பதற்றமானது சம்பந்த ஞானத்தையும்‌ உபாயத்தில்‌ துணிவையும்‌ மீறுதலும்‌,
அங்கனம்‌ மீறுவது கொண்டாடத் தக்கதாதலும்‌ ஆகிய இது இறுதிநிலை.

இவ்வாறு சம்பந்தஞானம்‌, ‘ உபாயத்தில்‌ துணிவு, . பேற்றில்‌ பதற்றம்‌ ஆகிய மூன்று நிலைகளின்‌ செயல்‌ விசேடங்கள்‌ நடைபெறும்‌.

தாயாரான உபாயத் துணிவு நிலையில் ஏதிலராகச் சொல்வது சித்தோபாய நிலைக்குப்‌ பகையான சாத்ய உபாய: நிலையினரை
உறவாகச் சொல்லுவது அநுகூலரான சித்த உபாய நிலையினரை.

தலைமகளான பேற்றின்‌ பதற்றமாகிற திலையில்‌ நெருங்கிய பகைவராகச்‌ சொல்லுவது; இறைவனையே உபாயமாகப் பற்றி நின்று பின்னும்‌ பதறுதல்‌’
பாரதந்தரிய நிலைக்குச்‌ சேராது என விலக்கும்‌ சித்த சாதன பரரை.
“என்‌ துணையான தோழிமார்‌” என்று தன்‌ துணையா”கச்‌ சொல்லுவது தன்னைப் போலே அவனுடைய உபேயத் தன்மையில்‌ உடன்பட்டிருக்கும்‌ சாத்திய பரரை. .

நாணி இனியோர்‌ கருமமில்லை நாலயலாரும்‌ அறிந்‌ தொழித்தார்‌” (நர. தி, 12-:2) என்கிற பாட்டில் நாலயலார்‌..என்பது, “கருமம்‌, ஞானம்‌, பத்தி, பிரபத்தி ” ஆகிய நான்கு உபாயங்களிலும்‌ ஊன்றி நிந்பவர்களை யாகும்‌.

“அயற்சேரி மீர்காள்‌?. (7-3-2) என்பது, : அர்ச்சாவ தரத்தில்‌ ஈடுபாடின்றி வேறான அந்தர்யாமித்வத்‌ தன்மைஇல்‌ ஊன்றி யிருப்பவர்களையாகும்‌.

‘கீழையது மேலையது வடக்கிலது* என்று குறிக்கப்படும்‌ “கருமம்‌, ஞானம்‌, பத்தி? என்கிற வேறு உபயன்களானவை உபாயஙநிகளரனவை

சித்த சாதந பரர்க்கு- இறைவனையே உபாயம்‌ என்று கொள்பவர்க்குப்‌ புறப்புறமாம்‌: அதாவது புறப் பகைகளாம்‌.
பிரயத்தியும்‌ புறம்‌ (அயல் ) எனப்பட்டது முன்னர் . பிரபத்தி நெறியில்‌, தான்‌ அவனைப்‌ பற்றுதலும்‌ அவன்‌ தன்னைப்‌ பற்றிக்‌”கொள்ளுதலும்‌ என்னும்‌ இருநிலை்‌ உண்டு,
அவற்றில் அவனைப்‌ பற்றிக் கொள்ளுதலாகிற தன்பற்று, “அகப்புறம்‌ அல்லது “உட்பகை” ஆகும்‌ என்பதாம்‌. ்‌

“ஊரார்‌” என்பது ஆன்ம அநுபவம்‌ . விரும்பும் கேவலரை,.
“நாட்டார்‌” என்பது இவ்வுலகச்‌ செல்வங்களை விரும்‌புபவர்களை.
உலகர்‌” என்பது ஸ்வர்க்கம்‌ முதலான மேலுலகச்‌(செல்வங்களை விரும்புகின்ற தன் முனைப்புள்ளவர்களை,
“இறுகவிறப்பு” என்பது குவிந்த நிலைமையதாயிருக்றை மோட்சமாகும்‌. இதனை அனுபவிக்கும்போதும்‌ இந்தப்‌ பிரகிருதி மண்டலத்திற்கு அப்பாலான பரமாகாசத்திலே யிருந்து அநுபவிக்க வேண்டும்‌.-ஆகையால்‌,. இதுவும்‌ இறந்தால்‌ போய் வாழும்‌ தேசத்தை ஒக்கும்‌. எனவே, இதனைத்‌ *தனிஊர்‌” என்றார்‌ மேல்‌,

*சிறுசுளகு” என்பது, பெரு மணலையும்‌ நுண்மணலையும்‌ பிரித்தெடுக்கும்‌ கருவி.
எனவே, இது உடல்‌ ஆன்மா ஆய இரண்டையும்‌ பகுத்தறிதற்குத்‌ துணையான .அளவையைக்‌ குறிக்கும்‌.

“சீரார்‌ சுளகு” என்பது, நெல்லையும்‌ மணலையும்‌ பிரித்‌தெடுப்பது இது ஆன்மா வேறு; பரமாத்மா வேறு. என்று பருத்தறிவதற்குத் துணையான அளவை.
மற்றைத்‌ தெய்வங்‌களும்‌ ஆன்மாக்கள்‌ பிரிவில்‌ அடங்குவனவே

மாலை: பொருள்கள்‌ தெளிறவு அறிந்து கொள்ள இயலாது மயங்கும்படி செய்யும்‌ காலம்‌; இது பொருள்களைத்‌ தெளிவுறத்‌ தெரிந்து கொள்ளற்‌கியலாததான ராஜஸ ஞானத்தைக்‌ குறிக்கும்‌.

கங்குல்‌: ஒன்றும்‌ தோன்றாதபடியும்‌ மாறுபாடாகத்‌ தோன்றும்‌ படியும்‌ உள்ள காலம்‌.
பொருளை அறிவியாதது மட்டுமின்றி, மாறுபாடாகக்‌ கொள்ளுதற்கும்‌ உறுப்பான தாமத ஞானத்தை இது காட்டும்‌.
காலை: பொருள்களை உள்ளவாறு தோற்றமளிக்கச்‌ செய்யும்‌ காலம்‌. அதனால்‌, பொருள்களை உள்ளவாறு அறிவதற்குறுப்பான சாத்துவிக ஞான்த்தை இது குறிக்கும்‌.

பகல்‌: ஐயம் திரிபுகட்கு இடமின்றிப்‌ பொருள்களைத்‌ “தெளிவுற விளக்‌கிக்‌ காட்டும்‌ காலம்‌.
இறைவனைக்‌ தெளிவாக அறிதற்குறுப்பான சுத்த சத்துவ ஞானம்‌ இவ்வாறு கூறப்‌படும்‌.

நிலா முற்றம்‌: மாடத்தின்‌ உயரத்தில்‌ ஏறி எல்லாவற்‌றையும்‌ காணுதற்கு உறுப்பான இடம்‌.
இறைவன்‌ தொடர்‌புடைய கண்ணபுரத்தையும்‌ பிறர்‌ காணுதற்கு அமைந்தது இது- எல்லை நிலமான புருஷார்த்த ஞானத்தைக்‌ குறிக்கும்‌.

கலை, வளை: இறைவனை அனுபவிப்பதற்குப்‌ பகையான யான்‌, எனது” என்னும்‌ செருக்குகள்‌;-இவ்விரண்டையும்‌ களைந்த நிலைமையில் தான்‌ அவன்‌ அனுபவம்‌ கிட்டுகின்றது.
சில இடங்களில்‌ “வளைபூரிப்ப அவனைக்‌ காணுதல்‌” என்று வரும்‌.
அவ்விடங்களில்‌ “நான்‌ அவனுக்கு அடிமை”; *என்னுடைய திருவரங்கர்‌? என “வரும்‌ “நான்‌, எனது”என்பவைகளைச்‌ சொல்லுவதாகக்‌ கொள்ள வேண்டும்‌. இவை விடத்தக்கன வல்ல.

பட்டம்‌, சூடகம்‌:. “பட்டம்‌” என்பது, முதலில்‌ ஆன்மாவினை அங்கீ கரித்த ஆசாரியன்‌ உண்டாக்கும்‌ பெயர்‌, வடிவம்‌, இறைவழிபாடு முதலான ஆன்ம அலங்காரங்கள்‌;
“சூடகம்‌” என்பது பின்னர்‌ ஆசாரியனுடைய பெருமையை உணர்த்தி, அவ்விறைவன்‌ உண்டாக்கும்‌ ஆன்மா இறைவனுக்கு அடிமை என்ற அறிவு முதலான ஆன்ம அலங்காரங்கள்‌.

பந்து, சிற்றில்‌: பந்து நூலாற்‌ கட்டப்பட்டு விளையாட்டுக்‌ கருவியாவது;– விழுதல்‌ எழுதல்‌ முதலிய இயற்புகளை யுடையது அதே போன்று, முக் குணங்களடியாக வரும்‌ வினையால்‌ அமைந்த உடல்‌ இறைவன்‌ விளையாட்டுக்கு உறுப்‌பாவது
கருமத்திற்கு ஏற்ப மேலுலகம்‌ கீழுலகம்‌ போவது மீளுவது ஆகும்படி, இறைவன்‌ தன்‌ நினைவால்‌ தூண்டத்‌ தாழ விழுதல்‌, உயரப்போதல்‌,
சக்கரத்தின்‌ சுழலுதல் போலச்‌ சுழலுகல்‌, போனதில்‌ மீண்டும்‌ போய்‌ வந்து உழலூதல்‌ செய்கின்ற ஆன்மாவோடு உண்டான தொடர்பாலே விழுதல்‌ எழுதல்‌ முதலிய இயல்புகளோடு கூடியது.
“சிற்றில்‌” என்பதும்‌ இன்பத்‌திற்குரிய இடத்தைக்‌ குறிக்கும்‌.

கழல்‌, தூதை, கழல்‌ ஐந்தாக இருந்து இன்ப விளையாட்‌ டுக்கு உறுப்பாவது. இஃது இன்ப அனுபவத்திற்குரிய ஐந்து பொறிகளைக்‌ குறிக்கும்‌.
*தூதை” சோறிடுவதற்கேற்ற கருவி. இது இந்திரியங்களின்‌ வேறான மற்ற இன்பக்‌ கருவிகளைக்‌ குறிக்கின்ற ஒன்று.
பாவை, குழமணன்‌ — இவை விளையாட்டுக்‌ கருவி வகைகள்‌.
யாழ்‌, பென்றல்‌, மதியம்‌, அடிசில் சாந்தம் இவை ஐந்தும்‌ முறையே ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்‌ -என்ற ஐம்புல இன்பப்‌ பொருள்‌ களைக்‌ குறிக்கும்‌.

பூண்‌, அகில்‌ — இவையிரண்டும்‌ மேலே குறித்த வற்றிலேயே “ஒளி, நாற்றம்‌ என்ற இருவகை இன்பப்‌ பொருள்‌ பற்றிய பிரிவினவாம்‌.

‘இவ் வின்ப நுகர்ச்சிக்குரிய பொருள்களும்‌, இன்பத்திற்குக்‌ ௧ருவிவியான பொருள்களும்‌, விளையாட்டுக்‌ கருவியான பொருள்‌களும்‌ யாவும்‌
இறைவன்‌ தன்னுடைய போகத்திற்கு விரோதிகளென்று விடுவித்தால்‌ விடுபட்டும்‌, சுவை குறைந்தனவாயும்‌,
‘இறைவனிடத்தினின்றும்‌ அகற்றுபவைகளாயும்‌, தன்‌ தொடர்பு சேர்த்துப்‌ பார்க்கும் போது விடத்தக்கனவாயும்‌,
இறைவனோடு தொடர்பு படுத்தி நோக்கும்போது கொள்ளத்‌ தக்கனவாயும்‌, அவனுறவின்போது அநு௩லங்களாயும்‌
அவனின்றிக்‌ காணும்போது துன்பம்‌ விளைவிப்பனவாயும்‌ ‘சொல்லப்படுதல்‌ அருளிச்‌ செயலிலும்‌ காணலாம்‌.

இறைவன் பால்‌ தூது விடப்படும்‌ பறவைகளுக்கு உள்ளுறை:

ஆன்மாவை இறைவனோடு சேர்க்கின்றவர்களான குரு முதலானவர்களையே பறவைகள்‌ என்று கூறுவர்‌.
விரைவில்‌ அவனை அடைவதற்கு ஞானமும்‌ அனுட்டானமும்‌ (ஒழுக்‌கமும்‌) வேண்டும்‌.
அவையே *சிறகுகள்‌” என்று சொல்லப்‌ படுகின்றன. சேர்ப்பவர்கள்‌ குருக்கள்‌, பிரமசாரிகள்‌, புத்திரர்கள்‌, சீடர்கள்‌ என்ற நான்கு நிலைகளில்‌ வைத்துப்‌ பேசப்‌ படுவார்கள்‌.

பறவைகளுள்‌ அன்னமாகப்‌ பேசப்படுபவர்கள்‌ ‘இன்னார்‌ இன்னார்‌ என்று கூறுகையில்‌ கீழ்க் காணும்‌ பொதுத்‌ தன்மைகளை அறியலாம்‌.

அன்னத்தின்‌ செயல்‌ உள்ளுலறயான ஆசாரியன்‌ செயல்‌
1-பாலும்‌ நீரும்‌ பகுத்தறியும் — சாரமள்ளதும்‌ சாரமில்லாததும்‌ அறிவர்‌.
2. இறைவன்‌ அன்னமாய்‌ “அற நூலுரைத்தான்‌–கேட்பவர்கட்கு நூல்களை உரைப்பர்‌.
3–சேற்று நிலத்தில்‌ பொருந்தாது.-வன் சேற்று அள்ளல் என்கிற இவ்வுலக வாழ்வில் பொருந்தார்
4-மகளிர்‌ பின்பற்றி அவ்வாறே நடக்குமென்று கூறுவர் –அன்னம் போன்ற நடையை யுடைய பிராட்டியின்‌ *வேறு பிறர்‌க்‌குரிய தல்லாத அடிமைத் தன்மை” முதலானவும்‌
புருஷ்காரமாதலும்‌ ஆகிய ஒழுக்கத்தைப்‌ பின்பற்றுவர்‌
5–தாமரையிலை குடையாகவம்‌, பழுத்த செந்‌நெற் பயிரின்‌ அசைவு கவரியாகவும்‌, சங்கின்‌ முழக்கம்‌ வெற்றிப்‌ பெருமுழக்கமாகவும்‌,
வண்டுகளின்‌ இன்னிசை பாட்டாகவும்‌ கொண்டு மானச சரசிலுள்ளதாமரையை இருப்பிடமாகக்‌ கொண்டிருக்‌கும்‌ அன்னம்‌.
தாமரை இலை போன்ற இறைவன்‌ திருமேனியை, உலகத்‌ துன்பங்களாய சூரியஒளி தம்‌மைத்‌ தாக்காதபடி நிழலாகஉடையர்‌
பக்குவமான ஞானியரால்‌ பணி செய்யப் படுவர்‌: தூய பெரியோர்‌களால்‌ போற்றப்படுவர்‌.-எப்போதும்‌ ஆசாரியனின்‌ இணைத் தாமரை யடிகளை
நெஞ்‌சிற்‌ கொள்ளும்‌ சீடர்களின்‌ உள்ளத் தாமரையைத்‌ தங்கள்‌ இருப்பிடமாகக்‌ கொள்ளு,வர்‌.
6-விதிப்படி மணந்து இடரில்லாமலும்‌ அந்‌தரம்‌ சிறிதுமின்‌றியும்‌ மிக இன்பம்‌ பொருந்த ருடிச்சீர்மையுடன் இருப்பன அன்னங்கள்
ஸாஸ்த்ர முறைப்படி. இல்லறத்தில்‌ இருந்து, உலகியல்‌ தீமைகள்‌ தட்டாதபடியும்‌, சிறிதும்‌ இடையீடு இன்றி
மேலும்‌ மேலும்‌ இன்பம்‌ பெருகும்படியும்‌ மனைவி மக்களுடன்‌ அமர்ந்து பகவத்‌ அநுபவம்‌ செய்வர்‌.

இல்வாறு இருப்பவர்‌ செல்வ நம்‌பி, பெரியாழ்வார்‌, முற்றத்‌ துறந்த துறவிகள்‌ போன்ற நாதமுனி, ஆளவந்தார்‌ முதலான வர்கள்
அன்னோர்பால்‌ இத்தகைய குண வொற்றுமை உள்ளமையால்‌, இது மிகப்‌ பொருத்தமேயாம்‌.

வண்டு, தும்பி
1-இவை : மலரில்‌ சென்று தேனுண்ணும்‌; பிற இடத்‌தும்‌ செல்லும்‌.–தமக்கு என்று ஏற்படாத பொருள்களை இன்பமென்று மருளார்‌ (இது வேற்றுமைர்‌
2-தேன்‌ தவிர மற்றொன்றை விரும்பாமையாலே **மதுவிரதம்‌” என்றும்‌ பெயர்‌ பெறும்‌.
உளங்கனிந்த அடியவர்‌உள்ளத்துள்‌ ஊறிய தேனான இறைவனை அநுபவிப்பதையே விரதமாகக்‌ கொண்டவர்‌.
3-தூய தேனுண்ட வாய்‌ கொண்டது.–இறை இன்ப அந;பவத்‌தால்‌ தூய இனிதான வாய்‌ மொழி பேசுவர்‌.
4-கூந்தலில்‌ வைத்த வ்குள மலரின்‌ சாரத்தை உண்‌ணும்‌.
வருளமாலை தரித்த ஆழ்வாரின்‌ பாடல்களாகிய சாரத்‌தை ஏற்று, அதன்‌ வழியாக இன்பம்‌ அநுபவிப்பர்‌.
5-தேனுண்டு தேதென என்று இசை பாடும்‌; சுழலும்‌.
இறையின்பம்‌ ..அடிவயர்‌ இன்பம்‌ இலற்றை நுகர்ந்த செருக்குக்குப்‌ போக்கு வீடாக அளத்தி வைப்பர்‌.
(யாழினிசை வேதத்தியலை வாயாரச்‌ சொல்லிக்‌ 6-கொண்டிருப்பர்‌ என்பர்‌ பெரியோர்‌ சிலர்‌.)
6-காலத்திற்கேற்ற பண்களை அல்லும்‌ பகலும்‌ இறைவன்‌ இவை பாடும்‌.
அல்லும் பகலும் இறைவனின் குணங்களில் ஈடுபட்டவராய்ப் பல பண்களைத் தலைமை பெறும்படி பண்ணுவர்
7-மிகவும்‌ நெருக்கமுடையதும்‌ புக முடியாததுமான இடங்‌களிலும்‌ வண்டுகள்‌ தடையின்றிச்‌ சென்று புகும்‌.
பிற தேவர்களும்‌ புகுதற்‌கரிய பலர்‌ நெருக்கிக்‌ கொண்டுள்ள இடங்களிலும்‌ “கதவைத் திற* என்று வேண்டிக்கொண்டு எளிதில்‌ உரிமையோடு புகுவர்‌
8-தன்னை ஒத்த கருநிறக்‌ கூந்தலிலே வண்டு சென்று சங்‌கையின்றிப்‌ படியும்‌.
இறைவன்‌ பக்கலிலும்‌ அடியவர்‌ புக்சலிலும்‌ கூச்௪ மின்றிச்‌ சென்று நிற்பர்‌
9-தூது விட்ட தலைவியின்‌ ஆசையையும்‌ வேட்கையை யும்‌ அவனுக்கு அறிவித்து, அவனுக்கு முன்னம்‌ அவன்‌ வரவை அறிவிக்க விரைந்து . வந்து; தம்‌ வரவால்‌ இவள்‌ பால்‌, பிறந்த செவ்வியை நுகர்ந்து, அங்குத்‌ தாம்‌ நுகர்ந்த இன்பத்தை இவஞக்கு வெளியிட்டு ஆறுதல் அளிக்கும்‌…
அதே செயலை ஆசார்யர்‌களும்‌ செய்வார்கள்‌
10-கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் என்கிற படியே அவன் வந்து சாட்சியாக வந்ததாகப் பேசப்படும்
சாரத்தை அறிபவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களை முன்னிட்டு இறைவன் உயிர்களை ஏற்றுக் கொள்வான்

இறைவன் தெய்வ வண்டு (9-9-1)-என்று பேசப்பெறுவன்
அவனை அடையச் செய்பவர்களான இறைவன் குணங்களை அனுபவித்த ஆனந்தத்தால் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கும்
நாரதர் -முனி வாஹனரான திருப்பாண் ஆழ்வார் -இன்னிசை பாடும் போல்வாரை -வண்டுகள் தும்பிகள் என்பர் -அரையர்கள்

————-

கிளி பூவை
1-கிளிகள் வலையில் அகப்படும்
மாதரார் கண்ணாகிய வலையுள் அகப்படாது இறைவனின் தாமரைக் கண்களின் அகவலையில் அகப்படுவர்
2- வளர்ப்பவர் கையில் அமரும்
விருப்பத்தோடு வளர்க்கும் ஆச்சார்யருக்கு அன்பார் ஆவர்
3-வளர்ப்பவர் ஊட்டும் பால் தயிர் நெய் அமுது உண்ணும்
காலம் தகுதிக்கு ஏற்ப தாரக போஷக போக்யங்களாக ஆச்சார்யர்கள் அனுபவிக்கும் பொருள் சிறப்புக்களை பகவத் குணாதிகளை அனுபவிப்பர்

4-சொல்லியதையே சொல்‌லும்‌ கிளிப்‌ பிள்ளைகள்‌.
ஆச்சார்யர்களாகிய முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் தாமும் பேசும் தன்மையர் இவர்கள்
5. “போற்றி இரந்தேன்‌”(6-1-6) என்பது போன்று அன்பு தோன்றச்‌ சொன்ன நிலையிலும்‌, சிறிது வருத்தந்‌ தோற்ற உரைத்த நிலையிலும்‌,
உன்னைத்‌ துரப்பன்‌ அவன்‌ வரக்‌ கூவாயேல்‌” என்று கண்டிக்துச் சொன்ன நிலையிலும்‌ உகந்திருப்பது கிளியின இயல்பு.
ஆச்சார்யன் ஆதரவாகப் பேசிய நிலையிலும் இன்னாதாகப் பேசிய நிலையிலும் வெஞ்சொல் கூறிய
ஆச்சார்யன் செய்த செயல் எதுவாயினும் ஏற்றுக் கொள்ளத்தக்கது என்று உகப்பர்
6-“திரு நாமத்தைச்‌ சொல்‌? என்று தன்‌ கிளிக்குச்‌ சொல்‌லத்‌ தொடங்‌கி , அது இயலாது போசவே, “முன்‌ கற்‌பித்த நாமத்தைச்‌ சொல்‌”என்ன,
அது அதனைப் பாடக்‌ கேட்டுவளர்க்ததனால் பயன்‌ “பெற்றேன்‌” என்று கிளியை வணங்கினாள்‌ என வருகின்‌றது
ஆசாரியர்களும் கை கூப்பி வணங்கும்படி சீடர்களான இவர்கள் பாட வல்லவர்

3. மயில்கள்‌. ஆலுதலும்‌ ்‌ அழைத்தலும்‌ செய்யும்‌
அரங்கா? என்று ஆலித்தலும்‌ செய்வர்‌.
8. குயில்‌ வேறொன்றின்‌ கூட்டிலே ஒதுங்கி வளரும்‌
தேவு மற்றறியேன்‌. என்று ஆசாரியன்‌ ஈடுபாட்‌,டிலும்‌ அடியவர்‌ அன்பிலும்‌ ஒதுங்கி வளர்பவர்‌.

இத்தகைய இயல்புடையவரான தென்குருகூர்‌ நம்பிக்கு .அன்ப்ரான மதுர கவிகள்‌, தொண்டரடிப்‌ பொடியார்‌,
உடையவருக்கு உரிமைப்‌ பட்டவரான கூரத்தாழ்வான்‌,
ஆண்டான்‌, எம்பார்‌, அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌ போன்றோரைக்‌
கிளி பூவை மயில்‌ குயில்‌ என்று சொல்‌லுதலுண்டு.

————

நாரை கொக்கு
1-குற்றமற்ற வெள்ளைத் தூவிகளை உடையது குருகு
உள்ளும் புறமும் ஒத்த தூய்மை யுடையவர்
2-அலைகளுக்குச் சலியாத இயல்புடையன நாரைகள்
இறைவன் பால் ஒன்றிய உள்ளத்தால் பிறவியாம் கடல் அலைகளுக்கு இடையாதவர்
3-தன் வாயால் இரை எடுத்து உண்பிக்க உண்ணும் தன் பிள்ளைக்கு வாயுக்கு அடங்கும் இரை தேடியிடும் கொக்கு
சீடர்களின் தகுதிக்கு ஒத்ததாக இறையவனைப் பற்றிய வற்றை ஸாஸ்த்ரங்களிலே தேடி ஆராய்ந்து உதவுவர்

4-நாள் தோறும் பூம் கழிகளில் தம் இனத்தோடு போய் மேய்வனே குரு கினங்கள்
எப்பொழுதும் கால ஷேபம் செய்யும் இடங்களுக்கு தாங்களே சென்று தங்களை பிரிய இயலாத சீடர்களுடன் கூட இறைவன் குணங்களை அனுபவிப்பர்

5-தாரைகளே நும் கால்களை நுமரோடே சேர்ந்து என் மீது வையுங்கோள் என்றும்
கைம்மாறாகப் பைங்கானம் ஈது எல்லாம் உமக்கேயாகத் தருவன் என்றும் பேசப் பெறுதல் உண்டு
சீடர்களால் நன்றி உணர்வால் தலை மீதும் தோள்கள் மீதும் தாங்கிக் கொள்ளப் பெறுவர்
உடல் பொருள் ஆவி முதலான யாவற்றையும் அவர்கள் அன்புடன் கொடுக்க ஏற்றுக் கொள்வார்கள்

நல்ல பதத்து மனை வாழ்வையும் இன்பம் தரு செல்வத்தையும் அரசாட்சியும் வேண்டேன் என்று அரங்கன் அடியிணை தங்கும்
தனிப்பித்தரான குலசேகரர் –ஆச்சார்ய நிலையரான நம் முதலிகள் போல்வாரை இக்குண ஒப்புமையாலே நாரை கொக்கு என்று சொல்லுதலும் உண்டு

——–

தூது அனுப்பப்படும் மேகம் என்பதை யாரை
முதல் ஆழ்வார்கள் திருமங்கை மன்னன் எம்பெருமானார் போல்வாரையாம்
ஒப்புமைகள் ஆவன

(1)மேகம் பொழிதற்கு ஏற்ற காலங்களில் கடலில் புகுந்து நீரைப் பருகும்
நாள் தோறும் திருமால் கண் வளர்கின்ற கடலில் புகுந்து திருமகள் கேள்வனான அவனது குணக்கடலைத் தம் மனத்திலே கொள்வர்

(2)மேகம்‌ திருமாலின்‌ திருமேனியை ஒக்கும்‌ நிறத்தது.
கார்வண்ணனான இறைவனை உள்ளத்‌துக்‌ கொண்டிருத்தலால்‌ அவன்‌ நிறமே: நிழலிட்டுத்‌ தோன்‌றும்படி நிறத்தில்‌: அவனோடு ஓப்புடையர்‌.

(3)மேகம் மழை பொழிந்து உயிர்‌களைக்‌ காத்தற்‌காக விண் எங்கும் உலவித் திரியும் :
உலகில் பிறந்த உயிர்களைக் காப்பதன் பொருட்டும்‌ நல்வழி” காட்டுவ ற்காகவும்‌ எங்கும்‌ சுற்றித்‌ திரிவார்‌.

(4)மழையாலே குளங்களை நிறைக்கும்
ஞானமாகிற மடுவைத்‌ தாங்கள்‌ பொழிகின் இறைக்‌ “குணங்களாகின்ற: நீராலே நிறைப்பர்‌.

(5)தீங்கின்றி நாடு எல்லாம் வாழ மழை பொழிந்து முத்துக்களாகிய நிதியைச் சொரியும்
கேடு சிறிதும்‌ பற்றாது: அனைவரும்‌ வாழும்‌படி இறை குணமாகிய மணிகளைப் பொழிவர் .

(6) தான்‌ பொழிந்ததை நினையாது இன்னமும்‌ மிகுதியாகச்‌ செய்ய இயலவில்லையே என்று மேகம்‌ நாணமுறும்
எக்காலமும்‌ பொருட்‌ சிறப்புகளை எடுத்‌துரைைத்தாலும்‌ அதை நினையாது இன்னும்‌ உதவ இயலவில்லையே என்று நாணமுறுவர்‌,

(7). உதவாத போது உடம்பு உபதேசம்‌ செய்யாத வெளுத்து ஓளிந்து கொள்ளும்‌.
உபதேசம் செய்யாத காலத்து உடம்பு வெளுத்து வெளித்‌ தோன்ற மாட்டார்‌கன்‌.

(8) தனக்சென்று காரியம்‌ செய்‌யாது பிறர்‌ நலம்‌ கண்டு உவந்து அந்த வளமையைப்‌ பெரும்‌ பேறாகக்‌ கொள்ளும்‌.
உதவும்போது பெறுபவர்‌ மலர்ச்சி கண்டு உவக்கும்‌ இன்ப உள்ளத்த்னர்‌.

“இவ்வாறான குண ஒற்றுமையால்‌ அன்பு கூருமடியவரான முதலாழ்வார்‌,
உருவின வாளை உறையிலிடாது இறைவனது பரத்துவத்தை வலியுறுத்தும்‌ திருமழிசைப்‌ பிரான்‌,
மேகம்‌ ஒத்து அருள் புரியும்‌ திருமங்கை மன்னன்‌, குணந்திகழ்‌ கொண்டலான எம்பெருமானார்‌ போல்வாரை மேகம்‌ என்று சொல்லுவர்‌.

————

பகுதி : இரண்டு திருவாய்‌ மொழியில்‌ காணும்‌: தத்துவக்‌ கருத்துக்கள்‌

1.. இறைவன்‌ குணங்கள்‌:

திருவாய்‌ மொழியின்‌ ஒவ்வொரு பத்திலும்‌ ஒல்வொரு குணம்‌ சிறப்பாக எடுத்துரைக்கப்‌ பட்டுள்ளது.
முதல்பத்தில்‌ பரத்துவம்‌ கூறப்பட்டுள்ளது. : இறைவன்‌ எல்லாவற்றையும்‌ விடே மேலானவன்‌ என்பது பொருள்‌.
அந்த மேன்மை வெளிப்படும்படி சித்து, அசித்து என்னும்‌ இரண்டிற்கும்‌ மூன்று விதக்‌ காரணமாய்‌. அவன்‌ உளன்‌ எனினும்‌, எல்லாப் பொருள்களிலும்‌ பரவி நின்று, அவற்றின்‌ குறைபாடுகள்‌ தன்னைப்‌ பாதிக்காதபடி. இருப்பவன்‌.
அவனது பரவும்‌ தன்மை: ஆகாயம்‌ போன்று அல்லாமல்‌, அக்குணம்‌ : நிறம்‌ பெறும்படியாக அவன்‌ இரண்டு உலகிலும்‌ தன்‌ கட்டளைப்‌ படி யாவும்‌ நடக்கும்படி. செய்யும்‌ ஈசன்‌:
இவ்‌:வேற்றத்தைக்‌ கண்டு யாவும்‌ அஞ்சி விலகாதவாறு யாரிடமும்‌ மிக்க கருணையுடையவன்‌.(பரம காருணிகன்‌)
அதனால்‌, யாவரும்‌ தன்னைச்‌ சரணடையும்படி. நிற்கும்‌: தன்மையன்‌; தன்‌ அருளாற்‌ செய்யும்‌ உபாயத்தை எத்தகையவர்க்கும்‌ தன்‌ பகைவர்க்குங்‌ கூட ஆக்கவல்ல சர்வ சத்தி யோடு கூடியவன்‌ (வரம்பிலாற்றலுடையவன்‌);
அந்தச்‌ சத்தியாலே நிலையானதாகக்‌ கற்பித்துக்‌ கொள்ளப்பட்ட பத்தினி, பரிஜனம்‌ முதலானவைகளை உடையனாகையால்‌ அவன்‌ சத்தியகாமன்‌.
இன்பத்திலேயே ஈடுபட்டிருந்து விடாது, உலகைப்‌ பிரளயம்‌ முதலிய ஆபத்துகளில்‌, ‘ ஒன்றையும்‌ எதிர்பாராது உதவிக்‌ காப்பவன்‌.
ஆபத்துக்குக்‌ துணையான:வனாதலால்‌, அதற்கேற்றவாறு தான்‌ மேற்கொள்ளும்‌ விக்கிரகங்‌களுக்கெல்லாம்‌ மூலமானவனாய்‌, ஓப்பற்ற விக்ரக வடிவமாய்த்‌ : “தோன்றி அடியவர்களின்‌ துன்‌பத்தைப்‌ போக்கும்‌ இயல்பினன்‌:
இவை முறையே பத்துப்‌” பதிகத்திலும் கூறப்படும்‌ முக்‌யக்‌ குணங்களாம்‌.

மற்றும்‌ பல இயல்புகளும்‌ ஆங்காங்கே சொல்லப்படும்‌. அவை:
(1 )பல அவதாரங்கள்‌ எடுத்து வெளிவரும்‌ இயல்பினன்‌;-பிழைகளைப்‌ பொறுக்கும்‌ தன்மையன்‌–தகுதி யில்லை என்று யாரையும்‌ விட்டுவிடாது எல்லாருடனும்‌ கலக்கும்‌ சீல குணத்‌தினன்
அடியவர்‌ எது தரினும்‌ ஏற்றுக்‌ கொள்ளும்‌ நிறையுடையவன்‌; பிறவி அறுக்கும்‌ இனிய மருந்தானவன்‌; நீர்புரை வண்‌ணன்‌?
(உயிர்கட்கு ஏற்பத் தன்னை அமைத்துக்‌ கொள்‌ளும் இயல்பினன்‌]. தன்‌ இன்பத் ஏற்கத்‌ தக்க அளவு சிறிது சிறிதாகக்‌ தருபவன்‌;
பரமபத்திக்கும்‌ பரிகணனைக்கும்‌ ஓக்க முகம்‌ காட்டுபவன்‌.

——————-

(2). எல்லாப்‌ பலன்களையும்‌ அளிக்க வல்லவன்‌; உலகுகள்‌ தெய்வங்கள்‌ யாவற்றிற்கும்‌ எல்லா வகையான காரணமும்‌ ஆனவன்‌?
ஆழியில்‌ உள்ள அனந்தனில்‌ அறிதுயில்‌ புரிபவன்‌?திருமகள்‌ கேள்வனாம்‌ தன்மையன்‌.
எல்லாவற்றிற்கும்‌ ஆன்மாவாய்‌ உள்ளவன்‌; செய்ய தாமரைக்‌ கண்ணன்‌; அமரர்குலமுதல்‌;
நெஞ்சினால்‌ நினைப்பவர்க்கு நினைத்தவாறே வத்து தோன்றும்‌ அர்ச்சாவதாரமாய்‌ :இருப்பவன்‌
பிறர்க்கு உதவுவதற்காகவே வழியைத்‌ தருவதற்காகவே–என்றும்‌ நின்று கொண்டிருப்பவன்‌.

(4). திருவிக்ரமன் -குறட்கோலப்‌ பிரான்‌; மூன்றடி. மண்ணை இரந்த கள்வன்‌. திருவேங்கடத்தில்‌ நிற்பவன்‌
*அகலகில்லேன்‌!” என்று அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌.
அகற்ற மாய வல்லைம்புலன்‌ ஈந்தவன்‌
நலிவான்‌ சுமடு தந்தவன்‌; தன்‌ மகிழ்ச்சிக்காக விரும்பி ஆழ்வாரை இவ்வுலகில்‌ வைத்தவன்‌. ..

(6) ஆத்ம லாபத்தால்‌ அதீவ விளங்கிப்‌ பணைத்தவன்‌-சீதள குணங்களால்‌ பிரீதி வளர்ந்து தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து ஆழ்வாரை இன்புறுத்தியவன்‌.

(7)அமுதம் அளித்தவன் -தயரதன் பெற்றவன் -கோவலன் -வான் ஏறும் கதிக்கு நிழல் தடங்கள் ஆக்கியவன் -வழித்துணை ஆனவன்
விண்ணுலகம் தர விரைபவன் -ஆக்கையில் சபலன் -வானே தரக் கருத்தின் கண் பெரியவன் -தனி நின்ற சுதந்திரன்
உயிர் உறவுடையவன் கடல் போன்ற ஆதாரத்தோடு வந்து பேரவா குளப்படியாம்படி தாபங்களை எரிக்கும் இயல்பினன்

—————-

2-ஆழ்வார் பெற்ற நிலை

(1)-இறைவன் இவருக்கு மயர்வற மதி நலம் –அஞ்ஞானத்தைப் போக்கி பக்தி ரூபமாக உருவெடுத்த ஞானம் -அருளி
இவர் திரு உள்ளத்திலே புகுந்து -இவர் பண்ணிய பாபங்களான வினைகளை போக்கி தன்னை எப்போதும் மறவாதபடி பண்ணி அருளி
இவர் திரு உள்ளத்திலே நிலையாய் இருந்தான் -அதனால் இவர் தூய அழுத்தமான அவனைப் பருகிப் பருகி தத்வ ஞானத்தை -இறைவனிப் பற்றிய யாதாத்ம்ய ஞானத்தை உடையவரானார்
அவ்வனுபவம் தனியிருந்து அனுபவிக்க ஒண்ணாதபடி மிகவும் போக்யமாக இருந்தபடியால் மற்றவர்களையும் திருத்தி  அனுபவிக்க
அவர்களையும் தன்னோடு சேர்த்துக் கொள்ளுவதற்காக அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்

(2)தாம் பெற்ற ஞானத்தின் பலனான மோக்ஷத்தை இவர் தேடி வாட-அவன் எம்மா வீட்டைத் தர
இவர் அவன் தனக்கேயாக எனைக் கொள்ள வேண்டும் -அவன் செம்மா பாத பதுமம் என் தலை சேர்த்து
அருளுவதே மோக்ஷம் என்று உறுதி செய்தார்

(3)மோக்ஷத்துக்குப் பலன் அவனை அனுபவித்தலும் -அவனுக்கு கைங்கர்யம் செய்தலும் ஆகும்
முதலில் அனுபவித்தார் -ஆனாலும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போனதுக்கு காரணம்
அவனுடைய அளவிட முடியாமை என்பதை அவன் காட்டிக் கொடுக்கவே ஆறுதல் பெற்றார் -பின்பு
ஒழி வில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா யடிமை செய்ய வேண்டும் என்று ஆர்வமுற்றார்
அவன் எங்கும் பரந்துள்ளமையைப் புகழ்ந்தார்

மனம்‌ மொழி மெய்‌ மூன்றாலும்‌ களிப்புற்றாடும்படி பிரீதி மிக்கவரானார்‌. அப்பிரீதி மிக்குத்‌ தனக்கு அடையத்‌ தக்கவர்‌,
இறைவனின்‌ அடியவருக்கு அடியவர்‌ என்னும்‌ நிலை பெற்றார்‌. அந்நிலையால்‌, ஒவ்வொரு கரணமும்‌ மற்றொரு கரணத்தின்‌ செயலை அடையும்படி. அவனை அனுபவிப்பதில்‌ பெருவிடாயை உடையரானார்‌.
*மானிடம்‌ பாடாது இறைவனையே பாடும்‌ கவியான்‌? என்று: கூறும்‌ நிலை பெற்றார்‌. எவ்விதக்‌ குறைகளுமின்றி இறை யனுபவமான ஆனந்தக்‌ கடலிலே மூழ்கினவனரானார்‌ ஆம்வார்‌.

(4) இவர்‌ தம்‌ விருப்பத்திற்‌ கேற்பக் கடந்த கால நிகழ்ச்சிகளையும்‌ சமகாலமாக்க இறைவன்‌ அனுபவிக்க அனுபவித்‌தார்‌;
அவன்‌ தம்பால்‌ காட்டிய ஈடுபாட்டைக்‌ கண்டு அவன்‌ பால்‌ காதல்‌ மிக்கவரானார்‌; அவன்‌ இறிது விலகி நிற்க..
பித்தேறியவரானார்‌.
“நான்‌ காணுமாறு வருக! அல்லது என்னைச்‌ கூவிக்‌ கொள்க” என வேண்ட, அவன்‌ தன்னைக்‌ காட்டினன்‌.
அவன்‌ அடியைச்‌ சேர்த்ததாக மனத்தால்‌ ஒரு பேறு பெற்றார்‌. உறுதிப்‌ பொருளைப்‌ பெற்றதற்குப்‌ பலனாக.
வேறு தெய்வங்களிடம்‌ பற்றின்மையும்‌,
ஆன்மாவிலும்‌ ஆன்‌மாவைச்‌ சேர்ந்தவற்றிலும்‌ பற்றின்மையும்‌ உற்றார்‌ . உலக வாழ்வு வாழ்தலிலும்‌, செல்வத்திலும்‌, ஆத்ம அனுபவத்‌திலுங்கூடப்‌ பற்றற்ற தன்மை உடையவறானார்‌ ஆழ்வார்‌.

(5 )இவர்‌ பெற்ற வைராக்‌யத்திற்குப் பலன்‌ பரமாத்மாவினிடம்‌ பிறந்த அளவற்ற அன்பானது நெஞ்சை முடிக்கும்படியாய்க்‌
கழிய மிக்கதோர்‌ காதல்‌ என்று பக்கத்துள்ளவர்களும்‌ பேசும்படி எல்லை கடந்தது.
இறைவன்‌ செய்த அற்புதச்‌ செயல்களையெல்லாம்‌ தாமே செய்ததாகப்‌ பேசும்‌ நிலை பெற்றார்‌. அவனை ஓழிய ஒரு கணமும்‌ ஆற்றமாட்டாதவரானார்‌.
பொருளின்‌ இன்ப மிகுதியால்‌:வந்த ஈடுபாட்டால்‌, உயிரும்‌ மனமுமின்‌றி உடலும்‌ சதிலமாம்‌:படியானார்‌; மெலிந்தார்‌.
அவனைப்‌ பற்றிய நினவு தெஞ்சில்‌: புகுந்து உயிரை உருக்கி. உண்ணும்படி அளவற்ற அன்பாக வளர்ந்தது.
இவ்வாறு பகலத்‌ பத்தியும்‌ அடியவர்‌ இணக்கமும்‌ பெற்றவரானார் ஆம்வார்‌.

(6 முன்‌ பிறந்த காதல்‌ மிகுதி காரணமாக இவர்‌ வேறுஉபாயங்களில்‌ செல்லாத நிலையரானார்‌. (இதற்குக்‌ காரணம்‌
வேறு உபாயங்களை அறியாமையும்‌ அவற்றைக்‌ கடைப்‌பிடிக்கும்‌ ஆற்றல்‌ இல்லாமையும்‌ அல்ல. உண்மை உணர்‌தலினாலும்‌ அந்நிலை ஏற்படலாம்‌.
ஆழ்வார்க்கு அதுவும்‌காரணமன்று.] அத்தகையவருக்கு, இறைவன்‌ தன்‌ அடியை உபாயமாகக்‌ காட்டிக்‌ கொடுத்தான்‌.
அத்திருவடி.களையே உபாயமாகக்‌ கொண்டு, மாறுபடாத ஒரு நோக்கமுடையரானார்‌
தம்‌ கருக்தைத்‌ தூது மூலம்‌ இறைவனுக்கு அறிவுறுத்தினார்‌. அவன்‌ தாழ்ந்து வந்தான்‌.
வந்தபோது அவனுடன்‌ ஊடல்‌ கொண்டு, பின்‌ அவன்‌ வடிவழகில்‌ ஈடுபட்டு, அவனோடு பொருந்தினார்‌. முன்னர்‌ தனித்திருந்து அவனை அனுபவிக்க வேண்டுமென்று பிரபத்தி செய்தமைக்காக அப்‌பேறு பெற்று அனுபவித்தார்‌.
மற்ற எல்லா உபாயங்‌களையும்‌ கைவிட்டுச்‌ சித்தோபாயம்‌ மேற்கொள்ளுதலை ஒரு தரமேனும்‌ செய்ய வேண்டுமென்று நினைத்தார்‌.
எனவே புராணங்களில்‌ கூறப்பட்டனவும்‌, பழமையோர்‌ நடை முறையிற்‌ காட்டியவையும்‌ ஆன, தாய்‌ தந்‌தை முதலாகவும்‌, மணி பொன்‌ முதலாகவும்‌, கர்ம அனுட்டானங்கள்‌ முதலாகவும்‌,
கூறப்படுகின்ற அறிவுடையவையும்‌, அறிவற்றவையுமான. எல்லாப்‌ பேறுகளாகவும்‌, உபாயங்களாகவும்‌
உள்ள போலிகளை யெல்லாம்‌ கைவிட்டுப்‌ பரமபதம்‌ உட்பட அவன்‌ அடியவர்க்குப்‌ பரிரிலாக அளித்தார்‌.
உலகியற்‌ பொருள்‌களோடு தம்மைச்‌ சேர்த்துப்‌ பேசுவது கூடத்‌ தம்முடைய இறுதிக்குக்‌ காரணமாகுமென்ற நிலை பெற்றார்‌.
அவனே தந்தை அவனே தாய்‌ -அவனே தாம்‌ உண்ணும்‌ சோறு-தமது மாநிதி முதலிய யாவும்‌ என்று கொண்டார்‌;
அவனையே எண்ணிப்‌ புலம்பினார்‌… அவனுடைய இணையடித்‌ தாம்ரைகளைக்‌ காண, இமையவரும்‌ வரும்படி
அழகிய வேங்கடமலையில்‌ சென்று சேர்ந்த இறைவனை, அங்கே சென்று கண்டு, *த்வயம்‌’ என்ற மந்திரத்தின்‌ முற் பகுதியில் சொல்லப்‌படுவது போன்று,
சித்தோபாயத்தை மேற் கொள்ளுதலாகிய
**உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்‌?” என்று உபாயவரணம்‌ (பிரபத்தி) பண்ணினார்‌ ஆழ்வார்‌.

(7) அவன் தன்‌ திருப் பாதம்‌ விட்டுப்‌ பிரிய இயலாதவரான தம்மை அவன்‌, தன்னை விட்டு விலக்கி யோட்டும்படியான
ஐம்புலன்கனின்‌ நடுவே இவ்வுடம்போடே இருக்கும்‌ ப டி வைத்துள்ளானே என்று வருந்திப்‌ புலம்பினார்‌.
சித்தோபாயத்தைப்‌ பற்றிக்‌ கொண்ட பின்‌, பலன்‌ கிடைக்கு மளவும்‌ அவனைக்‌ கூப்பிட்டுக்‌ கொண்டேயிருப்ப தொழிய,
வேறு செய்யலாவது யாதொன்றும்‌ இல்லாமையாலே, அவன்‌ மீது பழியிட்டுக்‌ கூப்பிட்டார்‌;
தம்‌ நிலையைத்‌ தாமே எடுத்துச்‌ சொல்ல முடியாத நிலையை அடைந்துவிட்டார்‌;
தேற்ற முடியாதபடி நெஞ்சச்தைப்‌ பறி கொடுத்தார்‌. இறைவன்‌ தன்‌ வீரச்‌ செயல்களைக்‌ காட்டித்‌ தரிப்பித்தான்‌;

ஆனாலும்‌, உலக மக்களின்‌ இழவை அவர்‌ சிந்தை கூர்ந்ததால்‌ அந் நிலையும்‌ நீங்கியது. மீண்டும்‌ அவனை நினைந்து அலறினார்‌.
எங்கும்‌ அவன்‌ மேனி அவயவங்கள்‌ தோன்றிப்‌ பகையாய்‌ நின்று நலிந்தன. இவ்வாறு துக்கமானது எடுப்பும்‌ சாய்ப்புமாய்‌ நடக்க, அவன் பாலும்‌ தம்மிடமும்‌ எவ்விசச்‌ குறைபாடும்‌ இல்லாதிருக்கவும்‌,
மீண்டும்‌ தம்மை இந்நிலைமையிலே வைத்தது ஏன்‌ என்று காரணத்தைக்‌ கேட்டார்‌. அவனும்‌ இப்படி விடை கூறினான்‌;
கருமங்‌ காரணமாக வன்று, தானாக விரும்பித்‌ தனக்கும்‌ தன்‌ அடியாருக்கும்‌ கவி பாடுவித்துக்‌ கொள்ள வைத்தானாம்‌.
இது கேட்டு ஆழ்வார்‌ வியந்தார்‌! விம்மித மெய்தினார்‌! வியாசர்‌ முதலான முனிவர்களும்‌ முதலாழ்வார்களும்‌ இருக்கவும்‌, தம்மைக்‌ கொண்டு கவி பாடுவித்திக் கொள்ள இறைவன்‌ எண்ணிய உப கார்த்திற்குப்‌ பெரிதும்‌ உவகையரானார்‌.

இதற்குக்‌ கைம்மாறாகத் தம்‌ ஆன்‌மாவைக்‌ கொடுக்கலாம்‌ அவனுக்கு என்றால்‌, அதுவும்‌ தம்முடையது அன்று; அவனுடையது:
ஆகையாலே, இரு வேறு உலகிலும்‌ தாம்‌ செய்யக்‌ கூடுவது ஒன்றுமேயில்லை என்று தடுமாறும்‌ நிலையரானார்‌.

பிராட்டியும்‌ பெருமானும்‌ சேர்ந்த சேர்த்தியால்‌ உலகம்‌ முழுவதும்‌ வாழும்படி தலைமை தோன்ற வீற்றிருந்த திருவாறன்விளை என்னும்‌
திவ்விய தேசத்தில்‌ வைணவர்‌ கூட்டத்திலே திருவாய்மொழி கேட்.பித்து அடிமை செய்ய விரும்பினார்‌.
அந் நிலையில்‌ இறைவன்‌ இவருக்குப்‌ பரம பதத்தை வழங்குவதாகக்‌ கூறினன்‌. தாம்‌ திருவாய்மொழி கேட்பித்து அடிமை செய்யக்‌ கருதிய கைங்கரியத்திற்குக்‌ கேடு வந்ததே என்று கருதியமையாலே, “பரமபதம்‌” என்று அதன்‌ பேர்‌ சொல்லுதலையும்‌ சகித்துக்‌ கொள்ள இயலாதவரானார்‌.
திருவாறன்‌ விளையிலே உள்ளே ஆழ்வார்‌ திருக்‌கூட்டம்‌ போன்றே, தாம்‌ களிக்கும்‌ வண்ணம்‌ தாளம்‌ இசைத்து
இறைவன்‌ புகழேத்தும்‌ தெய்வ யாழோர்‌ கூட்‌டத்தார்‌ பரமபதத்தே சாமகானம்‌ பாடுகின்றார்‌.
அவர்‌ கூட்டம்‌ இனியது என்பதைக்‌ கூடச்‌ சிந்திக்க இயலாத
அளவு அவர்‌ துக்கம்‌ எல்லை மிகந்தது. அந்தத்‌ துயர வாதையாலே அனைத்தையும்‌ மறந்தவரானார்‌ ஆழ்வார்‌.

8. தாம்‌ மேற்கொண்ட சொல்லின்‌ தொண்டாகிய திருவாய்மொழி பாடுதலையும்‌ ஆழ்வார்‌ மறக்கும்படி செய்த அந்தக்‌ கலக்கமும்‌,
கண்ணால்‌ அவனைக் காண இயலாமையால்‌ வந்த கலக்கமும்‌, அவன்‌ அடியவருக்குப்‌ பரதந்திரன்‌தானா என்றும்‌,
எல்லாப்‌ பொருள்களையும்‌ அவன்‌ உடலாக உடையவன்‌ (பிரகாரி)தானா என்றும்‌ உண்டான ஐயங்களும்‌, இங்கேயே நிலைத்தால்‌ உலகக்‌ குற்றங்களில்‌ உழல வேண்டுமே என்பதால்‌ உண்டான அச்சமும்‌ ஆகிய இவையெல்லாம்‌ தீரும்படி இறைவன்‌ அவர்க்கு, அவரைச்‌
சொல்லின்‌ தொண்டு செய்யும்‌ அடிமையாகக்‌ கொண்ட நிகழ்ச்சியை மெதுவே அன்போடு நினைவூட்டினன்‌.
ஆக அவ்வளவில்‌ ஆழ்வார்‌ மீண்டும்‌ தம்மை மறந்தார்‌. முன்பு மறந்த நிலைவேறு; இந்த நிலை வேறு. இப்போது வந்த மறதியிலே அறிவின்‌ வாதமெல்லாம்‌ இல்லை.-மறதி! மறதி மறதிதான்‌! பித்தன்‌ போலும்‌ வள்ளல்‌ போலும்‌ செயல்களைச்‌ செய்யும்‌ பாலனை காண்கிறோம்‌ இங்கே. ஆழ்வார் தமக்குரிய பணியை -தொண்டை- இறைவன்‌ நினைவுறுத்திய மாத்திரத்தே, உவகைக்‌ கடலில்‌ ஆழ்ந்து, தம்மை மறத்து, முன்பு எந்த ஆன்மாவை
*இது நம்முடையதன்று ; அவனுடையதே. இதை எடுத்து எப்படி அவனுக்கே வழங்க இயலும்‌?? என்று வாதம்‌ செய்து, எண்ணிக்‌ கலங்கினாரோ,
அதே ஆன்மாவை இப்போது அது தம்முடையது அன்றாய்இருக்கவும்‌, அதை உடையவனான அந்த எம்பிரானுக்கே
தானம்‌ வழங்குவது அசட்டுத் தனமாய்‌ இருக்கவும்‌,
அவை யெல்லாம்‌ மனத்தே உறைக்காமல்‌ மறதிக்‌ களிப்பாலே தம்‌மதல்லாத அதைத்‌ தம்மதாகலே பாவித்து,
இல்லாதவனுக்கு வழங்குவது போல, உடையவனுக்கே…- எல்லாம்‌ உடையவனுக்கே–அந்த ஆன்மாவையும்‌ உடையவனுக்கே! அந்த ஆன்மாவுக்கு உரிமையும்‌ உடையவனுக்கே அவர்‌ வழங்குகின்றார்‌.
அந்த இறைவனோ, அது தன்னதே யானாலும்‌ தன்னதல்லாத ஒன்றனைத்‌ தானம்‌ பெறுவான்‌ போல, எவனுக்குத்‌ தானே ‘தந்தானோ, அவனிடமிருந்தே பெற்றுக்‌ கொள்கிறான்‌.
வழங்கியலனுக்கோ சொந்தம்‌ அல்லாதது அது; ஏற்றுக்‌ கொள்வானுக்கோ தொடர்பற்ற பரிசிற் பொருள்‌ அன்று அது;
அவனுடைய உரிமைப்‌ பொருளே. தானம்‌ வழங்கு வானும்‌, தானம்‌ ஏற்றுக்‌ கொள்வானும்‌ விந்தையான முறையில்‌ வியத்தகு தானத்தால்‌ தொடர்பு கொள்கின்றனர்‌
இங்கே. தன்னதல்லாததைத்‌ தானமாகப்‌ பெற்றவன்‌ எங்கனம்‌ பூரிப்பானோ, அங்ஙனமே தன்னதைப்‌ பெற்ற பகவானும்‌ பூரித்து, ஒளிவிஞ்சி நிற்கின்றான்‌? மிக்க ஒளியுடை யனானான்‌.
*சோதி’ என்றும்‌, ‘தோள்களாயிரத்தாய்‌! முடிகளாயிரத்தாய்‌! துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌! தாள்களாயிரத்தாய்‌! பேர்களாயிர;த்தாய்‌!” என்றும்‌
தம்மை அந்த மகழ்ச்சிப் பேரொளியில்‌இழந்தபடி, தூ மலர்க்‌ கவிதை பொழிகின்றார்‌ ஆழ்வார்‌.
சீதையின்‌ தன்மைகளான பிறந்த இடப்‌பாசம்‌ விடல்‌, பெருமாளுக்கு மங்களாசாசனம்‌ பண்ணுதல்‌, அவன்‌ வீரம்‌ கண்டு அனுபவித்தல்‌, பிரிவில்‌ துயர்‌ உறல்‌ போன்றவற்றை யெல்லாம்‌ ஆழ்வார்‌ பெற்றார்‌.
இறைவனும்‌,அவரது அவ்வான்ம குணங்களைக்‌ சுண்டு மகிழ்ந்து , ஆழ்வார்‌ தம்‌ உள்ளத்தே அமர்ந்து, அவர்‌ தன்னை நன்கு அனுபவிக்‌கும்படி அருள்‌ செய்தான்‌.
பின்‌, அவர்‌ தன்னைவிட்டு அகன்று போகாதவாறு சிறுமை என்று அவர்‌ பேசிய ஆன்மாவின்‌: பெருமையை அவர்க்குக்‌ காட்டினன்‌.
ஆன்மா உடலின்‌ வேறானது; ஞான மயமானது; பிராட்டி போன்று பிறக்கு உரியதல்லாத இயல்‌பினது. இறைவனுக்கே யன்றி அவன்‌ அடியவர்‌ அளவும்‌ செல்லும்படியான பரதந்திர இயல்புடையது என்று
அதன்‌ சிறப்பியல்பை (தம்மியல்பை)இடையறாது சிந்திப்பவரானார்‌ ஆழ்வார்‌.

(9) ஆன்மாவின்‌ சிறப்பியல்பைக்‌ கண்டதற்குப்‌ பலனாக,அவர்‌, அவனை இடையீடின்றி அனுபவிக்கின்றதான அந்த
அனுபவத்தின்‌ தொடர்ச்சியை அவாவுகின்றார்‌.
அந்த ௮வா-அந்த ஆசை–முறைப்படி காலப்‌ போக்கில்‌ தானே அமையும்‌ என வாளா இராது, பொறுமையுடன்‌ ஆறி இராமல்‌, அவனிடம்‌, *நான்‌ அங்கு வந்து அடிமை செய்ய வேண்டும்‌.-அல்லது நீ இங்கே வரவேண்டும்‌” என்று இரக்கலானார்‌-
அந்த ஒரே நினைவினரானார்‌- அவனைக்‌ கண்ணார எந்நேரமும்‌ காணக்‌ கருதினார்‌;
அவனை நினைப்பூட்டும்‌ பொருள்‌களைக்‌ கண்டு நோவுபடுதலால்‌ வாழ்வை முடித்துக்கொள்ள முயன்றார்‌;
அவனது சீலத்தை நினைக்குந்தோறும்‌ நெஞ்சு கரையலானார்‌; ஆற்றாமையால்‌ அரற்றினார்‌. இருதலைத்த
மனமின்றி மிக்க பதற்ற முடையரானார்‌.
அந் நிலையில்‌ மரணம்‌ அடைதலே பேறு என்று நாள்‌ குறிக்கப்‌ பெற்று மகிழ்ச்சி மிக்கவரானார்‌ ஆழ்வார்‌.

(10)பேறு பெறும்‌ காலம்‌ அணித்தானதற்குப்‌. பலன்‌ அர்ச்சிராதி மார்க்கத்தில்‌ வைகுந்தம்‌ ஏறுவதாகும்‌.
அந்தப்‌ பயணத்திற்குக்‌ காளமேகம்‌ போன்ற இறைவனை வழித் துணையாகப்‌ பற்றினார்‌ ஆழ்வார்‌.
அவன்‌ தம்மை விட்டுச்‌ சிறிதும்‌ பிரிதலாகாது என்று பேசி, இனித்‌ தாம்‌ பேறு பெறுவதில்‌ தடையில்லை என்றும்‌,
பிறவித்‌ துன்பம்‌ மீண்டும்‌ வாராது என்றும்‌ உறுதி கொண்டவராய்‌, உலகினரக்குத்‌ தாம்‌ சொல்ல வேண்டுவனவற்றை யெல்லாம்‌,
மரண தசையானவாறே மறைத்து வைத்த செல்வங்களை மக்கட்குக்‌ காட்டுதல்‌ போன்று, உபதேசிக்கத்‌ தொடங்குகிறார்‌.

——————–

3. ஆழ்வார்‌ செய்யும்‌ உபதேசங்கள்‌:

(1) ஆழ்வார்‌ உலகினரை நோக்கி, உலகில்‌ விடத்தக்கது இன்னது என்றும்‌, அதன்‌ சுற்றம்‌ இத்தகையது என்றும்‌, அதனை விடும்‌ முறை இது என்றும்‌ கூறினார்‌.
அவ்வாறே கொள்ளத்‌ தக்கது இன்னது என்றும்‌, அதனுடைய குணம்‌ இன்னது என்றும்‌, அதில்‌ ஆன்மாவை ஈடுபடுத்தும்‌ முறை இது என்றும்‌ சொன்னார்‌.
இதற்குச்‌ செய்யத்தக்கது பஜனை.-அத்தப்‌ பஜனைக்கு ஆதரவாக -அடித்தளமாக–ஆதாரமாகநிற்பது திருமந்திரம்‌.
*அது இது* என்று அதையும்‌ உபதேசித்தார்‌.
இவ்வாறு பஜனை செய்வதற்கு ஏற்ற அவனுடைய பல்வேறு பண்பு நலன்களையும்‌ எடுத்துக்‌ கூறினார்‌.
“அத்தகு பெரியவனைப்‌ பற்றுவது எளியதும்‌ இனியதும்‌ ஆகும்‌”என்றார்‌;
*அன்னவனைத்‌ தொழுதால்‌ வழியில்‌ நிற்கும்‌ தடைகளை யெல்லாம்‌ சுட்டெரித்து அரிய பயன்களை நமக்‌குத்‌ தருவான்‌” என்றார்‌.
“நாள்தோறும்‌ ஆன்மாவை முடிக்க முயல்கிற கொடிய வினைகள்‌ எல்லாம்‌ அவன்‌பால்‌ பத்திசெய்ய முயலுமளவிலேயே மடிந்து விடும்‌” என்று உபதேசித்தார்‌;
கண்ணன்‌ கீதையிலே சொல்லி யுள்ள வழியில்‌ நின்று, “பரம்பொருள்‌ ஒருவனே” என்னும்‌ உணர்வு பெற்று, வேறு பயன்‌ கருதாது பக்தி செய்யுங்கள்‌” என்றார்‌.
இறைவன்‌ தமது அஞ்ஞானத்தைப்‌ போக்கிப்‌ பத்தி வடிவான ஞானத்தைக்‌ கொடுத்தது போன்று,
இவரும்‌ உலகினர்க்குத்‌ தம்‌ அருட்குணத்தாலே அஞ்ஞானத்தைப்‌ போக்கி, ஞானத்தையும்‌ பத்தியையும்‌ உபதேசித்தார்‌?
உலகர்‌ அனைவரும்‌ பகவத்‌ வழிபாட்டில்‌ (பஜனையில்‌) மூழ்கிக்‌ களிக்கும்படி ஊக்குகின்றார்‌.

———-

(2)– தாம்‌ கண்டறிந்து, இவை தாம்‌ எல்லை! என்று உறுதி செய்தபடி, -இறைவன்‌ மேன்மைக்‌ குணங்களை யெல்‌லாம்‌ வெளியிட்டார்‌.
“அடையத்‌ தக்கோன்‌ அவன்‌”என்றார்‌; அதனை நிலை நாட்ட,மற்றத்‌ தெய்வங்கள்‌ அவனை வணங்கி வழிபட்டுப்‌ போற்றும்‌ நூற் சான்று காட்டினார்‌;
அந்தப்‌ பரம்பொருளின்‌ பெருமையை அர்ச்சுனன்‌ நேரில் கண்ணாற்‌ கண்டதான காட்டிப்‌ பிரமாணத்தையும்‌ எடுத்து உரைத்தார்
அவனை அடைய எண்ணுபவர்களுக்கும்‌, முனைபவர்க்கும்‌ அத் துறையில்‌ ஒரு சுவை பிறக்க வேண்டும்‌ என்பதற்காக மேலும்‌ பல சொன்னார்‌.
விட்டு ஒழிக்க வேண்டிய இந்த உலகின்‌- பிறப்பு இறப்புச்‌ சக்கரத்தின்‌ பயனால்‌ விளையும்‌ துயரங்களும்‌, துன்பங்களும்‌ பற்றியும்‌
“இவை யெல்லாம்‌ நீத்து இறைவனைச்‌ சென்‌றடைந்தால்‌ பெறுகின்ற பேறு எந்நாளும்‌ எல்லையற்ற பேரின்ப ஞான வெள்ளம்‌”என்றும்‌ விளக்கினார்‌;
*இறையருள்‌ நெறிச் செல்வார்‌ மேற்‌ கொள்ள வேண்டிய உபாயத்தின் சாரஸ்யம்‌–இனிமை– சிறப்‌பமைதி இவை” என்றும் கூறி,
இறைவன்‌ குணங்களைச்‌ சிந்தை செய்து, அந்தத்‌ திருக் கல்யாண குணங்களிலே மூழ்குங்கள்‌(குணோபாஸநம்‌ செய்யுங்கோள் )” என்றும்‌ விரித்துரைத்தார்‌.
இதற்கு அங்கமாக, விலக்கியவற்றைச்‌ செய்து, இளமையைப்‌ பாழ்‌ போக்காமல்‌, மாலிருஞ்சோலை சேர்வது, ஏத்துவது, தொழுவது ௮ந்நெறியிலே செல்ல நினைந்திடுவது,
இவை போல்வனவாகிய ஷேத்திர வாசம்‌, சங்கீர்த்தனம்‌, அஞ்சலி, வலம்‌ வருதல்‌, கதி சிந்தனை ஆகியவற்றையெல்லாம்‌ மேற் கொள்ளுமாறு உபதேசிக்கிறார்‌ ஆழ்வார்‌.

———–

(3.)*அமரர்‌ குலமுதல்‌ அவன்‌! அம்மா பெரியன்‌!” என்று உலகினர்‌ அவனை அஞ்சி நீங்காதபடி, அவனது
அவதார எளிமையை எடுத்துப்‌ பேசுகின்றார்‌.
முன்னர்‌ பேசிய அவதார எளிமை பரத்துவமாகத்‌ தோன்றும்படியும்‌, அர்ச்சையில்‌ எழுந்தருளும்‌ எளிமையை எடுத்துரைத்து
அவன்‌ நமக்கு மிக அண்மையன்‌ என்று உணர்த்தும்‌ அழகு ‘போற்றத் தக்கதே ! “நல்லதோர்‌ கதிதர–வழி தர–அவன்‌
நமக்காகக்‌ காத்து நிற்கின்றான்‌.
இழிந்த மனிசரைப்‌ பாடி நிலை இழக்க நினைப்பது ஏன்‌? அவனோ, வேண்டிற்றெல்லாம்‌ தரும்‌ நிறைவாளன்‌.
தன்னைப்‌ போலவே ஆக்கும்‌ வல்லவன்‌. அவனைக்‌ கவிபாட வாருங்கள்‌” என்று அழைத்தார்‌.
முத்தியைக்‌ கொடுத்தல்‌ எனும்‌ அவனது அருஞ்செயலைக்‌ குறிப்பிட்டு, மானிடரைப்‌ பாடுதலாிய நாய்த்‌ தொழிலை விட்டு
இறைவனுக்குச்‌ சொல்‌ தொண்டு புரிதலாகிய ஆன்ம இயல்பிற்கு ஓத்த தொழிலிலே சுவையை ஊட்டித்‌
தாம்‌”அவன்‌ கவியானது போன்றே மற்றவர்களையும்‌ இறைத்‌ தொண்டு செய்பவராக்குகின்றார்‌ ஆழ்வார்‌.

————-

(4), வைராக்கியம்‌ பெற்ற பற்றின்மை அடைந்த. ஆழ்வார்‌, அரச போகத்தின்‌ அற்பத்‌ தன்மையையும்‌, துர்க் கதியின்‌ நிலையாத தன்மையையும்‌,
கைவல்லியம்‌ எனப்படும்‌ ஆன்ம அனுபவத்தின்‌ சிறுமையையும்‌ கூறுகின்றார்‌ முதலில்‌;
பிறகு ஆடுகளின்‌ இறைச்சி முதலாய படைத்துச்‌ சிறு தேவதைகளை வழிபடும்‌ கீழ்மையைசக் கூறுகின்றார்‌;
பிறகு மற்ற தெய்வங்களாக மக்கள்‌ போற்றுகின்ற தெய்வர்களின்‌ அறியாமை, ஆற்றலற்ற தன்மை,
மேலோனை விரும்பாமை முதலிய பண்புகள்‌ பற்றியும்‌, புறமதங்கள்‌ பற்றியும்‌, வைதிக தெறியிலேயே கோணல்‌ தோக்குடைய மதங்கள்‌ பற்றியும்‌,
அவற்றில்‌ தாமஸ குணமே மேலோங்கியிருத்தல்‌ பற்றியும்‌ எடுத்துக்‌ கூறுகின்றார் :
**வேறு தேவதைகளைப்‌ பணிந்து அதன்‌ பலனும்‌ கண்டீர்கள்‌; இறைவன்‌ தன்‌ செயல்‌களை நூல்கள்‌ கூறுவது கொண்டு
அவற்றை அறிந்தும்‌, இவனே பற்றத்‌ தகுந்தவன்‌ என்று தெளிய கில்லீர்‌*
அதற்குக்‌ காரணம்‌ யாதென்பதையாயினும்‌ அறிவீர்களா?
பிரகிருதியை அமைத்து அவன்‌ உங்களை மயக்கி வைத்துள்‌ளான்‌ என்பதுதான்‌ காரணம்‌ என்பதை அறியுங்கள்‌!

அந்த மாயையை விலக்கவும்‌ அவன்‌ பாதமே சரணம்‌ உபாயம்‌ என்பதை அறியுங்கள்‌.
அந்தத்‌ திருப்‌ பாதம்‌. பற்றி அந்த மாயையினின்றும்‌ தப்பப்‌பாருங்கள்‌! அவனுக்கு அடிமை செய்வதே இந்த ஆன்மாவுக்கு உறுதிப்பாடு-உறுதிப்‌ பொருள்‌–என்பதை அறியுங்‌கள்‌’” என்று இவ்வாறெல்லாம்‌ உபதேசிக்கின்றார்‌ ஆழ்வார்‌.
இவ்வாறு உபதசித்துத்‌ தாம்‌ பெற்ற வைராக்கியம்‌ போன்று மற்றவர்களுக்கும்‌ வைராக்யம்‌ உண்டாக்க முயல்‌கின்றார்‌;
வேறு தேவதைகள்‌, வேறு பயன்கள்‌, புறமதங்கள்‌, கோணல்‌ மதங்கள்‌ ஆகியவற்றில்‌ பற்றின்மையை உண்‌டாக்குகின்றார்‌;
அந்தப்‌ பற்றின்மை வாய்த்த பின்னே மீட்டும்‌ சக்கரத்தைச்‌ சுழல வைத்து இறைவன்‌ மேல்‌ பற்றை உண்டாக்குகின்றார்‌.
அதில்‌ தேனார்ந்த தீஞ்சுவை தோன்றச்‌ செய்கின்றார்‌ ஆழ்வார்‌.

————–
(5). அடிமை புக்க வைணவரையும்‌, அவர்களைத்‌ திருந்தும்படி செய்த தம்மையும்‌ காணுதற்கு
வைகுந்தத்திலிருந்தும்‌ வேறு உலகங்களிலிருந்தும்‌ அமரரும்‌ முத்தரும்‌ வந்தனர்‌.
அவர்களைக்‌ கண்டு காப்பிட்டார்‌. ஆழ்வார்‌.
பிரகலாதன்‌ சொல்லைக்‌ கேளாத அவன் தந்தையும்‌, வீடணன்‌ சொல்லைக்‌ கேளாத அவன்‌ தமையனும்‌ போன்று,
தமது உபதேசம்‌ கேட்டுத்‌ திருந்தாத அசுரர்‌, அரக்கர்‌ இருக்‌கிறார்‌களா என்று தேடிப்‌ பிடித்து,
“நாட்டிலே தோன்றும்‌ குறைபாடுகளும்‌, கலிகாலத்தின்‌ குறைகளும்‌ நீங்க வேண்டின்‌, எங்கும்‌ பரந்துள்ள இறைவனடியார்களை
அடைத்து வாழ்வு பெறுங்கள்‌” என்றார்‌? (வேறு தெய்வங்‌ களின்‌ பாலுள்ள ஈடுபாட்டால்‌ எம்பெருமான்‌ பெருமையை
அறியமாட்டாத நீங்கள்‌,
நீங்கள்‌ வழிபடும்‌ தெய்வங்களைப்‌ பற்றி யறியவேண்டும்‌. அந்தத்‌ தெய்வங்களை அந்நிலையில்‌ நிறுத்தியவனும்‌ எம்பெருமானே என்பதையும்‌,
அந்தத்‌ தெய்வங்களும்‌ அவ்விறைவனையே வணங்குகின்றார்கள்‌ என்‌ பதையும்‌ அறிந்து கொள்ளுங்கள்‌.
அந்தத்‌ தெய்வங்களைப்‌ போலவே நீங்களும்‌ அவனைத்‌ தொழுதால்‌ பொல்லாத காலத்தின்‌ குறைபாடுகள்‌ உங்களைப்‌ பொருந்தா” என்று
இவ்வாறெல்லாம்‌ உபதேசித்து அவர்களை விஷ்ணு பத்தி நிலையில்‌ நிலை நிற்பவராக்கினார்‌.
*திருந்தினவர்கள்‌ என்பவர்கள்‌, உபாயத்தில்‌ துணிவு பிறந்தவர்கள்‌.-அவர்களும்‌ பதற்ற நிலையில்‌ நிற்கும்போது ஆழ்வாரை இடித்துரைப்பவர்களே.
காணக்கூடாதவற்றையும்‌ காண வைக்கும்‌ ஆற்றல்‌ உடையதான பத்தி எனும்‌ சித்தாஞ்‌ சனத்தை அவர்களுக்குப்‌ பூசுகிறார்‌ ஆழ்வார்‌.
இந்தப்‌ பத்தியாகிய மையை மனக் கண்ணிற்குப்‌ பூசினால்‌ பெறுதற்‌கரிய பேறாம்‌ இறைவன்‌ வீறுகள்‌ எல்லாம்‌ தோன்றும்‌.
அத்தகைய பத்தியை உபதேசிக்கின்றார்‌ ஆழ்வார்‌.

————

(6). பிரபத்தி பண்ணின ஆழ்வார்‌, முன்‌ ஐந்து பத்துகளிலும்‌ சாத்தியத்தை அடைதற்குச்‌ சாதனமான சாதன பத்தியை உபதேசித்தார்‌.
அந்தப்‌ பத்தியானது ஆன்மாவின்‌ உண்மையான இயல்பிற்கு மாறாக இருப்பதை நினைத்து வருந்துகிறார்‌.
அந்தப்‌ பத்தியின்‌ அருமைப்பாட்டை எண்ணி வருந்தி, இயற்கையின்‌ போக்கில்‌ ஓடும்‌ மனிதனை நிறுத்தி,
அவன்‌, ஆன்மாவை மேலே உயர்த்தி, அவனை ஈடேற்ற முடியாதோ என்று கலங்குகின்றார்‌ ஆழ்வார்‌.
அந்தக்‌ கலக்கத்தாலே, தம்மைப்‌ போலே…தாம்‌ முன்பு இருந்தது போலே, இப்போது இருக்கின்ற இந்தத்‌ தம்‌மொத்த நிலயினருக்கு
அவர்‌ தமது சொந்த வாழ்வின்‌ அனுபவத்தைக்‌ கூறத்‌ துணிகின்றார்‌.
“உங்களை அறைகூவி என்‌ பக்கல்‌ அழைக்கின்றேன்‌! ஏன்‌ தெரியுமா? எப்படி. இது கை வசமாயிற்றென்பதை அறிவீர்களா?
அவன்‌ தனது தாள்‌ நிழலைத்‌ தந்தனன்‌. அவன்‌ கழல்களன்றி மற்றோர்களைக்‌ காண்டிலேன்‌ என்று இருந்தேன்‌.
மற்றும்‌ அவன்‌ அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேன்‌” என்று கூறுகின்றார்‌. இப்படிக்‌ கூவித்‌ தம்‌ பேச்சாலும்‌ நடைமுறையைச்‌ சொல்லுவதாலும்‌
தமது சித்தோபாயத்தில்‌ நிலைத்திருக்கும்‌ நிலையை வெளிப்படுத்துகிறார் ஆழ்வார்‌.

————

(7)முன்பு தாம்‌ உபதேசித்த கடைசி உபாயம்‌ எனப்‌படும்‌ சித்தோபாயத்தில்‌ ஊன்றி நிற்பவர்களுக்கு, ஆழ்வார்‌
பேற்றின்‌ கடைசி எல்லையையும்‌
அதை அடையும்‌ சாதனத்‌தின்‌ கடைசி எல்லையையும்‌ அவர்கள்‌ தெரிந்து கொள்ளும்படி உகப்பால்‌ வெளியிடுகின்றார்‌.
இப்போது “நீள்‌ நகரம்‌”என்பது திருவாறன்விளை. அதுவே பேற்றின்‌ எல்லை. எம்‌பெருமானைக்‌ காட்டிலும்‌
அவனுடைய தொடர்பு பெற்ற ஒன்றே பேற்றின்‌ கடைசி எல்லை. வாணனைத்‌ தோள்‌ துணித்தான்‌ சரணன்றி மற்றொன்றிலம்‌ என்று
அர்ச்‌சாவதார நிலையே உபாயத்தின்‌ கடைசி நிலை எனக்‌ குறிக்கின்றார்‌.

———–
(8) ஆன்மாவின்‌ உண்மை இயல்பை அறிந்த–எண்‌ணிய. -ஆழ்வாருடைய உபாயமும்‌, உபேயமுமே தமக்கும்‌
உபாயமும்‌ உபேயமும் * என்று இருக்கும்‌ அவர்களை நோக்கி ஆழ்வார்‌, அவர்கள்‌ யாரும்‌இருகரையர்‌ ஆகாதபடி–அதாவது, உபாயம்‌ வேறு உபேயம்‌ வேறு என்று– இரண்டும்‌ தனித்தனி என்று-இரண்டினைக்‌ கொள்ளாது,
பேறு என்று குறித்த திவ்விய தேசமே உபாயமும்‌ உபேயமும்‌ என்று ஒன்றிலேயே ஊன்றி நிற்கும்படி செய்கின்றார்‌.

———-

(9.)பேற்றுக்கு நாள்‌ குறிக்கப்‌ பெற்ற ஆழ்வார்‌, தம்‌ உபதேசம்‌ கேட்டுத்‌ திருந்தினவர்கள்‌ தவிர, மற்றுள்ளவரான
உபதேசம்‌ கேட்க இயலாத–கேளாத…இருந்த அவர்களையும்‌ விட முடியாத பரம கிருபையால்‌ அறிவு கேடர்களான — அறிவிலிகளான — அவர்களுக்கும்‌ உபதேசிக்‌கின்றார்‌.
*உலகத்து மனைவி மக்கள்‌ உறவினர்‌ முதலியோர்‌ உண்மையான அன்பினர்‌ அல்லர்‌* என்றும்‌,
இறைவனே ஆபத்துக்கு வந்துதவும்‌ அவனே–உண்மை அன்பினன்‌ என்றும்‌, அவனே மேலான உறவு” என்றும்‌,
“அவனே காப்பவன்‌, “அவனே இனியன்‌”, “அவனே இன்பவடி.வினன்‌ *என்றும்‌,
*அவன்‌ ஒருவனே உபாயம்‌” என்றும்‌, “அவனை ஒழிந்த மற்றையாரும்‌ அத்தகையர்‌ அல்லர்‌” என்றும்‌,மெய்ப்பிக்கின்றார்‌.,
கண்ணன்‌ ஒருவனே மேலாந”தெய்வம்‌. அவன்‌ ஒருவனே மாநிலத்து எவ்வுயிர்க்கும்‌ உபாயம்‌” என்று முடித்துச் சித்தோபாயத்தை உபதேசிக்கின்றார்‌ ஆழ்வார்‌.

அந்தச்‌ சித்தோபாயத்தில்‌ நம்பிக்கை பிறக்க வேண்டும்‌.-அது பிறக்கைக்குப்‌ பேறு வேண்டும்‌. அப்படி
அச்சித்தோப௱பத்தில்‌ நம்பிக்கை பிறக்கைக்கு அடியான பேறு இல்லாதார்‌ அதில்‌இழியார்‌–அதில்‌ இழியாதார்‌ இழியமாட்டார்‌- அறிவுக்‌ குறைவு உடையார்‌.
ஆகவே, “அத்தகையவர்கள்‌ செய்யக்‌ கூடுவது யாது?” என்பதும்‌ ஒரு வினாவாகின்றது. ஆழ்வார்‌ அவர்களையும்‌ விட்டு விடவில்லை.
காலையும்‌ மாலையும்‌ மலர்‌ முதலியன கொண்டு, அவனை வழிபட்டு, பத்தி நிலையில்‌ நிற்பவர்‌ ஆகுங்கள்‌? என்று
அங்கங்களோடு கூடிய பத்தியைஅத்தகையோருக்கு உபதேசிக்கின்றார்‌.

செய்ய வேண்டும்‌ என்ற எண்ணம்‌ உண்டேனும்‌, செய்ய இயலாமை காரணமாகவும்‌, வேறு உடனே கிட்டாமை:காரணமாகவும்‌
அப் பத்தியை அனுட்டிக்க ஆற்றலற்றவர்‌ உளர்‌ அன்றோ?*அவர்கள்‌ செய்யக்‌ கூடியதுயாது?” என்பது மற்றொரு வினா.
அவருக்கும்‌ ஆழ்வார்‌ கைவசம்‌ விடை. வைத்துள்ளார்‌.*இன்பம்‌ அளிப்பதும்‌, யாவருக்கும்‌ தகுதியானதும்‌,
எடுத்த பிறவியின்‌ (உடலின்‌) இறுதியிலே பலன்‌ அளிப்பதும்‌ ஆன பிரபத்தி மார்க்கம்‌ பயிலுங்கள்‌” என்று அவர்களுக்கும்‌ உபதேசம்‌ செய்கின்றார்‌ ஆழ்வார்‌.

மற்றும்‌, சிலர்‌ ஐயப்பாடுடையோர்‌. உபாயமோ சிறிது; பலனோ பெரிது; மிகப் பெரியது! நினைத்துப்பார்க்க ஒண்ணாத அளவுபெரியது!
தடைகளோ மிகுதி!மேலும்‌ அவைஉடைக்‌க முடியாத அளவு வலியன. நிலைமை இவ்வாறு இருத்தலால்‌,
இது எவ்வாறு கூடும்‌ என்று ஐயம்‌ கொண்டு
பிரபத்தியில்‌ துணிவு. கொள்ளார்‌. அத்தகைய துணிவு கொள்ளுதற்கு ஏற்ற சத்தி அவர்கள் பால்‌ இல்லை. எனவே இத்தகைய துணிவற்றவர்க்கு வழி யாது? என்றால்‌, ஆழ்வார்‌ விடை. தருகின்றார்‌.
*திருக் கண்ணபுரம்‌ சொல்ல நாளும்‌ ‘துயர்பாடு சாராமே; என்கின்றபடி
அந்த இறைவன்‌ பெயரையோ ஊரையோ சொல்லுங்கள்‌” என்று உச்சாரணத்தை விதிக்கின்றார்‌ ஆழ்வார்‌.
வேறு சிலரையுங்கூட ஆழ்வார்‌ தமது திரு நோக்கில்‌அளந்தே வைத்திருக்கன்றார்‌.

பெயர்‌ சொல்லவும்‌ மாட்டாதார்‌, ஒருமைப்‌ பாட்டோடு உச்சாரணம்‌ செய்யவும்‌ இயலாதார்‌,
தாமே ஒரு பாசுரம்‌ சொந்தமாய்ச்‌ சொல்லுதற்கும்‌ ‘இயலாதார்‌ ஆகிய இவர்களுக்கு-
தகுதி குறைந்தவர்சளுக்கு-அவர்‌ சொல்வது இது: இத்‌ திருவாய்மொழியைப்‌ பத்தியோடு பாடி அவன்‌ திருவடி.களிலே விழுங்கள்‌
கீதாசாரியன்‌ கண்ணன்‌ செய்தது போன்றே ஆழ்வாரும்‌ தமக்குப்‌ பேறு அணித்தானவுடன்‌ உலகினர்‌ ஒருவரும்‌
இழக்க வொண்ணாது இதை என்ற பரம கிருபையாலே
அவரவர்‌ தருதிக்‌ கேற்பப்‌ பலவகை உ.பாயங்களையும்‌ முறையாக எடுத்து உபதேசிக்கக்‌ காண்கின்றோம்‌.

——————-
10, தம்மினும்‌ இறைவன்‌ பால்‌ மிக்க ஈடுபாடுடையது தம் தெஞ்சு என்பது அவர்‌ கருத்து- ஆதலால்‌, தம் மனத்‌திற்கு முதலில்‌ பணி நெஞ்சே!” என்று ஆணையிட்டார்‌.
அடுத்து, “மருள்‌ ஒழி” என்கின்றார்‌. இவ்வாறு செய்ய “வேண்டுவனவற்றையும்‌ தவிர்க்க வேண்டுவனவற்றையும்‌ விதித்தவர்‌,
நெஞ்சு போல்வாரைகத் *(தொண்டீர்‌” என்று அழைத்துச்‌ செய்யத்‌ தக்கதும்‌, நினைக்கத்‌ தக்கதும்‌, பேசத்‌ தக்கதும்‌,
கேட்கத்‌ தக்கதும்‌, காணத்‌ தக்கதும் , போதற்கு ஏற்ற இடமும்‌ இவை என்று வெளியிடுகின்‌றார்‌,
திருவாய்‌ மொழியின்‌ தொடக்கத்தில்‌ முதற் பத்தில்‌ *பிணக்‌ கற” என்ற பாட்டில்‌ (1-2-5) *வணக்குடைக்‌ தவநெறி”
என்று தொடங்கிய பத்தி யோகத்தை
இறுதிப்‌ பத்தில்‌**சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்‌?? (10-4) என்று அது தன்‌ பேற்றுடனே பொருந்தின படியைச்‌ சொல்லி முடித்தார்‌.

—-
முன்னார்‌ முதற்பத்தில்‌ **எண்‌ பெருக்கு (1-2-10) என்ற பாடலில்‌ வழிபாடு செய்தற்குப்‌ பற்றுக்‌ கோடாகச்‌ சொல்லப்‌ பட்டதும்‌,
*எண்ணும்‌ திருநாமம்‌?” (10-5-1) என்று வழிபாட்டின் போது இடையறாது நினைக்கும்‌ திரு நாமமும்‌ ஆன திரு மந்திரத்தின்‌ சொல்லையும்‌ (ஒலியையும்‌),
அதன்‌ பொருளையும்‌ ‘*நாரணம்‌” என்றும்‌ **எம்மான்‌”” என்றும்‌ சுருங்க உபதேசிக்கின்றார்‌.
**மாதவன்‌?”(1-10-7) என்று தெடாங்கித்‌ திரு மத்திரத்தை **த்வயம்‌*’ என்ற மந்திரமாக வெளியிடு கிறார்‌. ்‌

இறைவன்‌ தம்மைச்‌ கொண்டு போவதற்கு விரைகின்ற படியாலும்‌, கேட்கிறவர்களுக்த ஈடுபாடு பிறக்கும்‌ பொருட்டும்‌
“தாள்வாய் மலரிட்டு நாடீர்‌* என்றும்‌,
பாடீர்‌அவன்‌ தாமம்‌” என்றும்‌,
*நன்‌ மலரிட்டு நினைமின்‌” என்றும்‌
மனம்‌ மொழி மெய்‌ ஆகிய முக் கரணங்களாலும்‌ இறைவனை வழிபடுதலை உலகினர்க்குக்‌.
கையோலையில்‌ குறித்துக்‌ கொடுப்பது போன்று சுருக்கமாகக்‌ காட்டுகின்றார்‌, ஆழ்வார்‌.

தம்மைப்‌ போன்று அனுபமும்‌ கைங்கரியமும்‌ செய்‌பவர்க்கு அவர்‌, (அவனுடைய சீல குணத்திலே அகப்பட்டு அழுந்தி விடாது,
உங்கள்‌ உயிரைக்‌ காவல்‌ காத்துக்‌ கொள்ளுங்கள்‌” என்று கூறுகின்றார்‌. இப்படிக்‌ கூறுவதால்‌ அவர்‌களை அவன்‌ உள்கலந்து அழிக்கும்‌ வழிக்குக்‌ காவலிட்டார்‌.
இவர்தம்‌ மனத்தைத்‌ திருத்தினான்‌ இறைவன்‌, திருத்தியபின்‌,*இனியும்‌ இவரை இங்கே இவ்வுலகில்‌ இருக்க விடலாகாது*என்று இவருக்காக வீடு திருத்தப்போனான்‌?
போய் , அது செய்து திரும்புவதுற்கு முன்‌ இவர்‌ தம்‌ உபதேசத்தால்‌ ஊரும்‌ நாடும்‌ திருந்தி இவர்‌ இங்குச்‌ செய்ய வேண்டுவனவன
செயல்‌ எல்லாம்‌ செய்து முடிவுற, இவரைப்‌ பரம பதத்திலே கொண்டு போகப்‌ பதறினான்‌.
இவர்‌ எடுந்த இவ்வுடல்‌ கடைசி உடலாகையால்‌, அதில்‌ தமக்குண்டான மோகத்‌தாலே தன்‌ பதற்ற மிகுதியை மறந்து, தன்‌ பரிவாரங்களுடன்‌ அவ்வுடலில்‌ புகுந்து,
திவ்ய தேசங்களில்‌ செய்யும்‌ விருப்பத்தை யெல்லாம்‌ அதிலே காட்டி, ஆழ்வாரின்‌ பல உறுப்புக்களையும்‌ அனுபவிக்கும்படி அவர்‌ உடலில்‌ சபலனான்‌ இறைவன்‌.
அந்த இறைவனுக்கே, ஆழ்வார்‌, உடலின்‌ மாயையை எடுத்து விளக்கி அதனைக்‌ கைவிடும்படி செய்தார்‌.

காரணமின்‌றியும்‌ தம்மைக்‌ கொண்டு போதலில்‌ இன்று மிக்கு ஈடுபட்டவனான அவனை இதுகாறும்‌ தம்மை விட்டு
வைத்ததற்குக்‌ காரணம்‌ கூறும்படி கேட்கின்றார்‌ ஆழ்வார்‌.
அவனும்‌, :*இந்திரியங்கட்கு அடிமைப்பட்டுப்‌ புலன்கள்‌ வழியே போனீர்‌?? என்பது முதலாய காரணங்களைக்‌ காட்ட எண்ணுகின்றான்‌.
ஆனால்‌, அவையெல்லாம்‌ அவன்‌ செயலே என்று அறியும்‌ அறிவாளர்‌ ஆழ்வார்‌ என்று எண்ணி, ஒரு. விடையும்‌ கூறாது நின்றான்‌.
தன்‌ தவறுகளை மறைப்பான்‌ போன்றும்‌ இவரைத்‌ தன்னிடத்துக்கு ஏற்றுக்‌ கொள்வதன்‌ அறிகுறியாகவும்‌
சில முழக்கங்களை சூழ் விசும்பு அணி முகிலில்‌ உண்டாக்கினான்‌.
அல்வொலி செவிப்பட்டதும்‌ அர்ச்சிராதி வழி பல்லக்குத்‌ தூக்குவார்‌ வழிபாடு, திவ்வியதேசப்‌ பேறு, அங்குள்ளார்‌ பாராட்டு
முதலியவற்றைப்‌ பெற்றவராய்ப்‌ பேசும்படி, மேலான பேற்றை மனநிலையில்‌ (மானசீகமாக) பெற்றார்‌. ஆழ்வார்‌.
அந்நிலையை அகத்தே-மனத்தே மாத்திரமன்றிப்‌ புறக்‌ கரணங்களாலும்‌ பெற வேண்டுமென்று பதறி
அவனுக்குத் திருவாணை இட்டு-அவனைத்‌ தடுத்து, அது பெறாத ஆணை யல்லாமைக்குப்‌ பல ஏதுக்களையும்‌ எடுத்துரைத்து அவா மிக்கவரானார்‌.

இந்தப்‌ பரம பத்தி நிலையும்‌ அற்பமானது என்று சொல்‌லும்படி. மிகக்‌ பெரியதாயிருந்தது இறைவன் தன்‌ ஈடுபாடு.
ஆழ்வாரின்‌ அவாவின்‌ அளவைச்‌ இறு குளம்பின்‌ அடி போன்ற அளவினதாகக்‌ குறிப்பிட்டால்‌,
இறைவனோ, கடல் .போன்ற மிகப்‌ பெரிய அளவினதான ஆசையுடன்‌ வந்தான்‌ என்றுதான்‌ கூறவேண்டும்‌.
வந்தவன்‌, இவருடன்‌ கலந்து தன்‌ விடாய்‌ தீர இவரை அனுபவிப்பித்து, இவர்‌ அலறிய அந்த.வாயாலேயே *அவாவற்று வீடு பெற்ற?” என்று பேசும்படி,
அரி என்ற தன்‌ பெயருக்கு ஏற்ப எல்லாத்‌ தாபங்களையும்‌
ஹரித்தமையை.-அழித்தமையை- யாவரும்‌ அறிய வெளி யிடடுன்றார்‌ ஆழ்வார்‌ இறுதிப்‌ பத்தால்‌.

———–

4. ஐய வினாக்களும்‌ அவற்றின்‌ விடைகளும்‌

1. காரணமற்ற தன்‌ பரம கிருபையால்‌ ஆழ்வார்க்குஅஞ்ஞானம்‌ நீக்கிப்‌ பத்தி வடிவான ஞானத்தைத் தந்து,
பின்னும்‌ அவர்க்கு அவர்‌ விரும்பிய பேற்றையும்‌ இறைவன்‌ அளித்தலைக்‌ காண்கின்றோம்‌.
தம்‌ பிரபத்தங்களில்‌ முதல்‌ பிரபந்தத்தில்‌ முதல்‌ பாட்டில்‌ ஆழ்வார்‌ பொய்ஞ்ஞானம்‌,பொல்லா ஒழுக்கு, அழுக்குடம்பு ஆகியவற்றை நீக்க வேண்‌டும்‌ என்று வேண்டுகின்றார்‌.
*இறுதியில்‌ அவ்வேண்டுதல்‌ நிறைவேதியதாகப்‌ பேசும்‌ ஆழ்வாருக்கு, முன்னரே இறைவன்‌ அருளாமைக்கு யாது காரணம்‌?” என்பது வினா.

இதற்குக்‌ காரணங்களாவன இவை.
(1) தன்னுடைய பல முயற்சிகளாலும்‌ திருந்தாத உலகு ஆழ்வாருடைய உபதேசங்களாலேனும்‌ திருந்தட்‌டுமே என்பதால்‌,
(2) வேண்டியவடனே வீடு கிடைத்துவிட்டால்‌, பிரபத்தி என்பது தன்பால்‌ வந்தவர்களை உடனே மாய்த்து விடும்‌
நச்சுப்‌ பொய்கையோ என்று மக்கள்‌ ஐயம்‌ கொண்டு, தன்‌ பக்கம்‌ யாரும்‌ வந்து எதுவும்‌ வேண்டுதல்‌ செய்யாது போய் விடுவர்‌ என்பதால்‌.
(3) தானும்‌ தன்‌ அடியவர்களும்‌ மகிழ இவரைக்‌ கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளத்‌ தொடங்கிய செயல்‌ முழுதும்‌ முடிவதற்காக.
(4) வேர்‌ சூட்டிக்கொள்பவர்கள்‌ வாசனையின்‌ விருப்பத்தாலே அதில்‌ பற்றிய மண்பற்றையும்‌ கழற்றாது சூட்டிக்‌ ‘கொள்வதுபோல்‌,
இவர்‌ தம்‌ உடம்பில்‌ இறைவன்‌ கொண்ட விருப்பத்தால்‌. என்று இப்படி பல விதமான காரணங்கள்‌ கூறலாமாயினும்‌,
இலை முக்கியமானவை அல்ல.

(5)*இவருடைய ஆர்த்தி.-ஆர்வம்‌–பெருகித்‌ தகுதி யுடையராக வேண்டும்‌” என்பதே முக்கியமான காரணமாகும்‌.
அது இவர்தம்‌ நூலில்‌ 20 (இருபது) இடங்களில்‌ *இனி, இனி” என்று பேசுவதனால்‌ தெளிவாகும்‌.
முதற்‌ பாடலிலும்‌ ஆரத்தி இருப்பினும்‌, அது படிப்படியாக முற்றிக் கொண்டு போய்‌, இறுதியில்‌ பரமார்த்தியாகி, பேற்றிற்குத்‌ தகுதிபெற்றார்‌ என்பதாம்‌.

மேலும் (6)ஒரு காரணம் -வீடு நிறுத்துவான் -இவரைக் கூட்டிப்போவதற்கு முன்பு பரமபதம் ஆகிய பெரிய வீட்டைத் திருத்த வேண்டுமே -அதுவும் ஒரு காரணம்

2. *பர பக்தி பர ஞானம்‌, பரம பக்தி என்பன பக்தியின்‌ நிலைகள்‌.
ஆழ்வார் தம்‌ பத்தியிலும்‌ அந்நிலைமைகள்‌உண்டா? அவை எங்கெங்குப்‌ புலப்படுகின்றன?

பல பாடல்களில்‌ ஆழ்வார்‌ * கண்ணனைக்‌ கண்டேன்‌”என்று பேசுகின்றார்‌.
வேறு பல பாடல்களில்‌ *பாவியேன் காண்கின்‌றிலேன்‌” என்பது போலவும்‌ பேசுகின்றார்‌.
மேலாக நோக்கும்போது, இவை, முரண்படுவது போன்று தோன்றலாம்‌.
கண்டேன்‌ என்பது; உட் கண்ணால்‌ கண்டதாகவும்‌, *காண்கின்றிலேன்‌* என்பது புறக் கண்ணாலும்‌
காண ஆசைப்பட்டு அப்பேறு பெருமையைக்‌ குறிப்ப தாகவும்‌ கொள்ளவேண்டும்‌.

அப்படியானால்‌, முதற்‌ பத்திலிருந்து முடிவு வரும்‌ வரை அலர்‌ நிலை என்ன? என்ற ஐயம்‌ எழும்‌.
கண்டேன்‌” என்ற பேச்சு பத்துத்‌ தரமும்‌,-அதனினும்‌ இருமடங்கு *காண அவாவுவன்‌” என்ற பேச்சும்‌ வருதலால்‌;
பர ஞானம்‌ உள்ளே ஓடிக்கொண்டிருக்கிற பரபக்தியே ஆழ்வார்‌ நிலை என்பது தெரியவரும்‌.
கண்டு களிப்பக்‌ கண்ணுள் நின்று அகலான்‌”? (10—8–7} என்பது வரை இந் நிலைமை.

பரபக்தி முதல்‌ நிலை. பரஞானம்‌, அவனை .அறிகின்ற நிலை-. உள்ளே ஓடிக் கொண்டிருந்த பர ஞானம்‌ எப்பொழுது முழுமை பெறுகின்றது?
**அந்தமில்‌ பேரின்பத்து அடியாரோடு இருந்தமை”” (10-9-11 )என்று நித்திய ஸூரியர்‌ திரளில்‌ தாம்‌ இருப்பதாக
ஆழ்வார்‌ பேசும்‌ பாசுரம்‌, அவர்‌ பர ஞானம்‌ முழுமையாகப்‌ பெற்ற நிலையைக்‌ காட்டும்‌. *சூழ்‌ விசும்பு? திருவாய்‌ மொழியில்‌ காணலாம்‌.

இதுவும்‌ மானச அனுபவமே. பெருவிடாய்‌ பிறந்து, கூப்பிட்டு, ஆற்ற மாட்டாமல்‌ திருவாணை யிட்டு,
அவனைத்‌ தடுத்துப்‌ பேற்றோடு கூடின. “முடிந்த அவாவில்‌ அந்தாதி இப்பத்து”? என்னும்‌
“முனியே நான்முகன்‌- பதிகமே பத்தியின்‌ கடைசி எல்லையான பரமபத்தி நிலை கூறும்‌ பகுதி.

3. பர பத்தி பர ஞானம்‌ பரம பத்தி என்னும்‌ மூன்று நிலைகளைப் பற்றி யார்‌ எங்கே பேசி யிருக்கின்றார்‌?
கண்ணன்‌ தேர்த்‌ தட்டில்‌ வீற்றிருந்து அருச்சுனனுக்குக்‌ கீதையாகப்‌ பேசினான்‌;
அவனே சேர பாண்டியன்‌ என்று அரியணை மீதிருந்து எம்பெருமானார்க்கு உரைத்தான்‌. அது கத்தியமாய்‌ (உரைநடை) உள்ளது. அவற்றில்‌ இவை விளக்கப்பட்டுள்ளன :

*பரபத்தி? என்பது ஞான நிலை. அது “எம்பெருமானுடன் கூடுவது இன்பம்‌; பிரிவது துன்பம்‌” என்று இருக்கும் நிலை

“பர ஞானம்‌” என்பது, தர்சனநிலை. இறைவனுடைய இயல்பு, வடிவு, குணம்‌, செல்வங்களை மிகவும்‌ தெளிவாக
நேருக்கு நேர்‌ காண்பது போல அறிகின்ற நிலை. ்‌

*பரமபத்தி* என்பது, பேறு பெற்ற நிலை. அது உணர்ந்த பொருளை அப்பொழுதே பெறாவிடில்‌ முடிவுஎன்னும்படியான நிலை.

4. திருவாய்‌ மொழியில்‌ ஆழ்வாருடைய பலவான பத்திநிலைகள்‌ பேசப்படுன்றன.– இறைவன்‌ குணங்கள்‌ கூறப்படுகின்றன.
ஆழ்வாருடைய பலவாய உபதேசங்கள்‌ உள்ளன. -ஐம்பொருள்‌ பற்றிய உண்மை உள்ளது.
ஒவ்வொரு திருவாய்‌ மொழியிலும்‌ (ஒருபதிகம்‌) ஒரு கருத்து உணர்த்தப்பட்டுள்ளது.
ஒரு பத்தில்‌ -அதாவது நாறு பாடல்களில்‌ ஒன்றுபட்டதொரு கருத்து உணர்த்தப்பட்டு உள்ளதும்‌ தெரிகின்றது.
எனில்‌, ஆயிரம்‌ பாட்டிலும்‌ கூறப்படும்‌ ஒன்றான திரண்ட கருத்து -அதாவது தத்துவம்‌ யாது?
பிறவிக்குக்‌ காரணமான அஞ்ஞானத்தைப்‌ போக்குவ்தான மதி நலத்தை ஞான நிறைவை–அருளிய இறைவனது
காரணமற்ற. அருளாலேயே இறைவனை அடைதலாகிய மோக்ஷம்‌ பெறுதலும்‌ உண்டாகும்‌ என்று தெளிவித்தலே
“மயர்வற மதி நலம் என்று தொடங்கி வீடுபெற்ற” என்று முடியும்‌பிரபந்தத்தின்‌ ஒன்றான திரண்ட கருத்தாகும்‌,
எந்த இறை யருள்‌ ஞானத்தை அருள்கின்றதோ, அதுவே வீட்டையும்‌ அருள வல்லது” என்பது இங்கு விளங்கும்‌ தெளிபொருள்‌ என்பதாயிற்று.

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading