ஸ்ரீ வேதாந்த தேசிகர் மஹாத்ம்யம் —

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிய “ஸப்ததி ரத்ன மாலிகா’வில் ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ரீவன் கிருபையால், ஒரு ச்லோகம் ஸ்புரித்தது.
ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிகசிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : ||-12-
ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் , பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.
இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலைபெறவேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே
மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
—————-
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் —
ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார்
வேங்கடசாவதாரோயம் தத்கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் ||
ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ? அவரது
திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்
———–
அடுத்த ச்லோகத்தில்,
ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் ||
உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத
சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த
யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் —————-என்கிறார்
இப்படி, யதிராஜரே , கவிராஜராக –கவி ச்ரேஷ்டராக–ஸ்வாமி
தேசிகனாக அவதரித்தார் என்பது, பூர்வாசார்யர்கள் துணிபு. இந்த கவிராஜருக்கு, யதிராஜரிடம் , அளவில்லாத பக்தி.
———–
கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்—-
லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : ||
வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்
( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு,
எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த
ஸம்வாதம் , முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக———என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதிசெய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )
—————
ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்
பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராய ணதநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் ||
ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து , பாதராயணராகிய
ஸ்ரீ வேத வ்யாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு,
ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாயபரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.
————–
தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் ;–
காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் ||
யதிராஜர், வேதங்களாகிற பத்ரவேதியை அடைந்தபோது,
புத்த மதம் நழுவுகிறது ; கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?
—————–
ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.
உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||
பெருமைமிகு திருவரங்கச்செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து, அவரது ஸம்பந்தத்தால்
செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக ! ( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே ( இன்னும் பல )
———–
சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார் ;–
யதி , சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்
ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ்த்ரைவித்யமாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் ||
நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு ுழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )
கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சிவாய்த்தான் மண்டபத்துக்குப் போனபோது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,
அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,
ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் ) ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.
இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.
——————–
இந்தச் சமயத்தில், ஓரிரு வார்த்தைகள்—ஸ்ரீ ராமானுஜ தர்ஸநம் , ஸ்ரீ ராமானுஜ ஸம்ப்ரதாயம் –இவைகளைப் பற்றி
ஸ்ரீ N .S .R ஸ்வாமி என்று போற்றப்படும், ஸ்ரீ உ.வே. ராமாநுஜதாதாசார்யர் சொன்னவை–
நம்முடையது…ராமாநுஜ ஸித்தாந்தம்—அப்படியென்றால் என்ன ?
சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதென்றால், ஸ்ரீ ராமாநுஜரால் தழுவப்பட்ட கொள்கை;
இன்னும் சொல்வதென்றால், ஸ்ரீ ராமாநுஜரால் ப்ரமாணிகம் என்று நிச்சயிக்கப்பட்டு, பரப்பப்பட்ட வேதங்களின் அர்த்த விசேஷங்கள். இதுவே விசிஷ்டாத்வைத –ராமானுஜ ஸித்தாந்தம் . ராமாநுஜ ஸித்தாந்தம் என்பது, ஆசார்ய–சிஷ்ய பரம்பரையாகத் தொடர்ந்து வரும் உபதேசங்கள். }
——–
ஸ்தோத்ரங்கள், பாசுரங்கள் இவைகளைச் சொல்வதற்கு முன்பு , ஆசார்ய வந்தனம் செய்துப் பிறகு தொடங்குவது ,தொன்றுதொட்டு இருந்துவரும் மரபு.
ஸ்ரீ ஆளவந்தார், ஸ்தோத்ர ரத்னத்தில், முதல் மூன்று ச்லோகங்களில், ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு, மங்கள ச்லோகங்கள் இடுகிறார்.
1. நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஸயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||
சிந்தனைக்கெட்டாத ,ஆச்சர்யமான, அநாயாசமாகத் தோன்றிய ஜ்ஞாநமும், வைராக்யமும் நல்லறிவும் சேர்ந்த
குவியலாக, ஆழமான பகவத் பக்தியின் கடலுமான, ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு வந்தனம் (நமஸ்காரம்)
2. தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநுராஹமஹிமா திசயாந்த ஸீம்நே |
நாதாய நாதமுநயேத்ர பரத்ர சாபி —
நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் ||
ஜ்ஞாந ,வைராக்ய, பக்தி நிறைந்தவரும் ,மது என்கிற அசுரனை அழித்த பகவானின் ( ஸ்ரீ ஹயக்ரீவரின்) திருவடித் தாமரைகளில்
உண்மையான ஜ்ஞாநம் உடையவரும், அன்புக்கும், மேன்மையின் சிறப்புக்கும் ,
அந்த ஸீம்நே —கடைசி எல்லையானவரும், ஸ்ரீ வைணவர்களுக்கு, நாதருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு நமஸ்காரம்
யாருடைய திருவடிகள், இங்கும் அங்கும் ப்ரக்ருதி மண்டலத்திலும் பரமபதத்திலும் கூட . மதீயம் சரணம்—எனக்கு உண்டான சரணமாகும்.
3. பூயோ நமோ பரிமிதாச்யுத பக்திதத்வ —
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி : |
லோகேவதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி–
யோகாய நாத முநயே யமிநாம் வராய ||
அளவே இல்லாத அச்யுதன் ( ஸ்ரீ தேவநாதன் )விஷயமான ,
பக்தி,தத்வ ஜ்ஞானம் , இவைகளின் அமுதத் தடாகத்தில்( தேக்கம் ) பரிவாஹ —மேலே ததும்புகிற, தமது ஸ்ரீஸுக்திகள்,
ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் , இவைகளால், இவ்வுலகில் இறங்கிய பகவானைப் பற்றிய பக்தியோகியும்,
யோகிஸ்ரேஷ்டருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு, மேன்மேலும் நமஸ்காரம்.
——————
ஸ்ரீ ஆளவந்தாரின் ஆசார்யன், ஸ்ரீ மணக்கால் நம்பி, இவரின் ஆசார்யன், ஸ்ரீ உய்யக்கொண்டார் ,
அவருடைய ஆசார்யன் ஸ்ரீமந் நாதமுனிகள். மேற்சொன்னவாறு, மூன்று மங்கள ச்லோகங்களை
தம் ஆசார்யனின், ஆசார்யனுக்கு ஆசார்யன் , என்று மூன்று படிகளுக்குமேலே –ஆசார்ய சம்பந்தம் (பிறவியில்) ஏற்படுவதால், முதல் ச்லோகம், ப்ராசார்யனுக்கு என்று–2ம் ச்லோகம், அதற்கும் மேலே ஆசார்யன் என்று 3ம் ச்லோகம் என்று மூன்று ச்லோகங்களிலும்
மணக்கால் நம்பியையோ (ஸ்ரீராமமிஸ்ரர் ), உய்யக்கொண்டாரையோ (ஸ்ரீ புண்டரீகாக்ஷர்) வந்திக்காமல்,
அவர்கட்கும் ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளைத் துதிக்கிறார்.
இதற்கு, ஸ்வாமி தேசிகன், ஸ்தோத்ர ரத்ன பாஷ்யத்தில் சொல்லும்போது,ஆசார்யனுடன்
ப்ராசார்யனும் இருப்பாரேயானால், ப்ராசார்ய வந்தனம் ப்ரதானம் என்கிறார்.
————-
ஸ்ரீ ஆளவந்தார், இப்படித் தன்னுடைய க்ரந்தங்களில் மங்கள ச்லோகம் இடும் போது, ஸ்ரீ உடையவரோ கீதாபாஷ்யத்தின் தொடக்கத்தில்,
யத்பதாம் போருஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ : |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||
என்று ஸ்ரீ ஆளவந்தாருக்கு மங்கள ச்லோகம் இடுகிறார்.
குருபரம்பரைப்படி, ஸ்ரீ ராமாநுஜருக்கு முன்பு , பெரியநம்பிகள் (மஹா பூர்ணர் ); அவருடைய ஆசார்யன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீ இராமாநுஜர் , தன் ஆசார்யனின் ஆசார்யனுக்கு, மங்கள ச்லோகம் இடுகிறார்.
ஸ்வாமி தேசிகன், தன்னுடைய க்ரந்தங்களில் ( மேலே காண்பிக்கப்பட்ட சில உதாரணங்கள் )
இதே வழியைப் பின்பற்றி இருக்கிறார்.
———-
ஆனால்,யதிராஜ ஸப்ததியில் ,
பிரதம ஆசார்யனான ஸ்ரீமன் நாராயணன் , பிறகு , பெரிய பிராட்டி, பிறகு விஷ்வக்ஸேநர் ,
நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி ஆளவந்தார், பெரியநம்பி ( மஹா பூர்ணர் ),
யதிராஜர் என்கிற வரிசையில், மங்கள ச்லோகம் இடுகிறார்.
————-

ஸ்வாமி தேசிகன்

            வேங்கடமுடையானின் திருமணியின் அம்சம் என்று கொண்டாடும்படி, கச்சியில் புனிதமான தூப்புல் எனும் திவ்யதேசத்தில் விபவஸம்வத்ஸரத்தில் அனந்த ஸூரியின் திருக்குமாரராய் அவதரித்தார். அரங்கநகர் அப்பனால் தனக்கே யுரியதான வேதாந்தாசார்ய பதத்தை அளிக்கப் பெற்றார். நூற்றுக்கணக்கான க்ரந்தங்களை அருளிச் செய்தார். தர்சனத்தையும், திராவிட உபநிஷத்துக்களையும் பல வகையில் காத்தளித்தார். ஸ்ரீவைஷ்ணவ ஸாம்ராஜ்ஜியத்தில் பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டார். உலகம் உய்யும் வழிகளை வகுத்தளித்தார். ஆசார்யோத்தமனாயும், ஸாக்ஷாத் திருவேங்கட முடையானாகவும் திகழ்ந்து நின்றார். இவரது தனியன்கள்;

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ

வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி

ராமாநுஜ தயாபாத்ரம் க்ஞான வைராக்ய பூஷணம்

ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்  முதலியன.

இவர் வைபவத்தை விளக்குவது இம்மலர். (Sri Vedanta Desika 7th Centenary Commemoration Volume is referred to here)

 ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ |

 வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி||

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்த்து வாதாடும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும், சிறந்த செல்வத்தைப் பெற்றவரும் (ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் பல), வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரும் ஆகிய ஸ்ரீ வேதாந்தாசார்யர்  என்னுடைய மனதில் எப்பொழுதும் உறைவாராக.

திருவவதாரம்

திருநாமம்: வேங்கடநாதன்

அவதரித்த வருடம்: கலியுகம் 4370 (1268 கி.பி.)

மாதம், திருநக்ஷத்ரம்:  புரட்டாசி,  திருவோணம் (திருவேங்கடமுடையான் திருநக்ஷத்ரம்)

அவதாரஸ்தலம்: காஞ்சிபுரம்,  திருத்தண்கா

கோத்ரம்: விச்வாமித்திர கோத்ரம்

அவதாரம்: திருவேங்கமுடையானின் கண்டம் (மணி) – சங்கல்ப ஸூர்யோதய என்று தன்னுடைய கிரந்தத்தில் கூறியது போல.

பெற்றோர்கள்: அநந்த சூரி, தோத்தாரம்பா

பரமபதம்: சுமார் நூறு வயதிருக்கும் பொழுது, அதாவது  கலியுக வருடம் 4470 (கி.பி. 1368 ல்) ஸ்ரீரங்கத்திலிருந்து பரமபதத்துக்கு எழுந்தருளினார்.

இவர் ஸ்ரீ ரங்கநாதரிடமிருந்து ” வேதாந்தாசார்யர் ” என்கின்ற திருநாமமும், ஸ்ரீ ரங்க நாச்சியாரிடமிருந்து ” கவிதார்க்கிக கேசரீ ” மற்றும் “ஸர்வதந்திர ஸ்வதந்திரர்” என்ற திருநாமங்களையும் பெற்றார்.

இவருக்கு “வரதாசாரியார்” என்ற திருநாமம் உடைய ஒரு புதல்வரும், “ப்ரஹ்மதந்திர ஸ்வதந்திரர் ஜீயர்” என்ற ஜீயரும் சிஷ்யர்களாக இருந்தனர்.

கிடாம்பி ஆச்சானின் பேரன் கிடாம்பி அப்புள்ளார், ஸ்ரீ நடாதூர் அம்மாளின் சிஷ்யர்களில் ஒருவர் ஆவார்.

திருவிருத்தம் 3 ல் “அப்புள்” என்பது கருடனை குறிப்பிடும். அப்புள்ளார் என்ற இவருடைய பெயரில் உள்ள வார்த்தைக்கு,  கருடனைப் போன்ற குணங்கள் உடையவர் என்பதாகும். இவர்க்கு “வாதி ஹம்ஸாம்புவாஹர்” என்ற மற்றொரு திருநாமம் உள்ளது. இதற்கு ஹம்சங்களை தோற்கடிக்கக் கூடிய மேகத்தைப் போன்றவர் என்ற பொருளாகும். “ராமானுஜர்” என்பது இவருடைய இயற் பெயராகும்.

இப்படியாகிய ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரின் மருமகனும், சிஷ்யரும்தான் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ வேதாந்தாசார்யர்  ஆவார்.

வேதாந்தாசார்யர்  தனது சிறு பிராயத்திலேயே நடாதூர் அம்மாளின் காலக்ஷேப கோஷ்டிக்கு தன்னுடைய மாமா (ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்) உடன் சென்றார்.  வேதாந்தாசார்யர்  தனது சிறு பிராயத்திலேயே நடாதூர் அம்மாளின் காலக்ஷேப கோஷ்டிக்குத்  தன்னுடைய மாமா ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாருடன் சென்றார்.  இது பற்றி வேதாந்தாசார்யர் ,  ஸ்ரீ  நடாதூர் அம்மாள்  இவர்  விசிஷ்டாத்வைத  ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை  எதிர்க்கும் அனைத்தையும்  அகற்றி நிலை நாட்டுவார் என்று  தன்னை ஆசிர்வதித்ததாக  குறிப்பிடுகிறார்.

அருளிச்செய்த கிரந்தங்கள் –

ஸ்ரீ  நடாதூர் அம்மாள் ஆசிர்வதித்ததுபோல் ஸ்ரீ வேதாந்தாசார்யர்  எண்ணற்ற கிரந்தங்களையும், விசிஷ்டாத்வைதத்தை எதிர்த்த பல தத்துவ ஞானிகளையும், வாதிகளையும் வென்றார்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர்  நூற்றுக்கணக்கான கிரந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை ஸம்ஸ்க்ருதம், தமிழ் மற்றும் மணிப்ரவாளம் (ஸம்ஸ்க்ருதமும் தமிழும் கலந்த) போன்ற மொழிகளில் அருளியுள்ளார்.

இவருடைய கிரந்தங்களில் முக்கியமானவை பின்வருமாறு:

  • தாத்பர்ய சந்திரிகை – கீதா பாஷ்யத்தின் வ்யாக்யானம்
  • தத்வதீகை – ஸ்ரீ பாஷ்யத்தின் ஒரு பகுதிக்கு வ்யாக்யானம்
  • ந்யாய சித்தாஞ்சனம் – நம்முடைய சம்பிரதாயத்தின் தத்துவத்தை ஆய்வு செய்யும் நூல்
  • சத தூஷணி- அத்வைத தத்துவத்தை எதிர்த்து வாதிடும் நூல்.
  • அதிகரண  சாராவளி -ஸ்ரீ பாஷ்யத்தின் உட்பிரிவுகளைப் பற்றியது.
  • தத்வ முக்தாகல்பம் – நம்முடைய தத்துவத்தைப் பற்றி விளக்கும் நூல்; “ஸர்வார்த்த ஸித்தி” என்பது இதனுடைய வ்யாக்யானம்.
  • சது:ச்லோகிக்கும், கத்ய த்ரயத்திற்கும் ஸம்ஸ்க்ருதத்தில் பாஷ்யங்கள்.
  • நாடக வடிவில் அமைந்துள்ள ஸங்கல்ப சூர்யோதயம்.
  • தயா சதகம், பாதுகா சஹஸ்ரம், யாதவப்யுதயம், ஹம்ச ஸந்தேசம்.
  • ரஹஸ்யத்ரய ஸாரம், ஸம்ப்ரதாய பரிஸுத்தி , அபயப்ரதான ஸாரம், ஸ்ரீபரமதபங்கம்.
  • முனிவாஹன போஹம் – அமலனாதிபிரானின் வ்யாக்யானம்.
  • ஆகார நியமம் – ஆகார பழக்க வழக்கங்களை பற்றிய தமிழ் நூல்.
  • ஸ்தோத்ரங்கள்- தசாவதார ஸ்தோத்ரம், கோதா ஸ்துதி, ஸ்ரீ ஸ்துதி, யதிராஜ சப்ததி.
  • த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, த்ரமிடோபநிஷத் ஸாரம் – இவை திருவாய்மொழியின் உள்ளர்த்தங்களையும் மேலும் பலவற்றையும் விளக்கும்.

இக்கட்டுரையில் இது வரை கொடுக்கப்பட்டுள்ளவை பெரும்பாலும் புத்தூர் ஸ்வாமி பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள ஒரு மலரை அடிப்படையாக கொண்டதாகும்.

வேதாந்தாசார்யாரும் மற்ற ஆசார்யார்களும்

  • வேதாந்தாசார்யர், பிள்ளை லோகாசாரியரை பெருமைப்படுத்தும்படியான “லோகாசார்ய பஞ்சாசத்” என்ற அற்புதமான பிரபந்தத்தை அருளிச் செய்துள்ளார். வேதாந்தாசார்யர்  பிள்ளை லோகாசாரியரை விட ஐம்பது வயது இளையவராயினும், இவர் பிள்ளை லோகாசாரியரை போற்றிப் புகழ்வதைப் பற்றி இந்த கிரந்தத்திலிருந்து எளிதில்  புரிந்து கொள்ளலாம்; இந்த கிரந்தத்தை இன்றும் திருநாராயணபுரத்தில் (கர்நாடக மாநிலத்தில் உள்ள மேலக்கோட்டை) சேவிக்கப்படுகிறது.
  • வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர், “தத்வதீபம்” என்ற தன்னுடைய கிரந்தத்தில் வேதாந்தாசார்யருடைய க்ரந்தங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
  • ஸ்ரீ மணவாள மாமுனிகள், தனது தத்வத்ரயம் மற்றும் முமுக்ஷுப்படி(பிள்ளை லோகாசார்யார் எழுதிய) வ்யாக்யானங்களில் வேதாந்தாசார்யர்  அருளிய வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ளார்; மேலும் மணவாள மாமுனிகள், வேதாந்தாசார்யரை அன்புடன் ” அப்யுக்தர்” என்று அழைக்கின்றார்.
  • மணவாள மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் ஒருவராகிய ஸ்ரீ எறும்பியப்பா, தனது விலக்ஷணமோக்ஷதிக்நிர்ணயத்தில் வேதாந்தாசார்யரின் “ந்யாய விம்சதி”யை மேற்கோள் காட்டி அதன் சாரார்த்தத்தையும் கொடுத்துள்ளார்.
  • ஸ்வாமி  தொட்டாசார்யர், சோழசிம்மபுரம்  (சோளிங்கர்) , வேதாந்த தேசிகனின் “சத தூஷணி”க்கு “சண்டமாருதம்” என்ற விளக்க உரை எழுதியுள்ளார். அதனால் இவர் ” சண்டமாருதம் தொட்டாசார்யர்” என்று அழைக்கப்பட்டார். இவரை தொடர்ந்து வரும் ஆசார்யர்கள் இன்றும் இப்பெயரை வைத்துக் கொள்கின்றனர்.
  • பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் அவருடைய சிஷ்யர்களும் மற்றும் அவர்களுடைய வம்சத்தில் வந்தவர் அனைவரும் , வேதாந்தாசார்யரிடம் கொண்டுள்ள ஈடுபாடு மிகவும் தெரிந்ததே. திருவிந்தளூரில் வசிக்கும் மற்றும் தெற்கு பகுதியில் உள்ளவர்களும் வேதாந்தாசார்யரின் திருகுமாரராகிய நயினாராசாரியரின் திருநாமத்தைத் தங்களுடைய திருநாமத்துடன் சேர்த்து அழைக்கின்றனர். இது  வேதாந்தாசார்யரின் திருகுமாரரிடம் தங்களுடைய  ஈடுபாட்டைத் தெரியப் படுத்துவதாக உள்ளது.
  • வேதாந்தாசார்யரின் க்ரந்தங்களுக்கு பல்வேறு ஆசார்யர்களும் வித்வான்களும் வ்யாக்யான உரை எழுதியும், மேற்கோள் காட்டியும் உள்ளார்கள்.

இவற்றுள் சில பின்வருமாறு:

  • ஸ்வாமி தொட்டாசார்யரின் சீடராகிய நரசிம்மராஜாசார்ய ஸ்வாமி , “ந்யாய பரிஸுத்தி” என்ற வேதாந்தாசார்யரின் கிரந்தத்திற்கு வ்யாக்யான உரை எழுதியுள்ளார்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மைசூர் (மண்டயம்) அனந்தாழ்வான், வேதாந்தாசார்யரின் கிரந்தங்களை தான் அருளிச் செய்தவைகளில் பல இடங்களில் கோடிட்டுக் காண்பித்துள்ளார்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின்  பிற்பகுதியில்  காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குன்றப்பாக்கம் ஸ்வாமி, தனது “தத்வ-ரத்னாவளி”யில், வேதாந்தாசார்யரை “ஜயதி பகவான் வேதாந்தராயஸ் ஸ தார்க்கிக-கேஸரீ” என்று மிகவும் அன்புடன் அழைத்துள்ளார்.

ஸ்ரீ வேதாந்தாசார்யரும் , தனது  பூர்வாசார்யர்களுக்கும் மற்றும்  அவருடைய காலத்தில் வாழ்ந்த ஆசார்யர்களுக்கும் அபிமான அன்பையும் மதிப்பையும் தந்துள்ளார். இது ” ஸ்ரீ அபீதி-ஸ்தவம்” என்ற ச்லோகத்தின் மூலம் உறுதியாகின்றது. “க்வச ந ரங்கமுக்யே  விபோ! பரஸ்பர ஹிதைஷிணாம் பரிஸரேஷு மாம் வர்த்தய” (ஆண்டவனே!  ஸ்ரீ ரங்கத்தின் நலம் கருதும் அடியார்களுடைய பாத கமலங்களில் அடியேன் என்றும் இருக்க அருள் புரிவீராக).

“பகவத்-த்யான சோபனத்தின்” கடைசி ச்லோகத்தில், ஸ்ரீ வேதாந்தாசார்யர் பல அறிவார்ந்த அறிஞர்களையும், ஸ்ரீரங்கத்தின் கலை ப்ரியர்களையும் மிகவும் உயர்த்திப் பாராட்டியுள்ளார். ஏனென்றால் தன்னுடைய    எண்ணங்கள் தெளிவு பெறவும், எளிய மகிழ்வளிக்கக்கூடிய பாணியை அடைவதற்கும் அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர், ஸ்ரீ ராமாநுஜரிடம் கொண்டுள்ள பக்தி நன்றாக அறிந்ததே. இவரது ந்யாஸ திலகத்தில் “உக்த்ய தனஞ்சய” என்று தொடங்கும் வரிகளில், எம்பெருமானிடம்  அவருடைய கருணனையை மட்டும் அருளுமாறு வேண்டுகிறார். ஏனென்றால்  ஸ்ரீ ராமானுஜருடன் தமக்கு ஏற்பட்ட சம்பந்தத்தால் மோக்ஷம் உறுதியாக கிட்டும் என்று கூறுகிறார், இதிலிருந்து ஸ்ரீ இராமாநுஜரிடம் இவர் கொண்டுள்ள பக்தி புலப்படுகிறது.

இதிலிருந்து ஸ்ரீ வேதாந்தாசாரியரும்   மற்ற அறிஞர்களும் ஒருவருக்கொருவர் மதிப்பும், மரியாதையை, மற்றும் அன்பும் கொண்டு உரையாடல்களை மேற்கொண்டு சுமுகமான ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு வழி வகுத்தனர்.

ஆசார்ய சம்பு

ஸ்ரீ. சத்தியமூர்த்தி ஐயங்கார், குவாலியர் (குவாலியர் ஸ்வாமி) 1967 ல் வெளியிட்ட தனது “A critical appreciation of Sri Vedanta Desika Vis-à-vis the Srivaishnavite World”, என்னும் ஆங்கிலப்  புத்தகத்தில் ஸ்ரீ வேதாந்தாசாரியரைப் பற்றி அறிந்து கொள்ள ஆதாரமான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். கீழே கொடுக்கப்பட்டுள்ளவையுள் அநேகமாக இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

கி.பி. 1717 ஆம் ஆண்டு வாழ்ந்த “கௌசிக கவிதார்க்கிக சிம்ஹ வேதாந்தாசாரியர்”  பெரும் பண்டிதரும் கவிஞரும் ஸம்ஸ்க்ருதத்தில் கவிதையாகவும் உரை நடையாகவும் எழுதிய “வேதாந்தாசார்ய விஜயா” என்றும் “ஆசார்ய சம்பு ” எனவும் அறியப்படும் நூலை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த சம்பூ கிரந்தம் ஒன்று தான் வேதாந்தாசாரின் வைபவத்தை உள்ளபடி உணர்த்தும் நூலாகும். இதில் ஆறு ஸ்தபகங்கள் உள்ளன.

  • முதல் ஸ்தபகத்தில் மங்களா சரணம், க்ரந்த கர்த்தாவின் வம்சாவளி பற்றிய பேச்சு, காஞ்சிபுரியின் வர்ணனை மற்றும் வேதாந்தாசார்யரின் பிதாமஹரான ஸ்ரீ புண்டரீகாக்ஷ யஜ்வாவின் வர்ணனை ஆகியவை உள்ளது.
  • இரண்டாவது ஸ்தபகத்தில், வேதாந்தாசார்யருடைய திருத்தகப்பனாருமான அநந்த சூரி பற்றிய பேச்சு, அவருடைய தாயார் கர்ப்பவதியானது, திருமலை மால் திருமணி அந்த கர்ப்பத்திலே வந்து ஆவேசித்தது ஆகியவை சொல்லப்பட்டுள்ளது.
  • மூன்றாவது ஸ்தபகத்தில்- வேதாந்தாசார்யருடைய திருவவதாரம், பால்ய வர்ணனம், ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபம் செய்து வரும் நடாதூரம்மாள் திருமாளிகைக்கு தம்முடைய மாதுலரான கிடாம்பியாப்புள்ளாரோடு சென்று அங்கு அம்மாளுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றது, தக்க காலத்தில் உபநயனம் நடைபெற்று  வேதாத்யானமும், சாஸ்த்ர பாராயணமும் செய்தது, விவாஹம் செய்து  கொண்டது, ஹயக்ரீவ மந்த்ரத்தை ஜபித்தது, வாதிகளை வென்றது, ந்யாய ஸித்தாஞ்ஜநம் முதலிய கிரந்தங்கள் சாதித்தது, கவிதார்க்கிகஸிம்ஹ என்ற விருது பெற்றது ஆகியவை சொல்லப்பட்டுள்ளது.
  • நான்காவது ஸ்தபகத்தில் காஞ்சி  வைகாசோத்சவத்தில் பங்கு கொள்ளுதல், வரதராஜ பஞ்சாசத் ஸ்தோத்ரம் அருளிச் செய்தது, வித்யாரண்ய யதி என்ற அத்வைத ஞானியை வாதத்தில் வென்றது, புரட்டாசி மாதத்தில் திருவேங்கடமுடையானுத்சவத்தில் கலந்து கொண்டது ஆகியவை சொல்லப்பட்டுள்ளது.
  • ஐந்தாவது ஸ்தபகத்தில் திருவேங்கடயாத்திரை, திருமலையில் தயா சதகமருளிச் செய்தது, வித்யாரண்யர் அழைப்பின் பேரில் விஜயநகரத்தரசின் இராஜ சபையில் வைராக்ய பஞ்சகத்தை அருளிச்செய்தது, வடநாட்டிற்கு சென்று கங்காநதி தீர்த்த யாத்திரை செய்தருளி பின்னர் காஞ்சிபுரம் வந்தது, வித்யாரண்யருக்கும் அக்ஷ்ஷோபிய முனி என்ற த்வைத அறிஞருக்கும் இடையே நடைபெற்ற வாதத்திற்கு மத்யஸ்தாபிப்ராயம் செய்து வைத்தது, பின்னர் ஸ்ரீரங்கநாதனைச் சேவிக்க விரும்பிய வேதாந்தாசார்யர் திருவஹீந்திரபுரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து நிறைய ஸ்தோத்ரங்களையும், கிரந்தங்களையும் இயற்றியது, ஸ்ரீமுஷ்ண யாத்திரை முடித்து பின்னர் கோயில் சேர்ந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.
  • ஆறாவது ஸ்தபகத்தில், ஸ்ரீ வேதாந்தாசார்யர் ஸ்ரீரங்கநாதனை சேவித்து பகவத் த்யாந சோபனம் முதலான ஸ்துதிகளருளிச்செய்தது, க்ருஷ்ணமிச்ர என்கிற துர்வாதியோடு பதினெட்டு நாள் வாதயுத்தம் செய்து வெற்றி பெற்றது, வேதாந்தாசார்யர் என்றும் ஸர்வதந்த்ர ஸ்வதந்திரரென்றும் விருதுகள் பெற்றது, கவித்வச் செருக்குடன் வந்த துர்வாதியின் கர்வத்தை அகற்ற பாதுகா ஸஹஸ்ரமருளிச் செய்தது, முகலாயர்கள் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டது, தேசத்தின் மேற்கு பகுதியில் சில காலம் தங்கியிருந்து அபீதிஸ்தவத்தை அருளிச்செய்தது, பின்னர் காஞ்சிபுரம் வந்தது, அங்கு ஒரு பாம்பாட்டியின் செருக்கை அடக்க கருட தண்டகமருளிச் செய்தது, பிறகு திருகுமாரர் அவதரித்தது, ரஹஸ்யத்ரயசாரம் அருளிச் செய்தது ஆகியவைகளை கொண்டு இந்த கிரந்தம் முடிவு பெறுகிறது.

ஆசார்ய சம்பு என்ற புகழ் பெற்ற இந்த நூல் ஸமஸ்க்ருத பண்டிதர்கள் மிகவும் விரும்பிப் படிப்பது; பொக்கிஷமான இந்த அறிய நூலை மீண்டும் வெளியிட முயற்சி ஏதும் எடுக்கப்படவில்லை.

————-

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்த்து வாதாடும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும், சிறந்த செல்வத்தைப் பெற்றவரும் (ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் பல), வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரும் ஆகிய ஸ்ரீ வேதாந்தாசார்யர்  என்னுடைய மனதில் எப்பொழுதும் உறைவாராக.

திருவவதாரம்

திருநாமம்: வேங்கடநாதன்

அவதரித்த வருடம்: கலியுகம் 4370 (1268 கி.பி.)

மாதம், திருநக்ஷத்ரம்:  புரட்டாசி,  திருவோணம் (திருவேங்கடமுடையான் திருநக்ஷத்ரம்)

அவதாரஸ்தலம்: காஞ்சிபுரம்,  திருத்தண்கா

கோத்ரம்: விச்வாமித்திர கோத்ரம்

அவதாரம்: திருவேங்கமுடையானின் கண்டம் (மணி) – சங்கல்ப ஸூர்யோதய என்று தன்னுடைய கிரந்தத்தில் கூறியது போல.

பெற்றோர்கள்: அநந்த சூரி, தோத்தாரம்பா

பரமபதம்: சுமார் நூறு வயதிருக்கும் பொழுது, அதாவது  கலியுக வருடம் 4470 (கி.பி. 1368 ல்) ஸ்ரீரங்கத்திலிருந்து பரமபதத்துக்கு எழுந்தருளினார்.

இவர் ஸ்ரீ ரங்கநாதரிடமிருந்து ” வேதாந்தாசார்யர் ” என்கின்ற திருநாமமும், ஸ்ரீ ரங்க நாச்சியாரிடமிருந்து ” கவிதார்க்கிக கேசரீ ” மற்றும் “ஸர்வதந்திர ஸ்வதந்திரர்” என்ற திருநாமங்களையும் பெற்றார்.

இவருக்கு “வரதாசாரியார்” என்ற திருநாமம் உடைய ஒரு புதல்வரும், “ப்ரஹ்மதந்திர ஸ்வதந்திரர் ஜீயர்” என்ற ஜீயரும் சிஷ்யர்களாக இருந்தனர்.

கிடாம்பி ஆச்சானின் பேரன் கிடாம்பி அப்புள்ளார், ஸ்ரீ நடாதூர் அம்மாளின் சிஷ்யர்களில் ஒருவர் ஆவார்.

திருவிருத்தம் 3 ல் “அப்புள்” என்பது கருடனை குறிப்பிடும். அப்புள்ளார் என்ற இவருடைய பெயரில் உள்ள வார்த்தைக்கு,  கருடனைப் போன்ற குணங்கள் உடையவர் என்பதாகும். இவர்க்கு “வாதி ஹம்ஸாம்புவாஹர்” என்ற மற்றொரு திருநாமம் உள்ளது. இதற்கு ஹம்சங்களை தோற்கடிக்கக் கூடிய மேகத்தைப் போன்றவர் என்ற பொருளாகும். “ராமானுஜர்” என்பது இவருடைய இயற் பெயராகும்.

இப்படியாகிய ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரின் மருமகனும், சிஷ்யரும்தான் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ வேதாந்தாசார்யர்  ஆவார்.

வேதாந்தாசார்யர்  தனது சிறு பிராயத்திலேயே நடாதூர் அம்மாளின் காலக்ஷேப கோஷ்டிக்கு தன்னுடைய மாமா (ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்) உடன் சென்றார்.  வேதாந்தாசார்யர்  தனது சிறு பிராயத்திலேயே நடாதூர் அம்மாளின் காலக்ஷேப கோஷ்டிக்குத்  தன்னுடைய மாமா ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாருடன் சென்றார்.  இது பற்றி வேதாந்தாசார்யர் ,  ஸ்ரீ  நடாதூர் அம்மாள்  இவர்  விசிஷ்டாத்வைத  ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை  எதிர்க்கும் அனைத்தையும்  அகற்றி நிலை நாட்டுவார் என்று  தன்னை ஆசிர்வதித்ததாக  குறிப்பிடுகிறார்.

அருளிச்செய்த கிரந்தங்கள் –

ஸ்ரீ  நடாதூர் அம்மாள் ஆசிர்வதித்ததுபோல் ஸ்ரீ வேதாந்தாசார்யர்  எண்ணற்ற கிரந்தங்களையும், விசிஷ்டாத்வைதத்தை எதிர்த்த பல தத்துவ ஞானிகளையும், வாதிகளையும் வென்றார்.

நமது பூர்வாசார்யர்களின் ஞானம் கடலளவு ஆழமானதாக இருந்தது, பராசரா ! அவருக்கு ” ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்” (அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்) என்ற பெயரை நம் தாயாரே (ஸ்ரீ ரங்கநாச்சியார்) சூட்டி இருக்கிறாள் என்றால் அவரது ஞானம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

வேதாந்தாசார்யருக்கு “கவிதார்க்கிக கேசரி” (கவிகளுக்குள்ளே சிங்கம் போன்றவர் ) என்ற பெயரும் உண்டு. ஒரு சமயம் அவர் க்ருஷ்ணமிச்ரர் என்ற அத்வைதியுடன் 18 நாட்களுக்கு வாதப்போர் புரிந்தார். வேதாந்தசார்யார் ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற க்ரந்தத்தையும் எழுதினார், ஒரு ஆணவப் பண்டிதனின் சவாலுக்கு பதிலளிக்க. நம்பெருமாளின் திவ்யபாதுகைகளைப் பற்றிய 1008 வரிகள் கொண்ட க்ரந்தமாகும் இது.

அவருடைய அபீதிஸ்தவத்தில், அவர் நம்பெருமாளிடம் “எம்பெருமானே, நான் ஸ்ரீரங்கத்தில் பரஸ்பர நலம் விரும்பிகளின் திருவடித்தாமரைகளின் கீழ் வாசம் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மணவாள மாமுனிகள், எறும்பியப்பா , வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர், சோளசிம்மபுரத்து தொட்டையாசார்யார் (சோளிங்கர்) ஆகியோரெல்லாம் அவரது க்ரந்தங்களை தமது க்ரந்தங்களில் மேற்கோள் காட்டி இருக்கிறார்கள். வேதாந்தாசார்யருக்கு பிள்ளை லோகாசார்யரிடம் மிகுந்த அபிமானம் இருந்தது. இதனை அவர் எழுதிய “லோகாச்சார்ய பஞ்சாஸத்” என்ற நூலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த க்ரந்தம் திருநாராயணபுரத்தில் (மேலக்கோட்டை, கர்நாடக மாநிலம்) முறையாக அநுஸந்திக்க படுகிறது.

வேதாந்தாசார்யருக்கு ஸ்ரீ ராமானுஜர் மேல் இருந்த பக்தி தெரிந்ததே. ந்யாஸ திலகம் என்ற அவருடைய க்ரந்தத்தில் “உக்த்ய தனஞ்ஜய’ என்ற வரியில் , அவர் பெருமாளிடம் நீர் மோக்ஷம் அளிக்காவிடிலும் ராமானுஜ சம்பந்தத்தால் எனக்கு மோட்சம் நிச்சயம் உண்டு என்று உரைக்கிறார்.

ராமாநுஜ தயா பாத்ரம், ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||—
நம் பிதாமஹர் (ப்ரஹ்மா) சம்பாதித்த தனம் என்று, ஸ்வாமி தேசிகன் வைராக்ய பஞ்சகத்தில் ,
கடைசியாகச் சொன்னாரல்லவா —இது சம்பந்தமாக,
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி , தன்னுடைய அக்ஷய ஆராதனத்தில்-“தாது” வருஷ ஸ்லோகத்தில்,
தாது : ப்ரக்ருஷ்டோ ஹி வச : ப்ரபஞ்சே
தாதா ப்ரக்ருஷ்டோஹி விஸர்க க்ருத்யே |
தாதூ பமோ வேங்கடநாத வைத்ய :
த நோ து சம் ஸங்கட மோ சநாத் மே ||
அதாவது, ப்ரபஞ்சம் —–இது வாக்யங்களால் ஆன ப்ரபஞ்சம்–இதில்,“தாது”–ப்ரக்ருஷ்டமானது. விஸர்கத்தில் (ஸ்ருஷ்டியில் ),
தாதா எனப்படும் ப்ரஹ்மா சிறந்தவர்—வேங்கடநாதன் என்கிற ஸ்வாமி தேசிகன்,
வைத்யர் —தாதுவுக்கு நிகரானவர்.
அவர், நம்முடைய சங்கடங்களைப் போக்கி, மங்களத்தைக் கொடுப்பாராக —என்கிறார்.
இப்போது
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம், வந்தே வேதாந்த தேசிகம் –
ஸ்ரீமத்—-ஸ்ரீமதே —–
ஸ்ரீமதே, என்றால்,
ஆச்சார்யர் க்ருத்யங்கள் நான்கு
1. அத்யயனம் 2.அத்யாபனம் 3. ப்ரவசனம் 4.க்ரந்த லேகநம்—
இப்படிப்பட்ட ஆசார்யன். “சிஷ்ய வத்ஸலன் ” ஆகிறார்.
இந்த ஆசார்யன், உபதேசம் செய்து சிஷ்யர்களை ரக்ஷிக்கிறார் ;
இது ரக்ஷணம் . க்ரந்தம் மூலமாக, ரக்ஷிப்பது,” ஸூரக்ஷணம் “.அதனால் தான்,
உபதேசம் மாத்ரமல்லாமல், க்ரந்தங்களையும் அருளிச் செய்த
ஆசார்யர்களை,” ஸ்ரீமதே வேதாந்த குருவே நம : ” , ” ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ” என்று
பக்தியுடன் அநுஸந்திக்கிறோம் .
ஸ்வாமி தேசிகன், உபதேசம் மாத்ரமல்ல, முன்னேயே சொன்னதைப் போல,
அனேக அருமையான க்ரந்தங்களைப் பொக்கிஷமாக அருளி இருக்கிறார்.
வ்யாக்யான கர்த்தாக்கள், “நித்ய யோகேதி சாயினே……” என்கிறபடியே,
நித்ய ஸம்பந்திலேயாய் , வேங்கடசா வதாரோயம்…… என்கிற க்ரமத்திலே
பூர்வ ஸ்வபாவத்தில் அலர்மேல் மங்கையாய் நின்று ,
இவ்வவதராத்தில்,“மனுஷயத் வேச மானுஷீ ” என்கிறபடியே குத்ருஷ்டி நிரசநோபயுக்தையான
ஆத்ம வித்யா ரூபையாயும் ,
பக்தி பரம்பரா ரூபையாயும், பிராட்டி நிற்கிறபடியே சொல்லிற்றாயிற்று ”
வேதாந்தார்த்தப் ப்ரதாயினே ஸூக்தி பரம்பரா ரூபையும் என்று,இவர், தமக்கு,
திருவேங்கட முடையான் வேதாந்த தேசிகத்வ பட்டாபிஷேகம் பண்ணின தசையிலும்,
இவர், குத்ருஷ்டிகளை நிரஸித்தபின்பு “கவிதார்கிக ஸிம்ஹம் ” என்று, அருகேயுள்ளார் ஜயகோஷணை இட்ட தசையிலும்,
அவர்கள் இருவரும் களித்து,பூர்வம் நாம் பண்ணின சித்தாந்த பட்டாபிஷேகம் ,ஸப்ரயோஜனமாய்த்தென்று
“வேதாந்த தேசிகன் ” என்றும்,
“ஸர்வதந்த்ர ஸ்வ தந்த்ரர் ” என்றும்,
அவர்கள், தமக்கிட்ட ப்ரஸித்த திருநாமம் பெற்றபோதுமுண்டான“ஜய ஸ்ரீ” யை சொல்லிற்றாகவுமாம்.
அதாவது, பிராட்டி, ஆத்ம வித்யா ரூபையாயும் ,பக்தி பரம்பரா ரூபையாயும் இருப்பதை,இந்த வார்த்தை சொல்கிறது.
குதர்க்க வாதங்களை அழித்து, ஸத்ஸம்ப்ரதாயத்தை நிலைநாட்ட,வளர்க்க, பிராட்டி , ஆத்மா வித்யையாக இருக்கிறாள்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு முன்பாக “ச்ரியை நம : ”என்று த்யாநித்து விட்டுத்தான் ,
பிறகு,“ஸ்ரீ தராய நம : ” என்று பகவானைத் த்யாநிக்கிறோம்
இப்படியாக, “ஸ்ரீமத்” என்பதற்கு, வ்யாக்யானம் சொல்லப்படுகிறது.
வேங்கடநாதார்யம்—
திருவேங்கட முடையானின், மறு அவதாரமே—ஸ்வாமி தேசிகன்.
” வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் ” என்கிறோம்.
“அர்ச்சையாய் நின்ற இடத்தில், ஆச்ரயணத்துக்கு உறுப்பான,ஸௌலப்ய சௌசீல்யாதி குணங்களைக் காட்ட முடியாமல்,
அதையே காரணமாகக் கொண்டு,உதாசீனர்களாயும், சத்ருபூதர்களாயும், நிற்கிற சேதனர்களைத் திருத்திப் பணிகொள்ள ,
பூர்வோக்தமான குண விசேஷங்களையும் கொண்டு, ” ஸ்ரீமத் வேங்கடநாத தேசிக ரூபேண” ,
எல்லாக் கல்யாண குணங்களையும், ப்ரகாசிப்பித்துக் கொண்டு , ஆசார்ய ரூபராய்அவதரித்து, நின்றபடியைச் சொல்லிற்று. …….
உடையவருக்குப் பிறகு, சுமார் 200 ஆண்டுகள் கழித்து, ஸ்வாமி தேசிகனின் அவதாரம்.
இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த ஸம்ப்ரதாயத்துக்கு நலிவு ஏற்பட்டிருக்க வேண்டும்..
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் , ஸப்ததிரத்ன மாலிகாவில்,
வேதே ஸஜ்ஜாதகேதே முநிஜனவசனே ப்ராப்த நித்யாவ மானே |
ஸங்கீர்ணே ஸர்வ வர்ணே ஸதி ததனுகுணே நிஷ்ப்ரமாணே புராணே ||
மாயாவாதே ஸமோதே கலிகலுஷ வசாச் சூன்ய வாதே அவிவாதே |
தர்மத்ராணாய யோதி பூத்ஸஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார : ||
ஸ்வாமி தேசிகன் அவதரித்ததால், அழிந்த வேதங்கள் வளர்ந்தன;
புறக்கணிக்கப்பட்ட புராணங்கள் புத்துயிர் பெற்றன;
வர்ணாஸ்ரம தர்மங்கள் பழைய நிலைக்கு வந்தன;
பௌத்தம் போன்ற அவைதிக மதங்கள் ஒதுக்கப்பட்டன;
இப்படி அந்த ஸ்தோத்ரம் சொல்கிறது.
.
இதையே, திருவரங்கத் தமுதனார், தன்னுடைய இராமாநுச நூற்றந்தாதியில்,
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது, தென்குருகை வள்ளல்
வாட்டமிலா வண்தமிழ் மறை வாழ்ந்தது–மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்பு கண்டே.
என்று ஸ்ரீ உடையவரைப் பற்றிச் சொன்னார்.
” வேங்கடசா வதாரோயம் தத் கண்டாம் ஸோதவாபவேத் …..”—
திருப்பதி திருவேங்கட முடையானே , வேங்கடநாதனாக அவதரித்தான் .
——————
வந்தே வேதாந்த தேசிகம்
ஸ்வாமி தான் அருளிய “தயா சதக”த்தில் 104 வது ஸ்லோகத்தில்,
வேதாந்த தேசிகபதே விநிவேஸ்ய பாலம்
தேவோ தயா ஸதகமேத தவாத யந்மாம் |
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத ||–என்று அருள்கிறார்.
அலகிலா விளையாட்டுடைய திருவேங்கட முடையான், மிகுந்த மகிழ்ச்சியோடு,சிறியனான என்னை
வேதாந்ததேசிக பீடத்தில் அமர்த்தி,கைகளில் மகர யாழை எடுத்துப் பாடச் செய்வதைப்போல,
இந்த “தயா சதகம்”என்கிற ஸ்தோத்ரத்தை, அடியேனைக்கொண்டு துதிக்கச் செய்தான் –என்று ஸ்வாமி தேசிகனே , சொல்கிறார்.
இதைப் பிற்பாடு, திருவரங்கன், “வேதாந்தாசார்யன்” என்று அடியேனுக்குச் சூட்டினான்.
திருமலையில் உற்பத்தியானது,திருவரங்கத்தில் அரங்கேறி விட்டது.
அரங்கம் என்றால் “ஸபை” தானே.
வந்தே வேதாந்த தேசிகம்
நம்முடைய நிலையை உணர்ந்து, ஸ்வாமி தேசிகனின் பரிவாஹத்துக்கு —
தேஜஸ், புகழ், பெருமைக்கு எதிரிட மாட்டாதே வணங்கி “வந்தே..”
என்று பலகாலம் சொல்லி, வேதாந்த பதத்தாலே, உபய வேதாந்தத்தைச் சொல்லி,
தேசிக பதத்தாலே ஆசார்ய நிரூபணமாயிற்று…..
கண்ணானது, நாம் செல்லும் மார்க்கத்தை, நமக்குக் காட்டி, நாம் தவறான வழியில் சென்று
படுகுழியில் விழாமல் இருக்க, நல்ல மார்க்கத்தை —தர்ஸனம் செய்விக்கிறதோ —-
காண்பிக்கிறதோ —-அதைப்போல, ராமாநுஜ ஸித்தாந்தம்
நம்முடைய வாழ்நாளில், நாம் நல்ல கதியை அடைய , தேசிக தர்ஸனமாகக் கிடைக்கிறது.
இவர்தான் தேசிகன் —வந்தே வேதாந்த தேசிகம்.
ஸம்ஸாரத்தில் உழலுபவர்கள் க்ஷர புருஷர்கள். …….அவர்களை, அக்ஷர புருஷர்களாக —
முக்தர்களாக– மாற்றும் ராமாநுஜ தயா பாத்ரமான ஸ்வாமி தேசிகன்,
ஜ்ஞான வைராக்ய பூஷணமான ஸ்வாமி தேசிகன்,
கணக்கில்லாத உபதேசம், காலக்ஷேபம் மாத்ரமல்ல –கணக்கில்லாத க்ரந்தங்களை
அருளிய ஸ்ரீமத் வேதாந்த தேசிகன்,
திருவேங்கட முடையானே , திருவவதாரம் செய்து வேங்கடனாதனாக ஆன ஸ்வாமி தேசிகன்,
புகழ், பெருமை, தேஜஸ் என்று பற்பல குண ஆச்சர்யங்களால் “வந்தே” என்று,
விழுந்து, விழுந்து வணங்கும்படி பண்ணும் ஸ்வாமி தேசிகன்,
உபய வேதாந்தங்களுக்கும் விளக்காக ஆகிய ஸ்வாமி தேசிகன் ஆசார்யர் களுக்கும் ஆசார்யனாக ஆனார்.
இன்னும், தனக்குப் பிந்தைய எல்லா ஆசார்யர் களுக்கும் ஆசார்யன் —அதாவது—தேசிகன்
வந்தே வேதாந்த தேசிகம்—
ராமாநுஜ தயா பாத்ரம், ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
ஸ்ரீ பரகால மடத்தின் முதல் ஜீயர்— இந்த அருமையான தனியனை அருளினார் என்று பார்த்தோம்
வ்யாக்யானத்தை அனுபவித்தோம்
சுருக்கமாகச் சொன்னால்,
ராமானுஜ தயா பாத்ரம்—-ஸர்வ ஆசார்ய கடாக்ஷ சம்பத்து ——-என்றும்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்–கல்யாண குணங்கள் —–என்றும்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—அவதார வைபவம்—–என்றும்
வந்தே வேதாந்த தேசிகம்—உபய வேதாந்த ஸ்தாபன ப்ரவர்த்தனம்—-என்றும் மிக ஆச்சர்யமாக பூர்வாசார்யர்கள் அருளுவர்.
வைகுண்ட வாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமி தன்னுடைய உபன்யாஸங்களில், கூறுவார்.
கோயில், திருமலை, பெருமாள் கோயில், மேல்கோட்டை என்கிற நான்கு திவ்ய தேசங்களையும்,
ஸந்த்யா வந்தன காலங்களில் மூன்று வேளையும் சேவிக்கிறோம்; அதாவது—-
ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்
இந்த ஸ்லோகத்தில் , கருணைக்கடல், காளமேகம், பாரிஜாதம், தீபம் என்று குறிப்பிட்டுச் சொல்கிறோம்
ராமாநுஜ தயா பாத்ரம்—-மேல்கோட்டையைக் குறிக்கலாம் ( திருநாராயணபுரம் )
இந்தத் தனியன் அவதரித்ததே அங்குதானே என்பார்.
நம் இராமாநுச வைபவம், இங்கு உலகப் பிரஸித்தம்.
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—கச்சி நகரைக் குறிக்கலாம் ( காஞ்சீபுரம் ) ஸ்வாமியின் திவ்ய தேசம் மாத்ரமல்ல,
வைராக்ய பஞ்சகம் போன்ற பற்பல ஸ்ரீ சூக்திகள் அவதரித்த இடமல்லவா —என்பார்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்— திருப்பதியைக் குறிக்கலாம்;
ஸ்வாமி தேசிகன் திருவேங்கடமுடையானின் அவதாரமல்லவா —என்பார்
வேதாந்த தேசிகம்—-திருவரங்கத்தைக் குறிக்கலாம்;
பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் , ஸ்வாமிக்கு ,அருளப்பாடிட்டு அனுக்ரஹித்த திருநாமமல்லவா —என்பார்.
இவற்றை இப்படியும் பெரியோர்கள், அனுசந்திப்பர்;—
வேதாந்த தேசிகம்—-ஸ்ரீ ரங்கம் பெரிய கோவில்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் —- திருவேங்கடம்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-திருக்கச்சி பெருமாள் கோவில் –ஸ்ரீ ஹஸ்தி சைலம்
ராமாநுஜ தயா பாத்ரம் வந்தே—-யாதவாத்ரி கோவில் –யதி சைல தீபம்
ராமாநுஜ தயா பாத்ரம் ——வந்தே
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-வந்தே
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—–வந்தே
வேதாந்த தேசிகம்——வந்தே–என்றும் , புகழ்ந்து உரைப்பர்.
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்——-விசேஷ்யம்
மற்ற மூன்றும்—-விசேஷணம் —அதாவது, பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் பிறருக்கு இவை சேராது.
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : —————இந்தத் தனியன் திருமந்த்ரத்துக்குச் சமம் என்றும்,
ராமாநுஜ தயா பாத்ரம் ——————-இந்தத் தனியன் த்வயத்துக்கு ஒப்பாகும் என்றும்
சீரொன்று தூப்புல் ——–இந்தத் தனியன் சரம ச்லோகத்துக்குச் சமம் என்றும் சொல்வார்.
—————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த சேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading