ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —மூன்றாம் பத்து–பாசுரங்கள்- 21-30-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திருமலையில் ஏக தேசஸ்தரான ஸ்ரீ அழகர் உடைய அழகை முழுதும்
அனுபவித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்-கீழ்
அயன் மலையோடு
புறமலையோடு
திருப்பதியோடு
உத்தேச்யமாக ஸ்ரீ திருமலை ஆழ்வாரை அனுபவித்துக் கொண்டு வருகிற
மருளில் வண் குருகூர் வண் சடகோபனான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ வட மா மலை உச்சி -என்கிற படியே
அம் மலையிலே ஒரு கொடி முடி என்னலாம் படியையும்
அதுக்கு அவயவமாய் இருப்பதொரு கல்பக தரு பஹூ சாகமாகத் தழைத்து பூத்தாப் போலேயாயுமாய் இருக்கிற
மேலிரும் கற்பகமான ஸ்ரீ அழகர் உடைய திவ்ய அவயவங்களும்
திரு அணிகலன்களுக்கும் உண்டான ஸூகடிதத்வத்தையும்
வேத வைதிக புருஷர்களாலும் அளவிட ஒண்ணாத பெருமையையும்
அத்தையும் விளாக் கொலை கொள்ளும்படியான ஆஸ்ரித வாத்சல்யத்தையும் அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
முடிச் சோதியில் அர்த்தத்தை -முடியார் திருமலையில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

————————————————-

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன்—-21-

—————————————————-

வியாக்யானம்–

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன் –
விராஜதே வ்ருஷாத்ரேச்ச சிகரம் தசதா துபி பூஷிதோ பூ பதிரேவ க்ரீடே நார்க்க வர்ச்சசா -என்கிறபடியே
விண் முதல் நாயகன் நீண் முடியோடு ஒத்த -என்றும்
மதி தவழ் குடுமி தொடக்கமான கொடு முடிகளாலே மிக்கு இருப்பதாய்
ஆயிரம் பைந்தலை யநந்தன் -என்னும் படியான ஸ்ரீ திருமலை ஆழ்வாரிலே மண்டி அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –

அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப் பற்றி –
ஸ்ரீ திருமலையில் திருத் தாழ் வரையிலே
ஸ்ரீ மாலிரும் சோலை என்னும் மலையை உடைய மலையான ஸ்ரீ அழகர் திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
திவ்ய குணம் முதலாய் உள்ளவை எல்லாம் குமர் இருக்கும் படி அவர் திவ்ய விக்ரஹ சௌந்தர்யத்தை
அனுபாவ்ய விஷயமாகப் பற்றி –

அத்தை அனுபவிக்கும் இடத்தில் –
முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான் முன்-
முடிச் சோதியாய் யுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச் சோதி ஆடையோடும் பல்கலனாய் நின் பைம் பொன் கடிச் சோதி
கலந்ததுவோ திரு மாலே கட்டுரையே -என்று
அபரிச் சேத்யமாம் படி அருளிச் செய்ததை அடி ஒத்தின படி –
ரூபம் சம்ஹந நமலம் லஷ்மீம் தத்ரு ஸூர் விஸ்மிதாகாரா-என்னக் கடவது இறே

முடியும் அடியும் –
க்ரீடாதி நூபுராந்தமாக -அனுபவித்த படி –

படி கலனும்
நடுவு உள்ளவையாய்-படியிலே உள்ள திரு அணிகலன்கள் -என்னுதல்
படிந்து ஸூகம் வடிவதானவை என்னுதல்
முடி கொண்டான் வெள்ளக் கால்களாய்- பின்பு பெரு வெள்ளமாய்-நட்டாறாய்ச் சுளித்து
அரையாற்றுக்கு அடியானபடி –
பெரு வெள்ளம்–நடு ஆறு -அரை யாறு- சௌந்தர்ய சாகரம் – தரங்க -அலையில் தூக்கிப் போட்ட சித்தம்

இப்படி சௌந்தர்ய சாகர தடங்க தாடன தரள சித்த விருத்தியாய்
முற்றும் அனுபவித்தான் முன் –
முழுதும் அனுபவித்தார் முற்காலத்திலே -என்னுதல்
முற்றும் -என்கிறது முடிச் சோதி -என்கிற பாட்டில் உக்தமானது எல்லாம் -என்னுதல்
மற்றும் -கட்டுரைக்கில் –சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது –என்றும்
பரஞ்சோதி -என்றும்
நின் மாட்டாய மலர் புரையும் திரு வுருவம் -என்றும்
மலர் கதிரின் சுடர் உடம்பாய் -என்றும்
போது வாழ புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் -என்றும்
மாசூணாய்ச் சுடர் உடம்பாய் -என்றும்
உன் சுடர்ச் சோதி -என்றும்
முதல் பாட்டின் விவரணமாக அருளிச் செய்தவை ஆகவுமாம் –

—————————————————————————–

அவதாரிகை —

இதில் சௌந்தர்யாதிகள் முகந்து கொண்டு அனுபவிக்க ஒண்ணாமைக்கு
ஹேது -கரண சங்கோசம் -என்று கலங்க –
அந்த கலக்கத்தை அவன் தீர்த்த படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்-கீழ்- ஸ்ரீ அழகர் உடைய அழகு முதலானவற்றை அனுபவிக்கப் புக்க இடத்தில்
விளாக் கொலை கொண்டு அனுபவிக்க ஒண்ணாது ஒழிய
அதுக்கு அடி விஷய பௌஷ்கல்யம்-என்று அறிய மாட்டாமல் கரண சங்கோசம் -என்று அனுசந்தித்து
இஸ் சங்கோசம் அற்று தன்னை அனுபவித்து-வாழுகைக்கு உடலாக அவன் பண்ணின சிருஷ்டி அவதாராதிகள் தப்பி
அனர்த்தப் பட்ட நான் இனி கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்று சோக பரவசராய்க் கூப்பிட்ட
முந்நீர் ஞாலத்தின் அர்த்தத்தை முன்னம் அழகர் எழில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

———————————————–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-

———————————————–

வியாக்யானம்–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் -குருகையர் கோன்
முந்துற முன்னம்-ஸ்வரூப குணாதிகளில் அகப்படாதே அழகர் உடைய ஸ்ரீ அழகிலே யாயிற்று அகப்பட்டது –

மூழ்குகை யாவது –
சௌந்தர்ய சாகரத்தில் ஆழம் கால் பட்டு அழுந்துகை –

இப்படி சௌந்தர்ய சாகரத்திலே மகனாரான ஸ்ரீ ஆழ்வார் –
இன்ன வளவென்ன –
இவ்வளவு என்று பரிச்சேதிக்க-எனக்கு அரிதாய்த் -தென்ன –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற எனக்கு அரிதாயிற்று என்று அருளிச் செய்ய
திரு மாலே கட்டுரையே -என்று அவளோட்டைச் சேர்த்தியாலே எல்லையில் ஞானத்தனாய்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனைக் கேட்கையாலே தமக்குப் பரிச்சேதிக்க அரிது என்னும் இடம் தோற்றுகிறது-

கரணக் குறையின் கலக்கத்தை —
அவன் அனுபவ பரிகரமாகக் கொடுத்த கரண சங்கோ சத்தால் வந்த காலுஷ்யத்தை -அஜ்ஞதையை-அதாவது –
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் –என்றும்
வினைகளை வேர் அறப்பாய்ந்து எந்நாள் நான் உன்னை இனி வந்து கூடுவன் -என்றும்
பன்மாயப் பல் பிறவியில் படுகின்ற யான் தொல் மா வல் வினைத் தொடர்களை
முதலரிந்து நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ-என்றும்
பொல்லா வாக்கையின் புனர் வினை அறுக்கல் ஆறு சொல்லாய்-என்றும்
உன்னை சார்வதோர் சூழ்ச்சியே -என்று–இத்யாதிகளில் அருளிச் செய்தவை –
லங்கா முன் மூலிதாம் க்ருத்வா கதாத்ரஷ்ய தி மாம்பதி -இறே
இப்படி கரண சங்கோசம் அடியாக வந்த கண் கலக்கத்தை

கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து –
மாசுசா -என்று ஆஸ்ரிதர் உடைய சோக நிவர்தகனான ஸ்ரீ கிருஷ்ணன்
அந்த கரண சங்கோச நிபந்தனமாக வந்த துக்கத்தைப் போக்கிக் கொடுத்து அக் கரணங்களைக் கொண்டு
அனுபவிக்கும்படி திரு உள்ளத்தை ஒரு தலைக்கும் படி பண்ணினான் –
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு நிலைப் பெற்று
என் நெஞ்சம் பெற்றது நீடுயிர் -என்றத்தை நினைத்து அருளிச் செய்தபடி –
கரண சங்கோசம் அடைய திர்யக்குகளும் பரிசர்யை பண்ணும்படி யான
ஸ்ரீ பெரிய திருமலையில் நிலையைக் காட்டி சமாதானம் பண்ணினான் ஆயிற்று-

———————————————————

அவதாரிகை –

இதில்-கைங்கர்யத்தில் பெரிய பாரிப்பை பேசினபடியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இப்படி பிரகிருதி சம்பந்தத்தின் உடைய கொடுமையை அனுசந்தித்து–2-3- சோகாவிஷ்டர் ஆன இவருடைய கிலேசத்தை
மாற்றுகைக்காக தான் வடக்கு ஸ்ரீ திருமலையில் நிற்கும் நிலையைக் காட்டிக் கொடுக்க
நிலை பெற்றேன் நெஞ்சம் பெற்றது நீடுயிர் -என்று அவனைக் கிட்டி தம்முடைய ஸ்வரூபம் பெற்றவாறே
ஸ்வரூப அனுரூபமாக அடிமை செய்து வாழ வேணும் -என்று சீலாதிகனான ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
வழு விலா வடிமை செய்து வாழப் பாரிக்கிற
ஒழிவில் காலத்தின் தாத்பர்யத்தை ஒழிவிலாக் காலம் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

———————————————-

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழு விலா வாட்செய்ய மாலுக்கு -எழு சிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே புகழ்—23-

————————————————

வியாக்யானம்–

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி –
சர்வ தேச-சர்வ கால-சர்வ அவஸ்தைகளையும் நினைக்கிறது –

வழு விலா வாட்செய்ய மாலுக்கு –
அடிமையில் ஒன்றும் நழுவுதல் இன்றிக்கே-சர்வ வித கைங்கர்யங்களையும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு செய்ய வேணும் என்று –

எழு சிகர வேங்கடத்துப் பாரித்த –
எழுச்சியை யுதைத்தான சிகரங்களை யுடைய ஸ்ரீ திருமலையிலே பாரித்த —
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூரம்ச்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ் சதே-என்று
ஸ்ரீ சித்ர கூடத்திலே இருவருமான சேர்த்தியிலே அனைத்து அடிமையும் செய்ய வேணும் என்று ஆசைப் பட்ட
ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே-இவரும்-
ஸ்ரீ அலர்மேல் மங்கை உறை மார்பனாய்- ஓங்கு ஸ்ரீ வேங்கடம் மேவி தான் ஓங்கி நிற்கிற
சென்னி ஓங்கு தண் ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளையும் செய்ய வேணும் என்று உத்சாஹித்த –

மிக்க நலம் சேர் மாறன் –
அனுரக்தஸ்ஸ பக்தஸ்ஸ-என்று ஆராவன்பு ஸ்ரீ இளையவனைப் போலே ஆரா அன்பில் அடியேன் -என்னும்படி
நிரவதிக பக்தி உக்தரான ஸ்ரீ ஆழ்வார் –

பூங்கழலை நெஞ்சே புகழ் –
அவர்-பூவார் கழல்களிலே அடிமை செய்தாப் போலே மனசே நீயும் அபிராமமாய் புஷ்பம் போலே ம்ருதுளமாய் இருக்கிற
அவர் சரணங்களை ஸ்துத்திப் போரு-
மனசே நினை என்னாமல் ஸ்துதி – முடியானே காரணங்கள் போலே -அவர் விஷயத்திலே வாசகமான அடிமையைச் செய்யப் பார்
உத்தர வாக்யத்தில் பிரதிபாதிக்கிற கைங்கர்யம் தான் ததீய பர்யந்தமாய் யாயிற்று இருப்பது-

இத்தால் –
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிற முதல் பாட்டின் அர்த்தத்தை அருளிச் செய்த படி
மேல் சிந்து பூ மகிழும் -என்று காயிக கைங்கர்யத்தையும்
தெண்ணிறைச் சுனை நீர் திருவேங்கடம் -என்று மானசமான அடிமையையும்
ஈசன் வானவர்க்கு என்று -வாசிகமான அடிமையையும் என்று சொல்லி
வேங்கடத்து உறைவார்க்கு நம -ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி சொல்லி
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் -என்று அத்தக் கைங்கர்யத்தை ஸ்ரீ திருமலை ஆழ்வாரே தந்து அருளுவார் -என்றும்
ஸ்ரீ திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -என்று
அந்த கைங்கர்ய விரோதி நிவ்ருதியையும் ஸ்ரீ திருமலை ஆழ்வாரே பண்ணி அருளுவர் என்றும்
இப்படி முதல் பாட்டின் அர்த்தத்தை விவரித்து அருளின இவைகளும் இவர்க்கு விவஷிதம் –

———————————————————

அவதாரிகை –

கீழ் பாரித்த கைங்கர்யத்துக்கு அனுகுணமாக அவன் சர்வாத்மபாவத்தைக் காட்ட அத்தைப் பேசி அடிமை செய்த
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
கீழ்-இவர் அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தபடியே சர்வாத்ம பாவத்தைக் காட்டி அடிமை கொள்வதாக
ஒருப்பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு உத்யோக மாத்ரத்திலே வயிறு நிறையும் அவன் பிரக்ருதிக்கும்
வாசிகத்துக்கும் மேற்பட அடிமை செய்ய மாட்டாத தம் பிரக்ருதிக்கும் சேர வாசிகமாக அடிமை செய்து தலைக் கட்டுகிற
புகழு நல் ஒருவனில் -அர்த்தத்தை -புகழ் ஒன்றும் மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

——————————————————

புகழ் ஓன்றும் மால் எப்பொருள்களும் தானே
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க -மகிழ் மாறன்
எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய்
அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் —24-

——————————————————–

வியாக்யானம்–

புகழ் ஓன்றும் மால் –
கீழ்-எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனாய் –
புகழு நல ஒருவன் – என்று சர்வைஸ் ஸ்துதியனாமது சத்ருசமாய் சேரும்படியான ஸ்ரீ சர்வேஸ்வரன்
பொழில் ஏழும் காவல் பூண்ட படியாலே புகழும் பொருந்தி இருக்கும் இறே
அன்றிக்கே
இவரை அடிமை கொள்ளுகையால் வந்த அந்தமில் புகழ் பொருந்தின -என்றுமாம் —

எப் பொருள்களும் தானே நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க –
சமஸ்த வஸ்துக்களும் தான் என்னும்படி சர்வ சப்த வாச்யனாய் வர்த்திக்கிற
பிரகார பிரகாரி பாவத்தை பிரகாசிப்பித்துக் கொண்டு இவருக்கு ஞான சாஷாத்காரம் ஆம்படி நிற்க –
அதாவது
பொருவில் சீர் பூமி என்கோ -என்று துடங்கி அருளிச் செய்த பூதங்கள்
குன்றங்கள் அனைத்தும் என்கோ மேவு சீர் மாரி என்கோ -என்றது துடக்கமான பௌதிகங்கள்
சாதி மாணிக்கம் என்கோ -இத்யாதியில் உஜ்ஜ்வலமான மாணிக்யாதிகள்
அச்சுதன் –அச்சுவைக் கட்டி என்கோ -இத்யாதியில் ரசத்வ பதார்த்தங்கள்
நான்கு வேதப் பயன் என்கோ சமய நீதி நூல் என்கோ -நுடங்கு கேள்வி இசை என்கோ -என்று காநாதி சப்த ராசிகள் –
வானவராதி -இத்யாதியில் மோஷாதி புருஷார்த்தங்கள்
ஒளி மணி வண்ணன் -இத்யாதியில் ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகள்
இவற்றுக்கு அடைய காரணமான -யாவையும் யாவரும் தானே -என்கிற பிரகிருதி புருஷர்கள்
இவற்றை அடைய விபூதியாக யுடையனாய்-இவற்றிலே அந்தர்யாமியாக வியாபித்து
தோய்விலன் -என்று தத்கத தோஷ ரஹிதனாய் சம்ப்ருஷ்டனாய் இருக்கிறபடி –
சர்வம் சரீரம் தே ச்தைர்யன் தேவ ஸூ தாசலம் அக்னி கோப பிரசாதாஸ் தேசோமஸ் ஸ்ரீ வத்ச லஷண -என்னும் படியே
இப்படி
புகழு நல ஒருவன் என்கோ பொருவில் சீர் பூமி என்கோ என்று துடங்கி
நான்முகக் கடவுள் என்கோ -என்னும் அளவும்
சகல வஸ்துக்களும் தான் என்னும் படி பிரகாரமாக வர்த்திக்கிற பிரகாரியை காட்டிக் கொண்டு நிற்க –

மகிழ் மாறன் –
வகுள தரரான ஆழ்வார் –

எங்கும் அடிமை செய்ய இச்சித்து-
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே
அடிமை செய்ய இச்சித்து -வாசிகமாய் அங்கு அடிமை செய்தான்-
அப்படி ஆசைப்பட்ட அவ் விஷயத்திலே என்கோ என்கோ -என்று வாசிகமாக அடிமை செய்தார் –

மொய்ம்பால் –
ய ஆத்மதாபலதா –
வலந்தரும்-
நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடுயிரே – என்று அவன் தந்த ஆத்மபலத்தாலே சத்தை உண்டானால் இறே
சம்ருதியை அபேஷிப்பது-
மொய்ம்பு -மிடுக்கு
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்றும்
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும்
கண்ணா ஏழ் உலகுக்கும் உயிராய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை -என்றும்
தாய் தந்தை உயிர் ஆகின்றாய் –தொல் புகழ் உலகுக்கும் நாதனே-என்றும்
பரமா தண் வேங்கடம் மேகின்றாய் -என்றும்-
திரு வேங்கடத்தானுக்கு என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கு -என்றும்
அம்பரம் -இத்யாதியாலும்
அவனுடைய உபய விபூதி நிர்வாஹகத்வத்தையும் அந்தர் வ்யாப்தியையும்
சர்வ கால வர்த்தித்வத்தையும் அருளிச் செய்கையாலே வ்யாப்த அனுசந்தான ரூப வாச கைங்கர்யம் –
ஸ்ரீ திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமானுக்கே இறே ஏற்றி இருப்பது
அத்தைப் பற்றி இறே அங்கே அடிமை செய்தான் -என்று இவர் அருளிச் செய்தது –

—————————————

அவதாரிகை –

அடிமை செய்வாரை ஸ்துதித்தும் செய்யாதாரை நிந்தித்தும் போருகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இப்படி வாசிகமாக அடிமை செய்யப் பெற்ற ஹர்ஷ பிரகர்ஷத்தாலே-இவ் வடிமையைக் காற்கடைக் கொண்டு
உடம்பை வளர்த்துக் கொண்டு திரியும் கழனி மிண்டரைப் பொடிந்தும்
பகவத் குண அனுபவத்தால் வந்த களிப்பிக்கு போக்கு விட்டு ஆடுவதும் பாடுவதும் ஆகிற அடிமை செய்யும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டாடியும்
ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற மொய்ம்மாம் பூம் பொழிலின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
மொய்ம்பாரும் மாலுக்கு -இத்யாதியாலே-

—————————————————————————-

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் -அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் பால்
தேடரிய பத்தி நெஞ்சே செய்—25-

—————————————————————————–

வியாக்யானம்–

மொய்ம்பாரும் மாலுக்கு –
சமஸ்த ஜகதாகாரதயா சக்தியால் சம்ருத்தனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வங்களாலே இறே
பொய்கை முதலைக்கு சிறை விடுத்து கைம்மாவுக்கு அருள் செய்து அடிமை கொண்டதுவும் –
கூர் வேல் கொடும் தொழிலன் போலே எறும்புக்கு வேல் -இவனது பாரிப்பு –

முன்னடிமை செய்து உவப்பால் –
முன்-புகழும் நல் ஒருவனில் வாசிகமாக அடிமை செய்த அந்த ஹர்ஷத்தாலே –

அன்பால் ஆட் செய்பவரை ஆதரித்தும் –
பக்தியாலே கைங்கர்யம் பண்ணுமவர்களை-
அதாவது –
ஓதி உணர்ந்தவர் -என்றும்
முனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையினார் -என்றும்
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவார் -என்று ஆதரித்தும் –
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நருத்யந்தி கேசித் -என்றது இறே –

அன்பிலா மூடரை நிந்தித்தும் -மொழிந்து அருளும்-
பக்தி இல்லா பாவிகளான அஞ்ஞரை அநாதரித்து நிந்தித்தும்
அதாவது
எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் -என்றும்
மண் கொள் உலகில் பிறப்பார் வல் வினை மோத அலைந்து -என்றும்
அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்தது உழைக்கின்ற வம்பர் -என்றும்
தம் பிறப்பால் பயன் என்ன சாது சனங்கள் இடையே -என்றும்
என் சவிப்பார் மனிசரே -என்றும்
உத்தமர்கட்கு என் செய்வார் -என்றும் இறே அருளிச் செய்தது –
மார்க்கம் பிரதர்சய -என்னும் படி இறே-அதனுள் புகாதாரை அநாதரித்த படி

மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய் –
இப்படி அஞ்ஞர் ஆனவர்களை நிந்தித்து
அவர்களை அசத் கர்மங்களின் நின்றும் நிவர்த்திக்கப் பார்த்த ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே
பெறற்கு அரியதான பக்தியை மனஸே பண்ணு-

——————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ அர்ச்சாவதார பர்யந்தமான சௌலப்யத்தை சம்சாரிகளைக் குறித்து
உபதேசிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று
தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக ஸ்ரீ பர ஸ்ரீ வ்யூஹ ஸ்ரீ விபவங்களை
அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று-நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே
உங்களோடு புரையறக் கலந்து சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும் ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள்
என்கிற செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார் செய்ய பரத்துவமாய் -இத்யாதியாலே -என்கை-

————————————————————-

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று—-26-

——————————————————-

வியாக்யானம்–

செய்ய பரத்துவமாய்ச் –
பர பரானாம் பரம -என்று இதர விலஷணமான அழகிய ஸ்ரீ பரத்வமாய் –

சீரார் வியூகமாய் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-என்னும்படி இறே ஸ்ரீ வ்யூஹம் இருப்பது

சீர் –
என்று குணம் ஆதல்-ஐஸ்வர்யம் ஆதல் –

துய்ய விபவமாய்த் –
பிரத்யஷ அனுபவ யோக்யமான தூய்மையை யுடைய ஸ்ரீ விபவமாய் –
செய்ய தாமரைக் கண்ணன் -என்றும்
அமரர் குல முதல் -என்றும்
தடம் கடல் கிடந்தான் -என்றும்
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணல் -என்றும்
தயரதற்கு மகன் தன்னை -என்றும்
குரவை கோத்த குழகனை -மணி வண்ணனை குடக் கூத்தனை என்றும்-இறே பரத்வாதிகளை அருளிச் செய்தது

தோன்றி வற்றுள் –
இப்படி
தேச
கால
அதிகாரி–நியமங்களை யுடைத்தாய் பிரமாணங்களாலேயாய் பிரத்யஷிக்கலாம் படியாய்
இருக்கிற இவற்றில் வைத்துக் கொண்டு –

எய்துமவர்க்கு இந்நிலத்தில் –
இவ் விபூதியில் கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு –

அர்ச்சாவதாரம் எளிது என்றான் –
ஸூலபத்தாலே ஸ்ரீ அர்ச்சாவதாரம் சமாஸ்ரயணத்துக்கு சஷூர் விஷயமுமாய்
நித்ய சந்நிதியும் யுண்டாகையாலே அதி ஸூலபம் என்கிறார் –
நெஞ்சினால் நினைப்பான் எவனாகும் நீள் கடல் வண்ணன் -என்றத்தை நினைக்கிறது –
எளிவரும் இணைவனாம் -என்றவை ஸ்ரீ பரத்வமாம் படி அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி -என்றார் இறே
எளிவரும் இயல்பினான் -இணைவனாம் -அவருக்குள் இரண்டும் ஸ்ரீ பரத்வமாம் படி -அவனாகும் சௌலப்யம் காஷ்டை -ஆச்சார்ய ஹிருதயம்
ஸ்ரீ மத்ய அயதனே விஷ்ணோஸ் சிஸ்யே நரவராத்மஜா -என்றும் –
நாரயாணம் உபாகமத் -என்றும்
ஸ்ரீ விபவத்தாலே அர்ச்சயமான ஏற்றம் உண்டாய் இறே இருப்பது -ஸ்ரீ பெருமாள் அர்ச்சித்த ஸ்ரீ பெரிய பெருமாள்-ஏற்றம் –
அவரையே கடாக்ஷித்ததால் வந்த திருக்கண்களின் ஏற்றத்தால் -விசாலாட்சி

இப்படி அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தவர் தாம் இன்னார் -என்கிறார் –
பன்னு தமிழ் மாறன் பயின்று-
அதாவது-சேதனரோடு செறிந்து ஆராயப் படுமதான த்ரவிடத்தை நிரூபகமாக யுடையரான ஸ்ரீ ஆழ்வார் –
பண்ணிய தமிழ் -என்னும்படி பிரமாண சரமத்தை வெளி இட்டால் போலே
பிரமேய சரமமான அர்ச்சாவதாரம் எளிது என்று வெளி இட்டு அருளினார் -என்கை-

———————————————

அவதாரிகை –

இதில் ததீயரை பத்தும் பத்தாக உத்தேச்யராக அனுசந்தித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –கீழே
சௌலப்ய காஷ்டையை யுபதேசிக்க அத்தையும்-காற்கடை கொள்ளுகையான
சம்சாரிகளோட்டை சஹவாசத்தால் வந்த வெக்காயம் மாறாத படி – தனக்கு பாத ரேகை போலே பரதந்த்ரரான ஸ்ரீ வைஷ்ணவர்களை
அவன் காட்டக் கண்ட அவர்கள் திருவடிகளிலே தலையை மடுத்து அவர்கள் தான் அவன் படிகளிலே பல படியாக மண்டி இருக்கிற
படியைக் கொண்டாடி அவர்கள் எல்லை நிலத்திலே சென்று இனியராகிற
பயிலும் சுடர் ஒளி யின் தாத்பர்யத்தை பயிலும் திருமால் -இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –
கச்சதா மாதுலகுலம் -இதிவத் –

——————————————————–

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு -இயல்வுடனே
ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா——27-

———————————————————-

வியாக்யானம்–

பயிலும் திருமால் –
ஆஸ்ரித சங்க ஸ்வபாவனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளிலே
இத்தால் -திரு நாரணன் -என்றத்தை சொல்லுகிறது —

பயிலும் திரு என்று
ஸ்ரீ எம்பெருமானோடே சர்வ காலமும் சம்ஸ்லிஷ்டையான ஸ்ரீ என்னவுமாம் –

பதம் தன்னில் நெஞ்சம் தயலுண்டு நிற்கும் ததியர்க்கு –
என்றது -பாதம் பணிய வல்லாரை -என்றபடி –
நெஞ்சம் தயலுண்டு நிற்கையாவது –
திருவடிகளிலே போக்யதையை அனுசந்தித்து ஸ்நேஹார்த்தரதா யுக்தா சித்தராய் தன நிஷ்டராய் இருக்கை-என்றபடி
உன் இணைத் தாமரை கட்கு அன்புற்று நிற்குமது -என்னக் கடவது இறே –
அன்றிக்கே
தயல் -என்று தையலாய்
திருவடிகளிலே பந்த பாவராய் இருக்குமவர்கள் என்றாகவுமாம்
ததீயர் -என்று
தத் சம்பந்தமே நிரூபகமாய் உள்ளவர்களுக்கு -என்கிறது
பயிலும் திரு உடையார் -என்றும்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் -என்றும்
பாதம் பணிய வல்லார் -என்றும்
திரு நாரணன் தொண்டர் -என்றும்
இப்புடைகளிலே நிரூபகமாய் இருக்கை -என்கை –
பாகவதம் -பாகவத இதம் பாகவதம் போலே அவன் சம்பந்தமே நிரூபகம்

இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி –
வடிவு அழகிலும்-ஆயுத ஆபரணாதி ஒப்பனை அழகிலும்-தோற்று அடிமையாய் இருப்பவர்களுக்கு ஆளாகையே
ஸ்வரூபமாய் இருக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் –

ஆளாகார் –
அடிமை ஆகாதார் –

சன்மம் முடியா –
சன்ம ஷயம் பிறவாது –
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினார் -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வார் சம்பந்தம் உடையவர்களுக்கு இறே சம்சார சம்பந்தம் அறுவது –
இவையுமோர் பத்து சொன்னால் இறே சன்மம் செய்யாமே இலங்கு வான் யாவரும் ஏறுவது
அல்லாதாருக்கு சித்தியாது இறே –

ஆகையால் ததீய சேஷத்வத்தின் எல்லை நிலத்திலே நிற்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயிக்கவே
ஜன்ம சம்சார பந்த நிவ்ருத்தி பூர்வகமாக மோஷ சித்தியாம் – என்றபடி –

—————————————————

அவதாரிகை –

இதில் கரணங்களும் தாமும் பெரு விடாய் பட்டு பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
பயிலும் சுடர் ஒளியிலே உத்தேச்யராக அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்வரூபத்துக்கு நிரூபகத்வேன பிரஸ்துதமான பகவத சௌந்தர்யாதிகள் விடாய்க்கு உத்தகம்பாய்
அத்தாலே விடாய் கரை புரண்டு அனுபாவ்யமான பூஷண ஆயுத குண விக்ரக சேஷ்டிதங்களை சொல்லி
தாமும் தம்முடைய கரண க்ராமமுமாய் முழு மிடறு செய்து கூப்பிடுகிற
முடியானே யின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -முடியாத ஆசை மிக -இத்யாதியால் -என்கை-

———————————————

முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்—28-

——————————————

வியாக்யானம்–

முடியாத வாசை மிக-
மயர்வற மதி நலம் அருளுகையாலே அடியே தொடங்கி வருகிற ஆராத காதலானது
அனுபவ அலாபத்தாலே அதிசயிக்க –
கீழே பாகவத ஸ்வரூப நிரூபணத்துக்கு உடலாக பகவத் குணாதிகள் பிரஸ்துதம் ஆக -அத்தாலே
பக்தி அபிவிருத்தியாக –

முற்று கரணங்கள்
பாஹ்யாப்யந்தர சகல கரணங்களும்
முடியாத ஆசை மிகு முற்று கரணங்கள் என்று கரண விசேஷணம் ஆகவுமாம் –

அடியார் தம்மை விட்டு –
எம்மை ஆளும் பரமர் –
எம்மை ஆளுடை நாதர் –
எம்மை ஆளுடையார்கள் –
எம் பெரு மக்கள்-
எம்மை அளிக்கும் பிராக்கள் –
எம்மை சன்ம சன்மாந்தரம் காப்பர் –
எம்மை நாளும் உய்யக் கொள்கின்ற நம்பர்-
எம் தொழு குலம் தாங்கள் –
அடியார் எம் அடிகள் –
அடியார் தம் அடியார் அடியோங்களே –
என்று இப்படி சர்வ பிரகாரங்களாலும் சேஷிகளாக அனுசந்திக்கப் பட்ட
ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு –
அவன் பால் -படியா -படிந்து –
புருஷார்த்த காஷ்டையை கொலைக்கும் படியான அவன் இடத்திலே அவகாஹித்து
கரணங்களும் தாமும் தத் விஷயத்தில் பிரவணராய்
காத்ரைஸ் சோகாபி கர்சிதை சம்ச்ப்ருசேயம் சகாமாஹம் -என்னும்படியாக –

ஓன்று ஒன்றின் செயல் விரும்ப –
நெஞ்சமே நீணகராக விருந்த என் தஞ்சனே -என்றும்
வாசகமே ஏத்த யருள் செய்யும் வானவர் தம் நாயகனே -என்றும்
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை -என்றும்
கண்களால் காண வரும் கொல் -என்றும்
வாக் பாணி சஷூஸ் ஸ்ரோத்ரங்களான இந்த்ரியங்களை
மநோ வாக் பாணி சஷூர் வ்ருத்திகள் ஆசைப் படும் படியாக-இந்த்ரிய வ்ருத்தி நியமம் இன்றிக்கே
அவனை அனுபவிக்க வேண்டும்படியான பெரிய விடாயை யுடையவையாய் –

உள்ளது எல்லாம் தான் விரும்ப –
கீழ்ச் சொன்ன கரணங்களின் விடாயை கரணியான தாம் ஒருவருமே யுடையவராய்
அவனை அனுபவிக்க ஆசைப் பட
அதாவது
உன்னையே அவிவின்றி ஆதரிக்கும் எனதாவி –என்றும்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப் பெறேன் உன்கோலம் -என்றும்
உன்னை எந்நாள் கண்டு கொள்வன் -என்றும்
உன்னை எஞ்ஞான்று பொருந்துவன் -என்றும்
உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவன் -என்றும்
இப்படியே அவருடைய பிராவண்யம் இருக்கும்படி -என்கை

துன்னியதே மாறன் தன் சொல் –
இப்படி-கரண க்ரமத்தின் யுடையவும் கரணியான ஆழ்வார் தம்முடையவும்
ஆர்த்தி அதிசயத்தை யுடைத்தான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியான இத் திருவாய் மொழி
மிடைந்த சொல் -என்னும்படி சப்த நிபிடமாய் இருந்தது
துன்னுதல் -நெருக்கம் –

—————————————————

அவதாரிகை –

இதில் அசேவ்ய சேவை அநர்த்தம் என்றும்-பகவத் சேவை பிராப்தம் என்றும் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
முடியானேயில் முடியாத ஆசை யுடையராய்க் கூப்பிட்டவர்
தம் கூப்பீட்டுக்கு துணையாவார் யுண்டோ என்று லௌகிகரை பார்த்த இடத்தில்
அவர்கள் பகவத் அர்ஹ கரணங்களைக் கொண்டு
சூத்திர மனுஷ்யர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு அது பொறுக்க மாட்டாமல்
இப்படி வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை கவி பாடுகை ஈடல்ல -என்று அவர்களுக்கு
ஹிதம் அருளிச் செய்ய
மீளவும் அவர்கள் பழைய நிலைகளிலே நிற்க அவர்களை விட்டு ஸ்வ லாபத்தைச் சொல்லி ப்ரீதராகிற
சொன்னால் விரோத-தத்தின் அர்த்தத்தை தொடுத்து
சொன்னாவில் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

————————————————

சொன்னாவில் வாழ் புலவீர் சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்–29-

மாறும் சன்மம் கிட்டும் -குருகூர் மன்னன் அருளால் –

——————————————-

வியாக்யானம்–

சொன்னாவில் வாழ் புலவீர் –
ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு பரிகரமான நாக்கைக் கொண்டு அவனை ஸ்துதித்து
ஜீவிக்கிற புலவீர்காள் நீங்கள் விசேஷஞ்ஞர் அல்லீர்கோளோ-

சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்-
அசன அச்சாதநாதிகளாய் யுள்ள சூத்திர பிரயோஜனதுக்காக ஷயிஷ்ணுக்களான
சூத்திர மனுஷ்யரைக் கவி பாடி ஸ்தோத்ரம் பண்ணுகையால் என்ன பிரயோஜனம் சித்திக்கும் –
திருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் ஒன்றுமே சித்தியாது -அனர்த்தமே சித்திக்கும் -என்றபடி –
என்னாவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள் மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள் -என்று
அருளிச் செய்ததை நினைக்கிறது
கோ சஹச்ர பிரதாதாரம் -ச சர்வானர்த்தி நோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நந்த்யச -என்னும் விஷயம் அன்றே

என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் –
திருவேங்கடத்து என்னானை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே-என்றும் –
என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்றும் –
ஓராயிரம் பேருமுடைய பிரானை யல்லால் மற்றி யான் கிலேன் -என்றும்
பாடிப் போய் காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதலன்-என்றும்
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய் கொண்டே -என்றும்
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்றும்
உலகம் படைத்தான் கவி -என்றும்
தம்முடைய அந்ய விஷய வ்ருத்தி நிவ்ருத்தியையும் ஸ்வ வ்ருத்தியான பகவத் ஸ்தோத்ர பிரவ்ருத்தியையும்
முன்னிட்டு ஸ்ரீ திருமாலவன் கவியான என்னோடு கூட –
என் ஸ்ரீ திருமாலான ஸ்ரீ யபதியை கவி சொல்ல வம்மின் என்று பரோபதேசம் பண்ணி
பரோபதேச நிரபேஷமாக திருந்தின தம் படியையும் பேசினவராய் –

குருகூர் மன்னருளால் மாறும் சன்மம் –
ஸ்ரீ திரு நகரிக்கு நாதரான ஸ்ரீ ஆழ்வார் அருளாலே அந்ய சேஷத்வத்துக்கு அடியான ஜன்மம் கழியும்
கண்டு சன்மம் கழிக்க வேண்டிற்று ஸ்ரீ ஆழ்வாருக்கு –
இவர்களுக்கு சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்று ஸ்ரீ ஆழ்வார் அருளாலே பிறவிப் பெரும்கடல் சுவறிற்று
மாறுகை யாவது -ச வாசனமாகப் போகை-
இவையுமோர் பத்தேற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே -என்று
இறே இத் திருவாய் மொழிக்கு பல ஸ்ருதியும் –

————————————

அவதாரிகை –

இதில் பகவத் அர்ஹனான எனக்கு ஒரு குறைகளும் இல்லை என்ற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இதரரைக் கவி பாடுகைக்கு அனர்ஹ கரண மாத்ரமாகை அன்றிக்கே
பகவத் விஷயத்தை கவி பாடுகைக்கு அர்ஹ கரணனாகவும் ஆகப் பெற்றேன்
எனக்கு இனி வேண்டுவது உண்டோ என்று ஹ்ருஷ்டராகிற
சன்மம் பல பல-வின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -சன்மம் பல செய்து -இத்யாதியாலே -என்கை-

———————————————-

சன்மம் பல செய்து தான் இவ்வுலகு அளிக்கும்
நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர்
நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்—-30-

———————————————

வியாக்யானம்–

சன்மம் பல பல செய்து -என்ற பாட்டு
இத் திருவாய் மொழிக்கு உயிர் பாசுரம் ஆகையாலே அத்தைக் கடாஷித்து அருளிச் செய்கிறார் –

சன்மம் பல செய்து என்று –
சன்மம் பல பல செய்து -என்றும் –
பஹூனி மேவ்யதீதானி –
பஹூதாவிஜாயதே -என்றும் சொல்லுகிறபடியே அசங்க்யாதமான அவதாரங்களைப் பண்ணி –

சன்மம் பல பல செய்து தான் –
அகரம வச்யனான தான் –
கௌசல்யா ஜனயத் ராமம்
ஜாதோஹம் யத் தவோதராத் –
என்னும்படி ஆஸ்ரித அர்த்தமாக அசங்க்யதமான அவதாரங்களைப் பண்ணி

இவ் வுலகு அளிக்கும் –
தன் வாசி அறியாத இச் சம்சாரிகளை ரஷிக்கும் ரஷணம் தான் விரோதி நிரசன பூர்வகமாக இறே இருப்பது –
குணவான் கஸ்ய வீர்யவான் -இறே
விரோதிகளைப் போக்கி ஈரக் கையாலே தடவி ரஷிக்கும் நன்மை யுள்ளது ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கே இறே
நஹி பாலன சாமர்த்த்யம்ருதே சர்வேஸ்வரீம் ஹரீம் –
உலகில் வன்மை யுடைய வரக்கர் அசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் சீர் -என்றத்தை சொல்லுகிறது –

இவ் வுலகு அளிக்கும் நன்மை யுடைய மால் குணத்தை –
சீர்ப் பரவப் பெற்ற நான் -என்றத்தை
மால் குணத்தை நாடொறும் இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன்-என்கிறது –

ஒரு தேச விசேஷத்திலே
விபன்யவே-விண்ணோர் பரவும்-2-6-3- என்று ஸ்துதித்து
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா- என்று அனுபவிக்கும் குணங்களை
இவ் விபூதியிலே ஸ்தோத்ரம் பண்ணுகையால் யுண்டான ஆனந்தத்தைப் பெற்றேன்
குறைவு முட்டுப் பரிவு இடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி
அம்ருத ஆனந்த மக்னரானவர் என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் அருளிச் செய்தது –

ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர் நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள் –
இப்படி அவன் கல்யாண குணங்களை ஸ்துதிக்கப் பெற்றேன் என்று அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை
லௌகிகராய் உள்ளவர்களே-நாத் தழும்பு ஏறும்படி ஸ்துதியுங்கோள்
அது தான் பல நாள் வேண்டா-ஒரு நாள் அமையும்
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதனன் மேவியே –
பகலிராப் பரவப் பெற்றேன் -என்கிற நிர்பந்தம் வேண்டா

நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்
சத்ருத் சேவிக்க அமையும்-சர்வதா சரசமாய் இருக்கும்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்னும் விஷயம் இறே –

—————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading