ஸ்ரீ சிறிய திருமடல் -ஸ்ரீ உ . வே . ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய வியாக்யானங்கள் —

ஸ்ரீ மன் நாத முனிகள் வகுத்து அருளினை அடைவில் மூன்றாவது ஆயிரமான இயற்பாவில் ஒன்பதாவது திவ்ய பிரபந்தம் -சிறிய திருமடல்

திருக் குறும் தாண்டகத்திலே அனுபவித்த அனுபவம் பழைய அபி நிவேசத்தைக் கிளப்பிப் பெரிய ஆர்த்தியை யுண்டாக்கவே
நின்னடியிணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையோ என்று ஆர்த்தராய் சரணம் புகுந்தார் திரு எழு கூற்று இருக்கையில்

சமுத்திர ராஜனை சரணம் அடைந்தும் கால்ஷியம் செய்து கிடைக்க -சீறிச் சிவந்த கண்ணினராய் –
சாகரம் சோக்ஷயிஷ்யாமி சாபமானாய ஸுமித்ரே பத்ப்யாம் யந்து ப்லவாங்கமா -போலே
அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் உகந்து அருளினை தேசங்களையும் அழிக்கப் புகுகிறார் –

மடலூர்வன் -என்று சொல்லி அச்சம் உறுத்தி -மாசறு சோதீ -தோழீ உலகு தோறு அலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே –
யாம் மடம் இன்றி தெருவு தோறு அயல் தையலார் நா மடங்கப் பழி தூற்றி நாடும் இரைக்கவே-
யாம் மடலூர்ந்தும் எம் ஆழி யங்கைப் பிரானுடைத் தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் -அச்சமூட்டி -பெற்றார்கள் -மடலூர வில்லை

ஆசையை யாராலும் வரம்பு அறுக்க முடியாதே -அரசர் ஆணைக்கு கடப்படுமோ -வேலி யடைத்தால் நிற்குமோ வேட்க்கை
ஞானம் கனிந்த நலம் -விவேக விரஹத்தால் வரும் பிரவ்ருத்தி விசேஷங்கள் எல்லாம் ஆதரித்திக்க தக்கனவே
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் –மடலூர்வதும் இவனது உபாய கிருஷி பலம் –
அவனது முக மலர்த்திக்கு உறுப்பாக பண்ணும் பிரவ்ருத்திகளில் இதுவும் அந்தரகதம்-

இலக்கணப்படி ஒரே பாசுரம் -கலி வெண்பா -ஒரே எதுகை யாக அமைந்தும் ஈற்றடி முச்சீராக முடிந்தும் –
தேசிகன் -40-பாடல்களாகவும் சிறிய திரு மடலையும் -78-பாடல்களாக பெரிய திருமடலையும்
ராமானுஜ நூற்றந்தாதி சேர்த்து நாலாயிரம் வரவும்
அப்புள்ளார் -ராமானுஜ நூற்றந்தாதி சேர்க்காமல் வர -77 .5 -பாடல்களாக சிறிய திருமடலையும் —
148 .5 -பாடல்களாகவும் -பிரித்து அருளிச் செய்துள்ளார்கள் –

155–அடிகள் கொண்ட பிரபந்தம் இது-
———————————————————————–

தனியன் -பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்தது –

முள்ளிச் செழு மலரோர் தாரான் முளை மதியம்
கொள்ளிக் கென்னுள்ளம் கொதியாமே –வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல் –

விரஹ தாப ஹரமான பிரபந்தம் -என்றவாறு -போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் -மேவு தண் மதியம் வெம் மதியமாலோ —
முளை மதியம் -மல்லிகை கமல் தென்றல் அனைத்துக்கும் உப லக்ஷணம்
இந்த பிரபந்தத்தை ஒரு கால் அனுசந்தித்தவாறே அரை குலைய தலை குலைய ஓடி வந்து முகம் காட்டி
நம் விரஹ தாபம் தவிர்த்து அணைத்து அருள்வான் என்றவாறு

கலியனுக்கு முள்ளிப்பூ மாலை -ஜாதிக்கு ஏற்ற மாலை -இன்றும் திரு நகரியில் முள்ளிச் செழு மலர்த் தார் வடிவமான-ஸ்வர்ண திவ்ய ஆபரணம் சேவிக்கலாம்

தாமரை என்னும் பொருளதான முளரி என்பதே முள்ளி என மருவி -தாமரை மாலையை அணிந்தவர் என்றும் சொல்வர்

மலரோ தாரான் –மலரோர் தாரான் –மலரான தாரான் -பாட பேதங்கள் –

———————-

ஸ்ரீ பூமிப்பிராட்டி உத்தம ஸ்த்ரீகள் லக்ஷணம் -நுனியில் கறுத்த இரண்டு கொங்கைகள் -திருமாலிருஞ்சோலை திருவேங்கடம் –
கடல் தன்னையே வஸ்திரமாக கொண்டு –ஸூ ர்யனைச் சுட்டியாக கொண்டு -மணிகளைக் கொழித்து வரும் நதிகளை ஹாரம் பூண்ட மார்பிலே கொண்டு
நீர் கொண்டு எழுந்த கார் மேகங்களை கூந்தலாகக் கொண்டு ஆவரண ஜலத்தை கட்டும் காவலுமாக கொண்டு இருக்க
இதில் வாழும் மனுஷர்கள் -தர்மம் அர்த்தம் காமம் மூன்றுமே புருஷார்த்தம் என்றாலும் காமமே பிரதானம்-மற்றவை இத்தை பெற்றார் எளிதில் அடைவார் என்றபடி

மோக்ஷம் பரோக்ஷ புருஷார்த்தம் இருப்பதாக சொல்ல மாட்டார்கள் -என்று நீங்கள் அறிய -அத்தை சொல்பவர்கள் விவேகம் அற்ற கூற்றை பார்ப்போம்
ஸூ ர்ய மண்டலத்தை பிளந்து கொண்டு அதனூடு போவதாம்-அந்த ஸூ ர்யன் ஒற்றைச் சக்கர தேரில் இருப்பானாம்
அத்தேருக்கு ஏழு குதிரைகள் பூட்டி இருக்குமாம் -அக்குதிரைகள் மேக மண்டலத்தில் சஞ்சரிக்குமாம் –
நம்மால் கண் கூசும் படி காணவே ஒண்ணாத அத்தை பிளந்து போவதாக சொல்வது பொருந்துமோ
அப்படிப் போவார்க்கு மீள வைகுந்தம் கிட்டுமாம் -அதிலே ஆராவமுதம் அனுபவிக்கப்படுமாம் –
அப்படியே இருந்தாலும் இருட்டறையில் விளக்குபோலே சகல குணங்களும் விளங்கும் அர்ச்சாவதாரம் இருக்க
உண்டோ இல்லையோ -சங்கை -உள்ள அத்தை பற்றுவது கையில் உள்ள முயலை விட்டு பறந்து போகும் காக்கை பின் போவது போன்றது அன்றோ

இது வரையிலே தாமான தன்மையில் அருளி மேலே குடக் கூத்தில் ஈடுபட்டு அனுபவிக்கப் பெறாத இடைச்சி பாவத்தில் அருளுகிறார்
முற்றும் நாயகி பாவனை -என்பதே பூர்வர்கள் நிர்வாகம் –
—————————————-

1-எம்பெருமான் உலகு அளந்தது – 2-இலங்கையை பாழ் படுத்தி – 3-கோவர்த்தன மலை எடுத்து கல் மழை காத்து
4-கடல் கடைந்து -5-பசு மேய்த்து  6-உலகம் உண்டு உமிழ்ந்து –
இவ்வளவும் பரத்வம் காட்டி -ஆராத தன்மையனாய் -ரஷ்ய வர்க்கத்தை எல்லாம் ரஷித்தாலும்-
தான் ஒன்றும் செய்யா தானாய் இருக்கிற படி

7-வெண்ணெய் களவு கண்டு கட்டுப்பட்டு -8- காளியன் நிரசனம்- 9-சூர்ப்பணகை அங்க பங்கம் –
10-கரன் இராவணன் நிரசனம்  – 11- இரணியன் நிரசனம் – 12-கஜேந்திர ஆழ்வான் ரக்ஷணம் —

——————-

நான் சம்சார வாழ்வில் பெண்கள் போலே தலை முடியை எடுத்துக் கட்டி கச்சு அணிந்து கொண்டு -அரையிலே மேகலையை தரித்து
கண்ணிலே மையிட்டு அலங்கரித்து பந்தடித்து விளையாடிக் கொண்டு இருக்க -தாமரைக்கு கண்ணன் என்ற பேர் கொண்டவன்
அனைவரும் மகிழ பறை அறைந்து கொண்டு இக் கூத்துக்குத் தப்பி பிழைக்க வல்லார் உண்டோ என்று சொல்லிக் கொண்டு
குடக் கூத்தாடா நிற்க -பெண்டிர் என்னையும் அழைக்க போராத காலத்தால் நானும் சடக்கென எழுந்து அங்கே சென்றேன் –
சென்றதும் மேனி நிறம் இழந்தேன் -கை வளைகள் கழன்றன -அறிவு அழிந்தது -ஹித ப்ரியங்கள் கேட்க முடியாமல் ஒழிந்தேன்
சரீரம் ஒழியாமல் பேதைமை மிகுத்து இருக்க என் தாய் ஸ்ரீ பாகவத ஸ்ரீ பாத தூளி இட்டு செங்குறிஞ்சி மாலையை யுடைய
சாஸ்தாவுக்கு அஞ்சலியும் செய்தாலும் மீள வில்லை -பழங்கதை பேசும் பாட்டிமார்கள் குறத்தியை கேட்டு குறி கேட்கலாமே என்ன
ஒரு குறத்தி தானாகவே வர -தைவாவிஷடையாகி-சிறு முறத்தில் நெற்களை எடுத்து குறி பார்த்து சொன்னதாகச் செல்கிறது மேலே –

————————————

“காரார்வரைக் கொங்கை“ என்று தொடங்கி “நீராரவேலி“ என்ணுமளவம் பூமிப்பிராட்டியை வருணப்பதாம். பூமிப்பிராட்டியின் வருணனைக்கு இப்போது புருஷார்த்தங்களைப் பரிக்ரஹித்த சேதநர்களைச் சொல்ல வேண்டிற்றாகி, அச்சேதநர்கள் இருக்குமிடத்தைச் சொல்ல வேண்டி அவர்கள் இருக்கப்பெற்ற பூமியைச் சொல்லப்புகுந்து அவ்வழியாலே அப்பூமிக்கு அபிமாநிநியான பூமிப்பிராட்டியை வர்ணிக்கிறாரென்க.

காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை
சீரார் சுடர்ச் சுட்டிச் செங்கலுழிப் பேராற்று -பேரார மார்வில்
பெரு மா மழைக் கூந்தல் -நீரார வேலி நிலமங்கை என்னும்
இப் பாரோர் சொல்லப் பட்ட மூன்றன்றே
அம் மூன்றும் ஆராயில் தானே -அறம் பொருள் இன்பம் என்று –

பதவுரை

கார் ஆர் வரை கொங்கை

மேகங்கள் நிறைந்து படியப்பெற்ற (திருமாலிருஞ்சோலையும் திருவேங்கடமுமாகிற) திருமலைகளை முலையாக உடையளாயும்.
கண் ஆர் கடல் உடுக்கை

இடமுடைத்தான (விசாலமான) கடலைச சேலையாக வுடையளாயும்.
சீர் ஆர் சுடர் சுட்டி

(ப்ரகாசமாகிற) சிறப்புப் பொருந்திய ஸூர்யனைச சுட்டி யென்னும் ஆபரணமாக வுடையளாயும்.
செம் கலுழி பேர் ஆறு பேர் ஆரம் மார்பின்

சிவந்து கலங்கியுள்ள பெறிய ஆறுகளைச் சிறந்த ஹாரம் பூண்ட மார்பாக உடையளாயும்
பெரு மா மழை கூந்தல்

பெருத்துக் கறுத்த மேகங்களைக் கூந்தலாக வுடையளாயும்
ஆரம் நீர் வேலி

ஆவரண ஜலத்தைக் காப்பாக வுடையளாயுமிருக்கிற,
நிலம் மங்கை என்னும் இப் பாரோர்

ஸ்ரீ பூமிப் பிராட்டி யென்று சொல்லப்படுகிற இந் நில வுலகத்திலே உள்ளவர்களால்
சொலப்பட்ட

கூறப்படுகின்ற (புருஷார்த்தங்கள்)
மூன்று அன்றே

மூன்றேயாம்,
அ மூன்றும் ஆராயில் அறம் பொருள் இன்பம் என்று

அம்மூன்று புருஷார்த்தங்கள் எவை யென்று ஆராய்ந்தால், தர்மம் அர்த்தம் காமம் என்பனவாம்.

தான் வைவர்ணியப்பட்டு வருந்திக் கிடக்க, தனது சக்களத்தியாகிய பூமிப் பிராட்டி குறியழியாத அவயவங்களுடனே ஒழுங்காக இருக்கப்பெற்றாளே! என்ற உவகை தோன்ற வருணிப்பதாகச் சொல்லுவாரு முளர்.

இப்பரகால நாயகியும் பூமிப்பிராட்டியும் எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டவர்களாதலால் சக்களத்தி முறைமை யுண்டென்க.

பூமிப்பிராட்டி யென்றால் மங்கையர்க்கிய ஸ்ந்நிவேசங்கள் அவளுக்கு இருக்க வேண்டுமேயென்ன, அவ்வளவும் செவவ்னே உண்டு என்று மூதலிக்கிறார் ஆறு விசேஷணங்களினால்.

கறுத்த முலைக் கண்களையுடைய முலைகளின் ஸ்தானத்திலே மேகம்படிந்த மலைகள் உள்ளன வென்கிறார் முதல் விசேஷணத்தாலே.

இங்க, வரை என்று பொதுப்படக் கூறியிருந்தாலும் “தென்ன்னுயர்பெருப்பும் தெய்வ வடமலையுமென்னு மினவயே முலையா வடிவமைந்த“ என்று இவ்வாழ்வார்தாமே பெரிய திருமடலில் அருஹிச் செய்ததுகொண்டு திருமாலிருஞ் சோலைமலையும் திருவேங்கடமலையுமென்று சிறப்பாகக் கொள்ளலாயிற்று,

சிறந்த மேரு முதலிய மலைகளை நிலமங்கைக்குக் கொங்கையாகச் சொல்லாமாயிருக்க அவற்றை விட்டுத் தென் வடமலைச்சொன்னது – நாயகன் விரும்பிப் படுகாடு கிடக்குமிடமே முலையாகத் தகுதலால்.

அழகிய சேலையின் ஸ்தானத்திலே கடல் உள்ளதென்கிறார் இரண்டாவது விசேஷணத்தால்

(ஸமுத்ராம்பரா) என்று வடமொழியிலே பூமிக்குப் பெயர் வழங்குமாறறிக.

நெற்றிச் சுட்டியின் ஸ்தானத்திலே ஸூர்யனுளனென்கிறார் மூன்றாம் விசேஷணத்தால்.

மார்பின் ஸ்தாந்ததிலே பெரிய ஆறுகளும், அம்மார்பிலணியும் ரத்ந மயமான ஆபரணங்களின் ஸ்தாநத்திலே அவ்வாறுகளின் கலங்கிய செந்நீர்ப் பெருக்குகளும் உள்ளனவென்கிறார் நான்காம் விசேஷ்ணத்தால்,

மயிர் முடியின் ஸ்தானத்திலே நீர் காண்டேழுந்த காளமேகங்கள் உள்ளன வென்கிறார். ஐந்தாம் விசேஷணத்தால்

இனி, சிறந்த மஹிஷி யென்றால் கட்டுங்கால்லுமாயிருப்பவே, அஃது இவளுக்கு முண்டோவென்ன, ஆவரண ஜலமே இவளுக்கு காப்பென்கிறார் ஆறாம் விசேஷணத்தால்

நீர் ஆரம் –வேலி ஆரம் என்றது ‘ஆவரணம்‘ என்ற வடசொல்லின் சிதைவு என்பர். அண்டத்துக்குப் புறம்பே பெருகிக் கிடப்பது ஆவரண ஜலம் என்றுணர்க.

இப்படிகளாலே நிலமங்கை என்றற்கு உரிய இப்பூமியிலே வாழ்பவர்கள் புருஷார்த்தமென்று சொல்வது, அறம் பொருள். இன்பம் என்கிற தர்ம அர்த்த காமங்கள் மூன்றேயாம்.

——————————-

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading