சப்த தாதுக்கள் என்பவை ரச, ரக்த, மாமிசம், மேதா, அஸ்தி, சுக்கிலம் என்ற ஏழாகும்.
இந்த ஏழுமே சித்த ஆயுர்வேத தத்துவத்தின் படி உடலில் அடிப்படை கட்டமைப்பு அலகாகும்.
உணவிலிருந்து, ரத்தத்திலிருந்து மாம்ஸம், மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,நரம்பிலிருந்து
எலும்புகள்,எலும்பிலிருந்து ஊன்,ஊனிலிருந்து சுக்ரம்,இப்படி ஏழு தாதுக்கள்
அவற்றால் ஆனது சரீரம்,சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது.அதை இயக்குமிடம்
இதயம்.இதயத்தினுள் ஒரு அக்னி உள்ளது.அதில் பித்தமும்,பித்தத்திலிருந்து
வாயுவும் தோன்றுகிறது.அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது.
ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது
கடினமாகிறது.இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில்
பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு
முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில்
போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய்,மூக்கு கண்கள்.காதுகள்
உண்டாகின்றன.ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா
லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன.
————-
எலும்பின் அமைப்பை பொறுத்து 5 வகையாக பிரிக்கப்படுகின்றன.
அவை கபாலத்தில் இருக்கக்கூடிய எலும்பு, பல், குருத்தெலும்பு வளைந்திருக்கிற எலும்பு(மார்புக்கூட்டில் இருக்கக்கூடிய எலும்பு), நீண்ட எலும்பு (கை, கால்களில் இருக்கக்கூடிய எலும்பு.)
எலும்பின் எண்ணிக்கையை பொறுத்தவரை ஆயுர்வேத மருத்துவத்துறைக்கும் நவீன மருத்துவத்துறைக்கும் முரண்பாடான கருத்துகள் இருந்தாலும் அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் என்ற மகரிஷியின் எண்ணிக்கை தற்போதுள்ள நவீன மருத்துவத்தின் எண்ணிக்கைக்கு ஓரளவுக்கு ஒத்துப் போகிறது.
அடிபடுவது, அதிக வாகனப் பிரயாணம். வறட்சி தன்மை அல்லது குளிர்ச்சி தன்மை அதிகரிக்கக்கூடிய உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வது, ஊட்டச்சத்து குறைவு, அஜீரணம், வயது முதிர்வால் ஏற்படும் தாதுக்கள் குறைபாடு போன்றவற்றுக்கான சிகிச்சைகளையும் மூலிகைகளையும், உணவுகளையும் ஆயுர் வேதம் விளக்கிக் கூறியுள்ளது.
தாதுக்கள் குறைந்தால் அதன் குணத்திற்கு இணையான குணங்கள் கொண்ட உணவினை மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் எலும்புகள் குறைந்தால் குருத்தெலும்புகளை உணவுக்காகவும், மருந்தாகவும் பயன்படுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.
குருத்தெலும்பை ரசம் வைத்தோ, சூப் செய்தோ உணவாக எடுத்துக் கொள்ளலாம். பிரண்டையை துவையலாக வற்றலாக எடுத்துக்
கொள்ளலாம்.
மருதமரப்பட்டை சிறிதளவு எடுத்துக்கொண்டு நான்கு மடங்கு அதிகமாக பால் கலந்து அதற்கு சரியான அளவு தண்ணீர் கலந்து நன்றாக கொதிக்க வைத்து பாலின் அளவுக்கு வந்தவுடன் வடிகட்டி காலை, மாலை இருவேளை உணவுக்கு முன் பயன்படுத்த வேண்டும்.
இதனால் எலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் வலி போகும். இது இருதயத்திற்கும் மிகச் சிறந்த மருந்து என்று ஆயுர்வேதம் மருத்துவ புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மருதமரப்பட்டையில் அதிகளவு கால்சியம் சத்து இருப்பதாக நவீன மருத்துவமும் ஏற்றுக்கொள்கிறது.
கொம்பரக்கு என்ற மரத்தினையும், முட்டையின் ஓட்டைக் கொண்டும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவையும் எலும்பை உறுதிப்படுத்த ஏதுவான மருந்தாகயிருக்கும்.
சிகிச்சை முறையை பொறுத்தவரை பஞ்சகர்மா என்ற சிகிச்சையில் பால் மற்றும் நெய்யில் கசப்பான மருந்துகளை கலந்து வஸ்தி என்ற சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பேர்கள் அறு சுவை உணவு என்றால் மிகுந்த சுவையான உணவு என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
இதன் உண்மையான பொருள் துவர்ப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு,இனிப்பு, கார்ப்பு ஆகிய ஆறும் கலந்த உணவு.
நாம் ஒவ்வொரு வேளையிலும் சாப்பிடும் உணவிலேயே இந்த ஆறு சுவைகளும் அடங்கியுள்ளன.
மனித உடலில் இரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, உமிழ் நிர், மூளை என்று ஏழு தாதுக்கள் உள்ளன.
இவ்வேழு தாதுக்களால் கட்டப்பட்டிருப்பதால்,யாக்கப்பட்டிருத்தலால் மனித உடலுக்கு யாக்கை என்று பெயர்.
ஆறு தாதுக்கள் உடலில் சரியாக இருந்தால் ஏழாவதான மூளை சரியாகவே இருக்கும்.
ஆறு சுவைகளில், இரத்தத்தை உண்டாக்க துவர்ப்பும், எலும்பை வளர்க்க உப்பும், தசையை வளர்க்க இனிப்பும், கொழுப்பைத் தர புளிப்பும், நரம்பைப் பலப்படுத்த கசப்பும், உமிழ்நீரைச் சுரக்கச் செய்ய காரமும் உதவியாக உள்ளன.
அதிக காரம் உண்டால் வயிற்று வலி, நீர்ச் சுருக்கு, சீத பேதி உண்டாகும்.
காரம் குறைந்தால் நாவறட்சி, மலச் சிக்கல், அஜிரணம், மந்த பேதி முதலியன உண்டாகும்.
இந்த உமிழ் நீர் சுரந்தால்தான் கடினத் தன்மையுள்ள உணவு மிருதுவாக மாறும். உணவும் உமிழ் நீரோடு கலப்பதால், உணவும் தொண்டைக் குழி வழியே எளிதில் வயிற்றை சென்றடைவதுடன் உணவும் நன்கு சீரணம் அடைகிறது.
கசப்புச் சுவை அதிகமானால் தூக்கமின்மை, அரிப்பு, சொறி சிரங்கு முதலியன தலை காட்டும்.
கசப்புச் சுவை குறைந்தால், அஜீரணம், சோம்பல், பலக்குறைவு, அபான வாயு அதிக அளவில் பிரிதல் ஆகியவை உண்டாகும்.
நரம்பின் பலத்தால் தான் நம் உடல் இயங்குகிறது.போதிய நரம்பு பலம் உள்ளதால்தான் நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது
————
தினமும் பழம் சாப்பிடுவது, வேக வைத்த உணவை சாப்பிடுவது, கேரட்,பீட்ரூட், இஞ்சி, மணத் தக்காளி கீரை அடிக்கடி சேர்ப்பது போன்றவற்றால் வாதம் பித்தம், கபம் மூன்றையும் சமன் படுத்தலாம்.
வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள்.
உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை.
இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
`மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’– என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையைச் சொல்லியிருக்கிறார்.
———
வாதம், பித்தம், கபம்
வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.
பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.
கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.
தவிர்க்க வேண்டிய, சாப்பிட வேண்டிய உணவுகள்!
* வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணி புரிந்தால் தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு மிகவும் முக்கியம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி எனும் ஸ்பாண்டிலைசிஸ் உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தம். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்.
* புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும்.
மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும்.
வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும்.
* பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். .
* அதிகமாக கோதுமையைச் சேர்ப்பது கூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது… ஆனால் கைக் குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி… இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.
* சளி இருமல் ஆஸ்துமா, மூக்கடைப்பு… என கபத்தால் வரும் நோய்கள் பல.
பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும்
காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம்.
மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவை யெல்லாம் கபம் போக்க உதவும்.
அலுவலகத்திலிருந்து தும்மல் போட்டுக் கொண்டே வரும் வாழ்க்கைத் துணைக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது.
வாதம், பித்தம், கபம் – இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியைக் காப்பதில், சமையல் கூடத்துக்கு பங்கு உண்டு. நம் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம். அது, நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்.
ஒவ்வொரு நபரும் ஒரு சில கூறுகளால் அவர்களின் இயல்பான அமைப்பின் (பிரகிருதி) காரணமாக பாதிக்கப் படுகின்றனர். இது மூன்று தோஷங்களாக வகைப்படுத்தப்படுகிறது:
- வாத தோஷம் – காற்று மற்றும் விண்வெளி கூறுகள் ஆதிக்கம் செலுத்து கின்றன
- பித்த தோஷம் – நெருப்புக் கூறு ஆதிக்கம் செலுத்துகிறது
- கப தோஷம் – பூமி மற்றும் நீர் கூறுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன
தோஷம் ஒருவரின் உடலின் வடிவத்தையும், உடல் போக்குகளையும் (உணவு விருப்பத்தேர்வுகள் மற்றும் செரிமானம் போன்றவை) மற்றும் ஒருவரின் மனதையும் உணர்ச்சியையும் பாதிக்கிறது.
உதாரணமாக, கப தோஷம் உள்ள மக்களில் பூமிக்கூறு திடமான உறுதியான உடல் வகை, மெதுவாக செரிமானம், சிறந்த நினைவுத்திறன் , மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை ஆகியவற்றில் வெளிப்படையாகத் தெரிகிறது.
பெரும்பாலான மக்களின் பிரகிருதி இரு தோஷங்களின் கலவையாகவே இருக்கும்.
வாதம், பித்தம், கபம் ஆகியவை தங்களின் உகந்த அளவில் செயல்படாத நிலையில், சமநிலையின்மை தோஷத்திற்குத் தகுந்தபடி அறிகுறிகளால் குறிக்கப்படுகிறது.
———
வாத சமநிலையின்மை:
மூன்று தோஷங்களில் வாத தோஷம் இரண்டு காரணங்களால் மிக முக்கிய மானதாகும்.
முதலாவதாக, வாத தோஷம் நீண்ட காலத்திற்கு போதிய அளவு சமநிலையற்று இருந்தால் மற்ற இரு தோஷங்களும் (பித்தம் மற்றும் கபம் ) சமநிலையற்றதாக மாறலாம்.
வாதம் காற்று மற்றும் விண்வெளி கூறுகளின் கலவையாகும்.
வாத சமநிலை இன்மையின் அறிகுறிகள் & விளைவுகள்
அறிகுறிகள்
உடல் அளவில் :
- மலச்சிக்கல்
- வயிற்றில் வாயு உருவாக்கம் அல்லது விலகல்
- உடல் வறட்சி
- உலர் மற்றும் கடினமான தோல்
- வலி மற்றும் பொதுவாக உடல்முழுவதும் வலி
- வாயில் அதிக உமிழ்நீர்
- பலமின்மை, களைப்பு, சத்துக் குறைவு
- தூக்கமின்மை
- நடுக்கம் மற்றும் தசையிழுப்பு
- மயக்க உணர்வு
- குளிர் மற்றும் வெப்பத் தேவை
நடத்தை அளவில்:
- பகுத்தறிவற்ற நடத்தை , படபடப்பு, ஆவேசம், பொறுமையின்மை
- பணிகளைத் தவிர்த்து ஓடும் விருப்பம்
- குழப்பம், பயம் மற்றும் நடுங்கும் உணர்வுகள்
- உறுதியின்மை
- அதிகமான இயக்கம் அல்லது பேச்சு
விளைவுகள்:
- தசைகள் வீணடிக்கப்படுகின்றன
- மூட்டு வலிகள்
- விறைப்பு தன்மை
- தலைவலி
- தேக்கம்
- மலச்சிக்கல்
- எடை இழப்பு
- தசைப் பிடிப்புகள்
- வலிப்பு , நடுக்கம், முடக்குவாத தாக்குதல்கள்
- பெருங்குடல் பாதிப்பு
- உலர் நிலை, அடைப்பு
- பயம்
பித்த சமநிலை யின்மை
பித்த தோஷம் நெருப்பு அல்லது வெப்பத்துடன் தொடர்புடையது. எங்கு மாற்றம் ஏற்பட்டாலும், அங்கு பித்த பிரகிருதி வேலை செய்கிறது. இரைப்பை குடல் பாதை, கல்லீரல், தோல், கண்கள் மூளை ஆகியவை பித்தம் வேலை செய்யும் இடங்களாகும்.
பித்த சமநிலைஇன்மையின் அறிகுறிகள் மற்றும் விளைவுகள்-அறிகுறிகள்
உடல் அளவில்:
- அதிகமான தாகம் அல்லது பசி
- நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை
- கண்கள், கைகள் மற்றும் பாதம் ஆகியவற்றில் எரிச்சல்
- உடலில் சூடு
- தோல் தடித்தல், முகப்பரு, மற்றும் கட்டிகள்
- பித்த வாந்தி (மஞ்சள் நீர்)
- வெளிச்சத்திற்கு கண்கூசுதல்
- வலுவான உடல் நாற்றங்கள்
- குமட்டல் மற்றும் தலைவலி
- வயிற்றுப் போக்கு
- வாய்க் கசப்பு
- குளிர் சூழலுக்கு விருப்பம்; வெப்ப பாதிப்பு
நடத்தை நிலையில்:
- கடினமான பேச்சு மற்றும் செயல்கள்
- தீர்ப்பு அல்லது விமர்சிக்கும் போக்குகள்
- கோபம், எரிச்சல், விரோதம்
- வாக்கு வாதம், ஆக்ரோஷ அணுகுமுறை
- பொறுமை மற்றும் அமைதியின்மை
- விரக்தி
விளைவுகள்
- அமிலம் மிகுதல்
- வீக்கங்கள்
- இரத்தப்போக்கு
- உயர் இரத்த அழுத்தம்
- எரிச்சல் உணர்வுகள்
- அதிகமான கழிவுகள்
- தோல் தடிப்புகள், பருக்கள், கட்டிகள்
- வெறி
கபம் சமநிலை யின்மை:
மூன்று தோஷங்களில் கப தோஷம் மிகப்பெரியது. இது உடல் அமைப்பு களுக்கு தேவையான கட்டமைப்புக்களை வழங்குகிறது.
இவை வாதத்தின் இயக்கம் மற்றும் பித்தத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
ஒரு பெரிய, கனகச்சிதமான கால்பந்து வீரர் அல்லது மல்யுத்த வீரர் கபத்தின் மேலாதிக்கம் கொண்டவர்.
கபம் என்பது பூமி மற்றும் நீர் ஆகிய கூறுகளின் கலவையாகும்.
கப சமநிலை இன்மையின் அறிகுறிகள் & விளைவுகள்
அறிகுறிகள்
உடல் நிலையில்
- சோம்பல்
- குறைந்த அல்லது பசியின்மை, குமட்டல்
- நீர் தேக்கம்
- வெடிப்பு, சளி உருவாக்கம்
- வாயில் அதிக உமிழ்நீர் சுரப்பு
- சுவாசத்தில் சிரமம்
- அதிக தூக்கம்
- வாயில் இனிப்பு சுவையுணருதல்
நடத்தை நிலையில்:
- கனமாக உணருதல்
- மன அழுத்தம், சோகம்
- மந்தமான, செயலற்ற தன்மை
- ஆதரவு அல்லது அன்பின் பற்றாக்குறையை உணருதல்
- பேராசை, சிக்கிக்கொள்ளுதல், உடைமையுணர்வு
விளைவுகள்
- உடல்பருமன்
- வீக்கங்கள்
- நீர் தேக்கம்
- அதிகமான சளி உற்பத்தி
- கூடுதல் வளர்ச்சி
- மன அழுத்தம்
நம்முடைய தோஷங்கள் மற்றும் சமநிலையின்மைகள் ஆகியவற்றின் இயல்புகளைப் புரிந்து கொள்வது சமநிலையை மீண்டும் பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.
————
Leave a Reply